Jeyamohan's Blog, page 2
October 7, 2025
அமெரிக்கா பயணம்
இன்று விடியற்காலை 4 மணி விமானத்தில் அமெரிக்காவுக்கு நானும் அருண்மொழியும் கிளம்பிச் செல்கிறோம். நேரடியாக சான் பிரான்ஸிஸ்கோ. அங்கிருந்து பல ஊர்கள் வழியாக வழக்கம்போல அமெரிக்காவைக் குறுக்காகக் கடந்து நியூயார்க்.
இது அருண்மொழியின் ஐந்தாவது அமெரிக்கப் பயணம். எனது ஏழாவது பயணம். அமெரிக்கா இப்போது கிட்டத்தட்ட இந்தியா அளவுக்கே தெரிந்ததாக, அணுக்கமானதாக ஆகிவிட்டது. அமெரிக்காவின் பல்வேறு உள் அடுக்குகளை அறிந்த ஒருவனாக இன்று என்னை உணர்கிறேன். ஏனெனில் சாதாரணமாக அமெரிக்காவில் பணியாற்றியபடி நெடுங்காலம் அங்கே வாழும் ஒருவர் செய்வதை விட மிக அதிகமாக அமெரிக்காவின் சிற்றூர்களில் கூட பயணம் செய்திருக்கிறேன். தொடர்ச்சியாக வெவ்வேறு களங்களில் வாழும் அமெரிக்க இந்தியர்களை மட்டுமல்ல அமெரிக்கர்களையும் சந்தித்து உரையாடியிருக்கிறேன்.
இம்முறை என் அறம் கதைகளின் மொழியாக்கமான Stories of the True அமெரிக்காவின் FSG- Macmillan பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. அதன் புத்தக விளம்பர நிகழ்வுகள் கல்லூரிகளிலும் நூலகங்களிலும் நடைபெறுகின்றன. இரண்டு நாவல் பயிலரங்குகள் மற்றும் வழக்கமான பூன் முகாம்.
‘இம்முறை பெரும்பாலும் கூட்டங்களாகவே இருக்கிறது’ என்று சலித்துக் கொள்கிறாளா இல்லையா என்று தெரியாத ஒரு பாவனையில் அருண்மொழி சொன்னாள். ஆனால் ஒரு முறையும் அமெரிக்கா கிளம்பும்போது ஒரு மாதத்திற்கு முன்னரே பரவசமடைவதும் , அங்கிருக்கும் ஒவ்வொரு தோழியையும் எண்ணி ஏங்குவதும், தொலைபேசியில் கொஞ்சிக்கொள்வதும், கடைசிநிமிடம் வரை தையல்கார பெண்மணியிடம் மிகையுணர்ச்சிப் பூசல்களில் ஈடுபடுவதும் அவள்தான்.
நான் தொடர்ந்து வெவ்வேறு உளநிலைகளில்அலைந்து கொண்டிருந்தேன். குறிப்பாக ரமேஷின் இறப்பு. அதிலிருந்து மீள்வதற்காக சென்ற ஹெக்கோடு பயணம். இரு எல்லைகள் .அவை என் நாட்களை முழுக்கவே எடுத்துக் கொண்டு விட்டன .இதற்கு இடையே முடித்து கொடுக்கப்பட வேண்டிய திரைப்படப் பணிகள் நான்கு. நண்பர்கள் எப்போது கிளம்புகிறீர்கள் என்று கேட்டபோது ஆளுக்கொரு தேதியைச சொல்லிக்கொண்டிருந்தேன். ஒரு வழியாக எல்லாவற்றையும் முடித்து நேற்று பின் மாலையில்தான் பயணத்திற்கான மனநிலையை அடைந்தேன்.
பயணம் இனிது. அமெரிக்கா எந்நிலையிலும் இனிது. அதன் மகத்தான நிலங்கள். வண்ணம் மாறி ஒளி சுடர நின்றிருக்கும் மரங்கள்.
“சொல், உன் அரசியல் என்ன?”
திரு ஜெமோ,
அரசியல் பங்கேற்பு பற்றி உங்களுடைய கருத்துக்களை பார்த்தேன் நீங்கள் விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறீர்கள். அவர்களின் கண்டனக் கூட்டங்களில் ஒரு குரலாக ஒலித்து இருக்கிறீர்கள். உங்களை திருமாவளருடன் இருக்கும் பல புகைப்படங்களை பார்த்திருக்கிறேன். அப்போது மட்டும் நீங்கள் தொண்டராக இருந்தீர்களா ,அல்லது தலைவராக இருந்தீர்களா?
உங்களுக்கு அரசியல் நிலைபாடு இல்லை, அரசியலை விவாதிப்பதில்லை என்று சொன்னீர்கள். அப்படியென்றால் உங்கள் அரசியல் என்ன? அதை தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்துங்கள், அதுதான் கௌரவம். இன்றைக்கு உங்கள் அரசியலில் எவரை ஆதரிக்கிறீர்கள். அவ்வாறு அல்லாமல் இவ்வாறு தலையையும் வாலையும் மாற்றி மாற்றி காட்டும் நிலைபாடு ன்பது ஒரு சந்தர்ப்பவாதம் மட்டுமே. உங்களுக்கு தேவைக்கு ஏற்ப ஒரு நிலைப்பாட்டை நீங்கள் எடுப்பீர்கள் என்பது தான் இது காட்டுகிறது.
ராஜாராம் ஶ்ரீனிவாஸ்
அன்புள்ள ராஜாராம்,
நான் எந்த அரசியல் நிகழ்விலும் கலந்து கொள்ள மாட்டேன் என்று சொல்லவில்லை. ஒரு பொதுவான விஷயத்திற்கு ஒரு குறிப்பிட்ட கட்சி சார்பிலான அறிக்கையில் எழுத்தாளர்கள் கையெழுத்து இடும்போது அவர்கள் தங்களுடைய தனித்தன்மையை இழக்கிறார்கள் என்று மட்டுமே கருத்து சொன்னேன். ஓர் எழுத்தாளர் அரசியல் கருத்து சொல்லக்கூடாது என்று, அரசியல் நடவடிக்கைகளில் கலந்துகொள்ளக்கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் கட்சியின் சார்பில் சொந்த வசைபாடல்களை நடத்துபவர், வெறும் கட்சிக்குண்டராகச் செயல்படுபவர் எழுத்தாளர் அல்ல என்கிறேன்.
அரசியல் என்பது ஒருவர் தொடர்ந்து தன்னை விளக்கிக் கொண்டே இருக்க வேண்டிய கடமை கொண்ட களம். ஆகவே ஆய்வாளர்கள், கலைஞர்கள் போன்றவர்கள் அதில் ஈடுபடாமல் இருப்பதையும் நான் புரிந்து கொள்கிறேன். ஈடுபடுபவர்கள் தொடர்ந்து அந்த விளக்கத்தை அளித்துதான் ஆக வேண்டும். பொதுவாக ஒரு அறிக்கையில் கையெழுத்திடும்போது எழுத்தாளர் ஒரு வண்ண்த்தை மட்டுமே அடைகிறார். அதை மட்டுமே சொன்னேன், அதை புரிந்து கொள்ளும் உள்ள பாங்கு உங்களுக்கு இல்லை என்று நினைக்கிறேன்.
திருமாவளவன் அவர்களை எனக்கு நண்பர் அலெக்ஸ் வழியாக அறிமுகம். நான் அவருடன் இணைந்து அரசியல் செயல்பாடு எதிலும் ஈடுபடவில்லை. எனக்கு கட்சி அரசியல் இப்போது இல்லை. என் அரசியல் களம் சார்ந்த காந்திய அரசியல் மட்டுமே. ஆனால் எப்போதேனும் கட்சி சார்ந்த அரசியலில் ஈடுபடுவேன் எனில் அது திருமாவளவனின் அரசியலில் மட்டுமே. தலைவர் என இப்போதுள்ளவர்களில் எவரையேனும் ஏற்பேன் எனில் அவரை மட்டுமே. ஏனெனில் அவரது அரசியலுக்கு மட்டுமே இன்றைய சூழலில் வலுவான சமூகக்காரணம் உள்ளது என்று நினைக்கிறேன். பிற அரசியல் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் சுயநல அரசியல்தான்.
தமிழகத்தில் முதன்மையான அரசியல் தலைவர் என்று நான் இன்றும் அவரையே கருதுகிறேன். அவருடைய குரல் இந்த கரூர் சாவு விஷயத்திலும்கூட எத்தனை நிதானத்துடனும், தலைவனுக்கான பொறுப்புடனும் இருக்கிறது என்பதை உங்களுடைய தனிப்பட்ட காழ்ப்புகளை நகர்த்தி வைத்துவிட்டு பார்த்தால் தெரியும். ஓர் எழுத்தாளனாக அதைச் சொல்ல வேண்டுமென நினைக்கிறேன். அதன் பொருட்டு அவரிடம் இருந்தது, அல்லது அக்கட்சியிலிருந்து எதையும் எதிர்பார்க்கும் அல்லது பெற்றுக் கொள்ளும் இடத்தில் நான் இல்லை.
திருமாவளவனின் அரசியலைக் குறித்து என்னிடம் கேட்டு என்னை சங்கடப்படுத்தலாம் என்று எண்ணி கேள்விகள் அவ்வப்போது வருவதுண்டு. அவருடைய அரசியலை அதற்குரிய களநிலவரத்தை ஒட்டி நடத்தும் திறன் அவருக்கு உண்டு. அதற்கு வெளியே நின்று கொண்டு அதை விமர்சிப்பதில் அர்த்தம் இல்லை. நான் அவ்வாறு கூர்ந்து கட்சிஅரசியலை பார்ப்பதும் இல்லை. அறுதியாக அது எந்த வகையில் மக்களுக்கு பயன்படுகிறது என்பது மட்டும்தான் நான் பார்க்க வேண்டும். அந்த வகையில் அவருடைய செயல்பாடுகள் உண்மையிலேயே மக்களுக்கு உரியவையாகவே இன்று வரை இருந்து வருகின்றன என்றுதான் நான் நினைக்கிறேன். நான் அரசியலில் ஈடுபடவில்லை, ஆகவே இதை மறுப்பவர்களிடம் பேச வேண்டிய தேவை இல்லை. இது என் தனிப்பட்ட நம்பிக்கை.
திருமா அவர்களுடன் உரையாடல்களில் ஒவ்வொரு தருணத்திலும் ஓர் எழுத்தாளர் என்னும் இடத்தையே அவர் எனக்கு அளித்திருக்கிறார். எழுத்தாளர் என்றால் யார், அவன் இடம் என்ன என்று புரிந்து கொள்ளும் தகுதி கொண்ட மிகச் சில தலைவர்களே இன்று தமிழகத்தில் இருக்கிறார்கள் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை என நினைக்கிறேன். அந்த மதிப்பு இல்லாத இடங்களுக்கு நான் செல்வதுமில்லை.
என் அரசியல் நிலைப்பாடு என்ன என்று கேட்டிருந்தீர்கள். அது அடிப்படைக் குடிமகனின் , எளிய வாக்காளரின் அரசியல். கட்சிச்சார்பு அரசியல் அல்ல. எவருக்காகவும் களமாடும் அரசியல் அல்ல. தன் அனுபவத்திற்குள் வரும் நிகழ்வுகளைக் கொண்டு ஒரு முடிவுக்கு வரும் அரசியல். அதுவே சரியான அரசியல், ஜனநாயக அரசியல் என நினைக்கிறேன். இந்த அரசியல் நிலைபாடு என்பது மாறாததும் அல்ல. இந்த கட்சிகளும் தலைவர்களும் தவறு செய்தால் அதைக் கண்டிக்கவும் கூடியது. இக்கட்சிகள் பயனற்றவை என்றால் உடனே நிராகரிக்கக் கூடியது. அப்போது அக்கட்சிக்காரர்களால் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவன் என வசைபாடப்படுவேன்.
