Jeyamohan's Blog, page 11

November 16, 2025

ஏன் காட்சிக்கலையை பயிலவேண்டும்?

 

திரைப்பட உருவாக்கம்- திரைரசனை பற்றி ஒரு பயிற்சி வகுப்பை இயக்குனர் ஹரிஹரன் அவர்கள் வரும் நவம்பர் மாதம் முழுமையறிவு சார்பிலே நடத்தவிருக்கிறார். அதைப்பற்றிய ஓர் ஐயம் என்னிடம் கேட்கப்பட்டது. ஏன் இன்றைய காலகட்டத்தில் ஒருவர் திரைப்பட ரசனையைக் கற்றுக்கொள்ள வேண்டும்? திரைப்படம் என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டும்தானே? அதை கற்றுக்கொண்டு முறையாக ரசிக்க வேண்டிய அவசியம் என்ன?

ஏன் காட்சிக்கலையை பயிலவேண்டும்?

I watched a video discussing the value of our actions, which made me question my previous skepticism about whether my thoughts were valid. The only thing that kept me moving forward was my uncertainty about whether I was being arrogant.

The true value of us…

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 16, 2025 10:30

ஏன் காட்சிக்கலையை பயிலவேண்டும்?

 

திரைப்பட உருவாக்கம்- திரைரசனை பற்றி ஒரு பயிற்சி வகுப்பை இயக்குனர் ஹரிஹரன் அவர்கள் வரும் நவம்பர் மாதம் முழுமையறிவு சார்பிலே நடத்தவிருக்கிறார். அதைப்பற்றிய ஓர் ஐயம் என்னிடம் கேட்கப்பட்டது. ஏன் இன்றைய காலகட்டத்தில் ஒருவர் திரைப்பட ரசனையைக் கற்றுக்கொள்ள வேண்டும்? திரைப்படம் என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டும்தானே? அதை கற்றுக்கொண்டு முறையாக ரசிக்க வேண்டிய அவசியம் என்ன?

ஏன் காட்சிக்கலையை பயிலவேண்டும்?

I watched a video discussing the value of our actions, which made me question my previous skepticism about whether my thoughts were valid. The only thing that kept me moving forward was my uncertainty about whether I was being arrogant.

The true value of us…

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 16, 2025 10:30

November 15, 2025

தக்ஷசிலா பல்கலை கௌரவ முனைவர் வழங்கும் விழா.

About TAKSHASHILA

தட்சசிலா பல்கலைக் கழகம் எனக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கவிருக்கிறது. விழா நாள் நவம்பர் 19. மதியம்.

விருந்தினர்கள்: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற லெய்மா ஆர் போவே.  பிஜி தீவுக்கான துணைத்தூதர் ஜெகன்னாத் சாமி. என்னுடன் பி.டி.உஷாவும் கௌரவ டாக்டர் விருது பெறுகிறார்.

கல்வித்துறையிலிருந்து ஒரு கௌரவம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 15, 2025 20:23

பாரதி மகாகவியா விவாதம்

சி.சுப்ரமணிய பாரதி மகாகவி அல்ல என்ற மறுப்பும் அதற்கு அளிக்கப்பட்ட பதில்களும். பாரதியை ஒரு தேசியகவி என்றோ, வேதாந்தகவி என்றோதான் சொல்லமுடியும் என்றும், அவர் ஒரு மகாகவி அல்ல என்றும் சொல்லப்பட்ட கருத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் உருவான விவாதம். இதில் பி.ஶ்ரீ.ஆச்சார்யா, கல்கி ஆகியோர் பாரதி மகாகவி அல்ல என்று வாதிட்டனர். மகாகவியே என்று வ.ரா, சிட்டி, கு.ப.ராஜகோபாலன் போன்றவர்கள் வாதிட்டனர்.

பாரதி மகாகவியா விவாதம் பாரதி மகாகவியா விவாதம் பாரதி மகாகவியா விவாதம் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 15, 2025 10:33

முடிவிலா ஆடல்!

அன்புள்ள ஜெ,

ஒரு புத்தகத்தை பற்றி என் வாழ்வில் முதன்முறையாக முயற்சித்து எழுதும் கடிதம். குறைகள் இருப்பின் விட்டு விடவும் அல்லது சுட்டிக்காட்டவும். தங்களின் நேரத்திற்கு நன்றி.

அந்த புத்தகம் தங்களின் கடல். அப்புத்தகத்தில் முன்னுரையில் தஸ்தயேவ்ஸ்கியன் சந்தர்ப்பம் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளது போலவே அதை படிக்கும்பொழுது குற்றமும் தண்டனையும் இரஸ்கலினிக்கேவ், சோனியா உரையாடலும், கரம்சேவ் சகோதரர்கள் நாவலின் அல்யோன்ஸாவின் உரையாடலும் கடல் கதையும் மாறி மாறி மனதில் ஒரு திரை உருவகமாக வந்து கொண்டே இருந்தது. என்னை பொறுத்தவரை இது இன்னொரு தஸ்தயேவஸ்க்கின் கதை என்ற உணர்வே இருந்தது. நீங்கள் கூறியது போல புதுமை (Novelty) எதுவும் இல்லை என்றாலும் மானுட ஆத்மா மற்றும் அவற்றின் விடுதலைதானே இத்தனை ஆயிரம் ஆண்டு காலமும் மனிதர்களால் தேடப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த மானுடர்களில் சிலராக சாம், பெர்க்மான்ஸ், தாமஸ், செலினா, பியா, செட்டி என்று வருகிறார்கள்.

சாம் தேவனின்பால் கொண்ட நம்பிக்கையில் அன்பின் மூலம் தாமஸ் என்னும் சமூகத்தின் இருட்டான பக்கங்களால் பாதிக்கப்பட்ட ஒருவனை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் இறங்குகிறார்.

