Jeyamohan's Blog
October 9, 2025
எழுத்தின் தவம்
(ஓர் இளம்படைப்பாளிக்கு எழுதிய கடிதம்)
அன்புள்ள …,
உங்களுடைய கடிதம் கண்டேன். எழுதும்போது இருக்கும் தன்னம்பிக்கையின்மை, ஒரு பெரும்படைப்பை உண்மையிலேயே எழுதிவிட முடியுமா என்னும் அச்சம், அது உருவாக்கும் தாழ்வுணர்ச்சி, அதன் விளைவான சோர்வு, அதிலிருந்து தப்ப தன்னைத்தானே மையத்திலிருந்து விலக்கிக் கொண்டு வெவ்வேறு கலைவடிவங்களுக்குள் செல்ல முடியுமா என்று செய்யும் முயற்சி – என்று உங்களுடைய கொந்தளிப்பையும் தவிப்பையும் எழுதியிருந்தீர்கள்.
நீங்கள் சொன்னது சரி. உங்களிடம் நான் எதிர்பார்ப்பது தீவிரமான இலக்கியச் செயல்பாடுகளை மட்டும்தான். அது வெறும் நம்பிக்கை அல்ல, உங்களை மதிப்பிட்டு அறிந்து கொள்ளும் எதிர்பார்ப்புதான். நீங்கள் எவர் என நான் அறிவேன். உங்களால் சாதனை என்று சொல்லத்தக்க ஒரு படைப்பையாவது எழுதிவிட முடியும் என்றுதான் நான் நினைக்கிறேன்.
ஆனால் ஒரு சாதனைப் படைப்பை எழுதுவதற்கு அதை மட்டுமே எழுதுவேன் என்று ஒருவன் திட்டமிட முடியாது. ஒரு படைப்பு சாதனையாக வெளிவருவது அவன் கையில் இல்லை. ஒருவன் தன்னை அறிவுத்தொகை என்ற மாபெரும் ஏரியின் ஒரு சிறு மடை எனவே கருத வேண்டும். அதனூடாக வெளிவருவது அவனுடையது அல்ல. அவன் ஒரு கருவி மட்டுமே. நம் வழியாக எத்தனை எழுத்து வெளிவருகிறதோ அத்தனை தூரம் நாம் அதை உறுதியாக உணர்வோம்.
எழுத்தாளன் எழுத்தைத் தன்னுடையது என்று நினைத்தான் என்றால், தன் சாதனை என்று பெருமிதம் கொண்டான் என்றால், அதன் தோல்விகளும் தன்னுடையவை என எண்ணினான் என்றால், அவன் ஒருபோதும் அதன் பேருருவை அறியமுடியாது. உண்மையில் தன்னை ஒரு மிகச் சரியான கருவியாக ஆக்கிக் கொள்வதற்காகவே எல்லா எழுத்தாளர்களும் போராடுகிறார்கள். தன்னியல்பாக அந்த வளர்ச்சி நிகழ்ந்து, ஒரு கட்டத்தில் அது இயல்வதாகிறது.
இலக்கிய இயக்கத்தில் இருக்கும் பேரின்பம் என்பது நாம் ஒரு மகத்தான விஷயத்திற்காக இடைவெளியின்றி உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்ற தன்னுணர்வுதான். அந்த இலக்கிய தவத்தில் உள்ள தோல்விகள், அது அளிக்கும் தன்னம்பிக்கைக் குறைவு. சோர்வு ஆகியவை பற்றிச் சொல்லியிருந்தீர்கள். தேவைக்குமேல் பெரிய கனவைக் காண்கிறோமோ என்று தயக்கமும், பெரும்படைப்பு ஒன்றை எழுதிவிட வேண்டும் என்பது மொத்த வாழ்க்கைக்கும் மீதான ஒரு எடையாகவும் அழுத்தமாகவும் ஆகிவிட்டதோ என்ற சஞ்சலமும் எழாத எந்த எழுத்தாளரும் இலக்கியத்திற்குள் செயல்பட முடியாது.
உண்மையில் இலக்கியத்துக்குள் நுழையும் தொடக்க காலத்தில் இருக்கும் பெரும் கனவும், அதை ஒட்டிய அகக்கிளர்ச்சியும், மெல்ல மெல்ல வடியத் தொடங்குவது நாம் பெரும் படைப்புகளை படிக்கத் தொடங்கும்போதுதான். அவற்றைப் படிக்கப் படிக்க நம் தன்னம்பிக்கை குலைகிறது. நாம் சோர்வுறுகிறோம். நாம் தற்காலிகமாக எழுதாமலும் ஆகிவிடலாம். ஆனால் எதையுமே படிக்காமல், பொய்யான தன்னம்பிக்கையுடன், எதையோ ஒன்றை எழுதி தங்களையே சிறுமைப்படுத்திக் கொள்ளும் சில்லறை எழுத்தாளர்களின் ஆணவத்தை விட அந்தச் சோர்வும் தயக்கமும் மேலானது. புனிதமானதும்கூட.
அந்தத் தளர்ச்சியும் தன்னம்பிக்கை இழப்பும் இந்தப் பயணத்தின் ஒரு பகுதி என்றே கொள்ளத்தக்கவை. இந்தப் பயணத்திலிருந்து ஒருவர் முன்செல்வதற்கான வழியும் அதுதான். அது ஒன்றும் உங்களுக்கு மட்டும் உரியதல்ல. நல்ல படைப்பாளிகள் அனைவருக்குமே அந்த தன்னம்பிக்கையின்மையும் சோர்வும் தொடக்கத்தில் உண்டு. அதைக் கடந்து வராமல் எவரும் எழுத முடியாது. பலசமயம் செயற்கையான தன்னம்பிக்கையை ஊதிப் பெருக்கிக்கொண்டு இளம்படைப்பாளிகள் அந்த சோர்வை கடந்து வருகிறார்கள்.
என் இருபத்தாறு, இருபத்தேழு வயதுகளில் காசர்கோட்டின் கடலோரத்தில் ஓர் இருண்ட தனி வீட்டில் தன்னந்தனியாக தங்கி, பிரிட்டிஷ், ருஷ்யப்பேரிலக்கியங்களை இரவும் பகலும் என படித்துக் கொண்டிருந்த காலங்களை நினைவு கூர்கிறேன். அப்போது அந்தப் பேரிலக்கியங்களின் முன் என்னை வெறும் தூசியாக உணர்ந்தேன். என்னால் ஒருபோதும் ஒரு பேரிலக்கியத்தை எழுதிவிட முடியாது என்று அவநம்பிக்கை உருவாக்கிய சோர்வு என்னை பல நாட்கள் கண்ணீர் மல்க வைக்கும் துயருக்குத் தள்ளி இருக்கிறது. காசர்கோட்டின் கொந்தளிக்கும் கடற்கரையில் நின்று நெஞ்சில் கை வைத்து விம்மிய நாட்கள் உண்டு.
ஒரு முறை அங்கே என்னை சந்திக்க வந்த கோணங்கியிடம் “ஒரு பத்தியையாவது இந்த கடல் பொருட்படுத்தும்படி எழுதிவிட என்னால் முடியுமா?” என்று நான் கேட்டேன்.
கோணங்கி அவனுக்கே உரித்தான ஒரு மொழியில் “அவரவர் கடல்! அவரவர் கடல்” என்றான். அதன்பின் அந்தக் கடற்கரையின் மென்மணலில் சேரனின் தந்தை மகாகவி எழுதிய ஒரு வரியை ஒரு குச்சியால் எழுதினான். “சிறுநண்டு கடலோரம் படம் ஒன்று கீறும், சிலநேரம் அதை வந்து கடல் கொண்டு போகும்!” அதை கடல் அழித்தது.
ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் நான் எனக்கான ஒன்றை எழுதிவிட வேண்டும் என்றும், அது எந்த வகையிலும் பொருட்படுத்த முடியாதது என்றாலும் பரவாயில்லை என்றும் நினைக்கலானேன். எழுதி தூர வீசிவிடலாம், எவரும் படிக்கவேண்டாம், படித்தால்தானே அதன் மதிப்பு அல்லது மதிப்பின்மை வெளிப்படும், எனக்கு நான் வெளிப்பட்டுவிட்டேன் என்று திருப்தி இருந்தால் போதும் என்று முடிவு கட்டினேன். அந்த உணர்வுடன் தொடர்ந்து இடைவெளி இல்லாமல் எழுதிக் கொண்டே இருந்தேன்.
எனக்கான சவால்கள் மிகச் சிக்கலானவை. நான் வீட்டில் மலையாளம் பேசும் குடும்பத்தைச் சார்ந்தவன். வெளியே நாங்கள் கேட்டுப் பழகிய தமிழோ வட்டார வழக்கு மட்டும்தான். வெளியே நான் படித்த உரைநடை என்பது வணிக இலக்கியத்தின் தமிழ். தீவிர இலக்கியங்கள் பலவற்றை நான் மலையாளத்திலும் ஆங்கிலத்திலுமே வாசித்தேன். தமிழில் தீவிர இலக்கியத்தைப் படிக்கத் தொடங்கும் போது அதில் இருந்த மொழியும் நடையும் எல்லாமே மையத்தமிழ் நாட்டை சேர்ந்தவை, எனக்குரியவை அல்ல என்று தோன்றியது. ஆகவே எனக்கான சொந்த மொழியை உருவாக்கிக் கொள்ளாமல் நான் எழுதவே முடியாது என்ற சூழல் இருந்தது.
நான் எழுதி எழுதி என் தடைகளைக் கடந்தேன். சுந்தர ராமசாமியிடம் நான் ஒரு முறை சொன்னதுபோல கதவுகளை மண்டையால் அறைந்து திறந்தேன். இன்று வெளிவந்திருக்கும் விஷ்ணுபுரத்தின் அளவுக்கு நேர் பாதிப் பக்கங்கள் கிழித்து வீசப்பட்டிருக்கின்றன. ரப்பரின் ஒரு முழு வடிவம் தூக்கி வீசப்பட்டிருக்கிறது. அன்று எழுதிய மூன்று நாவல்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆயிரம் காலடிச் சுவடுகள் என்ற புத்தரின் வாழ்க்கை ஒட்டிய நாவல் அறுபது அத்தியாயங்களுக்கு மேல் சென்று இருக்கிறது. என் பழைய காகிதங்களில் அதன் சிலபகுதிகளை பின்னர் ஒருமுறை கண்டேன்.
