வடகிழக்கு மாநிலங்களிலுள்ள இனவாதம், கலவரச்சூழல் பற்றி நமக்கு பெரிதாக ஏதும் தெரியாது. அங்கே உள்ள பழங்குடி அமைப்புகள் இந்திய ராணுவத்தை எதிர்த்தால், இந்திய ராணுவம் அவர்களுக்குமேல் நடவடிக்கை எடுத்தால் அவர்களை ‘சுதந்திரப்போராளிகள்’ என்றும் ‘முற்போக்கு விடுதலைச் சக்திகள்’ என்றும் இங்குள்ள சில குழுக்கள் நமக்குச் சொல்கின்றன. ஆனால் அவர்களின் முதன்மை வன்முறை தங்களுக்குள்ளேயேதான். ஏன் அந்த வன்முறை? அதன் பண்பாட்டுவேர்கள் என்ன? ஏன் அவற்றை அறிந்துகொள்ளவேண்டும்? ஏனென்றால் எங்கும் எப்போதும் இனவாதம் பற்றி எரியலாம். நாம் நம்மைப்பற்றி அறியத்தான் வடகிழக்கை அறியவேண்டியிருக்கிறது
Published on August 24, 2025 11:36