பெர்க்மான்ஸ்/ Lucifer குடும்பத்தின் வறுமையால் வேறு வழியற்று Seminariyயில் சேர்ந்து ஓரளவு குடும்பத்தின் வறுமையை சமாளித்து எழுந்து வரும் வேளையில் தனிப்பட்ட / தவறான நடவடிக்கையில் ஈடுபடும் பொழுது கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட அதற்கு காரணம் சாம் என்பதும் அது சாமின் மீதான விரோதம் / வன்மம் ஆக மாறி சாமை பழிவாங்குவதை விட எந்த நம்பிக்கையில் சாம் பெர்க்மான்ஸ்சை குற்றம் சுமத்தினாரோ அந்த நம்பிக்கையை உடைப்பதே குறிக்கோளாக எடுத்துக் கொள்கிறார்.

தாமஸ்/ தொம்மை தம் அம்மாவின் ஒவ்வொரு வலியையும் பார்த்து வலியும் வேதனையுமாய் வளரும் குழந்தை. தன் அம்மாவின் வலி மிகுந்த இறப்பும் அதற்கு காரணமான இந்த சமூகத்தின் மீதான கோபமுமாக வளரும் குழந்தை/ இளைஞன்.

இந்த மூவருக்கிடையான வாழ்க்கை. தேவன், சாத்தான் மற்றும் மனிதன் என்று எடுத்துக் கொள்ளலாம்.

செட்டி, செலினா, பியா என்று அந்த மூவரின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துபவர்கள். செட்டி தாமஸின் வாழ்க்கையிலும், செலினா சாம், பெர்க்மான்ஸ் வாழ்க்கையிலும், பியா தாமஸ், சாம், பெர்க்மான்ஸ் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர்.

பியாவை பற்றி படிக்கும் பொழுது குற்றமும் தண்டனையும் சோனியாவை பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. பியா தன் சிறு வயதில் நிகழ்ந்த தனி தாயின் மரணத்துக்கு பின் வாழ்வின் எந்தவொரு கசடுகளையும் தன்னை பாதிக்காமல் சிறு குழந்தையை / தேவதையை போல வளர்ந்தவள். சோனியா அதற்கு நேர் எதிரான குடிகார தந்தை, குடும்பத்தின் வறுமை, மாற்றாந்தாயாக இருந்தாலும் அவளின் துயரம், அவள் குழந்தைகளை வளர்க்க படும்பாடு, இறுதியில் பாலியல் தொழில், அங்கு வரும் மனிதர்களின் குணக்கேடுகள் என்று வாழ்வின் அனைத்து கசடுகளையும் கண்டு வளர்ந்தவன். இறுதியில் பியா, சோனியா என்று இருவருமே தேவதைகளாக தாமஸ், பெர்க்மான்ஸ், இரஸ்கலினிக்கோவ் என்ற மூவரையும் நல்வழிபடுத்துகின்றனர்.

சாம், பெர்க்மான்ஸ் மற்றும் செலினா மூவரிடையே உருவாகும் உணர்வுகள். சாம், செலினா இருவரிடையே உருவாகும் ஒரு கண தடுமாற்றம் மூவரின் வாழ்க்கையையும் மாற்றுகிறது. அதில் பாதிக்கப்படுவது பியா.  அந்த பாதிப்பு பியாவின் மன வளர்ச்சியை பாதித்து இறுதியில் தன் தந்தைக்கு நன்மை செய்கின்றது.

இப்படி அனைவரையும் பைபிள் என்ற ஓற்றைச் சரடு வழியாக கடலின் உருவகமாக இணைக்கின்றது. இந்தப் புத்தகத்தைப் படிக்கும் பொழுது வெண்முரசு எழுதிய காலகட்டத்தில் பைபிளை இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு இன்றைய தமிழில் எழுத வேண்டும் என்று நீங்கள் கூறி இருந்தது நினைவுக்கு வந்தது. அதையும் நீங்களே எழுத வேண்டும் என்ற ஆசையும் உள்ளது.

புத்தகத்தை படித்த பின்பு தான் கடல் திரைப்படத்தை பார்த்தேன். அந்தப்படம் வெளியான காலகட்டத்தில் எந்தவொரு படமும் பார்க்க கூடிய மனநிலையில் நான் இல்லை. படத்தை பற்றி அல்லது அதன் தோல்வியை பற்றி எழுத சில விஷயங்கள் உள்ளன. இக்கடிதம் சரியாக இருந்தால் கூறுங்கள். அதை பற்றியும் எழுதுகிறேன்.

மீண்டும் தங்கள் நேரத்திற்கு நன்றி

அன்புடன்

முத்துவேல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 15, 2025 10:31

மூன்று அமெரிக்க எழுத்தாளர்களின் பேச்சு- சௌந்தர்ராஜன்

Dear Jeyamohan Sir,

I wish I could have joined you on the entire book signing tour with you. They were held in 10 different cities from east to west and midland cities.  I could join you the only one held in Barnes and Noble , Dallas on Oct 22, 2025. Watched all other events over the recordings done by Vishnupuram Literary Circle’s friends.

Every event was impressive and they had their unique quality and representation. On each event, second generation kids read the Stories of The True book and shared their perceptions and views very clearly and sharply. In their 3 minutes talk, they moved the listeners to buy the book.  I was impressed with these published authors’ take on your (Tamil) stories.  These authors were there at Colleton Library , Walterboro, SC on Oct 27, 2025, arranged by Jegadeesh Kumar.