எழுத்து எளிய ஒன்றல்ல. கலைக்கு வெளியே உள்ளவற்றை நாம் திரும்பத் திரும்பச் செய்து பழகி திறன் அடைய முடியும். கலைக்குள் செய்து செய்து பார்ப்பது என்பது நம்மை நாமே தகுதிப்படுத்திக் கொள்ளுதல் மட்டுமே. நமக்கு அப்பால் அருவவமாக இருக்கும் ஒன்றுடன் நம் அகமொழியைச் சரியாகப் பொருத்திக் கொள்வது மட்டும்தான் அது. அந்தப் பொருத்தம் ஒரு தற்செயலாகவே நிகழும். ஆனால் இடைவெளி இல்லாமல் முயல்பவர்களுக்கு மட்டும்தான் அது இயல்வதாகிறது. அந்த முயற்சியை தான் ஒவ்வொரு கலைஞனும் செய்தாகவேண்டும் என்கிறேன்.
அது எனக்கு இயன்றது என் தொடக்க காலச் சிறுகதைகளில், குறிப்பாக திசைகளின் நடுவே என்ற கதை. அதிலிருந்து எனது இன்னொரு தொடக்கம் நிகழ்ந்தது. அந்த ஆண்டே நான்கு வெவ்வேறு வகை கதைகள். ஒரு கதையிலிருந்து ஒரு மொழிவடிவத்தை கண்டுகொண்டு அதையே வாழ்நாள் முழுக்க திரும்பத் திரும்ப எழுதுவது தமிழில் பெரும்பாலான எழுத்தாளர்களின் வழியாக உள்ளது. ஆனால் நான் வெவ்வேறு வகையில் என்னை வெளிப்படுத்த வேண்டும் என முயன்றேன். திசைகளின் நடுவே போன்ற புராண மறு ஆக்கக் கதைகள், மாடன் மோட்சம் போன்ற வட்டார வழக்கும் அங்கதமும் கொண்ட கதைகள், படுகை போன்ற நாட்டாரியல் உருவகக்கதைகள், பாடலிபுத்திரம் போன்ற வரலாற்றுப் படிமக்கதைகள் என பல்வேறு வடிவங்களை நான் முயற்சி செய்திருக்கிறேன். அந்த எல்லா வடிவத்தையுமே தொடர்ந்து எழுதி முன்னெடுத்திருக்கிறேன். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையில் நான் வெளிப்பட்டு இருக்கிறேன்.
மாடன் மோட்சம் எழுதி நாற்பதாண்டு ஆகப்போகிறது. அது மொழியாக்கமாக, நாடகமாக உலகஅளவில் தொடர்ச்சியாக வெவ்வேறு மொழிகளுக்குச் சென்று கொண்டே இருக்கிறது. வெவ்வேறு காலகட்டங்களில் அக்கதை மீள்வாசிப்பு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் உயிர்ப்பலித் தடைச்சட்டத்தின்போது ஆங்கில இதழ்களில் அதுபற்றிய கட்டுரைகள் வந்தன. ராமர் கோயில் நிகழ்வின்போது அது மீண்டும் வாசிக்கப்பட்டது. சபரிமலை விவாதங்களின்போது மறுபடியும் புதியதாக வாசிக்கபப்ட்டது. அண்மையில்கூட ஒரு விமர்சகர் ‘சமகாலத்தை எழுதிய பெரும்படைப்பு’ என ஆங்கிலத்தில் அதைக் குறிப்பிட்டிருந்தார். அந்த நித்யநிகழ்காலத்தை கலையில் நிகழ்த்துவதற்கே தவம் தேவையாகிறது.
கலையை கலைமகளிடம் அருள்பெறுதல் என்கிறோம். தெய்வம் வெளியே இல்லை. நம்முள் உள்ள கலையின் தெய்வத்தை வணங்கி, அர்ப்பணித்து, பலிகொடுத்து நாமே எழுப்பிக்கொள்வதுதான் தவம் என்பது. அந்த தவத்தை ஒருபோதும் அஞ்சலாகாது, தவிர்க்கலாகாது. அதற்கு தலை கொடுக்க வேண்டும். அந்த அர்ப்பணிப்பை ஒவ்வொரு கலைஞரிடம் நான் எதிர்பார்க்கிறேன். தவம் என்பது வலியும் துயருமே. அதன் வழியாகவே நாம் ஆற்றல் அடைந்து முன்னெழுகிறோம்.
ஜெ
விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 1 – தேவி லிங்கம்
2025 ஆண்டில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமைப்பின் சார்பாக ரமேஷ் பிரேதன் நினைவாக இளம்படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது தேவி லிங்கம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
தேவி லிங்கம் தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். நெருப்பு ஓடு நாவலும் கிளிச்சிறை சிறுகதைத் தொகுதியும் கவனிக்கப்பட்ட படைப்புகள்.
ரூ 1 லட்சம் மற்றும் சிற்பம் அடங்கிய விருது இது
தேவி லிங்கம்
width: 100%;
margin-left: -20px;
margin-right: -20px;
}.tdi_1:after{
content: '';
display: table;
clear: both;
}.tdi_1 .td-image-wrap{
padding-bottom: 100%;
}.tdi_1 .entry-thumb{
background-position: center 50%;
}.tdi_1 .td-image-container{
flex: 0 0 30%;
width: 30%;
display: block; order: 0;
}.ie10 .tdi_1 .td-image-container,
.ie11 .tdi_1 .td-image-container{
flex: 0 0 auto;
}.tdi_1 .td-module-container{
flex-direction: row;
border-color: #eaeaea !important;
}.ie10 .tdi_1 .td-module-meta-info,
.ie11 .tdi_1 .td-module-meta-info{
flex: 1;
}.tdi_1 .td-module-meta-info{
padding: 1% 5%;
border-color: #eaeaea;
}.tdi_1 .td_module_wrap{
padding-left: 20px;
padding-right: 20px;
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
border-color: #eaeaea;
}.tdi_1 .entry-thumb,
.tdi_1 .entry-thumb:before,
.tdi_1 .entry-thumb:after{
border-radius: 500px;
}.tdi_1 .td-post-vid-time{
display: block;
}.tdi_1 .td-post-category:not(.td-post-extra-category){
display: none;
}.tdi_1 .td-author-photo .avatar{
width: 20px;
height: 20px;
margin-right: 6px;
border-radius: 50%;
}.tdi_1 .td-excerpt{
display: none;
column-count: 1;
column-gap: 48px;
font-size:= !important;
}.tdi_1 .td-audio-player{
opacity: 1;
visibility: visible;
height: auto;
font-size: 13px;
}.tdi_1 .td-read-more{
display: none;
}.tdi_1 .td-author-date{
display: none;
}.tdi_1 .td-post-author-name{
display: none;
}.tdi_1 .td-post-date,
.tdi_1 .td-post-author-name span{
display: none;
}.tdi_1 .entry-review-stars{
display: none;
}.tdi_1 .td-icon-star,
.tdi_1 .td-icon-star-empty,
.tdi_1 .td-icon-star-half{
font-size: 15px;
}.tdi_1 .td-module-comments{
display: none;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0;
padding-bottom: 0;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:21px !important;line-height:1.2 !important;
}html:not([class*='ie']) .tdi_1 .td-module-container:hover .entry-thumb:before{
opacity: 0;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}/* landscape */@media (min-width: 1019px) and (max-width: 1140px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:20px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* portrait */@media (min-width: 768px) and (max-width: 1018px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:17px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* phone */@media (max-width: 767px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}var block_tdi_1 = new tdBlock();block_tdi_1.id = "tdi_1";block_tdi_1.atts = '{"modules_on_row":"","limit":"10","hide_audio":"yes","show_btn":"none","show_excerpt":"none","show_review":"none","show_com":"none","show_date":"none","show_author":"none","image_floated":"float_left","sort":"oldest_posts","category_id":"11301","image_width":"30","meta_padding":"1% 5%","modules_category":"","modules_category_margin":"","custom_title":"\u0bb5\u0bbf\u0bb7\u0bcd\u0ba3\u0bc1\u0baa\u0bc1\u0bb0\u0bae\u0bcd \u0bb0\u0bae\u0bc7\u0bb7\u0bcd \u0baa\u0bbf\u0bb0\u0bc7\u0ba4\u0ba9\u0bcd \u0ba8\u0bbf\u0ba9\u0bc8\u0bb5\u0bc1 \u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba4\u0bc1 2025 ","custom_url":"\/tag\/\u0bb0\u0bae\u0bc7\u0bb7\u0bcd-\u0baa\u0bbf\u0bb0\u0bc7\u0ba4\u0ba9\u0bcd-\u0ba8\u0bbf\u0ba9\u0bc8\u0bb5\u0bc1-\u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba4\u0bc1\/","post_ids":"-223414","tdc_css":"eyJhbGwiOnsiYm9yZGVyLXRvcC13aWR0aCI6IjEiLCJib3JkZXItYm90dG9tLXdpZHRoIjoiMSIsInBhZGRpbmctdG9wIjoiMTIiLCJwYWRkaW5nLWJvdHRvbSI6IjgiLCJib3JkZXItY29sb3IiOiIjZWFlYWVhIiwiZGlzcGxheSI6IiJ9fQ==","show_cat":"none","excerpt_col":"","m16_el":"20","ajax_pagination":"load_more","f_title_font_size":"eyJhbGwiOiIyMSIsImxhbmRzY2FwZSI6IjIwIiwicG9ydHJhaXQiOiIxNyJ9","f_title_font_line_height":"1.2","f_ex_font_size":"=","f_ex_font_line_height":"","image_height":"100","hide_image":"","modules_gap":"","meta_info_horiz":"","container_width":"100","image_radius":"500","tag_slug":"\u0bb0\u0bae\u0bc7\u0bb7\u0bcd-\u0baa\u0bbf\u0bb0\u0bc7\u0ba4\u0ba9\u0bcd-\u0ba8\u0bbf\u0ba9\u0bc8\u0bb5\u0bc1-\u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba4\u0bc1","block_type":"td_flex_block_1","separator":"","block_template_id":"","title_tag":"","mc1_tl":"","mc1_title_tag":"","mc1_el":"","category_ids":"","autors_id":"","installed_post_types":"","offset":"","show_modified_date":"","time_ago":"","time_ago_add_txt":"ago","time_ago_txt_pos":"","el_class":"","td_ajax_filter_type":"","td_ajax_filter_ids":"","td_filter_default_txt":"All","td_ajax_preloading":"","m_padding":"","all_modules_space":"36","modules_border_size":"","modules_border_style":"","modules_border_color":"#eaeaea","modules_border_radius":"","modules_divider":"","modules_divider_color":"#eaeaea","h_effect":"","image_size":"","image_alignment":"50","video_icon":"","video_popup":"yes","video_rec":"","spot_header":"","video_rec_title":"","video_rec_color":"","video_rec_disable":"","autoplay_vid":"yes","show_vid_t":"block","vid_t_margin":"","vid_t_padding":"","video_title_color":"","video_title_color_h":"","video_bg":"","video_overlay":"","vid_t_color":"","vid_t_bg_color":"","f_vid_title_font_header":"","f_vid_title_font_title":"Video