Jeyamohan's Blog, page 23
September 7, 2025
விஷ்ணுபுரம் விருது 2025 ரமேஷ் பிரேதனுக்கு…
தமிழில் முதன்மை இலக்கியப் பங்களிப்பாற்றிய மூத்த படைப்பாளிகள் விருதுகளால் புறக்கணிக்கப்படுவதை கண்டு அவர்களை கௌரவிக்கும் பொருட்டு 2010 ல் நிறுவப்பட்டது விஷ்ணுபுரம் விருது. குறிப்பிடத்தக்க விருதுகளைப் பெறாத படைப்பாளிகளுக்குரிய விருதாக இது அளிக்கப்பட்டு வருகிறது. தமிழின் முதன்மைப் படைப்பாளிகள் பலர் ஏற்றுக்கொண்ட பெருமைக்குரியது இவ்விருது.
2025 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர், புனைவெழுத்தாளர், மற்றும் இலக்கியச் சிந்தனையாளர் என்னும் நிலைகளில் தமிழுக்கு பங்களிப்பாற்றிய ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்படுகிறது.
ரமேஷ் பிரேதன் புதுச்சேரியில் வசித்து வருகிறார். 8 செப்டெம்பர் 2025 அன்று புதுச்சேரி மற்றும் மயிலாடுதுறை நண்பர்கள் அரிகிருஷ்ணன், சிவாத்மா, யோகேஸ்வரன், கடலூர் சீனு , மணிமாறன், முத்துக்குமரன், சிவராமன், சரவணன் ஆகியோர் ரமேஷ் பிரேதனை நேரில் சந்தித்து மலர்ச்செண்டு அளித்து வாழ்த்துக்களுடன் செய்தியை அறிவித்தனர்.
டிசம்பர் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் இந்த விழா வழக்கம்போல கோவையில் நிகழும். முதல்நாள் படைப்பாளிகள் அரங்கு. இளம்படைப்பாளிகள், மூத்த படைப்பாளிகள் ஆகியோருடன் வாசகர்கள் உரையாடலாம். இரண்டாம் நாள் விருதுவிழா. தமிழின் முதன்மையான இலக்கிய விழாவாக இன்று மாறிவிட்டிருக்கும் இந்த இலக்கிய ஒருங்கிணைவுக்கு நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம்.
ரமேஷ் நீண்டநாட்களாக உடல்நலம் குன்றியிருப்பதை அறிந்திருப்பீர்கள். அவரை புதுச்சேரியில் இருந்து கோவை கொண்டுவர முயல்கிறோம். அவரும் ஆர்வமாகவே உள்ளார். இதற்கு முன் அவர் வீட்டை விட்டு வெளியே வந்து கலந்துகொண்ட நிகழ்வு பத்தாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த விஷ்ணுபுரம் விழாதான்.
உடல்நலம் குன்றிய நிலையிலும் ரமேஷ் படைப்பாளிக்குரிய அக ஊக்கத்துடன் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். ரமேஷுக்கு இவ்விருதை அளிப்பதன் வழியாக விஷ்ணுபுரம் நண்பர்குழு மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறது.
ரமேஷ் பிரேதன் rameshpredan@gmail.com. எண் 8903682251
ரமேஷ் பிரேதன். தமிழ் விக்கி விஷ்ணுபுரம் விருதுகள் தமிழ் விக்கிகுழந்தைகளும் இயற்கையும்
வாழ்க்கை முழுக்க உடன்வரும் ஒரு பெரும் இன்பம் இயற்கையுடன் இருத்தல். இயற்கையை ரசிக்க, அதன்பொருட்டு பயணம் செய்ய முடிந்தவனுக்கு எல்லா உலகியல் சிடுக்குகளில் இருந்தும் தப்பிக்க ஒரு பெரிய வாசல் திறந்திருக்கிறது. அதை நம் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்கிறோமா?
நம் குழந்தைகளுக்கு இயற்கையை அறிமுகம் செய்வோம்அரசியல், கருத்தியல், ஜனநாயகம்
பின்தொடரும் நிழலின் குரல் மின்னூல் வாங்க
பின் தொடரும் நிழலின்குரல் வாங்க
அன்புள்ள ஜெமோ
பின்தொடரும் நிழலின் குரல் நாவல் பற்றி மார்க்ஸிய நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் வழக்கம்போல ‘வன்மம்’ ‘திரிபு’ ‘அவதூறு’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். நான் பார்த்தவரை மார்க்ஸியர்களின் அணுகுமுறை என்பது குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் அக்குற்றச்சாட்டை மிகமிக மூரக்கமாக மறுப்பதுபோலத்தான். அதில் நிதானம் இல்லை. குற்றம் சாட்டப்பட்டுவிட்டதே என்ற பதற்றம் மட்டுமே உள்ளது. பதற்றமும் சீற்றமும் நிறைந்த எதிர்வினைகள் வந்தனவே ஒழிய நிதானமான ஒரு எதிர்வினை வந்ததில்லை.
