Jeyamohan's Blog, page 11
October 9, 2025
சாக்ரமண்டோ நூலறிமுக நிகழ்வு. மாலை
கலிஃபோர்னியாவில் இன்னொரு நூல் அறிமுக நிகழ்வு. மாலையில் சாக்ரமண்டோவில் நிகழ்கிறது.
என் அறம் கதைகளின் ஆங்கில மொழியாக்கம் Stories of the true அமெரிக்க வெளியீடாக வந்துள்ளது. புத்தகக் கையெழுத்து மற்றும் உரையாடல் அரங்கு இது.
முன்பதிவுக்கான தொடுப்பு
Sacramento event details:RSVP: https://tinyurl.com/msxwjeprOctober 8, 2025
மரபிசைப் பயிற்சி
ஜெயக்குமார் தமிழ் விக்கி
ஜெயக்குமார் நடத்தும் மரபிசைப் பயிற்சிகள் மீண்டும் நிகழ்கின்றன. இவை கர்நாடக இசை எனப்படும் மரபிசையை கேட்டு ரசிப்பதற்கான பயிற்சிகள். எதுவுமே அறியாத தொடக்கநிலையினருக்கானவை. ராகங்களை அறிமுகம் செய்து, திரைப்பாடல்கள் வழியாக அவற்றை செவிக்குப் பழக்கப்படுத்தி, இசைப்பாடல்களை கேட்கச்செய்து இசைக்குள் இட்டுச்செல்லும் முயற்சி இது. பங்கெடுத்த ஒவ்வொருவருக்கும் புதிய தொடக்கமாக அமைந்தவை.
நம்மில் பலருக்கும் மரபிசையை அறியவேண்டும், கேட்டு ரசிக்கவேண்டும் என்னும் ஆர்வமிருக்கும். அதற்கான முயற்சிகளைச் செய்தும் இருப்போம். ஆனால் இணையம் போன்றவை பெரும்பாலும் உதவுவதில்லை. நேரடியான வகுப்புகள் தேவை. தீவிரமான கவனத்துடன் அவ்வகுப்புகளை கவனிக்கவேண்டும். நேரடியாக ஈடுபட்டு பயிலவும் வேண்டும். அதற்காக அறிவியல்பூர்வமாக உருவாக்கப்பட்டவை இவ்வகுப்புகள்.
நாள் அக்டோபர் 31, நவம்பர் 1,2 (வெள்ளி சனி ஞாயிறு)
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
இசை, ஆலயம், மெய்யியல்- யோகேஸ்வரன் ராமநாதன் ஜெயக்குமாரின் இசை வகுப்புகள் மாய யவனிகையின் பின்னே எழுந்த மலர்த்திடல் இசை, வகுப்புகள்- கடிதம் இசைநாட்கள் மரபிசைப் பயிற்சி- கடிதம் அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள்- இடமிருப்பவைஉருது இலக்கியம், கஸல் அறிமுகம்ஃபயஸ் காதிரி அவர்கள் நடத்தும் உருது இலக்கியம்- கஸல் அறிமுக நிகழ்வு மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற ஒன்று. மரபான உருது கவிஞர்- பாடகர் குடும்பத்தில் வந்தவர் காதிரி. பாடகரும்கூட.உருது இலக்கியம் என்பது வடக்கே இருப்பது அல்ல. தமிழகத்தின் மிகச்சிறப்பான மரபுகளில் ஒன்று அது. உருது இலக்கியத்தின் ஒட்டுமொத்தச் சித்திரத்தை, குறிப்பாக முகலாயர் காலம் முதல் வரும் கவிமரபை அறிமுகம் செய்யும் காதிரி அதன் மிகச்சிறப்பான வெளிப்பாடான கஸல் இசை மரபையும் அறிமுகம் செய்கிறார்.
நாம் லதா மங்கேஷ்கர், வாணிஜெயராம் முதல் ஹரிஹரன் வரை பலர் பாடிய கஸல் பாடல்களைக் கேட்டிருப்போம். ஆனால் உண்மையில் ரசிக்க அடிப்படைப்பயிற்சி அற்றவர்களாகவும் இருக்கிறோம். அந்த அறிமுகப்பயிற்சி நமக்கு முற்றிலும் புதிய ஓர் உலகைத் திறந்து தருவது. ஒரு பெரிய தொடக்கம்.
(அக்டோபர் 20 அன்று திங்கள்கிழமை தீபாவளி ஆதலால் இந்நிகழ்வு வெள்ளி சனி என இருநாட்கள் மட்டுமே நிகழும். கட்டணமும் அதற்கேற்பவே அமையும்.18 மாலையுடன் நிகழ்வு நிறைவடையும்.)
நாட்கள் அக்டோபர் 17 மற்றும் 18 (வெள்ளி, சனி)
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
விபாஸனா இரண்டாம் நிலை பயிற்சிவி.அமலன் ஸ்டேன்லி தமிழ் விக்கிஅமலன் ஸ்டேன்லி அவர்களின் விபாசனா நிகழ்வுகள் முழுமையறிவு அமைப்பினூடாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. பலர் முதல் நிலை பயிற்சியில் கலந்துகொண்டுள்ளனர்.
இரண்டாம் நிலைப் பயிற்சியை நடத்த அமலன் ஸ்டேன்லி எண்ணுகிறார். முதல்நிலைப் பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் எவரும் இதில் கலந்துகொள்ளலாம். முதல்நிலைப் பயிற்சி அடிப்படைகளால் ஆனது. இது அகநோக்கிய அடுத்தகட்ட பயணம்.
விபாசனா பயிற்சி உள்ளத்தை ஒருமையாக்கவும், தேவையற்ற உளச்சுமைகளை உதறிவிட்டு உள அழுத்தமில்லா நிலையை அடையவும், அதன் வழியாகச் செயலில் தீவிரமாக ஈடுபடவும் மிக அவசியமானதாக உலகம் முழுக்க பயிற்றுவிக்கப்படுகிறது. அமலன் ஸ்டேன்லி வியட்நாம், தாய்லாந்து, ஜப்பான், திபெத் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த உலக அளவில் புகழ்பெற்ற பல விபாசனா ஆசிரியர்களிடம் முறையான, நீண்டகாலப் பயிற்சியை பெற்றவர். (பார்க்க வி.அமலன் ஸ்டேன்லி, தமிழ்விக்கி)
விபாசனா தியானமுறை பௌத்த பிக்குகளால் பொமு 2 ஆம் நூற்றாண்டில், அதாவது நாம் கீழடி நாகரீகம் இருந்ததாகச் சொல்லும் காலகட்டத்தில் உருவானது. தொடர்ச்சியாக வெவ்வேறு ஞானியரால் அது விரிவாக்கம் செய்யப்பட்டது. நம் உள்ளத்தை ஒருமைப்படுத்துவதற்கான உச்சகட்ட பயிற்சியாக இது கருதப்படுகிறது
பலர் பயிற்சி இல்லாமல் நேரடியாக பத்து நாட்கள், பதினைந்து நாட்கள் விபாசனா பயிற்சிக்குச் சென்று ஓரிரு நாட்கள் தாளமுடியாமல் ஓடிவருவதைக் காண்கிறோம். எங்கள் பயிற்சி என்பது மிகநுணுக்கமாக படிப்படியாக உள்ளத்தை பயிற்றுவிப்பது. இது மரபார்ந்ததும் அறிவியல்பூர்வமானதுமாகும்.
நாள் அக்டோபர் 24 ,25 மற்றும் 26 (வெள்ளி சனி ஞாயிறு)
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
வரவிருக்கும் நிகழ்வுகள்நவீனத் தியானம் உளக்குவிப்புப் பயிற்சி
தில்லை செந்தில்பிரபு தமிழ்விக்கி
தில்லை செந்தில்பிரபு நவீன தியானம்- உளக்குவிப்புப் பயிற்சிகளை 30 ஆண்டுகளாக அளித்து வருபவர். கோவையில் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை என்னும் அமைப்பை நிறுவி கல்விப்பணிகளையும் தியானப்பயிற்சிகளை அளிப்பதையும் சேவையாகச் செய்து வருகிறார். புகழ்பெற்ற ஏற்றுமதித் தொழில் ஆலோசகர், தொழில்முனைவோர் ஆக பணிபுரிகிறார்.
தில்லை செந்தில்பிரபுவின் தியான- உளக்குவிப்புப் பயிற்சிகள் எவருக்கானவை? எவருக்கு பயிற்சியில், தொழிலில் உள்ளம் குவியவில்லை? எவருக்கு எப்போதும் அகம் பரபரத்துக்கொண்டே இருக்கிறது? எவருக்கு ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு உள்ளம் தாவிக்கொண்டிருக்கிறது? எவருக்கு மிகச்சிறு காரணங்களுக்காககூட எரிச்சலும் கோபமும் உருவாகிறது? எவருக்கு எப்போதும் ஓர் பதற்றநிலை, எரிச்சல் நிலை இருந்துகொண்டிருக்கிறது?
மிக எளிதான சோதனை இது. சற்றுநேரம் தனியாக அமர்ந்தால் உங்களுக்குள் எழுவது இனிமையான, நிம்மதியான எண்ணங்களா அல்லது எரிச்சலும் கோபமும் ஊட்டும் எதிர்மறை எண்ணங்களா? எதிர்மறை எண்ணங்கள் என்றால் உங்கள் மனம் நிலையழிந்துள்ளது. ஒருமையற்று உள்ளது. இது இன்றைய நவீன வாழ்க்கை நமக்கு அளிக்கும் மிகப்பெரிய நோய். இதிலிருந்து பெரும்பாலானவர்கள் தப்ப முடியாது.
இந்த உளநிலைக்கு பல காரணங்கள். அன்றாடவாழ்க்கையே கடுமையான போட்டியாக ஆகியிருப்பது. மிகக்கடுமையான மன உழைப்பு இல்லாமல் வாழமுடியாத நிலை. (கடுமையான உடல் உழைப்பு உள்ளத்துக்கும்கூட நல்லது). அனைத்தையும் விட இன்று தொழில், குடும்பம் என எல்லா தளங்களிலும் அமைப்புகள் வலுவடைந்துள்ளன. நாம் வெவ்வேறு அமைப்புகள் சார்ந்து மட்டுமே வாழமுடிகிறது. அந்த அமைப்பின் அதிகாரக்கட்டுமானத்தில் ஒரு பகுதியாக நாம் அமைகிறோம். ஆகவே நம்மை எவரோ மேலிருந்து சாட்டையால் அடிக்கிறார்கள். நாம் கீழிருப்பவர்களை அடிக்கிறோம். இதுவே மனச்சோர்வை, மனச்சிதறலை உருவாக்குகிறது.
