Jeyamohan's Blog, page 25
September 18, 2025
About the destruction of the Jafna library
அன்புள்ள ஜெ
தமிழ் ஹிந்து நாளிதழ் வெளியிட்ட செய்திக்கட்டுரை இது.‘உலக அளவில் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு அதிகரிப்பு’ – அமெரிக்க ஆய்வ நிறுவனம் தகவல்இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு பத்துமடங்கு உலக அளவில் கூடியிருக்கிறது என்கிறது இந்த ஆய்வு.உங்கள் தகவலுக்காக.
ராஜாராம்
இந்து வெறுப்பை எதிர்கொள்வதுAbout the destruction of the Jafna library
அன்புள்ள ஜெ
தமிழ் ஹிந்து நாளிதழ் வெளியிட்ட செய்திக்கட்டுரை இது.‘உலக அளவில் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு அதிகரிப்பு’ – அமெரிக்க ஆய்வ நிறுவனம் தகவல்இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு பத்துமடங்கு உலக அளவில் கூடியிருக்கிறது என்கிறது இந்த ஆய்வு.உங்கள் தகவலுக்காக.
ராஜாராம்
இந்து வெறுப்பை எதிர்கொள்வதுSeptember 17, 2025
A novel-writing workshop at Walnut Creek, California.
I conducted a workshop on writing novels in Chennai for Manasa Publications. Now, my friends in the USA are asking me to hold similar classes there. A one-day class is scheduled at Walnut Creek, CA
Date: Oct 12, 2025, Sunday.Venue: Walnut Creek, CATimings: 9:30 am – 6:00 pm.For contact viswanathan.mahalingam@gmail.comThis is an introductory class designed to cover the fundamentals of writing a short modern novel. Manasa Publications is hosting a novel competition and is inviting submissions from writers in the USA as well.
பெருஞ்செயல்களை எல்லாரும் செய்ய முடியுமா?
‘பெருஞ்செயல்களைச் செய்க!’ என்று ஒரு காந்தியர் எனக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்திட்டு அளித்தார். என்னால் அதைச் செய்ய முடிந்ததா? அனைவரும் பெருஞ்செயல் செய்ய முடியுமா என்ன? செய்தே ஆகவேண்டும் என்று சொல்லமுடியுமா?
அரசைக் குற்றம் சாட்டினால்…
நண்பர் ஒருவர் இந்த திரைச் சொட்டை எனக்கு அனுப்பி ‘தமிழகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பாருங்கள்’ என்று எழுதியிருந்தார். அவருக்கு இந்தியாவெங்கும் அரசு அலுவலகங்கள் எப்படி செயல்படுகின்றன என்பது தெரியாது என்று நினைக்கிறேன் .நான் பி.எஸ்.என்.எல் ஊழியனாக பணியாற்றி காலத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலேயே ஏறத்தாழ இந்தச் சூழல்தான் நிலவியது.
எனக்கு இரண்டு அனுபவங்கள் உண்டு. நான் 2000த்தில் கனடா செல்வதற்காக விசா விண்ணப்பம் செய்ய என்னுடைய ஊதியச் சான்றிதழைப் பெறுவதற்காக துறைஅதிகாரி என்னிடம் பணம் எதிர்பார்த்தார். அந்த அதிகாரியின் அணுக்கமான கடைநிலை ஊழியர் அவர் பணம் எதிர்பார்ப்பதை என்னிடம் சொன்னார். நான் பணம் அளிக்க முடியாது என்று சொன்னேன். நீங்கள் அந்த சான்றிதழ்களை பெறவே போவதில்லை என்று ஊழியர் சொன்னார்.
