Jeyamohan's Blog, page 8
October 13, 2025
பண்பாடு மலர்வது…
அன்புள்ள ஜெ,
வணக்கம்.
சமீபத்தில் விஷ்ணுபுரம் வாசித்து முடித்தேன். ஆறு முன்னுரைகளை வாசித்தபோது, காலத்தில் பின்னோக்கி சென்ற அனுபவம் கிடைத்தது. அந்த முகம் தெரியாத முதியவரிடமிருந்து தங்களுக்கு கிடைத்த விதை, எவ்வளவு அழகிய விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.
கொற்றவையில் மிகக் குறைவான கதாபாத்திரங்கள் தான். ஆனால் இதிலோ அத்தனை கதாபாத்திரங்கள்.
சங்கர்ஷனன், அனிருத்தன், லட்சுமி, சுதாவுடன் சேர்ந்து நாமும் விஷ்ணுபுரத்தில் நுழைகிறோம். விஸ்வரூப தோரண வாயிலும், ஹரிதுங்கா சிகரமும், மிகப்பிரமாண்டமான மகா கோபுரமும், பத்து நாள் நடக்கும் ஸ்ரீ பாத விழாவுமாக விஷ்ணுபுரம் கண்முன்னே விரிகிறது. வீர நாராயணர் பேத்தி சித்திரை, மன்னனை மணம் செய்வார் என்று விளையாட்டாக கூறுவதும், சித்திரை ஒரு நாள் ஒளிமயமாக ஜொலிப்பேன் என்றதும் மீள்வாசிப்பு செய்யும்போது முன்னெச்சரிக்கையாக (premonition) இருந்தது. கற்புக்கரசி மாதரி, சோனா நதியாக மாறிய கதை அருமை.
அற்புதமாக நினைக்கும் ஒவ்வொன்றுக்கும் பின்னால் உள்ள, விஞ்ஞானமும் விளக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் காலத்தின் போக்கில் எவ்வாறு மாறுகிறார்கள் என்று படித்து முடிக்கும் போது தெரிந்து கொள்ள முடிகிறது. சடங்குகள் (பவளமல்லி மரம் பகடி) உருவாகும் விதம் வேடிக்கையாக சொல்லப்பட்டிருக்கிறது. யோசித்தால், இப்படித்தான் காரணமே இல்லாமல் பலவற்றை செய்து கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது.
விஷ்ணுபுரம் வாசிக்கும் முன்பு, ஜெயக்குமார் Sirன் ஆலயக்கலை பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். விஷ்ணுபுரம் நாவல் ஆலயக்கலை வகுப்பிற்கு ஒரு practical test போல் அமைந்திருந்தது. தோரண வாயிலின் வர்ணனை தொடங்கி, உயர்ந்த வடக்கு கோபுரம், லலிதாங்கியின் ஆபரணங்கள் என வகுப்பில் கற்ற அனைத்தும் அதில் இருந்தது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு முதல் பாகத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் பள்ளியில் இருந்து வந்த போது தான், விஷ்ணுபுரத்திலிருந்து திரும்பி வந்தேன். என்னை இப்புத்தகம் உள்ளே இழுத்ததற்கு, இந்த பயிற்சியும் முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்.
தோணியில் அரிசியும், பத்தாயிரம் அப்பங்களும், யானை மூடியை திறக்கும் 1500 அப்பங்கள் வேக வைக்கும் இரும்பு கல் தொட்டிகளும், என்று எல்லாவற்றிலும் பிரம்மாண்டம். ஆனால் இறுதியில் எதுவுமே மிஞ்சவில்லை. வரலாற்றில் இந்த விஷயம் திரும்பத் திரும்ப நடந்து கொண்டே இருக்கிறது. மாபெரும் சாம்ராஜ்யங்கள் தொடங்கி Titanic வரை. ஆனாலும் நாம் அழிவே இல்லாதது போல் வாழ்ந்து கொண்டிருப்பது விந்தைதான்.
வாசித்து முடித்ததையே பெருமிதமாக நினைக்கும்போது, ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது எவ்வளவு சவாலான விஷயம் என்று புரிந்து கொள்ள முடிகிறது. பணி நிறைவடைந்து, உலகமெங்கும் விஷ்ணுபுரம் சென்று சேர வாழ்த்துக்கள்.
பல்வேறு அனுபவங்களையும், வாசிக்கும் ஆனந்தத்தையும் தரும் தங்களுக்கு மிகவும் நன்றி.
என்றும் அன்புடன்,
S.ராஜேஷ்வரி
கோவை.
https://vishnupuram.com/ நாவல் பற்றிய பார்வைகளுக்காக விஷ்ணுபுரம் வாங்க
ரமேஷ், அவரவர் தெய்வம்
ரமேஷ் – அஞ்சலிகள், கடிதங்கள்
ரமேஷ், தமிழிலக்கியச்சூழல்.
ரமேஷ் நினைவுகள், கடிதங்கள்.
எழுத்தாளனின் சாவின் நிறைவு
கலைஞனின் உயிர்த்தெழல்
ரமேஷ் பிரேதன் நினைவஞ்சலி
அன்பின் ஜெ
விஷ்ணுபுரம் விருது அறிவித்த பின்னரே ரமேஷ் பிரேதனின் எழுத்துக்களை தேடித்தேடி வாசித்தோம். அவருடைய நல்லபாம்பு, ஐந்தவித்தான், காமத்துப்பா, ஆபெண் எழுத்து புத்தகங்களை வாங்கி படித்து நண்பர்கள் விவாதிக்க தொடங்கினோம்.
ரமேஷின் மரண செய்தியறிந்து நீங்கள் அந்தியூரிலிருந்து மரண நிகழ்வுக்கு வந்தபோது உங்களுக்குள் இருந்த அகக்கொந்தளிப்பு முன்னெப்போதும் நாங்கள் பார்த்திராத ஒன்று.
ரமேஷ் பிரேதன் உடலை அடக்கம் செய்யும் வரை அரங்காவின் முன்னெடுப்புகளுக்கு இலக்கிய உலகம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளது.
சக எழுத்தாளனின் இழப்பில் கொஞ்சமும் பாதிப்படையாமல், உடன் நிற்க மனமின்றி, நிற்பவரை குறைசொல்லி முகநூலில் சிலர் எழுதுவது வேதனை தருகிறது. உயரே பறக்கும் பறவையை கல்வீசி தாக்க எறிந்த கல் தன் தலைமீதே விழ வலியால் துடிக்கின்றார் என்று எடுத்துக் கொள்கிறோம்.
நன்றி.
மூர்த்தி விஸ்வநாதன்
சேலம் வெண்முரசு வாசகர் வட்டம்.
*
அன்புள்ள மூர்த்தி,
இதை நாம் சற்று கனிவுடன்தான் அணுக வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். ஒருவேளை எழுத்தாளர்கள் தங்களுக்குள் கடுமையாக எதையாவது கூறிக்கொள்ளலாம். அது ஒருவகையான உட்பூசல் என்றே கொள்ளப்படவேண்டும். வாசகர்களின் பார்வையில் இந்த வகையான ஒரு எதிர்ப்புணர்வு அல்லது கசப்பு உருவாகி விடக்கூடாது. அது எப்படியோ இலக்கியம் அல்லது அறிவியக்கம் சார்ந்த கசப்பாக ஆகக்கூடும்.
இங்கே எழுத விரும்புபவர்கள், எதையேனும் எழுத முனைபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எழுத்தாளர் என்றும் இலக்கியத்தில் இருக்கிறோம் என்றும் எண்ணி வாழ்வார்கள். அவர்களில் மிகச்சிலரே உருப்படியாக ஏதேனும் எழுதுகிறார்கள். அவர்களிலும் வாசகர்களை அடைபவர்கள் மேலும் சிலர். வாசகர்களே அடையாத எழுத்தாளர்கள் அடையும் அகக்கொந்தளிப்பு கொடியது. அது சக எழுத்தாளர்கள் மீது கசப்பாக ஆகிறது. வெற்றிபெற்ற ஒவ்வொரு கலைப்படைப்பின் மீதும் பரவுகிறது. அடிப்படையான கருணை, அறம் அற்றவர்களாக ஆக்கிவிடுகிறது. எந்த மானுட மேன்மையையும் வெறுக்கும்படியாக படிப்படியாக திரண்டு விடுகிறது.
அவர்கள் அந்தக் கசப்பை வெளிப்படுத்துவதற்கு அரசியல் போன்ற ஏதேனும் ஒரு பாவலாவை மேற்கொள்கிறார்கள். அதை வளர்க்கும் சமூக ஊடகம் உள்ளது. அத்தகைய ஒரு கசப்பு அல்லது காழ்ப்புப் பதிவை அமுதம் போல விரும்பி வந்து அள்ளிப்பருகும் வம்பாளர் பலர் உள்ளனர். இவர்கள் அந்த வம்பாளர்க்கூட்டத்தை வாசக வட்டம் என எண்ணிக்கொள்கின்றனர். வருத்தத்திற்கும் அனுதாபத்திற்கும் உரிய எளிய மனிதர்கள். அவ்வளவுதான். அதற்குமேல் அவர்களை பொருட்படுத்தவேண்டியதில்லை.
