Jeyamohan's Blog, page 26
October 14, 2025
“வாழ்க்கைபற்றி பேசுவது என்னும் குற்றம்”
அன்புள்ள ஜெ
நீங்கள் எழுதிய ரமேஷ் பிரேதனின் அஞ்சலிக்குறிப்பு பற்றிய விவாதங்களைக் கண்டேன். அதில் ஒரு பகுதி உங்கள் மேல் தனிப்பட்ட காழ்ப்பு கொண்ட சில்லறை எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் என்றுமே ஒரு பொருட்படுத்தத்தக்க எழுத்தை உருவாக்கிவிட முடியாது. வாழ்க்கை முழுக்க அவர்களால் முகநூல் வம்புகளில்தான் ஈடுபட முடியும். அதிலும் இதேபோல ஏதாவது முக்கியமான ஆளுமைகளை இழிவுசெய்யும்போது அவர்களுக்கு எதிரான அரசியல்கும்பல் வந்து ஆதரவு தெரிவிக்கும். தங்களுக்கு வாசகர்கள் இருப்பதாக இவர்கள் ஒரு போலி ஆறுதலை அடைவார்கள். எஞ்சியவர்கள் உங்கள் மேல் தீராத காழ்ப்பு கொண்ட வழக்கமான கூட்டம். பெரியாரிஸ்டுகள் முதல் கம்யூனிஸ்டுகள், இந்துத்துவர்கள் என எல்லா தரப்பினரையும் எதிரிகளாக ஆக்கி வைத்திருக்கிறீர்கள்.
ஆனால் முக்கியமான இன்னொரு அம்சம் உண்டு. அதைச் சுட்டிக்காட்டவே இதை எழுதுகிறேன். நீங்கள் சுந்தர ராமசாமி பற்றி சு.ரா.நினைவின் நதியில் எழுதியபோதுகூட இதேபோல எதிர்ப்புகள் வந்தன. அப்போது சமூகவலைத்தளங்கள் இல்லை என்பதனால் அதெல்லாம் சிறுவட்டத்திற்குள் நின்றன. அதற்கான காரணம்தான் முக்கியமானது. இங்கே ஒருவர் மாண்டால் அவரைப்பற்றி மிகச்சம்பிரதாயமான, தேய்ந்துபோன சில சொற்றொடர்களைத்தான் சொல்லவேண்டும்.
அதை எப்படி வேண்டுமென்றாலும் புகழலாம். எந்த பொய்யை வேண்டுமென்றாலும் சொல்லலாம். எல்லாவகை சைக்கோபன்ஸிக்கும் இடமுண்டு. பகுத்தறிவு முற்றிப்போய் ‘திரும்பிவா தலைவா!’ என்று கதறலாம். அதெல்லாம் இயல்பாகத்தான் கொள்ளப்படும். ஆனால் உண்மையில் அவர் வாழ்ந்த விதத்தைச் சொல்லக்கூடாது. அவருடைய கஷ்டங்களைச் சொல்லக்கூடாது. அந்தக் கஷ்டங்களைக் கடந்து அவர் சாதனைகளைச் செய்ததைக்கூடச் சொல்லக்கூடாது. மறைந்தவரின் ரசனை, மறைந்தவருடனான உரையாடல்கள் எதையுமே சொல்லக்கூடாது.
ஏன் நம்மவர்கள் மிகமிகச் சம்பிரதாயமான விஷயங்களைப் பேசுகிறார்கள்? காரணம் இதுதான். எது சொன்னாலும் நம்மவர் புண்படுவார்கள். அவமானப்படுத்திவிட்டார், இழிவுபடுத்திவிட்டார் என்று பொங்குவார்கள். சுந்தர ராமசாமி மறைந்தபோது அவரைப்பற்றி எவ்வளவு அஞ்சலிக் கட்டுரைகள் வந்தன என்று ஒருமுறை எழுதியிருந்தீர்கள். எல்லாமே வெறும் வார்த்தைகள். அவருடன் பழகியபோது நிகழ்ந்த ஒரு அனுபவத்தைக்கூட எவரும் எழுதவில்லை. ஒரு நினைவைக்கூட பகிரவில்லை. ஜெயகாந்தனின் மறைவுக்குப்பின்னரும் அதேபோல மிகச்சாதாரணமான பொதுவான சொற்றொடர்கள்தான் சொல்லப்பட்டன.
எவரைப்பற்றியும் எதுவுமே சொல்லக்கூடாது என்பதுதான் தமிழ்மனநிலை. பொய்யான புகழ்மொழி தவிர எதைச்சொன்னாலும் அதனை அவமதிப்பாகவே நினைப்பார்கள். எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி டி.ஜெ.எஸ்.ஜார்ஜின் நூலை நீங்கள் எழுதியபோதும் இதேபோல உணர்ச்சிக்கொந்தளிப்பு எழுந்தது ஞாபகமிருக்கிறது. தமிழில் நீங்கள் எவருடைய வாழ்க்கையைப் பற்றி எழுதினாலும் அவமதிப்பு என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் வேறு எவருமே எந்த எழுத்தாளர் பற்றியும் எதுவுமே எழுதியதில்லை. அத்தனை பேரைப் பற்றியும் நீங்கள் மட்டுமே எழுதியிருக்கிறீர்கள். தமிழில் காமராஜ், அண்ணாத்துரை, பெரியார், எம்.ஜி.ஆர், கருணாநிதி எவரைப் பற்றியும் ஒரு நல்ல வாழ்க்கை வரலாறு இல்லை. வெறும் புகழஞ்சலிகள் மட்டுமே உள்ளன.
நீங்களே இதைப்பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் உண்மையில் கேரளப்பின்னணியில் இருந்து வருகிறவர். நான் 26 ஆண்டுகள் கொல்லம், எர்ணாகுளம் பகுதிகளில் வங்கியில் வேலைபார்த்தவன். அங்கே இந்தவகையான அசட்டுத்தனமான சம்பிரதாயப்பேச்சு இல்லை. அஞ்சலிக்கூட்டத்திலேயே மறைந்தவரின் பலவீனங்களைப் பேசுவார்கள். மென்மையாகவும் நட்பாகவும் நையாண்டிகூட செய்வார்கள். ஈ.எம்.எஸ் மறைந்தபோது அஞ்சலிக்கூட்டத்தில் அவரைப்பற்றி அன்பான கேலியுடன் பேசியதைக் கேட்டிருக்கிறேன். இங்கே நினைத்தே பார்க்கமுடியாது.
இது ஏன் என்றால் இறந்தவர்கள் எல்லாம் தெய்வமாகிவிட்டார்கள் என்ற பழைய நம்பிக்கை இப்போதும் ஆழ்மனதில் வேறு வடிவங்களில் இருப்பதனால்தான். சுந்தர ராமசாமிக்கு நடிகை சரிதாவை பிடிக்கும் என்று சு.ரா.நினைவின் நதியில் நூலில் நீங்கள் எழுதினீர்கள். அதை சுந்தர ராமசாமிக்கு வேண்டியவர்கள் அவருக்கான அவமதிப்பு என்று கொந்தளித்ததைப் பற்றி ஒருமுறை சொன்னீர்கள். அது ஏன் என்றால் அவர் ‘தெய்வத்திரு’ ஆகிவிட்டார் என நினைப்பதனால்தான்.
