இரா. முருகன்'s Blog, page 25

November 29, 2023

பெருந்தேட்பெண்டைப் பேழையிலிட கர்ப்பூரன் நடந்தபோது

தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து – முழு அத்தியாயம் 41 திண்ணை டாட் காம் இணைய வார இதழில் காண்க

கசாப்புக்கடை பிரதி நீலன் அவரைக் கேட்டபடி நிற்க, உட்காருமய்யா என்று கைகாட்டி எதிர் வரிசையில் கால் ஆடிக் கொண்டிருந்த பழைய மர நாற்காலி ஒன்றைச் சுட்டிக்காட்டி. ரொட்டி எடுத்துக் கொள்ளும் என்றபடி தான் சவைத்துக் கொண்டிருந்த ரொட்டித் துண்டில் பாதியைக் கிழித்து நீலனிடம் நீட்டினார்.

இதேது பேய்க்கு வாழ்க்கைப்பட்டு புளியமரம் ஏறியது போல் இந்தத் தேட்சவத்தோடு பழகின தோஷத்துக்கு அதன் எச்சில் திங்கணுமோ கஷ்டம் என்று நினைத்தபடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு நின்றார். வயிறு சரியில்லை அப்புறம் உண்கிறேன் என்றபடி அங்கிருந்து மெல்ல அகலப் பார்த்தார் ஆல்ட் க்யூ பிரபஞ்ச நீலன். தேட்சவமா விடும்? தேட்கிழமா போய்வரச் சொல்லிக்கனிவு காட்டும்?

நீலரே எனக்கு கொஞ்சம் அது ஏதோ மருந்து உற்பத்தி செய்திருப்பதாகப் போன தடவை எழுந்தபோது சொன்னீர்களே சகல ரோக சஞ்சீவினி.

ஐயா சகல இன சஞ்சீவனி.

என்னவோ ஒரு பெயர் அதில் ஒரு கோப்பை எடுத்து வரச் சொல்லுங்கள். வடிவான இரண்டு பையன்களை அந்தக் கோப்பைகளோடு அனுப்ப வேண்டும். என்ன புரிந்ததா? அழகான மங்கையர்கள் கோப்பையில் இருந்து ஊற்றிக் கொடுத்திடவும் புகட்டவும் மட்டும் போதும்.

கிழம் உளற ஆரம்பித்தபோது அது தன்னை உடனே வெளியேற விடாது என்று தோன்றியது ஆல்ட் க்யூ நீலனுக்கு. இந்த முதுதேளரை சமாளிக்க கர்ப்பூரம் வேண்டும் என்று தோன்ற அவனை அழைத்தார் அந்த கசாப்புக்கடை நீலன்.

கர்ப்பூரம் வந்ததுமே அதிகார தோரணையில் சத்தம் கூட்டிப் பேச ஆரம்பித்து விட்டான்.

ஓய் முதுபெருந்தேளா, எழுந்ததும் ஒண்ணுக்கு போய்ட்டு வந்தீரா இல்லே ஏற்கனவே பேழையை நாறடிச்சிருக்கியா என்று ஒருமையில் விளிக்க ஆல்ட் க்யூ கசாப்பு நீலன் பதறி அவர் ராஜா என்று அவர் பின்னால் இருந்து தலையில் கொம்பு முளைத்திருக்கும் அபிநயத்தைக் காட்டினார்.

பெரிசுக்கு இன்னொரு கொம்பு தலையிலே வந்திருக்காமே சபாஷ் என்று சொல்லி நீலனிடம் மெதுவாகச் சொன்னது – பொணம் ஆயாச்சு. ராஜா என்ன மந்திரி என்ன ஊரான் என்ன? கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு முதுபெரும்தேளர் உறுமினார் அதுவும் கிருத்திருமம் நிறைந்த கர்ப்பூரத்தைப் பார்த்து.

போய் சஞ்சீவனி எடுத்துக்கிட்டு பையன்களை கூட்டிட்டு வாடா. எல்லா வாடையோடும் இருக்கணும் ஆமா. என்னடா முறைக்கிறே.

கர்ப்பூரம் சிரித்துக் கொண்டே முதுதேளன் பின்னால் போனான். காலில் போட்டிருந்த செருப்பை எடுத்து ஓங்கி ஒரு அடி கொடுத்தான் அந்தத் தேள் சவத்துக்கு. கூழான உடம்போடு கிடக்கும் முதுபெரும் தேளன் உடம்பு வாடை தெள்ளுப் பூச்சிக் கும்பலுக்குப் பரவ அடுத்த பத்து நிமிடத்தில் துயிலரங்கில் இரண்டு தேளர்கள் முற்றுகையிடப்பட்டனர். முதுபெருந்தேளரும் அவரது இளைய மகனான இளந்தேளரும் அந்த இருவர்.

முதுபெருந்தேளரின் சவத்தின்மேல் தெள்ளுப் பூச்சிகள் படர்ந்து விருந்து உட்கொண்டன. கொஞ்சம் கொஞ்சமாக அவை முதுவரின் முகத்தை அரித்தெடுத்து கண்களை மட்டும் விட்டு வைத்து கால்களை அரித்துத் தின்ன முனைந்தன.

இலந்தேளன் உயிரோடு இருக்கிறான் என்பதில் மகிழ்ச்சி அடைந்ததுபோல் தெள்ளுப் பூச்சிகள் அந்தத் தேளன் அலற அலற அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து உண்டன. கொஞ்ச நேரத்தில் முதுபெருந்தேளனும் இல்லை இளந்தேளனும் அங்கே இல்லை.

வந்த வேகத்தில் தெள்ளுப் பூச்சி உயிர்கொல்லிப் படை துயிலரங்கம் கடந்து தாழப் பறந்து போயின. கர்ப்பூரமும் ஆல்ட் க்யூ பிரபஞ்சத்து கசாப்புக்கடை நீலனும் அவற்றைப் பார்த்து அச்சம் மூண்டெழுந்து பிரமித்துப் போய் நின்றனர்.

சிற்றுந்து ஓட்டுநர் மணியடித்து நேரமாகி விட்டதென்று அழைக்க, கர்ப்பூரம் பிரதி நீலனோடு வாகனமேறினான். அவர்களுக்குப் பேச எல்லாம் இருந்தது. எனில் சிற்றுந்து ஓட்டுநன் முன்னிலையில் பேச ஏதுமில்லை.

வாகன ஓட்டுநர் கர்ப்பூரத்திடம் அதென்ன ஐயா தெள்ளுப் பூச்சிகள் பிறந்த தேள்குஞ்சுகள் மேல் தான் விருந்துண்டு இன அழிப்புச் செய்தலில் முன்முனைப்பு காட்டும் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவை மூத்த தேளர் போன்ற தேள் உயிர்போன உடல்களையும் விரும்பி உட்கொள்ளத் தொடங்கியது எப்போதிலிருந்து ஐயா.

பிரதி நீலன் சினம் கொண்டு ஓய் உம் தொழில் உந்து செலுத்துதல். இமைப் பொழுதும் சோராமல் இருத்தல். தேள் போனாலென்ன தெள்ளுப்பூச்சி வந்தாலென்ன உனக்கும் எனக்கும்? ஓட்டுநன் அமைதியானான். தேளரமணை வந்து சேர்ந்ததும் ஓட்டுநன் கர்ப்பூரத்திடம் சொன்னான் –

வண்டிச்சாவி இந்தாரும். இனிமேல் நான் வேலைக்கு வரலை. சம்பளம் வாராவாரம் தருகிறேன் என்று சொன்னது காற்றோடு போச்சு. சகல புருடா சஞ்சினி பத்து பீப்பாய் தருகிறேன் விற்று சம்பளத்துக்கீடாக எடுத்துக் கொள்ளும் என்கிறார் அரண்மனை தலைமை அதிகாரி. எனக்கு அதொன்றும் வேணாம்.. கர்ப்பூரமே சாவி இந்தாரும் அரண்மனைக்குள் உமக்கு தேளரசரோ பெருந்தேள்பெண்டோ உமக்கு பார்க்க பேசக் கிடைக்கலாம். சாவியைக் கையைப் பிடித்துக் கொடுத்துவிடும் என்றபடி கர்ப்பூரத்தின் கையைப் பற்றி இழுத்து சிற்றுந்து சாவியை வைத்துவிட்டு உலகமே எதிரி தோரணையோடு நடந்து போனான் அவன்.

அரசவைக் கதவுகள் அடைபட்டிருந்தன.கர்ப்பூரம் ஆல்ட் க்யூ நீலனை நோக்கினான். ஒரு அஞ்சு நிமிஷம் நான் தேளரசரை சந்திச்சுட்டு வந்திடறேன். அப்புறம் நீங்க போகலாம் என்று வெளியே தூசி அடைந்து கிடக்கிற ஓட்டை உடைசல் மர நாற்காலியைக் காட்டிவிட்டு நேரே கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான் அவன்.

அங்கே அரியாசனத்தில் பெருந்தேள்பெண்டு வழித்துக்கொண்டு உட்கார்ந்து காலை நீட்டி வைத்துக் கொண்டிருக்க, தரையில் அமர்ந்து பெண்டுவின் கால் பிடித்து விட்டுக்கொண்டிருந்த பெருந்தேளரசர். கர்ப்பூரம் திரும்பப் போகிறதாகப் போக்குக் காட்டி தேள்களின் பூர்வ சம்போக விளையாட்டை ரசித்துக் கொண்டிருந்தான். போகம் எல்லாம் காண இனிது என்று இல்லை. விலையின்றிக் காணக் கிடைத்த சந்தோஷமது. திடீரென்று பெருந்தேள்ப்பெண்டின் குரல் உயர்ந்தது.

