Jeyamohan's Blog, page 2
November 29, 2025
ஒழுக்கத்தின் நிறப்பட்டை
சதிர், பரதம்- ஒரு விவாதம்
அன்புள்ள ஜெ,
நீங்கள் உங்கள் கட்டுரையில் சொல்வது போல தேவதாசி மரபு என்பது கோயில்களைச் சார்ந்த ஒரு தாய்வழிச் சமூகம் என்றுதான் சொல்லவேண்டும். தமிழகத்திலே பலவகையான வாழ்க்கைமுறைகள் இருந்துள்ளன. தாய்வழிச் சமூகத்தின் அம்சங்கள் இங்குள்ள போர்ச்சாதிகளிடமும் உண்டு. ஆகவேதான் அங்கே விதவை மறுமணமும், விவாகரத்துக்குப் பின் மறுமணமும் இயல்பாக இருந்தது. நான் அத்தகைய போர்ச்சமூகத்தைச் சேர்ந்தவன். எங்கள் சமூக வழக்கத்தையெல்லாம் ஒழுக்கமின்மை என்று சொல்லும் ஒரு குரல் இப்போது உள்ளது. அந்தக் குரல் சைவமரபில் இருந்தது. காங்கிரஸில் இருந்தது. திராவிட இயக்க எழுத்தாளர்களும் அதைத்தான எழுதினார்கள். குறிப்பாக பாரதிதாசன் ஒருத்திக்கு ஒருவன் என்பதை மிகப்பெரிய அறமாகச் சொல்கிறார். தாய்வழிச்சமூக வாழ்க்கைமுறையை ஒழுக்கமற்றது என்று சொல்பவர்கள் இங்கே உள்ள சீரழிந்த தந்தைவழிச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதை தூக்கிப்பிடிப்பவர்கள். இங்குள்ள பெண்ணியவாதிகளும் அதைச் சொல்வது வருந்தத்தக்க மடத்தனம். ஆனால் பெண்களும் அதைச் சொல்வது வருத்தம் அளிப்பது.
க. சிவசமுத்திரம்.
அன்புள்ள சிவசமுத்திரம்,
உங்கள் கடிதத்தை தமிழாக்கம் செய்துள்ளேன். முக்கியமான கடிதம்.
நான் தாய்வழிச்சமூகத்தைச் சேர்ந்தவன். தந்தைவழிச் சமூகத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டினர் இன்றுகூட ஊடகங்களில் தொடர்ச்சியாக அச்சமூகத்தை இழிவுசெய்வதைக் காணலாம். அவர்களின் பார்வையில் தந்தைவழிச் சமூகத்திலுள்ள ஆண்களின் எல்லா பாலியல் நடத்தைகளும் சுரண்டல்களும் இயல்பானவை. தாய்வழிச்சமூகத்தின் செயல்பாடுகள் ஒழுக்கமற்றவை. (சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை நாவலிலேயே தாமுவின் குடும்பம் அவ்வாறு இழிவுசெய்யப்படுவதன் சித்திரம் உள்ளது). தமிழகத்தின் தந்தைவழிச் சமூகப் பெருங்குடும்பங்களில் ஆதிக்க ஆண்கள் குடும்பத்தின் பெண்கள் மேல் செலுத்தும் பாலியல் ஆதிக்கம் எல்லா எல்லைகளையும் மீறிய ஒன்று. அதை குறைந்த அளவில் இலக்கியம் பதிவுசெய்துள்ளது. (ஓர் உதாரணம் கிருத்திகாவின் வாசவேஸ்வரம்).
தமிழகம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நவீன வாழ்க்கைக்குள் வந்தது. அப்போதுதான் அது இதுதான் தமிழ் மரபு, இதுவே தமிழ் பண்பாடு, இது தமிழர் அறம் என்ன தன்னை சராசரிப்படுத்திக்கொண்டது. அப்போது உயர்குடிகளின் ஒழுக்கமும் பண்பாடும்தான் உயர்வானவை என்றும், இயல்பானவை என்றும், தமிழரின் ஒழுக்கமும் நாகரீகமும் அதுவே என்றும் வகுக்கப்பட்டது. பிராமணர், பிராமணரல்லா உயர்சாதியினர் (வேளாளர் , செட்டியார்கள் மற்றும் முதலியார்கள்) சேர்ந்து அதை அவர்களே முடிவுசெய்து அவர்களே ஏற்றுக்கொண்டு நிறுவிவிட்டார்கள்.
ஓர் உதாரணம் சொல்கிறேனே. தமிழில் ‘விதவை மறுமணம்’ என்பது ஒரு மாபெரும் சமூக சீர்திருத்தமாகச் சொல்லப்படுகிறது. அதற்காக சமூகசீர்திருத்த முன்னோடிகள் ஏராளமாகப் பேசியுமிருக்கிறார்கள். கைம்பெண் மறுவாழ்க்கைக்கான அமைப்புகள் உருவாக்கப்பட்டன. 1900 முதல் விதவை மறுமணம் இலக்கியத்தில் ஒரு முக்கியமான பேசுபொருள். தமிழிலக்கியத்தில் விதவை மறுமணம் பெரிய பேசுபொருள். மாயாவி எழுதிய புகழ்பெற்ற கண்கள் உறங்காவோ நாவலில் இளம்விதவையான ஒரு பெண் மருத்துவர் மறுமணம் செய்வதை ஊரே கொந்தளித்து எதிர்க்கிறது. ஆனால் உண்மையில் நம் கிராமங்கள் அப்படித்தான் இருந்தனவா?
விதவை நோன்பு என்பது ஒட்டுமொத்த தமிழ்ப்பண்பாட்டின் பிரச்சினை என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அது உண்மையா?
சாதிவாரியாகப் பார்த்தால் விதவை மறுமணம் அனுமதிக்கப்படாத சாதிகள் தமிழகத்தின் மக்கள்தொகையில் மிகச்சிறுபான்மையினரான உயர்சாதியினர் மட்டுமே. எஞ்சிய போர்ச்சாதிகள், குடியானவச் சாதிகள், அடித்தள மக்கள் அனைவரிலும் மிக இயல்பாக மறுமணம் செய்யும் வழக்கம் இருந்தது. அதற்கான சடங்குகள் இருந்தன. அது அவர்களின் வாழ்க்கைமுறை, அவர்களின் பாரம்பரியம். அப்படியென்றால் விதவைமறுமணம் என்பது எப்படி ‘தமிழகத்தின் சமூக–பண்பாட்டுப் பிரச்சினை’ ஆக மாறியது? எவர் மாற்றினார்கள்?
நாம் சினிமாக்களை பார்ப்போம். எத்தனை விதவைகள்! 1940 முதல் தமிழ் சினிமாவில் விதவைப்பெண்களின் துயரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. மாலைப்பொழுதின் மயக்கத்திலே என்ற பாட்டு இன்றும் விதவையின் குரலாக தமிழ் சினிமாவில் இருந்து ஒலிக்கிறது. விதவையைப் புனிதப்படுத்தும் எவ்வளவு படங்கள். விதவையாக இருப்பது ஒரு வகையான தவம் (கைம்மை நோன்பு) என்று காட்டும் எவ்வளவு படங்கள். இரண்டு சினிமாக்களை பார்ப்போம். நான் பாடும் பாடல் என்று ஒரு படம். கதைநாயகி விதவை. கணவன் கேட்டுக்கொண்டமையால் அவள் பொட்டும்பூவும் வைத்துக்கொள்கிறாள். அதைக்கண்டு அவள் கன்னி என நம்பி ஒருவன் அவளை விரும்பி திருமணம் செய்யலாமா என்று கேட்கிறான். அதெப்படி அப்படி என்னிடம் கேட்கலாம் என்று அவள் தீயால் நெற்றியைச் சுட்டுக்கொள்கிறாள்.
அந்தப்படம் வெளிவந்தபோது ஒரு விவாதம். அந்தப்படத்தை கண்டித்து சிவசங்கரி எழுதினார். ஏனென்றால் அவர் கணவன் மறைந்தபின்னரும் கணவரின் விருப்பப்படி பொட்டு வைத்துக்கொண்டிருந்தார். சென்னையில் விஜில் என்னும் அமைப்பு நடத்திய ஒரு கூட்டத்தில் கோவி மணிசேகரன் “கணவன் மறைந்த பின் பொட்டு வைத்துக்கொள்ளும் பெண்கள் பெண்களல்ல, பேய்கள்” என்று பேசினார். அரங்கில் ஒரே சச்சரவு. அந்த கூட்டத்தில்தான் நான் க.நா.சுவைச் சந்தித்தேன். வெளியே காபி சாப்பிடச் செல்லும்போது அவர் சங்கரநாராயணன் என்பவரிடம் “ஒழுக்கம் பற்றிப் பேசுற எந்தப் பேச்சுமே பாதுகாப்பின்மையிலே இருந்து வர்ரது. அது இலக்கியத்திலே இடமில்லை” என்றார்.
அதற்கும் பிறகுதான் சின்னத்தம்பி படம் வந்தது. அதில் ஒரு விதவைத்தாயை ‘சித்திரவதை’ செய்கிறார்கள். எப்படி? அவள் வெள்ளைச்சேலைமேல் வண்ணத்தை ஊற்றி! அந்த வண்ணம் அவளுக்கு தீ பட்டதுபோல எரிகிறது. அவள் துடிதுடிக்கிறாள். அதை தமிழ்மக்கள் பார்த்து ரசித்தனர். அவர்களில் முக்கால்வாசிப்பேரின் சாதிகளில் விதவைகள் மறுமணம் செய்யும் வழக்கம் இயல்பாக இருந்தது. எல்லா குடும்பங்களிலும் மறுமணம் செய்துகொண்டு வாழும் விதவைகள் இருந்தனர். அவர்கள் அந்தப் படங்களைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? அவர்களின் குழந்தைகள் என்ன நினைப்பார்கள்? எவருமே அதை சிந்திக்கவில்லை.
ஒரு சிறுபான்மை எப்படி ஒரு பண்பாட்டின் பெரும்பான்மையை இப்படி இழிவுசெய்ய முடிகிறது? அந்த இழிவுபடுத்தலை மதத்தின் பெயரால் பிராமணர்கள் செய்திருந்தால் கொந்தளித்திருப்பார்கள். தமிழ்ப்பண்பாட்டின் பெயரால் பிராமணரல்லாதவர்கள் செய்யும்போது ஏற்றுக்கொள்கிறார்கள். இதை நான் ஏற்கனவே எழுதியுள்ளேன். (யாருடைய சொத்து, கண்ணகியும் மாதவியும்) தமிழ்ப்பண்பாட்டின் ஒரே பெண் அடையாளமாக கண்ணகியை முன்வைப்பது என்பது இந்தியப் பண்பாட்டின் ஒரே பெண் அடையாளமாக சீதையை முன்வைப்பதுபோன்றது. இருவருமே ஆணாதிக்கச் சமூகத்தின் பலியாடுகள். அவர்களை தியாகிகள் ஆக்குவதன் வழியாக ஆணாதிக்க விழுமியங்கள் புனிதப்படுத்தப்பட்டு மையத்தில் நிறுவப்படுகின்றன. ஆனால் இங்கே முற்போக்கினரும், பெண்ணியரும்கூட அதைத்தான் செய்கிறார்கள்.
மேலே சொன்ன படங்கள் வெளிவந்தபின் இன்னொரு படம் வந்தது. சீமான் எழுதிய கதை அது. பசும்பொன். அதில் விதவை மறுமணம் இயல்பாக நிகழ்ந்து அந்த அன்னைக்கு இன்னொரு கணவனில் மகன்கள் இருப்பதுபோல இருந்தது. சீமான் அவர் அறிந்த இயல்பான சமூகக்கதையை எழுத, அச்சமூகத்தைச்சேர்ந்த பாரதிராஜா இயக்கினார். படம் பெருந்தோல்வி. காரணம் அந்த விதவை மறுமணத்தை மக்கள் ஏற்கவில்லை, அத்துடன் அதிலிருந்த வரண்ட நிலமும் மக்களுக்குப் பிடிக்கவில்லை. அதைப்பற்றி அக்காலத்தில் சீமான் ஒரு தனி உரையாடலில் சொன்னார். “தமிழ் சனங்க அவங்களோட பண்பாடு எதுவோ அதை நினைச்சு வெக்கப்படுற மாதிரி செஞ்சுட்டாங்க. அவங்களோட நெறம், அவங்களோட நெலம், அவங்களோட சாப்பாடு எல்லாமே தப்புன்னு ஆக்கிட்டாங்க” அது ஓர் உண்மை.
ஒரு பண்பாட்டுக்கு, ஒரு சமூகத்திற்கு என ஒட்டுமொத்தமாக ஓர் ஒழுக்கநெறி இருக்கமுடியாது. ஓர் உணவு, ஒரே தெய்வம் இருக்கமுடியாது என்பதைப்போலத்தான் அதுவும். ஒவ்வொரு சமூகக்குழுவும் தனக்கான வாழ்க்கைமுறையை உருவாக்கிக்கொண்டுள்ளது. ஒழுக்கம் அதன் ஒரு பகுதியே. தாய்வழிச்சமூகம் தனக்கான ஒழுக்கம் கொண்டது. தாய்வழிச்சமூகத்தின் பெண் எந்நிலையிலும் ஒரு பொய்யைச் சொல்லக்கூடாது, அதுதான் அவளுக்கான ஒழுக்கமீறல். ஆனால் பொய்சொல்லாமல் தந்தைவழிச் சமூகப்பெண் வாழவே முடியாது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நவீனயுகத்தின் தொடக்ககாலத்தில், நாம் நம் பண்பாடு இது என வகுத்துக்கொண்டபோது இதுவே நம் பொது ஒழுக்கம் என நூல்களைக்கொண்டும், உயர்சாதியினரின் வாழ்க்கையைக் கொண்டும் ஒரு முடிவை அடைந்திருக்கலாம். ஆனால் அந்த ஒற்றைப்படைத்தன்மையைக் களைந்து விரிவான பன்முகத்தன்மையை உருவாக்கிக்கொள்ளவேண்டிய காலம் இது.
