Jeyamohan's Blog, page 15
September 18, 2025
ஐசக் பேசில் எமரால்ட்
ஐசக் பேசில் எமரால்டின் சிறுகதைகளின் உத்தியில் Interior Monologue எனப்படும் உள் உரையாடல் தன்மை இருப்பதாக , எழுத்தாளர் தமிழவன் குறிப்பிடுகிறார். ‘அபினி’ நாவல் நவீன இருத்தலியல் எழுத்து வகைமைக்குள் வருவதாக கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் மதிப்பிடுகிறார்.
ஐசக் பேசில் எமரால்ட்
ரமேஷ் பிரேதன், கடிதங்கள்
அன்புள்ள ஜெ
ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தமிழில் இலக்கியம் என்பது ஒரு சின்ன துளி டீ சிந்திக்கிடப்பதுபோல. அதில் மொய்க்கும் ஈ போலத்தான் வாசகர்களும் எழுத்தாளர்களும். ஒரு குட்டி உலகம். இதில் நம்பிக்கை இழக்காமல் செயல்படுபவர்களின் கொடை மிகப்பெரியது. இந்தச் சமூகத்திற்கு அக்கறை இல்லை என்று தெரிந்தாலும் செயல்பட்டுக்கொண்டே இருப்பவர்கள் அவர்கள். அவர்களில் ஒருவர் ரமேஷ். அவருடைய சிறுகதைகளை மட்டும்தான் நான் வாசித்துள்ளேன். ஐந்தவித்தான் நாவலை வாசிக்க தொடங்கி பல காரணங்களால் முடிக்கவில்லை. வாசிக்கவேண்டும். அவர் மீது ஒரு புதிய வாசகர் கவனம் உருவாக இந்த விருது உதவியிருக்கிறது.
சந்திரசேகர்
அன்புள்ள ஜெமோ
நான் சென்ற ஆண்டு விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வந்திருந்தேன். சனியன்று நிகழும் விவாத அரங்கு ஒரு பெரிய இலக்கிய விழாவுக்கு நிகரானது. ஒரு அமர்வில் சராசரியாக 400 பேர் வரை இருக்கிறார்கள். ஆகவே அந்த அரங்கிலே இடம் போதவில்லை. மிகப்பெரிய கூட்டத்தில் இருந்துகொண்டு எழுத்தாளரைச் சந்திக்கமுடியவில்லை. கேள்வி கேட்பதும் முடியவில்லை. பலர் இடம் இல்லாமல் வெளியே நின்றிருக்கிறார்கல்.
இந்தியாவிலுள்ள லிட் ஃபெஸ்ட்களில் பல அமர்வுகள் உள்ளன. அதேபோல இங்கும் இரண்டு அரங்குகளை ஏற்பாடு செய்யலாமே? ஓர் அரங்கை இன்னொரு கூடத்தில் அமைக்க வாய்ப்புண்டா என்று யோசிக்கவும். ஓர் அரங்கில் இருநூறுபேர் இருந்தால் கேள்விகேட்கவும் கவனிக்கவும் கூடுதல் வாய்ப்பு என நினைக்கிறேன்.
மா.கிருஷ்ணசாமி
உடல்நலிந்த நிலையில் இருக்கும் ரமேஷ் பிரேதனுக்கு தனிப்பட்ட முறையில் உதவிசெய்ய விரும்புபவர்கள் செய்யலாம்.
RAMESH . MS.B. A/C. No. 32821202848STATE BANK OF INDIAMUTHIALPET BRANCHIFSC CODE: SBIN0015420
ரமேஷ் பிரேதன், கடிதங்கள்
அன்புள்ள ஜெ
ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தமிழில் இலக்கியம் என்பது ஒரு சின்ன துளி டீ சிந்திக்கிடப்பதுபோல. அதில் மொய்க்கும் ஈ போலத்தான் வாசகர்களும் எழுத்தாளர்களும். ஒரு குட்டி உலகம். இதில் நம்பிக்கை இழக்காமல் செயல்படுபவர்களின் கொடை மிகப்பெரியது. இந்தச் சமூகத்திற்கு அக்கறை இல்லை என்று தெரிந்தாலும் செயல்பட்டுக்கொண்டே இருப்பவர்கள் அவர்கள். அவர்களில் ஒருவர் ரமேஷ். அவருடைய சிறுகதைகளை மட்டும்தான் நான் வாசித்துள்ளேன். ஐந்தவித்தான் நாவலை வாசிக்க தொடங்கி பல காரணங்களால் முடிக்கவில்லை. வாசிக்கவேண்டும். அவர் மீது ஒரு புதிய வாசகர் கவனம் உருவாக இந்த விருது உதவியிருக்கிறது.
சந்திரசேகர்
அன்புள்ள ஜெமோ
நான் சென்ற ஆண்டு விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வந்திருந்தேன். சனியன்று நிகழும் விவாத அரங்கு ஒரு பெரிய இலக்கிய விழாவுக்கு நிகரானது. ஒரு அமர்வில் சராசரியாக 400 பேர் வரை இருக்கிறார்கள். ஆகவே அந்த அரங்கிலே இடம் போதவில்லை. மிகப்பெரிய கூட்டத்தில் இருந்துகொண்டு எழுத்தாளரைச் சந்திக்கமுடியவில்லை. கேள்வி கேட்பதும் முடியவில்லை. பலர் இடம் இல்லாமல் வெளியே நின்றிருக்கிறார்கல்.
இந்தியாவிலுள்ள லிட் ஃபெஸ்ட்களில் பல அமர்வுகள் உள்ளன. அதேபோல இங்கும் இரண்டு அரங்குகளை ஏற்பாடு செய்யலாமே? ஓர் அரங்கை இன்னொரு கூடத்தில் அமைக்க வாய்ப்புண்டா என்று யோசிக்கவும். ஓர் அரங்கில் இருநூறுபேர் இருந்தால் கேள்விகேட்கவும் கவனிக்கவும் கூடுதல் வாய்ப்பு என நினைக்கிறேன்.
மா.கிருஷ்ணசாமி
உடல்நலிந்த நிலையில் இருக்கும் ரமேஷ் பிரேதனுக்கு தனிப்பட்ட முறையில் உதவிசெய்ய விரும்புபவர்கள் செய்யலாம்.