தமிழ்மக்களின் இந்த மனநிலையை நீங்கள் உணரவில்லை. ஓர் அந்நியராகவே நிற்கிறீர்கள். ஆனால் அந்த தூரம்தான் உங்களுக்கான சுதந்திரம், தனித்தன்மை ஆகியவற்றை அளிக்கிறது.
நட்புடன்
ரா. கிருஷ்ணகுமார்
சியாட்டில் நூலறிமுக நிகழ்வு
அன்புள்ள ஆசிரியருக்கு
சியாட்டல் நகருக்கு உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். இங்கே நிகழவிருக்கிற Stories of the True (அறம்) நூலறிமுக நிகழ்வின் விவரங்களை கீழே கொடுத்துள்ளேன். போஸ்டரையும் இணைத்துள்ளேன், தயவு செய்து தளத்தில் பகிரவும்.
இந்த நிகழ்வின் போது புத்தகம் விற்பனைக்கு கிடைக்கும், உங்களிடம் கையெழுத்தும் பெற்றுக்கொள்ளலாம் என்பது ஏற்பாடு. ஏற்கனவே இந்த படைப்பை வாசித்தவர்கள் ஒரு புத்தகத்தை வாங்கி தகுதியான ஒரு அமெரிக்க இந்திய குழந்தைக்கு பரிசளிக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட பரிந்துரை.
நிகழ்வு நிரலில் கேள்வி பதில் நேரம் உண்டு, வாசக நண்பர்கள் உங்களுடன் சிறிய அளவில் உரையாடவும் நேரம் இருக்கும், ஆனால் இந்த நிகழ்வுக்கு வந்து புத்தகங்கள் வாங்குமளவுக்கு ஈடுபாடு கொண்ட நண்பர்களுக்கு உங்களிடம் கேட்க மேலதிக கேள்விகள் இருக்கலாம், அவர்களுக்காக ஒரு தனிப்பட்ட வாசகர் சந்திப்பை ஏற்பாடு செய்யலாம் என திட்டம். அதில் விருப்பமுள்ள நண்பர்கள் RSVP செய்துவிட்டு ஒரு WhatsApp செய்தியோ மின்னஞ்சலோ அனுப்பலாம். +1 425 445 7874 / shankar.pratap@gmail.com.
நாளும் நேரமும் : Saturday, October 18, 2025 7:00-8:30 PM (6:45க்கு அரங்கு தயாராக இருக்கும்)
முகவரி : 6504 20th Ave NE, Seattle, WA 98115 (புத்தகக்கடையில் போதுமான பார்க்கிங் வசதி உண்டு, அது நிரம்பினால் அருகே நெரிசலற்ற தெருக்கள் உள்ளன, அங்கேயும் வாகனங்கள் நிறுத்தலாம்)
வருகைப்பதிவு செய்ய்யவேண்டிய தளம் : https://www.thirdplacebooks.com/event/jeyamohan
(அந்த தளத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் நேரடியாய் இங்கே பதிவு செய்யலாம் : https://www.eventbrite.com/e/jeyamohan-presents-stories-of-the-true-tickets-1689201299559)
வணக்கத்துடன்
சியாட்டல் நகர நண்பர்கள்
Who is accountable for the development of Northeast India?
உங்களுடைய காணொளி வழியாக தான் உங்களுடைய இணையதளத்தைப் பற்றி அறிந்து கொண்டேன். உங்களுடைய தத்துவ வகுப்புகளுக்கு வர வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. நான் வெள்ளிமலையில் நிகழும் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். அந்த இடம் அந்த கல்விச்சூழல் ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தமானவையாக இருந்தன. அங்கே வரும் நண்பர்களின் பொதுவான மனநிலை கற்பதற்கும் உரையாடுவதற்கு உரியதாக இருக்கிறது.
சூழல், கடிதம்
In your speech, you pointed out who kept the Northeast stagnant for fifty years and who fostered communalism in the region. You mentioned that the construction of an airport and a six-lane highway has led to some form of economic boom.
Who is accountable for the development of Northeast India?October 13, 2025
வெளியேறும் வழி
என்னுடைய காணொளிகளில் மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கும் ஒரு கரு என்பது ‘அருஞ்செயல்களை ஆற்றுதல்’ ‘செயல்களின் ஊடாக விடுதலை அடைதல்’ என்பதுதான். இதை இந்த நூற்றாண்டில் திரும்பத் திரும்பச் சொல்வதற்கான சில காரணங்கள் உள்ளன.
இரண்டு நூற்றாண்டு முன்பு வரை நாம் ஒவ்வொருவரும் நம் பிறப்பால், சூழலால் நமக்குரிய செயல்களுடன் இணைக்கப்பட்டிருந்தோம். ஒவ்வொருவரும் அவரவர் சாதிக்குரிய செயல்களைத்தான் செய்ய முடிந்தது. ஆகவே எதைச் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கே இடம் இல்லாமல் இருந்தது. ஒவ்வொருவருக்கும் அவர்களின் தொழிலும் இல்லறமும் மிகமிக இளமையிலேயே தொடங்கின. எவருக்கும் அவர்களின் வாழ்க்கை இன்னொரு வகையாக அமைந்திருக்கலாம் என்னும் எண்ணமே உருவாகவில்லை.
அது ஓர் அடிமைத்தனம். ஒருவர் ஒரு நிலப்பகுதிக்கு, ஓர் அரசுக்கு, ஒரு கிராமத்துக்கு, ஒரு சாதிக்கு, ஒரு குலத்துக்கு, ஒரு குடும்பத்திற்கு முற்றிலும் கட்டுப்பட்டவராக இருந்தார். அந்த நூற்றாண்டுக்கு அது தேவைப்பட்டிருக்கலாம். ஏனென்றால் அதற்கு முந்தைய யுகம் என்பது பழங்குடிக் காலம். பழங்குடிகளாலான நிலப்பரப்பு என்பது நில்லாது அலையும் புள்ளிகளால் ஆன ஒரு பரப்பு போல. ஒவ்வொரு பழங்குடியும் தங்கள் இயல்பில் தங்களுக்கு உகந்த செயல்களை செய்து கொண்டிருந்தன. இன்னொன்றை விலக்கின. ஒன்றோடொன்று பூசலிட்டுக் கொண்டிருந்தன. அந்த நிலையற்ற சமூகப் பெரும் பரப்பை உறைய வைத்து, நிலையான சமூகப் பரப்பாக ஆக்க வேண்டிய கட்டாயம் நிலவுடைமைச் சமூகத்தில் உருவாகி வந்தது.