அந்த ரெண்டு தேவிடிச்சிகள் காலையிலே சூரியன் வந்ததற்கு அப்புறம் நாளைக்கு உசிரோடு இருக்கக் கூடாது. நீ தேளனா இந்தக் கொடுக்கோட பிறந்து இருக்கப்பட்டவன். அந்தத் தேவடியாள்களோடு இதை வச்சுக்கிட்டு இன்பம் எப்படி அனுபவிக்கப் போறே. முழுக்க உள்ளே போனா திரும்பறது உன் கட்டுப்பாட்டிலே இல்லே.

அவள் சொன்னதை கர்ப்பூரம் கேட்கவில்லை என்ற பாவனையில் அணுஅணுவாக ரசித்தான். சரி நாளைக்கு முடியாது கூடிய சீக்கிரம் அந்தப் பெண்களை உயிர் நீக்கிக் கிடத்த ஒருபடை செந்தேள்களையும் இன்னொன்று கருந்தேள்களையும் எடுத்து.

அதெல்லாம் உள்நுழைந்து கொட்டினால் அப்புறம் உசிரு தங்காது. என்ன சொல்றே கர்ப்பூரம் என்றபடி பெருந்தேள்பெண்டின் ஒரு காலுக்கு முத்தமிட்டு அவளை மகிழ்ச்சிப்படுத்தினார் தேளரசர்.

கர்ப்பூரத்துக்குக் கண்காட்டி உடனே பெருந்தேள்பெண்டின் கால்களை ஒவ்வொன்றாக ஒடிக்கத் தொடங்கினார் அந்த இங்கிதமற்ற தேளர். மறுபடி கர்ப்பூரத்தைப் பார்க்க, புரிந்தது என்று தலையாட்டி தன் காலிலிருந்து காலணிகளை அகற்றி ஓங்கி பெருந்தேள்பெண்டின்மேல் அடித்தான் கர்ப்பூரம். தேளரசர் பெருந்தேள்பெண்டு முதுகில் ஏறிக் குதித்து கொடுக்கை நசிப்பித்தார்.

ரொம்பப் பேசினே இதுதான் தண்டனை. அந்தக் குட்டிகளுக்கும் வேசி மகன் குழலனோடு சேர்ந்து சல்லாபம் பண்ணி தாந்தோன்றியாக செயல்பட்டா உயிர் உடம்பிலே நிக்காதுன்னு சொல்லியாகணும். என்ன சொல்றே கர்ப்பூரம். குயிலி, வானி போங்கடி. சாவப் போங்கடி.

நான் உங்க பக்கம் தான் என்று கர்ப்பூரம் கையுயர்த்திச் சொன்னான். அப்போது வெளிக்கதவைத் திறந்து உள்ளே வந்த ஆல்ட் க்யூ நீலனும் அதையே அவசரமாகச் சொன்னார்.

அதாவது, கர்ப்பூரர் ஆதரவு தருவதுபோல் அரசருக்கு நானும் சகல இன சஞ்சீவனி வெற்றி தொடர என் உழைப்பையும், ஆதரவையும் தருகிறேன். அரசர் எனக்கு அருள வேண்டும் என்று கோருகிறேன்.

ஆசிதானே அத்தனையும் உண்டு என்று தாராளம் காட்டினார் தேளரசர். அதோடு கூட என் பங்கு சகல இன சஞ்சீவனி வருமானமும். கடந்த ஒரு மாத வருமானத்தில் கொஞ்சம் நிதி இப்போது கொடுத்தாலாகும் என்று அவசரம் காட்டினார் ஆல்ட் க்யூ நீலன்.

கர்ப்பூரம் தேளரசரையும் ஆல்ட் க்யூ பிரபஞ்ச பிரதி நீலனையும் மாறிமாறிப் பார்த்தான். எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரிந்தால் அதற்காக ஒரு தொகை ஒதுக்கிவைத்து மற்ற இன்றியமையாத செலவுகளுக்குப் பணம் ஒதுக்கலாம். கஜானாவும் மிக அதலபாளத்தில் கொஞ்சம் காசுபணத்தோடு இருக்கிறது. ஏற்றுமதி மழை எதிர்பார்த்ததுபோல் இல்லை.

இதெல்லாம் பெருந்தேளர் சொன்னது. மற்ற நேரமாக இருந்தால் அவர் நீலன் போன்ற கீழ்த்தட்டு மனிதர்களோடு இப்படி நேரடியாக, அதுவும் பணிந்த குரலில் பேசியிருக்க மாட்டார். என்ன செய்ய? இது அவர் அடங்கி இருக்க வேண்டிய காலம்.

இன்னும் நம்பிக்கை இருக்கிறது ராஜன். மனதில் அவரே சொல்லிக்கொண்டார்.

வரும் வெள்ளிக்கிழமை ஐம்பது விழுக்காடு உம் பங்கு தருகிறேன். மகிழ்ச்சி தானே நீலரே? பெருந்தேளர் வினவினார்.

ஆம் என்றார் மகிழ்ச்சியோடு நீலன்.

மிக அதிகமாக சத்தம் போடாமல் பெருந்தேள்பெண்டின் சவத்தை அகற்ற முற்பட்டார் தேளரசர். சிற்றுந்து ஓட்டுநன் கபிலன் வாசலில் இருப்பான் சற்று வரச்சொல்ல முடியுமா என்று கர்ப்பூரத்தை வினவினார் அவர். அவன் இருக்க மாட்டான் என்றபடி கர்ப்பூரம் சிற்றுந்து சாவியை அசைத்துக் காட்டி தன் சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டான்.

ஓ ஓட்டுநன் நின்று விட்டானா? சரி நானே ஓட்டிப் போகிறேன். கர்ப்பூரரே நீரும் கூட வாரும். இப்படிச் சொல்லி சிற்றுந்தின் பின் இருக்கையில் பெருந்தேள்பெண்டின் உடலையும் மேலே தனியாக வந்த கால்கள், கொடுக்குகளையும் விருந்து சாப்பிடும் தெள்ளுப்பூச்சிகளைக் கையசைத்து வாகனத்துக்கு வெளியே பறந்து போக அனுப்பினான்.

கர்ப்பூரன் சொன்னான் வண்டியை நான் ஓட்டுகிறேன். நீங்கள் உங்கள் மடியில் ராணியைப் போட்டுக்கொண்டி இருங்கள்.

நான் எப்படி அதுபோல எல்லாம் என்று சமயம் புரியாமல் சூழ்நிலை புரியாமல் ஆல்ட் க்யூ நீலன் அசடு வழிந்தார்.

ஓய் உம்மையும் தெள்ளுப்பூச்சி கடிக்க விட்டிருக்கணும். பேசாமல் முன்னால் என் அருகில் உட்கார்ந்து ஒரு வார்த்தை பேசாமல் வரும் என்று நீலனை இருத்தினான் கர்ப்பூரம்.

ராஜன் நீர் பின்னால். புரிந்தது புரிந்தது என்று அவசரமாகச் சொன்னார் தேளரசர். தேள்ராணிக்கு உடம்பு சரியில்லையா என்று நீலன் கேட்டார்.

ஓ இந்த வைத்தியனைக் கூடக் கூட்டிப் போகறது மடியில் பூனையைக் கட்டிக்கிட்டு சகுனம் பார்க்கறமாதிரி ஆச்சுதே. தெலுங்கில் அப்படிப் பாட்டாகப் பாடியபடி உட்கார்ந்திருந்தான் கர்ப்பூரம். தேளரசர் ராணியம்மா மேல் நோய் கவிந்தது என்று சுருக்கமாகச் சொன்னார்.

நான் வைத்தியம் பார்க்கட்டுமா என்று நீலன் சொல்வதை எந்த நிமிடமும் எதிர்பார்த்தார் அவர். ஆனால் புள்ளிக்காரர் நீலன் இல்லையே. ஆல்ட் க்யூ பிரபஞ்ச பிரதி நீலன் அல்லவா?

நீலனுக்கோ தன்னை வைத்தியம் பார்க்கச் சொல்வார்கள் என்று பயம். கர்ப்பூரம் பாடலாகச் சொன்னது பிணத்துக்கு யார் வைத்தியம் பார்த்து என்ன, யார் மருந்து கொடுத்து என்ன. அவுனு அவுனு என்றார் தேளரசர் தெலுங்கு தெரிந்த மாதிரி.

துயிலரங்கம். தேளரசனும் நீலனும் பெருந்தேள்பெண்டை ஒரு பேழையில் இடலாம் என்று நடந்தால் அங்கே எல்லாப் பேழைகளும் வெற்றிடமாகக் கிடந்தன. தரையெங்கும் கரப்புகள் ஊர்ந்து கொண்டிருந்தன. தெள்ளுப் பூச்சிகளை அவை ஆகாரமாக்கிக் கொண்டிருந்தன,

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 29, 2023 18:57

November 27, 2023

துயிலரங்கம் ஆக்ரமித்த தெள்ளுப்பூச்சி உயிர் கொல்லிப்படை

நாவல் தினை அல்லது சஞ்சீவனி அத்தியாயம் 41-லிருந்து – முழு அத்தியாயம் திண்ணை டாட் காம் இணைய இதழில்

பக்கத்தில் கர்ப்பூரம் வேறே லொடலொடவென்று ஈச்சம்பாயில் ஒண்ணுக்கு போனமாதிரி பேசிக்கொண்டே இருக்கிறான். அவன் குரல் சத்தமாக இருந்தாலும் மெலிந்திருந்தாலும் நிறுத்தாமல் கேட்டுக் காதை செவிப்பூரன் புகுந்த மாதிரி துளைக்கிறது. பேசாமல் இதே காஸ்மாஸ் பிரபஞ்சத்திலேயே பொது யுகம் 230-க்குப் போய் விடலாமா? அசல் நீலன் அங்கே இருந்தால் நான் யாராவது? இருத்தலியல் சிக்கல் என்பது இதுதானா?