Upon his retirement in 2017,  Author Stephen Chadwick discovered the joy of writing. He holds the novel, Walking With Bow and Heart to his credit along with twenty short stories, twenty five poems. He calls out loudly that you are a writer of culture and philosophy. He acknowledged that your descriptions on people and location were very well written. The stories were recreation as well as education.

While listening to each of the authors participate in this event, I understood PK Potts has been their main encouragement for their writing. She is the children’s author of : Army the Armadillo, If the Tree Could Talk, The Monsters of Feathernight Forest,and the Boy who Talked to Trees. When she talked, she was happily mentioning that he read the whole book of A Fine Thread And Other Stories. She spoke well of Mountains Dialogue and Oceans Nearby.

While choosing the stories for the collection, Jegadeesh and I were very optimistic that Bubbles will attract any woman across the culture and language. It was very evident , while the author of Eating Pig Feet in the DARK, Geraldine E Jenkins,  jokingly said how her boys won’t listen like all of you, pointing to the men in the room. The meeting room was full of laughter. She was so happy to see you as an accomplished author and was readily there to listen to your advocacy on writing.

We are very happy that this 2025 US trip was very productive and fun !

Regards,

Soundar

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 15, 2025 10:31

இளைஞர்களுக்கான வேதாந்தம்

உண்மையில் வேதாந்தம் இளைஞர்களுக்காக மட்டுமே சொல்லப்பட்ட வேண்டிய ஒன்று. வேதாந்தத்தின் சாரம் என்பது செயலை சிறப்பாக செய்வது, எப்படி செயலுடன் இணைந்துள்ள உணர்வுகள்,கவலைகள் ஆகியவற்றை நம்முடன் இணைத்துக் கொள்ளாமல் செயலாற்றுவது என்பதே

இளைஞர்களுக்கான வேதாந்தம்

I watched your video about the existence of God. Yes, we have a lot of problems in defining the term “God.” While one person is asking the other whether he has belief in God, the real meaning of the question is what kind of God he believes in. I dare to say that ‘no god’ is also a type of god.

The birthplace of God.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 15, 2025 10:30

November 14, 2025

நவீனக்கலை அறிமுகப்பயிற்சி

 

நவீன ஓவியம்- காட்சிக்கலை- ரசனைப்பயிற்சி

ஏ.வி. மணிகண்டன் நடத்தும் நவீன ஓவியக்கலை- காட்சிக்கலை அறிமுகப் பயிற்சிகள் இன்று மிகப்பெரிய அளவில் பங்கேற்பாளர்கள் கொண்ட நிகழ்வாக மாறியுள்ளன. ஏனென்றால் அவை நவீன ஓவியக்கலை- காட்சிக்கலையை எப்படி ரசிப்பது என்று கற்பிக்கின்றன. நவீனக்கலையில் உள்ள அழகியல் கொள்கைகளைக் கற்பிக்கின்றன.

இந்தக் கல்வி இரண்டு வகையில் இன்று முக்கியமானது.

ஒன்று, ஒரு நவீன மனிதன் இன்று காட்சிக்கலையின் அடிப்படைகள் பற்றி அறிந்திருக்கவேண்டும். இல்லையென்றால் அவனால் கட்டிடக்கலை, ஆடை வடிவங்கள்கள், நவீன மோஸ்தர்கள் எதையுமே புரிந்துகொள்ள முடியாது. ஐரோப்பிய- அமெரிக்கப் பண்பாட்டையே அறிந்துகொள்ள முடியாது. ஒரு நவீன இளைஞனுக்குரிய அடிப்படைக் கல்வி இது. தொழில், வணிகம் என எந்தத்துறையிலும் உலகுடன் புழங்குவதற்கும் நம்மை பயிற்சி அளிக்கும் கல்வி இது.இரண்டு, இன்று செயற்கை நுண்ணறிவு உருவாகி பேருருவம் பெற்று வருகிறது. தொழில்நுட்பப் பணிகளை எல்லாம் அது செய்யும். கூடுதலாக நாம் என்ன செய்யமுடியும் என்பதுதான் இன்று நம் தகுதியை அளக்கும் அளவுகோல்.அந்த தகுதி கலைகளால் வருகிறது. தொழில்நுட்பத்துடன் அசலான கலைப்பயிற்சியும் உடைய ஒருவர் தனித்தன்மைகொண்டவர் ஆகிறார். அந்த unique தன்மைதான் இன்றைய உலகில் மதிக்கப்படுவது. அதற்கான ஓர் அறிமுகம், ஒரு தொடக்கம் இந்தக் கல்வி. உலகமெங்கும் இன்று முதன்மையாகக் கற்பிக்கப்படும் இக்கல்வியை முறையான கல்விமுறையாக வளர்த்தெடுக்கும் நோக்கமும் எங்களுக்கு உண்டு.

நாள்  நவம்பர் 28 29 மற்றும் 30

விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com

 

அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள்- இடமிருப்பவை

 

திரைப்படம் ரசனை மற்றும் உருவாக்கப்பயிற்சி. (யூடியூப் காட்சி உருவாக்கப்பயிற்சியும்கூட)

சினிமா மீது தீராப்பற்று கொண்டவர்கள் நாம். ஆனால் நம்மில் மிகச்சிலரே நல்ல சினிமாக்களைப் பார்த்திருக்கிறோம். மிகமிகச் சிலரே சினிமாவின் கலை என்ன என்று அறிந்திருக்கிறோம். வெறுமே சினிமாக்களைப் பார்ப்பது மட்டும் அக்கலையை அறிமுகம் செய்து அளிக்காது. உண்மையில் நிறைய படங்களைப் பார்ப்பது அந்தக் கலைக்கு எதிரான ஒரு செயலாகவே ஆகிவிடும். மனம்போன போக்கில்  சினிமா பார்ப்பவர் தேவையற்ற படங்களை ஏராளமாகப் பார்த்து ரசனையை இழப்பதும் சாத்தியமே

