Jeyamohan's Blog, page 12

September 21, 2025

வேதாந்தம் என்னும் மழை

வேதாந்தம் பிரம்ம தத்துவத்தினூடாக இந்த பெருநிலத்திலிருந்த பல்லாயிரம் தெய்வவழிபாடுகளை ஒன்றாகக் கோர்த்தது. பிறிதொரு கட்டுரையில் ஒரு பொற்பட்டு நூல் என்று வேதாந்தத்தை நான் வரையறுக்கிறேன். அவ்வாறு கோர்ப்பதனூடாக ஒவ்வொரு தரிசனத்திற்கும் ,தத்துவ மரபிற்கும், வழிபாட்டு மரபுகளுக்கும் இருந்த முரண்பாடுகளை அது களைந்தது. மோதல்களை அறிவார்ந்த தளத்திற்கு எடுத்துச்சென்று வழிபாட்டுத்தளத்தில் ஒருமையை உருவாக்கியது. அந்த மாபெரும் ஒருமைப்பணியினூடாக உருவாகி வந்ததே இந்துமதம். பிறிதொரு விரிந்த நோக்கில் இந்தியப் பண்பாடு என்றும் நாம் சொல்வது இந்த மாபெரும் கட்டமைப்பையே. அது அடிப்படையில் வேதாந்தத்தின் கொடை.

இந்து மதத்தின் உள்முரண்பாடுகள் அல்லது உள்விவாதங்கள் உருவாக்கும் நுட்பமான தத்துவ மாறுபாடுகளை வேதாந்தம் எனும் ஒற்றைத் தரிசனத்தை முன்வைப்பதனூடாக நான் மறுதலித்து விடுகிறேன் என்ற ஒரு குற்றச்சாட்டு ஒவ்வொரு முறை வேதாந்தத்தைப் பற்றி நான் சொல்லும்போதும் உருவாகி வருவதுண்டு. தனிப்பட்ட முறையில் எந்தவகையான ஒற்றைப் படைத்தன்மைக்கும் நான் எதிரானவனாகவே இருந்து வருகிறேன். ஆகவே வேதாந்தத்தை ஒருபோதும் ஒற்றைமையமாக முன்வைக்க மாட்டேன். வேதாந்தத்தை முழுமையாக மறுக்கும் சாங்கிய, யோக, நியாய, வைசேஷிக மரபுகளை இணையான முக்கியத்துவத்துடன் முன்வைக்கிறேன்.

ஒற்றைப்படைத்தன்மை என்பது படைப்பூக்கத்திற்கும் ,மானுட ஞானத்தின் தன்னியல்பான விரிவிற்கும் எதிரானது என்பது என்னுடைய கருத்து. மானுட ஞானம் என்பது ஒரு மரம் கிளைவிட்டு பிரிவது போல, இலைகளாக செழிப்பது போல வளரும் தன்மை கொண்டது. அதை ஒற்றைக் கல்தூணாக மாற்றும் எச்செயல்பாட்டுக்கும் எதிரானவனாகவே இருந்து வருகிறேன். ஆகவே நான் ஒருபோதும் அனைத்தும் வேதாந்தமே என்று சென்று முடிக்க விரும்புவதில்லை. ஒவ்வொன்றையும் இணைப்பதில் வேதாந்தத்திற்கு இருக்கும் பெரும் பங்களிப்பை மட்டுமே நான் வலியுறுத்த விரும்புகிறேன். வேதாந்தம் உருவாக்கும் ஒத்திசைவையே முன்வைக்க விரும்புகிறேன். 

வேதாந்தம் அனைத்தையும் மறுத்து தன்னை நிறுத்தும் ஒரு தரிசனம் அல்ல என்பதுதான் என் பார்வையின் அடிப்படை. அனைத்தையும் மழுங்கடித்து, தனித்தன்மைகளை மறைத்து, அது அந்த இணைப்பை நிகழ்த்துவது இல்லை. மாறாக ஒவ்வொரு தனித்தன்மையையும் அடையாளம் கண்டுகொண்டு அதை வளர்த்தெடுக்கவே அது முயல்கிறது. விளைவாக வேதாந்தம் ஒவ்வொரு வழிபாட்டு முறைக்குள்ளும் தன்னுடைய ஒரு புதிய வடிவை சாத்தியமாக்கிக் கொள்கிறது. வைணவம் எனும் வழிபாட்டு முறைக்குள் வேதாந்தம் ஊடுருவியதன் விளைவே விசிஷ்டாத்வைதம். அதேபோல சைவம் எனும் தொன்மையான வழிபாட்டு முறைக்குள் வேதாந்தத்தின் ஊருடுவலே சைவ சித்தாந்தம். 

அங்கு சைவத்தின் எந்த தனித்தன்மையையும் வேதாந்தம் அழிக்கவில்லை. மாறாக சிவன் எனும் உருவத்திற்கு மேலும் பேருருவம் கொண்ட பிரபஞ்ச வடிவம் ஒன்றை அளிக்கிறது அது.  அருவமான சிவம் என்ற ஒன்றை சிவன் எனும் வழிபாட்டுத் தெய்வத்திலிருந்து உருவாக்கி அளிக்கிறது. பசு, பதி, பாசம் எனும் மும்மையை அது உருவாக்கிக் கொள்ள வழிவகுக்கிறது. அதனூடாக வேதாந்தத்தைச் சார்ந்து நிலை நிற்கவேண்டிய தேவை கூட இல்லாத தனித்த ஒரு முழுமையான சிந்தனைமுறையாக சைவ சித்தாந்தம் உருத்தெளிந்து வருவதற்கும் வேதாந்தமே வழிவகுக்கிறது.

உலக மெய்ஞானத்தில் பௌத்தமும் வேதாந்தமும் மட்டுமே இவ்வாறு தொட்டவை அனைத்தையும் வளர்க்கும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. அப்படிப்பார்த்தால் தரிசனத்திற்கு இரண்டு முகங்கள் உண்டு. நெருப்பின் முகம், நீரின் முகம். தொட்ட அனைத்தையும் எரித்தழித்து தான் மட்டுமே நிற்பது தீயின் குணம். தொட்ட அனைத்துக்குமே உயிரூட்டி வளர்த்து அனைத்திற்குள்ளும் ரசமாகி நிற்பது நீரின் குணம். எரித்தழித்து நின்றிருக்கும் தரிசனங்கள் பல உண்டு. மார்க்ஸியமேகூட அவ்வாறான ஒன்றுதான். மாறாக, வேதாந்தமும் யோகாசார பௌத்தமும் நீரின் தன்மை கொண்டவை. அவற்றை விருஷ்டி (மழை) என்று நான் சொல்வேன். விருத்தி என்பதன் இன்னொரு வடிவம் விருஷ்டி. வளர்ப்பவள், வாழச்செய்பவள், அனைத்து விதைகளையும் முளைக்கச்செய்யும் அருள்.  

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 21, 2025 11:35

அபிமானி

அபிமானியின் படைப்புகள் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மலைவாழ் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் வாழ்வியல் நிகழ்வுகளை, அவலங்களை, அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை, பிரச்சனைகளை, முரண்பாடுகளைப் பேசுகின்றன. தாழ்த்தப்பட்ட சாதிக்கும் ஆதிக்க சாதிக்கும் இடையேயான பிரச்சனைகளை, ஏற்றத்தாழ்வுகளை, தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளை வீரியமாகப் பேசுவதாக அபிமானியின் பல படைப்புகள் அமைந்துள்ளன.

அபிமானி அபிமானி அபிமானி – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 21, 2025 11:33

அபிமானி

அபிமானியின் படைப்புகள் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மலைவாழ் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் வாழ்வியல் நிகழ்வுகளை, அவலங்களை, அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை, பிரச்சனைகளை, முரண்பாடுகளைப் பேசுகின்றன. தாழ்த்தப்பட்ட சாதிக்கும் ஆதிக்க சாதிக்கும் இடையேயான பிரச்சனைகளை, ஏற்றத்தாழ்வுகளை, தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளை வீரியமாகப் பேசுவதாக அபிமானியின் பல படைப்புகள் அமைந்துள்ளன.

அபிமானி அபிமானி அபிமானி – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 21, 2025 11:33

விபாஸனா இரண்டாம் நிலை பயிற்சி

வி.அமலன் ஸ்டேன்லி தமிழ் விக்கி

அமலன் ஸ்டேன்லி அவர்களின் விபாசனா நிகழ்வுகள் முழுமையறிவு அமைப்பினூடாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. பலர் முதல் நிலை பயிற்சியில் கலந்துகொண்டுள்ளனர்.

இரண்டாம் நிலைப் பயிற்சியை நடத்த அமலன் ஸ்டேன்லி எண்ணுகிறார். முதல்நிலைப் பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் எவரும் இதில் கலந்துகொள்ளலாம். முதல்நிலைப் பயிற்சி அடிப்படைகளால் ஆனது. இது அகநோக்கிய அடுத்தகட்ட பயணம்.

