Jeyamohan's Blog, page 10
November 17, 2025
பனிவெளி மர்மங்கள்
இப்புத்தகம் சிறுவர்களுக்கான புத்தகம் மட்டுமின்றி நம் அனைவரும் வாசிக்கக் கூடிய புத்தகமே!
இப்புத்தகத்தில் ஆசிரியர் கூறும் கதை அனைத்து விதமான கோட்பாடுகளையும் எடுத்துரைக்கிறார். அறிவியல், மனம், ஆன்மீகம், மனித மாண்பு, பரிணாம வளர்ச்சி, காலநிலை.
பனிமனிதன்:
லடாக்கில் இராணுவப் பணியில் ஈடுபட்டிருந்த போது இராணுவ வீரர்களுக்கு ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடக்கிறது. அவர்களுக்கு வித்தியாசமான ஒரு கால் தடம் தென்படுகிறது. அது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது. ஆனால் இதற்கு முன்பு இது போல ஒரு கால் தடத்தை அவர்கள் பார்த்துள்ளனர் அதை பதிவு செய்துள்ளனர். இதனுடன் முந்தைய பதிவுகளை ஒப்பிடும்போது ஒரே மாதிரியான அடையாளம் உள்ளதால். அது என்ன என்பதை ஆராய முடிவு செய்கின்றனர் அதற்கு பாண்டியன் என்ற அதிகாரை நியமிக்கப்படுகிறார் அவர் இதைப்பற்றி தெரிந்து கொள்ள பயணம் மேற்கொள்கிற இதற்கு உதவியாக ஒரு மருத்துவரை சென்று சந்திக்கிறார்.
ஏனென்றால் அவர் தான் இதைப் போன்ற ஆராய்ச்சிகளில் அறிவு மிகுந்தவர் அவரின் உதவியுடன் ஆராய்ச்சியை மேற்கொள்கின்றனர்.
அவரை சந்திக்க செல்லும் பொழுது அந்த ஊர் அவர் அவருக்கு வித்தியாசமாக இருக்கிறது அங்கு உள்ள வீடுகளும் மக்களும் மக்களின் வாழ்க்கையும். திடீரென அங்கு வாழ்கின்ற ஒருவரின் மகன் காணாமல் போனதனால் அவர் திரும்பி வரும்போது அவரை ஏற்க மறுக்கின்றனர் ஆனால் இவர்கள் வற்புறுத்தியும் அவர்கள் ஏற்க மறுக்கின்றனர் ஏனென்றால் அமானுஷ்யம் இவனை பின்தொடர்ந்து வரும் அது ஊருக்கும் ஆபத்தாகும் என்று அவர்கள் ஒரு மூடநம்பிக்கையில் இருக்கின்றனர். ஆனால் டாக்டரும் பாண்டியனும் அவனை தன் வசம் வைத்துக் கொள்வது என்று முடிவு செய்கின்றனர். அவனுக்கு மருத்துவ உதவிகளும் சேர்ந்து அவனை மீட்கின்றனர்.
அவர்கள் பேசிக் கொண்டிருந்த போதும் விழித்துக் கொண்ட கிம் தான் இது போன்ற உருவத்தை பார்த்ததாகவும் அது தன்னை காப்பாற்றியதாகவும் கூறுகின்றான். இந்த ஆராய்ச்சியில் கிம்மின் உதவி இவர்களுக்கு பலம் சேர்க்கும் என்று அவனையும் இவனுடன் சேர்த்துக் கொள்கின்றனர் மூவரும் சேர்ந்து தேடுதலை மேற்கொள்கின்றனர்.
அப்பொழுது தங்களுக்கு தேவையான உணவு மற்றும் உபகரணங்கள் எடுத்துக்கொண்டு அவர்களின் தேடுதல் தொடங்குகிறது. பயணத்தின் உரையாடலில் டாக்டர் அறிவியல் சார்ந்த விஷயங்களை அங்கே ஏற்படும் சூழ்நிலைகளை வைத்து விளக்குகிறார், கிம்மும் புத்தரின் ஞானங்களை பற்றியும் தத்துவங்களை பற்றியும் கூறுகின்றான், பாண்டியன் தனக்கு தெரிந்த ராணுவ யுத்தத்திகளை மட்டும் பாரதியார் கவிதைகளின் அப்பயணத்தில் பகிர்ந்து கொண்டு அவர்களின் பயணம் தொடர்கிறது.
