Jeyamohan's Blog, page 13

October 5, 2025

வாசிப்பு வகுப்பு அனுபவம்- ஈஸ்வரி பிரியா

தளத்தில் இந்த வகுப்பிற்கான அறிவிப்பு வந்த உடன் தத்துவ வகுப்பு வந்தால் அதிலும் பங்கு கொள்வோம் வாசிப்பு வகுப்பிற்கும் போவோம் என்ற என் கணவரின் உந்துதலுடனே வகுப்பிற்கு பதிவு செய்தேன். என் கணவர் (பொன்ராஜ்) மற்றும் என் மகன் (பொன் முகேஷ்) மூவருமே வகுப்பில் கலந்து கொண்டோம்.

வாசிப்பு வகுப்பு அனுபவம்- ஈஸ்வரி பிரியா

I was watching your video about doing great things. Yes, it was like a Dale Carnegie-type self-improvement speech. But the major difference is you immediately dive into the negative sides and practical sides of the ideals you are preaching and explain them in a logical way.

Dale Carnegie?
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 05, 2025 11:30

October 4, 2025

மானுடமேன்மையின் எழுத்து

வெளிவந்த நாள் முதல் மூன்று மாதத்திற்கு ஒரு பதிப்பு வெளிவந்துகொண்டே இருக்கிறது அறம் தொகுதி. அதன் மொழியாக்கங்கள் மலையாளம், தமிழ், கன்னடம் என பிற மொழிகளில் லட்சக்கணக்கில் விற்கின்றன. நாடகமாகப் போடப்படுகின்றன. ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு பல பதிப்புகள் வெளிவந்தது. அமெரிக்காவில் வெளியாகியுள்ளது. உலகமெங்கும் ஒரேவகையான ஏற்பை பெற்றுவருகிறது அந்நூல். ஏன்?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 04, 2025 11:36

வேதாந்தத்தை தமிழ்ப்படுத்துதல்

 

வேதாந்தம் பற்றிய விவாதங்களில் பலர் சொல்லும் சிக்கல் ஒன்றுண்டு. தன் கலைச்சொற்கள் தமிழில் சிந்திப்பவரின் நினைவில் நிற்பதில்லை. அவை சம்ஸ்கிருதத்தில் உள்ளன. அவற்றை தமிழாக்கம் செய்து ஏன் பயன்படுத்தக்கூடாது? அப்படி எத்தனையோ சொற்களை தமிழில் மொழியாக்கம் செய்துகொள்கிறோம். மேலும், அவ்வாறு மொழியாக்கம் செய்துகொண்டால் அச்சொற்களைக் கேட்டதுமே அவை எதைக்குறிக்கின்றன என்று நமக்குப் புரியும். உதாரணமாக ஃபாஸம் என்னும் சொல்லை வேதாந்தத்தில் பயன்படுத்துகிறோம். அதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டியுள்ளது. மயங்குரு என தமிழாக்கம் செய்துகொண்டால் அச்சொல்லே அக்கருத்தை நமக்கு புரியவைத்துவிடுமே?

இது ஒரு நல்ல வழிதான். நான் தொடக்ககாலத்தில் அப்படி நம்பியதுமுண்டு, முயன்றதுமுண்டு. ஆனால் இன்று பலவாறாகப் பிரிந்துகிடக்கும் வேதாந்தப் பிரிவுகள் அனைத்தும் அப்படி புதிய சொற்களை ஏற்றுக்கொள்ளுவது நடைபெறக்கூடிய செயல் அல்ல. இரண்டு, அப்படி நமக்கான சொற்களுடன் நாம் வேதாந்தத்தைக் கற்றால் நம் வட்டத்துக்கு அப்பால், நம் மொழிக்கு அப்பாலுள்ள இன்னொரு வேதாந்த மாணவருடன் நம்மால் உரையாடவே முடியாது. வேதாந்தம் கற்பவர்களே மிகக்குறைவு. அவர்களுக்குள்ளும் இப்படி உழக்குக்குள் கிழக்குமேற்கு உருவாவது பயனுள்ளது அல்ல.

இன்று எல்லா ஞானங்களும் உலகளாவிய விவாதக்களத்தில்தான் நிகழ்கின்றன. ஆகவேதான் எல்லா அறிவுத்துறைகளும் உலகளாவிய கலைச்சொற்களை உருவாக்கிக்கொண்டுள்ளன. தொடக்ககாலத்தில் அறிவியலில் கலைச்சொற்களைத் தமிழாக்கம் செய்தனர். கார்பன் டை ஆக்ஸைடை கரியமிலவாயு என்றெல்லாம் மொழியாக்கம் செய்தார்கள். ஆனால் இன்று உயர்கல்வியில் அதெல்லாம் வழக்கத்தில் இல்லை. கரியமில வாயு என தமிழாக்கம் செய்து படிப்பவர் ஒரு கட்டத்தில் கரியமில வாயு என்றால் கார்பன் டையாக்ஸைட் என்றும் கற்கவேண்டியிருக்கும். அது இரட்டைவேலை.

பலநூற்றாண்டுகளாக வேதாந்தம் தனக்கே உரிய கலைச் சொற்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அந்தக் கலைச்சொற்களிந் வழியாகவே வேதாந்த விவாதங்கள் எப்போதும் நிகழ்ந்து வருகின்றன. அவை ஒரு தமிழ் வாசகனுக்கு உடனடியாக மொழி சார்ந்த ஒவ்வாமையை உருவாக்கக் கூடியதாக இருக்கக்கூடும் ஃபாசம், ஃபானம், அவித்யை போன்ற சொற்களை அவன் உடனடியாக நினைவில் வைத்திருக்க முடியாது என்பது உண்மையே. ஆகவே தொடக்கநிலை வாசகர்களுக்காக அச்சொற்களை தமிழ்ப்படுத்துவது என் வழக்கம் .அச்சொற்களை ஒவ்வொரு முறையும் அடைப்பு குறிக்குள் தமிழ்ப்படுத்தி எழுதுவது என்னுடைய வழிமுறை. ஆனால் தமிழ்ப்படுத்துவது என்பது இச்சொற்களை புரிந்து கொள்வதற்காகவும், அவற்றின் பொருள் நினைவில் நிற்பதற்காகவுமே ஒழிய அச்சொற்களை நீக்கம் செய்வதற்காக அல்ல. நாம் மொழியாக்கம் செய்யும் சொற்கள் மூலக்கலைச்சொற்களின் இடத்தில் சென்று அமையாது. அது பிழையானதும்கூட.

உலகம் முழுக்கவே தத்துவ சிந்தனைகள் தங்களுக்கான கலைச்சொற்களை உருவாக்கிக் கொள்வது வழக்கம். லத்தீனிலும் ஜெர்மனியிலும் பிரஞ்சிலும் உருவாக்கப்பட்ட கலைச்சொற்களை ஆங்கில மொழியில் அப்படியே தான் பயன்படுத்துகிறார்கள். பல சமயம் அவற்றுக்கான பதிலி ஆங்கிலச் சொற்கள் இருக்கும். ஆனால் குறிப்பாக மூலச்சொற்களையே பயன்படுத்துவது தான் வழக்கம் நமக்கே தெரியும், சட்டத்தில் Modus operandi, Habeas corpus போன்ற சொற்களைத்தான் இன்னமும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கான காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

ஒரு தத்துவ கலைச்சொல் என்பது முதன்மையாக ஒரு குறிப்பிட்ட தத்துவக் கொள்கையை அல்லது கருத்தை மட்டுமே குறிப்பிடுவதாகும். அக்கலைச்சொல் செவியில் விழுந்த உடனேயே அதனுடன் இணைந்த மொத்த சிந்தனைகளும் அச்சொல்லின் வரையறையாக நம் நினைவுக்கு வரவேண்டும். text என்று இன்று இலக்கியத்தில் ஒரு கலைச்சொல்லை நாம் பயன்படுத்தும் போது அது வாசகனின் கற்பனை படி விரித்து எடுக்கக்கூடிய ஒன்று அல்ல. அதற்கு மொழியியல் மிகத்தெளிவான வரையறை ஒன்றை அளித்திருக்கிறது. அந்த வரையறையை தான் அந்தச் சொல் குறிக்கிறது. 

கலைச்சொல் என்பது திட்டவட்டமான விவாதங்களுக்கு மிக உதவியாக இருக்கும் ஒன்று. கலைச்சொல் என்பது ஒரு கருத்தை வரையறுத்துவிட்டு அக்கருத்துக்குச் சுட்டப்படும் பெயர்தான். ஒரு மனிதனுக்கு பெயரிடுவதுபோல. கலைச்சொல் இல்லையென்றால் ஒவ்வொரு முறையும் அந்த வரையறையை நாம் சொல்ல வேண்டியிருக்கும். அந்த வரையுறையுடன் இணைந்துள்ள அனைத்து கருத்துகளையும் நினைவுபடுத்த வேண்டி இருக்கும். அவ்வாறு ஒரு தத்துவ விவாதம் நடக்க முடியாது . ஒரு மனிதனுக்குப் பெயர் இல்லை என்றால் அவனை ஒவ்வொரு முறையும் வர்ணிக்கவேண்டியிருக்கும் என்பதுபோலத்தான்.

ஏனெனில் தத்துவம் பேசும் இந்த விஷயங்கள் எதுவுமே புறவயமான பொருட்கள் அல்ல .மேஜையை குறித்த ஒரு சொல்லை வேறு சொல்லால் இடமாற்றம் செய்து கொள்ளலாம். ஏனெனில் மேஜை என்ற பொருள் அங்கு தான் உள்ளது. அது எதைக் குறிக்கிறது என்பதில் எவருக்கும் எந்த ஐயமும் இருப்பதில்லை. ஆனால் தத்துவ உருவகங்கள் எல்லாம் அருவமானவை. ஒரு விவாத களத்தில் நீண்ட கால பொது விவாதத்தின் வழியாக ஒரு பொதுப் புரிதலாக உருவாகி வந்தது அவற்றின் வரையறை. அந்த பொதுப்புரிதல் வரையறையை சுட்டத்தான் கலைச்சொல் பயன்படுத்தப்படுகிறது.

உதாரணமாக நீண்டகாலம் குற்ற விசாரணை நீதிமன்ற விவாதங்கள் வழியாகத்தான் modus operandi என்ற வார்த்தை உருவாகி வந்திருக்கிறது. அந்த வார்த்தையை பயன்படுத்தும் போது அந்த நீண்ட கால விவாதித்தன் வழியாக உருவாகி வந்த ஒட்டுமொத்தமான புரிதலையும் பொதுவான வரையறையையும் நான் சுட்டுகிறேன். தத்துவத்திலும் அவ்வாறே angst என்ற சொல்லை இருத்தலியலாளர்கள் பயன்படுத்தும் போது அதற்கு ஒரு வேறொரு சொல்லை வைத்து இடமாற்றம் செய்ய முடியாது.

கலைச்சொற்களை உருவாக்கிக் கொள்வதுதான் தத்துவ சிந்தனை தன்னை புறவயமாக ஆக்கிக் கொள்வது. தனக்கே உரிய கலைச்சொற்கள் வழியாகத்தான் ஒரு தத்துவ சிந்தனை மானுட சிந்தனையாக நிலைகொள்கிறது. அக்கலைச்சொற்களை நீக்கம் செய்து விட்டால் அத்தத்துவ சிந்தனையின் புறவயத்தன்மை அழியும். அத்தத்துவ சிந்தனையை நாம் பொத்தாம் பொதுவான அரட்டையாக மாற்றிவிடுவோம். அதன் கூரிய விவாதத் தன்மையை அது இழந்துவிடும் .