எந்தக் கலையையும்போலவே சினிமாவையும் முறையாக அறிமுகம் செய்துகொள்ளவேண்டும். சினிமக்கலையின் பெரும்படைப்புகள் என்ன, வரலாறு என்ன என்பது ஒரு வகை கல்வி. சினிமாவின் ஷாட், காட்சி, நடிப்பு படத்தொகுப்பு ஆகியவற்றைப் பற்றிய அடிப்படைத் தொழில்நுட்ப அறிதல் என்பது இன்னொரு வகை அறிதல். அந்த அறிதலை முறையான ஆசிரியரிடமிருந்து முறையாகக் கற்றுக்கொள்ளுதல் என்பது ஒரு நல்ல தொடக்கம். நல்ல சினிமாவை பார்க்க விரும்புபவர்களுக்கு மட்டுமல்ல நல்ல சினிமாக்களை உருவாக்க விரும்புபவர்களுக்கும் அவசியமான கல்வி அது.

இன்று, நாம் குறைந்த செலவில் நல்ல குறும்படங்களை உருவாக்கமுடியும். முழுநீளப்படங்களையே உருவாக்கமுடியும். சொல்லப்போனால் சிற்றிதழ் இலக்கிய இயக்கம் போலவே செலவே அற்ற சிறுசினிமா இயக்கத்தையே உருவாக்க முடியும். நமக்குத்தேவை முறையான பயிற்சி. இன்று வரும் குறும்படங்களின் சிக்கலே அவற்றில் முறையான திரைக்கலைப் பயிற்சி இன்மையின் விளைவான தேர்ச்சியின்மை தெரிகிறது என்பதுதான்.

இன்று திரைப்படக்கலை என்பது திரைப்படங்களுடன் மட்டும் நின்றுவிடுவது அல்ல. எல்லா காட்சிக்கலைகளும் திரைப்படத்தின் அழகியலும் தொழில்நுட்பமும் கொண்டவையே. ஒரு நல்ல யூடியூப் வீடியோ தயாரிப்பதற்கே அந்தக் கலைப்பயிற்சி அவசியமானது.

பல நண்பர்கள் கோரியத்ற்கிணங்க தமிழின் கலைப்பட இயக்கத்தின் முதன்மை ஆளுமைகளில் ஒருவரான திரு ஹரிஹரன் அவர்கள் வகுப்பை நடத்த ஒப்புக்கொண்டுள்ளார். ஏழாவது மனிதன் முதலிய படங்களின் இயக்குநர். நீண்டகாலம் திரைக்கலைப் பயிற்றுநர் ஆக பல நிறுவனங்களில் பணியாற்றியவர்.

நாள்  நவம்பர் 21 22 மற்றும் 23

விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com

 

வரவிருக்கும் நிகழ்ச்சிகள்

 

ஆலயக்கலை அறிமுகப் பயிற்சி

ஜெயக்குமார் நடத்திவரும் ஆலயக்கலை அறிமுகப் பயிற்சிகள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இன்று ஓர் இயக்கமாகவே ஆகியுள்ளன. ஆலயக்கலைப் பயிற்சியுடன் அவர் ஆலயங்களுக்கான பயணங்களையும் ஒருங்கிணைக்கிறார். அவருடைய மாணவர்கள் பெரிய திரளாக மாறியுள்ளனர்.

ஆலயங்களை அறிவது என்பது பக்தி, வழிபாடு என்றவகையில் முக்கியமானது. ஆலயம் என்பது ஒரு நூல் போல.ஆலயக்கலை அறியாதவர் அந்நூலின் முன் எழுத்தறியதவராக நின்றிருப்பவர். இப்பயிற்சி அந்நூலை வாசிப்பதற்கான எழுத்தறிவித்தல்கல்வி போன்றது.

ஆலயங்களை அறிவது என்பது மதம்சாராதவர்களுக்கும் முக்கியமானது. அது ஒரு பண்பாட்டுப் பயிற்சி. நம் மரபின் கலையும், இலக்கியமும், வரலாறும் ஆலயங்களிலேயே உள்ளன. ஆலயம் என்பது நம் ஆழ்மனம் போல. இப்பயிற்சி அதை அறிவதற்கானது.

பயிற்சி நாட்கள் டிசம்பர் 5,6 மற்றும் 7

தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

 

யோகப்பயிற்சி- முதல் நிலை

 

சௌந்த்ர் ராஜன் தமிழ்விக்கி

எப்போது வாகனப்போக்குவரத்தும் நாற்காலியும் கண்டடையப்பட்டதோ அப்போதே சில நோய்கள் தொடங்கிவிட்டன என்பார்கள். சென்ற நூறாண்டுகளில் உருவான சோம்பலான வாழ்க்கைமுறை உடலை செயற்கையான நிலைகளுக்கு பழக்கப்படுத்தி பலவகையான உடற்சிக்கல்களை உருவாக்கிவிட்டது. நம் உள்ளுறுப்புகள் எல்லாம் எப்படி இயல்பாக அமைந்திருக்கவேண்டுமோ அப்படி இன்று அமைந்திருக்கவில்லை. அவற்றைச் சீரமைக்க, சரியாக இயங்கச் செய்ய யோகாவே உலகமெங்கும் கடைப்பிடிக்கப்படும் முதன்மையான வழிமுறையாக உள்ளது. யோகா இன்று ஓர் உலகப்பேரியக்கம்.