ஜெ
*
அன்புடையீர்,
திரு.வாசு முருகவேல் அவர்களுக்கு நீங்கள் அளித்துள்ள பதிலைப் படிக்கும் போதே உணர்ச்சி வசமானேன். இவ்வாறு அருள்புரியும் தெய்வம் எது என எல்லாரலும் காண இயல்கின்றதா? நான் தவறிவிட்டேன் என்றே உணர்கிறேன. (ரமேஷ் தமிழிலக்கியச் சூழல்)
அன்புடன்,
சிவநாத்.
*
பெங்களூர்.
அன்புள்ள சிவநாத்,
அவரவர் தெய்வம் எது என அனைவருக்கும் தெரியும். அதை எளிய உலகியலுக்காக, சோம்பலால், பிறருக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கும் கோழைத்தனத்தால் பெரும்பாலானவர்கள் தவறவிட்டுவிடுகிறார்கள்.
ஜெ
ரமேஷ், அஞ்சலி- கடிதம், விளக்கம். ரமேஷ், கடிதங்கள் ரமேஷ் பிரேதன் விருது, ஒரு கேள்வி ரமேஷ், தனிவாழ்க்கை, இன்னொரு கடிதம் ரமேஷ் பிரேதன், கடிதங்கள் ரமேஷ், ஒழுக்கவியல் – கடிதம் ரமேஷ் பிரேதன், வாழ்த்துக்கள் விஷ்ணுபுரம் விருது, கடிதம். ரமேஷ் வாழ்த்துக்கள் ரமேஷ், கடிதங்கள்ரமேஷ் பிரேதன், தனிவாழ்க்கை- கடிதம்
வாழ்வின் இன்னொரு முகம்
மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே உட்கார்ந்து இருந்தேன். அந்த நாட்கள் மிகக் கொடுமையானவை. என் உடல்நலம். சீரழிந்தது மனநலம் அதைவிட சீரழிந்தது. உறவுகளும் சிக்கலாக ஆயின.
வாழ்வின் இன்னொரு முகம்
I am writing to share my experience after completing Jayakumar’s temple art class. You have chosen an exceptional expert. JK sir is well-versed in various composite arts, including temple art, devotional literature, and other temple-related arts, as well as epitaph reading and singing.
An Experience with Art
October 12, 2025
நிறைவான வாழ்க்கைக்கு தேவை என்ன?
நிறைவான வாழ்க்கை என்பது என்ன? அதற்கு தேவையானது என்ன? எளிமையான விடைகொண்ட எளிமையான கேள்வி. ஆனால் நம் அகத்தை துழாவி அதை அடைய நமக்கிருக்கும் தடைகளைக் கண்டடைவது கடினமானது. ஒரு பயணத்தின்போது எடுக்கப்பட்ட காணொளி இது.
உணவும் விதியும்
வணக்கம். எனது பெயர் கார்த்திகேயன், வசிப்பிடம் கோவை. கடந்த சில வாரங்களாகத்தான் உங்கள் எழுத்துகளோடு அறிமுகம். உங்களுடைய சிறுகதைகளையும், கட்டுரைகளையும் மட்டுமே இப்போது புரிந்துகொள்ள முடிகிறது.
ஆன்மிகம் சம்பந்தம்பட்ட விஷயங்களில் ஆழமான நூலறிவும் அனுபவமும் உள்ள நீங்கள் சில ஐயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.
1. அசைவ உணவு நீங்கள் உண்கிறீர்கள். இது ஆன்மீகத்துக்கு ஒத்துப் போகும் விஷயமா?
2. விதியைப் பற்றியும் அதனோடு ஒப்பிட்டு சுய முயற்சியின் திறனைப் பற்றியும் உங்கள் கருத்துக்களைத் தெரிந்துகொள்ள விரும்புகின்றேன்.
நன்றி.
அன்புடன் கார்த்திகேயன்.
அன்புள்ள கார்த்திகேயன்
அசைவ உணவுக்கும் ஆன்மீகத்துக்கும் சம்பந்தமில்லை – விவேகானந்தரே அசைவம் உண்டவர்தான். திபெத், சீன, ஜப்பானிய பௌத்தம் அசைவம் உண்ணுவதை விலக்கவில்லை. உலகம் முழுக்க ஆன்ம ஞானத்தின் படிகளில் ஏறியவர்களில் பெரும்பாலானவர்கள் அசைவ உணவாளர்களே. ஜென் ஞானிகள், சீன மெய்யியலாளர்கள், ஐரோப்பிய இறையியலாளர்கள். நீங்கள் உங்கள் குலவழக்கப்படி கற்றறிந்த சிலவற்றைக்கொண்டு ஆன்மீகம் போன்றவற்றை மதிப்பிட விழைய வேண்டாம்.
ஆன்மீகம் என்பது எது வாய்வழியாக உள்ளே செல்கிறது என்பதைச் சார்ந்தது என நம்புவது ஒரு இந்திய மூடநம்பிக்கை. இந்தியர்களுடைய மதமே எங்கே எதை எப்படி உண்பது என்பது மட்டும்தான் என விவேகானந்தர் இந்த மனநிலையை கிண்டல் செய்திருக்கிறார்.
விதி என நான் சொல்வது எல்லாமே முன்னால் தீர்மானிக்கப்பட்டுள்ளன என்று அல்ல. மண்மீது கோடானுகோடி உயிர்கள் இயற்கைச்சக்திகள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டும் முயங்கியும் செயலாற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் ஒட்டுமொத்தமான விளைவு என்ன, திசை என்ன என நம்மால் ஊகிக்க முடிவதில்லை. நாம் அதன் பகுதியாகவே இருக்கிறோம். நம் எல்லாச் செயல்களும் செயல்களின் விளைவுகளும் அதைச்சார்ந்தே உள்ளன. இதையே நான் விதி என்கிறேன்.
ஒரு தனிமனிதன் தன் முழு ஆற்றலாலும் செயல்படவும், முழுமனத்தாலும் சேர்ந்து பணியாற்றவும் கடமைப்பட்டிருக்கிறான். அதுவே அவன் சுதர்மம்- தன்னறம். ஆனால் அதன் விளைவுகள் அந்த பேரொழுக்கின் சாத்தியக்கூறுகளில் உள்ளன. அதை எண்ணி அவன் பதற்றமும் கவலையும் கொள்வதில் அர்த்தமில்லை.
இவ்வளவே என் எண்ணங்கள். கீதை உரையில் விரிவாகவே எழுதியிருக்கிறேன்.
ஜெ
மறுபிரசுரம். முதற்பிரசுரம் Oct 7, 2011
விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 4 – அசோக் ராம்ராஜ்
ரமேஷ் பிரேதன் நினைவாக 2025 ஆண்டில் வழங்கப்படும் விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது இளம் படைப்பாளரான அசோக் ராம்ராஜுக்கு வழங்கப்படுகிறது.
ரூ ஒருலட்சமும் சிற்பமும் அடங்கியது இந்த விருது.