RAMESH . MS.B. A/C. No. 32821202848STATE BANK OF INDIAMUTHIALPET BRANCHIFSC CODE: SBIN0015420
ங போல் வளை. கடிதம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
ஒரு சில புத்தகங்களை, காவியங்களை, இலக்கிய படைப்புகளை மீண்டும் மீண்டும் வாசிப்பவர்கள் இருக்கிறார்கள். அவ்வெழுத்து அவர்களது வாழ்வின் ஒரு பகுதியாக, வாழ்வை வழிநடத்தும் ஒரு ஆற்றலாக மாறிவிடுவதுண்டு. அப்படி வாசித்த அனுபவம் உள்ளவர்கள் அறியும் ஒன்றுண்டு. அந்த நூல் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் ஒரு புதிய வெளிச்சத்தை, ஆழ்ந்த அறிதலை, அல்லது ஒரு நகர்வை அளித்துவிடும். ஒரு சிலருக்குத் திருக்குறள் அப்படி வாழ்நாள் மொத்தமும் உடன்வரும் நூலாக இருக்கும். பல தலைவர்களுக்கும் கீதை அவ்விதம் இருந்திருக்கிறது. ஒரே குறள் வெவ்வேறு வாழ்க்கைத் தருணங்களில் வெவ்வேறு விதமாகத் தன்னைத் திறந்து காட்டும். அது பேசப்படும் பொருளின் என்றைக்குமான தன்மை காரணமாகவும், அந்நூலை எழுதியவர்கள் தங்கள் வாழ்நாள் முழுமையையும் அந்த நூலின் உள்ளடக்கத்தின் செயல்முறை விளக்கமாக வாழ்வை நடத்திப் பார்த்தவர்களாக, அதாவது தங்கள் சாதனாவில் உறுதியாக அமைந்தவர்களாக இருப்பதையும் சற்று கவனித்தால் உணரலாம். வெறும் அறிவுத்திறனில், கற்பனைத்திறனில் இருந்து எழுதப்படும் சொற்கள் அவ்விதம் காலம்தாண்டி நீடிப்பதில்லை.
அவ்விதம் என்னைத் தொடர்ந்து வழிநடத்திக் கொண்டே இருக்கும் இலக்கியப் படைப்பாக வெண்முரசை உணர்வதுண்டு. நமது வாசிப்பு மேம்படுவதால், நண்பர்களோடு தொடர்ந்து விவாதிப்பதால் அல்லது நாமும் அனுபவங்கள் வழியாக மாற்றமடைந்து கொண்டே இருப்பதால் அது ஒவ்வொரு முறையும் ஒரு திறப்பை அளிப்பதாக எண்ணிக் கொள்வேன். இது குறித்து ஒரு முறை நண்பரும் ஆசிரியருமான குருஜி சௌந்தரிடம் குறிப்பிட்ட போது, அதற்கு வேறு ஒரு பரிமாணத்தில் மற்றொரு காரணம் இருக்கிறது என்றார். நமது பிராணன் உத்தானன் ஆகும் போது, (மேன்மேலும் வளர்ச்சி அடையும் போது), இத்தகைய மேலான பேசுபொருள் கொண்ட ஆக்கங்களை மீள வாசிக்கையில், அந்த நூல்களின் உண்மையான சாரம், மேலான மெய்ப்பொருள் நம்மை வந்தடையும் என்றார்.
இந்த ‘ஙப் போல் வளை‘ என்னும் யோக நூலை, அது தொடராக வந்த போதும், அதன் பின்னரும், இன்று நூலாக நம் கையில் வந்தபிறகும் என பலமுறை வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் இதன் பல வரிகள் புதிய ஒளியில் தெரிகின்றன. தன் வாழ்வையே சாதனாவாக மாற்றி வைத்திருக்கும் ஒரு யோகியின் சொற்கள் என்பதால் வரும் செறிவு.
உதாரணமாக “ஒன்றுடன் வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டே இருப்பதை விட, அதை ஆளும் ஒன்றை, ஆற்றல் மிக்க ஒன்றாக மாற்றுவதையே யோகமுறைமை முன்வைக்கிறது” என்னும் வரி. பொருள் விளக்கம் தேவையற்ற எளிய சொற்கள். ஆனால் சாதனாவின் பாதையில் நமது அக எல்லைகளில் முட்டித் திகைத்து நிற்கும் போது சட்டென விளக்கேற்றி வைக்கிறது இந்த வரி.
இயம நியமங்கள் குறித்து சொல்லும் போது, “சந்தோஷமான மனநிலையை நீண்ட நேரம் தக்கவைத்துக் கொள்ளுதல், முடிந்தவரை ஒன்றின் மீது அதீத பற்றும், பிடிப்பும் கொள்ளாதிருத்தல். இது ஒரு தொடக்கப்புள்ளிதான். ” என்கிறார். சந்தோஷமாக நீண்ட நேரம் இருத்தலும், அதீத பற்றிலாதிருத்தலும் சிறு தொடக்கமே, அதைப் பயில் முயல்வதில் வரும் தொய்வுகளை அனுபவிக்கும் போது, இந்த வரி இப்போது மேலும் செறிவு கொள்கிறது
முதல் வாசிப்புக்கு எளிய நடை போல மயக்கம் காட்டிவிடக் கூடியது இந்த புத்தகம். ஆனால் இது தொட்டுக்காட்டும் பல முக்கியமான பேசுபொருட்கள், கடல்நீருக்கு மேல் தன் நுனி மட்டும் காட்டும் பனிமலைச் சிகரங்கள் போன்றவை. அலைகளைக் கடல் என அறிந்திருக்கும் முதல்நிலை கடந்து கடலை அறிவதற்கு ஆழத்தை நோக்கி இறங்குபவர்களுக்கு அடி காணவியலாது நிற்பது ஆழி. இந்த நூல் வழியாக யோகத்தில் நுழையும் ஒருவருக்கு புதிய ஆழங்கள் திறப்பது உறுதி.
இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகளை தொகுத்துக் கொள்ளும் வசதிக்காக மூன்று விதமாக வகைப்படுத்தலாம் என நினைக்கிறேன்.
முதலாவது மரபார்ந்த யோகக் கல்வியின் ஆதாரமான கருதுகோள்கள் – பஞ்ச கோஷங்கள், பஞ்ச பிராணன், நாடிகள், த்ரயக் தனாவ் எனப்படும் மூன்றடுக்குப் பதற்றங்கள், வாழ்வின் ஆறு நிலைகள், தமோகுணத்தின் ஐந்து நிலைகள், யோகத்தின் எட்டு அங்கங்கள், சங்கல்பம், சித்தாகாசம், முக்குணங்கள், மூன்று சரீரங்கள், ஷட் ஊர்மி எனப்படும் அறுவகைத் துயர்கள், ஷட்கர்மா என்னும் ஆறுவகை சுத்திகரிப்பு, மனதின் கட்டமைப்பு, மூன்று க்ரந்திகள், இரண்டு மார்க்கங்கள் போன்றவை. இவை குறித்த புரிதல் படிப்படியாக ஒரு ஆர்வலருக்கும், ஆரம்ப நிலை யோகப் பயிற்சியாளருக்கும், யோக சாதகருக்கும், ஆன்மீக சாதகருக்கும் ஆழ்ந்து விரிந்து கொண்டே போகக் கூடியவை.
இரண்டாவது வகைமை கட்டுரைகள் பயன்பாடு கருதி நேரடியாக பேசுபவை. இதில் யோகம் குறித்து அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும், ஏதோ ஒரு விதத்தில் யோகம் கற்றுக் கொண்டு மேற்செல்ல திசை தெரியாமல் வழி தேடுபவர்களுக்கும், யோகம் குறித்து பொதுவில் இருக்கும் தவறான தகவல்களில் தடுமாறி, யோகத்தை சரியாக அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் வழிகாட்டுபவை.