சௌந்தர் சர்வதேச அளவில் புகழ்பெற்றுவரும் யோகப்பயிற்சியாளர். சென்ற மூன்றாண்டுகளாக அவர் தொடர்ச்சியாக எங்கள் அமைப்பில் யோகப்பயிற்சி அளிக்கிறார். இதன் வழியாகவே அவர் சர்வதேச அளவில் அறியப்படத் தொடங்கினார். யோகப் பயிற்சியை எவரும் பெறலாம். ஆனால் சரியான ஆசிரியருன் வழிகாட்டலில் சரியான பயிற்சியை அடைவது மிக முக்கியமானது. நமக்கான யோகமுறையை அவர் தனிப்பட்ட முறையில் அளிக்கவேண்டும். தொடர்ச்சியாக வழிகாட்டவேண்டும்.

யோகப்பயிற்சிகளை தனியாகச் செயபவர்கள் தொடர்ந்து செய்வதில்லை. அதை தொடர்ந்து செய்வதற்கான வழிமுறை என்பது அதற்கான நண்பர்களின்குழுமத்துடன் இணைவதுதான். அவர்களுடன் நேரிடையான அறிமுகம் அடைவது. அதற்காகவே யோகப்பயிற்சிக்கான தனியான இடம், தனியான சூழல் தேவை எனப்படுகிறது. இயற்கையான அழகான மலைப்பகுதியில் நிகழும் இப்பயிற்சி பலநூறுபேரின் வாழ்க்கையின் திருப்புமுனை ஆகியுள்ளது.

நாள் டிசம்பர் 12 13 மற்றும் 14 

தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

தாவரங்கள்- வனம்: அறிமுக வகுப்பு (குழந்தைகளுக்காகவும்)

தாவரவியல் பேராசிரியை முனைவர் லோகமாதேவி நடத்தும் தாவர அறிமுக வகுப்புகள் பெரியவர்களுக்காகவே திட்டமிடப்பட்டன. ஒவ்வொருவரும் தங்களைச் சூழ்ந்திருக்கும் நூறு தாவரங்களையாவது அறிந்திருக்கவேண்டும் என்பதே நோக்கம். அதற்கான தேவை என்ன? முதன்மையாக மூன்று.

தாவரங்களை அறிவது சூழலுணர்வை உருவாக்கி அன்றாடவாழ்க்கையில்  சிறுசிறு இன்பங்களை உருவாக்குகிறது. இன்றைய சலிப்பூட்டும் அன்றாடச்சுழற்சி கொண்ட வாழ்க்கையில் அது மிகப்பெரிய விடுதலை.நாம் உண்ணும் உணவு, நம் சூழல் ஆகியவற்றைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை உருவாக்குகிறது. அறிவியல்பூர்வமாக நம் வாழ்க்கையை வாழ்வதற்கான வழியக் அறிமுகம் செய்கிறது.யோகம், தியானம் பயில்பவர்கள் இயற்கையுடனான அன்றாட உறவைக்கொண்டிருக்கவேண்டும். அதை தாவர அறிமுகம் உருவாக்குகிறது.

ஆனால் நாங்கள் எண்ணியிராதபடி அவ்வகுப்பு குழந்தைகள் நடுவே புகழ்பெற்றது. இதுவரை நிகழ்ந்த வகுப்புகளில் குழந்தைகள் பேரார்வத்துடன் கலந்துகொண்டனர். குழந்தைகள் கலந்துகொள்வதன் அவசியம்.

இன்றைய கணினி அடிமைத்தனம், செல்பேசி அடிமைத்தனத்தில் இருந்து குழந்தைகளை நேரடியாக இயற்கை நோக்கிக் கொண்டுவருகிறது. இயற்கையுடன் இருப்பதும், செயலாற்றுவதுமே இன்றைய ‘தகவல்தொழில்நுட்ப அடிமை’ மனநிலையில் இருந்து மீள்வதற்கான வழி.பறவைகளைப் பார்த்தல் இளையோருக்குரிய உயர்நிலை கல்வி- பொழுதுபோக்கு. தாவரங்களை அவதானித்தல் அதனுடன் இணைந்து செய்யப்படவேண்டியது.இளமையிலேயே குழந்தைகளுக்கு அவர்களுக்குரிய ஓர் அறிவுத்துறை அறிமுகமாகி அதில் ஈடுபாடு உருவாவது வாழ்க்கை முழுக்க உருவாகும் பல்வேறு திசைதிரும்பல்களை தவிர்க்கும்.இது நுணுக்கமான செய்முறைகளுடன் இணைந்த நிகழ்ச்சி. ஆகவே ஒரு விடுமுறை கொண்டாட்டமும்கூட.

வரும் டிசம்பர் விடுமுறையில் மீண்டும் லோகமாதேவியின் வகுப்புகள் நிகழ்கின்றன.

நாள் டிசம்பர் 26, 27 மற்றும் 28 (வெள்ளி சனி ஞாயிறு. கிறிஸ்துமஸுக்கு மறுநாள் முதல்)

தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 14, 2025 11:29

தயங்கியிருப்பவர் அகவயமானவரா என்ன?

இங்கே ஒரு போக்கு இளைஞர்களிடம் உள்ளது. தங்களை இண்ட்ரோவெர்ட் என்று சொல்லிக்கொள்வார்கள். அச்சொல்லை அடைந்ததுமே ஒரு நிறைவு. ஆனால் உண்மையில் அவர்களின் பிரச்சினை தயக்கம்தான். அந்த தயக்கம் செயலில் ஈடுபடாமையால் வருவதெ ஒழிய அவர்களின் இயல்பு அல்ல.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 14, 2025 10:36

குட்டி இளவரசிகள், குட்டி இளவரசர்கள்!

வணக்கம் இனிய திரு. ஜெயமோகன்

நான் சிவா. நலமா?

