இரா. முருகன்'s Blog, page 32

May 21, 2023

மருந்தோடு வந்த யவனனும் தெருவெங்கும் திரிதரு மாந்தரும்

தினை அல்லது சஞ்சீவனி நாவலில் யவனன் வரும் பதினைந்தாம் அத்தியாயத்தில் இருந்து
மருத்துவர் நீலன் தர்மனார் தினசரி வாழ்க்கை ராஜநர்த்தகியின் வனப்புள்ள குதம் பற்றிய கவலைகளில் ஆழ்ந்திருக்கக் கடந்து போன தை மாதம் தைப்பொங்கலுக்கு அடுத்த வாவு நாளில் அவரைத் தேடி ஒரு யவனன் வந்தான். நல்ல உயரமும் தீர்க்கமான நாசியும் விநோத உடுப்பும் மின்னல் போல் காலில் பளிச்சிடும் காலணிகளுமாக வந்தவன் கோட்டை மதில் அருகே நின்று கொச்சைத் தமிழில் உரக்கக் கேட்டது – மருத்துவன் உண்டோ இங்கே மருத்துவன் உண்டோ.

எங்கெல்லாம் சத்தம் எழுப்பப் படுகிறதோ அங்கெல்லாம் ஓடிப் போய் நின்று வேடிக்கை விநோதம் என்னவென்று நோக்க வேலையற்ற ஒரு கூட்டம் முதற்சங்க காலத்துக்குப் பல காலம் முன்பிருந்தே மாநகர் அல்லங்காடியிலும் நாளங்காடியிலும் திரிந்து கொண்டிருக்குமே, திரிதரு மாக்கள், அவர்களை எதிர்பார்த்துத்தான் அவன் அகவியது.

பத்து பேர் அப்படி இப்படி ஒரு நிமிடத்தில் அங்கே வந்து கூட்டமாக நிற்க, யவனன் கூவினான் – மருத்துவர் இங்கே எந்தத் திசையில் இல்லம் ஏற்படுத்தி வசிக்கிறார்?

அங்கே விநோதம் வேடிக்கை பார்க்க வந்து நின்ற அத்தனை பேருக்கும் மருத்துவர் எங்கே இருக்கிறார் என்று தெரியும். அவர்களுக்கு அரசனில் தொடங்கி மருத்துவர், படைத் தலைவர், கோமாளி வரை வார்த்தையால் சீண்டி வேடிக்கை பார்க்கக் கூடத் தெரியும். பொழுது போகாவிட்டால் ராஜநர்த்தகி மாருக்கும் பெருச்சாளிக்கும் சிலேடையாக நேரிசை வெண்பா பாடச்சொல்லிக் கேட்க உடன் எழுதுமளவு கவிதையும் தெரியும். அவர்களின் சில பாட்டுகள் கவிமருந்து உட்பட அரசவைக் கவிஞர்கள் மண்டையைக் குடைந்து கொண்டு யாத்தளிக்கும் சராசரிப் பாக்களை விடச் சுவையானது என அரசனே சொல்வதாகக் கேள்வி. யார் எழுதியுமென், சிருங்காரத்தில் பூத்த செய்யுள் எக்காலமும் சோடை போகாது.

என்றாலும் அவர்கள் தேவையில்லாத இடத்தில் எல்லாம் புகுந்து புறப்படுகிறவர்கள். இங்கே வந்திருப்பவன் யார் என்ன என்று தெரிந்து கொள்ளாவிட்டால் அவர்தம் சிரம் வெடித்து விழுந்துவிடுமன்றோ.

நான் ரோமாபுரியிலிருந்து வருகிறேன் என்று அவன் தொண்டையைக் கரகரப்பு நீக்கிச் செறுமிக்கொண்டு தொடங்க, நாங்களும் ரோமாபுரியிலிருந்துதான் வந்தோம் என்று ஒரு கழுவேறி சிரிக்காமல் மறுமொழி செப்பினான். அங்கே அடுத்து ஒரே சிரிப்பு.
பகடிக்குப் பத்து வழி. அதுவும் தொழிலியற்றா மாக்கள் இலக்கின்றித் திரிதரும்போது.
மருத்துவரைச் சந்திக்க வந்தேன் என்றான் வந்தவன்.

அவர் யவனர்களோடு பேச மாட்டார்.

வாசிக்க நாவல் வாங்கக் கோருகிறேன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 21, 2023 20:01

May 19, 2023

நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ வெளியாகி விட்டது

ஸீரோ டிக்ரி பப்ளிஷிங் உரிமையாளர்களும் இந்நாவல் பதிப்பாளர்களுமான நண்பர்கள் காயத்ரி, ராம்ஜி நரசிம்மன் எழுதுகிறார்கள்-

மிளகு நாவலின் வெற்றியைத் தொடர்ந்து EraMurukan Ramasami எழுதிய தினை அல்லது சஞ்சீவனி நாவல் அச்சாகி கைக்கு கிடைத்து விட்டது.

முதல் முறையாக அவர் நாவலை கெட்டி அட்டையில் அச்சிடுவதில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் பெருமை கொள்கிறது.

200 பிரதிகள் மட்டுமே கெட்டி அட்டையில் அச்சிடப்படும். முதல் 100 பிரதிகளுக்கு மட்டும் நாற்பது சதவீதம் தள்ளுபடி அறிவித்திருக்கிறோம். இதை வாங்கிப் படித்து பயனடையும் நண்பர்கள் உங்கள் வாசிப்பனுபவத்தை வலைத்தளங்களிலும் உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டால் பெருமகிழ்ச்சி அடைவோம்.

——————————————

நான், இரா.முருகன் எழுதுகிறேன்

’தினை அல்லது சஞ்சீவனி’ நாவலை மகிழ்ச்சியோடு வாசக நண்பர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

கெட்டி அட்டை பதிப்பாக, என் பதிப்பாளர்களான ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடாக நாவல் வெளிவந்திருக்கிறது.

பதிப்பக நண்பர்கள் ஆர்.காயத்ரி, ராம்ஜி நரசிம்மன் ஆகியோர் இந்த ச்ந்தோஷ சமாசாரம் பகிர்ந்து கொள்கிறார்கள்.

அதோடு, நாற்பது விழுக்காடு தள்ளுபடி விலைக்கு நாவல் கிடைக்கிறது என்றும் தகவல் பகிர்கிறார்கள். நன்றி நண்பர்களே.

வாங்கி வாசித்து வாசிப்பனுபவம் பகர நண்பர்களை வரவேற்கிறேன்

நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ சலுகை விலைக்கு வாங்க

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 19, 2023 03:10

May 16, 2023

நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ – அணையப் போகும் பழந்தீ

வழி மறந்த கடைசிப் பறவை வீடு திரும்பும் பின் அந்திப் பொழுதில் இந்தப் பெண்கள் திரும்பினார்கள்.

இலுப்பெண்ணெய் தாராளமாக ஊற்றிப் பெரிய பருத்திப் பஞ்சுத் திரிகள் எண்ணெய் நனைத்துக் கொளுத்திய சுடர்கள் தெருவெங்கும் வீட்டு மாடப்புரைகளில் இருந்து ஒளி வீச இன்னும் சிறிது நேரத்தில் இரவு நிலம் போர்த்தும்.

குயிலிக்கு வியப்பாக இருந்தது. ஐம்பதாம் நூற்றாண்டில் இருந்து மூன்றாம் நூற்றாண்டுக்கு வந்து சேர்ந்தாலும், இரவும் பகலும் அந்தியும் இன்னும் எந்த வித்தியாசமும் இல்லாமல் வந்துதான் போகும்.

எப்போதும் பிரகாசமாக ஒளிரும் துர்க்கையம்மாள் பயணியர் சாலையின் ஐந்து விரிவான வாசல் படிகள் கூடுதல் வெளிச்சத்தை அளிக்க, படிகள் ஒவ்வொன்றிலும் நிலவிளக்கு ஒன்றும் ஐந்து முகக் குத்துவிளக்கும் சுடர் வீசி எரிந்ததே காரணம் என்று புலப்பட்டது.

சிறு அகல் விளக்குகளை எரிய வைத்துச் செப்புத் தட்டில் வைத்து உள்ளேயிருந்து எடுத்து வந்த கிழவியம்மாள் அவர்களிடம் உரக்கச் சொன்னாள் – குழந்தைகளே, வாருங்கள் விளக்கேற்றி இருள் அகற்றுவோம். குறிஞ்சித் தெய்வம் முருகன் வேலெறிந்து பகைவெல்ல மேதினியில் அவதரித்த புனிதமான கார்த்திகை தினம் இது.

சொன்னது மனதுக்கு இதமாக இருந்தது. கடந்து வந்த நாற்பத்தெட்டு நூறாண்டுகளில் எத்தனை விழாக்கள் காலப் பிரவாகத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயின. எத்தனை புதியதாக ஏற்பட்டு வளர்ந்து காலம் காலமாகத் தொடர்கின்றன என்று குயிலி ஆச்சரியப்பட வானம்பாடி வீட்டுக்கு உள்ளே நுழைந்தாள்.