பெரும்பாலும் கலைச்சொற்கள் என்பவை ஏற்கனவே இருக்கும் சொற்கள் ஒரு சிந்தனைக்களத்தில் மிகக்குறிப்பாக ஒரு தனி அர்த்தத்தில் பயன்படுத்தப்படுபவையாகவே இருக்கும். அவை கூடுதல் அர்த்தம் கொண்ட சொற்கள் என்று சொல்லலாம். படிமம் என்பது தமிழ் மொழியில் வெவ்வேறு அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. அது கண்ணாடியில் விழும் பிம்பம் என்ற அர்த்தத்தில் தான் நூறு ஆண்டுகளுக்கு முன்பு மொழியில் இருந்தது.  ஆனால் poetic image என்ற அர்த்தத்தில் அதை தமிழில் பயன்படுத்த தொடங்கிய பிறகு இலக்கியத்தில் அதற்கு வேறு அர்த்தமே இல்லை. அந்தச் சொல்லை இலக்கியக் கலைச்சொல்லாக ஆக்கியவர் க.நா.சு.

அவ்வாறு அத்வைதம் பல ஆயிரம் ஆண்டு விவாதங்கள் வழியாகத்தான் தங்கள் கலைச் சொற்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. சிலசமயம் பொதுப்பொருளில் அவற்றுக்கு வேறு பொருள் இருக்கலாம். பௌத்தமும் அவ்வாறே. சூனியம் என்னும் சொல்லுக்கு பௌத்தம் அளிப்பது அதற்கே உரிய தனிப்பொருளை.

ஆகவே, கலைச்சொற்களை நாம் பொருள் புரிந்து கொள்ளலாம்,ஆனால் மொழியாக்கம் செய்து மூலத்தை நீக்கிவிட முடியாது. தமிழில் தொடர்ந்து ஓர் அத்வைத விவாதம் நிகழ்கிறது என்றால், அதில் சில சொற்கள் தமிழுக்கே உரித்தான சொற்கள் முன்வைக்கப்பட்டு தொடர்ந்து அந்த விவாதம் வழியாக அர்த்தம் ஏற்றம் செய்யப்படுகிறது என்றால் ,அவை தமிழுக்கே உருவாக உரித்தான காலப்போக்கில் கலைச்சொற்களாக உருவாகி வரக்கூடும். ஆனால் அப்போது அந்தக் கலைச்சொல் தமிழில் நாம் விவாதிக்கும் அத்வைதத்தின் தனித்தன்மை சார்ந்து ஒரு புதிய கலைச்சொல்லாகவே இருக்கும். மூலச்சொல்லுக்கான மொழியாக்கமாக இருக்காது. மூலக்கருத்தே கொஞ்சம் மாறியிருக்கும், வளர்ந்திருக்கும். அந்த மாறிய கருத்தையே அந்தப் புதிய கலைச்சொல் சுட்டிநிற்கும்.

அவ்வாறு இங்கே சைவ சித்தாந்த விவாதம் நீண்ட காலம் நிகழ்ந்துள்ளது. அதன் விளைவாக சைவ சித்தாந்தத்துக்கே உரிய தனிக் கலைச்சொற்களை அது உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பல சமயம் சைவ சித்தாந்தம் பயன்படுத்தும் கலைச்சொற்கள் ஏற்கனவே வேதாந்த மரபில் உள்ள கலைச்சொற்களின் ஒலி மாறுபாடுகள்தான் . ஆனால் சைவ சித்தாந்த மரபில் அதற்கு தனி அர்த்தம் உண்டு. அது சைவ சித்தாந்தத்தின் கலைச்சொல்லாக கூடுதலாக அர்த்தம் கொண்டவை.

உதாரணமாக அவித்தியை என்னும் அத்வைத கலைச்சொல் அவித்தை என்று சைவ சித்தாந்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. அவஸ்தை என்ற சமஸ்கிருத கலைச்சொல் அவத்தை என்று சைவ சித்தாந்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. சமஸ்கிருத அர்த்தமோ அல்லது வேதாந்த அர்த்தமோ சைவ சித்தாந்தத்திற்கு பொருந்தாது. சைவ சித்தாந்தத்தில் அந்த முன்னோடிகள் அச்சொல்லை எவ்வாறு தங்களுக்குள் விவாதித்து பொது புரிதலாக வரையறுத்துக் கொண்டார்கள் என்பதை அறிந்து அந்த அர்த்தத்தில் தான் அந்தச் சொல்லை பயன்படுத்த வேண்டும்.

பசு,பதி, பாசம் ஆகிய சொற்களைத் தவிர்த்து எவராலும் சைவ சித்தாந்தத்தை பேசிவிட முடியாது. அதுபோலத்தான் அத்வைத கலைச்சொற்களும். மாயை என்பது ஒரு பொதுச்சொல். அது சாதாரண புழக்கத்தில் ஒரு அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது, பக்தி மரபில் வேறொரு அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. வேதாந்தத்தின் கிளைகளில் சின்ன  அர்த்த வேறுபாடுகளுடன் அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. அத்வைதத்தில் அதனுடைய பொருள் ஒன்று அது திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வேறொரு சொல்லை காட்சிப்பிழை என்றோ அறிவுப்பிழை என்றோ பிழையறிவு என்றோ பயன்படுத்தும்போது உண்மையில் அந்த மூலக் கலைச்சொல்லின் வரையறையை மட்டுமல்ல, அதனுடைய அடிப்படைப் பொருளையே நாம் தவற விட்டு வேறொன்றுக்கு தான் நாம் சென்று கொண்டிருக்கிறோம். இரு சொற்களும் வேறுவேறு, அந்த வேறுபாடு நுணுக்கமானது, ஆனால் முக்கியமானது.

ஒரு கலைச்சொல் வந்து சேர்வது என்பது ஒரு கருத்து, ஒரு தரிசனம் வந்துசேர்வதேயாகும். ஆகவே மூலக்கலைச்சொல்லே கூடுமானவரை பயன்படுத்தப்படவேண்டும் என நான் இன்று எண்ணுகிறேன்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 04, 2025 11:35

விஷ்ணுபுரம் விருந்தினர் – 5 – அழிசி ஶ்ரீனிவாசன்

 

2025 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதையொட்டி 20 -21 ஆம் தேதிகளில் நிகழும் இலக்கியவிழாவில் வழக்கம்போல வாசகர்களை எழுத்தாளர்களும் இலக்கியச் செயல்பாட்டாளர்களும் சந்திக்கிறார்கள். இவ்வாண்டு அழிசி பதிப்பகம் ஶ்ரீனிவாச கோபாலன் வாசகர்களுடன் உரையாடுகிறார்.

அழிசி பதிப்பகம் அழிசி பதிப்பகம் அழிசி பதிப்பகம் – தமிழ் விக்கி/* inline tdc_css att */.tdi_1{padding-top:12px !important;padding-bottom:8px !important;border-color:#eaeaea !important;border-style:solid !important;border-width: 1px 0px 1px 0px !important;}/* custom css */.tdi_1 .td_block_inner{
width: 100%;

margin-left: -20px;
margin-right: -20px;
}.tdi_1:after{
content: '';
display: table;
clear: both;
}.tdi_1 .td-image-wrap{
padding-bottom: 100%;
}.tdi_1 .entry-thumb{
background-position: center 50%;
}.tdi_1 .td-image-container{
flex: 0 0 30%;
width: 30%;

display: block; order: 0;
}.ie10 .tdi_1 .td-image-container,
.ie11 .tdi_1 .td-image-container{
flex: 0 0 auto;
}.tdi_1 .td-module-container{
flex-direction: row;

border-color: #eaeaea !important;
}.ie10 .tdi_1 .td-module-meta-info,
.ie11 .tdi_1 .td-module-meta-info{
flex: 1;
}.tdi_1 .td-module-meta-info{
padding: 1% 5%;

border-color: #eaeaea;
}.tdi_1 .td_module_wrap{
padding-left: 20px;
padding-right: 20px;

padding-bottom: 18px;
margin-bottom: 18px;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;

border-color: #eaeaea;
}.tdi_1 .entry-thumb,
.tdi_1 .entry-thumb:before,
.tdi_1 .entry-thumb:after{
border-radius: 500px;
}.tdi_1 .td-post-vid-time{
display: block;
}.tdi_1 .td-post-category:not(.td-post-extra-category){
display: none;
}.tdi_1 .td-author-photo .avatar{
width: 20px;
height: 20px;

margin-right: 6px;

border-radius: 50%;
}.tdi_1 .td-excerpt{
display: none;

column-count: 1;

column-gap: 48px;

font-size:= !important;
}.tdi_1 .td-audio-player{
opacity: 1;
visibility: visible;
height: auto;

font-size: 13px;
}.tdi_1 .td-read-more{
display: none;
}.tdi_1 .td-author-date{
display: none;
}.tdi_1 .td-post-author-name{
display: none;
}.tdi_1 .td-post-date,
.tdi_1 .td-post-author-name span{
display: none;
}.tdi_1 .entry-review-stars{
display: none;
}.tdi_1 .td-icon-star,
.tdi_1 .td-icon-star-empty,
.tdi_1 .td-icon-star-half{
font-size: 15px;
}.tdi_1 .td-module-comments{
display: none;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0;
padding-bottom: 0;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:21px !important;line-height:1.2 !important;
}html:not([class*='ie']) .tdi_1 .td-module-container:hover .entry-thumb:before{
opacity: 0;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}/* landscape */@media (min-width: 1019px) and (max-width: 1140px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;

padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:20px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* portrait */@media (min-width: 768px) and (max-width: 1018px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;

padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:17px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* phone */@media (max-width: 767px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;

padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}var block_tdi_1 = new tdBlock();block_tdi_1.id = "tdi_1";block_tdi_1.atts = '{"modules_on_row":"","limit":"10","hide_audio":"yes","show_btn":"none","show_excerpt":"none","show_review":"none","show_com":"none","show_date":"none","show_author":"none","image_floated":"float_left","sort":"oldest_posts","category_id":"11301","category_ids":"12659","image_width":"30","meta_padding":"1% 5%","modules_category":"","modules_category_margin":"","custom_title":"\u0bb5\u0bbf\u0bb7\u0bcd\u0ba3\u0bc1\u0baa\u0bc1\u0bb0\u0bae\u0bcd 2025 \u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba8\u0bcd\u0ba4\u0bbf\u0ba9\u0bb0\u0bcd\u0b95\u0bb3\u0bcd","custom_url":"\/tag\/2025-\u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba8\u0bcd\u0ba4\u0bbf\u0ba9\u0bb0\u0bcd\/","post_ids":"-222749","tdc_css":"eyJhbGwiOnsiYm9yZGVyLXRvcC13aWR0aCI6IjEiLCJib3JkZXItYm90dG9tLXdpZHRoIjoiMSIsInBhZGRpbmctdG9wIjoiMTIiLCJwYWRkaW5nLWJvdHRvbSI6IjgiLCJib3JkZXItY29sb3IiOiIjZWFlYWVhIiwiZGlzcGxheSI6IiJ9fQ==","show_cat":"none","excerpt_col":"","m16_el":"20","ajax_pagination":"load_more","f_title_font_size":"eyJhbGwiOiIyMSIsImxhbmRzY2FwZSI6IjIwIiwicG9ydHJhaXQiOiIxNyJ9","f_title_font_line_height":"1.2","f_ex_font_size":"=","f_ex_font_line_height":"","image_height":"100","hide_image":"","modules_gap":"","meta_info_horiz":"","container_width":"100","image_radius":"500","block_type":"td_flex_block_1","separator":"","block_template_id":"","title_tag":"","mc1_tl":"","mc1_title_tag":"","mc1_el":"","tag_slug":"","autors_id":"","installed_post_types":"","offset":"","show_modified_date":"","time_ago":"","time_ago_add_txt":"ago","time_ago_txt_pos":"","el_class":"","td_ajax_filter_type":"","td_ajax_filter_ids":"","td_filter_default_txt":"All","td_ajax_preloading":"","m_padding":"","all_modules_space":"36","modules_border_size":"","modules_border_style":"","modules_border_color":"#eaeaea","modules_border_radius":"","modules_divider":"","modules_divider_color":"#eaeaea","h_effect":"","image_size":"","image_alignment":"50","video_icon":"","video_popup":"yes","video_rec":"","spot_header":"","video_rec_title":"","video_rec_color":"","video_rec_disable":"","autoplay_vid":"yes","show_vid_t":"block","vid_t_margin":"","vid_t_padding":"","video_title_color":"","video_title_color_h":"","video_bg":"","video_overlay":"","vid_t_color":"","vid_t_bg_color":"","f_vid_title_font_header":"","f_vid_title_font_title":"Video pop-up article title","f_vid_title_font_settings":"","f_vid_title_font_family":"","f_vid_title_font_size":"","f_vid_title_font_line_height":"","f_vid_title_font_style":"","f_vid_title_font_weight":"","f_vid_title_font_transform":"","f_vid_title_font_spacing":"","f_vid_title_":"","f_vid_time_font_title":"Video duration text","f_vid_time_font_settings":"","f_vid_time_font_family":"","f_vid_time_font_size":"","f_vid_time_font_line_height":"","f_vid_time_font_style":"","f_vid_time_font_weight":"","f_vid_time_font_transform":"","f_vid_time_font_spacing":"","f_vid_time_":"","meta_info_align":"","meta_width":"","meta_margin":"","meta_space":"","art_title":"","art_btn":"","meta_info_border_size":"","meta_info_border_style":"","meta_info_border_color":"#eaeaea","meta_info_border_radius":"","modules_category_padding":"","modules_cat_border":"","modules_category_radius":"0","modules_extra_cat":"","author_photo":"","author_photo_size":"","author_photo_space":"","author_photo_radius":"","review_space":"","review_size":"2.5","review_distance":"","art_excerpt":"","excerpt_gap":"","excerpt_middle":"","excerpt_inline":"","show_audio":"block","art_audio":"","art_audio_size":"1.5","btn_title":"","btn_margin":"","btn_padding":"","btn_border_width":"","btn_radius":"","pag_space":"","pag_padding":"","pag_border_width":"","pag_border_radius":"","prev_tdicon":"","next_tdicon":"","pag_icons_size":"","f_header_font_header":"","f_header_font_title":"Block header","f_header_font_settings":"","f_header_font_family":"","f_header_font_size":"","f_header_font_line_height":"","f_header_font_style":"","f_header_font_weight":"","f_header_font_transform":"","f_header_font_spacing":"","f_header_":"","f_ajax_font_title":"Ajax categories","f_ajax_font_settings":"","f_ajax_font_family":"","f_ajax_font_size":"","f_ajax_font_line_height":"","f_ajax_font_style":"","f_ajax_font_weight":"","f_ajax_font_transform":"","f_ajax_font_spacing":"","f_ajax_":"","f_more_font_title":"Load more button","f_more_font_settings":"","f_more_font_family":"","f_more_font_size":"","f_more_font_line_height":"","f_more_font_style":"","f_more_font_weight":"","f_more_font_transform":"","f_more_font_spacing":"","f_more_":"","f_title_font_header":"","f_title_font_title":"Article title","f_title_font_settings":"","f_title_font_family":"","f_title_font_style":"","f_title_font_weight":"","f_title_font_transform":"","f_title_font_spacing":"","f_title_":"","f_cat_font_title":"Article category tag","f_cat_font_settings":"","f_cat_font_family":"","f_cat_font_size":"","f_cat_font_line_height":"","f_cat_font_style":"","f_cat_font_weight":"","f_cat_font_transform":"","f_cat_font_spacing":"","f_cat_":"","f_meta_font_title":"Article meta info","f_meta_font_settings":"","f_meta_font_family":"","f_meta_font_size":"","f_meta_font_line_height":"","f_meta_font_style":"","f_meta_font_weight":"","f_meta_font_transform":"","f_meta_font_spacing":"","f_meta_":"","f_ex_font_title":"Article excerpt","f_ex_font_settings":"","f_ex_font_family":"","f_ex_font_style":"","f_ex_font_weight":"","f_ex_font_transform":"","f_ex_font_spacing":"","f_ex_":"","f_btn_font_title":"Article read more button","f_btn_font_settings":"","f_btn_font_family":"","f_btn_font_size":"","f_btn_font_line_height":"","f_btn_font_style":"","f_btn_font_weight":"","f_btn_font_transform":"","f_btn_font_spacing":"","f_btn_":"","mix_color":"","mix_type":"","fe_brightness":"1","fe_contrast":"1","fe_saturate":"1","mix_color_h":"","mix_type_h":"","fe_brightness_h":"1","fe_contrast_h":"1","fe_saturate_h":"1","m_bg":"","color_overlay":"","shadow_shadow_header":"","shadow_shadow_title":"Module Shadow","shadow_shadow_size":"","shadow_shadow_offset_horizontal":"","shadow_shadow_offset_vertical":"","shadow_shadow_spread":"","shadow_shadow_color":"","title_txt":"","title_txt_hover":"","all_underline_height":"","all_underline_color":"","cat_bg":"","cat_bg_hover":"","cat_txt":"","cat_txt_hover":"","cat_border":"","cat_border_hover":"","meta_bg":"","author_txt":"","author_txt_hover":"","date_txt":"","ex_txt":"","com_bg":"","com_txt":"","rev_txt":"","audio_btn_color":"","audio_time_color":"","audio_bar_color":"","audio_bar_curr_color":"","shadow_m_shadow_header":"","shadow_m_shadow_title":"Meta info shadow","shadow_m_shadow_size":"","shadow_m_shadow_offset_horizontal":"","shadow_m_shadow_offset_vertical":"","shadow_m_shadow_spread":"","shadow_m_shadow_color":"","btn_bg":"","btn_bg_hover":"","btn_txt":"","btn_txt_hover":"","btn_border":"","btn_border_hover":"","pag_text":"","pag_h_text":"","pag_bg":"","pag_h_bg":"","pag_border":"","pag_h_border":"","ajax_pagination_infinite_stop":"","css":"","td_column_number":1,"header_color":"","color_preset":"","border_top":"","class":"tdi_1","tdc_css_class":"tdi_1","tdc_css_class_style":"tdi_1_rand_style"}';block_tdi_1.td_column_number = "1";block_tdi_1.block_type = "td_flex_block_1";block_tdi_1.post_count = "4";block_tdi_1.found_posts = "4";block_tdi_1.header_color = "";block_tdi_1.ajax_pagination_infinite_stop = "";block_tdi_1.max_num_pages = "1";tdBlocksArray.push(block_tdi_1);விஷ்ணுபுரம் 2025 விருந்தினர்கள்







விஷ்ணுபுரம் விருந்தினர் – 1 – மு. குலசேகரன்





















விஷ்ணுபுரம் விருந்தினர் – 2 – அரிசங்கர்





















விஷ்ணுபுரம் விருந்தினர் – 3 – கே. நல்லதம்பி





















விஷ்ணுபுரம் விருந்தினர் – 4 – ஜீவ கரிகாலன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 04, 2025 11:33

சிகண்டி – மலர்விழி மணியம்

சிகண்டி நாவலை வாசித்து முடித்த பொழுது என் தோழி பிரேம்மாயா அவர்கள் ஓஷோ அவர்களின் சில வரிகைகளை என்னிடம் பகிர்ந்தார்கள். அவை கீழ்கண்டவாறு,

“ஆதாம் தன் ஏதேன் தோட்டத்தை விட்டு, வெளியேறி, அலைந்து, திரிந்து பாதையைத் தவறவிட்டு, பின்னர் ஒரு காலத்தில் மீண்டும் தன் வீட்டிற்குத் திரும்புகிறான், வெகுதூரம் சென்றுவிடுகிறபோது ஆதாமாக இருப்பவன் மீண்டும் வீட்டை அடையும் போது இயேசுவாகிறான். வீடு நோக்கிய பயணத்தைத் தொடங்கும்போதே அவன் இயேசுவாகி விடுகிறான். ஆதாம் தான் முதல் மனிதன் இயேசு கடைசி மனிதன், ஆதாம் தொடக்கமாகவும் இயேசு முடிவாகவும் இருக்கிறார்கள், ஒரு வட்டம் அங்கே முழுமைமடைகிறது.”

இவ்வரிகளுக்கும் சிகண்டி நாவலின் நாயகன் தீபனிற்கும் நிறைய பொருத்தம் இருக்கின்றது.

தன் அம்மாவோடு சண்டையிட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் பதினைந்து வயது தீபனின் பாதையில் முன்னும் பின்னும் நகர்கின்றது கதை. லூனாசில் இருந்து கிளம்பியவன் தனது தாய்மாமாவின் வீட்டில் தஞ்சம் புகுந்து சௌவாட்டிலும் காராட் பஜாரிலும் இயங்கும் இருண்ட உலகிற்கு அவனது ஆசைகளும் பேராசைகளும் எவ்வாறு அவனை இழுத்துச் செல்கிறது என்பதும், அங்கே சரா என்னும் திருநங்கையை பெண் என நினைத்துக் காதலித்து, பின் ஒரு கட்டத்தில் அவள் ஒரு திருநங்கை என அறிந்து அவளைப் புறக்கணிக்க எண்ணியும், அவனது ஆண்மையை இழந்து, அதை மீட்டெடுக்கும் பொருட்டு அவன் மேற்கொள்ளும் இருண்ட பாதையும் எங்கு அவனை இட்டுச் செல்கிறது என்பது தான் கதையின் சாராம்சம்.

சிறுகதையோ நாவலோ வாசிக்கும் பொழுது நாம் வாழாத ஒரு வாழ்க்கையை வேறொரு நிலப்பரப்பில், வேறு மனிதர்களின் இடத்தில் நம்மைப் பொருத்திக் கொண்டு வாழ்ந்துவிட்ட அனுபவங்களை அடைய முடியும் எனில், அந்தப் படைப்பு ஒரு சிறந்த படைப்பிற்கான உதாரணம்.

அப்படியான அனுபவங்கள் அனைத்து படைப்புகளும் அளிக்கின்றனவா என்றால், இல்லை என்று தான் நினைக்கின்றேன். சில படைப்புகளை வெறும் Bird’s view-ல் இருந்து கூட வாசித்திருப்போம்.

ஆனால் சிகண்டியின் வாசிப்பின் வழி நான், தீபனாக, சராவாக, ஈ.புவாக, நிஷாம்மாவாக என்னால் வாழ முடிந்தது.

இந்நாவலின் அடித்தளம் ஈபு. ஈபு ஒரு மாபெரும் ஆளுமை. தனது சேவல்களைக் காக்கும் பகுச்சரா மாதாவின் உருவம் ஈபு. தாயம்மாகை என்ற முறையில் தன் ஆண் குறியை அறுவடை செய்து கொண்டு, தன்னை ஒரு பெண் என நிலைநிறுத்தியவர். சௌவாட்டில் தன்னை நாடி வரும் திருநங்கையினர்களுக்கு அறுவடை செய்து கொள்ள உதவியும், அவர்கள் விரும்பும் வாழ்வை அமைத்துக் கொள்ளவும் உதவி செய்கிறார்.