நான் என் மார்க்ஸிய நண்பரிடம் சொன்னேன். ‘வேறு எதை நீங்கள் மறுத்தாலும் கண்முன் மார்க்சியம் சிறுத்து வருவதையாவது ஏற்றுக்கொண்டாகவேண்டும். அந்நாவல் எழுதப்பட்ட 1999 வாக்கில் இந்தியாவில் மூன்று மாநிலங்களில் கம்யூனிஸ்டுக் கட்சி ஆட்சியில் இருந்தது, அல்லது ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் இருந்தது. இன்று கேரளத்தில் மட்டுமே அது குறிப்பிடத்தக்க கட்சி. ஆனால் அதானியுடன் சேர்ந்து தனியார்மயத் திட்டங்களை அறிவிக்கும் நிலையில் உள்ளது. தமிழகத்திலேயே இளைஞர்கள் கட்சிக்குள் வருவது மிகமிக குறைவாகிவிட்டது. 2000 வரை டி.வை.எஃப்.ஐ எவ்வளவு வலுவாக இருந்தது என்பதும் இப்போது எப்படி இருக்கிறது என்பதும் கண்கூடு. தொழிற்சங்க இயக்கம் கூட தேய்வடைந்துள்ளது. அதற்கு என்ன காரணம் என்று சிந்திக்க விரும்பினீர்கள் என்றால், ஒரு விமர்சனம் என்ற அளவிலாவது பின்தொடரும் நிழலின் குரல் நாவலை பொருட்படுத்தலாமே? இத்தனை மூர்க்கமான மறுப்பை விட்டு அது என்ன சொல்கிறது என்று கொஞ்சம் யோசிக்கலாமே’
நீங்கள் நினைப்பது சரி. நண்பர் மேலும் கடுமையான வசைகளை பொழிந்தார். ‘இந்துத்துவச் சதிவலை’ என்றார். அவரிடம் பேசமுடியாது என்று தெரிந்து அமைதியானேன். உண்மையில் பின்தொடரும் நிழலின் குரல் பேசுவதே அந்த ‘பேசமுடியாத தன்மை’யைத்தானே?
சபாபதி சண்முகம்.
அன்புள்ள சபாபதி அவர்களுக்கு,
பின்தொடரும் நிழலின் குரலின் பேசுபொருளே அதுதான். கருத்தியல் மூர்க்கம். உயிர்நண்பர்கள் ஒருவரை ஒருவர் கொலைபுரிய முற்படும் அளவுக்கு அது செல்வது ஏன் என்னும் கேள்வி. நேற்றுவரை தலைவராக திகழ்ந்தவர் ஒரே இரவில் எப்படி துரோகி ஆகிறார் என்னும் கேள்வி.
அந்நாவல் வெளிவந்தபோது கடுமையான விமர்சனம் எழுதிய ஒருவர், அவர் தலைவராக எண்ணியிருந்த மருதையன் அவதூறு செய்யப்பட்டு, வசைபாடப்பட்டு, அந்த கட்சியில் இருந்து தூக்கி வீசப்பட்டபோது மனம் குமுறி, பின்தொடரும் நிழலின் குரல் பேசும் உண்மையின் ஒளியை குறிப்பிட்டு எனக்கு ஒரு தனிப்பட்ட கடிதம் எழுதியிருந்தார்.
அதேபோல ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஒருவர் கடிதம் எழுதுவதுண்டு. அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன் உ.ரா.வரதராசன் சாவின்போது இரண்டு தோழர்கள் அதேபோல கடிதங்கள் எழுதியிருக்கின்றனர்.மறைந்த கேரள மார்க்ஸிய ஆசான் பி.கோவிந்தப்பிள்ளை (அவருக்கு நன்றாகத் தமிழ் பேசத்தெரியும்) நாவல் வெளிவந்தபோது என்னிடம் ஒரு பிரதி கேட்டு வாங்கி படித்துவிட்டு எதிர்நிலையாக விமர்சித்தார். அவரே கட்சியிலிருந்து விலக்கப்பட்டு, அவதூறு செய்யப்பட்டபோது என்னிடம் பேசினார். சுருக்கமாக ‘உண்மை அப்படித்தான், அது மண்டையோட்டை உடைத்துத்தான் உள்ளே நுழையும்’ என்றார்.
இந்தக் கருத்தியல்மூர்க்கத்தை நேற்று மதவெறி மூர்க்கமாகப் பார்த்தோம். இன்று மதவாதஅரசியல், இன அரசியல், மொழியரசியல் அனைத்திலும் பார்க்கிறோம். இந்நாவல் வெளிவந்தபோது இதை இதற்குள் செயல்படுபவர்கள் மட்டுமே நேரடியாக உணரமுடியும் என்னும் சூழல் இருந்தது. இன்று, இருபத்தைந்தாண்டுகளுக்குப்பின், நம் சமூகவலைத்தளச் சூழல் அதை அப்பட்டமாகக் காட்டுகிறது. இதை நேரடியாக உணராத வாசிக்கும் நபர் என்று எவரும் இருக்கமுடியும் என நான் நினைக்கவில்லை.