இந்தியத் தியானமுறைகளை மேலைநாட்டு உளவியல் கொள்கைகளுடன் இணைத்து மகரிஷி மகேஷ் யோகி 1970களில் நவீனத் தியானமுறையை உருவாக்கினார். அது 1950 களில் உலகப்போரின் அழிவுக்குப்பின் உருவான மனச்சோர்வுக் காலகட்டத்தில் பிறந்தவர்களின் இளையதலைமுறை உருவான காலகட்டம். வியட்நாம் போர், பல்வேறு புரட்சிகளின் தோல்வி ஆகியவற்றால் அந்த உளச்சோர்வு பெருகியது. அதை பீட் தலைமுறை என்பார்கள். ஹிப்பி இயக்கம் உருவானது. அவர்களுக்காக மகேஷ் யோகி உருவாகிய தியானமுறை அவர்களில் பெரும்பாலானவர்களை மீட்டது. அதன் வழியாக அது உலகம் முழுக்க பரவியது.
அந்த வழியில், மேலும் மேலும் நவீன உளவியல் மற்றும் நிர்வாகவியல் கொள்கைகளை இணைத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட தியான முறைகள் இன்று உலகமெங்கும் உள்ளன. அந்த மரபில் வந்த தியானப்பயிற்றுநர் தில்லை செந்தில் பிரபு . எந்த தியான முறையிலும் ஆசிரியருடனான நேரடி உறவு, அவர் உங்களை அறிந்திருப்பது முக்கியமானது. ஆகவே இந்த நேரடிப்பயிற்சி அளிக்கப்படுகிறது
நாள் நவம்பர் 7, 8 மற்றும் 9
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
ஆயுர்வேத- வாழ்க்கைமுறை அறிமுகம்ஒருவரிடம் அவர் ஆரோக்கியமாக இருக்கிறாரா என்று கேட்டால் ஆம் என்று சொல்லலாம். ஆனால் மூன்று கேள்விகளை மேற்கொண்டு அவரிடம் கேட்கலாம்.
இயல்பான நிறைவான தூக்கம் உள்ளதா, தூங்கி எழுந்தால் புத்துணர்வாக உணர்கிறீர்களா?இயல்பான செரிமானம் உள்ளதா? அதன்விளைவாக இயல்பான கழிவகற்றல் நிகழ்கிறதா?உடலில் எங்கேனும் வலி அல்லது அசௌகரியத்தை உணர்கிறீர்களா? குறிப்பாகக் காலையில்?இவற்றுக்கான பதில்களில் இருந்தே ஒருவர் தன் உடல்நிலை சீராக இருப்பதை உறுதிசெய்துகொள்ள முடியும்.
ஆனால் கறாராகப்பார்த்தால் பெரும்பாலானவர்களுக்கு இம்மூன்றிலும் சிக்கல் இருக்கும். சென்றகாலங்களில் நாற்பது கடந்தவர்களுக்கான சிக்கல் இது. இன்று இளமையிலேயே உருவாகி வந்துள்ளது. காரணம், இன்றைய வாழ்க்கைமுறை. இதிலுள்ள அவசரம், போட்டி ஆகியவை.
ஆயுர்வேதம் எல்லா நோய்களுக்கும் தீர்வு அளிக்கும் முறை அல்ல. ஆனால் வாழ்க்கைமுறைச்சிக்கல்களுக்கு அது நிரந்தரமான தீர்வுகளை அளிக்கும். வாழ்க்கைமுறைச் சீரமைப்பு, இயற்கையான மூலிகை மருந்துகள் வழியாக. அதற்கு முதலில் ஒருவர் தன் உடல் பற்றி ஆயுர்வேதம் சார்ந்த பார்வையை அறிந்திருக்கவேண்டும். தன்னைத்தானே மதிப்பிட அறிந்திருக்கவேண்டும். தன்னை சீரமைக்க அது அவசியம். அதன்பொருட்டே இந்தப் பயிற்சிகள்.
சுனீல் கிருஷ்ணன் முறையான ஆயுர்வேத கல்விகொண்டவர், புகழ்பெற்ற நவீன எழுத்தாளர், காந்தியவாதி.
அவருடைய வகுப்புகள் நவம்பர் 14 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நிகழ்கின்றன.
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
ஆச்சாரமும் பக்தியும் தத்துவத்திற்கு எதிரானவையா?
ஆசாரமானவர்கள் கேட்கும் ஒரு கேள்வி உண்டு. தத்துவத்தைக் கற்றுக்கொண்டால் தங்கள் ஆசாரத்தை இழந்துவிடுவோமா? பக்தர்களும் அதை கேட்பதுண்டு. அதைச்சார்ந்த ஒரு தெளிவு. முடிவெடுக்கவேண்டியவர்கள் இதை சிந்திக்கலாம்.
அறிவியக்கத்தின் தொற்றுநோய்க்கிருமிகள்.
அன்புள்ள ஜெயமோகன்,
நீங்கள் பாசிச எதிர்ப்பு, அதை ஒட்டி எழுத்தாளர்களின் பங்கு ஆகியவற்றை பற்றி எழுதிய கட்டுரை பார்த்தேன் .உங்கள் கூற்றிலேயே கூட ஓர் அறிவு ஜீவி என்பவன் ஃபாசிச அரசியலுக்கு எதிரான ஒரு செயல்பாட்டுடன் களத்தில் நின்றாக வேண்டும் என்றும் அதுவே நேர்மை என்றும் ஒரு தொனி உள்ளது. நான் தொடர்ச்சியாக தமிழில் எழுத முயன்று கொண்டிருப்பவன். இன்னமும் என்னுடைய படைப்புகள் போதுமான அளவுக்கு வெளிவரவில்லை. நான் நிறைவடையுமளவுக்கு ஏதும் எழுதவுமில்லை. ஆனால் என் ஆர்வம் என்பது சில குறிப்பிட்ட உளவியல் சிக்கல்களில் மட்டும்தான் உள்ளது. அவை நானே அடைந்தவை . இந்த நூற்றாண்டின் சிக்கல்கள் அவை.
நான் அந்த உளவியல் சிக்கலின் சமூகப் பின்னணி ,அரசியல் பின்னணி ஆகியவற்றைப் பற்றி மட்டும் தான் நான் கவலை கொள்கிறேன். அதையே யோசிக்கிறேன். அதைவிட அந்த உளவியல் சிக்கல்களை சரியான மொழியில் கொண்டு வந்து சேர்ப்பதற்கான சவாலில்தான் என் மனம் உள்ளது. இதுவரைக்கும் நான் அதில் வெல்லவில்லை .ஆனால் ஒவ்வொரு நாளும் அதற்காக முயன்று கொண்டே இருக்கிறேன். என்னுடைய தவம் என்பது அதுதான். நான் இதை விட்டு விலகும் ஒவ்வொரு கணமும் என்னுடைய இலக்கியத்தை நானே அழிக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும் . நான் ஃபாசிச எதிர்ப்புக்கு செயல்படவேண்டும் என்று சொல்வது ஒருவகையில் என்னுடைய தனித்தன்மை கொண்ட தேடலையும், என் கலை சார்ந்த தவிப்பையும் உதறி விடவேண்டும் என்றுதான் பொருள்படுகிறது அல்லவா?
நான் அரசியல்விவாதங்களுக்குள் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை.
(எம்)
*
அன்புள்ள எம்,
நீங்கள் கேட்பது ஒரு முக்கியமான சிக்கல்தான். நான் என்னுடைய அக்கட்டுரையில் அல்லது வேறு கட்டுரைகளில் ஒருவர் உறுதியாக ஏதேனும் அரசியல் நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்றோ, ஏதேனும் அரசியல் தரப்பை சார்ந்து செயல்பட வேண்டும் என்றோ, அரசியல் களத்தில் ஏதேனும் வெளிப்படுத்தியாக வேண்டும் என்றோ, அல்லது குறைந்தபட்சம் ஒருவருக்கு அரசியல் ஆர்வம் இருந்தாக வேண்டும் என்றோ ஒருபோதும் சொல்வதில்லை. முற்றிலும் அரசியல் இல்லாமல் இருப்பதும், அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லா நிலையிலும் செயல்படுவதும் அறிஞர்களுக்கும் கலைஞர்களுக்கும் இயல்வதே என்றும், அது மிக அவசியமானது என்றும் நான் நினைக்கிறேன். அரசியலின்மை என்பது அறிவியக்கத்தில் மிகமிக முக்கியமான ஒரு நிலைபாடுதான். அப்படி அரசியலின்மை எனும் நிலைபாடு எடுத்த பல மாபெரும் கலைஞர்கள், சிந்தனையாளர்கள், ஆய்வாளர்கள் உண்டு. பெரும்போர்கள், அடக்குமுறைகளின்போதுகூட அத்தகைய நிலைபாடு எடுத்த பலநூறு மேதைகள் வரலாற்றில் உண்டு.
அறிவியக்கம் செயல்படுவது எப்படி, அறிஞர்களின் உள்ளம் இயங்கும் வழி என்ன, கலைஞர்களின் அகம் ஓடும் முறை என்ன என்பது எனக்கு நன்றாகவே தெரியும். எனக்கு அரசியல் ஆர்வம் இருக்கலாம், ஆனால் எல்லாருக்கும் அப்படி இருக்க வேண்டிய தேவையில்லை என்பதையே தொடர்ந்து சொல்லி வருகிறேன். சில படைப்பிலக்கியவாதிகள் வாழ்வின் ஒரே ஒரு புள்ளியை மட்டுமே மிக ஆழமாக தொடர்ந்து, வாழ்நாள் முழுக்க ஆராய்ந்து ஊடுருவிச் செல்பவர்களாக இருப்பார்கள். அதற்கேற்ப தங்கள் அகமொழியையும் நடையையும் உருவாக்கும் தவத்திற்கு அப்பால் அவர்களுக்கு எந்த ஆர்வமும் இருப்பதில்லை. அந்த தவத்திற்கான உரிமையை அவர்களுக்கு வழங்கும் சமூகம் மட்டும்தான் மெய்யான கலைப்படைப்புகளை உருவாக்க முடியும்.
அவ்வாறு ஏதேனும் ஒரு உளவியல், தத்துவச் சிக்கலில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கும் ஓர் எழுத்தாளிடம் சென்று சமகால அரசியலைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்று கேட்பதை அடிப்படை அறிவுள்ள வாசகர் எவரும் செய்ய மாட்டார்கள். நகுலன் வாழ்ந்த உலகம் வேறு. தி.ஜானகிராமன் உழன்ற உணர்வுநிலைகள் வேறு. அவர்களிடம் சென்று நெருக்கடி நிலைபற்றி உங்கள் கருத்து என்ன, நீங்கள் ஏன் போராடவில்லை என்று எந்த நுண்ணுணர்வுள்ள வாசகனும் கேட்டதில்லை. அவர்களின் அறவியல் என்ன என்பதை எந்த வாசகனும் அறிந்திருப்பான். ஆனால் இன்றைய அரசியல் அல்லக்கை கூசாமல் அதை மட்டுமே கேட்பான். இதுதான் இந்தக் காலகட்டத்தின் பேரவலம்.