அவர்கள் பயணிக்கும் பகுதி முழுக்க முழுக்க பனியால் படர்ந்த பகுதி அதனால் அவர்களுக்கு அங்கு ஆபத்து அதிகமாகவே இருந்தது ஆனால் அந்த இடர்பாடுகளை சமாளித்து அதில் இருந்து தப்பித்து அவர்கள் என் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது ஒரு கட்டத்தில் அவர்கள் சில புத்த துருவிகளை பார்க்கின்றனர் அவர்களுடன் உரையாடும் போது தான் தெரிகிறது. அவர்கள் தேடி வந்ததைப் பற்றி கூறுகின்றனர் அவர்களும் அவர்களுக்கான வழியை காட்டுகின்றனர் ஆனால் அப்படி மிகுந்த ஆச்சரியத்தையும் ஆபத்தையும் உள்ளடக்கியதாக என்று இவர்கள் நினைத்துக் கொள்கின்றனர்.
தொடர்ந்து அவர்களின் பயணம் தொடர்கிறது இதில் வித்தியாசமான விலங்குகளையும் வித்தியாசமான சூழ்நிலைகளையும் காலநிலை என் மாற்றங்களையும் அவர்களுக்கு ஆச்சரியத்தையும் அதிசயமாகவும் அவர்கள் உணர்கின்றனர் அவர்களின் பயணமும் நீண்டு கொண்டே போகிறது. இறுதியாக ஒரு மலையின் பகுதியில் அவர்கள் நிற்கும் போது மலையின் வலைவில் உள்ளே ஒரு அடர்ந்த காடு இருக்கிறது அங்கு உள்ளே செல்லும் பொழுது தான் அவர்களுக்கான வித்தியாசமான ஆச்சரியங்கள் காத்துக் கொண்டிருக்கிறது அங்கு பறவைகள் விலங்குகள் எல்லா வகையான உயிரினங்களும் இருக்கிறது ஆனால் அவைகள் பரிணாம வளர்ச்சியில் மாற்றம் அடையாத நிலையில் உள்ள உருவங்களை கொண்டே இருக்கிறது அங்கு திடீரென சில மனிதர்கள் தோன்றுகின்றன அவர்கள் தான் இவர்கள் தேடி வந்த பனி மனிதன்.
அவர்கள் சிந்திக்கும் திறனும் செயல்படும் திறனும் ஒரே மாதிரியாக இருக்கிறது அங்கு சென்று இவர்களுக்கு வரவேற்பும் பலமாக இருக்கிறது அவர்களுடன் இவர்கள் சேர்ந்து லடாக் மொழியில் பேசுகின்றன அவர்களை இவர்கள் மெல்ல மெல்ல புரிந்து கொள்கின்றனர் அந்தப் பகுதி இவர்களுக்கு சில வித்தியாசமான அனுபவங்களையும் அளிக்கின்றது அது இவர்களுக்கு உற்சாகத்தையும் புதுவித உணர்வையும் கொடுக்கிறது அவர்கள் சில நாட்கள் அங்கேயே இருக்கின்றனர்.
அவர்கள் ஏன் இப்படி இருக்கிறார் என்பதை பற்றியும் மற்றும் விலங்குகள் பற்றியும் டாக்டர் விளக்குகிறார். ஒரு கட்டத்தில் அவர்கள் வந்தது நோக்கம் குறித்து அவர்கள் அங்கிருந்து புறப்பட நினைக்கின்றன அவர்களுக்கும் அவர்களிடமிருந்து உணர்வு மூலம் சம்பந்தம் வருகிறது அவர்களும் அங்கிருந்து புறப்படுகின்றனர் மீண்டும் அவர்களது பயணம் தொடர்கின்றது.
இறுதியில் அவர்கள் அங்கு ஆராய்ந்தை என்ன செய்தார்கள் அவர்கள் வழியில் யாரை எல்லாம் சந்தித்தார்கள். கிம் இவர்களுடன் பயணித்தானா. அந்த மூவர்களின் இறுதி முடிவு என்ன ஆனது?
பழனிராஜா
வாசிப்போம் தமிழிலக்கியம் வளர்ப்போம் குழுமம்
உரைகள் வகுப்புகளாக முடியுமா?
I recently watched your video titled “Irresponsibility of Today’s Generation.” I completely agree with your points; however, I believe that parental upbringing, not just technology, also contributes to this generation’s irresponsibility
About our youth…
நீங்கள் வெளியிடும் காணொளிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் .அவற்றில் வேதாந்தம் சார்ந்த காணொளிகள் எனக்கு மிகுந்த ஆர்வத்தை ஊட்டுகின்றன .ஆனால் ஒரு வேதாந்த வகுப்பு என்ற அளவில் கொள்ளத்தக்க காணொளிகள் எதையும் நீங்கள் இதுவரைக்கும் வெளியிடவில்லை.