பகுச்சரா மாதா தனது சேவல்களை வஞ்சிப்போருக்குத் தரும் தண்டனை மிக நூதனமானது. அவளது உருவமான ஈபுவும் தனது பாதுகாப்பில் இருக்கும் திருநங்கைகளை அவ்வாறே காத்து வருகிறார்.

சிறுபான்மையினரைக் காக்கும் தலைவனுக்கென்று ஒரு அறம் உண்டு. நாட்டின் அரசனாகினும் தனது நிலத்திற்கும் மக்களுக்கும் ஒரு ஆபத்தென்றால் அதை எதிர்த்துப் போராடுவதும், வேண்டுமெனில் கொலை செய்வதும் தான் அந்த அரசனிற்கு உரிய தர்மமாகவே இருக்க முடியும். அப்படிப்பட்ட ஆளுமை தான் ஈ.பு.

சரா, ஈ.பு வை அம்மா என்றும், நிஷாம்மாவை சின்னம்மா என்றும் அழைக்கிறாள். ஈ.பு என்றால் ‘அம்மா‘ என்று பொருள். தன்னிடம் அடைக்களம் நாடி வரும் திருநங்கைகளுக்கு எல்லாம் அவர் “அம்மா” தான்.  இந்நாவல் திருநங்கையினரின் வாழ்வின் வழி உணர்த்தும் ஒன்று, தாய்மை என்கின்ற தகுதியை அடைய ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என்றோ, ஒரு உயிரைக் கருவில் சுமக்க வேண்டும் என்றோ கட்டாயம் ஏதும் இல்லை என்பது. தாய்மை என்பது ஒரு உணர்வு. அந்த உணர்வு ஒரு ஆணிற்குள் மேலோங்கி இருப்பினும் அதற்குப் பெயர் ‘தாய்மை’ தான் என்றும், அது பெண்மைக்கு உரியதென்றும் நிலைநாட்டும் கதைமாந்தர்கள் தான் ஈபுவும், நிஷாம்மாவும், சராவும்.

ஈ.பு எவ்வாறு பகுச்சரா மாதாவின் பிம்பமோ, சரா, கருணையின் மாதாவான குவான் யின்–ன் பிம்பம். உடைந்த பொருட்கள் எவற்றையுமே தூக்கி எறியாமல், தன்னுடைய கைவண்ணத்தினால் அவற்றை ஒன்றிணைத்து உயிர் தரும் அவளுடைய குணம், உடைந்த ஒவ்வொன்றிலும் அவள் தன்னையே காண்கிறாள் என்பதனைக் காட்டுகிறது. மேலும், அவற்றுக்கு வேறொரு வடிவம் தந்து, அவள் தன்னையே உயிர்ப்பித்துக் கொள்கிறாள் என்று எனக்குத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட குணம் கொண்டவளால் எப்படி தீபனை தண்டிக்க முடியும். 

தன் கடவுள் முன் மாத்திரம் அவள் ஆடும் அப்ஸரஸ் நடனத்தை தீபனிற்கும் அவள் காட்டுவதில், தீபனின் மேல் அவளுக்கு இருக்கும் அன்பின் ஆழம் வேறு என்று காட்டுகின்றது.

நான் இந்த உலகில் பயப்படும் முதல் மனிதர்கள், மன்னிக்கின்ற குணம் கொண்ட மனிதர்களை. தனது உடலைத் தாண்டி ஆன்மாவை நொறுக்கியவர்களை மன்னிக்கத் தயாராக இருக்கும் மனங்களை. ஒருவரை எத்தனை முறை மன்னிக்கலாம் என்று இயேசுவைக் கேட்டால் ‘ஏழு எழுபது முறை’ என்கிறார்.

சோனியாவால் மட்டும் தான் ரஸ்கோல்னிகோவிற்கு மன்னிப்பும் மீட்பும் வழங்கிட முடியும். நெக்கில்யுதோவை மன்னிப்பதின் வழி மட்டும் தான், தன்னை மீட்டுக்கொள்ள முடியும் என்று மஸ்லோவா சொல்கிறாள்.

அதே வழியில் சராவால் மட்டும் தான் தீபனுக்கு மன்னிப்பும் மீட்பும் வழங்கிட முடியும். இறுதியில், “உன்ன சாவடிக்கத் தான் நான் வந்தேன்?” என்று தீபன் கூறும் தருணத்தில், அவனுடைய ஆன்மா மாசடையக் கூடாதென்று, சரா மேற்கொள்ளும் முடிவில் அவள் தேவதை ஆகின்றாள். அக்கணம் தீபனிற்கு அவனது ஆண்மையைத் திருப்பித் தந்து அவள் தன்னை அப்ஸரஸ் என்றும் குவான்–யின் என்றும் நிறுவுகிறாள்.

என் நிஜ வாழ்வில் என்னால் இந்த அளவு ஒருவனை நேசிக்க முடியுமா என்று கேள்வி எழுந்தது என்னுள்.

ஆனால் நாவல் அப்படியொரு சுதந்திரத்தை அந்தரங்கமாக வழங்குகின்றதே. சராவாக உருமாறி தீபனை என்னால் நிபந்தனைகளின்றி நேசிக்கவே முடிந்தது. மன்னிக்கவும் முடிந்தது.

அதே சமயம் தன் மகளை அழிக்கத் துணிந்தவனை மகளே மன்னித்தாலும் தாயால் மன்னிக்க முடியாது. ஈ.புவாகவும் நிஷாம்மாவாகவும் என்னுடைய பயணத்தில் என்னால் தீபனை ஒரு இம்மி அளவு கூட மன்னிக்க முடியவில்லை.

பொதுவாக, பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று வாதாடுவது மிக சுலபமான ஒன்று. நாவல் நெடுகிலும் சௌவாட்டிலும், காராட் பஜாரிலும் இயங்கும் இருள் உலகையும், திருநங்கைகளுடயை இருண்ட வாழ்க்கையைப் பற்றியும் பேசப்பட்டாலும், என்னை மிகவும் பாதித்தக் கதாப்பாத்திரம் “தீபன்” தான்.

தன் வீட்டை விட்டு வெளியேறி, ‘தாய் மாமன் வீட்டில் தஞ்சம் புகுந்து, பிறகு காராட் பஜாரில் திருட்டுப் பொருட்களை கூவி விற்பவனாக, பிறகு பாலியல் விடுதிக்குக் காவலனாக, போதைப் பொருள் விற்பவனாக, மேலும் திருநங்கையனரின் இருள் வாழ்வில் சிக்கிக் கொள்கிறான். பின்பு ஒரு கட்டத்தில் இந்த மொத்த இருளில் இருந்தும் தன்னை மீட்டுக் கொண்டு வீடு திரும்பும் நோக்கத்தில் ஓடுகிறான். அந்த ஓட்டத்தின் நடுவில் ஒரு கணம் நின்று யோசிக்கின்றான். அவன் உண்மையில் எதனைக் கண்டு ஓடுகிறான் என்று, ஒரு கேள்வி அவனுள் எழும். புறத்தில் அவனைச் சுற்றி இயங்கும் இருள் உலகைத் தவிர்த்து அவன் தனக்குள்ளேயே திரும்பிப் பார்த்த கணம் அது. அவனுள் இருக்கும் இருளை ஒவ்வொன்றாக விலக்கிக் கொண்டே செல்ல, அவ்விருளின் அடிமட்டத்தில் “க்காவா” என்ற ஒலி கேட்கின்றது. தீபனின்

நண்பனது மூளை வளர்ச்சி குன்றிய தங்கையின் குரல் அது. அவளுக்கு எல்லா மொழியும், உணர்வும் ‘க்காவா’ என்பது மாத்திரமே. தீபனால் வன்புணரப் பட்ட போதிலும் அவள் எழுப்பியது “க்காவா” என்ற ஒலி மாத்திரமே. 

நாம் எல்லோருமே பிறந்த பொழுது இருந்த குழந்தைத் தனத்துடன் வாழ முடிகின்றதா? ஆம் என்றால் எது வரை ? ஏவால் தந்த ஆப்பிளை ஆதாம் உண்ணும் வரை தான். அவ்வகையில் தீபன் எனக்கு ஒரு ஒட்டுமொத்த உணர்வின் பெட்டகமாகத் தான் தெரிகின்றான். அவனுக்குள் இருக்கும் இருளுக்கும் ஒளிக்கும் மாறிக் கொண்டே இருக்கின்றது அவனுடைய பிம்பம்.

அம்மாவிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியவன் தான், அதே அம்மாவிற்காக ஏங்குகிறான். அம்மாவின் மடி போதும், அம்மாவின் மன்னிப்பு போதும், அவனுக்கு மீட்பு கிடைத்துவிடும் என்று உறுதியாக நம்புகிறான்.

பாலியல் விடுதியில் உடல்நிலை சரியில்லாத பெண்ணோடு உக்கிரமாக உறவு கொள்ளச் சொல்வது அவனுள் இருக்கும் இருள். அதே சமயம் அந்தப் பெண் வாடி வதங்கி இருக்கின்றாள் என்று அவள் மீது ஒரு துளி கருணை காட்டுவது அவனுள் இருக்கும் ஒளி.

சராவிற்குள் இருக்கும் பெண்ணிற்கும் ஆணிற்கும் அவன் அல்லாடும் பொழுது அவன் மீது பரிதாபம் தான் வந்தது எனக்கு. சராவைக் கொல்வதொன்று தான் அவன் தப்பிக்க ஒரே வழி என்று அவன் மேற்கொள்ளும் பயிற்சிகள் யாவும் ஒரு வித அச்சத்தைக் கிளர்த்தியது என்னுள். உதாரணமாக ஒரு சிறு கருங்குரங்கினை அவன் கொன்ற விதம். அப்பார்ட்மெண்டில் கண்ணன், தினம் விளையாடும் பூனையினை தீபன் கொன்ற அந்தத் தருணம். அதனைக் கொன்று விட்டு தனது போர்வைக்குள் ஒழிந்து கொண்டு அவன் சிந்திய ஏளனச் சிரிப்பு அவன் மீது அத்துனை கசப்பை உண்டாக்கியது. எத்தனை குரூரம் அவனுக்குள் இருக்க வேண்டும் என்று  கோபம் எழும் பொழுது அடுத்த கணமே அந்த பூனைக்காக வருந்தும் கண்ணனை எண்ணி வருந்தும் தீபனையும் காண முடிந்தது.

இறுதிக் கட்டத்தில் ஊரை விட்டு ஓட முற்படும் முன்பு கண்ணனுக்காகத் தன் மாமாவின் கடனை அடைத்துவிட்டுத் தான் கிளம்புகிறான்.

தீபனின் கதாபாத்திரத்தை நவீன் அவர்கள் ‘நான்‘ என்ற நிலையிலிருந்து ஏன் எழுதினார் என்று என்னுள் கேள்வி எழுந்தது. பொதுவாக அது ஆசிரியருடைய குரல் என்று எடுத்துக் கொள்வோம்.

ஆனால் இந்த நாவலில் ‘நான்’ என்கிற நிலையில் இருந்து எழுதி, எழுத்தாளர் நவீன் அவர்கள், அவருடைய வாசகர்களுக்கு விடுக்கும் ஒரு மாபெரும் சாவல் என்று எனக்குத் தோன்றுகிறது..

தீபன் கண்ட அனைத்துமே அவனுக்குள் இருக்கின்ற இருள் மட்டும் தானா?. அப்படியான இருண்ட பக்கங்களும் இருண்ட அறைகளும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கலாம் தானே?. நவீன் அவர்கள் தீபனின் கதாபாத்திரம் வழியாக வாசகருக்கு விடுக்கும் பெரும் சவால் அது தான் என்று எனக்குத் தோன்றுகிறது.