நான் நேரடியாக அந்த அதிகாரியிடம் போய்க் கேட்டேன். .’நான் என் ஊதியத்தில் ஒரு பங்கை என் மதத்துக்குக் கொடுப்பவள், ஆகவே எனக்கு லஞ்சம் பெறுவது பாவம் அல்ல’ என்று அந்த அதிகாரி என்னிடம் சொன்னார். நான் துறையின் உச்ச அதிகாரியிடம் நேரடியாக சென்று புகார் சொன்னேன். அவர் அந்த பெண்மணியை கூப்பிட்டு எச்சரித்தார். உடனடியாக சான்றிதழ் தரப்பட்டது .ஆனால் மூன்று நகல்கள் தரப்பட வேண்டும். இரண்டு நகல்களில் மட்டுமே கையெழுத்து போட்டு தந்திருந்தார். நான் டெல்லிக்குக் கிளம்பிச் சென்ற பிறகுதான் இரண்டு நகல்களில் கையெழுத்து இல்லை என்று கண்டறிந்தேன். ஆனால் நல்ல வேளையாக விசா விண்ணப்ப இடத்தில் பிற இரண்டிலும் கையெழுத்து இல்லை என்பதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அதில் என்னிடம் கையெழுத்திடச் சொல்லி, என்னுடைய சான்றுரையையே கணக்கில் கொண்டார்கள். எல்லா சான்றிதழ்களுக்கும் சொந்த சான்றே போதுமானதாக இருந்தது.
அதன்பின் நான் பணி ஓய்வுபெற்றேன். என் ஓய்வூதியப்பயன்கள் கிடைக்க இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியது. அதை இந்த தளத்திலேயே எழுதியிருந்தேன். ஏனென்றால் நான் அந்த ஓய்வூதியப்பயன்களுக்குப் பின்னால் செல்லவில்லை.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு ஊழியர்கள் இந்த உளநிலையிலேயே உள்ளனர். மக்களைச் சந்திக்கும் நிலையில் இருக்கும் ஊழியர்கள் எல்லாம் நேரடியாக பலவகையிலும் லஞ்சம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றும், தங்களுக்கு எதுவும் வரவில்லை என்றும் நிர்வாக அலுவலர்கள் நினைக்கிறார்கள. ஆகவே செயல் ஊழியர்கள் தங்களிடம் ஏதேனும் பணிக்காக வரும்போது நிர்வாக ஊழியர்கள் அவர்களிடம் பணம் எதிர்பார்க்கிறார்கள்.
உண்மையில் அதில் ஒரு நியாயமும் உள்ளது. மக்களைச் சந்திக்கும் ஊழியர்கள் பாதி என்றால் அலுவலகத்துக்குள்ளே இருக்கக்கூடியவர்கள்தான் எஞ்சியோர். மக்களைச் சந்திப்பவர்களில் 90 சதவீதம் பேரும் லஞ்சம் பெறுபவர்களே. சூறையில் ஒரு பகுதி பிறருக்கும் கிடைக்கவேண்டும் அல்லவா? இதில் சிக்கிக் கொள்பவர்கள் லஞ்சம் வாங்காத நேர்மையான ஊழியர்கள்தான். அவர்கள் அனைவருக்கும் லஞ்சம் கொடுத்தாக வேண்டும், நாங்கள் லஞ்சம் வாங்கவில்லை என்று சொன்னால் எவரும் நம்ப போவதில்லை.
இந்த புகாரில் என்ன நிகழும்? அரசு ஊழியனாக இருந்தவன் என்ற நிலையில் நான் ஒன்று சொல்ல முடியும், ஒன்றும் நிகழாது. பெரும்பாலும் இந்த குறிப்பிட்ட காகிதம் மட்டும் உடனடியாக பைசல் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஊடகச் செய்தி ஆகிவிட்டமையால் மேலிடத்தில் இருந்து அதைக் கூப்பிட்டு விசாரிப்பார்கள். ஆகவே அதை மட்டும் உடனடியாக அதை மேலே அனுப்புவார்கள். அல்லது வேண்டுமென்றே தவறான ஏதேனும் துறைக்கு அனுப்பி விடக் கூடும்.அல்லது ஏதேனும் உபரி விசாரணைகளுக்கான கேள்விகளைக் கேட்டு திருப்பி அனுப்பவும் வாய்ப்பு உண்டு.