உதாரணமாக,
யோகப்பள்ளியைத் தேரந்தெடுக்கும் விதம், நான்கு விதமான மனிதர்களுக்கு ஏற்ற நான்கு முக்கிய யோகக்கிளைகள், யோகத்தை எல்லாம் வல்ல மாற்று மருத்துவமாக சித்தரிக்க முயலும் போலிகள் குறித்த கவனம், சரியான அளவான பயிற்சிகளுக்கான அவசியம், மனிதர்களின் ப்ரக்ருதிக்கேற்ற பயிற்சிகள், காலத்துக்கேற்ற பயிற்சிகள், யோகசிகிச்சையின் சாத்தியங்கள் மற்றும் எல்லைகள்,
முதுமையைக் கையாளும் விதம் என விரிந்து செல்பவை.
பந்தங்கள், முத்திரைகள், சக்கரங்கள், தாரணை, ஓஜஸ், போன்ற உயர்நிலை பயிற்சிகளைச் சுற்றியுள்ள மாயத்தை உடைத்து அதனை அறிமுகப்படுத்தும் மூன்றாவது வகைமைக் கட்டுரைகள்.
சித்த சுத்தி, நாத யோகம்,
சாதகருக்கான தடைகள், ஆயுள், ஆமம் குறித்த ஆயுர்வேதத்தின் பார்வை போன்ற செறிவான பல கட்டுரைகளும் இதில் அடங்கும்.
இந்த நூல் வெறும் யோக மரபின் பார்வை அல்ல, யோகமரபு – தாந்த்ரீகம் – ஆயுர்வேதம் என்னும் மூன்று துறைகளின் தொடர் உரையாடலின் நீட்சி என ஆசிரியரே குறிப்பிடுவது போல இந்தப் புத்தகத்தின் பார்வை யோகத்தை இந்திய ஞான மரபுகளின் ஒருங்கிணைவுப் பார்வையில் விளக்குகிறது. இத்தகைய ஒரு பார்வைக்கு பரந்துபட்ட வாசிப்பும், அதை வாழ்வாகப் பயின்ற அவரது அனுபவமும் கைகொடுக்கிறது.
தான் ஈடுபட்டிருக்கும் யோகமரபின் முதன்மை நூல்களான
பதஞ்சலி யோக சூத்திரம், ஸ்வாமி ஸ்வாதமாராமா எழுதிய ஹத யோக பிரதீபிகை, யோக உபநிஷத்துகள், ஷட் கர்ம சங்கிரஹம் தவிர கடந்த நூற்றாண்டு கண்ட முக்கியமான ஞானியர் அனைவரது யோகம் தொடர்பான பார்வைகளையும் விவரிக்கிறது இப்புத்தகம். அரவிந்தரின் பூர்ண யோகம், ஸ்வாமி சிவானந்தர், ஸ்வாமி சத்யானந்தர், குரு நித்ய சைதன்ய யதியின் பதஞ்சலி யோக சூத்திர உரை, சச்சிதானந்த சரஸ்வதியின் உரை, ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் எனத் தான் எடுத்துக் கொண்ட தலைப்பை விளக்க பல்வேறு ஞானியரின் சொற்களில் தெளிவாக விவரிக்கிறார்.
ஒரு சிறு பகுதியை சொல்வதென்றால், “அளவுக்கு மீறிய தேகப்பயிற்சியால் ஆறுவிதமான தீங்குகள் நேரும் என்றும் தன் சக்திக்கு மீறி அவற்றை செய்பவன், யானையை வம்புக்கு இழுக்கும் சிங்கத்தை போல அழிவான்” என்று அஷ்டாங்க ஹிருதயத்தில் ஆச்சாரியர் வாக்பட்டர் எழுதியிருப்பதை சொல்கிறார். இது அளவான பயிற்சிக்கான அவசியம் குறித்து ஆயுர்வேதம் சொல்லும் தகவல்.
ஒரு கட்டுரையில், “இந்தியா போன்ற மிக நீண்ட, புராண, வரலாற்று, நவீனத்துவ பின்னணி கொண்ட தேசத்தில், எந்த ஒரு மரபார்ந்த கருத்திற்கும், புராணத்தில் அதன் இடம் என்ன? வரலாற்றுக் காலகட்டத்தில் என்ன நிகழ்ந்தது? நவீன காலத்தில் அதன் முக்கியத்துவம் என்ன? என்கிற இந்த மூன்று அல்லது ஐந்தடுக்கு கொண்ட பார்வையும் புரிதலும் முக்கியமாகக் கருதப்படும்.” என்கிறார். அதுவே இந்த புத்தகம் யோகத்தை அணுகும், விவரிக்கும் முறையாக இருக்கிறது.
உபநிடதங்கள், இதிகாச புராணங்கள் தொடங்கி,
நவீன மருத்துவம், நவீன உளவியல், தாந்த்ரீகம், ஆதிசங்கரரின் தத்வபோதம், ஆயுர்வேத முதன்மை நூல்களான சரக சம்ஹிதை, சுஸ்ருத ஸம்ஹிதை, வாக்பட்டர் எழுதிய அஷ்டாங்க ஹிருதயம், சாங்கிய தத்துவம், வெண்முரசு, சூஃபி மெய்ஞானம் சொல்லும் நப்ஸ் என ஒட்டுமொத்த இந்திய ஞானமும் இதில் யோகத்தை விளக்க உதவுகிறது. கிரிக்கெட், நீயா நானா, விளம்பரங்கள் என இன்றைய சமகாலம் வரை நீள்கிறது இதன் களம்.
அனல் குறித்த கட்டுரையில் ஆயுர்வேதத்தின் சரக ஸம்ஹிதை சொல்லும் பித்தம் எனும் அனல், யோக மரபின் ஜடராக்னி உதராக்னி குறித்த கருத்துக்கள், வேத மரபின் அக்னி எனும் தேவனுக்கான துதியும் வைஷ்வாநரன், மேதாக்னி எனும் உருவகங்களும் என அனைத்தையும் தொடர்புறுத்தி விளக்கும் பகுதி. இக்கட்டுரையின் இறுதி வரி அலாதியானது – “வைஸ்வாநரன் எனும் அக்னியோ எதையும் செரிக்கவல்லவன், மரண பயம் உட்பட.”
ஆயுர் வேதத்திலும் யோகத்திலும் விளக்கப்படும் ஓஜஸை நவீன மருத்துவத்துடன் ஒப்பிட்டு விளக்குதலும் அது போல ஒரு முக்கியமான பகுதி. சமீபத்தில் ஒரு யோக வகுப்பில் கலந்து கொண்ட பயிற்சியாளர் ஒருவர் இறுதிநாளில் தான் ஒரு மருத்துவர் என்பதைத் தெரிவித்தார். ஆசிரியர் சௌந்தரின் ‘சான்றுகள் அடிப்படையிலான அணுகுமுறை‘ (Evidence based approach) தனக்கு யோகத்தின் மீது மிகவும் நம்பகத்தன்மையை கொடுக்கிறது என்றார். எதையும் பகுத்து அறிய விழைபவர்களுக்கும் இப்புத்தகம் யோகம் குறித்த மிகச் சரியான அறிமுகம் எனலாம்.
