Jeyamohan's Blog, page 13
September 21, 2025
விபாஸனா இரண்டாம் நிலை பயிற்சி
அமலன் ஸ்டேன்லி அவர்களின் விபாசனா நிகழ்வுகள் முழுமையறிவு அமைப்பினூடாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. பலர் முதல் நிலை பயிற்சியில் கலந்துகொண்டுள்ளனர்.
இரண்டாம் நிலைப் பயிற்சியை நடத்த அமலன் ஸ்டேன்லி எண்ணுகிறார். முதல்நிலைப் பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் எவரும் இதில் கலந்துகொள்ளலாம். முதல்நிலைப் பயிற்சி அடிப்படைகளால் ஆனது. இது அகநோக்கிய அடுத்தகட்ட பயணம்.
விபாசனா பயிற்சி உள்ளத்தை ஒருமையாக்கவும், தேவையற்ற உளச்சுமைகளை உதறிவிட்டு உள அழுத்தமில்லா நிலையை அடையவும், அதன் வழியாகச் செயலில் தீவிரமாக ஈடுபடவும் மிக அவசியமானதாக உலகம் முழுக்க பயிற்றுவிக்கப்படுகிறது. அமலன் ஸ்டேன்லி வியட்நாம், தாய்லாந்து , ஜப்பான், திபெத் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த உலக அளவில் புகழ்பெற்ற பல விபாசனா ஆசிரியர்களிடம் முறையான, நீண்டகாலப் பயிற்சியை பெற்றவர். (பார்க்க வி.அமலன் ஸ்டேன்லி, தமிழ்விக்கி)
விபாசனா தியானமுறை பௌத்த பிக்குகளால் பொமு 2 ஆம் நூற்றாண்டில், அதாவது நாம் கீழடி நாகரீகம் இருந்ததாகச் சொல்லும் காலகட்டத்தில் உருவானது. தொடர்ச்சியாக வெவ்வேறு ஞானியரால் அது விரிவாக்கம் செய்யப்பட்டது. நம் உள்ளத்தை ஒருமைப்படுத்துவதற்கான உச்சகட்ட பயிற்சியாக இது கருதப்படுகிறது
பலர் பயிற்சி இல்லாமல் நேரடியாக பத்து நாட்கள், பதினைந்து நாட்கள் விபாசனா பயிற்சிக்குச் சென்று ஓரிரு நாட்கள் தாளமுடியாமல் ஓடிவருவதைக் காண்கிறோம். எங்கள் பயிற்சி என்பது மிகநுணுக்கமாக படிப்படியாக உள்ளத்தை பயிற்றுவிப்பது. இது மரபார்ந்ததும் அறிவியல்பூர்வமானதுமாகும்.
நாள் அக்டோபர் 24 ,25 மற்றும் 26 (வெள்ளி சனி ஞாயிறு)
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள் இடமிருப்பவைஉருது இலக்கியம், கஸல் அறிமுகம்ஃபயஸ் காதிரி அவர்கள் நடத்தும் உருது இலக்கியம்- கஸல் அறிமுக நிகழ்வு மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற ஒன்று. மரபான உருது கவிஞர்- பாடகர் குடும்பத்தில் வந்தவர் காதிரி. பாடகரும்கூட.உருது இலக்கியம் என்பது வடக்கே இருப்பது அல்ல. தமிழகத்தின் மிகச்சிறப்பான மரபுகளில் ஒன்று அது. உருது இலக்கியத்தின் ஒட்டுமொத்தச் சித்திரத்தை, குறிப்பாக முகலாயர் காலம் முதல் வரும் கவிமரபை அறிமுகம் செய்யும் காதிரி அதன் மிகச்சிறப்பான வெளிப்பாடான கஸல் இசை மரபையும் அறிமுகம் செய்கிறார்.
நாம் லதா மங்கேஷ்கர், வாணிஜெயராம் முதல் ஹரிஹரன் வரை பலர் பாடிய கஸல் பாடல்களைக் கேட்டிருப்போம். ஆனால் உண்மையில் ரசிக்க அடிப்படைப்பயிற்சி அற்றவர்களாகவும் இருக்கிறோம். அந்த அறிமுகப்பயிற்சி நமக்கு முற்றிலும் புதிய ஓர் உலகைத் திறந்து தருவது. ஒரு பெரிய தொடக்கம்.
(அக்டோபர் 20 அன்று திங்கள்கிழமை தீபாவளி ஆதலால் இந்நிகழ்வு வெள்ளி சனி என இருநாட்கள் மட்டுமே நிகழும். கட்டணமும் அதற்கேற்பவே அமையும்.18 மாலையுடன் நிகழ்வு நிறைவடையும்.)
நாட்கள் அக்டோபர் 17 மற்றும் 18 (வெள்ளி, சனி)விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com

மரபின்மைந்தன் முத்தையா தமிழ் விக்கி
மரபின் மைந்தன் முத்தையா நடத்திவரும் மரபிலக்கியம், சைவத்திருமுறைகள் அறிமுக வகுப்புகள் முன்னர் நான்கு முறை நடந்துள்ளன. மீண்டும் நிகழவிருக்கின்றன.
சைவத்தை அறிவதென்பது தமிழை, தமிழ்ப்பண்பாட்டை நுணுகி அறிவதுதான். சைவசித்தாந்தம் சைவத்தின் தத்துவ முகம். சைவத் திருமுறைகள் சைவத்தின் இலக்கிய முகம். சைவத்திருமுறைகளிலுள்ள புகழ்பெற்ற சில பாடல்களையே பரவலாகச் சைவர்கள்கூட அறிந்திருப்பார்கள். கூடுதலாக அறியமுயல்பவர்கள் நூல்களை வாங்குவார்கள், ஆனால் நூல்கள் வழியாக பயிலமுடிவதில்லை.
சைவத்திருமுறைகளைப் பயில ஒரு மரபு உண்டு. இன்றைய சூழலில் நவீன இலக்கியம் மற்றும் நவீன கல்விமுறை அறிமுகம் உடைய ஒருவர் அந்த மரபை இன்றைய சூழலுக்காக மறு ஆக்கம் செய்து கற்பிக்கவேண்டியுள்ளது. மரபின்மைந்தன் முத்தையா அத்தகையவர். நவீன இலக்கியமும் மரபிலக்கியமும் செவ்விலக்கியமும் சைவமும் அறிந்தவர்.
இந்த வகுப்பில் எளிமையான முறையில் தமிழின் மரபிலக்கியத்திற்குள் செல்வது எப்படி என தொடக்கம் அளிக்கப்படும். அதன்பின் சைவத்திருமுறைகளுக்குள் செல்லவும், அவற்றின் கவிச்சுவையையும் தத்துவத்தையும் புரிந்துகொள்ளவும் வழிகாட்டப்படும். இந்த வழிகாட்டல் ஒரு தொடக்கம். ஒருவர் அதிலிருந்து முன்சென்று தன் கல்வியைத் தொடரமுடியும்.
நாள் அக்டோபர் 10, 11 மற்றும்12, (வெள்ளி சனி ஞாயிறு)
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
வரவிருக்கும் நிகழ்வுகள்மரபிசைப் பயிற்சிஜெயக்குமார் நடத்தும் மரபிசைப் பயிற்சிகள் மீண்டும் நிகழ்கின்றன. இவை கர்நாடக இசை எனப்படும் மரபிசையை கேட்டு ரசிப்பதற்கான பயிற்சிகள். எதுவுமே அறியாத தொடக்கநிலையினருக்கானவை. ராகங்களை அறிமுகம் செய்து, திரைப்பாடல்கள் வழியாக அவற்றை செவிக்குப் பழக்கப்படுத்தி, இசைப்பாடல்களை கேட்கச்செய்து இசைக்குள் இட்டுச்செல்லும் முயற்சி இது. பங்கெடுத்த ஒவ்வொருவருக்கும் புதிய தொடக்கமாக அமைந்தவை.
நம்மில் பலருக்கும் மரபிசையை அறியவேண்டும், கேட்டு ரசிக்கவேண்டும் என்னும் ஆர்வமிருக்கும். அதற்கான முயற்சிகளைச் செய்தும் இருப்போம். ஆனால் இணையம் போன்றவை பெரும்பாலும் உதவுவதில்லை. நேரடியான வகுப்புகள் தேவை. தீவிரமான கவனத்துடன் அவ்வகுப்புகளை கவனிக்கவேண்டும். நேரடியாக ஈடுபட்டு பயிலவும் வேண்டும். அதற்காக அறிவியல்பூர்வமாக உருவாக்கப்பட்டவை இவ்வகுப்புகள்.
நாள் அக்டோபர் 31, நவம்பர் 1,2 (வெள்ளி சனி ஞாயிறு)
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
வரவிருக்கும் நிகழ்வுகள்நவீனத் தியானம் உளக்குவிப்புப் பயிற்சிதில்லை செந்தில்பிரபு தமிழ்விக்கி
தில்லை செந்தில்பிரபு நவீன தியானம்- உளக்குவிப்புப் பயிற்சிகளை 30 ஆண்டுகளாக அளித்து வருபவர். கோவையில் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை என்னும் அமைப்பை நிறுவி கல்விப்பணிகளையும் தியானப்பயிற்சிகளை அளிப்பதையும் சேவையாகச் செய்து வருகிறார். புகழ்பெற்ற ஏற்றுமதித் தொழில் ஆலோசகர், தொழில்முனைவோர் ஆக பணிபுரிகிறார்.
தில்லை செந்தில்பிரபுவின் தியான- உளக்குவிப்புப் பயிற்சிகள் எவருக்கானவை? எவருக்கு பயிற்சியில், தொழிலில் உள்ளம் குவியவில்லை? எவருக்கு எப்போதும் அகம் பரபரத்துக்கொண்டே இருக்கிறது? எவருக்கு ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு உள்ளம் தாவிக்கொண்டிருக்கிறது? எவருக்கு மிகச்சிறு காரணங்களுக்காககூட எரிச்சலும் கோபமும் உருவாகிறது? எவருக்கு எப்போதும் ஓர் பதற்றநிலை, எரிச்சல் நிலை இருந்துகொண்டிருக்கிறது?
மிக எளிதான சோதனை இது. சற்றுநேரம் தனியாக அமர்ந்தால் உங்களுக்குள் எழுவது இனிமையான, நிம்மதியான எண்ணங்களா அல்லது எரிச்சலும் கோபமும் ஊட்டும் எதிர்மறை எண்ணங்களா? எதிர்மறை எண்ணங்கள் என்றால் உங்கள் மனம் நிலையழிந்துள்ளது. ஒருமையற்று உள்ளது. இது இன்றைய நவீன வாழ்க்கை நமக்கு அளிக்கும் மிகப்பெரிய நோய். இதிலிருந்து பெரும்பாலானவர்கள் தப்ப முடியாது.
இந்த உளநிலைக்கு பல காரணங்கள். அன்றாடவாழ்க்கையே கடுமையான போட்டியாக ஆகியிருப்பது. மிகக்கடுமையான மன உழைப்பு இல்லாமல் வாழமுடியாத நிலை. (கடுமையான உடல் உழைப்பு உள்ளத்துக்கும்கூட நல்லது). அனைத்தையும் விட இன்று தொழில், குடும்பம் என எல்லா தளங்களிலும் அமைப்புகள் வலுவடைந்துள்ளன. நாம் வெவ்வேறு அமைப்புகள் சார்ந்து மட்டுமே வாழமுடிகிறது. அந்த அமைப்பின் அதிகாரக்கட்டுமானத்தில் ஒரு பகுதியாக நாம் அமைகிறோம். ஆகவே நம்மை எவரோ மேலிருந்து சாட்டையால் அடிக்கிறார்கள். நாம் கீழிருப்பவர்களை அடிக்கிறோம். இதுவே மனச்சோர்வை, மனச்சிதறலை உருவாக்குகிறது.
இந்தியத் தியானமுறைகளை மேலைநாட்டு உளவியல் கொள்கைகளுடன் இணைத்து மகரிஷி மகேஷ் யோகி 1970களில் நவீனத் தியானமுறையை உருவாக்கினார். அது 1950 களில் உலகப்போரின் அழிவுக்குப்பின் உருவான மனச்சோர்வுக் காலகட்டத்தில் பிறந்தவர்களின் இளையதலைமுறை உருவான காலகட்டம். வியட்நாம் போர், பல்வேறு புரட்சிகளின் தோல்வி ஆகியவற்றால் அந்த உளச்சோர்வு பெருகியது. அதை பீட் தலைமுறை என்பார்கள். ஹிப்பி இயக்கம் உருவானது. அவர்களுக்காக மகேஷ் யோகி உருவாகிய தியானமுறை அவர்களில் பெரும்பாலானவர்களை மீட்டது. அதன் வழியாக அது உலகம் முழுக்க பரவியது.