நிலவுடைமைச் சமூக அமைப்பு ஒவ்வொன்றையும் அதன் அதன் இடத்தில் பொருத்தியது. அவை புனிதமானவை என்றும், மாற முடியாதவை என்றும், மாறக்கூடாதவை என்றும் வகுத்தது. மனிதர்கள் அதற்குள் சிக்கிக் கொண்டார்கள். அந்த அமைப்பின் நன்மைகளும் தீமைகளும் பல. நன்மை என்பது நிலையான ஒரு சமுதாயம் உருவாகியது என்பது. உற்பத்தி, வினியோகம் ஆகியவை நிலைகொண்டன. அரசுகள் உருவாயின. ராணுவம் உருவாகியது. நெறிகள் பிறந்தன. அறங்களும் உருவாயின.
அந்த அமைப்பின் அடிப்படை அலகான தனிமனிதன் ஒரு கருங்கல் கட்டிடத்தின் சுவரிலுள்ள கல் உறுதியாக பதிக்கப்பட்டவன். ஆகவே தனிமனிதர்கள் அலைக்கழிவுகள் இல்லாமல் வாழ்வின் மீளாச்சுழற்சியையே நாட்கள் எனக்கொண்டு வாழ்ந்தனர். அதன் தீமை என்பது ஒவ்வொருவரும் தங்கள் தனியுள்ளங்களை ரத்துசெய்து அந்த அமைப்பில் பொருந்தியாகவேண்டும் என்பது. தனித்தன்மை என்பதே அனுமதிக்கப்படவில்லை என்பது. மீறல்களின் விளைவு அழிவு என்பதாகவே இருந்தது அன்று.
ஆனால் ஒருவர் தனக்கான சொந்த தேர்வுகள், தேடல்கள் கொண்டவர் என்றால் அவர் அந்த அமைப்பை விட்டு உதறி மேலெழுந்து முன் செல்லவும் வாய்ப்பு இருந்தது. அவ்வாறு முன்சென்றவர்கள் துறந்தோர் என்று அறியப்பட்டார்கள். எல்லாக் காலகட்டத்திலும் அவ்வாறு பல லட்சம் பேர் தங்கள் சாதியை, குடியை, ஊரைத் துறந்து சென்று கொண்டிருந்தார்கள். இந்து மரபு அவ்வாறு துறந்து செல்வதை ஆன்மிகப்பயணமாக ஏற்றுக்கொண்டது. நம் குடிகளில் இல்லத்தையும் சாதியையும் ஊரையும் தொடர்ந்து காசிக்கு சென்றவர்கள், கயிலைக்கு சென்றவர்கள் எப்போதும் இருந்து கொண்டிருந்தார்கள்.
அதன் பின் பௌத்தம் துறவை நிறுவனப்படுத்தி பிறப்படிப்படையில் உருவாக்கப்பட்ட அடையாளங்களில் இருந்து விலகிச்செல்ல வழிகாட்டியது. அதன்பின் சமணமும் துறவை முன்னிறுத்தியது. நிலவுடைமைக்கால மனிதனுக்கு இருந்த முக்கியமான விடுதலை வழி என்பது துறவு. ஒவ்வொரு மனிதனையும் அந்த அமைப்பு முற்றிலும் கவ்விச் சிறை பிடித்துக் கொண்டிருந்தாலும் இப்படி ஒரு விடுதலைக்கான வழியையும் அது கொண்டிருந்தது. எந்த ஒரு சிறையும் ஒரு விடுதலை வழியையும் வைத்திருக்கும்.
முதலீட்டியம் (Capitalism) இங்கே உருவானபோது அது மனிதனை உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகியவற்றின் அடிப்படை அலகாக மட்டுமே பார்த்தது. அதாவது உழைப்புச் சந்தையில் ஒவ்வொரு மனிதனும் விற்பனைப் பொருளாக மட்டுமே இருக்க வேண்டும், நுகர்வுத்தளத்தில் வெறும் ஏற்போர் மட்டுமாகவே இருக்க வேண்டும் என வகுத்தது. அந்த இரு நிலைகளிலும் அவரிடம் தனக்கான நிபந்தனைகள் எதுவும் இருக்கலாகாது. சாதி, மதம், ஊர் போன்ற எந்த வகையான கட்டுப்பாடுகளுக்கும் எதிரானதாகவே முதலீட்டியம் உள்ளது. முதலீட்டியம் உருவாக்கும் விடுதலை என்பது இதுதான்.
சென்ற நூற்றாண்டில் நிலப்பிரபுத்துவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட நினைத்த ஒவ்வொரு எளிய அடித்தள மனிதனும் இரண்டு வழிகளில் ஒன்றையே தேர்ந்தெடுத்தான். ஒன்று தொழிலாளியாக ஆவது, இன்னொன்று ராணுவ வீரனாக ஆவது. அவை இரண்டும் இரண்டு வேறு வகையான சுரண்டல்களே என்றாலும் அவருடைய முந்தைய அடிமைத்தனத்திலிருந்து அவை பல வகையிலும் மேம்பட்டதாக இருந்தன. தொழிலாளர்கள் உரிமைகளைக் கோரி போராட முடிந்தது. கல்வி வழியாக தங்கள் வாரிசுகளை அடுத்த நிலைநோக்கிச் செலுத்தவும் முடிந்தது.
இவ்வாறாக இன்றைய மனிதன் உருவாகி வந்திருக்கிறான். இன்றைய மனிதன் ஓர் உழைப்பவன், ஒரு நுகர்வோன் மட்டுமே அதற்கு அப்பால் அவனுக்கு ஆளுமை என எதுவும் இல்லை. நேற்றைய நிலவுடைமைச் சமூகம் ஒவ்வொருவரையும் சாதிக்குள், குலத்திற்குள், குடும்பத்திற்குள், ஊருக்குள் கட்டிப் போட்டது என்றால் இன்றைய முதலீட்டியம் ஒவ்வொருவரையும் அது உருவாக்கி வைத்திருக்கும் உற்பத்தி-நுகர்வு என்ற சுழற்சிக்குள் கட்டிப் போடுகிறது. முந்தைய அமைப்பைவிட இது மேலானது என்பதில் ஐயமில்லை. இதில் பிறப்பு அடிப்படையில் எவரும் அறுதியாக வரையறுக்கப்பட்டு விடுவதில்லை. ஆயினும் இதில் உள்ள சிறைப்படல் என்பதை நாம் உணராமல் இருக்கிறோம்.
இன்று ஒவ்வொரு உழைப்பாளியும் ஒரு நுகர்வோராக இருப்பதன் பொருட்டு உழைக்கிறார். உழைத்தவற்றை நுகர்வுக்கே அளிக்கிறார். இது ஒன்றை ஒன்று நிரப்பும் ஒரு வட்டம். சிக்கிக்கொண்டால் சுழன்றுகொண்டே இருக்கவேண்டியதுதான். இதைப்பற்றி மார்க்ஸியர், இருத்தலியர் வெவ்வேறு வகையில் விரிவாகப் பேசியிருக்கிறார்கள். அதற்கான காரணங்களை ஆராய்ந்துள்ளனர். நான் அந்த விவாதங்களுக்குள் செல்லவில்லை.