சமீப காலமாக  தமிழ்நாட்டின் பெரும்பாலான இளம்பெண்கள் “Little Princess syndrome” (செல்ல சிற்றரசி மனநிலை?) எனும் புதிய வகை மனநோய்க்கு உள்ளாக்கபடுகின்றார்களோ என்ற ஐயம் எனக்கு உண்டு.

நான் கண்ட வரை  தமிழ்நாட்டு பெண் குழந்தைகள் ஆண்குழந்தைகளைவிட அதிக செல்லம் கொடுத்து வளர்க்கப்படுகிறார்கள்.. அதன் காரணமாகவே மற்ற யாரைவிடவும் தான் சிறந்த, ஒரு வித அதிசய பிறவி எனும் எண்ணத்தோடே வளர்கின்றார்கள். இந்த “லிட்டில் பிரின்சஸ்” மனநிலை பேதை, பெதும்பைகளில் ஆரம்பித்து பேரிளம்பெண்ணாகியம் தொடர்வது காணுந்தோறும் குமட்டலை தருகின்றது. 

காரின் கூரை ஜன்னலை  திறந்து தலையை வெளியே காட்டி “நகர்வலம்” வரும் மனநிலையை பெண் குழந்தைகள் எங்கிருந்து கற்றனர்? அந்த மனநிலையின்  அடிப்படை காரணம் என்ன?  (பொடியன்கள் யாரையும் பெரிதாக அப்படி கண்டதில்லை) இதனை ஊக்குவிக்கும்/ அனுமதிக்கும் பெற்றோரின் மனநிலை என்ன? பெரும்பாலான பெண் குழந்தைகள் தான் ஒரு தமிழ் பட கதாநாயகி என்னும் மன நிலையிலேயே வளர்கின்றார்கள்/ ளா?

இப்படி “தமிழ் பட கதாநாயகி” மனநிலையில் வளரும் குழந்தையை விதந்தோதி ரசிக்கும் பெற்றோர்., அப்பெண் அடுத்த கட்டமாக “பருவத்தில்” அகசுரப்பிகள் ஆணைக்கிணங்க அவள் ஒரு ஆண் துணை தேடினால் ஏதோ அவர்களின் அப்பாவி இளவரசியை வேற்றான் சீரழித்து விட்டதாக சினம் கொண்டு அவன் தலை வெட்டுகின்றார்கள்! (ஆண் பெண் பாலியல் உறவுகள் இயல்பாக கொள்ளப்படவேண்டும் (கொல்லப்பட அல்ல!)   என்பதுதான் மானுடத் தரத்தில் முன்னேறிய பண்பட்ட சமூகங்களின் கருத்து) ஆனால், இந்தியாவை போன்ற ஏழாம் உலகத்தில்  பிறக்கும் குழந்தைகளுக்கு இந்நிலத்தின், வாழும் சூழலின் நிதர்சனத்தை புகட்டாமல் ஒரு வித கற்பனை உலகில் வாழவிட்டு, பின் அப்பாவி ஆண் ஒருவனை தலை வெட்டும் கோணல் தர்க்கம் எனக்கு விளங்கவே இல்லை. (தர்க்கரீதியாக சிந்திக்கக்கூடிய தளத்தில் அவர்கள் இன்னும் மனித பரிமாண தரநிலையில் உயரவில்லை என்று புரிகின்றது)

இவ்வாறாக காரின் கூரையை திறந்து  நிற்பதில் ஆரம்பிக்கும் லிட்டில் பிரின்செஸ்களின் அராஜகம் எவனோ ஒருவனின் வாழ்க்கையை தலைவெட்டி முடிப்பதில் நிற்கின்றது.

உண்மை உரைத்தால், இது இந்த இளையோரின் தவறல்ல. கடந்த சில தலைமுறை பெற்றோரின் தவறு!

மேலே சொன்ன எதுவும் மாதம் 7500 ஊதியத்திற்கு நாள் முழுவதும் நின்று வேலை செய்யும் பெண்களுக்கோ, வெயிலிலும், மழையிலும் சாலை ஓரம் நாள் முழுதும் அமர்ந்து  பூ, பழம், காய்கறி, மீன் இன்னபிற விற்கும் பெண்களுக்கோ பொருந்தாது. நான் கண்டவரை தமிழ்நாட்டில் பெரும்பாலான பேரழகிகள் இவர்களாகத்தான் இருக்கின்றார்கள். 

உங்கள் நேரத்துக்கு நன்றி

சிவா  

*

அன்புள்ள சிவா,

ஒரு பார்வையில் சட்டென்று ஒரு சரியான சமூக அவதானிப்பு என்று இது தோன்றலாம். அல்லது ஒரு நேர்மையான எதிர்வினை என்றாவது சிலர் எண்ணலாம். ஆனால் இது ஒரு பொதுவான மனப்பதிவு மட்டுமே.

முதலில் நாம் கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி, பெண்குழந்தைகள் மட்டுமா இப்படி வளர்கிறார்கள்? உடனடியான பதில் இல்லை என்பதே. பைக் வாங்கித்தரவில்லை என தற்கொலை செய்துகொள்ளும் இளைஞர்களைப் பார்க்கிறோம். மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் வருமானம் உள்ள தந்தையின் மகன் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள காலணிகளை அடம்பிடித்து வாங்கியதை அண்மையில் அறிந்தேன். ஏற்கனவே பதினெட்டு ஜோடி காலணிகளை அவன் வைத்திருக்கிறான். நம் பெண்குழந்தைகள் எந்த அளவுக்கு கொஞ்சிச்சீராட்டி வளர்க்கப்பட்டு, உலகமறியாமல் இருக்கிறார்களோ அதைவிட பலமடங்கு ஆண்குழந்தைகள் ‘இளவரசு மனச்சிக்கலில்’ இருக்கிறார்கள்.