தரை முழுக்கச் சின்னஞ்சிறு தீபங்கள் வா, வந்து என்னை எடுத்துக் கொள், இருட்டில் இருந்து வெளிச்சம் ஏகலாம் வா என்று சுடர்முகம் புன்னகைக்க, ஆடி அலைந்தன. வானம்பாடி தீச்சுடர் அமர்ந்துவிடாமல் ஓர் அகலை இரு விரல்கொண்டு தூக்கினாள். பார்த்து பார்த்து என்று பின்னாலேயே வந்தாள் கிழவியம்மாள்.

களிமண் பிசைந்து அகலாக்கிச் சுட்ட தீபம் என்பதால் கொஞ்ச நேரம் ஒளிர்ந்ததுமே இந்த அகல் சூடாகி விடும். அதை உள்ளங்கையில் பூத்தாற்போல் எடுத்து வைத்துக்கொண்டு எடுத்துப் போனால் சுடாது.

சொல்லியபடி எப்படி அதைச் செய்வது என்று செய்தும் காட்டினாள்.

சிறிது நேரத்தில் பயணியர் சாலை மற்ற வீடுகள் போல் பிரகாசமாக ஒளிர்ந்தது. குயிலி இருகை உள்ளங்கை எதிரே பார்த்திருக்க அந்தக் கார்த்திகைக் காட்சியை ரகசியமாகப் படம் பிடிக்க முனைந்தாள்.

காலக் கோட்டின் குறுக்கே நிகழும் இந்தக் கார்த்திகைப் பெருவிழாவும், தலைமுறை கடந்த இவர்கள் நாலாயிரத்து எண்ணூறு வருடம் பின்னால் சென்றிருப்பதும் படம் எடுக்க வரமாட்டாமல் குழம்பிப்போய் ஒளி மட்டுமாகத் தெரிந்தது.

படம் பிடிக்க முடியலே அம்மச்சி என்றாள் அவள் கிழவியம்மாளிடம். ஓவியம் வேணுமா இதோ என்று அவள் வீட்டுக்கு உள்ளே போய் மரப்பட்டையில் வண்ணம் பூசி எழுதிய கார்த்திகைத் திருநாள் ஓவியத்தோடு வந்தாள்.

தெருக்கோடியில் நின்ற வழிப்போக்கன் ஒருத்தன் இரண்டு வருடம் முன் வரையலையோ படம் வரையலையோ என்று வீடு வீடாகக் கேட்டு அந்தந்த நிமிடத்தில் வரைந்து கொடுத்து ஒரு பொற்காசு வாங்கிப் போனான்.

கிழவி, நம் வீட்டில் வந்து பார்த்து வரைந்தது இது என்று மகிழ்ச்சியோடு கூறினாள். இந்த ஓவியத்தில் அம்மாச்சி ஏன் இல்லாமல் போனது என்று குயிலி கேட்டாள். வெளிச்சத்தை ஓவியமாக்கும்போது எனக்கு என்ன வேலை அதுவும் அணையப் போகிற பழந்தீ.

தீயில் ஏது பழசும் புதுசும் எனக் கேட்டாள் வானம்பாடி.

நாவல் அத்தியாயத்தை முழுவதும் வாசிக்க, இங்கே சொடுக்கவும்

தீயில் ஏது பழசும் புதுசும்!

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 16, 2023 19:29

May 14, 2023

கெருஸோப்பாவில் இருந்து ஹொன்னாவருக்கு ஒரு பயணம் – பெருநாவல் மிளகுவில் இருந்து

வேலைக்கு விடுப்பு வந்த தினம் என்று நிறைவேற்றிக் கதவு சார்த்திப் பூட்டுப் போட யாருக்கும் கஷ்டமில்லை. இன்று அப்படி கடைவீதி உறங்கும் பௌர்ணமி வாவுதினம். அழகான அதிகாலை.

பௌர்ணமி வாவுதினமும், அமாவாசை வாவுதினமும் சிறுமிளகு பெருநாவல் சிறுபகுதிக்கு சொடுக்குகவன் மஞ்சுநாத்தின் அப்பா பரமன் பெரும்பாலும் ஜெருஸோப்பா வீட்டில் இருக்கும் நாட்கள் இல்லை. ஹொன்னாவருக்கு வந்து ரதவீதி மிட்டாய் அங்காடியில் ஏதாவது புது இனிப்புப் பலகாரம் செய்து பார்க்கும் முயற்சிகளில் இருப்பார் பரமன்.

வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்தால், ஊர் திரும்பணும், உற்றவர்களோடு பம்பாயில் சேர்ந்து குடும்பம் நடத்தணும் என்று மனம் சதா நச்சரித்துக் கொண்டிருக்கும். ஹொன்னாவருக்குப் போவது தன்னிடமிருந்து தானே தப்பித்து ஓடுவது என்று பரமன் தனக்குள் சொல்லிக் கொள்வார்.

வாவுநாள் விடிகாலையில் அங்கே போகும்போது குழந்தை மஞ்சுநாத் உறங்கிக் கொண்டிருப்பான். ராத்திரி திரும்பும்போது அவன் நித்திரை போயிருப்பான்.

”நீர் ஹொன்னாவர் போகிறபோது அவனையும் கூட்டிப் போனால் என்ன? போகிற வழியில் வேடிக்கை எல்லாம் காட்டினால் பார்க்க மாட்டேன் என்றா சொல்லப் போகிறான்?” என்று ரோகிணி பரமனிடம் வாதாடுவாள்.

”அவன் பார்த்திடுவான் தான். ஆனால் நான் சாரட்டில் உட்கார்ந்ததும் உறங்கி விடுகிறேனே. என்னத்தை வழியில் மரமும் செடியும் தடாகமும் காட்டுவது?” என்று பரமன் தலையைக் குலுக்கி, நடக்காத காரியம் என்பார்.

”சரி உம்மோடு சாரட் உள்ளே உட்கார வேணாம். ரதசாரதி அருகன் கூட உட்கார்ந்து வரட்டுமே” என்பாள் விடாமல் ரோகிணி. தேர்த்தட்டில் குழந்தை சௌகரியமாக உட்கார முடியாது என்று மறுப்பார் பரமன்.

இந்த பௌர்ணமி வாவுநாள் அவன் அருகனோடு உட்கார்ந்து வரட்டும். எப்படி இருக்கு என்று பார்க்கலாம் என்பாள் ரோகிணி. அவளும் ஹொன்னாவர் போகத் திட்டமிடும் வாவு நாளாயிருக்கும் அது.

ஒரு வாவன்று ரோகிணி அருகனை எழுந்து பின்பக்கப் படியில் உட்கார்ந்து வரச் சொன்னாள். லகானைப் பற்றி இழுத்து அவளே சீராக வண்டி ஓட்டி வந்தாள். மஞ்சுநாத் பக்கத்தில் தேர்த்தட்டில் உட்கார்ந்து சிரிப்பும் கொம்மாளமுமாக உற்சாகமாகக் கூச்சலிட்டுக் கொண்டு வந்ததை பரமன் ஆச்சரியத்துடன் கவனித்தார்.

”ஹொன்னாவர் போய்ச் சேர்ந்த பிறகு என்ன செய்வான் அவன்?” பரமன் ரோகிணியை விடாமல் அடுத்த கேள்வி கேட்டார்.

அவன் பாட்டுக்கு விளையாடிக் கொண்டிருப்பான் என்றாள் ரோகிணி,

”மிட்டாய்க்கடையில் அதுவும் பௌர்ணமி வாவுநாள் அன்றைக்கு அவனோடு விளையாட யார் உண்டு?” பரமன் கேட்டார்.

”அவனே விளையாடட்டும். லட்டு உருண்டையை எடுத்து சுவரில் அடிக்கட்டும். அல்வாவை நாற்காலியில் பசையாக ஒட்டி வைக்கட்டும். ஜெயவிஜயிபவ இனிப்பை வாசலில் வரவேற்கும் தலையாட்டி பொம்மையின் தலைப்பாகைக்கு உள்ளே திணித்து வைக்கட்டும்”.

விளையாடினான். தனியாகக் களிக்க சீக்கிரமே அலுத்துப் போனது. அடுத்த வாரம் கடை ஊழியர்கள் ரெண்டு பேருக்கு பவுர்ணமி வாவுநாளுக்கு முந்திய நாள் அல்லது அமாவாசை வாவுதினத்துக்கு முந்திய நாள் விடுப்பு கொடுத்து, வாவு நாளன்றைக்கு வேலைக்கு வரணும் அவர்கள். அலமாரிகளில் புதியதாக உண்டாக்கிய இனிப்புகளை சீராக அடுக்கி வைப்பது பாதி நாள் வேலை. மஞ்சுநாத்தோடு விளையாடுவது இன்னொரு பாதிநாள் வேலை.

அதை நிறைவேற்றத்தான் இப்போது பரமன் மஞ்சுநாத் கூட ஹொன்னாவருக்குப் போய்க் கொண்டிருக்கிறார். கூடவே ரோகிணியும் உண்டு.

சாரட் வண்டி கல் பாளம் மேவிய தரையில் சப்தமிட்டுப் போகும் ஒலியையும் குதிரைகளின் தாளம் தவறாத குளம்படி ஓசையையும் காது கொடுத்துக் கேட்கிறார்.