இன்றைக்கு கர்ப்பூரத்தைத் தவிர்த்து விட்டுத் தனியாக தேளரசரைச் சந்தித்திருக்கலாம். எல்லாம் கிழட்டுப் பிணம் முதுதேளரசன் காரணமாக நினைத்தபடி எதுவும் செய்ய முடியாமல் போனது.

விடிகாலையில் எழுந்து உட்கார்ந்து ரொட்டி, ஜாம், வெண்ணெய் என்று அமர்க்களமாக உண்டு கொண்டிருந்தான். கொண்டிருந்தார். நீலரே, வாருங்கள் அரண்மனை போயாக வேண்டும். நீங்கள் தேளரசின் சக்கரவர்த்தியோடு வார்த்தை சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். இந்த நிமிடத்திலிருந்து நான் மீண்டும் பேரரசராகிறேன்.

சுவாமி அதெல்லாம் சரிதான். நீரே சக்கரவர்த்தி நீரே மெழுகுவர்த்தி. எல்லாம் இருக்கட்டும். அப்போது தற்போதைய தேளரசர் உம் புதல்வர் என்ன ஆவார்?

கசாப்புக்கடை பிரதி நீலன் அவரைக் கேட்டபடி நிற்க, உட்காருமய்யா என்று கைகாட்டி எதிர் வரிசையில் கால் ஆடிக் கொண்டிருந்த பழைய மர நாற்காலி ஒன்றைச் சுட்டிக்காட்டி. ரொட்டி எடுத்துக் கொள்ளும் என்றபடி தான் சவைத்துக் கொண்டிருந்த ரொட்டித் துண்டில் பாதியைக் கிழித்து நீலனிடம் நீட்டினார்.

இதேது பேய்க்கு வாழ்க்கைப்பட்டு புளியமரம் ஏறியது போல் இந்தத் தேட்சவத்தோடு பழகின தோஷத்துக்கு அதன் எச்சில் திங்கணுமோ கஷ்டம் என்று நினைத்தபடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு நின்றார். வயிறு சரியில்லை அப்புறம் உண்கிறேன் என்றபடி அங்கிருந்து மெல்ல அகலப் பார்த்தார் ஆல்ட் க்யூ பிரபஞ்ச நீலன். தேட்சவமா விடும்? தேட்கிழமா போய்வரச் சொல்லிக்கனிவு காட்டும்?

நீலரே எனக்கு கொஞ்சம் அது ஏதோ மருந்து உற்பத்தி செய்திருப்பதாகப் போன தடவை எழுந்தபோது சொன்னீர்களே சகல ரோக சஞ்சீவினி.

ஐயா சகல இன சஞ்சீவனி.

என்னவோ ஒரு பெயர் அதில் ஒரு கோப்பை எடுத்து வரச் சொல்லுங்கள். வடிவான இரண்டு பையன்களை அந்தக் கோப்பைகளோடு அனுப்ப வேண்டும். என்ன புரிந்ததா? அழகான மங்கையர்கள் கோப்பையில் இருந்து ஊற்றிக் கொடுத்திடவும் புகட்டவும் மட்டும் போதும்.

கிழம் உளற ஆரம்பித்தபோது அது தன்னை உடனே வெளியேற விடாது என்று தோன்றியது ஆல்ட் க்யூ நீலனுக்கு. இந்த முதுதேளரை சமாளிக்க கர்ப்பூரம் வேண்டும் என்று தோன்ற அவனை அழைத்தார் அந்த கசாப்புக்கடை நீலன்.

கர்ப்பூரம் வந்ததுமே அதிகார தோரணையில் சத்தம் கூட்டிப் பேச ஆரம்பித்து விட்டான்.

ஓய் முதுபெருந்தேளா, எழுந்ததும் ஒண்ணுக்கு போய்ட்டு வந்தீரா இல்லே ஏற்கனவே பேழையை நாறடிச்சிருக்கியா என்று ஒருமையில் விளிக்க ஆல்ட் க்யூ கசாப்பு நீலன் பதறி அவர் ராஜா என்று அவர் பின்னால் இருந்து தலையில் கொம்பு முளைத்திருக்கும் அபிநயத்தைக் காட்டினார்.

பெரிசுக்கு இன்னொரு கொம்பு தலையிலே வந்திருக்காமே சபாஷ் என்று சொல்லி நீலனிடம் மெதுவாகச் சொன்னது – பொணம் ஆயாச்சு. ராஜா என்ன மந்திரி என்ன ஊரான் என்ன? கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு முதுபெரும்தேளர் உறுமினார் அதுவும் கிருத்திருமம் நிறைந்த கர்ப்பூரத்தைப் பார்த்து.

போய் சஞ்சீவனி எடுத்துக்கிட்டு பையன்களை கூட்டிட்டு வாடா. எல்லா வாடையோடும் இருக்கணும் ஆமா. என்னடா முறைக்கிறே.

கர்ப்பூரம் சிரித்துக் கொண்டே முதுதேளன் பின்னால் போனான். காலில் போட்டிருந்த செருப்பை எடுத்து ஓங்கி ஒரு அடி கொடுத்தான் அந்தத் தேள் சவத்துக்கு. கூழான உடம்போடு கிடக்கும் முதுபெரும் தேளன் உடம்பு வாடை தெள்ளுப் பூச்சிக் கும்பலுக்குப் பரவ அடுத்த பத்து நிமிடத்தில் துயிலரங்கில் இரண்டு தேளர்கள் முற்றுகையிடப்பட்டனர். முதுபெருந்தேளரும் அவரது இளைய மகனான இளந்தேளரும் அந்த இருவர்.

முதுபெருந்தேளரின் சவத்தின்மேல் தெள்ளுப் பூச்சிகள் படர்ந்து விருந்து உட்கொண்டன. கொஞ்சம் கொஞ்சமாக அவை முதுவரின் முகத்தை அரித்தெடுத்து கண்களை மட்டும் விட்டு வைத்து கால்களை அரித்துத் தின்ன முனைந்தன.

இலந்தேளன் உயிரோடு இருக்கிறான் என்பதில் மகிழ்ச்சி அடைந்ததுபோல் தெள்ளுப் பூச்சிகள் அந்தத் தேளன் அலற அலற அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து உண்டன. கொஞ்ச நேரத்தில் முதுபெருந்தேளனும் இல்லை இளந்தேளனும் அங்கே இல்லை.

வந்த வேகத்தில் தெள்ளுப் பூச்சி உயிர்கொல்லிப் படை துயிலரங்கம் கடந்து தாழப் பறந்து போயின. கர்ப்பூரமும் ஆல்ட் க்யூ பிரபஞ்சத்து கசாப்புக்கடை நீலனும் அவற்றைப் பார்த்து அச்சம் மூண்டெழுந்து பிரமித்துப் போய் நின்றனர்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 27, 2023 19:00

November 26, 2023

புது சீலம், புது ஒழுங்கு, புது கட்டற்ற தன்மை, புது சிந்தனை – சகல ரோக நிவாரணி

நாவல் தினை அல்லது சஞ்சீவனி அத்தியாயம் 41 இப்போது திண்ணை இணைய வார இதழில் பிரசுரமாகியுள்ளது. அதிலிருந்து

கோகர்மலை நாடு அமைதியாக இருந்தது.

சகல இன சஞ்சீவனி எந்தத் தெருவிலும் யார் வீட்டிலும் உண்டாக்கப்படவில்லை. ஈக்களும். மாட்டு ஈக்களான உண்ணிகளும் சுவர்களில் ஈஷியிருந்தன. பறக்கத் தெரியாதவை போல் அவை சிறகுகளை மெல்லிய ரரரரர ஒலியெழ அதிர வைத்து செவிப்புலன் மூலம் சூழும் போதையில் அமிழ்ந்திருந்தன.

தெருவில் சாக்கடை போல் சகல இன சஞ்சீவனியை பிரயோஜனமற்றது என்று பலரும் பானைகளில் ஏற்றி உடைத்து புளிவாடை எங்கும் மூக்கில் குத்த, பாதை வழுக்கச் செய்திருந்தனர்.

கூட்டம் கூட்டமாக தலையில் சகல இன சஞ்சீவனி ஏற்றி வந்து தேளரசர் அரண்மனை முன்னும் துயிலரங்கத்துச் சுற்று வெளியிலும் மேலும் கர்ப்பூரம் வீட்டு வாசலிலும் பானை உடைத்துப் போனார்கள்.

சகல இன சஞ்சீவனி ஏற்றுமதி மையம் என்று பலகை வைத்த பழைய பெரிய கட்டிடத்துக்குள் ஏழெட்டு நாய்கள் சுருண்டு படுத்திருக்க, ஒரு நாற்காலியோ மேசையோ காணக் கிடைக்கவில்லை எனினும் மின்விசிறிகள் அதிவேகமாகச் சுழன்று கொண்டிருந்தன.

சகல இன சஞ்சீவனி என்ற கர்ப்பூரத்தின் திட்டம் தோல்வி. அதைப் பற்றிய கவலையே இல்லாமல் கர்ப்பூரம் தேளரசரின் ஆட்சியை உடனே பாதுகாக்க என்ன செய்யலாம் எனத் தீவிரமாக யோசித்தபடி பழைய சிற்றுந்துவில் பெருந்தேளரசரைச் சந்திக்கப் போய்க்கொண்டிருந்தான்.

கூடவே பிரதி நீலனான ஆல்ட் க்யூ பிரபஞ்சத்து கசாப்புக்கடை நீலனும் அமர்ந்திருந்தார். அவர் தேளரசரோடு சேர்ந்தாலும் குழலனோடு ஓர் அணியில் நின்றாலும் அவர்களுக்கு என்ன பயன்? அவருக்குத்தான், கசாப்புக்கடை நீலனுக்குத்தான் என்ன பயன்?