நம்முள் மண்டிக் கிடக்கின்ற இருளை உலகுக்கு அறிக்கை இடத் தேவையில்லை. குறைந்த பட்சம் ஒருமுறையேனும் நம்முள் திரும்பிப் பார்க்கின்ற தைரியம் இருக்கின்றதா என்று நம்மை சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம்.

ஆசிரியரின் குரல் என்று தப்பித்துக் கொள்ளாமல் தீபனாக உருமாறி சிகண்டி நாவலைப் பிரவேசிக்க முடியுமெனில் நம்முடைய இருளைக் காண்பதும் சாத்தியம் என்று தான் நினைக்கின்றேன்.

திருநங்கையை மையப்படுத்தி, சு. வேணுகோபால் அவர்கள் எழுதிய பால்கனிகள் எனும் குறுநாவல் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமானதொரு மைல் கல். அதிலருந்து ம.நவீன் அவர்களின் சிகண்டி ஒரு மாபெரும் பாய்ச்சல்.

அமெரிக்காவில், கலிபோர்னியா மாகானத்தில் டெத் வேலி நேஷனல் பார்க் (Death Valley National Park) என்கிற இடம் உள்ளது. 3.4 மில்லியன் ஏக்கரில் அமைந்துள்ள இவ்விடத்தில் எண்ணற்ற பெரிய அபூர்வு மலைகளைக்  காண முடியும். பல்வேறு வண்ணங்களிலும், வடிவங்களிலும் பெரும் நிலப்பரப்பில் உயர்ந்து, அகன்று, பரந்து இயற்கை செதுக்கி இருக்கும் சிற்பங்களாக மலைகளின் கூட்டம் அவ்விடம். அவைகளில்  ஒன்று, Badwater Basin என்ற இடத்தில் அமைந்துள்ள கருப்புமலை(Black Mountains). அம்மலையின் கருமை என் மனதை ஒருவகையான அலைக்கழிப்பிற்கு உள்ளாக்கியது. அவ்வளவு பெரிய அடர்ந்த கருமையை என்னால் என்னுள் ஏற்றி நிரப்பிக் கொள்ள முடியாமல் தவித்தேன். அம்மலை ஏதோ இவ்வுலகின் ஒட்டுமொத்த இருளையும் தன்னுள் நிரப்பிக் கொண்டது போல வீற்றிருந்தது. அம்மலையைக் காணக் காண என்னுள் பெயர் தெரியாத உணர்வலைகள் என் கட்டுப்பாட்டில் இல்லாமல் அலை போல எழும்பிக் கொண்டே சென்றது. அத்துணை கார் இருளை என்னால் தாளமுடியவில்லை. அதே இருளாக, அதே உணர்வாக, அதே கனமாகத்தான் சிகண்டி நாவல் என்னுள் பரவி இருக்கின்றது.

முடிவாக, ஒஷோவின் கூற்றுப்படி ஆதாம் ஆக வீட்டை விட்டு வெளியேறியவன் மீண்டும் வீட்டிற்குத் திரும்ப வேண்டுமெனில் அவன் இயேசுவாகினால் மட்டுமே அது  சாத்தியம். அதுவே இந்நாவலின் முடிவும் ஆகும்.

–மலர்விழி மணியம்.

சிகண்டி வாங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 04, 2025 11:31

தொல்பாறைகளின் தொடுகை- தேவி லிங்கம்

இந்த குகை ஓவியங்கள் நம்முடைய மூதாதையர்களின் கைகளால் செதுக்கப்பட்டது என்பதை அறிந்துக்கொண்டு காணும் பொழுது இந்த ஓவியங்கள் மீது இனம்புரியாத பற்றுதல் ஏற்படுகிறது.அதை அருகில் சென்று கைகளால் தொட்டுப்பார்க்க வேண்டும் என உந்துதல் ஏற்படுகிறது.

தொல்பாறைகளின் தொடுகை

I had come to the Dooran festival. I have never seen such a large number of young people at a literary gathering in Erode. Every venue was filled with young people. It was astonishing to see so many young women along with young men. It is very rare for women to come to a literary gathering.

Where did they come?
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 04, 2025 11:30

October 3, 2025

உரையாடும் காந்தி, உரையாடல்கள்

காந்தியைப் பற்றிய என் கட்டுரைகள் அடங்கிய உரையாடும் காந்தி என்னும் நூலைப் பற்றிய  இணைய உரையாடல். அக்டோபர் 5, 2025. காலை 730

அனைவரும் பங்கேற்கலாம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 03, 2025 19:04

ஒரு திறப்புவிழா

 

அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு,

காந்தியவாதி G.S. லட்சுமண ஐயர் தன் இறுதி காலம் வரை தலித் மாணவர்களுக்காக நடத்தி வந்த D.S. ராமன் – சரோஜினி தேவி விடுதியின் புதிய வளாகம் அக்டோபர் ஐந்தாம் தேதி கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் அவர்களால் திறக்கப்படவுள்ளது. விடுதியின் முன்னாள் மாணவரான மதிப்பிற்குரிய அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனர் கா. தங்கவேல் அவர்களின் பெருமுயற்சியில் விடுதியின் புதிய வளாகம் கட்டப்பட்டுள்ளது. மேலும்  லட்சுமண ஐயரைப்பற்றி புத்தகம் கொண்டு வர வேண்டும் என்பது சிவராஜ் அண்ணாவின் நீண்டகால கனவு. மூதன்னை கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் அவர்களின் விருப்பமும் கூட. புத்தகத்தை ‘சத்திய மானுடம்‘ என்னும் தலைப்பில் அவரைப் பற்றிய ஆவண நூலாக அக்டோபர் ஐந்தாம் தேதி வெளியிடுகிறோம்.

 புத்தகத்தில் லட்சுமண ஐயர் அவர்களைப் பற்றி பல்வேறு ஆளுமைகள் எழுதிய கட்டுரைகள், அவருடைய நேர்காணல் மற்றும் உங்களின் ‘காந்தியும் தலித் அரசியலும்‘ கட்டுரையுடன் நான் லட்சுமண ஐயரின் வாழ்வைப் பற்றி எழுதியதும் அடங்கியுள்ளது. என் எழுத்து அச்சாகி புத்தகமாக வருவதை மகிழ்ச்சியுடன் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன் ஜெ. எழுதுதலும் அறிதலுமே எனக்கு நிறைவளிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. என் தன்னறம் அதுவே என்று உணர்கிறேன். உங்களின் மாணவனாக உங்கள் ஆசி வேண்டுகிறேன். புத்தகம் அச்சாகி வந்ததும் உங்களுக்கு அனுப்புகிறோம். விழா அழைப்பிதழை இந்த கடிதத்தோடு இணைத்துள்ளேன் ஜெ.

ஞானசேகரன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 03, 2025 11:36

கரூர் சாவுகள், எழுத்தாளன் சொல்லவேண்டியவை

 

அன்புள்ள ஜெ.,

கரூர் விஜய் பரப்புரை நெரிசலில் சிக்கி 41 உயிர்கள் பலியானது இந்திய அளவில் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது . இது குறித்த உங்களின் கருத்து எதுவும் இதுவரை உங்கள் வலைப்பக்கத்தில் பதிவாகாமல் இருப்பது கவலை அளிக்கிறது. பொதுநிகழ்வுகள் பற்றி கருத்து எதுவும் தெரிவிக்கப் போவதில்லை என்று நீங்கள் முன்னர் கூறியது என் நினைவில் உள்ளது. ஆனாலும் நீங்கள் மானுடத்தின் மீது கொண்டுள்ள ஆழமானஅன்புக்கும் அக்கறைக்கும் நீங்கள் கரூர் சம்பவம் பற்றியஅபிப்ராயம் தெரிவிப்பது முக்கியம்என்று நான் கருதுகிறேன். விலை மதிப்பற்ற உயிர்கள் சாதாரணநிகழ்வின் மூலம் பறிபோனதை நாம் எளிதாகக் கடந்து செல் ல இயலாது அல்லவா..பரிசீலிக்க வேண்டுகிறேன்.

அன்பின்

கீரனூர் ஜாகிர்ராஜா

அன்புள்ள கீரனூர் ஜாகீர் ராஜா,

 உங்கள் உணர்ச்சிகளை புரிந்து கொண்டேன். ஆனால் சமகால அரசியலுக்கு எதிர்வினை ஆற்றுவதில்லை என்பதை நான் ஒரு கொள்கை முடிவாக கொண்டிருப்பதற்கான காரணங்கள் சில உண்டு .அரிதாக சிலவற்றுக்கு நான் எதிர்வினை ஆற்றுவும் செய்கிறேன் .

சில சமூகநிகழ்வுகள், உதாரணமாக விபத்துக்கள் அல்லது  போராட்டங்கள் அல்லது குற்றங்கள் போன்றவை  மிக நேரடியானவை. அவற்றின் காரணங்கள் மிக அப்பட்டமானவை. அவற்றைப் பற்றி ஓர் எழுத்தாளர் சொல்வதற்கு என்று பெரிதாக எதுவும் இல்லை என்பதுதான் உண்மை .வழக்கமான கண்டனமும் வருத்தமும் மட்டும்தான் தெரிவிக்க முடியுமே ஒழிய, அதற்கு அப்பால் குறிப்பிடும்படியாக எதையுமே சொல்வதற்கு இருப்பதில்லை.  அந்நிலையில் ஏற்கனவே சூழலில்  வந்த கண்டனங்கள், வருத்தங்கள், இரங்கல்களுடன் ஒன்றாக தன்னுடைய குரலையும் எழுத்தாளர் பதிவு செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. 

அந்த கண்டனம் அல்லது வருத்தம் என்பது எழுத்தாளர் ஒருவகையான பெரிய மனிதர், பரவலாக அறியப்பட்டவர் என்ற அளவில் மட்டுமே அமைகிறது .எந்த இடத்தில் குறிப்பாக ஒன்றை, பிறர் சொல்லாத ஒன்றை, அவரால் சொல்ல முடியுமோ அங்கு மட்டுமே எழுத்தாளர்  தன் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அத்தகைய ஒரு கருத்து எனக்கு இருக்கும் தருணங்களில் எல்லாம் வலிமையாக அதைத் தெரிவித்து இருக்கிறேன்.  சம்பிரதாயக் கருத்து என்பது  இலக்கியத்தின் வழிமுறை அல்ல. இலக்கியவாதி அப்போது தன்னை ஒரு பெரிய மனிதனாக மட்டுமே வெளிப்படுத்திக் கொள்கிறார் .அல்லது சூழ்ச்சியும் தந்திரமும் கொண்டு தனக்கு என ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கொள்கிறார். அது ஓர் இழிவு.