விபாசனா பயிற்சி உள்ளத்தை ஒருமையாக்கவும், தேவையற்ற உளச்சுமைகளை உதறிவிட்டு உள அழுத்தமில்லா நிலையை அடையவும், அதன் வழியாகச் செயலில் தீவிரமாக ஈடுபடவும் மிக அவசியமானதாக உலகம் முழுக்க பயிற்றுவிக்கப்படுகிறது. அமலன் ஸ்டேன்லி வியட்நாம், தாய்லாந்து , ஜப்பான், திபெத் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த உலக அளவில் புகழ்பெற்ற பல விபாசனா ஆசிரியர்களிடம் முறையான, நீண்டகாலப் பயிற்சியை பெற்றவர். (பார்க்க வி.அமலன் ஸ்டேன்லி, தமிழ்விக்கி)

விபாசனா தியானமுறை பௌத்த பிக்குகளால் பொமு 2 ஆம் நூற்றாண்டில், அதாவது நாம் கீழடி நாகரீகம் இருந்ததாகச் சொல்லும் காலகட்டத்தில் உருவானது. தொடர்ச்சியாக வெவ்வேறு ஞானியரால் அது விரிவாக்கம் செய்யப்பட்டது. நம் உள்ளத்தை ஒருமைப்படுத்துவதற்கான உச்சகட்ட பயிற்சியாக இது கருதப்படுகிறது

பலர் பயிற்சி இல்லாமல் நேரடியாக பத்து நாட்கள், பதினைந்து நாட்கள் விபாசனா பயிற்சிக்குச் சென்று ஓரிரு நாட்கள் தாளமுடியாமல் ஓடிவருவதைக் காண்கிறோம். எங்கள் பயிற்சி என்பது மிகநுணுக்கமாக படிப்படியாக உள்ளத்தை பயிற்றுவிப்பது. இது மரபார்ந்ததும் அறிவியல்பூர்வமானதுமாகும்.

நாள் அக்டோபர்  24 ,25 மற்றும் 26 (வெள்ளி சனி ஞாயிறு)

விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com

 அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள் இடமிருப்பவை

உருது இலக்கியம், கஸல் அறிமுகம்

ஃபயஸ் காதிரி அவர்கள் நடத்தும் உருது இலக்கியம்- கஸல் அறிமுக நிகழ்வு மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற ஒன்று. மரபான உருது கவிஞர்- பாடகர் குடும்பத்தில் வந்தவர் காதிரி. பாடகரும்கூட.உருது இலக்கியம் என்பது வடக்கே இருப்பது அல்ல. தமிழகத்தின் மிகச்சிறப்பான மரபுகளில் ஒன்று அது. உருது இலக்கியத்தின் ஒட்டுமொத்தச் சித்திரத்தை, குறிப்பாக முகலாயர் காலம் முதல் வரும் கவிமரபை அறிமுகம் செய்யும் காதிரி அதன் மிகச்சிறப்பான வெளிப்பாடான கஸல் இசை மரபையும் அறிமுகம் செய்கிறார்.

நாம் லதா மங்கேஷ்கர், வாணிஜெயராம் முதல் ஹரிஹரன் வரை பலர் பாடிய கஸல் பாடல்களைக் கேட்டிருப்போம். ஆனால் உண்மையில் ரசிக்க அடிப்படைப்பயிற்சி அற்றவர்களாகவும் இருக்கிறோம். அந்த அறிமுகப்பயிற்சி நமக்கு முற்றிலும் புதிய ஓர் உலகைத் திறந்து தருவது. ஒரு பெரிய தொடக்கம்.

(அக்டோபர் 20 அன்று திங்கள்கிழமை தீபாவளி ஆதலால் இந்நிகழ்வு வெள்ளி சனி என இருநாட்கள் மட்டுமே நிகழும். கட்டணமும் அதற்கேற்பவே அமையும்.18 மாலையுடன் நிகழ்வு நிறைவடையும்.)

நாட்கள் அக்டோபர் 17 மற்றும் 18 (வெள்ளி, சனி)

விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com

மரபிலக்கியம்- சைவத்திருமுறைகள் அறிமுகம்

மரபின்மைந்தன் முத்தையா தமிழ் விக்கி

மரபின் மைந்தன் முத்தையா நடத்திவரும் மரபிலக்கியம், சைவத்திருமுறைகள் அறிமுக வகுப்புகள் முன்னர் நான்கு முறை நடந்துள்ளன. மீண்டும் நிகழவிருக்கின்றன.

சைவத்தை அறிவதென்பது தமிழை, தமிழ்ப்பண்பாட்டை நுணுகி அறிவதுதான். சைவசித்தாந்தம் சைவத்தின் தத்துவ முகம். சைவத் திருமுறைகள் சைவத்தின் இலக்கிய முகம். சைவத்திருமுறைகளிலுள்ள புகழ்பெற்ற சில பாடல்களையே பரவலாகச் சைவர்கள்கூட அறிந்திருப்பார்கள். கூடுதலாக அறியமுயல்பவர்கள் நூல்களை வாங்குவார்கள், ஆனால் நூல்கள் வழியாக பயிலமுடிவதில்லை.

சைவத்திருமுறைகளைப் பயில ஒரு மரபு உண்டு. இன்றைய சூழலில் நவீன இலக்கியம் மற்றும் நவீன கல்விமுறை அறிமுகம் உடைய ஒருவர் அந்த மரபை இன்றைய சூழலுக்காக மறு ஆக்கம் செய்து கற்பிக்கவேண்டியுள்ளது. மரபின்மைந்தன் முத்தையா அத்தகையவர். நவீன இலக்கியமும் மரபிலக்கியமும் செவ்விலக்கியமும் சைவமும் அறிந்தவர்.

இந்த வகுப்பில் எளிமையான முறையில் தமிழின் மரபிலக்கியத்திற்குள் செல்வது எப்படி என தொடக்கம் அளிக்கப்படும். அதன்பின் சைவத்திருமுறைகளுக்குள் செல்லவும், அவற்றின் கவிச்சுவையையும் தத்துவத்தையும் புரிந்துகொள்ளவும் வழிகாட்டப்படும். இந்த வழிகாட்டல் ஒரு தொடக்கம். ஒருவர் அதிலிருந்து முன்சென்று தன் கல்வியைத் தொடரமுடியும்.

நாள் அக்டோபர் 10, 11 மற்றும்12, (வெள்ளி சனி ஞாயிறு)

விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com

வரவிருக்கும் நிகழ்வுகள்

மரபிசைப் பயிற்சி

ஜெயக்குமார் தமிழ் விக்கி

ஜெயக்குமார் நடத்தும் மரபிசைப் பயிற்சிகள் மீண்டும் நிகழ்கின்றன. இவை கர்நாடக இசை எனப்படும் மரபிசையை கேட்டு ரசிப்பதற்கான பயிற்சிகள். எதுவுமே அறியாத தொடக்கநிலையினருக்கானவை. ராகங்களை அறிமுகம் செய்து, திரைப்பாடல்கள் வழியாக அவற்றை செவிக்குப் பழக்கப்படுத்தி, இசைப்பாடல்களை கேட்கச்செய்து இசைக்குள் இட்டுச்செல்லும் முயற்சி இது. பங்கெடுத்த ஒவ்வொருவருக்கும் புதிய தொடக்கமாக அமைந்தவை.

நம்மில் பலருக்கும் மரபிசையை அறியவேண்டும், கேட்டு ரசிக்கவேண்டும் என்னும் ஆர்வமிருக்கும். அதற்கான முயற்சிகளைச் செய்தும் இருப்போம். ஆனால் இணையம் போன்றவை பெரும்பாலும் உதவுவதில்லை. நேரடியான வகுப்புகள் தேவை. தீவிரமான கவனத்துடன் அவ்வகுப்புகளை கவனிக்கவேண்டும். நேரடியாக ஈடுபட்டு பயிலவும் வேண்டும். அதற்காக அறிவியல்பூர்வமாக உருவாக்கப்பட்டவை இவ்வகுப்புகள்.

நாள்  அக்டோபர் 31, நவம்பர் 1,2 (வெள்ளி சனி ஞாயிறு) 

விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com

வரவிருக்கும் நிகழ்வுகள்நவீனத் தியானம் உளக்குவிப்புப் பயிற்சி

தில்லை செந்தில்பிரபு தமிழ்விக்கி

தில்லை செந்தில்பிரபு நவீன தியானம்- உளக்குவிப்புப் பயிற்சிகளை 30 ஆண்டுகளாக அளித்து வருபவர். கோவையில் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை என்னும் அமைப்பை நிறுவி கல்விப்பணிகளையும் தியானப்பயிற்சிகளை அளிப்பதையும் சேவையாகச் செய்து வருகிறார். புகழ்பெற்ற ஏற்றுமதித் தொழில் ஆலோசகர், தொழில்முனைவோர் ஆக பணிபுரிகிறார்.

தில்லை செந்தில்பிரபுவின் தியான- உளக்குவிப்புப் பயிற்சிகள் எவருக்கானவை? எவருக்கு பயிற்சியில், தொழிலில் உள்ளம் குவியவில்லை? எவருக்கு எப்போதும் அகம் பரபரத்துக்கொண்டே இருக்கிறது? எவருக்கு ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு உள்ளம் தாவிக்கொண்டிருக்கிறது? எவருக்கு மிகச்சிறு காரணங்களுக்காககூட எரிச்சலும் கோபமும் உருவாகிறது? எவருக்கு எப்போதும் ஓர் பதற்றநிலை, எரிச்சல் நிலை இருந்துகொண்டிருக்கிறது?