அசோக் ராம்ராஜ்
அசோக் ராம்ராஜ் – தமிழ் விக்கி/* inline tdc_css att */.tdi_1{padding-top:12px !important;padding-bottom:8px !important;border-color:#eaeaea !important;border-style:solid !important;border-width: 1px 0px 1px 0px !important;}/* custom css */.tdi_1 .td_block_inner{width: 100%;
margin-left: -20px;
margin-right: -20px;
}.tdi_1:after{
content: '';
display: table;
clear: both;
}.tdi_1 .td-image-wrap{
padding-bottom: 100%;
}.tdi_1 .entry-thumb{
background-position: center 50%;
}.tdi_1 .td-image-container{
flex: 0 0 30%;
width: 30%;
display: block; order: 0;
}.ie10 .tdi_1 .td-image-container,
.ie11 .tdi_1 .td-image-container{
flex: 0 0 auto;
}.tdi_1 .td-module-container{
flex-direction: row;
border-color: #eaeaea !important;
}.ie10 .tdi_1 .td-module-meta-info,
.ie11 .tdi_1 .td-module-meta-info{
flex: 1;
}.tdi_1 .td-module-meta-info{
padding: 1% 5%;
border-color: #eaeaea;
}.tdi_1 .td_module_wrap{
padding-left: 20px;
padding-right: 20px;
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
border-color: #eaeaea;
}.tdi_1 .entry-thumb,
.tdi_1 .entry-thumb:before,
.tdi_1 .entry-thumb:after{
border-radius: 500px;
}.tdi_1 .td-post-vid-time{
display: block;
}.tdi_1 .td-post-category:not(.td-post-extra-category){
display: none;
}.tdi_1 .td-author-photo .avatar{
width: 20px;
height: 20px;
margin-right: 6px;
border-radius: 50%;
}.tdi_1 .td-excerpt{
display: none;
column-count: 1;
column-gap: 48px;
font-size:= !important;
}.tdi_1 .td-audio-player{
opacity: 1;
visibility: visible;
height: auto;
font-size: 13px;
}.tdi_1 .td-read-more{
display: none;
}.tdi_1 .td-author-date{
display: none;
}.tdi_1 .td-post-author-name{
display: none;
}.tdi_1 .td-post-date,
.tdi_1 .td-post-author-name span{
display: none;
}.tdi_1 .entry-review-stars{
display: none;
}.tdi_1 .td-icon-star,
.tdi_1 .td-icon-star-empty,
.tdi_1 .td-icon-star-half{
font-size: 15px;
}.tdi_1 .td-module-comments{
display: none;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0;
padding-bottom: 0;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:21px !important;line-height:1.2 !important;
}html:not([class*='ie']) .tdi_1 .td-module-container:hover .entry-thumb:before{
opacity: 0;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}/* landscape */@media (min-width: 1019px) and (max-width: 1140px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:20px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* portrait */@media (min-width: 768px) and (max-width: 1018px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:17px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* phone */@media (max-width: 767px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}var block_tdi_1 = new tdBlock();block_tdi_1.id = "tdi_1";block_tdi_1.atts = '{"modules_on_row":"","limit":"10","hide_audio":"yes","show_btn":"none","show_excerpt":"none","show_review":"none","show_com":"none","show_date":"none","show_author":"none","image_floated":"float_left","sort":"oldest_posts","category_id":"11301","image_width":"30","meta_padding":"1% 5%","modules_category":"","modules_category_margin":"","custom_title":"\u0bb5\u0bbf\u0bb7\u0bcd\u0ba3\u0bc1\u0baa\u0bc1\u0bb0\u0bae\u0bcd \u0bb0\u0bae\u0bc7\u0bb7\u0bcd \u0baa\u0bbf\u0bb0\u0bc7\u0ba4\u0ba9\u0bcd \u0ba8\u0bbf\u0ba9\u0bc8\u0bb5\u0bc1 \u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba4\u0bc1 2025 ","custom_url":"\/tag\/\u0bb0\u0bae\u0bc7\u0bb7\u0bcd-\u0baa\u0bbf\u0bb0\u0bc7\u0ba4\u0ba9\u0bcd-\u0ba8\u0bbf\u0ba9\u0bc8\u0bb5\u0bc1-\u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba4\u0bc1\/","post_ids":"-223405","tdc_css":"eyJhbGwiOnsiYm9yZGVyLXRvcC13aWR0aCI6IjEiLCJib3JkZXItYm90dG9tLXdpZHRoIjoiMSIsInBhZGRpbmctdG9wIjoiMTIiLCJwYWRkaW5nLWJvdHRvbSI6IjgiLCJib3JkZXItY29sb3IiOiIjZWFlYWVhIiwiZGlzcGxheSI6IiJ9fQ==","show_cat":"none","excerpt_col":"","m16_el":"20","ajax_pagination":"load_more","f_title_font_size":"eyJhbGwiOiIyMSIsImxhbmRzY2FwZSI6IjIwIiwicG9ydHJhaXQiOiIxNyJ9","f_title_font_line_height":"1.2","f_ex_font_size":"=","f_ex_font_line_height":"","image_height":"100","hide_image":"","modules_gap":"","meta_info_horiz":"","container_width":"100","image_radius":"500","tag_slug":"\u0bb0\u0bae\u0bc7\u0bb7\u0bcd-\u0baa\u0bbf\u0bb0\u0bc7\u0ba4\u0ba9\u0bcd-\u0ba8\u0bbf\u0ba9\u0bc8\u0bb5\u0bc1-\u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba4\u0bc1","block_type":"td_flex_block_1","separator":"","block_template_id":"","title_tag":"","mc1_tl":"","mc1_title_tag":"","mc1_el":"","category_ids":"","autors_id":"","installed_post_types":"","offset":"","show_modified_date":"","time_ago":"","time_ago_add_txt":"ago","time_ago_txt_pos":"","el_class":"","td_ajax_filter_type":"","td_ajax_filter_ids":"","td_filter_default_txt":"All","td_ajax_preloading":"","m_padding":"","all_modules_space":"36","modules_border_size":"","modules_border_style":"","modules_border_color":"#eaeaea","modules_border_radius":"","modules_divider":"","modules_divider_color":"#eaeaea","h_effect":"","image_size":"","image_alignment":"50","video_icon":"","video_popup":"yes","video_rec":"","spot_header":"","video_rec_title":"","video_rec_color":"","video_rec_disable":"","autoplay_vid":"yes","show_vid_t":"block","vid_t_margin":"","vid_t_padding":"","video_title_color":"","video_title_color_h":"","video_bg":"","video_overlay":"","vid_t_color":"","vid_t_bg_color":"","f_vid_title_font_header":"","f_vid_title_font_title":"Video pop-up article title","f_vid_title_font_settings":"","f_vid_title_font_family":"","f_vid_title_font_size":"","f_vid_title_font_line_height":"","f_vid_title_font_style":"","f_vid_title_font_weight":"","f_vid_title_font_transform":"","f_vid_title_font_spacing":"","f_vid_title_":"","f_vid_time_font_title":"Video duration text","f_vid_time_font_settings":"","f_vid_time_font_family":"","f_vid_time_font_size":"","f_vid_time_font_line_height":"","f_vid_time_font_style":"","f_vid_time_font_weight":"","f_vid_time_font_transform":"","f_vid_time_font_spacing":"","f_vid_time_":"","meta_info_align":"","meta_width":"","meta_margin":"","meta_space":"","art_title":"","art_btn":"","meta_info_border_size":"","meta_info_border_style":"","meta_info_border_color":"#eaeaea","meta_info_border_radius":"","modules_category_padding":"","modules_cat_border":"","modules_category_radius":"0","modules_extra_cat":"","author_photo":"","author_photo_size":"","author_photo_space":"","author_photo_radius":"","review_space":"","review_size":"2.5","review_distance":"","art_excerpt":"","excerpt_gap":"","excerpt_middle":"","excerpt_inline":"","show_audio":"block","art_audio":"","art_audio_size":"1.5","btn_title":"","btn_margin":"","btn_padding":"","btn_border_width":"","btn_radius":"","pag_space":"","pag_padding":"","pag_border_width":"","pag_border_radius":"","prev_tdicon":"","next_tdicon":"","pag_icons_size":"","f_header_font_header":"","f_header_font_title":"Block header","f_header_font_settings":"","f_header_font_family":"","f_header_font_size":"","f_header_font_line_height":"","f_header_font_style":"","f_header_font_weight":"","f_header_font_transform":"","f_header_font_spacing":"","f_header_":"","f_ajax_font_title":"Ajax