நம்மூர் மார்க்ஸியர்களால் காழ்ப்பும் நிராகரிப்புமாகவே பேச முடியும், இன்று அவர்கள் கிட்டத்தட்ட மார்க்ஸியத்தை மட்டுமல்ல தொழிலாளர் நலனைக்கூட கைவிட்டுவிட்டு, இன்றைய திராவிட அரசியல் கட்சிகளின் கோஷங்களையும் கொள்கைகளையும் எதிரொலிக்கும் சிறிய ஒட்டுண்ணிக் கட்சியாக ஆகிவிட்டிருக்கின்றனர். ஒரு காலத்தில் இடதுசாரிகள்மேல் பெரும் பற்றுடன் இருந்தவர்கள், அதன்பொருட்டு என்னை வசைபாடியவர்கள்கூட இன்று உளம்புழுங்கிக்கொண்டிருக்கின்றனர். சிலர் பொதுவெளியில் ஓர் அடையாளமாக கட்சிச்சார்பை வைத்துக்கொண்டு களமாடிக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் என் நாவல் மார்க்ஸியத்துக்கு எதிரானது அல்ல. அன்றுமின்றும் அதையே திரும்பத் திரும்பச் சொல்கிறேன். அது மார்க்ஸியத்தின் மகத்தான மானுடநேய இலட்சியவாதத்தை உணர்ச்சிகரமாக முன்வைக்கும் நாவல் – எந்த மார்க்ஸியச் சார்புநூலையும் விட. மார்க்ஸிய வரலாற்றுவாதம் இன்றைய மிகச்சிறந்த ஆய்வுமுறை என வாதிடும் நாவல். மார்க்ஸிய அரசியலையே அது நிராகரிக்கிறது. அதிலுள்ள சர்வாதிகாரச் சாய்வுநிலை, கண்மூடித்தனமான விசுவாசத்தை எதிர்பார்க்கும் ராணுவமனநிலை, கருத்தியல் மூர்க்கம் இன்றைய ஜனநாயகத்துக்கு முற்றிலும் எதிரானது என்று வாதிடுகிறது.
என் பார்வையில் மார்க்சியம் இந்தியாவில் தேய்ந்துகொண்டிருப்பதற்கு மூலக்காரணம் இந்த மூர்க்கமே. ஆனால் அவர்கள் அதை புரிந்துகொள்ள அந்த மூர்க்கமே தடையாகிறது. மார்க்ஸியம் தேய்ந்தழிவதென்பது இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளைப் பொறுத்தவரை பொருளியலில் பேரழிவு. தொழிற்சங்கச்சூழலில் அந்த அழிவை கண்கூடாகக் காணமுடிகிறது.
ஜெ
சந்திரா தங்கராஜ்
கவிஞர், எழுத்தாளர், இதழாளர், திரைப்பட இயக்குனர். மலைநிலத்தின் இயற்கைச் சித்தரிப்பும், இழந்தவற்றிற்கான ஏக்கமும், நாட்டார் கதைகளின் சாயலும், பெண் மனத்தின் நுட்பமான அவதானங்களும் கொண்டவை அவரது படைப்புகள்

சிறுகதைத் தொகுப்புகள்பூனைகள் இல்லாத வீடு (உயிர்மை 2007)காட்டின் பெருங்கனவு (உயிரெழுத்து,2009)அழகம்மா (உயிரெழுத்து 2011)சோளம் (மொத்த கதைகளின் தொகுப்பு)(2022)கவிதைத் தொகுப்புகள்நீங்கிச் செல்லும் பேரன்பு ( உயிரெழுத்து,2009)வழிதவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள் (2015)மிளகு (எதிர் வெளியீடு,2020)வேறு வேறு சூரியன்கள் (சால்ட், 2024)
நாகர்கோயிலில் ஓர் உரையாற்றுகிறேன்
நூல் வெளியீடு. தெற்கிலிருந்து ஒளிரும் சூஃபி சுடர்கள். முனைவர் எச். முகமது சலீம் தொகுத்த கவிதைகள். நான் பேசுகிறேன். இடம் ஹோலிகிராஸ் கல்லூரி நாகர்கோயில். நாள் 10 செப்டெம்பர் புதன்கிழமை காலை 10 மணி.
காந்தி எனும் நிர்வாகி
டைனமிக் மல்டி மெட்டல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நடராஜன், தற்போது தான் படித்துக் கொண்டிருக்கும், எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய, ‘இன்றைய காந்தி’ புத்தகத்தை பற்றி பேசுகிறார்…
நண்பர் டைனமிக் நடராஜனின் பதிவு இது. தினமலர் இதழில்.
இன்றைய காந்தி நூல் வெளிவந்தபோது அது மாணவர்களுக்கு, அரசியல் ஆர்வமுள்ளவர்களுக்கு முதன்மையாக உதவும் என்னும் எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் ஆச்சரியமாக அந்நூலின் முதன்மை வாசகர்களாக அமைந்தவர்கள் ஏதேனும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள்தான். அவர்களே பெருவாரியாக அதை வாசித்தவர்கள், வாங்கி வினியோகமும் செய்தவர்கள்.
ஏனென்றால் காந்தியை ஓர் அரசியல்வாதியாக, தலைவராக மட்டும் அந்நூலில் விளக்கவில்லை. காந்தி என்ற மாபெரும் நிர்வாகவியல் மேதை அந்நூலில் திரண்டு வருகிறார். 1893ல் தன் இருபத்துநான்காவது வயதிலேயே அவர் தென்னாப்ரிக்காவின் உரிமைப்போராட்டத்தின் தலைவராக ஆனார். 1918ல் தன் 49 ஆவது வயதில் இந்தியா வந்தவர் வெறும் ஐந்தாண்டுகளில் காங்கிரஸின் தலைவராக ஆகி ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கினார். ஒரு தேசத்தையே கட்டுப்படுத்தினார். தன் கட்சியின் ஒவ்வொரு பகுதியுடனும் தொடர்புக கொண்டிருந்தார். தேசத்தின் ஒவ்வொரு மூலையையும் அறிந்திருந்தார். ஒவ்வொரு போராட்டத்தில் இருந்தும் பாடங்கள் கற்றுக்கொண்டார்.