மிக எளிதான சோதனை இது. சற்றுநேரம் தனியாக அமர்ந்தால் உங்களுக்குள் எழுவது இனிமையான, நிம்மதியான எண்ணங்களா அல்லது எரிச்சலும் கோபமும் ஊட்டும் எதிர்மறை எண்ணங்களா? எதிர்மறை எண்ணங்கள் என்றால் உங்கள் மனம் நிலையழிந்துள்ளது. ஒருமையற்று உள்ளது. இது இன்றைய நவீன வாழ்க்கை நமக்கு அளிக்கும் மிகப்பெரிய நோய். இதிலிருந்து பெரும்பாலானவர்கள் தப்ப முடியாது.

இந்த உளநிலைக்கு பல காரணங்கள். அன்றாடவாழ்க்கையே கடுமையான போட்டியாக ஆகியிருப்பது. மிகக்கடுமையான மன உழைப்பு இல்லாமல் வாழமுடியாத நிலை. (கடுமையான உடல் உழைப்பு உள்ளத்துக்கும்கூட நல்லது). அனைத்தையும் விட இன்று தொழில், குடும்பம் என எல்லா தளங்களிலும் அமைப்புகள் வலுவடைந்துள்ளன. நாம் வெவ்வேறு அமைப்புகள் சார்ந்து மட்டுமே வாழமுடிகிறது. அந்த அமைப்பின் அதிகாரக்கட்டுமானத்தில் ஒரு பகுதியாக நாம் அமைகிறோம். ஆகவே நம்மை எவரோ மேலிருந்து சாட்டையால் அடிக்கிறார்கள். நாம் கீழிருப்பவர்களை அடிக்கிறோம். இதுவே மனச்சோர்வை, மனச்சிதறலை உருவாக்குகிறது.

இந்தியத் தியானமுறைகளை மேலைநாட்டு உளவியல் கொள்கைகளுடன் இணைத்து மகரிஷி மகேஷ் யோகி 1970களில் நவீனத் தியானமுறையை உருவாக்கினார். அது 1950 களில் உலகப்போரின் அழிவுக்குப்பின் உருவான மனச்சோர்வுக் காலகட்டத்தில் பிறந்தவர்களின் இளையதலைமுறை உருவான காலகட்டம். வியட்நாம் போர், பல்வேறு புரட்சிகளின் தோல்வி ஆகியவற்றால் அந்த உளச்சோர்வு பெருகியது. அதை பீட் தலைமுறை என்பார்கள். ஹிப்பி இயக்கம் உருவானது. அவர்களுக்காக மகேஷ் யோகி உருவாகிய தியானமுறை அவர்களில் பெரும்பாலானவர்களை மீட்டது. அதன் வழியாக அது உலகம் முழுக்க பரவியது.

அந்த வழியில், மேலும் மேலும் நவீன உளவியல் மற்றும் நிர்வாகவியல் கொள்கைகளை இணைத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட தியான முறைகள் இன்று உலகமெங்கும் உள்ளன. அந்த மரபில் வந்த தியானப்பயிற்றுநர் தில்லை செந்தில் பிரபு . எந்த தியான முறையிலும் ஆசிரியருடனான நேரடி உறவு, அவர் உங்களை அறிந்திருப்பது முக்கியமானது. ஆகவே இந்த நேரடிப்பயிற்சி அளிக்கப்படுகிறது

நாள் நவம்பர் 7, 8 மற்றும் 9

விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com

ஆயுர்வேத- வாழ்க்கைமுறை அறிமுகம்

சுனீல்கிருஷ்ணன் தமிழ்விக்கி

ஒருவரிடம் அவர் ஆரோக்கியமாக இருக்கிறாரா என்று கேட்டால் ஆம் என்று சொல்லலாம். ஆனால் மூன்று கேள்விகளை மேற்கொண்டு அவரிடம் கேட்கலாம்.

இயல்பான நிறைவான தூக்கம் உள்ளதா, தூங்கி எழுந்தால் புத்துணர்வாக உணர்கிறீர்களா?இயல்பான செரிமானம் உள்ளதா? அதன்விளைவாக இயல்பான கழிவகற்றல் நிகழ்கிறதா?உடலில் எங்கேனும் வலி அல்லது அசௌகரியத்தை உணர்கிறீர்களா? குறிப்பாகக் காலையில்?

இவற்றுக்கான பதில்களில் இருந்தே ஒருவர் தன் உடல்நிலை சீராக இருப்பதை உறுதிசெய்துகொள்ள முடியும்.

ஆனால் கறாராகப்பார்த்தால் பெரும்பாலானவர்களுக்கு இம்மூன்றிலும் சிக்கல் இருக்கும். சென்றகாலங்களில் நாற்பது கடந்தவர்களுக்கான சிக்கல் இது. இன்று இளமையிலேயே உருவாகி வந்துள்ளது. காரணம், இன்றைய வாழ்க்கைமுறை. இதிலுள்ள அவசரம், போட்டி ஆகியவை.

ஆயுர்வேதம் எல்லா நோய்களுக்கும் தீர்வு அளிக்கும் முறை அல்ல. ஆனால் வாழ்க்கைமுறைச்சிக்கல்களுக்கு அது நிரந்தரமான தீர்வுகளை அளிக்கும். வாழ்க்கைமுறைச் சீரமைப்பு, இயற்கையான மூலிகை மருந்துகள் வழியாக. அதற்கு முதலில் ஒருவர் தன் உடல் பற்றி ஆயுர்வேதம் சார்ந்த பார்வையை அறிந்திருக்கவேண்டும். தன்னைத்தானே மதிப்பிட அறிந்திருக்கவேண்டும். தன்னை சீரமைக்க அது அவசியம். அதன்பொருட்டே இந்தப் பயிற்சிகள்.

சுனீல் கிருஷ்ணன் முறையான ஆயுர்வேத கல்விகொண்டவர், புகழ்பெற்ற நவீன எழுத்தாளர், காந்தியவாதி.

அவருடைய வகுப்புகள் நவம்பர் 14 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நிகழ்கின்றன.

விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 21, 2025 11:31

விபாஸனா இரண்டாம் நிலை பயிற்சி

வி.அமலன் ஸ்டேன்லி தமிழ் விக்கி

அமலன் ஸ்டேன்லி அவர்களின் விபாசனா நிகழ்வுகள் முழுமையறிவு அமைப்பினூடாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. பலர் முதல் நிலை பயிற்சியில் கலந்துகொண்டுள்ளனர்.

இரண்டாம் நிலைப் பயிற்சியை நடத்த அமலன் ஸ்டேன்லி எண்ணுகிறார். முதல்நிலைப் பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் எவரும் இதில் கலந்துகொள்ளலாம். முதல்நிலைப் பயிற்சி அடிப்படைகளால் ஆனது. இது அகநோக்கிய அடுத்தகட்ட பயணம்.

விபாசனா பயிற்சி உள்ளத்தை ஒருமையாக்கவும், தேவையற்ற உளச்சுமைகளை உதறிவிட்டு உள அழுத்தமில்லா நிலையை அடையவும், அதன் வழியாகச் செயலில் தீவிரமாக ஈடுபடவும் மிக அவசியமானதாக உலகம் முழுக்க பயிற்றுவிக்கப்படுகிறது. அமலன் ஸ்டேன்லி வியட்நாம், தாய்லாந்து , ஜப்பான், திபெத் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த உலக அளவில் புகழ்பெற்ற பல விபாசனா ஆசிரியர்களிடம் முறையான, நீண்டகாலப் பயிற்சியை பெற்றவர். (பார்க்க வி.அமலன் ஸ்டேன்லி, தமிழ்விக்கி)

விபாசனா தியானமுறை பௌத்த பிக்குகளால் பொமு 2 ஆம் நூற்றாண்டில், அதாவது நாம் கீழடி நாகரீகம் இருந்ததாகச் சொல்லும் காலகட்டத்தில் உருவானது. தொடர்ச்சியாக வெவ்வேறு ஞானியரால் அது விரிவாக்கம் செய்யப்பட்டது. நம் உள்ளத்தை ஒருமைப்படுத்துவதற்கான உச்சகட்ட பயிற்சியாக இது கருதப்படுகிறது

பலர் பயிற்சி இல்லாமல் நேரடியாக பத்து நாட்கள், பதினைந்து நாட்கள் விபாசனா பயிற்சிக்குச் சென்று ஓரிரு நாட்கள் தாளமுடியாமல் ஓடிவருவதைக் காண்கிறோம். எங்கள் பயிற்சி என்பது மிகநுணுக்கமாக படிப்படியாக உள்ளத்தை பயிற்றுவிப்பது. இது மரபார்ந்ததும் அறிவியல்பூர்வமானதுமாகும்.

நாள் அக்டோபர்  24 ,25 மற்றும் 26 (வெள்ளி சனி ஞாயிறு)

விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com

 அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள் இடமிருப்பவை

உருது இலக்கியம், கஸல் அறிமுகம்

ஃபயஸ் காதிரி அவர்கள் நடத்தும் உருது இலக்கியம்- கஸல் அறிமுக நிகழ்வு மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற ஒன்று. மரபான உருது கவிஞர்- பாடகர் குடும்பத்தில் வந்தவர் காதிரி. பாடகரும்கூட.உருது இலக்கியம் என்பது வடக்கே இருப்பது அல்ல. தமிழகத்தின் மிகச்சிறப்பான மரபுகளில் ஒன்று அது. உருது இலக்கியத்தின் ஒட்டுமொத்தச் சித்திரத்தை, குறிப்பாக முகலாயர் காலம் முதல் வரும் கவிமரபை அறிமுகம் செய்யும் காதிரி அதன் மிகச்சிறப்பான வெளிப்பாடான கஸல் இசை மரபையும் அறிமுகம் செய்கிறார்.