கர்ப்பூரத்திடம் சொல்லி விடலாமா நான் அசல் நீலன் இல்லை, ஆல்ட் க்யூ பிரபஞ்சத்து கசாப்புக்கடை நீலன் என்று?

கசாப்புக்கடைக் கத்தி அவர் தலையைக் கழுத்திலிருந்து அகற்ற வேண்டுமென்றால் அதை வெளிப்படுத்தலாம். ஏன் அந்த விபரீத ஆசை?

தேளரசனைப் பொறுத்தவரை சகல இன சஞ்சீவனி ஒரு திசையில் முழு வெற்றி. உறவுக்கு தூண்டும் உறுதியான மனமும் உடலும் நீள்நேரக் கலவியும் மருந்தில் இருக்கிறதோ என்னமோ, நம்புகிறார்கள் அது உண்டென்று.

அசல் நீலன் வந்திருந்தால் கூட இப்படி ஒரு புது மருந்தை உருவாக்கி இருக்க முடியாது. ஆடச் சொன்னதற்கு மேலாகவே ஆடி விட்டார் கசாப்பு நீலன்.

குழலன் கூட்டி வரும்போது தருவதாகச் சத்தியம் செய்த பத்தாயிரம் பைனரி நாணயங்களைக் குழலனிடமிருந்தும், கர்ப்பூரத்திடம் இருந்து சகல இன சஞ்சீவனி வருமானத்தில் பங்கையும் வாங்கிக்கொண்டு, ஆல்ட் க்யூ பிரபஞ்சத்துக்கு அடுத்த ஆட்டையும் மாட்டையும் வெட்டப் போய்விடுவார் அவர்.

ஒரு வாரமாக இந்த சகல இன சஞ்சீவனி காய்ச்சுவதில் மும்முரமாக கசாப்பு நீலன் மூழ்கியதை தேளரசர் கவனித்திருப்பார். சகல இன சஞ்சீவனி வருமானம் மூன்றில் ஒரு பாகம் ஆல்ட் க்யூ நீலனுக்கும் மீதி வருமானத்தில் 60% பெருந்தேளருக்கும் பாக்கி 40% கர்ப்பூரத்துக்கும் போகிறது.

வினாடி நேரமும் ஓய்வு எடுக்காத, உறக்கத்தைக் குறைத்து ஓய்வைக் குறைத்து ஊர் முழுக்க நாடு முழுக்க எல்லாம் மாற்றி இருக்க புது சீலம், புதுச் சிந்தனை, புது ஒழுங்கு, புது கட்டற்ற தன்மை என்று மாறி இருக்கச் செய்ததை தேளரசன் தனியாகச் செய்திருக்க முடியாது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 26, 2023 18:17

November 21, 2023

இந்தப் பிரபஞ்சத்துக்கு அரைக் கரடியே போதும்

என் ஃபாண்டஸி புதினம் தினை அல்லது சஞ்சீவனி அத்தியாயம் 40 திண்ணை.காம் இணைய இலக்கிய இதழில் பதிப்பிக்கப் பட்டுள்ளது. அதிலிருந்து

நாட்டுக் காரியம் இருக்கிறதே தலை போகிறதாச்சே என்று புன்சிரிப்போடு கரடியார் கைகூப்பி நறும்வல்லி வீட்டுக்குள் இருந்து தைல வாடையோடு வெளியே வந்தார்.

தேசம் ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறது என்றும், இந்த அபாயக் கட்டத்தைக் கடந்து நாடு முன்னேற பெருந்தேளரின் அரசாட்சி மட்டும் நாட்டை வழிநடத்த முடியும் என்பதால் பெருந்தேளருக்கு முழு ஆதரவு தெரிவித்தார்.

குழலனால் தன் தலையையே தன் முண்டத்தோடு ஒட்டி வைத்திருக்க முடியவில்லை. கோகர்மலைநாடான பெருந்தேள் நாட்டை எப்படி ஓர் மொழி, ஓர் உணவு, ஓர் இலக்கியம் என்று ஐக்கிய நோக்கில் நல்லாட்சி தருவான் அவன் எனக் கூவினார்.

மற்ற இனமெல்லாம் குறைந்தது நூறு உருப்படியாவது கோகர்மலைநாட்டில் ஜீவித்திருக்க, கரடி மட்டும் ஏன் நீங்கள், ஒரே ஒரு கரடி என்று கூட்டத்தில் யாரோ கேட்டார்கள். இந்தப் பிரபஞ்சத்துக்கு அரைக் கரடியே போதும் என்று சொல்லிக் கைதட்டை வாரினார் கரடியார்.

தெரு முனையில் தொடர் உண்ணும் விரதம் என்று பலகை வைத்திருந்ததைப் படித்து அங்கே ஒரு பெருங்கூட்டம் விரைந்தது, தின்னச் சோறும் கறியும் மீனும் எதுவும் கிடைக்காமல் மழை பெய்து நிலத்திலிருந்து வெளிவரும் ஈசல்களைப் பிடித்துத் தணலில் வறுத்து உப்பிட்டு ஒரு பெரும் கூட்டம் உண்டபடி நகர்ந்தது.

அரசு தரப்பில் இருந்து ஒவ்வொரு குடிமகனுக்கும் தினசரி அரைப்படி பொரி கொடுக்கப்படுகிறது. தொடர் உண்ணும் விரதக் குழுவினர் குழலனின் புதுநாடு அமைப்பின் உறுப்பினர்கள்.

ஒரு பெரிய வீட்டின் கூடத்தில் பாய் விரித்து குழலன் அமர்ந்திருந்தான். இன்னும் கொஞ்ச நாள் நாற்பரிமாணக் கூறுகள் மாற்றி யார் கண்ணிலும் படாதவர்களாக அரசு ஊழியர்களான குயிலியும் வானம்பாடியும் இருக்க வேண்டும் என்று குழலன் அவர்களிடம் வற்புறுத்திச் சொல்லியிருந்தான்.

’தேளரசே நீ ஆண்டது போதாதா மக்கள் மாண்டது போதாதா’ என்ற கோஷம் நாடு முழுக்க எதிரொலித்ததில் குழலனுக்கு அலாதி மனநிறைவு. அதே அடிப்படையில் ’பெருந்தேள் குரங்கே பதவியை விட்டு இறங்கே’ என்று பாட்டு வாத்தியார் எழுதிக்கொடுத்த முழக்கம் நிராகரிக்கப்பட சாது மிரண்ட சினம் காட்டிய குரங்குகளும் காரணம்.

கறுந்தேளர் படைத் தலைவருக்கு காரிருளை வெல்ல வந்த முழுமதியே வருக என்ற கோஷத்தை மாற்றினால் பொருந்தும் – முழுமதியை வெல்ல வந்த காரிருளே வருக.

’எங்கேயோ குழந்தை அழும் சத்தம். எங்கேயும் குழந்தை அழும் சத்தம் தான்’. இந்த கோஷம் அறிவு அதிகம் இருந்தால் தான் புரியும் என்று பலரும் கருத்து சொன்னார்கள். சகல இன சஞ்சீவனியைக் குடித்து காமத்தில் ஈடுபட்டு ஊரெங்கும் குழந்தை பிறப்பு அதிகமானது பற்றி குயிலி இயற்றிய கோஷம் அது.

அதே போல் வானம்பாடி இயற்றிய கோஷம் – அய்யோ பசிக்கு வேண்டும் ஆஹா பிடி காண்டோம். குழலனுக்கு ரொம்பப் பிடித்த கோஷம் என்று சொல்ல அவனோடு கூடத்துக் கூட்டமே கைதட்டியது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 21, 2023 18:24

November 19, 2023

நாம் யாரோடு இருக்கிறோம் என்பதைவிட நம்மோடு யார் இருக்கிறார் என்பதே முக்கியம் – நாவல் தினை அல்லது சஞ்சீவனியிலிருந்து

நாவல் தினை அல்லது சஞ்சீவனி அத்தியாயம் 40 இன்று திண்ணை.காம் இணைய இலக்கிய இதழில் பிரசுரமாகியுள்ளது. அதிலிருந்து

சகல இன சஞ்சீவனி எங்களுக்கு வேண்டாம். அதைக் கொடுத்த பெருந்தேளரசரும் எங்களுக்கு வேண்டாம்.

காலையில் இருந்து நடுராத்திரி வரை சாரிசாரியாகச் சகல இனங்களும் தேளரண்மனை முன் கோஷம் முழங்கின. மற்ற இனங்களை விடவும் மும்முரமாகத் தேள் இனம் இந்த அரசு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டது.

கரடியின் தலைமையில் துயிலரங்கத்துக்கு முன் பத்து பன்றிகளும், இருபது கழுதைகளும் பத்து நாய்களும் கோஷம் முழக்கி கற்களை விட்டெறிந்தன.

கரடியின் பொதுக்கூட்டச் சொற்பொழிவில் இருந்து –

குழலன் என்ற இளைஞர், இன்னும் இருநூறு ஆண்டுகள் சென்ற அப்புறம் பிறக்கப் போகிற அறிவுஜீவி, நம்மைக் கடைத்தேற்ற காலத்தில் பின்னால் இருநூறு ஆண்டு கடந்து வந்து நம்மை உய்விக்க அழைக்கிறார். (மேலும்)

இந்த தற்குறிகள் தேளரும் கோலரும் நாட்டை மட்டுமில்லை பிரபஞ்சத்தையே அறமின்றி ஆக்கி விடுவார்கள்.

தேளர் ஆண்டது போதாதா மக்கள் மாண்டது போதாதா என்று சுருக்கென்று கேள்வி கேட்டுக் கூட வந்தவர்களைத் தேளரண்மையை நெல்லிக்காய், முட்டை, கருங்கல் கொண்டு தாக்கச் சொல்லி அறிவுறுத்தினார்.