முன்னர் ஒரு புத்தகத்தை வாசித்து முடித்த பின் வாசிப்பனுபவத்தை பேசிக் கொண்டிருந்த போது ஆசிரியர் சௌந்தர் சொன்னார் – “இந்த நூலின் ஒற்றை வரியாவது உனது வாழ்வை ஏதேனும் ஒரு விதத்திலாவது தொட்டிருக்கிறதா? எதேனும் ஒரு வரியையேனும் நீ அனுபவமாக மாற்றிக் கொண்டிருக்கிறாயா? இல்லையெனில் அந்த வாசிப்பு சுமைதானே?” என்று கேட்டார்.
அன்று முதல் எடை சுமப்பதில்லை என சங்கல்பம் எடுத்துக் கொண்டேன். இந்த நூலில் ஒரு கட்டுரையில், “ஒருவர் யோக பயிற்சிகளை படிப்படியாக கற்று தேர்வதன் மூலம், உடலளவில் அடைந்த சமநிலை, மெதுவாக காலப்போக்கில் உள்ளத்தளவிலும் அமைகிறது. இதை ‘சித்த சுத்தி‘ என்கிறது மரபு,… சித்த சுத்தி அடைந்த ஒருவர் அறிவு சேகரம் செய்வதையோ, அறிவுச் செயல்பாட்டில் ஈடுபடுவதையோ நிறுத்தி விட மாட்டார், ஒருவகையில் இன்னும் கூர்மையான மதி படைத்தவராக, ஆழ்ந்து வாசிக்கக் கூடியவராக, தனக்கான செய்திகளையும் தரவுகளையும் மட்டும் புத்தியில் வைத்துக்கொண்டு தேவையற்ற தரவுகளை அன்றாடம் அழித்து விடுபவராக மாறிவிடுகிறார்.” என்கிறார் ஆசிரியர்.
வாசிப்பதில் ஒரு துளியேனும் எனது ஒரு பகுதியாக மாறவில்லையெனில் அத்தகைய வாசிப்பை சுமந்தலைவதில்லை எனும் சங்கல்பம் வாசிப்பை கூர்படுத்தியிருக்கிறது. இந்த நூலின் பல வரிகள் நமது வாழ்வாக மாறக் கூடியவை. “இனி யோகம் பயில்வோம்‘ எனும் ஈற்றடிவரை.
அனைத்துக்கும் நன்றி குருஜி.
மிக்க அன்புடன்,
சுபா
SOUNDAR.G
SATYAM TRADITIONAL YOGA
11/15, south perumal Koil Lane
Vadapalani – Chennai- 600026
+91 9952965505
ங போல் வளை. கடிதம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
ஒரு சில புத்தகங்களை, காவியங்களை, இலக்கிய படைப்புகளை மீண்டும் மீண்டும் வாசிப்பவர்கள் இருக்கிறார்கள். அவ்வெழுத்து அவர்களது வாழ்வின் ஒரு பகுதியாக, வாழ்வை வழிநடத்தும் ஒரு ஆற்றலாக மாறிவிடுவதுண்டு. அப்படி வாசித்த அனுபவம் உள்ளவர்கள் அறியும் ஒன்றுண்டு. அந்த நூல் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் ஒரு புதிய வெளிச்சத்தை, ஆழ்ந்த அறிதலை, அல்லது ஒரு நகர்வை அளித்துவிடும். ஒரு சிலருக்குத் திருக்குறள் அப்படி வாழ்நாள் மொத்தமும் உடன்வரும் நூலாக இருக்கும். பல தலைவர்களுக்கும் கீதை அவ்விதம் இருந்திருக்கிறது. ஒரே குறள் வெவ்வேறு வாழ்க்கைத் தருணங்களில் வெவ்வேறு விதமாகத் தன்னைத் திறந்து காட்டும். அது பேசப்படும் பொருளின் என்றைக்குமான தன்மை காரணமாகவும், அந்நூலை எழுதியவர்கள் தங்கள் வாழ்நாள் முழுமையையும் அந்த நூலின் உள்ளடக்கத்தின் செயல்முறை விளக்கமாக வாழ்வை நடத்திப் பார்த்தவர்களாக, அதாவது தங்கள் சாதனாவில் உறுதியாக அமைந்தவர்களாக இருப்பதையும் சற்று கவனித்தால் உணரலாம். வெறும் அறிவுத்திறனில், கற்பனைத்திறனில் இருந்து எழுதப்படும் சொற்கள் அவ்விதம் காலம்தாண்டி நீடிப்பதில்லை.
அவ்விதம் என்னைத் தொடர்ந்து வழிநடத்திக் கொண்டே இருக்கும் இலக்கியப் படைப்பாக வெண்முரசை உணர்வதுண்டு. நமது வாசிப்பு மேம்படுவதால், நண்பர்களோடு தொடர்ந்து விவாதிப்பதால் அல்லது நாமும் அனுபவங்கள் வழியாக மாற்றமடைந்து கொண்டே இருப்பதால் அது ஒவ்வொரு முறையும் ஒரு திறப்பை அளிப்பதாக எண்ணிக் கொள்வேன். இது குறித்து ஒரு முறை நண்பரும் ஆசிரியருமான குருஜி சௌந்தரிடம் குறிப்பிட்ட போது, அதற்கு வேறு ஒரு பரிமாணத்தில் மற்றொரு காரணம் இருக்கிறது என்றார். நமது பிராணன் உத்தானன் ஆகும் போது, (மேன்மேலும் வளர்ச்சி அடையும் போது), இத்தகைய மேலான பேசுபொருள் கொண்ட ஆக்கங்களை மீள வாசிக்கையில், அந்த நூல்களின் உண்மையான சாரம், மேலான மெய்ப்பொருள் நம்மை வந்தடையும் என்றார்.
இந்த ‘ஙப் போல் வளை‘ என்னும் யோக நூலை, அது தொடராக வந்த போதும், அதன் பின்னரும், இன்று நூலாக நம் கையில் வந்தபிறகும் என பலமுறை வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் இதன் பல வரிகள் புதிய ஒளியில் தெரிகின்றன. தன் வாழ்வையே சாதனாவாக மாற்றி வைத்திருக்கும் ஒரு யோகியின் சொற்கள் என்பதால் வரும் செறிவு.
உதாரணமாக “ஒன்றுடன் வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டே இருப்பதை விட, அதை ஆளும் ஒன்றை, ஆற்றல் மிக்க ஒன்றாக மாற்றுவதையே யோகமுறைமை முன்வைக்கிறது” என்னும் வரி. பொருள் விளக்கம் தேவையற்ற எளிய சொற்கள். ஆனால் சாதனாவின் பாதையில் நமது அக எல்லைகளில் முட்டித் திகைத்து நிற்கும் போது சட்டென விளக்கேற்றி வைக்கிறது இந்த வரி.