இப்போது உள்ள அரசியல் என்ன என்று கேட்கிறீர்கள். இப்போதுள்ள அரசியல் இதுவே. தனிப்பட்ட ஆடம்பரம், அதிகாரப்போக்கு போன்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் கேரளத்தில் பொருளாதார வளர்ச்சி, குடிமைச்சமூகப் பணிகள் ஆகிய தளங்களில் பினராயி விஜயன் மிகச்சிறந்த ஒரு ஆட்சியாளராகவே பத்தாண்டுகளில் வெளிப்பட்டிருக்கிறார். சி.அச்சுதமேனன், ஈ.கே.நாயனாருக்கு பின் அவரே சிறந்த ஆட்சியாளர். மீண்டும் அவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் இந்த ஐந்து ஆண்டுகளில் தனிமனித உரிமை மறுப்பு, தொடரும் நிர்வாக ஊழல் ஆகியவை இருந்தாலும் இன்றைய அரசு தமிழகத்தை கல்வி, தொழில்த்துறை, குடிமைச்சேவை ஆகிய மூன்று களங்களில் முன்னோக்கி நகர்த்துகிறது என்று நினைக்கிறேன். அதற்கு மாற்றாக வரும் ஒரு கட்சி இந்த அளவுக்கு செயல்பாட்டை அளிக்கும் என்ற நம்பிக்கை இப்போதைக்கு எழவில்லை. ஆகவே மு.க.ஸ்டாலின் அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கருதுகிறேன்.
இவற்றை நேரடியாக களத்தில் செயல்பாடுகளை முன்னெடுப்பவன், கிராமங்களுக்குச் செல்பவன் என்ற வகையில் மட்டுமே சொல்கிறேன். இதற்கு அப்பால் எனக்கு கட்சி அரசியல் சார்ந்த செயல்பாடுகள் எதுவும் இல்லை. இந்த அரசுகளுக்காக பிரச்சாரம் செய்யும் பணியும் எனக்கில்லை. என் நண்பர்களிடம் இதை விவாதிப்பதில்லை. ஏனென்றால் நாங்கள் முன்னெடுக்கும் பணிகள் முற்றிலும் அரசியலுக்கு அப்பாற்பட்டவை. எங்கள் அரங்குகளில் மட்டுமல்ல, தனிப்பட்ட உரையாடல்களிலும்கூட முழுமையாகவே அரசியல் இல்லை. என் அரசியலை முழுக்க மறுப்பவர்களும் பலர் என் அணுக்கமான நண்பர்களாக உண்டு, இணைந்தும் செயல்படுகிறோம். அவர்கள் தங்கள் நம்பிக்கையை தாங்கள் கொண்டிருப்பதும் இயல்பென்றே கொள்கிறேன்.
ஜெ
விஷ்ணுபுரம் விருந்தினர் – 8 – குறிஞ்சிவேலன்
விஷ்ணுபுரம் விருது 2025 ஆம் ஆண்டுக்கு ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்படுகிறது. டிசம்பர் 20, 21 ஆம் தேதிகளில் நிகழும் இந்த விழாவில் வழக்கம்போல படைப்பாளர்கள், இலக்கியச் செயல்பாட்டாளர்கள் வாசகர்களை சந்திக்கும் நிகழ்வு அமைகிறது. இந்த ஆண்டு குறிஞ்சிவேலன் கலந்துகொள்கிறார்
குறிஞ்சிவேலன்
width: 100%;
margin-left: -20px;
margin-right: -20px;
}.tdi_1:after{
content: '';
display: table;
clear: both;
}.tdi_1 .td-image-wrap{
padding-bottom: 100%;
}.tdi_1 .entry-thumb{
background-position: center 50%;
}.tdi_1 .td-image-container{
flex: 0 0 30%;
width: 30%;
display: block; order: 0;
}.ie10 .tdi_1 .td-image-container,
.ie11 .tdi_1 .td-image-container{
flex: 0 0 auto;
}.tdi_1 .td-module-container{
flex-direction: row;
border-color: #eaeaea !important;
}.ie10 .tdi_1 .td-module-meta-info,
.ie11 .tdi_1 .td-module-meta-info{
flex: 1;
}.tdi_1 .td-module-meta-info{
padding: 1% 5%;
border-color: #eaeaea;
}.tdi_1 .td_module_wrap{
padding-left: 20px;
padding-right: 20px;
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
border-color: #eaeaea;
}.tdi_1 .entry-thumb,
.tdi_1 .entry-thumb:before,
.tdi_1 .entry-thumb:after{
border-radius: 500px;
}.tdi_1 .td-post-vid-time{
display: block;
}.tdi_1 .td-post-category:not(.td-post-extra-category){
display: none;
}.tdi_1 .td-author-photo .avatar{
width: 20px;
height: 20px;
margin-right: 6px;
border-radius: 50%;
}.tdi_1 .td-excerpt{
display: none;
column-count: 1;
column-gap: 48px;
font-size:= !important;
}.tdi_1 .td-audio-player{
opacity: 1;
visibility: visible;
height: auto;
font-size: 13px;
}.tdi_1 .td-read-more{
display: none;
}.tdi_1 .td-author-date{
display: none;
}.tdi_1 .td-post-author-name{
display: none;
}.tdi_1 .td-post-date,
.tdi_1 .td-post-author-name span{
display: none;
}.tdi_1 .entry-review-stars{
display: none;
}.tdi_1 .td-icon-star,
.tdi_1 .td-icon-star-empty,
.tdi_1 .td-icon-star-half{
font-size: 15px;
}.tdi_1 .td-module-comments{
display: none;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0;
padding-bottom: 0;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:21px !important;line-height:1.2 !important;
}html:not([class*='ie']) .tdi_1 .td-module-container:hover .entry-thumb:before{
opacity: 0;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}/* landscape */@media (min-width: 1019px) and (max-width: 1140px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:20px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* portrait */@media (min-width: 768px) and (max-width: 1018px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:17px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* phone */@media (max-width: 767px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}var block_tdi_1 = new tdBlock();block_tdi_1.id = "tdi_1";block_tdi_1.atts = '{"modules_on_row":"","limit":"10","hide_audio":"yes","show_btn":"none","show_excerpt":"none","show_review":"none","show_com":"none","show_date":"none","show_author":"none","image_floated":"float_left","sort":"oldest_posts","category_id":"11301","category_ids":"12659","image_width":"30","meta_padding":"1% 5%","modules_category":"","modules_category_margin":"","custom_title":"\u0bb5\u0bbf\u0bb7\u0bcd\u0ba3\u0bc1\u0baa\u0bc1\u0bb0\u0bae\u0bcd 2025 \u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba8\u0bcd\u0ba4\u0bbf\u0ba9\u0bb0\u0bcd\u0b95\u0bb3\u0bcd","custom_url":"\/tag\/2025-\u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba8\u0bcd\u0ba4\u0bbf\u0ba9\u0bb0\u0bcd\/","post_ids":"-222842","tdc_css":"eyJhbGwiOnsiYm9yZGVyLXRvcC13aWR0aCI6IjEiLCJib3JkZXItYm90dG9tLXdpZHRoIjoiMSIsInBhZGRpbmctdG9wIjoiMTIiLCJwYWRkaW5nLWJvdHRvbSI6IjgiLCJib3JkZXItY29sb3IiOiIjZWFlYWVhIiwiZGlzcGxheSI6IiJ9fQ==","show_cat":"none","excerpt_col":"","m16_el":"20","ajax_pagination":"load_more","f_title_font_size":"eyJhbGwiOiIyMSIsImxhbmRzY2FwZSI6IjIwIiwicG9ydHJhaXQiOiIxNyJ9","f_title_font_line_height":"1.2","f_ex_font_size":"=","f_ex_font_line_height":"","image_height":"100","hide_image":"","modules_gap":"","meta_info_horiz":"","container_width":"100","image_radius":"500","block_type":"td_flex_block_1","separator":"","block_template_id":"","title_tag":"","mc1_tl":"","mc1_title_tag":"","mc1_el":"","tag_slug":"","autors_id":"","installed_post_types":"","offset":"","show_modified_date":"","time_ago":"","time_ago_add_txt":"ago","time_ago_txt_pos":"","el_class":"","td_ajax_filter_type":"","td_ajax_filter_ids":"","td_filter_default_txt":"All","td_ajax_preloading":"","m_padding":"","all_modules_space":"36","modules_border_size":"","modules_border_style":"","modules_border_color":"#eaeaea","modules_border_radius":"","modules_divider":"","modules_divider_color":"#eaeaea","h_effect":"","image_size":"","image_alignment":"50","video_icon":"","video_popup":"yes","video_rec":"","spot_header":"","video_rec_title":"","video_rec_color":"","video_rec_disable":"","autoplay_vid":"yes","show_vid_t":"block","vid_t_margin":"","vid_t_padding":"","video_title_color":"","video_title_color_h":"","video_bg":"","video_overlay":"","vid_t_color":"","vid_t_bg_color":"","f_vid_title_font_header":"","f_vid_title_font_title":"Video pop-up article title","f_vid_title_font_settings":"","f_vid_title_font_family":"","f_vid_title_font_size":"","f_vid_title_font_line_height":"","f_vid_title_font_style":"","f_vid_title_font_weight":"","f_vid_title_font_transform":"","f_vid_title_font_spacing":"","f_vid_title_":"","f_vid_time_font_title":"Video duration text","f_vid_time_font_settings":"","f_vid_time_font_family":"","f_vid_time_font_size":"","f_vid_time_font_line_height":"","f_vid_time_font_style":"","f_vid_time_font_weight":"","f_vid_time_font_transform":"","f_vid_time_font_spacing":"","f_vid_time_":"","meta_info_align":"","meta_width":"","meta_margin":"","meta_space":"","art_title":"","art_btn":"","meta_info_border_size":"","meta_info_border_style":"","meta_info_border_color":"#eaeaea","meta_info_border_radius":"","modules_category_padding":"","modules_cat_border":"","modules_category_radius":"0","modules_extra_cat":"","author_photo":"","author_photo_size":"","author_photo_space":"","author_photo_radius":"","review_space":"","review_size":"2.5","review_distance":"","art_excerpt":"","excerpt_gap":"","excerpt_middle":"","excerpt_inline":"","show_audio":"block","art_audio":"","art_audio_size":"1.5","btn_title":"","btn_margin":"","btn_padding":"","btn_border_width":"","btn_radius":"","pag_space":"","pag_padding":"","pag_border_width":"","pag_border_radius":"","prev_tdicon":"","next_tdicon":"","pag_icons_size":"","f_header_font_header":"","f_header_font_title":"Block