இன்று நமது அன்றாட வாழ்க்கையிலே நாம் பார்க்கலாம் என்பதை மட்டும் முன்வைக்கிறேன். இன்று நாம் பெற்றுக் கொண்டிருக்கும் கல்வி என்பது இன்றிருக்கும் உற்பத்தி அமைப்பின் ஒரு பகுதியில் நம்மைப் பொருத்திக்கொண்டு, அதற்கான பங்களிப்பை வழங்கி, அதன் ஊதியத்தைப் பெற்றுக் கொள்வதற்காக நம்மைத் தயாரிக்கிறது. கூடவே நம்ம இன்றைய நுகர்வுக்கும் பழக்கி அதற்கான ஊதியத்தைப் பெற்றுக்கொள்பவராக மட்டுமே பயிற்றுவிக்கிறது. அவ்வாறாக வெறும் நுகர்வோனாக நம்மை மாற்றிக் கொள்ளவும் அது நம்மை பழக்கப்படுத்துகிறது.
எண்ணிப்பாருங்கள், ஒருவர் இன்று வாங்கும் ஊதியத்தில் பெரும்பகுதி அடிப்படைப் பொருட்கள் முதல் செல்பேசிகள், கார்கள், இல்லங்கள், துணிமணிகள் மற்றும் பொருள்களை வரை வாங்குவதற்குச் செலவிடப்படுகிறது. அந்த ஆடம்பரப் பொருட்களை உற்பத்தி செய்யும் அமைப்பின் ஒரு பகுதியாகவும் அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரைப்போன்றவர்கள் உற்பத்தி செய்ய அவரைப்போன்றவர்கள் நுகர லாபம் மட்டும் வேறெங்கோ செல்கிறது. அந்த லாபம் கோடீஸ்வரர்களை, அரசியலை உருவாக்குகிறது. அதிகாரத்தை உருவாக்குகிறது. அந்த அதிகாரம் அனைவரையும் கட்டுப்படுத்துகிறது.
இந்தச் சுழற்சியில் சிக்கிக்கொண்டதை உணரும் ஒருவனுக்கு ‘நான் செய்ய வேண்டியது என்ன!’ என்னும் பெரும் திகைப்பு உருவாவது இயல்புதான். ‘நான் இதற்காக மட்டுமே பிறந்தவன்தானா?’ என்ற தவிப்பு அவனுக்கு எழுகிறது. சென்றகால நிலவுடைமை அமைப்பின் வாழ்க்கைச்சூழலில் பிறந்த ஒருவனுக்கு ‘என் வாழ்க்கை இந்த உழைப்புக்காகத்தானா? நிலத்துடனும் குலத்துடனும் இணைந்துள்ள மீள முடியாத இந்தப் பொறியில்தான் நான் வாழ்ந்து மடிய வேண்டுமா?’ என்ற எண்ணம் ஏற்பட்டது. அவன் அவன் ஒரு கணத்தில் ஆடையைக் கிழித்து ஒரு துண்டை கோவணமாகக் கட்டிக்கொண்டு ஊரை விட்டு விலகிச் செல்ல முடிந்தது. துறவியோ பிட்சுவோ ஆக முடிந்தது. இன்று அதே கேள்வி மீண்டும் எழுகையில் அதற்கான வேறொரு பதிலைத் தேட வேண்டி இருக்கிறது.
இன்று அவ்வாறு துறந்து செல்பவர்கள் உண்டு. எழுபதுகளில் ஐரோப்பாவில் நவீன நுகர்வும் நவீன உழைப்பும் உருவாகத் தொடங்கி, அன்றைய மனிதனை அழுத்தியபோது ஒவ்வொரு தெருவிலும் அனைத்தையும் துறந்து வெளியேறியவர்கள் அமர்ந்திருந்தனர். இன்றும் அங்கே அவர்கள் அமர்ந்திருப்பதை பார்க்கிறேன். போதைப் பொருள் பயன்படுத்துகிறார்கள், உழைப்புக்குப் பதிலாக தெருவில் பட்டினி கிடந்து சாகவும் தயாராகிறார்கள். பாடியே வாழ முடிவெடுக்கிறார்கள். நிலையின்றி அலைந்து திரிகிறார்கள். அப்படி ஓர் உதிரிக் கூட்டத்தை நவீன முதலீட்டியம் உருவாக்கிக் கொண்டேதான் இருக்கிறது. அவர்களை நேற்றைய துறவிகளின் இன்றைய வடிவம் என்றால் ஒருவகையில் அது சரிதான்.
நேற்றைய துறவிகளுக்கு அந்த மதங்கள் சில கொள்கைகளையும் நெறிகளையும் உருவாக்கி அளித்தன. அவை அந்தச் சமுதாயத்தால் ஏற்கப்பட்டன. ஒருவன் தனக்கு உணவு மட்டுமே போதும் என்று சொல்வான் எனில் அதை அளித்தாக வேண்டும் என்று இந்திய சமுதாயம் நம்பியது. ஆகவே இங்கு பிச்சைக்காரர்கள் எப்படியோ பேணப்பட்டார்கள். துறந்து சென்றவர்கள் எவரும் பட்டினியால் இறக்க நேரிடவில்லை. இந்தியா பெரும்பஞ்சத்தில் அழிந்து கொண்டிருந்த போது கூட இங்கே பிச்சைக்காரர்கள் எவரும் பட்டினியால் இறக்கவில்லை என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால் இன்றைய சூழலில் இந்தத் துறவு ஏற்கப்படுவதில்லை. அது இன்று மனிதர்கள் வெறும் குப்பைகளாக ஆவதாகவே பொருள்படுகிறது.
இந்தச் சூழலில் மரபான துறவு என்பது ஒருவகையில் பொருத்தமற்றதாக உள்ளது. அந்த துறவை மேற்கொள்வது என்பது இன்னொரு வகையான அமைப்புக்குள் சென்று சிக்கிக் கொள்வதாகவும் பல சமயம் மாறுகிறது. அப்படியென்றால் இன்று இருக்கும் ‘வெளியேறும் வழி’ என்ன? இந்த சுழற்சியில் இருந்து வெளியேற விரும்புபவர் என்ன செய்ய முடியும்?
(மேலும்)
விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 5 – அழகிய மணவாளன்
ரமேஷ் பிரேதன் நினைவாக 2025 ஆண்டில் வழங்கப்படும் விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது அழகியமணவாளனுக்கு வழங்கப்படுகிறது. அழகிய மணவாளன் மொழிபெயர்ப்பாளராகவும், செவ்வியல்கலை ஆர்வலராகவும் குறிப்பிடும்படி பணியாற்றி வருபவர்.
ரூ ஒருலட்சமும் சிற்பமும் அடங்கியது இந்த விருது.
