S. Ramakrishnan's Blog, page 52
October 14, 2023
எஸ்.ரா -நூறு – கதைகளின் பட்டியல்
அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம் சார்பில் நடைபெற்ற எஸ்.ரா கதைகள் நூறு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட கதைகளின் பட்டியல்

இணைய வழி நிகழ்வு – பேசப்பட்ட கதைகள்
1 புத்தனாவது சுலபம்
3 பிழை திருத்துபவரின் மனைவி
4 நடந்து செல்லும் நீரூற்று
5 கதவைத் தட்டிய கதை
6 அம்மா
7 அப்பா புகைக்கிறார்
8 பேசும் கற்கள்
9 அவளது வீடு
10 பீங்கான் நாரைகள்(மூன்று குடும்பங்களின் கதை)
11 இல்மொழி
12 சொர்ணத்து ஆச்சிக்கு மன்மோகன் சிங்கைப் பிடிக்காது-
13 அவர் பெயர் முக்கியமில்லை
14 உடலறிதல்
15 தாவரங்களின் உரையாடல்-
16 மூன்று குடும்பங்களின் கதை
17 காதல் மரம்-
18 பழைய தண்டவாளம்
19 பிடாரனின் மகள்
20 சிறகின் விலை
21 அப்பாவின் பெயர்
22 பாதம் –
23 காதுள்ள கடவுள்
24 குதிரைகள் பேச மறுக்கின்றன
25 சாக்பீஸ் ருசி
26 ஜெயந்திக்கு ஞாயிற்றுக்கிழமை பிடிப்பதில்லை
27 இடம்பெயர்தல்
28 வெயிலைக் கொண்டு வாருங்கள்-
29 தேவகியின் தேர்
30 உடலின் அலைகள்-
31 இன்னொரு ஞாயிற்றுக்கிழமை
32 விரும்பிக் கேட்டவள்
33 ஆண்கள் தெருவில் ஒரு வீடு
34 அம்மாவின் புத்தகம்
35 அம்மாவின் கடைசி நீச்சல்
36 அலையின் உயரம்
37 எல்லா நாட்களையும் போல
38 பெயரில்லாத கரப்பான்பூச்சி
39 கல்யாணி இருந்த வீடு
40 முகமது அலியின் கையெழுத்து
41 பொய்த் தொண்டை
42 கழுவேற்றம்-
43 வீட்டு ஆணி-
44 அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது
45 காலத்தின் குரல்
46 கண்ணீர் பூட்டு
47 உறுமீன்
48 கோபத்தின் எடை
49 எதிர்பார்த்த முகம்
50 கனவை விதைப்பவள்
51 பேசும் மீன்
52 வெளியில் ஒருவன்-
53 சிறுதுயர்
54 கூந்தலில் எரிந்த நெருப்பு
55 மிருகத்தனம்
57 இரவுக் காவலாளியின் தனிமை
58 பரிவானது வீடு
59 புகையும் புத்தகம்
60 காந்தியோடு பேசுவேன்
61 இரண்டு ஜப்பானியர்கள்
62 இரண்டு குமிழ்கள் ,
63 வெறும் கணக்கு
64 கேள்வியின் நிழல்
65 வெறும் கணக்கு
66 மழைப் பயணி
67 தன்னைக் கடந்தவர்
68 புறாப்பித்து
69 வானில் எவருமில்லை
70 ஐந்து வருட மௌனம்
71 சிற்றிதழ்
72 வலது கன்னம்
73 பப்புவின் காலணி
74 இருகை ஓசை
75 உறவும் பிரிவும் இன்றி
76 கடைசிக் குதிரைவண்டி
77 நிழல் வனம்
78 சௌந்தர வல்லியின் மீசை
79 என்ன சொல்கிறாய் சுடரே
80 நீலாம்பூர் சென்றவன்-
81 யாரோ எழுதிய கடிதம்
82 காந்தியைச் சுமப்பவர்கள்-
83 வழி
84 அந்தரம்-
85 தர்ம கீர்த்தியின் மயில்கள்
86 குற்றத்தின் பாதை
87 ஷெர்லி அப்படித்தான்-
88 சேவற்குரலோன்
89 வெயிலைக் கொண்டு வாருங்கள்
90 சிவப்பு மச்சம்
91 உப்பு வயல்
92 மிகு காமம்
93 தலைகீழ் அருவி
94 உனக்கு 34 வயதாகிறது
95 மலைப்பாம்பின் கண்கள்
96 கற்பனைச் சேவல்
97 சித்ரலேகாவின் வகுப்பறை .
98 மின்சார மனிதன்
99 சைக்கிள் கமலத்தின் தங்கை
100 இரண்டும் கப்பல்தான்
101 இரட்டைத் தலை
102 வடு
103 திருடனின் மூன்று அற்புதங்கள்
104 மழை எறும்பு
105 காட்சிக் கூண்டு
106 காகிதப் பறவைகள்
108 ஒண்டிக்கட்டை
109 உடைவாள்
110 எழுதத்தெரிந்த புலி
111 வராத ரயில்-
112 சித்திர மீன்
113 ஞாபகக்கல்
114 பெரிய தேசை
115 கிணற்றின் வயது
எஸ்.ரா கதைகள் -நூறு – பங்கேற்றவர்கள் -5
அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம் சார்பில் நடைபெற்ற எஸ்.ரா கதைகள் நூறு நிகழ்வில் பங்குபெற்றவர்களின் பட்டியல்