இயம நியமங்கள் குறித்து சொல்லும் போது, “சந்தோஷமான மனநிலையை நீண்ட நேரம் தக்கவைத்துக் கொள்ளுதல், முடிந்தவரை ஒன்றின் மீது அதீத பற்றும், பிடிப்பும் கொள்ளாதிருத்தல். இது ஒரு தொடக்கப்புள்ளிதான். ” என்கிறார். சந்தோஷமாக நீண்ட நேரம் இருத்தலும், அதீத பற்றிலாதிருத்தலும் சிறு தொடக்கமே, அதைப் பயில் முயல்வதில் வரும் தொய்வுகளை அனுபவிக்கும் போது, இந்த வரி இப்போது மேலும் செறிவு கொள்கிறது
முதல் வாசிப்புக்கு எளிய நடை போல மயக்கம் காட்டிவிடக் கூடியது இந்த புத்தகம். ஆனால் இது தொட்டுக்காட்டும் பல முக்கியமான பேசுபொருட்கள், கடல்நீருக்கு மேல் தன் நுனி மட்டும் காட்டும் பனிமலைச் சிகரங்கள் போன்றவை. அலைகளைக் கடல் என அறிந்திருக்கும் முதல்நிலை கடந்து கடலை அறிவதற்கு ஆழத்தை நோக்கி இறங்குபவர்களுக்கு அடி காணவியலாது நிற்பது ஆழி. இந்த நூல் வழியாக யோகத்தில் நுழையும் ஒருவருக்கு புதிய ஆழங்கள் திறப்பது உறுதி.
இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகளை தொகுத்துக் கொள்ளும் வசதிக்காக மூன்று விதமாக வகைப்படுத்தலாம் என நினைக்கிறேன்.
முதலாவது மரபார்ந்த யோகக் கல்வியின் ஆதாரமான கருதுகோள்கள் – பஞ்ச கோஷங்கள், பஞ்ச பிராணன், நாடிகள், த்ரயக் தனாவ் எனப்படும் மூன்றடுக்குப் பதற்றங்கள், வாழ்வின் ஆறு நிலைகள், தமோகுணத்தின் ஐந்து நிலைகள், யோகத்தின் எட்டு அங்கங்கள், சங்கல்பம், சித்தாகாசம், முக்குணங்கள், மூன்று சரீரங்கள், ஷட் ஊர்மி எனப்படும் அறுவகைத் துயர்கள், ஷட்கர்மா என்னும் ஆறுவகை சுத்திகரிப்பு, மனதின் கட்டமைப்பு, மூன்று க்ரந்திகள், இரண்டு மார்க்கங்கள் போன்றவை. இவை குறித்த புரிதல் படிப்படியாக ஒரு ஆர்வலருக்கும், ஆரம்ப நிலை யோகப் பயிற்சியாளருக்கும், யோக சாதகருக்கும், ஆன்மீக சாதகருக்கும் ஆழ்ந்து விரிந்து கொண்டே போகக் கூடியவை.
இரண்டாவது வகைமை கட்டுரைகள் பயன்பாடு கருதி நேரடியாக பேசுபவை. இதில் யோகம் குறித்து அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும், ஏதோ ஒரு விதத்தில் யோகம் கற்றுக் கொண்டு மேற்செல்ல திசை தெரியாமல் வழி தேடுபவர்களுக்கும், யோகம் குறித்து பொதுவில் இருக்கும் தவறான தகவல்களில் தடுமாறி, யோகத்தை சரியாக அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் வழிகாட்டுபவை.
உதாரணமாக,
யோகப்பள்ளியைத் தேரந்தெடுக்கும் விதம், நான்கு விதமான மனிதர்களுக்கு ஏற்ற நான்கு முக்கிய யோகக்கிளைகள், யோகத்தை எல்லாம் வல்ல மாற்று மருத்துவமாக சித்தரிக்க முயலும் போலிகள் குறித்த கவனம், சரியான அளவான பயிற்சிகளுக்கான அவசியம், மனிதர்களின் ப்ரக்ருதிக்கேற்ற பயிற்சிகள், காலத்துக்கேற்ற பயிற்சிகள், யோகசிகிச்சையின் சாத்தியங்கள் மற்றும் எல்லைகள்,
முதுமையைக் கையாளும் விதம் என விரிந்து செல்பவை.
பந்தங்கள், முத்திரைகள், சக்கரங்கள், தாரணை, ஓஜஸ், போன்ற உயர்நிலை பயிற்சிகளைச் சுற்றியுள்ள மாயத்தை உடைத்து அதனை அறிமுகப்படுத்தும் மூன்றாவது வகைமைக் கட்டுரைகள்.
சித்த சுத்தி, நாத யோகம்,
சாதகருக்கான தடைகள், ஆயுள், ஆமம் குறித்த ஆயுர்வேதத்தின் பார்வை போன்ற செறிவான பல கட்டுரைகளும் இதில் அடங்கும்.
இந்த நூல் வெறும் யோக மரபின் பார்வை அல்ல, யோகமரபு – தாந்த்ரீகம் – ஆயுர்வேதம் என்னும் மூன்று துறைகளின் தொடர் உரையாடலின் நீட்சி என ஆசிரியரே குறிப்பிடுவது போல இந்தப் புத்தகத்தின் பார்வை யோகத்தை இந்திய ஞான மரபுகளின் ஒருங்கிணைவுப் பார்வையில் விளக்குகிறது. இத்தகைய ஒரு பார்வைக்கு பரந்துபட்ட வாசிப்பும், அதை வாழ்வாகப் பயின்ற அவரது அனுபவமும் கைகொடுக்கிறது.
தான் ஈடுபட்டிருக்கும் யோகமரபின் முதன்மை நூல்களான
பதஞ்சலி யோக சூத்திரம், ஸ்வாமி ஸ்வாதமாராமா எழுதிய ஹத யோக பிரதீபிகை, யோக உபநிஷத்துகள், ஷட் கர்ம சங்கிரஹம் தவிர கடந்த நூற்றாண்டு கண்ட முக்கியமான ஞானியர் அனைவரது யோகம் தொடர்பான பார்வைகளையும் விவரிக்கிறது இப்புத்தகம். அரவிந்தரின் பூர்ண யோகம், ஸ்வாமி சிவானந்தர், ஸ்வாமி சத்யானந்தர், குரு நித்ய சைதன்ய யதியின் பதஞ்சலி யோக சூத்திர உரை, சச்சிதானந்த சரஸ்வதியின் உரை, ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் எனத் தான் எடுத்துக் கொண்ட தலைப்பை விளக்க பல்வேறு ஞானியரின் சொற்களில் தெளிவாக விவரிக்கிறார்.
ஒரு சிறு பகுதியை சொல்வதென்றால், “அளவுக்கு மீறிய தேகப்பயிற்சியால் ஆறுவிதமான தீங்குகள் நேரும் என்றும் தன் சக்திக்கு மீறி அவற்றை செய்பவன், யானையை வம்புக்கு இழுக்கும் சிங்கத்தை போல அழிவான்” என்று அஷ்டாங்க ஹிருதயத்தில் ஆச்சாரியர் வாக்பட்டர் எழுதியிருப்பதை சொல்கிறார். இது அளவான பயிற்சிக்கான அவசியம் குறித்து ஆயுர்வேதம் சொல்லும் தகவல்.