பக்கத்தில் இருக்கும் மஞ்சுநாத்திடம் அந்தத் தாளம் தப்பாமல் தகிட தக திமி தகிட தக திமி என்று சொல்கட்டை உதிர்க்கிற உற்சாகம் அவர் குரலில் பொங்கி வழிகிறது.

தகிட தக ஜுணு தகிட தக ஜுணு.

ரோகிணி குதிரைக் குளம்பொலியோடு இசைந்து வர இன்னொரு சொல்கட்டை உதிர்க்கிறாள். மஞ்சுநாத் கைகொட்டி சந்தோஷமாகச் சிரித்தபடி அதை அலகு தவறாமல் அப்படியே சொல்கிறான்.

தகிட தக ஜுணு.

இரண்டு சொல்லையும் கலந்து சொல்கிறான் மழலை மாறாத குரலில் –

தகிட தக திமி தகிட தக ஜுணு

தகிட தக ஜுணு தகிட தக திமி

வாஹ் ஜனாப். ரோகிணி குனிந்து நெற்றியில் கை வைத்து மஞ்சுநாத்தின் திறமைக்கு மரியாதை செய்கிறாள். அவன் ரோகிணியின் மடியில் படுத்துக்கொண்டு பரமனைப் பார்த்து, அப்பா நீயும் வா என்கிறான்.

ரோகிணி உதட்டை மெல்லக் கடித்தபடி பரமனைக் காதல் இனிப்புத் தடவிப் பார்க்கிறாள். அவர் கல் போல் உட்கார்ந்திருக்கிறார். தாளம் அவர் குரலில் விடாமல் ஒலிக்க.

வண்டியின் அச்சு திரும்பும் ஒலியோடு அந்த சொல்கட்டு இசைந்து வர, தேர்த் தட்டில் இருந்து அருகன் குரல் உயர்த்திப் பாடும் சத்தம். துங்கபத்ரா ஆற்றில் படகு செலுத்திப் போகிற படகோட்டிகளின், ஓங்கி உயர்ந்து சகலமானதிலுமிருந்தும் அகன்று பரவும் குரல் அது.

அதே நிஜம் அதே நிஜம் என்று ஒவ்வொரு சரணத்திலும் கூட்டுக் குரலாக பரமனும் மஞ்சுநாத்தும் சிரித்தபடி முடித்து வைக்கிற சந்தோஷம்.

சாரட் ஜன்னலில் ஒரு வண்ணத்திப் பூச்சி வந்து அமர்கிறது. டிட்லி என்கிறான் கடிபோலி மொழியில். பட்டாம் பூச்சி என்கிறான் தமிழில். சித்ர சலபம் என்கிறான் மலையாளத்தில். சிட்டே என்கிறான் கன்னடத்தில். போர்பொலேடா என்கிறான் போர்த்துகீஸில்.

பரமன் மலைத்துப் போய் உட்கார்ந்திருந்தார். மூன்று வயதில் இத்தனை மொழி கொஞ்சம் போலவாவது எப்படி கற்றுக் கொண்டான்? அவனையே கேட்கிறார். தும்பைப் பூ மாதிரி முகம் மலர்ந்து பிரகாசிக்கச் சொல்கிறான் – என் சிநேகிதங்க வேறே வேறே பாஷை பேசுவாங்க. எல்லோருக்கும் பட்டாம்பூச்சி சிநேகிதி. சரிதானே அம்மா”.

ரோகிணி அவன் தலையைத் தடவி முத்தம் தருகிறாள். ஒரு வினாடி அவள் கண்கள் பரமனின் கண்களைச் சந்திக்கின்றன.

“குழந்தை புத்திசாலின்னு நிரூபிச்சுண்டே இருக்கான், பாரும்” அவள் பரமனிடம் சொல்கிறாள்.

“நீர் இவனுக்கு பதிவாக கணிதமும் விக்ஞானமும் கற்றுக் கொடுக்கிறீரா?” என்று வேண்டுவது போல் பரமனிடம் கேட்கிறாள்.

பாதி மரியாதையாக நீர் என்று விளிப்பது கல்யாணம் நடந்த நாள் முதல் அவளுக்குச் சுலபமாகியுள்ளது.

”நானா? கணிதமா? அது உம்முடைய திறமை சம்பந்தப்பட்ட விஷயம் ஆச்சே. தினம் அரை மணி நேரம் கற்றுக் கொடும்” என்கிறார் பரமன். வாங்கிய அரை மரியாதையை அவரும் உடனே திருப்பித் தருகிறார்.

அவருக்கு இந்தக் குழந்தை மட்டுமில்லாவிட்டால் திரும்பப் போவது பெரிய சிக்கலாக, மனதுக்குள் எப்போதும் சுழன்றிருக்கும்.

மஞ்சுநாத் உறக்கம் வந்து ரோகிணி மடியில் நித்திரை போகிறான். காலை ஏழு மணிக்குப் பயணம் போக ஐந்து மணிக்கே எழுந்ததால் உறக்கச் சுவடு இன்னும் உள்வாங்கிய உடம்பு. அவனை பரமன் பக்கம் இருக்கையில் படுக்க வைக்கிறாள் ரோகிணி.

ரோகிணி ரதசாரதிக்கு பின்னால் இருக்கும் சாளரத்தை மூடி அந்தரங்கம் நடப்பாக்குகிறாள்.

பரமன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார் அவரைக் காமம் நனைந்த ஒரு குறுஞ்சிரிப்போடு உதட்டைக் கடித்தபடி நோக்குகிறாள் ரோகிணி.

பரமனின் கரத்தை எடுத்து தன் வளமான மாரிடத்தில் வைக்கிறாள். அவள் தயாராகி விட்டதாக அழைப்பு விடுக்கும் வினாடி அது.

நேமிநாதனை நினைத்துக் கொள்கிறாள். இன்னும் எத்தனை வருடம் அவன் கேட்கும்போதெல்லாம் உடுப்பு உயர்த்தி, உள்ளே வரச்சொல்லி அனுமதித்து அவனுக்கு உடனே கீழ்ப்படிய வேண்டி இருக்குமோ. பரமன் வயதானவர் என்றாலும் அவரோடு எந்த சிக்கலும் இல்லாமல் குடும்பம் நடத்த முடியும்.

ராஜ்யமும், பணமும், சதியும், கார்டெல்லும், கப்பம் கட்டுவதும், கோட்டையும் கொத்தளமுமாக ஆட்சி செய்யும் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருந்து சாதிக்கப் போவதென்ன?

அவள் பரமனின் கால் மேல் கரங்களைத் தவழ விட்டு இடுப்பைச் சுற்றி அவரை வளைத்து தன் மடியில் வீழ்த்துகிறாள். கிராம்பு வாடை அவரைச் சூழ இறுக்க அணைக்கிறாள்.

எழுந்து உட்கார்ந்து வழக்கம் போல் சாவதானமான குரலில் ரோகிணியிடம் கேட்கிறார் – “சீன மந்திரத்தான் என்ன சொல்கிறான்?”

பரமனிடம் பகை பாராட்டி உற்று நோக்கி பாம்பு மாதிரி சீறுகிறாள் – “உமக்கு இங்கிதமே இல்லை. குழந்தையை கூட்டிக்கொண்டு பவுர்ணமி வாவுதினத்தைக் கொண்டாட போயிட்டிருக்கோம். உமக்கு உம்ம பைத்தியக்காரத்தனம் தான் எப்பவும் புத்தி முழுக்க. நீர் பம்பாய், விமானம், அது இது என்று பிரலாபித்திருக்க கூடவே அதை எல்லாம் நடத்தித் தர சீன மந்திரவாதி, அரபு மந்திரவாதின்னு கூட்டிவரச் சொல்லி என் பிராணனை வாங்கறது. நீர் இந்த ஒப்பந்தத்திலே இருக்க வேணாம். இறங்கிப் போம். அருகா, அருகா, சாரட்டை நிறுத்து ஓ அருகா”.

பரமனை இறக்கிவிட்டு சாரட் போனது. அவருக்கு சிரிப்பு தான் முதலில் வந்தது. விமானமோ, சாரட்டோ அவருக்கு தீர்க்கமான வாகன யோகம் விதிக்கப்படவில்லை.

பரமன் நடந்தபடி முன்னால் ஏதாவது சுழலும் மண்டபம் இருக்கிறதா என்று தேடினார். பின்னால் சத்தம். திரும்பிப் பார்க்க, ரோகிணியின் சாரட் வண்டிதான்.

அருகன் சாரட்டை நிறுத்திவிட்டுக் குதித்து ஓடி வந்து ”ஐயா வாங்க, குழந்தை அழுவறான்” என்று குடும்பத்திலே ஒரு நெருங்கிய உறவினன் போல கெஞ்சலுடன் வேண்டினான்.