pop-up article title","f_vid_title_font_settings":"","f_vid_title_font_family":"","f_vid_title_font_size":"","f_vid_title_font_line_height":"","f_vid_title_font_style":"","f_vid_title_font_weight":"","f_vid_title_font_transform":"","f_vid_title_font_spacing":"","f_vid_title_":"","f_vid_time_font_title":"Video duration text","f_vid_time_font_settings":"","f_vid_time_font_family":"","f_vid_time_font_size":"","f_vid_time_font_line_height":"","f_vid_time_font_style":"","f_vid_time_font_weight":"","f_vid_time_font_transform":"","f_vid_time_font_spacing":"","f_vid_time_":"","meta_info_align":"","meta_width":"","meta_margin":"","meta_space":"","art_title":"","art_btn":"","meta_info_border_size":"","meta_info_border_style":"","meta_info_border_color":"#eaeaea","meta_info_border_radius":"","modules_category_padding":"","modules_cat_border":"","modules_category_radius":"0","modules_extra_cat":"","author_photo":"","author_photo_size":"","author_photo_space":"","author_photo_radius":"","review_space":"","review_size":"2.5","review_distance":"","art_excerpt":"","excerpt_gap":"","excerpt_middle":"","excerpt_inline":"","show_audio":"block","art_audio":"","art_audio_size":"1.5","btn_title":"","btn_margin":"","btn_padding":"","btn_border_width":"","btn_radius":"","pag_space":"","pag_padding":"","pag_border_width":"","pag_border_radius":"","prev_tdicon":"","next_tdicon":"","pag_icons_size":"","f_header_font_header":"","f_header_font_title":"Block header","f_header_font_settings":"","f_header_font_family":"","f_header_font_size":"","f_header_font_line_height":"","f_header_font_style":"","f_header_font_weight":"","f_header_font_transform":"","f_header_font_spacing":"","f_header_":"","f_ajax_font_title":"Ajax categories","f_ajax_font_settings":"","f_ajax_font_family":"","f_ajax_font_size":"","f_ajax_font_line_height":"","f_ajax_font_style":"","f_ajax_font_weight":"","f_ajax_font_transform":"","f_ajax_font_spacing":"","f_ajax_":"","f_more_font_title":"Load more button","f_more_font_settings":"","f_more_font_family":"","f_more_font_size":"","f_more_font_line_height":"","f_more_font_style":"","f_more_font_weight":"","f_more_font_transform":"","f_more_font_spacing":"","f_more_":"","f_title_font_header":"","f_title_font_title":"Article title","f_title_font_settings":"","f_title_font_family":"","f_title_font_style":"","f_title_font_weight":"","f_title_font_transform":"","f_title_font_spacing":"","f_title_":"","f_cat_font_title":"Article category tag","f_cat_font_settings":"","f_cat_font_family":"","f_cat_font_size":"","f_cat_font_line_height":"","f_cat_font_style":"","f_cat_font_weight":"","f_cat_font_transform":"","f_cat_font_spacing":"","f_cat_":"","f_meta_font_title":"Article meta info","f_meta_font_settings":"","f_meta_font_family":"","f_meta_font_size":"","f_meta_font_line_height":"","f_meta_font_style":"","f_meta_font_weight":"","f_meta_font_transform":"","f_meta_font_spacing":"","f_meta_":"","f_ex_font_title":"Article excerpt","f_ex_font_settings":"","f_ex_font_family":"","f_ex_font_style":"","f_ex_font_weight":"","f_ex_font_transform":"","f_ex_font_spacing":"","f_ex_":"","f_btn_font_title":"Article read more button","f_btn_font_settings":"","f_btn_font_family":"","f_btn_font_size":"","f_btn_font_line_height":"","f_btn_font_style":"","f_btn_font_weight":"","f_btn_font_transform":"","f_btn_font_spacing":"","f_btn_":"","mix_color":"","mix_type":"","fe_brightness":"1","fe_contrast":"1","fe_saturate":"1","mix_color_h":"","mix_type_h":"","fe_brightness_h":"1","fe_contrast_h":"1","fe_saturate_h":"1","m_bg":"","color_overlay":"","shadow_shadow_header":"","shadow_shadow_title":"Module Shadow","shadow_shadow_size":"","shadow_shadow_offset_horizontal":"","shadow_shadow_offset_vertical":"","shadow_shadow_spread":"","shadow_shadow_color":"","title_txt":"","title_txt_hover":"","all_underline_height":"","all_underline_color":"","cat_bg":"","cat_bg_hover":"","cat_txt":"","cat_txt_hover":"","cat_border":"","cat_border_hover":"","meta_bg":"","author_txt":"","author_txt_hover":"","date_txt":"","ex_txt":"","com_bg":"","com_txt":"","rev_txt":"","audio_btn_color":"","audio_time_color":"","audio_bar_color":"","audio_bar_curr_color":"","shadow_m_shadow_header":"","shadow_m_shadow_title":"Meta info shadow","shadow_m_shadow_size":"","shadow_m_shadow_offset_horizontal":"","shadow_m_shadow_offset_vertical":"","shadow_m_shadow_spread":"","shadow_m_shadow_color":"","btn_bg":"","btn_bg_hover":"","btn_txt":"","btn_txt_hover":"","btn_border":"","btn_border_hover":"","pag_text":"","pag_h_text":"","pag_bg":"","pag_h_bg":"","pag_border":"","pag_h_border":"","ajax_pagination_infinite_stop":"","css":"","td_column_number":1,"header_color":"","color_preset":"","border_top":"","class":"tdi_1","tdc_css_class":"tdi_1","tdc_css_class_style":"tdi_1_rand_style"}';block_tdi_1.td_column_number = "1";block_tdi_1.block_type = "td_flex_block_1";block_tdi_1.post_count = "0";block_tdi_1.found_posts = "0";block_tdi_1.header_color = "";block_tdi_1.ajax_pagination_infinite_stop = "";block_tdi_1.max_num_pages = "0";tdBlocksArray.push(block_tdi_1);விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது 2025
சித்தாந்தம் தழைத்தல்
கடந்த மாதம் சித்தாந்தம் மின்னஞ்சலுக்கு ஒரு கடிதம் வந்தது.
அறந்தாங்கி அருகே இருக்கக்கூடிய சிதம்பரம் என்கின்ற ஒரு அன்பர் கடிதம் எழுதி இருந்தார். அதில் அவருடைய அப்பா, தாத்தா போன்றோர் சேகரித்த அச்சு வடிவில் வெளிவந்த சித்தாந்த இதழ்களின் தொகுப்பு எல்லாவற்றையும் பத்திரமாக வழிவழியாக சேகரித்து வைத்து வந்திருக்கிறார். அதை உங்களுக்கு கொடையாக தருகிறேன் நீங்கள் பெற்றுக் கொள்வீர்களா? என்று கேட்டு கடிதம் அனுப்பி இருந்தார். படித்த போது மனம் மிகுந்த பரவசமடைந்தது. ஏதோ ஒரு வகையில் எங்களுக்கு அது இறை அனுப்பிய செய்தியாகத்தான் கருதினோம்.
இந்த இதழ் ஏதோ ஒரு வகையில் எங்கெங்கோ சென்று கொண்டிருக்கிறது என்பதற்க்கு இந்த கடிதமே ஒரு சாட்சியாக அமைகிறது. அதேபோன்று அவர் சேகரித்த கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட பழைய நூல்களை எங்களுக்கு அனுப்பியிருந்தார். நாங்கள் அதை எல்லாம் முறைப்படுத்தி வைத்துக்கொண்டு கொண்டிருக்கிறோம்.
தற்போது அதன் நீட்சியாக இந்த மாதத்திற்கான இதழ் வெளிவருகிறது. இதில் அடுத்த கட்ட நகர்வாக நமது முழுமையறிவு ஆசிரியர், யோகக் கலை நிபுணரான தில்லை செந்தில் பிரபு அவர்கள் சைவ சித்தாந்தத்தை பற்றி தொடர் கட்டுரை எழுத ஆரம்பித்திருக்கிறார். அவர் யோக மரபில் மட்டுல்லாது சைவ சித்தாந்தத்திலும் மிக நுண்மையான தேடல் உடையவர். அவர் இந்த தொடர் கட்டுரையை எழுதுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
வழக்கம் போல் இன்னும் ஆழமாகவும் விரிவாகவும் தாமல் கோ சரவணன் மற்றும் அருணாச்சல மகாராஜன் போன்றவர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டு வருகிறார்கள். மறுஆக்கங்களும் சித்தாந்த அறிஞர் சிற்றம்பல நாடிகளை பற்றிய விரிவான தகவல்கள் அடங்கிய ஒரு கட்டுரையும் இந்த இதழில் வந்திருக்கிறது.