இதேபோல அறிஞர்களிலும் ஒருவகை தனிமைப்பாடு உண்டு. ஒரு குறிப்பிட்ட அறிவுத்தளத்தில் மட்டுமே தன் முழுக்கவனத்தையும் குவித்து தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் அறிஞர்கள்தான் ஏதேனும் ஒரு களத்தில் மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றுகிறார்கள். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக ஒரு குறிப்பிட்ட வகையான தேடலை மேற்கொள்பவர் மட்டும்தான் வரலாற்றாய்வில் ஏதேனும் சாதிக்க முடியும். அறிவியலில் வெல்ல முடியும். அதன் விளைவு தெரிய பல ஆண்டுக்காலம் ஆகலாம், ஒருவேளை அவர் வாழ்நாளில் அது தெரியப்படாமலும் போகலாம். அவருக்கு பெயரோ புகழோகூட கிடைக்காமலாகலாம். அந்த அர்ப்பணிப்புதான் அறிவுச்செயல்பாட்டின் அடிப்படை.
ஒரு கல்வெட்டைத் தேடி பத்து ஆண்டுகள் வாழ்ந்தவர்கள் உண்டு. ஒரு குறிப்பிட்ட செப்பேட்டைப் புரிந்து கொள்வதற்காக ஐந்து ஆண்டுகள் ஒவ்வொரு நாளையும் செலவிட்டவர்கள் உண்டு. ஒரு குறிப்பிட்ட பாக்டீரியாவை அவதானிப்பதிலேயே வாழ்க்கையை முடித்தவர்கள் உண்டு. அவர்களால் தான் அறிவியக்கம் வாழ்கிறது. ஒரு நூலுக்கு உரை எழுதுவதற்காக ஏழாண்டுகளில் ஒவ்வொரு நாளிலும் எட்டு மணி நேரத்தை செலவிடுபவர்கள் உண்டு. அவர்களிடம் சென்று அவர் உடனடியாக அந்தந்த காலகட்ட அரசியலுக்கு கருத்துச் சொல்ல விட்டால் அவர்கள் ஃபாசிச ஆதரவாளர்கள், அரசாங்க அதிகாரத்திற்கு ஆதரவாளர்கள் என்று சொல்பவர் அறிவியக்கத்தை அழிக்கும் நஞ்சு மட்டுமே.
பலசமயம் அறிஞர்கள் சமகால அரசியல் – அதிகாரத் தரப்புடன் சமரசம் செய்துகொண்டு தங்களது ஆய்வை முன்னெடுத்திருப்பதைப் பார்க்கலாம். இன்று தமிழ் விக்கி பதிவுகள் போடும்போது ஒன்று தெரிகிறது, சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் தமிழறிஞர்களில் பெரும்பங்களிப்பை ஆற்றிய பெரும்பாலானவர்கள் அன்றிருந்த பிரிட்டிஷ் அரசுடன் சமரசம் செய்து கொண்டவர்கள். அன்று தேசிய விடுதலை இயக்கம் கொந்தளித்துக் கொண்டிருந்தபோது கூட அவர்கள் அதில் பங்கு எடுத்துக்கொள்ளவே இல்லை. மாறாக அவர்கள் தங்களுடைய தமிழ் ஆய்வு பண்பாட்டாய்வுகள் மட்டுமே ஆழ்ந்திருந்தார்கள். உதாரணங்கள் – ஆ.சிங்காரவேலு முதலியார், உ.வே.சாமிநாதையர், சி.வை.தாமோதரம் பிள்ளை, தமிழ்வேள் உமாமகேஸ்வரனார், பாண்டித்துரைத்தேவர் போல பலநூறுபேர். அவர்கள் எல்லாம் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் என்று முத்திரையடித்து இழிவுசெய்வது எவ்வளவு பெரிய மடமை!
அதேபோன்றுதான் பின்னர் சுயமரியாதை இயக்கமும் திராவிட இயக்கமும் இங்கே பெரிய அளவில் நிகழ்ந்து கொண்டிருந்தபோது கூட இங்கிருந்த கணிசமான தமிழ் அறிஞர்கள் அவற்றில் எந்த வகையிலும் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் தங்களுடைய ஆய்வுகளில் மட்டுமே ஈடுபட்டிருந்தார்கள். இத்தனைக்கும் அவர்களில் பலருக்கு அந்த தரப்பில் உடன்பாடு இருந்தது. அந்தந்த காலகட்டத்தில் அரசியலுடன் இணைந்து சத்தம்போட்ட இரண்டாம்நிலை அறிஞர்கள் பதவிகளை அடைந்தனர். செத்தபின்னரும் அரசால் முதன்மைப்படுத்தப்பட்டனர். பல பெரும் சாதனையாளர்கள் அவர்களின் அரசியலின்மையாலேயே மறக்கப்பட்டனர். ஆனால் இன்று திரும்பிப் பார்க்கும்போது அவர்களுடைய அந்த சாதனைகள்தான் பண்பாட்டுத்தளத்தில் ஓங்கி நின்றிருக்கின்றன. அன்று அவர்கள் எளிய சுயலாபங்களுக்காகவோ, சூழலின் அழுத்தத்திற்காகவோ தங்கள் ஆய்வுகளை இரண்டாம்பட்சமாகக் கருதி அரசியலுக்கும் சென்றிருந்தார்கள் என்றால் அவர்களின் பங்களிப்பு என்று எதுவும் எஞ்சியிருக்காது.
பொதுவாக நுண்கலைக் கலைஞர்கள் தங்கள் கலைகளுக்குள்ளேயே மூழ்கியிருப்பதைக் காணலாம். அக்கலைகள் கடும் பயிற்சியை நிபந்தனையாக்குபவை. பிறிதில்லாத தவத்தை கோருபவை. அவர்களிடம் உன் அரசியலென்ன என்று கேட்கும் சமூகம் அக்கலைகளை அழிக்கிறது. முன்பு அதைச் செய்தவர்கள் ஃபாசிஸ்டுகள், நாஸிகள், ஸ்டாலினிஸ்டுகள். இன்று அதை ஃபாசிச எதிர்ப்பின் பெயரால் இந்த அரசியல் அல்லக்கைகள் செய்கின்றன.
இவர்களுக்கு எந்த ஒரு அறிவியக்கத்தையோ கலையையோ புரிந்து கொள்ளும் அடிப்படை அறிவு அல்லது நுண்ணுணர்வு கிடையாது. இவர்கள் தங்களுடைய கட்சி தங்களுக்கு அளிக்கும் ஒரு செயல்திட்டத்திற்கு அப்பால் எதையும் யோசிப்பவர்கள் அல்லர். அந்த செயல்திட்டம் மட்டுமே உண்மையானது என்றும், தேவையானது என்றும், அதைச் சார்ந்து மட்டுமே எவரும் செயல்பட வேண்டும் என்றும், அதை அண்டியிராமல் சுதந்திரமாகச் செயல்படும் அனைவருமே தங்களுடைய முழுமூச்சான எதிரிகள் என்றும், அவர்களை அவதூறு வசைப்பாடி அழிப்பது தங்களுடைய கடமை என்றும் நம்பும் கூட்டம் இது. சென்ற நூறாண்டுகளில் எவரெவெல்லாம் இவர்களால் இப்படி இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று பார்த்தால் ரத்தக்கண்ணீர் வரும். இன்றும் அதுதான் தொடர்கிறது.
இத்தனை தீவிரமாக ஓர் அரசியல் தரப்பின் குரலாக ஒலிப்பவர்கள் உண்மையில் அந்தக் கொள்கைக்கு விசுவாசமானவர்களா என்றால் அதுவும் இல்லை. ஏனெனில் அந்த அரசியல் தரப்பு தன் எதிரித் தரப்புடன் ஒரு சமரசத்தை செய்து கொண்டு, இணைந்து அரசியலை முன்னெடுக்கும் என்றால் இவர்கள் எந்தக் கூச்சமும் இல்லாமல் உடனடியாக தாங்களும் அந்த நிலையை எடுத்துவிடுவார்கள். அப்படி என்றால் அதுவரைக்கும் அவர்கள் செய்த மிரட்டல்கள், அவதூறுகள் ஆகியவற்றுக்கெல்லாம் என்ன பொருள்? அவை உண்மையிலேயே கலையிலும் அறிவியக்கத்திலும் ஈடுபட்டிருக்கும் அறிஞர்களுக்கும் கலைஞர்களுக்கு அளித்த உள நெருக்கடி, சோர்வு, செயல்களுக்கான தடை ஆகியவற்றிற்கு அப்பால் எந்த விளைவும் இல்லை.