categories","f_ajax_font_settings":"","f_ajax_font_family":"","f_ajax_font_size":"","f_ajax_font_line_height":"","f_ajax_font_style":"","f_ajax_font_weight":"","f_ajax_font_transform":"","f_ajax_font_spacing":"","f_ajax_":"","f_more_font_title":"Load more button","f_more_font_settings":"","f_more_font_family":"","f_more_font_size":"","f_more_font_line_height":"","f_more_font_style":"","f_more_font_weight":"","f_more_font_transform":"","f_more_font_spacing":"","f_more_":"","f_title_font_header":"","f_title_font_title":"Article title","f_title_font_settings":"","f_title_font_family":"","f_title_font_style":"","f_title_font_weight":"","f_title_font_transform":"","f_title_font_spacing":"","f_title_":"","f_cat_font_title":"Article category tag","f_cat_font_settings":"","f_cat_font_family":"","f_cat_font_size":"","f_cat_font_line_height":"","f_cat_font_style":"","f_cat_font_weight":"","f_cat_font_transform":"","f_cat_font_spacing":"","f_cat_":"","f_meta_font_title":"Article meta info","f_meta_font_settings":"","f_meta_font_family":"","f_meta_font_size":"","f_meta_font_line_height":"","f_meta_font_style":"","f_meta_font_weight":"","f_meta_font_transform":"","f_meta_font_spacing":"","f_meta_":"","f_ex_font_title":"Article excerpt","f_ex_font_settings":"","f_ex_font_family":"","f_ex_font_style":"","f_ex_font_weight":"","f_ex_font_transform":"","f_ex_font_spacing":"","f_ex_":"","f_btn_font_title":"Article read more button","f_btn_font_settings":"","f_btn_font_family":"","f_btn_font_size":"","f_btn_font_line_height":"","f_btn_font_style":"","f_btn_font_weight":"","f_btn_font_transform":"","f_btn_font_spacing":"","f_btn_":"","mix_color":"","mix_type":"","fe_brightness":"1","fe_contrast":"1","fe_saturate":"1","mix_color_h":"","mix_type_h":"","fe_brightness_h":"1","fe_contrast_h":"1","fe_saturate_h":"1","m_bg":"","color_overlay":"","shadow_shadow_header":"","shadow_shadow_title":"Module Shadow","shadow_shadow_size":"","shadow_shadow_offset_horizontal":"","shadow_shadow_offset_vertical":"","shadow_shadow_spread":"","shadow_shadow_color":"","title_txt":"","title_txt_hover":"","all_underline_height":"","all_underline_color":"","cat_bg":"","cat_bg_hover":"","cat_txt":"","cat_txt_hover":"","cat_border":"","cat_border_hover":"","meta_bg":"","author_txt":"","author_txt_hover":"","date_txt":"","ex_txt":"","com_bg":"","com_txt":"","rev_txt":"","audio_btn_color":"","audio_time_color":"","audio_bar_color":"","audio_bar_curr_color":"","shadow_m_shadow_header":"","shadow_m_shadow_title":"Meta info shadow","shadow_m_shadow_size":"","shadow_m_shadow_offset_horizontal":"","shadow_m_shadow_offset_vertical":"","shadow_m_shadow_spread":"","shadow_m_shadow_color":"","btn_bg":"","btn_bg_hover":"","btn_txt":"","btn_txt_hover":"","btn_border":"","btn_border_hover":"","pag_text":"","pag_h_text":"","pag_bg":"","pag_h_bg":"","pag_border":"","pag_h_border":"","ajax_pagination_infinite_stop":"","css":"","td_column_number":1,"header_color":"","color_preset":"","border_top":"","class":"tdi_1","tdc_css_class":"tdi_1","tdc_css_class_style":"tdi_1_rand_style"}';block_tdi_1.td_column_number = "1";block_tdi_1.block_type = "td_flex_block_1";block_tdi_1.post_count = "3";block_tdi_1.found_posts = "3";block_tdi_1.header_color = "";block_tdi_1.ajax_pagination_infinite_stop = "";block_tdi_1.max_num_pages = "1";tdBlocksArray.push(block_tdi_1);விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது 2025
விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 1 – தேவி லிங்கம்
விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 2 – சஜு
விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 3 – செல்வகுமார் பேச்சிமுத்து
நம் குழந்தைகள் நம்மை அறிய… கடிதம்
ஒரு பெரும் தொடக்கத்தின் முகப்பில்…
அன்புள்ள ஜெ,
உங்கள் நூலறிமுக நிகழ்வு பற்றிய கட்டுரையைக் கண்டேன். நீங்கள் சொல்லியிருக்கும் பல விஷயங்கள் அப்பட்டமான உண்மை, அமெரிக்காவில் மட்டும் அல்ல ஐரோப்பாவிலும் இதுதான் நிலைமை. நம்மவர்கள் இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்களுக்குத் தங்கள் பிள்ளைகள் பற்றி ஏதும் தெரியாது. அவர்கள் என்ன படிக்கிறார்கள், எந்த மனநிலையில் இருக்கிறார்கள் எதுவுமே தெரியாது. இந்தியாவில் அவர்களுக்குத் தெரிந்த சினிமா, அரசியலுக்கு அப்பால் எதையுமே தெரிந்துகொள்வதில்லை. அதே குண்டுச்சட்டி வாழ்க்கை. ஆகவே எல்லா அபத்தங்களும் உண்டு.
இங்கே ஒரு குழந்தையிடம் தமிழ்ப்பெருமிதம், இந்து மதப்பெருமிதம், சாதிப்பெருமிதம் எதையுமே சொல்லக்கூடாது. ஏனென்றால் இங்கே உள்ள கல்விநிலையங்களில் அந்தவகையான குறுக்கல் வாதங்களுக்கு நேர் எதிரான கல்விதான் அளிக்கப்படுகிறது. இனவாதம், சாதிமுறை ஆகியவற்றைப் பற்றி ஆரம்பநிலைப் பள்ளியிலேயே சொல்லிக் கொடுக்கிறார்கள். அவற்றுக்கு எதிரான மனநிலை குழந்தைகளிடம் உண்டு. நாம் அவர்களிடம் தமிழ்ப்பெருமிதம் பேச ஆரம்பித்தால் தமிழ்ச்சமூகத்தின் சாதிமுறை, தீண்டாமை, பெண்ணடிமை முறை ஆகியவை பற்றி அவர்கள் நம்மிடம் கேட்பார்கள். நான் சங்ககாலத்தில் சாதிமுறை இல்லை என்று சொல்ல ஆரம்பித்தேன். என் பதினைந்து வயதுப்பெண் மறுநாளே சங்ககால சாதிமுறை பற்றி ஜார்ஜ் எல் ஹார்ட்டின் புத்தகத்தை கொண்டுவந்து காட்டிவிட்டாள்.
இந்தவகையான குழந்தைகளிடம் நாம் உண்மையில் ‘சென்ஸிபிள்’ ஆக பேசுவதுதான் முக்கியம். நம்மை அவர்கள் பாமரர்கள் என்று நினைத்துவிடக்கூடாது. நாம் தமிழகத்தில் நாம் கற்ற செய்திகளையோ அல்லது முகநூலில் படிப்பவற்றையோ சொன்னால் கேலிக்கூத்தாகிவிடும். அது நம்மவர்களுக்குத் தெரிவதில்லை. சாதி, பெண்ணடிமை எதையும் ஒளிக்க வேண்டியதில்லை. நம்மூர் பட்டிமன்றப் பேச்சாளர்கள், அடிதடி கிரிஞ்ச் சினிமா, அரசியல் எதையும் அவர்களிடம் பேசமுடியாது. நாம் ‘பிரிமிட்டிவ் பீப்பிள்’ ஆகிவிடுவோம்.
அந்த வகையில் அறம் தொகுதி பற்றி நீங்கள் சொன்னது சரிதான். நான் அதிலுள்ள பல கதைகளை சென்ற ஆண்டே வாசித்துக் காட்டியுள்ளேன். அந்தக் கதைகள் அவர்களுக்கு அளித்த நெகிழ்வும் தீவிரமான உணர்ச்சிகளும் மிக ஆச்சரியமானவை. அந்தக் கதைகள் எதையும் ஒளிக்கவில்லை, எந்த பெருமையையும் பேசவில்லை என்று அவர்கள் உணர்கிறார்கள். ஆனால் அவை அபாரமான மனிதர்களை அறிமுகம் செய்கின்றன. தமிழ்ப்பண்பாட்டின், அல்லது இந்தியப் பண்பாட்டின் மகத்தான முகமும் அறிமுகமாகிறது.
உங்கள் நூல் போல இன்று இந்தியாவையும் தமிழகத்தையும் நம் பிள்ளைகளிடம் கொண்டுசெல்ல இன்னொரு புத்தகம் இல்லை. அப்படி கொண்டுசெல்வது நம் கடமை. இல்லையேல் நம் குழந்தைகள் நம்மை அறியாமலேயே ஆகிவிடுவார்கள்.
ராஜேந்திரன் மாதவராஜ்
பறவை பார்த்த குழந்தை, கடிதம்
10 வயது குழந்தையை உற்சாகப்படுத்துவது சுலபமல்ல. திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி படம், ஆற்றில் நீராடல், உதகை பயணம், அருவியில் நனைதல், Barbeque Nation உணவக மதிய உணவு, சபரி மலை ஐயப்பன் கோவில் தரிசனம் போன்ற பல முயற்சிகளும் செய்தோம். ஆனால் ஒவ்வொரு அனுபவத்திற்குப் பிறகும் “முழுமையாக மகிழ்ந்தான்” என்று சொல்லமுடியவில்லை. அவனுக்கும் அந்த நிகழ்வுகள் எவ்வளவு முக்கியம் என்பதையும் எங்களிடம் அவனுக்கு வெளிப்படுத்த முடியவில்லை.
Every movement begins with a dream and ends with a negotiation. The Self-Respect Movement’s political afterlife proves no cause stays pure.
My article at FrontlineOctober 11, 2025
கைகோத்து முன்செல்லுதல்…
ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் இலக்கியவட்ட விருது 2025 ஆம் ஆண்டுக்கு அறிவிக்கப்பட்டதை ஒட்டி பல ‘கருத்துக்கள்’ பேசப்பட்டதை என் கவனத்திற்குக் கொண்டுவந்தார்கள். வேடிக்கையாக இருந்தது, அதில் எல்லா ‘தரப்புகளும்’ இருந்தன. ஒன்று, ரமேஷ் பிரேதன் என் நண்பர் ஆதலாலும், அவர் என் விஷ்ணுபுரம் நாவலை புகழ்ந்தமையாலும் நான் அவருக்கு இந்த விருதை அளிக்கிறேன் என்பது. இன்னொன்று, ரமேஷ் பிரேதன் என் எதிரி ஆகையால் அவரை சமாதானப்படுத்த இந்த விருதை அளிக்கிறேன் என்பது.