இன்பமே எந்நாளும் துன்பமில்லை.
இப்படிக்கு
செ.பவித்ரா மற்றும் உ .முத்துமாணிக்கம்
சித்தாந்தம் இதழ் செப்டெம்பர்அலெக்ஸின் நாள்

நண்பர் அலெக்ஸின் மகள் எழில் இனிமையின் திருமணம் நிகழ்ந்த புகைப்படம் இன்று வந்தது. நீண்டநேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். இத்தனை பரவசம் ஏன் ஏற்படுகிறது என்று மெய்யாகவே எனக்குப் புரியவில்லை. பயல்கள் சொல்வதுபோல நான் ஒருவகை ‘பூமர்’ தானோ என எண்ணிக்கொண்டேன்.
நாம் அடையும் சில பரவசங்களை ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு கூட நம்மால் ஊகித்துவிட முடியாது. ஒரு பதின்பருவத்துப் பையன் என்றோ ஒருநாள் தன் மகனையோ மகளையோ கையில் ஏந்தும் போது அடையப்போகும் பேரின்பத்தை அப்போது கற்பனை செய்ய முடியாது .அது போலவே நாம் முதிய தந்தை எனும் நிலையில் கனியும்போது நம் மகளுக்கும் மகனுக்கும் நிகழும் திருமணம் நமக்கு அத்தனை பேரின்பத்தை நமக்கு அளிக்கும் என முன்னர் எண்ணியிருக்கவே மாட்டோம்.
எழில் இனிமை அலெக்ஸுடன் இருக்கும் புகைப்படங்களையும் அனுப்பி இருந்தாள். அந்தப் புகைப்படங்களில் அலெக்ஸ் ஒரு குடும்பத் தலைவராக மகிழ்ச்சியுடன் தன் மனைவி, மகன், மகளுடன் இருந்து கொண்டிருந்தார். அப்படங்களையே மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தேன்.
நான் மாண்டவர்களின் உடல்களை, முகத்தைப் பார்ப்பதே இல்லை. ஆகவே அவர்கள் இறந்தார்கள் என என் மனம் நம்புவதுமில்லை. அலெக்ஸ் என்றும் உடன் இருப்பதாகவே உணர்கிறேன். என் நண்பர்கள் எவரும் இறப்பு வழியாக என்னை விட்டுச்செல்வதில்லை. அநேகமாக எல்லா நாட்களிலும் உடன் இருப்பவராகவே இத்தனை ஆண்டுகளில் அலெக்ஸ் நீடித்திருக்கிறார்.
அலெக்ஸ் கொஞ்சிக்கொண்டே இருந்த சிறுமியாக எழில் இனிமையை எனக்குத் தெரியும். அவள் இனி மும்பை வாசி. அலெக்ஸின் இடத்தில் இருந்தும் என்னால் எழில் இனிமையை வாழ்த்த முடியும் என்று தோன்றுகிறது.
Vijay Politics, Real politics
In today’s environment, most people in Tamil Nadu engage in political talk solely on behalf of a particular party. Many poor people died at Karur in front of our eyes. Yet, we continue to hear excuses and blame from all sides.There is no one to guide these youth in what real politics entail.
Vijay Politics, Real politics
சொற்பொழிவுகள் சட்டென்று சலிக்க ஆரம்பித்துவிட்டன. அவை ஒரே வகையான உச்சரிப்பும் பாவனையும் கொண்டிருந்தன. திரும்பத் திரும்ப எளிமையான கருத்துக்களை விரித்து விரித்து சொல்லிக் கொண்டிருந்தன .சொற்பொழிவு சலிக்க ஆரம்பித்துவிட்டபோதுதான் தற்செயலாக உங்களுடைய பேச்சுக்களை கேட்க ஆரம்பித்தேன்
ஒவ்வொரு நாளும் காணொளி!சாக்ரமண்டோ நூலறிமுக நிகழ்வு. மாலை
கலிஃபோர்னியாவில் இன்னொரு நூல் அறிமுக நிகழ்வு. மாலையில் சாக்ரமண்டோவில் நிகழ்கிறது.
என் அறம் கதைகளின் ஆங்கில மொழியாக்கம் Stories of the true அமெரிக்க வெளியீடாக வந்துள்ளது. புத்தகக் கையெழுத்து மற்றும் உரையாடல் அரங்கு இது.
முன்பதிவுக்கான தொடுப்பு
Sacramento event details:RSVP: https://tinyurl.com/msxwjeprOctober 8, 2025
மரபிசைப் பயிற்சி

ஜெயக்குமார் நடத்தும் மரபிசைப் பயிற்சிகள் மீண்டும் நிகழ்கின்றன. இவை கர்நாடக இசை எனப்படும் மரபிசையை கேட்டு ரசிப்பதற்கான பயிற்சிகள். எதுவுமே அறியாத தொடக்கநிலையினருக்கானவை. ராகங்களை அறிமுகம் செய்து, திரைப்பாடல்கள் வழியாக அவற்றை செவிக்குப் பழக்கப்படுத்தி, இசைப்பாடல்களை கேட்கச்செய்து இசைக்குள் இட்டுச்செல்லும் முயற்சி இது. பங்கெடுத்த ஒவ்வொருவருக்கும் புதிய தொடக்கமாக அமைந்தவை.
நம்மில் பலருக்கும் மரபிசையை அறியவேண்டும், கேட்டு ரசிக்கவேண்டும் என்னும் ஆர்வமிருக்கும். அதற்கான முயற்சிகளைச் செய்தும் இருப்போம். ஆனால் இணையம் போன்றவை பெரும்பாலும் உதவுவதில்லை. நேரடியான வகுப்புகள் தேவை. தீவிரமான கவனத்துடன் அவ்வகுப்புகளை கவனிக்கவேண்டும். நேரடியாக ஈடுபட்டு பயிலவும் வேண்டும். அதற்காக அறிவியல்பூர்வமாக உருவாக்கப்பட்டவை இவ்வகுப்புகள்.
நாள் அக்டோபர் 31, நவம்பர் 1,2 (வெள்ளி சனி ஞாயிறு)
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
இசை, ஆலயம், மெய்யியல்- யோகேஸ்வரன் ராமநாதன் ஜெயக்குமாரின் இசை வகுப்புகள் மாய யவனிகையின் பின்னே எழுந்த மலர்த்திடல் இசை, வகுப்புகள்- கடிதம் இசைநாட்கள் மரபிசைப் பயிற்சி- கடிதம் அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள்- இடமிருப்பவைஉருது இலக்கியம், கஸல் அறிமுகம்ஃபயஸ் காதிரி அவர்கள் நடத்தும் உருது இலக்கியம்- கஸல் அறிமுக நிகழ்வு மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற ஒன்று. மரபான உருது கவிஞர்- பாடகர் குடும்பத்தில் வந்தவர் காதிரி. பாடகரும்கூட.உருது இலக்கியம் என்பது வடக்கே இருப்பது அல்ல. தமிழகத்தின் மிகச்சிறப்பான மரபுகளில் ஒன்று அது. உருது இலக்கியத்தின் ஒட்டுமொத்தச் சித்திரத்தை, குறிப்பாக முகலாயர் காலம் முதல் வரும் கவிமரபை அறிமுகம் செய்யும் காதிரி அதன் மிகச்சிறப்பான வெளிப்பாடான கஸல் இசை மரபையும் அறிமுகம் செய்கிறார்.
நாம் லதா மங்கேஷ்கர், வாணிஜெயராம் முதல் ஹரிஹரன் வரை பலர் பாடிய கஸல் பாடல்களைக் கேட்டிருப்போம். ஆனால் உண்மையில் ரசிக்க அடிப்படைப்பயிற்சி அற்றவர்களாகவும் இருக்கிறோம். அந்த அறிமுகப்பயிற்சி நமக்கு முற்றிலும் புதிய ஓர் உலகைத் திறந்து தருவது. ஒரு பெரிய தொடக்கம்.
(அக்டோபர் 20 அன்று திங்கள்கிழமை தீபாவளி ஆதலால் இந்நிகழ்வு வெள்ளி சனி என இருநாட்கள் மட்டுமே நிகழும். கட்டணமும் அதற்கேற்பவே அமையும்.18 மாலையுடன் நிகழ்வு நிறைவடையும்.)
நாட்கள் அக்டோபர் 17 மற்றும் 18 (வெள்ளி, சனி)
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
விபாஸனா இரண்டாம் நிலை பயிற்சிவி.அமலன் ஸ்டேன்லி தமிழ் விக்கிஅமலன் ஸ்டேன்லி அவர்களின் விபாசனா நிகழ்வுகள் முழுமையறிவு அமைப்பினூடாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. பலர் முதல் நிலை பயிற்சியில் கலந்துகொண்டுள்ளனர்.
இரண்டாம் நிலைப் பயிற்சியை நடத்த அமலன் ஸ்டேன்லி எண்ணுகிறார். முதல்நிலைப் பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் எவரும் இதில் கலந்துகொள்ளலாம். முதல்நிலைப் பயிற்சி அடிப்படைகளால் ஆனது. இது அகநோக்கிய அடுத்தகட்ட பயணம்.