இந்திய வரலாற்றின் தேசிய அளவிலான முதல் மக்கள்தலைவர் அவர்தான். வாழ்ந்த இறுதிநாள் வரை இந்தியாவில் அவர்தான் மக்கள் தலைவர், பிற அனைவரும் அவருடைய பெயரின் ஒளியால் திகழ்ந்தவர்களே. அந்த மாபெரும் நிர்வாகியைப்பற்றிய கட்டுரைகள் தொழில்முனைவோரை பெரிதும் கவர்ந்திருப்பதை உணர்ந்தேன்.
காந்தியை நாம் ஒரு அச்சுவடிவமாக ஆக்கிக்கொண்டுவிட்டோம். காந்தி இந்தியாவின் தந்தை, சுதந்திரப்போராட்டத்தை நடத்தியவர் என்பது ஒரு வரிதான். காந்தியின் முகங்கள் மேலும் பல.ஒவ்வொன்றையும் விளக்கும் நூல் இது.
ஜெ
இன்றைய காந்தி வாங்க இன்றையகாந்தி மின்னூல் வாங்கFirst-level philosophy classes, announcements.
இந்தியாவில் வளர்ந்து வெளிநாடு வந்து பல ஆண்டுகள் ஆகியும்கூட இவர்கள் இப்படியேதான் இருக்கிறார்கள். வெளிநாடுகளிலுள்ள எந்த பாஸிட்டிவான விஷயங்களிலும் ஈடுபடுவதில்லை. எந்தக் கொண்டாட்டங்களும் தெரியாது. ஜனநாயகம் பற்றி தெரியாது.
நம் ஆன்மீக வறுமைI have learned that the first-level philosophy class has all of its seats filled. I was waiting for this class for more than seven months and checked your site every day. I don’t know how and when this announcement was published. Is there a next class soon? As you know, there is no such class available for us in Tamil Nadu.
First-level philosophy classes, announcements.September 6, 2025
இரும்புக் கழுகு மேலெழுந்துவிட்டது!
வெள்ளை யானை என்னும் நாவல் என் நண்பரும் தலித் இயக்க முன்னோடிகளில் ஒருவருமான எழுத்து பிரசுரம் அலெக்ஸ் வெளியிட்டது. அவர் இரண்டு பதிப்புகளை வெளியிட்டார். அதன் ஏழாவது பதிப்பு விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.
அண்மையில் இந்நாவல் தெலுங்கில் எஸ்.குமார்- அவினேனி பாஸ்கர் மொழியாக்கத்தில் தெள்ளெ எனிகு என்னும் பேரில் தெலுங்கில் வெளியாகியுள்ளது. அதன் ஆங்கில மொழியாக்கம் இந்தியாவில் ஹார்ப்பர் காலின்ஸ் நிறுவனத்தாலும் அமெரிக்காவில் எஃப்.எஸ்.ஜி நிறுவனத்தாலும் வெளியிடப்படவுள்ளது. மொழியாக்கம் பிரியம்வதா ராம்குமார்.
தெலுங்கில் இளையபடைப்பாளியான பிரசாத் சூரி எழுதிய மதிப்புரை இது
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், துல்லியமாகச் சொன்னால், 1870களில் நடக்கும் ஒரு கதை இது.
இந்த நாவல் ஒரு மாலை நேரத்தில் சென்னை நகரில் தொடங்குகிறது. அங்கு சக்திவாய்ந்த பிரிட்டிஷ் பேரரசின் நன்கு பயிற்சி பெற்ற அதிகாரியான ஏய்டன் என்ற வெள்ளை ஐரிஷ் மனிதர் பணியாற்றுகிறார். ஒரு நாள் சென்னை கடற்கரைச்சாலையில் தன் குதிரையில் கோட்டை நோக்கிச் செல்லும் அவர் காணும் காட்சியில் நாவல் தொடங்குகிறது
ஒரு வேளை உணவுக்காக, கொடிய அரக்கனின் குகை போன்ற ஒரு குளிர்க்கிடங்கான “ஐஸ் ஹவுஸ்“க்குள் வந்த துரதிர்ஷ்டவசமான ஆன்மாக்களின் கதை இந்நாவல். அங்கு கடுங்குளிர் எலும்புகளைக் கூட முறுக்கும். அதன் பிறகு, வாசகர்கள் வெறும் பார்வையாளர்கள். மனசாட்சியும் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் தைரியமும் உள்ள எவரும் அதன்பின் இந்தக் கதையைப் படிப்பதை நிறுத்த முடியாது.
நமது காலத்தின் சிறந்த கதைசொல்லியான ஜெயமோகன், வரலாற்றில் வெறும் அடிக்குறிப்புகளாகவே இருந்த வரலாற்று உண்மைகளை மிகவும் சிரமப்பட்டு ஆராய்ந்து, அவற்றை நமக்கான கதையாக மாற்றியுள்ளார்.
இந்தப் புத்தகம் உரையாடல்களின் வழியாக வெளிவரும் வெவ்வேறு வரலாற்று யதார்த்தங்களால் நிரம்பியுள்ளது. போக்குவரத்து மிகவும் எளிதாகிவிட்ட இன்றைய காலத்தில், வட இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்குக் கூட தென்னிந்தியா எப்படிப்பட்டது என்று தெரியாது. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை ஊகிக்கக்கூடியதே. இந்த நாவல், அக்கால மக்கள் தங்ஜகள் நாட்டில் மிக அண்மையில் நிகழ்வனவற்றைக்கூட அறிந்திருக்கவில்லை என்று காட்டுகிறது. தொலைவில் நடக்கும் நிகழ்வுகள் தங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை சற்றும் அறிந்திருக்கவில்லை என்பதை விளக்குகிறது.