உரைகள் வகுப்புகளாக முடியுமா?November 16, 2025
மூளையைச் சீண்டுதல்…
சில கணிப்பொறி நிறுவனங்களில் ஊழியர்களை வேலைசெய்யாமல் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு அதில் மறைமுக லாபம் உள்ளது – எங்கோ கணக்கு காட்டுகிறார்கள். ஆனால் சும்மா இருப்பவர்கள் மூளையை தேங்கவைத்துக்கொள்கிறார்கள். அது ஒரு தற்கொலை.
மூளையைச் சீண்டுதல்…
சில கணிப்பொறி நிறுவனங்களில் ஊழியர்களை வேலைசெய்யாமல் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு அதில் மறைமுக லாபம் உள்ளது – எங்கோ கணக்கு காட்டுகிறார்கள். ஆனால் சும்மா இருப்பவர்கள் மூளையை தேங்கவைத்துக்கொள்கிறார்கள். அது ஒரு தற்கொலை.
கூட்டுவாசிப்பு, சாத்தியங்களும் எல்லைகளும்
கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி வெண்முரசு நாவலை குழுவாக வாசிக்கலாம் என திட்டமிட்டு நாங்கள் ஐந்து நண்பர்கள் “முதல் அரும்பு” என்ற கூட்டு வாசிப்பு குழுவை ஆரம்பித்தோம். அதை உங்களிடம் பகிர்ந்திருந்தேன். நீங்கள் உங்கள் தளத்தில் அந்த கடிதத்தை பகிர்ந்திருந்தீர்கள். அதன் பின் மேலும் சிலர் குழுவில் இணைந்தார்கள். இப்பொது பன்னிரண்டு நண்பர்கள் குழுவில் உள்ளனர்.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் முதற்கனல் நாவலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை வாசித்து அதை பற்றிய குழு உரையாடல் மற்றும் விவாதமாக தொடர்ந்தோம். நேற்றோடு (06-09-2025) முதற்கனல் நாவலை வாசித்து முடித்துவிட்டோம். ஒரு மிகுந்த நிறைவோடு கடைசி பகுதியை வாசித்து முடித்தோம். நண்பர் கிரியின் ஆலோசனை படி வேத பாடசாலையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை கற்று முடிக்கும் போது அதன் முதல் வரிகளை வாசித்து வணக்கத்தோடு முடிப்பது போல் வாசித்து முடித்தோம்.
ஒரு பெரிய நாவலை பகுதி பகுதியாக வாசித்து மிக நுண்ணிய பகுதிகளை மேற்கொள்களாக நண்பர்களிடம் விவாதித்து முடிக்கும் போது ஒரு மிகப் பெரிய சித்திரமாக அந்த நாவல் அனைவர் நெஞ்சிலும் விரிந்துள்ளது. இன்னும் ஒரு முறை முதற் கனல் நாவலை வாசித்தாலும் அதில் நாம் உரையாடாமல் விட்ட பகுதிகள் நிறைய இருக்கும் என்று நண்பர்கள் உணர்வோடு ஒத்துக்கொண்டர்கள்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் எங்கு இருந்தாலும் கிடைத்த நேரத்தில் வாசித்து விவாதத்தில் மிக ஆர்வமாக பங்கு கொண்டார்கள். நண்பர்களின் இந்த ஆர்வம் என் போன்றவர்களை மேலும் ஆர்வம் கொள்ள செய்தது. எந்த வயது வேற்றுமையும் இல்லாமல் முத்து சாமி அய்யா, தென்காசி குமார் அய்யா, ஸ்வர்ணா ரவி அம்மா போன்றோர் சிறுவர்களாகிய எங்களிடம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து அதில் சந்தேகம் கேட்டு தெளிவு பெறுவது மிகுந்த உத்வேகத்தைத் தருகிறது.
கற்றல் என்பது எவ்வளவு இனிமையானது, வீரியமைக்கது என்று ஒவ்வொரு சனிக்கிழமையும் உணரமுடிகிறது. மிகுந்த நிறைவோடு முதற்கனல் நாவலை வாசித்து முடித்தோம். வரும் சனிக்கிழமையில் இருந்து மழைப்பாடல் வாசிக்க உள்ளோம்.
இவை அனைத்திற்கும் நீங்கள் தான் ஊற்று. உங்களின் அருகமைவு மேலும் மேலும் எங்களை கற்றலை நோக்கித் தள்ளுகிறது. எங்கள் ஆசிரியருக்கு என்றும் எங்கள் அன்பும் வணக்கங்களும்.
நன்றி
சரவணன் சிவன்ராஜா
அன்புள்ள சரவணன்,
நம் நண்பர்கள் ஒருங்கிணைக்கும் கூட்டுவாசிப்புகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. வெண்முரசுக்காக கூட்டுவாசிப்பு தொடங்கப்பட்டது. வெண்முரசு முடிந்தபின் சிலர் கம்பராமாயணக் கூட்டுவாசிப்பை நிகழ்த்தி அதை முடிக்கும் நிலையில் இருக்கிறார்கள்.