இந்த அரசியல் சில்லறைகள் ஏதோ தங்கள் பிழைப்பை பார்க்கட்டும் என நினைக்கலாம். ஆனால் இவர்கள் தங்கள் அறிவுத்தவத்தை மேற்கொள்ளும் மெய்யான அறிஞர்களை, ஆய்வாளர்களை, கலைஞர்களை தங்கள் எதிர்த்திசையில் நிறுத்தி வசைபாடுகிறார்கள், இழிவு படுத்துகிறார்கள். அவர்களின் பொதுவெளி பிம்பத்தை சிதைத்து, அவர்கள் பொதுச்சமூகத்தினருடன் உரையாட முடியாதபடி முத்திரை குத்தி தனிமைப்படுத்துகிறார்கள். அதன் வழி அறிவியக்கம் பரவாதபடி செய்கிறார்கள். தங்களுடைய எளிய பிரச்சாரங்களுக்கு அப்பால் எந்த கருத்தும், கலையும் மக்களிடையே சென்று சேர இவர்கள் விடுவதில்லை. இவர்களின் பிரச்சார வல்லமை மிகப்பெரியது, எளிய ஒற்றைப்படைக் கூச்சல் ஆதலால் சாமானியருக்கும் எளிதில் சென்று சேர்வது. இவர்களின் இடைவிடாத தொடர்பிரச்சாரத்தை அறிஞர்களும் கலைஞர்களும் எதிர்கொள்ளவே முடியாது. இது இவர்கள் ஆற்றும் மிகப்பெரிய அழிவுப் பணி. இந்த தொற்றுநோய்க் கிருமிகளை அடிப்படை அறிவுள்ள இலக்கிய வாசகர், அறிவியக்கத்தில் ஆர்வம் கொண்டவர் முதன்மையாக அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
ஜெ
விஷ்ணுபுரம் விருந்தினர் – 9 – யாழன் ஆதி
விஷ்ணுபுரம் விருது 2025 ஆம் ஆண்டுக்கு ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்படுகிறது. டிசம்பர் 20, 21 ஆம் தேதிகளில் நிகழும் இந்த விழாவில் வழக்கம்போல படைப்பாளர்கள், இலக்கியச் செயல்பாட்டாளர்கள் வாசகர்களை சந்திக்கும் நிகழ்வு அமைகிறது. இந்த ஆண்டு யாழன் ஆதி கலந்துகொள்கிறார்
யாழன் ஆதி /* inline tdc_css att */.tdi_2{padding-top:12px !important;padding-bottom:8px !important;border-color:#eaeaea !important;border-style:solid !important;border-width: 1px 0px 1px 0px !important;}/* custom css */.tdi_2 .td_block_inner{width: 100%;
margin-left: -20px;
margin-right: -20px;
}.tdi_2:after{
content: '';
display: table;
clear: both;
}.tdi_2 .td-image-wrap{
padding-bottom: 100%;
}.tdi_2 .entry-thumb{
background-position: center 50%;
}.tdi_2 .td-image-container{
flex: 0 0 30%;
width: 30%;
display: block; order: 0;
}.ie10 .tdi_2 .td-image-container,
.ie11 .tdi_2 .td-image-container{
flex: 0 0 auto;
}.tdi_2 .td-module-container{
flex-direction: row;
border-color: #eaeaea !important;
}.ie10 .tdi_2 .td-module-meta-info,
.ie11 .tdi_2 .td-module-meta-info{
flex: 1;
}.tdi_2 .td-module-meta-info{
padding: 1% 5%;
border-color: #eaeaea;
}.tdi_2 .td_module_wrap{
padding-left: 20px;
padding-right: 20px;
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
}.tdi_2 .td-module-container:before{
bottom: -18px;
border-color: #eaeaea;
}.tdi_2 .entry-thumb,
.tdi_2 .entry-thumb:before,
.tdi_2 .entry-thumb:after{
border-radius: 500px;
}.tdi_2 .td-post-vid-time{
display: block;
}.tdi_2 .td-post-category:not(.td-post-extra-category){
display: none;
}.tdi_2 .td-author-photo .avatar{
width: 20px;
height: 20px;
margin-right: 6px;
border-radius: 50%;
}.tdi_2 .td-excerpt{
display: none;
column-count: 1;
column-gap: 48px;
font-size:= !important;
}.tdi_2 .td-audio-player{
opacity: 1;
visibility: visible;
height: auto;
font-size: 13px;
}.tdi_2 .td-read-more{
display: none;
}.tdi_2 .td-author-date{
display: none;
}.tdi_2 .td-post-author-name{
display: none;
}.tdi_2 .td-post-date,
.tdi_2 .td-post-author-name span{
display: none;
}.tdi_2 .entry-review-stars{
display: none;
}.tdi_2 .td-icon-star,
.tdi_2 .td-icon-star-empty,
.tdi_2 .td-icon-star-half{
font-size: 15px;
}.tdi_2 .td-module-comments{
display: none;
}.tdi_2 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0;
padding-bottom: 0;
}.tdi_2 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none;
}.tdi_2 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_2 .entry-title{
font-size:21px !important;line-height:1.2 !important;
}html:not([class*='ie']) .tdi_2 .td-module-container:hover .entry-thumb:before{
opacity: 0;
}@media (min-width: 768px) {
.tdi_2 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}/* landscape */@media (min-width: 1019px) and (max-width: 1140px){.tdi_2 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_2 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_2 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_2 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_2 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_2 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_2 .entry-title{
font-size:20px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_2 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* portrait */@media (min-width: 768px) and (max-width: 1018px){.tdi_2 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_2 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_2 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_2 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_2 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_2 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_2 .entry-title{
font-size:17px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_2 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* phone */@media (max-width: 767px){.tdi_2 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_2 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_2 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_2 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_2 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_2 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}@media (min-width: 768px) {
.tdi_2 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}var block_tdi_2 = new tdBlock();block_tdi_2.id = "tdi_2";block_tdi_2.atts = '{"modules_on_row":"","limit":"10","hide_audio":"yes","show_btn":"none","show_excerpt":"none","show_review":"none","show_com":"none","show_date":"none","show_author":"none","image_floated":"float_left","sort":"oldest_posts","category_id":"11301","category_ids":"12659","image_width":"30","meta_padding":"1% 5%","modules_category":"","modules_category_margin":"","custom_title":"\u0bb5\u0bbf\u0bb7\u0bcd\u0ba3\u0bc1\u0baa\u0bc1\u0bb0\u0bae\u0bcd 2025 \u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba8\u0bcd\u0ba4\u0bbf\u0ba9\u0bb0\u0bcd\u0b95\u0bb3\u0bcd","custom_url":"\/tag\/2025-\u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba8\u0bcd\u0ba4\u0bbf\u0ba9\u0bb0\u0bcd\/","post_ids":"-222775","tdc_css":"eyJhbGwiOnsiYm9yZGVyLXRvcC13aWR0aCI6IjEiLCJib3JkZXItYm90dG9tLXdpZHRoIjoiMSIsInBhZGRpbmctdG9wIjoiMTIiLCJwYWRkaW5nLWJvdHRvbSI6IjgiLCJib3JkZXItY29sb3IiOiIjZWFlYWVhIiwiZGlzcGxheSI6IiJ9fQ==","show_cat":"none","excerpt_col":"","m16_el":"20","ajax_pagination":"load_more","f_title_font_size":"eyJhbGwiOiIyMSIsImxhbmRzY2FwZSI6IjIwIiwicG9ydHJhaXQiOiIxNyJ9","f_title_font_line_height":"1.2","f_ex_font_size":"=","f_ex_font_line_height":"","image_height":"100","hide_image":"","modules_gap":"","meta_info_horiz":"","container_width":"100","image_radius":"500","block_type":"td_flex_block_1","separator":"","block_template_id":"","title_tag":"","mc1_tl":"","mc1_title_tag":"","mc1_el":"","tag_slug":"","autors_id":"","installed_post_types":"","offset":"","show_modified_date":"","time_ago":"","time_ago_add_txt":"ago","time_ago_txt_pos":"","el_class":"","td_ajax_filter_type":"","td_ajax_filter_ids":"","td_filter_default_txt":"All","td_ajax_preloading":"","m_padding":"","all_modules_space":"36","modules_border_size":"","modules_border_style":"","modules_border_color":"#eaeaea","modules_border_radius":"","modules_divider":"","modules_divider_color":"#eaeaea","h_effect":"","image_size":"","image_alignment":"50","video_icon":"","video_popup":"yes","video_rec":"","spot_header":"","video_rec_title":"","video_rec_color":"","video_rec_disable":"","autoplay_vid":"yes","show_vid_t":"block","vid_t_margin":"","vid_t_padding":"","video_title_color":"","video_title_color_h":"","video_bg":"","video_overlay":"","vid_t_color":"","vid_t_bg_color":"","f_vid_title_font_header":"","f_vid_title_font_title":"Video pop-up article title","f_vid_title_font_settings":"","f_vid_title_font_family":"","f_vid_title_font_size":"","f_vid_title_font_line_height":"","f_vid_title_font_style":"","f_vid_title_font_weight":"","f_vid_title_font_transform":"","f_vid_title_font_spacing":"","f_vid_title_":"","f_vid_time_font_title":"Video duration text","f_vid_time_font_settings":"","f_vid_time_font_family":"","f_vid_time_font_size":"","f_vid_time_font_line_height":"","f_vid_time_font_style":"","f_vid_time_font_weight":"","f_vid_time_font_transform":"","f_vid_time_font_spacing":"","f_vid_time_":"","meta_info_align":"","meta_width":"","meta_margin":"","meta_space":"","art_title":"","art_btn":"","meta_info_border_size":"","meta_info_border_style":"","meta_info_border_color":"#eaeaea","meta_info_border_radius":"","modules_category_padding":"","modules_cat_border":"","modules_category_radius":"0","modules_extra_cat":"","author_photo":"","author_photo_size":"","author_photo_space":"","author_photo_radius":"","review_space":"","review_size":"2.5","review_distance":"","art_excerpt":"","excerpt_gap":"","excerpt_middle":"","excerpt_inline":"","show_audio":"block","art_audio":"","art_audio_size":"1.5","btn_title":"","btn_margin":"","btn_padding":"","btn_border_width":"","btn_radius":"","pag_space":"","pag_padding":"","pag_border_width":"","pag_border_radius":"","prev_tdicon":"","next_tdicon":"","pag_icons_size":"","f_header_font_header":"","f_header_font_title":"Block header","f_header_font_settings":"","f_header_font_family":"","f_header_font_size":"","f_header_font_line_height":"","f_header_font_style":"","f_header_font_weight":"","f_header_font_transform":"","f_header_font_spacing":"","f_header_":"","f_ajax_font_title":"Ajax categories","f_ajax_font_settings":"","f_ajax_font_family":"","f_ajax_font_size":"","f_ajax_font_line_height":"","f_ajax_font_style":"","f_ajax_font_weight":"","f_ajax_font_transform":"","f_ajax_font_spacing":"","f_ajax_":"","f_more_font_title":"Load more button","f_more_font_settings":"","f_more_font_family":"","f_more_font_size":"","f_more_font_line_height":"","f_more_font_style":"","f_more_font_weight":"","f_more_font_transform":"","f_more_font_spacing":"","f_more_":"","f_title_font_header":"","f_title_font_title":"Article title","f_title_font_settings":"","f_title_font_family":"","f_title_font_style":"","f_title_font_weight":"","f_title_font_transform":"","f_title_font_spacing":"","f_title_":"","f_cat_font_title":"Article category tag","f_cat_font_settings":"","f_cat_font_family":"","f_cat_font_size":"","f_cat_font_line_height":"","f_cat_font_style":"","f_cat_font_weight":"","f_cat_font_transform":"","f_cat_font_spacing":"","f_cat_":"","f_meta_font_title":"Article meta info","f_meta_font_settings":"","f_meta_font_family":"","f_meta_font_size":"","f_meta_font_line_height":"","f_meta_font_style":"","f_meta_font_weight":"","f_meta_font_transform":"","f_meta_font_spacing":"","f_meta_":"","f_ex_font_title":"Article excerpt","f_ex_font_settings":"","f_ex_font_family":"","f_ex_font_style":"","f_ex_font_weight":"","f_ex_font_transform":"","f_ex_font_spacing":"","f_ex_":"","f_btn_font_title":"Article read more button","f_btn_font_settings":"","f_btn_font_family":"","f_btn_font_size":"","f_btn_font_line_height":"","f_btn_font_style":"","f_btn_font_weight":"","f_btn_font_transform":"","f_btn_font_spacing":"","f_btn_":"","mix_color":"","mix_type":"","fe_brightness":"1","fe_contrast":"1","fe_saturate":"1","mix_color_h":"","mix_type_h":"","fe_brightness_h":"1","fe_contrast_h":"1","fe_saturate_h":"1","m_bg":"","color_overlay":"","shadow_shadow_header":"","shadow_shadow_title":"Module Shadow","shadow_shadow_size":"","shadow_shadow_offset_horizontal":"","shadow_shadow_offset_vertical":"","shadow_shadow_spread":"","shadow_shadow_color":"","title_txt":"","title_txt_hover":"","all_underline_height":"","all_underline_color":"","cat_bg":"","cat_bg_hover":"","cat_txt":"","cat_txt_hover":"","cat_border":"","cat_border_hover":"","meta_bg":"","author_txt":"","author_txt_hover":"","date_txt":"","ex_txt":"","com_bg":"","com_txt":"","rev_txt":"","audio_btn_color":"","audio_time_color":"","audio_bar_color":"","audio_bar_curr_color":"","shadow_m_shadow_header":"","shadow_m_shadow_title":"Meta info shadow","shadow_m_shadow_size":"","shadow_m_shadow_offset_horizontal":"","shadow_m_shadow_offset_vertical":"","shadow_m_shadow_spread":"","shadow_m_shadow_color":"","btn_bg":"","btn_bg_hover":"","btn_txt":"","btn_txt_hover":"","btn_border":"","btn_border_hover":"","pag_text":"","pag_h_text":"","pag_bg":"","pag_h_bg":"","pag_border":"","pag_h_border":"","ajax_pagination_infinite_stop":"","css":"","td_column_number":1,"header_color":"","color_preset":"","border_top":"","class":"tdi_2","tdc_css_class":"tdi_2","tdc_css_class_style":"tdi_2_rand_style"}';block_tdi_2.td_column_number = "1";block_tdi_2.block_type = "td_flex_block_1";block_tdi_2.post_count = "8";block_tdi_2.found_posts = "8";block_tdi_2.header_color = "";block_tdi_2.ajax_pagination_infinite_stop = "";block_tdi_2.max_num_pages = "1";tdBlocksArray.push(block_tdi_2);விஷ்ணுபுரம் 2025 விருந்தினர்கள்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 1 – மு. குலசேகரன்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 2 – அரிசங்கர்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 3 – கே. நல்லதம்பி
விஷ்ணுபுரம் விருந்தினர் – 4 – ஜீவ கரிகாலன்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 5 – அழிசி ஶ்ரீனிவாசன்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 6 – குணா கந்தசாமி
விஷ்ணுபுரம் விருந்தினர் 7, அனுராதா ஆனந்த்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 8 – குறிஞ்சிவேலன்
October 7, 2025
அமெரிக்கா பயணம்
இன்று விடியற்காலை 4 மணி விமானத்தில் அமெரிக்காவுக்கு நானும் அருண்மொழியும் கிளம்பிச் செல்கிறோம். நேரடியாக சான் பிரான்ஸிஸ்கோ. அங்கிருந்து பல ஊர்கள் வழியாக வழக்கம்போல அமெரிக்காவைக் குறுக்காகக் கடந்து நியூயார்க்.