ஏமப் பெருந்துயிலில் அங்கு அமிழ்ந்திருத்தும் யாராவது விழித்தால் கல்லெறியும் சமூக விரோதிகள் அவருடைய இடத்தில் துயிலப் பிடித்துப் போடப்படுவார்கள் என்று அரங்கத்தில் பாதுகாவலர்கள் அறிவிக்க, கரடி நாலுகால் பாய்ச்சலில் ஓடி விட்டது.

கூட வந்த கிளர்ச்சியாளர்கள் எல்லா திசையிலும் அரண்டு ஓட, அடுத்த மணி நேரத்தில் கரடியார் கண்டுபிடிக்கப்பட்டார். அவரைத் தேடி அலைந்தோர் தாசி நறும்வல்லியை மடியேற்றி அந்தரங்கமாக வைத்தியம் செய்துகொண்டிருந்த எண்ணெய்க்காப்பு திருக்கோலத்தில் லங்கோட்டோடு அவரைப் பார்த்தனர்.

ஐயனே நாம் யாரோடு இருக்கிறோம் என்று வழிகாட்டியருளும் என்று அந்தப் பன்றிகளும் கழுதைகளும் நாய்களும் அவரைச் சரணடைந்தன. அதைவிட, நம்மோடு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று அவதானிப்பதே வேண்டியது என்று பொன்மொழி உதிர்த்தார் கரடியார். இப்போதைக்கு நறும்வல்லிக்கு வைத்தியம் செய்து குணமாக்கி விட்டுப் போம்வழி பற்றிப் பின்னர் யோசிக்கப்படும் என்று கூறினார் அவர்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 19, 2023 18:59

November 17, 2023

உல்லுலூ – சூப்பர் மார்க்கெட்களில் பொருள் வாங்குவாருக்கான காவல் தெய்வம் – ஏஐ

அண்மையில் எழுதிய என் குறுநாவல் சிவிங்கி
சொல்வனம் இணைய இதழில் வெளியாகிறது
குறுநாவல் சிவிங்கியில் இருந்து ஒரு சிறு பகுதி

=======================================

உல்லுலூ வருகை

உல்லுலூ வந்திருக்கு. உல்லுலூ நீர்நிலைகளின் சிறு தெய்வம். ஆனந்தா, மரியாதை செய் உல்லுலூவுக்கு.
தேவதைகள் சிறகு நீவிச் சீராக்கியபடி ஆனந்தனை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டன. உல்லுலூ என்று ஒரு தெய்வமா, கேட்டதே இல்லையே என்று ஆச்சரியப்பட்டான் ஆனந்தன்.

நீ பார்க்கிறாயே, உல்லுலூ உண்டுதான். ஆல்ட் சி பிரபஞ்சம் நூறாண்டு முந்திப் புதியதாக உருவாக்கிய செயற்கைக் கடவுள். சூப்பர் மார்க்கெட் கடைகளில் பொருள் வாங்குவோர்க்கான காவல் தெய்வமாக உருவான உல்லுலூ குடிதண்ணீர் தெய்வமானது தற்செயலாகத்தான் நிகழ்ந்தது. உல்லுலூ உருவமைப்பும், ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் செயற்கை அறிவும் இந்த ஆண்டு கடைசியில் இறுதிக்கட்ட சோதனைகள் முடிவுக்கு வரும்போது பரவலாகப் பேசப்படும் என்றாள் வாதினி ஆனந்தனிடம்.

யட்சி யுத்தம் ஓய்ந்தது

அரை மணி நேரத்துக்கு மேல் போர் தொடங்காவிட்டதால், அது நிகழாது போனதாகக் கருதப்படும் என்று சட்டப் புத்தகம் புரட்டிக் கருத்துச் சொன்னது சிவிங்கி. அந்தச் சட்டப் புத்தகத்தை இரவல் வாங்கி ஏதோ பக்கத்தைப் புரட்டிப் படித்துவிட்டு அறிவித்தான் ஆனந்தன் – போர் ஓய்ந்தது.

உடனே, யட்சி யுத்தம் முடிவடைந்ததாக இரண்டு தரப்பும் வெள்ளைச் சிறகும் சாம்பல் இறகும் உதிர்த்து கைமாற்றிக் கொண்டன.

வாதினியும் சாதினியும் ஒருவரை ஒருவர் அணைத்து முத்தமிட்டுக் கொண்டனர். உல்லுலூ தெய்வம் சுனைக்கு மேலே எழும்பி ஆனந்தனை நோக்கி வாய் திறந்தபடி திமிங்கிலம் போல் மிதந்தது. அதன் பற்கள் கூர்மையாக நான்கு அடுக்கில் முதலைக்கு வாய்த்தது போல் பயம் கொள்ள வைத்தன.

எல்லா ஜீவராசிகளும் அத்தியாவசியமானதாகப் பருகும் குடிநீர்க் கடவுளை ஒரு துளி தண்ணீர் கூட அருந்தாத, நெருப்புக் குழம்பு குடிக்கும் தெய்வமையாக கட்டமைப்பு செய்யாதது ஏன் என்பதற்கு ஆல்ட் சி பிரபஞ்ச அறிவியலாரான கோவேறு கழுதையும் மஞ்சள் தோல் மானுடரும் காரணம் எதுவும் காட்டவில்லை.

ஒட்டகச் சிவிங்கி, வாதினி – சாதினி போர் பற்றி அன்பர்களிடம் விவரித்து வந்தபோது கூடுதல் தகவல் சொன்னது. அது வாதினி அளித்தபடி வருமாறு.

கடவுளர் அமைப்பும் புதிய சிறுகடவுள் உல்லுலூவும்

உல்லுலூவை கடவுள் அடுக்கில் Divine Pantheon தகுந்த இடம் கொடுத்து அமர்த்த மூன்று மாதம் போனது. உல்லுலூவுக்கான lore தொன்மச் சரடு, பாடிப் பரவ கீதங்கள், மற்ற கடவுளரோடு தந்தை, சகோதரன், சகோதரி, மாமன், மருமகள் என்று உறவு வலுவாக ஏற்படுத்துவதும் நிறைய நேரம் நீண்டது. ஒவ்வொரு புதுக் கடவுளும் பிரபஞ்சங்களினூடாகக் கட்டமைத்த அனைத்துக் கடவுளமைப்பில் இடம் பெற வைப்பதே இந்த உழைப்பின் நோக்கம். இந்த உறவுகளை நியமனமாக அமைத்த பின் அவற்றை மாற்ற முடியாது. Canonical considerations at work and play .

இத்தனை தகவலும் உல்லுலூ குடிநீர்த் தெய்வம் பற்றி சிவிங்கிக்குக் கோடி காட்ட வாதினி ஒரு நிமிடம் எடுத்துக் கொண்டாள். அதுவும் சாதினியோடு சேட்டைகள் இல்லாமல் பத்து விநாடியில் சொல்லி முடித்திருக்கலாம் தான்.

மறுபடி வாதினியோடு இதழ் கலந்து நின்றாள் சாதினி. போதும் இதைப் பார்க்க அலுப்பாகிப் போனது பெண்களே நீங்கள் யுத்தமிடும்போது நடுவண் நோக்கராக இருந்து தீர்ப்புத் தரவன்றோ என்னை அழைத்தீர்கள், யாண்டு நடப்பதென்ன என்று ஆனந்தன் ஒவ்வாத ஆச்சரியத்தோடு குறிப்பிட்டான்.

ஆனந்தா, நீதானே யுத்தம் ஓய்ந்ததாக அறிவித்தாய். அப்படியே ஆகட்டும். நாங்கள் யுத்தத்தை முன்னெடுக்கும்போது, சண்டையிடும்போது ஜன்ம விரோதிகள். பிற நேரம் ஒருவரை ஒருவர் வெறியோடு காமுறும் சிநேகிதிகள். சிருங்காரமாக முணுமுணுத்த சாதினிக்குப் பின்னால் நின்று அவள் கொங்கை வருடி, வாதினி மெய்மறந்தாள். உல்லுலூ தெய்வம் நீரில் எச்சில் உமிழ்ந்தது.

உல்லுலூ தெய்வம் ஆனந்தனைப் பார்த்து நீ எப்படி கடவுள்களோடு இடையாடிக் கொண்டிருக்கிறாய் அற்ப மானுடனே என்று அதிகாரத்தோடு கேட்டது. வாதினி தலையை அப்படி இல்லை என்று மறுக்கும் படிக்கு அசைத்தாள்.

ஆனந்தன் தர்க்கப் பிழை மூலம் காஸ்மோஸ் பிரபஞ்சத்தில் மானுடனாகப் பிறந்தான். அவனும் உன்னைப் போல் சிறு தெய்வமாக ஆல்ட் சி பிரபஞ்சத்தில் பிறந்து கடவுளமைப்பில் ஏறியிருக்க வேண்டியவன் என்று சாதினி சொல்ல, அதைப் பாதி கூட கேட்காமல் உல்லுலூ வலுவில்லாத

வெண்சிறகுகள் அடித்து மேலே உயர்ந்தது. சட்டென்று விழவும் செய்தது. அனுபவம் இல்லாத, அறிவுச் சுவடற்ற தெய்வமாக இருந்தது உல்லுலூ.


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 17, 2023 19:10

November 15, 2023

என் புதுச் சிறுகதை

அண்மையில் எழுதி லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் பிரசுரமாகியிருக்கும் என் சிறுகதை- விசிறி

விசிறி சிறுகதை இரா.முருகன்

கோபி பழைய மார்க்கெட்டை ஒரு தடவை சுற்றி வந்து விட்டான். சரஸ்வதி பூஜை என்பதால் பழைய புத்தகக்கடைகள் சீக்கிரமாகவே திறந்திருந்தன.

நாயனார் கடையில் இன்னும் வாடிக்கையாளர்கள் கூட்டமாகக் குவியவில்லை. பாதிக் கடையில் மர அலமாரிகளும் சாக்குப்பைகளும் பழைய புத்தகங்களாக நிரம்பி வழிய, மரப்பலகை தடுத்து அடுத்த பகுதியில் பழைய மேஜை ஃபேன், பழைய எலக்ட்ரிக் ஹீட்டர், சுவர்க் கடிகாரம் .