விபாசனா பயிற்சி உள்ளத்தை ஒருமையாக்கவும், தேவையற்ற உளச்சுமைகளை உதறிவிட்டு உள அழுத்தமில்லா நிலையை அடையவும், அதன் வழியாகச் செயலில் தீவிரமாக ஈடுபடவும் மிக அவசியமானதாக உலகம் முழுக்க பயிற்றுவிக்கப்படுகிறது. அமலன் ஸ்டேன்லி வியட்நாம், தாய்லாந்து, ஜப்பான், திபெத் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த உலக அளவில் புகழ்பெற்ற பல விபாசனா ஆசிரியர்களிடம் முறையான, நீண்டகாலப் பயிற்சியை பெற்றவர். (பார்க்க வி.அமலன் ஸ்டேன்லி, தமிழ்விக்கி)
விபாசனா தியானமுறை பௌத்த பிக்குகளால் பொமு 2 ஆம் நூற்றாண்டில், அதாவது நாம் கீழடி நாகரீகம் இருந்ததாகச் சொல்லும் காலகட்டத்தில் உருவானது. தொடர்ச்சியாக வெவ்வேறு ஞானியரால் அது விரிவாக்கம் செய்யப்பட்டது. நம் உள்ளத்தை ஒருமைப்படுத்துவதற்கான உச்சகட்ட பயிற்சியாக இது கருதப்படுகிறது
பலர் பயிற்சி இல்லாமல் நேரடியாக பத்து நாட்கள், பதினைந்து நாட்கள் விபாசனா பயிற்சிக்குச் சென்று ஓரிரு நாட்கள் தாளமுடியாமல் ஓடிவருவதைக் காண்கிறோம். எங்கள் பயிற்சி என்பது மிகநுணுக்கமாக படிப்படியாக உள்ளத்தை பயிற்றுவிப்பது. இது மரபார்ந்ததும் அறிவியல்பூர்வமானதுமாகும்.
நாள் அக்டோபர் 24 ,25 மற்றும் 26 (வெள்ளி சனி ஞாயிறு)
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
வரவிருக்கும் நிகழ்வுகள்நவீனத் தியானம் உளக்குவிப்புப் பயிற்சி
தில்லை செந்தில்பிரபு தமிழ்விக்கி
தில்லை செந்தில்பிரபு நவீன தியானம்- உளக்குவிப்புப் பயிற்சிகளை 30 ஆண்டுகளாக அளித்து வருபவர். கோவையில் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை என்னும் அமைப்பை நிறுவி கல்விப்பணிகளையும் தியானப்பயிற்சிகளை அளிப்பதையும் சேவையாகச் செய்து வருகிறார். புகழ்பெற்ற ஏற்றுமதித் தொழில் ஆலோசகர், தொழில்முனைவோர் ஆக பணிபுரிகிறார்.
தில்லை செந்தில்பிரபுவின் தியான- உளக்குவிப்புப் பயிற்சிகள் எவருக்கானவை? எவருக்கு பயிற்சியில், தொழிலில் உள்ளம் குவியவில்லை? எவருக்கு எப்போதும் அகம் பரபரத்துக்கொண்டே இருக்கிறது? எவருக்கு ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு உள்ளம் தாவிக்கொண்டிருக்கிறது? எவருக்கு மிகச்சிறு காரணங்களுக்காககூட எரிச்சலும் கோபமும் உருவாகிறது? எவருக்கு எப்போதும் ஓர் பதற்றநிலை, எரிச்சல் நிலை இருந்துகொண்டிருக்கிறது?
மிக எளிதான சோதனை இது. சற்றுநேரம் தனியாக அமர்ந்தால் உங்களுக்குள் எழுவது இனிமையான, நிம்மதியான எண்ணங்களா அல்லது எரிச்சலும் கோபமும் ஊட்டும் எதிர்மறை எண்ணங்களா? எதிர்மறை எண்ணங்கள் என்றால் உங்கள் மனம் நிலையழிந்துள்ளது. ஒருமையற்று உள்ளது. இது இன்றைய நவீன வாழ்க்கை நமக்கு அளிக்கும் மிகப்பெரிய நோய். இதிலிருந்து பெரும்பாலானவர்கள் தப்ப முடியாது.
இந்த உளநிலைக்கு பல காரணங்கள். அன்றாடவாழ்க்கையே கடுமையான போட்டியாக ஆகியிருப்பது. மிகக்கடுமையான மன உழைப்பு இல்லாமல் வாழமுடியாத நிலை. (கடுமையான உடல் உழைப்பு உள்ளத்துக்கும்கூட நல்லது). அனைத்தையும் விட இன்று தொழில், குடும்பம் என எல்லா தளங்களிலும் அமைப்புகள் வலுவடைந்துள்ளன. நாம் வெவ்வேறு அமைப்புகள் சார்ந்து மட்டுமே வாழமுடிகிறது. அந்த அமைப்பின் அதிகாரக்கட்டுமானத்தில் ஒரு பகுதியாக நாம் அமைகிறோம். ஆகவே நம்மை எவரோ மேலிருந்து சாட்டையால் அடிக்கிறார்கள். நாம் கீழிருப்பவர்களை அடிக்கிறோம். இதுவே மனச்சோர்வை, மனச்சிதறலை உருவாக்குகிறது.
இந்தியத் தியானமுறைகளை மேலைநாட்டு உளவியல் கொள்கைகளுடன் இணைத்து மகரிஷி மகேஷ் யோகி 1970களில் நவீனத் தியானமுறையை உருவாக்கினார். அது 1950 களில் உலகப்போரின் அழிவுக்குப்பின் உருவான மனச்சோர்வுக் காலகட்டத்தில் பிறந்தவர்களின் இளையதலைமுறை உருவான காலகட்டம். வியட்நாம் போர், பல்வேறு புரட்சிகளின் தோல்வி ஆகியவற்றால் அந்த உளச்சோர்வு பெருகியது. அதை பீட் தலைமுறை என்பார்கள். ஹிப்பி இயக்கம் உருவானது. அவர்களுக்காக மகேஷ் யோகி உருவாகிய தியானமுறை அவர்களில் பெரும்பாலானவர்களை மீட்டது. அதன் வழியாக அது உலகம் முழுக்க பரவியது.
அந்த வழியில், மேலும் மேலும் நவீன உளவியல் மற்றும் நிர்வாகவியல் கொள்கைகளை இணைத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட தியான முறைகள் இன்று உலகமெங்கும் உள்ளன. அந்த மரபில் வந்த தியானப்பயிற்றுநர் தில்லை செந்தில் பிரபு . எந்த தியான முறையிலும் ஆசிரியருடனான நேரடி உறவு, அவர் உங்களை அறிந்திருப்பது முக்கியமானது. ஆகவே இந்த நேரடிப்பயிற்சி அளிக்கப்படுகிறது
நாள் நவம்பர் 7, 8 மற்றும் 9
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
ஆயுர்வேத- வாழ்க்கைமுறை அறிமுகம்ஒருவரிடம் அவர் ஆரோக்கியமாக இருக்கிறாரா என்று கேட்டால் ஆம் என்று சொல்லலாம். ஆனால் மூன்று கேள்விகளை மேற்கொண்டு அவரிடம் கேட்கலாம்.
இயல்பான நிறைவான தூக்கம் உள்ளதா, தூங்கி எழுந்தால் புத்துணர்வாக உணர்கிறீர்களா?இயல்பான செரிமானம் உள்ளதா? அதன்விளைவாக இயல்பான கழிவகற்றல் நிகழ்கிறதா?உடலில் எங்கேனும் வலி அல்லது அசௌகரியத்தை உணர்கிறீர்களா? குறிப்பாகக் காலையில்?இவற்றுக்கான பதில்களில் இருந்தே ஒருவர் தன் உடல்நிலை சீராக இருப்பதை உறுதிசெய்துகொள்ள முடியும்.
ஆனால் கறாராகப்பார்த்தால் பெரும்பாலானவர்களுக்கு இம்மூன்றிலும் சிக்கல் இருக்கும். சென்றகாலங்களில் நாற்பது கடந்தவர்களுக்கான சிக்கல் இது. இன்று இளமையிலேயே உருவாகி வந்துள்ளது. காரணம், இன்றைய வாழ்க்கைமுறை. இதிலுள்ள அவசரம், போட்டி ஆகியவை.
ஆயுர்வேதம் எல்லா நோய்களுக்கும் தீர்வு அளிக்கும் முறை அல்ல. ஆனால் வாழ்க்கைமுறைச்சிக்கல்களுக்கு அது நிரந்தரமான தீர்வுகளை அளிக்கும். வாழ்க்கைமுறைச் சீரமைப்பு, இயற்கையான மூலிகை மருந்துகள் வழியாக. அதற்கு முதலில் ஒருவர் தன் உடல் பற்றி ஆயுர்வேதம் சார்ந்த பார்வையை அறிந்திருக்கவேண்டும். தன்னைத்தானே மதிப்பிட அறிந்திருக்கவேண்டும். தன்னை சீரமைக்க அது அவசியம். அதன்பொருட்டே இந்தப் பயிற்சிகள்.
சுனீல் கிருஷ்ணன் முறையான ஆயுர்வேத கல்விகொண்டவர், புகழ்பெற்ற நவீன எழுத்தாளர், காந்தியவாதி.
அவருடைய வகுப்புகள் நவம்பர் 14 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நிகழ்கின்றன.
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
ஆச்சாரமும் பக்தியும் தத்துவத்திற்கு எதிரானவையா?
ஆசாரமானவர்கள் கேட்கும் ஒரு கேள்வி உண்டு. தத்துவத்தைக் கற்றுக்கொண்டால் தங்கள் ஆசாரத்தை இழந்துவிடுவோமா? பக்தர்களும் அதை கேட்பதுண்டு. அதைச்சார்ந்த ஒரு தெளிவு. முடிவெடுக்கவேண்டியவர்கள் இதை சிந்திக்கலாம்.
அறிவியக்கத்தின் தொற்றுநோய்க்கிருமிகள்.