உலகம் முழுக்கவே கூட்டுவாசிப்பு என்பது செவ்வியல் நூல்களைப் பயில்வதற்கான ஒரு வழிமுறையாக உள்ளது. தொடர்ச்சியாக வாசிப்பை நிகழ்த்துவதற்கும் கூட்டுவாசிப்பு உதவுகிறது. ஒருவரின் ஊக்கம் சற்றுத் தளர்ந்தால்கூட இன்னொருவரின் ஊக்கம் அவருக்கு உதவி முன்னெடுத்துச் செல்லும் என்பதே கூட்டுவாசிப்பின் முதல் பயன்.
கூட்டுவாசிப்பு ஒருவரின் வாசிப்பை இன்னொருவரின் வாசிப்பு நிறைக்கிறது என்பதனால்தான் ஊக்குவிக்கப்படுகிறது. நம் வாசிப்பு எத்தனை சிறப்பானதாக இருந்தாலும் இன்னொருவரின் வாசிப்புக்கோணம், அவர் பெற்றுக்கொண்ட அர்த்தம், நமக்குச் சிக்காமல் இருக்கலாம். அவரிடமிருந்து அதைப்பெற்றுக்கொண்டு நம் வாசிப்பு மேலும் கூர்மையடையலாம்.
ஏனென்றால் வாசிப்பு என்பது உண்மையில் வாசகன் கற்பனையில், சிந்தனையில் நிகழ்வது. ஒரு நூல் தன்னளவில் அளிப்பது தகவல்களை, நிகழ்வுகளை, படிமங்களை, கருத்துக்களை மட்டுமே. அவற்றை வாசகன் தன்னுள் நிகழ்த்திக்கொள்ளவேண்டும், தொகுத்துக்கொண்டு வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு நூலைநோக்கிச் செல்லாத வாசகன் அதை இழந்துவிடுவான்.
அப்பயணத்தை நாம் நிகழ்த்திக்கொள்கையில் நமக்குரிய தடைகள் இருக்கலாம். நம்முடைய வாழ்க்கைச்சூழல், நாம் நின்றிருக்கும் அறிவுத்தளம் ஆகியவை நமக்கு ஓர் ஆளுமையை அளிக்கின்றன. அது நம் அடையாளம். ஆனால் அதுவே நமக்கு எல்லையாகவும் ஆகலாம். அந்த வாழ்க்கைச்சூழல், அறிவுத்தளத்துக்கு அப்பாலுள்ளவற்றை நாம் உணரமுடியாமலாகும். அப்போது இன்னொருவரின் வாசிப்பு நமக்கு உதவும். அதன்பொருட்டே கூட்டுவாசிப்பு தேவை.
ஆனால் கூட்டுவாசிப்புக்கான நிபந்தனைகள் சில உள்ளன. கூட்டுவாசிப்பை இணையுள்ளம் கொண்டவர்களின் சிறு குழுமம் ஆக அமைக்கவே நான் எப்போதும் கூறுகிறேன். ஒரு கூட்டுவாசிப்புக் குழுவில் ரசனையம்சமே இல்லாத ஒருவர் இருந்தால்கூட மொத்தமாகவே குளறுபடி உருவாகிவிடும். ஒரே ஒருவர் முழுக்க எதிர்மனநிலையுடன் இருந்தாலும் வாசிப்பே நிகழமுடியாமலாகும். நம் சூழலில் இலக்கியத்தை வெறும் அரசியல்கருத்துக்களாக, அல்லது சமூகக்கருத்துக்களாக மட்டுமே எடுத்துக்கொள்வோர்தான் பெரும்பாலானவர்கள். அரசியல் அல்லது சாரதி அல்லது மதம் சார்ந்த கடும் காழ்ப்புகளையே கருத்துநிலைபாடுகளாகக் கொண்டவர்களும் பலர் உண்டு. அவர்களைத் தவிர்க்காமல் ஒரு நல்ல வாசிப்புக் குழுமம் அமைய முடியாது.
இணையுள்ளம் கொண்ட நண்பர்களுடனான வாசிப்பு- உரையாடலிலும் கூட சில நெறிகள் பேணப்படவேண்டும். அதாவது மட்டுறுத்துநர் தேவை. உதாரணமாக, ஒரு நூலைப் பற்றிய வாசிப்பு- விவாதத்தின்போது அந்நூலில் தொடங்கி எங்கெங்கோ செல்பவர்கள் நம்மிடையே உண்டு. நினைவுகளைச் சொல்வார்கள், தன் அனுபவங்களைச் சொல்வார்கள், சம்பந்தமற்ற வேறு நூல்களையோ சமகால அரசியலையோ சொல்வார்கள். அந்நூல்தான் பேசுபொருள், அதை விட்டு விலகிச் செல்லும் எந்த உரையாடலும் வீண்அரட்டையே.