இன்று பொதுவெளியில் பெரிய மனிதர்களாக தங்களை முன்வைக்கும் ஒவ்வொருவருக்கும் தேவையான நிபந்தனை என்பது ஒவ்வொன்றிலும் அவர்களுக்கு இருக்கும் நிலைப்பாட்டை முன்வைப்பது. அதை ஊடகமும் மக்களும் அவர்களிடம் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அது அரசுச் சார்பா, அரசு எதிர்ப்புச் சார்பா, எந்த நிறுவனம் சார்ந்தது என்பதுதான் முக்கியமானது. அதை எவரும் நேர்மையாக, இயல்பாகச் சொல்வதில்லை. அவர்கள் தங்களுக்கு என உருவாக்கிக் கொண்டிருக்கும் ஒரு பொதுவெளிப் பிம்பத்தின் ஒரு பகுதியாகவே அந்த கருத்துரைப்பை உருவாக்கி கொள்கிறார்கள் . எழுத்தாளர்களில் சிறந்த பெரியமனித உதாரணம் வைரமுத்து. எந்த நிகழ்வுக்கும் அவருடைய மிகச்சம்பிரதாயமான கவிதை வெளிவந்துவிடும். ஓர் அலுவலகத்தின் அறிக்கை போலவே அது இருக்கும்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தையும் பற்றி என்ன சொல்வார்கள் என்பது சாதாரணமாக பொதுவெளியில் புழங்கியவருக்கும் தெரிந்தே இருக்கும். எவருமே அதை மீறி ஒன்றை சொல்லி சொல்வதில்லை. அவ்வாறு சொல்லவும் அவர்களால் முடியாது. அவர்கள் அதுவரைக்கும் சொல்லி வந்த பலவற்றுடன் அது இணைந்து செல்ல வேண்டும் .அதில் முரண்பாடுகள் இருக்கக் கூடாது. ஒருவருக்கு தான் முன்பு சொன்ன ஒரு கருத்திலிருந்து வளர்ந்தோ மாறுபட்டோ இன்னொரு கருத்து இருப்பது ஏற்றுக்கொள்ளப்படுவதே இல்லை.

இந்த சம்பிரதாயக் கருத்துக்களின் மிகப்பெரிய பிரச்சனை என்ன என்றால் அதில் இருக்கும் போலித்தன்மை அல்லது நடிப்புதான்.கரூர் நிகழ்வை ஒட்டி ‘தூங்க முடியவில்லை’, ‘உடைந்து போய்விட்டேன்’, ‘வாழ்வே அர்த்தம் அற்று போய்விட்டது’, ‘என்ன அர்த்தம் இதற்கெல்லாம் என்று எண்ணி எண்ணி மருகுகிறேன்’ என்றெல்லாம் முகநூலில் பதிவு போட்டவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் இப்போது காந்தாரா அல்லது இட்லி கடை எது சிறப்பு என்று விவாதத்திற்கு ஈடுபட்டு அகன்று சென்று விட்டார்கள். எந்த வகையிலும் அவர்களுக்கு கரூர் நினைவில் வருவதில்லை. அந்த கண்டனம் அல்லது வருத்தம் வெளிப்பட்ட பதிவை கூட கரூர் அளித்த எளிய அகத்தொந்தரவை களைந்து அடுத்த கூட்டுக் களியாட்டத்திற்குச் செல்வதற்கான ஒரு வழிமுறையாகத்தான் வெளிப்படுத்தினார்களோ என்ற ஐயம் எனக்கு உள்ளது .

எழுத்தாளர் அவ்வாறு ஒன்றை எளிதில் தன் உள்ளத்தில் இருந்துகழுவி விடக்கூடாது .அவரைப் பாதிக்கும் ஒன்று அவனுக்குள் இருக்க வேண்டும் .அதன் நஞ்சும் கசப்பு அவருக்குள் ஊற வேண்டும். இல்லை என்றால் அவருடைய ஆளுமை மிக மேலோட்டமாக ஆகிவிடும். சமகாலம் விரிக்கும் இந்த வலைக்குள் எழுத்தாளர் சிக்கிக் கொள்ளக்கூடாது என்று நான் நினைக்கிறேன்.

எழுத்தாளர் மூன்று விஷயங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒன்று, அவருடைய பார்வை என்பது ஆய்வு நோக்கு சார்ந்ததாக இருக்கக் கூடாது. ஆய்வாளருக்கு ஆய்வு முறைமை, அதற்கான அமைப்பு இரண்டும் இருக்கவேண்டும். எழுத்தாளரிடம் அவை இல்லை. அவர் ஆய்வாளர் அல்ல. ஆனால் இங்கே ஆய்வாளர்களாக வெளிப்படுபவர்களிடம் எந்த  வகையான ஆய்வு அமைப்பும் இல்லை, ஆய்வு முறைமையையும் அவர்கள் கடைப்பிடிப்பதில்லை.  ஆனால் சாதாரண மனிதனுக்குரிய ஒரு வகையான உணர்ச்சி கொந்தளிப்பைச் சேர்த்து ஆய்வாளரின் மொழியில் கருத்துச் சொல்கிறார்கள்.  தனக்கு உரிய ஒரு கட்சிச் சார்பு அல்லது அமைப்புச் சார்பை முன்வைப்பதற்கான  ஒரு பாவலாவாக மட்டுமே அதைச் செய்கிறார்கள்.

எழுத்தாளரின் கருவி என்பது தனி அனுபவம் மட்டும்தான். தனி அனுபவத்திலிருந்து தன்னுடைய நுண்ணுணர்வாலும் கற்பனையாலும் அவர் சென்றடைய கூடிய பொது அனுபவச் சித்திரமும், அதிலிருந்து அவர் உருவாக்கும கருத்துக்களும் தான் முக்கியமானவை .அந்த கருத்துக்கள் அவர் பல்வேறு வகையில் அடைந்த வாழ்க்கை அனுபவத்தின் ஒட்டுமொத்தமாக அமைகின்றன. அந்த வாழ்க்கை அனுபவத்திலிருந்து அவர் பொது உண்மையை நோக்கி செல்லும் பாதை என்பது அவருடைய வாசகர்களுக்கு தெரிந்ததாகவே இருக்கும். அது நுண்ணுணர்வும் கற்பனையும் கலந்த ஒன்று. கற்பனை என்பது பொய்யை உருவாக்குவது அல்ல, மெய்யை துலக்குவது என்றுதான் நான் எப்போதும் சொல்லி வருகிறேன்.  

இரண்டாவதாக, எழுத்தாளர் ஒருபோதும் பொதுவெளியில் இருக்கும் உணர்ச்சி நிலைகளுக்கு கட்டுப்பட்டவராக இருக்கக் கூடாது .பொதுவெளியில் உருவாகும் கருத்துக்களுக்கு ஏற்ப தன்னுடைய கருத்துக்களை அமைக்கும் எழுத்தாளர் தன்னுடைய ஆளுமையைக் பொதுவெளியில் கரைத்துக் கொள்கிறார். கற்பூரத்தை காற்றில் திறந்து வைப்பது போல தன்னை அழித்துக் கொள்கிறார் . பொதுவெளி தன்னை கரைப்பதற்கு எதிராகவே எழுத்தாளர் ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டே இருக்கிறார். இந்த போராட்டம்தான் அவருடைய வாழ்நாள் முழுக்க நீடிக்கும் ஒரு எதிர்ப்பு நிலையை உருவாக்குகிறது. ஏதோ ஒரு வகையில் அது மிதமிஞ்சிப்போய் பொதுச்சிந்தனைக்கு எதிரான ஒன்றாகவே தன் அகத்தை அவர் கட்டமைத்துக் கொண்டு வாய்ப்பு உண்டு என்றாலும் எதிர்நிலையும் எச்சரிக்கையுமே பாதுகாப்பனது என்று நினைக்கிறேன்.

பொதுக்கருத்துக்கு என்பது மிக எளிதாகத் திரண்டு வரக்கூடியது. பொதுச் சமூகத்திற்கு அவ்வாறு பொதுக் கருத்தை உருவாக்கிக் கொள்வதற்கு ஒரு நீண்ட பின்புலமும் உள்ளது .அது எவ்வாறு அந்த பொதுநிலைபாட்டை உருவாக்கிக் கொள்ளவும் என்பதும் அதன் கூட்டுஉள்ளம் செல்லும் வழி என்ன என்பதும் எவருக்கும் தெரிந்த ஒன்றாகவே இருக்கும். அதை எழுத்தாளராக நுணுக்கமாக பின்தொடர ஆரம்பித்தால் அவரும் அந்த பிரம்மாண்டமான கூட்டு மனதின் ஒரு பகுதியாக ஆகிவிடுவார் .அந்தபொதுமையையே தானும் வெளிப்படுத்துவார் .அது அவரை காலப்போக்கில் மிக எளிய சிந்தனை உள்ளவராக ஆக்கிவிடும். ஓர் எழுத்தாளன் அவ்வாறு ஆவது என்பது ஒரு விதமான அறிவுத் தற்கொலை. ஆன்மீகமான அழிவு

என் நண்பர் மலையாள இதழ் ஆசிரியர் ஒருவர் சொன்னார். கேரளத்தில் ஒரு பெரு நிகழ்வு என்றால் முதல் கட்டுரை எவரிடமிருந்து என்று சொல்லி விட முடியும். அந்த முதல் கவிதை முதல் பெரும்பாலும் உடனடியாக நாளிதழ்களிலோ இதழ்களிலோ வந்துவிடும். பெரும்பாலும் அட்டைப்படக் கட்டுரையாகவோ கவிதையாகவோ அது இருக்கும் .அது எளிதில் புகழைப் பெறுவதற்காக ஒரு வழி. ஆனால் இந்த வழி என்பது எழுத்தாளனுக்கு உகந்ததல்ல, அது ஒரு மலினமான பாதை. செய்தி வெளிவந்துகொண்டிருக்கையிலேயே எழுத அமர்ந்து விடுகிறார்கள் என்று ஏளனமாக அவர்களைப் பற்றிச் சொல்லுவதுண்டு. டெலிபிரிண்டர் கவிதைகள் என்று அவற்றை ஒரு நண்பர் சொன்னார். தானாகவே வெளிவந்துவிடும்.

எழுத்தாளர் முன்பின் முரண்படுவதற்கு அஞ்ச கூடாது என்பது மூன்றாவது நெறி என்று சொல்லலாம். எழுத்தாளருடைய வழி என்பது அந்தந்த தருணத்தில் இயல்பாக எதிர்வினை ஆற்றுவது மட்டுமே. அது தன்னிச்சையாக இருக்க வேண்டும். அவருடைய உள்ளம் அக்கணத்தில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதுதான் முக்கியம். அதற்கு அர்த்தம் இல்லாமல் இருக்கலாம் .ஒருவேளை அது முரட்டுத்தனமாக அல்லது அசட்டுத்தனமாகக் கூட இருக்கலாம். ஆனால் அது தன்னிச்சையாக இருக்க வேண்டும். திட்டமிட்ட ஒன்றாக இருக்கக்கூடாது.

அந்தத் திட்டமிட்டத் தன்மைதான்  ஒருமையை உருவாக்குகிறது. நேற்றும் முந்தையநாளும்  சொன்ன அனைத்திற்கு ஒரு தொடர்ச்சியை உருவாக்குகிறது. அந்தத் தொடர்ச்சி தன்னியல்பாக அமையலாம். அது அவருடைய கருத்துப் பரிணாமம்.  ஆனால் அவர் யோசிக்க கூடாது, திட்டமிடக்கூடாது. ஓர் எழுத்தாளரிடம் “நேற்று அப்படிச் சொன்னாய், என் இன்று இவ்வாறு சொல்கிறாய்” என்று  கேட்பது என்பது ஒரு இலக்கிய வாசகன் செய்யக்கூடியதல்ல. அக்கணத்தில் எதிர்வினை ஆற்றுவதன் வழியாக கலைஞர் வெளிப்படுத்தும் உள்ளுணர்வு மட்டுமே அவருடைய அறிவுப் பங்களிப்பாக இருக்கும்.அவருடையது அகப்பங்களிப்பே  ஒழிய தர்க்கபூர்வமான பங்களிப்பு அல்ல . 