அழகிய மணவாளன்
அழகிய மணவாளன் – தமிழ் விக்கிஅழகியமணவாளன் நூல்கள்
/* inline tdc_css att */.tdi_1{padding-top:12px !important;padding-bottom:8px !important;border-color:#eaeaea !important;border-style:solid !important;border-width: 1px 0px 1px 0px !important;}/* custom css */.tdi_1 .td_block_inner{width: 100%;
margin-left: -20px;
margin-right: -20px;
}.tdi_1:after{
content: '';
display: table;
clear: both;
}.tdi_1 .td-image-wrap{
padding-bottom: 100%;
}.tdi_1 .entry-thumb{
background-position: center 50%;
}.tdi_1 .td-image-container{
flex: 0 0 30%;
width: 30%;
display: block; order: 0;
}.ie10 .tdi_1 .td-image-container,
.ie11 .tdi_1 .td-image-container{
flex: 0 0 auto;
}.tdi_1 .td-module-container{
flex-direction: row;
border-color: #eaeaea !important;
}.ie10 .tdi_1 .td-module-meta-info,
.ie11 .tdi_1 .td-module-meta-info{
flex: 1;
}.tdi_1 .td-module-meta-info{
padding: 1% 5%;
border-color: #eaeaea;
}.tdi_1 .td_module_wrap{
padding-left: 20px;
padding-right: 20px;
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
border-color: #eaeaea;
}.tdi_1 .entry-thumb,
.tdi_1 .entry-thumb:before,
.tdi_1 .entry-thumb:after{
border-radius: 500px;
}.tdi_1 .td-post-vid-time{
display: block;
}.tdi_1 .td-post-category:not(.td-post-extra-category){
display: none;
}.tdi_1 .td-author-photo .avatar{
width: 20px;
height: 20px;
margin-right: 6px;
border-radius: 50%;
}.tdi_1 .td-excerpt{
display: none;
column-count: 1;
column-gap: 48px;
font-size:= !important;
}.tdi_1 .td-audio-player{
opacity: 1;
visibility: visible;
height: auto;
font-size: 13px;
}.tdi_1 .td-read-more{
display: none;
}.tdi_1 .td-author-date{
display: none;
}.tdi_1 .td-post-author-name{
display: none;
}.tdi_1 .td-post-date,
.tdi_1 .td-post-author-name span{
display: none;
}.tdi_1 .entry-review-stars{
display: none;
}.tdi_1 .td-icon-star,
.tdi_1 .td-icon-star-empty,
.tdi_1 .td-icon-star-half{
font-size: 15px;
}.tdi_1 .td-module-comments{
display: none;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0;
padding-bottom: 0;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:21px !important;line-height:1.2 !important;
}html:not([class*='ie']) .tdi_1 .td-module-container:hover .entry-thumb:before{
opacity: 0;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}/* landscape */@media (min-width: 1019px) and (max-width: 1140px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:20px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* portrait */@media (min-width: 768px) and (max-width: 1018px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:17px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* phone */@media (max-width: 767px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}var block_tdi_1 = new tdBlock();block_tdi_1.id = "tdi_1";block_tdi_1.atts = '{"modules_on_row":"","limit":"10","hide_audio":"yes","show_btn":"none","show_excerpt":"none","show_review":"none","show_com":"none","show_date":"none","show_author":"none","image_floated":"float_left","sort":"oldest_posts","category_id":"11301","image_width":"30","meta_padding":"1% 5%","modules_category":"","modules_category_margin":"","custom_title":"\u0bb5\u0bbf\u0bb7\u0bcd\u0ba3\u0bc1\u0baa\u0bc1\u0bb0\u0bae\u0bcd \u0bb0\u0bae\u0bc7\u0bb7\u0bcd \u0baa\u0bbf\u0bb0\u0bc7\u0ba4\u0ba9\u0bcd \u0ba8\u0bbf\u0ba9\u0bc8\u0bb5\u0bc1 \u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba4\u0bc1 2025 ","custom_url":"\/tag\/\u0bb0\u0bae\u0bc7\u0bb7\u0bcd-\u0baa\u0bbf\u0bb0\u0bc7\u0ba4\u0ba9\u0bcd-\u0ba8\u0bbf\u0ba9\u0bc8\u0bb5\u0bc1-\u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba4\u0bc1\/","post_ids":"-223403","tdc_css":"eyJhbGwiOnsiYm9yZGVyLXRvcC13aWR0aCI6IjEiLCJib3JkZXItYm90dG9tLXdpZHRoIjoiMSIsInBhZGRpbmctdG9wIjoiMTIiLCJwYWRkaW5nLWJvdHRvbSI6IjgiLCJib3JkZXItY29sb3IiOiIjZWFlYWVhIiwiZGlzcGxheSI6IiJ9fQ==","show_cat":"none","excerpt_col":"","m16_el":"20","ajax_pagination":"load_more","f_title_font_size":"eyJhbGwiOiIyMSIsImxhbmRzY2FwZSI6IjIwIiwicG9ydHJhaXQiOiIxNyJ9","f_title_font_line_height":"1.2","f_ex_font_size":"=","f_ex_font_line_height":"","image_height":"100","hide_image":"","modules_gap":"","meta_info_horiz":"","container_width":"100","image_radius":"500","tag_slug":"\u0bb0\u0bae\u0bc7\u0bb7\u0bcd-\u0baa\u0bbf\u0bb0\u0bc7\u0ba4\u0ba9\u0bcd-\u0ba8\u0bbf\u0ba9\u0bc8\u0bb5\u0bc1-\u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba4\u0bc1","block_type":"td_flex_block_1","separator":"","block_template_id":"","title_tag":"","mc1_tl":"","mc1_title_tag":"","mc1_el":"","category_ids":"","autors_id":"","installed_post_types":"","offset":"","show_modified_date":"","time_ago":"","time_ago_add_txt":"ago","time_ago_txt_pos":"","el_class":"","td_ajax_filter_type":"","td_ajax_filter_ids":"","td_filter_default_txt":"All","td_ajax_preloading":"","m_padding":"","all_modules_space":"36","modules_border_size":"","modules_border_style":"","modules_border_color":"#eaeaea","modules_border_radius":"","modules_divider":"","modules_divider_color":"#eaeaea","h_effect":"","image_size":"","image_alignment":"50","video_icon":"","video_popup":"yes","video_rec":"","spot_header":"","video_rec_title":"","video_rec_color":"","video_rec_disable":"","autoplay_vid":"yes","show_vid_t":"block","vid_t_margin":"","vid_t_padding":"","video_title_color":"","video_title_color_h":"","video_bg":"","video_overlay":"","vid_t_color":"","vid_t_bg_color":"","f_vid_title_font_header":"","f_vid_title_font_title":"Video pop-up article title","f_vid_title_font_settings":"","f_vid_title_font_family":"","f_vid_title_font_size":"","f_vid_title_font_line_height":"","f_vid_title_font_style":"","f_vid_title_font_weight":"","f_vid_title_font_transform":"","f_vid_title_font_spacing":"","f_vid_title_":"","f_vid_time_font_title":"Video duration