ஒரு காகிதத்தை பல ஆண்டுகள் சட்டபூர்வமாக ஒத்தி போட்டுக் கொண்டே இருக்க அரசு அலுவலகங்களில் எல்லா வழிகளும் உண்டு. தவறான முகவரிக்கு ஒரு கடிதத்தை வழிநடத்தி விடுவது என்பது ஒரு பழக்கமான வழி. அது ஒரு கவன குறைவாகத்தான் கொள்ளப்படுமே ஒழிய ஒரு பிழையாக கொள்ளப்படாது. ஆகவே அதற்கு பெரிய தண்டனைகளும் இருக்காது. ஆண்டுக் கணக்கில் சில விண்ணப்பங்களை, சில கடிதங்களை திசை திருப்பி நடவடிக்கைகளை தாமதப்படுத்தவோ அல்லது நிறுத்தி விடவோ கூட முடியும் .
இதே போன்று தமிழகத்தில் பலருக்கு தெரியாத ஒரு நிகழ்வு கேரளத்தில் நடைபெற்றது. திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சிறுநீரகத்துறை அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர் மருத்துவர் ஹாரிஸ் சிறைக்கல். அவர் இடதுசாரிச் சிந்தனை கொண்டவர், மாணவராக கட்சியின் இளைஞர் அணியில் பணியாற்றியவர், இணையத்தில் தொடர்ச்சியாக இடதுசாரி அரசுக்கு ஆதரவாக எழுதி வருபவர்.அவர் மிக நேர்மையானவர் என்றும், மிக மிகத் திறமையான அறுவை சிகிச்சை நிபுணர் என்றும், உண்மையிலேயே ஓர் ஏழை பங்காளர் என்றும் ஏற்கனவே பெரும் புகழ் பெற்றவர். அவர் ஒரு புகாரை முகநூலில் எழுதினார்.
திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சைக்கு தேவையான பல்வேறு கருவிகள் பழுதுபட்டுள்ளன என்றும்; நீண்டகாலமாக அவை பழுது தீர்க்கப்படவில்லை என்றும்; மிக அவசியமான சில கருவிகள் வாங்கப்படவே இல்லை என்றும்; மருந்துகள் மிக மிக குறைவாக இருப்பதினால் அறுவை சிகிச்சை அனேகமாக செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும்; இதை பலமுறை நேரிலும் கடிதம் வழியாகவும் புகார் செய்து கூட எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் ஹாரிஸ் முகநூலில் எழுதினார்.
உடனடியாக அவர் மீது கடும் விமர்சனங்களை இந்திய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும், அரசு சார்பாளர்களும் முன்வைத்தார்கள். ஆனால் அவர் இடதுசாரி என்பதனால் முதலில் அந்த எதிர்த்தாக்குதல் மிக மழுங்கியதாகவே இருந்தது. அவருடைய நேர்மையைச் சந்தேகப்படவில்லை என்றும், என்ன நடந்தது என்று விசாரிக்கப் போவதாகவும் அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். ஆனால் மெல்ல மெல்ல அவர் மீது இணையத்தாக்குதலும் கடும் நடவடிக்கைகளும் ஆரம்பித்தன. முதலில் அவதூறுகள் தொடுக்கப்பட்டன. பின்னர் அவரை சதிகளில் சிக்கவைக்கும் நடவடிக்கைகள் தொடங்கின. தன்னுடன் தோளோடு தோள்நின்றவர்களே சிறைக்கு அனுப்பி ஒழிக்க முயன்றனர் என ஹாரிஸ் மனம் கசந்து எழுதினார்.