சுரண்டல் அற்ற எந்த ஒழுக்கமும் நல்லொழுக்கமே. ஒழுக்கம் சார்ந்து இன்னொருவரை பழிப்பதும் மதிப்பிடுவதும் இழிவு. இன்னொரு வகை ஒழுக்கத்தை குறைத்துப் பார்ப்பது முழுமையான பண்பாட்டு அறிவின்மை மட்டுமே. எச்சமூகத்திலும் ஒழுக்கம் என்பது ஒரு பலநிறப் பட்டையாகவே இருக்கும். அந்த வானவில்லை புரிந்துகொள்ள முடியாதவர்கள் பண்பாடற்ற பழம்பிறவிகள்.
ஜெ
இளந்தமிழன்
மலேசிய எழுத்தாளர், கவிஞர், இலக்கிய ஆய்வாளர். கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள், ஒரு நாவல், ஒரு குறுநாவல் எழுதியுள்ளார்.
இளந்தமிழன் – தமிழ் விக்கி
இளந்தமிழன்
மலேசிய எழுத்தாளர், கவிஞர், இலக்கிய ஆய்வாளர். கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள், ஒரு நாவல், ஒரு குறுநாவல் எழுதியுள்ளார்.
இளந்தமிழன் – தமிழ் விக்கி
மதுமஞ்சரி திருமணம்- சிவராஜ்
இயற்கை வேளாண் அறிவியக்கவாதி நம்மாழ்வர் பங்கேற்பில், கல்லூரி மாணவர்கள் சிலரும் இணைந்து ஓர் ஆவணப்பட திரையிடலைக் கண்டோம். அந்தப்படம் எண்டோசல்ஃபான் நஞ்சின் தீங்கைப் பற்றியது. ஒரு பூச்சிக்கொல்லி மருந்து எவ்வாறு ஒட்டுமொத்தமாக ஒரு கிராமத்து வாழ்வைச் சிதைத்தது என்பதை அதில் காட்சிப்படுத்தியிருந்தார்கள். அந்த ஆவணப்படத்திற்காக நேர்காணல் தந்த அனைவருமே, எண்டோசல்ஃபான் பூச்சிக்கொல்லி நஞ்சால் இறந்து காற்றில் கலந்துவிட்டார்களென அப்படம் முடியும்போது காட்டப்பட்டது. அதைக்கண்டு உணர்வுகலங்கி அய்யா நம்மாழ்வார் அங்கிருந்த மாணவர்களிடம் குரல்நடுங்க அழுதபடி பேசிய காட்சி என் மனதுக்குள் அப்படியே ஈரங்காயாமல் இன்னமும் இருக்கிறது.
எண்டோசல்ஃபான் நஞ்சுக்கு எதிராக தமிழகம் முழதும் விழிப்புணர்வு பயணம் செல்வது என அன்றிரவே முடிவுசெய்தோம். ஒவ்வொரு நகரத்திலும் அதற்கான விழிப்புணர்வுக் கூட்டங்களை நிகழ்த்தினோம். எழுத்தாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் என வெவ்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்களைக்கொண்டு அக்கூட்டம் நிகழ்த்தப்பட்டது. அத்தகையதொரு நிகழ்வொன்று கோவையில் நடந்தது. எண்டோசல்ஃபான் நஞ்சுக்கு எதிராக களத்தில் போராடும் எத்தனையோ மனிதர்கள் அந்நிகழ்வுக்கு வந்திருந்தார்கள். அந்நிகழ்வில்தான் முதன்முதலாக நாங்கள் ‘நிகமானந்தா‘ எனும் மனிதரின் பெயரை அறிந்தோம்.
மாக்சிய அறிஞர் எஸ்.என். நாகராஜன்தான் அப்பெயரை அந்தக்கூட்டத்தில் குறிப்பிட்டுப் பேசினார். “தண்ணிய காப்பாத்தனும்னு ஒரு மனுசன் நூத்திப்பதினாலு நாளு உண்ணாவிரதமிருந்து அணுவணுவா துடிச்சு செத்திருக்கான்” என்று அவர் சொன்னபோது அங்கிருந்த எல்லோருமே கலங்கிப்போனோம். அன்றைய இரவுதான் நாங்கள் நிகமானந்தாவைப் பற்றித் தெரிந்துகொள்ளத் தொடங்கினோம்.
தண்ணீருக்காக உயிர்நீத்த நிகமானந்தாவின் இறப்பை அறிந்துகொண்ட அந்தநாள்தான் ஒரு பெருஞ்செயலுக்கான துவக்கம். இன்று, இக்கணம் யோசித்துப் பார்த்தால் அந்த செய்திதான் எங்களுக்குள் செயல்சார்ந்த தீவிரத்தன்மையை விதைத்திருக்கிறது எனத் தோன்றுகிறது.
கங்கை நதிக்கரையில் இயங்கும் தொழிற்சாலைகள் அந்நதியில் மாசுகலப்பதைத் தடுத்து நிறுத்தக்கோரி, 114 நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்தவர் இளந்துறவி நிகமானந்தா. தனது உயிரையே போராட்டக்கருவியாக மாற்றி, தண்ணீரைக் காக்கும் பெரும்பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கிறதென இச்சமூகத்திற்கு அறைகூவல் விடுத்த இறையுள்ளம். எங்கள் மானசீக ஆசானாக நாங்கள் கண்ணீர்மல்கி ஏற்றுக்கொண்ட நல்லான்மா. அத்தகைய நிகமானந்தாவின் கடைசி மூச்சுக்காற்றை அகத்திலேந்தி குக்கூ நிலத்திற்கு வந்தடைந்த மகள்தான் மதுமஞ்சரி.
கட்டிக்கலை வடிவமைப்புப் பொறியியல் படித்துவிட்டு, இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் பணிபுரிந்த மஞ்சரி, குக்கூ காட்டுப்பள்ளிக்கு முதன்முதலாக வந்தநாள் இன்னமும் ஈரங்குறையாமல் மனதிலிருக்கிறது. அன்றைய தினம் மஞ்சரியுடன் உரையாடும்போது, “மஞ்சரி… கிராமங்கிராமமா மொதல்ல நடந்துபோ… அப்பறம் சைக்கிள்ல போ… அப்பறம் டவுன்பஸ்ல போ… எல்லா பக்கமும் போய் பாத்திட்டு என்னமாதிரியான சூழல்ல உனக்கு வேல பாக்கனும்னு தோணுதோ, அதை செய்யலாம்” என்று சொன்னேன்.
அப்படியானதொரு பயணத்தில் ‘ஒரு மலையடிவார கிராமத்துல தண்ணிக்கு இவ்வளவு பற்றாக்குறை இருக்கே‘ என்ற அனுபவ உண்மையை உணர்ந்தவளாய் தண்ணீர் சார்ந்த செயல்பாடுகளில் சிறுகச்சிறுகத் தன்னை இணைத்துக்கொண்டாள் மஞ்சரி. ஆனால், இன்று யோசித்துப் பார்த்தால் அவளது செயற்தாக்கம் அளப்பரியது என்பதை உணரமுடிகிறது. மலைக்கிராம மக்களுடைய தாகத்தை… தாழ்த்தப்பட்ட மக்கள் தண்ணீருக்காக அலையும் துயரத்தை… விளிம்புநிலையினர் அடையும் நிராகரிப்பை என அவர்களின் விசும்பல் குரலை இந்தியச்சூழல் வரை கவனப்படுத்திக் கொண்டுசென்றதில் ‘ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்க‘த்தின் பெரும்பங்குண்டு. அதன் செயல்விசையாக இருந்து களம் இயங்கியவள் மஞ்சரி.
இதுவரையில், மலையுச்சி துவங்கி சமவெளி வரையென பல்வேறு பகுதிகளிலிருந்த 15 கிணறுகள் முழுமையாகத் தூர்வாரி புனரமைக்கப்பட்டு ஊர்மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிணற்றை அளவெடுத்து வரைபடமாக்குவது துவங்கி, அதன் ஆழச்சுனையில் கல்லகற்றி நீர்க்கண்ணைத் திறப்பதுவரை மஞ்சரி தாளாத தீவிரத்தோடு செயலாற்றியுள்ளாள்.
கிணற்றைத் தூர்வார உழைக்கும் மனிதர்களோடும், தன்னார்வ நண்பர்களோடும் இணைந்து பணிசெய்து, அடிப்படை வசதிகளற்ற மலைக்கிராமங்களில் மாதக்கணக்கில் தங்கியிருந்து ஒவ்வொரு கிணற்றையும் உளத்தவிப்போடு மீட்டிருக்கிறாள். நீர்ச்சுனையின் முதல்நீரை ஊரின் குலதெய்வ பாதத்திலூற்றி கண்ணீர்மல்கி கரங்கூப்பி நிற்பவள் மதுமஞ்சரி.
சில வருடங்களுக்கு முன்பு ஒரு செய்தியை அறிய நேர்ந்தபோது நாங்களனைவருமே அதிர்ச்சியுற்றோம். எங்கோ ஒரு கிராமத்தில் ஒரு அரசுப்பள்ளி சிறுமிக்கு உடல்நிலை மோசமாகிறது. மருத்துவமனை சென்று பரிசோதனை செய்துபார்க்கையில், அவளுடைய உடல்முழுதும் மலத்துகள்கள் எலும்புமஜ்ஜை வரை பரவியிருப்பது தெரியவருகிறது. அதன்பிறகுதான் எல்லோருக்கும் உண்மை தெரியவந்தது. அவள் பள்ளிக்கூடத்தில் கழிவறை இல்லாததால் மலத்தை அடக்கியடக்கி இரத்தத்தில் மலங்கலந்து செத்திருக்கிறாள் அச்சிறுமி.
இச்செய்தியைக் கேள்விப்பட்டு துயரடைந்த நாளிலிருந்தே நெல்லிவாசல் மலைக்கிராமத்தில் எப்படியாவது ஒரு கழிவறையைக் கட்டிவிட வேண்டும் என்பது செயற்தவிப்பாக நீண்டது. காலம் கனிந்து அந்தச்செயலை நிறைவேற்ற முடிவுசெய்தபோது, கழிவறையை வடிவமைத்துக் கட்டித்தர துணைநின்ற நல்மனம்தான் மைக்கேல். மலைக்கிராமத்திற்கேற்ற வகையில், அங்கு நிலமெழுந்த லாந்தர் விளக்குபோல அழகுற வடிவமைத்து பெருமழையிலும் உடனுழைத்து, செஞ்சாந்து நிறத்தில் இரு கழிவறைகளைக் கட்டிமுடித்தார் மைக்கேல். அரசுப்பள்ளி பெண் குழந்தைகளுக்கான கழிவறையாக அது இன்றுவரை பயன்பட்டுவருகிறது.
மைக்கேல்… கட்டிடக்கலை வடிவமைப்புப் பொறியியல் முடித்துவிட்டு இந்தியாவின் பல முன்னோடி கட்டிடக்கலை ஆசிரியர்களிடம் அருகமர்ந்து கற்றமனம். இத்தகைய ஒருவரை கழிவறை கட்டித்தரக் கேட்கிறோமே என யோசித்துபோது, அந்த எண்ணத்தை எல்லாம் போட்டுடைத்து தூசாக்கி களத்தில் இறங்கி ஒவ்வொரு வேலையையும் அர்ப்பணிப்பும் தீவிரமும் செய்நேர்த்தியும் கலந்து செய்துமுடித்தார் மைக்கேல். அதன்பிறகு, ஈரோடு சென்னிமலையில் நூற்பு தொழிற்கூடம், அதன் நெசவுப்பள்ளி, ஈரோடு லட்சுமண ஐயர் விடுதி என அனைத்தையும் மைக்கேலும் அவருடைய சகாக்களுமே நல்லபடியாக முடித்துக் கொடுத்தார்கள். மைக்கேல் குக்கூவின் அன்புமிகு ஆன்மாக்களில் ஒருவாரானார்.
மதுமஞ்சரியும் மைக்கேலும் இணையராக வாழ்வதென முடிவெடுத்திருக்கிறார்கள். இவர்களது இணையேற்பு நிகழ்வானது நாளை (30 நவம்பர் 2025) காலை 8 மணிக்கு, ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள எழுதியமரத்தையன் கோவில் வனத்தில் நிகழவுள்ளது. இணையேற்பு நிகழ்வாக மட்டுமேயல்லாமல், பழங்குடி குடும்பத்துக்கு கன்றுக்குட்டிகள் தருவது; அங்கு வசிக்கும் பெண்ணுக்கு தையல் எந்திரம் வழங்குவது; இணையேற்பு நிகழும் கோவில் சூழமைவைச்சுற்றி குறுங்காடு உருவாக்கும் செயலசைவுத் துவக்கமும் இவ்விழாவுடன் இணைவுகொள்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, பாரம்பரிய விதைகளைக் காப்பாற்றி மீட்பதற்கான ‘விதைக் காப்பகமும்‘ இந்நிகழ்வில் துவங்கப்படவுள்ளது. காப்பகத்தின் முதல் செயலசைவாக, ஒருவருக்கு தலா இரண்டு கிலோ வீதம் இருநூறு விவசாயிகளிடம் ஒப்படைக்க உள்ளோம். அவர்கள் அவ்விதையைப் பயிரிட்டு அறுவடை செய்தபிறகு மீண்டும் காப்பகத்திற்கு நான்கு கிலோ விதைநெல்லைக் கொடையாகத் திருப்பித் தருவார்கள். சுழற்சி அடிப்படையில் அடுத்தடுத்த ஆண்டுகள் ஊரிலுள்ள எல்லா விவசாயிகளுக்கும் விதையளிக்கும் தொடர்ச்சியும் இதிலடங்கும்.