இந்நாவல் காட்டும் மாபெரும் பஞ்சத்தின் சித்திரங்கள் கொடியவை. சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து மனித முன்னேற்றம் அனைத்தும் அர்த்தமற்றதாகிவிட்டன போல் உணர்ந்தேன்.
ஜெயமோகனுடன் ஒரு நேர்காணலில் இருந்து ஒரு கருத்தை நான் நினைவு கூர்ந்தேன். ஒரு படைப்பை பல கோணங்களில் வாசிக்கவும் புரிந்துகொள்ளவும் படுவதில்தான் அதன் ஆழம் உள்ளது என்று கூறினார். தனது குதிரை வண்டியைச் சுற்றியுள்ள பஞ்சத்தில் சாகும் மக்கள், கைகளை நீட்டி, தங்கள் உயிரைக் காப்பாற்ற கெஞ்சுவதைப் பற்றி எய்டன் என்ன நினைக்கிறார் என்பதை நாவலில் பாருங்கள்.
அந்தப் பகுதியைப் படிக்கும்போது என் கண்களில் கண்ணீர் பெருகியது. மக்கள் உணவின்றி ஆயிரக்கணாக்காக அப்படியே அழிந்து போனதைப் பற்றிப் படித்தபோது, ”இது உண்மையா?” என்று யோசிப்பதற்குப் பதிலாக, “பாலஸ்தீனத்தில் மக்கள் இப்போது எதிர்கொள்ளும் அதே நிலைமைதன இது இல்லையா, நாம் வாழும் அதே பூமியில்?” என்று உணர்ந்தேன். காலம் மாறியிருக்கலாம்.காரணம் இயற்கையான பஞ்சம் அல்லது செயற்கையான போர் எதுவாகவும் இருக்கலாம். ஆனால் மானுட நிலைமைகள் மாறவில்லை.
வங்காளப் பஞ்சம் பற்றி நான் நீண்ட காலத்திற்கு முன்பு படித்த சுகுமார் சென் என்ற அறிஞரின கூற்று எனக்கு நினைவுக்கு வந்தது. ‘பசியால் வாடும் இந்த மக்கள் அனைவரும் தானியக் கிடங்குகளைத் தாக்கி ஏன் கொள்ளையடிக்கக் கூடாது? ஏன் அவர்கள் அதைச் செய்வதில்லை’ அந்த எண்ணம் இந்நாவலிலும் எனக்குள் மீண்டும் தோன்றியது.
சில நாட்களாக, இதே எண்ணங்கள் என்னை வேட்டையாடி வருகின்றன. நாவலின் ஒரு முக்கியக் காட்சியில், அனைத்துத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். அந்த நேரத்தில், ஏய்டன் தனது கண்களுக்கு முன்பாக என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டிருப்பது போலவே நாமும் பார்க்கிறோம்.
லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்திற்கு பலியாக்கப்பட்டபோது, மீட்பு நடவடிக்கைக்கு முன்வந்த பிரிட்டிஷ் அரசாங்கம் அப்பஞ்சங்களை பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு பல பெரிய கட்டுமானத் திட்டங்களுக்கான திட்டங்களைத் தயாரித்தது. பட்டினியால் வாடும் அந்த மக்கள் அனைவருக்கும் வேலை வழங்குவது போல. ஆனால் உழைப்பைச் சுரண்டுவதே நோக்கம். பக்கிங்ஹாம் கால்வாய் அப்படித்தான் தொடங்கப்பட்டது, அது தெலுங்கு மக்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு திட்டம் என்று நான் நம்புகிறேன். பலலயிரம் உயிர்களைப் பலிகொண்ட திட்டம் அது.
ஆனால் இந்த நாட்டில், கொடிய பசியால் கூட மக்களை கிளர்ச்சிக்கு இட்டுச் செல்ல முடியாது. பஞ்சத்தின் போது உயிர்வாழ சக மனிதனைக் கொன்று சாப்பிட்ட கதைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். உணவு நிரம்பிய வண்டிகளும், செல்வக் குவியல்களும் தங்களைச் சுற்றி கிடப்பதைக் கண்டும்கூட இங்குள்ள மக்களுக்குப் பறித்து கொள்ளையடிக்க ஆசை வராததற்குக் காரணம் என்ன? அவர்களைக் கட்டிப்போட்ட அந்த “பொது மனநிலை”தான் என்ன?
இந்த நாட்டில் உள்நாட்டுப் போர்களும் பிரெஞ்சுப் புரட்சிகளும் ஏன் நடக்கவில்லை? ரோமானியப் பேரரசுக்கு எதிராக அடிமைகள் கிளர்ச்சி செய்த வரலாறு போன்ற ஒன்று ஏன் நமக்கு இல்லை? அந்தக் கேள்விகளுக்கெல்லாம் நான் “வெளை யானை” நாவலில் பதில்களைக் கண்டேன். இந்த நாவல் வரலாற்றைப் பற்றிய நமது புரிதலையும் கண்ணோட்டத்தையும் முற்றிலுமாக மாற்றுகிறது.