ஓர் இலக்கிய உரையாடல் தீவிரமாகவே இருந்தாகவேண்டும். நகைச்சுவை, பகடிகள் இருக்கலாம். ஆனால் ‘சில்லறைப்படுத்துதல்’ நிகழக்கூடாது. trivialization என்பது நம் பொதுமனநிலையில் வேரூன்றியது. சினிமாச்செய்திகளைச் சொல்வது. சம்பந்தமில்லாத நகைச்சுவைகளை சொல்வது. சொற்களை திரித்துப் பகடிசெய்வது என பல இயல்புகளை நாம் அரட்டைகளில் காண்கிறோம். நம் மேடைப்பேச்சுக்கள் இந்தவகையான அற்பப்படுத்தல்களால் ஆனவை. அவற்றை ஓர் இலக்கியவிவாதத்தில் அனுமதிக்கலாகாது.
வெண்முரசு நூல்களுக்கு பல விவாதங்கள் முன்னரே நிகழ்ந்துள்ளன. வெண்முரசு விவாதங்கள் என்னும் இணையதளம் உள்ளது. அதில் பல்லாயிரம் கடிதங்கள் உள்ளன. பல கடிதங்கள் தனிப்பட்ட அத்தியாயங்களைக் கூர்ந்து வாசித்து எழுதப்பட்டவை. ஒட்டுமொத்தப்பார்வைகளும் உள்ளன. அவற்றை கருத்தில்கொண்டு வாசிப்பவர் மேலும் ஆழமான பார்வையை அடையமுடியும்.
வெண்முரசு என்றல்ல, எந்நூலையும் அதன் எல்லா சாத்தியக்கூறுகளையும் கருத்தில்கொண்டு வாசிப்பதே நல்ல வாசிப்பாகும். உதாரணமாக, ஒருவர் முதற்கனல் நாவலை வாசிக்கும் ஒருவர் அதிலுள்ள நுணுக்கமான ஓர் ஊடாட்டத்தை கவனித்திருக்கவேண்டும். அதில் துணைக்கதைகளாக வரும் புராணக்கதைகள் அந்நாவலுக்குள் நிகழும் கதைகளுக்கு இணையானவையாக உள்லன. நிகழ்வுகளிலுள்ள ஆழமான சிலவற்றையே அந்த புராணக்கதைகள் குறிப்புணர்த்துகின்றன. தாட்சாயணி கதைக்கும் அம்பை கதைக்கும் உள்ள ஒற்றுமை உதாரணம்.
அத்தகைய பல வாசிப்புகள் உள்ளன. கிராதம் அர்ஜுனனின் பயணம் மட்டுமல்ல, வேதங்கள் தோன்றிய நிலங்களினூடாக செல்லும் வேதத்தைக் கண்டடையும் பயணமும் கூட. அது பாசுபதத்தில் முடிவடைவது அப்போதுதான் பொருளாகும். வெறுமே கதை, கதாபாத்திரங்கள் என வாசித்துச்செல்பவர்கள் அவற்றை தவறவிடக்கூடும். அவற்றை தவறவிடலாகாது என்பதற்காகவே கூட்டுவாசிப்பு பரிந்துரைக்கப்படுகிறது.
ஜெ
கூட்டுவாசிப்பு, சாத்தியங்களும் எல்லைகளும்
கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி வெண்முரசு நாவலை குழுவாக வாசிக்கலாம் என திட்டமிட்டு நாங்கள் ஐந்து நண்பர்கள் “முதல் அரும்பு” என்ற கூட்டு வாசிப்பு குழுவை ஆரம்பித்தோம். அதை உங்களிடம் பகிர்ந்திருந்தேன். நீங்கள் உங்கள் தளத்தில் அந்த கடிதத்தை பகிர்ந்திருந்தீர்கள். அதன் பின் மேலும் சிலர் குழுவில் இணைந்தார்கள். இப்பொது பன்னிரண்டு நண்பர்கள் குழுவில் உள்ளனர்.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் முதற்கனல் நாவலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை வாசித்து அதை பற்றிய குழு உரையாடல் மற்றும் விவாதமாக தொடர்ந்தோம். நேற்றோடு (06-09-2025) முதற்கனல் நாவலை வாசித்து முடித்துவிட்டோம். ஒரு மிகுந்த நிறைவோடு கடைசி பகுதியை வாசித்து முடித்தோம். நண்பர் கிரியின் ஆலோசனை படி வேத பாடசாலையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை கற்று முடிக்கும் போது அதன் முதல் வரிகளை வாசித்து வணக்கத்தோடு முடிப்பது போல் வாசித்து முடித்தோம்.