வேர்நனைக்கும் நீரருளால்… இந்த இணையேற்பு உங்கள் எல்லோரின் அன்பையும் ஆசியையும் வேண்டிப்பெற்று நிகழவுள்ளது. அந்தியூர் மலைக்கிராமமான சோளகணை பகுதியில் வசிக்கும் கிராமவாசிகள் முதல்… இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் நண்பர்கள் வரை… எல்லோரும் இணையேற்பு நாளன்று திரளவுள்ளார்கள். மதுமஞ்சரி மைக்கேல்… இவர்களிருவரின் இணையேற்பு, இருதயம் நிறைந்து வாழ்த்தும் உங்களெல்லோரின் எண்ணத்து அன்பினால் இன்னும் சிறப்புற்று நிகழ்ந்திட, இங்கு இக்கணம் நன்றெழுக!
மலையாழும் தெய்வங்களே உயிரனைத்தையும் காத்திடுக!
மழையாகும் நீர்முகில்களே
ஊர்க்கிணற்றில் சுரந்தெழுக!
அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை!
Thanks & Regards,
Thannaram Noolveli
“செய்யக்கூடியது, செய்யக்கூடாதது மட்டுமல்ல
செய்தே ஆகவேண்டியதையும் சேர்த்ததுதான் தன்னறம்“
மதுமஞ்சரி திருமணம்- சிவராஜ்
இயற்கை வேளாண் அறிவியக்கவாதி நம்மாழ்வர் பங்கேற்பில், கல்லூரி மாணவர்கள் சிலரும் இணைந்து ஓர் ஆவணப்பட திரையிடலைக் கண்டோம். அந்தப்படம் எண்டோசல்ஃபான் நஞ்சின் தீங்கைப் பற்றியது. ஒரு பூச்சிக்கொல்லி மருந்து எவ்வாறு ஒட்டுமொத்தமாக ஒரு கிராமத்து வாழ்வைச் சிதைத்தது என்பதை அதில் காட்சிப்படுத்தியிருந்தார்கள். அந்த ஆவணப்படத்திற்காக நேர்காணல் தந்த அனைவருமே, எண்டோசல்ஃபான் பூச்சிக்கொல்லி நஞ்சால் இறந்து காற்றில் கலந்துவிட்டார்களென அப்படம் முடியும்போது காட்டப்பட்டது. அதைக்கண்டு உணர்வுகலங்கி அய்யா நம்மாழ்வார் அங்கிருந்த மாணவர்களிடம் குரல்நடுங்க அழுதபடி பேசிய காட்சி என் மனதுக்குள் அப்படியே ஈரங்காயாமல் இன்னமும் இருக்கிறது.
எண்டோசல்ஃபான் நஞ்சுக்கு எதிராக தமிழகம் முழதும் விழிப்புணர்வு பயணம் செல்வது என அன்றிரவே முடிவுசெய்தோம். ஒவ்வொரு நகரத்திலும் அதற்கான விழிப்புணர்வுக் கூட்டங்களை நிகழ்த்தினோம். எழுத்தாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் என வெவ்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்களைக்கொண்டு அக்கூட்டம் நிகழ்த்தப்பட்டது. அத்தகையதொரு நிகழ்வொன்று கோவையில் நடந்தது. எண்டோசல்ஃபான் நஞ்சுக்கு எதிராக களத்தில் போராடும் எத்தனையோ மனிதர்கள் அந்நிகழ்வுக்கு வந்திருந்தார்கள். அந்நிகழ்வில்தான் முதன்முதலாக நாங்கள் ‘நிகமானந்தா‘ எனும் மனிதரின் பெயரை அறிந்தோம்.
மாக்சிய அறிஞர் எஸ்.என். நாகராஜன்தான் அப்பெயரை அந்தக்கூட்டத்தில் குறிப்பிட்டுப் பேசினார். “தண்ணிய காப்பாத்தனும்னு ஒரு மனுசன் நூத்திப்பதினாலு நாளு உண்ணாவிரதமிருந்து அணுவணுவா துடிச்சு செத்திருக்கான்” என்று அவர் சொன்னபோது அங்கிருந்த எல்லோருமே கலங்கிப்போனோம். அன்றைய இரவுதான் நாங்கள் நிகமானந்தாவைப் பற்றித் தெரிந்துகொள்ளத் தொடங்கினோம்.
தண்ணீருக்காக உயிர்நீத்த நிகமானந்தாவின் இறப்பை அறிந்துகொண்ட அந்தநாள்தான் ஒரு பெருஞ்செயலுக்கான துவக்கம். இன்று, இக்கணம் யோசித்துப் பார்த்தால் அந்த செய்திதான் எங்களுக்குள் செயல்சார்ந்த தீவிரத்தன்மையை விதைத்திருக்கிறது எனத் தோன்றுகிறது.
கங்கை நதிக்கரையில் இயங்கும் தொழிற்சாலைகள் அந்நதியில் மாசுகலப்பதைத் தடுத்து நிறுத்தக்கோரி, 114 நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்தவர் இளந்துறவி நிகமானந்தா. தனது உயிரையே போராட்டக்கருவியாக மாற்றி, தண்ணீரைக் காக்கும் பெரும்பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கிறதென இச்சமூகத்திற்கு அறைகூவல் விடுத்த இறையுள்ளம். எங்கள் மானசீக ஆசானாக நாங்கள் கண்ணீர்மல்கி ஏற்றுக்கொண்ட நல்லான்மா. அத்தகைய நிகமானந்தாவின் கடைசி மூச்சுக்காற்றை அகத்திலேந்தி குக்கூ நிலத்திற்கு வந்தடைந்த மகள்தான் மதுமஞ்சரி.
கட்டிக்கலை வடிவமைப்புப் பொறியியல் படித்துவிட்டு, இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் பணிபுரிந்த மஞ்சரி, குக்கூ காட்டுப்பள்ளிக்கு முதன்முதலாக வந்தநாள் இன்னமும் ஈரங்குறையாமல் மனதிலிருக்கிறது. அன்றைய தினம் மஞ்சரியுடன் உரையாடும்போது, “மஞ்சரி… கிராமங்கிராமமா மொதல்ல நடந்துபோ… அப்பறம் சைக்கிள்ல போ… அப்பறம் டவுன்பஸ்ல போ… எல்லா பக்கமும் போய் பாத்திட்டு என்னமாதிரியான சூழல்ல உனக்கு வேல பாக்கனும்னு தோணுதோ, அதை செய்யலாம்” என்று சொன்னேன்.
அப்படியானதொரு பயணத்தில் ‘ஒரு மலையடிவார கிராமத்துல தண்ணிக்கு இவ்வளவு பற்றாக்குறை இருக்கே‘ என்ற அனுபவ உண்மையை உணர்ந்தவளாய் தண்ணீர் சார்ந்த செயல்பாடுகளில் சிறுகச்சிறுகத் தன்னை இணைத்துக்கொண்டாள் மஞ்சரி. ஆனால், இன்று யோசித்துப் பார்த்தால் அவளது செயற்தாக்கம் அளப்பரியது என்பதை உணரமுடிகிறது. மலைக்கிராம மக்களுடைய தாகத்தை… தாழ்த்தப்பட்ட மக்கள் தண்ணீருக்காக அலையும் துயரத்தை… விளிம்புநிலையினர் அடையும் நிராகரிப்பை என அவர்களின் விசும்பல் குரலை இந்தியச்சூழல் வரை கவனப்படுத்திக் கொண்டுசென்றதில் ‘ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்க‘த்தின் பெரும்பங்குண்டு. அதன் செயல்விசையாக இருந்து களம் இயங்கியவள் மஞ்சரி.
இதுவரையில், மலையுச்சி துவங்கி சமவெளி வரையென பல்வேறு பகுதிகளிலிருந்த 15 கிணறுகள் முழுமையாகத் தூர்வாரி புனரமைக்கப்பட்டு ஊர்மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிணற்றை அளவெடுத்து வரைபடமாக்குவது துவங்கி, அதன் ஆழச்சுனையில் கல்லகற்றி நீர்க்கண்ணைத் திறப்பதுவரை மஞ்சரி தாளாத தீவிரத்தோடு செயலாற்றியுள்ளாள்.
கிணற்றைத் தூர்வார உழைக்கும் மனிதர்களோடும், தன்னார்வ நண்பர்களோடும் இணைந்து பணிசெய்து, அடிப்படை வசதிகளற்ற மலைக்கிராமங்களில் மாதக்கணக்கில் தங்கியிருந்து ஒவ்வொரு கிணற்றையும் உளத்தவிப்போடு மீட்டிருக்கிறாள். நீர்ச்சுனையின் முதல்நீரை ஊரின் குலதெய்வ பாதத்திலூற்றி கண்ணீர்மல்கி கரங்கூப்பி நிற்பவள் மதுமஞ்சரி.
சில வருடங்களுக்கு முன்பு ஒரு செய்தியை அறிய நேர்ந்தபோது நாங்களனைவருமே அதிர்ச்சியுற்றோம். எங்கோ ஒரு கிராமத்தில் ஒரு அரசுப்பள்ளி சிறுமிக்கு உடல்நிலை மோசமாகிறது. மருத்துவமனை சென்று பரிசோதனை செய்துபார்க்கையில், அவளுடைய உடல்முழுதும் மலத்துகள்கள் எலும்புமஜ்ஜை வரை பரவியிருப்பது தெரியவருகிறது. அதன்பிறகுதான் எல்லோருக்கும் உண்மை தெரியவந்தது. அவள் பள்ளிக்கூடத்தில் கழிவறை இல்லாததால் மலத்தை அடக்கியடக்கி இரத்தத்தில் மலங்கலந்து செத்திருக்கிறாள் அச்சிறுமி.
இச்செய்தியைக் கேள்விப்பட்டு துயரடைந்த நாளிலிருந்தே நெல்லிவாசல் மலைக்கிராமத்தில் எப்படியாவது ஒரு கழிவறையைக் கட்டிவிட வேண்டும் என்பது செயற்தவிப்பாக நீண்டது. காலம் கனிந்து அந்தச்செயலை நிறைவேற்ற முடிவுசெய்தபோது, கழிவறையை வடிவமைத்துக் கட்டித்தர துணைநின்ற நல்மனம்தான் மைக்கேல். மலைக்கிராமத்திற்கேற்ற வகையில், அங்கு நிலமெழுந்த லாந்தர் விளக்குபோல அழகுற வடிவமைத்து பெருமழையிலும் உடனுழைத்து, செஞ்சாந்து நிறத்தில் இரு கழிவறைகளைக் கட்டிமுடித்தார் மைக்கேல். அரசுப்பள்ளி பெண் குழந்தைகளுக்கான கழிவறையாக அது இன்றுவரை பயன்பட்டுவருகிறது.
மைக்கேல்… கட்டிடக்கலை வடிவமைப்புப் பொறியியல் முடித்துவிட்டு இந்தியாவின் பல முன்னோடி கட்டிடக்கலை ஆசிரியர்களிடம் அருகமர்ந்து கற்றமனம். இத்தகைய ஒருவரை கழிவறை கட்டித்தரக் கேட்கிறோமே என யோசித்துபோது, அந்த எண்ணத்தை எல்லாம் போட்டுடைத்து தூசாக்கி களத்தில் இறங்கி ஒவ்வொரு வேலையையும் அர்ப்பணிப்பும் தீவிரமும் செய்நேர்த்தியும் கலந்து செய்துமுடித்தார் மைக்கேல். அதன்பிறகு, ஈரோடு சென்னிமலையில் நூற்பு தொழிற்கூடம், அதன் நெசவுப்பள்ளி, ஈரோடு லட்சுமண ஐயர் விடுதி என அனைத்தையும் மைக்கேலும் அவருடைய சகாக்களுமே நல்லபடியாக முடித்துக் கொடுத்தார்கள். மைக்கேல் குக்கூவின் அன்புமிகு ஆன்மாக்களில் ஒருவாரானார்.
மதுமஞ்சரியும் மைக்கேலும் இணையராக வாழ்வதென முடிவெடுத்திருக்கிறார்கள். இவர்களது இணையேற்பு நிகழ்வானது நாளை (30 நவம்பர் 2025) காலை 8 மணிக்கு, ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள எழுதியமரத்தையன் கோவில் வனத்தில் நிகழவுள்ளது. இணையேற்பு நிகழ்வாக மட்டுமேயல்லாமல், பழங்குடி குடும்பத்துக்கு கன்றுக்குட்டிகள் தருவது; அங்கு வசிக்கும் பெண்ணுக்கு தையல் எந்திரம் வழங்குவது; இணையேற்பு நிகழும் கோவில் சூழமைவைச்சுற்றி குறுங்காடு உருவாக்கும் செயலசைவுத் துவக்கமும் இவ்விழாவுடன் இணைவுகொள்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, பாரம்பரிய விதைகளைக் காப்பாற்றி மீட்பதற்கான ‘விதைக் காப்பகமும்‘ இந்நிகழ்வில் துவங்கப்படவுள்ளது. காப்பகத்தின் முதல் செயலசைவாக, ஒருவருக்கு தலா இரண்டு கிலோ வீதம் இருநூறு விவசாயிகளிடம் ஒப்படைக்க உள்ளோம். அவர்கள் அவ்விதையைப் பயிரிட்டு அறுவடை செய்தபிறகு மீண்டும் காப்பகத்திற்கு நான்கு கிலோ விதைநெல்லைக் கொடையாகத் திருப்பித் தருவார்கள். சுழற்சி அடிப்படையில் அடுத்தடுத்த ஆண்டுகள் ஊரிலுள்ள எல்லா விவசாயிகளுக்கும் விதையளிக்கும் தொடர்ச்சியும் இதிலடங்கும்.