header","f_header_font_settings":"","f_header_font_family":"","f_header_font_size":"","f_header_font_line_height":"","f_header_font_style":"","f_header_font_weight":"","f_header_font_transform":"","f_header_font_spacing":"","f_header_":"","f_ajax_font_title":"Ajax categories","f_ajax_font_settings":"","f_ajax_font_family":"","f_ajax_font_size":"","f_ajax_font_line_height":"","f_ajax_font_style":"","f_ajax_font_weight":"","f_ajax_font_transform":"","f_ajax_font_spacing":"","f_ajax_":"","f_more_font_title":"Load more button","f_more_font_settings":"","f_more_font_family":"","f_more_font_size":"","f_more_font_line_height":"","f_more_font_style":"","f_more_font_weight":"","f_more_font_transform":"","f_more_font_spacing":"","f_more_":"","f_title_font_header":"","f_title_font_title":"Article title","f_title_font_settings":"","f_title_font_family":"","f_title_font_style":"","f_title_font_weight":"","f_title_font_transform":"","f_title_font_spacing":"","f_title_":"","f_cat_font_title":"Article category tag","f_cat_font_settings":"","f_cat_font_family":"","f_cat_font_size":"","f_cat_font_line_height":"","f_cat_font_style":"","f_cat_font_weight":"","f_cat_font_transform":"","f_cat_font_spacing":"","f_cat_":"","f_meta_font_title":"Article meta info","f_meta_font_settings":"","f_meta_font_family":"","f_meta_font_size":"","f_meta_font_line_height":"","f_meta_font_style":"","f_meta_font_weight":"","f_meta_font_transform":"","f_meta_font_spacing":"","f_meta_":"","f_ex_font_title":"Article excerpt","f_ex_font_settings":"","f_ex_font_family":"","f_ex_font_style":"","f_ex_font_weight":"","f_ex_font_transform":"","f_ex_font_spacing":"","f_ex_":"","f_btn_font_title":"Article read more button","f_btn_font_settings":"","f_btn_font_family":"","f_btn_font_size":"","f_btn_font_line_height":"","f_btn_font_style":"","f_btn_font_weight":"","f_btn_font_transform":"","f_btn_font_spacing":"","f_btn_":"","mix_color":"","mix_type":"","fe_brightness":"1","fe_contrast":"1","fe_saturate":"1","mix_color_h":"","mix_type_h":"","fe_brightness_h":"1","fe_contrast_h":"1","fe_saturate_h":"1","m_bg":"","color_overlay":"","shadow_shadow_header":"","shadow_shadow_title":"Module Shadow","shadow_shadow_size":"","shadow_shadow_offset_horizontal":"","shadow_shadow_offset_vertical":"","shadow_shadow_spread":"","shadow_shadow_color":"","title_txt":"","title_txt_hover":"","all_underline_height":"","all_underline_color":"","cat_bg":"","cat_bg_hover":"","cat_txt":"","cat_txt_hover":"","cat_border":"","cat_border_hover":"","meta_bg":"","author_txt":"","author_txt_hover":"","date_txt":"","ex_txt":"","com_bg":"","com_txt":"","rev_txt":"","audio_btn_color":"","audio_time_color":"","audio_bar_color":"","audio_bar_curr_color":"","shadow_m_shadow_header":"","shadow_m_shadow_title":"Meta info shadow","shadow_m_shadow_size":"","shadow_m_shadow_offset_horizontal":"","shadow_m_shadow_offset_vertical":"","shadow_m_shadow_spread":"","shadow_m_shadow_color":"","btn_bg":"","btn_bg_hover":"","btn_txt":"","btn_txt_hover":"","btn_border":"","btn_border_hover":"","pag_text":"","pag_h_text":"","pag_bg":"","pag_h_bg":"","pag_border":"","pag_h_border":"","ajax_pagination_infinite_stop":"","css":"","td_column_number":1,"header_color":"","color_preset":"","border_top":"","class":"tdi_1","tdc_css_class":"tdi_1","tdc_css_class_style":"tdi_1_rand_style"}';block_tdi_1.td_column_number = "1";block_tdi_1.block_type = "td_flex_block_1";block_tdi_1.post_count = "7";block_tdi_1.found_posts = "7";block_tdi_1.header_color = "";block_tdi_1.ajax_pagination_infinite_stop = "";block_tdi_1.max_num_pages = "1";tdBlocksArray.push(block_tdi_1);விஷ்ணுபுரம் 2025 விருந்தினர்கள்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 1 – மு. குலசேகரன்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 2 – அரிசங்கர்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 3 – கே. நல்லதம்பி
விஷ்ணுபுரம் விருந்தினர் – 4 – ஜீவ கரிகாலன்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 5 – அழிசி ஶ்ரீனிவாசன்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 6 – குணா கந்தசாமி
விஷ்ணுபுரம் விருந்தினர் 7, அனுராதா ஆனந்த்
ரமேஷ், தமிழிலக்கியச்சூழல்.
ஜெ,
என்னுடைய உணர்வுகளை கூறவிளைகிறேன். ஏதோ சொல்லிவிட்டால் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இலக்கியத்தையும் அதைப் படைக்கும் படைப்பாளின் வாழ்வையும் விலக்கி பார்ப்பது சரியானதாக பலரும் எண்ணக்கூடும்.ஆனால் படைப்பாளி தன்னுடைய அன்றாடத்தில் தன்நிறைவு இல்லாமல் எவ்வளவு தூரம் கலையில் தொடர்ந்து பயணிக்க முடியும் என்ற கேள்வி தவிர்க்க முடியாதது.
கலை இலக்கியம் சார்ந்து இயங்குகிறவர்கள் வாழ்வு குறித்து நமக்கு கிடைக்கும் சித்திரங்கள் பெரும்பாலும் சாமானியனுக்கு அச்சம் தருவாதாகவே இருக்கின்றன. இதற்கு நமக்கு அண்மையிலான உதாரணம் ரமேஷ் பிரேதன். அவருடைய அறைக்குள் ஒரு விருந்தினராக சென்று சில மணித்துளிகளை கழித்து வரும் எவராலும் நான் கூற விளைவதை புரிந்து கொள்ளுதல் சாத்தியமில்லை என்றே கருதுகிறேன். ஒரு அறைக்குள் மட்டுமே முடக்கப்பட்ட வாழ்வு எத்தனை கொடூரமானது. அதற்குள் நம்பிக்கை கொண்டு வாழ்வதற்கான நெஞ்சுரம் எப்படி சாத்தியமானது?.
மாதம் தோறும் சில பத்தாயிரங்களை சம்பாதிக்க வேண்டிய இளைஞனால் கலை இலக்கியத்தில் ஆர்வம் இருந்தும் பங்கேற்க முடியாத சூன்ய வாழ்வுதான் இங்கு நிலவுகின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது. பொருளாதார நிறைவு தரும் தன்நம்பிக்கை எதற்கும் ஈடாது என்பது சமகாலச் சூழல்.
எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் உடலாலும் முடக்கப்பட்டவர். அவரால் தன்னை தற்காத்துக்கொள்ள காலம் ஒருவழியும் கொடுக்கவில்லை. அதை ஈடுகட்டுவது அத்தனை சுலபம் இல்லை. பெற்றவர்களை பராமரிக்கும் கடமையில் கூட ஒரு கணம் சினந்துவிடுகின்றது மனது என்பதை மனசாட்சி கொண்ட எவரும் மறுத்துவிட முடியாது. அது மனித இயல்பு. ரமேஷ் போன்ற ஒரு கலைஞனை தொடர்ந்து எதிர்கொண்டு – ஆதரித்து கலையில் எல்லைவரை பயணிக்க வைத்தல் உச்சமான சாகசப் பயணம் என்றுதான் சொல்ல வேண்டும்.
எழுத்தாளர் ரமேஷ் பிரேதனை அரவணைத்து அவருக்கான ஒரு பாதுகாப்பான சூழலை கட்டமைத்தல் இதில் முதன்மையானது. அதற்கு பொருளாதாரம் தான் அடிப்படை. அதில் தான் அத்தனையும் தங்கியுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன், அவருடைய நண்பர்கள் ஏற்படுத்திய பாதுகாப்பான சூழல் ரமேஷ் பிரேதனுக்கு பெரும் நம்பிக்கையை அளித்தது. அதற்கு பிறகு சாத்தியமானவை யாவும் மிகுதியானவை என்றும் சொல்ல இயலும்.
அடுத்து பதிப்பாளர், எழுத்தாளர் ஜீவகரிகாலனை குறிப்பிட வேண்டும். தனது கலையை தமிழ் சமூகத்தை நோக்கி முன்னெடுத்து செல்ல சமரசமற்ற ஒரு உறவு அவசியமாக ரமேஷ் அவர்களுக்கு அவசியமாகின்றது.
புத்தகங்கள் தமிழ் சமூகத்தில் எத்தகைய பங்காற்றுகின்றன என்பது இன்னும் பிடிபடாத நிலமைதான் நீடிக்கின்றது. இதில் எழுத்தாளர் ரமேஷ் பிரேதனின் கலையை ஆழமாக புரிந்து கொள்ளுதல் சற்று கடினமானது. அதற்கு ஒரு நீண்ட பயணம் இருக்கிறது. அதை ஒரு பதிப்பகம் முன்னெடுத்து செல்ல வேண்டியது கட்டாயமாகும். யாவரும் அதைதான் செய்தது.தொடர்ந்து செய்யவேண்டும் என்பது எழுத்தாளர் ரமேஷ் பிரேதனின் விருப்பமாக இருந்ததை அவருடைய உரையாடல்கள் வழியே நானும் அறிந்து கொண்டேன். அந்தப் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய தார்மீகப்பொறுப்பு ஜீவகரிகாலனுக்கு உண்டு.
இதை எழுதும் போதும் என் மனம் சோர்வடைந்தும் பிறகு நம்பிக்கை கொண்டும் எழுதவைக்கின்றது. ஒரு நிலையில் நிற்கவில்லை. அதற்கு காரணம் தமிழ் இலக்கியச்சூழல்தான். இதை ரமேஷ் பிரேதன் போன்ற உடலாலும் உள்ளத்தாலும் நெருக்கடியை எதிர்கொண்ட கலைஞன் எப்படி எதிர்கொண்டிருப்பான் என்ற பதற்றம் என்னை பாடாய்ப்படுத்துகின்றது.அந்த தருணம் ஜெயமோகன் என்கின்ற பெயர் என்னுடைய தோளில் கைவைத்து நம்பிக்கை கொள் என்று அழுத்திச் சொல்கின்றது. தமிழ் சமூகம் குறித்து அவநம்பிக்கை கொள்ளாதே.விஷ்ணுபுரம் என்ற பெயரில் கூட அவர்களில் ஒரு பகுதியினர் திரண்டு வருவார்கள் என்று இலக்கிய வாழ்வு குறித்து யாவரும் அவநம்பிக்கை கொண்டு விடாமல் காத்து நிற்கின்றது.
– வாசு முருகவேல்
அன்புள்ள வாசு
உங்கள் குரலில் உள்ள சோர்வை புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் எழுதிய இதே உணர்வையும் கொந்தளிப்பையும் யுவன் சந்திரசேகரும், கீரனூர் ஜாகீர்ராஜாவும், எஸ்.ஜே.சிவசங்கரும் எனக்கு தெரிவித்தார்கள். குறிப்பாக உடல்நிலை குன்றி இருக்கையில் இத்தகைய நிகழ்வுகள் மிக ஆழமான பாதிப்பை உருவாக்குகின்றன.
இந்த வகையான சோர்வு எழுத்துச் செயல்பாட்டில் அவ்வப்போது தீவிரமாக வரும், எப்போதும் ஓர் எல்லையில் இருந்து கொண்டும் இருக்கும். ஆனால் இதை இன்னொரு கோணத்தில் பார்க்க நான் மிக இளமையிலேயே கற்றுக் கொண்டேன். ஏனென்றால் இன்று இருக்கும் வாசிப்போ, கவனமோ கூட சற்றும் இல்லாத ஒரு சூழலில் தான் முதல் பத்து ஆண்டுகளில் எழுதியிருக்கிறேன். இருநூறு பிரதிகள் மட்டுமே வாசிக்கப்படும் சிற்றிதழ்ச் சூழலில் எழுதியவன் நான். அதற்கு அப்பால் ஒரு வாசிப்பு எனக்கு அமையும் என்று அப்போது கற்பனை செய்ததும் இல்லை.