ஒரு பெரிய நாவலை பகுதி பகுதியாக வாசித்து மிக நுண்ணிய பகுதிகளை மேற்கொள்களாக நண்பர்களிடம் விவாதித்து முடிக்கும் போது ஒரு மிகப் பெரிய சித்திரமாக அந்த நாவல் அனைவர் நெஞ்சிலும் விரிந்துள்ளது. இன்னும் ஒரு முறை முதற் கனல் நாவலை வாசித்தாலும் அதில் நாம் உரையாடாமல் விட்ட பகுதிகள் நிறைய இருக்கும் என்று நண்பர்கள் உணர்வோடு ஒத்துக்கொண்டர்கள்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் எங்கு இருந்தாலும் கிடைத்த நேரத்தில் வாசித்து விவாதத்தில் மிக ஆர்வமாக பங்கு கொண்டார்கள். நண்பர்களின் இந்த ஆர்வம் என் போன்றவர்களை மேலும் ஆர்வம் கொள்ள செய்தது. எந்த வயது வேற்றுமையும் இல்லாமல் முத்து சாமி அய்யா, தென்காசி குமார் அய்யா, ஸ்வர்ணா ரவி அம்மா போன்றோர் சிறுவர்களாகிய எங்களிடம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து அதில் சந்தேகம் கேட்டு தெளிவு பெறுவது மிகுந்த உத்வேகத்தைத் தருகிறது.
கற்றல் என்பது எவ்வளவு இனிமையானது, வீரியமைக்கது என்று ஒவ்வொரு சனிக்கிழமையும் உணரமுடிகிறது. மிகுந்த நிறைவோடு முதற்கனல் நாவலை வாசித்து முடித்தோம். வரும் சனிக்கிழமையில் இருந்து மழைப்பாடல் வாசிக்க உள்ளோம்.
இவை அனைத்திற்கும் நீங்கள் தான் ஊற்று. உங்களின் அருகமைவு மேலும் மேலும் எங்களை கற்றலை நோக்கித் தள்ளுகிறது. எங்கள் ஆசிரியருக்கு என்றும் எங்கள் அன்பும் வணக்கங்களும்.
நன்றி
சரவணன் சிவன்ராஜா
அன்புள்ள சரவணன்,
நம் நண்பர்கள் ஒருங்கிணைக்கும் கூட்டுவாசிப்புகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. வெண்முரசுக்காக கூட்டுவாசிப்பு தொடங்கப்பட்டது. வெண்முரசு முடிந்தபின் சிலர் கம்பராமாயணக் கூட்டுவாசிப்பை நிகழ்த்தி அதை முடிக்கும் நிலையில் இருக்கிறார்கள்.
உலகம் முழுக்கவே கூட்டுவாசிப்பு என்பது செவ்வியல் நூல்களைப் பயில்வதற்கான ஒரு வழிமுறையாக உள்ளது. தொடர்ச்சியாக வாசிப்பை நிகழ்த்துவதற்கும் கூட்டுவாசிப்பு உதவுகிறது. ஒருவரின் ஊக்கம் சற்றுத் தளர்ந்தால்கூட இன்னொருவரின் ஊக்கம் அவருக்கு உதவி முன்னெடுத்துச் செல்லும் என்பதே கூட்டுவாசிப்பின் முதல் பயன்.
கூட்டுவாசிப்பு ஒருவரின் வாசிப்பை இன்னொருவரின் வாசிப்பு நிறைக்கிறது என்பதனால்தான் ஊக்குவிக்கப்படுகிறது. நம் வாசிப்பு எத்தனை சிறப்பானதாக இருந்தாலும் இன்னொருவரின் வாசிப்புக்கோணம், அவர் பெற்றுக்கொண்ட அர்த்தம், நமக்குச் சிக்காமல் இருக்கலாம். அவரிடமிருந்து அதைப்பெற்றுக்கொண்டு நம் வாசிப்பு மேலும் கூர்மையடையலாம்.
ஏனென்றால் வாசிப்பு என்பது உண்மையில் வாசகன் கற்பனையில், சிந்தனையில் நிகழ்வது. ஒரு நூல் தன்னளவில் அளிப்பது தகவல்களை, நிகழ்வுகளை, படிமங்களை, கருத்துக்களை மட்டுமே. அவற்றை வாசகன் தன்னுள் நிகழ்த்திக்கொள்ளவேண்டும், தொகுத்துக்கொண்டு வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு நூலைநோக்கிச் செல்லாத வாசகன் அதை இழந்துவிடுவான்.