இது அருண்மொழியின் ஐந்தாவது அமெரிக்கப் பயணம். எனது ஏழாவது பயணம். அமெரிக்கா இப்போது கிட்டத்தட்ட இந்தியா அளவுக்கே தெரிந்ததாக, அணுக்கமானதாக ஆகிவிட்டது. அமெரிக்காவின் பல்வேறு உள் அடுக்குகளை அறிந்த ஒருவனாக இன்று என்னை உணர்கிறேன். ஏனெனில் சாதாரணமாக அமெரிக்காவில் பணியாற்றியபடி நெடுங்காலம் அங்கே வாழும் ஒருவர் செய்வதை விட மிக அதிகமாக அமெரிக்காவின் சிற்றூர்களில் கூட பயணம் செய்திருக்கிறேன். தொடர்ச்சியாக வெவ்வேறு களங்களில் வாழும் அமெரிக்க இந்தியர்களை மட்டுமல்ல அமெரிக்கர்களையும் சந்தித்து உரையாடியிருக்கிறேன்.
இம்முறை என் அறம் கதைகளின் மொழியாக்கமான Stories of the True அமெரிக்காவின் FSG- Macmillan பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. அதன் புத்தக விளம்பர நிகழ்வுகள் கல்லூரிகளிலும் நூலகங்களிலும் நடைபெறுகின்றன. இரண்டு நாவல் பயிலரங்குகள் மற்றும் வழக்கமான பூன் முகாம்.
‘இம்முறை பெரும்பாலும் கூட்டங்களாகவே இருக்கிறது’ என்று சலித்துக் கொள்கிறாளா இல்லையா என்று தெரியாத ஒரு பாவனையில் அருண்மொழி சொன்னாள். ஆனால் ஒரு முறையும் அமெரிக்கா கிளம்பும்போது ஒரு மாதத்திற்கு முன்னரே பரவசமடைவதும் , அங்கிருக்கும் ஒவ்வொரு தோழியையும் எண்ணி ஏங்குவதும், தொலைபேசியில் கொஞ்சிக்கொள்வதும், கடைசிநிமிடம் வரை தையல்கார பெண்மணியிடம் மிகையுணர்ச்சிப் பூசல்களில் ஈடுபடுவதும் அவள்தான்.
நான் தொடர்ந்து வெவ்வேறு உளநிலைகளில்அலைந்து கொண்டிருந்தேன். குறிப்பாக ரமேஷின் இறப்பு. அதிலிருந்து மீள்வதற்காக சென்ற ஹெக்கோடு பயணம். இரு எல்லைகள் .அவை என் நாட்களை முழுக்கவே எடுத்துக் கொண்டு விட்டன .இதற்கு இடையே முடித்து கொடுக்கப்பட வேண்டிய திரைப்படப் பணிகள் நான்கு. நண்பர்கள் எப்போது கிளம்புகிறீர்கள் என்று கேட்டபோது ஆளுக்கொரு தேதியைச சொல்லிக்கொண்டிருந்தேன். ஒரு வழியாக எல்லாவற்றையும் முடித்து நேற்று பின் மாலையில்தான் பயணத்திற்கான மனநிலையை அடைந்தேன்.
பயணம் இனிது. அமெரிக்கா எந்நிலையிலும் இனிது. அதன் மகத்தான நிலங்கள். வண்ணம் மாறி ஒளி சுடர நின்றிருக்கும் மரங்கள்.
“சொல், உன் அரசியல் என்ன?”
திரு ஜெமோ,
அரசியல் பங்கேற்பு பற்றி உங்களுடைய கருத்துக்களை பார்த்தேன் நீங்கள் விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறீர்கள். அவர்களின் கண்டனக் கூட்டங்களில் ஒரு குரலாக ஒலித்து இருக்கிறீர்கள். உங்களை திருமாவளருடன் இருக்கும் பல புகைப்படங்களை பார்த்திருக்கிறேன். அப்போது மட்டும் நீங்கள் தொண்டராக இருந்தீர்களா ,அல்லது தலைவராக இருந்தீர்களா?
உங்களுக்கு அரசியல் நிலைபாடு இல்லை, அரசியலை விவாதிப்பதில்லை என்று சொன்னீர்கள். அப்படியென்றால் உங்கள் அரசியல் என்ன? அதை தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்துங்கள், அதுதான் கௌரவம். இன்றைக்கு உங்கள் அரசியலில் எவரை ஆதரிக்கிறீர்கள். அவ்வாறு அல்லாமல் இவ்வாறு தலையையும் வாலையும் மாற்றி மாற்றி காட்டும் நிலைபாடு ன்பது ஒரு சந்தர்ப்பவாதம் மட்டுமே. உங்களுக்கு தேவைக்கு ஏற்ப ஒரு நிலைப்பாட்டை நீங்கள் எடுப்பீர்கள் என்பது தான் இது காட்டுகிறது.
ராஜாராம் ஶ்ரீனிவாஸ்
அன்புள்ள ராஜாராம்,
நான் எந்த அரசியல் நிகழ்விலும் கலந்து கொள்ள மாட்டேன் என்று சொல்லவில்லை. ஒரு பொதுவான விஷயத்திற்கு ஒரு குறிப்பிட்ட கட்சி சார்பிலான அறிக்கையில் எழுத்தாளர்கள் கையெழுத்து இடும்போது அவர்கள் தங்களுடைய தனித்தன்மையை இழக்கிறார்கள் என்று மட்டுமே கருத்து சொன்னேன். ஓர் எழுத்தாளர் அரசியல் கருத்து சொல்லக்கூடாது என்று, அரசியல் நடவடிக்கைகளில் கலந்துகொள்ளக்கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் கட்சியின் சார்பில் சொந்த வசைபாடல்களை நடத்துபவர், வெறும் கட்சிக்குண்டராகச் செயல்படுபவர் எழுத்தாளர் அல்ல என்கிறேன்.
அரசியல் என்பது ஒருவர் தொடர்ந்து தன்னை விளக்கிக் கொண்டே இருக்க வேண்டிய கடமை கொண்ட களம். ஆகவே ஆய்வாளர்கள், கலைஞர்கள் போன்றவர்கள் அதில் ஈடுபடாமல் இருப்பதையும் நான் புரிந்து கொள்கிறேன். ஈடுபடுபவர்கள் தொடர்ந்து அந்த விளக்கத்தை அளித்துதான் ஆக வேண்டும். பொதுவாக ஒரு அறிக்கையில் கையெழுத்திடும்போது எழுத்தாளர் ஒரு வண்ண்த்தை மட்டுமே அடைகிறார். அதை மட்டுமே சொன்னேன், அதை புரிந்து கொள்ளும் உள்ள பாங்கு உங்களுக்கு இல்லை என்று நினைக்கிறேன்.
திருமாவளவன் அவர்களை எனக்கு நண்பர் அலெக்ஸ் வழியாக அறிமுகம். நான் அவருடன் இணைந்து அரசியல் செயல்பாடு எதிலும் ஈடுபடவில்லை. எனக்கு கட்சி அரசியல் இப்போது இல்லை. என் அரசியல் களம் சார்ந்த காந்திய அரசியல் மட்டுமே. ஆனால் எப்போதேனும் கட்சி சார்ந்த அரசியலில் ஈடுபடுவேன் எனில் அது திருமாவளவனின் அரசியலில் மட்டுமே. தலைவர் என இப்போதுள்ளவர்களில் எவரையேனும் ஏற்பேன் எனில் அவரை மட்டுமே. ஏனெனில் அவரது அரசியலுக்கு மட்டுமே இன்றைய சூழலில் வலுவான சமூகக்காரணம் உள்ளது என்று நினைக்கிறேன். பிற அரசியல் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் சுயநல அரசியல்தான்.
தமிழகத்தில் முதன்மையான அரசியல் தலைவர் என்று நான் இன்றும் அவரையே கருதுகிறேன். அவருடைய குரல் இந்த கரூர் சாவு விஷயத்திலும்கூட எத்தனை நிதானத்துடனும், தலைவனுக்கான பொறுப்புடனும் இருக்கிறது என்பதை உங்களுடைய தனிப்பட்ட காழ்ப்புகளை நகர்த்தி வைத்துவிட்டு பார்த்தால் தெரியும். ஓர் எழுத்தாளனாக அதைச் சொல்ல வேண்டுமென நினைக்கிறேன். அதன் பொருட்டு அவரிடம் இருந்தது, அல்லது அக்கட்சியிலிருந்து எதையும் எதிர்பார்க்கும் அல்லது பெற்றுக் கொள்ளும் இடத்தில் நான் இல்லை.