என்னென்ன நிகழ்ந்தது என்பதை இப்போது எண்ணி பார்க்கையில் திகைப்புதான் ஏற்படுகிறது. ஒரு திரைப்படத்திற்கு நிகரான நிகழ்வுகள். அவருடைய அறை உடைக்கப்பட்டு அங்கு ஏதோ பொருட்கள் வைக்கப்பட்டன. ஆனால் அதை உடனடியாக அவர் தன்னுடைய கணிப்பொறியில் சிசிடிவி பதிவு வழியாக கண்டு இணையத்தில் அறிவித்தார். அந்த அறை உடனே பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஹாரீஸ் ஊழல் செய்ததாக அதிகாரிகள் பேட்டி கொடுத்தனர். (அப்போது எவரோ ஃபோனில் அழைத்து ஆணைகளை அளிக்க சார் சார் என்று அதிகாரிகள் தலையாட்டினர். ‘யார் அந்த சார்?’ என பெரிய விவாதம் நிகழ்ந்தது)
ஹாரீஸ்தான் அனைத்து ஊழல்களையும் செய்தார் என்றும், அவர்தான் கருவிகளை பழுதடைய வைத்தார் என்றும், அவர் அலுவலகத்திலிருந்து சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்றும் குற்றச்சாட்டுகள் உருவானயின. தொடர்ச்சியாக ஹாரீஸ் வேட்டையாடப்பட்டார். (இணையத்தில் முழுத்தகவல்களையும் தேடிப்படிக்கலாம்)
தொடர்ச்சியாக மருத்துவத்துறை அதிகாரிகள் அவரை அவதூறு செய்தனர், துறை சார் நடவடிக்கை ஒவ்வொன்றாக கடுமையாகிக் கொண்டே செல்ல ஒரு கட்டத்தில் மொத்த அரசு எந்திரமே அவருக்கு எதிராக திரும்பி அவரை வேட்டையாடத் தொடங்கியது. அதன் பிறகு அவர் முழுமையாக சரணடைந்தார். இடதுசாரி அரசிடம் மன்னிப்பு கோரினார். ஆனால் இன்னும் அவர் தண்டனை நிலையிலே இருக்கிறார். இன்னும் என்னென்ன தண்டனைக்கு அவர் ஆளாவார் என்று சொல்ல முடியாது. உண்மையில் இப்போது அரசு வேலையை விட்டு தனியார் மருத்துவத்திற்கு நோக்கி செல்வதற்கு கூட அரசு தடை விதிக்கும் நிலைதான் உள்ளது.
ஒருபோதும் இந்த வகையான அக ஊழலை வெளிக்கொண்டுவரும் ஊழியர்களை அரசு விரும்புவதில்லை. ஏனெனில் மொத்த நிர்வாகத்திலே மிகப் பெரும்பாலானவர்கள் ஊழல் செய்பவர்கள்தான். ஒரு கடைநிலை ஊழியர் செய்யும் ஊழலில் ஒரு பகுதி அவருக்கு நேர் மேலே இருப்பவருக்கு செல்கிறது. அவ்வாறு படிப்படியாக தொகை கீழிருந்து அனைவருக்கும் செல்கிறது. ஒரு கடைநிலை ஊழியர் 100 ரூபாய் லஞ்சம் வாங்கினார் என்றால் அதில் ஐந்து ரூபாய் அந்த துறை சார்ந்த அமைச்சர் கையிலேயே சென்று விடுகிறது என்று சொல்லலாம்.
ஆகவே ஒருவர் அமைப்பை குற்றம் சாட்டுகிறார் என்றால் அந்த அமைப்பு அவரை வேட்டையாட தொடங்குவதில் ஆச்சரியம் இல்லை. திரு ஜெய்சனுக்கு எதிராக திமுகவினர் இன்னும் களமிறங்காததுதான் கொஞ்சம் ஆச்சரியமளிக்கிறது. ராஜன் குறையின் ஆய்வு, மனுஷ்யபுத்திரனின் ஆக்ரோஷமான கட்டுரையை எதிர்பார்க்கிறேன்.