அப்பயணத்தை நாம் நிகழ்த்திக்கொள்கையில் நமக்குரிய தடைகள் இருக்கலாம். நம்முடைய வாழ்க்கைச்சூழல், நாம் நின்றிருக்கும் அறிவுத்தளம் ஆகியவை நமக்கு ஓர் ஆளுமையை அளிக்கின்றன. அது நம் அடையாளம். ஆனால் அதுவே நமக்கு எல்லையாகவும் ஆகலாம். அந்த வாழ்க்கைச்சூழல், அறிவுத்தளத்துக்கு அப்பாலுள்ளவற்றை நாம் உணரமுடியாமலாகும். அப்போது இன்னொருவரின் வாசிப்பு நமக்கு உதவும். அதன்பொருட்டே கூட்டுவாசிப்பு தேவை.
ஆனால் கூட்டுவாசிப்புக்கான நிபந்தனைகள் சில உள்ளன. கூட்டுவாசிப்பை இணையுள்ளம் கொண்டவர்களின் சிறு குழுமம் ஆக அமைக்கவே நான் எப்போதும் கூறுகிறேன். ஒரு கூட்டுவாசிப்புக் குழுவில் ரசனையம்சமே இல்லாத ஒருவர் இருந்தால்கூட மொத்தமாகவே குளறுபடி உருவாகிவிடும். ஒரே ஒருவர் முழுக்க எதிர்மனநிலையுடன் இருந்தாலும் வாசிப்பே நிகழமுடியாமலாகும். நம் சூழலில் இலக்கியத்தை வெறும் அரசியல்கருத்துக்களாக, அல்லது சமூகக்கருத்துக்களாக மட்டுமே எடுத்துக்கொள்வோர்தான் பெரும்பாலானவர்கள். அரசியல் அல்லது சாரதி அல்லது மதம் சார்ந்த கடும் காழ்ப்புகளையே கருத்துநிலைபாடுகளாகக் கொண்டவர்களும் பலர் உண்டு. அவர்களைத் தவிர்க்காமல் ஒரு நல்ல வாசிப்புக் குழுமம் அமைய முடியாது.
இணையுள்ளம் கொண்ட நண்பர்களுடனான வாசிப்பு- உரையாடலிலும் கூட சில நெறிகள் பேணப்படவேண்டும். அதாவது மட்டுறுத்துநர் தேவை. உதாரணமாக, ஒரு நூலைப் பற்றிய வாசிப்பு- விவாதத்தின்போது அந்நூலில் தொடங்கி எங்கெங்கோ செல்பவர்கள் நம்மிடையே உண்டு. நினைவுகளைச் சொல்வார்கள், தன் அனுபவங்களைச் சொல்வார்கள், சம்பந்தமற்ற வேறு நூல்களையோ சமகால அரசியலையோ சொல்வார்கள். அந்நூல்தான் பேசுபொருள், அதை விட்டு விலகிச் செல்லும் எந்த உரையாடலும் வீண்அரட்டையே.
ஓர் இலக்கிய உரையாடல் தீவிரமாகவே இருந்தாகவேண்டும். நகைச்சுவை, பகடிகள் இருக்கலாம். ஆனால் ‘சில்லறைப்படுத்துதல்’ நிகழக்கூடாது. trivialization என்பது நம் பொதுமனநிலையில் வேரூன்றியது. சினிமாச்செய்திகளைச் சொல்வது. சம்பந்தமில்லாத நகைச்சுவைகளை சொல்வது. சொற்களை திரித்துப் பகடிசெய்வது என பல இயல்புகளை நாம் அரட்டைகளில் காண்கிறோம். நம் மேடைப்பேச்சுக்கள் இந்தவகையான அற்பப்படுத்தல்களால் ஆனவை. அவற்றை ஓர் இலக்கியவிவாதத்தில் அனுமதிக்கலாகாது.
வெண்முரசு நூல்களுக்கு பல விவாதங்கள் முன்னரே நிகழ்ந்துள்ளன. வெண்முரசு விவாதங்கள் என்னும் இணையதளம் உள்ளது. அதில் பல்லாயிரம் கடிதங்கள் உள்ளன. பல கடிதங்கள் தனிப்பட்ட அத்தியாயங்களைக் கூர்ந்து வாசித்து எழுதப்பட்டவை. ஒட்டுமொத்தப்பார்வைகளும் உள்ளன. அவற்றை கருத்தில்கொண்டு வாசிப்பவர் மேலும் ஆழமான பார்வையை அடையமுடியும்.