திருமாவளவனின் அரசியலைக் குறித்து என்னிடம் கேட்டு என்னை சங்கடப்படுத்தலாம் என்று எண்ணி கேள்விகள் அவ்வப்போது வருவதுண்டு. அவருடைய அரசியலை அதற்குரிய களநிலவரத்தை ஒட்டி நடத்தும் திறன் அவருக்கு உண்டு. அதற்கு வெளியே நின்று கொண்டு அதை விமர்சிப்பதில் அர்த்தம் இல்லை. நான் அவ்வாறு கூர்ந்து கட்சிஅரசியலை பார்ப்பதும் இல்லை. அறுதியாக அது எந்த வகையில் மக்களுக்கு பயன்படுகிறது என்பது மட்டும்தான் நான் பார்க்க வேண்டும். அந்த வகையில் அவருடைய செயல்பாடுகள் உண்மையிலேயே மக்களுக்கு உரியவையாகவே இன்று வரை இருந்து வருகின்றன என்றுதான் நான் நினைக்கிறேன். நான் அரசியலில் ஈடுபடவில்லை, ஆகவே இதை மறுப்பவர்களிடம் பேச வேண்டிய தேவை இல்லை. இது என் தனிப்பட்ட நம்பிக்கை.
திருமா அவர்களுடன் உரையாடல்களில் ஒவ்வொரு தருணத்திலும் ஓர் எழுத்தாளர் என்னும் இடத்தையே அவர் எனக்கு அளித்திருக்கிறார். எழுத்தாளர் என்றால் யார், அவன் இடம் என்ன என்று புரிந்து கொள்ளும் தகுதி கொண்ட மிகச் சில தலைவர்களே இன்று தமிழகத்தில் இருக்கிறார்கள் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை என நினைக்கிறேன். அந்த மதிப்பு இல்லாத இடங்களுக்கு நான் செல்வதுமில்லை.
என் அரசியல் நிலைப்பாடு என்ன என்று கேட்டிருந்தீர்கள். அது அடிப்படைக் குடிமகனின் , எளிய வாக்காளரின் அரசியல். கட்சிச்சார்பு அரசியல் அல்ல. எவருக்காகவும் களமாடும் அரசியல் அல்ல. தன் அனுபவத்திற்குள் வரும் நிகழ்வுகளைக் கொண்டு ஒரு முடிவுக்கு வரும் அரசியல். அதுவே சரியான அரசியல், ஜனநாயக அரசியல் என நினைக்கிறேன். இந்த அரசியல் நிலைபாடு என்பது மாறாததும் அல்ல. இந்த கட்சிகளும் தலைவர்களும் தவறு செய்தால் அதைக் கண்டிக்கவும் கூடியது. இக்கட்சிகள் பயனற்றவை என்றால் உடனே நிராகரிக்கக் கூடியது. அப்போது அக்கட்சிக்காரர்களால் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவன் என வசைபாடப்படுவேன்.
இப்போது உள்ள அரசியல் என்ன என்று கேட்கிறீர்கள். இப்போதுள்ள அரசியல் இதுவே. தனிப்பட்ட ஆடம்பரம், அதிகாரப்போக்கு போன்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் கேரளத்தில் பொருளாதார வளர்ச்சி, குடிமைச்சமூகப் பணிகள் ஆகிய தளங்களில் பினராயி விஜயன் மிகச்சிறந்த ஒரு ஆட்சியாளராகவே பத்தாண்டுகளில் வெளிப்பட்டிருக்கிறார். சி.அச்சுதமேனன், ஈ.கே.நாயனாருக்கு பின் அவரே சிறந்த ஆட்சியாளர். மீண்டும் அவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் இந்த ஐந்து ஆண்டுகளில் தனிமனித உரிமை மறுப்பு, தொடரும் நிர்வாக ஊழல் ஆகியவை இருந்தாலும் இன்றைய அரசு தமிழகத்தை கல்வி, தொழில்த்துறை, குடிமைச்சேவை ஆகிய மூன்று களங்களில் முன்னோக்கி நகர்த்துகிறது என்று நினைக்கிறேன். அதற்கு மாற்றாக வரும் ஒரு கட்சி இந்த அளவுக்கு செயல்பாட்டை அளிக்கும் என்ற நம்பிக்கை இப்போதைக்கு எழவில்லை. ஆகவே மு.க.ஸ்டாலின் அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கருதுகிறேன்.
இவற்றை நேரடியாக களத்தில் செயல்பாடுகளை முன்னெடுப்பவன், கிராமங்களுக்குச் செல்பவன் என்ற வகையில் மட்டுமே சொல்கிறேன். இதற்கு அப்பால் எனக்கு கட்சி அரசியல் சார்ந்த செயல்பாடுகள் எதுவும் இல்லை. இந்த அரசுகளுக்காக பிரச்சாரம் செய்யும் பணியும் எனக்கில்லை. என் நண்பர்களிடம் இதை விவாதிப்பதில்லை. ஏனென்றால் நாங்கள் முன்னெடுக்கும் பணிகள் முற்றிலும் அரசியலுக்கு அப்பாற்பட்டவை. எங்கள் அரங்குகளில் மட்டுமல்ல, தனிப்பட்ட உரையாடல்களிலும்கூட முழுமையாகவே அரசியல் இல்லை. என் அரசியலை முழுக்க மறுப்பவர்களும் பலர் என் அணுக்கமான நண்பர்களாக உண்டு, இணைந்தும் செயல்படுகிறோம். அவர்கள் தங்கள் நம்பிக்கையை தாங்கள் கொண்டிருப்பதும் இயல்பென்றே கொள்கிறேன்.
ஜெ
விஷ்ணுபுரம் விருந்தினர் – 8 – குறிஞ்சிவேலன்
விஷ்ணுபுரம் விருது 2025 ஆம் ஆண்டுக்கு ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்படுகிறது. டிசம்பர் 20, 21 ஆம் தேதிகளில் நிகழும் இந்த விழாவில் வழக்கம்போல படைப்பாளர்கள், இலக்கியச் செயல்பாட்டாளர்கள் வாசகர்களை சந்திக்கும் நிகழ்வு அமைகிறது. இந்த ஆண்டு குறிஞ்சிவேலன் கலந்துகொள்கிறார்
குறிஞ்சிவேலன்
குறிஞ்சிவேலன் – தமிழ் விக்கி/* inline tdc_css att */.tdi_1{padding-top:12px !important;padding-bottom:8px !important;border-color:#eaeaea !important;border-style:solid !important;border-width: 1px 0px 1px 0px !important;}/* custom css */.tdi_1 .td_block_inner{width: 100%;
margin-left: -20px;
margin-right: -20px;
}.tdi_1:after{
content: '';
display: table;
clear: both;
}.tdi_1 .td-image-wrap{
padding-bottom: 100%;
}.tdi_1 .entry-thumb{
background-position: center 50%;
}.tdi_1 .td-image-container{
flex: 0 0 30%;
width: 30%;
display: block; order: 0;
}.ie10 .tdi_1 .td-image-container,
.ie11 .tdi_1 .td-image-container{
flex: 0 0 auto;
}.tdi_1 .td-module-container{
flex-direction: row;
border-color: #eaeaea !important;
}.ie10 .tdi_1 .td-module-meta-info,
.ie11 .tdi_1 .td-module-meta-info{
flex: 1;
}.tdi_1 .td-module-meta-info{
padding: 1% 5%;
border-color: #eaeaea;
}.tdi_1 .td_module_wrap{
padding-left: 20px;
padding-right: 20px;
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
border-color: #eaeaea;
}.tdi_1 .entry-thumb,
.tdi_1 .entry-thumb:before,
.tdi_1 .entry-thumb:after{
border-radius: 500px;
}.tdi_1 .td-post-vid-time{
display: block;
}.tdi_1 .td-post-category:not(.td-post-extra-category){
display: none;
}.tdi_1 .td-author-photo .avatar{
width: 20px;
height: 20px;
margin-right: 6px;
border-radius: 50%;
}.tdi_1 .td-excerpt{
display: none;
column-count: 1;
column-gap: 48px;
font-size:= !important;
}.tdi_1 .td-audio-player{
opacity: 1;
visibility: visible;
height: auto;
font-size: 13px;
}.tdi_1 .td-read-more{
display: none;
}.tdi_1 .td-author-date{
display: none;
}.tdi_1 .td-post-author-name{
display: none;
}.tdi_1 .td-post-date,
.tdi_1 .td-post-author-name span{
display: none;
}.tdi_1 .entry-review-stars{
display: none;
}.tdi_1 .td-icon-star,
.tdi_1 .td-icon-star-empty,
.tdi_1 .td-icon-star-half{
font-size: 15px;
}.tdi_1 .td-module-comments{
display: none;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0;
padding-bottom: 0;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:21px !important;line-height:1.2 !important;
}html:not([class*='ie']) .tdi_1 .td-module-container:hover .entry-thumb:before{
opacity: 0;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}/* landscape */@media (min-width: 1019px) and (max-width: 1140px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:20px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* portrait */@media (min-width: 768px) and (max-width: 1018px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:17px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* phone */@media (max-width: 767px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}var block_tdi_1 = new tdBlock();block_tdi_1.id = "tdi_1";block_tdi_1.atts = '{"modules_on_row":"","limit":"10","hide_audio":"yes","show_btn":"none","show_excerpt":"none","show_review":"none","show_com":"none","show_date":"none","show_author":"none","image_floated":"float_left","sort":"oldest_posts","category_id":"11301","category_ids":"12659","image_width":"30","meta_padding":"1% 5%","modules_category":"","modules_category_margin":"","custom_title":"\u0bb5\u0bbf\u0bb7\u0bcd\u0ba3\u0bc1\u0baa\u0bc1\u0bb0\u0bae\u0bcd 2025 \u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba8\u0bcd\u0ba4\u0bbf\u0ba9\u0bb0\u0bcd\u0b95\u0bb3\u0bcd","custom_url":"\/tag\/2025-\u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba8\u0bcd\u0ba4\u0bbf\u0ba9\u0bb0\u0bcd\/","post_ids":"-222842","tdc_css":"eyJhbGwiOnsiYm9yZGVyLXRvcC13aWR0aCI6IjEiLCJib3JkZXItYm90dG9tLXdpZHRoIjoiMSIsInBhZGRpbmctdG9wIjoiMTIiLCJwYWRkaW5nLWJvdHRvbSI6IjgiLCJib3JkZXItY29sb3IiOiIjZWFlYWVhIiwiZGlzcGxheSI6IiJ9fQ==","show_cat":"none","excerpt_col":"","m16_el":"20","ajax_pagination":"load_more","f_title_font_size":"eyJhbGwiOiIyMSIsImxhbmRzY2FwZSI6IjIwIiwicG9ydHJhaXQiOiIxNyJ9","f_title_font_line_height":"1.2","f_ex_font_size":"=","f_ex_font_line_height":"","image_height":"100","hide_image":"","modules_gap":"","meta_info_horiz":"","container_width":"100","image_radius":"500","block_type":"td_flex_block_1","separator":"","block_template_id":"","title_tag":"","mc1_tl":"","mc1_title_tag":"","mc1_el":"","tag_slug":"","autors_id":"","installed_post_types":"","offset":"","show_modified_date":"","time_ago":"","time_ago_add_txt":"ago","time_ago_txt_pos":"","el_class":"","td_ajax_filter_type":"","td_ajax_filter_ids":"","td_filter_default_txt":"All","td_ajax_preloading":"","m_padding":"","all_modules_space":"36","modules_border_size":"","modules_border_style":"","modules_border_color":"#eaeaea","modules_border_radius":"","modules_divider":"","modules_divider_color":"#eaeaea","h_effect":"","image_size":"","image_alignment":"50","video_icon":"","video_popup":"yes","video_rec":"","spot_header":"","video_rec_title":"","video_rec_color":"","video_rec_disable":"","autoplay_vid":"yes","show_vid_t":"block","vid_t_margin":"","vid_t_padding":"","video_title_color":"","video_title_color_h":"","video_bg":"","video_overlay":"","vid_t_color":"","vid_t_bg_color":"","f_vid_title_font_header":"","f_vid_title_font_title":"Video