ஒழுகினசேரி சோழராஜா கோவில்
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் சிறிய மாதிரி வடிவமென ஆலயம் அமைந்துள்ளது. பிரகதீஸ்வரர் கோவில் விமானத்தின் சாயலில் சிறிய அளவிலான விமானமும், நான்கு பக்கக் கற்சுவர்களும், மேல்கூரையில் நான்கு மூலைகளிலும் நந்தியின் சிலைகளும் அமைந்துள்ளன.
ஒழுகினசேரி சோழராஜா கோவில்
ஒழுகினசேரி சோழராஜா கோவில் – தமிழ் விக்கி
ரமேஷ் பிரேதன், தனிவாழ்க்கை- கடிதம்
அன்புள்ள ஜெ
எழுத்தாளர்களின் தனிவாழ்க்கை முக்கியமானது என்று நீங்கள் தொடர்ச்சியாகச் சொல்லிவருகிறீர்கள். அண்மையில்கூட எழுதியிருந்தீர்கள். (எழுத்தாளர்களின் வாழ்க்கை.) அவ்வகையில் ரமேஷ் பிரேதன் அவர்களின் தனிவாழ்க்கையைப் பற்றி இங்கே பேசுவது பிழையில்லை என நினைக்கிறேன். இதை ரமேஷ் பிரேதன் அவர்களே தன் முகநூலிலே மிக விளக்கமாக எழுதியிருக்கிறார். மிகமிகக் கடுமையாகக்கூட எழுதியுள்ளார்.
ரமேஷ் பிரேதன் அவர்கள் பிரேம் என்னும் எழுத்தாளருடன் ஓரினப்பாலுறவில் இருந்தார். அதை அவர்கள் வெளிப்படையாக அறிவித்துக்கொண்டு தங்களை ஒரு மாற்றுக் குடும்பம் என்று கூறினர். வழக்கமான குடும்ப அமைப்புகள் எல்லாம் வன்முறையாக ஆகிவிட்டன என்றும், அங்கே துரோகமும், கசப்புகளும் மட்டுமே உள்ளன என்றும் சொன்னார்கள். இன்று தேவையாக உள்ளது தங்களுடையது போன்ற மாற்றுக்குடும்பம்தான் என்று வாதிட்டார்கள். அன்றைக்கு பல இளைஞர்களுக்கு இதனால் இவர்கள்மேல் ஒரு ஈர்ப்பு இருந்துள்ளது.
இந்த ஜோடியுடன் மாலதி மைத்ரி சென்று சேர்ந்து வாழ்ந்தார். ரமேஷ்தான் மாலதியின் பெயரிலும் ரமேஷ் பிரேம் பெயரிலும் வெளிவந்த படைப்புகளை உண்மையில் எழுதியவர் என்று ரமேஷ் இன்று சொல்கிறார். மாலதியின் குழந்தைக்குத் தந்தையாக ரமேஷ் சட்டபூர்வமாகப் பொறுப்பேற்றார். அப்போது ரமேஷ்தான் ஒரே சம்பாதிக்கும் நபர். அவருடைய பிரெஞ்சு இன்ஸ்டியூட் சம்பளத்தில் அவர்கள் வாழ்ந்தனர். அதன்பின் பிரேமுக்கு டெல்லியில் பேராசிரியர் வேலை கிடைத்தது. (அதற்கு உதவியவர்கள் வெங்கட் சாமிநாதன், செ.ரவீந்திரன் முதல் பலர். அவர்களை இப்போது அவர் குறிப்பிடுவதே இல்லை)
வேலைகிடைத்ததும் ரமேஷை பிரேமும் மாலதியும் கைவிட்டார்கள். குழந்தையுடன் டெல்லி சென்றனர். ரமேஷ் அனாதையாக புதுச்சேரியில் அலைந்தார். நண்பர்கள் உதவிசெய்தனர். மிகுந்த எடைகொண்டவர். கடுமையான ரத்த அழுத்தமும் உண்டு. ஆகவே வேலை செய்யமுடியாத நிலை. ஒரு தோப்பிலே காவல்காரராக இருந்தார். அதன்பின் பாரதி நினைவு இல்ல திண்ணையில் கொஞ்சநாள் இருந்தார். அப்போதுதான் நீங்கள் அவரை தற்செயலாகச் சந்திக்கிறீர்கள். அவர் இன்று இருக்கும் வீடு முதலியவை நீங்கள் அவருக்கு உருவாக்கி அளித்தவை. மணி ரத்னமும் உதவினார். பத்தாண்டுகளாக ரமேஷ் நீங்கள் மற்றும் பிற நண்பர்களின் உதவியுடன் வாழ்கிறார்.