நீங்கள் சொன்ன இந்த விஷயத்தை இன்னொரு கோணத்தில் பார்க்கலாம். ரமேஷின் உடல்நிலை என்பது அவர் இலக்கியவாதி என்பதனால் அமைந்தது அல்ல. அது அவருடைய மரபணுக் குறைபாடு. அவர் ஓர் இலக்கியவாதி அல்ல என்றாலும் கூட இதே போன்ற உடற்சிக்கல், கைவிடப்பட்ட நிலையில்தான் வாழ்ந்து இருப்பார். ஆனால் அவருடைய வாழ்க்கை அப்போது என்னவாக இருந்திருக்கும்? இன்று அவருக்கு உருவாகி வந்துள்ள இந்த நட்பு வளையம் அமைந்திருக்குமா ? அவரது இறுதிநாளில் தமிழகத்தின் எழுத்தாளர்கள் எந்தெந்த ஊரில் இருந்தெல்லாம் கிளம்பி வந்தனர் என்று கண்டோமே. எளிய நிலையில் வாழ்பவர்கள்கூட கடன் வாங்கி பயணம் செய்து வந்திருந்தனர் அல்லவா?
நண்பர் ஒருவர் எழுதிய கடிதத்தில் ரமேஷ் என்னிடம் உரிமையுடன் அதட்டி பணமும் விருதும் கேட்டதை பற்றி நெகிழ்வுடன் எழுதியிருந்தார். சாமானியர்களால் அந்த உறவைப் புரிந்துகொள்ள முடியாது. அவர்களின் கணக்குவழக்கு உலகில், சம்பிரதாயப்பேச்சுக்களின் சூழலில் அத்தகைய ஒன்று இல்லை. எழுத்தாளர் என்பதனால் அமைந்த உறவு அல்லவா அது? நம் சூழலுக்கு வெளியே இருப்பவர்களுக்கு உதவிகளைப் பெற்றுக் கொள்பவர் எப்போதும் ஒரு படி கீழே என்ற எண்ணம் உண்டு. அவர்களின் உலகில் அதுதான் விதி. இலக்கியத்தில் அது கிடையாது. அவர் என்னது இலக்கிய உறவு. நாங்கள் இருவரும் சேர்ந்து மகத்தான ஒன்றை செய்து கொண்டிருக்கிறோம் என்னும் உணர்வு இருவருக்கும் இருந்தது. ஆகவே நாங்கள் இருவரும் எந்நிலையிலும் எல்லா வகையிலும் இணையானவர்கள் மட்டுமே. அந்த அளவிலேயே அவர் என்னிடம் பழகி இருக்கிறார். அது எல்லா உரிமைகளும் உடைய நட்பு. அத்தகைய உறவு சுற்றமும் அவர்களுக்கு உருவாவதற்கு அடிப்படையாக இருந்தது அவருடைய இலக்கியம்தானே? அப்படி பார்த்தால் அவருக்கென ஒரு தனி வெளியுலகத்தை இலக்கியம் படைத்து அளித்திருக்கிறது அல்லவா?
அதேபோல ரமேஷ் பன்னிரண்டு ஆண்டுகள் ஒரே அறைக்குள் ஒரே படுக்கையில் வாழ்ந்த மனிதர். ஆனால் பெரும்பாலான தருணங்களில் உற்சாகமாகவே இருந்தார். நான் அவரிடம் இறுதியாகப பேசும் போது கூட யுவன் சந்திரசேகர் போல ஒரு நெகிழ்வான விருது ஏற்பு உரையை மேடையில் பேசுவதா, அல்லது கோணங்கிபோல எவருக்கும் புரியாமல் உரையாற்றுவதா, எஸ்.ராமகிருஷ்ணன் போல கவித்துவமாகப் பேசுவதா, அல்லது என்னைப்போல எண் போட்டு அறுதியிட்டுப்பேசும் பாணியா என்று குரலால் நடித்துக்காட்டி நையாண்டி செய்து கொண்டிருந்தார். அவர்கள் மூவரையும் விழாவிற்கு அழைக்க வேண்டும் என்றார்.எஸ். ராமகிருஷ்ணன் வருவார் என்று எனக்கு தோன்றவில்லை என்று நான் சொன்னேன். நானே அவனுக்கு போன் செய்து அழைக்கிறேன் என்று சொன்னார்.
இந்த அகஉலகம் அவருக்கு அமைந்தது இலக்கியத்தால் அல்லவா?இலக்கியம் மட்டும் இல்லை என்றால் அத்த பன்னிரண்டு ஆண்டுகள் படுக்கையில் அவர் எப்படிப்பட்ட ஒரு பெரும் வதையை அனுபவித்திருப்பார்! இந்த மீட்பின் தேவதைபோல நமக்கு அருள் செய்யும் தெய்வம் வேறென்ன? அதற்கு நாம் கடன் பட்டிருக்கிறோம் அல்லவா? நாம் எழுத்தாளர்களாக இல்லை என்றால் தொழிலதிபர்களாகி பணம் ஈட்டியிருப்போமா? அரசியல்வாதியாகி பதவிகளை பெற்றிருப்போமா ?சினிமாவில் ஸ்டார் ஆகி இருப்போமா? இல்லையே. நாம் மிக எளிய ஒரு வாழ்க்கை அல்லவா வாழ்ந்து கொண்டிருப்போம்? அ நமக்கு இன்று இருக்கும் அனைத்தையும் அளித்தது இந்த தெய்வமல்லவா ? நமக்கு இன்றிருக்கும் கவனமே நமது முன்னோர்கள் அடையாதது என்ற எண்ணமே எப்போதும் எனக்கு உள்ளது
எனக்கு எப்போதும் அருள்செய்த தெய்வம் அது. என்னை நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியுடனும் நிறைவுடனும் வாழச் செய்வது. ஒரு துண்டு தாளும் ஒரு பென்சிலும் இருந்தால் எங்கும் எப்போதும் என்னால் மகிழ்ச்சியாக இருந்து விட முடியும் என்று எனக்கு காட்டியது. ஆகவே நான் இதன் முழு பக்தன். இதற்குத் தலை கொடுக்க கடமைப்பட்டவன். எவ்வகையிலோ இதன் அடியாரெல்லாம் என் உறவினரே. நான் அவ்வடியார்க்கும் அடியான் என்றே உணர்கிறேன்.
ஜெ
உறவின் எல்லை. ஒரு கேள்வி.
நீங்கள் உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு சொன்ன பதிலை வாசித்தேன்.அந்தக் கேள்வியை கேட்டவன் நான் என்று வைத்துக்கொள்வோம். என் பிரச்சினை அது என்று வைத்துக்கொள்வோம். அந்த பெண்ணை நான் விவாகரத்து செய்ய நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா? அந்த மனிதருக்கு ஏன் நீங்கள் அந்த ஆலோசனையைச் சொல்லவில்லை?
உறவின் எல்லை. ஒரு கேள்வி.I am listening to your videos continuously. You are closing the comments section. I don’t think it is a democratic practice. I have something to say about your ideas, and you should listen to it. It is fair practice.
The Pitfalls of DemocracyOctober 6, 2025
திசைகளின் நடுவே மாடன்…
நான் எழுதிய மாடன் மோட்சம் கதை எப்படி சென்ற கால்நூற்றாண்டில் வெவ்வேறு வகையில் அர்த்தம்கொள்கிறது என்பதைப் பற்றி யோசிக்கும்போது ஒரு வரலாற்றின் ஒரு பரிணாமச்சித்திரத்தை உருவகிக்க முடிகிறது.
ஹெக்கோடு நீனாசம் கலையிலக்கிய விழா
சென்ற ஆண்டு என் நண்பரும் கன்னட எழுத்தாளருமான விவேக் ஷான்பேக் என்னை அழைத்து கர்நாடகத்தில் ஷிமோகா அருகே ஹெக்கோடு என்னும் சிற்றூரில் இருக்கும் நீனாசம் என்ற அமைப்பின் இலக்கிய விழாவுக்கு விருந்தினராக நான் செல்ல முடியுமா என்று கேட்டார். ஆனால் அந்த நாட்களில் நான் அமெரிக்காவில் இருப்பது போல பயணத்திட்டம் போடப்பட்டிருந்தமையால் என்னால் செல்ல முடியவில்லை. என் வருத்தத்தை தெரிவித்தேன்.
ஆகவே இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே நான் என்னை முறைப்படி அழைத்து, நாட்களையும் தெரிவித்து விட்டார். என்னுடைய பயணத்திட்டத்தை அதற்கு ஏற்ப அமைத்துக் கொண்டேன். ஆனால் சென்ற ஆகஸ்ட் முதலே என் ஒவ்வொரு நாளும் நெருக்கடியாகச் சென்றுகொண்டிருந்தது. ஹெக்கோடு சென்றால் அங்கிருந்து வந்து இரண்டு நாள் இடைவெளியில் நான் அமெரிக்கா செல்ல வேண்டி இருக்கும். அதற்குள் செய்து முடிக்க வேண்டிய திரைப்படப் பணிகள், எழுத வேண்டிய பணிகள் மிச்சம் இருந்தன. ஆகவே அங்கு செல்வது என்பது ஒரு சுமையாக ஆகிவிடுமா என்ற ஒரு சஞ்சலம் எழுந்து கொண்டே இருந்தது.
செப்டம்பர் 18 ஆம் தேதி வீட்டில் இருந்து கிளம்பியது முதல் தொடர்ச்சியாக மூன்று நாள் இடைவெளியில் வெவ்வேறு ஊர்களிலாக பயணத்தில் இருந்து கொண்டிருந்தேன். ஆனால் நடுவே ரமேஷ் பிரேதனின் இறப்பும் அதை ஒட்டிய உளஅழுத்தமும் ஹெக்கோடு செல்வது ஒரு பெரிய விடுதலையாக இருக்கும் என்று எண்ண வைத்தன. உண்மையில் அந்த விழா என்னை எல்லாவகையிலும் மீட்டுக்கொண்டு வந்தது. மீண்டும் இங்கே செய்வன அனைத்திலும் முழுமையாக என்னை ஆழ்த்திக்கொள்ளச் செய்தது.
கோவையில் இருந்து செப்டெம்பர 30ஆம் தேதி காலை விமானத்தில் பெங்களூர் சென்று, அங்கிருந்து ஷிமோகாவுக்கு சென்றேன். ஷிமோகாவுக்கு கார் வந்திருந்தது. அங்கிருந்து சாகர் என்ற ஊருக்கு சென்று அவர்கள் ஏற்பாடு செய்த ஒரு விடுதியில் தங்கினேன். சாகர் ஒரு மிகச்சிறிய ஊர். மலைநாடு என கன்னடர் அழைக்கும் மேற்குத்தொடர்ச்சிமலைப் பகுதி. மழைநாடு என்றும் அழைக்கலாம். தென்னகத்தில் மிக அதிகமாக மழைபெய்யும் பகுதி. மழைக்குளிர், ஈரம் எப்போதும் உண்டு. கோடையில் நன்றாக வியர்க்கும். இப்பகுதிக்கு நாங்கள் பெரும்பாலும் ஆண்டுக்கு ஒரு முறை மழைப்பயணம் வருவதுண்டு. ஆனால் நான் நீனாசம் அமைப்புக்கு வருவது முதல்முறை. 1986ல் ஜி.சங்கரப்பிள்ளை இந்த இடத்தைப் பற்றிச் சொன்னார். அதன்பின் பலர் சொல்லியிருக்கிறார்கள். வரவேண்டுமென்ற திட்டம் இருந்தது. இப்போதுதான் வர முடிந்தது.