நாயனார் கடையில், எனக்கு பூலோக சுந்தரி கதைப் புத்தகம் வேணுமென்று கேட்டுக்கொண்டு நின்றவள் இருபது வயதுகூட இருக்க மாட்டாள். ஆனால் தோரணையில் கம்பீரமான பெண்.

நாயனார், அவளைப் பார்க்காமலேயே, இதோ வரேம்மா என்றபடி கோபியைப் பார்த்து வாங்க சார் என்றார்.

அப்போ நாங்கல்லாம் வரவேணாமா? வெடுக்கென்று கேட்டபடி கோபியைப் பார்வையால் எரித்தாள் பூலோக சுந்தரி. கோபி தன்னையே பார்த்துக் கொண்டான். கையில் பழைய மின்விசிறி – கருத்த ஆகாசத் துண்டுபோல் ஆடி வந்தது. அது அவன் மனசுக்குள் எழுதிக்கொண்டு போகிற புதுக் கவிதை வரி.

முதலில் வந்தவருக்கு முதலில் சேவை என்று கோபியைப் பார்த்து அறச் சீற்றம் கொட்டி அவள் அடுத்த குரோதமான வாக்கியத்துக்குப் போகும்முன் நாயனார் மேல்துண்டால் ஒரு பழைய புத்தகத்தைத் துடைத்துக்கொண்டு வந்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்.

இந்தாங்க நீங்க கேட்ட பூலோக சுந்தரி கதை. 1923 செல்வராய நாயக்கர் இயற்றி ரேடியண்ட் பிரஸ்லே அச்சடித்து வெளியிட்ட அபூர்வ புஸ்தகம்.

அவர் கையிலிருந்து பூலோக சுந்தரியைப் பிடுங்காத குறையாக வாங்கிக் கொண்டாள் அவள். சொல்லுங்க சார் என்று கோபியைப் பார்த்தபடி அவன் கையிலிருந்த பழைய டேபிள் ஃபேனை வாங்கி நாயனார் பழைய சாக்கெட்டில் செருக சாதுவாக இருந்தது அது.

நாயனாரே, இது நேற்று ராத்திரி லொடலொடன்னு ஃப்ரஞ்சு மொழியிலே பேசிச்சு. பதட்டத்தோடு சொன்னான் கோபி. அது அப்படித்தான் என்றார் நாயனார். சுவிட்சர்லேந்து மற்ற அரசு மொழிகளான ஜெர்மன், ரோமன்ஷ், இதாலிய மொழி எல்லாம் பேசுமே. இறக்கை மூடாமல் அவசரமாக வார்த்து ரெண்டாம் உலக யுத்த காலத்தில் சுவிட்சர்லாந்தில் செய்து இந்தியாவில் துப்பியது இந்த ஃபேன். எந்த யுத்தத்திலும் பங்கெடுக்காத நாடு அது. ஸ்பெயின் எல்லாப் போரிலும் இடம் பெற்றது. அமைதி இல்லாத ஸ்பெயின் அருமையான இலக்கியம் படைத்து கொடுத்தது. அமைதியின் சின்னமான சுவிட்சர்லாந்து குக்கூன்னு கூவும் கடியாரத்தையும் இந்த மாதிரி ஃபேனையும் உருவாக்கிச்சு.

யாரும் கேட்காமலேயே விளக்கம் சொன்னார் நாயனார். .அந்தப் பெண் சுவாரசியமாகப் பார்த்தபடி நின்று கொண்டிருக்க, நாயனார் வேறே ஏதாச்சும் பொஸ்தவம் வேணுமா என்று கரிசனத்தோடு அவளைத் கேட்டார்.

புத்தகம் வேணாம் அந்த ஃபேன் வேணும். அது என்னோடது என்னுதுன்னா எங்க தாத்தாவோடது. இசை பாடும் மின்விசிறி.

”என்னது தாத்தா ஃபேனா, முந்தாநாள் தான் நாயனார் கிட்டே வள்ளிசா நூறு ரூபாய்க்கு வாங்கிட்டுப் போனேன். ராத்திரி எல்லாம் ஒரே சத்தம்”.

கோபி ஃபேனை அணைத்தபடி நின்று பேசினான். ”பழைய ஃபேன் அப்படீன்னா சத்தம் வரும்னு சொல்வீங்க. இந்த சத்தம் பேச்சு சத்தம். யாரோ ராத்திரி முழுக்க பேசிக்கிட்டிருக்காங்க ஃபேன் உள்ளே இருந்து. என்ன பாஷை அதுன்னு தெரியுது.”

“எங்க தாத்தா வச்சிருந்தபோது அது ஜெர்மன் மொழியிலே ஆணும் பொண்ணுமா பேசிட்டிருந்தது. அது பாதியிலே நின்னு அவங்க ஃப்ரஞ்சில் பாட ஆரம்பிச்சதும் தாத்தா உயிர் போச்சு. அவரை சம்ஸ்காரம் பண்ணியபோது ஃபேனை எங்கேயோ தூக்கிப் போட்டுட்டாங்க. நாயனார் கையிலே எப்படியோ கிடச்சிருக்கு”.

அவள் என்ன பேசுகிறோம் என்று கருதாமல் பேசிப்போக நாயனார் முகம் கஷ்டம் காட்ட கோபி கோபத்தில் இரைந்தான் – ”நாங்க என்ன தெருப் பொறுக்கி உங்க தாத்தாவோட அபூர்வ வஸ்துவை எடுத்து வந்துட்டோம்னு சொல்றீங்களா?”

அந்த ஸ்திரி தணிந்து போனாள். ”ரொம்ப எக்சைட் ஆயிட்டேன் இந்த ஃபேனாக இருக்காது. ஒரே பேட்சிலே ரிலீஸ் பண்ணின இன்னொரு ஃபேன் இது. வாங்கி வச்சுக்கிட்டா தாத்தா நினைவு எப்பவும் பசுமையாக இருக்குமே. அதைத்தான் சொல்ல நினைச்சேன்”.

இருக்கலாம்;. ஆனால் இது விற்க இல்லே.

டிஷ்யூ பேப்பரை சூடிதாரிலிருந்து எடுத்து கண்ணைத் துடைத்துக்கொண்டு பரிதாப முகம் காட்டினாள் அவள்.

சொன்னால் சொன்னது தான். நான் ஃபேனை விக்கற மாதிரி இல்லே என்றபடி அவசரமாக ஃபேனை சாக்கெட்டிலிருந்து எடுத்து தூக்கிக்கொண்டு போனான் கோபி.

பின்னால் இருந்து ஏம்மா புத்தகம் என்று நாயனார் குரல். நான் ஏம்மா இல்லே ஹேமா. அவள் மூக்கை உறிஞ்சியபடி வாகன நிறுத்துமிடத்துக்குள் நுழைந்தாள்.

இது நடந்து அடுத்த சனிக்கிழமை பிற்பகல் கோபி மறுபடி பழைய மார்க்கெட்டுக்குப் போனான். நாயனார் இப்போ என்ன என்றார்.

சர்ச்சில் யுத்தம் புரிதல் பற்றி ராத்திரி முழுக்கப் பேசறார் என்றான் கோபி. யுத்தம் முடிந்து எழுபத்திரெண்டு வருஷம் ஆகியிருந்ததை டேபிள்ஃபேன் மற்றும் மறைந்த சர்ச்சில் மறந்து போயிருந்தது போல.

அவ்வப்போது ஏதோ மேற்கத்திய இசை நிகழ்ச்சியில் சிங்கம் கர்ஜிப்பது போல் ஒருத்தர் நோஸன் த்ருமா என்று பாட்டு. அது இன்னிக்கு ராத்திரி யாரும் தூங்கக் கூடாதுன்னு இத்தாலி மொழியிலே லூசியானோ பாவரொட்டி பாடியது என்று சர்வ சாதாரணமாகச் சொன்னார் நாயனார். பழைய புத்தகம்,அலாரம் கடியாரம், டேபில் ஃபேன், வால்வ் ரேடியோ அதததோடு சம்பந்தப்பட்ட அறிவு உண்டு அவருக்கு.

ஒழுங்கு பண்ணி வைக்கறேன், சாயந்திரம் வந்து எடுத்துக்கங்க என்று கோபியைப் பார்த்து சிநேகிதமாகச் சிரித்தார்.

ஹலோ கமலாம்பாள் சரித்திரம் முதல் பதிப்பு இருக்கா? ஹேமா குரலைக் கேட்டு குளிரை அனுபவித்துக் கொண்டு அவளை நோக்கி ஆர்வமாகப் பேசினான் கோபி.

”நாயனாரே இன்னிக்கு சாயந்திரம் இங்கே வர முடியாது. இன்னிக்கு சாயந்திரம் ராமானுஜர் அரங்கிலே எண்கவனகம். நான் நடத்தறேன். அனுமதி இலவசம் என்றான் கோபி. பதிலுக்குக் காத்திருக்காமல் நாயனாரையும் ஹேமாவையும் பார்த்துப் புன்னகைத்து விட்டு மோட்டார் பைக்கைக் கிளப்பினான் அவன்.

அங்காடி வாசலில் ஹேமா அங்கே கடந்து போகும் வரை காத்திருந்தான். அவளானால் தன் காரை புன்சிரித்தபடி ஸ்டைலாக ஓட்டிப் போனாள். அந்தச் சிரிப்பு அடுத்த பத்தாவது நிமிடம் ராமானுஜர் அரங்கில் நீண்டது.