அன்புள்ள ஜெயமோகன்,
நீங்கள் பாசிச எதிர்ப்பு, அதை ஒட்டி எழுத்தாளர்களின் பங்கு ஆகியவற்றை பற்றி எழுதிய கட்டுரை பார்த்தேன் .உங்கள் கூற்றிலேயே கூட ஓர் அறிவு ஜீவி என்பவன் ஃபாசிச அரசியலுக்கு எதிரான ஒரு செயல்பாட்டுடன் களத்தில் நின்றாக வேண்டும் என்றும் அதுவே நேர்மை என்றும் ஒரு தொனி உள்ளது. நான் தொடர்ச்சியாக தமிழில் எழுத முயன்று கொண்டிருப்பவன். இன்னமும் என்னுடைய படைப்புகள் போதுமான அளவுக்கு வெளிவரவில்லை. நான் நிறைவடையுமளவுக்கு ஏதும் எழுதவுமில்லை. ஆனால் என் ஆர்வம் என்பது சில குறிப்பிட்ட உளவியல் சிக்கல்களில் மட்டும்தான் உள்ளது. அவை நானே அடைந்தவை . இந்த நூற்றாண்டின் சிக்கல்கள் அவை.
நான் அந்த உளவியல் சிக்கலின் சமூகப் பின்னணி ,அரசியல் பின்னணி ஆகியவற்றைப் பற்றி மட்டும் தான் நான் கவலை கொள்கிறேன். அதையே யோசிக்கிறேன். அதைவிட அந்த உளவியல் சிக்கல்களை சரியான மொழியில் கொண்டு வந்து சேர்ப்பதற்கான சவாலில்தான் என் மனம் உள்ளது. இதுவரைக்கும் நான் அதில் வெல்லவில்லை .ஆனால் ஒவ்வொரு நாளும் அதற்காக முயன்று கொண்டே இருக்கிறேன். என்னுடைய தவம் என்பது அதுதான். நான் இதை விட்டு விலகும் ஒவ்வொரு கணமும் என்னுடைய இலக்கியத்தை நானே அழிக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும் . நான் ஃபாசிச எதிர்ப்புக்கு செயல்படவேண்டும் என்று சொல்வது ஒருவகையில் என்னுடைய தனித்தன்மை கொண்ட தேடலையும், என் கலை சார்ந்த தவிப்பையும் உதறி விடவேண்டும் என்றுதான் பொருள்படுகிறது அல்லவா?
நான் அரசியல்விவாதங்களுக்குள் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை.
(எம்)
*
அன்புள்ள எம்,
நீங்கள் கேட்பது ஒரு முக்கியமான சிக்கல்தான். நான் என்னுடைய அக்கட்டுரையில் அல்லது வேறு கட்டுரைகளில் ஒருவர் உறுதியாக ஏதேனும் அரசியல் நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்றோ, ஏதேனும் அரசியல் தரப்பை சார்ந்து செயல்பட வேண்டும் என்றோ, அரசியல் களத்தில் ஏதேனும் வெளிப்படுத்தியாக வேண்டும் என்றோ, அல்லது குறைந்தபட்சம் ஒருவருக்கு அரசியல் ஆர்வம் இருந்தாக வேண்டும் என்றோ ஒருபோதும் சொல்வதில்லை. முற்றிலும் அரசியல் இல்லாமல் இருப்பதும், அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லா நிலையிலும் செயல்படுவதும் அறிஞர்களுக்கும் கலைஞர்களுக்கும் இயல்வதே என்றும், அது மிக அவசியமானது என்றும் நான் நினைக்கிறேன். அரசியலின்மை என்பது அறிவியக்கத்தில் மிகமிக முக்கியமான ஒரு நிலைபாடுதான். அப்படி அரசியலின்மை எனும் நிலைபாடு எடுத்த பல மாபெரும் கலைஞர்கள், சிந்தனையாளர்கள், ஆய்வாளர்கள் உண்டு. பெரும்போர்கள், அடக்குமுறைகளின்போதுகூட அத்தகைய நிலைபாடு எடுத்த பலநூறு மேதைகள் வரலாற்றில் உண்டு.
அறிவியக்கம் செயல்படுவது எப்படி, அறிஞர்களின் உள்ளம் இயங்கும் வழி என்ன, கலைஞர்களின் அகம் ஓடும் முறை என்ன என்பது எனக்கு நன்றாகவே தெரியும். எனக்கு அரசியல் ஆர்வம் இருக்கலாம், ஆனால் எல்லாருக்கும் அப்படி இருக்க வேண்டிய தேவையில்லை என்பதையே தொடர்ந்து சொல்லி வருகிறேன். சில படைப்பிலக்கியவாதிகள் வாழ்வின் ஒரே ஒரு புள்ளியை மட்டுமே மிக ஆழமாக தொடர்ந்து, வாழ்நாள் முழுக்க ஆராய்ந்து ஊடுருவிச் செல்பவர்களாக இருப்பார்கள். அதற்கேற்ப தங்கள் அகமொழியையும் நடையையும் உருவாக்கும் தவத்திற்கு அப்பால் அவர்களுக்கு எந்த ஆர்வமும் இருப்பதில்லை. அந்த தவத்திற்கான உரிமையை அவர்களுக்கு வழங்கும் சமூகம் மட்டும்தான் மெய்யான கலைப்படைப்புகளை உருவாக்க முடியும்.
அவ்வாறு ஏதேனும் ஒரு உளவியல், தத்துவச் சிக்கலில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கும் ஓர் எழுத்தாளிடம் சென்று சமகால அரசியலைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்று கேட்பதை அடிப்படை அறிவுள்ள வாசகர் எவரும் செய்ய மாட்டார்கள். நகுலன் வாழ்ந்த உலகம் வேறு. தி.ஜானகிராமன் உழன்ற உணர்வுநிலைகள் வேறு. அவர்களிடம் சென்று நெருக்கடி நிலைபற்றி உங்கள் கருத்து என்ன, நீங்கள் ஏன் போராடவில்லை என்று எந்த நுண்ணுணர்வுள்ள வாசகனும் கேட்டதில்லை. அவர்களின் அறவியல் என்ன என்பதை எந்த வாசகனும் அறிந்திருப்பான். ஆனால் இன்றைய அரசியல் அல்லக்கை கூசாமல் அதை மட்டுமே கேட்பான். இதுதான் இந்தக் காலகட்டத்தின் பேரவலம்.
இதேபோல அறிஞர்களிலும் ஒருவகை தனிமைப்பாடு உண்டு. ஒரு குறிப்பிட்ட அறிவுத்தளத்தில் மட்டுமே தன் முழுக்கவனத்தையும் குவித்து தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் அறிஞர்கள்தான் ஏதேனும் ஒரு களத்தில் மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றுகிறார்கள். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக ஒரு குறிப்பிட்ட வகையான தேடலை மேற்கொள்பவர் மட்டும்தான் வரலாற்றாய்வில் ஏதேனும் சாதிக்க முடியும். அறிவியலில் வெல்ல முடியும். அதன் விளைவு தெரிய பல ஆண்டுக்காலம் ஆகலாம், ஒருவேளை அவர் வாழ்நாளில் அது தெரியப்படாமலும் போகலாம். அவருக்கு பெயரோ புகழோகூட கிடைக்காமலாகலாம். அந்த அர்ப்பணிப்புதான் அறிவுச்செயல்பாட்டின் அடிப்படை.
ஒரு கல்வெட்டைத் தேடி பத்து ஆண்டுகள் வாழ்ந்தவர்கள் உண்டு. ஒரு குறிப்பிட்ட செப்பேட்டைப் புரிந்து கொள்வதற்காக ஐந்து ஆண்டுகள் ஒவ்வொரு நாளையும் செலவிட்டவர்கள் உண்டு. ஒரு குறிப்பிட்ட பாக்டீரியாவை அவதானிப்பதிலேயே வாழ்க்கையை முடித்தவர்கள் உண்டு. அவர்களால் தான் அறிவியக்கம் வாழ்கிறது. ஒரு நூலுக்கு உரை எழுதுவதற்காக ஏழாண்டுகளில் ஒவ்வொரு நாளிலும் எட்டு மணி நேரத்தை செலவிடுபவர்கள் உண்டு. அவர்களிடம் சென்று அவர் உடனடியாக அந்தந்த காலகட்ட அரசியலுக்கு கருத்துச் சொல்ல விட்டால் அவர்கள் ஃபாசிச ஆதரவாளர்கள், அரசாங்க அதிகாரத்திற்கு ஆதரவாளர்கள் என்று சொல்பவர் அறிவியக்கத்தை அழிக்கும் நஞ்சு மட்டுமே.
பலசமயம் அறிஞர்கள் சமகால அரசியல் – அதிகாரத் தரப்புடன் சமரசம் செய்துகொண்டு தங்களது ஆய்வை முன்னெடுத்திருப்பதைப் பார்க்கலாம். இன்று தமிழ் விக்கி பதிவுகள் போடும்போது ஒன்று தெரிகிறது, சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் தமிழறிஞர்களில் பெரும்பங்களிப்பை ஆற்றிய பெரும்பாலானவர்கள் அன்றிருந்த பிரிட்டிஷ் அரசுடன் சமரசம் செய்து கொண்டவர்கள். அன்று தேசிய விடுதலை இயக்கம் கொந்தளித்துக் கொண்டிருந்தபோது கூட அவர்கள் அதில் பங்கு எடுத்துக்கொள்ளவே இல்லை. மாறாக அவர்கள் தங்களுடைய தமிழ் ஆய்வு பண்பாட்டாய்வுகள் மட்டுமே ஆழ்ந்திருந்தார்கள். உதாரணங்கள் – ஆ.சிங்காரவேலு முதலியார், உ.வே.சாமிநாதையர், சி.வை.தாமோதரம் பிள்ளை, தமிழ்வேள் உமாமகேஸ்வரனார், பாண்டித்துரைத்தேவர் போல பலநூறுபேர். அவர்கள் எல்லாம் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் என்று முத்திரையடித்து இழிவுசெய்வது எவ்வளவு பெரிய மடமை!
அதேபோன்றுதான் பின்னர் சுயமரியாதை இயக்கமும் திராவிட இயக்கமும் இங்கே பெரிய அளவில் நிகழ்ந்து கொண்டிருந்தபோது கூட இங்கிருந்த கணிசமான தமிழ் அறிஞர்கள் அவற்றில் எந்த வகையிலும் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் தங்களுடைய ஆய்வுகளில் மட்டுமே ஈடுபட்டிருந்தார்கள். இத்தனைக்கும் அவர்களில் பலருக்கு அந்த தரப்பில் உடன்பாடு இருந்தது. அந்தந்த காலகட்டத்தில் அரசியலுடன் இணைந்து சத்தம்போட்ட இரண்டாம்நிலை அறிஞர்கள் பதவிகளை அடைந்தனர். செத்தபின்னரும் அரசால் முதன்மைப்படுத்தப்பட்டனர். பல பெரும் சாதனையாளர்கள் அவர்களின் அரசியலின்மையாலேயே மறக்கப்பட்டனர். ஆனால் இன்று திரும்பிப் பார்க்கும்போது அவர்களுடைய அந்த சாதனைகள்தான் பண்பாட்டுத்தளத்தில் ஓங்கி நின்றிருக்கின்றன. அன்று அவர்கள் எளிய சுயலாபங்களுக்காகவோ, சூழலின் அழுத்தத்திற்காகவோ தங்கள் ஆய்வுகளை இரண்டாம்பட்சமாகக் கருதி அரசியலுக்கும் சென்றிருந்தார்கள் என்றால் அவர்களின் பங்களிப்பு என்று எதுவும் எஞ்சியிருக்காது.
பொதுவாக நுண்கலைக் கலைஞர்கள் தங்கள் கலைகளுக்குள்ளேயே மூழ்கியிருப்பதைக் காணலாம். அக்கலைகள் கடும் பயிற்சியை நிபந்தனையாக்குபவை. பிறிதில்லாத தவத்தை கோருபவை. அவர்களிடம் உன் அரசியலென்ன என்று கேட்கும் சமூகம் அக்கலைகளை அழிக்கிறது. முன்பு அதைச் செய்தவர்கள் ஃபாசிஸ்டுகள், நாஸிகள், ஸ்டாலினிஸ்டுகள். இன்று அதை ஃபாசிச எதிர்ப்பின் பெயரால் இந்த அரசியல் அல்லக்கைகள் செய்கின்றன.
இவர்களுக்கு எந்த ஒரு அறிவியக்கத்தையோ கலையையோ புரிந்து கொள்ளும் அடிப்படை அறிவு அல்லது நுண்ணுணர்வு கிடையாது. இவர்கள் தங்களுடைய கட்சி தங்களுக்கு அளிக்கும் ஒரு செயல்திட்டத்திற்கு அப்பால் எதையும் யோசிப்பவர்கள் அல்லர். அந்த செயல்திட்டம் மட்டுமே உண்மையானது என்றும், தேவையானது என்றும், அதைச் சார்ந்து மட்டுமே எவரும் செயல்பட வேண்டும் என்றும், அதை அண்டியிராமல் சுதந்திரமாகச் செயல்படும் அனைவருமே தங்களுடைய முழுமூச்சான எதிரிகள் என்றும், அவர்களை அவதூறு வசைப்பாடி அழிப்பது தங்களுடைய கடமை என்றும் நம்பும் கூட்டம் இது. சென்ற நூறாண்டுகளில் எவரெவெல்லாம் இவர்களால் இப்படி இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று பார்த்தால் ரத்தக்கண்ணீர் வரும். இன்றும் அதுதான் தொடர்கிறது.
இத்தனை தீவிரமாக ஓர் அரசியல் தரப்பின் குரலாக ஒலிப்பவர்கள் உண்மையில் அந்தக் கொள்கைக்கு விசுவாசமானவர்களா என்றால் அதுவும் இல்லை. ஏனெனில் அந்த அரசியல் தரப்பு தன் எதிரித் தரப்புடன் ஒரு சமரசத்தை செய்து கொண்டு, இணைந்து அரசியலை முன்னெடுக்கும் என்றால் இவர்கள் எந்தக் கூச்சமும் இல்லாமல் உடனடியாக தாங்களும் அந்த நிலையை எடுத்துவிடுவார்கள். அப்படி என்றால் அதுவரைக்கும் அவர்கள் செய்த மிரட்டல்கள், அவதூறுகள் ஆகியவற்றுக்கெல்லாம் என்ன பொருள்? அவை உண்மையிலேயே கலையிலும் அறிவியக்கத்திலும் ஈடுபட்டிருக்கும் அறிஞர்களுக்கும் கலைஞர்களுக்கு அளித்த உள நெருக்கடி, சோர்வு, செயல்களுக்கான தடை ஆகியவற்றிற்கு அப்பால் எந்த விளைவும் இல்லை.
இந்த அரசியல் சில்லறைகள் ஏதோ தங்கள் பிழைப்பை பார்க்கட்டும் என நினைக்கலாம். ஆனால் இவர்கள் தங்கள் அறிவுத்தவத்தை மேற்கொள்ளும் மெய்யான அறிஞர்களை, ஆய்வாளர்களை, கலைஞர்களை தங்கள் எதிர்த்திசையில் நிறுத்தி வசைபாடுகிறார்கள், இழிவு படுத்துகிறார்கள். அவர்களின் பொதுவெளி பிம்பத்தை சிதைத்து, அவர்கள் பொதுச்சமூகத்தினருடன் உரையாட முடியாதபடி முத்திரை குத்தி தனிமைப்படுத்துகிறார்கள். அதன் வழி அறிவியக்கம் பரவாதபடி செய்கிறார்கள். தங்களுடைய எளிய பிரச்சாரங்களுக்கு அப்பால் எந்த கருத்தும், கலையும் மக்களிடையே சென்று சேர இவர்கள் விடுவதில்லை. இவர்களின் பிரச்சார வல்லமை மிகப்பெரியது, எளிய ஒற்றைப்படைக் கூச்சல் ஆதலால் சாமானியருக்கும் எளிதில் சென்று சேர்வது. இவர்களின் இடைவிடாத தொடர்பிரச்சாரத்தை அறிஞர்களும் கலைஞர்களும் எதிர்கொள்ளவே முடியாது. இது இவர்கள் ஆற்றும் மிகப்பெரிய அழிவுப் பணி. இந்த தொற்றுநோய்க் கிருமிகளை அடிப்படை அறிவுள்ள இலக்கிய வாசகர், அறிவியக்கத்தில் ஆர்வம் கொண்டவர் முதன்மையாக அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
ஜெ
விஷ்ணுபுரம் விருந்தினர் – 9 – யாழன் ஆதி
விஷ்ணுபுரம் விருது 2025 ஆம் ஆண்டுக்கு ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்படுகிறது. டிசம்பர் 20, 21 ஆம் தேதிகளில் நிகழும் இந்த விழாவில் வழக்கம்போல படைப்பாளர்கள், இலக்கியச் செயல்பாட்டாளர்கள் வாசகர்களை சந்திக்கும் நிகழ்வு அமைகிறது. இந்த ஆண்டு யாழன் ஆதி கலந்துகொள்கிறார்
யாழன் ஆதி /* inline tdc_css att */.tdi_2{padding-top:12px !important;padding-bottom:8px !important;border-color:#eaeaea !important;border-style:solid !important;border-width: 1px 0px 1px 0px !important;}/* custom css */.tdi_2 .td_block_inner{width: 100%;
margin-left: -20px;
margin-right: -20px;
}.tdi_2:after{
content: '';
display: table;
clear: both;
}.tdi_2 .td-image-wrap{
padding-bottom: 100%;
}.tdi_2 .entry-thumb{
background-position: center 50%;
}.tdi_2 .td-image-container{
flex: 0 0 30%;
width: 30%;
display: block; order: 0;
}.ie10 .tdi_2 .td-image-container,
.ie11 .tdi_2 .td-image-container{
flex: 0 0 auto;
}.tdi_2 .td-module-container{
flex-direction: row;
border-color: #eaeaea !important;
}.ie10 .tdi_2 .td-module-meta-info,
.ie11 .tdi_2 .td-module-meta-info{
flex: 1;
}.tdi_2 .td-module-meta-info{
padding: 1% 5%;
border-color: #eaeaea;
}.tdi_2 .td_module_wrap{
padding-left: 20px;
padding-right: 20px;
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
}.tdi_2 .td-module-container:before{
bottom: -18px;
border-color: #eaeaea;
}.tdi_2 .entry-thumb,
.tdi_2 .entry-thumb:before,
.tdi_2 .entry-thumb:after{
border-radius: 500px;
}.tdi_2 .td-post-vid-time{
display: block;
}.tdi_2 .td-post-category:not(.td-post-extra-category){
display: none;
}.tdi_2 .td-author-photo .avatar{
width: 20px;
height: 20px;
margin-right: 6px;
border-radius: 50%;
}.tdi_2 .td-excerpt{
display: none;
column-count: 1;
column-gap: 48px;
font-size:= !important;
}.tdi_2 .td-audio-player{
opacity: 1;
visibility: visible;
height: auto;
font-size: 13px;
}.tdi_2 .td-read-more{
display: none;
}.tdi_2 .td-author-date{
display: none;
}.tdi_2 .td-post-author-name{
display: none;
}.tdi_2 .td-post-date,
.tdi_2 .td-post-author-name span{
display: none;
}.tdi_2 .entry-review-stars{
display: none;
}.tdi_2 .td-icon-star,
.tdi_2 .td-icon-star-empty,
.tdi_2 .td-icon-star-half{
font-size: 15px;
}.tdi_2 .td-module-comments{
display: none;
}.tdi_2 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0;
padding-bottom: 0;
}.tdi_2 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none;
}.tdi_2 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_2 .entry-title{
font-size:21px !important;line-height:1.2 !important;
}html:not([class*='ie']) .tdi_2 .td-module-container:hover .entry-thumb:before{
opacity: 0;
}@media (min-width: 768px) {
.tdi_2 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}/* landscape */@media (min-width: 1019px) and (max-width: 1140px){.tdi_2 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_2 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_2 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_2 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_2 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_2 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_2 .entry-title{
font-size:20px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_2 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* portrait */@media (min-width: 768px) and (max-width: 1018px){.tdi_2 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_2 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_2 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_2 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_2 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_2 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_2 .entry-title{
font-size:17px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_2 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* phone */@media (max-width: 767px){.tdi_2 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_2 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_2 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_2 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_2 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_2 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}@media (min-width: 768px) {
.tdi_2 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}var block_tdi_2 = new tdBlock();block_tdi_2.id = "tdi_2";block_tdi_2.atts = '{"modules_on_row":"","limit":"10","hide_audio":"yes","show_btn":"none","show_excerpt":"none","show_review":"none","show_com":"none","show_date":"none","show_author":"none","image_floated":"float_left","sort":"oldest_posts","category_id":"11301","category_ids":"12659","image_width":"30","meta_padding":"1% 5%","modules_category":"","modules_category_margin":"","custom_title":"\u0bb5\u0bbf\u0bb7\u0bcd\u0ba3\u0bc1\u0baa\u0bc1\u0bb0\u0bae\u0bcd 2025 \u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba8\u0bcd\u0ba4\u0bbf\u0ba9\u0bb0\u0bcd\u0b95\u0bb3\u0bcd","custom_url":"\/tag\/2025-\u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba8\u0bcd\u0ba4\u0bbf\u0ba9\u0bb0\u0bcd\/","post_ids":"-222775","tdc_css":"eyJhbGwiOnsiYm9yZGVyLXRvcC13aWR0aCI6IjEiLCJib3JkZXItYm90dG9tLXdpZHRoIjoiMSIsInBhZGRpbmctdG9wIjoiMTIiLCJwYWRkaW5nLWJvdHRvbSI6IjgiLCJib3JkZXItY29sb3IiOiIjZWFlYWVhIiwiZGlzcGxheSI6IiJ9fQ==","show_cat":"none","excerpt_col":"","m16_el":"20","ajax_pagination":"load_more","f_title_font_size":"eyJhbGwiOiIyMSIsImxhbmRzY2FwZSI6IjIwIiwicG9ydHJhaXQiOiIxNyJ9","f_title_font_line_height":"1.2","f_ex_font_size":"=","f_ex_font_line_height":"","image_height":"100","hide_image":"","modules_gap":"","meta_info_horiz":"","container_width":"100","image_radius":"500","block_type":"td_flex_block_1","separator":"","block_template_id":"","title_tag":"","mc1_tl":"","mc1_title_tag":"","mc1_el":"","tag_slug":"","autors_id":"","installed_post_types":"","offset":"","show_modified_date":"","time_ago":"","time_ago_add_txt":"ago","time_ago_txt_pos":"","el_class":"","td_ajax_filter_type":"","td_ajax_filter_ids":"","td_filter_default_txt":"All","td_ajax_preloading":"","m_padding":"","all_modules_space":"36","modules_border_size":"","modules_border_style":"","modules_border_color":"#eaeaea","modules_border_radius":"","modules_divider":"","modules_divider_color":"#eaeaea","h_effect":"","image_size":"","image_alignment":"50","video_icon":"","video_popup":"yes","video_rec":"","spot_header":"","video_rec_title":"","video_rec_color":"","video_rec_disable":"","autoplay_vid":"yes","show_vid_t":"block","vid_t_margin":"","vid_t_padding":"","video_title_color":"","video_title_color_h":"","video_bg":"","video_overlay":"","vid_t_color":"","vid_t_bg_color":"","f_vid_title_font_header":"","f_vid_title_font_title":"Video pop-up article title","f_vid_title_font_settings":"","f_vid_title_font_family":"","f_vid_title_font_size":"","f_vid_title_font_line_height":"","f_vid_title_font_style":"","f_vid_title_font_weight":"","f_vid_title_font_transform":"","f_vid_title_font_spacing":"","f_vid_title_":"","f_vid_time_font_title":"Video duration text","f_vid_time_font_settings":"","f_vid_time_font_family":"","f_vid_time_font_size":"","f_vid_time_font_line_height":"","f_vid_time_font_style":"","f_vid_time_font_weight":"","f_vid_time_font_transform":"","f_vid_time_font_spacing":"","f_vid_time_":"","meta_info_align":"","meta_width":"","meta_margin":"","meta_space":"","art_title":"","art_btn":"","meta_info_border_size":"","meta_info_border_style":"","meta_info_border_color":"#eaeaea","meta_info_border_radius":"","modules_category_padding":"","modules_cat_border":"","modules_category_radius":"0","modules_extra_cat":"","author_photo":"","author_photo_size":"","author_photo_space":"","author_photo_radius":"","review_space":"","review_size":"2.5","review_distance":"","art_excerpt":"","excerpt_gap":"","excerpt_middle":"","excerpt_inline":"","show_audio":"block","art_audio":"","art_audio_size":"1.5","btn_title":"","btn_margin":"","btn_padding":"","btn_border_width":"","btn_radius":"","pag_space":"","pag_padding":"","pag_border_width":"","pag_border_radius":"","prev_tdicon":"","next_tdicon":"","pag_icons_size":"","f_header_font_header":"","f_header_font_title":"Block header","f_header_font_settings":"","f_header_font_family":"","f_header_font_size":"","f_header_font_line_height":"","f_header_font_style":"","f_header_font_weight":"","f_header_font_transform":"","f_header_font_spacing":"","f_header_":"","f_ajax_font_title":"Ajax categories","f_ajax_font_settings":"","f_ajax_font_family":"","f_ajax_font_size":"","f_ajax_font_line_height":"","f_ajax_font_style":"","f_ajax_font_weight":"","f_ajax_font_transform":"","f_ajax_font_spacing":"","f_ajax_":"","f_more_font_title":"Load more button","f_more_font_settings":"","f_more_font_family":"","f_more_font_size":"","f_more_font_line_height":"","f_more_font_style":"","f_more_font_weight":"","f_more_font_transform":"","f_more_font_spacing":"","f_more_":"","f_title_font_header":"","f_title_font_title":"Article title","f_title_font_settings":"","f_title_font_family":"","f_title_font_style":"","f_title_font_weight":"","f_title_font_transform":"","f_title_font_spacing":"","f_title_":"","f_cat_font_title":"Article category tag","f_cat_font_settings":"","f_cat_font_family":"","f_cat_font_size":"","f_cat_font_line_height":"","f_cat_font_style":"","f_cat_font_weight":"","f_cat_font_transform":"","f_cat_font_spacing":"","f_cat_":"","f_meta_font_title":"Article meta info","f_meta_font_settings":"","f_meta_font_family":"","f_meta_font_size":"","f_meta_font_line_height":"","f_meta_font_style":"","f_meta_font_weight":"","f_meta_font_transform":"","f_meta_font_spacing":"","f_meta_":"","f_ex_font_title":"Article excerpt","f_ex_font_settings":"","f_ex_font_family":"","f_ex_font_style":"","f_ex_font_weight":"","f_ex_font_transform":"","f_ex_font_spacing":"","f_ex_":"","f_btn_font_title":"Article read more button","f_btn_font_settings":"","f_btn_font_family":"","f_btn_font_size":"","f_btn_font_line_height":"","f_btn_font_style":"","f_btn_font_weight":"","f_btn_font_transform":"","f_btn_font_spacing":"","f_btn_":"","mix_color":"","mix_type":"","fe_brightness":"1","fe_contrast":"1","fe_saturate":"1","mix_color_h":"","mix_type_h":"","fe_brightness_h":"1","fe_contrast_h":"1","fe_saturate_h":"1","m_bg":"","color_overlay":"","shadow_shadow_header":"","shadow_shadow_title":"Module Shadow","shadow_shadow_size":"","shadow_shadow_offset_horizontal":"","shadow_shadow_offset_vertical":"","shadow_shadow_spread":"","shadow_shadow_color":"","title_txt":"","title_txt_hover":"","all_underline_height":"","all_underline_color":"","cat_bg":"","cat_bg_hover":"","cat_txt":"","cat_txt_hover":"","cat_border":"","cat_border_hover":"","meta_bg":"","author_txt":"","author_txt_hover":"","date_txt":"","ex_txt":"","com_bg":"","com_txt":"","rev_txt":"","audio_btn_color":"","audio_time_color":"","audio_bar_color":"","audio_bar_curr_color":"","shadow_m_shadow_header":"","shadow_m_shadow_title":"Meta info shadow","shadow_m_shadow_size":"","shadow_m_shadow_offset_horizontal":"","shadow_m_shadow_offset_vertical":"","shadow_m_shadow_spread":"","shadow_m_shadow_color":"","btn_bg":"","btn_bg_hover":"","btn_txt":"","btn_txt_hover":"","btn_border":"","btn_border_hover":"","pag_text":"","pag_h_text":"","pag_bg":"","pag_h_bg":"","pag_border":"","pag_h_border":"","ajax_pagination_infinite_stop":"","css":"","td_column_number":1,"header_color":"","color_preset":"","border_top":"","class":"tdi_2","tdc_css_class":"tdi_2","tdc_css_class_style":"tdi_2_rand_style"}';block_tdi_2.td_column_number = "1";block_tdi_2.block_type = "td_flex_block_1";block_tdi_2.post_count = "8";block_tdi_2.found_posts = "8";block_tdi_2.header_color = "";block_tdi_2.ajax_pagination_infinite_stop = "";block_tdi_2.max_num_pages = "1";tdBlocksArray.push(block_tdi_2);விஷ்ணுபுரம் 2025 விருந்தினர்கள்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 1 – மு. குலசேகரன்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 2 – அரிசங்கர்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 3 – கே. நல்லதம்பி
விஷ்ணுபுரம் விருந்தினர் – 4 – ஜீவ கரிகாலன்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 5 – அழிசி ஶ்ரீனிவாசன்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 6 – குணா கந்தசாமி
விஷ்ணுபுரம் விருந்தினர் 7, அனுராதா ஆனந்த்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 8 – குறிஞ்சிவேலன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