ஒரு கட்டுரையில், “இந்தியா போன்ற மிக நீண்ட, புராண, வரலாற்று, நவீனத்துவ பின்னணி கொண்ட தேசத்தில், எந்த ஒரு மரபார்ந்த கருத்திற்கும், புராணத்தில் அதன் இடம் என்ன? வரலாற்றுக் காலகட்டத்தில் என்ன நிகழ்ந்தது? நவீன காலத்தில் அதன் முக்கியத்துவம் என்ன? என்கிற இந்த மூன்று அல்லது ஐந்தடுக்கு கொண்ட பார்வையும் புரிதலும் முக்கியமாகக் கருதப்படும்.” என்கிறார். அதுவே இந்த புத்தகம் யோகத்தை அணுகும், விவரிக்கும் முறையாக இருக்கிறது.
உபநிடதங்கள், இதிகாச புராணங்கள் தொடங்கி,
நவீன மருத்துவம், நவீன உளவியல், தாந்த்ரீகம், ஆதிசங்கரரின் தத்வபோதம், ஆயுர்வேத முதன்மை நூல்களான சரக சம்ஹிதை, சுஸ்ருத ஸம்ஹிதை, வாக்பட்டர் எழுதிய அஷ்டாங்க ஹிருதயம், சாங்கிய தத்துவம், வெண்முரசு, சூஃபி மெய்ஞானம் சொல்லும் நப்ஸ் என ஒட்டுமொத்த இந்திய ஞானமும் இதில் யோகத்தை விளக்க உதவுகிறது. கிரிக்கெட், நீயா நானா, விளம்பரங்கள் என இன்றைய சமகாலம் வரை நீள்கிறது இதன் களம்.
அனல் குறித்த கட்டுரையில் ஆயுர்வேதத்தின் சரக ஸம்ஹிதை சொல்லும் பித்தம் எனும் அனல், யோக மரபின் ஜடராக்னி உதராக்னி குறித்த கருத்துக்கள், வேத மரபின் அக்னி எனும் தேவனுக்கான துதியும் வைஷ்வாநரன், மேதாக்னி எனும் உருவகங்களும் என அனைத்தையும் தொடர்புறுத்தி விளக்கும் பகுதி. இக்கட்டுரையின் இறுதி வரி அலாதியானது – “வைஸ்வாநரன் எனும் அக்னியோ எதையும் செரிக்கவல்லவன், மரண பயம் உட்பட.”
ஆயுர் வேதத்திலும் யோகத்திலும் விளக்கப்படும் ஓஜஸை நவீன மருத்துவத்துடன் ஒப்பிட்டு விளக்குதலும் அது போல ஒரு முக்கியமான பகுதி. சமீபத்தில் ஒரு யோக வகுப்பில் கலந்து கொண்ட பயிற்சியாளர் ஒருவர் இறுதிநாளில் தான் ஒரு மருத்துவர் என்பதைத் தெரிவித்தார். ஆசிரியர் சௌந்தரின் ‘சான்றுகள் அடிப்படையிலான அணுகுமுறை‘ (Evidence based approach) தனக்கு யோகத்தின் மீது மிகவும் நம்பகத்தன்மையை கொடுக்கிறது என்றார். எதையும் பகுத்து அறிய விழைபவர்களுக்கும் இப்புத்தகம் யோகம் குறித்த மிகச் சரியான அறிமுகம் எனலாம்.
முன்னர் ஒரு புத்தகத்தை வாசித்து முடித்த பின் வாசிப்பனுபவத்தை பேசிக் கொண்டிருந்த போது ஆசிரியர் சௌந்தர் சொன்னார் – “இந்த நூலின் ஒற்றை வரியாவது உனது வாழ்வை ஏதேனும் ஒரு விதத்திலாவது தொட்டிருக்கிறதா? எதேனும் ஒரு வரியையேனும் நீ அனுபவமாக மாற்றிக் கொண்டிருக்கிறாயா? இல்லையெனில் அந்த வாசிப்பு சுமைதானே?” என்று கேட்டார்.
அன்று முதல் எடை சுமப்பதில்லை என சங்கல்பம் எடுத்துக் கொண்டேன். இந்த நூலில் ஒரு கட்டுரையில், “ஒருவர் யோக பயிற்சிகளை படிப்படியாக கற்று தேர்வதன் மூலம், உடலளவில் அடைந்த சமநிலை, மெதுவாக காலப்போக்கில் உள்ளத்தளவிலும் அமைகிறது. இதை ‘சித்த சுத்தி‘ என்கிறது மரபு,… சித்த சுத்தி அடைந்த ஒருவர் அறிவு சேகரம் செய்வதையோ, அறிவுச் செயல்பாட்டில் ஈடுபடுவதையோ நிறுத்தி விட மாட்டார், ஒருவகையில் இன்னும் கூர்மையான மதி படைத்தவராக, ஆழ்ந்து வாசிக்கக் கூடியவராக, தனக்கான செய்திகளையும் தரவுகளையும் மட்டும் புத்தியில் வைத்துக்கொண்டு தேவையற்ற தரவுகளை அன்றாடம் அழித்து விடுபவராக மாறிவிடுகிறார்.” என்கிறார் ஆசிரியர்.
வாசிப்பதில் ஒரு துளியேனும் எனது ஒரு பகுதியாக மாறவில்லையெனில் அத்தகைய வாசிப்பை சுமந்தலைவதில்லை எனும் சங்கல்பம் வாசிப்பை கூர்படுத்தியிருக்கிறது. இந்த நூலின் பல வரிகள் நமது வாழ்வாக மாறக் கூடியவை. “இனி யோகம் பயில்வோம்‘ எனும் ஈற்றடிவரை.
அனைத்துக்கும் நன்றி குருஜி.
மிக்க அன்புடன்,
சுபா
SOUNDAR.G
SATYAM TRADITIONAL YOGA
11/15, south perumal Koil Lane
Vadapalani – Chennai- 600026
+91 9952965505
About the destruction of the Jafna library
அன்புள்ள ஜெ
தமிழ் ஹிந்து நாளிதழ் வெளியிட்ட செய்திக்கட்டுரை இது.‘உலக அளவில் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு அதிகரிப்பு’ – அமெரிக்க ஆய்வ நிறுவனம் தகவல்இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு பத்துமடங்கு உலக அளவில் கூடியிருக்கிறது என்கிறது இந்த ஆய்வு.உங்கள் தகவலுக்காக.
ராஜாராம்
இந்து வெறுப்பை எதிர்கொள்வதுAbout the destruction of the Jafna library
அன்புள்ள ஜெ
தமிழ் ஹிந்து நாளிதழ் வெளியிட்ட செய்திக்கட்டுரை இது.‘உலக அளவில் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு அதிகரிப்பு’ – அமெரிக்க ஆய்வ நிறுவனம் தகவல்இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு பத்துமடங்கு உலக அளவில் கூடியிருக்கிறது என்கிறது இந்த ஆய்வு.உங்கள் தகவலுக்காக.
ராஜாராம்
இந்து வெறுப்பை எதிர்கொள்வதுSeptember 17, 2025
A novel-writing workshop at Walnut Creek, California.