நாம் லதா மங்கேஷ்கர், வாணிஜெயராம் முதல் ஹரிஹரன் வரை பலர் பாடிய கஸல் பாடல்களைக் கேட்டிருப்போம். ஆனால் உண்மையில் ரசிக்க அடிப்படைப்பயிற்சி அற்றவர்களாகவும் இருக்கிறோம். அந்த அறிமுகப்பயிற்சி நமக்கு முற்றிலும் புதிய ஓர் உலகைத் திறந்து தருவது. ஒரு பெரிய தொடக்கம்.

(அக்டோபர் 20 அன்று திங்கள்கிழமை தீபாவளி ஆதலால் இந்நிகழ்வு வெள்ளி சனி என இருநாட்கள் மட்டுமே நிகழும். கட்டணமும் அதற்கேற்பவே அமையும்.18 மாலையுடன் நிகழ்வு நிறைவடையும்.)

நாட்கள் அக்டோபர் 17 மற்றும் 18 (வெள்ளி, சனி)

விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com

மரபிலக்கியம்- சைவத்திருமுறைகள் அறிமுகம்

மரபின்மைந்தன் முத்தையா தமிழ் விக்கி

மரபின் மைந்தன் முத்தையா நடத்திவரும் மரபிலக்கியம், சைவத்திருமுறைகள் அறிமுக வகுப்புகள் முன்னர் நான்கு முறை நடந்துள்ளன. மீண்டும் நிகழவிருக்கின்றன.

சைவத்தை அறிவதென்பது தமிழை, தமிழ்ப்பண்பாட்டை நுணுகி அறிவதுதான். சைவசித்தாந்தம் சைவத்தின் தத்துவ முகம். சைவத் திருமுறைகள் சைவத்தின் இலக்கிய முகம். சைவத்திருமுறைகளிலுள்ள புகழ்பெற்ற சில பாடல்களையே பரவலாகச் சைவர்கள்கூட அறிந்திருப்பார்கள். கூடுதலாக அறியமுயல்பவர்கள் நூல்களை வாங்குவார்கள், ஆனால் நூல்கள் வழியாக பயிலமுடிவதில்லை.

சைவத்திருமுறைகளைப் பயில ஒரு மரபு உண்டு. இன்றைய சூழலில் நவீன இலக்கியம் மற்றும் நவீன கல்விமுறை அறிமுகம் உடைய ஒருவர் அந்த மரபை இன்றைய சூழலுக்காக மறு ஆக்கம் செய்து கற்பிக்கவேண்டியுள்ளது. மரபின்மைந்தன் முத்தையா அத்தகையவர். நவீன இலக்கியமும் மரபிலக்கியமும் செவ்விலக்கியமும் சைவமும் அறிந்தவர்.

இந்த வகுப்பில் எளிமையான முறையில் தமிழின் மரபிலக்கியத்திற்குள் செல்வது எப்படி என தொடக்கம் அளிக்கப்படும். அதன்பின் சைவத்திருமுறைகளுக்குள் செல்லவும், அவற்றின் கவிச்சுவையையும் தத்துவத்தையும் புரிந்துகொள்ளவும் வழிகாட்டப்படும். இந்த வழிகாட்டல் ஒரு தொடக்கம். ஒருவர் அதிலிருந்து முன்சென்று தன் கல்வியைத் தொடரமுடியும்.

நாள் அக்டோபர் 10, 11 மற்றும்12, (வெள்ளி சனி ஞாயிறு)

விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com

வரவிருக்கும் நிகழ்வுகள்

மரபிசைப் பயிற்சி

ஜெயக்குமார் தமிழ் விக்கி

ஜெயக்குமார் நடத்தும் மரபிசைப் பயிற்சிகள் மீண்டும் நிகழ்கின்றன. இவை கர்நாடக இசை எனப்படும் மரபிசையை கேட்டு ரசிப்பதற்கான பயிற்சிகள். எதுவுமே அறியாத தொடக்கநிலையினருக்கானவை. ராகங்களை அறிமுகம் செய்து, திரைப்பாடல்கள் வழியாக அவற்றை செவிக்குப் பழக்கப்படுத்தி, இசைப்பாடல்களை கேட்கச்செய்து இசைக்குள் இட்டுச்செல்லும் முயற்சி இது. பங்கெடுத்த ஒவ்வொருவருக்கும் புதிய தொடக்கமாக அமைந்தவை.

நம்மில் பலருக்கும் மரபிசையை அறியவேண்டும், கேட்டு ரசிக்கவேண்டும் என்னும் ஆர்வமிருக்கும். அதற்கான முயற்சிகளைச் செய்தும் இருப்போம். ஆனால் இணையம் போன்றவை பெரும்பாலும் உதவுவதில்லை. நேரடியான வகுப்புகள் தேவை. தீவிரமான கவனத்துடன் அவ்வகுப்புகளை கவனிக்கவேண்டும். நேரடியாக ஈடுபட்டு பயிலவும் வேண்டும். அதற்காக அறிவியல்பூர்வமாக உருவாக்கப்பட்டவை இவ்வகுப்புகள்.

நாள்  அக்டோபர் 31, நவம்பர் 1,2 (வெள்ளி சனி ஞாயிறு) 

விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com

வரவிருக்கும் நிகழ்வுகள்நவீனத் தியானம் உளக்குவிப்புப் பயிற்சி

தில்லை செந்தில்பிரபு தமிழ்விக்கி

தில்லை செந்தில்பிரபு நவீன தியானம்- உளக்குவிப்புப் பயிற்சிகளை 30 ஆண்டுகளாக அளித்து வருபவர். கோவையில் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை என்னும் அமைப்பை நிறுவி கல்விப்பணிகளையும் தியானப்பயிற்சிகளை அளிப்பதையும் சேவையாகச் செய்து வருகிறார். புகழ்பெற்ற ஏற்றுமதித் தொழில் ஆலோசகர், தொழில்முனைவோர் ஆக பணிபுரிகிறார்.

தில்லை செந்தில்பிரபுவின் தியான- உளக்குவிப்புப் பயிற்சிகள் எவருக்கானவை? எவருக்கு பயிற்சியில், தொழிலில் உள்ளம் குவியவில்லை? எவருக்கு எப்போதும் அகம் பரபரத்துக்கொண்டே இருக்கிறது? எவருக்கு ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு உள்ளம் தாவிக்கொண்டிருக்கிறது? எவருக்கு மிகச்சிறு காரணங்களுக்காககூட எரிச்சலும் கோபமும் உருவாகிறது? எவருக்கு எப்போதும் ஓர் பதற்றநிலை, எரிச்சல் நிலை இருந்துகொண்டிருக்கிறது?

மிக எளிதான சோதனை இது. சற்றுநேரம் தனியாக அமர்ந்தால் உங்களுக்குள் எழுவது இனிமையான, நிம்மதியான எண்ணங்களா அல்லது எரிச்சலும் கோபமும் ஊட்டும் எதிர்மறை எண்ணங்களா? எதிர்மறை எண்ணங்கள் என்றால் உங்கள் மனம் நிலையழிந்துள்ளது. ஒருமையற்று உள்ளது. இது இன்றைய நவீன வாழ்க்கை நமக்கு அளிக்கும் மிகப்பெரிய நோய். இதிலிருந்து பெரும்பாலானவர்கள் தப்ப முடியாது.

இந்த உளநிலைக்கு பல காரணங்கள். அன்றாடவாழ்க்கையே கடுமையான போட்டியாக ஆகியிருப்பது. மிகக்கடுமையான மன உழைப்பு இல்லாமல் வாழமுடியாத நிலை. (கடுமையான உடல் உழைப்பு உள்ளத்துக்கும்கூட நல்லது). அனைத்தையும் விட இன்று தொழில், குடும்பம் என எல்லா தளங்களிலும் அமைப்புகள் வலுவடைந்துள்ளன. நாம் வெவ்வேறு அமைப்புகள் சார்ந்து மட்டுமே வாழமுடிகிறது. அந்த அமைப்பின் அதிகாரக்கட்டுமானத்தில் ஒரு பகுதியாக நாம் அமைகிறோம். ஆகவே நம்மை எவரோ மேலிருந்து சாட்டையால் அடிக்கிறார்கள். நாம் கீழிருப்பவர்களை அடிக்கிறோம். இதுவே மனச்சோர்வை, மனச்சிதறலை உருவாக்குகிறது.

இந்தியத் தியானமுறைகளை மேலைநாட்டு உளவியல் கொள்கைகளுடன் இணைத்து மகரிஷி மகேஷ் யோகி 1970களில் நவீனத் தியானமுறையை உருவாக்கினார். அது 1950 களில் உலகப்போரின் அழிவுக்குப்பின் உருவான மனச்சோர்வுக் காலகட்டத்தில் பிறந்தவர்களின் இளையதலைமுறை உருவான காலகட்டம். வியட்நாம் போர், பல்வேறு புரட்சிகளின் தோல்வி ஆகியவற்றால் அந்த உளச்சோர்வு பெருகியது. அதை பீட் தலைமுறை என்பார்கள். ஹிப்பி இயக்கம் உருவானது. அவர்களுக்காக மகேஷ் யோகி உருவாகிய தியானமுறை அவர்களில் பெரும்பாலானவர்களை மீட்டது. அதன் வழியாக அது உலகம் முழுக்க பரவியது.