அந்த வழியில், மேலும் மேலும் நவீன உளவியல் மற்றும் நிர்வாகவியல் கொள்கைகளை இணைத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட தியான முறைகள் இன்று உலகமெங்கும் உள்ளன. அந்த மரபில் வந்த தியானப்பயிற்றுநர் தில்லை செந்தில் பிரபு . எந்த தியான முறையிலும் ஆசிரியருடனான நேரடி உறவு, அவர் உங்களை அறிந்திருப்பது முக்கியமானது. ஆகவே இந்த நேரடிப்பயிற்சி அளிக்கப்படுகிறது
நாள் நவம்பர் 7, 8 மற்றும் 9
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
ஆயுர்வேத- வாழ்க்கைமுறை அறிமுகம்ஒருவரிடம் அவர் ஆரோக்கியமாக இருக்கிறாரா என்று கேட்டால் ஆம் என்று சொல்லலாம். ஆனால் மூன்று கேள்விகளை மேற்கொண்டு அவரிடம் கேட்கலாம்.
இயல்பான நிறைவான தூக்கம் உள்ளதா, தூங்கி எழுந்தால் புத்துணர்வாக உணர்கிறீர்களா?இயல்பான செரிமானம் உள்ளதா? அதன்விளைவாக இயல்பான கழிவகற்றல் நிகழ்கிறதா?உடலில் எங்கேனும் வலி அல்லது அசௌகரியத்தை உணர்கிறீர்களா? குறிப்பாகக் காலையில்?இவற்றுக்கான பதில்களில் இருந்தே ஒருவர் தன் உடல்நிலை சீராக இருப்பதை உறுதிசெய்துகொள்ள முடியும்.
ஆனால் கறாராகப்பார்த்தால் பெரும்பாலானவர்களுக்கு இம்மூன்றிலும் சிக்கல் இருக்கும். சென்றகாலங்களில் நாற்பது கடந்தவர்களுக்கான சிக்கல் இது. இன்று இளமையிலேயே உருவாகி வந்துள்ளது. காரணம், இன்றைய வாழ்க்கைமுறை. இதிலுள்ள அவசரம், போட்டி ஆகியவை.
ஆயுர்வேதம் எல்லா நோய்களுக்கும் தீர்வு அளிக்கும் முறை அல்ல. ஆனால் வாழ்க்கைமுறைச்சிக்கல்களுக்கு அது நிரந்தரமான தீர்வுகளை அளிக்கும். வாழ்க்கைமுறைச் சீரமைப்பு, இயற்கையான மூலிகை மருந்துகள் வழியாக. அதற்கு முதலில் ஒருவர் தன் உடல் பற்றி ஆயுர்வேதம் சார்ந்த பார்வையை அறிந்திருக்கவேண்டும். தன்னைத்தானே மதிப்பிட அறிந்திருக்கவேண்டும். தன்னை சீரமைக்க அது அவசியம். அதன்பொருட்டே இந்தப் பயிற்சிகள்.
சுனீல் கிருஷ்ணன் முறையான ஆயுர்வேத கல்விகொண்டவர், புகழ்பெற்ற நவீன எழுத்தாளர், காந்தியவாதி.
அவருடைய வகுப்புகள் நவம்பர் 14 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நிகழ்கின்றன.
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
வன்முறை, குரூரம், கலை- ‘அவள்’ கடிதங்கள்.

அன்புள்ள ஆசிரியருக்கு,
‘அவள்‘ மிகுந்த தொந்தரவு செய்யும் கதை. வாசிக்கும் போதே இதை அப்படியே மறந்து கடந்துவிட வேண்டும் எனத் தோன்றிக்கொண்டிருந்தது. எப்போதும் எல்லா காலத்திலும் மீள மீள நிகழ்வது. அல்லது இத்தனை விழுமியங்களும் அறங்களும் அதற்கான பொதுப்பாவனைகளும் உருவாக்கி எடுத்த பின்னரும் மீண்டும் அத்தனை சிறுமைகளுடன் அதுவே நிகழ்கிறதென்றால் மேலும் இழிவை, இருளை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறோமா என்ன? கதையை வாசித்ததும் பன்னிருபடைக்களத்தில் துகிலுருப்பிற்கு பின் வெளிப்படும் பீமனின் சொற்களே நினைவுக்கு வந்தன. ஆணென பிறந்தமையாலேயே சூடிக்கொள்ளும் கீழ்மை.
பாலியல் வன்முறைகளில் பொதுமனம் எப்போதும் தவறாமல் புலனாய்வது பாதிக்கப்பட்டவரின் நடத்தையைதான். இங்கு பொதுமனம் என்று ஒரு தப்பித்தலுக்கு சொல்கிறேனே ஒழிய எந்த மனமும் ஆணோ பெண்ணோ, அவ்வாறான மதிப்பிடலை ஒருகணமேனும் செய்யாமல் இருக்காது என்றே உணர்கிறேன். குற்றச்சாட்டாக சொல்லாவிட்டாலும் குற்றத்திற்கான ஊற்றை ஆராய்கிறேன் என்று ஆரம்பிப்பார்கள். இக்கதையில் அப்படி நடத்தையை பாதகமாக மதிப்பிடுவதற்கான அத்தனை வாய்ப்புகளை வழங்கிய பின்னரும் எஞ்சி நிற்கும் வன்முறையின் கீழ்மையை கண்முன் நிறுத்துகிறது. அவள் எல்லைக்கோடுகளை அழித்து விளையாடுபவளாகவே இருக்கட்டும், சாட்சியாக நிற்கும் தாயை இரத்தம் கசிய தாக்கிவிட்டு செல்பவளாக இருக்கட்டும், அவளாகவே அழைத்திருக்கட்டும்.. எப்படியும் ஒருதுளியும் நியாயப்படுத்த முடியாமல் எஞ்சி நிற்கும் வன்முறையின் குரூரத்தின் கீழ்மைக்கு முன்னால் வியர்த்தம் என்பதற்கப்பால் எச்சொல்லும் எஞ்சி நிற்கவில்லை.
இது கதையின் நடைமுறை தளத்தில் வாசக மனதில் நிகழ்த்திப் பார்க்கும் கூரிய சோதனை. இந்த அளவிலேயே இக்கதை முக்கியமானதுதான். இதற்கு அப்பால் கூவமும் கடலும் அவளை அழைக்கும், அவளுடன் உரையாடும் இடங்கள் ஒட்டுமொத்த நோக்கு கொண்ட ஒரு கலைஞன் மட்டுமே சென்றடையக்கூடியது. நம் அழுக்குகள் அத்தனையும் அவளில் கலந்துவிட்டு அவளை அழுக்கானவள் என்கிறோம். அவளோ அத்தனைக்கும் அப்பால் ஒளி சூடி நிற்கிறாள். வழக்கமாக தன் கதைகளில் வெளிப்படும் ஒளி இதில் இல்லையோ என ஓரிடத்தில் அஜிதன் சொல்லியிருந்தார். பின் மதிய வெயிலில் பளிங்குப் பரப்புபோல பிரதிபலித்து நிற்கும் கூவம் நதியின் காட்சியே இக்கதையை மீண்டும் தொகுத்துப் பார்க்கவும் நினைவு கூர்வதற்குமான தைரியத்தை அளித்தது. அந்த ஆழத்து இருள், தன்னுள் தானென அமைந்திருப்பதன் கருணை எப்போதும் மண்மீது இருக்கட்டும்.
டி.ஏ. பாரி
அன்புள்ள ஆசிரியருக்கு,
அவள் கதை படித்தேன். கதையின் கலைப்பாவனை என்பது ஒரு கொடூரத்தை ‘அப்படியே‘ சொல்வது என்பதுதான். ஆசிரியர் எதையும் சேர்க்கவில்லை என்றும், கதையின் வெவ்வேறு narration களுக்கு இடையே உள்ள ஒத்திசைவும் முரண்பாடும் எல்லாம் அப்படியே சொல்லப்பட்டுள்ளன அவ்வளவுதான் என்றும் பாவனை செய்கிறது கதை. Plot எனப்படும் கதைவளர்ச்சியும் முடிவும் கொண்ட கதைகளைக் கடந்து இந்தவகையான கதைகள் அண்மையில் எழுதப்படுகின்றன. பிரான்ஸில்தான் இந்தவகை எழுத்து தொடங்கியது. ஆனால் ஜப்பானிய, கொரிய படைப்புகளில்தான் எல்லா எல்லைகளையும் கடந்துவிட்டார்கள். கூடவே Heavy metal போன்ற இசையும். இதை எந்தவகையிலே எடுத்துக்கொள்வது என்று எனக்கு இன்னமும்கூட சிக்கல்தான். இந்த வகையான கதைகளில் கிளாஸிக் என்று சொல்லப்படும் கதைகள் பலவற்றை வாசித்திருக்கிறேன். கலைப்படங்களையும் பார்த்துள்ளேன். ஓவியங்களையும் பார்க்கிறேன். எனக்கு அவை கடுமையான ஒவ்வாமையைத்தான் அளித்தன. அதிர்ச்சி, உடனே விலகிவிடவேண்டும் என்ற மனநிலை.
இந்தக் கதைகளில் எப்போதும் இருப்பது செய்திகளில் வரும் விஷயங்கள்தான். சமகால யதார்த்தங்கள்தான். அவற்றை மிகமிக நுணுக்கமான காட்சிகளாகவும் நிகழ்வுகளாகவும் எழுதிக்காட்டுகிறார்கள். ஒரு குவியாடியால் பெரிதாக்கிக் காட்டுவது போல. ஏன் இப்படிக் காட்டவேண்டும்? அதற்குப் பதில் இதுதான். இந்தவகையான குரூரம், வன்முறை இதையெல்லாம் ஒருகணம் பார்த்துவிட்டு உடனடியாக நாம் பார்வையை திருப்பிக்கொள்கிறோம். அது ஒரு Mass hypocrisy. நம் தலையைப் பிடித்துத் திருப்பி இதோ இதைப்பார் என்று சொல்கிறார்கள். இதில் ஏன் பிளாட் இல்லை? ஆசிரியர் ஒன்றுமே சொல்வதுபோல இல்லையே? அதற்கான பதில் இதுதான். இந்த வேறுவேறு நிகழ்வுகளுக்கு நடுவே உள்ள இணைப்பை வாசகன் உருவாக்கிக்கொண்டு அவற்றிலுள்ள அகயதார்த்தம் நோக்கிச் செல்லவேண்டும். இந்தகதை உணர்த்தவிரும்பும் விஷயம் கதைமுடிவில் இல்லை. கதையின் நிகழ்வுகளுக்கு இடையே உள்ளது.
‘அவள்‘ அந்த வகையில் தமிழில் எழுதப்பட்ட ஒரு முக்கியமான கதைதான். ஒரு வதையாக ஆகும் வாசிப்பனுபவத்தை அளிக்கிறது. Seemingly reporting என்று சொல்லத்தக்க இந்தக் கதையின் இடையே வாசகன் பொருத்திக்கொள்ள பல நுட்பமான இடங்கள் உள்ளன. ஒரு குறியீடாக ஆகக்கூடாது என்ற கவனத்துடன் வந்துகொண்டிருக்கும் கூவம். அதன் பளபளக்கும் அழகு. அதேபோல கொல்லப்பட்ட பெண்ணுக்கும் அவள் அம்மாவுக்குமான உறவு. அந்த வன்முறையை அவள்மேல் நிகழ்த்தியவர்கள் கூட்டாக ஒரு collective personality ஆக காட்டப்பட்டிருக்க பெண் தன்னந்தனியாக அதன்முன் நிற்கிறாள். இப்படி பல விஷயங்கள். எனக்கு அவள் ஒரு தற்கொலைத்தனமான வெறியுடன், கூவத்தில் குதித்துச் சாவதுபோல அந்த சாவு நோக்கிச் செல்கிறாள் என்று பட்டது. அவளுக்குள் இருந்தது தன்னை அழித்துக்கொள்ளும் ஆங்காரமா இல்லை அவளுக்கே தீமை நோக்கிய ஈர்ப்பு இருந்ததா? அவளிடமும் கடும் வன்முறை இருக்கிறது. தன்னை அழிக்கும் வன்முறை. அது எதிர்வினையா இல்லை அதுவும் சமகால வன்முறையா? இரண்டுக்கும் கதை இடம் கொடுக்கிறது. கூவம் அவ்வளவு ஈர்ப்பானது (இது எனக்கே உள்ள அனுபவம். 90ல் நான் ஒருமுறை முழங்கால்வரை இறங்கிப்பார்த்தேன்) இது மனிதாபிமானக்கதையா, ஃபாசிசக்கதையா? அண்மைக்கால இந்தவகை எழுத்துக்களை இரண்டும்தான் என்றுதான் சொல்லமுடியும்.