I conducted a workshop on writing novels in Chennai for Manasa Publications. Now, my friends in the USA are asking me to hold similar classes there. A one-day class is scheduled at Walnut Creek, CA
Date: Oct 12, 2025, Sunday.Venue: Walnut Creek, CATimings: 9:30 am – 6:00 pm.For contact viswanathan.mahalingam@gmail.comThis is an introductory class designed to cover the fundamentals of writing a short modern novel. Manasa Publications is hosting a novel competition and is inviting submissions from writers in the USA as well.
பெருஞ்செயல்களை எல்லாரும் செய்ய முடியுமா?
‘பெருஞ்செயல்களைச் செய்க!’ என்று ஒரு காந்தியர் எனக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்திட்டு அளித்தார். என்னால் அதைச் செய்ய முடிந்ததா? அனைவரும் பெருஞ்செயல் செய்ய முடியுமா என்ன? செய்தே ஆகவேண்டும் என்று சொல்லமுடியுமா?
அரசைக் குற்றம் சாட்டினால்…
நண்பர் ஒருவர் இந்த திரைச் சொட்டை எனக்கு அனுப்பி ‘தமிழகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பாருங்கள்’ என்று எழுதியிருந்தார். அவருக்கு இந்தியாவெங்கும் அரசு அலுவலகங்கள் எப்படி செயல்படுகின்றன என்பது தெரியாது என்று நினைக்கிறேன் .நான் பி.எஸ்.என்.எல் ஊழியனாக பணியாற்றி காலத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலேயே ஏறத்தாழ இந்தச் சூழல்தான் நிலவியது.
எனக்கு இரண்டு அனுபவங்கள் உண்டு. நான் 2000த்தில் கனடா செல்வதற்காக விசா விண்ணப்பம் செய்ய என்னுடைய ஊதியச் சான்றிதழைப் பெறுவதற்காக துறைஅதிகாரி என்னிடம் பணம் எதிர்பார்த்தார். அந்த அதிகாரியின் அணுக்கமான கடைநிலை ஊழியர் அவர் பணம் எதிர்பார்ப்பதை என்னிடம் சொன்னார். நான் பணம் அளிக்க முடியாது என்று சொன்னேன். நீங்கள் அந்த சான்றிதழ்களை பெறவே போவதில்லை என்று ஊழியர் சொன்னார்.
நான் நேரடியாக அந்த அதிகாரியிடம் போய்க் கேட்டேன். .’நான் என் ஊதியத்தில் ஒரு பங்கை என் மதத்துக்குக் கொடுப்பவள், ஆகவே எனக்கு லஞ்சம் பெறுவது பாவம் அல்ல’ என்று அந்த அதிகாரி என்னிடம் சொன்னார். நான் துறையின் உச்ச அதிகாரியிடம் நேரடியாக சென்று புகார் சொன்னேன். அவர் அந்த பெண்மணியை கூப்பிட்டு எச்சரித்தார். உடனடியாக சான்றிதழ் தரப்பட்டது .ஆனால் மூன்று நகல்கள் தரப்பட வேண்டும். இரண்டு நகல்களில் மட்டுமே கையெழுத்து போட்டு தந்திருந்தார். நான் டெல்லிக்குக் கிளம்பிச் சென்ற பிறகுதான் இரண்டு நகல்களில் கையெழுத்து இல்லை என்று கண்டறிந்தேன். ஆனால் நல்ல வேளையாக விசா விண்ணப்ப இடத்தில் பிற இரண்டிலும் கையெழுத்து இல்லை என்பதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அதில் என்னிடம் கையெழுத்திடச் சொல்லி, என்னுடைய சான்றுரையையே கணக்கில் கொண்டார்கள். எல்லா சான்றிதழ்களுக்கும் சொந்த சான்றே போதுமானதாக இருந்தது.
அதன்பின் நான் பணி ஓய்வுபெற்றேன். என் ஓய்வூதியப்பயன்கள் கிடைக்க இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியது. அதை இந்த தளத்திலேயே எழுதியிருந்தேன். ஏனென்றால் நான் அந்த ஓய்வூதியப்பயன்களுக்குப் பின்னால் செல்லவில்லை.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு ஊழியர்கள் இந்த உளநிலையிலேயே உள்ளனர். மக்களைச் சந்திக்கும் நிலையில் இருக்கும் ஊழியர்கள் எல்லாம் நேரடியாக பலவகையிலும் லஞ்சம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றும், தங்களுக்கு எதுவும் வரவில்லை என்றும் நிர்வாக அலுவலர்கள் நினைக்கிறார்கள. ஆகவே செயல் ஊழியர்கள் தங்களிடம் ஏதேனும் பணிக்காக வரும்போது நிர்வாக ஊழியர்கள் அவர்களிடம் பணம் எதிர்பார்க்கிறார்கள்.
உண்மையில் அதில் ஒரு நியாயமும் உள்ளது. மக்களைச் சந்திக்கும் ஊழியர்கள் பாதி என்றால் அலுவலகத்துக்குள்ளே இருக்கக்கூடியவர்கள்தான் எஞ்சியோர். மக்களைச் சந்திப்பவர்களில் 90 சதவீதம் பேரும் லஞ்சம் பெறுபவர்களே. சூறையில் ஒரு பகுதி பிறருக்கும் கிடைக்கவேண்டும் அல்லவா? இதில் சிக்கிக் கொள்பவர்கள் லஞ்சம் வாங்காத நேர்மையான ஊழியர்கள்தான். அவர்கள் அனைவருக்கும் லஞ்சம் கொடுத்தாக வேண்டும், நாங்கள் லஞ்சம் வாங்கவில்லை என்று சொன்னால் எவரும் நம்ப போவதில்லை.
இந்த புகாரில் என்ன நிகழும்? அரசு ஊழியனாக இருந்தவன் என்ற நிலையில் நான் ஒன்று சொல்ல முடியும், ஒன்றும் நிகழாது. பெரும்பாலும் இந்த குறிப்பிட்ட காகிதம் மட்டும் உடனடியாக பைசல் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஊடகச் செய்தி ஆகிவிட்டமையால் மேலிடத்தில் இருந்து அதைக் கூப்பிட்டு விசாரிப்பார்கள். ஆகவே அதை மட்டும் உடனடியாக அதை மேலே அனுப்புவார்கள். அல்லது வேண்டுமென்றே தவறான ஏதேனும் துறைக்கு அனுப்பி விடக் கூடும்.அல்லது ஏதேனும் உபரி விசாரணைகளுக்கான கேள்விகளைக் கேட்டு திருப்பி அனுப்பவும் வாய்ப்பு உண்டு.
ஒரு காகிதத்தை பல ஆண்டுகள் சட்டபூர்வமாக ஒத்தி போட்டுக் கொண்டே இருக்க அரசு அலுவலகங்களில் எல்லா வழிகளும் உண்டு. தவறான முகவரிக்கு ஒரு கடிதத்தை வழிநடத்தி விடுவது என்பது ஒரு பழக்கமான வழி. அது ஒரு கவன குறைவாகத்தான் கொள்ளப்படுமே ஒழிய ஒரு பிழையாக கொள்ளப்படாது. ஆகவே அதற்கு பெரிய தண்டனைகளும் இருக்காது. ஆண்டுக் கணக்கில் சில விண்ணப்பங்களை, சில கடிதங்களை திசை திருப்பி நடவடிக்கைகளை தாமதப்படுத்தவோ அல்லது நிறுத்தி விடவோ கூட முடியும் .