நேற்றுத்தான் ஓர் அம்மையார் தன் மகன்கள் இருவரும் ‘அம்மா கையால் சமைத்தால் மட்டுமே சாப்பிடுவோம்’ என உறுதியாக இருப்பதாகவும், ஒவ்வொரு நாளும் ‘மெனு’ அவர்களால் அளிக்கப்படும் என்றும், இருவருக்கும் தனித்தனியாக சமைப்பதற்காக ஒருநாளில் பத்து மணிநேரம் சமையலறையில் செலவழிவதனால் தன்னால் வாசிக்க முடியவில்லை, யோகப்பயிற்சிகூட செய்யமுடியவில்லை என்று சொன்னார். ஆனால் அவர் அதைப்பற்றிக்  குறைப்பட்டுக் கொள்ளவில்லை., தன் மகன்களின் ‘பேரன்பை’ எண்ணி கண்கள் பனிக்க அதைச் சொன்னார்.

நண்பர் கிருஷ்ணன் கல்லூரி மாணவர்களுக்கான திறன்பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார். உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி. அதற்காக மாணவர்களிடம் தேர்வுகள் நடத்தும்போது மாணவர்கள் மிதமிஞ்சிய தன்னம்பிக்கை, கட்டற்ற அலட்சியம் ஆகியவற்றுடன் முழுமையான அசடர்களாக இருப்பதைத்தான் கவனித்ததாகச் சொன்னார். அவர்கள் தங்கள் குடும்பங்களில் சீராட்டப்படுவதனால் தாங்கள் ஏதோ அபூர்வப் பிறவிகள் என நினைக்கிறார்கள். எதையும் தெரிந்துகொள்ள ஆர்வம்கொள்வதே இல்லை. பொறியியலில் மதிப்பெண்ணை எப்படியாவது பெற்றுவிட்டால் நேராக அமெரிக்கா – அதுதான் பலரின் கனவு. பலநூறு பேரில் ஒருவர் மட்டுமே ஏதேனும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.

மாறாக மாணவிகள் வீடுகளில் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள். கண்காணிக்கப்படுகிறார்கள். அகவளர்ச்சிக்கான எல்லா வாய்ப்புகளும் அடைபட்டுள்ளன. அவர்கள் அதை மீறி வெளிக்கிளம்ப வேண்டியுள்ளது. ஆகவே ஆர்வம் கொண்டவர்களாக, முயற்சி செய்பவர்களாக இருக்கிறார்கள். இதுதான் உண்மையில் நடுத்தர, கீழ்நடுத்தரக் குடும்பங்களின் இன்றைய யதார்த்தம். உயர்நடுத்தரக் குடும்பங்களிலும் உயர்குடும்பங்களிலும் மட்டும்தான் ஒரு பகுதிப் பெண்கள் நீங்கள் சொல்லும்படி ‘இளவரசி மனச்சிக்கல்’ கொண்டவர்களாக வளர்க்கப்படுகின்றனர்.

இதற்கான காரணங்களை நான் இவ்வாறு ஊகிக்கிறேன். சென்ற தலைமுறை வரை குடும்பங்களில் குழந்தைகள் ஒருவகையான புறக்கணிப்பையே அடைந்தனர். அவர்களுக்கு என்று உரிமைகள் ஏதுமில்லை. இல்லங்களில் சோறுபோடுவார்கள், துணிமணி வாங்கித்தருவார்கள், படிக்கவைப்பார்கள், அவ்வளவுதான். அவர்களுக்கென தனிவாழ்க்கைகூட இல்லை. அன்றைய குடும்பங்களில் எவருக்கும் அந்தரங்கம் என ஏதும் இல்லை.

இன்று காலம் மாறிவிட்டது. சிறுகுடும்பங்கள் அமைந்துள்ளன. பெரும்பாலான இல்லங்களில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே. ஆகவே அவர்களுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கிறது. அத்துடன் சென்ற தலைமுறையைப் போலன்றி இப்போது எல்லா குடும்பங்களிலும் பிள்ளைகள் மேல் படிப்பு சார்ந்த பெரும் எதிர்பார்ப்பு சுமத்தப்படுகிறது. படிப்பு மாபெரும் போட்டியாக ஆகியுள்ளது. மாணவப்பருவமே இடைவிடாத போட்டிதான். இந்த போட்டியில் தங்கள் பிள்ளைகளை முன்னிறுத்தும் வெறிகொண்ட பெற்றோர் அவர்களை சண்டைக்கோழிகளைப்போல பராமரிக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு அடிமைபோலப் பணிவிடை செய்யும் பெற்றோரை இப்போது எங்கும் காண்கிறோம். பெற்றோரை அடிமைகளாக வேலைவாங்கும் குழந்தைகளும் எங்கும் உள்ளனர். ‘நான் படிக்கிறேன், ஆகவே என் பெற்றோர் எனக்கு அடிமைப்பணி செய்யவேண்டும்’ என நம் பிள்ளைகள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் கூடவே நாம் கவனிக்கவேண்டியது ஒன்று உண்டு. அப்பெற்றோர் அக்குழந்தைகளுக்கு இளமைக்காலத்தையே மறுத்துள்ளார்கள், அவர்களுக்குச் செய்யப்படும் உபச்சாரமெல்லாம் அவர்கள் பந்தயம் கட்டியுள்ள சேவலுக்குச் செய்யும் பராமரிப்பு மட்டும்தான். இது அக்குழந்தைக்கு 2 வயது ஆகும்போதே தொடங்கிவிடுகிறது.

மேலைநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், வெள்ளையினத்தாரின் குடும்பங்களுக்குச் சென்றுள்ளேன். அங்கே இந்த தலைமுறையில் நாம் நம் குழந்தைகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம், உரிமை எல்லாம் இரண்டு தலைமுறைக்கு முன்னரே வந்துவிட்டன. ஆனால் கூடவே அக்குழந்தைகளுக்கான பொறுப்புகளையும் மரியாதைகளையும் கற்பித்துள்ளனர். சொல்லாமலேயே வெள்ளைக்குழந்தைகள் குடும்பத்தில் அவர்களுக்குரிய பொறுப்புகளைச் செய்வதை கவனித்துள்ளே. நாம் முக்கியத்துவம், உரிமை ஆகியவற்றை பிள்ளைகளுக்கு அளிக்கிறோம்; இன்னமும் கடமைகளையும் மரியாதைகளையும் கற்பிக்க ஆரம்பிக்கவில்லை.

இந்த காலமாற்றத்தின் நடுவே சிக்கிக்கொண்ட குழந்தைகளே இன்று தங்களை இளவரசர், இளவரசியர் என எண்ணிக்கொள்பவர்கள். ரயிலில் ஒருமுறை நள்ளிரவில் ஒரு 6 வயது குழந்தை ஒரு குறிப்பிட்ட பிஸ்கெட் தின்றேயாக வேண்டும் என அடம்பிடித்து அலறி அந்தப் பெட்டியையே கதிகலங்கவைக்க, அதன் தந்தை ரயில் நிற்கும் இடங்கள் தோறும் பிஸ்கெட்டுக்காக ஓடி ஓடி அலைபாய்ந்தார். அந்த பிஸ்கட் கிடைக்கவில்லை. அக்குழந்தை ஒருமணிநேரம் மேலும் கதறியபின் தூங்கியது. அதற்குள் அந்த தந்தை உலகத்தையே வாக்குறுதியாக அளித்துவிட்டார். நான் ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ ஜப்பானிலோ எங்கும் பொதுவெளியில் இப்படி ஒரு குழந்தை அலறி ஆர்ப்பாட்டம் செய்வதை ஒருமுறைகூட கண்டதில்லை.

உண்மையில் சிக்கல் எங்குள்ளது? முதலில் அப்பெற்றோரிடம். அடுத்தபடியாக ‘குழந்தைதானே’ என அக்குழந்தையை மன்னிக்கும் சகப்பயணிகளிடம். அக்குழந்தை ஒரு மனச்சிக்கலில் இருக்கிறது, எதிர்காலத்தில் அக்குழந்தை இந்த உலகை எதிர்கொள்வதில் பல பிரச்சினைகள் உருவாகும், அது சுயமையப் பார்வைகொண்டதாக இருக்கும், அதனால் சகமனிதர்களின் மனத்தை புரிந்துகொள்ளவே முடியாது, ஆகவே கடுமையான உறவுச்சிக்கல்கள் உருவாகும். அதை அப்பெற்றோரிடம் இங்கே எவருமே சொல்வதில்லை.

(நான் ஒருமுறை இந்தச் சிக்கலைச் சுட்டிக்காட்டி இந்த தளத்தில் எழுதினேன். முகநூல் முழுக்க எனக்கு வசை. குழந்தைத்தெய்வங்களை மனநோயாளி என்று சொல்கிறேன் என்றெல்லாம் திட்டித்தள்ளினார்கள். உண்மையில் அந்த மனநோய்க்கும்பல்தான் இங்கே குழந்தைகளை மனநோயாளியாக ஆக்குகிறது)

சென்ற தலைமுறையில் பெண்கள் ஒடுக்கப்பட்டார்கள். அவர்களுக்கு கல்வி, பொருளியல் உரிமை, வாழ்க்கையை தெரிவுசெய்யும் உரிமை ஆகியவை மறுக்கப்பட்டன. அதற்கு ஈடு செய்யும்பொருட்டு இன்றைய தலைமுறையில் பெண்குழந்தைகளை ‘கொஞ்சி’ வளர்க்கவேண்டும் என பல தந்தையர் எண்ணுகிறார்கள். அந்த மனநிலை நல்லதுதான். ஆனால் அந்த வெளிப்பாடு சரியானது அல்ல.

பெண்குழந்தைகளுக்கு ‘செல்லம்கொடுப்பது’ என்பது அவர்களுக்கு நன்மை செய்வது அல்ல. கொஞ்சலாம், கொஞ்சுவது ஒரு தந்தையின் பேரின்பம். அதை இழக்கவேண்டியதில்லை. ஆனால் அவர்களுடன் உரையாடலில் இருப்பதே முக்கியமானது. இந்த உலகை அவர்களுக்கு புரியவைக்கவேண்டும். அறிவார்ந்த தகுதி கொண்டவர்களாக அவர்களை ஆக்கவேண்டும். அவர்கள் தங்களுக்கு உகந்த களங்களில் செயல்படுவதற்கான வழிகளை அமைத்துத்தரவேண்டும். அதில் சிக்கல்கள் வரும்போது உடனிருக்கவேண்டும். உணர்ச்சிகரமாகவும், அறிவார்ந்தும்.

ஒரு குழந்தையை உலகம்தெரியாத, உலகமே தனக்கு பணிவிடைசெய்யவேண்டியது என்ற எண்ணம் கொண்ட, ஓர் அசடாக வளர்க்கும் பெற்றோர் அக்குழந்தையை சீரழிக்கிறார்கள், அதற்குப் பெரும் அநீதியை இழைக்கிறார்கள். அது தன் செயற்களத்தைக் கண்டடையவும் அதில் போராடிவெல்லவும் உதவும் பெற்றோர் மட்டுமே உண்மையாக அதற்கு ஏதேனும் நன்மை செய்கிறார்கள்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 14, 2025 10:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.