இன்றைய புதிய கதைவடிவம் ஒன்றை எழுதியிருக்கிறார் ஆசிரியர். அண்மைக்கால செய்திகளில் அமைதியிழந்து எழுதியிருக்கலாம்.மிக நுணுக்கமாகவும், ஒன்றோடொன்று செய்திகள் பொருந்துவதுபோலவும், ஆனால் வேண்டுமென்றே பொருத்தமாக செய்யப்படாததுபோல தெரிவதாகவும் எழுதியுள்ளார். மனதின் நுணுக்கமான சித்திரங்களும் உள்ளன. ஆனால் இந்தவகை கதைகளை எந்த அளவு நாம் வரவேற்கவேண்டும், இவற்றுக்கு உண்மையில் உள்ள இடம் என்ன என்பதெல்லாம் பெரிய கேள்விகள். நாம் இவற்றை வாசிக்கையில் உண்மையில் (நான் பிரெஞ்சு, ஜப்பானிய, கொரியக் கதைகளை எல்லாம் சேர்த்தே சொல்கிறேன்) உண்மையில் ஆசிரியர் உத்தேசிக்கும் catharsis நடக்கிறதா, இல்லை நாம் நம் மன அழுக்கைக்கொண்டு இந்த வன்முறையை உண்மையில் ரசிக்கிறோமா என்பதெல்லாம் சிக்கலான கேள்விகள். இந்தவகையான கதைகள் நவீனச் சமூகத்தில் பெருகிவரும் வன்முறைக்கு கலை அளிக்கும் எதிர்வினைகள். கழிப்பறைக் கோப்பையை கொண்டுவந்து சிற்பமாக ஆக்கி வைக்கிறார்கள். ஏன் மலத்தையே ஓவியமாக வரைகிறார்கள். ஆனால் இந்த எதிர்வினைகள் அறம் சார்ந்தவையா இல்லை, இவையும் இன்னொருவகை வன்முறைகள்தானா? நமக்கு நாமே செலுத்திக்கொண்டாலும் வன்முறைதானே?
எனக்கு இவற்றின்மேல் ஒவ்வாமைதான் உள்ளது. இவை தேவையில்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் இங்கே ஐரோப்பாவில் ஓவியங்கள், நாடகங்கள், இசை எல்லாவற்றிலும் இதே வன்முறையின் உச்சமான நுணுக்கம்தான் உள்ளது. என் ஒவ்வாமையையும் மறுப்பையும் மட்டும் பதிவுசெய்கிறேன். I understand the type of art this represents, yet I choose to reject it.
ஶ்ரீனிவாஸ்
வன்முறை, குரூரம், கலை- ‘அவள்’ கடிதங்கள்.

அன்புள்ள ஆசிரியருக்கு,
‘அவள்‘ மிகுந்த தொந்தரவு செய்யும் கதை. வாசிக்கும் போதே இதை அப்படியே மறந்து கடந்துவிட வேண்டும் எனத் தோன்றிக்கொண்டிருந்தது. எப்போதும் எல்லா காலத்திலும் மீள மீள நிகழ்வது. அல்லது இத்தனை விழுமியங்களும் அறங்களும் அதற்கான பொதுப்பாவனைகளும் உருவாக்கி எடுத்த பின்னரும் மீண்டும் அத்தனை சிறுமைகளுடன் அதுவே நிகழ்கிறதென்றால் மேலும் இழிவை, இருளை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறோமா என்ன? கதையை வாசித்ததும் பன்னிருபடைக்களத்தில் துகிலுருப்பிற்கு பின் வெளிப்படும் பீமனின் சொற்களே நினைவுக்கு வந்தன. ஆணென பிறந்தமையாலேயே சூடிக்கொள்ளும் கீழ்மை.
பாலியல் வன்முறைகளில் பொதுமனம் எப்போதும் தவறாமல் புலனாய்வது பாதிக்கப்பட்டவரின் நடத்தையைதான். இங்கு பொதுமனம் என்று ஒரு தப்பித்தலுக்கு சொல்கிறேனே ஒழிய எந்த மனமும் ஆணோ பெண்ணோ, அவ்வாறான மதிப்பிடலை ஒருகணமேனும் செய்யாமல் இருக்காது என்றே உணர்கிறேன். குற்றச்சாட்டாக சொல்லாவிட்டாலும் குற்றத்திற்கான ஊற்றை ஆராய்கிறேன் என்று ஆரம்பிப்பார்கள். இக்கதையில் அப்படி நடத்தையை பாதகமாக மதிப்பிடுவதற்கான அத்தனை வாய்ப்புகளை வழங்கிய பின்னரும் எஞ்சி நிற்கும் வன்முறையின் கீழ்மையை கண்முன் நிறுத்துகிறது. அவள் எல்லைக்கோடுகளை அழித்து விளையாடுபவளாகவே இருக்கட்டும், சாட்சியாக நிற்கும் தாயை இரத்தம் கசிய தாக்கிவிட்டு செல்பவளாக இருக்கட்டும், அவளாகவே அழைத்திருக்கட்டும்.. எப்படியும் ஒருதுளியும் நியாயப்படுத்த முடியாமல் எஞ்சி நிற்கும் வன்முறையின் குரூரத்தின் கீழ்மைக்கு முன்னால் வியர்த்தம் என்பதற்கப்பால் எச்சொல்லும் எஞ்சி நிற்கவில்லை.
இது கதையின் நடைமுறை தளத்தில் வாசக மனதில் நிகழ்த்திப் பார்க்கும் கூரிய சோதனை. இந்த அளவிலேயே இக்கதை முக்கியமானதுதான். இதற்கு அப்பால் கூவமும் கடலும் அவளை அழைக்கும், அவளுடன் உரையாடும் இடங்கள் ஒட்டுமொத்த நோக்கு கொண்ட ஒரு கலைஞன் மட்டுமே சென்றடையக்கூடியது. நம் அழுக்குகள் அத்தனையும் அவளில் கலந்துவிட்டு அவளை அழுக்கானவள் என்கிறோம். அவளோ அத்தனைக்கும் அப்பால் ஒளி சூடி நிற்கிறாள். வழக்கமாக தன் கதைகளில் வெளிப்படும் ஒளி இதில் இல்லையோ என ஓரிடத்தில் அஜிதன் சொல்லியிருந்தார். பின் மதிய வெயிலில் பளிங்குப் பரப்புபோல பிரதிபலித்து நிற்கும் கூவம் நதியின் காட்சியே இக்கதையை மீண்டும் தொகுத்துப் பார்க்கவும் நினைவு கூர்வதற்குமான தைரியத்தை அளித்தது. அந்த ஆழத்து இருள், தன்னுள் தானென அமைந்திருப்பதன் கருணை எப்போதும் மண்மீது இருக்கட்டும்.
டி.ஏ. பாரி
அன்புள்ள ஆசிரியருக்கு,
அவள் கதை படித்தேன். கதையின் கலைப்பாவனை என்பது ஒரு கொடூரத்தை ‘அப்படியே‘ சொல்வது என்பதுதான். ஆசிரியர் எதையும் சேர்க்கவில்லை என்றும், கதையின் வெவ்வேறு narration களுக்கு இடையே உள்ள ஒத்திசைவும் முரண்பாடும் எல்லாம் அப்படியே சொல்லப்பட்டுள்ளன அவ்வளவுதான் என்றும் பாவனை செய்கிறது கதை. Plot எனப்படும் கதைவளர்ச்சியும் முடிவும் கொண்ட கதைகளைக் கடந்து இந்தவகையான கதைகள் அண்மையில் எழுதப்படுகின்றன. பிரான்ஸில்தான் இந்தவகை எழுத்து தொடங்கியது. ஆனால் ஜப்பானிய, கொரிய படைப்புகளில்தான் எல்லா எல்லைகளையும் கடந்துவிட்டார்கள். கூடவே Heavy metal போன்ற இசையும். இதை எந்தவகையிலே எடுத்துக்கொள்வது என்று எனக்கு இன்னமும்கூட சிக்கல்தான். இந்த வகையான கதைகளில் கிளாஸிக் என்று சொல்லப்படும் கதைகள் பலவற்றை வாசித்திருக்கிறேன். கலைப்படங்களையும் பார்த்துள்ளேன். ஓவியங்களையும் பார்க்கிறேன். எனக்கு அவை கடுமையான ஒவ்வாமையைத்தான் அளித்தன. அதிர்ச்சி, உடனே விலகிவிடவேண்டும் என்ற மனநிலை.
இந்தக் கதைகளில் எப்போதும் இருப்பது செய்திகளில் வரும் விஷயங்கள்தான். சமகால யதார்த்தங்கள்தான். அவற்றை மிகமிக நுணுக்கமான காட்சிகளாகவும் நிகழ்வுகளாகவும் எழுதிக்காட்டுகிறார்கள். ஒரு குவியாடியால் பெரிதாக்கிக் காட்டுவது போல. ஏன் இப்படிக் காட்டவேண்டும்? அதற்குப் பதில் இதுதான். இந்தவகையான குரூரம், வன்முறை இதையெல்லாம் ஒருகணம் பார்த்துவிட்டு உடனடியாக நாம் பார்வையை திருப்பிக்கொள்கிறோம். அது ஒரு Mass hypocrisy. நம் தலையைப் பிடித்துத் திருப்பி இதோ இதைப்பார் என்று சொல்கிறார்கள். இதில் ஏன் பிளாட் இல்லை? ஆசிரியர் ஒன்றுமே சொல்வதுபோல இல்லையே? அதற்கான பதில் இதுதான். இந்த வேறுவேறு நிகழ்வுகளுக்கு நடுவே உள்ள இணைப்பை வாசகன் உருவாக்கிக்கொண்டு அவற்றிலுள்ள அகயதார்த்தம் நோக்கிச் செல்லவேண்டும். இந்தகதை உணர்த்தவிரும்பும் விஷயம் கதைமுடிவில் இல்லை. கதையின் நிகழ்வுகளுக்கு இடையே உள்ளது.
‘அவள்‘ அந்த வகையில் தமிழில் எழுதப்பட்ட ஒரு முக்கியமான கதைதான். ஒரு வதையாக ஆகும் வாசிப்பனுபவத்தை அளிக்கிறது. Seemingly reporting என்று சொல்லத்தக்க இந்தக் கதையின் இடையே வாசகன் பொருத்திக்கொள்ள பல நுட்பமான இடங்கள் உள்ளன. ஒரு குறியீடாக ஆகக்கூடாது என்ற கவனத்துடன் வந்துகொண்டிருக்கும் கூவம். அதன் பளபளக்கும் அழகு. அதேபோல கொல்லப்பட்ட பெண்ணுக்கும் அவள் அம்மாவுக்குமான உறவு. அந்த வன்முறையை அவள்மேல் நிகழ்த்தியவர்கள் கூட்டாக ஒரு collective personality ஆக காட்டப்பட்டிருக்க பெண் தன்னந்தனியாக அதன்முன் நிற்கிறாள். இப்படி பல விஷயங்கள். எனக்கு அவள் ஒரு தற்கொலைத்தனமான வெறியுடன், கூவத்தில் குதித்துச் சாவதுபோல அந்த சாவு நோக்கிச் செல்கிறாள் என்று பட்டது. அவளுக்குள் இருந்தது தன்னை அழித்துக்கொள்ளும் ஆங்காரமா இல்லை அவளுக்கே தீமை நோக்கிய ஈர்ப்பு இருந்ததா? அவளிடமும் கடும் வன்முறை இருக்கிறது. தன்னை அழிக்கும் வன்முறை. அது எதிர்வினையா இல்லை அதுவும் சமகால வன்முறையா? இரண்டுக்கும் கதை இடம் கொடுக்கிறது. கூவம் அவ்வளவு ஈர்ப்பானது (இது எனக்கே உள்ள அனுபவம். 90ல் நான் ஒருமுறை முழங்கால்வரை இறங்கிப்பார்த்தேன்) இது மனிதாபிமானக்கதையா, ஃபாசிசக்கதையா? அண்மைக்கால இந்தவகை எழுத்துக்களை இரண்டும்தான் என்றுதான் சொல்லமுடியும்.