இப்போது ரமேஷ் இந்த ‘வன்முறையும் துரோகமும் இல்லாத’ மாற்றுக்குடும்பம் பற்றி என்ன சொல்கிறார்? இன்றைக்கு அவருக்கு உதவி செய்பவர்கள் எல்லாருமே வழக்கமான குடும்பம் உள்ளவர்கள்தானே?
எஸ்.செல்வகுமார், புதுடெல்லி
அன்புள்ள செல்வகுமார்,
ரமேஷின் தனிவாழ்க்கை அவரால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே அது எப்போதும் அவர் படைப்புகளை வாசிப்பதற்கான பின்புலமாக இருக்கும். ஆனால் அவை அவருடைய புனைவுநூல்களுக்கான, அவருடைய கருத்துக்களுக்கான பின்புலமாக மட்டுமே விவாதிக்கப்படவேண்டும். தனி வம்புகளாக அல்ல. அவருடைய வாசகன் அவரை உருவாக்கிய உணர்வுநிலைகள் என்ன என்று அறிவதற்காக மட்டுமே அவற்றை கவனிப்பான். அவற்றிலுள்ள பிற மனிதர்கள் அவனுக்கு கதைமாந்தர் மட்டுமே.
ஜெ
வடகிழக்கின் முன்னேற்றத்தின் பொறுப்பு
For a long time I considered myself an atheist and ridiculed yoga. A few years ago I got severe back pain. I was a frequent bike traveler, and some bulge emerged on my backbone.
Yoga for modern manஒரு விமானநிலையமும் ஒரு ஆறுவழிச்சாலையும் எந்தவகையான பொருளியல் மலர்ச்சியை உருவாக்கியுள்ளன என்று சொல்லிவிட்டீர்கள். ஆனால் அதை கொண்டுவந்தது யார், யார் அதை எதிர்த்தார்கள் என்று சொல்ல உங்கள் நாக்கு வளையவில்லை.
வடகிழக்கின் முன்னேற்றத்தின் பொறுப்புSeptember 16, 2025
தடாகத்தின் விழியன்னங்கள்.
சில பாடல்கள் சில மாதங்களுடன், சில மனநிலைகளுடன் இணைந்துவிடுகின்றன. 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப்பாடலை நான் ஓர் ஆடி மாதத்தில் மழைக்குளிர் கலந்த காற்று வீசும் மதியநேரத்தில் கேட்டேன். மீண்டும் இப்போது அதே மனநிலையை அதே சூழலை ஏசுதாசின் அந்தக் குரல் உருவாக்குகிறது. அத்துடன் ஓ.என்.வி குறுப்புக்கே உரிய அழகான மிகைக்கற்பனை.
நான் இன்று அந்த ’நீ’ அல்லது ’உன்’னை ஒரு பெண்ணாக எண்ணிக்கொள்ளவில்லை. சௌந்தர்ரிய லஹரி சூடி நின்றிருக்கும் இயற்கையாக கற்பனைசெய்துகொள்கிறேன். கற்பனாவாதம் ஒரு வயதில் நம்மை ஆட்கொள்கிறது. மண்ணில் கால்தொடாத உலகங்களில் வாழ்கிறோம். பின்னர் மெல்ல மெல்ல யதார்த்தங்களுக்குள் நுழைகிறோம். வெற்றுக்கற்பனைகள் என கற்பனாவாதத்தை இகழவும் விலகவும் தொடங்குகிறோம்.