அந்த வழியில், மேலும் மேலும் நவீன உளவியல் மற்றும் நிர்வாகவியல் கொள்கைகளை இணைத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட தியான முறைகள் இன்று உலகமெங்கும் உள்ளன. அந்த மரபில் வந்த தியானப்பயிற்றுநர் தில்லை செந்தில் பிரபு . எந்த தியான முறையிலும் ஆசிரியருடனான நேரடி உறவு, அவர் உங்களை அறிந்திருப்பது முக்கியமானது. ஆகவே இந்த நேரடிப்பயிற்சி அளிக்கப்படுகிறது

நாள் நவம்பர் 7, 8 மற்றும் 9

விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com

ஆயுர்வேத- வாழ்க்கைமுறை அறிமுகம்

சுனீல்கிருஷ்ணன் தமிழ்விக்கி

ஒருவரிடம் அவர் ஆரோக்கியமாக இருக்கிறாரா என்று கேட்டால் ஆம் என்று சொல்லலாம். ஆனால் மூன்று கேள்விகளை மேற்கொண்டு அவரிடம் கேட்கலாம்.

இயல்பான நிறைவான தூக்கம் உள்ளதா, தூங்கி எழுந்தால் புத்துணர்வாக உணர்கிறீர்களா?இயல்பான செரிமானம் உள்ளதா? அதன்விளைவாக இயல்பான கழிவகற்றல் நிகழ்கிறதா?உடலில் எங்கேனும் வலி அல்லது அசௌகரியத்தை உணர்கிறீர்களா? குறிப்பாகக் காலையில்?

இவற்றுக்கான பதில்களில் இருந்தே ஒருவர் தன் உடல்நிலை சீராக இருப்பதை உறுதிசெய்துகொள்ள முடியும்.

ஆனால் கறாராகப்பார்த்தால் பெரும்பாலானவர்களுக்கு இம்மூன்றிலும் சிக்கல் இருக்கும். சென்றகாலங்களில் நாற்பது கடந்தவர்களுக்கான சிக்கல் இது. இன்று இளமையிலேயே உருவாகி வந்துள்ளது. காரணம், இன்றைய வாழ்க்கைமுறை. இதிலுள்ள அவசரம், போட்டி ஆகியவை.

ஆயுர்வேதம் எல்லா நோய்களுக்கும் தீர்வு அளிக்கும் முறை அல்ல. ஆனால் வாழ்க்கைமுறைச்சிக்கல்களுக்கு அது நிரந்தரமான தீர்வுகளை அளிக்கும். வாழ்க்கைமுறைச் சீரமைப்பு, இயற்கையான மூலிகை மருந்துகள் வழியாக. அதற்கு முதலில் ஒருவர் தன் உடல் பற்றி ஆயுர்வேதம் சார்ந்த பார்வையை அறிந்திருக்கவேண்டும். தன்னைத்தானே மதிப்பிட அறிந்திருக்கவேண்டும். தன்னை சீரமைக்க அது அவசியம். அதன்பொருட்டே இந்தப் பயிற்சிகள்.

சுனீல் கிருஷ்ணன் முறையான ஆயுர்வேத கல்விகொண்டவர், புகழ்பெற்ற நவீன எழுத்தாளர், காந்தியவாதி.

அவருடைய வகுப்புகள் நவம்பர் 14 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நிகழ்கின்றன.

விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 21, 2025 11:31

வன்முறை, குரூரம், கலை- ‘அவள்’ கடிதங்கள்.

அவள்

அன்புள்ள ஆசிரியருக்கு,

‘அவள்‘ மிகுந்த தொந்தரவு செய்யும் கதை. வாசிக்கும் போதே இதை அப்படியே மறந்து கடந்துவிட வேண்டும் எனத் தோன்றிக்கொண்டிருந்தது. எப்போதும் எல்லா காலத்திலும் மீள மீள நிகழ்வது. அல்லது இத்தனை விழுமியங்களும் அறங்களும் அதற்கான பொதுப்பாவனைகளும் உருவாக்கி எடுத்த பின்னரும் மீண்டும் அத்தனை சிறுமைகளுடன் அதுவே நிகழ்கிறதென்றால் மேலும் இழிவை, இருளை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறோமா என்ன? கதையை வாசித்ததும் பன்னிருபடைக்களத்தில் துகிலுருப்பிற்கு பின் வெளிப்படும் பீமனின் சொற்களே நினைவுக்கு வந்தன. ஆணென பிறந்தமையாலேயே சூடிக்கொள்ளும் கீழ்மை.

பாலியல் வன்முறைகளில் பொதுமனம் எப்போதும் தவறாமல் புலனாய்வது பாதிக்கப்பட்டவரின் நடத்தையைதான். இங்கு பொதுமனம் என்று ஒரு தப்பித்தலுக்கு சொல்கிறேனே ஒழிய எந்த மனமும் ஆணோ பெண்ணோ, அவ்வாறான மதிப்பிடலை ஒருகணமேனும் செய்யாமல் இருக்காது என்றே உணர்கிறேன். குற்றச்சாட்டாக சொல்லாவிட்டாலும் குற்றத்திற்கான ஊற்றை ஆராய்கிறேன் என்று ஆரம்பிப்பார்கள். இக்கதையில் அப்படி நடத்தையை பாதகமாக மதிப்பிடுவதற்கான அத்தனை வாய்ப்புகளை வழங்கிய பின்னரும் எஞ்சி நிற்கும் வன்முறையின் கீழ்மையை கண்முன் நிறுத்துகிறது. அவள் எல்லைக்கோடுகளை அழித்து விளையாடுபவளாகவே இருக்கட்டும், சாட்சியாக நிற்கும் தாயை இரத்தம் கசிய தாக்கிவிட்டு செல்பவளாக இருக்கட்டும், அவளாகவே அழைத்திருக்கட்டும்.. எப்படியும் ஒருதுளியும் நியாயப்படுத்த முடியாமல் எஞ்சி நிற்கும் வன்முறையின் குரூரத்தின் கீழ்மைக்கு முன்னால் வியர்த்தம் என்பதற்கப்பால் எச்சொல்லும் எஞ்சி நிற்கவில்லை.

இது கதையின் நடைமுறை தளத்தில் வாசக மனதில் நிகழ்த்திப் பார்க்கும் கூரிய சோதனை. இந்த அளவிலேயே இக்கதை முக்கியமானதுதான். இதற்கு அப்பால் கூவமும் கடலும் அவளை அழைக்கும், அவளுடன் உரையாடும் இடங்கள் ஒட்டுமொத்த  நோக்கு கொண்ட ஒரு கலைஞன் மட்டுமே சென்றடையக்கூடியது. நம் அழுக்குகள் அத்தனையும் அவளில் கலந்துவிட்டு அவளை அழுக்கானவள் என்கிறோம். அவளோ அத்தனைக்கும் அப்பால் ஒளி சூடி நிற்கிறாள். வழக்கமாக தன் கதைகளில் வெளிப்படும் ஒளி இதில் இல்லையோ என ஓரிடத்தில் அஜிதன் சொல்லியிருந்தார். பின் மதிய வெயிலில் பளிங்குப் பரப்புபோல பிரதிபலித்து நிற்கும் கூவம் நதியின் காட்சியே இக்கதையை மீண்டும் தொகுத்துப் பார்க்கவும் நினைவு கூர்வதற்குமான தைரியத்தை அளித்தது. அந்த ஆழத்து இருள், தன்னுள் தானென அமைந்திருப்பதன் கருணை எப்போதும் மண்மீது இருக்கட்டும்.

டி.ஏ. பாரி

அன்புள்ள ஆசிரியருக்கு,

அவள் கதை படித்தேன். கதையின் கலைப்பாவனை என்பது ஒரு கொடூரத்தை ‘அப்படியே‘ சொல்வது என்பதுதான். ஆசிரியர் எதையும் சேர்க்கவில்லை என்றும், கதையின் வெவ்வேறு narration களுக்கு இடையே உள்ள ஒத்திசைவும் முரண்பாடும் எல்லாம் அப்படியே சொல்லப்பட்டுள்ளன அவ்வளவுதான் என்றும் பாவனை செய்கிறது கதை.  Plot எனப்படும் கதைவளர்ச்சியும் முடிவும் கொண்ட கதைகளைக் கடந்து இந்தவகையான கதைகள் அண்மையில் எழுதப்படுகின்றன. பிரான்ஸில்தான் இந்தவகை எழுத்து தொடங்கியது. ஆனால் ஜப்பானிய, கொரிய படைப்புகளில்தான் எல்லா எல்லைகளையும் கடந்துவிட்டார்கள். கூடவே Heavy metal போன்ற இசையும். இதை எந்தவகையிலே எடுத்துக்கொள்வது என்று எனக்கு இன்னமும்கூட சிக்கல்தான். இந்த வகையான கதைகளில் கிளாஸிக் என்று சொல்லப்படும் கதைகள் பலவற்றை வாசித்திருக்கிறேன். கலைப்படங்களையும் பார்த்துள்ளேன். ஓவியங்களையும் பார்க்கிறேன். எனக்கு அவை கடுமையான ஒவ்வாமையைத்தான் அளித்தன. அதிர்ச்சி, உடனே விலகிவிடவேண்டும் என்ற மனநிலை.