இந்த வகையான வம்புகள் இலக்கியச்சூழலில் ‘சுட்டசட்டிச் சட்டுவம்’ ஆக புழங்குபவர்களால் எழுப்பப்படுபவை. இவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை. இவர்கள் பெயர்களைக் கேட்டுத் தெரிந்து வைத்திருப்பார்கள். ஒவ்வொருவரைப் பற்றியும் ஓரிரு வரிகள் நினைவிலிருக்கும். அவ்வப்போது சில படைப்புகளை வாசிப்பவர்களும் இவர்களிலுண்டு, ஆனால் எந்தப் படைப்பையும் உள்ளுணர்வது இவர்களால் இயல்வது அல்ல. ஆனால் எல்லா வம்புகளையும் அறிந்திருப்பார்கள். வம்புகளுக்காக ‘ஆலாய்’ பறப்பார்கள்.
ஒரு நோக்கில் இவர்கள் வாழ்க்கையை வீணடிக்கிறார்கள். இது இலக்கியம், அழகுணர்வை நுண்மையாக்கவும் ஆன்மிகமான முன்னகர்தலுக்காகவும் உள்ள ஒரு துறை. இந்த துறையில் ‘பால் நிறைந்த பசுவின் மடியிலும் குருதியே குடிக்கும்’ உண்ணி போல வாழ்வதில் என்ன பொருள்?
ஆனால் இன்னொரு வகையில் அவர்களுக்கும் ஒரு பங்களிப்பு உள்ளது. இலக்கியவாதிகளை தங்கள் வம்புகள் வழியாக பேசிப்பேசி நினைவில் நிறுத்துகிறார்கள். சுந்தர ராமசாமி ஒருமுறை அதைச் சொன்னார். பெரும்பாலான புதிய வாசகர்கள் எளிய வம்புகள் வழியாகவே இலக்கியத்துக்குள் வருகிறார்கள். எழுத்தாளர்கள் மற்றும் நூல்களின் பெயர்களை கேள்விப்படுகிறார்கள். ஏனென்றால் வம்புகளின் பிரச்சாரத்திறன் அதிகம். அவை வைரஸ் போல. பரவுவதற்காகவே உருவானவை அவை.
இந்தக் குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிச் சொல்லவேண்டும் என நினைக்கிறேன். எழுதவருபவர்களுக்கு அது உதவலாம். ‘இலக்கியநட்பு’ என ஒன்று உண்டு. தமிழ் இலக்கிய உலகம் என்பது மிகச்சிறியது. இங்கே நமக்கு பெரிய அளவில் வாசகர்களோ, புகழோ பணமோ அமையப்போவதில்லை. ஆனால் இலக்கியத்தில் செயல்படும் ஒருவர் நல்ல நட்புகளை உருவாக்கிக் கொண்டால் நல்ல பொழுதுகள், நல்ல நினைவுகள் அமையக்கூடும். இறுதியில் இலக்கியத்தில் இருந்து ஈட்டிக்கொள்வது முதன்மையாக அதுவே.
என் நாற்பதாண்டுகால இலக்கிய வாழ்க்கையில் எனக்கிருக்கும் இனிய நினைவுகள் மூத்த படைப்பாளிகளுடனான உரையாடல் தருணங்கள்தான். நாஞ்சில்நாடன் உட்பட என் மூத்த படைப்பாளிகளுடன் இரவுபகலாக உரையாடிய நாட்கள் இன்றும் நினைவில் சுடர்கின்றன. என் தலைமுறைப் படைப்பாளிகளுடனான நட்புகள் இப்போது மிக அழுத்தமானவையாக ஆகியுள்ளன. இளையதலைமுறைப் படைப்பாளிகளுடனான அரட்டைகள் ஊக்கமூட்டும் நிகழ்வுகள். நான் ஒரு அழியாச்சரடில் இருக்கிறேன் என உணரும் பொழுதுகள் அவை. அவற்றையே நான் முதன்மையாகக் கருதுகிறேன், எதன் பொருட்டும் அவற்றை இழந்துவிடலாகாது என்பதில் குறிப்பாகவும் இருக்கிறேன்.
இளமையில் நான் இலக்கிய அளவுகோல்களை மிகக்கடுமையாக வைத்திருந்தேன். அவற்றை அவற்றை நண்பர்களிடையே பகிர்ந்துகொண்டேன். ஒருவரை ஒருவர் விமர்சித்துத்தான் வளர்ந்தோம். ஆனால் அதன் எல்லையையும் அறிந்திருந்தேன். அந்தத் தன்னுணர்வு மிக முக்கியமானது. அவற்றை இப்படிச் சொல்லலாம்.
ஒரு விமர்சனம் அந்தப் படைப்பாளிக்கு எவ்வகையிலாவது உதவ வேண்டும். அது வளரும் நிலையிலேயே இயல்வது. ஒரு குறிப்பிட்ட வகையில் எழுதி நிலைகொண்டுவிட்ட படைப்பாளியை அதன் பின் இன்னொரு எழுத்தாளர் விமர்சிக்கக்கூடாது.ஒரு படைப்பாளி அவருக்கான ஓர் எல்லையை உருவாக்கியிருப்பார். உணர்வுரீதியான எல்லை அது. அதை நண்பராக நாம் அறிவோம். அந்த எல்லையைக் கடந்து விமர்சிக்கக்கூடாது. அது அவரது இருப்பை, வாழ்க்கையின் சாரத்தை நாம் மறுப்பதாக ஆகிவிடும். அவரை அது கடுமையாக புண்படுத்தலாம்.ஒரு படைப்பாளி தனக்கான அழகியலை, வாழ்க்கைப் பார்வையை உருவாக்கிக்கொண்டிருக்கலாம். இன்னொரு இணைப்படைப்பாளியின் படைப்பை அதைக்கொண்டு மதிப்பிட்டு நிராகரிப்பது பிழையாக ஆகிவிடக்கூடும்.இவை எனக்காக நானே வகுத்துக்கொண்டவை. பிறர் இதைப் பரிசீலிக்கலாம்
இந்த மூன்று நெறிகளும் நீண்டகால நட்புக்கான அடிப்படைகள். வள்ளுவர் சொல்வதுபோல ‘உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்’ தான் புலவரின் வழியாக இருக்கமுடியும். ஆகவே எல்லாச் சந்திப்புகளும் இனிதாக அமையவேண்டும் என நான் கவனம் கொள்வதுண்டு. சில சமயம் சிலர் என்னைக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கலாம். அரிதாகப் பல கசப்புகளும் உருவாகியிருக்கலாம். என்னை அவர் முழுமையாகவே ஏற்காதவராகக்கூட இருக்கலாம். ஆயினும் நேர்ச்சந்திப்புகள் இனிதாக அமையவேண்டும் என கவனம் கொள்கிறேன். நட்பை முறித்துக்கொண்டு செய்யும் விமர்சனங்களால் பயன் ஏதுமில்லை.
நான் ஏதேனும் வகையில் இலக்கியத்திற்குப் பங்களிப்பாற்றுபவர்கள் பற்றி தனிப்பட்ட முறையிலான விமர்சனங்களோ கடும்கருத்துக்களோ சொல்வதில்லை என்பதை வாசகர்கள், நண்பர்கள் உணரலாம். மிகமிக அரிதாகச் சீற்றத்துடன் ஏதேனும் சொல்ல நேரிடும், அது எழுத்தாளர் என்னும் குணாதிசயத்தின் தனிச்சிக்கல். ஆனால் உடனடியாக அதற்கு மன்னிப்பு கோரியுமிருப்பேன். என்னை கடுமையாக தாக்கி, வசைபாடி வரும் எழுத்தாளர்கள் உண்டு. அவர்களைப் பற்றிக்கூட நான் கண்டனங்களை எழுதியதில்லை. நேர்த்தொடர்பை முறித்துக்கொண்டதுமில்லை. அதைப்பற்றி என் நண்பர்கள் கேட்பதுண்டு. “அவர்கள் எழுத்தாளர்கள், அந்தக் காரணமே போதும்” என்று நான் சொல்வதுண்டு.
எந்த எழுத்தாளராயினும் அவர்களின் துயர்களில் உடனிருக்கவே முயன்றிருக்கிறேன். அந்தத் தருணத்தில் விலகியதே இல்லை. அவர்கள் எனக்கு எதிராகப் பேசியதை பொருட்படுத்தியதுமில்லை. தமிழில் எந்த எழுத்தாளர் ஒரு விருதுபெற்றாலும் அவரைப்பற்றி பாராட்டுகளை, ஆய்வுக்கட்டுரைகளை நான் எழுதியிருக்கிறேன். ஒரு விடுபடுதல்கூட இந்த ஆண்டுவரை இல்லை.