இன்றைய புதிய கதைவடிவம் ஒன்றை எழுதியிருக்கிறார் ஆசிரியர். அண்மைக்கால செய்திகளில் அமைதியிழந்து எழுதியிருக்கலாம்.மிக நுணுக்கமாகவும், ஒன்றோடொன்று செய்திகள் பொருந்துவதுபோலவும், ஆனால் வேண்டுமென்றே பொருத்தமாக செய்யப்படாததுபோல தெரிவதாகவும் எழுதியுள்ளார். மனதின் நுணுக்கமான சித்திரங்களும் உள்ளன. ஆனால் இந்தவகை கதைகளை எந்த அளவு நாம் வரவேற்கவேண்டும், இவற்றுக்கு உண்மையில் உள்ள இடம் என்ன என்பதெல்லாம் பெரிய கேள்விகள். நாம் இவற்றை வாசிக்கையில் உண்மையில் (நான் பிரெஞ்சு, ஜப்பானிய, கொரியக் கதைகளை எல்லாம் சேர்த்தே சொல்கிறேன்) உண்மையில் ஆசிரியர் உத்தேசிக்கும் catharsis நடக்கிறதா, இல்லை நாம் நம் மன அழுக்கைக்கொண்டு இந்த வன்முறையை உண்மையில் ரசிக்கிறோமா என்பதெல்லாம் சிக்கலான கேள்விகள். இந்தவகையான கதைகள் நவீனச் சமூகத்தில் பெருகிவரும் வன்முறைக்கு கலை அளிக்கும் எதிர்வினைகள். கழிப்பறைக் கோப்பையை கொண்டுவந்து சிற்பமாக ஆக்கி வைக்கிறார்கள். ஏன் மலத்தையே ஓவியமாக வரைகிறார்கள். ஆனால் இந்த எதிர்வினைகள் அறம் சார்ந்தவையா இல்லை, இவையும் இன்னொருவகை வன்முறைகள்தானா? நமக்கு நாமே செலுத்திக்கொண்டாலும் வன்முறைதானே?
எனக்கு இவற்றின்மேல் ஒவ்வாமைதான் உள்ளது. இவை தேவையில்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் இங்கே ஐரோப்பாவில் ஓவியங்கள், நாடகங்கள், இசை எல்லாவற்றிலும் இதே வன்முறையின் உச்சமான நுணுக்கம்தான் உள்ளது. என் ஒவ்வாமையையும் மறுப்பையும் மட்டும் பதிவுசெய்கிறேன். I understand the type of art this represents, yet I choose to reject it.
ஶ்ரீனிவாஸ்
ரமேஷ், கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
நான் தத்துவம் பயில்வதற்காக 1992 ல் டெல்லி பல்கலையில் சேர்ந்த ஆண்டில்தான் ஒரு நூலை வாசிக்க நேர்ந்தது. சார்த்ர் எழுதிய Nausea என்ற நாவல். ஒரு நாவலுக்கு வாந்தி என்று தலைப்பு இருப்பது எனக்கு கடுமையான அருவருப்பை உருவாக்கியது. ஆனால் அதைப்பற்றிய ஒரு ஏற்பை என் மூத்த நண்பர்கள் பேசிப்பேசி உருவாக்கினார்கள். ஒவ்வாமையே ஓர் இலக்கியப்படைப்பின் காரணமாக ஏன் இருக்கக்கூடாது என்று சொன்னார்கள். இன்று அந்நாவலை ஓர் உயர்வான படைப்பாக நான் நினைக்கவில்லை. அது மூளைசார்ந்த நாவல். சார்த்ரின் சிந்தனைகளை வெளிப்படுத்தும் ஒரு ஃப்ரேம்வர்க் மட்டும்தான். ஆனால் அது வெளிப்படுத்திய சிந்தனைகள் முக்கியமானவை. ஒவ்வாமை, விலக்கம் ஆகியவற்றின் ஓர் ஆவணம் அது.
2012ல் உங்கள் தளத்தின் வழியாக நான் ரமேஷ் பிரேதனை அறிமுகம் செய்து கொண்டேன். அவருடைய எழுத்து பின்நவீனத்துவ எழுத்துமுறை கொண்டது. அதாவது மெட்டா ஃபிக்ஷன் வகைமை கொண்டது. ஆனால் அவருடைய பார்வையும், அவர் படைப்புகளின் உள்ளடக்கமும் சார்த்ரின் படைப்புகளுக்குத்தான் நெருக்கமானவை. Nausea ரமேஷ் படைப்புக்களை புரிந்துகொள்ள மிகவும் உதவும் ஒரு நாவல். ஒவ்வாமை கடுமையான தீவிரத்துடன் வெளிப்படும் படைப்புகளாகவே நான் அவர் கதைகளைப் பார்க்கிறேன். வேறுபாடு ஒன்றே. சார்த்ர் போன்றவர்கள் ஒரு மனதை ஒரு தனிப்பட்ட அமைப்பாகவும், ஒரு மனிதனை ஒரு பெர்சனாலிட்டியாகவும் பார்க்கிறார்கள். ரமேஷ் மனதை ஒருவகை உடல் என்றும், மனிதனை ஒரு சமூகக்கட்டுமானமாகவும் பார்க்கிறார்.
இந்தவகை நாவல்கள் ‘செரிபரெல்’ என்று சொல்லத்தக்கவை. பிரச்சினைகளை ஐடியாக்களாக ஆக்கி, அந்த ஐடியாக்களை சொல்ல புனைவு என்னும் கட்டமைப்பை உருவாக்கிக் கொள்கிறார்கள். புனைவுகளை உருவாக்கி அதன் வழியாக இவர்கள் ஆழ்ந்து செல்வதில்லை. ஆகவே வாசகனுக்கு அவனே கண்டடையும் நுட்பங்களும் ஆழங்களும் இருப்பதில்லை. அவன் அவனை இவற்றில் பார்க்கமுடிவதில்லை. ஆசிரியனையே எல்லா பக்கங்களிலும் பார்க்கவேண்டியுள்ளது. ஆசிரியனின் குரல் மட்டுமே உள்ளது. ஆசிரியனின் தத்துவப்பார்வையும் கொந்தளிப்புகளும் இந்நாவல்களில் உள்ளன. அந்தவகையில் இவை முக்கியமான இலக்கியப் பாகுபாட்டைச் சேர்ந்தவையகாவே உள்ளன. ரமேஷ் பிரேதனுக்கு வாழ்த்துக்கள்.
எம்.சபரிகிரீசன்
அன்புள்ள ஜெ,
ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளமைக்கு வாழ்த்துக்கள். அவருடைய சொல் என்றொரு சொல் நூலை மட்டுமே வாசித்துள்ளேன். மனித இருப்பு மொழியால் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், மொழியே மனிதனின் வதைக்களம் என்றும் அந்நாவல் சொல்வதாக எனக்குத் தோன்றியது. ஒருவகையான நெருக்கடியுடனேயே நான் வாசித்த படைப்பு அது. ரமேஷ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
ஆர்.ஜி
ரமேஷ், கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
நான் தத்துவம் பயில்வதற்காக 1992 ல் டெல்லி பல்கலையில் சேர்ந்த ஆண்டில்தான் ஒரு நூலை வாசிக்க நேர்ந்தது. சார்த்ர் எழுதிய Nausea என்ற நாவல். ஒரு நாவலுக்கு வாந்தி என்று தலைப்பு இருப்பது எனக்கு கடுமையான அருவருப்பை உருவாக்கியது. ஆனால் அதைப்பற்றிய ஒரு ஏற்பை என் மூத்த நண்பர்கள் பேசிப்பேசி உருவாக்கினார்கள். ஒவ்வாமையே ஓர் இலக்கியப்படைப்பின் காரணமாக ஏன் இருக்கக்கூடாது என்று சொன்னார்கள். இன்று அந்நாவலை ஓர் உயர்வான படைப்பாக நான் நினைக்கவில்லை. அது மூளைசார்ந்த நாவல். சார்த்ரின் சிந்தனைகளை வெளிப்படுத்தும் ஒரு ஃப்ரேம்வர்க் மட்டும்தான். ஆனால் அது வெளிப்படுத்திய சிந்தனைகள் முக்கியமானவை. ஒவ்வாமை, விலக்கம் ஆகியவற்றின் ஓர் ஆவணம் அது.
2012ல் உங்கள் தளத்தின் வழியாக நான் ரமேஷ் பிரேதனை அறிமுகம் செய்து கொண்டேன். அவருடைய எழுத்து பின்நவீனத்துவ எழுத்துமுறை கொண்டது. அதாவது மெட்டா ஃபிக்ஷன் வகைமை கொண்டது. ஆனால் அவருடைய பார்வையும், அவர் படைப்புகளின் உள்ளடக்கமும் சார்த்ரின் படைப்புகளுக்குத்தான் நெருக்கமானவை. Nausea ரமேஷ் படைப்புக்களை புரிந்துகொள்ள மிகவும் உதவும் ஒரு நாவல். ஒவ்வாமை கடுமையான தீவிரத்துடன் வெளிப்படும் படைப்புகளாகவே நான் அவர் கதைகளைப் பார்க்கிறேன். வேறுபாடு ஒன்றே. சார்த்ர் போன்றவர்கள் ஒரு மனதை ஒரு தனிப்பட்ட அமைப்பாகவும், ஒரு மனிதனை ஒரு பெர்சனாலிட்டியாகவும் பார்க்கிறார்கள். ரமேஷ் மனதை ஒருவகை உடல் என்றும், மனிதனை ஒரு சமூகக்கட்டுமானமாகவும் பார்க்கிறார்.
இந்தவகை நாவல்கள் ‘செரிபரெல்’ என்று சொல்லத்தக்கவை. பிரச்சினைகளை ஐடியாக்களாக ஆக்கி, அந்த ஐடியாக்களை சொல்ல புனைவு என்னும் கட்டமைப்பை உருவாக்கிக் கொள்கிறார்கள். புனைவுகளை உருவாக்கி அதன் வழியாக இவர்கள் ஆழ்ந்து செல்வதில்லை. ஆகவே வாசகனுக்கு அவனே கண்டடையும் நுட்பங்களும் ஆழங்களும் இருப்பதில்லை. அவன் அவனை இவற்றில் பார்க்கமுடிவதில்லை. ஆசிரியனையே எல்லா பக்கங்களிலும் பார்க்கவேண்டியுள்ளது. ஆசிரியனின் குரல் மட்டுமே உள்ளது. ஆசிரியனின் தத்துவப்பார்வையும் கொந்தளிப்புகளும் இந்நாவல்களில் உள்ளன. அந்தவகையில் இவை முக்கியமான இலக்கியப் பாகுபாட்டைச் சேர்ந்தவையகாவே உள்ளன. ரமேஷ் பிரேதனுக்கு வாழ்த்துக்கள்.
எம்.சபரிகிரீசன்
அன்புள்ள ஜெ,
ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளமைக்கு வாழ்த்துக்கள். அவருடைய சொல் என்றொரு சொல் நூலை மட்டுமே வாசித்துள்ளேன். மனித இருப்பு மொழியால் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், மொழியே மனிதனின் வதைக்களம் என்றும் அந்நாவல் சொல்வதாக எனக்குத் தோன்றியது. ஒருவகையான நெருக்கடியுடனேயே நான் வாசித்த படைப்பு அது. ரமேஷ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
ஆர்.ஜி
Temple art and Architecture class experience
For the next few decades, I hope I will contemplate the profound statement of the legendary Sthapathi V Ganapathy, “Temple is the melody created by rhythm”.
The statement reminds me of the story ‘Iraivan’ by Je in the Ezhukathir series. Where Manikkam Aasari says it’s all Calculation.
Temple art and Architecture class experience
மூன்றே நாளில் கர்நாடக இசையை எப்படி அறிமுகம் செய்ய முடியும்? அதைக் கற்க பல ஆண்டுகள் ஆகும் அல்லவா? ஒரு சந்தேகமாகவே இதைக் கேட்கிறேன்.