எண்கவனகம் என்பது ஒரே நேரத்தில் எட்டு காரியங்களை மேற்கொள்றது என்று ஆரம்பித்தான் கோபி. கஷ்டமான ஆறு ஸ்தான கூட்டல், பெருக்கல் இப்படி ஒரே நேரத்திலே செய்யறது, செய்யுள் இயற்றுதல், பின்னாலிருந்து ஒருத்தர் அப்பப்போ மெல்லத் தொடும்போது அந்த எண்ணிக்கையை மனதில் வச்சுக்கறது, மேலே பூவை விட்டெறிந்து கணக்கு வச்சுக்கறது இப்படி எட்டு செயல்கள்.

பக்கத்தில் உட்கார்ந்திருந்த கிழவர் கம்ப்யூட்டர் ஒண்ணுமில்லே இந்த பையன் எப்படி கணக்கு போடுவான் பாருங்க என்று சிரித்தார் ஓநாய் போல. எல்லாத்தையும் ஏற்கனவே மனசுலே போட்டு வச்சிருப்பாங்க என்றாள் ஹேமா. என்னமோ கோபியை வம்பு இழுக்க வேண்டியிருந்தது அவளுக்கு. எனக்கு காது சரியா கேக்கலேங்க என்று பெரியவர் நழுவினார்.

நிகழ்ச்சி ஆரம்பித்தது.

கோபியின் முதுகில் அவ்வப்போது தொட்டு எண்ணிக்கை கணக்குப் பண்ணும் பகுதிக்கு கோபியின் நண்பன் தொட்டுத் தொட்டு எண்ண ஆரம்பித்தான். அவன் பக்கத்து நாற்காலியில் ஹேமா உட்கார்ந்திருந்தாள். என்னமோ தோன்ற தொடுதல் விவரத்தை அவள் மனதில் எண்ணிக்கொண்டே வந்தாள். தொடுகிறவனின் மொபைல் ஃபோன் அடிக்க அதற்குப் பதிலளித்தபடி எழுந்தான் அவன். அவசரம். சத்தமே போடாமல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் சொல்லிக்கொண்டு ஹெல்மெட்டை மாட்டியபடி வெளியேறினான் அவன். அதுவரை அவன் தொட்ட கணக்கு கூடச் சொல்லவில்லை.

உங்களுக்கு எதிர்ப்பு இல்லேன்னா நான் தொடறேன். ஹேமா முன்னால் வந்தாள். பேஷாக என்று வரவேற்பு அவளுக்கு. தப்புக் கணக்கு போட்டு கோபியை வீழ்த்தாட்ட அவளுக்கு ஆர்வம். எல்லாம் சரியாக நடந்தது. ஒரே ஒரு எட்டு ஸ்தான எண் மட்டும் ஒரு இலக்கம் தவறாகப் போனதை யாரும் லட்சியம் செய்யவில்லை. இப்போது கடைசியாகத் தொடுகணக்கு நிலவரம். கோபி தொண்டையைக் கனைத்துக் கொண்டு தொடங்கினான் – ஆண் தொடல் 37, பெண் தொடல் 45.

ஹேமா ஆச்சரியப்பட்டுப் போனாள். அந்த நிமிடத்தில் அவன் மேல் ஈர்ப்பு வந்தது. அது பரஸ்பர நேசமாக அடுத்த ஒரு மாதம் மட்டுமானது. ஹேமாவின் பாட்டிக்கு கலர் காகிதம் சுற்றி அந்த டேபில் ஃபேனை அளித்து விடலாம் என்று தீர்மானித்தான். ஹேமாவைக் காதலிக்கிறோமா அவள் பாட்டியையா என்று யோசித்து, வேண்டாம் அதுவும் வெகுதூர பாலக்காட்டில் நூருணியில் சதா வீல்சேரில் ஆரோகணித்து, காது கேட்காமல் இருக்கும் பாட்டிக்கு அவ்வப்போது சுழன்று பழங்கதை பேசும் அடாஸ் ஓல்ட் பழைய ஃபேன் எதுக்கு என்று தீர்மானித்து ஹேமாவுக்கு மோதிசூர் லட்டு வாங்கிக் கொடுத்தான்.

ஆபீஸ் வேலை காரணம் ஒரு வாரம் நாயனார் கடைக்குப் போகாமல் இருந்து, அப்புறம் அங்கே முதல் காரியமாகப் போனான் கோபி.

அவன் போனபோது ஃபேனைக் காணோம். கடைப் பையன் ஐநூறு ரூபாய்க்கு ஒரு வெள்ளைக்காரனுக்கு விற்றுவிட்டு சகலரிடமும் காயாலான் கடை சரக்கை சுளையாக ஐநூறுக்கு வித்தேன் என்று தன் சாமர்த்தியத்தைப் பறைசார்த்திக் கொண்டிருந்தான்.

கோபி வருத்தப்பட்டான். நாயனார் மலையாளத்தில் ஏதோ புலம்பினார். என்ன செய்ய, வேறே அதே போல் ஃபேன் வாங்கித் தரேன் என்று குழந்தைகளிடம் அம்மா சொல்கிற மாதிரி சமாதானப்படுத்தினாள் ஹேமா. அவள் மியூசியத்தில் உதவி இயக்குனராகக் கை நிறையச் சம்பளம் வாங்குகிறதை அவசியமில்லாமல் பகிர மாட்டாள் என்று கோபிக்குத் தெரிந்தபோது அவனை அமெரிக்காவுக்கு ஒரு மாதம் கம்ப்யூட்டர் மென்பொருள் உருவாக்கத் திட்ட நிர்வாகம் செய்ய அவன் அலுவலகத்தில் அனுப்பியிருந்தார்கள்.

அவன் திரும்ப வந்தபோது ஹேமா பழைய டேபில் ஃபேனோடு காத்திருந்தாள். கடைப் பையன் விற்றுவிட்ட ஃபேனின் அதே பாட்ச்சில் வேறு இருக்கக்கூடும் என்று அவளுக்குள் இருந்த அருங்காட்சியக உதவி நிர்வாகி சொன்னார். எது எப்படியோ, முதல் இரவில் படுக்கை பக்கத்தில் அந்த ஃபேன் இருந்தது. இறக்கைகள் சுழலவில்லை.

நடு ராத்திரிக்கு இறக்கைகள் சுழல ஆகாசவாணி முத்திரை இசையாக வயலின் வாசித்து இந்தியாவுக்கு சுதந்திரம் கிட்டியதாக நேரு குரலில் சந்தோஷ செய்தி சொன்னது. எழுபது வருடத்துக்கு முந்திய நிகழ்வு அது. கோபி ஃபேனுக்கும் நேருவுக்கும் நன்றி சொல்லிவிட்டு, ஹேமாவைத் தொட்டான். தொடல் கணக்கு ஒன்று என்றாள் அவள்.

இரா.முருகன்.
அக்டோபர் 2023

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 15, 2023 17:24

November 12, 2023

தேநீர் உபச்சாரச் சடங்கு – பொது யுகம் 5000

என் புனைவுப் புதினம் தினை அல்லது சஞ்சீவனி அத்தியாயம் 39இலிருந்து
————————————————————————————————

நீர் கொதிக்க வைக்கப்பட்டது. இஞ்சியும் ஏலக்காயும் சேர்த்து கலுவத்தில் இடிக்கப்பட்டது. கலுவத்துக்கு மருந்து இடிப்பது தவிர இப்படி தேநீருக்கு இஞ்சியும் சுக்கும் இடிப்பதும் பெரும்பயன் தான். வைத்தியர் வீடு என்பதால் கலுவம் இருக்கிறது. வைத்தியர் அல்லாதவர்கள் கலுவத்துக்கு எங்கே போவார்கள்? நல்ல இஞ்சி சேர்த்த தேநீர் வேண்டுமென்றால் கலுவம் வாங்கித்தான் ஆக வேண்டும் அவர்களும்.

ஏலம், இஞ்சி இடித்தது வென்னீரில் சேர்க்கப்பட்டு தேயிலையோடு கொதிக்க வைத்து வடிகட்டப்பட்டது. பசுவின் பால் வேண்டுமே என்று சொல்லியபடி வானம்பாடி சமையலறைக்குள் தலை சொறிந்தபடி வந்தாள். அவள் கன்னத்தில் வருடிய குயிலிக்கு பசுக் கன்றுக்குட்டி போல கன்னம் காட்டியபடி வானம்பாடி நின்றிருக்க, எடி கழுதே, உன் கிட்டே இருந்துதான் தேளரசிலே ஆண்பெண் பேதமில்லாமல் எல்லோருக்கும் தலையில் ஈறும் பேனும் பரவி, தலையைத் தட்டினால் உதுருது என்று வானம்பாடி கன்னத்தில் ஊர்ந்த பேனை விரலில் எடுத்து சுவரில் நசுக்கி கை அலம்பி வந்தாள் குயிலி.

செக் லிஸ்ட் சரி பார்த்து விடலாமா? குயிலி கேட்டாள். சரி என்று தலையாட்டினார் நீலன்.

குயிலி தன் உள்ளங்கையில் பதித்த பயோ கம்ப்யூட்டரில் பார்த்து ஒவ்வொன்றாகக் கேட்க, நீலன் ஆமென்று பதில் சொன்னார் –

இட்லி சட்னி காப்பி டீ வாழைப்பழம் இஞ்சிச்சாறு கரிங்ஙாலி வெள்ளம் புளியிஞ்சி அலாரம் என்று ஒரு பட்டியல் –

எல்லாவற்றுக்கும் இருக்கிறது என்று மறுமொழி சொன்னார் நீலன். அது முடிந்து அடுத்த பட்டியலில் வந்த மருந்து விளைவுகள்- உறக்கம் கண் உறங்காமை பசி பசிக்கு இனிப்பு புளிப்பு உரைப்பு துவர்ப்பு உண்ணுதல் பசியின்மை உடல்விழைதல் பறத்தல் கால் மரத்தல் இருளில் பார்த்தல் நீந்துதல் குரல் இழத்தல் உரக்கப் பேசுதல் நகைத்தல் எரிந்து விழுவது கூறில்லாத அன்பு காட்டுதல் முரட்டுத்தனம் செய்யுள் உரையாடல் வேறு மொழி உரையாடல் கூறியது கூறல் என்றும் இன்னமும் அந்தப் பட்டியலில் நிகழ்வுகள் பட்டியலிடப்பட்டிருந்தன.