pop-up article title","f_vid_title_font_settings":"","f_vid_title_font_family":"","f_vid_title_font_size":"","f_vid_title_font_line_height":"","f_vid_title_font_style":"","f_vid_title_font_weight":"","f_vid_title_font_transform":"","f_vid_title_font_spacing":"","f_vid_title_":"","f_vid_time_font_title":"Video duration text","f_vid_time_font_settings":"","f_vid_time_font_family":"","f_vid_time_font_size":"","f_vid_time_font_line_height":"","f_vid_time_font_style":"","f_vid_time_font_weight":"","f_vid_time_font_transform":"","f_vid_time_font_spacing":"","f_vid_time_":"","meta_info_align":"","meta_width":"","meta_margin":"","meta_space":"","art_title":"","art_btn":"","meta_info_border_size":"","meta_info_border_style":"","meta_info_border_color":"#eaeaea","meta_info_border_radius":"","modules_category_padding":"","modules_cat_border":"","modules_category_radius":"0","modules_extra_cat":"","author_photo":"","author_photo_size":"","author_photo_space":"","author_photo_radius":"","review_space":"","review_size":"2.5","review_distance":"","art_excerpt":"","excerpt_gap":"","excerpt_middle":"","excerpt_inline":"","show_audio":"block","art_audio":"","art_audio_size":"1.5","btn_title":"","btn_margin":"","btn_padding":"","btn_border_width":"","btn_radius":"","pag_space":"","pag_padding":"","pag_border_width":"","pag_border_radius":"","prev_tdicon":"","next_tdicon":"","pag_icons_size":"","f_header_font_header":"","f_header_font_title":"Block header","f_header_font_settings":"","f_header_font_family":"","f_header_font_size":"","f_header_font_line_height":"","f_header_font_style":"","f_header_font_weight":"","f_header_font_transform":"","f_header_font_spacing":"","f_header_":"","f_ajax_font_title":"Ajax categories","f_ajax_font_settings":"","f_ajax_font_family":"","f_ajax_font_size":"","f_ajax_font_line_height":"","f_ajax_font_style":"","f_ajax_font_weight":"","f_ajax_font_transform":"","f_ajax_font_spacing":"","f_ajax_":"","f_more_font_title":"Load more button","f_more_font_settings":"","f_more_font_family":"","f_more_font_size":"","f_more_font_line_height":"","f_more_font_style":"","f_more_font_weight":"","f_more_font_transform":"","f_more_font_spacing":"","f_more_":"","f_title_font_header":"","f_title_font_title":"Article title","f_title_font_settings":"","f_title_font_family":"","f_title_font_style":"","f_title_font_weight":"","f_title_font_transform":"","f_title_font_spacing":"","f_title_":"","f_cat_font_title":"Article category tag","f_cat_font_settings":"","f_cat_font_family":"","f_cat_font_size":"","f_cat_font_line_height":"","f_cat_font_style":"","f_cat_font_weight":"","f_cat_font_transform":"","f_cat_font_spacing":"","f_cat_":"","f_meta_font_title":"Article meta info","f_meta_font_settings":"","f_meta_font_family":"","f_meta_font_size":"","f_meta_font_line_height":"","f_meta_font_style":"","f_meta_font_weight":"","f_meta_font_transform":"","f_meta_font_spacing":"","f_meta_":"","f_ex_font_title":"Article excerpt","f_ex_font_settings":"","f_ex_font_family":"","f_ex_font_style":"","f_ex_font_weight":"","f_ex_font_transform":"","f_ex_font_spacing":"","f_ex_":"","f_btn_font_title":"Article read more button","f_btn_font_settings":"","f_btn_font_family":"","f_btn_font_size":"","f_btn_font_line_height":"","f_btn_font_style":"","f_btn_font_weight":"","f_btn_font_transform":"","f_btn_font_spacing":"","f_btn_":"","mix_color":"","mix_type":"","fe_brightness":"1","fe_contrast":"1","fe_saturate":"1","mix_color_h":"","mix_type_h":"","fe_brightness_h":"1","fe_contrast_h":"1","fe_saturate_h":"1","m_bg":"","color_overlay":"","shadow_shadow_header":"","shadow_shadow_title":"Module Shadow","shadow_shadow_size":"","shadow_shadow_offset_horizontal":"","shadow_shadow_offset_vertical":"","shadow_shadow_spread":"","shadow_shadow_color":"","title_txt":"","title_txt_hover":"","all_underline_height":"","all_underline_color":"","cat_bg":"","cat_bg_hover":"","cat_txt":"","cat_txt_hover":"","cat_border":"","cat_border_hover":"","meta_bg":"","author_txt":"","author_txt_hover":"","date_txt":"","ex_txt":"","com_bg":"","com_txt":"","rev_txt":"","audio_btn_color":"","audio_time_color":"","audio_bar_color":"","audio_bar_curr_color":"","shadow_m_shadow_header":"","shadow_m_shadow_title":"Meta info shadow","shadow_m_shadow_size":"","shadow_m_shadow_offset_horizontal":"","shadow_m_shadow_offset_vertical":"","shadow_m_shadow_spread":"","shadow_m_shadow_color":"","btn_bg":"","btn_bg_hover":"","btn_txt":"","btn_txt_hover":"","btn_border":"","btn_border_hover":"","pag_text":"","pag_h_text":"","pag_bg":"","pag_h_bg":"","pag_border":"","pag_h_border":"","ajax_pagination_infinite_stop":"","css":"","td_column_number":1,"header_color":"","color_preset":"","border_top":"","class":"tdi_1","tdc_css_class":"tdi_1","tdc_css_class_style":"tdi_1_rand_style"}';block_tdi_1.td_column_number = "1";block_tdi_1.block_type = "td_flex_block_1";block_tdi_1.post_count = "7";block_tdi_1.found_posts = "7";block_tdi_1.header_color = "";block_tdi_1.ajax_pagination_infinite_stop = "";block_tdi_1.max_num_pages = "1";tdBlocksArray.push(block_tdi_1);விஷ்ணுபுரம் 2025 விருந்தினர்கள்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 1 – மு. குலசேகரன்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 2 – அரிசங்கர்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 3 – கே. நல்லதம்பி
விஷ்ணுபுரம் விருந்தினர் – 4 – ஜீவ கரிகாலன்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 5 – அழிசி ஶ்ரீனிவாசன்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 6 – குணா கந்தசாமி
விஷ்ணுபுரம் விருந்தினர் 7, அனுராதா ஆனந்த்
ரமேஷ், தமிழிலக்கியச்சூழல்.
ஜெ,
என்னுடைய உணர்வுகளை கூறவிளைகிறேன். ஏதோ சொல்லிவிட்டால் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இலக்கியத்தையும் அதைப் படைக்கும் படைப்பாளின் வாழ்வையும் விலக்கி பார்ப்பது சரியானதாக பலரும் எண்ணக்கூடும்.ஆனால் படைப்பாளி தன்னுடைய அன்றாடத்தில் தன்நிறைவு இல்லாமல் எவ்வளவு தூரம் கலையில் தொடர்ந்து பயணிக்க முடியும் என்ற கேள்வி தவிர்க்க முடியாதது.
கலை இலக்கியம் சார்ந்து இயங்குகிறவர்கள் வாழ்வு குறித்து நமக்கு கிடைக்கும் சித்திரங்கள் பெரும்பாலும் சாமானியனுக்கு அச்சம் தருவாதாகவே இருக்கின்றன. இதற்கு நமக்கு அண்மையிலான உதாரணம் ரமேஷ் பிரேதன். அவருடைய அறைக்குள் ஒரு விருந்தினராக சென்று சில மணித்துளிகளை கழித்து வரும் எவராலும் நான் கூற விளைவதை புரிந்து கொள்ளுதல் சாத்தியமில்லை என்றே கருதுகிறேன். ஒரு அறைக்குள் மட்டுமே முடக்கப்பட்ட வாழ்வு எத்தனை கொடூரமானது. அதற்குள் நம்பிக்கை கொண்டு வாழ்வதற்கான நெஞ்சுரம் எப்படி சாத்தியமானது?.
மாதம் தோறும் சில பத்தாயிரங்களை சம்பாதிக்க வேண்டிய இளைஞனால் கலை இலக்கியத்தில் ஆர்வம் இருந்தும் பங்கேற்க முடியாத சூன்ய வாழ்வுதான் இங்கு நிலவுகின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது. பொருளாதார நிறைவு தரும் தன்நம்பிக்கை எதற்கும் ஈடாது என்பது சமகாலச் சூழல்.
எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் உடலாலும் முடக்கப்பட்டவர். அவரால் தன்னை தற்காத்துக்கொள்ள காலம் ஒருவழியும் கொடுக்கவில்லை. அதை ஈடுகட்டுவது அத்தனை சுலபம் இல்லை. பெற்றவர்களை பராமரிக்கும் கடமையில் கூட ஒரு கணம் சினந்துவிடுகின்றது மனது என்பதை மனசாட்சி கொண்ட எவரும் மறுத்துவிட முடியாது. அது மனித இயல்பு. ரமேஷ் போன்ற ஒரு கலைஞனை தொடர்ந்து எதிர்கொண்டு – ஆதரித்து கலையில் எல்லைவரை பயணிக்க வைத்தல் உச்சமான சாகசப் பயணம் என்றுதான் சொல்ல வேண்டும்.
எழுத்தாளர் ரமேஷ் பிரேதனை அரவணைத்து அவருக்கான ஒரு பாதுகாப்பான சூழலை கட்டமைத்தல் இதில் முதன்மையானது. அதற்கு பொருளாதாரம் தான் அடிப்படை. அதில் தான் அத்தனையும் தங்கியுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன், அவருடைய நண்பர்கள் ஏற்படுத்திய பாதுகாப்பான சூழல் ரமேஷ் பிரேதனுக்கு பெரும் நம்பிக்கையை அளித்தது. அதற்கு பிறகு சாத்தியமானவை யாவும் மிகுதியானவை என்றும் சொல்ல இயலும்.