சாரட் கதவு திறக்க, மஞ்சுநாத் ரோகிணி மடியில் இருந்து தரைக்குக் குதித்து அப்பா அப்பா என்று அரற்றினான். பரமன் சொல்லித்தந்த சொல்கட்டை அவன் சிரித்தபடி ஒலித்து பரமனின் கையைப் பிடித்து உள்ளே இழுத்தான்,

ரோகிணி பரமன் காதருகில் குனிந்து, ”மன்னிச்சுக்கும் பரமவரே. நான் அவசரப்பட்டுட்டேன். உமக்கு உதவி செய்ய சீன மந்திரத்தான் இந்த வாரம் வந்துட்டிருக்கான். நீர் கவலையே பட வேணாம்” என்றாள் நைச்சியமாக.

சாரட்டில் மனமே இல்லாமல் ஏறிக்கொண்டார் பரமன். குழந்தை மஞ்சுநாத் மட்டும் பிடிவாதம் பிடிக்கவில்லை என்றால் அவர் எல்லாவற்றையும் எல்லோரையும் உதறிவிட்டுப் போயிருப்பார். எங்கே? ஜெரஸோப்பாவில் கோவில்கள் நிறைந்த ராஜவீதிக்கு. அங்கே இருக்கவும் உண்ணவும் வண்டிக்காரன் சத்திரம் உண்டே, அங்கே வண்டிக்கார நண்பர்களும் உண்டே

சீன மந்திரவாதியால் என்ன செய்ய முடியும் என்று பரமன் காத்திருக்க வேண்டும்? யோசித்துப் பார்த்தார். புரியவில்லை. மாசேதுங்கின் சிவப்புப் புத்தகத்தை மராட்டியின் கிளைமொழியில் மொழிபெயர்த்த இடதுசாரி பரமனா இப்போது சீன மந்திரவாதிக்காகக் காத்திருப்பது?

என்ன செய்ய? முப்பரிமாண உலகில் எல்லோரும் சுக ஜீவனம் நடத்தும்போது பரமனுக்கு மட்டும் இன்னொரு பரிமாணமாகக் காலமும் சேர்ந்திருக்கிறது. எடுத்தது எடுத்தது போல் அவரை பௌதீகமாக எந்த மாற்றத்துக்கும் உள்ளாக்காமல், டெல்லியில் இருந்து பம்பாய்க்கு வரும் வழியில் நானூறு வருஷம் பின்னால் போகவைத்து பழைய உலகத்தில் மூச்சுவிடச் செய்து வேடிக்கை பார்க்கிறவர் யார்?

நான்காவது பரிமாணத்தை ஒரு சாளரம் மாதிரி மூடினால் அடுத்த வினாடியே இந்த சாரட்டும், ஜெருஸோப்பாவும், ஹொன்னாவரும், அருகனும், ரோகிணியும், மஞ்சுநாத்தும் எல்லாமும் எல்லாவரும் மறைந்து விடுவார்கள். இது ஜெருஸோப்பாவிலிருந்து ஹொன்னாவர் போகும் நெடுஞ்சாலையாக இருக்காது. வருடம் பதினேழாம் நூற்றாண்டு தொடங்கி ஐந்தாம் ஆண்டான 1605 ஆகவும் இருக்காது. பரமனைக் கைகழுவிய 1960-ஆம் ஆண்டாக இருக்கலாம்.

பம்பாயில் இப்போது என்ன வருஷம், உலகம் முழுக்க என்ன வருடம்? ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபது முடிந்து எத்தனை வருஷம் ஆகியிருக்குமோ.

யார் எல்லாம் பரமன் போனபோது இருந்தபடியே இன்னும் இருப்பார்களோ, யாரெல்லாம் இறந்திருப்பார்களோ, பம்பாயும் மெட்றாஸும் எப்படி மாறியிருக்குமோ எதுவும் தெரியவில்லை. நினைக்க நினைக்க ஆயாசமும் அயர்வும் ஏற்பட சாரட்டுக்குள் கண்மூடி இருந்தார்.

ஹொன்னாவர் தெருக்களில் மெதுவாகக் குலுங்கி ஓடிய சாரட் நின்றபோது குதிரைகள் கால்களை அழுத்தப் பதித்து கழுத்து மணிகள் ஒலியெழுப்ப நின்றன. பரமன் கண் திறந்து பார்க்க அவர் மடியில் படுத்து நித்திரை போயிருந்தான் மஞ்சுநாத்.

”நன்றாக உறங்கியிருந்தீர் ஓய். உடல் ஓய்வு கேட்கும்போது மறுத்து வேலை வேலை என்று வேலையில் மூழ்கி பவுர்ணமி வாவுநாளைப் பாழ் படுத்திக் கொள்ள வேண்டாம். கடை வாசலில் குரிச்சி போட்டு கம்பீரமாக உட்கார்ந்திரும். மஞ்சுநாத்தோடு சாரட் ஓடாத, கூட்டம் குறைந்த ரதவீதியில் ஓடிப் பிடித்து விளையாடும். கோகர்ணம் போய் கடற்கரையில் ஓடி விளையாடலாம். எத்தனை தடவை போனாலும் அலுக்காத இடமாச்சே”.

ரோகிணி சொல்லியபடி சாரட்டை விட்டு இறங்க, அருகன் அவசரமாகக் கடை வாசலுக்குப் போய் அங்கே காத்திருந்த இரண்டு பேரை மாடிக்கு அழைத்துப் போனான்.

”பரமவரு, நான் வியாபாரம் பேசிட்டு வரேன். போய் குழந்தையோடு குழந்தையா விளையாடிட்டிரும்”.

ரோகிணி பரமனைக் கழுத்தைப் பிடித்து அகற்றுவது போல் அனுப்பி வைத்து விட்டு வந்தவர்களைத் தொடர்ந்து மாடிக்குப் போனாள்.

அருகன் சாரட்டுக்குள் திரும்ப ஏறி உள்ளே துணி மூடிக் கட்டி வைக்கப்பட்டிருந்த கனமான எதையோ இன்னொரு சிப்பந்தி கைகொடுக்க மாடிக்கு எடுத்துப் போனான்.

பரமன் கடைக்கு உள்ளே போகாமல் ஏனோ ரோகிணி சொன்னபடி வாசலுக்கு ஒரு குரிச்சியைத் தூக்கிக்கொண்டுவந்து போட்டு உட்கார்ந்திருந்தார்.

சூரியன் சுட்டெரிக்காத கார்த்திகை மாத வெய்யில் இதமாக மேலே படிந்திருந்தது. மஞ்சுநாத் கடை மாடிப்படிகளில் ஏறி இறங்கி விளையாடிக் கொண்டிருந்தான். ”மஞ்சு ஓடாதே படியிலே தடுக்கி விழுந்தா பல் உடஞ்சுடும். வா, நாம் கீழே ஒளிஞ்சு பிடிச்சு விளையாடலாம்” என்றார் பரமன்.

மஞ்சு வந்துட்டேன் அப்பா என்று அவருக்கு முன்னால் வந்து நின்றான். கண்டு பிடிச்சுட்டேனே என்று பரமனின் கையைப் பிடித்து இழுத்தான்.

”பொடியா, நான் இன்னும் ஒளியவே இல்லை, எப்படி பிடிச்சே?” பரமன் கேட்க மஞ்சுநாத் சிரித்தான். அவன் பரமனின் கண்களைத் தீர்க்கமாகப் பார்த்தான்.

திடீரென்று அவனைச் சுற்றியும் பரமனைச் சுற்றியும் மிளகு வாடை கனமாக எழுந்து வந்தது.

”நீ எங்கே ஒளிஞ்சாலும் பட்டாம்பூச்சி மாதிரி பறந்து வந்து கண்டுபிடிச்சுடுவேன். நான் உன்னோடுதான் எப்பவும் இருக்கேனே அப்பா”.

அவன் சொல்லும்போது பரமனின் கண்களில் நீர் நிறைந்தது. மிளகு வாசனை சன்னமாகச் சூழ்ந்திருந்தது.

அப்பா வரட்டுமா என்று பின்னால் இருந்து குரல். இரு ஒளிஞ்சுக்கறேன் என்று பரமன் சந்த்ரய்யாவின் ஜவுளிக்கடை ஓரமாக அரச மரத்தின் பின்னால் போய் ஒளிந்து நின்றார். மறுபடியும் மிளகு வாடை.

அப்பா அப்பா. மஞ்சுநாத் தெருவில் நின்று அழைத்தபடி இருந்தான். அவன் குரல் பரமனின் உள்ளே இருந்து கேட்டது. அது தெருக்கோடியிலிருந்தும், மரத்தின் மேலிருந்தும், பறந்து போகும் பறவைகளோடும் சேர்ந்து ஒலித்தது.

”அப்பா அப்பா”.

“மஞ்சு மஞ்சு”.

பரமன் ஒளிந்த இடத்தில் இருந்து பார்க்க, எதிரே சிதிலமான சமண சதுர்முக வசதி உள்ளே இருந்து கால்களில் தாங்குகட்டைகள் வைத்துத் தாங்கி பரமன் நடந்து வந்து கொண்டிருந்தார்.

’அப்போ, மரத்தடியில் ஒளிந்திருக்கும் நான் யார்’?

”அப்பா அப்பா”.

மஞ்சு குரல் அண்மையில் ஒளித்தது. அவனுடைய பிஞ்சுக் கரங்கள் பரமனின் கையை இறுகப் பற்றிக் கொண்டன. மிளகு வாடை நின்று போயிருந்தது.