ஆனால் சில சிக்கல்கள் உண்டு. சில படைப்பாளிகள் மிகமிகக் கடுமையான உள்வாங்குதல் கொண்டவர்களாக இருப்பார்கள். மிக எளிய நகைச்சுவைகளைக்கூட ஆழமான புண்படுத்தலாக எடுத்துக்கொள்வார்கள். எப்போதுமே பிறரை ஐயப்படுபவர்களாகவும், எச்சரிக்கை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அது அவர்களின் இயல்பு. அவர்களை விட்டு தேவையான இடைவெளிவிட்டு புழங்குவதே நல்லது. தெரியாமல் சிலசமயம் எல்லைகள் மீறப்படுமென்றால் மன்னிப்பு கோரிவிடலாம். அப்படியும் செய்துள்ளேன்.
அதேபோல எந்நிலையிலும் குறையாத காழ்ப்பும் கசப்பும் மட்டுமே கொண்ட சிலர் உண்டு. பெரும்பாலும் அவர்கள் கனவுகள் கொண்டிருந்த, இயலாமையாலோ வாழ்க்கைப் போக்குகளாலோ தோற்றுப்போன படைப்பாளிகள். அத்தோல்வி பற்றி அவர்களே நன்கு அறிந்தவர்கள். அவர்கள் நிரந்தரமான பொறாமையும், புழுங்குதலும், அதன் விளைவான வம்புகளும் பூசல்களும் கொண்டிருப்பார்கள். அவர்களையும் ஒன்றும் செய்யமுடியாது. உள்ளூர அவர்களுக்காக வருத்தமே கொள்கிறேன். அதிகபட்சம் நம் உலகில் அவர்கள் இல்லை என கொள்வதே நாம் செய்யக்கூடுவது.
அதேபோல சாதி, மதம், அரசியல் சார்ந்த அடையாளங்களைப் பற்றிக்கொண்டு கடுமையான எதிர்நிலையில் இருப்பவர்கள் உண்டு. அவர்களில் சிலர் நல்ல வாசகர்களாகவும் இருக்கலாம். எழுத்தாளர்கள்கூட அவர்களில் உண்டு. அவர்களுடன் நமக்குச் சந்திப்புப் புள்ளியே இல்லை. என் வரையில் அவர்களை முழுக்க விலக்கிவிடுவதை மட்டுமே செய்கிறேன். இலக்கிய விமர்சனம், எதிர்வினை என்றபேரில் அவர்கள் செய்வது பலசமயம் தங்கள் சொந்த அழுக்குகளை அள்ளி வைப்பதையே. அவர்களுக்கும் நமக்கும் தொடர்பு இருக்க முடியாது. தவிர்ப்பதே நல்லது. அல்லது ‘மனிதனுக்கு மனிதன்’ என்னும் குறைந்தபட்சம் தொடர்பை மட்டும் கொள்ளலாம்.
அப்படியென்றால் கருத்தியல் முரண்பாடுகள்? கருத்தியல் முரண்பாட்டால் காழ்ப்பும் கசப்பும் கொண்டிருப்பதும், அதனடிப்படையில் கடும் தாக்குதல்களைச் செய்வதுமெல்லாம் இலக்கியவாதிகளின் இயல்பு அல்ல என நான் நினைக்கிறேன். அது அரசியலின் வழி, அரசியலின் மனநிலை. அப்படி கருத்தியல் சார்ந்த காழ்ப்பு கொண்டிருக்கும் ஒருசிலர் சிலவற்றை எழுதவும் கூடும், ஆனால் அவர்கள் முதன்மையாக அரசியல் நம்பிக்கையாளர்கள் தான்.
நான் எல்லா தரப்பைச் சார்ந்த உயர்மட்ட அரசியல்வாதிகளையும் சந்தித்துள்ளேன். (பலசமயம் தனிப்பட்ட சந்திப்புகள்). அவர்களிடம் ஒருவரோடொருவர் இந்தவகையான காழ்ப்பும் கசப்பும் இருப்பதில்லை. முற்றிலும் எதிர்த்தரப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகளை ஒரே இடத்தில் சிரித்துப்பேசிக் கொண்டிருப்பவர்களாக பார்த்துள்ளேன். ஏனென்றால் உண்மையான அரசியல் என்ன, அது செயல்படும் முறை என்ன என்று அவர்களுக்குத் தெரியும். காழ்ப்பும் கசப்பும் எல்லாம் தொண்டர்களின் நிலையில், அடித்தளத்தில் நிகழ்வன மட்டுமே. அவர்கள்தான் அடித்துக்கொண்டு சாகிறார்கள். அந்த மூளைச்சலவை அவர்களிடமே நிகழ்கிறது.
அதற்கப்பால் அரசியல் அடிமட்டத்தினருக்கு அரசியல் நிலைபாடு என்பது ஓரு தன்னடையாளம். அவர்களுக்கென வேறு தன்னடையாளம் ஏதுமில்லை. அவர்கள் எவ்வகையிலும் ஆளுமை என எதையும் உருவாக்கிக் கொள்ள முடியாதவர்கள். அரசியல் நிலைபாட்டை அல்லது சார்புநிலையை அவர்கள் ஆளுமையாக கற்பனை செய்துகொள்கிறார்கள். அதில் பற்றை விட வெறுப்பே ஓங்கியிருக்கும். எவர் எதிரிகள் என வகுத்தாலொழிய தான் யார் என்பதை வகுக்க முடியாது. ஆகவே எப்போதும் எதிர்ப்பு, காழ்ப்பு, வசை மனநிலையிலேயே நீடிப்பார்கள்.
ஆனால் அது அவர்களின் மெய்யான அடையாளம் அல்ல. அது ஒரு பாவனைதான். அது பாவனை என்பதனாலேயே மிகையாக்கிக் கொள்கிறார்கள். எல்லா மிகைகளும் பொய்யே. ஆகவேதான் சட்டென்று அவர்கள் எதிர்நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். ஓர் இடதுசாரி சட்டென்று வலதுசாரி ஆகும்போது நாம் துணுக்குறுகிறோம். ‘எப்படி தீவிரமாக இருந்தான்’ என வியக்கிறோம். அந்த மிகையான தீவிரம்தான் அவர் எதிர்நிலைக்குச் செல்லவும் காரணம். ஏனென்றால் அது ஒரு பாவனை. நான் அரசியல்சார்பு சார்ந்து எழும் எல்லா மிகைவெளிப்பாடுகளையும் சம்பந்தப்பட்டவரின் பரிதாபகரமான நடிப்பாகவே நினைக்கிறேன். ஆகவே அவற்றை பொருட்படுத்துவதில்லை.
இக்காரணத்தால் சமூகவலைத்தளங்கள் வழியாக நட்பு உருவாகவே முடியாது என நான் நினைக்கிறேன். அங்கே ஒவ்வொருவரும் அவரவருக்கான பாவனைகளை புனைந்து முன்வைக்கிறார்கள். பாவனைகளை கொண்டு மோதிக்கொள்கிறார்கள். நட்பு செலுத்துகிறார்கள். அது ஒரு நடிப்புமேடை மட்டுமே.
இதற்கு அப்பால் நாம் நம் தலைமுறையின் சிறந்த உள்ளங்களுடன் நீடித்த நல்ல நட்பை பேணிக்கொள்ள முடியும். அதை சூழ்ந்துள்ள சிறிய உள்ளங்களால் தாளமுடியாது. நம்பவும் முடியாது. ஆனால் அது சாத்தியமே. அதன் இனிமைகளும் பல. அவர்களுடனான உரையாடலில் நம்முள் திறக்கும் புதியவாசல்கள் பிற பொழுதுகளில் நிகழ்வதில்லை.
இன்று எண்ணிக்கொள்கையில் என் மறைந்த நண்பர்களின் முகங்கள் நினைவில் எழுகின்றன. வே.அலெக்ஸ் பற்றி இன்று முழுக்க எண்ணிக்கொண்டே இருந்தேன். இன்று எழுதுபவர்களிடையே அத்தகைய உறவு உருவாகவேண்டும் என எண்ணிக்கொள்கிறேன். எழுத்தாளர்களாகிய நாம் நம் காலகட்டத்தின் உதாசீனத்தை, ஏளனத்தை எழுத்தாளர்களாக இணைந்து எதிர்கொண்டு முன்செல்ல வேண்டியுள்ளது. ரிக்வேதத்தின் புகழ்பெற்ற உவமை.
“கற்கள் நிறைந்த நதி ஓடிக்கொண்டிருக்கிறது
தோழர்களே, கைகோத்து இந்த நதியை தாண்டுங்கள்
உங்கள் சங்கம் வலுவுடையதாகுக
உங்கள் சொற்கள் அழியாது வளர்க!”
கைகோத்து முன்செல்லுதல்…
ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் இலக்கியவட்ட விருது 2025 ஆம் ஆண்டுக்கு அறிவிக்கப்பட்டதை ஒட்டி பல ‘கருத்துக்கள்’ பேசப்பட்டதை என் கவனத்திற்குக் கொண்டுவந்தார்கள். வேடிக்கையாக இருந்தது, அதில் எல்லா ‘தரப்புகளும்’ இருந்தன. ஒன்று, ரமேஷ் பிரேதன் என் நண்பர் ஆதலாலும், அவர் என் விஷ்ணுபுரம் நாவலை புகழ்ந்தமையாலும் நான் அவருக்கு இந்த விருதை அளிக்கிறேன் என்பது. இன்னொன்று, ரமேஷ் பிரேதன் என் எதிரி ஆகையால் அவரை சமாதானப்படுத்த இந்த விருதை அளிக்கிறேன் என்பது.