text","f_vid_time_font_settings":"","f_vid_time_font_family":"","f_vid_time_font_size":"","f_vid_time_font_line_height":"","f_vid_time_font_style":"","f_vid_time_font_weight":"","f_vid_time_font_transform":"","f_vid_time_font_spacing":"","f_vid_time_":"","meta_info_align":"","meta_width":"","meta_margin":"","meta_space":"","art_title":"","art_btn":"","meta_info_border_size":"","meta_info_border_style":"","meta_info_border_color":"#eaeaea","meta_info_border_radius":"","modules_category_padding":"","modules_cat_border":"","modules_category_radius":"0","modules_extra_cat":"","author_photo":"","author_photo_size":"","author_photo_space":"","author_photo_radius":"","review_space":"","review_size":"2.5","review_distance":"","art_excerpt":"","excerpt_gap":"","excerpt_middle":"","excerpt_inline":"","show_audio":"block","art_audio":"","art_audio_size":"1.5","btn_title":"","btn_margin":"","btn_padding":"","btn_border_width":"","btn_radius":"","pag_space":"","pag_padding":"","pag_border_width":"","pag_border_radius":"","prev_tdicon":"","next_tdicon":"","pag_icons_size":"","f_header_font_header":"","f_header_font_title":"Block header","f_header_font_settings":"","f_header_font_family":"","f_header_font_size":"","f_header_font_line_height":"","f_header_font_style":"","f_header_font_weight":"","f_header_font_transform":"","f_header_font_spacing":"","f_header_":"","f_ajax_font_title":"Ajax categories","f_ajax_font_settings":"","f_ajax_font_family":"","f_ajax_font_size":"","f_ajax_font_line_height":"","f_ajax_font_style":"","f_ajax_font_weight":"","f_ajax_font_transform":"","f_ajax_font_spacing":"","f_ajax_":"","f_more_font_title":"Load more button","f_more_font_settings":"","f_more_font_family":"","f_more_font_size":"","f_more_font_line_height":"","f_more_font_style":"","f_more_font_weight":"","f_more_font_transform":"","f_more_font_spacing":"","f_more_":"","f_title_font_header":"","f_title_font_title":"Article title","f_title_font_settings":"","f_title_font_family":"","f_title_font_style":"","f_title_font_weight":"","f_title_font_transform":"","f_title_font_spacing":"","f_title_":"","f_cat_font_title":"Article category tag","f_cat_font_settings":"","f_cat_font_family":"","f_cat_font_size":"","f_cat_font_line_height":"","f_cat_font_style":"","f_cat_font_weight":"","f_cat_font_transform":"","f_cat_font_spacing":"","f_cat_":"","f_meta_font_title":"Article meta info","f_meta_font_settings":"","f_meta_font_family":"","f_meta_font_size":"","f_meta_font_line_height":"","f_meta_font_style":"","f_meta_font_weight":"","f_meta_font_transform":"","f_meta_font_spacing":"","f_meta_":"","f_ex_font_title":"Article excerpt","f_ex_font_settings":"","f_ex_font_family":"","f_ex_font_style":"","f_ex_font_weight":"","f_ex_font_transform":"","f_ex_font_spacing":"","f_ex_":"","f_btn_font_title":"Article read more button","f_btn_font_settings":"","f_btn_font_family":"","f_btn_font_size":"","f_btn_font_line_height":"","f_btn_font_style":"","f_btn_font_weight":"","f_btn_font_transform":"","f_btn_font_spacing":"","f_btn_":"","mix_color":"","mix_type":"","fe_brightness":"1","fe_contrast":"1","fe_saturate":"1","mix_color_h":"","mix_type_h":"","fe_brightness_h":"1","fe_contrast_h":"1","fe_saturate_h":"1","m_bg":"","color_overlay":"","shadow_shadow_header":"","shadow_shadow_title":"Module Shadow","shadow_shadow_size":"","shadow_shadow_offset_horizontal":"","shadow_shadow_offset_vertical":"","shadow_shadow_spread":"","shadow_shadow_color":"","title_txt":"","title_txt_hover":"","all_underline_height":"","all_underline_color":"","cat_bg":"","cat_bg_hover":"","cat_txt":"","cat_txt_hover":"","cat_border":"","cat_border_hover":"","meta_bg":"","author_txt":"","author_txt_hover":"","date_txt":"","ex_txt":"","com_bg":"","com_txt":"","rev_txt":"","audio_btn_color":"","audio_time_color":"","audio_bar_color":"","audio_bar_curr_color":"","shadow_m_shadow_header":"","shadow_m_shadow_title":"Meta info shadow","shadow_m_shadow_size":"","shadow_m_shadow_offset_horizontal":"","shadow_m_shadow_offset_vertical":"","shadow_m_shadow_spread":"","shadow_m_shadow_color":"","btn_bg":"","btn_bg_hover":"","btn_txt":"","btn_txt_hover":"","btn_border":"","btn_border_hover":"","pag_text":"","pag_h_text":"","pag_bg":"","pag_h_bg":"","pag_border":"","pag_h_border":"","ajax_pagination_infinite_stop":"","css":"","td_column_number":1,"header_color":"","color_preset":"","border_top":"","class":"tdi_1","tdc_css_class":"tdi_1","tdc_css_class_style":"tdi_1_rand_style"}';block_tdi_1.td_column_number = "1";block_tdi_1.block_type = "td_flex_block_1";block_tdi_1.post_count = "4";block_tdi_1.found_posts = "4";block_tdi_1.header_color = "";block_tdi_1.ajax_pagination_infinite_stop = "";block_tdi_1.max_num_pages = "1";tdBlocksArray.push(block_tdi_1);விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது 2025
விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 1 – தேவி லிங்கம்
விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 2 – சஜு
விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 3 – செல்வகுமார் பேச்சிமுத்து
விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 4 – அசோக் ராம்ராஜ்
பண்பாடு மலர்வது…
அன்புள்ள ஜெ,
வணக்கம்.
சமீபத்தில் விஷ்ணுபுரம் வாசித்து முடித்தேன். ஆறு முன்னுரைகளை வாசித்தபோது, காலத்தில் பின்னோக்கி சென்ற அனுபவம் கிடைத்தது. அந்த முகம் தெரியாத முதியவரிடமிருந்து தங்களுக்கு கிடைத்த விதை, எவ்வளவு அழகிய விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.
கொற்றவையில் மிகக் குறைவான கதாபாத்திரங்கள் தான். ஆனால் இதிலோ அத்தனை கதாபாத்திரங்கள்.
சங்கர்ஷனன், அனிருத்தன், லட்சுமி, சுதாவுடன் சேர்ந்து நாமும் விஷ்ணுபுரத்தில் நுழைகிறோம். விஸ்வரூப தோரண வாயிலும், ஹரிதுங்கா சிகரமும், மிகப்பிரமாண்டமான மகா கோபுரமும், பத்து நாள் நடக்கும் ஸ்ரீ பாத விழாவுமாக விஷ்ணுபுரம் கண்முன்னே விரிகிறது. வீர நாராயணர் பேத்தி சித்திரை, மன்னனை மணம் செய்வார் என்று விளையாட்டாக கூறுவதும், சித்திரை ஒரு நாள் ஒளிமயமாக ஜொலிப்பேன் என்றதும் மீள்வாசிப்பு செய்யும்போது முன்னெச்சரிக்கையாக (premonition) இருந்தது. கற்புக்கரசி மாதரி, சோனா நதியாக மாறிய கதை அருமை.
அற்புதமாக நினைக்கும் ஒவ்வொன்றுக்கும் பின்னால் உள்ள, விஞ்ஞானமும் விளக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் காலத்தின் போக்கில் எவ்வாறு மாறுகிறார்கள் என்று படித்து முடிக்கும் போது தெரிந்து கொள்ள முடிகிறது. சடங்குகள் (பவளமல்லி மரம் பகடி) உருவாகும் விதம் வேடிக்கையாக சொல்லப்பட்டிருக்கிறது. யோசித்தால், இப்படித்தான் காரணமே இல்லாமல் பலவற்றை செய்து கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது.
விஷ்ணுபுரம் வாசிக்கும் முன்பு, ஜெயக்குமார் Sirன் ஆலயக்கலை பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். விஷ்ணுபுரம் நாவல் ஆலயக்கலை வகுப்பிற்கு ஒரு practical test போல் அமைந்திருந்தது. தோரண வாயிலின் வர்ணனை தொடங்கி, உயர்ந்த வடக்கு கோபுரம், லலிதாங்கியின் ஆபரணங்கள் என வகுப்பில் கற்ற அனைத்தும் அதில் இருந்தது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு முதல் பாகத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் பள்ளியில் இருந்து வந்த போது தான், விஷ்ணுபுரத்திலிருந்து திரும்பி வந்தேன். என்னை இப்புத்தகம் உள்ளே இழுத்ததற்கு, இந்த பயிற்சியும் முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்.
தோணியில் அரிசியும், பத்தாயிரம் அப்பங்களும், யானை மூடியை திறக்கும் 1500 அப்பங்கள் வேக வைக்கும் இரும்பு கல் தொட்டிகளும், என்று எல்லாவற்றிலும் பிரம்மாண்டம். ஆனால் இறுதியில் எதுவுமே மிஞ்சவில்லை. வரலாற்றில் இந்த விஷயம் திரும்பத் திரும்ப நடந்து கொண்டே இருக்கிறது. மாபெரும் சாம்ராஜ்யங்கள் தொடங்கி Titanic வரை. ஆனாலும் நாம் அழிவே இல்லாதது போல் வாழ்ந்து கொண்டிருப்பது விந்தைதான்.
வாசித்து முடித்ததையே பெருமிதமாக நினைக்கும்போது, ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது எவ்வளவு சவாலான விஷயம் என்று புரிந்து கொள்ள முடிகிறது. பணி நிறைவடைந்து, உலகமெங்கும் விஷ்ணுபுரம் சென்று சேர வாழ்த்துக்கள்.
பல்வேறு அனுபவங்களையும், வாசிக்கும் ஆனந்தத்தையும் தரும் தங்களுக்கு மிகவும் நன்றி.
என்றும் அன்புடன்,
S.ராஜேஷ்வரி
கோவை.
https://vishnupuram.com/ நாவல் பற்றிய பார்வைகளுக்காக விஷ்ணுபுரம் வாங்க
ரமேஷ், அவரவர் தெய்வம்
ரமேஷ் – அஞ்சலிகள், கடிதங்கள்
ரமேஷ், தமிழிலக்கியச்சூழல்.
ரமேஷ் நினைவுகள், கடிதங்கள்.
எழுத்தாளனின் சாவின் நிறைவு
கலைஞனின் உயிர்த்தெழல்
ரமேஷ் பிரேதன் நினைவஞ்சலி
அன்பின் ஜெ
விஷ்ணுபுரம் விருது அறிவித்த பின்னரே ரமேஷ் பிரேதனின் எழுத்துக்களை தேடித்தேடி வாசித்தோம். அவருடைய நல்லபாம்பு, ஐந்தவித்தான், காமத்துப்பா, ஆபெண் எழுத்து புத்தகங்களை வாங்கி படித்து நண்பர்கள் விவாதிக்க தொடங்கினோம்.
ரமேஷின் மரண செய்தியறிந்து நீங்கள் அந்தியூரிலிருந்து மரண நிகழ்வுக்கு வந்தபோது உங்களுக்குள் இருந்த அகக்கொந்தளிப்பு முன்னெப்போதும் நாங்கள் பார்த்திராத ஒன்று.
ரமேஷ் பிரேதன் உடலை அடக்கம் செய்யும் வரை அரங்காவின் முன்னெடுப்புகளுக்கு இலக்கிய உலகம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளது.
சக எழுத்தாளனின் இழப்பில் கொஞ்சமும் பாதிப்படையாமல், உடன் நிற்க மனமின்றி, நிற்பவரை குறைசொல்லி முகநூலில் சிலர் எழுதுவது வேதனை தருகிறது. உயரே பறக்கும் பறவையை கல்வீசி தாக்க எறிந்த கல் தன் தலைமீதே விழ வலியால் துடிக்கின்றார் என்று எடுத்துக் கொள்கிறோம்.
நன்றி.
மூர்த்தி விஸ்வநாதன்
சேலம் வெண்முரசு வாசகர் வட்டம்.
*
அன்புள்ள மூர்த்தி,
இதை நாம் சற்று கனிவுடன்தான் அணுக வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். ஒருவேளை எழுத்தாளர்கள் தங்களுக்குள் கடுமையாக எதையாவது கூறிக்கொள்ளலாம். அது ஒருவகையான உட்பூசல் என்றே கொள்ளப்படவேண்டும். வாசகர்களின் பார்வையில் இந்த வகையான ஒரு எதிர்ப்புணர்வு அல்லது கசப்பு உருவாகி விடக்கூடாது. அது எப்படியோ இலக்கியம் அல்லது அறிவியக்கம் சார்ந்த கசப்பாக ஆகக்கூடும்.
இங்கே எழுத விரும்புபவர்கள், எதையேனும் எழுத முனைபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எழுத்தாளர் என்றும் இலக்கியத்தில் இருக்கிறோம் என்றும் எண்ணி வாழ்வார்கள். அவர்களில் மிகச்சிலரே உருப்படியாக ஏதேனும் எழுதுகிறார்கள். அவர்களிலும் வாசகர்களை அடைபவர்கள் மேலும் சிலர். வாசகர்களே அடையாத எழுத்தாளர்கள் அடையும் அகக்கொந்தளிப்பு கொடியது. அது சக எழுத்தாளர்கள் மீது கசப்பாக ஆகிறது. வெற்றிபெற்ற ஒவ்வொரு கலைப்படைப்பின் மீதும் பரவுகிறது. அடிப்படையான கருணை, அறம் அற்றவர்களாக ஆக்கிவிடுகிறது. எந்த மானுட மேன்மையையும் வெறுக்கும்படியாக படிப்படியாக திரண்டு விடுகிறது.