கட்டைகள் தாங்கி சிதிலமான சதுர்முக வசதியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த இன்னொரு பரமனைக் காணோம்.

”பரமரவரே, வாங்க போகலாம். கோகர்ணம் போய் வரலாம்”. ரோகிணி அழைத்தபடி வந்தாள். கையில் பொதி ஒன்றில் பளிச்சிடும் தங்கம் சிறு செவ்வகங்களாகக் காட்சி அளித்தது.

”பத்திரமாக வச்சுக்கும். கோகர்ணம் போய் வந்தபிறகு திரும்ப வாங்கிக்கறேன்” என்றாள் அவள்.

”இத்தனை தங்கத்தை என்ன பண்ணப் போறே? புது நகை உனக்கு இன்னும் வேண்டியிருக்கா?”

அவள் பதிலே சொல்லவில்லை. அருகன் சாரட்டைக் கிளப்ப, இடைவெளி சாரளத்தை அடைத்து விட்டு அமர்ந்தாள் ரோகிணி.

”பரமரவரே, தங்கப் பிசாசு நான். கையிலே வச்சிருக்கற பணம், வெள்ளிப் பாத்திரம், காலையிலே எடுத்து வந்தேனே ஆனைத் தந்தம், முத்து, பவிழம், மரகதம் எல்லாத்தையும் விற்று தங்கம் வாங்கப் போறேன். வீட்டை, ஜெர்ஸோப்பா கடை, ஹொன்னாவர் கடை எல்லாத்தையும் விற்க முடிஞ்சா விற்று தங்கம் ஆக்கிடப் போறேன். என்னை வித்தா தங்கம் கிடைக்குமா?”

ரோகிணி மனம் குலைந்தது போல் பேசிக் கொண்டே போனாள்.

எனக்குப் பிடிக்காது என்றான் மஞ்சு. எதை என்று கேட்டார் பரமன்.

தங்கம் என்று தமிழில் சொன்னான். ஓவ்ரோ என்றான் போர்த்துகீஸில். சின்னா என்று கன்னடத்தில் சொன்னான். எனக்குப் பிடிக்காது என்றான். ஏன் பிடிக்காது என்று ரோகிணி கேட்டாள். தங்கத்துக்கு என்னை விற்றுவிடுவாய் என்றான் மஞ்சு மழலைக் குரலில். ரோகிணி உறைந்து அமர்ந்திருந்தாள்.

தங்கப்பொதி கையைச் சுட்டது. அவசரமாக ரோகிணியிடம் அதைத் திருப்பிக் கொடுத்தார் பரமன். சாரட் கோகர்ணம் நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.

(தொடரும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 14, 2023 19:49

May 11, 2023

தேள்களின் ஊர்வலம் – புது நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’யில் இருந்து

தேள்களும் அவற்றுக்கு ஆட்பட்ட மானுடரும் பங்கு பெறும் ஊர்வலம்
=========================================================================================

ஊர்வலம் பிரம்மாண்டமானதாக இருந்தது.

கலந்து கொண்ட ஜீவராசிகளில் தரையில் சுவாசிக்க முடியாதவை கூட பெரிய பாலிவினைல் தொட்டிகளில் நீர் நிரப்பி அதில் சுவாசித்து உலாவில் கலந்து கொண்டன.

நெருப்பின்றி கந்தக உருண்டைகளை நீண்ட குழாய்களில் நிரப்பி அதிர்வெடிகள் நிலமதிர வெடித்த நூறுகால் பூரான்கள் இரண்டு வரிசையாக அகலவாட்டில் நடந்து வந்தன.

இசைக்கருவி எதுவோ நாராசமாக ஒலித்தது. நடுவே இரு குழுக்களாக வெல்வெட் போல் மெத்தென வழுவழுத்த உடல் கொண்ட செவிப் பூரான்கள் அந்த அகண்ட தாளத்துக்கு சுழன்று சுழன்று ஆட வைக்கப்பட்டன.

பயந்த சில மானுடப் பெண்கள் மானம் மறைக்கும் அளவு மட்டும் உடை உடுத்தி வந்த ஊர்திக்குள் செவிப் பூரான்கள் இழைந்தேறின. அவை அந்தப் பெண்களின் வலது காதுக்குள் புகுந்து இடது காது வழியாக வெளியேற நடுங்கி அமர்ந்திருந்த பெண்கள் கண்ணீர் பெருக்கியதை வெகுவாக ரசித்த கரப்புகள், செவிப்பூரான்களை இந்தப் பெண்களின் இடுப்புக்குக்கீழ் செயல்படத் தூண்டின. கைகூப்பி அது வேண்டாம் என்று வேண்டிய பெண்களின் தீனமான அழுகுரலை பூரான்களும் மிக விரும்பின.

அடுத்து அழுக்குச் சிவப்புக் கம்பளம் நெய்து நகர்த்திக் கொண்டு போவதுபோல் அடர்த்தியும், நூறடிக்கு நூறடி நீள அகலமுமான கரப்புக் கும்பல் ஆடிக்கொண்டு போனது.

அந்தக் கும்பலைத் தொடர்ந்து பச்சோந்திகள் இரு கால் முன்னே உயர்த்திப் பின்கால் ஊன்றி அதிகாலையில் தோட்டத்தில் நடைப் பயிற்சி செய்வதுபோல் நடந்து போயின. அவை ஏழு நிறமும் கொண்ட தட்டுகளை அசைத்து அந்தந்த நிறத்தை உடல் முழுக்கக் கொண்டு வந்து பத்து நொடி நின்றன.

தேளர்கள் மோகிக்கும் ஒரே உயிரினம் அந்தப் பச்சோந்திகள் தான். நிதி மிகுந்த தேளர்கள் போட்டி போட்டு நல்ல விலை கொடுத்து வாங்கி வீட்டில் நிறப்பிரிகை நிரம்பியதுபோல் பச்சோந்தி நடனமும் சொன்னபடிக்கு நிறம் மாறச் செய்வதும் நிகழும்.

அந்த ஓந்திகளை மரப்பல்லிகளோடு கலவி செய்ய வைத்து ரசிப்பதும் உண்டு. பாதி புணர்வில் தலைகளைத் துண்டித்து அப்போது காட்டிய நிறத்தை நிரந்தரமாக்கிப் பாடம் பண்ணிய ஓந்தியுடல்கள் வீட்டு முகப்பில் அலங்காரமாக ஏற்றி வைத்திருப்பது தவிர அந்த உடல்களை உயர்த்திப் பிடித்து ஊர்வலத்தில் எடுத்துப் போவது தட்டுப்பட்டது.

நிறம் மாறும் பச்சோந்திகளுக்கு அடுத்து வெட்டுக்கிளிகள் கரமரவென்று பற்களை வைத்து உணவாக எதையும் கொஞ்சம் கொஞ்சமாக உண்டபடி வரும் ஓசை சூழ்ந்து செல்லும்போது மற்ற ஓசையெல்லாம் நிலைத்திருந்தன.

நண்டுகள் பாலிவினைல் தொட்டிகளுக்குள் ஊர்ந்து ஊர்வலத்தில் வந்தன. பெருந்தேளரும், அடுத்த வரிசைத் தலைவர்களும் அவ்வப்போது கண்காட்ட, நண்டுகளிருந்த தொட்டிகளில் இருந்து நான்கைந்து வெளியே எடுக்கப்பட்டு, தலைவர்களுக்குக் கொறிக்கத் தரப்பட்டன. கரபரவென்று உயிர் நீங்கும் வாதனையோடு அவை தீனமாக அலறத் தேளர்களுக்கு அது சுகமான சங்கீதமாகக் கேட்டது.

கரடி, ஊர்வலத்தில் நண்டைக் கால் காலாகக் கடித்து மென்றபடி வந்தது. அது தேளரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றது என்று சகலருக்கும் தெரிய வந்திருக்கிறது. நண்டுகளுக்குத் தெரியுமா, தெரியவில்லை.

பச்சைக்கிளிகளும், குருவிகளும், சத்தம் போடாமல் அமைதி காத்து நான்கைந்து காக்கைகளும், கொக்குகளும் பிரயத்னப்பட்டு நடந்து வந்தன அடுத்து. கடல் ஆமைகளும், ஈமுக்களும் அடுத்த அடுத்த வரிசையில் நடந்தன.

ஆமைகள் மிக மெதுவாக நடப்பதால் அவற்றைக் கடல் தாவரங்கள் கொண்ட தொட்டிகளில் ஏற்றி ஈமுக்கள் இழுத்துக் கொண்டு மிக மெல்ல ஓடி வந்தபோது நிலாக்கால இரவுகளில் படகு செலுத்திப் போகும் கடலோடிகள் போல் அபூர்வமாகக் கானமிசைத்து வந்தன. அவற்றின் தொண்டை இதற்காக சிகிச்சையில் ஆழ்த்தப்பட்டிருந்தன.

பெருந்தேளரின் சித்திரம் பொதிந்த பதாகைகளை உயர்த்திப் பிடித்து அங்கங்கே ஜீவராசிகள் கௌரவ பாவம் காட்டி எந்த ஒலியுமின்றி நடந்து வந்தன.