அடுத்து பதிப்பாளர், எழுத்தாளர் ஜீவகரிகாலனை குறிப்பிட வேண்டும். தனது கலையை தமிழ் சமூகத்தை நோக்கி முன்னெடுத்து செல்ல சமரசமற்ற ஒரு உறவு அவசியமாக ரமேஷ் அவர்களுக்கு அவசியமாகின்றது.
புத்தகங்கள் தமிழ் சமூகத்தில் எத்தகைய பங்காற்றுகின்றன என்பது இன்னும் பிடிபடாத நிலமைதான் நீடிக்கின்றது. இதில் எழுத்தாளர் ரமேஷ் பிரேதனின் கலையை ஆழமாக புரிந்து கொள்ளுதல் சற்று கடினமானது. அதற்கு ஒரு நீண்ட பயணம் இருக்கிறது. அதை ஒரு பதிப்பகம் முன்னெடுத்து செல்ல வேண்டியது கட்டாயமாகும். யாவரும் அதைதான் செய்தது.தொடர்ந்து செய்யவேண்டும் என்பது எழுத்தாளர் ரமேஷ் பிரேதனின் விருப்பமாக இருந்ததை அவருடைய உரையாடல்கள் வழியே நானும் அறிந்து கொண்டேன். அந்தப் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய தார்மீகப்பொறுப்பு ஜீவகரிகாலனுக்கு உண்டு.
இதை எழுதும் போதும் என் மனம் சோர்வடைந்தும் பிறகு நம்பிக்கை கொண்டும் எழுதவைக்கின்றது. ஒரு நிலையில் நிற்கவில்லை. அதற்கு காரணம் தமிழ் இலக்கியச்சூழல்தான். இதை ரமேஷ் பிரேதன் போன்ற உடலாலும் உள்ளத்தாலும் நெருக்கடியை எதிர்கொண்ட கலைஞன் எப்படி எதிர்கொண்டிருப்பான் என்ற பதற்றம் என்னை பாடாய்ப்படுத்துகின்றது.அந்த தருணம் ஜெயமோகன் என்கின்ற பெயர் என்னுடைய தோளில் கைவைத்து நம்பிக்கை கொள் என்று அழுத்திச் சொல்கின்றது. தமிழ் சமூகம் குறித்து அவநம்பிக்கை கொள்ளாதே.விஷ்ணுபுரம் என்ற பெயரில் கூட அவர்களில் ஒரு பகுதியினர் திரண்டு வருவார்கள் என்று இலக்கிய வாழ்வு குறித்து யாவரும் அவநம்பிக்கை கொண்டு விடாமல் காத்து நிற்கின்றது.
– வாசு முருகவேல்
அன்புள்ள வாசு
உங்கள் குரலில் உள்ள சோர்வை புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் எழுதிய இதே உணர்வையும் கொந்தளிப்பையும் யுவன் சந்திரசேகரும், கீரனூர் ஜாகீர்ராஜாவும், எஸ்.ஜே.சிவசங்கரும் எனக்கு தெரிவித்தார்கள். குறிப்பாக உடல்நிலை குன்றி இருக்கையில் இத்தகைய நிகழ்வுகள் மிக ஆழமான பாதிப்பை உருவாக்குகின்றன.
இந்த வகையான சோர்வு எழுத்துச் செயல்பாட்டில் அவ்வப்போது தீவிரமாக வரும், எப்போதும் ஓர் எல்லையில் இருந்து கொண்டும் இருக்கும். ஆனால் இதை இன்னொரு கோணத்தில் பார்க்க நான் மிக இளமையிலேயே கற்றுக் கொண்டேன். ஏனென்றால் இன்று இருக்கும் வாசிப்போ, கவனமோ கூட சற்றும் இல்லாத ஒரு சூழலில் தான் முதல் பத்து ஆண்டுகளில் எழுதியிருக்கிறேன். இருநூறு பிரதிகள் மட்டுமே வாசிக்கப்படும் சிற்றிதழ்ச் சூழலில் எழுதியவன் நான். அதற்கு அப்பால் ஒரு வாசிப்பு எனக்கு அமையும் என்று அப்போது கற்பனை செய்ததும் இல்லை.
நீங்கள் சொன்ன இந்த விஷயத்தை இன்னொரு கோணத்தில் பார்க்கலாம். ரமேஷின் உடல்நிலை என்பது அவர் இலக்கியவாதி என்பதனால் அமைந்தது அல்ல. அது அவருடைய மரபணுக் குறைபாடு. அவர் ஓர் இலக்கியவாதி அல்ல என்றாலும் கூட இதே போன்ற உடற்சிக்கல், கைவிடப்பட்ட நிலையில்தான் வாழ்ந்து இருப்பார். ஆனால் அவருடைய வாழ்க்கை அப்போது என்னவாக இருந்திருக்கும்? இன்று அவருக்கு உருவாகி வந்துள்ள இந்த நட்பு வளையம் அமைந்திருக்குமா ? அவரது இறுதிநாளில் தமிழகத்தின் எழுத்தாளர்கள் எந்தெந்த ஊரில் இருந்தெல்லாம் கிளம்பி வந்தனர் என்று கண்டோமே. எளிய நிலையில் வாழ்பவர்கள்கூட கடன் வாங்கி பயணம் செய்து வந்திருந்தனர் அல்லவா?
நண்பர் ஒருவர் எழுதிய கடிதத்தில் ரமேஷ் என்னிடம் உரிமையுடன் அதட்டி பணமும் விருதும் கேட்டதை பற்றி நெகிழ்வுடன் எழுதியிருந்தார். சாமானியர்களால் அந்த உறவைப் புரிந்துகொள்ள முடியாது. அவர்களின் கணக்குவழக்கு உலகில், சம்பிரதாயப்பேச்சுக்களின் சூழலில் அத்தகைய ஒன்று இல்லை. எழுத்தாளர் என்பதனால் அமைந்த உறவு அல்லவா அது? நம் சூழலுக்கு வெளியே இருப்பவர்களுக்கு உதவிகளைப் பெற்றுக் கொள்பவர் எப்போதும் ஒரு படி கீழே என்ற எண்ணம் உண்டு. அவர்களின் உலகில் அதுதான் விதி. இலக்கியத்தில் அது கிடையாது. அவர் என்னது இலக்கிய உறவு. நாங்கள் இருவரும் சேர்ந்து மகத்தான ஒன்றை செய்து கொண்டிருக்கிறோம் என்னும் உணர்வு இருவருக்கும் இருந்தது. ஆகவே நாங்கள் இருவரும் எந்நிலையிலும் எல்லா வகையிலும் இணையானவர்கள் மட்டுமே. அந்த அளவிலேயே அவர் என்னிடம் பழகி இருக்கிறார். அது எல்லா உரிமைகளும் உடைய நட்பு. அத்தகைய உறவு சுற்றமும் அவர்களுக்கு உருவாவதற்கு அடிப்படையாக இருந்தது அவருடைய இலக்கியம்தானே? அப்படி பார்த்தால் அவருக்கென ஒரு தனி வெளியுலகத்தை இலக்கியம் படைத்து அளித்திருக்கிறது அல்லவா?
அதேபோல ரமேஷ் பன்னிரண்டு ஆண்டுகள் ஒரே அறைக்குள் ஒரே படுக்கையில் வாழ்ந்த மனிதர். ஆனால் பெரும்பாலான தருணங்களில் உற்சாகமாகவே இருந்தார். நான் அவரிடம் இறுதியாகப பேசும் போது கூட யுவன் சந்திரசேகர் போல ஒரு நெகிழ்வான விருது ஏற்பு உரையை மேடையில் பேசுவதா, அல்லது கோணங்கிபோல எவருக்கும் புரியாமல் உரையாற்றுவதா, எஸ்.ராமகிருஷ்ணன் போல கவித்துவமாகப் பேசுவதா, அல்லது என்னைப்போல எண் போட்டு அறுதியிட்டுப்பேசும் பாணியா என்று குரலால் நடித்துக்காட்டி நையாண்டி செய்து கொண்டிருந்தார். அவர்கள் மூவரையும் விழாவிற்கு அழைக்க வேண்டும் என்றார்.எஸ். ராமகிருஷ்ணன் வருவார் என்று எனக்கு தோன்றவில்லை என்று நான் சொன்னேன். நானே அவனுக்கு போன் செய்து அழைக்கிறேன் என்று சொன்னார்.
இந்த அகஉலகம் அவருக்கு அமைந்தது இலக்கியத்தால் அல்லவா?இலக்கியம் மட்டும் இல்லை என்றால் அத்த பன்னிரண்டு ஆண்டுகள் படுக்கையில் அவர் எப்படிப்பட்ட ஒரு பெரும் வதையை அனுபவித்திருப்பார்! இந்த மீட்பின் தேவதைபோல நமக்கு அருள் செய்யும் தெய்வம் வேறென்ன? அதற்கு நாம் கடன் பட்டிருக்கிறோம் அல்லவா? நாம் எழுத்தாளர்களாக இல்லை என்றால் தொழிலதிபர்களாகி பணம் ஈட்டியிருப்போமா? அரசியல்வாதியாகி பதவிகளை பெற்றிருப்போமா ?சினிமாவில் ஸ்டார் ஆகி இருப்போமா? இல்லையே. நாம் மிக எளிய ஒரு வாழ்க்கை அல்லவா வாழ்ந்து கொண்டிருப்போம்? அ நமக்கு இன்று இருக்கும் அனைத்தையும் அளித்தது இந்த தெய்வமல்லவா ? நமக்கு இன்றிருக்கும் கவனமே நமது முன்னோர்கள் அடையாதது என்ற எண்ணமே எப்போதும் எனக்கு உள்ளது
எனக்கு எப்போதும் அருள்செய்த தெய்வம் அது. என்னை நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியுடனும் நிறைவுடனும் வாழச் செய்வது. ஒரு துண்டு தாளும் ஒரு பென்சிலும் இருந்தால் எங்கும் எப்போதும் என்னால் மகிழ்ச்சியாக இருந்து விட முடியும் என்று எனக்கு காட்டியது. ஆகவே நான் இதன் முழு பக்தன். இதற்குத் தலை கொடுக்க கடமைப்பட்டவன். எவ்வகையிலோ இதன் அடியாரெல்லாம் என் உறவினரே. நான் அவ்வடியார்க்கும் அடியான் என்றே உணர்கிறேன்.
ஜெ
உறவின் எல்லை. ஒரு கேள்வி.
நீங்கள் உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு சொன்ன பதிலை வாசித்தேன்.அந்தக் கேள்வியை கேட்டவன் நான் என்று வைத்துக்கொள்வோம். என் பிரச்சினை அது என்று வைத்துக்கொள்வோம். அந்த பெண்ணை நான் விவாகரத்து செய்ய நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா? அந்த மனிதருக்கு ஏன் நீங்கள் அந்த ஆலோசனையைச் சொல்லவில்லை?
உறவின் எல்லை. ஒரு கேள்வி.I am listening to your videos continuously. You are closing the comments section. I don’t think it is a democratic practice. I have something to say about your ideas, and you should listen to it. It is fair practice.
The Pitfalls of DemocracyJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