வேர்நனைக்கும் நீரருளால்… இந்த இணையேற்பு உங்கள் எல்லோரின் அன்பையும் ஆசியையும் வேண்டிப்பெற்று நிகழவுள்ளது. அந்தியூர் மலைக்கிராமமான சோளகணை பகுதியில் வசிக்கும் கிராமவாசிகள் முதல்… இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் நண்பர்கள் வரை… எல்லோரும் இணையேற்பு நாளன்று திரளவுள்ளார்கள். மதுமஞ்சரி மைக்கேல்… இவர்களிருவரின் இணையேற்பு, இருதயம் நிறைந்து வாழ்த்தும் உங்களெல்லோரின் எண்ணத்து அன்பினால் இன்னும் சிறப்புற்று நிகழ்ந்திட, இங்கு இக்கணம் நன்றெழுக!
மலையாழும் தெய்வங்களே உயிரனைத்தையும் காத்திடுக!
மழையாகும் நீர்முகில்களே
ஊர்க்கிணற்றில் சுரந்தெழுக!
அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை!
Thanks & Regards,
Thannaram Noolveli
“செய்யக்கூடியது, செய்யக்கூடாதது மட்டுமல்ல
செய்தே ஆகவேண்டியதையும் சேர்த்ததுதான் தன்னறம்“
கடவுள் உண்டா?
I watched your video about encouraging our children to read serious books. I have tried many ways to motivate my children to read. I bought numerous comic books and simple children’s books, hoping to entice them with gifts, but it was a total failure.
How can we lure our children toward reading?உங்களுடைய காணொளிகளிலே நீங்கள் கூறியிருக்கும் கடவுளைப் பற்றிய கருத்துக்களை பார்த்தேன். கடவுளை அவ்வாறு விவாதித்து அறிந்து கொள்ள முடியாது. எங்கே விவாதங்கள் முடிகினறனவோஅங்குதான் கடவுள் சார்ந்த உணர்வு தொடங்குகிறது.
கடவுள் உண்டா?கடவுள் உண்டா?
I watched your video about encouraging our children to read serious books. I have tried many ways to motivate my children to read. I bought numerous comic books and simple children’s books, hoping to entice them with gifts, but it was a total failure.
How can we lure our children toward reading?உங்களுடைய காணொளிகளிலே நீங்கள் கூறியிருக்கும் கடவுளைப் பற்றிய கருத்துக்களை பார்த்தேன். கடவுளை அவ்வாறு விவாதித்து அறிந்து கொள்ள முடியாது. எங்கே விவாதங்கள் முடிகினறனவோஅங்குதான் கடவுள் சார்ந்த உணர்வு தொடங்குகிறது.
கடவுள் உண்டா?November 28, 2025
சதிர், பரதம்- ஒரு விவாதம்
அன்புள்ள ஜெ,
ஒரு தனிப்பட்ட சந்தேகம். கீழ்க்கண்ட விவாதத்தைக் காணவும்
செந்தில் ஜெகந்நாதன் குறிப்பு
‘நடன அரசி‘ என ஜவஹர்லால் நேருவால் புகழப்பட்ட, மயிலாடுதுறையில் பிறந்த நடனக் கலைஞர் பத்மபூஷன் குமாரி கமலா அவர்கள் காலமானார். சதிர் ஆட்டம், பரதநாட்டியமாக மறு உரு அடைந்து பொது மேடைகளில் பாரம்பரிய கலையாக அங்கீகாரம் பெறுவதற்கு முக்கிய இணைப்பாக இருந்தவர். இன்று மேடைகளில் அரங்கேறும் பரதநாட்டிய பாணியை வரையறுத்ததில் மிக முக்கியமான முன்னோடி குமாரி கமலா அவர்கள்.
அஞ்சலிகள்.
செந்தில் ஜெகந்நாதன்
செந்தில் ஜெகன்னாதன்ஜெயக்குமார் பரத்வாஜ் பதில்
மறைந்த நடனக் கலைஞர் கமலா அவர்களுக்கு எழுதப்பட்ட அஞ்சலி குறிப்பு முகநூலில் இருந்து. எழுதியவர் இலக்கியவாதி என்று அறிகிறேன் அவருடைய நூல் எதுவும் நான் வாசித்ததில்லை. தகவல் பிழையை சரி செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த குறிப்பு. சதிர் என்பது தான் பரதநாட்டியமாக மாறியது என்று தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் எழுதப்படுகிறது. அது குறித்து. பண்டைய தமிழ் இலக்கியங்களில், கூத்து என்ற சொல்லே நடனத்திற்கு சொல்லப்பட்டது. பிற்காலத்தில் சொக்கம் என்ற வார்த்தையும் பயன்படுத்தப்படுகிறது. சொக்கம் என்பது சுத்த நிருத்தம், அது 108 கரணங்களை உடையது என்று விளக்குகிறார்கள். பின்னாளில் பரதம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. சொக்கம் என்பது ஸ்வச்சம் என்ற பாகத சொல்லின் திரிபு.
சிதம்பரம் திருக்கோயிலில் பன்னிரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டில் கோப்பெரும் சிங்கன் தன்னை பரதம் வல்ல பெருமான் என்று குறிப்பிட்டு கொள்கிறான். பரத சேனாபதீயம், மகாபரத சூடாமணி போன்ற இடைக்காலத்தில் எழுதப்பட்ட நூல்களை நினைவுபடுத்திக் கொள்ளலாம். அப்படியானால் சதிர் என்ற சொல் எங்கே வருகிறது. நம்மாழ்வாரின் திருவாய் மொழியிலும், தனிப்பாடல் திரட்டிலும் சதிர் என்ற சொல் அழகு, மேன்மை, பெருமை இவற்றை குறிப்பதாக வருகிறது. நடனத்தைக் குறிப்பதற்காக சதிர் என்ற சொல் பழைய இலக்கியங்களில் பயன்படுத்தப்படவே இல்லை.
அப்படியானால் நடனத்தை குறிப்பதாக சதிர் எங்கிருந்து வந்தது? சதிர் என்ற சொல் சதர என்ற பார்சி சொல்லை ஒட்டி பிறந்தது. சதர என்ற சொல்லுக்கு பார்சி மொழியில் அவை அல்லது அரசவை என்று பொருள். உருது மொழியிலும் அதே பொருளில் கையாளப்பட்டது. (சதுர நாச் என்ற ஹிந்தி பாடலை நினைவு படுத்திக் கொள்ளலாம்.) அவையில் ஆடக்கூடியதை சதர நாச் என்றும் அது விஜயநகர அரசவையில் வரும் பொழுது சதர நாச் என்றது போய் சதிராட்டம் என்று ஆனது. பரதநாட்டியம் என்ற சொல் பழைய சொல்தான். சதிர் என்பதுதான் புதிய சொல். கோவில்களில் ஆடப்பட்ட நாட்டியம் சதிர் என்ற வகையில் வராது. அரசவையில் ஆடப்பட்டது அதுவும் 16ஆம் நூற்றாண்டு சொல்.
வரலாற்றை எழுதும் பொழுது மிக கவனமாக கையாள வேண்டும் என்று நான் மீண்டும் நினைவு படுத்திக்கொள்கிறேன்.
ஜெயக்குமார் பரத்வாஜ்
jeyakumarஇந்த விவாதத்தை இன்று கவனிக்க நேர்ந்தது. செந்தில் ஜெகன்நாதன் ஃபேஸ்புக்கில் இட்ட பதிவுக்கு பதிலாக ஜெயக்குமார் பரத்வாஜ் ஆலையக்கலை வாட்சாப் குழுமத்தில் இப்பதிவை எழுதியிருந்தார்.
இதை வாசித்த போது ஒரு சந்தேகம் எழுகிறது. செந்தில் ஜெகன்நாதன், ‘சதிர் ஆட்டம், பரதநாட்டியமாக மறு உரு அடைந்து பொது மேடைகளில் பாரம்பரிய கலையாக அங்கீகாரம் பெற்றது’ என்கிறார். அவர் வாக்கியத்தை இவ்வாறு புரிந்துகொள்கிறேன்: ‘அரசவைகளிலும் தனியார் புரவலர்களின் சபைகளிலும் ஆடப்பட்டுக்கொண்டிருந்த நடனமானது மறு உரு அடைந்து பொது மேடைகளில் பாரம்பரிய கலையாக அங்கீகாரம் பெற்றது‘. இந்த வாக்கியத்தில் அரசவைகளில் ஆடப்பட்ட நடனத்தைச் சுட்ட சதிர் என்ற சொல்லையும், பொது மேடையில் பாரம்பரியம் அங்கீகாரம் பெற்ற நடனத்தைச் சுட்ட பரதநாட்டியம் என்ற சொல்லையும் ஆசிரியர் பயன்படுத்துவதாக எடுத்துக்கொண்டேன்.
வரலாற்றுரீதியாக அது உண்மையும் கூட. பரதநாட்டியம், பரதம் என்ற சொல் வெகுகாலமாக பயன்பாட்டில் இருந்த சொல் தான். நடனத்தைக் குறிக்க சதிர் என்றச் சொல் உருவானது பின்னாளில் தான். அதில் மறுப்பு இல்லை. ஆனால் இருபதாம் நூற்றாண்டைப் பொருத்தவரை சதிர் என்ற சொல்லும் பரதநாட்டியம் என்ற சொல்லும் இரு வெவ்வேறு விஷயங்களை குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டன. கலாக்ஷேத்ராவில் ஆடப்பட்ட நாட்டியம் சதிர் என்ற சொல்லால் அடையாளப்படுத்தப்படவில்லை. பரதநாட்டியம் என்ற சொல்லை மட்டும் தான் அவர்கள் பயன்படுத்தினார்கள் — அதுவரை நடந்துவந்த அரசவைக்கச்சேரிகளிலிருந்து தங்கள் நாட்டியப்பாணியை வேறுபடுத்திக்கொள்ள. சதிரின் பகுதிகளை அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். சதிர் காலத்தில் அழிந்தது. மறுஉருவாக்கம் செய்யப்பட்டு பரதநாட்டியம் என்ற பழைய சொல்லால் மீஅடையாளப்படுத்தப்பட்ட நவீன வடிவமே எஞ்சியது. இந்த வித்தியாசத்தைக் குறிக்கவே இச்சொற்களை இவ்வகையில் செந்தில் ஜெகன்நாதன் கையாண்டார் என்று எடுத்துக்கொண்டேன்.
ஜெயக்குமாரின் சொல் ஆய்வு முறை விவாதத்தின் அர்த்தத்தளத்தை திசைத்திருபுவதாக உள்ளது என்று நினைக்கிறேன். பரதநாட்டியம் என்ற சொல் பழமையானது, சதிர் புதிய சொல், ஆகவே சதிர் பரதமாக உருமாறியிருக்க முடியாது என்று அவர் கூறுகிறார். ஆனால் சொல் என்பது சொல் மட்டுமல்ல அல்லவா? முன்னரே பயனில் இருந்த சொல் புதிய அர்த்தங்களை பெற்றுக்கொண்டு மறுகண்டடைவாகும்போது அதன் மாறுபாடுகளும் புதுமைகளுமே அச்சொல்லின் த்வனியென்று முதன்மையாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் அல்லவா? விவேகாநந்தர் உரைத்ததும் வேதாந்தம், சங்கரர் உரைத்ததும் வேதாந்தம். ஆனால் விவேகாநந்தரின் வேதாந்தம் என்னும்போது அதன் நவீனத்தன்மையும் உலகளாவியத்தன்மையும் தான் முதல் அர்த்தங்களாக எழுகின்றன. இவ்வாறு தானே ருக்மிணி தேவியின் காலத்துக்குப் பின்னால் எழுந்த பரதநாட்டியம் என்ற சொல்லையும் பொருள் கொள்ள வேண்டும்?
என்னுடைய சந்தேகங்கள் இரண்டு.
முதல் சந்தேகம் வாக்கியங்களை அர்த்தப்படுத்திக்கொள்வதைப் பற்றியது, வாக்கியங்களை precise-ஆக உருவாக்குவதைப் பற்றியதும் கூட. ‘சதிர் ஆட்டம், பரத நாட்டியமாக மறு உரு அடைந்தது‘ என்ற வாக்கியம் அதன் அர்த்தத்தளத்தில் சரியானதா? ஆசிரியர் உத்தேசித்த அர்த்தத்தில் அந்த வாக்கியத்தை அமைக்க வேறு வழி உள்ளதா?
இரண்டாவது, விவாத முறை சார்ந்தது, இவ்வகை விவாதங்களில் இப்படிப்பட்ட சொல் ஆய்வுகளின் பங்கு என்ன? இவை நடைமுறை அர்த்தங்களை கணக்கில எடுத்துக்கொள்ள மறுப்பது ஏன்?
இந்த விவாதத்தில் என்னுடைய ஆர்வம் சொற்றொடர்களை அர்த்தப்படுத்திக்கொள்வதில் உள்ள சிக்கல்கள் மற்றும் விவாத முறை சார்ந்தது மட்டுமே. ஆகவே தான் உங்களுக்கு எழுதுகிறேன். இந்தக் குறிப்பிட்டத் விவாதத்தலைப்பில் நேரம் செலவிட வேண்டாம் என்று நினைக்கிறேன். ஆகவே பொதுவில் பதிவு எழுதவில்லை. எனவே இக்கடிதத்தை வெளியிட நேர்ந்தால் என் பெயர் வேண்டாம்.