எழுத்தின் சக்தியைப் புரிந்து கொள்ள, ஒருவர் இது போன்ற புத்தகங்களைப் படிக்க வேண்டும். “நான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டால்” என்று வழக்கமாக சொல்லும் தேய்வழக்குபோல, எனக்கு அதிகாரம் இருந்தால், இந்த நாவலை துண்டுப் பிரசுரங்களாக அச்சிட்டு இரண்டு தெலுங்கு மாநிலங்களிலும் விநியோகிப்பேன். ஷரன் குமார் லிம்பாலேவின் “சனாதனம்” நாவலைப் படித்தபோது எனக்கு முன்பு இதே உணர்வு ஏற்பட்டது.
வரலாற்றில் இறந்த மக்களின் மௌன அலறல்கள் அலைகின்றன. இந்த நாவலில் அந்த அலறல்களைக் கேட்கலாம். இந்த நாட்டின் வரலாற்றிலும், நமது சுதந்திரப் போராட்டத்திலும், பல ஹீரோக்களின் கதைகளைக் கேட்டிருக்கிறோம். அவர்கள் அனைவரும் அநீதி மற்றும் ஊழலுக்கு எதிராகப் போராடினர். உண்மைதான் ஆனால் இந்த நாட்டில், உயிர்வாழ்வதற்காக கடினமாக உழைத்து வாழும் லட்சக கணக்கான சமூகங்கள் இருந்தனரே. அவர்கள் அனைவரும் அந்த நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
வெள்ளையர் இந்த நாட்டைக் கொள்ளையடித்தார்கள. தனது கொள்ளைக்காக, அவர் ரயில்வே, சாலைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைக் கட்டினார். இதன் காரணமாக, இந்த நாட்டின் வரலாறு மாறியது. நவீன யுகம் விழிப்புணர்வு பெற்றதிலிருந்து அடிமைத்தனத்தில் வாடிக்கொண்டிருந்த சமூகங்கள்; தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்க்கும் ஞானத்தைப் பெற்றனர். ஆனால் ஏன் பெரும் கிளர்ச்சிகள் நிகழவில்லை. இந்த நாடு ரத்தினங்களின் கருவறையாக இருக்கலாம், ஆனால் அன்றும் இன்றும், அந்த செல்வத்தை யார் அனுபவிக்கிறார்கள்?
இந்த நாவல் ஒரு அம்பேத்கரின் பிறப்புக்கு வழிவகுத்த நிலைமைகள் மற்றும் காந்தி எவ்வாறு மகாத்மா ஆனார் என்பதைப் பற்றி மறைமுகமாக நமக்குச் சொல்கிறது.
மொழிபெயர்ப்பு சிறப்பாக உள்ளது. இது வாசிப்பை ஒரு இனிமையான அனுபவமாக மாற்றியது.
ஒரு அறப்பேருரையைக் கேட்ட பிறகு கூறப்படும் வாழ்த்து போல இதைச் சொல்கிறேன. அனைவருக்கும் நல்வாழ்வு கிடைக்கட்டும். இந்த நாவலை எழுதியவருக்கு, அதை வெளியிட்டவருக்கு, அதை மொழிபெயர்த்தவருக்கு, அதைப் படித்தவருக்கு.
இரும்புப் பருந்து எழுந்துவிட்டது
அறுவடைக்கு நெருப்பு விளைந்துவிட்டது
துரோகங்கள் அழிக்கப்படடும்
பிழைகள் களையப்படட்டும்
சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் தோழமை
அடித்தளங்களாக நிலைகொள்ளட்டும்
இல்லங்கள் பொலிவுறுக
அனைத்து மானுடருக்கும்
அமைதி அமைதி அமைதி
பிரசாத் சூரி
இரும்புக் கழுகு மேலெழுந்துவிட்டது!
வெள்ளை யானை என்னும் நாவல் என் நண்பரும் தலித் இயக்க முன்னோடிகளில் ஒருவருமான எழுத்து பிரசுரம் அலெக்ஸ் வெளியிட்டது. அவர் இரண்டு பதிப்புகளை வெளியிட்டார். அதன் ஏழாவது பதிப்பு விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.
அண்மையில் இந்நாவல் தெலுங்கில் எஸ்.குமார்- அவினேனி பாஸ்கர் மொழியாக்கத்தில் தெள்ளெ எனிகு என்னும் பேரில் தெலுங்கில் வெளியாகியுள்ளது. அதன் ஆங்கில மொழியாக்கம் இந்தியாவில் ஹார்ப்பர் காலின்ஸ் நிறுவனத்தாலும் அமெரிக்காவில் எஃப்.எஸ்.ஜி நிறுவனத்தாலும் வெளியிடப்படவுள்ளது. மொழியாக்கம் பிரியம்வதா ராம்குமார்.
தெலுங்கில் இளையபடைப்பாளியான பிரசாத் சூரி எழுதிய மதிப்புரை இது
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், துல்லியமாகச் சொன்னால், 1870களில் நடக்கும் ஒரு கதை இது.
இந்த நாவல் ஒரு மாலை நேரத்தில் சென்னை நகரில் தொடங்குகிறது. அங்கு சக்திவாய்ந்த பிரிட்டிஷ் பேரரசின் நன்கு பயிற்சி பெற்ற அதிகாரியான ஏய்டன் என்ற வெள்ளை ஐரிஷ் மனிதர் பணியாற்றுகிறார். ஒரு நாள் சென்னை கடற்கரைச்சாலையில் தன் குதிரையில் கோட்டை நோக்கிச் செல்லும் அவர் காணும் காட்சியில் நாவல் தொடங்குகிறது
ஒரு வேளை உணவுக்காக, கொடிய அரக்கனின் குகை போன்ற ஒரு குளிர்க்கிடங்கான “ஐஸ் ஹவுஸ்“க்குள் வந்த துரதிர்ஷ்டவசமான ஆன்மாக்களின் கதை இந்நாவல். அங்கு கடுங்குளிர் எலும்புகளைக் கூட முறுக்கும். அதன் பிறகு, வாசகர்கள் வெறும் பார்வையாளர்கள். மனசாட்சியும் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் தைரியமும் உள்ள எவரும் அதன்பின் இந்தக் கதையைப் படிப்பதை நிறுத்த முடியாது.