வெண்முரசு என்றல்ல, எந்நூலையும் அதன் எல்லா சாத்தியக்கூறுகளையும் கருத்தில்கொண்டு வாசிப்பதே நல்ல வாசிப்பாகும். உதாரணமாக, ஒருவர் முதற்கனல் நாவலை வாசிக்கும் ஒருவர் அதிலுள்ள நுணுக்கமான ஓர் ஊடாட்டத்தை கவனித்திருக்கவேண்டும். அதில் துணைக்கதைகளாக வரும் புராணக்கதைகள் அந்நாவலுக்குள் நிகழும் கதைகளுக்கு இணையானவையாக உள்லன. நிகழ்வுகளிலுள்ள ஆழமான சிலவற்றையே அந்த புராணக்கதைகள் குறிப்புணர்த்துகின்றன. தாட்சாயணி கதைக்கும் அம்பை கதைக்கும் உள்ள ஒற்றுமை உதாரணம்.
அத்தகைய பல வாசிப்புகள் உள்ளன. கிராதம் அர்ஜுனனின் பயணம் மட்டுமல்ல, வேதங்கள் தோன்றிய நிலங்களினூடாக செல்லும் வேதத்தைக் கண்டடையும் பயணமும் கூட. அது பாசுபதத்தில் முடிவடைவது அப்போதுதான் பொருளாகும். வெறுமே கதை, கதாபாத்திரங்கள் என வாசித்துச்செல்பவர்கள் அவற்றை தவறவிடக்கூடும். அவற்றை தவறவிடலாகாது என்பதற்காகவே கூட்டுவாசிப்பு பரிந்துரைக்கப்படுகிறது.
ஜெ
சார்வாகன்
தொழுநோய் அறுவைச் சிகிச்சை மருத்துவர். தமிழின் குறிப்பிடத்தக்கச் சிறுகதையாசிரியர்களில் ஒருவர். கவிதைகளும் எழுதியிருக்கிறார். தனது மருத்துவப் பணிக்காக இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றார். தொழுநோயாளிகளின் தசைகளை செம்மை செய்வதற்கான புதிய அறுவைசிகிச்சை முறையைக் கண்டடைந்தவர் என்னும் வகையில் மருத்துவ அறிவியலின் முக்கியமான பங்களிப்பாற்றியவர்.
சார்வாகன் – தமிழ் விக்கி
சார்வாகன்
தொழுநோய் அறுவைச் சிகிச்சை மருத்துவர். தமிழின் குறிப்பிடத்தக்கச் சிறுகதையாசிரியர்களில் ஒருவர். கவிதைகளும் எழுதியிருக்கிறார். தனது மருத்துவப் பணிக்காக இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றார். தொழுநோயாளிகளின் தசைகளை செம்மை செய்வதற்கான புதிய அறுவைசிகிச்சை முறையைக் கண்டடைந்தவர் என்னும் வகையில் மருத்துவ அறிவியலின் முக்கியமான பங்களிப்பாற்றியவர்.
சார்வாகன் – தமிழ் விக்கி
சத்தியம், வன்முறை- முத்து
வன்முறை, நம் சுயத்தையும் அதனுடன் பிணைந்திருக்கும் சத்தியத்தையும் உணர்வதில் இருந்து நம்மை வெகுவாக விலக்கி வைத்துவிடும் என்கிறார். மனித உடலின் மேல் ஏற்படும் ஒரு பரிதாப உணர்வு அல்லது கரிசனம் என்றும் இதை நம்மால் உணர முடிகிறது. தன் சுயத்தையும், சத்யத்தையும் உணர்வதிலிருந்து விலகியிருக்கும் சமூகத்தில் சத்யாகிரகமும், அதனால் விளையும் சுயராஜ்யமும் சாத்தியமில்லை என்ற ஆழமான நம்பிக்கையே, சாமானியர்களால் கோழைகளின் ஆயுதம் எனக் பரிகசிக்கப்படும் அஹிம்சை காந்தியின் ஆயுதமானது.
சத்தியம், வன்முறை- முத்து
வன்முறை, நம் சுயத்தையும் அதனுடன் பிணைந்திருக்கும் சத்தியத்தையும் உணர்வதில் இருந்து நம்மை வெகுவாக விலக்கி வைத்துவிடும் என்கிறார். மனித உடலின் மேல் ஏற்படும் ஒரு பரிதாப உணர்வு அல்லது கரிசனம் என்றும் இதை நம்மால் உணர முடிகிறது. தன் சுயத்தையும், சத்யத்தையும் உணர்வதிலிருந்து விலகியிருக்கும் சமூகத்தில் சத்யாகிரகமும், அதனால் விளையும் சுயராஜ்யமும் சாத்தியமில்லை என்ற ஆழமான நம்பிக்கையே, சாமானியர்களால் கோழைகளின் ஆயுதம் எனக் பரிகசிக்கப்படும் அஹிம்சை காந்தியின் ஆயுதமானது.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers


