Jeyamohan's Blog, page 31
October 6, 2025
அஞ்சலி- நடன காசிநாதன்
தொல்லியல் துறை அறிஞர். வரலாற்றாய்வாளர். கல்வெட்டியல் ஆய்வாளர் நடன காசிநாதன் மறைந்தார். தொல்பொருள் துறை இயக்குநராகப் பணியாற்றினார். தமிழ்நாட்டில் பல்வேறு வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். ’வரலாற்றுப் பேரறிஞர்’ விருது, தமிழக அரசின் உ.வே.சா. விருது உள்படப் பல்வேறு விருதுகளை, பட்டங்களைப் பெற்றார்.
October 5, 2025
விஜய், கரூர், எழுத்தாளர்கள்
அன்புள்ள ஜெ,
உங்கள் நண்பரும் எழுத்தாளருமான சி.சரவண கார்த்திகேயன் எழுதிய குறிப்பு இது. ஏறத்தாழ இதே போன்ற ஒரு குறிப்பை உங்கள் நண்பர் அரவிந்தன் கண்ணையன் அவர்களும் இணையத்தில் எழுதியிருக்கிறார்.
உங்களை முகநூல் விவாதத்திற்குள் நான் இருக்க விரும்பவில்லை. ஆனால் எழுத்தாளரின் சமூகப் பொறுப்பு, எழுத்தாளர் சொல்ல வேண்டிய கருத்து பற்றி நீங்கள் ஒரு கட்டுரை எழுதியதைக் கண்டேன். அதன் தொடர்ச்சியாக எழுத்தாளர் எங்கு எப்போது எதிர்வினை ஆற்றலாம் என்று நினைக்கிறீர்கள் என்றும் எழுத்தாளர்கள் இந்த எதிர்வினை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றும் நீங்கள் கூற வேண்டும் என்று விரும்புகிறேன் .
இந்த குறிப்பிட்ட நிகழ்வு பற்றி அல்ல நான் கேட்பது. பொதுவாக இந்த விஷயத்தில் உங்களுடைய நிலைப்பாடு என்ன என்று அறிய விரும்புகிறேன்.
ஜெ.ஆர். கார்த்திக் சுரேஷ்குமார்
சி.சரவணக்கார்த்திகேயன் பதிவு
கரூர் பரப்புரைச் சாவுகள் விவகாரத்தில் எழுத்தாளர்கள் தனித்தனியாக அரசை நோக்கியோ தவெகவை நோக்கியோ விரல் நீட்டி விமர்சிக்கலாம், கோரிக்கைகள் வைக்கலாம். அது அவர்களின் கருத்துச் சுதந்திரம். ஆனால் இப்போது எழுத்தாளர்கள் என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் நின்று இச்சம்பவத்துக்கு எதிர்வினையாற்ற வேண்டிய அவசியம்தான் என்ன?
ஓர் அரச அத்துமீறல் நடந்திருந்தால் அதைக் கண்டிக்கும் முகமாக எழுத்தாளர்கள் ஒன்று திரளலாம். அல்லது ஒடுக்கப்பட்டோர் மீதான அத்துமீறல் யாரும் செய்திருந்தால் அதில் எழுத்தாளர்கள் நுழைந்து நீதி கோரலாம். அல்லது ஓர் அரசை வீழ்த்தவோ ஓர் அமைப்பைப் புறக்கணிக்கவோ மக்களை நோக்கி எழுத்தாளர்கள் பேசலாம். அல்லது ஒரு புதிய சட்டத்தையோ வரப்போகும் போரையோ வேண்டாமென எழுத்தாளர்கள் எதிர்க்கலாம். இவற்றைப் பொதுமைப்படுத்திப் பார்த்தால் பாதிக்கப்பட்டோருக்கான குரலாக எழுத்தாளர்கள் கூட்டாக நிற்பதுதான் நானறிந்து இதற்கு முன் நடந்திருக்கிறது.
அதற்கு ஒரு வலுவான தேவை இருக்கிறது. அது மாற்றத்தை நிகழ்த்தும் என்பது தாண்டி ஒரு நிகழ்வில் ஒரு நிலத்தின் பெரும்பான்மை அறிவுஜீவித் தரப்பின் நிலைப்பாடு என்ன என்பதும் வரலாற்றில் அதன் வழியே பதிவாகிறது. எனவே அதைச் செய்கையில் அவர்கள் மீது ஒரு மரியாதை எழுகிறது. அதற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது.
மாறாக, இந்தச் சம்பவத்தில் இரு தரப்பும் ஒருவர் மீது மற்றவர் மாற்றி மாற்றிக் குற்றம் சொல்கிறார்கள். முழுக்கவே இரு பக்கமும் அரசியல்தான் நடக்கிறது. எதன் வழியேனும் தேர்தல் மைலேஜ் எடுக்கப் பார்க்கிறார்கள். தவெக தரப்பு கூடுதல் கேவலமாக நடந்து கொள்கிறது என்பது மட்டும்தான் வித்தியாசம். இதில் எதற்கு இடையே புகுந்து ஒட்டுமொத்த தமிழ் எழுத்தாளர் சமூகம் கருத்து சொல்ல வேண்டும்? இதில் பாதிக்கப்பட்ட தரப்புதான் என்ன? என்ன தீர்வை எதிர்பார்க்கிறார்கள் எழுத்தாளர்கள்? Not a convincing problem statement. நிஜமாகவே இதன் dynamics, இதன் தாத்பர்யம் இரண்டும் விளங்கவில்லை.
இம்மாதிரி ஆர்வங்கள் எழுத்தாளர்கள் என்ற குழுமத்தின் தீவிரத்தை, அடர்த்தியை நீர்க்கச் செய்வதாகாதா? இதுதான் கலைஞர்கள் கூட்டமைப்பின் கடமையா? ஒருவேளை ஹேமமாலினி தலைமையிலான பாஜக எம்பிக்கள் குழுவுக்கான எதிர்வினையா?
அன்புள்ள கார்த்திக்,
கடந்த காலத்தில் தமிழ் எழுத்தாளர்கள் பொதுவாக அரசியல் மற்றும் ச்மூக விஷயங்களில் கருத்துக்கள சொல்வது இல்லை. எழுத்தாளர்கள இரண்டு வகை. அவர்களில் அன்று பெரும் முக்கியத்துவம் அடைந்து மக்கள் செல்வாக்குடன் இருந்த வணிக -கேளிக்கை எழுத்தாளர்கள் பொதுவாக எந்த அரசியல் சமூக விஷயங்களிலும் எந்த வகையான கருத்தும் சொல்லாமல் இருப்பதுதான் தமிழ் மரபு. ஏனெனில் அவர்கள் எல்லா அரசியல் தரப்புகளையும், எல்லா அதிகார மையங்களையும் நயந்து செல்ல வேண்டிய இடத்தில் இருந்தார்கள். சென்ற காலங்களில் சுஜாதா, பாலகுமாரன் தொடங்கி அனைவருமே எந்த மேடையிலும் எவரையும் சென்று புகழ்ந்து பேசுபவர்களாகவே திகழ்ந்தனர். காரணம், அவர்கள் பெருநிறுவனங்களை அண்டி எழுத வேண்டிய கட்டாயத்தில் இருந்தவர்கள்.செல்வாக்குள்ள எவரையும் பகைத்துக் கொள்ளும் ‘ஆடம்பரம்’ அவர்களுக்கு இருக்கவில்லை.
மிகச் சிறந்த முன்னுதாரணம் வாலி. அவர் ஆதரித்து புகழ்பாடாத எவருமே தமிழகத்தில் இல்லை. வைரமுத்து இன்று அதே முகத்துடன்தான் இருக்கிறார். பாரதிய ஜனதாவின் மேடைக்கு செல்வதிலும் திமுக மேடைக்கு செல்வதிலும் அவருக்கு எந்த வேறுபாடும் இல்லை. இவ்வாறு எழுத்தாளர்கள் இருப்பது தமிழ்ச் சூழலால் அங்கீகரிக்கவும் படுகிறது. வைரமுத்து மோடியை மொழிபெயர்ப்பதிலும், கூடவே திமுக ஆதரவாளர் போல பேசுவதிலும், தமிழரசி நடராஜனின் நெருங்கி நண்பராக இருந்து ஜெயலலிதாவின் புகழ் பாடியதிலும் எந்த முரண்பாடும் இன்றுள்ள வாசகர்களோ அறிவுஜீவிகளோ காண்பதில்லை என்பதை கவனிக்கலாம்.
மறுபக்கம் சிற்றிதழ் இலக்கிய எழுத்தாளர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு தளத்தையே எழுதிக் கொண்டிருந்தார்கள். தமிழ் சிற்றிதழ் சார்ந்த எழுத்து என்பது பெரும்பாலும் தனிமனிதனின் அக நெருக்கடிகள், சமூகம் அவனிடம் அளிக்கும் அழுத்தங்கள் ஆகியவற்றை மட்டுமே முன்னிறுத்தக் கூடியதாக இருந்தது. சமூகம் என்பது தனிமனிதனில் எதிரொலிக்கும் வகையிலேயே அவர்கள் எழுத்தில் வெளிப்பட்டது. அவர்களுக்கு அரசியல் இருந்திருக்கலாம், ஆனால் புனைவுகளில் அவர்கள் முன் வைத்தது அந்த நூற்றாண்டு உருவாக்கிய தனிமனிதன் என்பவனையே. அந்த தனிமனிதனின் அகப்பரிணாமத்தில் உருவாகும் முக்கியமான இடர்களை பற்றி மட்டும் அவர்கள் அதிகமாக பேசினர். அரசியல்கொந்தளிப்புகளைக்கூட தனிமனிதர்கள் வழியாகவே அணுகினர். அசோகமித்திரனின் ‘பதினெட்டாவது அட்சக்கோடு’ ஒரு சரியான உதாரணம்.
மேலும் அவர்கள் அரசியல் கருத்துக்களைச் சொன்னால் அதை எழுதுவதற்கோ, மக்கள் அவற்றைன கவனிப்பதற்கோ அன்று எந்த வாய்ப்பும் அன்று இல்லை. இருநூறு பிரதிகள் அச்சிடப்படும் ஒரு சிற்றிதழில் அரசியல் கருத்துக்களை எழுதுவதில் எந்த பயனும் இல்லை. அவற்றை வாசிப்பவர்களும் வேறு எழுத்தாளர்கள் மட்டுமேதான்.
ஆனால் அரசியல் கருத்துக்களை சொல்லும் ஒரு தரப்பு எழுத்தாளர்களுக்குள் அன்றும் இருந்தது. அவர்கள் பெரும்பாலும் இடதுசாரி எழுத்தாளர்கள். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகிய இரண்டு அமைப்புகளால் ஒருங்கு திரட்டப்பட்டவர்கள் அவர்கள். அவர்களில் பலர் கட்சி உறுப்பினர்கள், சிலர் கட்சி ஆதரவாளர்கள். ஆனால் அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தனிப்பட்ட் முறையில் அரசியல் கருத்துக்களைத் தெரிவிப்பதை அந்த அமைப்புகள் விரும்பவில்லை. அவர்கள் ஒட்டுமொத்தமான ஒரு தரப்பாகவே அரசியல் கருத்துகளைத் தெரிவித்தார்கள். அந்த தரப்பு என்ன என்பதை அந்த கட்சிதான் முடிவெடுத்தது.கட்சியின் சார்பாக அந்த அமைப்புகளின் செயலாளர் அல்லது தலைவர் பொறுப்புகளில் இருப்பவர்கள் அறிக்கைகளை எழுதினர். அவற்றுக்குக் கீழே இவர்கள் கையெழுத்திட்டனர். நீண்ட காலம் அரசியல் பேசும் எழுத்தாளர்களின் கருத்து என்று இங்கே அறியப்பட்டவை எல்லாமே இந்த இரண்டு ஒருங்கிணைந்த அமைப்புகளை சார்ந்த எழுத்தாளர்கள் சார்பில் கட்சிகள் விடுத்த அறிக்கைகள்தான்.
திராவிட இயக்கம் இவ்வாறு எழுத்தாளர்களை ஒருங்கு திரட்டியதில்லை. அவர்கள் ஓர் அமைப்பாகவும் செயல்பட்டதில்லை. திராவிட இயக்கங்களில் ‘இலக்கிய அணி’கள் உண்டு . ஆனால் அவை பெரும்பாலும் குறுஅரசியல்வாதிகளால் ஆனவை. அவற்றில் முக்கியமான எழுத்தாளர்களை வரும் செயற்பட்டது இல்லை. ஒருவகையில் அவை பெரிய பதவிகள் அளிக்கப்படாத சிறிய அரசியல்வாதிகளுக்கான சிறிய களங்கள். ஏன் திமுக போன்ற இலக்கிய அணிகளில் எழுத்தாளர்கள் செயல்படவில்லை என்றால், திமுக போன்றவற்றின் இலக்கிய அணிகள் எழுத்தாளர்களை உள்ளே விடவில்லை என்பதுதான் பதில். அவ்வாறு ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால் உள்ளே செல்லக்கூடிய மனநிலைகொண்ட சிறு எழுத்தாளர்கள் எல்லா காலகட்டத்திலும் இருந்தார்கள்.
இந்தச் சூழலுக்கு அப்பால் தனித்து நின்று, எழுத்தாளனாக மட்டுமே நிலைகொண்டு , இலக்கியம், அரசியல், பண்பாடு ஆகிய அனைத்தைப் பற்றியும் கருத்துக்களைச் சொல்லி வந்தவர் ஜெயகாந்தன் மட்டுமே. அவர் இடதுசாரி ஆதரவாளராக இருந்தபோதும் சரி, அதன் பிறகு காங்கிரஸ் ஆதரவாளராக மேடைகளில் நேரடியாக பிரச்சாரம் செய்த காலத்திலும் சரி, அதன்பிறகும் சரி எந்த அமைப்பிலும் சேரவில்லை; எப்போதும் கூட்டத்தில் ஒருவராக மட்டும் இருக்கவில்லை. எல்லா காலகட்டத்திலேயுமே அவருடைய கருத்துக்கள் அவருடையதாக மட்டுமே இருந்தன. அவர் அவற்றை விளக்கினார், வாதாடினார். அவருடைய அரசியல் கருத்துக்களுக்கு மட்டுமே தமிழில் ‘எழுத்தாளரின் கருத்து’ என்ற அளவில் மக்களிடையே மதிப்பு இருந்தது. அவருடைய அரசியல் மேடைப்பேச்சைக் கேட்பதற்காக, அவருடைய தரப்பைத் தெரிந்து கொள்வதற்காக வாசகர்கள் அன்று முன்வந்தனர்.
எழுத்தாளர்கள் ஓர் அணியாக கருத்துக்களை தெரிவிக்கும்போது அது அந்தக் கட்சியின் கருத்தாக மட்டுமே கருதப்பட்டது. மூட்டைதூக்குவோர் அணி, ஆட்டோ ஓட்டுவோர் அணி போல அந்த கட்சிக்கு இருக்கும் பல அணிகளில் ஒன்று அந்த எழுத்தாளர் அணி என்று மட்டுமே கொள்ளப்பட்டது. எழுத்தாளர்களின் கருத்து என்ற தனி முக்கியத்துவம் எதுவும் அவற்றுக்கு அளிக்கப்பட்டதில்லை.
இணையம் உருவாகி, கருத்துக்கள் சொல்வதற்கான களம் அமைந்தபோது எழுத்தாளர் அனைவரிடமும் கருத்துச் சொல்லும்படியான கட்டாயம் உருவாகியது. அரசியல் கருத்துக்களை சொல்லாதவர்கள் அரசியல் அற்றவர்கள், ஊமைகள் என்றெல்லாம் வசை பாடப்பட்டார்கள். அதை அந்த அழுத்தத்தை எதிர்கொண்ட ஒரு சிலர் கருத்துக்களைச் சொல்ல முன் வந்தார்கள். அப்போதுதான் அவர்களிடம் எதிர்பார்க்கப்பட்டது எழுத்தாளராக இருப்பது அல்ல என்றும், தொண்டராக மட்டுமே அவர்கள் எதிர்பார்க்கப்பட்டனர் என்றும் தெரியவந்தது.
எழுத்தாளர்கள் அரசியல் கருத்துக்களை சொல்ல முன்வந்த போது ஏற்கனவே இருந்து கொண்டிருக்கும் தரப்பினில் ஒன்றாக மட்டுமே அவர்கள் கருத்து சொல்ல வேண்டிய கட்டாயம் உருவாகியது .அவர்களுக்கான தனிக்கருத்து என்று ஒன்று இருக்க முடியாது, அப்படி இருப்பது என்பது ஒரு வகையான ஆணவம் என்று சொல்லப்பட்டது. ‘கருத்து சொல்ல எழுத்தாளர் யார்?’ என்ற மனநிலையும் ‘எழுத்தாளர் கருத்து சொல்லியே ஆக வேண்டும்’ என்ற கட்டாயமும் ஒரே சமயம் உருவாகியது. எழுத்தாளர்களை எதிர்கொண்டவர்கள் வாசகர்கள் அல்ல, கட்சிகளின் தொண்டர் மற்றும் குண்டர் அணிகள். ஆகவே எழுத்தாளர்கள் அணிசேர்ந்து மட்டுமே கருத்து சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. ‘கருத்து சொல்!’ என்பது நடைமுறையில் ‘ஏதேனும் ஓர் அணியில் தொண்டனாகச் சேர்ந்துகொள்!” என்றுதான் பொருள்படுகிறது.
இதை வலுவாக உணர்ந்தவர் சுந்தர ராமசாமி. சுந்தர ராமசாமி மிக அரிதாக சில அரசியல் கருத்துக்களை சொல்லி இருக்கிறார். உதாரணமாக, மகாமகப் படுகொலைகளின் போதும் ஜெயந்திரர் கைதின்போது அவருடைய கடுமையான கருத்துக்கள் வெளிவந்தன. ஆனால் அதை ஒட்டி அவருக்கு வந்து அழுத்தம் என்பது அனைத்து விஷயங்களை அவர் கருத்து சொல்ல வேண்டும் என்பது. ஆனால் எந்த கருத்துச் சொன்னாலும் அது ஏதேனும் கட்சியின் கருத்தாகவே எதிர்த்தரப்பால் கொள்ளப்பட்டது. எழுத்தாளரின் தனிப்பட்ட கருத்து, எழுத்தாளராக நின்று அவர் சொல்லும் கருத்து என்பதை அன்றுமின்றும் தமிழ்ச்சமூகம் புரிந்துகொள்ளவில்லை. தனிப்பட்ட கருத்து சொல்லும் உரிமை எழுத்தாளருக்கு கிடையாது என்றும், அவர் சொல்லும் கருத்து கட்சி, ஜாதி அல்லது மதம் சார்ந்து மட்டுமே இருக்க முடியும் என்ற வகையில் தொடர்ந்து அரசியல் சில்லறைகளின் எதிர்வினைகள் வந்தன.
அதேசமயம் கருத்து சொன்னால் உருவாகும் எதிர்ப்பை எழுத்தாளர் தனிமனிதராக நின்று சமாளிக்கவேண்டும். எழுத்தாளர் என்றவகையில் அவருக்கு எந்த மதிப்பும் இல்லை, ஆகவே அவர் மீது அரசோ தனிமனிதர்களோ ஏதேனும் தாக்குதல் நடத்தினால் எவரும் ஆதரவளிக்கமாட்டார்கள். அவர் இயல்புக்கு அவரால் கூட்டத்துடன் கொடிபிடித்து தலைமைவழிபாடு செய்ய முடியாது. அவர் அரசியல் அல்லக்கை ஆக முடியாது. தனியாகக் கருத்துசொன்னால் அரசியல் அல்லக்கைகளை தாங்கிக்கொள்ளவும் முடியவில்லை. தொடர்ந்து அவர் கருத்துக்களை சொல்வதை நிறுத்திக் கொண்டார். இந்த சிக்கல் இன்றைக்கு எழுத்தாளர்களுக்கு நீடிக்கிறது.
எழுத்தாளர் என்பவர் தன் எழுத்தால் ஓர் அடையாளத்தை ஈட்டிக்கொண்டவர். தன் எழுத்தை அவர் தனிமனிதராகவே முன்வைக்கிறார். அப்படியே அவற்றை வாசகன் வாசிக்கிறான். ஆகவே தன் கருத்துக்களையும் எழுத்தாளர் தனிமையாக நின்று தனித்து முன்வைப்பதே சரியானது, நேர்மையானது என்பதுதான் என் எண்ணம். அந்தக் கருத்துக்களுக்கு கூடுதலாக ஒரு விளக்கம் கேட்கப்பட்டால் அவர்தான் அதற்கு பதில் சொல்ல வேண்டியுள்ளது. ‘இந்த நிலைப்பாடை நீங்கள் ஏன் எடுத்தீர்கள்?’ ‘இதற்கு இன்னின்ன் மறுப்புகள் இருக்கின்றனவே?’ என்று அவருடைய வாசகர்கள் கேட்பதற்கு உரிமை உண்டு. அவர் அதற்கு விளக்கம் அளித்தாக வேண்டும். அவருடைய படைப்புலகு ஓர் விளக்கமாக இருக்கலாம். அவருடைய வாழ்க்கை விளக்கமாக அமையலாம். கூடுதலாக அவர் தன் தர்க்கத்தையும் முன்வைக்கலாம். ஆனால் எழுத்தாளர்கள் கூட்டாக கருத்துக்களை முன்வைப்பார்கள் என்றால் அவற்றுக்கு தனிப்பட்ட முறையில் அவர் பொறுப்பேற்பதில்லை என்றுதான் பொருள். அவரிடம் நாம் தனிப்பட்ட முறையில் கேட்பதற்கு ஏதும் இல்லை என ஆகிறது.
கூட்டறிக்கைகளில் அந்த கூட்டமைப்பு தான் அக்கருத்துக்குப் பொறுப்பு. அதிலுள்ள ஒவ்வொரு வரிக்கும் அந்த எழுத்தாளர் பொறுப்பு அல்ல. பெரும்பாலான தருணங்களில் ஒரு அறிக்கை உருவாக்கப்பட்ட பிறகு தொலைபேசியில் அதில் கையெழுத்து போடுகிறீர்களா என்று கேட்கப்படும். அதற்கு மறுப்பு தெரிவிக்க முடியாமல் சரி என்று சொல்லி இவர்கள் அந்த பட்டியலில் எழுத்தாளர்கள் இணைந்து கொள்கிறார்கள். அதில் உள்ள எல்லா வரிகளையும் அறிந்திருப்பதுகூட இல்லை. ஆனால் எழுத்தாளர்கள் அந்த வரிகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று சூழலால் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இதுதான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது.
கூட்டாக எழுத்தாளர்கள் அறிக்கை விடுவது என்பது எழுத்தாளர் என்று அடையாளத்திற்கு எதிரான ஒரு செயல். ஆனால் மிக அரிதான தருணங்களில் அது நிகழலாம் என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக மானுடம் சார்ந்த ஒரு பிரச்சினை, ஒட்டுமொத்தமான ஒரு பெரும் அடக்குமுறை நிகழும்போது எழுத்தாளர்கள் அணிதிரளலாம். அரசியல்வாதிகள் ஒட்டுமொத்தமாக அமைதிகாக்கும்போது கருத்து சொல்லும் பொறுப்பை எழுத்தாளர்கள் ஏற்றுக்கொள்ளலாம். அரசியல்வாதிகள் எவரும் சொல்லாத ஒரு தரப்பைச் சொல்ல எழுத்தாளர்கள் கூட்டாக முன்வரலாம். அப்போது மட்டுமே எழுத்தாளர்களின் கருத்துக்கு தனி மதிப்பு உருவாகிறது. மற்றபடி ஒவ்வொரு அரசியல்நிகழ்வின்போதும் கட்சிகள் ஒருங்கிணைக்கும் அமைப்புகள் வழியாக எழுத்தாளர்களின் குரல் வெளிவந்தால் அதற்கு எந்த மதிப்பும் கிடையாது.
இப்போது எழுத்தாளர்கள் இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.இது எந்த கருத்து மாற்றத்தை உருவாக்கியது? இதை எவர் கவனித்திருக்கிறார்கள்? திமுகவுக்கு ஆதரவான அல்லது இடதுசாரிகளுக்கு ஆதரவான பல அறிக்கைகளில் ஒன்று இது என்று ம்ட்டுமே இது கருதப்படுகிறது. ஒரு சிறிய செய்திக்கு அப்பால் இதற்கு என்ன மதிப்பு? இவ்வாறு எழுத்தாளர்கள் தங்கள் முக்கியத்துவத்தை தாங்களே அழித்துக் கொள்வது என்பது எழுத்தை தோற்கடித்துக் கொள்வது என்றுதான் பொருள். அரசியலில் உள்ள நாலாம்நிலை அல்லக்கைகளின் நிலைக்கு தங்களை தாழ்த்திக்கொள்கிறார்கள் இவர்கள். ‘சரி, கூடவே அந்த எழுத்தாளனுங்களைக் கூப்பிட்டு ஒரு அறிக்கைய விடச்சொல்லு, எழுதி கையெழுத்து வாங்கிரு… அவனுகளுக்கு வேணுங்கிறத குடுத்திரு’ என்று ஒரு மாவட்டச்செயலாளர் ஆணையிடும் இடத்தில்தான் இந்த எழுத்தாளர் அணி இன்று தங்களை வைத்திருக்கிறது.
ஏற்கனவே பாரதிய ஜனதா இதே போன்ற ஒரு எழுத்தாளர் அணியை திரட்டி இருக்கிறது. அவர்களுக்கு காசி சங்கமம் போன்ற அமைப்புகளை உருவாக்கி சில வாய்ப்புகளையும் வழங்குகிறது. ஆனால் பாரதிய ஜனதாவின் மனநிலை என்பது அள்ளிக் கொடுக்கும் தன்மை கொண்டது அல்ல. எழுத்தாளர்கள் என்பவர்கள் அவர்களின் உள்ளத்தில் மேலும் சிறியவர்கள். ஆகவே கிள்ளித்தான் கொடுக்கிறார்கள். முழுநேரமாக கட்சிக்காக குரல் கொடுத்து வந்த மாலன் முதல் அரவிந்த நீலகண்டன் வரையிலானவர்களுக்கு கட்சி அநேகமாக எதையுமே கொடுக்கவில்லை. அவர்கள் குரல் கொடுக்க மட்டும்தான் செய்கிறார்கள், காத்திருந்து ஏமாறுகிறார்கள். ஆனால் அவர்களும் திமுக போல் அள்ளிக் கொடுக்க ஆரம்பித்தால் அங்கும் ஒரு ஒரு பெரிய அணி உருவாகி இதேபோன்ற அறிக்கைகள் வரும். வெவ்வேறு கட்சி சார்பில் இவ்வாறு அறிக்கைகள் வரும் என்றால் அதில் உள்ள எழுத்தாளர்களுக்கு என்ன இடம் இருக்க முடியும்? ஒரு அடிமாட்டு தொண்டர்குழுமம், வேறென்ன?
இதில் இன்னொரு அபாயமும் உள்ளது. எழுத்தாளன் சாமானியன், நடுத்தரவர்க்கத்தினன், ஆதரவற்றவன். அவனிடம் ஓர் அரசியல் கட்சி, அதிலும் அதிகாரத்திலுள்ள கட்சி, இப்படி ஓர் அறிக்கையில் கையெழுத்து கேட்டால் அவனால் மறுக்கமுடியாது. கேட்பவர் அக்கட்சியின் ஒரு சிறு ஊழியராக இருப்பார். அவர் தனக்கு அக்கட்சியில் ஒரு கௌரவம் அமைவதற்காக அந்தச் செயலைச் செய்கிறார். ஒரு குழுவைத் திரட்டிக்காட்டுபவருக்கு அரசியல்கட்சிகளில் ஓர் இடம் அமைவதுண்டு, அதற்காக மட்டுமே இது செய்யப்படுகிறது. ஆனால் எழுத்தாளருக்கு இந்தச் சிறு கட்சி அல்லக்கையே மிகப்பெரிய ஆளுமை. அவரை பகைத்துக்கொள்ள எழுத்தாளரால் முடியாது.
இத்தகைய அறிக்கைகளில் இணைந்துகொள்பவர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்துக்குரிய அச்சத்தினால்தான் இந்த கையெழுத்திட ஒத்துக் கொள்கிறார்கள். அதை பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். சிலர் திமுக போன்ற கட்சிகள் அளிக்கும் எளிய சலுகைகளை விரும்புகிறார்கள். மறுத்தால் எந்தச் சலுகையும் பெற முடியாமல் ஆகிவிடும் என்று எண்ணுகிறார்கள். இந்தக் கையெழுத்திட்ட நபர்களை எளிய நடுத்தர வர்க்கத்தினர் என்று மட்டுமே கொள்ளவேண்டும், எழுத்தாளர் என்று அல்ல.
ஜெ.
விஷ்ணுபுரம் விருந்தினர் – 6 – குணா கந்தசாமி
2025 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்படுகிறது. நிகழ்வு 20 மற்றும் 21 டிசம்பரில் நடைபெறும். அந்நிகழ்வில் வழக்கம்போல இலக்கியச் சந்திப்புகள் அமைகின்றன. இவ்வாண்டு எழுத்தாளர் குணா கந்தசாமி கலந்துகொள்கிறார்
குணா கந்தசாமி – தமிழ் விக்கி/* inline tdc_css att */.tdi_1{padding-top:12px !important;padding-bottom:8px !important;border-color:#eaeaea !important;border-style:solid !important;border-width: 1px 0px 1px 0px !important;}/* custom css */.tdi_1 .td_block_inner{width: 100%;
margin-left: -20px;
margin-right: -20px;
}.tdi_1:after{
content: '';
display: table;
clear: both;
}.tdi_1 .td-image-wrap{
padding-bottom: 100%;
}.tdi_1 .entry-thumb{
background-position: center 50%;
}.tdi_1 .td-image-container{
flex: 0 0 30%;
width: 30%;
display: block; order: 0;
}.ie10 .tdi_1 .td-image-container,
.ie11 .tdi_1 .td-image-container{
flex: 0 0 auto;
}.tdi_1 .td-module-container{
flex-direction: row;
border-color: #eaeaea !important;
}.ie10 .tdi_1 .td-module-meta-info,
.ie11 .tdi_1 .td-module-meta-info{
flex: 1;
}.tdi_1 .td-module-meta-info{
padding: 1% 5%;
border-color: #eaeaea;
}.tdi_1 .td_module_wrap{
padding-left: 20px;
padding-right: 20px;
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
border-color: #eaeaea;
}.tdi_1 .entry-thumb,
.tdi_1 .entry-thumb:before,
.tdi_1 .entry-thumb:after{
border-radius: 500px;
}.tdi_1 .td-post-vid-time{
display: block;
}.tdi_1 .td-post-category:not(.td-post-extra-category){
display: none;
}.tdi_1 .td-author-photo .avatar{
width: 20px;
height: 20px;
margin-right: 6px;
border-radius: 50%;
}.tdi_1 .td-excerpt{
display: none;
column-count: 1;
column-gap: 48px;
font-size:= !important;
}.tdi_1 .td-audio-player{
opacity: 1;
visibility: visible;
height: auto;
font-size: 13px;
}.tdi_1 .td-read-more{
display: none;
}.tdi_1 .td-author-date{
display: none;
}.tdi_1 .td-post-author-name{
display: none;
}.tdi_1 .td-post-date,
.tdi_1 .td-post-author-name span{
display: none;
}.tdi_1 .entry-review-stars{
display: none;
}.tdi_1 .td-icon-star,
.tdi_1 .td-icon-star-empty,
.tdi_1 .td-icon-star-half{
font-size: 15px;
}.tdi_1 .td-module-comments{
display: none;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0;
padding-bottom: 0;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:21px !important;line-height:1.2 !important;
}html:not([class*='ie']) .tdi_1 .td-module-container:hover .entry-thumb:before{
opacity: 0;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}/* landscape */@media (min-width: 1019px) and (max-width: 1140px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:20px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* portrait */@media (min-width: 768px) and (max-width: 1018px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:17px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* phone */@media (max-width: 767px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}var block_tdi_1 = new tdBlock();block_tdi_1.id = "tdi_1";block_tdi_1.atts = '{"modules_on_row":"","limit":"10","hide_audio":"yes","show_btn":"none","show_excerpt":"none","show_review":"none","show_com":"none","show_date":"none","show_author":"none","image_floated":"float_left","sort":"oldest_posts","category_id":"11301","category_ids":"12659","image_width":"30","meta_padding":"1% 5%","modules_category":"","modules_category_margin":"","custom_title":"\u0bb5\u0bbf\u0bb7\u0bcd\u0ba3\u0bc1\u0baa\u0bc1\u0bb0\u0bae\u0bcd 2025 \u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba8\u0bcd\u0ba4\u0bbf\u0ba9\u0bb0\u0bcd\u0b95\u0bb3\u0bcd","custom_url":"\/tag\/2025-\u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba8\u0bcd\u0ba4\u0bbf\u0ba9\u0bb0\u0bcd\/","post_ids":"-222754","tdc_css":"eyJhbGwiOnsiYm9yZGVyLXRvcC13aWR0aCI6IjEiLCJib3JkZXItYm90dG9tLXdpZHRoIjoiMSIsInBhZGRpbmctdG9wIjoiMTIiLCJwYWRkaW5nLWJvdHRvbSI6IjgiLCJib3JkZXItY29sb3IiOiIjZWFlYWVhIiwiZGlzcGxheSI6IiJ9fQ==","show_cat":"none","excerpt_col":"","m16_el":"20","ajax_pagination":"load_more","f_title_font_size":"eyJhbGwiOiIyMSIsImxhbmRzY2FwZSI6IjIwIiwicG9ydHJhaXQiOiIxNyJ9","f_title_font_line_height":"1.2","f_ex_font_size":"=","f_ex_font_line_height":"","image_height":"100","hide_image":"","modules_gap":"","meta_info_horiz":"","container_width":"100","image_radius":"500","block_type":"td_flex_block_1","separator":"","block_template_id":"","title_tag":"","mc1_tl":"","mc1_title_tag":"","mc1_el":"","tag_slug":"","autors_id":"","installed_post_types":"","offset":"","show_modified_date":"","time_ago":"","time_ago_add_txt":"ago","time_ago_txt_pos":"","el_class":"","td_ajax_filter_type":"","td_ajax_filter_ids":"","td_filter_default_txt":"All","td_ajax_preloading":"","m_padding":"","all_modules_space":"36","modules_border_size":"","modules_border_style":"","modules_border_color":"#eaeaea","modules_border_radius":"","modules_divider":"","modules_divider_color":"#eaeaea","h_effect":"","image_size":"","image_alignment":"50","video_icon":"","video_popup":"yes","video_rec":"","spot_header":"","video_rec_title":"","video_rec_color":"","video_rec_disable":"","autoplay_vid":"yes","show_vid_t":"block","vid_t_margin":"","vid_t_padding":"","video_title_color":"","video_title_color_h":"","video_bg":"","video_overlay":"","vid_t_color":"","vid_t_bg_color":"","f_vid_title_font_header":"","f_vid_title_font_title":"Video pop-up article title","f_vid_title_font_settings":"","f_vid_title_font_family":"","f_vid_title_font_size":"","f_vid_title_font_line_height":"","f_vid_title_font_style":"","f_vid_title_font_weight":"","f_vid_title_font_transform":"","f_vid_title_font_spacing":"","f_vid_title_":"","f_vid_time_font_title":"Video duration text","f_vid_time_font_settings":"","f_vid_time_font_family":"","f_vid_time_font_size":"","f_vid_time_font_line_height":"","f_vid_time_font_style":"","f_vid_time_font_weight":"","f_vid_time_font_transform":"","f_vid_time_font_spacing":"","f_vid_time_":"","meta_info_align":"","meta_width":"","meta_margin":"","meta_space":"","art_title":"","art_btn":"","meta_info_border_size":"","meta_info_border_style":"","meta_info_border_color":"#eaeaea","meta_info_border_radius":"","modules_category_padding":"","modules_cat_border":"","modules_category_radius":"0","modules_extra_cat":"","author_photo":"","author_photo_size":"","author_photo_space":"","author_photo_radius":"","review_space":"","review_size":"2.5","review_distance":"","art_excerpt":"","excerpt_gap":"","excerpt_middle":"","excerpt_inline":"","show_audio":"block","art_audio":"","art_audio_size":"1.5","btn_title":"","btn_margin":"","btn_padding":"","btn_border_width":"","btn_radius":"","pag_space":"","pag_padding":"","pag_border_width":"","pag_border_radius":"","prev_tdicon":"","next_tdicon":"","pag_icons_size":"","f_header_font_header":"","f_header_font_title":"Block header","f_header_font_settings":"","f_header_font_family":"","f_header_font_size":"","f_header_font_line_height":"","f_header_font_style":"","f_header_font_weight":"","f_header_font_transform":"","f_header_font_spacing":"","f_header_":"","f_ajax_font_title":"Ajax categories","f_ajax_font_settings":"","f_ajax_font_family":"","f_ajax_font_size":"","f_ajax_font_line_height":"","f_ajax_font_style":"","f_ajax_font_weight":"","f_ajax_font_transform":"","f_ajax_font_spacing":"","f_ajax_":"","f_more_font_title":"Load more button","f_more_font_settings":"","f_more_font_family":"","f_more_font_size":"","f_more_font_line_height":"","f_more_font_style":"","f_more_font_weight":"","f_more_font_transform":"","f_more_font_spacing":"","f_more_":"","f_title_font_header":"","f_title_font_title":"Article title","f_title_font_settings":"","f_title_font_family":"","f_title_font_style":"","f_title_font_weight":"","f_title_font_transform":"","f_title_font_spacing":"","f_title_":"","f_cat_font_title":"Article category tag","f_cat_font_settings":"","f_cat_font_family":"","f_cat_font_size":"","f_cat_font_line_height":"","f_cat_font_style":"","f_cat_font_weight":"","f_cat_font_transform":"","f_cat_font_spacing":"","f_cat_":"","f_meta_font_title":"Article meta info","f_meta_font_settings":"","f_meta_font_family":"","f_meta_font_size":"","f_meta_font_line_height":"","f_meta_font_style":"","f_meta_font_weight":"","f_meta_font_transform":"","f_meta_font_spacing":"","f_meta_":"","f_ex_font_title":"Article excerpt","f_ex_font_settings":"","f_ex_font_family":"","f_ex_font_style":"","f_ex_font_weight":"","f_ex_font_transform":"","f_ex_font_spacing":"","f_ex_":"","f_btn_font_title":"Article read more button","f_btn_font_settings":"","f_btn_font_family":"","f_btn_font_size":"","f_btn_font_line_height":"","f_btn_font_style":"","f_btn_font_weight":"","f_btn_font_transform":"","f_btn_font_spacing":"","f_btn_":"","mix_color":"","mix_type":"","fe_brightness":"1","fe_contrast":"1","fe_saturate":"1","mix_color_h":"","mix_type_h":"","fe_brightness_h":"1","fe_contrast_h":"1","fe_saturate_h":"1","m_bg":"","color_overlay":"","shadow_shadow_header":"","shadow_shadow_title":"Module Shadow","shadow_shadow_size":"","shadow_shadow_offset_horizontal":"","shadow_shadow_offset_vertical":"","shadow_shadow_spread":"","shadow_shadow_color":"","title_txt":"","title_txt_hover":"","all_underline_height":"","all_underline_color":"","cat_bg":"","cat_bg_hover":"","cat_txt":"","cat_txt_hover":"","cat_border":"","cat_border_hover":"","meta_bg":"","author_txt":"","author_txt_hover":"","date_txt":"","ex_txt":"","com_bg":"","com_txt":"","rev_txt":"","audio_btn_color":"","audio_time_color":"","audio_bar_color":"","audio_bar_curr_color":"","shadow_m_shadow_header":"","shadow_m_shadow_title":"Meta info shadow","shadow_m_shadow_size":"","shadow_m_shadow_offset_horizontal":"","shadow_m_shadow_offset_vertical":"","shadow_m_shadow_spread":"","shadow_m_shadow_color":"","btn_bg":"","btn_bg_hover":"","btn_txt":"","btn_txt_hover":"","btn_border":"","btn_border_hover":"","pag_text":"","pag_h_text":"","pag_bg":"","pag_h_bg":"","pag_border":"","pag_h_border":"","ajax_pagination_infinite_stop":"","css":"","td_column_number":1,"header_color":"","color_preset":"","border_top":"","class":"tdi_1","tdc_css_class":"tdi_1","tdc_css_class_style":"tdi_1_rand_style"}';block_tdi_1.td_column_number = "1";block_tdi_1.block_type = "td_flex_block_1";block_tdi_1.post_count = "5";block_tdi_1.found_posts = "5";block_tdi_1.header_color = "";block_tdi_1.ajax_pagination_infinite_stop = "";block_tdi_1.max_num_pages = "1";tdBlocksArray.push(block_tdi_1);விஷ்ணுபுரம் 2025 விருந்தினர்கள்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 1 – மு. குலசேகரன்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 2 – அரிசங்கர்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 3 – கே. நல்லதம்பி
விஷ்ணுபுரம் விருந்தினர் – 4 – ஜீவ கரிகாலன்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 5 – அழிசி ஶ்ரீனிவாசன்
அடிப்படைப் பொதுநூல்கள்… கடிதம்
துறைசார் நூல்கள்
அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம். உங்கள் நலம் சிறக்க வாழ்த்துகள். தங்களுடைய இந்த கட்டுரை https://www.jeyamohan.in/87918/ ‘துறைசார் நூல்கள்‘ மே 28, 2016ல் வந்துள்ளது. அதைப் படித்துக் கொண்டிருந்த போது 1970களில் திமுக அரசு கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் முன்னெடுப்பில் கல்லூரி கல்வி சார்ந்து வெளியிடப்பட்ட நூல்கள் பிறகு நாப்பது ஆண்டுகளாக மறுபதிப்பு செய்யப்படவில்லை என்று சொல்லி இருக்கிறீர்கள். அந்த நூல்கள் எல்லாமே முக ஸ்டாலின் திமுக அரசு 2021ல் வந்ததில் இருந்து முழுவதுமாக எல்லா நூல்களுமே வெளியிடப்பட்டுள்ளது. விற்பனைக்கு உள்ளன. https://tntextbooksonline.com/product-category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/
இந்த இணையத்தளத்தில் கிடைக்கிறது. சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் உள்ள நூலங்காடியிலும் நேரடியாக விற்பனைக்கும் உள்ளது. உங்கள் கட்டுரையை படித்தவுடன் இதை பகிர்ந்து கொள்ள தோன்றியது. நன்றி.
அன்புடன்,
அ.லவ்சன்.
காவியம், எதிர்காவியம்- சுதா
அன்புள்ள ஜெ,
காவியம் நாவல் மொழி, சமூகவியல், குடும்பம், உளவியல், தத்துவம், பௌத்தம், சாதி, வரலாறு என்று பல தளங்களில் விரிந்து செல்கிறது. வெளிவந்த முதல் சில நாட்கள் வாசிக்க முயன்று விட்டு விட்டேன். பிறகு என் அன்னை சொன்னதால் ஒரு நாள் (36 ஆம் அத்தியாயம்) வாசிக்க ஆரம்பித்தேன். அவர் எனக்கு அதுவரை கதையை சுருக்கமாக சொன்னார். அன்று இரவே 11- 35 அத்தியாயங்களை வாசிக்கத் துவங்கி இரண்டு நாட்களில் முடித்தேன். காவியம் நாவலில் இருந்து நான் பெற்றவைகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
கிட்டத்தட்ட எல்லாப் புலன்களும் செயலிழந்து எல்லா உறுப்புகளும் பயனற்ற நிலையிலும், இலக்கியம் என்ற ஒன்றே ஒன்றின் துணையோடு தன் நிழல்களோடு உரையாடி நாயகன் மீண்டு வருவது இந்த நாவலின் உச்சம் என்று கருதுகிறேன். ஏன் இலக்கியம் படிக்க வேண்டும் என்பதிற்கான பதில்.
சில நாட்களுக்கு முன் நான் தமிழில் ஒரு சிறு கட்டுரை எழுதினேன், அதை எழுதி முடிக்கும் வரை ஒவ்வொரு பத்தியாக பிரதி(பேக்கப்) எடுத்து கொண்டே இருந்தேன். எதாவது காரணத்தால் site down ஆகிவிட்டால் எல்லாம் மறைந்து விடுமே என்ற பதட்டம் . மொத்தமே 4 மணி நேரம் செலவழித்த எனக்கு குணாட்யர் தன் பெருங்கனவான மாபெரும் காவியத்தை எழுதியவுடன் முழுவதுமாக நெருப்பிலிட்டு எரித்துவிட்டார் என்று படித்த போது அவர் அப்போது எத்தனை கொந்தளிப்பான மனநிலையில் இருந்திருப்பார் என்று கற்பனை கூட செய்ய முடியவில்லை.
ஒரு சொல்லுக்காக காவியத்தில் பல நாட்கள் காத்திருக்க நேரும். அந்த சரியான சொல் நம்முள் முளைப்பது கடவுளின் சித்தம் . “மாதா பூமி புத்ரோஹம் ப்ருத்வ்யா:” ” ப்ருத்வ்யா:” – ஒரு சொல்லுக்காக காத்திருந்த நாயகனை போல. அந்த சொல் கிடைக்காவிட்டால் காவியம் துவங்க முடியாது அதுபோல எத்தனை தருணங்கள் அந்த காவியத்தில். தன்னுடைய காவிய படைப்பை நெருப்பிலிட்டு அழிப்பது என்பது தனக்கு அளித்துக்கொள்ளும் மிகக் கொடூரமான தண்டனை. அதன்பிறகு அந்த மஹாகவி தன்னைத் தானே மாய்த்துக் கொண்டதில் எந்த வியப்பும் இல்லை.
காவியத்தில் துகாராமிக்கு நிகழ்வது ஒரு கொடூரமான அநியாயம். எந்த தவறும் செய்யாமல் ஒருவன் வாழ்க்கை பறிக்கப்பட்டு , தனக்குப் பிரியமானவள் கண் முன் கொல்லப்பட்டு , தான் முற்றிலுமாக முடமாக்கப்பட்டு வாழ்வதே நரகம் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட பின்னரும் அதற்கு காரணமானவரை பழி தீர்க்க கொள்ளும் வஞ்சத்தை ஏன் விட வேண்டும்? எஞ்சி இருக்கும் அனைத்தாலும் பழி தீர்க்க நினைப்பது தானே இயல்பு. ஒரு மாபெரும் குற்றம் நமக்கு நேரும் போது அதற்கு பழி தீர்க்க வஞ்சம் எப்படி தவறாக முடியம? நியாயம் நிலைநாட்டப் படவேண்டாமா? எந்த தர்க்கமும் இதன் முன் எடுபடாது. ஏன் என்றால் இங்கு நிகழ்ந்து இருப்பது அநீதி. இந்த கேள்விகளுக்கு கானபூதியின் பல கதைகள் வாயிலாக இறுதியாக துக்காராம் கண்டுஅடைவது அமைதி! அந்த வஞ்சம் என்னும் தீ , சற்றே தணிவதையும் மன்னிப்பு மலர துவங்குவதையும் ராம்சரண் நாயக்கிடம் நிழல் “அவனுக்கு உன்னை நன்றாகவே தெரிந்திருந்தது. அவன் அந்தக் கழியால் இரண்டுமுறை தரையைத் தட்டியிருந்தால் நீ அப்போதே பிடிபட்டிருப்பாய்” என்று கூறுவதன் வாயிலாக அறியலாம். இந்த கோணத்தில் இருந்து பார்க்கும் பொழுது முதலில் “why to let go” என்பது புரிந்தால் மற்றவை தானே நிகழும். “இலக்கியம் கூறுவதற்காக உள்ள ஊடகமல்ல. தேடலுக்கான ஊடகம் அது. கூறும் உண்மைகள் ஏதும் எனக்கு ஒரு பொருட்டே அல்ல. அவர் நூல்களினூடாக நான் அடைந்தவையே எனக்கு முக்கியம்.” என்ற தங்களின் வரிகள் விளங்கிற்று.
“அவன் தன்னைத் தானே முடிவுசெய்துகொண்டவன்” கானபூதியின் இந்த வரிகளை இப்பொழுதெல்லாம் அடிக்கடி நினைவுகூருகிறேன் . நீண்ட நாட்களாக என் மனதில் “How to Let Go ?” என்ற கேள்வி இருந்தது. “To err is human; to forgive, divine.” இது போல் பல நல்ல மேற்கோள்கள் உள்ளன. பல SelfHelp புத்தகங்கள் உள்ளன இந்த தலைப்பில். படிப்பதற்கு நன்றாக இருந்தாலும் என்னுள் எந்த உணர்ச்சி மோதல்களோ கொப்பளிப்போ ஏற்படுத்துவதில்லை. ஆழ்ந்த மாற்றம் நம்மிடம் வரவேண்டுமென்றால் ஒரு மானுட நாடகம் அவசியம். நேரடி அனுபவம் என்பதைத் தாண்டி இலக்கியம் வாயிலாகவே அத்தகைய பல அனுபவங்கள் என்னைப்போன்ற பலருக்கு சாத்தியமாகிறது.
“தன் குழந்தைகளுக்காக நீதியைக் கைவிடும் தாய் வேறொன்றுக்காகத் தன் குழந்தைகளையும் கைவிடுவாள். எந்நிலையிலும் நீதிக்காக நிலைகொள்பவளாக ருக்மிணி இருந்திருந்தால் ராதிகா கொல்லப்பட்டிருக்க மாட்டாள்,” அன்னையாக இருந்தாலும் தன மகனை காப்பாற்ற சமநிலை தவறுவது சரியல்ல. அதை சமப்படுத்த செயல்கள் நிகழும். நீதி பாரபட்சமற்றது. தவறிய சமநிலையை சீர் செய்ய ஒரு சந்தர்ப்பம் மீண்டும் வரும் . ஆனால் அதை புரிந்து கொள்ள கடவுள் அருள் தேவை. நல்லவராக இருந்தாலும் ஒருவர் சறுக்க நேர்வது இந்த இடத்தில தான். தங்கள் “கைமுக்கு” கதை நினைவுக்கு வந்தது.
“ஒருவன் இன்னொரு உயிரைவிட தன்னை எவ்வகையிலேனும் மேலானவன் என்று ஒரு கணம் எண்ணினால் அகங்காரம் என்னும் பெரும்பழியால் அவன் ஞானத்தில் இருந்தும் நிர்வாணத்தில் இருந்தும் நூறுகாதம் பின்னால் செல்கிறான்.”
காவியம் சாதிமேட்டிமைக்கு எதிராக தங்கள் குரல். 100 நாற்காலிகளின் மற்றோர் வடிவம். காவியம் உயர்மட்டம் என்று எண்ணுவோரின் கீழ்மைகளையும், அவர்கள் செல்வத்தையும் , அதை அடைய அவர்கள் கொடுத்த விலைகள், அதன் விளைவுகள், அந்த கீழ்மை எண்ணங்கள் எவ்வாறு உருவாகிறது என்ற உளவியல் சிக்கல்களையும் பல சன்னதிகள் தாண்டி தொடரரும் அதன் தாக்கம் என்று ஒரு complete picture காட்டுகிறது. ரிஷிமூலம் நதிமூலம் பார்த்தால் பிறப்பால் நாம் உயர்ந்தவர் என்று நினைப்பவர் பற்றி பல அதிர்ச்சியான உண்மைகள் வெளியாகிறது. ஒரு மொத்த வரலாறும் காலம் தாண்டி நிற்கும் கானபூதி வாயிலாக தெரிவதால் இவர்கள் இவ்வளவு கீழானவராக இருந்தாலும், பாவம் அவர்கள் என்ன செய்வார்கள். அவர்களை மீறிய ஒன்று அவர்களை இவ்வாறு செயல் பட வைக்கிறது . இது ஒரு chain reaction என்று ஒரு கருணை ஏற்படுகிறது.
இதை தாண்டி வைக்கப்படும் முக்கியமான கேள்வி – குணாட்டியருக்கு தன் காவியத்தை அழிக்கும் உரிமை இருந்ததா? அவ்வளவு மகத்தான படைப்பின் மூலம் (Source) என்பது யார்? அவரையும் மீறிய ஒரு படைப்புத் தெய்வம் அல்லவா? குணாட்டியர் அந்த ப்ரம்மாண்டத்தின் கருவி மட்டுமே. அந்த தெய்வம் தேவைப்பட்டால் ஒரு காளிதாசனையோ காளமேகத்தையையோ உருவாக்க முடியும் தானே? ஆகவே அழிக்கும் அச்செயல் ஒரு வித அகந்தையா? அதன் பலனாக அவர் இந்த பிறவியில் மாபெரும் கவிஞனாக ஆகும் பொருட்டே பிறந்த துகாராமாக காவியத்தை துவங்க முற்பட்டு “நான் எழுதி முடித்துவிட்டேன்” என்று செல்கிறார் . வால்மீகியும் வியாசனும் உக்ரசிரவஸும் குணாட்யரும் கம்பனும் வள்ளுவனும அந்த கண்ணுக்கு புலப்படாத மஹத்தின் ஒரு சிறு சாதனம் தான் என்பது எவ்வளவு humbling truth. வெண்முரசு முடித்தபின்னர் அதிலிருந்து வெளியே வர முடிவதற்கு உதவியதும் இந்த புரிதல் தானோ? இறுதியாக துகாராம் அதை கடந்து புன்னகையோடு தவழ்ந்து செல்வது தான் யார் என்றும் தன் பிறவியின் நோக்கம் என்ன என்றும் உணர்ந்த மிக அழகான தருணம்! இதை படித்த பொது வெகு நேரம் கண்ணீர்விட்டுக்கொண்டிருந்தேன்.
முடிவாக, கூப்பிய கைகளுடனும் ஞானத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பகதி குறித்து
“அவள் எப்போது ஞானம் அடைவாள்?” என்றார்.
“அவளிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லாமல் ஆகும்போது” என்று ததாகதர் சொன்னார்.”
நாற்பதாண்டுகள் ஆராய்ச்சி, மேற்கொண்ட பயணங்கள், அனுபவங்கள், குருவின் கருணை, தரவுகள், தரிசணங்கள் அனைத்தின் சாரத்தையும் எல்லாருக்கும் பகிர்ந்து அளித்த தங்கள் பேரன்புக்கும் பெருங்கருணைக்கு மிக்க நன்றி!
நன்றியுடன்
சுதா
வாசிப்பு வகுப்பு அனுபவம்- ஈஸ்வரி பிரியா
தளத்தில் இந்த வகுப்பிற்கான அறிவிப்பு வந்த உடன் தத்துவ வகுப்பு வந்தால் அதிலும் பங்கு கொள்வோம் வாசிப்பு வகுப்பிற்கும் போவோம் என்ற என் கணவரின் உந்துதலுடனே வகுப்பிற்கு பதிவு செய்தேன். என் கணவர் (பொன்ராஜ்) மற்றும் என் மகன் (பொன் முகேஷ்) மூவருமே வகுப்பில் கலந்து கொண்டோம்.
வாசிப்பு வகுப்பு அனுபவம்- ஈஸ்வரி பிரியாI was watching your video about doing great things. Yes, it was like a Dale Carnegie-type self-improvement speech. But the major difference is you immediately dive into the negative sides and practical sides of the ideals you are preaching and explain them in a logical way.
Dale Carnegie?October 4, 2025
மானுடமேன்மையின் எழுத்து
வெளிவந்த நாள் முதல் மூன்று மாதத்திற்கு ஒரு பதிப்பு வெளிவந்துகொண்டே இருக்கிறது அறம் தொகுதி. அதன் மொழியாக்கங்கள் மலையாளம், தமிழ், கன்னடம் என பிற மொழிகளில் லட்சக்கணக்கில் விற்கின்றன. நாடகமாகப் போடப்படுகின்றன. ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு பல பதிப்புகள் வெளிவந்தது. அமெரிக்காவில் வெளியாகியுள்ளது. உலகமெங்கும் ஒரேவகையான ஏற்பை பெற்றுவருகிறது அந்நூல். ஏன்?
வேதாந்தத்தை தமிழ்ப்படுத்துதல்
வேதாந்தம் பற்றிய விவாதங்களில் பலர் சொல்லும் சிக்கல் ஒன்றுண்டு. தன் கலைச்சொற்கள் தமிழில் சிந்திப்பவரின் நினைவில் நிற்பதில்லை. அவை சம்ஸ்கிருதத்தில் உள்ளன. அவற்றை தமிழாக்கம் செய்து ஏன் பயன்படுத்தக்கூடாது? அப்படி எத்தனையோ சொற்களை தமிழில் மொழியாக்கம் செய்துகொள்கிறோம். மேலும், அவ்வாறு மொழியாக்கம் செய்துகொண்டால் அச்சொற்களைக் கேட்டதுமே அவை எதைக்குறிக்கின்றன என்று நமக்குப் புரியும். உதாரணமாக ஃபாஸம் என்னும் சொல்லை வேதாந்தத்தில் பயன்படுத்துகிறோம். அதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டியுள்ளது. மயங்குரு என தமிழாக்கம் செய்துகொண்டால் அச்சொல்லே அக்கருத்தை நமக்கு புரியவைத்துவிடுமே?
இது ஒரு நல்ல வழிதான். நான் தொடக்ககாலத்தில் அப்படி நம்பியதுமுண்டு, முயன்றதுமுண்டு. ஆனால் இன்று பலவாறாகப் பிரிந்துகிடக்கும் வேதாந்தப் பிரிவுகள் அனைத்தும் அப்படி புதிய சொற்களை ஏற்றுக்கொள்ளுவது நடைபெறக்கூடிய செயல் அல்ல. இரண்டு, அப்படி நமக்கான சொற்களுடன் நாம் வேதாந்தத்தைக் கற்றால் நம் வட்டத்துக்கு அப்பால், நம் மொழிக்கு அப்பாலுள்ள இன்னொரு வேதாந்த மாணவருடன் நம்மால் உரையாடவே முடியாது. வேதாந்தம் கற்பவர்களே மிகக்குறைவு. அவர்களுக்குள்ளும் இப்படி உழக்குக்குள் கிழக்குமேற்கு உருவாவது பயனுள்ளது அல்ல.
இன்று எல்லா ஞானங்களும் உலகளாவிய விவாதக்களத்தில்தான் நிகழ்கின்றன. ஆகவேதான் எல்லா அறிவுத்துறைகளும் உலகளாவிய கலைச்சொற்களை உருவாக்கிக்கொண்டுள்ளன. தொடக்ககாலத்தில் அறிவியலில் கலைச்சொற்களைத் தமிழாக்கம் செய்தனர். கார்பன் டை ஆக்ஸைடை கரியமிலவாயு என்றெல்லாம் மொழியாக்கம் செய்தார்கள். ஆனால் இன்று உயர்கல்வியில் அதெல்லாம் வழக்கத்தில் இல்லை. கரியமில வாயு என தமிழாக்கம் செய்து படிப்பவர் ஒரு கட்டத்தில் கரியமில வாயு என்றால் கார்பன் டையாக்ஸைட் என்றும் கற்கவேண்டியிருக்கும். அது இரட்டைவேலை.
பலநூற்றாண்டுகளாக வேதாந்தம் தனக்கே உரிய கலைச் சொற்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அந்தக் கலைச்சொற்களிந் வழியாகவே வேதாந்த விவாதங்கள் எப்போதும் நிகழ்ந்து வருகின்றன. அவை ஒரு தமிழ் வாசகனுக்கு உடனடியாக மொழி சார்ந்த ஒவ்வாமையை உருவாக்கக் கூடியதாக இருக்கக்கூடும் ஃபாசம், ஃபானம், அவித்யை போன்ற சொற்களை அவன் உடனடியாக நினைவில் வைத்திருக்க முடியாது என்பது உண்மையே. ஆகவே தொடக்கநிலை வாசகர்களுக்காக அச்சொற்களை தமிழ்ப்படுத்துவது என் வழக்கம் .அச்சொற்களை ஒவ்வொரு முறையும் அடைப்பு குறிக்குள் தமிழ்ப்படுத்தி எழுதுவது என்னுடைய வழிமுறை. ஆனால் தமிழ்ப்படுத்துவது என்பது இச்சொற்களை புரிந்து கொள்வதற்காகவும், அவற்றின் பொருள் நினைவில் நிற்பதற்காகவுமே ஒழிய அச்சொற்களை நீக்கம் செய்வதற்காக அல்ல. நாம் மொழியாக்கம் செய்யும் சொற்கள் மூலக்கலைச்சொற்களின் இடத்தில் சென்று அமையாது. அது பிழையானதும்கூட.
உலகம் முழுக்கவே தத்துவ சிந்தனைகள் தங்களுக்கான கலைச்சொற்களை உருவாக்கிக் கொள்வது வழக்கம். லத்தீனிலும் ஜெர்மனியிலும் பிரஞ்சிலும் உருவாக்கப்பட்ட கலைச்சொற்களை ஆங்கில மொழியில் அப்படியே தான் பயன்படுத்துகிறார்கள். பல சமயம் அவற்றுக்கான பதிலி ஆங்கிலச் சொற்கள் இருக்கும். ஆனால் குறிப்பாக மூலச்சொற்களையே பயன்படுத்துவது தான் வழக்கம் நமக்கே தெரியும், சட்டத்தில் Modus operandi, Habeas corpus போன்ற சொற்களைத்தான் இன்னமும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கான காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு தத்துவ கலைச்சொல் என்பது முதன்மையாக ஒரு குறிப்பிட்ட தத்துவக் கொள்கையை அல்லது கருத்தை மட்டுமே குறிப்பிடுவதாகும். அக்கலைச்சொல் செவியில் விழுந்த உடனேயே அதனுடன் இணைந்த மொத்த சிந்தனைகளும் அச்சொல்லின் வரையறையாக நம் நினைவுக்கு வரவேண்டும். text என்று இன்று இலக்கியத்தில் ஒரு கலைச்சொல்லை நாம் பயன்படுத்தும் போது அது வாசகனின் கற்பனை படி விரித்து எடுக்கக்கூடிய ஒன்று அல்ல. அதற்கு மொழியியல் மிகத்தெளிவான வரையறை ஒன்றை அளித்திருக்கிறது. அந்த வரையறையை தான் அந்தச் சொல் குறிக்கிறது.
கலைச்சொல் என்பது திட்டவட்டமான விவாதங்களுக்கு மிக உதவியாக இருக்கும் ஒன்று. கலைச்சொல் என்பது ஒரு கருத்தை வரையறுத்துவிட்டு அக்கருத்துக்குச் சுட்டப்படும் பெயர்தான். ஒரு மனிதனுக்கு பெயரிடுவதுபோல. கலைச்சொல் இல்லையென்றால் ஒவ்வொரு முறையும் அந்த வரையறையை நாம் சொல்ல வேண்டியிருக்கும். அந்த வரையுறையுடன் இணைந்துள்ள அனைத்து கருத்துகளையும் நினைவுபடுத்த வேண்டி இருக்கும். அவ்வாறு ஒரு தத்துவ விவாதம் நடக்க முடியாது . ஒரு மனிதனுக்குப் பெயர் இல்லை என்றால் அவனை ஒவ்வொரு முறையும் வர்ணிக்கவேண்டியிருக்கும் என்பதுபோலத்தான்.
ஏனெனில் தத்துவம் பேசும் இந்த விஷயங்கள் எதுவுமே புறவயமான பொருட்கள் அல்ல .மேஜையை குறித்த ஒரு சொல்லை வேறு சொல்லால் இடமாற்றம் செய்து கொள்ளலாம். ஏனெனில் மேஜை என்ற பொருள் அங்கு தான் உள்ளது. அது எதைக் குறிக்கிறது என்பதில் எவருக்கும் எந்த ஐயமும் இருப்பதில்லை. ஆனால் தத்துவ உருவகங்கள் எல்லாம் அருவமானவை. ஒரு விவாத களத்தில் நீண்ட கால பொது விவாதத்தின் வழியாக ஒரு பொதுப் புரிதலாக உருவாகி வந்தது அவற்றின் வரையறை. அந்த பொதுப்புரிதல் வரையறையை சுட்டத்தான் கலைச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
உதாரணமாக நீண்டகாலம் குற்ற விசாரணை நீதிமன்ற விவாதங்கள் வழியாகத்தான் modus operandi என்ற வார்த்தை உருவாகி வந்திருக்கிறது. அந்த வார்த்தையை பயன்படுத்தும் போது அந்த நீண்ட கால விவாதித்தன் வழியாக உருவாகி வந்த ஒட்டுமொத்தமான புரிதலையும் பொதுவான வரையறையையும் நான் சுட்டுகிறேன். தத்துவத்திலும் அவ்வாறே angst என்ற சொல்லை இருத்தலியலாளர்கள் பயன்படுத்தும் போது அதற்கு ஒரு வேறொரு சொல்லை வைத்து இடமாற்றம் செய்ய முடியாது.
கலைச்சொற்களை உருவாக்கிக் கொள்வதுதான் தத்துவ சிந்தனை தன்னை புறவயமாக ஆக்கிக் கொள்வது. தனக்கே உரிய கலைச்சொற்கள் வழியாகத்தான் ஒரு தத்துவ சிந்தனை மானுட சிந்தனையாக நிலைகொள்கிறது. அக்கலைச்சொற்களை நீக்கம் செய்து விட்டால் அத்தத்துவ சிந்தனையின் புறவயத்தன்மை அழியும். அத்தத்துவ சிந்தனையை நாம் பொத்தாம் பொதுவான அரட்டையாக மாற்றிவிடுவோம். அதன் கூரிய விவாதத் தன்மையை அது இழந்துவிடும் .
பெரும்பாலும் கலைச்சொற்கள் என்பவை ஏற்கனவே இருக்கும் சொற்கள் ஒரு சிந்தனைக்களத்தில் மிகக்குறிப்பாக ஒரு தனி அர்த்தத்தில் பயன்படுத்தப்படுபவையாகவே இருக்கும். அவை கூடுதல் அர்த்தம் கொண்ட சொற்கள் என்று சொல்லலாம். படிமம் என்பது தமிழ் மொழியில் வெவ்வேறு அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. அது கண்ணாடியில் விழும் பிம்பம் என்ற அர்த்தத்தில் தான் நூறு ஆண்டுகளுக்கு முன்பு மொழியில் இருந்தது. ஆனால் poetic image என்ற அர்த்தத்தில் அதை தமிழில் பயன்படுத்த தொடங்கிய பிறகு இலக்கியத்தில் அதற்கு வேறு அர்த்தமே இல்லை. அந்தச் சொல்லை இலக்கியக் கலைச்சொல்லாக ஆக்கியவர் க.நா.சு.
அவ்வாறு அத்வைதம் பல ஆயிரம் ஆண்டு விவாதங்கள் வழியாகத்தான் தங்கள் கலைச் சொற்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. சிலசமயம் பொதுப்பொருளில் அவற்றுக்கு வேறு பொருள் இருக்கலாம். பௌத்தமும் அவ்வாறே. சூனியம் என்னும் சொல்லுக்கு பௌத்தம் அளிப்பது அதற்கே உரிய தனிப்பொருளை.
ஆகவே, கலைச்சொற்களை நாம் பொருள் புரிந்து கொள்ளலாம்,ஆனால் மொழியாக்கம் செய்து மூலத்தை நீக்கிவிட முடியாது. தமிழில் தொடர்ந்து ஓர் அத்வைத விவாதம் நிகழ்கிறது என்றால், அதில் சில சொற்கள் தமிழுக்கே உரித்தான சொற்கள் முன்வைக்கப்பட்டு தொடர்ந்து அந்த விவாதம் வழியாக அர்த்தம் ஏற்றம் செய்யப்படுகிறது என்றால் ,அவை தமிழுக்கே உருவாக உரித்தான காலப்போக்கில் கலைச்சொற்களாக உருவாகி வரக்கூடும். ஆனால் அப்போது அந்தக் கலைச்சொல் தமிழில் நாம் விவாதிக்கும் அத்வைதத்தின் தனித்தன்மை சார்ந்து ஒரு புதிய கலைச்சொல்லாகவே இருக்கும். மூலச்சொல்லுக்கான மொழியாக்கமாக இருக்காது. மூலக்கருத்தே கொஞ்சம் மாறியிருக்கும், வளர்ந்திருக்கும். அந்த மாறிய கருத்தையே அந்தப் புதிய கலைச்சொல் சுட்டிநிற்கும்.
அவ்வாறு இங்கே சைவ சித்தாந்த விவாதம் நீண்ட காலம் நிகழ்ந்துள்ளது. அதன் விளைவாக சைவ சித்தாந்தத்துக்கே உரிய தனிக் கலைச்சொற்களை அது உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பல சமயம் சைவ சித்தாந்தம் பயன்படுத்தும் கலைச்சொற்கள் ஏற்கனவே வேதாந்த மரபில் உள்ள கலைச்சொற்களின் ஒலி மாறுபாடுகள்தான் . ஆனால் சைவ சித்தாந்த மரபில் அதற்கு தனி அர்த்தம் உண்டு. அது சைவ சித்தாந்தத்தின் கலைச்சொல்லாக கூடுதலாக அர்த்தம் கொண்டவை.
உதாரணமாக அவித்தியை என்னும் அத்வைத கலைச்சொல் அவித்தை என்று சைவ சித்தாந்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. அவஸ்தை என்ற சமஸ்கிருத கலைச்சொல் அவத்தை என்று சைவ சித்தாந்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. சமஸ்கிருத அர்த்தமோ அல்லது வேதாந்த அர்த்தமோ சைவ சித்தாந்தத்திற்கு பொருந்தாது. சைவ சித்தாந்தத்தில் அந்த முன்னோடிகள் அச்சொல்லை எவ்வாறு தங்களுக்குள் விவாதித்து பொது புரிதலாக வரையறுத்துக் கொண்டார்கள் என்பதை அறிந்து அந்த அர்த்தத்தில் தான் அந்தச் சொல்லை பயன்படுத்த வேண்டும்.
பசு,பதி, பாசம் ஆகிய சொற்களைத் தவிர்த்து எவராலும் சைவ சித்தாந்தத்தை பேசிவிட முடியாது. அதுபோலத்தான் அத்வைத கலைச்சொற்களும். மாயை என்பது ஒரு பொதுச்சொல். அது சாதாரண புழக்கத்தில் ஒரு அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது, பக்தி மரபில் வேறொரு அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. வேதாந்தத்தின் கிளைகளில் சின்ன அர்த்த வேறுபாடுகளுடன் அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. அத்வைதத்தில் அதனுடைய பொருள் ஒன்று அது திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வேறொரு சொல்லை காட்சிப்பிழை என்றோ அறிவுப்பிழை என்றோ பிழையறிவு என்றோ பயன்படுத்தும்போது உண்மையில் அந்த மூலக் கலைச்சொல்லின் வரையறையை மட்டுமல்ல, அதனுடைய அடிப்படைப் பொருளையே நாம் தவற விட்டு வேறொன்றுக்கு தான் நாம் சென்று கொண்டிருக்கிறோம். இரு சொற்களும் வேறுவேறு, அந்த வேறுபாடு நுணுக்கமானது, ஆனால் முக்கியமானது.
ஒரு கலைச்சொல் வந்து சேர்வது என்பது ஒரு கருத்து, ஒரு தரிசனம் வந்துசேர்வதேயாகும். ஆகவே மூலக்கலைச்சொல்லே கூடுமானவரை பயன்படுத்தப்படவேண்டும் என நான் இன்று எண்ணுகிறேன்.
விஷ்ணுபுரம் விருந்தினர் – 5 – அழிசி ஶ்ரீனிவாசன்

2025 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதையொட்டி 20 -21 ஆம் தேதிகளில் நிகழும் இலக்கியவிழாவில் வழக்கம்போல வாசகர்களை எழுத்தாளர்களும் இலக்கியச் செயல்பாட்டாளர்களும் சந்திக்கிறார்கள். இவ்வாண்டு அழிசி பதிப்பகம் ஶ்ரீனிவாச கோபாலன் வாசகர்களுடன் உரையாடுகிறார்.
அழிசி பதிப்பகம்
அழிசி பதிப்பகம் – தமிழ் விக்கி/* inline tdc_css att */.tdi_1{padding-top:12px !important;padding-bottom:8px !important;border-color:#eaeaea !important;border-style:solid !important;border-width: 1px 0px 1px 0px !important;}/* custom css */.tdi_1 .td_block_inner{width: 100%;
margin-left: -20px;
margin-right: -20px;
}.tdi_1:after{
content: '';
display: table;
clear: both;
}.tdi_1 .td-image-wrap{
padding-bottom: 100%;
}.tdi_1 .entry-thumb{
background-position: center 50%;
}.tdi_1 .td-image-container{
flex: 0 0 30%;
width: 30%;
display: block; order: 0;
}.ie10 .tdi_1 .td-image-container,
.ie11 .tdi_1 .td-image-container{
flex: 0 0 auto;
}.tdi_1 .td-module-container{
flex-direction: row;
border-color: #eaeaea !important;
}.ie10 .tdi_1 .td-module-meta-info,
.ie11 .tdi_1 .td-module-meta-info{
flex: 1;
}.tdi_1 .td-module-meta-info{
padding: 1% 5%;
border-color: #eaeaea;
}.tdi_1 .td_module_wrap{
padding-left: 20px;
padding-right: 20px;
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
border-color: #eaeaea;
}.tdi_1 .entry-thumb,
.tdi_1 .entry-thumb:before,
.tdi_1 .entry-thumb:after{
border-radius: 500px;
}.tdi_1 .td-post-vid-time{
display: block;
}.tdi_1 .td-post-category:not(.td-post-extra-category){
display: none;
}.tdi_1 .td-author-photo .avatar{
width: 20px;
height: 20px;
margin-right: 6px;
border-radius: 50%;
}.tdi_1 .td-excerpt{
display: none;
column-count: 1;
column-gap: 48px;
font-size:= !important;
}.tdi_1 .td-audio-player{
opacity: 1;
visibility: visible;
height: auto;
font-size: 13px;
}.tdi_1 .td-read-more{
display: none;
}.tdi_1 .td-author-date{
display: none;
}.tdi_1 .td-post-author-name{
display: none;
}.tdi_1 .td-post-date,
.tdi_1 .td-post-author-name span{
display: none;
}.tdi_1 .entry-review-stars{
display: none;
}.tdi_1 .td-icon-star,
.tdi_1 .td-icon-star-empty,
.tdi_1 .td-icon-star-half{
font-size: 15px;
}.tdi_1 .td-module-comments{
display: none;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0;
padding-bottom: 0;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:21px !important;line-height:1.2 !important;
}html:not([class*='ie']) .tdi_1 .td-module-container:hover .entry-thumb:before{
opacity: 0;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}/* landscape */@media (min-width: 1019px) and (max-width: 1140px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:20px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* portrait */@media (min-width: 768px) and (max-width: 1018px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:17px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* phone */@media (max-width: 767px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}var block_tdi_1 = new tdBlock();block_tdi_1.id = "tdi_1";block_tdi_1.atts = '{"modules_on_row":"","limit":"10","hide_audio":"yes","show_btn":"none","show_excerpt":"none","show_review":"none","show_com":"none","show_date":"none","show_author":"none","image_floated":"float_left","sort":"oldest_posts","category_id":"11301","category_ids":"12659","image_width":"30","meta_padding":"1% 5%","modules_category":"","modules_category_margin":"","custom_title":"\u0bb5\u0bbf\u0bb7\u0bcd\u0ba3\u0bc1\u0baa\u0bc1\u0bb0\u0bae\u0bcd 2025 \u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba8\u0bcd\u0ba4\u0bbf\u0ba9\u0bb0\u0bcd\u0b95\u0bb3\u0bcd","custom_url":"\/tag\/2025-\u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba8\u0bcd\u0ba4\u0bbf\u0ba9\u0bb0\u0bcd\/","post_ids":"-222749","tdc_css":"eyJhbGwiOnsiYm9yZGVyLXRvcC13aWR0aCI6IjEiLCJib3JkZXItYm90dG9tLXdpZHRoIjoiMSIsInBhZGRpbmctdG9wIjoiMTIiLCJwYWRkaW5nLWJvdHRvbSI6IjgiLCJib3JkZXItY29sb3IiOiIjZWFlYWVhIiwiZGlzcGxheSI6IiJ9fQ==","show_cat":"none","excerpt_col":"","m16_el":"20","ajax_pagination":"load_more","f_title_font_size":"eyJhbGwiOiIyMSIsImxhbmRzY2FwZSI6IjIwIiwicG9ydHJhaXQiOiIxNyJ9","f_title_font_line_height":"1.2","f_ex_font_size":"=","f_ex_font_line_height":"","image_height":"100","hide_image":"","modules_gap":"","meta_info_horiz":"","container_width":"100","image_radius":"500","block_type":"td_flex_block_1","separator":"","block_template_id":"","title_tag":"","mc1_tl":"","mc1_title_tag":"","mc1_el":"","tag_slug":"","autors_id":"","installed_post_types":"","offset":"","show_modified_date":"","time_ago":"","time_ago_add_txt":"ago","time_ago_txt_pos":"","el_class":"","td_ajax_filter_type":"","td_ajax_filter_ids":"","td_filter_default_txt":"All","td_ajax_preloading":"","m_padding":"","all_modules_space":"36","modules_border_size":"","modules_border_style":"","modules_border_color":"#eaeaea","modules_border_radius":"","modules_divider":"","modules_divider_color":"#eaeaea","h_effect":"","image_size":"","image_alignment":"50","video_icon":"","video_popup":"yes","video_rec":"","spot_header":"","video_rec_title":"","video_rec_color":"","video_rec_disable":"","autoplay_vid":"yes","show_vid_t":"block","vid_t_margin":"","vid_t_padding":"","video_title_color":"","video_title_color_h":"","video_bg":"","video_overlay":"","vid_t_color":"","vid_t_bg_color":"","f_vid_title_font_header":"","f_vid_title_font_title":"Video pop-up article title","f_vid_title_font_settings":"","f_vid_title_font_family":"","f_vid_title_font_size":"","f_vid_title_font_line_height":"","f_vid_title_font_style":"","f_vid_title_font_weight":"","f_vid_title_font_transform":"","f_vid_title_font_spacing":"","f_vid_title_":"","f_vid_time_font_title":"Video duration text","f_vid_time_font_settings":"","f_vid_time_font_family":"","f_vid_time_font_size":"","f_vid_time_font_line_height":"","f_vid_time_font_style":"","f_vid_time_font_weight":"","f_vid_time_font_transform":"","f_vid_time_font_spacing":"","f_vid_time_":"","meta_info_align":"","meta_width":"","meta_margin":"","meta_space":"","art_title":"","art_btn":"","meta_info_border_size":"","meta_info_border_style":"","meta_info_border_color":"#eaeaea","meta_info_border_radius":"","modules_category_padding":"","modules_cat_border":"","modules_category_radius":"0","modules_extra_cat":"","author_photo":"","author_photo_size":"","author_photo_space":"","author_photo_radius":"","review_space":"","review_size":"2.5","review_distance":"","art_excerpt":"","excerpt_gap":"","excerpt_middle":"","excerpt_inline":"","show_audio":"block","art_audio":"","art_audio_size":"1.5","btn_title":"","btn_margin":"","btn_padding":"","btn_border_width":"","btn_radius":"","pag_space":"","pag_padding":"","pag_border_width":"","pag_border_radius":"","prev_tdicon":"","next_tdicon":"","pag_icons_size":"","f_header_font_header":"","f_header_font_title":"Block header","f_header_font_settings":"","f_header_font_family":"","f_header_font_size":"","f_header_font_line_height":"","f_header_font_style":"","f_header_font_weight":"","f_header_font_transform":"","f_header_font_spacing":"","f_header_":"","f_ajax_font_title":"Ajax categories","f_ajax_font_settings":"","f_ajax_font_family":"","f_ajax_font_size":"","f_ajax_font_line_height":"","f_ajax_font_style":"","f_ajax_font_weight":"","f_ajax_font_transform":"","f_ajax_font_spacing":"","f_ajax_":"","f_more_font_title":"Load more button","f_more_font_settings":"","f_more_font_family":"","f_more_font_size":"","f_more_font_line_height":"","f_more_font_style":"","f_more_font_weight":"","f_more_font_transform":"","f_more_font_spacing":"","f_more_":"","f_title_font_header":"","f_title_font_title":"Article title","f_title_font_settings":"","f_title_font_family":"","f_title_font_style":"","f_title_font_weight":"","f_title_font_transform":"","f_title_font_spacing":"","f_title_":"","f_cat_font_title":"Article category tag","f_cat_font_settings":"","f_cat_font_family":"","f_cat_font_size":"","f_cat_font_line_height":"","f_cat_font_style":"","f_cat_font_weight":"","f_cat_font_transform":"","f_cat_font_spacing":"","f_cat_":"","f_meta_font_title":"Article meta info","f_meta_font_settings":"","f_meta_font_family":"","f_meta_font_size":"","f_meta_font_line_height":"","f_meta_font_style":"","f_meta_font_weight":"","f_meta_font_transform":"","f_meta_font_spacing":"","f_meta_":"","f_ex_font_title":"Article excerpt","f_ex_font_settings":"","f_ex_font_family":"","f_ex_font_style":"","f_ex_font_weight":"","f_ex_font_transform":"","f_ex_font_spacing":"","f_ex_":"","f_btn_font_title":"Article read more button","f_btn_font_settings":"","f_btn_font_family":"","f_btn_font_size":"","f_btn_font_line_height":"","f_btn_font_style":"","f_btn_font_weight":"","f_btn_font_transform":"","f_btn_font_spacing":"","f_btn_":"","mix_color":"","mix_type":"","fe_brightness":"1","fe_contrast":"1","fe_saturate":"1","mix_color_h":"","mix_type_h":"","fe_brightness_h":"1","fe_contrast_h":"1","fe_saturate_h":"1","m_bg":"","color_overlay":"","shadow_shadow_header":"","shadow_shadow_title":"Module Shadow","shadow_shadow_size":"","shadow_shadow_offset_horizontal":"","shadow_shadow_offset_vertical":"","shadow_shadow_spread":"","shadow_shadow_color":"","title_txt":"","title_txt_hover":"","all_underline_height":"","all_underline_color":"","cat_bg":"","cat_bg_hover":"","cat_txt":"","cat_txt_hover":"","cat_border":"","cat_border_hover":"","meta_bg":"","author_txt":"","author_txt_hover":"","date_txt":"","ex_txt":"","com_bg":"","com_txt":"","rev_txt":"","audio_btn_color":"","audio_time_color":"","audio_bar_color":"","audio_bar_curr_color":"","shadow_m_shadow_header":"","shadow_m_shadow_title":"Meta info shadow","shadow_m_shadow_size":"","shadow_m_shadow_offset_horizontal":"","shadow_m_shadow_offset_vertical":"","shadow_m_shadow_spread":"","shadow_m_shadow_color":"","btn_bg":"","btn_bg_hover":"","btn_txt":"","btn_txt_hover":"","btn_border":"","btn_border_hover":"","pag_text":"","pag_h_text":"","pag_bg":"","pag_h_bg":"","pag_border":"","pag_h_border":"","ajax_pagination_infinite_stop":"","css":"","td_column_number":1,"header_color":"","color_preset":"","border_top":"","class":"tdi_1","tdc_css_class":"tdi_1","tdc_css_class_style":"tdi_1_rand_style"}';block_tdi_1.td_column_number = "1";block_tdi_1.block_type = "td_flex_block_1";block_tdi_1.post_count = "4";block_tdi_1.found_posts = "4";block_tdi_1.header_color = "";block_tdi_1.ajax_pagination_infinite_stop = "";block_tdi_1.max_num_pages = "1";tdBlocksArray.push(block_tdi_1);விஷ்ணுபுரம் 2025 விருந்தினர்கள்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 1 – மு. குலசேகரன்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 2 – அரிசங்கர்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 3 – கே. நல்லதம்பி
விஷ்ணுபுரம் விருந்தினர் – 4 – ஜீவ கரிகாலன்
சிகண்டி – மலர்விழி மணியம்
சிகண்டி நாவலை வாசித்து முடித்த பொழுது என் தோழி பிரேம்மாயா அவர்கள் ஓஷோ அவர்களின் சில வரிகைகளை என்னிடம் பகிர்ந்தார்கள். அவை கீழ்கண்டவாறு,
“ஆதாம் தன் ஏதேன் தோட்டத்தை விட்டு, வெளியேறி, அலைந்து, திரிந்து பாதையைத் தவறவிட்டு, பின்னர் ஒரு காலத்தில் மீண்டும் தன் வீட்டிற்குத் திரும்புகிறான், வெகுதூரம் சென்றுவிடுகிறபோது ஆதாமாக இருப்பவன் மீண்டும் வீட்டை அடையும் போது இயேசுவாகிறான். வீடு நோக்கிய பயணத்தைத் தொடங்கும்போதே அவன் இயேசுவாகி விடுகிறான். ஆதாம் தான் முதல் மனிதன் இயேசு கடைசி மனிதன், ஆதாம் தொடக்கமாகவும் இயேசு முடிவாகவும் இருக்கிறார்கள், ஒரு வட்டம் அங்கே முழுமைமடைகிறது.”
இவ்வரிகளுக்கும் சிகண்டி நாவலின் நாயகன் தீபனிற்கும் நிறைய பொருத்தம் இருக்கின்றது.
தன் அம்மாவோடு சண்டையிட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் பதினைந்து வயது தீபனின் பாதையில் முன்னும் பின்னும் நகர்கின்றது கதை. லூனாசில் இருந்து கிளம்பியவன் தனது தாய்மாமாவின் வீட்டில் தஞ்சம் புகுந்து சௌவாட்டிலும் காராட் பஜாரிலும் இயங்கும் இருண்ட உலகிற்கு அவனது ஆசைகளும் பேராசைகளும் எவ்வாறு அவனை இழுத்துச் செல்கிறது என்பதும், அங்கே சரா என்னும் திருநங்கையை பெண் என நினைத்துக் காதலித்து, பின் ஒரு கட்டத்தில் அவள் ஒரு திருநங்கை என அறிந்து அவளைப் புறக்கணிக்க எண்ணியும், அவனது ஆண்மையை இழந்து, அதை மீட்டெடுக்கும் பொருட்டு அவன் மேற்கொள்ளும் இருண்ட பாதையும் எங்கு அவனை இட்டுச் செல்கிறது என்பது தான் கதையின் சாராம்சம்.
சிறுகதையோ நாவலோ வாசிக்கும் பொழுது நாம் வாழாத ஒரு வாழ்க்கையை வேறொரு நிலப்பரப்பில், வேறு மனிதர்களின் இடத்தில் நம்மைப் பொருத்திக் கொண்டு வாழ்ந்துவிட்ட அனுபவங்களை அடைய முடியும் எனில், அந்தப் படைப்பு ஒரு சிறந்த படைப்பிற்கான உதாரணம்.
அப்படியான அனுபவங்கள் அனைத்து படைப்புகளும் அளிக்கின்றனவா என்றால், இல்லை என்று தான் நினைக்கின்றேன். சில படைப்புகளை வெறும் Bird’s view-ல் இருந்து கூட வாசித்திருப்போம்.
ஆனால் சிகண்டியின் வாசிப்பின் வழி நான், தீபனாக, சராவாக, ஈ.புவாக, நிஷாம்மாவாக என்னால் வாழ முடிந்தது.
இந்நாவலின் அடித்தளம் ஈபு. ஈபு ஒரு மாபெரும் ஆளுமை. தனது சேவல்களைக் காக்கும் பகுச்சரா மாதாவின் உருவம் ஈபு. தாயம்மாகை என்ற முறையில் தன் ஆண் குறியை அறுவடை செய்து கொண்டு, தன்னை ஒரு பெண் என நிலைநிறுத்தியவர். சௌவாட்டில் தன்னை நாடி வரும் திருநங்கையினர்களுக்கு அறுவடை செய்து கொள்ள உதவியும், அவர்கள் விரும்பும் வாழ்வை அமைத்துக் கொள்ளவும் உதவி செய்கிறார்.
பகுச்சரா மாதா தனது சேவல்களை வஞ்சிப்போருக்குத் தரும் தண்டனை மிக நூதனமானது. அவளது உருவமான ஈபுவும் தனது பாதுகாப்பில் இருக்கும் திருநங்கைகளை அவ்வாறே காத்து வருகிறார்.
சிறுபான்மையினரைக் காக்கும் தலைவனுக்கென்று ஒரு அறம் உண்டு. நாட்டின் அரசனாகினும் தனது நிலத்திற்கும் மக்களுக்கும் ஒரு ஆபத்தென்றால் அதை எதிர்த்துப் போராடுவதும், வேண்டுமெனில் கொலை செய்வதும் தான் அந்த அரசனிற்கு உரிய தர்மமாகவே இருக்க முடியும். அப்படிப்பட்ட ஆளுமை தான் ஈ.பு.
சரா, ஈ.பு வை அம்மா என்றும், நிஷாம்மாவை சின்னம்மா என்றும் அழைக்கிறாள். ஈ.பு என்றால் ‘அம்மா‘ என்று பொருள். தன்னிடம் அடைக்களம் நாடி வரும் திருநங்கைகளுக்கு எல்லாம் அவர் “அம்மா” தான். இந்நாவல் திருநங்கையினரின் வாழ்வின் வழி உணர்த்தும் ஒன்று, தாய்மை என்கின்ற தகுதியை அடைய ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என்றோ, ஒரு உயிரைக் கருவில் சுமக்க வேண்டும் என்றோ கட்டாயம் ஏதும் இல்லை என்பது. தாய்மை என்பது ஒரு உணர்வு. அந்த உணர்வு ஒரு ஆணிற்குள் மேலோங்கி இருப்பினும் அதற்குப் பெயர் ‘தாய்மை’ தான் என்றும், அது பெண்மைக்கு உரியதென்றும் நிலைநாட்டும் கதைமாந்தர்கள் தான் ஈபுவும், நிஷாம்மாவும், சராவும்.
ஈ.பு எவ்வாறு பகுச்சரா மாதாவின் பிம்பமோ, சரா, கருணையின் மாதாவான குவான் யின்–ன் பிம்பம். உடைந்த பொருட்கள் எவற்றையுமே தூக்கி எறியாமல், தன்னுடைய கைவண்ணத்தினால் அவற்றை ஒன்றிணைத்து உயிர் தரும் அவளுடைய குணம், உடைந்த ஒவ்வொன்றிலும் அவள் தன்னையே காண்கிறாள் என்பதனைக் காட்டுகிறது. மேலும், அவற்றுக்கு வேறொரு வடிவம் தந்து, அவள் தன்னையே உயிர்ப்பித்துக் கொள்கிறாள் என்று எனக்குத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட குணம் கொண்டவளால் எப்படி தீபனை தண்டிக்க முடியும்.
தன் கடவுள் முன் மாத்திரம் அவள் ஆடும் அப்ஸரஸ் நடனத்தை தீபனிற்கும் அவள் காட்டுவதில், தீபனின் மேல் அவளுக்கு இருக்கும் அன்பின் ஆழம் வேறு என்று காட்டுகின்றது.
நான் இந்த உலகில் பயப்படும் முதல் மனிதர்கள், மன்னிக்கின்ற குணம் கொண்ட மனிதர்களை. தனது உடலைத் தாண்டி ஆன்மாவை நொறுக்கியவர்களை மன்னிக்கத் தயாராக இருக்கும் மனங்களை. ஒருவரை எத்தனை முறை மன்னிக்கலாம் என்று இயேசுவைக் கேட்டால் ‘ஏழு எழுபது முறை’ என்கிறார்.
சோனியாவால் மட்டும் தான் ரஸ்கோல்னிகோவிற்கு மன்னிப்பும் மீட்பும் வழங்கிட முடியும். நெக்கில்யுதோவை மன்னிப்பதின் வழி மட்டும் தான், தன்னை மீட்டுக்கொள்ள முடியும் என்று மஸ்லோவா சொல்கிறாள்.
அதே வழியில் சராவால் மட்டும் தான் தீபனுக்கு மன்னிப்பும் மீட்பும் வழங்கிட முடியும். இறுதியில், “உன்ன சாவடிக்கத் தான் நான் வந்தேன்?” என்று தீபன் கூறும் தருணத்தில், அவனுடைய ஆன்மா மாசடையக் கூடாதென்று, சரா மேற்கொள்ளும் முடிவில் அவள் தேவதை ஆகின்றாள். அக்கணம் தீபனிற்கு அவனது ஆண்மையைத் திருப்பித் தந்து அவள் தன்னை அப்ஸரஸ் என்றும் குவான்–யின் என்றும் நிறுவுகிறாள்.
என் நிஜ வாழ்வில் என்னால் இந்த அளவு ஒருவனை நேசிக்க முடியுமா என்று கேள்வி எழுந்தது என்னுள்.
ஆனால் நாவல் அப்படியொரு சுதந்திரத்தை அந்தரங்கமாக வழங்குகின்றதே. சராவாக உருமாறி தீபனை என்னால் நிபந்தனைகளின்றி நேசிக்கவே முடிந்தது. மன்னிக்கவும் முடிந்தது.
அதே சமயம் தன் மகளை அழிக்கத் துணிந்தவனை மகளே மன்னித்தாலும் தாயால் மன்னிக்க முடியாது. ஈ.புவாகவும் நிஷாம்மாவாகவும் என்னுடைய பயணத்தில் என்னால் தீபனை ஒரு இம்மி அளவு கூட மன்னிக்க முடியவில்லை.
பொதுவாக, பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று வாதாடுவது மிக சுலபமான ஒன்று. நாவல் நெடுகிலும் சௌவாட்டிலும், காராட் பஜாரிலும் இயங்கும் இருள் உலகையும், திருநங்கைகளுடயை இருண்ட வாழ்க்கையைப் பற்றியும் பேசப்பட்டாலும், என்னை மிகவும் பாதித்தக் கதாப்பாத்திரம் “தீபன்” தான்.
தன் வீட்டை விட்டு வெளியேறி, ‘தாய் மாமன் வீட்டில் தஞ்சம் புகுந்து, பிறகு காராட் பஜாரில் திருட்டுப் பொருட்களை கூவி விற்பவனாக, பிறகு பாலியல் விடுதிக்குக் காவலனாக, போதைப் பொருள் விற்பவனாக, மேலும் திருநங்கையனரின் இருள் வாழ்வில் சிக்கிக் கொள்கிறான். பின்பு ஒரு கட்டத்தில் இந்த மொத்த இருளில் இருந்தும் தன்னை மீட்டுக் கொண்டு வீடு திரும்பும் நோக்கத்தில் ஓடுகிறான். அந்த ஓட்டத்தின் நடுவில் ஒரு கணம் நின்று யோசிக்கின்றான். அவன் உண்மையில் எதனைக் கண்டு ஓடுகிறான் என்று, ஒரு கேள்வி அவனுள் எழும். புறத்தில் அவனைச் சுற்றி இயங்கும் இருள் உலகைத் தவிர்த்து அவன் தனக்குள்ளேயே திரும்பிப் பார்த்த கணம் அது. அவனுள் இருக்கும் இருளை ஒவ்வொன்றாக விலக்கிக் கொண்டே செல்ல, அவ்விருளின் அடிமட்டத்தில் “க்காவா” என்ற ஒலி கேட்கின்றது. தீபனின்
நண்பனது மூளை வளர்ச்சி குன்றிய தங்கையின் குரல் அது. அவளுக்கு எல்லா மொழியும், உணர்வும் ‘க்காவா’ என்பது மாத்திரமே. தீபனால் வன்புணரப் பட்ட போதிலும் அவள் எழுப்பியது “க்காவா” என்ற ஒலி மாத்திரமே.
நாம் எல்லோருமே பிறந்த பொழுது இருந்த குழந்தைத் தனத்துடன் வாழ முடிகின்றதா? ஆம் என்றால் எது வரை ? ஏவால் தந்த ஆப்பிளை ஆதாம் உண்ணும் வரை தான். அவ்வகையில் தீபன் எனக்கு ஒரு ஒட்டுமொத்த உணர்வின் பெட்டகமாகத் தான் தெரிகின்றான். அவனுக்குள் இருக்கும் இருளுக்கும் ஒளிக்கும் மாறிக் கொண்டே இருக்கின்றது அவனுடைய பிம்பம்.
அம்மாவிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியவன் தான், அதே அம்மாவிற்காக ஏங்குகிறான். அம்மாவின் மடி போதும், அம்மாவின் மன்னிப்பு போதும், அவனுக்கு மீட்பு கிடைத்துவிடும் என்று உறுதியாக நம்புகிறான்.
பாலியல் விடுதியில் உடல்நிலை சரியில்லாத பெண்ணோடு உக்கிரமாக உறவு கொள்ளச் சொல்வது அவனுள் இருக்கும் இருள். அதே சமயம் அந்தப் பெண் வாடி வதங்கி இருக்கின்றாள் என்று அவள் மீது ஒரு துளி கருணை காட்டுவது அவனுள் இருக்கும் ஒளி.
சராவிற்குள் இருக்கும் பெண்ணிற்கும் ஆணிற்கும் அவன் அல்லாடும் பொழுது அவன் மீது பரிதாபம் தான் வந்தது எனக்கு. சராவைக் கொல்வதொன்று தான் அவன் தப்பிக்க ஒரே வழி என்று அவன் மேற்கொள்ளும் பயிற்சிகள் யாவும் ஒரு வித அச்சத்தைக் கிளர்த்தியது என்னுள். உதாரணமாக ஒரு சிறு கருங்குரங்கினை அவன் கொன்ற விதம். அப்பார்ட்மெண்டில் கண்ணன், தினம் விளையாடும் பூனையினை தீபன் கொன்ற அந்தத் தருணம். அதனைக் கொன்று விட்டு தனது போர்வைக்குள் ஒழிந்து கொண்டு அவன் சிந்திய ஏளனச் சிரிப்பு அவன் மீது அத்துனை கசப்பை உண்டாக்கியது. எத்தனை குரூரம் அவனுக்குள் இருக்க வேண்டும் என்று கோபம் எழும் பொழுது அடுத்த கணமே அந்த பூனைக்காக வருந்தும் கண்ணனை எண்ணி வருந்தும் தீபனையும் காண முடிந்தது.
இறுதிக் கட்டத்தில் ஊரை விட்டு ஓட முற்படும் முன்பு கண்ணனுக்காகத் தன் மாமாவின் கடனை அடைத்துவிட்டுத் தான் கிளம்புகிறான்.
தீபனின் கதாபாத்திரத்தை நவீன் அவர்கள் ‘நான்‘ என்ற நிலையிலிருந்து ஏன் எழுதினார் என்று என்னுள் கேள்வி எழுந்தது. பொதுவாக அது ஆசிரியருடைய குரல் என்று எடுத்துக் கொள்வோம்.
ஆனால் இந்த நாவலில் ‘நான்’ என்கிற நிலையில் இருந்து எழுதி, எழுத்தாளர் நவீன் அவர்கள், அவருடைய வாசகர்களுக்கு விடுக்கும் ஒரு மாபெரும் சாவல் என்று எனக்குத் தோன்றுகிறது..
தீபன் கண்ட அனைத்துமே அவனுக்குள் இருக்கின்ற இருள் மட்டும் தானா?. அப்படியான இருண்ட பக்கங்களும் இருண்ட அறைகளும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கலாம் தானே?. நவீன் அவர்கள் தீபனின் கதாபாத்திரம் வழியாக வாசகருக்கு விடுக்கும் பெரும் சவால் அது தான் என்று எனக்குத் தோன்றுகிறது.
நம்முள் மண்டிக் கிடக்கின்ற இருளை உலகுக்கு அறிக்கை இடத் தேவையில்லை. குறைந்த பட்சம் ஒருமுறையேனும் நம்முள் திரும்பிப் பார்க்கின்ற தைரியம் இருக்கின்றதா என்று நம்மை சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம்.
ஆசிரியரின் குரல் என்று தப்பித்துக் கொள்ளாமல் தீபனாக உருமாறி சிகண்டி நாவலைப் பிரவேசிக்க முடியுமெனில் நம்முடைய இருளைக் காண்பதும் சாத்தியம் என்று தான் நினைக்கின்றேன்.
திருநங்கையை மையப்படுத்தி, சு. வேணுகோபால் அவர்கள் எழுதிய பால்கனிகள் எனும் குறுநாவல் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமானதொரு மைல் கல். அதிலருந்து ம.நவீன் அவர்களின் சிகண்டி ஒரு மாபெரும் பாய்ச்சல்.
அமெரிக்காவில், கலிபோர்னியா மாகானத்தில் டெத் வேலி நேஷனல் பார்க் (Death Valley National Park) என்கிற இடம் உள்ளது. 3.4 மில்லியன் ஏக்கரில் அமைந்துள்ள இவ்விடத்தில் எண்ணற்ற பெரிய அபூர்வு மலைகளைக் காண முடியும். பல்வேறு வண்ணங்களிலும், வடிவங்களிலும் பெரும் நிலப்பரப்பில் உயர்ந்து, அகன்று, பரந்து இயற்கை செதுக்கி இருக்கும் சிற்பங்களாக மலைகளின் கூட்டம் அவ்விடம். அவைகளில் ஒன்று, Badwater Basin என்ற இடத்தில் அமைந்துள்ள கருப்புமலை(Black Mountains). அம்மலையின் கருமை என் மனதை ஒருவகையான அலைக்கழிப்பிற்கு உள்ளாக்கியது. அவ்வளவு பெரிய அடர்ந்த கருமையை என்னால் என்னுள் ஏற்றி நிரப்பிக் கொள்ள முடியாமல் தவித்தேன். அம்மலை ஏதோ இவ்வுலகின் ஒட்டுமொத்த இருளையும் தன்னுள் நிரப்பிக் கொண்டது போல வீற்றிருந்தது. அம்மலையைக் காணக் காண என்னுள் பெயர் தெரியாத உணர்வலைகள் என் கட்டுப்பாட்டில் இல்லாமல் அலை போல எழும்பிக் கொண்டே சென்றது. அத்துணை கார் இருளை என்னால் தாளமுடியவில்லை. அதே இருளாக, அதே உணர்வாக, அதே கனமாகத்தான் சிகண்டி நாவல் என்னுள் பரவி இருக்கின்றது.
முடிவாக, ஒஷோவின் கூற்றுப்படி ஆதாம் ஆக வீட்டை விட்டு வெளியேறியவன் மீண்டும் வீட்டிற்குத் திரும்ப வேண்டுமெனில் அவன் இயேசுவாகினால் மட்டுமே அது சாத்தியம். அதுவே இந்நாவலின் முடிவும் ஆகும்.
–மலர்விழி மணியம்.
சிகண்டி வாங்கJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