நமது காலத்தின் சிறந்த கதைசொல்லியான ஜெயமோகன், வரலாற்றில் வெறும் அடிக்குறிப்புகளாகவே இருந்த வரலாற்று உண்மைகளை மிகவும் சிரமப்பட்டு ஆராய்ந்து, அவற்றை நமக்கான கதையாக மாற்றியுள்ளார்.
இந்தப் புத்தகம் உரையாடல்களின் வழியாக வெளிவரும் வெவ்வேறு வரலாற்று யதார்த்தங்களால் நிரம்பியுள்ளது. போக்குவரத்து மிகவும் எளிதாகிவிட்ட இன்றைய காலத்தில், வட இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்குக் கூட தென்னிந்தியா எப்படிப்பட்டது என்று தெரியாது. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை ஊகிக்கக்கூடியதே. இந்த நாவல், அக்கால மக்கள் தங்ஜகள் நாட்டில் மிக அண்மையில் நிகழ்வனவற்றைக்கூட அறிந்திருக்கவில்லை என்று காட்டுகிறது. தொலைவில் நடக்கும் நிகழ்வுகள் தங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை சற்றும் அறிந்திருக்கவில்லை என்பதை விளக்குகிறது.
இந்நாவல் காட்டும் மாபெரும் பஞ்சத்தின் சித்திரங்கள் கொடியவை. சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து மனித முன்னேற்றம் அனைத்தும் அர்த்தமற்றதாகிவிட்டன போல் உணர்ந்தேன்.
ஜெயமோகனுடன் ஒரு நேர்காணலில் இருந்து ஒரு கருத்தை நான் நினைவு கூர்ந்தேன். ஒரு படைப்பை பல கோணங்களில் வாசிக்கவும் புரிந்துகொள்ளவும் படுவதில்தான் அதன் ஆழம் உள்ளது என்று கூறினார். தனது குதிரை வண்டியைச் சுற்றியுள்ள பஞ்சத்தில் சாகும் மக்கள், கைகளை நீட்டி, தங்கள் உயிரைக் காப்பாற்ற கெஞ்சுவதைப் பற்றி எய்டன் என்ன நினைக்கிறார் என்பதை நாவலில் பாருங்கள்.
அந்தப் பகுதியைப் படிக்கும்போது என் கண்களில் கண்ணீர் பெருகியது. மக்கள் உணவின்றி ஆயிரக்கணாக்காக அப்படியே அழிந்து போனதைப் பற்றிப் படித்தபோது, ”இது உண்மையா?” என்று யோசிப்பதற்குப் பதிலாக, “பாலஸ்தீனத்தில் மக்கள் இப்போது எதிர்கொள்ளும் அதே நிலைமைதன இது இல்லையா, நாம் வாழும் அதே பூமியில்?” என்று உணர்ந்தேன். காலம் மாறியிருக்கலாம்.காரணம் இயற்கையான பஞ்சம் அல்லது செயற்கையான போர் எதுவாகவும் இருக்கலாம். ஆனால் மானுட நிலைமைகள் மாறவில்லை.
வங்காளப் பஞ்சம் பற்றி நான் நீண்ட காலத்திற்கு முன்பு படித்த சுகுமார் சென் என்ற அறிஞரின கூற்று எனக்கு நினைவுக்கு வந்தது. ‘பசியால் வாடும் இந்த மக்கள் அனைவரும் தானியக் கிடங்குகளைத் தாக்கி ஏன் கொள்ளையடிக்கக் கூடாது? ஏன் அவர்கள் அதைச் செய்வதில்லை’ அந்த எண்ணம் இந்நாவலிலும் எனக்குள் மீண்டும் தோன்றியது.
சில நாட்களாக, இதே எண்ணங்கள் என்னை வேட்டையாடி வருகின்றன. நாவலின் ஒரு முக்கியக் காட்சியில், அனைத்துத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். அந்த நேரத்தில், ஏய்டன் தனது கண்களுக்கு முன்பாக என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டிருப்பது போலவே நாமும் பார்க்கிறோம்.
லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்திற்கு பலியாக்கப்பட்டபோது, மீட்பு நடவடிக்கைக்கு முன்வந்த பிரிட்டிஷ் அரசாங்கம் அப்பஞ்சங்களை பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு பல பெரிய கட்டுமானத் திட்டங்களுக்கான திட்டங்களைத் தயாரித்தது. பட்டினியால் வாடும் அந்த மக்கள் அனைவருக்கும் வேலை வழங்குவது போல. ஆனால் உழைப்பைச் சுரண்டுவதே நோக்கம். பக்கிங்ஹாம் கால்வாய் அப்படித்தான் தொடங்கப்பட்டது, அது தெலுங்கு மக்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு திட்டம் என்று நான் நம்புகிறேன். பலலயிரம் உயிர்களைப் பலிகொண்ட திட்டம் அது.