ஹெக்கோடு எட்டு கிமீ அப்பால் இருந்த்து. அதை ஒரு குக்கிராமம் என்று தான் சொல்ல வேண்டும். அங்கு தங்குமிடங்களோ உணவகங்களோ கிடையாது. அங்குதான் நாடக மேதை ஆகிய கே.வி.சுப்பண்ணா பிறந்தார். சுப்பண்ணா நாடகத்திற்காக உலக அளவில் புகழ் பெற்றவர். காந்தியவாதி. சிவராமகாரந்த, பி.வி.காரந்த், பிரேமா காரந்த், கிரீஷ் கர்னாட், ராமகிருஷ்ண ஹெக்டே போன்ற பலருக்கு அணுக்கமானவர். அவருக்கு அவருடைய நாடகப் பணிகளுக்காக மகசேசே விருது கிடைத்துள்ளது. அவர் தன் சொந்த கிராமத்தில் உருவாக்கிய ஒரு கலைமையம் தான் நீனாசம். அதன் முழுப்பெயர் நீலகண்டேஸ்வரா நாட்யசேவா சங்கம். நீனாசம் என்பதற்கு நீ, நான், இணைப்பு என்றும் பொருளுண்டு.
1940களில் கே.வி.சுப்பண்ணாவும் அன்றைய இளைஞர்களும் அவருடைய பூர்வீக இல்லத்தின் அருகே இருந்த ஒரு சிறு கட்டிடத்தில் ஒரு நூலகத்தை உருவாக்கி இலக்கியச் சந்திப்புகளை நடத்தினர். 1949ல் அங்கிருந்து அசோகா வார இதழ் என்னும் செய்தி – இலக்கிய இதழை தொடங்கி நடத்தினர். அப்போதுதான் நீனாசம் அமைப்பு உருவானது. அதில் சிவராம காரந்த் இருந்தார். 1957ல் அக்ஷரபிரகாசனா என்னும் பதிப்பகத்தை கே.வி.சுப்பண்ணா தொடங்கி இலக்கிய நூல்களை வெளியிடலானார். 800 நூல்களுக்கு மேல் இந்த பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 1967 முதல் நீனாசம் சித்ரசமாஜா என்னும் திரைப்படக்கழகம் நிறுவப்பட்டு திரைரசனை பயிற்றுவிக்கப்பட்டது. நீனாசம் ஒரு முதன்மையான நாடகப்பள்ளியாகவும் செயல்படுகிறது.
இன்று கே.வி.சுப்பண்ணாவின் மகன் கே.வி. அக்ஷரா நீனாசம் அமைப்பை முன்னின்று நடத்துகிறார். இந்தியாவிலும் பிரிட்டனிலும் நாடக்கலை பயின்ற அக்ஷரா நாடகக் கோட்பாட்டு நூல்கள், மொழியாக்கங்கள், மேடை ஒருங்கிணைப்பு ஆகியவற்றினூடாக கன்னட நாடக இலக்கியத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றியவர். அக்ஷராவின் மகன் இன்று அடுத்த தலைமை பொறுப்புக்கு வந்திருக்கிறார். மூன்று தலைமுறைகளாக நீனாசம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது. கர்நாடக மக்களின் ரசனை வாசிப்பு ஆகியவற்றில் நீனாசம் அளித்த பங்களிப்பு என்பது பிறிதொரு அமைப்பை சுட்டிக்காட்ட முடியாத அளவுக்கு மிகப்பெரியது.
நீனாசத்தில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு இந்திய அளவிலான கலை-இலக்கிய விழா நிகழ்கிறது. சென்ற ஆண்டு என் ‘யானை டாக்டர்’ நாடகத்தை அங்கே அரங்கேற்றினார்கள். இந்த ஆண்டு என்னுடைய நாடகமொன்று அரங்கேற இருப்பதாக சொன்னார்கள். அங்கு செல்வதுவரை அது ‘உலகம் யாவையும்’ என்ற சிறுகதையை ஒட்டிய நாடக ஆக்கம் என்று எனக்கு தெரியாது.
ஒன்றாம் தேதி காலையிலேயே பெங்களூரில் இருந்து சுசித்ரா வந்துவிட்டார். ஈரோடு கிருஷ்ணனும் மற்ற நண்பர்களும் அன்று மதியம்தான் வந்தனர். இந்தியாவின் வெவ்வேறு நாடகப்பள்ளிகளில் இருந்து இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து நீனாசம் விடுதிகளில் தங்கியிருந்தார்கள். நீண்டகாலமாக அனைவரையும் அங்கே தங்கவைப்பதே வழக்கமாக இருந்தது. நீனாசம் அமைப்பு பழைய மலைநாட்டு பாணியிலான ஓட்டுக்கட்டிடங்கள் கொண்டது. அறைகள் எளிமையானவை. இருவரை ஓர் அறையில் தங்கவைப்பார்கள். அஷிஷ் நந்தி முதல் ராமச்சந்திர குகா வரை இந்தியாவின் முதன்மையான சிந்தனையாளர்கள் அப்படி சிறிய அறைகளில் கூட்டமாக தங்கி இலக்கிய – நாடக நிகழ்வுகளை நடத்தியுள்ளனர்.
மரபான கட்டிடக்கலையில் அமைந்த ஐம்பதாண்டு பழைய கட்டிடங்கள். ஒருவகையில் அனைவரும் சேர்ந்து அமர்ந்து பேச அந்த ‘உள்ளூர்த்தன்மை’யும் எளிமையும் உதவியது. அத்துடன் மிகப்பெரிய சர்வதேச இலக்கியவிழாக்களில் பொதுவாகத் தென்படாத தீவிரமான இளைஞர்கள் நிறையப்பேர் இருந்தனர். இலக்கிய உரையாடல்கள், சட்டென்று வெடிக்கும் ஆங்காங்கே பாடல்கள் என ஓர் இலக்கியக் கலைச்சூழல் எங்கும் இருந்தது. அண்மையில் விஷ்ணுபுரம் விழாவுக்கு நிகரான ஓர் உண்மையான ஆர்வத்தையும் தீவிரத்தையும் நான் கண்டது நீனாசத்தில் மட்டும்தான். அநேகமாக எல்லா ஆண்டும் இனிமேல் அங்கே செல்வேன் என்று நினைக்கிறேன்.

மூன்று நாட்கள் அங்கே இருந்தேன் அங்கு நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் கலந்து கொண்டேன் பெரும்பாலான நிகழ்ச்சிகள் கன்னடத்தில் நிகழ்ந்தன. ஆனால் எனக்கு கன்னடம் ஓரளவு புரிந்தது. நான் கன்னடத்தை காஸர்கோட்டில் கேட்டு பழகியிருந்தேன். வெவ்வேறு கன்னட இலக்கிய ஆளுமைகளைச் சந்தித்துப் பேசிக்கொண்டே இருந்தேன். அவர்கள் ஆங்கிலம் வழியாகவும் கன்னட மொழியாக்கங்கள் வழியாகவும் என்னை அறிந்திருந்தார்கள். கன்னட இலக்கிய விமர்சகர் டி.பி.அசோக் என் படைப்புகள் மேல் மிகப்பெரிய ஈடுபாடு கொண்டவராகவும், ஆங்கிலத்தில் வெளிவந்த என் படைப்புக்கள அனைத்தையும் படித்தவராகவும் இருந்தார். செல்லுமிடங்களில் எல்லாம் என் படைப்புகளை அறிமுகம் செய்கிறேன் என்றார்.
முதல் நாள் மாலையில் ஒரு நாடகம் நிகழ்ந்தது புக்கர் பரிசு பெற்ற பானு முஷ்டக் அவர்களின் சிறுகதை ஒன்றை ஒட்டிய நாடகம். அவருடைய தொகுப்பின் முதன்மைக்கதை. ஆனால் மிகச்சுமாரான படைப்பு அது. அப்பட்டமான ஒரு ‘டிவிஸ்ட்’ மட்டுமே கொண்டது. மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை. மருமகள் மாமியாரை வெறுக்கிறாள், கூட இருக்கக்கூடாது என்கிறாள். வெறுத்துப்போன மகன் மறுமணம்செய்ய திட்டமிடுகிறான், தனக்கல்ல, தன் அம்மாவுக்கு. அம்மா அதற்கு ஒப்புக்கொள்கிறாள், மருமகள் கதறி அழுகிறாள். விகடன் போன்ற ஓர் இதழில் வெளிவரும் ஒரு விடம்பன கதை அது. அந்த கதையை இரண்டு மணி நேர நாடகமாக ஆக்கியிருந்தார்கள். நடிப்பு, அரங்க அமைப்பு, ஒலி, ஒளி எல்லாமே அபாரமாக இருந்தால்கூட உள்ளடக்கம் என்பது பலவீனமானதாக இருந்ததனால் அது சலிப்பூட்டியது.
அது கர்நாடக அளவிலான நாடகப்போட்டிக்காக தயாரிக்கப்பட்ட நாடகம். அந்த தொகுப்பு இஸ்லாமிய அடையாளம், பெண்ணிய அரசியல் என பல காரணங்களுக்காக விருது பெற்ற ஒன்று. அதே காரணத்தால் அது நாடகவிருதையும் பெறக்கூடும். அந்த நாடகத்தை அரங்கினர் ரசிக்கிறார்களா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. ரசிக்கிறார்கள் என்றால் அரங்கினரின் தரம் மிகச் சாதாரணமானது என்று முடிவுசெய்யலாம் என எண்ணினேன். ஆனால் மறுநாள் அந்த நாடகத்தைப் பற்றிய விவாதம் நகர்ந்த போது ஒவ்வொருவரும் அந்த நாடகத்தை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து, ஏறத்தாழ நாங்கள் உணர்ந்த எல்லாவற்றையுமே அங்கு கேள்விகளாக முன்வைத்தார்கள். அது அந்த அரங்கு பல மடங்கு மேடையை விட மேலானது என்ற எண்ணத்தை உருவாக்கியது.
இரண்டாம் நாள் காலை அமர்வில் முந்தையநாள் நாடகத்தைப் பற்றி உரையாடலுக்குப் பிறகு 11 மணிக்கு அசோக் என்னைப் பற்றிய 40 நிமிட அறிமுக உரை ஒன்றை ஆற்றினார். என் முக்கியமான கதைகள், என் இலக்கிய வாழ்க்கை, என் வாழ்க்கை வரலாறு பற்றிய மிக தீவிரமான ஓர் அறிமுக உரை. கன்னடத்தில் அதன் பிறகு இருபது நிமிடங்கள் நான் ஆங்கிலத்தில் ஓர் உரையாற்றினேன். எந்த திட்டமிடலும் இல்லாமல்தான் சென்றேன். அங்கே கூடியிருந்த நாடகக்காரர்கள், முந்தைய நாளின் நாடகம் ஆகியவை அந்த உரைக்கான கருவை அளித்தன.
இன்றைய சூழலில் கலை – இலக்கியத் துறைகளில் செயல்பட வேண்டியவர்கள் கடைக்கொள்ள வேண்டிய மூன்று எதிர்நிலைகளை பற்றியது அந்த உரை.