ஜெயக்குமாரின் இசை வகுப்புTemple art and Architecture class experience
For the next few decades, I hope I will contemplate the profound statement of the legendary Sthapathi V Ganapathy, “Temple is the melody created by rhythm”.
The statement reminds me of the story ‘Iraivan’ by Je in the Ezhukathir series. Where Manikkam Aasari says it’s all Calculation.
Temple art and Architecture class experience
மூன்றே நாளில் கர்நாடக இசையை எப்படி அறிமுகம் செய்ய முடியும்? அதைக் கற்க பல ஆண்டுகள் ஆகும் அல்லவா? ஒரு சந்தேகமாகவே இதைக் கேட்கிறேன்.
ஜெயக்குமாரின் இசை வகுப்புSeptember 20, 2025
காலம் சேர்ப்பதுதான் என்ன?
1951ல் வெளிவந்த படம் நீலக்குயில். ஜனாதிபதி விருது பெற்ற முதல் மலையாளப்படம். மலையாளத்தில் இடைநிலை படங்களுக்குத் தொடக்கம் உருவாக்கியது அது. ( நீலக்குயில்) புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரான உறூப் எழுதியது. பி.பாஸ்கரன், செம்மீன்புகழ் ராமு காரியட்டுடன் இணைந்து இயக்கியது. சத்யன், மிஸ்.குமாரி இருவரும் இணைந்து நடித்தது.
நீலக்குயில் அந்தக் காலத்தில் ஒரு புரட்சிகரமான திரைப்படம். தலித் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை, பாலியல் சுரண்டல் ஆகியவற்றை ஆக்ரோஷமாகப் பேசியது. அந்த சுரண்டலுக்கு அப்பால் எழும் மானுடநேயத்தை முன்வைத்தது. அதில் இடம் பெற்ற புகழ்பெற்ற பாடல் எல்லாரும் சொல்லணு…
அந்தப்பாடலை அண்மையில் நவீன இசைக்குழுவான அமிர்தம் கமய மறு ஆக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். அறுபத்தைந்து ஆண்டுகளுக்குப்பின் 2015 ல் வெளிவந்த அந்தப்பாடல் பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டிருக்கிறது. காலத்தால் என்ன கூடுதலாக வந்து சேர்ந்திருக்கிறது?
தாளம் கொஞ்சம் மாறியிருக்கிறது. இசைக்கருவிகள் மாறியிருக்கின்றன. நடனமுறை மாறியிருக்கிறது. மெட்டு அதேதான். பழையபடத்தில் ஒரு தலித் பெண் பாடும் , தலித்துக்களின் நாட்டார்ப் பாடல் நவீன ஒளியமைப்புடன் மேடையில் நவீனகாலப் பெண்களால் நடனத்துடன் பாடப்படும்போது முற்றிலும் இன்னொன்றாக ஆகிவிட்டிருக்கிறது.
அத்துடன் பாட்டின் நடுவே இன்னொரு புகழ்பெற்ற மலையாள நகைச்சுவைப்பாடல் ‘கேட்டில்லே கோட்டயத்தொரு மூத்த பிள்ளேச்சன், தொண்ணூறு கழிஞ்ஞப்போள் பெண்ணு கெட்டான் போய்” (கேட்டீர்களா, கோட்டயத்தில் ஒரு மூத்த பிள்ளைவாள், தொண்ணூறு வயதுக்குப்பின் பெண்ணைக் கட்ட போனார்) இணைக்கப்பட்டு விளையாட்டாகவும் ஆக்கப்பட்டுள்ளது.
அதுதான் உண்மையில் உருவாகவேண்டிய மாற்றமா என்ன? ஒடுக்குமுறையின் இழிவின் அடையாளங்களெல்லாம் வெறும் அடையாளங்களாகி, பின்னர் கலையாக மாறிவிடும்போது காலம் கடந்துசெல்கிறதா என்ன?
எல்லாரும் சொல்லணு. நவீன வடிவம். அமிர்தம் கமய பேண்ட்
எல்லாரும் சொல்லணு எல்லாரும் சொல்லணு
கல்லாணு ஈ நெஞ்சிலெந்நு
கரிங்கல்லாணு ஈ நெஞ்சிலெந்நு…
ஞானொந்நு தொட்டப்ப நீலக்கரிம்பின்றே
துண்டாணு கண்டதய்யா
சக்கரத் துண்டாணு கண்டதய்யா
நாடாகே சொல்லணு நாட்டாரும் சொல்லணு
கல்லாணு ஈ கரளில் எந்நு
ஞானொந்நு கேறியப்போ நீலக்குயிலின்றே
கூடாணு கண்டதய்யா குஞ்ஞி கூடாணு கண்டதய்யா
எந்தினு நோக்கணு எந்திநு நோக்கணு
சந்திரா நீ ஞங்களே அய்யோ சந்திரா நீ ஞங்களே
ஞானில்ல மேல்போட்டு ஞானில்ல மேல்போட்டு
கல்யாண செக்கனுண்டே தாழே கல்யாண செக்கனுண்டே
செண்டொந்நு வாங்கணம் முண்டு முறிக்கணம்
பூந்தாலி கெட்டீடேணம் பொன்னின் பூந்தாலி கெட்டீடேணம்
களியல்ல கிளிவாலன் வெற்றில திந்நென் சுண்டொந்நு சோப்பிக்கேணம்
என்றே சுண்டொந்நு சோப்பிக்கேணம்.
எல்லாரும் சொல்கின்றனர் எல்லாரும் சொல்கின்றனர்கல்தான் இந்த நெஞ்சில் என்றுநான் ஒருமுறை தொட்டபோதுநீலக்கரும்பின் துண்டைத்தான் கண்டேன்சர்க்கரைக் துண்டைத்தான் கண்டேன்.ஊரே சொல்கிறது, ஊராரும் சொல்கின்றனர்காடுதான் நெஞ்சில் என்று கொடும் காடுதான் நெஞ்சில் என்றுநான் நுழைந்தபோது நீலக்குயிலின் குஞ்சைத்தான் கண்டேன்சிறு குஞ்சைத்தான் கண்டேன்எதற்காகப் பார்க்கிறாய் எதற்காகப் பார்க்கிறாய்சந்திரா நீ எங்களைநான் வரமாட்டேன் மேலே நான் வரமாட்டேன் மேலேகீழே என் கல்யாணப்பையன் இருக்கிறான்செண்டு ஒன்று வாங்கவேண்டும். வேட்டி அறுத்து வாங்கவேண்டும்பூந்தாலி கட்டிக்கொள்ளவேண்டும் பொன் தாலி கட்டவேண்டும்வேடிக்கையல்ல, கிளிநிற வெற்றிலை போட்டு என்உதடுகளை சிவக்கச்செய்யவேண்டும்
அவினேனி பாஸ்கர்
தமிழில் இருந்து தெலுங்குக்கு நவீன இலக்கியங்களை மொழியாக்கம் செய்யும் படைப்பாளி. தெலுங்கிலிருந்து தமிழுக்கும் மொழியாக்கங்கள் செய்துள்ளார். ஜெயமோகன், அ.முத்துலிங்கம் உட்பட பலருடைய படைப்புகளை தெலுங்குக்குக் கொண்டுசென்றவர்
அவினேனி பாஸ்கர்
சூஃபிச் சுடர்களும் பிரபஞ்ச மெய்மையின் ஒருமைச் சமுத்திரமும். நிஷா மன்ஸூர்
(10 செப்டெம்பர் 2025 அன்று நாகர்கோயிலில் தெற்கிலிருந்து ஒளிரும் சூஃபி சுடர்கள் என்னும் நூலை வெளியிட்டு நிஷா மன்ஸூர் ஆற்றிய உரை)
தெற்கிலிருந்து ஒளிரும் சூஃபிச் சுடர்கள் கட்டுரைத் தொகுப்பின் நூல் அறிமுகம் என்கிற பெயரில் நூலின் உள்ளடக்கத்தை சுருக்கமாகச் சொல்வதைவிட இந்த நூலுக்குள் நுழைவதற்கான இரண்டு வாசல்களைத் திறந்து தருவதன் மூலம் இந்தத் தொகுப்பின் கட்டுரைகளை உள்வாங்குவதற்கும் அவை காட்டித்தரும் பாதையில் பயணிப்பதற்குமான முன் தயாரிப்பை நல்க முடியும் என நம்புகிறேன்.முதலாக சூஃபிஸம் என்றால் என்ன என்பதையும் அடுத்ததாக தமிழ் மண்ணுக்கான தனித்துவமான சூஃபிஸ மரபின் பண்பாட்டுக் கூறுகள் குறித்த அறிமுகத்தையும் பார்ப்போம்.
சூஃபிஸம் என்றால் என்ன ?
சூஃபிஸம் என்பது ஒரு மீள் பயணம், ஒரு வடியும் அலை.
எல்லையில்லாத சமுத்திரத்தில் வடியும் அலை ஒன்றில் மூழ்கி அது அடித்துச் செல்லும் பாதையில் அதன் நித்திய எல்லையற்ற மூல ஊற்றுக்குப் பயணிப்பது பற்றிய வாழ்க்கைத் தொழிலும் அறிவுத் துறையும் அறிவியலும் ஆகும்.
மாபெரும் குருநாதர் எனப் போற்றப்படும் ஷைகுல் அக்பர் முஹையத்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் முக்கியமான பிரார்த்தனை,
“இரட்சகா,உமது எல்லையில்லா ஒருமைச் சமுத்திரத்தின் ஆழத்தில் என்னைப் பிரவேசிக்கச் செய்வாயாக“இதுதான் சூஃபிஸ பாதையின் ஒற்றை இலக்கு ஆகும்.
ரூமி மெளலானாவின் ஞானகுருவான சம்ஸுத் தப்ரேஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் பிரகடனம் இது,
“நான் சூஃபி. இக்கணத்தின் குழந்தை.
ஒரே கூரையின் கீழ் இரண்டு இரவுகள் உறங்குபவன் அல்லன்
ஒரே உணவுத்தட்டில் இரண்டு வேலைகள் உண்ணுபவன் அல்லன்.” இதனை சூஃபியின் விளக்கமாக உணர்ந்து கொள்ளலாம்.
சூஃபிகள் எப்போதும் பரலோக ராஜ்ஜியத்தின் ரகசியங்களின் மீதும் பிரபஞ்ச ஊற்றின் கண்களின் மீதுமே கவனத்தைக் குவிப்பவர்களாக இருக்கிறார்கள்.
பதினோராம் நூற்றாண்டின் மாபெரும் சூஃபியான இமாம் கஸ்ஸாலி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மரணித்தபோது அவர் தம் அந்திம காலத்தில் எழுதிவைத்திருந்த கவிதையொன்று அவரது தலைமாட்டில் இருந்தது.அதில்,
“நானொரு பறவை; இவ்வுடல் எனது கூண்டு.
அதை அடையாளமாக வைத்துவிட்டு நான் பறந்து செல்கிறேன்” என்று எழுதப்பட்டிருந்தது. இதனை சூபி வாழ்வின் ஒட்டுமொத்த குறியீடு எனலாம்.
இன்னொரு விதமாகக் கூறினால் “சூஃபிஸம் ஒரு குறிப்பிட்ட மறை வெளிப்பாட்டையே முற்றிலும் சார்ந்திருப்பதால் அது வேறு எதனையும் அறவே சாராமல் தன்னிறைவு கொண்டுள்ளது. அதேசமயம் பகிர்வதற்கு பொருத்தமான அளவு உலகின் எல்லா நிலப்பகுதியில் நிலவும் பண்பாட்டுக் கூறுகளையும் கலை வடிவங்களையும் கருவியாக ஏற்றுக் கொள்ளவும் செய்கிறது“
நம் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒப்புவமையில்லாத சூபி ஞானியான கல்வத்து நாயகம் அவர்கள் தமது சீடர்களுக்கான தினசரி விர்து எனப்படும் தியான உச்சாடனங்களில் “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ” எனும் இறைமறை வசனத்தைப் பரிந்துரைக்கிறார்கள். “நாம் அனைவரும் இறைவனிடமிருந்து வந்தோம் மீண்டும் அவனிடமே திரும்பிச் செல்பவர்களாக இருக்கிறோம் ” எனும் பொருள் கொண்ட இவ்வசனம் மரணித்த செய்தியைக் கேட்க நேர்பவர் மொழியும் வழங்கு சொல்லாக எளிமைப் படுத்தப்பட்டாலும் இதன் அசல் பொருளானது ஒரு மனிதன் தன் வாழ்வின் அநித்தியத்தையும் தன் ஆன்மாவின் ரகசியத்தையும் உணர்ந்துகொள்ளப் பயன்படும் மந்திரமாக ஜொலிக்கிறது.இதனையே ரூமி மெளலானாவின் கவிதை இப்படிச் சொல்கிறது,
“ஆனால் நானறிவேன்
எனது ஆன்மா வந்தது வேறெங்கிருந்தோ
அங்கு சென்றடையவே விரும்புகிறேன் நான்
வேறேதோ மதுபான விடுதியிலிருந்து
பிறந்திருக்கிறது இந்த போதை
நான் அங்கு மீளும்போது
முற்றிலும் தெளிவடைந்திருப்பேன்
இப்போது இந்தக் கூட்டில்
அமர்ந்திருக்கும் நான்
வேறோர் நிலவுலகின் பறவை.