எஸ்
அன்புள்ள எஸ்,
இந்த விஷயத்தில் ‘திட்டவட்டமாக’ எதையாவது சொல்லும் ஆய்வுத்தகுதி எனக்கில்லை. என் தகுதி என்பது விஷ்ணுபுரம் நாவலை எழுதும்போது நான் நடனக்கலை பற்றி செய்த சில ஆய்வுகள்தான். என் குறைவான புரிதலைக்கொண்டு பார்த்தாலே ஜெயக்குமார் மிகச்சரியாகவே சொல்கிறார். அவர்தான் இதைச் சொல்ல தகுதியானவர்.
நீங்கள் சொல்வதுபோல இது எளிமையான சொல் ஆய்வு அல்ல. சதிர் என்ற சொல்லை பரதநாட்டியமாக ஆக்கியது அல்ல. செந்தில் ஜெகந்நாதன் சொல்லுவது இங்கே வழக்கமாக பேசப்படும் ஒரு கருத்து. அதாவது சதிர் என்பது வேறு. அதை இன்றிருக்கும் பரதநாட்டியமாக ஆக்கிவிட்டார்கள். சதிர் என்ற ஆட்டத்தை காமச்சுவை கொண்டது, ஒருவகையான ‘மக்கள் கலை’ என வரையறை செய்தார்கள். பரதநாட்டியம் என்பது சம்ஸ்கிருதமயமாக்கமும் இந்து பக்திமயமாக்கமும் செய்யப்பட்டு திரிக்கப்பட்ட கலை என்று பொருள்கொண்டார்கள். ஆகவே மரபார்ந்த ஒரு கலை அழிக்கப்பட்டுவிட்டது, அதன் திரிபடைந்த வடிவமே இன்றிருப்பது என்கிறார்கள். மேம்படுத்தல் என்ற பெயரில் அசல் இல்லாமலாக்கப்பட்டது என்கிறார்கள்.இது திரும்பத் திரும்பச் சொல்லி நிலைநாட்டப்படுகிறது. ஜெயக்குமார் பதில் சொல்வது அதற்குத்தான். ருக்மிணிதேவி அருண்டேலுக்கு எதிரான ஒரு பிரச்சாரமாக இது செய்யப்பட்டது. அதை ருக்மிணிதேவி தன் பணியைச் செய்ய தொடங்கிய காலகட்டத்திலேயே சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.
சதிர்தான் பரதமாகியது என்பதை நம் பொதுமனநிலை உடனடியாக ஏற்றுக்கொண்டது. அதற்கான முதன்மைக் காரணம் சாதிதான். ஒன்று, அந்த பேச்சு பிராமண சாதிக்கு எதிரானதாக இருந்தது. இரண்டு, ருக்மிணிதேவி என்னும் பெரிய ஆளுமைக்கும், அவர் உருவாக்கிய கலாக்ஷேத்ரா என்னும் அமைப்புக்கும் எதிரானதாக இருந்தது. தமிழ்ச்சூழலில் இதெல்லாம் ஆய்வின் அடிப்படையில் அல்ல, சாதிநிலைபாடுகளின் அடிப்படையிலேயே முடிவாகின்றன.
உண்மையில் இந்த விஷயம் இத்தனை எளிதாக இருக்க வாய்ப்பே இல்லை. எந்த சமூகமாற்றமும், கலையுருமாற்றமும் அப்படி எளிதாக நிகழ்ந்துவிடாது. அதற்கு முன்னோக்கிய நகர்வும் பின்னோக்கிய நகர்வுமாக சிக்கலான ஒரு வளர்சிதைமாற்றமே இருக்கும். எளிமைப்படுத்திக்கொண்டால் அரசியல்சரிநிலைகளை ஆக்ரோஷமாகப் பேசமுடியும். அங்கே எளிய அரசியலாளகள் வந்து காழ்ப்பைக்கொட்ட முடியும். அதற்குத்தான் இன்றைய சமூகஊடகக் காலகட்டத்தில் ஏற்பும் மிகுதி.
என் புரிதலை இப்படிச் சொல்கிறேன். இது விரிவான ஒரு வரலாற்றுச் சித்திரம். இதையே நான் விஷ்ணுபுரம் நாவலில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன்.
*
இந்தியாவெங்கும் பல்வேறு வகையான நடனங்கள் இருந்திருக்கலாம். ஏனென்றால் நடனம் ஓர் அடிப்படைக் கலை. நடனம் அடிப்படையில் பழங்குடி, நாட்டார்கலையாக இருந்திருக்கிறது. இன்றும் பலநூறு நாட்டார் நடனவடிவங்கள் உள்ளன. ஆனால் அது செவ்வியல் நடனமாக திரண்டு, பல ஆயிரமாண்டுகளாக இருந்திருக்கிறது என்பதை நாம் புராணங்களில் இருந்தே அறிகிறோம். மகாபாரதமே செவ்வியல் நடனம் பற்றிய செய்திகளை அளிக்கிறது.
செவ்வியலாக்கம் எப்படி நிகழ்கிறது? பல்வேறு பழங்குடி- நாட்டார் கலைகளுக்கு பொதுவான இலக்கணம் உருவாக்கப்படுகிறது. (லக்ஷண சாஸ்திரம்). இலக்கணம் உருவானபின் அதற்கான பயிற்சி முறைகள் உருவாகின்றன. அந்தக்கலையை நிகழ்த்தும் சிறப்புக் கலைஞர்கள் உருவாகி வருகின்றனர். அவற்றை ரசிக்கும் தேர்ச்சிகொண்ட ரசிகர்கள் உருவாகி வருகின்றனர்.
அந்தச் செவ்வியலாக்கம் மகாபாரதக் காலத்திற்கு முன்னரே நிகழ்ந்துவிட்டது. நடனக்கலை உபவேதங்களில் ஒன்றாக கருதப்பட்டது. அந்த மரபில் வந்த நடனக்கலை இலக்கண ஆசிரியர்தான் பரதமுனிவர். அவர் உருவாக்கிய நாட்டிய சாஸ்திரம் இன்றும் முழுமையாகக் கிடைக்கும் நூல். பிற்காலத்தைய நடனம்- நிகழ்த்துகலைகள் அனைத்துக்கும் அதுவே அடிப்படை நூல். அதன் காலம் பொமு 1 முதல் பொயு 2 வரையிலான காலகட்டம் என ஊகிக்கப்படுகிறது.
பரத நாட்டிய சாஸ்திரம் நடனக்கலையை இரண்டாகப் பிரிக்கிறது. தாண்டவம், லாஸ்யம். லாஸ்யம் என்பது மெல்லசைவுகள் கொண்ட நடனம். பெரும்பாலும் பெண்கள் ஆடுவது. தாண்டவம் வல்லசைவுகளாலானது, ஆண்களுக்குரியது. பரதமுனிவரின் இலக்கணப்படி அமைந்த எல்லா நடனங்களையுமே பரதநாட்டியம் என்று சொல்லும் வழக்கம் உண்டு. குறிப்பாக லாஸ்ய நடனமெல்லாம் பரதநாட்டியமே.
தமிழகத்தில் தொல்காலம் முதலே நடனம் கூத்து என்று சொல்லப்பட்டுவந்தது. பலவகையான கூத்துக்களை சிலப்பதிகாரம் சொல்கிறது. சிலப்பதிகாரம் சொல்லும் நடனம் என்பது மிகமிக நுணுக்கங்கள் கூடிய செவ்வியல் கலைதான் என்பதை அது சொல்லும் இலக்கணங்கள் வழியாகக் காணலாம். கூத்தின் இலக்கணத்தை வகுத்துரைத்த கூத்தநூல் என்னும் இலக்கண நூலைப் பற்றி பிற்காலச் சோழர் காலகட்டத்தை (பொயு 12 ஆம் நூற்றாண்டு) சேர்ந்த தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியரும், சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரும் குறிப்பிடுகிறார்கள். சாத்தனார் எழுதியதாகச் சொல்லப்படும் இந்நூல் கிடைக்கவில்லை.
(கூத்தநூல் என்ற பேரில் ஒரு போலிநூல் உள்ளது. இது ச.து.சு.யோகியார் கண்டடைந்து பதிப்பித்ததாகக் கூறப்பட்டது. ஆனால் இது அவரால் எழுதப்பட்ட போலிநூல் என நிறுவப்பட்டுள்ளது)
தமிழுக்கே உரிய ஒரு கூத்துமரபு உண்டு, அதற்கான இலக்கணநூல் இருந்திருக்கலாம். கூத்தநூல் அந்த இலக்கணத்தை முன்வைத்த நூலாக இருந்திருக்கலாம். கூத்தநூல் பரதமுனிவரின் நாட்டிய சாஸ்திரத்தின் வழிநூலாக இருக்கலாம் என்ற கூற்றும் உண்டு. கூத்தநூலின் மேற்கோள்களாக வெவ்வேறு பிற்காலநூல்களில் குறிப்பிடப்படும் எல்லா இலக்கணங்களும் பரதநூலில் உள்ளவையே. அந்நூல் கிடைக்காத நிலையில் எதையும் அறுதியாகச் சொல்லிவிட முடியாது.
தமிழகத்தில் சங்ககாலம் முதலே கலைகள், நடனம் ஆகியவற்றையே வாழ்வெனக் கொண்ட பரத்தையர் குலம் இருந்துள்ளது. பரத்தையரை பிற்காலத்தைய ஐரோப்பிய ஒழுக்கவியலின் கண்கள் வழியாகப் பார்த்து விபச்சாரிகள் என முத்திரையடிப்பதை தமிழ்ப்பண்பாட்டு ஆய்வாளர்களின் தொடக்கநிலையினர் செய்துள்ளனர். திராவிட இயக்க எழுத்தாளர்களும் அதையே ஏற்றுக்கொண்டுள்ளனர். அது மிகப்பெரிய பண்பாட்டுப் பிழை என்றே நான் நினைக்கிறேன். பரத்தையர் தங்களுக்கான ஒழுக்கநெறிகொண்ட தாய்வழிச் சமூகத்தினராக இருக்கவே வாய்ப்பு. என் ஆழ்நதியைத் தேடி நூலில் விரிவாகப் பேசியுள்ளேன்.
சோழர்காலத்தில் நடனக்கலை அதன் உச்சகட்ட வளர்ச்சியை அடைந்தது. பரத்தையர் மரபு தேவரடியார் மரபு என உருமாறியது. ஆனால் தேவரடியார் எவரும் சமூகக்கீழ்ப்படியினராக இருக்கவில்லை. தேவரடியார் குலத்தில் அரசர்கள் மணம் புரிந்துகொண்டு, அப்பெண்கள் பட்டத்தரசிகளாக ஆகும் சமூக அந்தஸ்து அவர்களுக்கு இருந்தது. அவர்கள் ஆலயங்களைக் கட்டுமளவுக்குச் செல்வ வளத்துடனும் இருந்தனர்.
ஆகவே அவர்களிடமிருந்த நடனக்கலை எளிமையான நாட்டார்க்கலைவடிவமாக இருக்க வாய்ப்பில்லை. தேர்ச்சிமிக்க செவ்வியல்கலையே அவர்களிடம் இருந்தது என்று நூல்களை ஆதாரமாகக் கொண்டும், சிற்பங்களை ஆதாரமாகக் கொண்டும் நிறுவமுடியும். ஒரு செவ்வியல் கலைமரபில் இருந்து நாட்டார்கலை உருவாகாது. ஒரு செவ்வியல்கலை முழுமையாக அழிந்து அங்கே தகுதிக்குறைவான ஒரு கலை உருவாகும் என்பதற்கான உதாரணம் எங்குமில்லை. தமிழின் நடனக்கலை கூத்து என்று அழைக்கப்பட்டது. பரதக்கலை என்றும் அழைக்கப்பட்டது. அதற்குச் சான்றுகள் உள்ளன. அதையே ஜெயக்குமார் குறிப்பிடுகிறார். தாராசுரம் போன்ற சோழர்கால ஆலயங்களிலுள்ள நடனச்சிலைகள் பரதநூல் சொல்லும் கரணங்களையே சித்தரிக்கின்றன என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்த தமிழ்நடனக்கலை சதிர் என்று மட்டும் அழைக்கப்பட்ட ஒன்று என்றும், அது நாட்டார்த்தன்மை கொண்ட ஒரு கேளிக்கைக் கலை மட்டுமே என்றும் ஓர் உளப்பதிவு இன்று பலரிடமுள்ளது. ருக்மிணி அதை ‘மேம்படுத்தி’ மேடைநடனமாக கட்டமைத்தார் என்றும், அதில் சம்ஸ்கிருதச் செவ்வியல் இலக்கணத்தையும் பக்திசார்ந்த பேசுபொருளையும் புகுத்தி அதை ‘உயர்கலையாக’ ஆக்கினார் என்றும் சொல்லப்படுகிறது. இதை ருக்மிணிதேவி அருண்டேலின் ஆதரவாளர்கள் அவரது சாதனையாகச் சொல்கிறார்கள். அவரது எதிரிகள் அதை அவர் செய்த திரிப்பு என்றும், சதிர் என்ற இயல்பான கலையை அவர் அழித்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள். உண்மையில் இரண்டும் ஒரே தரப்புதான். இரண்டுமே பிழையானவை.
தமிழகத்தின் ஒட்டுமொத்த தேவதாசிகளும் பாலியல்தொழில் செய்து வந்தனர் என்றும், அவர்கள் ஆடியதே சதிர் என்றும், பத்தொன்பதாம் நூற்றாண்டு சமூகசீர்திருத்தவாதிகளான மூவாலூர் ராமாமிருதத்தம்மையார், முத்துலட்சுமி ரெட்டி போன்றவர்கள் அச்சமூகத்தை மீட்டனர் என்றும் ஒர் எளிய வரலாறு கட்டமைக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த சதிர் பரதநாட்டியமாக ஆக்கப்பட்ட கதையும் சொல்லப்படுகிறது. இதிலுள்ள விந்தையான முரண்பாடு என்னவென்றால் தேவதாசிகள் ‘சீர்திருத்தப்பட்டது’ முற்போக்கு என்றும் ஆனால் சதிர் பரதநாட்டியமாக ஆக்கப்பட்டது பண்பாட்டு அழிப்பு என்றும் ஒரே சமயம் ஒரே சாராரால் சொல்லப்படுவதுதான்.
இப்படி ஒரு சமூகத்தை ஒட்டுமொத்தமாகவே முத்திரையடித்து இழிவுசெய்வது, அவர்களின் வரலாற்றைச் சிறுமைசெய்வது பெரும் அநீதி. அச்சமூகம் மிகச்சிறுபான்மை என்பதனால் மட்டுமே இதைச் செய்யமுடிகிறது. ஒரு சேவையை ஒரு சாராருக்குச் செய்தால் அச்சேவையைப் பெற்றவர்களைக் கீழ்மைப்படுத்தி, தங்களை மீட்பர்களாக மேலே நிறுத்திக்கொள்வது என்பது மதவாதிகளின் மனநிலை. அரசியலாளர்களிடமிருப்பதும் அதே மனநிலைதான். தேவதாசி முறை ஒழிப்பு என்பது அவசியமான ஒரு சமூக சீர்திருத்தமே, அது நிலவுடைமைக்கால வழக்கம். அச்சீர்திருத்தத்தைச் செய்தவர்கள் போற்றத்தக்க மனிதாபிமானிகளே. ஆனால் அதன்பொருள் அச்சமூகம் ஒட்டுமொத்தமாகவே இழிநிலையில் இருந்தது என்பது அல்ல.
தேவதாசிகளின் வாழ்க்கைமுறை, பொருளியல்நிலை ஆகியவை பலநூற்றாண்டுகளாக உயநிலையில் இருந்தன. ஆனால் அவர்களின் பொருளியல் நிலை பதினெட்டாம் நூற்றாண்டு முதல் தொடர்வீழ்ச்சிக்கு உள்ளாகியது. காரணம் பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவாக பழைய மன்னர்களும் குறுநிலமன்னர்களும் அதிகாரம் இழந்தமை. தொடர்ந்து வந்த பஞ்சங்களால் நிலவுடைமைச் சமூக அமைப்பு சரிந்தமை. அந்த அமைப்பின் ஆதரவில் இருந்தவர்களாகிய தேவதாசிகள் வீழ்ச்சி அடைந்தனர். பொதுவாக ஒரு சமூகத்தின் மேற்கட்டுமானத்தை நம்பியிருக்கும் சமூகங்கள்தான் பொருளியல்வீழ்ச்சியின் முதல் அடியை பெறுவார்கள். ஏனென்றல் கலைகள் என்பவை அடிப்படைத்தேவைகள் அல்ல.
பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பொருளியல் வீழ்ச்சி எல்லா சமூகங்களையும் சீரழித்தது. தமிழகத்தில் இருந்து பல கோடிப்பேர் அடிமைகளாக உலகம் முழுக்கச் சென்றனர். அக்ரகாரங்கள் கொடிய வறுமையை அடைந்தன, அதை அக்கால நூல்களிலேயே காணலாம். தேவதாசிகளும் வறுமையடைந்தனர், அவர்களில் ஒரு சாராரின் ஒழுக்கநெறிகள் மாறியிருக்கலாம். அவர்களின் கலையிலும் அவ்வீழ்ச்சி இருந்திருக்கலாம். ஆனால் அச்சமூகம் முழுக்க முழுக்க அச்சீரழிவை அடையவில்லை. கணிசமானவர்கள் உயர் பொருளியல் நிலையில் இருந்தனர். அவர்களிடமிருந்த கலையும் உயர்தரத்திலேயே இருந்தது.
தேவதாசிகளிடம் இருந்த இசைக்கலை எத்தகைய தூய செவ்வியல் தரம் கொண்டிருந்தது என்பதை வீணை தனம்மாள் போன்ற பல கலைஞர்களின் இசையைப் பற்றி எழுதியவர்கள் பதிவுசெய்துள்ளனர்.மிகமிக நுணுக்கமான செவ்வியல்கலையாகவே அது இருந்திருக்கிறது. அப்படியென்றால் நடனம் மட்டும் தெருக்கலையாகவா இருந்திருக்கும்? அதுவும் இரண்டு நிலைகளிலேயே இருந்திருக்கும். ஒன்று தூய செவ்வியல் நடனம், இன்னொன்று பொதுரசனைக்குரிய எளிய நடனம். பொதுரசனைக்குரிய எளிய நடனம் திருவிழாக்களில் மக்கள் நடுவே தெருவில் ஆடப்பட்டது. அதுவே சதிர் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. அது ஆலயங்கள் செல்வவளம் குன்றி, அதைச்சார்ந்து வாழ்ந்தவர்கள் பிழைப்பின்பொருட்டு கலையை விற்கவேண்டியிருந்த நிலை உருவானபோது ஏற்பட்ட சிதைவுதான்.
சதிர் என்ற சொல்லுக்கு ஜெயக்குமார் சொல்லும் பொருள் சரியானது என நினைக்கிறேன். ஆனால் நான் சதுர (திறன், பயிற்சி) என்ற சம்ஸ்கிருதச் சொல்லின் மரூஉ ஆக இருக்கலாம் என எண்ணியிருந்தேன். மலையாளத்தில் சதுர் என்றால் கைத்திறன் என்பதுதான். அகராதி அளிக்கும் பொருளும் அதுதான். பதினெட்டாம் நூற்றாண்டு வரையில்கூட தமிழ் நூல்களில் சதிர் என்ற சொல் திறமை, நுட்பம் என்ற பொருளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அது பேச்சுமொழியில் நடனத்தைக் குறிப்பதாக பதினெட்டாம் நூற்றாண்டு வாக்கில்தான் பயன்படுத்தப்பட்டிருக்கவேண்டும். அதாவது திருவிழாக்களிலும் மற்ற பொது இடங்களிலும் ஆடப்பட்ட ‘மக்கள் ரசனைக்கான’ நாட்டியத்தைக் குறிக்கும் சொல் அது.
பதினெட்டாம் நூற்றாண்டின் நாட்டியப்பதங்களில் சதிர் என்னும் சொல் உள்ளது என்று கு.அழகிரிசாமி சொல்கிறார். பெரும்பாலும் சிருங்காரச் சுவைகொண்டதும், எளிய நிலப்பிரபுக்களின் சபைகளிலும் கோயில்விழாக்களிலும் ஆடப்பட்ட நடனமே சதிர் எனப்பட்டது. அந்த சதிர் அழியவெல்லாம் இல்லை. அது திருவிழாக்களில் ஆடப்பட்டது. அந்த மரபு அப்படியே தொழில்முறை நாடகமாக ஆகியது. சினிமாவுக்குள் நுழைந்தது. அதில் சிருங்காரம் முதன்மை ரசமாக இருந்தது. இன்றும் ஏதோ வடிவில் உள்ளது.
பல சிருங்காரப் பதங்கள் இன்று பார்க்கையில் மலினமான ரசத்தை முன்வைப்பவையாக இருந்திருக்கின்றன.கல்கி முதல் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் வரை அந்த சிருங்காரப் பதங்களை கடுமையான சொற்களில் நிராகரித்துள்ளனர். அது பண்பாடோ மரபோ அல்ல, அது ஒருவகை திரிபுநிலை என்று கண்டித்துள்ளனர். உதாரணமாக ஆழ்வாரப்பிள்ளை பதம் ‘சந்தியில் வைத்தென்னை முந்தியில் பிடிக்கிறீர் தரமல்ல முருகையனே’. அதன் சரணம் இப்படி. ‘மருவ ஆசை உண்டானால் பொன்னுடன்
மனையினை தேடி இரவினில் வாரும்’. இந்த அவச்சுவையை தமிழ்ப் பண்பாடு என்றோ, தமிழரின் அசலான கூத்து மரபு என்றோ அறிவுள்ள எவரும் சொல்லமாட்டார்கள். இது ஒரு பெரும் சமூகச்சரிவின் விளைவான கலைச் சிதைவு மட்டுமே.
உண்மையில் இச்சிதைவு எல்லா கலைகளுக்கும் நிகழ்ந்தது. கேரளநிலத்தில் லாஸ்யம் என்றும் பரதம் என்றும் சொல்லப்பட்ட ஓர் ஆடல்முறை இருந்தது. அது இதேபோல நயம் குன்றியது. பின்னர் அது மறு ஆக்கம் செய்யப்பட்டு மோகினியாட்டமாக ஆகியது. கதகளியே கூட இடைக்காலத்தில் அதன் செவ்வியல்தன்மையை இழந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்தியா முழுக்க கலைகளில் உருவாகியிருந்த வீழ்ச்சிக்கு எதிரான மனநிலைகள் உருவாயின. அவற்றை மீட்கும் இயக்கங்கள் எழுந்தன. தாகூரின் சாந்திநிகேதனம் மணிபுரி, ஒடிசி உள்ளிட்ட கலைகளை மீட்டெடுத்தது. கதகளியை வள்ளத்தோளின் கலாமண்டலம் மீட்டெடுத்தது. அதைப்போலத்தான் கூத்தை கலாக்ஷேத்ரா மீட்டது. கலாக்ஷேத்ராமீது ‘சீர்திருத்தம் என்ற பேரில் மரபைச் சிதைத்துவிட்டார்கள்’ என்ற குற்றச்சாட்டு தாகூர், வள்ளத்தோள், சிவராமகாரந்த் ஆகியோர் மீதும் எழுந்தது.
தமிழ் கூத்துமரபின் தொடர்ச்சியான நடனக்கலை சோழர்காலம் முதல் இந்திய அளவிலான இலக்கணத்துடன் உரையாடி வளர்ந்திருக்கலாம் என்று நான் எண்ணுகிறேன். கலைகளின் இயல்பு அது, அவை தூய்மையை தக்கவைத்துக்கொள்ள முயல்வதில்லை, பிற கலைவடிவங்களுடனும் கலைக்கொள்கைகளுடனும் உரையாடி அவற்றை ஏற்றுக்கொண்டு வளர்கின்றன. சோழர் ஆட்சிக்காலம் சம்ஸ்கிருதம் தமிழில் முதன்மைச் செல்வாக்கு செலுத்திய காலம். இந்தியா முழுக இருந்து எல்லா கலைவடிவங்களும் இங்கே வந்த காலம். கூத்தன் என சிவன் வகுக்கப்பட்ட காலம். கூத்து பிரபஞ்ச இயக்கமாகவே உன்னதப்படுத்தப்பட்ட காலம்.
அந்த தூய தமிழ்ச் செவ்வியல் நடனமும் தேவதாசிகளிடம் இருந்தது. தூய செவ்வியல்வடிவிலேயே இருந்தது. கூத்தபிரான் ஆடியது ‘சதிர்’ அல்ல. கூத்துதான். அதைத்தான் ருக்மிணிதேவி மீட்டு எடுத்தார். உண்மையில் அதை அவர் அழிவிலிருந்து காத்தார். அவர் அதை தேவதாசிகளிடமிருந்து கற்றார். பரதமுனிவரின் நாட்டிய சாஸ்திரத்தின் இலக்கணப்படி அதைச் சீரமைத்தார். அதற்கு பரதநாட்டியம் என்ற பெயர் ஏன் அமைந்தது என்றால் அது பலநூற்றாண்டுகளாகவே பரதநாட்டியம் என்ற பேரிலும் அழைக்கப்பட்டிருந்தது என்பதனால்தான். கூத்து, சதிர் ஆகிய இரு சொற்களும் நாட்டியத்தின் சிறுமைப்படுத்தப்பட்ட வடிவைச் சுட்டுவதாக பேச்சுவழக்கில் ஆகிவிட்டிருந்தன. ஆகவே பரதநாட்டியம் என்ற பெயர் நிலைகொண்டது.
ஆகவே சதிர் என்னும் கலை பரதநாட்டியமாக ஆக்கப்பட்டது என்பது மிக எளிமையாக்கப்பட்ட, அல்லது பிழையான ஒரு பார்வை என்றே நான் நினைக்கிறேன். முன்னரும் எழுதியுள்ளேன். தமிழில் இருந்த செவ்வியல்தன்மை கொண்ட ஆடல்முறையே நவீன மேடையுத்திகள், கூடுதல் கருப்பொருட்கள் சேர்க்கப்பட்டு பரதநாட்டியம் என ஆகியது. அப்படி சேர்க்கப்பட்ட கருப்பொருட்கள் பக்தி சார்ந்தவை. குறிப்பாக ராதாகிருஷ்ண லீலை. இந்தியாவின் லாஸ்ய வடிவங்களில் எல்லாமே ராதா-கிருஷ்ண லீலை முதன்மைப் பேசுபொருளாக இருந்தது.காரணம் பக்தி இயக்கம், குறிப்பாக புஷ்டிமார்க்கம். தமிழகத்தில் என்றுமே ராதாகிருஷ்ண வழிபாடு வலுவாக இருந்ததில்லை. காரணம், இங்கிருந்த வைணவமாகிய ஶ்ரீமார்க்கத்தில் ராதாபாவம் இல்லை. அத்தகைய கருப்பொருட்கள் ஒடிஸி முதலியவற்றில் இருந்து பரதநாட்டியத்துக்கு கொண்டுவரப்பட்டன. அதுவே ருக்மிணி போன்றவர்களின் கொடை.
சுருக்கமாக, ருக்மிணி தேவி பரதநாட்டியத்தை உருவாக்கவில்லை. சதிரை பரதநாட்டியமாக மாற்றவில்லை. அன்றிருந்த நாட்டியத்தில் பரதம் என எப்போதுமே அழைக்கப்பட்டு வந்த ஒன்றை, இந்தியாவின் பிற லாஸ்யமுறைகளுடன் இணைத்து முன்னெடுத்தார். அதையே ஜெயக்குமார் சொல்கிறார் என நினைக்கிறேன். அதுவே உண்மைக்கு அணுக்கமானது என்பது என் எண்ணம்.
ஜெ
இர. சிவலிங்கம்
இலங்கையில் 1983-ல் நிகழ்ந்த இனக் கலவரத்தினால் இர. சிவலிங்கம் நீலகிரி மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்தார். அங்கு இடம்பெயர்ந்த மலையக மக்களின் உரிமைக்காகப் போரடியதால் இந்தியாவில் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டார். மலையகத்தமிழர்களின் அவல நிலையை சர்வதேசத்தளத்தில் அறியப்படுத்தினார். 1999-ல் இலங்கை மீண்டார்.
இர சிவலிங்கம் – தமிழ் விக்கி
ஒன்றரை நாள்- கடலூர் சீனு
இனிய ஜெயம்,
புதுவைக்கு பேருந்து ஏறுவதற்கு, கூட்டம் இல்லாத அடுத்த பேருந்து வருவதற்காக நின்றிருந்த நேரத்தில் தற்செயலாகதான் அவனை பார்த்தேன். எலும்புகள் தெரிய துவங்கும் வண்ணம், உணவு உண்டு சில நாட்கள் ஆன, அழுக்கு வண்ண மெலிந்த நாய்.
சுற்றி நடந்து கொண்டிருந்தது. முதலில் எல்லா நாயும் படுப்பதற்கு முன்பாக சுற்றுமே அப்படி சுற்றுகிறது என்று நினைத்தேன். சற்று நேரம் கழித்தே அந்த வினோதம் எனக்கு உரைத்தது. வலது பக்கம் சற்றே தலையை சாய்ந்தபடி, பொதி சுமக்கும் கழுதை தனது பாரம் கொண்ட உடலை சுமந்து ஒவ்வொரு எட்டாக எடுத்து வைத்து நடப்பதை போல, பாரம் கொண்ட தனது உடலை சுமந்து எட்டு வைத்து நடந்து கொண்டிருந்தது அது. பத்து அடி விட்டம் கொண்ட வட்ட பாதையில் வலது பக்கமாக சுற்றி சுற்றி சுற்றி நடந்து கொண்டு இருந்தது. நிறுத்தாமல்.
சற்று நேரத்துக்கு மேல் அந்த காட்சியை தாள இயலாது, சென்று அதன் முதுகை தொட்டு நிறுத்தினேன். என் கை அதன் முதுகில் இருக்கும் வரை நின்றிருந்த அது, கையை எடுத்ததும் வழக்கம் போல நடக்க துவங்கியது. பக்கத்து கடையில் பிஸ்கெட் வாங்கி, அதை முதுகை தொட்டு நிறுத்தி, பிஸ்கெட் போட்டேன். அதற்கு முன்பாக உணவு விழுந்த பிரக்ஞையே அதற்கு இல்லை. பிஸ்கட்டை எடுத்து அதன் மூக்கு அருகே பிடித்தேன். ஊஹூம் ஒரு சிறிய மாறுதல் கூட அதனிடம் இல்லை. அதன் முதுகை தொட்டு சுவாச உஷ்ணம் ஏறிய என் கையை விலக்கினேன். அது மீண்டும் அவ்விதமே நடக்க துவங்கியது. தாள இயலா எரிச்சலுடன் அதன் முதுகில் ஒரு அடி போட்டேன். நகர்ந்து அப்பால் போனான். நேராக அன்றி தனது அதே வட்ட பாதை நடையில். என்னவோ கசப்பு உள்ளே எழ மனதுக்குள் அதை திட்டிவிட்டு அடுத்து வந்த பேருந்தில் ஏறி, புதுச்சேரி மணிமாறன் சரவணன் உடன் இணைந்து புதுச்சேரி கடற்கரை வந்து சேர்ந்தேன். அதுவரை பின்தொடர்ந்தது அந்த நாயின் நினைவு. எப்போது அந்த நாய் அந்த சுற்று பாதை நடையை நிறுத்தும்? உடல் தளர்ந்து ஓயும்போதா? அல்லது உயிர் போகும்போதா…
புதுச்சேரி மொத்தமும் சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டு இருப்பதால், மாலைநேர கடற்கரை சாலை விளக்குகள் குறைந்து இருண்டு கிடந்தது. காந்தி சிலைக்கு எதிரே நேரு சதுக்கத்தில், பார்வையாளர் கேலரி படிக்கட்டில் அமர்ந்து புதிய சதி ஆலோசனையில் ஈடுபட்டுகொண்டிருந்த ஜெயமோகன் குழுவினர் உடன் சென்று சேர்ந்து கொண்டேன்.
தமிழகம் முழுக்க பரவி இருக்கும் மைய்ய ஆத்மீகத்துக்கு வெளியிலான சித்தர்கள் மரபு குறித்து ஜெ பேசிக்கொண்டு இருந்தார். அது முடிந்ததும் கலை விமர்சகர் மணிகண்டன் காலையில் மேல் சித்தாமூர் மடத்தில் தாங்கள் கண்ட பட்டாரகர் ஜெயமோகனுக்கு அளித்த ஆசி மடலை அளித்தார். எல்லோரும் அதை வாசித்துப் பார்த்தோம் நெகிழ்வாக இருந்தது. ஜெ வை பல்கலைக்கழகத்துக்கு கையளித்துவிட்டு இரவு உணவு தேடி ஆளாளுக்கு ஒவ்வொரு பக்கம் பிரிந்தோம்.
உணவு நேரத்தில் முனை சிபி என்னை சிறிய நேர்காணல் செய்தார். அடிப்படையில் பள்ளி கல்வியில் மக்கான நான் இலக்கியத்துள் வந்து அதை சிக்கெனப் பற்றிக்கொண்ட கதையை சொன்னேன். தலைமுறையாக ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்வதன் வழியே பிறந்த பலகீனமான உடல் கொண்ட பிள்ளை நான். என் நரம்பு அமைப்புகள் சார்ந்து எப்போதுமே கொதித்து கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஒருவன் நான். என்னை தொடும் சிறிய துயர் சிறிய மகிழ்ச்சி போதும் அந்த கொந்தளிப்பை பெருக்கி கொள்ள. என் வாழ்நாளில், நார்மலாவே இருக்க மாட்டீங்களா நீங்க என்ற கேள்வி என்னை வந்து தொடாத ஒரே ஒரு வருடம் கூட இல்லை.
மனதின் இயல்பு எதையேனும் பற்றி விருத்தி அடைந்துகொண்டே இருப்பது. அறிவின் இயல்பு எதையேனும் உண்டு எரிந்து கொண்டே இருப்பது. உடல் கொண்ட இயல்பு இயங்கி கொண்டே இருப்பது. இந்த மூன்றையும் இவ்விதம் இயக்குவது விழைவும் யத்தனமும் கொண்ட ஆன்மா.
சும்மா இருக்கும் மனம் அறிவு உடல் இந்த மூன்றையும் அதை இயக்கும் ஆன்மாவின் இயல்பின் படி விட்டால் அது சென்று சேரும் இறுதி இடம் காமம்.
எனில் என்னை போன்று கொந்தளிப்பான ஒருவன் நிலையை யோசித்துக் கொள்ளலாம். நான் மனதுக்கு அது விருத்தி கொள்ள இலக்கியத்தை அளித்தேன். அறிவு அது பற்றி எரிய வரலாறு பண்பாடு அறிவியல் இன்ன பிறவற்றை அளித்தேன். உடலுக்கு அது இயங்கிக்கொண்டே இருக்க இந்தியா எனும் நில விரிவை அளித்தேன். எனது அத்தனை சமநிலை குலைவையும் அவ்விதமாகவே ஏற்றுக்கொண்டு என்னை பேணுபவர் ஜெயமோகனும் விஷ்ணுபுரம் நண்பர்களும். ஆகவே இங்கே இவ்விதம் சந்தோஷமாக இருக்கிறேன். என்று சொன்னேன்.
அப்படியே தொடர்ந்து சிபியும் நானும் ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவல் குறித்து பேசியபடி தங்கும் விடுதி வந்தோம். இரவு படுக்க 12 மணி ஆகும் என்பதால் நேரத்தை வீணாக்காமல் கலை குறித்த உரை ஒன்றை கேட்போம் என்று ஈரோடு கிருஷ்ணன் உடனடியாக தீர்ப்பு எழுதி பொறுப்பை கலை விமர்சகர் மணிகண்டன் வசம் கையளித்தார்.
மணிகண்டன் பண்டைய கலை துவங்கி இன்றைய கலை வழியே, நாம் ஒன்றை உள்ளுணர்ந்து எவ்வாறு அறிகிறோம், புலன்களும் மூளை அமைப்பும் கொண்ட பலம் பலவீனம் என்ன, அதிலிருந்து கலையை துயிப்பது என்பது எவ்விதம், ஓவியத்தில் கலைக்கும், கலை போலவே உடன் வரும் ஒன்றுக்கும் பேதம் காண்பது எப்படி, உருவ மற்றும் அருவ ஓவியங்களை அணுகுவது எப்படி என்பதை போன்ற அடிப்படைகளை சுருக்கமாக விளக்கி சென் ஓவியம் ஒன்றில் உரையை நிறைவு செய்தார்.
அடுத்து வந்த நான், மனிதர்களுக்கு அழகுக்கான தேவையை எவ்விதம் கலைகள் வழியே எய்தினர். கலையும் அழகும் பிரிக்க இயலாது எவ்விதம் முயங்கி இருக்கிறது. நவீன தமிழ் இலக்கியத்தில் அழகின் ஒவ்வொரு ரூபமும் இயல்புவாதம், யதார்தவாதம் என்ற அழகியல் முறைகள் வழியே அவற்றை எவ்விதம் அடைகிறோம். ஒவ்வொரு அழகியலும் அதன் தூய அழகு நிலையை அதன் கவிதை வழியே எவ்விதம் அடைகிறது. அழகு அறம் இவை கொண்ட தொடர்பு என்ன? இந்த தொடர்பின் பாரபட்சம், அதில் இருந்து ரா ஆர்ட் எவ்விதம் மேலதிக ஜனநாயக பூர்வம் கொண்டு வேறுபடுகிறது, பியூர் ஆர்ட் உணர்வுகளை மையம் கொள்வது போல, ரா ஆர்ட் உடலை எவ்விதம் மையம் கொள்கிறது. ரா ஆர்ட் இல்லாமல் கலை எவ்விதம் முழுமை பார்வையை அடைய இயலாது என்ற அடிப்படைகள் மீது ஒரு 15 நிமிட சிற்றுரை நிகழ்தினேன். எங்களது இரண்டு உரைகளும் நண்பர்களுக்கு மிகுந்த மகிழ்வும் நிறைவும் அளித்ததாக சொன்னார்கள்.
உரை முடிந்து உறங்கும் முன்னர் நண்பர் மணிகண்டன் வசம் பேசிக்கொண்டு இருந்தேன். இயல்புவாத தத்துவம் எவ்விதம் உருவானது அதை வளர்த்து எடுத்த ஆளுமைகள் குறித்து சொன்னார். தமிழில் பின்னவீன அக்கபோர்களை நான் போட்டு அடிப்பதன் ஒரு பகுதியாக ஃபூக்கோ போன்ற தத்துவவாதிகளையும் பொறுப்பை மறந்து சேர்த்து எப்படி அடிக்கிறேன் என்பதை சுட்டிக் காட்டினார். கதைகள் குறித்து பேசும்போது சமூக யதார்த்தம், இயல் கடந்த யதார்த்தம் இவை ஒரு கதைக்குள் இடம் பெறும்போது தவிர்க்க இயலாது இடம் பெற வேண்டிய பரிணாம கதி, அது இல்லாத போன (ஆனால் பெரிய பாராட்டு பெற்ற கதைகள்) அது இருப்பதால் கலை மேன்மை கொண்ட கதைகள் இவற்றை உதாரணம் சொல்லி விளக்கினார். மேலை கீழை மரபு என்பதன் அடிப்படை பேத புள்ளி என்ன என்ற எனது கேள்விக்கு, அதன் பிரபஞ்சவியல் பார்வையில் பாம்பு எனும் மைய உருவகத்தை கொண்டு அது பைபிளில் எவ்விதம் வருகிறது, சாங்கியத்தில் எவ்விதம் வருகிறது என்பதை வைத்து விடை தந்தார். எனக்கு மிக முக்கிய கல்வி தருணம் அது. இவற்றுக்கு வெளியே விஷ்ணுபுரம் இன்று தனது ஆக்கங்கள் வழியே சர்வதேச களனை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. சர்வதேச அளவில் அந்த ஆக்கங்கள் மீது எழுந்து வரும் கேள்விகளுக்கு பின்னே அவர்களுக்கு வளமான தத்துவ கலை தேடல் விளக்கங்கள், புரிந்து கொள்ள தேவையான கோட்பாடுகள் உண்டு. அதை எதிர் கொள்ளும் தத்துவ அறிமுகமும் அதை பிரயோகித்து உரையாடலை செழுமை செய்யும் கோட்பாட்டு அறிவும் நமக்கு தேவை. படைப்புகளை கொண்டு செல்லும் நாம் இதையும் கொண்டிருக்க வேண்டியதும் அவசியம் என்றார். பேசிக்கொண்டே இரவை விடிய வைத்தோம்.
விடிந்ததும் எல்லோரையும் காரில் அள்ளிப்போட்டுக்கொண்டு, பீச்சாங்கரையில் நடை பயின்று கொண்டிருந்த ஜெ உடன் சென்று சேர்ந்து கொண்டோம். ஜெ இந்திய செவ்வியல் கலைகளில் மரபு வகுத்த எல்லை, அதை மேலை மரபு தத்துவம் வழியே கடந்த நிலை, ஆப்ரிக்கா வின் கலை இந்த இரண்டும் இல்லாத காரணமாக அடைந்த தன்னெழுச்சியான வடிவ சாத்தியங்கள் வெளிப்பாட்டு முறைகள், அதன் ஒரு சிறிய பகுதி பிக்காசோ வழியே நவீன ஓவியத்துக்கு வந்தது எவ்விதம் இவற்றை விளக்கினார். அவர் பேசி முடித்ததும் வழக்கம் போல அவரை பல்கலைக்கழகத்துக்கு கையளித்துவிட்டு நண்பர்கள் காலை உணவுக்கு சென்றோம்.
உணவு மேஜையில் வழக்கம் போல, pt உஷா ஒரு பிழையான ரோல் மாடல் என்று தனது வாதத்தை ஈரோடு கிருஷ்ணன் துவங்க, மணிகண்டன் அதை தனது வாதங்கள் வழியே முறியடித்தார். உணவு முடித்து காரில் திண்டிவனம் நோக்கி வருகையில், கிருஷ்ணன் ” சீனு இன்னின்ன காரணங்களால் ஜெயமோகன் ஆக்கங்களை நான் டிஸ்மிஸ் செய்கிறேன். அந்த காரணங்கள் இவை. அப்டின்னு எதையெல்லாம் சொல்வீங்க” என்று கேட்டார். நான் அய்யோ அபச்சாரம் என்று அலறி இரு செவிகளையும் பொத்திக்கொண்டேன். ஓசூர் பாலாஜி ஜெயமோகன் சிந்தனை முறைமை குறித்து கேட்டார். வளர்ச்சி பெறாத ஒரு சிறிய சாத்தியம் அதை எடுத்துக்கொண்டு அதில் இருந்து வரலாறு பண்பாடு குறித்த காத்திரமான பார்வை ஒன்றை உருவாக்குவது, ஒன்றின் எதிர் நிலைக்கு சென்று சிந்தித்து பார்ப்பது, ஒன்றை அதன் பெரிய அளவுக்குள், சிறிய அளவுக்குள் வைத்து சிந்தித்து பார்ப்பது, சிறிய எல்லைக்குள் தான் அடைந்தவர்றை பொதுமை படுத்தி பெரிய எல்லைக்குள் போட்டு பார்ப்பது இவற்றை கிருஷ்ணன் சொன்னார்.
வழியில் தேநீர் கடையில் மற்றொரு காரில் இருந்து ஶ்ரீ வித்யா, ( இதில் ஶ்ரீ வித்யா என்னை சரண்யாவின் அப்பாவாக புரிந்து வைத்திருந்தார். நான் இப்படி அப்பா ஆனால்தான் உண்டு ஆகவே மகிழ்ச்சியாகவே இருந்தது) பானு மற்றும் பலரும் வந்து சேர்ந்து கொண்டார்கள். டீ குடித்தபடியே உரையாடல் நடுவே பானு சிறப்பு விருந்தினர் லெய்மா போவே அவர்களின் வாழ்வையும் பணியையும் குறித்து விவரித்தார். இந்த 2000 இல் கூட அந்த நிலத்தில் அப்படி ஒரு விழுமியம் நிலை கொண்டு நின்ற விதம் எனக்கு ஆச்சர்யம் அளித்தது. தமிழ்நாட்டில் அப்படி ஒரு போராட்டம் நடந்தால் அது யூ டியூபர்களின் விளம்பர நிகழ்ச்சியாக மட்டுமே எஞ்சி இருக்கும். இதை கிருஷ்ணன் வசம் சொன்னேன். அவர் அசாமில் இப்படி ஒரு போராட்டம் நடந்து அது அளித்த வெற்றியை சொன்னார். டீ குடித்தபடியே பேசி முடித்து பல்கலைக்கழகம் நோக்கி கிளம்பினோம்.
இன்றைய தேதியில் தமிழ் நிலத்தில் பெரும்பாலான அரசு தனியார் பல்கலைக்கழகங்கள் அவற்றில் நிகழும் சீரழிவுகள் இவற்றை ஒரு சராசரி பொது மனம் கணக்கில் கொண்டால், அவை அளிக்கும் கௌரவங்களில் மகிழ ஏதும் இல்லை. ஆனால் இந்த பல்கலைக்கழக வேந்தர் தனசேகர் அவர்கள் எளிய பொருளாதார பின்புலத்தில் இருந்து ஒரு கிராமத்தில் இருந்து கிளம்பி வந்து தனது குணம் உழைப்பு நல்ல உறவுகள் வழியே இப்படி ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கி இருக்கிறார். இலக்கிய வாசகர். பிரபஞ்சன் அவர்களின் இறுதி தினங்களில் துணை நின்றவர். இந்த பல்கலைக்கழகம் வழங்கும் கௌரவத்தை ஜெ பெறுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அது போக இந்த பல்கலைக்கழகம் இந்த விழா வழியே தனது மாணவர்களுக்கு யார் யாரை அவர்களின் முன் மாதிரியாக நிறுத்துகிறது என்பது இங்கே முக்கிய விஷயம். ஜெ அந்த கௌரவத்தை அந்த பல்கலைக்கழகத்துக்கு அளிப்பதும் முக்கியமானதே. வழி நெடுக, விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட பதாகைகளில் ஜெயமோகன் பாகுலேயன் “பிள்ளை” புன்னகைத்துக்கொண்டிருந்தார்.
பல்கலைக்கழகத்தின் விழா நடைபெறும் அரங்கம் நண்பர்களும் வாசகர்களும் நிறைந்து கலகலத்துக் கொண்டிருந்தது. அறையின் மையத்தில் நின்றிருந்த இருவரில் இவர் புகழ்பெற்ற வெள்ளை நிற டாவின்சி நிறுவன காலனி அணிந்திருந்தார். அவர் கமல் ஹாசன் கூட வாங்க கனவு காணும் வாட்ச் அணிந்திருந்தார்.
அவர் : யோவ் என்னையா செருப்பு இது. ராத்திரிக்கு ராபெரிக்கி ரா பாட்டுல தமன்னா போட்டிருக்க ஷு தானே இது. ஒரு தொழிலதிபர் போடுற ஷூ வாயா இது.
இவர்: நீ கட்டிருக்கிறது மட்டும் என்னவாம். நாலணா ஜவ்வு மிட்டாய் வாச்சிதானே. கல்வி அதிபர் கட்டுற வாச்சா இது.
அவர்: யோவ் இது எப்பிடி பட்ட வாச்சி தெரியுமா, ஸ்மார்ட் வாச் உம்மை விட இதுக்கு அறிவு சாஸ்தி…
(சண்டை போட்டுக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்களில் ஷூ போட்ட சிறுவன் விஷ்ணுபுரம் உள்ளிட்ட பல தொழில்கள் புரியும் தொழிலதிபர் அரங்கசாமி என்றும், வாச்சு கட்டியவர் கல்வி சித்தப்பா சக்தி கிருஷ்ணன் என்றும் அறியப்படுகிறார்கள்)
நான் அரங்கசாமியை கண்டவிடத்து “இப்டி பண்ணிட்டீங்களே நாயக்கரே, பேனர்ல பாகுலேயன் பிள்ளை அப்டின்னு போட்டுடீங்களே. இந்நேரம் பேஸ்புக் பேக்குகள் எல்லாம் இதை பாத்திருக்குமே, மண்டைக்கு மேலே முடியும் உள்ளே மூளையும் இல்லாத அந்த முட்டா கூமுட்டைகள் எல்லோருக்கும் இந்நேரம் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒரு சாதி கெட்ட சங்கம் அப்டின்னு தெரிஞ்சிருக்குமே. இப்டி பண்ணிட்டீங்களே நாயக்கரே, இப்டி பண்ணி இந்த நாடார் மனசை புண் படுத்திட்டீங்களே நாயக்கரே…” என்று பொங்கிவிட்டேன்.
நாயக்கர் ” இந்த பாருப்பா… விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் செய்யுற குத்ததுக்கு மட்டும்தான் நான் பொறுப்பு ஏத்துக்க முடியும். ஜெயமோகன் தாத்தா அவர் புள்ளைக்கு பாகுலேயன் பிள்ளை அப்டின்னு பேர் வெச்ச குத்தத்துக்கு எல்லாம் நான் பொறுப்பு ஏத்துக்க முடியாது” என்று கறாராக சொல்லி விட்டார். அறைக்குள் சாப்பாடு தயார் எனும் அழைப்பு வர, கிருஷ்ணன் ஜென்டில்மேன் ஆக இருக்க எவ்வளவோ முயற்சி செய்தார். முடியவில்லை. எல்லோரும் உணவு முடித்து விழா அரங்கம் வந்தோம்.
பட்டம் ஏற்கும் மாணவர்கள், விஷ்ணுபுரம் நண்பர்கள் இவர்களால் அரங்கம் நிரம்பி வழிய, பலர் நின்று கொண்டே விழாவை கண்டனர். குறித்த நேரத்தில் விழா துவங்கியது. பல்கலை கழக பட்டமேற்ப்பு விழா என்பதை முதன்முதலாக பார்க்கிறேன். வண்ண வண்ண கோட்டுகள். நான் பார்க்காத துவக்க சடங்குகள். எல்லோரும் கூம்பு தொப்பி அணித்து சிலுவை மாலை போட்டிருந்தால் அடுத்த வாடிகன் போப் தேர்வு சடங்கின் ஒரு பகுதி போலவே இருந்திருக்கும். மேடையில் என் பால்ய நாயகிகளில் ஒருவரான pt உஷா அவர்களை முதன் முறையாக கண்டேன். கம்பீரமாக இருந்தார். நான் ஜெ பேசி முடித்ததும் வெளியே சென்று விட்டேன். (மிச்சத்தை நாளை ஜெ தளத்தில் படித்துக்கொள்ளலாம்). வெளியே அரங்கில் இடம் போதாத நண்பர்கள் நின்றிருந்தார்கள். பவா அண்ணன் கட்டிக்கொண்டார். “பாவிகளா அமெரிக்காவையும் விட்டு வைக்க போறது இல்லையா… நல்லா இருங்க தம்பிகளா” என்று அவர் ஸ்டைலில் வாழ்த்தினார்.
ஜனகனமன முடிந்ததும் அறைக்குள் வந்து எட்டிப்பார்த்தேன் லெமா புள்ளை குட்டிகள் சகிதம் சூழ பேரன்னையாக அமர்ந்திருந்தார். அவரையும் உஷா அவர்களையும் சுற்றி விஷ்ணுபுரம் நண்பர்கள். அடுத்து ஜெயமோகன் இருக்கும் அறைக்குள் எட்டிப்பார்த்தேன். ஒரே கோலாகலம். நண்பர்கள் வெள்ளத்தில் மைய்ய சுழியில் ஜெ. கட்டி அணைத்தல், முத்தமிடல், மாலைகள்,சால்வைகள்,ஆசிகள்,புகைப்படங்கள்…
எல்லாம் முடிந்து நண்பர்கள் சூழ வெளியேறி ( டாக்டர் எனக்கு ஊசி வேண்டாம் மாத்திரையே போதும். இனிப்பு மாத்திரை என்று சொல்ல நினைத்தேன் அதற்குள்) ஜெ கார் ஏறி விடை பெற்று கிளம்பி தூரத்தில் மறைந்து போனார்.
எல்லோரிடமும் விடை பெற்று நான் மணிமாறன் சரவணன் மூவரும் காரில் பாவண்ணனை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி புறப்பட்டோம். காரில் உரையாடலின் ஒரு பகுதியாக தஞ்சை சுந்தரம் அவர்கள் எழுதிய மங்கல இசை மன்னர்கள் நூல் குறித்து நண்பர்களுக்கு சொன்னேன். பாவண்ணன் அந்த நூலை வாசிக்க சொல்லி கிரா தன்னிடம் தந்ததை நினைவு கூர்ந்தார். 1850 முதல் 1950 வரை கோயில் கலையில் நாதஸ்வரம் தவில் இசை இவற்றை பேணிய அதன் சிறந்த ஆளுமைகள் சிலர் குறித்து சொன்னார். பேச்சு பாவண்ணன் மொழியாக்கம் செய்த காகா காலேல்கர் எழுதிய இமயமலை ஒரு பண்பாட்டு பயணம் நூல் நோக்கி நகர்ந்தது. 1912 இல் காலேல்கர் செய்த பயணம் அது. அதன் சுவாரசியங்கள் சிலவற்றை பகிர்ந்து கொண்டார். இனி மொழியாக்கம் பக்கமே போக கூடாது என்று நினைத்திருந்தேன் காலேல்கர் செய்த பயண அனுபவம் அந்த உறுதியை உடைத்து விட்டது என்று சொல்லி சிரித்தார்.
எல்லோரும் ஒன்றாக இரவு உணவருந்தி அவரவர் இல்லம் நோக்கி பிரிந்தோம். வீடு செல்கையில் ரத வீதியில் தேர் முக்கில் ஏதோ நாய் சண்டை. ஏதாவது புது நாய் ஏரியா விட்டு ஏரியா வந்திருக்க கூடும். நான் அதை கடந்துதான் வீடு போக வேண்டும். கடந்து செல்லும்போது கண்டேன் அந்த ஏரியா நாய்கள் சுற்றி நின்று குலைத்துக்கொண்டிருக்க, நடுவே நிதானமாக சுற்றி சுற்றி நடந்துகொண்டு இருந்தது நேற்று மதியம் கண்ட அந்த நாய்.
கடலூர் சீனு.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