இதே போன்று தமிழகத்தில் பலருக்கு தெரியாத ஒரு நிகழ்வு கேரளத்தில் நடைபெற்றது. திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சிறுநீரகத்துறை அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர் மருத்துவர் ஹாரிஸ் சிறைக்கல். அவர் இடதுசாரிச் சிந்தனை கொண்டவர், மாணவராக கட்சியின் இளைஞர் அணியில் பணியாற்றியவர், இணையத்தில் தொடர்ச்சியாக இடதுசாரி அரசுக்கு ஆதரவாக எழுதி வருபவர்.அவர் மிக நேர்மையானவர் என்றும், மிக மிகத் திறமையான அறுவை சிகிச்சை நிபுணர் என்றும், உண்மையிலேயே ஓர் ஏழை பங்காளர் என்றும் ஏற்கனவே பெரும் புகழ் பெற்றவர். அவர் ஒரு புகாரை முகநூலில் எழுதினார்.
திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சைக்கு தேவையான பல்வேறு கருவிகள் பழுதுபட்டுள்ளன என்றும்; நீண்டகாலமாக அவை பழுது தீர்க்கப்படவில்லை என்றும்; மிக அவசியமான சில கருவிகள் வாங்கப்படவே இல்லை என்றும்; மருந்துகள் மிக மிக குறைவாக இருப்பதினால் அறுவை சிகிச்சை அனேகமாக செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும்; இதை பலமுறை நேரிலும் கடிதம் வழியாகவும் புகார் செய்து கூட எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் ஹாரிஸ் முகநூலில் எழுதினார்.
உடனடியாக அவர் மீது கடும் விமர்சனங்களை இந்திய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும், அரசு சார்பாளர்களும் முன்வைத்தார்கள். ஆனால் அவர் இடதுசாரி என்பதனால் முதலில் அந்த எதிர்த்தாக்குதல் மிக மழுங்கியதாகவே இருந்தது. அவருடைய நேர்மையைச் சந்தேகப்படவில்லை என்றும், என்ன நடந்தது என்று விசாரிக்கப் போவதாகவும் அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். ஆனால் மெல்ல மெல்ல அவர் மீது இணையத்தாக்குதலும் கடும் நடவடிக்கைகளும் ஆரம்பித்தன. முதலில் அவதூறுகள் தொடுக்கப்பட்டன. பின்னர் அவரை சதிகளில் சிக்கவைக்கும் நடவடிக்கைகள் தொடங்கின. தன்னுடன் தோளோடு தோள்நின்றவர்களே சிறைக்கு அனுப்பி ஒழிக்க முயன்றனர் என ஹாரிஸ் மனம் கசந்து எழுதினார்.
என்னென்ன நிகழ்ந்தது என்பதை இப்போது எண்ணி பார்க்கையில் திகைப்புதான் ஏற்படுகிறது. ஒரு திரைப்படத்திற்கு நிகரான நிகழ்வுகள். அவருடைய அறை உடைக்கப்பட்டு அங்கு ஏதோ பொருட்கள் வைக்கப்பட்டன. ஆனால் அதை உடனடியாக அவர் தன்னுடைய கணிப்பொறியில் சிசிடிவி பதிவு வழியாக கண்டு இணையத்தில் அறிவித்தார். அந்த அறை உடனே பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஹாரீஸ் ஊழல் செய்ததாக அதிகாரிகள் பேட்டி கொடுத்தனர். (அப்போது எவரோ ஃபோனில் அழைத்து ஆணைகளை அளிக்க சார் சார் என்று அதிகாரிகள் தலையாட்டினர். ‘யார் அந்த சார்?’ என பெரிய விவாதம் நிகழ்ந்தது)
ஹாரீஸ்தான் அனைத்து ஊழல்களையும் செய்தார் என்றும், அவர்தான் கருவிகளை பழுதடைய வைத்தார் என்றும், அவர் அலுவலகத்திலிருந்து சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்றும் குற்றச்சாட்டுகள் உருவானயின. தொடர்ச்சியாக ஹாரீஸ் வேட்டையாடப்பட்டார். (இணையத்தில் முழுத்தகவல்களையும் தேடிப்படிக்கலாம்)
தொடர்ச்சியாக மருத்துவத்துறை அதிகாரிகள் அவரை அவதூறு செய்தனர், துறை சார் நடவடிக்கை ஒவ்வொன்றாக கடுமையாகிக் கொண்டே செல்ல ஒரு கட்டத்தில் மொத்த அரசு எந்திரமே அவருக்கு எதிராக திரும்பி அவரை வேட்டையாடத் தொடங்கியது. அதன் பிறகு அவர் முழுமையாக சரணடைந்தார். இடதுசாரி அரசிடம் மன்னிப்பு கோரினார். ஆனால் இன்னும் அவர் தண்டனை நிலையிலே இருக்கிறார். இன்னும் என்னென்ன தண்டனைக்கு அவர் ஆளாவார் என்று சொல்ல முடியாது. உண்மையில் இப்போது அரசு வேலையை விட்டு தனியார் மருத்துவத்திற்கு நோக்கி செல்வதற்கு கூட அரசு தடை விதிக்கும் நிலைதான் உள்ளது.
ஒருபோதும் இந்த வகையான அக ஊழலை வெளிக்கொண்டுவரும் ஊழியர்களை அரசு விரும்புவதில்லை. ஏனெனில் மொத்த நிர்வாகத்திலே மிகப் பெரும்பாலானவர்கள் ஊழல் செய்பவர்கள்தான். ஒரு கடைநிலை ஊழியர் செய்யும் ஊழலில் ஒரு பகுதி அவருக்கு நேர் மேலே இருப்பவருக்கு செல்கிறது. அவ்வாறு படிப்படியாக தொகை கீழிருந்து அனைவருக்கும் செல்கிறது. ஒரு கடைநிலை ஊழியர் 100 ரூபாய் லஞ்சம் வாங்கினார் என்றால் அதில் ஐந்து ரூபாய் அந்த துறை சார்ந்த அமைச்சர் கையிலேயே சென்று விடுகிறது என்று சொல்லலாம்.
ஆகவே ஒருவர் அமைப்பை குற்றம் சாட்டுகிறார் என்றால் அந்த அமைப்பு அவரை வேட்டையாட தொடங்குவதில் ஆச்சரியம் இல்லை. திரு ஜெய்சனுக்கு எதிராக திமுகவினர் இன்னும் களமிறங்காததுதான் கொஞ்சம் ஆச்சரியமளிக்கிறது. ராஜன் குறையின் ஆய்வு, மனுஷ்யபுத்திரனின் ஆக்ரோஷமான கட்டுரையை எதிர்பார்க்கிறேன்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
