Jeyamohan's Blog, page 25
September 6, 2025
இன்று காந்தி என்னவாக இருக்கிறார்?
எந்தக் கேள்வியோ தேடலோ இன்றி, காந்தி பற்றிய முன்முடிவுகள் கொண்டோருக்கு இன்னும் எத்தனை புத்தகங்கள் எழுதப்பட்டாலும் உதவப் போவதில்லை. அவரைப் பற்றிய புரிதலை சிறிதளவேனும் வளர்த்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு ‘இன்றைய காந்தி’ ஒரு சிறந்த கையேடு.
இன்றைய காந்தி- இந்துமதி மனோகரன்இந்துமதியின் இப்பதிவை வாசித்தேன்.
வசைகள், அவதூறுகள் வழியாகவே நம்மில் பலரும் காந்தியை அறிந்திருக்கிறோம். நேற்று அவரை வசைபாடியவர்கள் இன்று இந்துத்துவர்களின் அதியுக்கிரமான அவதூறு மழையைக் கண்டு திகைத்துப்போய் காந்தியை நோக்கிச் செல்லும் காலம் இது. காந்தி வெறுமொரு சென்றகாலப் பெயர் அல்ல. காந்தி காங்கிரஸின் நிறுவனர் அல்ல. காந்தி ரூபாய்நோட்டின் முகம் அல்ல. அவர் இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம் என இன்று புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இன்று ஜனநாயகத்தை, மதச்சார்பின்மையை, இந்த பெருநிலத்தின் அறம்சார்ந்த வாழ்வை மேலென நினைக்கும் ஒவ்வொருவருக்கும் உரியவராக அவர் ஆகிவிட்டிருக்கிறார்.
இன்றைய சூழல் உருவாவதற்கு முன் 2011 ல் எழுதப்பட்ட இன்றைய காந்தி காந்தியை தமிழ் நவீன சிந்தனைச்சூழலுக்கு முற்றிலும் புதிய முறையில் அறிமுகம் செய்தது. காந்தி பற்றிய எல்லா கேள்விகளுக்கும் வரலாற்றைக்கொண்டு, ஆதாரங்களைக்கொண்டு பதில் சொன்னது. சொல்லப்போனால் ஏற்கனவே தெரிந்த ஆதாரங்களையே தர்க்கபூர்வமாக அடுக்கி உண்மையை வெளிப்படுத்தியது. தமிழ்ச்சூழலில் காந்தி பற்றி இருந்த வழக்கமான புகழ்மொழிகள், வழக்கமான வசைமொழிகள் இரண்டுக்கும் அப்பால் சென்று அவருடைய பல முகங்களை அறிமுகம் செய்தது. இதில் காந்தியின் வெற்றிகளும் தோல்விகளும் ஆராயப்பட்டுள்ளன. வழிபாட்டுணர்வு இல்லாமல் அவர் மதிப்பிடப்படுகிறார்.
காந்தி வெள்ளையரை எதிர்த்து சுதந்திரம் பெற்றுத்தந்த அரசியல்தலைவர் மட்டும் அல்ல. அவர் சூழியல் முன்னோடி. இன்றைய நுண்ணலகு அரசியலின் கோட்பாட்டாளர். உலகமெங்கும் இன்று நிகழும் ஜனநாயகப்போராட்டங்களின் முதல்வடிவை உருவாக்கியவர். நிர்வாகவியலில் மையப்படுத்தலுக்கு எதிரான பார்வையை முன்வைத்த கருத்தாளர்.
இன்றைய வாசகர்கள் காந்தியை இந்நூல் வழியாகக் கண்டடையலாம்
ஜெ
ஆலயங்கள்- மகத்தான வகுப்பு
Your ideas on our land, Bharat, are subversive and false. You are abusing our greatest tradition and our great souls and leaders of mutts. I condemn your silly preaching and politely request you shut your nasty mouth.