முதல் எதிர்நிலை அதிகாரத்திற்கு எதிரானது. குடும்பம், சமூகம், அரசு, கல்விக்கூடம் ஆகியவை நம்மை ஒருவகையாக வரையறை செய்கின்றன. அவற்றுக்கு எதிராக ஒவ்வொரு கணுவிலும் நாம் வளரவேண்டியுள்ளது.இரண்டாவது எதிர்நிலை, நம்மை ஒவ்வொரு நாளும் சராசரிப் படுத்திக் கொண்டே இருக்கும் இன்றைய ஊடகங்களுக்கு எதிரானது. இன்றைய ஊடகங்களுக்கு நம்மை சராசரிப் படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது, ஏனெனில் ஒரு நுகர்வோர் என்பது ஒரு சராசரிநிலை. நம்மை ஒரு நுகர்வுச் சராசரியாக மாற்றும் முயற்சியைத்தான் இன்றைய அனைத்து ஊடகங்களும். செய்கின்றன. சமூக ஊடகங்கள் வழியாக நாமே நம்மை அப்படி ஆக்கிக்கொள்கிறோம். அந்த ஊடகங்களுக்கு எதிரான ஒரு எதிர்ப்பு நமக்கு இல்லை என்றால் நாம் அந்த பிரம்மாண்ட ஒட்டுமொத்தத்தில் கலந்து விடுவோம்.மூன்றாவது எதிர் நிலை என்பது சிந்தனைக் களத்தில் இன்று நடந்து கொண்டிருக்கும் துருவப் படுத்தல்களுக்கு எதிராக நாம் கடைக்கொள்ள வேண்டியது. நம்மை ஏதேனும் ஒரு தரப்புடன் இணைத்துக்கொண்டு அதன் ஒற்றைநிலையை மட்டுமே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எல்லா தரப்பும் நம்மிடம் சொல்கின்றன. அதற்கு எதிராக ஒவ்வொரு முறையும் நாம் நமக்கான பாதையை தெரிவுசெய்யவேண்டும். உண்மை எப்போதும் நுணுக்கங்களிலேயே உள்ளது.
அதன் பிறகு கேள்வி பதில். பெரும்பாலான கேள்விகள் மகாபாரதத்தை ஒட்டியதாக அமைந்தன. ஏறத்தாழ இரண்டு மணி நேரத்திற்கு மேல் அந்த உரையாடல் நீடித்தது. வினாக்கள் பல கன்னடத்தில் இருந்தாலும் நான் புரிந்துகொள்ள முடிந்தது, நான் ஆங்கிலத்தில் பதில் சொன்னேன். நிகழ்வுக்குப் பின்னர் என்னைச் சூழ்ந்துகொண்டு கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தனர். மதியச்சாப்பாட்டின் போதும் கேள்விகள் தொடர்ந்தன. அன்று முழுக்க பேசிக்கொண்டே இருக்கவேண்டியிருந்தது.
மதிய அமர்வில் என் ‘உலகம் யாவையும்’ நாடகத்தை என்.வி.ஶ்ரீகாந்த், ஜி.ஆகாஷ் ஆகியோர் நடித்தார்கள். ஶ்ரீகாந்த் நீனாசம் அமைப்பின் நடிப்புப் பயிற்றுநர். ஆகாஷ் அவருடைய மாணவர். உலகம் யாவையும் கதையை எப்படி நாடகமாக நடிக்க முடியும் என்று எண்ணினேன். இரண்டு பேர் மட்டுமே வெவ்வேறு கதாபாத்திரங்களாக மாறி உணர்ச்சிகரமாக நடித்தது நாடகம் என்பது நடிப்பு மட்டுமே என்னும் என் நம்பிக்கையை உறுதிசெய்தது. என் படைப்பை நாடகமாக, அல்லது இன்னொரு கலை வடிவில் பார்ப்பது என்பது எனக்கு எப்போதுமே மிக முக்கியமானது. ஏனெனில் நான் எழுதிய கதையை நான் படிக்கையில் அதந் பிழைகளும் அதன் தொழில்நுட்பமும் மட்டுமே எனக்கு தெரிகின்றன. அந்த அணுக்கமே எனக்கு தடையாகிறது. ஆனால் இன்னொரு வடிவம் வழியாக அது என்னை நோக்கி வரும்போது அது முற்றிலும் புதிய ஒன்றாக, வெறும் ஒரு கலைப்படைப்பாக மட்டுமே இருக்கிறது.
உலகம் யாவையும் நாடகம் எனக்கு ஒரு பெரிய அனுபவத்தை அளித்தது. காரி டேவிஸ் உக்கிரமான அனுமவம் வழியாக உலகக்குடிமகனாக உருமாறும் அந்த தருணத்தை – நடித்த போது மெய்யாகவே எனக்கு அகம் சிலிர்த்து கண்ணீர் மல்கியது. அதன் பிறகு நாடகத்தைப் பற்றிய மீண்டும் மகாபாரதத்தை பற்றியும் மீண்டும் ஒரு மணி நேர உரையாடல் நிகழ்ந்தது.
மகாநிர்வாணம் என்னும் மராட்டிய நாடகம் தமிழிலும் புகழ்பெற்றது (அது தமிழினி வெளியீடாக வந்துள்ளது) அதன் ஆசிரியர் சதீஷ் அலேகரைச் சந்தித்து நாடகம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அடுத்த ஜனவரியில் புனேயில் நிகழவிருக்கும் நாடகவிழாவில் விருந்தினராக என்னை அழைத்தார். நான் வருவதாக ஒப்புக்கொண்டேன்.

அந்த ஒரு நாளில் மட்டும் மேடையில் நாலரை மணி நேரம் பேசியிருந்தேன். மேடைக்கு வெளியே ஆறு மணி நேரத்திற்கு மேல் பேசி இருப்பேன் என்று நினைக்கிறேன். தொடர்ந்து புதிய வாசகர்கள், இளம் படைப்பாளிகளிடம் பேசிக்கொண்டே இருந்தேன். அவர்கள் அனைவருக்கும் என்னிடம் பேசுவதற்கு ஏதோ ஒன்று இருந்தது. அத்தகைய தீவிரமான வாசகர்களை நான் பெரிய தேசியநிகழ்வுகளில் பார்த்ததில்லை. அவை பெரும்பாலும் சம்பிரதாயச் சொற்கள், தொடர்பு உருவாக்கங்கள், குடி மட்டுமே. இந்திய இலக்கிய விழாக்களில் ஆங்கிலத்தில் பேசுவார்கள். சரளமாக ஆங்கிலம் பேசுபவர்களே அதிகம் பேசுவார்கள். அவர்கள் பெரும்பாலும் மேலோட்டமானவர்கள், தேய்வழக்குச் சொற்களையும் வழக்கமான கருத்துக்களையுமே மிக வேகமான ஒரு உச்சரிப்புடன் பேசுவார்கள். தயங்கி தயங்கி பேசவரும் ஒரு புதிய வாசகனிடம் இருக்கும் ஆத்மார்த்தமும் உண்மையான கேள்வியும் அவர்களிடம் இருப்பதில்லை.
இன்றைய கல்விக்கூடங்களில் இலக்கியம் எனக் கற்பிக்கப்படுபவை பெரும்பாலும் அரசியல் சரிநிலைகளும் அரசியல் கருத்துக்களுமாக இருக்கின்றன. அல்லது இலக்கிய கோட்பாடுகள். மிக அரிதாகவே மெய்யான இலக்கிய ஆர்வமும், கலைசார்ந்த புரிதலும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். ஆகவே உண்மையான கலையார்வம் கொண்ட இளைஞர்களுக்கு இருக்கும் சிக்கல் என்பது அவர்களின் மெய்யான கேள்விகளுக்கு கல்லூரிகளில் இடமில்லை என்பதே. என்னிடம் வந்த ஐயங்கள் இலக்கிய வடிவங்களின் நுட்பங்கள் சார்ந்தவை. அல்லது கலைப்படைப்புக்கும் தங்களுடைய உளநிலைக்குமான நுணுக்கமான உறவு சார்ந்த கேள்விகள்.
ஆங்கிலத்தில் வாஜ்பாயின் வரலாற்றை (Believer’s Dilemma) எழுதிய அபிஷேக் சௌதுரி வந்து அறிமுகம் செய்துகொண்டார். என் உரையாடல் தன்னை பெரிதும் கவர்ந்ததாகச் சொன்னார். டெல்லியின் இலக்கியவாதிகள் எப்போதும் சமத்காரமாக, கணக்குகளுடன் பேசுவார்கள். எவரையும் பகைகொள்ள மாட்டார்கள். ஏனென்றால் ஒருவரின் நூல் பற்றி இன்னொருவர்தான் மதிப்புரை எழுதவேண்டும். என்னிடமிருந்த நேரடியான தீவிரம் தன்னை மிகவும் கவர்ந்ததாகச் சொன்னார். அவரிடம் அரசியல், இலக்கியம் பற்றி மிக விரிவாக பேசிக்கொண்டிருந்தேன்.
அபிஷேக் சென்னையில் பயின்றவர். பொருளியல் பயின்றபின் எழுத்தாளராக ஆனார். வாஜ்பாய் பற்றிய அவருடைய நூல் இன்று மிகவும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது, அது இந்தியாவில் எழுதப்படும் வழக்கமான துதிவரலாறு அல்ல. வசைவரலாறும் அல்ல. மேலைநாட்டு வரலாற்றாசிரியர்களின் பாணியில் கறாராக எல்லாம் உண்மைகளையும் திரட்டி முன்வைக்கும் வகையான வரலாறு. வாஜ்பாயின் தனிவாழ்க்கை, அவருடைய தோல்விகள் எல்லாமே விரிவாக பேசப்பட்ட நூல் அது.
மலைநாட்டின் நினைவாக எஞ்சியிருக்கும் ஒன்று, அங்குள்ள காபியின் சுவை. இந்தியாவின் எந்தப் பகுதியிலு சிக்கரி சேர்க்கப்படாத காபி கிடைப்பதில்லை. சிக்கரி என்பது ஒரு இமையமலைக் கிழங்கு. அதை காபிப்பொடியுடன் சேர்க்கிறார்கள். அது கசப்புச்சுவை கொண்டது. (முதல் உலகப்போரின்போது பிரேசிலில் இருந்து காப்பி வரவேண்டியிருந்தமையால் பிரிட்டிஷ் அரசு முப்பது சதவீதம் சிக்கரியை காபியில் சேர்த்தாகவேண்டும் என ஆணையிட்டது. அதுதான் அரசாணை – decree . கும்பகோணம் டிகிரி காபி என்பது அந்த அரசாணைப்படி தயாரிக்கப்பட்டது) அந்தக் காபிச்சுவை தமிழகத்தில் பெரும்பாலானவர்களுக்குப் பழகிவிட்டது. சிக்கரி காபி கெட்டியான பாலுடன் இணைந்தால்தான் ஓரளவு சுவையாக இருக்கும். எனக்கு அது பொதுவாகப் பிடிக்காது. நான் நல்ல காபியின் ரசிகன். மலைநாட்டு பகுதியில் அசல் காபி கிடைக்கும். எந்தச் சிறு கடையிலும் டீ சிறப்பாக இருக்கும். ஏனென்றால் இந்தியா உற்பத்தி செய்யும் காபியில் பெரும்பகுதி இங்கேதான் உருவாகிறது. சாகர் நகரில் காரந்த் உணவகத்தில் ஒரு காபி விலை ரூ பத்து மட்டுமே. ஆனால் ஷிமோகா விமானநிலையத்திற்குள் ரூ.360.