நான் பறந்து வெளியேறும் நாள்
வெகு தொலைவில் இல்லை“
சூஃபி எனும் சொல்லாடல் ஸுஃப்பா எனும் மூலச்சொல்லில் இருந்து பிறந்தது. நபிகள் நாயகத்தின் அவையில் திண்ணைத் தோழர்கள் (அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா) என்று குறிப்பிடப்பட்ட நூற்றுக்கணக்கான தோழர்கள் ஒரு திண்ணையில் தங்கி நபிகளாரின் ஒவ்வொரு அசைவையும் ஆவணமாக்கியதோடு மட்டுமின்றி வாழ்வியல் நெறிமுறைகள் சட்டதிட்டங்கள் போன்ற சமூக மனிதனுக்கான ஒழுங்குகளை போதிப்பதைத் தாண்டி ஆன்மீக ரகசியங்களையும் இறைமறையின் அகமியங்களையும் பயின்று வந்தனர்
அந்தத் திண்ணைத் தோழர்களின் நீட்சியாகவே இன்றுவரை உள்ள ஸூபிகள் இருக்கின்றனர். .அவ்வப்போது மனதில் ஏற்படும் சபலத்தை வெல்வதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளும் சாதாரண மனிதனைத் தாண்டி மனோ இச்சைகளுக்கெதிரான முழுமையான போரை மேற்கொள்வதே சூபிகளின் முழுமுதற் கொள்கையாகும். விரைந்து முன்னேறும் சூஃபியே ஷைகுவாக–சற்குருவாக இருந்து சீடர்களை வழிநடத்துகிறார்.அவர் இறைமறையாம் குரானுக்கு நெருக்கமானவர்.மனித உருவில் ஃபுர்கானை அடைவதற்கு நெருங்கி வருகிறார்.
உலக வாழ்வின் மீது பற்றற்றிருப்பது, எளிய உணவுகளை மட்டுமே உண்ணுவது, கிடைத்தவற்றைக் கொண்டு பொருந்திக் கொள்வது. என்று துறவற மனோநிலையில் வாழ்ந்தாலும் ஈராக்கின் ராபியத்துல் பஸ்ரியா தமிழ்நாட்டின் குணங்குடி மஸ்தான் சாகிபு அப்பா போன்ற மிகச்சிலரைத் தவிர ஏனைய அனைவருமே திருமண பந்தத்தை மேற்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பரிபூரணத்துவம் –இன்சானே காமில் என்பது சூஃபிஸத்தின் இலக்கு ஆகும். பரிபூரணம் என்பது கம்பீரம், அழகு,முழுமை ஆகிய பண்புகளின் கலவை ஆகும்.இந்த இறைப் பண்புகளைத் தரித்துக் கொள்வதுதான் சூஃபிஸம்.
அதாவது,
வீழ்ந்த மனிதனின் குறைபாடுகளை ஆன்மாவிலிருந்து அகற்றி
அவனது இரண்டாம் இயல்பாக ஆகிவிட்ட பழக்கவழக்கங்கள் மற்றும் தப்பெண்ணங்களைக் களைந்து இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட மனிதனின் ஆதி இயற்கையின் குணநலன்களை ஆன்மாவுக்கு அளிப்பது என்பதாகும்.
ஹதீஸே குத்ஸியில் இறைவன் கூறுகிறான்,
“நான் மறைந்த புதையலாக இருந்தேன்.பிறகு அறியப்பட விழைந்தேன்,எனவே இவ்வுலகைப் படைத்தேன்” என்பதாக.
இந்தப் புனித நபிமொழிதான் எல்லா சூஃபிஸ சிந்தனைப் பள்ளிகளும் முன்மொழியும் நபிமொழியாகும்.
எல்லா சூஃபி சிந்தனைப் பள்ளிகளுக்கும் இறைமறை திருக்குர்ஆன்–நபிமொழி ஆகியனவே வழிகாட்டுபவை ஆகும். ஒப்பாரும் மிக்காருமற்ற பரிசுத்த புனிதரான நபிகள் நாயகமே சூஃபிஸத்தின் பெருந்தலைவர் ஆவார்.
“நீர் ஓராயிரம் ஆண்டுகள் வாழ்வதுபோல இம்மைக்குச் செயலாற்றுவீராக.ஆனால் நாளை மரணிக்கத் தயாராக இருப்பதுபோல மறுமைக்குச் செயலாற்றுவீராக” என்பது நபிகளாரின் பிரபலமான கூற்று.
பூமியில் இறைவனின் நீதியை நிலைநாட்டுவதற்காகவும் சமதர்ம சமுதாயத்தைக் கட்டமைப்பதற்காகவும் செயலாற்றுவது சூஃபிகளின் சமூக கடமையாகும். உலகோடு ஒட்டாமல் வாழ்வது சூஃபிகளின் வழமை அல்ல. சமூகத்துடன் இணங்கிக் கூடி வாழ்ந்தாலும் மனதளவில் உலக ஆசாபாசங்களில் ஒட்டாமல் வாழ்வதுதான் சூஃபிகளின் வழமை ஆகும்.
“இவ்வுலகில் ஒரு அன்னியனைப் போல,அல்லது ஒரு வழிப்போக்கனைப் போல வாழ்வீராக” என்பது இன்னொரு முக்கியமான நபிமொழி. ஆகவே“திரும்பிச் செல்வதற்கான தயார்நிலையில்“தான் சூஃபி எப்போதும் இருப்பார். சிதிலமடைந்து துண்டுதுண்டான தனிமனித ஆன்மாவை அளவற்ற எல்லையற்ற இறை ஆன்மாவுடன் மறு ஒருங்கிணைப்பு செய்வதற்கான ஏக்கத்துடனே சூஃபியின் கண்கள் தவித்துக் கொண்டிருக்கும்.
அறிவியல் கண்டுபிடிப்புகளாலும் தொழில்நுட்ப வளர்ச்சிகளாலும் மனிதன் வானத்தில் பறந்தபோதும் காலத்தின் குறுக்கு நெடுக்குகளின் அடுக்குகளினூடே ஆழப் பயணித்த போதும் அவனது மனதானது இச்சைகளின் வளர்ப்புப்பிராணியாகவே இருந்துகொண்டிருக்கிறது.
ஒரு துளை வழியாக இந்தப் பிரபஞ்சத்துள் பிரவேசிக்கும் மனிதன் தன் மூலத்தை/அசலை அடைந்து ஞானசாகரத்தில் திளைக்க வேண்டும்.ஆனால் வந்த அதே துளையையே வாழ்நாள் முழுதும் சிந்தித்துப் பின்னர் அதற்குள்ளாகவே வீழ்ந்து வீணாகி மறைந்து விடுகிறான். வந்த வழியே திரும்பிச் செல்வதற்கல்லவே வாழ்வெனும் அருள்.
இதனையே பட்டினத்தார் இவ்வாறு பாடுவார்,
“சிற்றம் பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம் பலம் தேடி விட்டோமே – நித்தம்
பிறந்த இடத்தைத் தேடுதே பேதை மட நெஞ்சம்
கறந்த இடத்தை நாடுதே கண்”
“முடி சூழ்ந்த கண்ணில்
முளையடித்துக் கட்டிய மனசு” என்பார் நம் காலத்து பாணன் கவிஞர் விக்ரமாதித்யன். அவ்வாறு தன்னைப் பிரபஞ்சத்துடன் அடையாளம் கண்டுகொள்ளும்போது வாழ்வு இன்சான் எனும் மனிதன் காமிலான இன்சானாகப் பரிணமிக்கிறான் (இன்சானே காமில் –பரிபூரண மனிதன்).
சூஃபியும் எல்லா மனிதர்களைப் போலவே சாதாரண பிரபஞ்ச வாசலின் வழியாக இவ்வுலகத்திற்கு வந்தார். ஆனால் பெரும்பாலான மனிதர்களைப் போல தான் வந்த அந்த நுழைவாயில் வழியிலேயே வடிந்து செல்வதிலிருந்து தவிர்த்து தனது சிற்றலையை எல்லையற்ற பேரலையுடன் இணைத்துக் கொள்வதையே செயலாக்கிக் கொள்வார். இதற்கு தனது சொந்த முயற்சி மட்டுமே போதாது என்பதால் சற்குருநாதர் அந்த வாயிலில் கைதூக்கிக் காப்பவராக இருப்பார்.பரிபூரணத்தின் மையப்பகுதியில் இறைத்தூதர் சதா காத்துக் கொண்டிருக்கிறார். வந்து சேராதவர்களுக்கு அவர் ஒரு மீட்புக் கயிற்றை வீசுகிறார்.அந்தக் கயிரே ஆன்மீக வம்சாவழி எனப்படும் ஸில்ஸிலா ஆகும்.ஒவ்வொரு சூஃபி சிந்தனைப் பள்ளியும் இவ்வாறே இறைத்தூதர் வசமிருந்துதான் தோன்றி வருகின்றன.
“இறைவனின் பரிசுத்த மூச்சால் உள்ளிழுக்கப்பட்டு–உள்வாங்கப்பட்டு பிறகு வெளியேற்றப் படாமல் இருப்பதே சூஃபிஸத்தின் மேலான குறிக்கோள் ஆகும்.”
“சாந்தியடைந்த ஆத்மாவே…உம் இறைவனின் பக்கம் திரும்பிச் செல்.நீ அவன் மீது திருப்தியுற்றும் அவன் உம் மீது திருப்தியுற்றும் உள்ள நிலையில் எம் நல்லடியார்களுக்கு மத்தியில் நுழைந்துவிடு. என் சுவனபதிக்குள் நுழைந்துவிடு“
திருக்குர்ஆன்-89:27-30 வசனங்கள் குறிக்கும் இந்த நித்திய ஒருமைப்பாடுதான் சூஃபிகளின் உயரிய நோக்கம்.
2. தமிழ் மண்ணின் சூஃபிஸம்.
தமிழ் மண்ணுக்கான தனித்துவமான சூஃபி மரபைக் கொண்டுள்ளவர்கள் நாம். சதக்கத்துல்லாஹ் அப்பா,பீர் முஹம்மது அப்பா,குணங்குடி மஸ்தான் சாஹிப் அப்பா,நூஹ் லெப்பை ஆலிம்,கீழக்கரை தைக்கா சாஹிப் வலியுல்லாஹ்,கல்வத்து நாயகம் ரலி என்று மிக நீண்ட ஆளுமைகள் கொண்ட வரிசை அது.
இயல்பாகவே தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமியர்கள் அனைவரிடத்திலும் அந்தந்த நிலப்பகுதிக்கேற்ப பழமொழிகளும் சொலவடைகளும் கிஸ்ஸாக்கள் எனப்படும் மூத்தோர் வரலாறுகளும் வழங்கி வருகின்றன. மேலும் அரபு மொழியை எழுத்துருவாகவும் தமிழை உச்சரிப்பாகவும் கொண்ட அரபுத்தமிழ் எனப்படும் “அர்வி” மூலமாக பல வரலாற்று நூல்களும் இஸ்லாமிய மார்க்க சட்டதிட்டங்களின் தொகுப்புகளும் எழுதப்பட்டுள்ளன.