கற்பனாவாதத்தை விட்டு விலகுவது முதிர்ச்சியின் ஓர் அடையாளம் என்று சொல்லப்படுகிறது. அது உண்மை அல்ல. கற்பனாவாதத்தை விட்டு விலகுவதென்பது நடைமுறைத் தர்க்கபுத்தி வலுவடைவதன் அடையாளம் மட்டுமே.அதன் நன்மைகள் பல உண்டு. ஆனால் இழப்புகளும் அதற்கிணையானவை. கற்பனாவாதம் மட்டுமே மொழியை அதன் உச்சங்கள் நோக்கி கொண்டு செல்கிறது. யதார்த்தவாதம் என்றுமே மொழியின் நடைமுறைத்தன்மையை மீறுவதில்லை. மொழி அதற்கு சிறகு அல்ல, ஒரு பயன்படுபொருள் மட்டுமே. ஆகவே மொழியில் ஓர் இயந்திரக்கச்சிதத்தை மட்டுமே யதார்த்தவாதம் அடைகிறது. அந்தக் கச்சிதமே மொழியின் சிறந்த நிலை என நம்புபவர்கள் மொழியை அறிவதே இல்லை.
கச்சிதமான நடையே நல்ல நடை என நம்புவதுபோல இலக்கியத்தில் நுணுக்கமான வீழ்ச்சி பிறிதொன்றில்லை. ஏனென்றால் அப்படி கச்சிதம் என ஒன்றில்லை. கச்சிதம் என நாம் எண்ணுவது கொடுப்பவனும் பெறுபவனும் சந்திக்கும் அந்த தொடர்புறுத்தல்புள்ளியைச் சார்ந்தது. ஆனால் அது மிக எளிதில் மாறிவிடும். நேற்று மிகக்கச்சிதமானவை என்று சொல்லப்பட்ட கு.ப.ராஜகோபாலன் எனக்கு மிக வளவளவென்று எழுதுபவராக இன்று தோன்றுகிறார். காலம்கடந்து நின்றிருக்கும் கச்சிதம் என ஒன்றில்லை.
ஆனால் கற்பனாவாதம் அடையும் மொழியின் உச்சம் என்பது தொடர்புறுத்தலின் விளைவு அல்ல. மொழியை மொழிகடந்த ஒன்றைநோக்கிக் கொண்டுசெல்லும்போது உருவாகும் நுண்மையும் ஒளியும்தான் அது. மொழி முற்றிலும் புதிய சொல்லிணைவுகளை அடையலாம். இசைத்தன்மையை அடையலாம். படிமத்தன்மையை அடையலாம். படிமங்களுக்குள் படிமம் என விரியலாம். புரிந்துகொள்ளமுடியாத மயக்கநிலையை எய்தலாம். அது காலத்தால் பழையதாவதில்லை. ஏனென்றால் அது சென்று தொடும் அந்த ஆழம், அதை நனவிலி என்று சொல்லலாம், கூட்டுநனவிலி என்று சொல்லலாம், என்றுமுள்ள ஒன்று. மானுடரின் கூட்டான அகம் அது.
ஆகவே செவ்வியல் கற்பனாவாதத்தை ஒரு போதும் முழுக்கக் கைவிடாது. யதார்த்தவாதச் செவ்வியல் படைப்புகளான டால்ஸ்டாயின் நாவல்களிலும் தாமஸ் மன்னின் நாவல்களிலும் கூட மகத்தான கற்பனாவாதத்தருணங்கள் உண்டு. இப்படிச் சொல்லலாம். செவ்வியல் அதன் அடித்தளத்தை யதார்த்தவாதத்தில் கட்டியிருக்கும். அதன் உச்சங்கள் கற்பனாவாதத்தை நோக்கி நீண்டிருக்கும்.