அபிஷேக்கும் நானும் சுசித்ராவும் ஜோக் அருவியைச் சென்று பார்த்தோம். பல நூறு பேர் சூழ்ந்திருந்து பார்க்கையிலும் தனக்கான தனிமேடையில் தன்னில் தானே நிகழ்ந்து கொண்டிருக்கும் பெரும் நடனக் கலைஞனைப் போல அது அங்கு நின்று கொண்டிருப்பதாகப்பட்டது. மறுநாள் காலை அங்கிருந்து கிளம்பி பெங்களூர் வழியாக திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவில் வந்து சேர்ந்தேன். ஜோக் அருவியும் நீனாசமும் எல்லாம் இணைந்த ஒரு கலவைச்சித்திரம் எஞ்சியிருந்தது. படிமங்கள் இப்படித்தான் திரள்கின்றன.
விஷ்ணுபுரம் விருந்தினர் 7, அனுராதா ஆனந்த்

விஷ்ணுபுரம் விருது 2025 ஆம் ஆண்டுக்கு ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்படுகிறது. டிசம்பர் 20, 21 ஆம் தேதிகளில் நிகழும் இந்த விழாவில் வழக்கம்போல படைப்பாளர்கள், இலக்கியச் செயல்பாட்டாளர்கள் வாசகர்களை சந்திக்கும் நிகழ்வு அமைகிறது. இந்த ஆண்டு அனுராதா ஆனந்த் கலந்துகொள்கிறார்
அனுராதா ஆனந்த்
width: 100%;
margin-left: -20px;
margin-right: -20px;
}.tdi_1:after{
content: '';
display: table;
clear: both;
}.tdi_1 .td-image-wrap{
padding-bottom: 100%;
}.tdi_1 .entry-thumb{
background-position: center 50%;
}.tdi_1 .td-image-container{
flex: 0 0 30%;
width: 30%;
display: block; order: 0;
}.ie10 .tdi_1 .td-image-container,
.ie11 .tdi_1 .td-image-container{
flex: 0 0 auto;
}.tdi_1 .td-module-container{
flex-direction: row;
border-color: #eaeaea !important;
}.ie10 .tdi_1 .td-module-meta-info,
.ie11 .tdi_1 .td-module-meta-info{
flex: 1;
}.tdi_1 .td-module-meta-info{
padding: 1% 5%;
border-color: #eaeaea;
}.tdi_1 .td_module_wrap{
padding-left: 20px;
padding-right: 20px;
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
border-color: #eaeaea;
}.tdi_1 .entry-thumb,
.tdi_1 .entry-thumb:before,
.tdi_1 .entry-thumb:after{
border-radius: 500px;
}.tdi_1 .td-post-vid-time{
display: block;
}.tdi_1 .td-post-category:not(.td-post-extra-category){
display: none;
}.tdi_1 .td-author-photo .avatar{
width: 20px;
height: 20px;
margin-right: 6px;
border-radius: 50%;
}.tdi_1 .td-excerpt{
display: none;
column-count: 1;
column-gap: 48px;
font-size:= !important;
}.tdi_1 .td-audio-player{
opacity: 1;
visibility: visible;
height: auto;
font-size: 13px;
}.tdi_1 .td-read-more{
display: none;
}.tdi_1 .td-author-date{
display: none;
}.tdi_1 .td-post-author-name{
display: none;
}.tdi_1 .td-post-date,
.tdi_1 .td-post-author-name span{
display: none;
}.tdi_1 .entry-review-stars{
display: none;
}.tdi_1 .td-icon-star,
.tdi_1 .td-icon-star-empty,
.tdi_1 .td-icon-star-half{
font-size: 15px;
}.tdi_1 .td-module-comments{
display: none;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0;
padding-bottom: 0;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:21px !important;line-height:1.2 !important;
}html:not([class*='ie']) .tdi_1 .td-module-container:hover .entry-thumb:before{
opacity: 0;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}/* landscape */@media (min-width: 1019px) and (max-width: 1140px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:20px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* portrait */@media (min-width: 768px) and (max-width: 1018px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:17px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* phone */@media (max-width: 767px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}var block_tdi_1 = new tdBlock();block_tdi_1.id = "tdi_1";block_tdi_1.atts = '{"modules_on_row":"","limit":"10","hide_audio":"yes","show_btn":"none","show_excerpt":"none","show_review":"none","show_com":"none","show_date":"none","show_author":"none","image_floated":"float_left","sort":"oldest_posts","category_id":"11301","category_ids":"12659","image_width":"30","meta_padding":"1% 5%","modules_category":"","modules_category_margin":"","custom_title":"\u0bb5\u0bbf\u0bb7\u0bcd\u0ba3\u0bc1\u0baa\u0bc1\u0bb0\u0bae\u0bcd 2025 \u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba8\u0bcd\u0ba4\u0bbf\u0ba9\u0bb0\u0bcd\u0b95\u0bb3\u0bcd","custom_url":"\/tag\/2025-\u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba8\u0bcd\u0ba4\u0bbf\u0ba9\u0bb0\u0bcd\/","post_ids":"-222756","tdc_css":"eyJhbGwiOnsiYm9yZGVyLXRvcC13aWR0aCI6IjEiLCJib3JkZXItYm90dG9tLXdpZHRoIjoiMSIsInBhZGRpbmctdG9wIjoiMTIiLCJwYWRkaW5nLWJvdHRvbSI6IjgiLCJib3JkZXItY29sb3IiOiIjZWFlYWVhIiwiZGlzcGxheSI6IiJ9fQ==","show_cat":"none","excerpt_col":"","m16_el":"20","ajax_pagination":"load_more","f_title_font_size":"eyJhbGwiOiIyMSIsImxhbmRzY2FwZSI6IjIwIiwicG9ydHJhaXQiOiIxNyJ9","f_title_font_line_height":"1.2","f_ex_font_size":"=","f_ex_font_line_height":"","image_height":"100","hide_image":"","modules_gap":"","meta_info_horiz":"","container_width":"100","image_radius":"500","block_type":"td_flex_block_1","separator":"","block_template_id":"","title_tag":"","mc1_tl":"","mc1_title_tag":"","mc1_el":"","tag_slug":"","autors_id":"","installed_post_types":"","offset":"","show_modified_date":"","time_ago":"","time_ago_add_txt":"ago","time_ago_txt_pos":"","el_class":"","td_ajax_filter_type":"","td_ajax_filter_ids":"","td_filter_default_txt":"All","td_ajax_preloading":"","m_padding":"","all_modules_space":"36","modules_border_size":"","modules_border_style":"","modules_border_color":"#eaeaea","modules_border_radius":"","modules_divider":"","modules_divider_color":"#eaeaea","h_effect":"","image_size":"","image_alignment":"50","video_icon":"","video_popup":"yes","video_rec":"","spot_header":"","video_rec_title":"","video_rec_color":"","video_rec_disable":"","autoplay_vid":"yes","show_vid_t":"block","vid_t_margin":"","vid_t_padding":"","video_title_color":"","video_title_color_h":"","video_bg":"","video_overlay":"","vid_t_color":"","vid_t_bg_color":"","f_vid_title_font_header":"","f_vid_title_font_title":"Video pop-up article title","f_vid_title_font_settings":"","f_vid_title_font_family":"","f_vid_title_font_size":"","f_vid_title_font_line_height":"","f_vid_title_font_style":"","f_vid_title_font_weight":"","f_vid_title_font_transform":"","f_vid_title_font_spacing":"","f_vid_title_":"","f_vid_time_font_title":"Video duration text","f_vid_time_font_settings":"","f_vid_time_font_family":"","f_vid_time_font_size":"","f_vid_time_font_line_height":"","f_vid_time_font_style":"","f_vid_time_font_weight":"","f_vid_time_font_transform":"","f_vid_time_font_spacing":"","f_vid_time_":"","meta_info_align":"","meta_width":"","meta_margin":"","meta_space":"","art_title":"","art_btn":"","meta_info_border_size":"","meta_info_border_style":"","meta_info_border_color":"#eaeaea","meta_info_border_radius":"","modules_category_padding":"","modules_cat_border":"","modules_category_radius":"0","modules_extra_cat":"","author_photo":"","author_photo_size":"","author_photo_space":"","author_photo_radius":"","review_space":"","review_size":"2.5","review_distance":"","art_excerpt":"","excerpt_gap":"","excerpt_middle":"","excerpt_inline":"","show_audio":"block","art_audio":"","art_audio_size":"1.5","btn_title":"","btn_margin":"","btn_padding":"","btn_border_width":"","btn_radius":"","pag_space":"","pag_padding":"","pag_border_width":"","pag_border_radius":"","prev_tdicon":"","next_tdicon":"","pag_icons_size":"","f_header_font_header":"","f_header_font_title":"Block header","f_header_font_settings":"","f_header_font_family":"","f_header_font_size":"","f_header_font_line_height":"","f_header_font_style":"","f_header_font_weight":"","f_header_font_transform":"","f_header_font_spacing":"","f_header_":"","f_ajax_font_title":"Ajax categories","f_ajax_font_settings":"","f_ajax_font_family":"","f_ajax_font_size":"","f_ajax_font_line_height":"","f_ajax_font_style":"","f_ajax_font_weight":"","f_ajax_font_transform":"","f_ajax_font_spacing":"","f_ajax_":"","f_more_font_title":"Load more button","f_more_font_settings":"","f_more_font_family":"","f_more_font_size":"","f_more_font_line_height":"","f_more_font_style":"","f_more_font_weight":"","f_more_font_transform":"","f_more_font_spacing":"","f_more_":"","f_title_font_header":"","f_title_font_title":"Article title","f_title_font_settings":"","f_title_font_family":"","f_title_font_style":"","f_title_font_weight":"","f_title_font_transform":"","f_title_font_spacing":"","f_title_":"","f_cat_font_title":"Article category tag","f_cat_font_settings":"","f_cat_font_family":"","f_cat_font_size":"","f_cat_font_line_height":"","f_cat_font_style":"","f_cat_font_weight":"","f_cat_font_transform":"","f_cat_font_spacing":"","f_cat_":"","f_meta_font_title":"Article meta info","f_meta_font_settings":"","f_meta_font_family":"","f_meta_font_size":"","f_meta_font_line_height":"","f_meta_font_style":"","f_meta_font_weight":"","f_meta_font_transform":"","f_meta_font_spacing":"","f_meta_":"","f_ex_font_title":"Article excerpt","f_ex_font_settings":"","f_ex_font_family":"","f_ex_font_style":"","f_ex_font_weight":"","f_ex_font_transform":"","f_ex_font_spacing":"","f_ex_":"","f_btn_font_title":"Article read more button","f_btn_font_settings":"","f_btn_font_family":"","f_btn_font_size":"","f_btn_font_line_height":"","f_btn_font_style":"","f_btn_font_weight":"","f_btn_font_transform":"","f_btn_font_spacing":"","f_btn_":"","mix_color":"","mix_type":"","fe_brightness":"1","fe_contrast":"1","fe_saturate":"1","mix_color_h":"","mix_type_h":"","fe_brightness_h":"1","fe_contrast_h":"1","fe_saturate_h":"1","m_bg":"","color_overlay":"","shadow_shadow_header":"","shadow_shadow_title":"Module Shadow","shadow_shadow_size":"","shadow_shadow_offset_horizontal":"","shadow_shadow_offset_vertical":"","shadow_shadow_spread":"","shadow_shadow_color":"","title_txt":"","title_txt_hover":"","all_underline_height":"","all_underline_color":"","cat_bg":"","cat_bg_hover":"","cat_txt":"","cat_txt_hover":"","cat_border":"","cat_border_hover":"","meta_bg":"","author_txt":"","author_txt_hover":"","date_txt":"","ex_txt":"","com_bg":"","com_txt":"","rev_txt":"","audio_btn_color":"","audio_time_color":"","audio_bar_color":"","audio_bar_curr_color":"","shadow_m_shadow_header":"","shadow_m_shadow_title":"Meta info shadow","shadow_m_shadow_size":"","shadow_m_shadow_offset_horizontal":"","shadow_m_shadow_offset_vertical":"","shadow_m_shadow_spread":"","shadow_m_shadow_color":"","btn_bg":"","btn_bg_hover":"","btn_txt":"","btn_txt_hover":"","btn_border":"","btn_border_hover":"","pag_text":"","pag_h_text":"","pag_bg":"","pag_h_bg":"","pag_border":"","pag_h_border":"","ajax_pagination_infinite_stop":"","css":"","td_column_number":1,"header_color":"","color_preset":"","border_top":"","class":"tdi_1","tdc_css_class":"tdi_1","tdc_css_class_style":"tdi_1_rand_style"}';block_tdi_1.td_column_number = "1";block_tdi_1.block_type = "td_flex_block_1";block_tdi_1.post_count = "6";block_tdi_1.found_posts = "6";block_tdi_1.header_color = "";block_tdi_1.ajax_pagination_infinite_stop = "";block_tdi_1.max_num_pages = "1";tdBlocksArray.push(block_tdi_1);விஷ்ணுபுரம் 2025 விருந்தினர்கள்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 1 – மு. குலசேகரன்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 2 – அரிசங்கர்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 3 – கே. நல்லதம்பி
விஷ்ணுபுரம் விருந்தினர் – 4 – ஜீவ கரிகாலன்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 5 – அழிசி ஶ்ரீனிவாசன்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 6 – குணா கந்தசாமி
ரமேஷ் – அஞ்சலிகள், கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
நீங்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் ரமேஷ பிரேதன் அவர்களுக்கு செய்த உதவிகள், அவருடைய இறுதி நாட்கள பற்றி எழுதிய அஞ்சலிக்குறிப்புகளைப் பார்த்தேன். ஓர் எழுத்தாளர் இங்கே எப்படி வாழ்ந்தார், எப்படி மறைந்தார் என்பதை உள்ளபடி பதிவு செய்திருக்கிறீர்கள். அது ஒரு வரலாற்று ஆவணம். எழுத்தாளன் இங்கே கைவிடப்பட்டதில்லை, அவனுடன் எழுத்தாளர்கள் உடன் இருந்தார்கள், அவர்கள் மட்டும்தான் இருந்தார்கள் என்பது பதிவு செய்யப்பட வேண்டும். அதை வருங்காலச் சந்ததியினருக்கு மட்டுமின்றி, எழுத்தாளர்களாக உருவாகிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையினருக்கும் உணர்ச்சிகரமாகவும் வலுவாகவும் கடத்தியாக வேண்டும்.
உங்களுடைய அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அதை எழுதி இருக்கிறீர்கள் என்று புரிகிறது. உங்களுக்கு அமைப்பு சார்ந்த உதவியவர்கள் அனைவருக்கும் நீங்களும் உங்கள் அமைப்பும் செய்தவை தெரிய வேண்டும் என்பதற்காக இதை எழுதியிருக்கிறீர்கள் என்று முதலில் நினைத்தேன். ஆனால் அனைவருக்கும் இது தெரிந்தாக வேண்டும் என்பதும், எதிர்காலத்திலும் எழுத்தாளர்கள் எழுத்தாளர்களுடன் இருக்கவேண்டும் என்பற்கான ஒரு அறிவிப்பாக இது அமைய வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது.
இங்கே முகநூலில் பல நூறு குரல்கள் ஒவ்வொரு நாளும் வம்புக்கென்று அலைந்து கொண்டிருக்கின்றன. எழுத்தாளர் நோயுற்றால், சாகக்கிடந்தால் இவர்களிடமிருந்து 10 காசு தேறாது. அவன் ஒரு நூல் எழுதினால், அல்லது விருது பெற்றால் ஒரு வார்த்தை எழுதமாட்டார்கள். ஆனால் அவன் வாழ்க்கையை வைத்துக்கொண்டு வம்பு வளர்ப்பதற்கும், செத்தால் அதன் வழியாக மேலும் வம்புகளை உருவாக்கிப் பதிவு தேற்றுவதற்கும் மட்டுமே இவர்கள் முன்வருவார்கள். இப்போதும் உங்களை வசைபாடி பதிவு போடும் சிலரை கவனித்தேன். ஒரு படைப்பாளியின் சாவின் போதுகூட வம்புகளுக்கும், வழக்கமான காழ்ப்புகளுக்கும் அப்பால் யோசிக்க முடியாத இவர்களெல்லாம் என்ன வகையான மனிதர்கள் என்ற திகைப்புதான் ஏற்பட்டது.
ரமேஷ் பிரேதனின் உடன் நின்றவர் அத்தனை பேருமே எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் என்பதைப் போல தமிழ் எழுத்து உலகம் பெருமைப்படத்தக்க செய்தி ஏதுமில்லை. அந்த பெருமிதம் உங்களுடைய குறிப்பிலும் இருந்தது. நன்றி.
அன்புடன்
எம்.பாஸ்கர்.
அன்புள்ள ஜே,
ரமேஷ் பிரேதன் அவர்களின் நினைவாக விருதுகள் அறிவிக்க இருப்பதாக குறிப்பிட்டீர்கள் .அந்த விருதுகளை முன்னரே உங்கள் தளத்தில் அறிவித்துவிட்டு, அதை விழா மேடையில் அளித்தால் அது வாசகர்களுக்கு அப்படைப்பாளிகளை முன்னரே அறியவும், அவர்களின் படைப்புகளை வாசித்துப் பார்க்கவும் வாய்ப்பாக அமையும். இப்போது சில விருதுகளில் இத்தகைய விருத்தாளர்களை அந்த மேடையில் ஒரு திடீர் அறிவிப்பாகச் சொல்வதென்பது ஒரு வழக்கமாக உள்ளது. அது ஒரு மேடைப் பரபரப்பை உருவாக்குமே ஒழிய இலக்கியத்திற்கு உகந்தது அல்ல. முன்னரே அவற்றை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
க.ரவிச்சந்திரன்
அன்புள்ள ஜெ,
ரமேஷ் பிரேதன் அவர்களின் இறுதி நாள் நிகழ்வு அவருடைய வாசகர்களாலும் நண்பர்களாலும் சிறப்புற நிகழ்த்தப்பட்டதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். நான் நாட்டுக்கு வெளியே தொலை தூரத்தில் இருக்கிறேன். ஆயினும் அங்கே ஒரு எழுத்தாளருடன் அவனுடைய சக எழுத்தாளர்கள் அத்தனை பேரும் திரண்டு வந்து நின்றார்கள் என்பது எனக்கு ஓர் இலக்கியவாசகராக மிகுந்த பெருமிதத்தை அளிக்கிறது. அவருக்கு அவருடைய நோய்க்காலத்தில் நீங்கள் உட்பட எழுத்தாளர்கள் பலர் சேர்ந்து உதவினார்கள் என்பதைப் போல பெருமிதம் ஊட்டும் எதுவும் இல்லை. ஓர் அமைப்பு நிதியளித்தது, அல்லது பொதுமக்கள் நிதி திரட்டி உதவினர் என்பதை விட இது பல படி மேலானது. அதை நீங்கள் வரலாற்று ஆவணமாக பதிவு செய்ததும் அவசியமானதே. இல்லையேல் ஓராண்டுகூட கடப்பதற்குள் எவரும் எதுவும் செய்யவில்லை என்ற வழக்கமான பாட்டை ஆரம்பித்திருப்பார்கள்.
உங்களுடைய அஞ்சலிக் குறிப்பில் உங்களுக்கும் அவருக்குமான அந்தரங்கமான உரையாடலின் பதிவு நெகிழ்ச்சியூட்டியது. ரமேஷ் நோயுற்று உதவிக்காக நம்பி இருந்தபோது கூட உங்களிடம் தனக்கு உதவும்படி கோரவில்லை. மாறாக ஆணை இடுகிறார், அதட்டிக் கேட்கிறார். உங்களுக்கிடையே இருந்த உரையாடலில் இருந்த கேலி, கிண்டல் எல்லாமே அழகானவை. கொடுப்பவர் எவ்வகையிலும் மேலே இல்லாத அந்த சமமான உறவும், அதிலுள்ள இயல்பான அணுக்கமும்தான் எல்லாவற்றையும் அழகாக ஆக்குகிறது. அவர் சாவைப்பற்றிப் பேசுகிறார். நீங்கள் அதை தவிர்த்து அவரை பகடி செய்துகொண்டே கடந்துசெல்கிறீர்கள்.
அவர் உங்களிடம் ‘விருதைக் குடுய்யா’ என்று கேட்ட அந்த உரிமைதான் நட்பின் மிக உச்சம் என்று நான் நினைக்கிறேன். அவர் உங்களை அழைத்து ‘யோவ் பணம் கொடு’ என்று கேட்டதை வாசிக்கும்போது எனக்கு கண்ணீர் மல்கியது. ஒருவர் இன்னொருவரிடம் தனக்கு முழு உரிமையும் உண்டு என்றும், பணம் அல்லது உதவி பெறுவது என்பது தன் உரிமை என்றும், அதைச் செய்வது மற்றவரின் கடமை என்றும் நினைக்கும்போதுதான் உண்மையான உறவு நிகழ்கிறது. இன்று உறவினரிடம்கூட அத்தகைய நெருக்கம் இல்லை. பெற்ற மகனிடம் பணம் கேட்கக்கூட ஆயிரம் முறை யோசிக்கவேண்டும். ஒரு கிண்டலுக்குக்கூட இடமிருக்காது. உங்கள் நட்பின் நெருக்கத்தை இன்றைய சுயநலத் தலைமுறை புரிந்துகொள்ளமுடியாது. அத்தகைய நட்புகளின் காலம் முடிந்துவிட்டது என்றுகூட தோன்றியது.
நான் உங்கள் கோரிக்கைப்படி ரமேஷுக்கு பணம் அனுப்பியுள்ளேன். 2023ல் ரமேஷை புதுச்சேரியில் சென்று பார்த்தேன். அவர் உங்களையும் கோணங்கியையும் ஒருமையில் பேசியது என்னுடன் வந்த நண்பருக்கு மரியாதைக் குறைவாக தோன்றியது. ஆனால் அந்த இயல்பான நட்பும் நெருக்கமும் எனக்கு பரவசமூட்டுவதாக இருந்தது. நீங்கள் எழுதிய அந்த நட்புப்பதிவுகள் ஒருவகையான காலப்பதிவுகள்.
மா.கிருஷ்ணராஜ்
யோகம், ஓராண்டுப்பயணம்- திரு
I was just wondering if there is any chance of conducting these classes in English in the future. It will help people like me.

அன்புள்ள ஜெ
இந்த டிசம்பர் வந்தால் நான் யோகம் செய்ய ஆரம்பித்து மூன்று வருடங்கள் முடிகிறது. திரும்பி பார்க்கையில் நீண்ட நாட்கள் போலவும் அதே சமயம் மிக குறுகியது போலவும் உள்ளது. உங்களுடனானா ஒரு பயணத்தில் நீங்கள் நான் தவறாக அமர்ந்திருப்பதை சுட்டிக்காட்டி, குருஜி சௌந்தரை அறிமுகப்படுத்தியதில் இருந்து ஒரு வருடம் கழித்து, முழுமையறிவு வழியாக ஒருங்கிணைத்த முதல் யோகா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு ஆரம்பித்தது (டிசம்பர் 2022)
யோகம், ஓராண்டுப்பயணம்- திருJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