ரமேஷின் மரணத்தை காத்திருக்கும் போது தான் கரூரின் செய்தி எனக்கு வந்தது. அந்த செய்தி எனக்கு எந்த வகையில் பாதிப்பை அளித்திருக்கும் என்பதை உங்களால் எளிதில் உணர முடியும்.  கொந்தளிப்பு , வருத்தம், கசப்பு. ‘விதியே தமிழ்ச்சாதியை….’ என பாரதி குமுறிய அதே உணர்வுநிலை. அதைத்தான் நாம் எழுத்தாளர் அனைவருமே உணர்வோம். அந்நிகழ்வில் ஓர் அரசு என்ன செய்யமுடியுமோ அதைச் செய்துள்ளது, காவல்துறை மிகப்பொறுப்பாகவே செயல்பட்டுள்ளது என்பதே செய்திகள் மற்றும் காணொளிகள் வழியாக எனக்குப் புரியவந்தது. அந்நிகழ்வை ஒருங்கிணைத்த கட்சி அனுபவமின்மையால் முறையாக ஏற்பாடுகள் செய்யவில்லை, கெடுநிகழ்வு நிகழ்ந்தபின் துணிந்து அதற்குப் பொறுப்பேற்று அங்கு நின்று அடுத்தபட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கவேண்டும். மன்னிப்பு கோரியிருக்கவேண்டும். இனி நிகழாது என அறிவித்திருக்கவேண்டும்.இங்கே நடப்பதெல்லாம் எப்போதும் கட்சியரசியலில் உள்ள வழக்கமான குற்றம்சாட்டுதல், சதிக்கோட்பாடுகளைப் புனைதல் மட்டுமே. ஆனால் இதை எல்லா கட்சிகளும் செய்கின்றன, ஏதேனும் ஒரு கட்சி செய்யாது என்று என்னால் சொல்லமுடியவில்லை.

நான் கவனிப்பதும், சொல்லவிரும்புவதும் வேறு. கைக்குழந்தையுடன் அங்கு சென்றபெண்களின் முகங்களை தொலைக்காட்சியில் பார்க்கும் போது வரும் கடுமையான ஒவ்வாமை.  ஒரு பெண் தன்னுடைய கைக்குழந்தையுடன் சென்றாள். கைக்குழந்தை கீழே போடப்பட்டு செத்துப் போய்விட்டது. அந்தப்பெண் விஜய் தன்னை பார்க்க வரவேண்டும், வந்து பார்க்க வேண்டும் என்றுதான் திரும்பத் திரும்பச் சொல்கிறாளே ஒழிய குழந்தை பற்றி பேசுவதில்லை. அரசு தனக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று இறந்தவர்களின் உறவினர்கள் கூச்சல் இடுகிறார்கள். எவருமே தங்கள் பிழை என எதையும் உணர்வதாக தெரியவில்லை. இந்த அறியாமைதான் பெரும் ஒவ்வாமையை உருவாக்குகிறது. அரிய மானுட உயிர்கள் என நாம் நினைக்கிறோம், அவர்கள் அப்படி நினைப்பதாகவே தெரியவில்லை.

அவர்களை பாமர மக்கள், எளிய மக்கள் என்று பார்க்கும் ஒரு கோணத்தில் இரக்கமும் ஏற்படுகிறது. அதே சமயத்தில் அறியாமை உருவாக்கும் கசப்பும் பெருகுகிறது. இந்த அறியாமையை யார் இவர்களிடம் உருவாக்கி, ஏன் நீடிக்க வைக்கிறார்கள்? இந்த அறியாமைக்கு யார் பொறுப்பு? இந்த அறியாமை இப்போது இந்தக் கட்சி சார்பில் இத்தனை சாவாக வெளிப்படுகிறது. ஆனால் எல்லா கட்சி சார்பிலும் இதுதான் அல்லவா வெளிப்படுகிறது. சாவு நிகழாமல் இருந்திருந்தால் இந்த கட்டுப்பாடில்லாத வெறியை ‘மக்களின் எழுச்சி’ என்று கொண்டாடியிருப்பார்கள். ஊடகமும் அவ்வாறே சித்தரித்திருக்கும். 

எல்லா கட்சிகளிலும், எல்லா மதங்களிலும் இதே மூர்க்கம்தானே வெளிப்படுகிறது ?இந்த பெருந்தொகையான சாவுகளை இன்னும் எங்கும் எதிர்பார்க்கலாம் .இது தொடர்ந்து தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு முன்பு இதெல்லாம் நிகழ்ந்தது இல்லை என்பது போல, இதற்கு ஒரே ஒரு தரப்பே பொறுப்பு என்பது போல, இங்கே கூச்சல் விடுக்கப்படுகிறது. மகாமகப் படுகொலைகள் என்று சுந்தர ராமசாமி எழுதிய நிகழ்வு  நம் நினைவில் இல்லை. அதன் பிறகு அத்தகைய நிகழ்வுகள் எத்தனை நடந்து இருக்கின்றன. இது ஏதோ ஏழைமக்களின் பிரச்சினையா? சென்னையில் விமானப்படை நெரிசலில் இறந்தவர்கள் எல்லாம் உயர்வர்க்கத்தினர் அல்லவா? அங்கும் இருந்தது இதே கண்மூடித்தனமான மூர்க்கம்தானே?

இத்தகைய சாவுகள் நிகழாத இடங்களிலேகூட  இதை பார்த்திருக்கிறேன். அங்கே சாவு நிகழ எல்லா வாய்ப்பும் உண்டு. பொதுவெளியில் பெரும்பாலான இளைஞர்கள் முற்றிலும் போதையில், எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வெற்றுக்கூட்டமாக கொந்தளிக்கிறார்கள். அங்கே ஒரு சாமானியனுக்கு எந்த உரிமையும் இல்லை.  மதுரை சித்திரைத்திருவிழாவுக்குச் சென்று பாருங்கள். எந்த நெறியும் இல்லாத, எவராலும் கட்டுப்படுத்தப்படாத பல்லாயிரம் பேர் போதைவெறியில் கும்மாளமிடுவதைக் காணலாம். எங்கும் இதெல்லாம் திரும்பவும் நடப்பதற்கு எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன.

பெரும்பாலான பொது நிகழ்வுகளில் கட்டற்ற நெரிசல் என்பது எப்போதும் உள்ளது. வெறிகொண்ட இளைஞர் கூட்டம் எந்த வகையான நெறிகளுக்கும் அப்பாற்பட்டு கட்டிடங்கள் மேல் ஏறுவதும் வீடுகளை தாக்குவதும், பேருந்துகளை அடிப்பதும், சாலைகளை மறிப்பதும் இங்கே அனுமதிக்கப்படுகிறது.  அது இளமையின்  இயல்பாகவோ அல்லது பொது மக்களின் அடிப்படை உரிமையாகவோ  கருதப்பட்டு நம்மால் ஏற்கப்படுகிறது. கட்டின்மையை நாமே அனுமதிக்கும் வரை நம்மால் இத்தகைய நிகழ்வுகளை நம்மால் தவிர்க்க முடியாது . அண்மையில் மஞ்ஞும்மல் பாய்ஸ் என்னும் படத்தில் இந்த குடிவெறியும் கட்டின்மையும் கொண்டாடப்பட்டபோது நான் கடும் கண்டனத்தை தெரிவித்தேன். என்னை தமிழ் அறிவுஜீவிகள் உட்பட பெரும்பாலானவர்கள் வசைபாடினார்கள். அது ‘எளியமக்களின்’ இயல்பாம். அதை கண்டிக்கக்கூடாதாம்.

இப்படி ஒரு சாவு நிகழும்போதும் அதிலிருந்து பொதுமக்களின் கட்டுப்பாடின்மை, இளைஞர்களின் பொறுப்பின்மையை விலக்கிவிட்டே பேசுகிறார்கள்.பொதுமக்கள் பற்றி இங்கே நாம் குறைசொல்லக்கூடாது. அரசை குறைச் சொல்வதே ‘மோஸ்தர்’. அல்லது அரசியல் தலைவர்களை குறைச் சொல்லவேண்டும். பொதுமக்கள் புனிதர்கள். அவர்கள் என்ன செய்தாலும் அது சரி. ஆகவே என் கருத்து ஒருவகையில் எல்லா தரப்பினராலும் வசைபாடப்படும். உண்மையில் செய்யவேண்டியது பொதுவெளியில் மக்களின், குறிப்பாக குடிவெறியினரின் நடத்தையை எப்படி கட்டுப்படுத்துவது என்பதைப்பற்றி மட்டுமே. அந்த ஒரு விஷயத்தை தவிர மிக அனைத்தையும் அரசியல் கட்சிகள் இன்று பேசிக் கொண்டிருக்கின்றன. 

இந்த நிகழ்வில் பல சாமானியர்களின் குரல்கள் வெளிவந்தன. அவர்கள் விஜயை பார்க்கச் சென்றவர்கள் அல்ல. கடைகண்ணிகளுக்குச் சென்றவர்கள், வேலைக்குச் சென்றவர்கள், பள்ளிக்குச் சென்றவர்கள். அவர்களின் பாதைகள் முழுக்க மறிக்கப்பட்டன. அவர்கள் வெயிலில் நடுத்தெருவில் சிக்கிக்கொண்டனர். செத்திருக்கவும்கூடும். அவர்களின் உரிமை இங்கே எவருக்கும் பொருட்டு அல்ல. அரசியல்வாதிகள் அதை கவனிக்கவே போவதில்லை. ஏனென்றால் இதே வெறியை தங்களின் தேவைக்காக அவர்கள் நாளை உருவாக்கவிருக்கிறார்கள்.

இதுதான் நான் பேசவேண்டியது. ஆனால் இந்த தருணத்தில் நான் இதைச்சொன்னால் இன்றுள்ள அரசியல் கூச்சல்காரர்கள் இதை இன்னொரு அரசியல் என்று மட்டும்தான் எடுத்துக் கொள்வார்கள். இந்தக் கருத்து ஏதேனும் ஒரு அரசியல் கட்சிக்கு சாதகமோ பாதகமோ என்று மட்டுமே பார்ப்பார்கள். இது எந்த வகையிலும் இப்போது கவனிக்கப்படாது .இந்த உணர்ச்சி நிலைகள் கடந்து சென்ற பிறகு இதை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பது என்னைப் போன்ற ஒரு எழுத்தாளர் செய்வதாக இருக்கும். 

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 03, 2025 11:35

விஷ்ணுபுரம் விருந்தினர் – 4 – ஜீவ கரிகாலன்

2025 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்படுகிறது. நிகழ்வு 20 மற்றும் 21 டிசம்பரில் நடைபெறும். அந்நிகழ்வில் வழக்கம்போல இலக்கியச் சந்திப்புகள் அமைகின்றன. இவ்வாண்டு பதிப்பாசிரியர், எழுத்தாளர் ஜீவ கரிகாலன் வாசகர்களைச் சந்திக்கிறார். ஜீவ கரிகாலன் தமிழில் ஏராளமான புதிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்தவர்.