அப்புறம் தேள்கள். தேள்கள். தேள்கள்.

சிறு செந்தேள்கள் முதலில் வந்தன. பிறந்து ஒரு மாதமே ஆனவை மற்றும் ஒரு வயது ஆனவை அவற்றின் அன்னையரால் தூக்கி வரப்பட்டு, கொடுக்கு உயர்த்திக் காட்டிக் கடந்து போயின.

கர்ப்பம் தரித்த பெண் தேள்கள் மெல்ல நடந்து நடுநடுவே ஓய்வெடுப்பதையும் ஊர்வலத்தில் காணலாம். இரண்டிலிருந்து மூன்று வயது வரையான தேள்கள் மிடுக்காக நடைபோட்டு அடுத்துப் போகும்.

முழுச் சக்தியோடு மூன்றிலிருந்து ஒன்பது வரையான தேள்கள் அடுத்து பிரம்மாண்டமான உடலும் மிடுக்குமாக அச்சுறுத்தும் வண்ணம் கொடுக்கு நிமிர்த்தி வரும்.

தேள் ராணுவம் மிடுக்காக அடுத்துச் சில வரிசைகளில் வர, தேள் அறிவியலாரும், ஒன்றிரண்டு மானுட, கரப்பு அறிவியலாரும் சேர்ந்து அடுத்து வருவது வழக்கம்.

உடல் தளர்ந்து எந்த நேரத்திலும் இறக்கக்கூடும் என்ற நிலை எய்திய பத்து வயதுக்கு மேலான தேள்களுக்குப் பொது ஓய்வு அறிவிக்கப் பட்டாலும் பிடிவாதமாக ஊர்வலம், பெருந்தேளரின் பிறந்த நாள் கொண்டாட்டம், உணவு விழா இப்படி பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் முதிய தேள்கள் பின்வாங்குவதில்லை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 11, 2023 20:11

May 9, 2023

வைத்தியர் எழுதிய தளை தட்டிய நேரிசை வெண்பா – தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து

விழித்தெழுந்த பொழுதில் நகர வேண்டியவை பறக்கத் தொடங்கின. எங்கணும் பறவைக் கூச்சல். மருத்துவர் நீலனின் குடிலில் பரபரப்பான இயக்கம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

குடில் என்று ஒரு பழக்கத்தால் தான் குறிப்பிடுவது என்று அந்தக் கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தாலே புரியும். இரண்டு தளங்கள் செங்கல் கூரை மூடியும் வானம் பார்த்த மச்சுமாக வீட்டுடமையாளரின் செழிப்பைச் சொல்வதாக அந்த இல்லம் திகழ்ந்தது.

கீழ்த்தளத்தில் சஞ்சீவி மலையைச் சுமந்து கம்பீரமாகப் பறக்கும் அனுமனின் வண்ணப்படம் சுவரை நிறைத்திருந்தது. அந்த ஓவியத்துக்கு தினசரி ஆராதனை நடக்கும் என்பதால் தூபக்கால், தீபம். குடுவையில் புதியதாக சந்தனக் கட்டையைக் கருங்கல்லில் தேய்த்து வழித்தெடுத்த சந்தனம் நல்வாசனையோடு நெற்றியில் தரிக்கச் சகலருக்கும் வழங்கப்படும்.

வடக்கு மாநில வழிபாடுதான். எனில் வைத்தியக் கடவுளாக உருத்திரன் என்ற முழுமுதற் தெய்வத்தை சிறு பீடத்துக்கு இறக்கி வழிபடுவது பீடன்று. எனவே அனுமன் வந்தான்.

அது மட்டுமில்லாமல் அனுமன் வழிபாட்டுக்கு இன்னொரு காரணமும் உண்டு. மருத்துவர் நீலன் பல்லாண்டு அனுமன் அன்ன நைட்டிகப் பிரம்மச்சாரியாக் இருந்து, அண்மையில் திருமணம் செய்தவர். பழகிப் பழகி அவரது சொந்த தேவனும் அனுமனே என்றானது. அப்புறம் ஒன்று. அவருடைய சீடர்கள் அனைவரும் கட்டைப் பிரம்மசாரிகள் தாம்.

இப்படி பிரம்மசாரியம் கொடிகட்டிப் பறக்கும் இல்லத்தில் தினசரி காலை ஏழு மணியில் இருந்து இரவு ஏழு வரை இரண்டு கன்யகையர் ஊழியம் செய்கிறார்கள் என்பதே விநோதமாக ஊர்வம்பருக்குப் பட்டது. எந்த ஊரிலும் இல்லாத உடுப்பும் பேச்சுமாக அந்தப் பெண்கள் சளைக்காமல் சதா பணி எடுத்துக் கொண்டிருப்பதால் அவர்களைப் பற்றி வம்பெதுவும் புறப்பட முடியாது போனது.

கறுத்து நெடியவர்களாக மெல்லியலார் உடல் கொண்ட, தெருவில் எங்கும் பார்க்கக்கூடிய மற்றப் பெண்களுக்கும் இவர்களுக்கும் வேற்றுமை ஏதும் சுட்டிக் காட்ட முடியாது என்பதும் குறிப்பிட வேண்டியது.

அவர்கள் வந்தது முதல் மற்ற மருத்துவ ஊழியர்கள் தங்களுக்குள் பழகிய அன்பான உறவு சொல்லி அழைப்பது வழக்கத்துக்கு வந்தது – அக்கனாரே அச்சி பெயர்த்தியே என ஆண் ஊழியர்கள் இந்த வடக்கிலிருந்து வந்த பெண்டிரை அன்போடும் அரை மரியாதையோடும் அழைக்க, அவர்களோ அண்ணரே, எம்பி, உம்பி, அப்பன், அப்பச்சி என்றெல்லாம் விளித்துப் பிரியம் காட்டுவார்கள். அழைக்க, அழைக்கப்பட உரிமையாக விளிகள் சிறந்த அவ்வெளியில் உற்சாகம் எப்போதும் அலையலையாக நிலவி வந்தது.

காலை ஏழு மணிக்கு அனுமன் ஆராதனை என்று இப்பெண்கள் வடமொழியில் பாடிய கீதங்கள் புரியாவிட்டாலும், அவர்கள் கூடப்பாடிப் பாடி மருத்துவக் குடில் முழுக்க அவை மற்ற நேரத்தில் கூட இசைச் சிறப்புக்காக முணுமுணுக்கப்பட்டு வந்தன.

ஜெய் ஜெய் ஜெய் மாருதி ஜெய் வாயுபுத்ர என்ற துள்ளலிசைப் பாட்டு அவர்களுக்குள் மிகப் பிரியத்துக்கான விளிப்பாட்டானது.

மருத்துவர் நீலரைத் தவிர மற்றவர்களுக்கு உண்மையாகவே ஓர் மனக் குமைச்சல் இருந்தது. மருத்துவர் காலாகாலத்தில் மணம் புரிந்திருந்தால் இங்கே உறவு சொல்லி அழைக்க குழந்தைக் குரல்கள் குரல்கள் அன்போடு சூழ்ந்திருக்குமல்லவா. இப்போதே முப்பதுகளின் மத்திய அகவை, இனி எப்போது இங்கே அடுத்த தலைமுறை வரும் என அவர்களுக்குத் தெரியவில்லை.

இந்த நிலையில் மருத்துவர் நீலர் சஞ்சீவனி என்ற விளிப்பெயருள்ள ஆயுள் நீட்டிப்பு மருந்து விழுங்கி வைத்தால் அவரை அவரது 135ஆம் வயதில் பராமரிக்க யாருண்டு? அவர் இது பற்றிக் கவலையேதும் படாது ஐநூறு வருடத்துக்கு ஒரு முறை நிகழும் மிகமிக அரிதான ஆயுள் நீட்டிப்பு ஆண்டு இதோ விரைவில் வரப் போகிறது எனக் காத்திருந்தார்.

ஒரு சல்லி காசு செலவில்லாமல் ஆயுள் அதிகமாக்க ஓடி வராமல் அதைப் பகடி செய்து மருத்துவரையும் நையாண்டி செய்ய ஒரு சனக் கூட்டமே திரண்டெழுவது நியாயமா என இதுவும் இன்னும் பலவிதமாகவும் பிரலாபித்து மருத்துவர் கவிஞராக மாறி நின்று நிலைமண்டில ஆசிரியப் பா நூறு யாத்து மனம் சமனப்பட்டார் மாதோ.

செய்யுள் செய்யாவிட்டால் கைப்பழக்கம் நழுவி இலக்கணம் மீறிவிட வாய்ப்பு உண்டே. அவைக்கு வரும் மற்ற கவிஞர்கள் குற்றம் காணவே காதைத் தீட்டிக்கொண்டு அமர்ந்திருக்கிறார்களே. பேசாமல் இந்தப் பிற கவிஞர் ஒவ்வொருவருக்கும் ஒரு மணங்கு ஆயுள் நீட்டிப்பு மருந்தை வலுக்கட்டாயமாகப் புகட்டியோ பிள்ளைகள் போல் மாட்டேன் மாட்டேன் எனப் பிடிவாதம் பிடிக்கும் பட்சத்தில் பின்னஞ்சந்தில் குழாய் வைத்துப் பாய்ச்சியோ அவர்களைப் புராதனப் பன்றிகளாக்கி விட்டால் என்ன.