பட்டியலை நீலன் மற்றும் வானம்பாடியின் உள்ளங்கைக்கு பிரதி செய்த குயிலி தொடங்கலாமா என்று கேட்டாள். கடவுள் வணக்கம் செய்து விட்டுத் தொடங்கலாமென்று கண்மூடிப் பிரார்த்தித்திருந்தார் நீலன்.

அந்த இரண்டு பெண்களும் அவருக்கு மரியாதை காட்டக் கண் மூடி நின்றிருந்தார்கள். குயிலி, வானம்பாடி முதல் பெரியபடி சஞ்சீவனி காய்ச்சி சமையலறையில் வச்சிருக்கு போய் எடுத்து வாங்க என்று குரலில் இன்னும் வழிபாட்டுத் தன்மை மிச்சமிருக்கத் தழைந்து சொன்னார் நீலன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 12, 2023 19:46

November 10, 2023

நாலாம் நூற்றாண்டில் காப்பி இருந்தது

என் நாவல் தினை அல்லது சஞ்சீவனி அத்தியாயம் 39-இல் இருந்து
நீலன் வைத்தியர், அதாவது அசல் நீலன், நார்த்தங்காய்ச் சாறில் இஞ்சி பிழிந்து வெல்லம் கலந்து வைத்திருந்த காய்கறி ரசத்தைக் குடுவையோடு எடுத்தார். அது சஞ்சீவனி இல்லை.அவரை எந்நேரமும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் பானம்.

குளிரக்குளிர குளிர்ந்த சுனை நீர் கலந்தோ, ஒரு நிமிடம் அடுப்பில் ஏற்றிச் சூடு படுத்தியோ அதைப் பருகலாம். இப்போது உறக்கத்தையும் வென்று இரவு முழுவதும் கண்ணுறங்காமல் சஞ்சீவனியை சோதனை செய்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.

சஞ்சீவனிக்கு மாற்று மருந்தை முதலில் தேவைக்கு அதிகமாகவே உண்டாக்கி வைத்திருப்பது கணிசமாக இருக்கிறதா என்று பார்த்தார். இன்னும் ஒரு வாரத்துக்கு வரும் மாற்று மருந்து கைவசம் உண்டு என்று கண்டு திருப்தியடைந்தார்.

அவருடைய சோதனை எலிகள் எதுவும் கிடையாது. நேரடியாக மனித குல ஆண்கள் மற்றும் பெண்கள் சஞ்சீவனியை உருவாக்க உருவாக்கப் பருகி அவரவர் உடலில், நினைப்பில், மனதில் என்ன தோன்றுகிறது என்பதைப் பாதுகாப்பாகப் பதிந்து வைக்க வேண்டும்.

போன முறை நீலன் வைத்தியர் சஞ்சீவனி உண்டாக்கி அதை சோதனை செய்யக் குறைந்தது முப்பது பேர் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டார்கள். நல்ல சாப்பாடு, உறக்கம், சும்மா கிடத்தல், மருந்து குடிக்கத் தவிர வேறே வேலை இல்லை இப்படி எல்லாம் நன்றாக நடந்துவர பத்துபேர் மருந்து அதிகமாகிப் போயோ என்னவோ பறக்க ஆரம்பித்து விட்டார்கள்.

எல்லோருக்கும் கிடைக்கிற நல்லதிருஷ்டமா என்ன பறப்பது? நடப்பவர்கள் மேலும் ஓடும் வாகனங்கள் மேலும் மோதாமல் காற்று சுத்தமாக இருக்கும் வெளியில் மனதில் நேரிசை வெண்பா யாப்பின்படி புனைந்துகொண்டு பறந்து போக எத்தனை பேருக்கு வாய்க்கும்?

பறந்து பறந்து காணாமல் ஒன்றும் போகவில்லை அவர்கள். சிறு பறத்தல், இறங்குதல், உண்ணுதல், சஞ்சீவனி குடித்தல் கூடவே தெருவில் கண்டோர் மரியாதையோடு நின்று வழிபட்டு அகல, சகலப் பெருமையோடும் பறப்பது. எத்தனை பேருக்கு வாய்க்கும் இது?

பறந்தார்கள் என்று சேதி கேட்டதுமே சஞ்சீவனி சிசீ என்று அத்தனை நாள் உழைப்பையும் புறங்கையால் தள்ளிவிட்டார்கள். அப்போது கிளம்பியதுதான் இந்தப் பெண்களோடு காலப் பயணம்.

நீலன் அண்ணாரே, தெம்பாக ஆளுக்கொரு கோப்பை காப்பி குடித்து விட்டு சுறுசுறுப்பாகத் தொடங்குவோமா என்று தலையைச் சொரிந்தபடி விசாரித்தாள் குயிலி. எந்த நூற்றாண்டிலும் தலை சொரிந்து துயில் எழாத பெண்மணியுண்டோ என நீலன் தனக்குள் வியந்தார்.

காப்பியா, அதெல்லாம் நீ கொடுத்தியே என்று ஒரு கோப்பை பருகிவிட்டு தலை சுற்றிக் கிடந்தேனே, அதற்கு அப்புறம் காப்பியைத் தொடக்கூடாது என்று தீர்மானம் செய்துவிட்டேன். உன்னோடு இருந்து ஏதாவது பருகி ஆகவேண்டும் என்றால் தேநீர் ஒரு கோப்பை அருந்த நான் தயார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 10, 2023 19:45

November 9, 2023

பிரபஞ்சங்கள் இடையே சஞ்சரிக்கும் ஷேப் ஷிஃப்டர் பெண்கள்

என் நாவல் தினை அல்லது சஞ்சீவனியில் shape shifter பிசாசுகள் வந்த போது

சாரி, நாங்க இங்கே நீண்டநாள் தங்கின பிசாசுகள். நீங்க – உள்ளே வந்தவை இருந்த இரண்டைக் கேட்டன.

நாங்க புதுசா வந்திருக்கோம். இப்போ போயிடுவோம் என்று மரியாதையோடு சொல்லின கர்ப்பூரத்தை வம்பிழுத்த இரண்டும்.

நீங்க இங்கே இடம் எடுத்துக்கறதுன்னா எடுத்துக்குங்க என்று வீட்டுப் பிசாசுகள் சகஜம் காட்ட, வேண்டாம், நாங்க போகணும் என்று பிரியத்தோடு மறுத்தன வந்த இரண்டும்.

வீட்டுப் பைசாசங்கள் வெளியே போகும்போது நல்லிரவு என்று வாழ்த்திப் போனதை கர்ப்பூரன் கவனிக்கத் தவறவில்லை. அவை இருந்திருந்தால் எதோ ஒரு மாதிரி பலம் வந்திருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது.

இந்த ரெண்டு பிசாசும் தொல்லை கொடுக்க வந்ததாகத்தான் இருக்கும். இருபதாம் நூற்றாண்டிலிருந்து ஐம்பதாம் நூற்றாண்டுக்கு பிசாசுகள் பயணப்பட்டிருக்க முடியுமா?

நீங்க ரெண்டு பிசாசும் என் துணைவியர் என்று எப்படி நம்பறது? மேலே இருந்து பார்த்துக் கொண்டிருந்த இரண்டும் ஒரே ஜாடை, ஒரே மாதிரி உடுப்பு, பறத்தல், கிரீச்சிடும் குரல் என்று இருப்பதேன்?

கபிதாவும் பூரணாவும் தான் அவர்கள் அவைகள் என்றால் வித்தியாசம் தெரியாமல் இருக்குமா?

எங்களை காலக் கோட்டில் ஒட்டாமல் விலகி வரச் செய்தது எங்கள் பிரியமான குழலியும் வானம்பாடியும் தான் என்று சொன்னால் நீ என்ன செய்யப் போகிறாய்?

அவர்கள் உங்களை காலப் பயணம் நடத்த வைத்திருப்பதற்கு பதில் கொஞ்சம் பின்னால் போய் உயிர் நீங்க ஒருத்தி தேள் வளையில் கைவிட்டும், மற்றவள் கிணற்றில் சாடியும் மரித்துப் போவதற்கு சற்று முன்பே காலத்தைப் பிடித்துப் பின்வலித்து உங்களை உயிர் பிழைக்க வைத்திருக்கலாமே என்று கேட்டான் கர்ப்பூரன்.

அவன் சொல்லிக் கொண்டிருந்தபோதே கண்கள் அயர்வில் மூடிக் கொள்ள அவன் உறக்கத்தில் ஆழ்ந்தான். இதெல்லாம் அவனுக்கு எதுவும் நினைவு வராது என்று சொல்லியபடி, வீட்டுக்குள் வந்த பிசாசுகள் வெளியேறும்போது, வீட்டுப் பிசாசுகள் அவற்றிடம் நீங்கள் யார், பிசாசங்களாகத் தெரியவில்லையே என்று கேட்டன.

ஆமா, நாங்கள் ஆல்ட் எஸ் பிரபஞ்சத்திலிருந்து வந்திருக்கும் பெண்கள். ஷேப் ஷிஃப்டர்ஸ். பிசாசுகளாக உருவம் மாற்றினோம். அவனிடம் ஒரு முக்கியத் தகவல் கெல்லி எடுக்க வேண்டியுள்ளது. நீதி நோக்கில்அவன் நடத்தை தவறு என்று அவனைக் குற்றவாளி ஆக்கி விசாரிக்க வந்திருக்கிறோம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 09, 2023 19:36

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.