ஜீவ கரிகாலன் ஜீவ கரிகாலன் ஜீவ கரிகாலன் – தமிழ் விக்கி/* inline tdc_css att */.tdi_1{padding-top:12px !important;padding-bottom:8px !important;border-color:#eaeaea !important;border-style:solid !important;border-width: 1px 0px 1px 0px !important;}/* custom css */.tdi_1 .td_block_inner{
width: 100%;

margin-left: -20px;
margin-right: -20px;
}.tdi_1:after{
content: '';
display: table;
clear: both;
}.tdi_1 .td-image-wrap{
padding-bottom: 100%;
}.tdi_1 .entry-thumb{
background-position: center 50%;
}.tdi_1 .td-image-container{
flex: 0 0 30%;
width: 30%;

display: block; order: 0;
}.ie10 .tdi_1 .td-image-container,
.ie11 .tdi_1 .td-image-container{
flex: 0 0 auto;
}.tdi_1 .td-module-container{
flex-direction: row;

border-color: #eaeaea !important;
}.ie10 .tdi_1 .td-module-meta-info,
.ie11 .tdi_1 .td-module-meta-info{
flex: 1;
}.tdi_1 .td-module-meta-info{
padding: 1% 5%;

border-color: #eaeaea;
}.tdi_1 .td_module_wrap{
padding-left: 20px;
padding-right: 20px;

padding-bottom: 18px;
margin-bottom: 18px;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;

border-color: #eaeaea;
}.tdi_1 .entry-thumb,
.tdi_1 .entry-thumb:before,
.tdi_1 .entry-thumb:after{
border-radius: 500px;
}.tdi_1 .td-post-vid-time{
display: block;
}.tdi_1 .td-post-category:not(.td-post-extra-category){
display: none;
}.tdi_1 .td-author-photo .avatar{
width: 20px;
height: 20px;

margin-right: 6px;

border-radius: 50%;
}.tdi_1 .td-excerpt{
display: none;

column-count: 1;

column-gap: 48px;

font-size:= !important;
}.tdi_1 .td-audio-player{
opacity: 1;
visibility: visible;
height: auto;

font-size: 13px;
}.tdi_1 .td-read-more{
display: none;
}.tdi_1 .td-author-date{
display: none;
}.tdi_1 .td-post-author-name{
display: none;
}.tdi_1 .td-post-date,
.tdi_1 .td-post-author-name span{
display: none;
}.tdi_1 .entry-review-stars{
display: none;
}.tdi_1 .td-icon-star,
.tdi_1 .td-icon-star-empty,
.tdi_1 .td-icon-star-half{
font-size: 15px;
}.tdi_1 .td-module-comments{
display: none;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0;
padding-bottom: 0;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:21px !important;line-height:1.2 !important;
}html:not([class*='ie']) .tdi_1 .td-module-container:hover .entry-thumb:before{
opacity: 0;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}/* landscape */@media (min-width: 1019px) and (max-width: 1140px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;

padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:20px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* portrait */@media (min-width: 768px) and (max-width: 1018px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;

padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:17px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* phone */@media (max-width: 767px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;

padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}var block_tdi_1 = new tdBlock();block_tdi_1.id = "tdi_1";block_tdi_1.atts = '{"modules_on_row":"","limit":"10","hide_audio":"yes","show_btn":"none","show_excerpt":"none","show_review":"none","show_com":"none","show_date":"none","show_author":"none","image_floated":"float_left","sort":"oldest_posts","category_id":"11301","category_ids":"12659","image_width":"30","meta_padding":"1% 5%","modules_category":"","modules_category_margin":"","custom_title":"\u0bb5\u0bbf\u0bb7\u0bcd\u0ba3\u0bc1\u0baa\u0bc1\u0bb0\u0bae\u0bcd 2025 \u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba8\u0bcd\u0ba4\u0bbf\u0ba9\u0bb0\u0bcd\u0b95\u0bb3\u0bcd","custom_url":"\/tag\/2025-\u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba8\u0bcd\u0ba4\u0bbf\u0ba9\u0bb0\u0bcd\/","post_ids":"-222742","tdc_css":"eyJhbGwiOnsiYm9yZGVyLXRvcC13aWR0aCI6IjEiLCJib3JkZXItYm90dG9tLXdpZHRoIjoiMSIsInBhZGRpbmctdG9wIjoiMTIiLCJwYWRkaW5nLWJvdHRvbSI6IjgiLCJib3JkZXItY29sb3IiOiIjZWFlYWVhIiwiZGlzcGxheSI6IiJ9fQ==","show_cat":"none","excerpt_col":"","m16_el":"20","ajax_pagination":"load_more","f_title_font_size":"eyJhbGwiOiIyMSIsImxhbmRzY2FwZSI6IjIwIiwicG9ydHJhaXQiOiIxNyJ9","f_title_font_line_height":"1.2","f_ex_font_size":"=","f_ex_font_line_height":"","image_height":"100","hide_image":"","modules_gap":"","meta_info_horiz":"","container_width":"100","image_radius":"500","block_type":"td_flex_block_1","separator":"","block_template_id":"","title_tag":"","mc1_tl":"","mc1_title_tag":"","mc1_el":"","tag_slug":"","autors_id":"","installed_post_types":"","offset":"","show_modified_date":"","time_ago":"","time_ago_add_txt":"ago","time_ago_txt_pos":"","el_class":"","td_ajax_filter_type":"","td_ajax_filter_ids":"","td_filter_default_txt":"All","td_ajax_preloading":"","m_padding":"","all_modules_space":"36","modules_border_size":"","modules_border_style":"","modules_border_color":"#eaeaea","modules_border_radius":"","modules_divider":"","modules_divider_color":"#eaeaea","h_effect":"","image_size":"","image_alignment":"50","video_icon":"","video_popup":"yes","video_rec":"","spot_header":"","video_rec_title":"","video_rec_color":"","video_rec_disable":"","autoplay_vid":"yes","show_vid_t":"block","vid_t_margin":"","vid_t_padding":"","video_title_color":"","video_title_color_h":"","video_bg":"","video_overlay":"","vid_t_color":"","vid_t_bg_color":"","f_vid_title_font_header":"","f_vid_title_font_title":"Video pop-up article title","f_vid_title_font_settings":"","f_vid_title_font_family":"","f_vid_title_font_size":"","f_vid_title_font_line_height":"","f_vid_title_font_style":"","f_vid_title_font_weight":"","f_vid_title_font_transform":"","f_vid_title_font_spacing":"","f_vid_title_":"","f_vid_time_font_title":"Video duration text","f_vid_time_font_settings":"","f_vid_time_font_family":"","f_vid_time_font_size":"","f_vid_time_font_line_height":"","f_vid_time_font_style":"","f_vid_time_font_weight":"","f_vid_time_font_transform":"","f_vid_time_font_spacing":"","f_vid_time_":"","meta_info_align":"","meta_width":"","meta_margin":"","meta_space":"","art_title":"","art_btn":"","meta_info_border_size":"","meta_info_border_style":"","meta_info_border_color":"#eaeaea","meta_info_border_radius":"","modules_category_padding":"","modules_cat_border":"","modules_category_radius":"0","modules_extra_cat":"","author_photo":"","author_photo_size":"","author_photo_space":"","author_photo_radius":"","review_space":"","review_size":"2.5","review_distance":"","art_excerpt":"","excerpt_gap":"","excerpt_middle":"","excerpt_inline":"","show_audio":"block","art_audio":"","art_audio_size":"1.5","btn_title":"","btn_margin":"","btn_padding":"","btn_border_width":"","btn_radius":"","pag_space":"","pag_padding":"","pag_border_width":"","pag_border_radius":"","prev_tdicon":"","next_tdicon":"","pag_icons_size":"","f_header_font_header":"","f_header_font_title":"Block header","f_header_font_settings":"","f_header_font_family":"","f_header_font_size":"","f_header_font_line_height":"","f_header_font_style":"","f_header_font_weight":"","f_header_font_transform":"","f_header_font_spacing":"","f_header_":"","f_ajax_font_title":"Ajax categories","f_ajax_font_settings":"","f_ajax_font_family":"","f_ajax_font_size":"","f_ajax_font_line_height":"","f_ajax_font_style":"","f_ajax_font_weight":"","f_ajax_font_transform":"","f_ajax_font_spacing":"","f_ajax_":"","f_more_font_title":"Load more button","f_more_font_settings":"","f_more_font_family":"","f_more_font_size":"","f_more_font_line_height":"","f_more_font_style":"","f_more_font_weight":"","f_more_font_transform":"","f_more_font_spacing":"","f_more_":"","f_title_font_header":"","f_title_font_title":"Article title","f_title_font_settings":"","f_title_font_family":"","f_title_font_style":"","f_title_font_weight":"","f_title_font_transform":"","f_title_font_spacing":"","f_title_":"","f_cat_font_title":"Article category tag","f_cat_font_settings":"","f_cat_font_family":"","f_cat_font_size":"","f_cat_font_line_height":"","f_cat_font_style":"","f_cat_font_weight":"","f_cat_font_transform":"","f_cat_font_spacing":"","f_cat_":"","f_meta_font_title":"Article meta info","f_meta_font_settings":"","f_meta_font_family":"","f_meta_font_size":"","f_meta_font_line_height":"","f_meta_font_style":"","f_meta_font_weight":"","f_meta_font_transform":"","f_meta_font_spacing":"","f_meta_":"","f_ex_font_title":"Article excerpt","f_ex_font_settings":"","f_ex_font_family":"","f_ex_font_style":"","f_ex_font_weight":"","f_ex_font_transform":"","f_ex_font_spacing":"","f_ex_":"","f_btn_font_title":"Article read more button","f_btn_font_settings":"","f_btn_font_family":"","f_btn_font_size":"","f_btn_font_line_height":"","f_btn_font_style":"","f_btn_font_weight":"","f_btn_font_transform":"","f_btn_font_spacing":"","f_btn_":"","mix_color":"","mix_type":"","fe_brightness":"1","fe_contrast":"1","fe_saturate":"1","mix_color_h":"","mix_type_h":"","fe_brightness_h":"1","fe_contrast_h":"1","fe_saturate_h":"1","m_bg":"","color_overlay":"","shadow_shadow_header":"","shadow_shadow_title":"Module Shadow","shadow_shadow_size":"","shadow_shadow_offset_horizontal":"","shadow_shadow_offset_vertical":"","shadow_shadow_spread":"","shadow_shadow_color":"","title_txt":"","title_txt_hover":"","all_underline_height":"","all_underline_color":"","cat_bg":"","cat_bg_hover":"","cat_txt":"","cat_txt_hover":"","cat_border":"","cat_border_hover":"","meta_bg":"","author_txt":"","author_txt_hover":"","date_txt":"","ex_txt":"","com_bg":"","com_txt":"","rev_txt":"","audio_btn_color":"","audio_time_color":"","audio_bar_color":"","audio_bar_curr_color":"","shadow_m_shadow_header":"","shadow_m_shadow_title":"Meta info shadow","shadow_m_shadow_size":"","shadow_m_shadow_offset_horizontal":"","shadow_m_shadow_offset_vertical":"","shadow_m_shadow_spread":"","shadow_m_shadow_color":"","btn_bg":"","btn_bg_hover":"","btn_txt":"","btn_txt_hover":"","btn_border":"","btn_border_hover":"","pag_text":"","pag_h_text":"","pag_bg":"","pag_h_bg":"","pag_border":"","pag_h_border":"","ajax_pagination_infinite_stop":"","css":"","td_column_number":1,"header_color":"","color_preset":"","border_top":"","class":"tdi_1","tdc_css_class":"tdi_1","tdc_css_class_style":"tdi_1_rand_style"}';block_tdi_1.td_column_number = "1";block_tdi_1.block_type = "td_flex_block_1";block_tdi_1.post_count = "3";block_tdi_1.found_posts = "3";block_tdi_1.header_color = "";block_tdi_1.ajax_pagination_infinite_stop = "";block_tdi_1.max_num_pages = "1";tdBlocksArray.push(block_tdi_1);விஷ்ணுபுரம் 2025 விருந்தினர்கள்







விஷ்ணுபுரம் விருந்தினர் – 1 – மு. குலசேகரன்





















விஷ்ணுபுரம் விருந்தினர் – 2 – அரிசங்கர்





















விஷ்ணுபுரம் விருந்தினர் – 3 – கே. நல்லதம்பி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 03, 2025 11:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.