ஆனால் இந்த நாட்டில், கொடிய பசியால் கூட மக்களை கிளர்ச்சிக்கு இட்டுச் செல்ல முடியாது. பஞ்சத்தின் போது உயிர்வாழ சக மனிதனைக் கொன்று சாப்பிட்ட கதைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். உணவு நிரம்பிய வண்டிகளும், செல்வக் குவியல்களும் தங்களைச் சுற்றி கிடப்பதைக் கண்டும்கூட இங்குள்ள மக்களுக்குப் பறித்து கொள்ளையடிக்க ஆசை வராததற்குக் காரணம் என்ன? அவர்களைக் கட்டிப்போட்ட அந்த “பொது மனநிலை”தான் என்ன?
இந்த நாட்டில் உள்நாட்டுப் போர்களும் பிரெஞ்சுப் புரட்சிகளும் ஏன் நடக்கவில்லை? ரோமானியப் பேரரசுக்கு எதிராக அடிமைகள் கிளர்ச்சி செய்த வரலாறு போன்ற ஒன்று ஏன் நமக்கு இல்லை? அந்தக் கேள்விகளுக்கெல்லாம் நான் “வெளை யானை” நாவலில் பதில்களைக் கண்டேன். இந்த நாவல் வரலாற்றைப் பற்றிய நமது புரிதலையும் கண்ணோட்டத்தையும் முற்றிலுமாக மாற்றுகிறது.
எழுத்தின் சக்தியைப் புரிந்து கொள்ள, ஒருவர் இது போன்ற புத்தகங்களைப் படிக்க வேண்டும். “நான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டால்” என்று வழக்கமாக சொல்லும் தேய்வழக்குபோல, எனக்கு அதிகாரம் இருந்தால், இந்த நாவலை துண்டுப் பிரசுரங்களாக அச்சிட்டு இரண்டு தெலுங்கு மாநிலங்களிலும் விநியோகிப்பேன். ஷரன் குமார் லிம்பாலேவின் “சனாதனம்” நாவலைப் படித்தபோது எனக்கு முன்பு இதே உணர்வு ஏற்பட்டது.
வரலாற்றில் இறந்த மக்களின் மௌன அலறல்கள் அலைகின்றன. இந்த நாவலில் அந்த அலறல்களைக் கேட்கலாம். இந்த நாட்டின் வரலாற்றிலும், நமது சுதந்திரப் போராட்டத்திலும், பல ஹீரோக்களின் கதைகளைக் கேட்டிருக்கிறோம். அவர்கள் அனைவரும் அநீதி மற்றும் ஊழலுக்கு எதிராகப் போராடினர். உண்மைதான் ஆனால் இந்த நாட்டில், உயிர்வாழ்வதற்காக கடினமாக உழைத்து வாழும் லட்சக கணக்கான சமூகங்கள் இருந்தனரே. அவர்கள் அனைவரும் அந்த நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
வெள்ளையர் இந்த நாட்டைக் கொள்ளையடித்தார்கள. தனது கொள்ளைக்காக, அவர் ரயில்வே, சாலைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைக் கட்டினார். இதன் காரணமாக, இந்த நாட்டின் வரலாறு மாறியது. நவீன யுகம் விழிப்புணர்வு பெற்றதிலிருந்து அடிமைத்தனத்தில் வாடிக்கொண்டிருந்த சமூகங்கள்; தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்க்கும் ஞானத்தைப் பெற்றனர். ஆனால் ஏன் பெரும் கிளர்ச்சிகள் நிகழவில்லை. இந்த நாடு ரத்தினங்களின் கருவறையாக இருக்கலாம், ஆனால் அன்றும் இன்றும், அந்த செல்வத்தை யார் அனுபவிக்கிறார்கள்?
இந்த நாவல் ஒரு அம்பேத்கரின் பிறப்புக்கு வழிவகுத்த நிலைமைகள் மற்றும் காந்தி எவ்வாறு மகாத்மா ஆனார் என்பதைப் பற்றி மறைமுகமாக நமக்குச் சொல்கிறது.
மொழிபெயர்ப்பு சிறப்பாக உள்ளது. இது வாசிப்பை ஒரு இனிமையான அனுபவமாக மாற்றியது.
ஒரு அறப்பேருரையைக் கேட்ட பிறகு கூறப்படும் வாழ்த்து போல இதைச் சொல்கிறேன. அனைவருக்கும் நல்வாழ்வு கிடைக்கட்டும். இந்த நாவலை எழுதியவருக்கு, அதை வெளியிட்டவருக்கு, அதை மொழிபெயர்த்தவருக்கு, அதைப் படித்தவருக்கு.
இரும்புப் பருந்து எழுந்துவிட்டது
அறுவடைக்கு நெருப்பு விளைந்துவிட்டது
துரோகங்கள் அழிக்கப்படடும்
பிழைகள் களையப்படட்டும்
சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் தோழமை
அடித்தளங்களாக நிலைகொள்ளட்டும்
இல்லங்கள் பொலிவுறுக
அனைத்து மானுடருக்கும்
அமைதி அமைதி அமைதி
பிரசாத் சூரி
போகன் சங்கர்

தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர். திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்தவர் நாகர்கோயிலில் வசிக்கிறார். சுயஎள்ளலும், உணர்ச்சிகளை மிதமாக வெளிப்படுத்தும் தன்மையும் அகத்தேடலும் கொண்ட கவிதைகளுக்காகப் புகழ்பெற்றவர்.
போகன் சங்கர்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