இந்த வகையான வம்புகள் இலக்கியச்சூழலில் ‘சுட்டசட்டிச் சட்டுவம்’ ஆக புழங்குபவர்களால் எழுப்பப்படுபவை. இவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை. இவர்கள் பெயர்களைக் கேட்டுத் தெரிந்து வைத்திருப்பார்கள். ஒவ்வொருவரைப் பற்றியும் ஓரிரு வரிகள் நினைவிலிருக்கும். அவ்வப்போது சில படைப்புகளை வாசிப்பவர்களும் இவர்களிலுண்டு, ஆனால் எந்தப் படைப்பையும் உள்ளுணர்வது இவர்களால் இயல்வது அல்ல. ஆனால் எல்லா வம்புகளையும் அறிந்திருப்பார்கள். வம்புகளுக்காக ‘ஆலாய்’ பறப்பார்கள்.
ஒரு நோக்கில் இவர்கள் வாழ்க்கையை வீணடிக்கிறார்கள். இது இலக்கியம், அழகுணர்வை நுண்மையாக்கவும் ஆன்மிகமான முன்னகர்தலுக்காகவும் உள்ள ஒரு துறை. இந்த துறையில் ‘பால் நிறைந்த பசுவின் மடியிலும் குருதியே குடிக்கும்’ உண்ணி போல வாழ்வதில் என்ன பொருள்?
ஆனால் இன்னொரு வகையில் அவர்களுக்கும் ஒரு பங்களிப்பு உள்ளது. இலக்கியவாதிகளை தங்கள் வம்புகள் வழியாக பேசிப்பேசி நினைவில் நிறுத்துகிறார்கள். சுந்தர ராமசாமி ஒருமுறை அதைச் சொன்னார். பெரும்பாலான புதிய வாசகர்கள் எளிய வம்புகள் வழியாகவே இலக்கியத்துக்குள் வருகிறார்கள். எழுத்தாளர்கள் மற்றும் நூல்களின் பெயர்களை கேள்விப்படுகிறார்கள். ஏனென்றால் வம்புகளின் பிரச்சாரத்திறன் அதிகம். அவை வைரஸ் போல. பரவுவதற்காகவே உருவானவை அவை.
இந்தக் குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிச் சொல்லவேண்டும் என நினைக்கிறேன். எழுதவருபவர்களுக்கு அது உதவலாம். ‘இலக்கியநட்பு’ என ஒன்று உண்டு. தமிழ் இலக்கிய உலகம் என்பது மிகச்சிறியது. இங்கே நமக்கு பெரிய அளவில் வாசகர்களோ, புகழோ பணமோ அமையப்போவதில்லை. ஆனால் இலக்கியத்தில் செயல்படும் ஒருவர் நல்ல நட்புகளை உருவாக்கிக் கொண்டால் நல்ல பொழுதுகள், நல்ல நினைவுகள் அமையக்கூடும். இறுதியில் இலக்கியத்தில் இருந்து ஈட்டிக்கொள்வது முதன்மையாக அதுவே.
என் நாற்பதாண்டுகால இலக்கிய வாழ்க்கையில் எனக்கிருக்கும் இனிய நினைவுகள் மூத்த படைப்பாளிகளுடனான உரையாடல் தருணங்கள்தான். நாஞ்சில்நாடன் உட்பட என் மூத்த படைப்பாளிகளுடன் இரவுபகலாக உரையாடிய நாட்கள் இன்றும் நினைவில் சுடர்கின்றன. என் தலைமுறைப் படைப்பாளிகளுடனான நட்புகள் இப்போது மிக அழுத்தமானவையாக ஆகியுள்ளன. இளையதலைமுறைப் படைப்பாளிகளுடனான அரட்டைகள் ஊக்கமூட்டும் நிகழ்வுகள். நான் ஒரு அழியாச்சரடில் இருக்கிறேன் என உணரும் பொழுதுகள் அவை. அவற்றையே நான் முதன்மையாகக் கருதுகிறேன், எதன் பொருட்டும் அவற்றை இழந்துவிடலாகாது என்பதில் குறிப்பாகவும் இருக்கிறேன்.
இளமையில் நான் இலக்கிய அளவுகோல்களை மிகக்கடுமையாக வைத்திருந்தேன். அவற்றை அவற்றை நண்பர்களிடையே பகிர்ந்துகொண்டேன். ஒருவரை ஒருவர் விமர்சித்துத்தான் வளர்ந்தோம். ஆனால் அதன் எல்லையையும் அறிந்திருந்தேன். அந்தத் தன்னுணர்வு மிக முக்கியமானது. அவற்றை இப்படிச் சொல்லலாம்.
ஒரு விமர்சனம் அந்தப் படைப்பாளிக்கு எவ்வகையிலாவது உதவ வேண்டும். அது வளரும் நிலையிலேயே இயல்வது. ஒரு குறிப்பிட்ட வகையில் எழுதி நிலைகொண்டுவிட்ட படைப்பாளியை அதன் பின் இன்னொரு எழுத்தாளர் விமர்சிக்கக்கூடாது.ஒரு படைப்பாளி அவருக்கான ஓர் எல்லையை உருவாக்கியிருப்பார். உணர்வுரீதியான எல்லை அது. அதை நண்பராக நாம் அறிவோம். அந்த எல்லையைக் கடந்து விமர்சிக்கக்கூடாது. அது அவரது இருப்பை, வாழ்க்கையின் சாரத்தை நாம் மறுப்பதாக ஆகிவிடும். அவரை அது கடுமையாக புண்படுத்தலாம்.ஒரு படைப்பாளி தனக்கான அழகியலை, வாழ்க்கைப் பார்வையை உருவாக்கிக்கொண்டிருக்கலாம். இன்னொரு இணைப்படைப்பாளியின் படைப்பை அதைக்கொண்டு மதிப்பிட்டு நிராகரிப்பது பிழையாக ஆகிவிடக்கூடும்.இவை எனக்காக நானே வகுத்துக்கொண்டவை. பிறர் இதைப் பரிசீலிக்கலாம்
இந்த மூன்று நெறிகளும் நீண்டகால நட்புக்கான அடிப்படைகள். வள்ளுவர் சொல்வதுபோல ‘உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்’ தான் புலவரின் வழியாக இருக்கமுடியும். ஆகவே எல்லாச் சந்திப்புகளும் இனிதாக அமையவேண்டும் என நான் கவனம் கொள்வதுண்டு. சில சமயம் சிலர் என்னைக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கலாம். அரிதாகப் பல கசப்புகளும் உருவாகியிருக்கலாம். என்னை அவர் முழுமையாகவே ஏற்காதவராகக்கூட இருக்கலாம். ஆயினும் நேர்ச்சந்திப்புகள் இனிதாக அமையவேண்டும் என கவனம் கொள்கிறேன். நட்பை முறித்துக்கொண்டு செய்யும் விமர்சனங்களால் பயன் ஏதுமில்லை.
நான் ஏதேனும் வகையில் இலக்கியத்திற்குப் பங்களிப்பாற்றுபவர்கள் பற்றி தனிப்பட்ட முறையிலான விமர்சனங்களோ கடும்கருத்துக்களோ சொல்வதில்லை என்பதை வாசகர்கள், நண்பர்கள் உணரலாம். மிகமிக அரிதாகச் சீற்றத்துடன் ஏதேனும் சொல்ல நேரிடும், அது எழுத்தாளர் என்னும் குணாதிசயத்தின் தனிச்சிக்கல். ஆனால் உடனடியாக அதற்கு மன்னிப்பு கோரியுமிருப்பேன். என்னை கடுமையாக தாக்கி, வசைபாடி வரும் எழுத்தாளர்கள் உண்டு. அவர்களைப் பற்றிக்கூட நான் கண்டனங்களை எழுதியதில்லை. நேர்த்தொடர்பை முறித்துக்கொண்டதுமில்லை. அதைப்பற்றி என் நண்பர்கள் கேட்பதுண்டு. “அவர்கள் எழுத்தாளர்கள், அந்தக் காரணமே போதும்” என்று நான் சொல்வதுண்டு.
எந்த எழுத்தாளராயினும் அவர்களின் துயர்களில் உடனிருக்கவே முயன்றிருக்கிறேன். அந்தத் தருணத்தில் விலகியதே இல்லை. அவர்கள் எனக்கு எதிராகப் பேசியதை பொருட்படுத்தியதுமில்லை. தமிழில் எந்த எழுத்தாளர் ஒரு விருதுபெற்றாலும் அவரைப்பற்றி பாராட்டுகளை, ஆய்வுக்கட்டுரைகளை நான் எழுதியிருக்கிறேன். ஒரு விடுபடுதல்கூட இந்த ஆண்டுவரை இல்லை.