காயல்பட்டினத்தில் அடங்கியுள்ள உமர் வலியுல்லாஹ்வில் தொடங்கி கீழக்கரை சதக்கத்துல்லாஹ் அப்பாவில் உச்சம் பெற்ற ஞானமரபானது தமிழ்,அரபு,அரபுத்தமிழ் கவிதைகளாகவும் பாடல்களாகவும் விருத்தங்களாகவும் கண்ணிகளாகவும் வெளியாகியுள்ளன. உமர் வலியுல்லாஹ் அவர்களின் “கல்பைக் கழுவினாலே கரை சேரலாம்,கையைக் கழுவினால் கறைபோமோ” என்று துவங்கும் பாடல்கள் உள்ளிட்ட “மெஞ்ஞானப் புலம்பல்” பாடல்கள் தமிழிலும் “இலாஹி கம் துபக்கீனி” “தரீக்கல் வஸ்ல்” “அல்லபல் அலிபு” என்பதுபோன்ற அரபுக் கவிதைகளும் தமிழ் இஸ்லாமிய இலக்கிய ஞானமரபின் ஊற்றுக்கண்ணாக விளங்குகின்றன.
முகலாய மாமன்னர் ஒளரங்கசீப் அவர்களின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்து ஒளரங்கசீப்பின் “ஃபதாவா ஆலம்கீர் ” எனும் மார்க்க விளக்கக் கிரந்தத்தைத் தொகுக்கும் குழுவுக்குத் தலைமை தாங்கிய“சதக்கத்துல்லாஹ் அப்பா” அவர்களின் “வித்ரிய்யா” எனும் நபிபெருமானாரின் புகழ் பாடும் காவியமானது 29 கண்ணிகளைக் கொண்ட 2105 பாடல்களை உள்ளடக்கியதாகும். மேலும் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள்தான் உமறுப்புலவர் எழுதிய “சீறாப்புராணம்” காவியத்திற்கு முன்னுரை வழங்கியவர்கள் ஆவார்கள்.
இதனைப்போலவே உமர் வலி அவர்களின் சீடராகவும் பிரதிநிதியாகவும் திகழ்ந்த கீழக்கரை தைக்கா சாஹிப் வலியுல்லாஹ் அவர்கள் 28 கண்ணிகளைக் கொண்ட “ஷிஃப் இய்யா” எனும் காவியத்தை இயற்றினார்கள். ஆனால் அதனை அச்சாக்கம் செய்யவில்லை. ஏனெனில் அவர்கள் மிகவும் கண்ணியமாக மதிக்கும் சதக்கத்துல்லாஹ் அப்பாவின் “வித்ரிய்யா” வுக்கு போட்டியாக எழுதப்பட்டதுதான் இந்தக் காவியம் என்று எவரும் பிற்காலத்தில் கூறிவிடலாகாது என்கிற பேணுதல்தான் காரணம். மேலும் அரபியிலும், அரபுத்தமிழிலும், தமிழிலும் பல நூல்களை எழுதியுள்ளார்கள். அவற்றில் நான்காயிரம் மஸ் அலாக்களை ( வாழ்வியல் சட்டக் கோர்வைகள்) ஒருங்கிணைந்த “மஸாயிலுத்தீன்” மற்றும் “குஸாலத்துத் திராயா” என்கிற அரபு நூல்களும் “மஃரிஃபத்தேசல்” மற்றும் நாற்பது மாலைகள் கொண்ட “அடைக்கல மாலை” எனும் தமிழ் நூல்களும் மிக முக்கியமானவை ஆகும்.
“காலமடங்கிலும் நீயே அதிலுன்னைக் கண்டதுண்டோ?
கோலமடங்கிலும் நீயே உனக்கொரு கோலமுண்டோ?
ஆலமனைத்தும் அடையாளம் உனை அறிதற்கென்றால்
ஆல நபிக்குன்னருள் புரிவாய் உன் அடைக்கலமே“
எனும் பாடல் வஹ்தத்துல் உஜூத்(ஒற்றை உள்ளமையின் வெளிப்பாடு) எனும் ஞான மரபின் நீட்சியாகத் திகழ்கிறது.
கீழக்கரை தைக்கா சாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் சீடர்களில் ஐவர் மிக முக்கியமானவர்கள் ஆவார்கள். அவர்களில் ஒருவர்தான் குணங்குடி மஸ்தான் சாஹிப். ஏனைய நால்வர் புலவர் நாயகம் எனப் போற்றப்படும் சேகனாப் புலவர் மற்றும் “அரூஸிய்யா” எனும் ஞான பீடத்தை உருவாக்கிய மாப்பிள்ளை லெப்பை ஆலிம், சுன்த்து சுஃப்யான் எனும் அரபுத்தமிழ் கிரந்தத்தை இயற்றிய அம்மாபட்டினம் யூசுஃப் லெப்பை ஆலிம், மற்றும் அப்துல் காதிர் லெப்பை ஆலிம் ஆகியோர் ஆவர்.
தமிழின் முதல் நாவலாகக் கருதப்படும் 1879-ல் வெளியான மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் எழுதிய “பிரதாப முதலியார் சரித்திரம்” நாவலுக்கு 21 வருடங்களுக்கு முன்னதாக 1858 ல் அரபுத்தமிழில் “மதீனத்துன் நுஹாஸ்” எனும் தலைப்பில் எழுதப்பட்ட “தாமிரப் பட்டினம்” நாவல் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களுடையது. அதாவது தமிழ் பேசும் மக்களால் எழுதப்பட்ட முதல் நாவல் இதுவேயாகும். பின்னர் 1979 ல் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியானது இந்நாவல். மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் “மஙானி” எனும் இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாட்டு நூல் இன்றளவும் மார்க்க அறிஞர்களுக்கு ஒளிவிளக்காகத் திகழ்கிறது. இலங்கையின் முதலாவது அரபுக் கல்லூரியை “வெலிகம” நகரத்தில் அமைத்த இவர்கள் 350 பள்ளிவாசல்களை அமைத்து இஸ்லாமிய மறுமலர்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளார்கள். மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் பங்களிப்புகளானவை தனியாக ஒரு கருத்தரங்கு நிகழ்த்தி ஆய்வுநூல் வெளியிடும் அளவு மகத்தானவை ஆகும்.
அடுத்ததாக பீரப்பா,
சூஃபிகளைப் பொறுத்தவரை நான்கு வகையான சூஃபி இறைநேசர்களை இறைவன் இந்த மண்ணுக்குப் பரிசாக அளித்திருக்கிறான்.
1)தர்க்க ரீதியாக,அறிவு ரீதியாக சகலத்தையும் நேர்த்தியான சூத்திரங்களுடன் மெய்ப்பிக்கும் ஞான ஆசிரியர்கள்.
2)தம் நஃப்ஸை (கீழான மனதை) வென்று வணக்க வழிபாடுகள் மூலமாகவும் இதயத்தைப் பரிசுத்தப்படுத்துவதன் மூலமாகவும் தனக்குள் பூரணமாகி மெளனித்து நின்ற மகான்கள்.
3) இறையணுக்கத்தில் தன்னை மறந்து மஜ்தூபாகி (தன்னிலை மறந்து) அலையும் ஞானச் சிறகுகள்.
4)நீதியை நிலைநாட்ட அநீதிக்கெதிராக போரிட்டு தன்னுயிரைத் தியாகம் செய்த ஷுஹதாக்கள் (வீரமரணம் அடைந்தவர்கள்)
தக்கலை பீரப்பா முதலாவது வகையில் காலத்தை வென்று உறுதியாக நிற்கிறார்கள், இந்த வகைமையினர்கள் எந்த ஒரு இடத்திலும் தடுமாறுவதில்லை–தயங்குவதில்லை. இறைமை,பிரபஞ்ச உருவாக்கம்,தாத் எனும் இறைசுயத்தின் தன்மை,சிஃபாத் எனும் இறை குணங்களின் வகைமை,
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் மேன்மை,ஹக்கும் ஹல்க்கும் யாவை (படைத்தவனுக்கும் படைப்புக்கும்) என்கிற தெளிவு,சுவர்க்கம்,நரகம்,கேள்விகணக்கு,சிராத்துல் முஸ்தகீம் எனும் மயிர்ப்பாலம்,மலக்குகள்,ஜின்கள்,இன்னபிற படைப்பினங்கள் குறித்த விளக்கம்,ஸூர் ஊதுவதன் அகமியம்,மஹ்ஸர் மைதானத்தின் தாத்பர்யம்,மெய்ப்பொருளுடன் அடைக்கலமாகும் அப்து எனும் அடிமை ஆன்மாவின் படித்தரங்கள் என்று எல்லாக் கேள்விகளுக்கும் துல்லியமான, கறாரான விளக்கங்கள் அவர்களிடம் உண்டு. ஷரகு எனும் ஷரீயத்துக்காக சுருட்டி மறைத்தவை போக சொல்லத்தகுந்த அனைத்தையும் தெள்ளத் தெளிவாக தமிழில் அட்சர சுத்தமாக விளக்கிக் கூறுயிருக்கிறார்கள் பீரப்பா.
“நீ கடலின் ஒரு துளி அல்ல,
ஒரு துளிக்குள் நிறைந்திருக்கும் கடல்“
என்கிறார்கள் ஆசான் ரூமி மெளலானா.
பெருங் கடலானது என்னவிதமான மூலக்கூறுகளைத் தன்னுள் கொண்டுள்ளதோ அவை அத்தனையும் ஒரு துளிக்குள்ளும் உண்டு. அவற்றின் அளவில் குறைவு இருக்கலாம்.கைகளில் முழுக்கடலையும் அள்ள இயலாது.ஆனால் கைகளுக்குள் இருப்பது கையளவு கடலாகவேதான் இருக்கும். இதையேதான் பீரப்பா இவ்வாறு கூறுகிறார்கள்,
“நீயே யுனைப்புகழ்ந் துற்றவந் நாளுன்னை நீயுணர்ந்து
நீயே யுனக்கு ஸுஜூதுசெய் தாய்பின் நினைந்துருவாய்
நீயே புவிக்குள் றசூலாக வந்தவன் நேர்வழிக்கும்
நீயே துணையெனக் கல்லாது வேறில்லை நிச்சயமே“
இவ்வளவு அப்பட்டமாக உடைத்து நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல இந்த ஞான விளக்கத்தைச் சொல்ல பீரப்பாவால்தான் முடியும்.
இறைவன் இந்தப் பிரபஞ்சத்தின் சகலவிதமான படைப்புகளையும் உருவாக்க, தன்னையன்றி இன்னொரு பொருளின் மீது தேவையாகவில்லை. ஏனெனில் அவன் தேவையற்றவன்.இந்த நுணுக்கமான புள்ளியை மையப்படுத்தி சகலவிதமான சூத்திரங்களுடன் இதனை மெய்ப்பிக்கிறார்கள்.
அதே சமயம் எல்லையற்ற இறைமையின் ஆகிருதியானது யாராலும் முற்றுமுழுதாக அறியக்கூடியதோ தெரியமுடிந்ததோ அல்ல என்னும் சத்தியத்தை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தவும் செய்கிறார்கள்.
“அல்லாஹு லில்லாஹி ஆதியானவனே
***ஆராருமணுகாத தீதாருள்ளோனே***
வல்லானே எல்லாம் வணங்க உரியோனே
மாறாத சோதிவடிவான பெரியோனே
லில்லாஹி யென்றன் பிரானே வல்லோனே
இறையோனே நீ யெற்குன் உதவியருள்வாயே
பொல்லாத சூமரென்னை வெல்லாமலடியேன்
புண்ணியனே யுன்றனடைக் கலமதானேன்“
(ஞானப்புகழ்ச்சி-47)
இந்தப் பாடலில் வரும் ஆராருமணுகாத தீதாருள்ளோனே எனும் வரி அதனைத்தான் சொல்கிறது.ரட்சகனின் பிரமாண்டமான ஆகிருதியானது எவராலும் அறிய முடிந்தது அல்ல.
எவ்வளவுதான் ஹக்கில் (படைத்தவன்) மூழ்கித் திளைத்திருந்தாலும் ஹல்க்கின்(படைப்பு) தான்மை முற்றிலுமாக அழிவதே இல்லை.அப்படித்தான் அதன் கட்டுமானம் வரையறுக்கப்பட்டுள்ளது. வஹ்தத்துல் உஜூத் (ஏக உள்ளமை) எனும் கோட்பாட்டை உலகுக்குத் தந்த முஹையத்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் “எவ்வளவுதான் கீழே இறங்கி வந்தாலும் ரப்பு ரப்புதான். எவ்வளவுதான் மேலேறிச் சென்றாலும் அப்து அப்துதான்” என்று இத்தன்மையையே கூறுகிறார்கள்.