இந்த நிகழ்வில் ஒரு சில சிறுகதைகள் குறித்து இரண்டு பேர் உரையாற்றியிருக்கிறார்கள். இன்னும் நிறைய வாசகர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டும் என ஆசையோடு காத்திருக்கிறார்கள். சிறிது இடைவெளிக்குப் பின்பு இதன் அடுத்த கட்ட நிகழ்வு நடைபெறும்.
••
எஸ்.ரா கதைகள் -நூறு – பங்கேற்றவர்கள் -4
அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம் சார்பில் நடைபெற்ற எஸ்.ரா கதைகள் நூறு நிகழ்வில் பங்குபெற்றவர்களின் பட்டியல்




எஸ்.ரா கதைகள் -நூறு – பங்கேற்றவர்கள் -3
அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம் சார்பில் நடைபெற்ற எஸ்.ரா கதைகள் நூறு நிகழ்வில் பங்குபெற்றவர்களின் பட்டியல்



எஸ்.ரா கதைகள் -நூறு – பங்கேற்றவர்கள் -2
அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம் சார்பில் நடைபெற்ற எஸ்.ரா கதைகள் நூறு நிகழ்வில் பங்குபெற்றவர்களின் பட்டியல்



எஸ்.ரா கதைகள் -நூறு – பங்கேற்றவர்கள் -1
அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம் சார்பில் நடைபெற்ற எஸ்.ரா கதைகள் நூறு நிகழ்வில் பங்குபெற்றவர்களின் பட்டியல்





எஸ்.ரா கதைகள் -நூறு
எஸ் ரா கதைகள் -நூறு என எனது சிறுகதைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இணைய வழியாக நடைபெற்ற இந்த அறிமுக உரைகள் மிகச் சிறப்பாக நடந்தேறியுள்ளன. ‘
இதுவரை நூறு சிறுகதைகளுக்கும் மேலாகவே அறிமுகவுரை நிகழ்த்தியுள்ளார்கள். தமிழ்ப் பேராசிரியர்கள், இலக்கிய ஆர்வலர்கள். எழுத்தாளர்கள் துவங்கி பள்ளி மாணவி வரை இதில் பங்கு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பெரிய பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்து நடத்த வேண்டிய நிகழ்வை அஞ்சிறைத்தும்பி இலக்கிய அமைப்பின் வழியே நடத்திக் காட்டி சாதனை புரிந்துள்ளார் பேராசிரியர் வினோத். அவருக்கும் அஞ்சிறைத் தும்பி இலக்கிய வட்டம் அமைப்பிற்கும், நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களும்.
இப்படி ஒரு நிகழ்வு இதுவரை எந்தப் படைப்பாளிக்கும் நடந்ததில்லை. அதுவும் நூறு சிறுகதைகளை வாசகர்களே தேர்வு செய்து அறிமுகம் செய்வது பாராட்டிற்குரிய செயல். எனது முதல் சிறுகதைத்தொகுப்பிலிருந்து சமீபத்திய சிறுகதைத் தொகுப்பு வரை வாசித்து சிறந்த கதைகளைத் தேர்வு செய்திருக்கிறார்கள் என்பது மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது.
சிறுகதை படிப்பவர்கள் குறைந்துவிட்டார்கள் என்று பொதுவெளியில் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அது பொய் என்பதை இந்த நிகழ்வு நிரூபித்திருக்கிறது.
நல்ல சிறுகதைகளைத் தேடிப்படிப்பதோடு அதை சிறந்த முறையில் அறிமுகம் செய்து வைக்கிறார்கள் என்பது மிகுந்த நம்பிக்கைக் குரிய செயல்பாடு. இந்த நிகழ்வில் தமிழ்ப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், இளைஞர்கள் அதிகம் கலந்து கொண்டு உரையாற்றி யிருக்கிறார்கள். நவீன தமிழ் இலக்கியத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள அன்பையே அது வெளிப்படுத்துகிறது. அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.
இந்த உரைகள் யாவும் முறையாகத் தொகுக்கப்பட்டு யூடியூப் சேனலில் தனிவரிசையாக வெளியிடப்படும்.
இன்று மாலை இணைய வழியே நடைபெறும் நிகழ்வின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.
அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

Topic: எஸ்.ரா கதைகள் -100
Time : 4pm
Join Zoom Meetinghttps://us04web.zoom.us/j/74619738004?pwd=EiAaxrgfwgNGkbxh5FbaLDjlAW3NVR.1
Meeting ID: 746 1973 8004 Passcode: 5Qu0uT
கடலோடு சண்டையிடும் மீன்
சிறார்களுக்காக நான் எழுதிய கதைகளின் தொகுப்பு கடலோடு சண்டையிடும் மீன்.
கடலோடு சண்டையிடும் மீன், நீளநாக்கு, பம்பாழபம், லாலி பாலே என சிறுவெளியீடுகளாக வந்த நான்கு சிறார்கதைகளைத் தொகுத்து ஒரே நூலாக வெளியிடுகிறோம்.
தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது.
சிறுபத்திரிக்கையின் குரல்
Little Magazine Voices வங்காளத்திலுள்ள சிறுபத்திரிக்கைக் கலாச்சாரம் பற்றிய ஆவணப்படம். வங்காளத்தில் நிலவும் சிறுபத்திரிக்கைச் சூழல் அதன் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள். புத்தகக் கடைகள் பற்றிய இந்த ஆவணப்படம் சிறப்பாக உருவாக்கபட்டுள்ளது.
குறிப்பாக சமகால வங்காள இலக்கியம் மற்றும் அறிவுசார் பண்பாட்டின் முக்கியத்துவம் பற்றிப் பேசுகிறது .
தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு சிறுபத்திரிக்கைகள் ஆற்றிய பங்கு முக்கியமானது. மிகச்சிறந்த படைப்பாளிகள் சிறுபத்திரிக்கையிலிருந்து உருவானவர்களே. சிறந்த மொழிபெயர்ப்புகள். புனைகதைகள். கவிதைகளை சிறுபத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன. அதனை நடத்திய எழுத்தாளர்கள் நண்பர்களின் பொருளாதார உதவியோடு இதழை நடத்தி நஷ்டப்பட்டார்கள். ஆனால் அவர்களின் வழியே தான் இலக்கியத்தின் புதிய பாதை உருவாக்கபட்டது.
நான் எழுத வந்த காலத்தில் சிறுபத்திரிக்கைகள் தீவிரமாக செயல்பட்டு வந்தன. நானே அட்சரம் என்ற சிறுபத்திரிக்கையை நடத்தியிருக்கிறேன். இந்த ஆவணப்படம் அந்த நாட்களை நினைவுபடுத்தியது.
October 13, 2023
அரவான் புதிய பதிப்பு
தேசாந்திரி பதிப்பகம் சார்பில் எனது அரவான் நாடகத்தொகுப்பு புதிய பதிப்பாக வெளியாகிறது
அரவான் நாடகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ஓரியண்ட் பிளாக்ஸ்வான் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நாடகம் ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியில் பாடமாகவும் வைக்கப்பட்டிருந்தது.
இந்த தொகுப்பில் ஒன்பது நாடகங்கள் இடம்பெற்றுள்ளன.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