அவர்கள் அந்தக் கசப்பை வெளிப்படுத்துவதற்கு அரசியல் போன்ற ஏதேனும் ஒரு பாவலாவை மேற்கொள்கிறார்கள். அதை வளர்க்கும் சமூக ஊடகம் உள்ளது. அத்தகைய ஒரு கசப்பு அல்லது காழ்ப்புப் பதிவை அமுதம் போல விரும்பி வந்து அள்ளிப்பருகும் வம்பாளர் பலர் உள்ளனர். இவர்கள் அந்த வம்பாளர்க்கூட்டத்தை வாசக வட்டம் என எண்ணிக்கொள்கின்றனர். வருத்தத்திற்கும் அனுதாபத்திற்கும் உரிய எளிய மனிதர்கள். அவ்வளவுதான். அதற்குமேல் அவர்களை பொருட்படுத்தவேண்டியதில்லை.
ஜெ
*
அன்புடையீர்,
திரு.வாசு முருகவேல் அவர்களுக்கு நீங்கள் அளித்துள்ள பதிலைப் படிக்கும் போதே உணர்ச்சி வசமானேன். இவ்வாறு அருள்புரியும் தெய்வம் எது என எல்லாரலும் காண இயல்கின்றதா? நான் தவறிவிட்டேன் என்றே உணர்கிறேன. (ரமேஷ் தமிழிலக்கியச் சூழல்)
அன்புடன்,
சிவநாத்.
*
பெங்களூர்.
அன்புள்ள சிவநாத்,
அவரவர் தெய்வம் எது என அனைவருக்கும் தெரியும். அதை எளிய உலகியலுக்காக, சோம்பலால், பிறருக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கும் கோழைத்தனத்தால் பெரும்பாலானவர்கள் தவறவிட்டுவிடுகிறார்கள்.
ஜெ
ரமேஷ், அஞ்சலி- கடிதம், விளக்கம். ரமேஷ், கடிதங்கள் ரமேஷ் பிரேதன் விருது, ஒரு கேள்வி ரமேஷ், தனிவாழ்க்கை, இன்னொரு கடிதம் ரமேஷ் பிரேதன், கடிதங்கள் ரமேஷ், ஒழுக்கவியல் – கடிதம் ரமேஷ் பிரேதன், வாழ்த்துக்கள் விஷ்ணுபுரம் விருது, கடிதம். ரமேஷ் வாழ்த்துக்கள் ரமேஷ், கடிதங்கள்ரமேஷ் பிரேதன், தனிவாழ்க்கை- கடிதம்
வாழ்வின் இன்னொரு முகம்
மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே உட்கார்ந்து இருந்தேன். அந்த நாட்கள் மிகக் கொடுமையானவை. என் உடல்நலம். சீரழிந்தது மனநலம் அதைவிட சீரழிந்தது. உறவுகளும் சிக்கலாக ஆயின.
வாழ்வின் இன்னொரு முகம்
I am writing to share my experience after completing Jayakumar’s temple art class. You have chosen an exceptional expert. JK sir is well-versed in various composite arts, including temple art, devotional literature, and other temple-related arts, as well as epitaph reading and singing.
An Experience with Art
October 12, 2025
நிறைவான வாழ்க்கைக்கு தேவை என்ன?
நிறைவான வாழ்க்கை என்பது என்ன? அதற்கு தேவையானது என்ன? எளிமையான விடைகொண்ட எளிமையான கேள்வி. ஆனால் நம் அகத்தை துழாவி அதை அடைய நமக்கிருக்கும் தடைகளைக் கண்டடைவது கடினமானது. ஒரு பயணத்தின்போது எடுக்கப்பட்ட காணொளி இது.
உணவும் விதியும்
வணக்கம். எனது பெயர் கார்த்திகேயன், வசிப்பிடம் கோவை. கடந்த சில வாரங்களாகத்தான் உங்கள் எழுத்துகளோடு அறிமுகம். உங்களுடைய சிறுகதைகளையும், கட்டுரைகளையும் மட்டுமே இப்போது புரிந்துகொள்ள முடிகிறது.
ஆன்மிகம் சம்பந்தம்பட்ட விஷயங்களில் ஆழமான நூலறிவும் அனுபவமும் உள்ள நீங்கள் சில ஐயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.
1. அசைவ உணவு நீங்கள் உண்கிறீர்கள். இது ஆன்மீகத்துக்கு ஒத்துப் போகும் விஷயமா?
2. விதியைப் பற்றியும் அதனோடு ஒப்பிட்டு சுய முயற்சியின் திறனைப் பற்றியும் உங்கள் கருத்துக்களைத் தெரிந்துகொள்ள விரும்புகின்றேன்.
நன்றி.
அன்புடன் கார்த்திகேயன்.
அன்புள்ள கார்த்திகேயன்
அசைவ உணவுக்கும் ஆன்மீகத்துக்கும் சம்பந்தமில்லை – விவேகானந்தரே அசைவம் உண்டவர்தான். திபெத், சீன, ஜப்பானிய பௌத்தம் அசைவம் உண்ணுவதை விலக்கவில்லை. உலகம் முழுக்க ஆன்ம ஞானத்தின் படிகளில் ஏறியவர்களில் பெரும்பாலானவர்கள் அசைவ உணவாளர்களே. ஜென் ஞானிகள், சீன மெய்யியலாளர்கள், ஐரோப்பிய இறையியலாளர்கள். நீங்கள் உங்கள் குலவழக்கப்படி கற்றறிந்த சிலவற்றைக்கொண்டு ஆன்மீகம் போன்றவற்றை மதிப்பிட விழைய வேண்டாம்.
ஆன்மீகம் என்பது எது வாய்வழியாக உள்ளே செல்கிறது என்பதைச் சார்ந்தது என நம்புவது ஒரு இந்திய மூடநம்பிக்கை. இந்தியர்களுடைய மதமே எங்கே எதை எப்படி உண்பது என்பது மட்டும்தான் என விவேகானந்தர் இந்த மனநிலையை கிண்டல் செய்திருக்கிறார்.
விதி என நான் சொல்வது எல்லாமே முன்னால் தீர்மானிக்கப்பட்டுள்ளன என்று அல்ல. மண்மீது கோடானுகோடி உயிர்கள் இயற்கைச்சக்திகள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டும் முயங்கியும் செயலாற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் ஒட்டுமொத்தமான விளைவு என்ன, திசை என்ன என நம்மால் ஊகிக்க முடிவதில்லை. நாம் அதன் பகுதியாகவே இருக்கிறோம். நம் எல்லாச் செயல்களும் செயல்களின் விளைவுகளும் அதைச்சார்ந்தே உள்ளன. இதையே நான் விதி என்கிறேன்.
ஒரு தனிமனிதன் தன் முழு ஆற்றலாலும் செயல்படவும், முழுமனத்தாலும் சேர்ந்து பணியாற்றவும் கடமைப்பட்டிருக்கிறான். அதுவே அவன் சுதர்மம்- தன்னறம். ஆனால் அதன் விளைவுகள் அந்த பேரொழுக்கின் சாத்தியக்கூறுகளில் உள்ளன. அதை எண்ணி அவன் பதற்றமும் கவலையும் கொள்வதில் அர்த்தமில்லை.
இவ்வளவே என் எண்ணங்கள். கீதை உரையில் விரிவாகவே எழுதியிருக்கிறேன்.
ஜெ
மறுபிரசுரம். முதற்பிரசுரம் Oct 7, 2011
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