ஆனால் சில சிக்கல்கள் உண்டு. சில படைப்பாளிகள் மிகமிகக் கடுமையான உள்வாங்குதல் கொண்டவர்களாக இருப்பார்கள். மிக எளிய நகைச்சுவைகளைக்கூட ஆழமான புண்படுத்தலாக எடுத்துக்கொள்வார்கள். எப்போதுமே பிறரை ஐயப்படுபவர்களாகவும், எச்சரிக்கை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அது அவர்களின் இயல்பு. அவர்களை விட்டு தேவையான இடைவெளிவிட்டு புழங்குவதே நல்லது. தெரியாமல் சிலசமயம் எல்லைகள் மீறப்படுமென்றால் மன்னிப்பு கோரிவிடலாம். அப்படியும் செய்துள்ளேன்.
அதேபோல எந்நிலையிலும் குறையாத காழ்ப்பும் கசப்பும் மட்டுமே கொண்ட சிலர் உண்டு. பெரும்பாலும் அவர்கள் கனவுகள் கொண்டிருந்த, இயலாமையாலோ வாழ்க்கைப் போக்குகளாலோ தோற்றுப்போன படைப்பாளிகள். அத்தோல்வி பற்றி அவர்களே நன்கு அறிந்தவர்கள். அவர்கள் நிரந்தரமான பொறாமையும், புழுங்குதலும், அதன் விளைவான வம்புகளும் பூசல்களும் கொண்டிருப்பார்கள். அவர்களையும் ஒன்றும் செய்யமுடியாது. உள்ளூர அவர்களுக்காக வருத்தமே கொள்கிறேன். அதிகபட்சம் நம் உலகில் அவர்கள் இல்லை என கொள்வதே நாம் செய்யக்கூடுவது.
அதேபோல சாதி, மதம், அரசியல் சார்ந்த அடையாளங்களைப் பற்றிக்கொண்டு கடுமையான எதிர்நிலையில் இருப்பவர்கள் உண்டு. அவர்களில் சிலர் நல்ல வாசகர்களாகவும் இருக்கலாம். எழுத்தாளர்கள்கூட அவர்களில் உண்டு. அவர்களுடன் நமக்குச் சந்திப்புப் புள்ளியே இல்லை. என் வரையில் அவர்களை முழுக்க விலக்கிவிடுவதை மட்டுமே செய்கிறேன். இலக்கிய விமர்சனம், எதிர்வினை என்றபேரில் அவர்கள் செய்வது பலசமயம் தங்கள் சொந்த அழுக்குகளை அள்ளி வைப்பதையே. அவர்களுக்கும் நமக்கும் தொடர்பு இருக்க முடியாது. தவிர்ப்பதே நல்லது. அல்லது ‘மனிதனுக்கு மனிதன்’ என்னும் குறைந்தபட்சம் தொடர்பை மட்டும் கொள்ளலாம்.
அப்படியென்றால் கருத்தியல் முரண்பாடுகள்? கருத்தியல் முரண்பாட்டால் காழ்ப்பும் கசப்பும் கொண்டிருப்பதும், அதனடிப்படையில் கடும் தாக்குதல்களைச் செய்வதுமெல்லாம் இலக்கியவாதிகளின் இயல்பு அல்ல என நான் நினைக்கிறேன். அது அரசியலின் வழி, அரசியலின் மனநிலை. அப்படி கருத்தியல் சார்ந்த காழ்ப்பு கொண்டிருக்கும் ஒருசிலர் சிலவற்றை எழுதவும் கூடும், ஆனால் அவர்கள் முதன்மையாக அரசியல் நம்பிக்கையாளர்கள் தான்.
நான் எல்லா தரப்பைச் சார்ந்த உயர்மட்ட அரசியல்வாதிகளையும் சந்தித்துள்ளேன். (பலசமயம் தனிப்பட்ட சந்திப்புகள்). அவர்களிடம் ஒருவரோடொருவர் இந்தவகையான காழ்ப்பும் கசப்பும் இருப்பதில்லை. முற்றிலும் எதிர்த்தரப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகளை ஒரே இடத்தில் சிரித்துப்பேசிக் கொண்டிருப்பவர்களாக பார்த்துள்ளேன். ஏனென்றால் உண்மையான அரசியல் என்ன, அது செயல்படும் முறை என்ன என்று அவர்களுக்குத் தெரியும். காழ்ப்பும் கசப்பும் எல்லாம் தொண்டர்களின் நிலையில், அடித்தளத்தில் நிகழ்வன மட்டுமே. அவர்கள்தான் அடித்துக்கொண்டு சாகிறார்கள். அந்த மூளைச்சலவை அவர்களிடமே நிகழ்கிறது.
அதற்கப்பால் அரசியல் அடிமட்டத்தினருக்கு அரசியல் நிலைபாடு என்பது ஓரு தன்னடையாளம். அவர்களுக்கென வேறு தன்னடையாளம் ஏதுமில்லை. அவர்கள் எவ்வகையிலும் ஆளுமை என எதையும் உருவாக்கிக் கொள்ள முடியாதவர்கள். அரசியல் நிலைபாட்டை அல்லது சார்புநிலையை அவர்கள் ஆளுமையாக கற்பனை செய்துகொள்கிறார்கள். அதில் பற்றை விட வெறுப்பே ஓங்கியிருக்கும். எவர் எதிரிகள் என வகுத்தாலொழிய தான் யார் என்பதை வகுக்க முடியாது. ஆகவே எப்போதும் எதிர்ப்பு, காழ்ப்பு, வசை மனநிலையிலேயே நீடிப்பார்கள்.
ஆனால் அது அவர்களின் மெய்யான அடையாளம் அல்ல. அது ஒரு பாவனைதான். அது பாவனை என்பதனாலேயே மிகையாக்கிக் கொள்கிறார்கள். எல்லா மிகைகளும் பொய்யே. ஆகவேதான் சட்டென்று அவர்கள் எதிர்நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். ஓர் இடதுசாரி சட்டென்று வலதுசாரி ஆகும்போது நாம் துணுக்குறுகிறோம். ‘எப்படி தீவிரமாக இருந்தான்’ என வியக்கிறோம். அந்த மிகையான தீவிரம்தான் அவர் எதிர்நிலைக்குச் செல்லவும் காரணம். ஏனென்றால் அது ஒரு பாவனை. நான் அரசியல்சார்பு சார்ந்து எழும் எல்லா மிகைவெளிப்பாடுகளையும் சம்பந்தப்பட்டவரின் பரிதாபகரமான நடிப்பாகவே நினைக்கிறேன். ஆகவே அவற்றை பொருட்படுத்துவதில்லை.
இக்காரணத்தால் சமூகவலைத்தளங்கள் வழியாக நட்பு உருவாகவே முடியாது என நான் நினைக்கிறேன். அங்கே ஒவ்வொருவரும் அவரவருக்கான பாவனைகளை புனைந்து முன்வைக்கிறார்கள். பாவனைகளை கொண்டு மோதிக்கொள்கிறார்கள். நட்பு செலுத்துகிறார்கள். அது ஒரு நடிப்புமேடை மட்டுமே.
இதற்கு அப்பால் நாம் நம் தலைமுறையின் சிறந்த உள்ளங்களுடன் நீடித்த நல்ல நட்பை பேணிக்கொள்ள முடியும். அதை சூழ்ந்துள்ள சிறிய உள்ளங்களால் தாளமுடியாது. நம்பவும் முடியாது. ஆனால் அது சாத்தியமே. அதன் இனிமைகளும் பல. அவர்களுடனான உரையாடலில் நம்முள் திறக்கும் புதியவாசல்கள் பிற பொழுதுகளில் நிகழ்வதில்லை.
இன்று எண்ணிக்கொள்கையில் என் மறைந்த நண்பர்களின் முகங்கள் நினைவில் எழுகின்றன. வே.அலெக்ஸ் பற்றி இன்று முழுக்க எண்ணிக்கொண்டே இருந்தேன். இன்று எழுதுபவர்களிடையே அத்தகைய உறவு உருவாகவேண்டும் என எண்ணிக்கொள்கிறேன். எழுத்தாளர்களாகிய நாம் நம் காலகட்டத்தின் உதாசீனத்தை, ஏளனத்தை எழுத்தாளர்களாக இணைந்து எதிர்கொண்டு முன்செல்ல வேண்டியுள்ளது. ரிக்வேதத்தின் புகழ்பெற்ற உவமை.
“கற்கள் நிறைந்த நதி ஓடிக்கொண்டிருக்கிறது
தோழர்களே, கைகோத்து இந்த நதியை தாண்டுங்கள்
உங்கள் சங்கம் வலுவுடையதாகுக
உங்கள் சொற்கள் அழியாது வளர்க!”
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