தளைதட்டத் தட்ட தலைதட்டிப் பாட வைத்து அவர்களைத் துன்பப்படுத்தினால் தான் என்ன? வேண்டாம் மருத்துவம் நல்ல விசயம். இந்தத் துன்மார்க்கரைத் துன்பப்படுத்த மிளகாய்க்கும் ஆசனத் துவாரத்துக்கும் பொருந்த சிலேடை வெண்பா பாடவைக்கலாம். எரிவுதான் கொள்வதால் என்றும் சிவப்பதால்.

அத்தியாயம் முழுவதும் படிக்க கீழே சொடக்குக

தினை அல்லது சஞ்சீவனி நாவல் அத்தியாயம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 09, 2023 02:57

May 6, 2023

From the novel The Ghosts of Arasoor – The Ancestors enter into cowries and speak

An iron monster of a machine on four wheels, trumpeting like an elephant, the king thought the car and his neighbour’s gramophone must be one in spirit. It was the Banian Brothers who had first told the king the name of the music box—gramophone. The music box too came after the king’s time. The Banian Brothers said they had procured it for the tobacco merchant.

‘It does not take up an eighth of the space of the Austin,’ they told the king, adding that they could get him both a gramophone and an Austin.
Where was the money for these things? the king thought sadly. If one had the money, one could travel back in time and do whatever was needed to make one’s life pleasurable. The king had once turned to his ancestors for suggestions to enhance his finances. It was a death anniversary and a priest had been invited to recite mantras for the spirits of the ancestors. The ancestors, however, had other ideas. They told the priest, ‘Brahmin, take your alms and leave. We wish to speak with our great grandson.’

The priest paid no heed. He made balls of boiled rice and handed them to the king, bidding him to sprinkle water and sesame seeds on them and offer them to the ancestors.

‘Sesame seeds don’t agree with us,’ said one of the ancestors. ‘Why don’t you offer us chicken? We would appreciate that.’
‘This is the right offering to make to enable you to reach salvation,’ the priest snapped. ‘If you don’t believe me, I can bring the books to prove it.’

The ancestors asked the king to give the priest alms of four pumpkins, onions, cabbages, potatoes, turnips (which the Banian Brothers brought from the future) and four gold coins, and send him away.
The priest said the only way he could help the ancestors attain salvation was by offering them rice balls sprinkled with sesame seeds. Receiving no reply from either the king or the ancestors, he left in a huff with his vegetables.

When he had gone, the ancestors gathered around the king urging him to be thrifty. ‘You don’t need a new fangled vehicle or music box. ‘Nor do you need to travel to the Malayalam coast to ogle bare-breasted women. Do you know how angry those women are at being humiliated? Their feelings will scorch you, reduce you to ashes.’

The ancestors also warned the king about the Banian Brothers. ‘Don’t trust them. They come from the future.’

The king had a ready answer to this: ‘You come from my past. Do I not trust you? Why should I not trust those from the future?’
The retort offended the ancestors. ‘Such impudence is a sure sign of Kali Yuga,’ they said, and vanished.

The king was sorry he had let them go before asking for a new chariot, but they were hardly likely to provide him one when they were against the very idea of his travelling to the Malayalam coast. He thought of the Banian Brothers again.

He summoned the Brothers. All he had to do was think of them, and they appeared before him immediately. The Brothers had taught him this trick. They had told him about a communication device from their time that made use of wires to carry voices over long distances. The wires had to be strung between iron posts erected across the countryside. The king told the Brothers that the new-fangled system seemed too complicated. The real reason for his reluctance to install the system was that he could not afford it. Even if he found the money to erect posts and string wires between them, his poverty-stricken citizens would most uproot the posts and sell them for rice.

When the king mentally commanded the Banian Brothers’ presence this time, they were unable to come at once. They were collecting funds for the local temple’s flower festival. The king had started the festival in his time—he had arranged for cartloads of flowers to be brought from the countryside and had the priests shower them on the idol of the goddess. The king and queen had stood outside the sanctum sanctorum watching as the white jasmine, yellow chrysanthemum and fragrant screw-pine were offered to the deity. His citizens stood outside, on the bare red earth of the temple grounds, fidgeting and waiting for the real celebrations to begin. These were heralded by the arrival of more bullock carts (after the worship of the goddess was over) bearing huge earthen pots of toddy. The king bought liquor for the entire village, and ensured that there was enough for every villager to get four glassfuls of toddy.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 06, 2023 20:39

May 5, 2023

தினை அல்லது சஞ்சீவனி நாவலில் மதுரைக்கு வந்த காந்தி

செவிமடுத்த அனைவரும் மெய் மறந்து நிற்க, கணீர் என்று சுவரம் உயர்ந்து எங்கும் பரவ, கூட்டத்தில் மூத்த விடுதலை வீரர்களெல்லாம் கை கூப்பி கண் மூடி கண்ணீருகுத்து நின்றார்கள்.

கர்ப்பூரம் அருமையான பாட்டுடா என்று இன்னொரு இளைஞன் சொல்ல ஏதோ சந்தேகம் வந்தது போல் கர்ப்பூரமய்யன் மேடைக்கு ஓட அவன் நண்பர்கள் பின்னாலேயே நடந்தார்கள். மேடையில் இறைவணக்கம், சற்று வித்தியாசமாக பாரதமாதா வந்தனையான வந்தேமாதாரம் முடிந்து கொண்டிருந்தது.

ஓராயிரம் பேரைக் குரலில் தேசபக்தி அளித்து இன்று ஒரு நாள் முழுக்க தேசம் பற்றிய சிந்தனைகளில் ஆழ்த்தும் அந்தப் பெண் யாரென்று அறிந்தபோது கர்ப்பூரமய்யனுக்கு ஆச்சரியமில்லை.

பாபுஜி. காந்தி காதில் டாக்டர் ராஜன் கிசுகிசுக்க, அவர் இரு கையும் வானத்தை நோக்கி உயர்த்தி ஹே ராம் என உரக்கச் சொன்னார். டாக்டர் கைகாட்ட, அந்தப் பெண் கதர்க்கொடி கப்பல் காணுதே விஸ்தாரமாகப் பாட, அனைவரும் மெய்மறந்தனர். அடுத்த பதினைந்து நிமிடத்தில் பாரத சமுதாயம் வாழ்கவே ஒலித்து கைதட்டலோடு ஓய்ந்தது.

காலை சந்திப்புகள் பாட்டு கொஞ்சம், பேச்சு கொஞ்சம் என்று கொஞ்சம் லேசாக இருப்பதாக காந்திஜியே சுட்டிக்காட்டினார். நான் இசை விரோதி இல்லை என்றாலும் கடவுள் வாழ்த்தை வந்தேமாதரம் பாடலாக்கி கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் பாடியது நன்றாக இருந்தது என்றாலும் அந்த நேரத்தில் ஒரு முழுப் பஞ்சுக் கதிரை ராட்டையில் வைத்து நூற்றிருக்கலாம். நாம் இங்கே கூடியிருக்கும் மைதான ஓரத்தில் சிறுநீர் கழிக்கும் இடத்தில் தண்ணீரை அடித்து ஊற்றிச் சுத்தப்படுத்தியிருக்கலாம் என்றார் அவர் பேச்சுக்கு நடுவே.

பாபு இங்கே வருடக் கணக்காக தண்ணீர் கஷ்டம் என்று கூட்டத்தில் இருந்து யார்யாரோ எழுந்து சொல்ல, காந்தி ஆச்சரியப்பட்டு, வைகை நதி ஓடும் பூமி ஏன் தண்ணீர் கஷ்டம் என்று கேட்டார். மேடையில் ரெண்டு நிமிடம் கூட இருந்தவர்களிடம் பேசி சரி சுதந்திரம் வரட்டும், வைகையில் தண்ணீர் வரும் என்கிறார்கள் உங்கள் தோழர்கள். சீக்கிரம் சுதந்திரம் வரட்டும் என மேலே அழகாகத் தொடர்ந்தார்.

போனால் போகட்டும், அற்புதமான குரலில் நேர்த்தியாக வந்தேமாதரம் பாடிய இந்தக் கன்யகைக்கு கைத்தட்டல் மூலம் நன்றி சொல்வோம் என்றார் அடுத்து. தாமரை மலர்வது போல் கூட்டத்தில் நடுவில் இருந்து இருகை தலைக்கு மேல் வைத்து ஆண்டவனை வழிபடுவது போல் எழுந்தாள் அவள். கைத்தட்டு காதைப் பிளந்தது.

கர்ப்பூரமய்யனுக்கு ஏனோ அந்தப் பெண் பெற்ற பாராட்டு தனக்கே கிடைத்த மகிழ்ச்சி. ஆனால் அந்தப் பெண்ணின் பெயர் தெரியாமல் அவனுக்குத் துன்பமாக இருந்தது.