“எல்லை அறிந்ததுன்னை வணங்கவல்லார்க்கு
இரங்கியிருப்போனே துணை செய்வாயே” (ஞா.பு:17)
என்கிற வரிகளும்.
“வேதியர்க ளாருமறி யாதபொருளேயான்
விரும்பி நின்னோடிரந்ததற்கு நுதவியருள் வாயே“(ஞா.பு:48)
என்கிற வரிகளும் இன்னும் பற்பல பாடல் வரிகளும் இதனையே வலியுறுத்துகின்றன
அல்லாஹ் அறிபொருள்,தெரிபொருள் அல்லன்” என்கிறார்கள் கம்பம் நகரில் வாழ்ந்த ஞானவள்ளல் ஷைகுணா ஜல்வத்து நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். கண்மணி நாயகம் முஹம்மது முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களது மிஃராஜ் எனும் விண்ணேற்றத்தில் உடன் வந்த வானவர்களின் தலைவரான ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “ஸித்ரதுல் முன்தஹா” எனும் தலத்திற்கு மேலாக முன்னகரத் தனக்கு வலிமை இல்லையென்றும் ஒருவேளை அப்படி முன்னகர முயன்றால் தனது கட்டுமானம் சிதைந்து அழிந்து விடுவேனென்றும் சொன்னது நபிகளாரின் வரலாற்றுப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏன் அவ்வாறு சொன்னார்கள் என்றால் அவ்வல் அஹதாக இருந்த மெய்ப்பொருள் ஆகிர் அஹமதாகப் பூத்ததன் பிறகுதான் ஜிப்ரயீலின் ஆன்மா உருவாக்கப்படுகிறது. எப்படி ஒரு பிள்ளை தான் பிறப்பதற்கு முன்னர் தாய் தந்தையரின் கோடானுகோடி உயிரணுக்களுக்குள் தனித்த அடையாளமின்றி சங்கமித்து விடுகிறதோ அதேபோல ஜிப்ரயீல் ஆனவர் தனது ஆன்மா உருவான “ஸித்ரதுல் முன்தஹா” எனும் தலத்துக்கு மேலாகச் செல்லும் போது “மகாமே மஹ்மூத்” எனும் திருத்தலத்தில் அடையாளமின்றிக் கரைந்து விடுவார்.
மகாமே மஹ்மூத்–நூரே முஹம்மதிய்யா எனும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் ஆன்மா உருவான திருத்தலம் அது. “நான் ஏக இறைவனின் ஜோதியில் நின்றும் உள்ளவன்,என்னுடைய ஜோதியில் நின்றும் சகல வஸ்துகளும் உருவாகின” என ஹதீஸே குத்ஸியில் நபிகளார் கூறியதன் படி ஜிப்ரயீல் உட்பட எதுவுமே இல்லாத அஹதாகி நின்ற மெய்ப்பொருளும் ஜோதியாக இலங்கிய நூரே முஹம்மதியாவும் மட்டுமே பல்லாயிரக்கணக்கான யுகங்கள் தனித்திருந்த தலம் அது.
மகாமே மஹ்மூதுக்கு மேலே சென்றால் அங்கே முஹம்மது நபிகளாரின் ஆன்மா இல்லை.அஹதாய்த் தனித்திருந்த பொக்கிஷமான, தன்னுள் சகலத்தையும் கொண்டிருக்கும் ஆதியனாதி மெய்ப்பொருளான அல்லாஹ் மட்டுமே இருப்பான்.அவனை அவனே அறிவான்,அவன் மட்டும்தான் அறிவான். “அல்லாஹு அக்பர்” எனும் இறைமையின் மகத்துவத்தை ஒவ்வொரு இறைநம்பிக்கையாளனும் தினந்தோறும் பலநூறு முறை கூறிக்கொண்டே இருக்கிறான்.அதன் பொருள் “இறைவன் பெரியவன்” என்பதாகும்,எந்த அளவுக்குப் பெரியவனென்றால் படைப்பினங்களின் அறிவின் விஸ்தீரணத்தைக் காட்டிலும் பெரியவன்,இதுவரை அறிந்தவற்றை விடவும் இனி அறியப்போவதைக் காட்டிலும் பெரியவன்,வானம் எவ்வாறு நம் பார்வையின் எல்லையைக் காட்டிலும் விரிந்து பரந்துள்ளதோ பிரபஞ்சம் எவ்வாறு நம் அறிதலின் விஸ்தீரணத்தைக் காட்டிலும் பற்பல மடங்குகள் ஆழமும் நீளமும் கொண்டதோ அதேபோல இறைவன் நாம் யூகிக்க இயலாத அளவு பெரியவன். வேதியர்களாலும் அதனை கற்பனிக்கவோ அறியவோ முடியவே
முடியாது.
அந்த மெய்ப்பொருளிடத்தில்
“கல்லாரெனை மண்ணில் பகை செய்யாமல் கத்தனே யானுன் அடைக்கலமதானேன்” என அடைக்கலமாகலாம்.
“கருடனினைவிட் டெனைப்படைத்த ஹக்கேயெனது தீவினையால்
குருடன்வனத்திற் கோலிழந்த குறிபோல் முறையிட்டுனையடியேன்
வருடிப் புகழ்ந்துன்னோடிரப்பேன் வடிவேயுனது வல்லபத்தால்
திருடனளவுற் றிரங்கியின்னஞ் செய்வாய்றகுமத் தெனசீமானே“
(ஞானப்புகழ்ச்சி-82) என இரந்து நிற்கலாம்
“ஆதியுனக்கிணை யற்றவனே யழிவற்றுல காள்பவனே
நீதிகொடெத்திசையும் படைத்தஞ்சில் நினைத்திடு முட்பொருளே” எனப் புகழ்ந்து துதிக்கலாம்
“பொல்லாக் குபிர்களும் வருங்குற்றமும்
பொருந்தாப் பிணிதுன்பம் பலவாபத்தும்
நில்லா வறுமையும் மனச்சலிப்பும்
நினைப்பு மறப்பும்வந் தெய்திடாமல்
எல்லா வினைகளு முசீபத்தும்வந்
தென்னை யணுகாமல் காத்தருள்வாய்
அல்லா வுனைப்புகழ்ந்துன் னோடிரப்பேன்
அடியேன் துஆப்பேறீ டேற்றுவாயே” எனப் பிரார்த்தித்து கண்ணீரும் கம்பலையுமாக மன்றாடலாம்.
இவ்வாறாக இந்த இகவாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் ஒளி விளக்காக வழிகாட்டி நிற்கின்றன பீரப்பாவின் பாடல்கள். பீர்முஹம்மது அப்பா என்பது நிச்சயமாகத் தனி மனிதர் அல்ல,அது ஓர் இயக்கம்.ஒற்றை ஆளுமையே ராணுவமாக நின்று தேசத்தைக் காப்பதைப்போல பீரப்பாவின் பாடல்கள் பிரபஞ்ச ரகசியத்தையும் எல்லையற்ற மெய்ப்பொருளான இறைவனின் மகத்துவத்தையும் நபிகளாரின் முக்கியத்துவத்தையும் இன்னும் இன்னும் வாழ்வின் ஒவ்வொரு கணங்களுக்கான பிரார்த்தனைகளையும் அறியத்தந்து பூரணப்புதையலாக ஜொலிக்கின்றன.
பொதுவாக தெற்கு வடக்கு கிழக்கு மேற்கு என்பன நம்மைப்போன்ற மண்மீது பற்றுக் கொண்டுள்ள எளிய மனிதர்களுக்கானவை.சூஃபி ஞானியரை இந்தக் கட்டுக்குள் அடக்குவது ஏற்புடையதன்று. கன்னியாகுமாரி மாவட்ட மக்களுக்கு இந்த மண்ணின் பற்று பெருமை ஆகியன கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும்.
தேசம்,மாநிலம்,மாவட்டம்,நகரம்,சிற்றூர்,கிராமம்,இனக்குழு, குடும்பம் என்று வட்டங்கள் குறுகிக் கொண்டே வந்து ஒற்றை மனிதனில் மனித கவனம் மையம் இந்தச் சூழலில் வட்டத்தைப் பெரிதாக்கிக் கொண்டே சென்று மொத்தப் பிரபஞ்சத்தையும் தன்னுடைய மையமாக்கிக் கொள்ளும் சூஃபிகளின் பாதையில்தான் நாம் பயணிக்க வேண்டும்.
இந்த நூலானது தமிழ் மண்ணின் சூஃபிகளின் படைப்புகளை–அவை சுட்டிக் காட்டும் ஞானக் குறிப்புகளை புரிந்துகொள்ள உதவும் அருஞ்சொற்பொருள் அகராதியாக இருக்கின்றது. முனைவர் முஹம்மது சலீம் அவர்களின் எண்ணென்ப, எழுத்தென்ப ஆகிய மிக முக்கியமான நூல்களுக்குப் பிறகு இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. தக்கலை மெஞ்ஞானி ஷைகு பீர் முஹம்மது அப்பாவின் இலக்கியப் படைப்புகள் குறித்தும் அவற்றில் ஆன்மீகக் கோட்பாடுகள் மற்றும் சமூகப் புரிதல்கள் குறித்ததுமான கட்டுரை ஆகியன குறிப்பிடத்தக்க கட்டுரைகள் ஆகும்.
இவற்றின் மூலமாக நாம் பீரப்பாவை அணுகும்போது
பீரப்பாவின் மெஞ்ஞானப் பாடல்களான,
ஞானப்புகழ்ச்சி
ஞானமணி மாலை
ஞானக்குறம்
ஞான இரத்தினக் குறவஞ்சி
ஞான நடனம்
ஞான முச்சுடர் பதிகங்கள்
ஞான விகட சமத்து
மகரிபத்து மாலை
மெஞ்ஞான அமிர்த கலை
மிகுராசு வளம்
ஈடேற்ற மாலை
பிஸ்மில் குறம்
திருநெறி நீதம்
ஞானத் திறவுகோல்
ஞானக் கண்
ஞானப் பால்
ஞான உலக உருளை
ஞான மலைவளம்
மெஞ்ஞானக் களஞ்சியம்
ஞானப்பூட்டு
ரோசு மீசாக்கு மாலை
ஞான ஆனந்தக் களிப்பு
ஞானச் சரநூல்
ஆகிய பாடல்களைப் புரிந்து கொள்ளவும் அவற்றுடன் இணைந்து இறைத்தேடலின் பாதையில் பயணிக்கவும் உதவியாக இருக்கும்.
அடுத்ததாக நம் தமிழ் மண்ணின் மஹ்மூத் தர்வேஷ் ஹாமீம் முஸ்தஃபாவின் கட்டுரைகள். கன்னியாகுமரி மண்ணின் பிரத்யேக தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் கூறுகளையும் தமிழ் மண்ணின் சூஃபிஸ இலக்கியச் செறிவையும் சமகால அரசியல் சமூகப் போக்குகளின் மீதான அறச்சீற்றத்தையும் ஒருங்கே வெளிப்படுத்தும் முக்கிய ஆளுமையாக அண்ணன் ஹாமீம் முஸ்தஃபா திகழ்கிறார். அவரது அனைத்து படைப்புகளையும் ஒட்டுமொத்தமாக ஆய்வு செய்து ஒரு முழுநாள் ஆய்வரங்கம் நிகழ்த்த வேண்டியது காலத்தின் அவசியமும் இந்த படைப்பாளிக்குக் கொடுக்க வேண்டிய கண்ணியமும் ஆகும்.
மேலும் நூஹ் லெப்பை ஆலிம் அவர்களது வேதபுராணம் தொடர்பான கட்டுரையை தக்கலை பஷீர் எழுதியிருக்கிறார்.
நூஹ் வலியுல்லாஹ் அவர்கள் நிகழ்த்திய கராமத் எனும் அற்புதங்கள் குறித்த கட்டுரையை ரஹ்மத் ராஜகுமாரனும்,
கோட்டாறு ஞானியார் சாகிப் குறித்த கட்டுரையை
சதாவதானி செய்குத்தம்பி பாவலர் அவர்களின் மகனான செந்தாமரை கே.பி.எஸ்.ஹமீது அவர்களும் எழுதியுள்ளானர். நன்னூல் பதிப்பகத்தார் அழகிய முறையில் அச்சிட்டுள்ளனர்.
நன்றி
எல்லாப் புகழும் இறைவனுக்கே
அன்புடன்,
நிஷா மன்சூர்
தொடர்புக்கு–nisha.mansur@gmail.com
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