இந்தக் கதைகளில் எப்போதும் இருப்பது செய்திகளில் வரும் விஷயங்கள்தான். சமகால யதார்த்தங்கள்தான். அவற்றை மிகமிக நுணுக்கமான காட்சிகளாகவும் நிகழ்வுகளாகவும் எழுதிக்காட்டுகிறார்கள். ஒரு குவியாடியால் பெரிதாக்கிக் காட்டுவது போல. ஏன் இப்படிக் காட்டவேண்டும்? அதற்குப் பதில் இதுதான். இந்தவகையான குரூரம், வன்முறை இதையெல்லாம் ஒருகணம் பார்த்துவிட்டு உடனடியாக நாம் பார்வையை திருப்பிக்கொள்கிறோம். அது ஒரு Mass hypocrisy. நம் தலையைப் பிடித்துத் திருப்பி இதோ இதைப்பார் என்று சொல்கிறார்கள். இதில் ஏன் பிளாட் இல்லை? ஆசிரியர் ஒன்றுமே சொல்வதுபோல இல்லையே? அதற்கான பதில் இதுதான். இந்த வேறுவேறு நிகழ்வுகளுக்கு நடுவே உள்ள இணைப்பை வாசகன் உருவாக்கிக்கொண்டு அவற்றிலுள்ள அகயதார்த்தம் நோக்கிச் செல்லவேண்டும். இந்தகதை உணர்த்தவிரும்பும் விஷயம் கதைமுடிவில் இல்லை. கதையின் நிகழ்வுகளுக்கு இடையே உள்ளது.

‘அவள்‘ அந்த வகையில் தமிழில் எழுதப்பட்ட ஒரு முக்கியமான கதைதான். ஒரு வதையாக ஆகும் வாசிப்பனுபவத்தை அளிக்கிறது. Seemingly reporting என்று சொல்லத்தக்க இந்தக் கதையின் இடையே வாசகன் பொருத்திக்கொள்ள பல நுட்பமான இடங்கள் உள்ளன. ஒரு குறியீடாக ஆகக்கூடாது என்ற கவனத்துடன் வந்துகொண்டிருக்கும் கூவம். அதன் பளபளக்கும் அழகு. அதேபோல கொல்லப்பட்ட பெண்ணுக்கும் அவள் அம்மாவுக்குமான உறவு. அந்த வன்முறையை அவள்மேல் நிகழ்த்தியவர்கள் கூட்டாக ஒரு collective personality ஆக காட்டப்பட்டிருக்க பெண் தன்னந்தனியாக அதன்முன் நிற்கிறாள். இப்படி பல விஷயங்கள். எனக்கு அவள் ஒரு தற்கொலைத்தனமான வெறியுடன், கூவத்தில் குதித்துச் சாவதுபோல அந்த சாவு நோக்கிச் செல்கிறாள் என்று பட்டது. அவளுக்குள் இருந்தது தன்னை அழித்துக்கொள்ளும் ஆங்காரமா இல்லை அவளுக்கே தீமை நோக்கிய ஈர்ப்பு இருந்ததா? அவளிடமும் கடும் வன்முறை இருக்கிறது. தன்னை அழிக்கும் வன்முறை. அது எதிர்வினையா இல்லை அதுவும் சமகால வன்முறையா? இரண்டுக்கும் கதை இடம் கொடுக்கிறது. கூவம் அவ்வளவு ஈர்ப்பானது (இது எனக்கே உள்ள அனுபவம். 90ல் நான் ஒருமுறை முழங்கால்வரை இறங்கிப்பார்த்தேன்) இது மனிதாபிமானக்கதையா, ஃபாசிசக்கதையா? அண்மைக்கால இந்தவகை எழுத்துக்களை இரண்டும்தான் என்றுதான் சொல்லமுடியும்.

இன்றைய புதிய கதைவடிவம் ஒன்றை எழுதியிருக்கிறார் ஆசிரியர். அண்மைக்கால செய்திகளில் அமைதியிழந்து எழுதியிருக்கலாம்.மிக நுணுக்கமாகவும், ஒன்றோடொன்று செய்திகள் பொருந்துவதுபோலவும், ஆனால் வேண்டுமென்றே பொருத்தமாக செய்யப்படாததுபோல தெரிவதாகவும் எழுதியுள்ளார். மனதின் நுணுக்கமான சித்திரங்களும் உள்ளன. ஆனால் இந்தவகை கதைகளை எந்த அளவு நாம் வரவேற்கவேண்டும், இவற்றுக்கு உண்மையில் உள்ள இடம் என்ன என்பதெல்லாம் பெரிய கேள்விகள். நாம் இவற்றை வாசிக்கையில் உண்மையில் (நான் பிரெஞ்சு, ஜப்பானிய, கொரியக் கதைகளை எல்லாம் சேர்த்தே சொல்கிறேன்) உண்மையில் ஆசிரியர் உத்தேசிக்கும் catharsis நடக்கிறதா, இல்லை நாம் நம் மன அழுக்கைக்கொண்டு இந்த வன்முறையை உண்மையில் ரசிக்கிறோமா என்பதெல்லாம் சிக்கலான கேள்விகள். இந்தவகையான கதைகள் நவீனச் சமூகத்தில் பெருகிவரும் வன்முறைக்கு கலை அளிக்கும் எதிர்வினைகள். கழிப்பறைக் கோப்பையை கொண்டுவந்து சிற்பமாக ஆக்கி வைக்கிறார்கள். ஏன் மலத்தையே ஓவியமாக வரைகிறார்கள். ஆனால் இந்த எதிர்வினைகள் அறம் சார்ந்தவையா இல்லை, இவையும் இன்னொருவகை வன்முறைகள்தானா? நமக்கு நாமே செலுத்திக்கொண்டாலும் வன்முறைதானே?

எனக்கு இவற்றின்மேல் ஒவ்வாமைதான் உள்ளது. இவை தேவையில்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் இங்கே ஐரோப்பாவில் ஓவியங்கள், நாடகங்கள், இசை எல்லாவற்றிலும் இதே வன்முறையின் உச்சமான நுணுக்கம்தான் உள்ளது. என் ஒவ்வாமையையும் மறுப்பையும் மட்டும் பதிவுசெய்கிறேன். I understand the type of art this represents, yet I choose to reject it.

ஶ்ரீனிவாஸ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 21, 2025 11:31

வன்முறை, குரூரம், கலை- ‘அவள்’ கடிதங்கள்.

அவள்

அன்புள்ள ஆசிரியருக்கு,

‘அவள்‘ மிகுந்த தொந்தரவு செய்யும் கதை. வாசிக்கும் போதே இதை அப்படியே மறந்து கடந்துவிட வேண்டும் எனத் தோன்றிக்கொண்டிருந்தது. எப்போதும் எல்லா காலத்திலும் மீள மீள நிகழ்வது. அல்லது இத்தனை விழுமியங்களும் அறங்களும் அதற்கான பொதுப்பாவனைகளும் உருவாக்கி எடுத்த பின்னரும் மீண்டும் அத்தனை சிறுமைகளுடன் அதுவே நிகழ்கிறதென்றால் மேலும் இழிவை, இருளை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறோமா என்ன? கதையை வாசித்ததும் பன்னிருபடைக்களத்தில் துகிலுருப்பிற்கு பின் வெளிப்படும் பீமனின் சொற்களே நினைவுக்கு வந்தன. ஆணென பிறந்தமையாலேயே சூடிக்கொள்ளும் கீழ்மை.

பாலியல் வன்முறைகளில் பொதுமனம் எப்போதும் தவறாமல் புலனாய்வது பாதிக்கப்பட்டவரின் நடத்தையைதான். இங்கு பொதுமனம் என்று ஒரு தப்பித்தலுக்கு சொல்கிறேனே ஒழிய எந்த மனமும் ஆணோ பெண்ணோ, அவ்வாறான மதிப்பிடலை ஒருகணமேனும் செய்யாமல் இருக்காது என்றே உணர்கிறேன். குற்றச்சாட்டாக சொல்லாவிட்டாலும் குற்றத்திற்கான ஊற்றை ஆராய்கிறேன் என்று ஆரம்பிப்பார்கள். இக்கதையில் அப்படி நடத்தையை பாதகமாக மதிப்பிடுவதற்கான அத்தனை வாய்ப்புகளை வழங்கிய பின்னரும் எஞ்சி நிற்கும் வன்முறையின் கீழ்மையை கண்முன் நிறுத்துகிறது. அவள் எல்லைக்கோடுகளை அழித்து விளையாடுபவளாகவே இருக்கட்டும், சாட்சியாக நிற்கும் தாயை இரத்தம் கசிய தாக்கிவிட்டு செல்பவளாக இருக்கட்டும், அவளாகவே அழைத்திருக்கட்டும்.. எப்படியும் ஒருதுளியும் நியாயப்படுத்த முடியாமல் எஞ்சி நிற்கும் வன்முறையின் குரூரத்தின் கீழ்மைக்கு முன்னால் வியர்த்தம் என்பதற்கப்பால் எச்சொல்லும் எஞ்சி நிற்கவில்லை.

இது கதையின் நடைமுறை தளத்தில் வாசக மனதில் நிகழ்த்திப் பார்க்கும் கூரிய சோதனை. இந்த அளவிலேயே இக்கதை முக்கியமானதுதான். இதற்கு அப்பால் கூவமும் கடலும் அவளை அழைக்கும், அவளுடன் உரையாடும் இடங்கள் ஒட்டுமொத்த  நோக்கு கொண்ட ஒரு கலைஞன் மட்டுமே சென்றடையக்கூடியது. நம் அழுக்குகள் அத்தனையும் அவளில் கலந்துவிட்டு அவளை அழுக்கானவள் என்கிறோம். அவளோ அத்தனைக்கும் அப்பால் ஒளி சூடி நிற்கிறாள். வழக்கமாக தன் கதைகளில் வெளிப்படும் ஒளி இதில் இல்லையோ என ஓரிடத்தில் அஜிதன் சொல்லியிருந்தார். பின் மதிய வெயிலில் பளிங்குப் பரப்புபோல பிரதிபலித்து நிற்கும் கூவம் நதியின் காட்சியே இக்கதையை மீண்டும் தொகுத்துப் பார்க்கவும் நினைவு கூர்வதற்குமான தைரியத்தை அளித்தது. அந்த ஆழத்து இருள், தன்னுள் தானென அமைந்திருப்பதன் கருணை எப்போதும் மண்மீது இருக்கட்டும்.

டி.ஏ. பாரி

அன்புள்ள ஆசிரியருக்கு,

அவள் கதை படித்தேன். கதையின் கலைப்பாவனை என்பது ஒரு கொடூரத்தை ‘அப்படியே‘ சொல்வது என்பதுதான். ஆசிரியர் எதையும் சேர்க்கவில்லை என்றும், கதையின் வெவ்வேறு narration களுக்கு இடையே உள்ள ஒத்திசைவும் முரண்பாடும் எல்லாம் அப்படியே சொல்லப்பட்டுள்ளன அவ்வளவுதான் என்றும் பாவனை செய்கிறது கதை.  Plot எனப்படும் கதைவளர்ச்சியும் முடிவும் கொண்ட கதைகளைக் கடந்து இந்தவகையான கதைகள் அண்மையில் எழுதப்படுகின்றன. பிரான்ஸில்தான் இந்தவகை எழுத்து தொடங்கியது. ஆனால் ஜப்பானிய, கொரிய படைப்புகளில்தான் எல்லா எல்லைகளையும் கடந்துவிட்டார்கள். கூடவே Heavy metal போன்ற இசையும். இதை எந்தவகையிலே எடுத்துக்கொள்வது என்று எனக்கு இன்னமும்கூட சிக்கல்தான். இந்த வகையான கதைகளில் கிளாஸிக் என்று சொல்லப்படும் கதைகள் பலவற்றை வாசித்திருக்கிறேன். கலைப்படங்களையும் பார்த்துள்ளேன். ஓவியங்களையும் பார்க்கிறேன். எனக்கு அவை கடுமையான ஒவ்வாமையைத்தான் அளித்தன. அதிர்ச்சி, உடனே விலகிவிடவேண்டும் என்ற மனநிலை.

இந்தக் கதைகளில் எப்போதும் இருப்பது செய்திகளில் வரும் விஷயங்கள்தான். சமகால யதார்த்தங்கள்தான். அவற்றை மிகமிக நுணுக்கமான காட்சிகளாகவும் நிகழ்வுகளாகவும் எழுதிக்காட்டுகிறார்கள். ஒரு குவியாடியால் பெரிதாக்கிக் காட்டுவது போல. ஏன் இப்படிக் காட்டவேண்டும்? அதற்குப் பதில் இதுதான். இந்தவகையான குரூரம், வன்முறை இதையெல்லாம் ஒருகணம் பார்த்துவிட்டு உடனடியாக நாம் பார்வையை திருப்பிக்கொள்கிறோம். அது ஒரு Mass hypocrisy. நம் தலையைப் பிடித்துத் திருப்பி இதோ இதைப்பார் என்று சொல்கிறார்கள். இதில் ஏன் பிளாட் இல்லை? ஆசிரியர் ஒன்றுமே சொல்வதுபோல இல்லையே? அதற்கான பதில் இதுதான். இந்த வேறுவேறு நிகழ்வுகளுக்கு நடுவே உள்ள இணைப்பை வாசகன் உருவாக்கிக்கொண்டு அவற்றிலுள்ள அகயதார்த்தம் நோக்கிச் செல்லவேண்டும். இந்தகதை உணர்த்தவிரும்பும் விஷயம் கதைமுடிவில் இல்லை. கதையின் நிகழ்வுகளுக்கு இடையே உள்ளது.

‘அவள்‘ அந்த வகையில் தமிழில் எழுதப்பட்ட ஒரு முக்கியமான கதைதான். ஒரு வதையாக ஆகும் வாசிப்பனுபவத்தை அளிக்கிறது. Seemingly reporting என்று சொல்லத்தக்க இந்தக் கதையின் இடையே வாசகன் பொருத்திக்கொள்ள பல நுட்பமான இடங்கள் உள்ளன. ஒரு குறியீடாக ஆகக்கூடாது என்ற கவனத்துடன் வந்துகொண்டிருக்கும் கூவம். அதன் பளபளக்கும் அழகு. அதேபோல கொல்லப்பட்ட பெண்ணுக்கும் அவள் அம்மாவுக்குமான உறவு. அந்த வன்முறையை அவள்மேல் நிகழ்த்தியவர்கள் கூட்டாக ஒரு collective personality ஆக காட்டப்பட்டிருக்க பெண் தன்னந்தனியாக அதன்முன் நிற்கிறாள். இப்படி பல விஷயங்கள். எனக்கு அவள் ஒரு தற்கொலைத்தனமான வெறியுடன், கூவத்தில் குதித்துச் சாவதுபோல அந்த சாவு நோக்கிச் செல்கிறாள் என்று பட்டது. அவளுக்குள் இருந்தது தன்னை அழித்துக்கொள்ளும் ஆங்காரமா இல்லை அவளுக்கே தீமை நோக்கிய ஈர்ப்பு இருந்ததா? அவளிடமும் கடும் வன்முறை இருக்கிறது. தன்னை அழிக்கும் வன்முறை. அது எதிர்வினையா இல்லை அதுவும் சமகால வன்முறையா? இரண்டுக்கும் கதை இடம் கொடுக்கிறது. கூவம் அவ்வளவு ஈர்ப்பானது (இது எனக்கே உள்ள அனுபவம். 90ல் நான் ஒருமுறை முழங்கால்வரை இறங்கிப்பார்த்தேன்) இது மனிதாபிமானக்கதையா, ஃபாசிசக்கதையா? அண்மைக்கால இந்தவகை எழுத்துக்களை இரண்டும்தான் என்றுதான் சொல்லமுடியும்.

இன்றைய புதிய கதைவடிவம் ஒன்றை எழுதியிருக்கிறார் ஆசிரியர். அண்மைக்கால செய்திகளில் அமைதியிழந்து எழுதியிருக்கலாம்.மிக நுணுக்கமாகவும், ஒன்றோடொன்று செய்திகள் பொருந்துவதுபோலவும், ஆனால் வேண்டுமென்றே பொருத்தமாக செய்யப்படாததுபோல தெரிவதாகவும் எழுதியுள்ளார். மனதின் நுணுக்கமான சித்திரங்களும் உள்ளன. ஆனால் இந்தவகை கதைகளை எந்த அளவு நாம் வரவேற்கவேண்டும், இவற்றுக்கு உண்மையில் உள்ள இடம் என்ன என்பதெல்லாம் பெரிய கேள்விகள். நாம் இவற்றை வாசிக்கையில் உண்மையில் (நான் பிரெஞ்சு, ஜப்பானிய, கொரியக் கதைகளை எல்லாம் சேர்த்தே சொல்கிறேன்) உண்மையில் ஆசிரியர் உத்தேசிக்கும் catharsis நடக்கிறதா, இல்லை நாம் நம் மன அழுக்கைக்கொண்டு இந்த வன்முறையை உண்மையில் ரசிக்கிறோமா என்பதெல்லாம் சிக்கலான கேள்விகள். இந்தவகையான கதைகள் நவீனச் சமூகத்தில் பெருகிவரும் வன்முறைக்கு கலை அளிக்கும் எதிர்வினைகள். கழிப்பறைக் கோப்பையை கொண்டுவந்து சிற்பமாக ஆக்கி வைக்கிறார்கள். ஏன் மலத்தையே ஓவியமாக வரைகிறார்கள். ஆனால் இந்த எதிர்வினைகள் அறம் சார்ந்தவையா இல்லை, இவையும் இன்னொருவகை வன்முறைகள்தானா? நமக்கு நாமே செலுத்திக்கொண்டாலும் வன்முறைதானே?

எனக்கு இவற்றின்மேல் ஒவ்வாமைதான் உள்ளது. இவை தேவையில்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் இங்கே ஐரோப்பாவில் ஓவியங்கள், நாடகங்கள், இசை எல்லாவற்றிலும் இதே வன்முறையின் உச்சமான நுணுக்கம்தான் உள்ளது. என் ஒவ்வாமையையும் மறுப்பையும் மட்டும் பதிவுசெய்கிறேன். I understand the type of art this represents, yet I choose to reject it.

ஶ்ரீனிவாஸ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 21, 2025 11:31

ரமேஷ், கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

நான் தத்துவம் பயில்வதற்காக 1992 ல் டெல்லி பல்கலையில் சேர்ந்த ஆண்டில்தான் ஒரு நூலை வாசிக்க நேர்ந்தது. சார்த்ர் எழுதிய Nausea என்ற நாவல். ஒரு நாவலுக்கு வாந்தி என்று தலைப்பு இருப்பது எனக்கு கடுமையான அருவருப்பை உருவாக்கியது. ஆனால் அதைப்பற்றிய ஒரு ஏற்பை என் மூத்த நண்பர்கள் பேசிப்பேசி உருவாக்கினார்கள். ஒவ்வாமையே ஓர் இலக்கியப்படைப்பின் காரணமாக ஏன் இருக்கக்கூடாது என்று சொன்னார்கள். இன்று அந்நாவலை ஓர் உயர்வான படைப்பாக நான் நினைக்கவில்லை. அது மூளைசார்ந்த நாவல். சார்த்ரின் சிந்தனைகளை வெளிப்படுத்தும் ஒரு ஃப்ரேம்வர்க் மட்டும்தான். ஆனால் அது வெளிப்படுத்திய சிந்தனைகள் முக்கியமானவை. ஒவ்வாமை, விலக்கம் ஆகியவற்றின் ஓர் ஆவணம் அது.

2012ல் உங்கள் தளத்தின் வழியாக நான் ரமேஷ் பிரேதனை அறிமுகம் செய்து கொண்டேன். அவருடைய எழுத்து பின்நவீனத்துவ எழுத்துமுறை கொண்டது. அதாவது மெட்டா ஃபிக்‌ஷன் வகைமை கொண்டது. ஆனால் அவருடைய பார்வையும், அவர் படைப்புகளின் உள்ளடக்கமும் சார்த்ரின் படைப்புகளுக்குத்தான் நெருக்கமானவை. Nausea ரமேஷ் படைப்புக்களை புரிந்துகொள்ள மிகவும் உதவும் ஒரு நாவல். ஒவ்வாமை கடுமையான தீவிரத்துடன் வெளிப்படும் படைப்புகளாகவே நான் அவர் கதைகளைப் பார்க்கிறேன். வேறுபாடு ஒன்றே. சார்த்ர் போன்றவர்கள் ஒரு மனதை ஒரு தனிப்பட்ட அமைப்பாகவும், ஒரு மனிதனை ஒரு பெர்சனாலிட்டியாகவும் பார்க்கிறார்கள். ரமேஷ் மனதை ஒருவகை உடல் என்றும், மனிதனை ஒரு சமூகக்கட்டுமானமாகவும் பார்க்கிறார்.

இந்தவகை நாவல்கள் ‘செரிபரெல்’ என்று சொல்லத்தக்கவை. பிரச்சினைகளை ஐடியாக்களாக ஆக்கி, அந்த ஐடியாக்களை சொல்ல புனைவு என்னும் கட்டமைப்பை உருவாக்கிக் கொள்கிறார்கள். புனைவுகளை உருவாக்கி அதன் வழியாக இவர்கள் ஆழ்ந்து செல்வதில்லை. ஆகவே வாசகனுக்கு அவனே கண்டடையும் நுட்பங்களும் ஆழங்களும் இருப்பதில்லை. அவன் அவனை இவற்றில் பார்க்கமுடிவதில்லை. ஆசிரியனையே எல்லா பக்கங்களிலும் பார்க்கவேண்டியுள்ளது. ஆசிரியனின் குரல் மட்டுமே உள்ளது. ஆசிரியனின் தத்துவப்பார்வையும் கொந்தளிப்புகளும் இந்நாவல்களில் உள்ளன. அந்தவகையில் இவை முக்கியமான இலக்கியப் பாகுபாட்டைச் சேர்ந்தவையகாவே உள்ளன. ரமேஷ் பிரேதனுக்கு வாழ்த்துக்கள்.

எம்.சபரிகிரீசன்

 

அன்புள்ள ஜெ,

ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளமைக்கு வாழ்த்துக்கள். அவருடைய சொல் என்றொரு சொல் நூலை மட்டுமே வாசித்துள்ளேன். மனித இருப்பு மொழியால் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், மொழியே மனிதனின் வதைக்களம் என்றும் அந்நாவல் சொல்வதாக எனக்குத் தோன்றியது. ஒருவகையான நெருக்கடியுடனேயே நான் வாசித்த படைப்பு அது. ரமேஷ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

ஆர்.ஜி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 21, 2025 11:31

ரமேஷ், கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

நான் தத்துவம் பயில்வதற்காக 1992 ல் டெல்லி பல்கலையில் சேர்ந்த ஆண்டில்தான் ஒரு நூலை வாசிக்க நேர்ந்தது. சார்த்ர் எழுதிய Nausea என்ற நாவல். ஒரு நாவலுக்கு வாந்தி என்று தலைப்பு இருப்பது எனக்கு கடுமையான அருவருப்பை உருவாக்கியது. ஆனால் அதைப்பற்றிய ஒரு ஏற்பை என் மூத்த நண்பர்கள் பேசிப்பேசி உருவாக்கினார்கள். ஒவ்வாமையே ஓர் இலக்கியப்படைப்பின் காரணமாக ஏன் இருக்கக்கூடாது என்று சொன்னார்கள். இன்று அந்நாவலை ஓர் உயர்வான படைப்பாக நான் நினைக்கவில்லை. அது மூளைசார்ந்த நாவல். சார்த்ரின் சிந்தனைகளை வெளிப்படுத்தும் ஒரு ஃப்ரேம்வர்க் மட்டும்தான். ஆனால் அது வெளிப்படுத்திய சிந்தனைகள் முக்கியமானவை. ஒவ்வாமை, விலக்கம் ஆகியவற்றின் ஓர் ஆவணம் அது.

2012ல் உங்கள் தளத்தின் வழியாக நான் ரமேஷ் பிரேதனை அறிமுகம் செய்து கொண்டேன். அவருடைய எழுத்து பின்நவீனத்துவ எழுத்துமுறை கொண்டது. அதாவது மெட்டா ஃபிக்‌ஷன் வகைமை கொண்டது. ஆனால் அவருடைய பார்வையும், அவர் படைப்புகளின் உள்ளடக்கமும் சார்த்ரின் படைப்புகளுக்குத்தான் நெருக்கமானவை. Nausea ரமேஷ் படைப்புக்களை புரிந்துகொள்ள மிகவும் உதவும் ஒரு நாவல். ஒவ்வாமை கடுமையான தீவிரத்துடன் வெளிப்படும் படைப்புகளாகவே நான் அவர் கதைகளைப் பார்க்கிறேன். வேறுபாடு ஒன்றே. சார்த்ர் போன்றவர்கள் ஒரு மனதை ஒரு தனிப்பட்ட அமைப்பாகவும், ஒரு மனிதனை ஒரு பெர்சனாலிட்டியாகவும் பார்க்கிறார்கள். ரமேஷ் மனதை ஒருவகை உடல் என்றும், மனிதனை ஒரு சமூகக்கட்டுமானமாகவும் பார்க்கிறார்.

இந்தவகை நாவல்கள் ‘செரிபரெல்’ என்று சொல்லத்தக்கவை. பிரச்சினைகளை ஐடியாக்களாக ஆக்கி, அந்த ஐடியாக்களை சொல்ல புனைவு என்னும் கட்டமைப்பை உருவாக்கிக் கொள்கிறார்கள். புனைவுகளை உருவாக்கி அதன் வழியாக இவர்கள் ஆழ்ந்து செல்வதில்லை. ஆகவே வாசகனுக்கு அவனே கண்டடையும் நுட்பங்களும் ஆழங்களும் இருப்பதில்லை. அவன் அவனை இவற்றில் பார்க்கமுடிவதில்லை. ஆசிரியனையே எல்லா பக்கங்களிலும் பார்க்கவேண்டியுள்ளது. ஆசிரியனின் குரல் மட்டுமே உள்ளது. ஆசிரியனின் தத்துவப்பார்வையும் கொந்தளிப்புகளும் இந்நாவல்களில் உள்ளன. அந்தவகையில் இவை முக்கியமான இலக்கியப் பாகுபாட்டைச் சேர்ந்தவையகாவே உள்ளன. ரமேஷ் பிரேதனுக்கு வாழ்த்துக்கள்.

எம்.சபரிகிரீசன்

 

அன்புள்ள ஜெ,

ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளமைக்கு வாழ்த்துக்கள். அவருடைய சொல் என்றொரு சொல் நூலை மட்டுமே வாசித்துள்ளேன். மனித இருப்பு மொழியால் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், மொழியே மனிதனின் வதைக்களம் என்றும் அந்நாவல் சொல்வதாக எனக்குத் தோன்றியது. ஒருவகையான நெருக்கடியுடனேயே நான் வாசித்த படைப்பு அது. ரமேஷ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

ஆர்.ஜி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 21, 2025 11:31

Temple art and Architecture class experience

For the next few decades, I hope I will contemplate the profound statement of the legendary Sthapathi V Ganapathy, “Temple is the melody created by rhythm”.

The statement reminds me of the story ‘Iraivan’ by Je in the Ezhukathir series. Where Manikkam Aasari says it’s all Calculation.

Temple art and Architecture class experience

 

மூன்றே நாளில் கர்நாடக இசையை எப்படி அறிமுகம் செய்ய முடியும்? அதைக் கற்க பல ஆண்டுகள் ஆகும் அல்லவா? ஒரு சந்தேகமாகவே இதைக் கேட்கிறேன்.

ஜெயக்குமாரின் இசை வகுப்பு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 21, 2025 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.