நீ அற்புதமாக வங்காளிப் பாடல் பாடினயே பிறப்பால் வங்காளியா என்று காந்தி கேட்டார். கும்பகோணத்துக்காரி வங்காளம் தெரியாது என்று காந்திக்கு பதில் கிட்டியது.

எல்லா மொழியும் எம்மொழி என்று நீங்கள் தமிழோடு பிற இந்திய மொழி ஒன்றாவது கற்றுக்கொள்க எனச் சொன்னார் அவர்.

சாப்பாடு நேரம் எல்லோரும் வரிசையில் நின்று இலையில் கட்டிய எலுமிச்சம் சாதம், தேங்காய்ச் சாதம், தயிர்சாதத்தை வாங்கி உண்ணலாம். பணம் படைத்தவர்கள் என்றால் அல்லது கட்டணம் கட்டி உணவு வாங்க ஆர்வமிருந்தால் ஒரு ரூபாய் ஒரு செட்டுக்குக் கொடுத்து தேசசேவை நிதியில் சேர்க்கலாம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 05, 2023 20:44

May 3, 2023

நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’யில் இருந்து – பாடலிபுரத்துப் பெண்கள்

வைத்தியர் உள்ளே இருந்து வந்தார். ஆறடி உயரம், குச்சி போன்ற தேகம். நாற்பது வயது இருக்கலாம். முப்பத்தைந்தும் இருக்கக் கூடும். சந்தன முத்திரையும் கீழே குங்குமமுமாகக் கோவிலில் பூசை வைக்கிற சாயல் அவருக்கு. அவர் அசைவில் அவசரம் அகப்பட்டது.

ஐயா என்று குயிலியும் வானம்பாடியும் அழைத்தபோது அவர்களுக்கே யாசகத் தன்மை குரலில் ஏறியிருந்தது தெளிவாகத் தெரிந்தது.

யாரம்மா என்ன வேணும்? நடந்து கொண்டே கேட்டார்.

நாங்க வடக்கில் இருந்து வரோம் மூலிகை வைத்தியம் பார்க்கிற குடும்பம். நான் குயிலி. இவள் என் தங்கை வானம்பாடி.

பொறுமை இழந்து உதவியாளனைக் கூப்பிட்டார். இந்தப் பெண்களை ஏன் உள்ளே விட்டீர்? கோதுமை ஆட்பட்டு நின்றோர். இவர்களை நம் குழுவினில் புகுதலொட்டோம். வெளியே அனுப்புக. அயர்ந்து மறந்தால் மூலிகையைக் களவாடிப் போயிடுவார்கள் என்றார்.

பெரியவர் அப்படிப் பேசுவது பீடன்று உமக்கு. குயிலி சொன்னாள்.

சும்மா சுத்திப் பார்க்கற பொண்கள் என்னத்துக்கு உபயோகம்?

அவர் சொல்ல, குயிலி சொன்னது – நாங்கள் ரெண்டு பேரும் பசிப்பிணியும் சாவும் தவிர வேறு எல்லாப் பிணியும் தீர்க்கும் ஆயுர்வேதத்தில் சிறப்புத் தேர்வானவர்கள்.

நீங்கள் போகலாம்.

வாசலுக்குக் கொண்டு வந்து விட்டான் வைத்தியரின் மாணவன் ஒருவன்.

ஒன்றும் பேசாமல் திரும்பினார்கள் குயிலியும் வானம்பாடியும்.

அடுத்த மூன்று நாளும்-

குயிலி சொன்னது – நாங்கள் ரெண்டு பேரும் ஆயுர்வேதத்தில் சிறப்புத் தேர்வானவர்கள்.

நீங்கள் போகலாம்.

வாசலுக்குக் கொண்டு வந்து விட்டார் வைத்தியரின் மாணவன் ஒருவர்.

ஒன்றும் பேசாமல் திரும்பினார்கள் குயிலியும் வானம்பாடியும்.

நான்காம் நாள் குயிலி சொன்னது – நாங்கள் ரெண்டு பேரும் பாடலியில் ஆயுள் நீட்டிக்கச் செய்யும் ஆயுர்வேதத்தில் சிறப்புத் தேர்வானவர்கள்.

கேட்டுக்கொண்டிருந்த மருத்துவருக்கு முகத்தில் மலர்ச்சி. இந்த மாதிரி மாணவர்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறார்.

ஆயுசு நீட்டிக்கும் மருந்து உருவாக்க, சோதிக்க விஷயம் தெரிந்த உப வைத்தியர்கள் வேண்டியுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் எந்த மூலிகை எவ்வளவு, எப்படி என்று தெரிந்து ஆயுசு நீட்டிக்கும் மருந்து உருவாக்க, சோதிக்க விஷயம் தெரிந்த உப வைத்தியர்கள் வேண்டியுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் எந்த மூலிகை எவ்வளவு, எப்படி எளிவாகத் தெரியும். சோதனை எலிகளைப் பிடிக்க இந்த மாதிரி எழிலான பெண்கள் அவசியம் தேவை.

பார்க்கலாம். ஊதியம் கூரையைத் தொடும் அளவு கேட்டால் கெஞ்சிக் கூத்தாடிக் குறைக்க வைக்கலாம். எல்லா மகிழ்ச்சியும் மேலெழும்ப அவர்களைப் பார்த்துக் கையசைத்து ஆசியருளினார்.

பாடலிபுத்திரம் பல்கலைக் கழகத்தில் தன்வந்திரி மருத்துவம் தேர்வானதற்கான சிறப்பு ஓலை இது. என் தங்கச்சியிடமும் ஒன்று உண்டு என்றபடி வடமொழி எழுத்துகளை உருட்டித் தொங்க விட்டு எழுதியிருந்த அந்த ஓலையை மருத்துவரிடம் கொடுத்தாள் குயிலி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 03, 2023 04:29

April 27, 2023

Sankaran in Pattanam (Madras) 1885 – From my novel Ghosts of Arasoor

Everything about Chennai Pattinam amazed Sankaran. The streets were countless, snaking across each other in complicated twists and always full of traffic. The smells of horse and cattle dung, jackfruit and roasted grain and jasmine, sweat and urine, mixed to produce a compound city smell that pervaded every lane and corner. And everywhere there were men busily going about some kind of business. The horse carriages of the white people ran on the wider roads and there were the more private, shaded roads where the western women walked, protected from the sun by their parasols. Then there was the Black Town where lived the families of Indians who worked solely and proudly for the white people—they and their children after them. Both Tamil and Telugu were heard equally frequently from the houses he passed. Eateries did brisk business at every intersection.

Sankaran had never experienced urban life of such a nature. He had seen Jaffna and Madurai, but they were like tiny villages compared to Chennai.

And then, there was the sea, and the immense stretch of the beach. After he got married, he should bring Bhagavathy Kutti here. In her sixteen years, exposed only to the rivers and fishing boats of her home, she would have never seen anything like the vast beach of sandsea. He would like to walk with her on this beach, their feet sinking softly into the sand. When they grew tired of walking they would sit down and he would listen to her sing. Her voice would rise above the roar of the waves. Salt spray would sprinkle their faces and Bhagavathy would lean her head against his shoulder. But would she be able to strikehold erotic poses like the Kottakudi dasi, a small voice inside his head asked him mischievously.

‘Master Iyer, are you daydreaming? Are you making plans to build two huge buildings on the sand, one for selling snuff and the other for selling tobacco?’ Karutha Ravuthan teased Sankaran and laughed loudly.

Karuthan laughed frequently and loudly. He was the son of Pichai Ravuthar of Bangalore, a good business friend of Subramanya Iyer.

‘Karutha, I have told you so many times not to call me Master. Call me Sankara, or if that is difficult, call me Sanakara Iyer.

‘How can I call a Master anything but Master, Master Iyer?’ Karutha laughed uproariously. Over the last three days, Sankaran had got used to his levity.

Subramanya Iyer had insisted that Sankaran go to Chennai. ‘I can’t bear to see you like this, Sankara. You are just sitting around moping. Saama is gone and will not come back. Those he has left behind have to get on with their lives. You haven’t stepped into the shop and you don’t talk to anyone at home. On four occasions Ayyanai has brought you back from outside the old house where you just stood staring at that burnt pile. This will not do. Go to Chennai Pattinam, Sankara. The sea breeze will do you as much good as the change.’

‘What will I do there?’ Sankaran had grumbled.

‘Learn the snuff business. Pichai Ravuthan’s son has opened a shop exclusively for snuff in the Ex… Ex… I can’t pronounce the name of the place.’

‘That is the Esplanade,’ old Subbamma said clearly, adding, ‘The ancestors have all come to bless you.’

Overcome with joy, Iyer folded his hands in obeisance to them.

Behind him, in an inner room, Kalyani lay moaning. She was bedridden since she had heard about Saama in Madurai. Her sorrow afflicted her in bouts. She would lie dead to the world for hours. Then she would suddenly sit up and plead loudly, ‘Saama, my breasts ache, drink the milk from them, child. Saama, prostrate before the elders with your wife. Sit down on the swing. Somebody give the couple milk to drink and plantains to eat… Have the pillows for their bed been stuffed with the softest cotton?’ She would ramble on loudly for a while

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 27, 2023 20:31

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.