You are not authentic!ஜெயக்குமார் அவர்களது ஆலயக்கலை வகுப்பு முடிந்து எழுதுகின்றேன். மிகச் சரியான நிபுணரைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். கோவில் கலை, பக்தி இலக்கியம், கோவிலோடு சேர்ந்த மற்ற கலைகள், கல்வெட்டு படிக்கும் திறன், பாட்டு இப்படி பல கூட்டுக் கலைகளில் நிபுணராய் உள்ளார் ஜெ கே
ஆலயங்கள், மகத்தான வகுப்புஆலயங்கள்- மகத்தான வகுப்பு
Your ideas on our land, Bharat, are subversive and false. You are abusing our greatest tradition and our great souls and leaders of mutts. I condemn your silly preaching and politely request you shut your nasty mouth.
You are not authentic!ஜெயக்குமார் அவர்களது ஆலயக்கலை வகுப்பு முடிந்து எழுதுகின்றேன். மிகச் சரியான நிபுணரைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். கோவில் கலை, பக்தி இலக்கியம், கோவிலோடு சேர்ந்த மற்ற கலைகள், கல்வெட்டு படிக்கும் திறன், பாட்டு இப்படி பல கூட்டுக் கலைகளில் நிபுணராய் உள்ளார் ஜெ கே
ஆலயங்கள், மகத்தான வகுப்புSeptember 5, 2025
நமக்கு உண்மையிலேயே ஆன்மிகம் உண்டா என்ன?
இந்தியர்களாகிய நமக்கு ஓர் எண்ணம் உண்டு. நாமெல்லாம் ஆன்மிகவாதிகள், வெளிநாட்டினர்தான் உலகியலில் மூழ்கிக்கிடக்கிறார்கள் என்று. அது உண்மையா? நமக்கு ஏதாவது ஆன்மிகம் உண்டா என்ன? நம சாமிகும்பிடுவதும், நோன்பு நோற்பதும், பரிகாரம் செய்வதும்தான் ஆன்மிகம் என நினைப்பவர்கள். அதற்கு அப்பால் நமக்கிருக்கும் ஆன்மிகம் என்ன?
ஒற்றைத்துளியில் மூழ்கிச் சாவது…
கடல் நாவலை வாசித்து முடித்தேன். ஒரே மூச்சில் வாசித்து முடிக்கத்தக்க ஒரு நாவல் அத்தனை ஆழமும், அத்தனை அடுக்குகளும் கொண்டிருப்பது ஆச்சரியமானது. ஆழமான சிந்தனை, ஆன்மிகம் அல்லது வரலாறு பற்றிய பார்வை கொண்ட எழுத்தாளர்களால் ‘கதை’ சொல்ல முடிவதில்லை என்பதுதான் நான் புரிந்துகொண்டது. ஆனால் கதை என்னும் அபாரமான ஓட்டம் இருக்கும்போதே ஒரு படைப்பு சிந்தனையை உலுக்கி விரிவடையச் செய்யும் என்றும், ஒன்றுக்குமேல் ஒன்றாக பல அடுக்குகளை கொண்ட ஒரு பெரிய சித்திரத்தை அளிக்கும் என்றும் இந்நாவல் வழியாகவே அறிந்துகொண்டேன். இந்நாவலை வாசிக்க கடல் என்னும் சினிமாவின் பல காட்சிகளும் உதவின. உங்களுக்கு நன்றி.
சாம்– தாமஸ் இருவருக்குமான உரையாடல். அல்ல சாம்– பெர்க்மான்ஸுக்கான உரையாடலில் நடுவே ஊடகமாக தாமஸ். அவர்கள் வழியாக நிகழும் கட்டற்ற சொற்பெருக்குதான் இந்த நாவல். அதற்குள் வந்துசெல்லும் ஆழங்கள் அபாரமானவை. இந்த நாவல் சினிமாவாக வந்தபோது இத்தனை ஆழமான அடுக்குகள் இருக்கின்றன என்று தோன்றவில்லை. அந்த சதுரங்க விளையாட்டு ஒரு அபாரமான கற்பனை.
செலினா போன்ற ஒரு தேவதை. அவள்மேல் சாம் உள்ளுக்குள் உள்ளுக்குள் கொண்ட பிரியமே அவருக்கான மாபெரும் சிலுவையேற்றமாக ஆகிவிடுகிறது. இந்நாவலில் எனக்கு மிகப்பெரிய விஷயமாக இருந்தது இதுவே. இது என் வாழ்க்கையும்கூட. (மிகப்பெரிய அவமதிப்பு, வீழ்ச்சி. நேரில் சொல்லியிருக்கிறேன். இந்நாவலில் இந்த இடத்தை எழுத நான் சொன்னதை பயன்படுத்திக்கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்). நான் ஏன் ஏன் என்று பல ஆண்டுகள் எனக்குள் உழற்றிக்கொண்டிருக்கிறேன். அதில் நீங்கள் சாம் உணர்வதாகச் சொல்லும் அந்தப் பிரியம்தான் அவருக்கான தண்டனைக்கான காரணம். அதை நீங்கள் எனக்கான விடையாகச் சொல்கிறீர்கள் என்று புரிந்துகொள்கிறேன். ஆனால் பிரியம் என்பது அத்தனை கொடியதா? சிலுவையேற்றத்துக்குரிய பாவமா அது?
எஸ்.கே
அன்புள்ள எஸ்.கே.
உங்கள் வாழ்வின் நிகழ்வாக நீங்கள் சொன்னவற்றை நான் இந்நாவலை எழுதும்போது நினைத்திருக்கவில்லை. ஆனால் இந்நாவலைப்பற்றி இப்போது நிங்கள் சொல்வதை வாசிக்கும்போது உண்மைதான் என்னும் எண்ணத்தை அடைகிறேன். இவை எப்படி நமக்குள் ஒன்றுகூடும் என்பதை நம்மால் சொல்லிவிட முடியாது.
நம்முடைய செவிகளை விட மிகமிக கூரிய செவித்திறன் கொண்ட விலங்குகள் நாம் அன்றாடம் கேட்கும் ஓசைகளை எப்படி எடுத்துக்கொள்ளும்? அவற்றுக்கு அவை மிகப்பெரிய ஒலித்தாக்குதல்களாக இருக்கும் இல்லையா? அவை வதைபடும் இல்லையா? அதைப்போல சராசரியை விட கூரிய உள்ளம் கொண்டவர்களுக்கு அனுபவங்கள் பலமடங்கு தீவிரமானவை. கூர்மை என்பது மென்மை என்றும் பொருள்படலாம். அங்கே மெல்லிய தொடுகைகள் கூட அடிபோல விழலாம். மலர் விழுந்தது தாளாமல் வலி கொண்டு கத்தினாள் காதலனுக்காகக் காத்திருந்த கன்னி ஒருத்தி என்று சம்ஸ்கிருதச் செய்யுள் ஒன்றுண்டு. அது ஓர் அதிமென்மை நிலை. அதுதான் ஆன்மிக சாதகர்களின் நிலையும். பிறருடைய பாவத்துளி அவர்களுக்கு பாவக்கடல். நம் கோப்பை சிந்தும் நீர்த்துளியில் எறும்பு மூழ்கிச்சாகக்கூடும்,
ஆன்மிகசாதகர்களை வழிபாட்டுணர்வுடனும் கூடவே சந்தேகத்துடனும் சாமானியர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வழிபாட்டுணர்வு அவர்களை தெய்வமாக ஆக்கச்செய்கிறது. துளி ஐயம் எழுந்ததும் இழுத்து மண்ணில் விழச்செய்கிறார்கள். எந்த ஆன்மசாதகனுடனும் ஜனங்கள் சிலுவையுடன், பிரார்த்தனை மாலையுடன் வந்துகொண்டிருக்கிறார்கள். சிலுவையை ஏந்தியிருப்பது இருள். பிரார்த்தனை மாலையை வைத்திருப்பது ஒளி. நீ எங்களைப் போன்ற சாமானியன் என்று அவர்களின் இருண்ட ஆழம் சொல்லிக்கொண்டே இருக்கிறது. அந்த சாதகன் தன் மேன்மையை வெளிப்படுத்துந்தோறும் இருண்ட ஆழம் சீற்றம் கொள்கிறது. ஒளிகொண்ட பக்கம் நெகிழுந்தோறும் இருண்ட பக்கம் இறுகிக்கொண்டே செல்கிறது. இந்த உலகில் வாழ்ந்த எல்லா புனிதர்களும் சாமானியர்களின் கல்லடியை வாங்கியவர்களே. அந்தக் கற்களைச் சாமானியர் இயல்பாக பூக்களாகவும் ஆக்கிக்கொள்வார்கள்.
சாமானியரை அஞ்சியே பழங்காலத் துறவியர் மடங்களுக்குள் மறைந்துகொண்டனர். மலைக்குகைகளில் வாழ்ந்தனர். சாமானியர் முன் நின்றிருக்கையில் ஆன்மசாதகன் எப்படியோ தன்னை ஒருவகையில் சித்தரித்துக்கொள்ள ஆரம்பிக்கிறான். அடக்கம் கூட அப்படிப்பட்ட சித்தரிப்புதான். ஒரு சிறு கண்ணசைவு போதும். சாமானியர் அவனுள் உள்ள பாவத்தின் துளியை கண்டடைந்துவிடுவார்கள். ஏனென்றால் அப்படிக் கூர்மையாக அவர்கள் அவனை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சாம் பல்லாயிரம் சாத்தான்களால் கூர்ந்து பார்க்கப்பட்டுக்கொண்டே இருந்த தேவன் அல்லவா?
பிரியம் பாவம் அல்ல. ஆனால் எது பாவம்? நோன்பு என ஒன்றை கொண்டால் அதற்கு எதிரான எதன்மீது ஆர்வம்கொள்வதும் பாவமே. கிறிஸ்துவுக்காக இனிப்பை முழுமையாக துறப்பது ஒரு நோன்பு. அந்த துறவிக்கு ஒருதுளித் தேன் நஞ்சுக்கு நிகரான பாவம் அல்லவா?
ஜெ
சுஷில்குமார்
சுஷில்குமாரின் முதல் சிறுகதைத் தொகுப்பான “மூங்கில்” பெரும்பாலாக கன்னியாகுமரி, நாகர்கோவில் என தான் புழங்கிய நாஞ்சில் நாடு சார்ந்தும், அதன் மக்கள், பண்பாடு, பாரம்பரியம், தொன்மம் சார்ந்து அமைந்தது. தொன்மங்களை ஒட்டிய நவீன இலக்கிய ஆக்கங்களை எழுதுகிறார். வரலாற்றுச் சம்பவங்கள், கல்வித்துறை சார்ந்த நுண்மைகள் ஆகியவற்றையும் படைப்புகளில் புனைவுக்குரிய மூலங்களாக எடுத்தாள்கிறார். நவீனச் சிறுகதையில் நாஞ்சில் நாட்டு மரபை தொடர்பவர், நாட்டார் தொன்மங்களை மறுஆக்கம் செய்பவர் என்ற அளவில் கவனிக்கப்படுகிறார்.
சுஷில்குமார்
லோகா,நீலி – கடிதம்
அன்புள்ள ஜெ,
லோகா படம் பார்த்தேன். உங்களுடைய கதைகளிலுள்ள அபாரமான நீலி உலகம்தான் மையம். அதை இன்றைய சூழலுக்கேற்ப கதையாக்கி முப்பது கோடி ரூபாய் செலவில் முந்நூறு கோடியை அடித்து தூக்கியிருக்கிறார்கள். அதிலுள்ள மையக்கருவை ஒட்டிய பல கதைகளை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்.இன்னும்கூட தீவிரமாகவும், ஆழமாகவும் அவை உள்ளன. ஏன் அவற்றை தமிழில் சினிமாவாக ஆக்க முடியவில்லை. அந்தக்கதைகளெல்லாமே தமிழிலும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தவைதானே? (நானும் கன்யாகுமரிக்காரன்தான்)
சிவன் மகாராஜன்
அன்புள்ள சிவன்,
அந்தப்படத்திலுள்ளது கள்ளியங்காட்டு நீலியின் கதை. கள்ளியங்காட்டில்தான் நான் வீடுகட்டி குடியிருக்கும் சாரதா நகர் உள்ளது. கள்ளியங்காட்டு நீலி கோயில் வழியாக அன்றாடம் காலைநடை, மாலைநடை செல்கிறேன். அக்கதையை சுதந்திர மறுஆக்கம் செய்துள்ளனர்.
நான் அக்கதைகளை கவித்துவமான, தத்துவார்த்தமான உட்கூறுகளுடன் மறு ஆக்கம் செய்துதான் என் கதைகளை எழுதியுள்ளேன். அவை பேய்க்கதைகளும் தேவதைக் கதைகளும், பத்துலட்சம் காலடிகள், ஜெயமோகன் சிறுகதைகள் போன்ற பல தொகுதிகளில் உள்ளன. முப்பது கதைகளுக்கும் மேல் எழுதியுள்ளேன்.
முதன்மை நடிகர்களே இல்லாமல், ஒரு கதைக்காக மட்டும் முப்பதுகோடி முதலீடு செய்வதும், பத்துகோடி செலவழித்து ’பிரமோ’ செய்வதும் மலையாள சினிமாவில்தான் சாத்தியம். அதற்கான தயாரிப்பாளர்கள் அங்குண்டு. இங்குள்ள சினிமா செயல்படும் விதமே வேறு. இதன் முதலீட்டுக் கணக்குகள் முதன்மையாக நடிகர்களை மட்டுமே மையம் கொண்டவை.
ஜெ
சேலம் இலக்கியக்கூடுகை
சேலம் இலக்கியக்கூடுகை. வெண்முரசு வாசகர் வட்டம். விவாதம். அறிமுக உரை எம். பானுமதி. மற்றும் அ.முத்துலிங்கம் எழுதிய கடவுச்சொல் விவாதம். அறிமுக உரை ஆர்.என்.பிரேம்குமார் ராஜா. தொடர்புக்கு 9842713165, 9443357892
வடகிழக்கை நம்மிடம் மறைப்பது யார்?
வடகிழக்கும் இனவாதமும் பேச்சை வாசித்தேன். இங்கே தமிழகத்தில் பெரும்பாலானவர்களுக்கு வடகிழக்கின் இனவாதச்சூழல் பற்றி அனேகமாக எதுவுமே தெரியாது. ஆனால் இங்குள்ள ஏதோ ஒரு கூட்டம் வடகிழக்கைப் பற்றி ஒரு குறிப்பிட்ட சித்திரத்தை தொடர்ச்சியாக உருவாக்கிக்கொண்டே இருந்தது.
வடகிழக்கை நம்மிடம் மறைப்பது யார்?That being said, why not conduct classes in the cities, which will make them more accessible? I ask this in order to gain a better understanding, not to be provocative.
Education can’t be door delivered!
September 4, 2025
மதுரை புத்தகத் திருவிழா, விஷ்ணுபுரம் அரங்கு 44-45
மதுரை புத்தகவிழா 5 செப்டெம்பர் (வெள்ளி) முதல் 15 செப்டெம்பர் (திங்கள்) வரை நிகழ்கிறது. விஷ்ணுபுரம் அரங்கு எண் 44 மற்றும் 45. வாசகர்களை அரங்குக்கு வரவேற்கிறோம்.
எங்கள் நூல்கள்
ஜெயமோகனின் புதிய நாவல். கடல் என்னும் திரைப்படம் இந்நாவலை ஒட்டி உருவானது. செவ்வியல் தன்மை கொண்ட இப்படைப்பில் ஓர் ஆன்மாவின் கடலில் தெய்வமும் சாத்தானும் மோதிக்கொள்ளும் அலைகள் கொந்தளிக்கின்றன. மகாகவி தாந்தேயின் டிவைன் காமெடியின் நீட்சியென அமையும் படைப்பு இது.
ஜெயமோகன் கீதை பற்றி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். நான்கு நாட்களில் ஆற்றிய தொடர் உரை என்பதனால் எளிய நடையில், நேரடியாக வாசகனுடன் பேசும் தன்மைகொண்டது. கீதைக்குள் நுழைய இன்றைய நவீன வாசகனுக்கு திறக்கப்படும் மிகச்சிறந்த வாசல்.
பண்பாடு பற்றிய ஜெயமோகனின் கட்டுரைகளின் தொகுப்பு. நாம் ஆன்மிகம், பண்பாடு என எண்ணியிருப்பவை பலசமயம் சம்பிரதாயமான கருத்துக்கள். அவற்றை நவீன வாழ்க்கையுடன் இணைத்துப்பார்க்கும் பார்வைகள் கொண்ட நூல் இது.
சுந்தர ராமசாமியின் ஆளுமையை தன் நினைவுகளினூடாக ஜெயமோகன் சித்தரிக்கும் இந்நூல் அக்காலகட்டத்தில் நிகழ்ந்த அழகியல் விவாதங்களையும் தொட்டுக்கொண்டு ஒரு நாவலைப்போல் விரிவது. நுணுக்கமான காட்சிவிவரணைகளும், புன்னகைக்கவைக்கும் தருணங்களும் கொண்டது.
தமிழில் விஷ்ணுபுரம் அளவுக்கு எந்த நாவலும் அத்தனை கவனமான வாசிப்பைப் பெற்றதில்லை. பல கோணங்களில் அவரவர் அரசியலுக்கும் கருத்துநிலைக்கும் ஏற்ப அதை வாசித்துள்ளனர். இரண்டாவது தலைமுறையில் விஷ்ணுபுரம் குறியீடுகளின் அடுக்குகள் செறிந்த, உணர்வுநிலைகள் உச்சம் தொட்ட, ஒரு நவீன இந்தியக் காவியநாவலாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் உலகவாசகர்களின் வாசிப்புக்குச் செல்லவுள்ளது.
குறைத்துச்சொல்லும் அழகியல் கொண்ட கதைகள். இளம்படைப்பாளியான விஷால்ராஜாவின் குறிப்பிடத்தக்க சிறுகதைத் தொகுதி இது. வாழ்க்கையின் மென்மையான புதிர்களைப் பேசும் கதைகள்
பின்தொடரும் நிழலின் குரல் தமிழின் முதன்மையான அரசியல் நாவலாக பல விமர்சகர்களால் மதிப்பிடப்பட்டது. அரசியலின் அடிப்படையாக உள்ள கருத்தியல் என்பதை ஆராயும் நாவல் இது. ஒரு கருத்துநிலைபாடு சாமானியனை எப்படி அபாயகரமான ஆயுதமாக ஆக்கிவிடுகிறது என்னும் கேள்வி வரலாற்றில் என்றும் உள்ள ஒன்று. அதை ஆராயும் படைப்பு இது.
மைத்ரி ஓர் உருவகக் கதை. ஒரு மலை. ஒரு பயணி. ஒரு காதல். ஆனால் இந்த பயணம் மலையின் ஆழங்களின் மடிப்புகளில் இருந்து மலையுச்சியின் வெறுமையின் பரவசம் வரை நீள்கையில் ஆன்மிகமான இன்னொரு பரிணாமத்தை அடைகிறது.
மருபூமி வைக்கம் முகமது பஷிர் தன்னந்தனியாக பாலைவனத்தை கடந்த அனுபவத்தைப் பற்றி எழுதிய சுருக்கமான குறிப்பில் இருந்து விரிவாக்கம் செய்யப்பட்ட குறுநாவல். ஓர் அகப்பாலையை கடக்கும் ஒருவனின் அனுபவம் என வகைப்படுத்தலாம். புகழ்பெற்ற பல சிறுகதைகள் அடங்கிய நூல்.
அல்கிஸா தமிழின் முதல் இஸ்லாமிகேட் நாவல் என்று விமர்சகர்களால் குறிப்பிடப்பட்டது. இஸ்லாமிய அழகியல் உச்சம் என சொல்லத்தக்க கவாலி இசை, இஸ்லாமிய ஆன்மிக உச்சம் என சொல்லத்தக்க சூஃபி மரபு ஆகியவை ஓர் அழகிய காதல்கதையால் இணைக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் விரைவில் வெளிவரவுள்ளது.
தமிழின் தலைசிறந்த நாவல் என வாசகர்கள் பலரால் கருதப்படும் காடு மனித உறவின் உருவகமான குறிஞ்சி நிலத்தில் நிகழும் ஒரு காதல்கதை. வாழ்க்கையில் பாலை வரலாம். காதல் என்றும் ‘வறனுறல் அறியாச் சோலை’தான் என இந்நாவல் காட்டுகிறது.
சினிமாப்பின்னணியில் எழுதப்பட்ட ஓர் இழந்த காதலின் கதை. கறுப்புவெள்ளை சினிமாவின் உலகம் கவித்துவக்குறியீடாக ஆக்கப்பட்டுள்ளது இந்நாவலில். கற்பனாவாத அழகியல் கொண்ட படைப்பு.
முதுநாவல் ஜெயமோகனின் 133 சிறுகதைகளின் தொகுப்புகளான 14 நூல்களில் ஒன்று. இந்திய சூஃபி மரபின் ஆன்மிகநிலைகளில் இருந்து இந்திய வாழ்க்கையை ஆன்மிகம் வந்து தொடும் தருணங்களைச் சொல்லும் மகத்தான சிறுகதைகள் அடங்கியது. இதில் பல கதைகள் இன்று உலகப்புகழ்பெற்ற அமெரிக்க இலக்கிய இதழ்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
கதாநாயகி ஓரு பேய்க்கதை. ஆனால் அந்தப் பேய்க்கதை சமகாலத்தில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தை அடைகிறது. அதற்கு முந்தைய லண்டனை ஊடுருவி ரோமாபுரிக்காலம் வரை நீள்கிறது. பல அடுக்குகளாலான நாவல் இது.
முற்றிலும் மங்கலத்தன்மை கொண்ட நாவல். மதுரை மீனாட்சி திருமணத்தின் அழகியபெருந்தோற்றம். ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் வரவிருக்கிறது.
தமிழகத்தின் தலித் எழுச்சியின் தொடக்கப்புள்ளியை, இந்தியப்பெரும் பஞ்சங்களின் பின்னணியில் திகைப்பூட்டும் கச்சிதத்துடன் சொல்லும் படைப்பு. ஆங்கிலத்தில் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் வெளியாகவுள்ளது. தெலுங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆண் -பெண் உறவின் நுணுக்கமான சில ஆழங்களுக்குள் ஊடுருவிச்செல்லும் கன்யாகுமரி இருபத்தைந்தாண்டுகளாகத் தொடர்ச்சியாக வாசிக்கப்படும் நாவல். காலம் மாறுந்தோறும் அதன் அடிப்படை வினாக்கள் கூர்கொள்கின்றன.
பி.கே.பாலகிருஷ்ணன் என்னும் மலையாளச் சிந்தனையாளரின் கட்டுரைகள். நாவல் என்னும் கலையை புரிந்துகொள்ள, அதை வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முறையாகப் பயன்படுத்த வழிகாட்டும் நூல். கட்டுரை நூலாயினும் உத்வேகமிக்க வாசிப்பை அளிப்பது.
தமிழில் இளைஞர்களிடையே மிக அதிகமாக வாசிக்கப்படும் ஜெயமோகனின் நூல் இரவு. இது அவர்களின் உலகம். இரவில் விழித்து பகலில் தூங்கும் ஒரு சிறு சமூகத்தை சித்தரிக்கும் படைப்பு.
இலக்கியத்தை வாசிப்பதெப்படி? எது நல்ல இலக்கியம்? எது வணிக எழுத்து? இலக்கிய அடிப்படைகள் பற்றிய பல கேள்விகளுக்கு விடைசொல்லும் கட்டுரைகள் கொண்ட நூல்.
காமம் பாவமென உருக்கொள்வது சமூக உறவுகள் வழியாக. காமத்தையும் பாவத்தையும் பிரித்திப்பார்ப்பது ஒரு மனமுதிர்ச்சி. அனுபவத்தினூடாக நிகழும் பரிமாணம் அது. அந்த விடுதலையைப் பேசும் நாவல் இது.
இந்து மெய்யியலை மதத்தின் சம்பிரதாயங்கள் மற்றும் நம்பிக்கைகளில் இருந்து விலக்கி தத்துவமாகவும் ஆன்மிகமாகவும் அணுக முற்படும் நவீன மனத்திற்குரியவை இந்தக் கட்டுரைகள். விரிவான விவாதங்களை உருவாக்கியவை.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