நமக்கு வயதாகும்போது, மொத்தவாழ்க்கையும் ஒற்றைச்சித்திரமாகக் கண்ணில் தெரியத்தொடங்கும்போது, யதார்த்தவாதம் சலிப்பூட்டுகிறது. நவீனத்துவப்படைப்புகளிலுள்ள இருண்மையும் கசப்பும் ஒவ்வாமையை உருவாக்குகின்றன. பின்நவீனத்துவ வடிவ விளையாட்டுக்கள் அர்த்தமிழக்கின்றன. இனிய அழகிய கற்பனாவாதம் ஒரு மதியத்தூக்கத்தின் கனவுபோல ஒளிமிக்க இடங்களுக்கு கொண்டுசெல்கிறது.
சரோவரம் பூசூடி
என் சகி நின்னே போலே
ஓமல் சகி நின்னே போலே.
சலஜ்ஜம் ஆரே திரயுந்நு
ஈ சாரஸ நயனங்கள்
சாரஸ நயனங்கள்.
கைதப்பூவின் அதரம் நுகரும்
காற்றின் எந்தோரு லஹரி
மணமுள்ள சம்பக மலரின்றே
கவிளில் தழுகும் காற்றினு லஹரி
நின்முகசௌரஃப லஹரியில் முழுகும்
தென்னலாயெங்கில் !
ஞானொரு தென்னலாயெங்கில்!
காற்றின் கைகளில் ஊஞ்ஞாலாலிடும்
காடினு எந்தொரு லஹரி
ஸுர பகருந்நொரு சுரபீ மாஸம் புணரும்
காடினு லஹரி
நின் பத சும்பன முத்ரகள்
அணியும் மண் தரியாயெங்கில்!
ஞானொரு மண் தரியாயெங்கில் !
ஓ.என்.வி.குறுப்புதடாகம் மலர்சூடியது
படம் முகூர்த்தங்கள்.
கவிஞர் ஓ.என்.வி.குறுப்பு
இசை எம்.கே.அர்ஜுனன்
பாடகர் ஏசுதாஸ்
தடாகம் பூ சூடிக்கொண்டது
என் தோழி உன்னைப்போல!
அருமைத்தோழி உன்னைப் போல!
நாணத்துடன் யாரைத் தேடுகின்றன
உன் விழி அன்னங்கள்?
தாழம்பூவின் அதரத்தை சுவைக்கும்
காற்றுக்கு என்ன ஒரு மிதப்பு!
மணமுள்ள செண்பக மலரின்
கன்னம் தடவும் காற்றுக்கு என்ன ஒரு போதை!
உன் முக நறுமணப் போதையில் மூழ்கும்
தென்றலாக மாட்டேனா?
நானொரு தென்றலாக மாட்டேனா?
காற்றின் கைகளில் ஊஞ்சலாடும்
காட்டுக்கு என்னவொரு மயக்கம்
மோகமூட்டும் ஆடிமாதம் தழுவும்
காட்டுக்கு மயக்கம்
உன் காலடி முத்தங்களை அணியும்
மணல்துகள் ஆகமாட்டேனா?
நானொரு மணல்துகள் ஆகமாட்டேனா?
க.அப்புலிங்கம்
க. அப்புலிங்கம், மரபுக் கவிஞர். அதே சமயம் புதுக்கவிதையையும் ஆதரித்தார். வசன கவிதைக்கு ஆதரவாக இதழ்களில் பல கட்டுரைகளை எழுதினார். இலக்கணத்துக்கு ஏற்பக் கவிதைகள் படைப்பதில் தன் ஆற்றலை ஈடுபடுத்தி வெற்றி கண்டவராக அறியப்படுகிறார்.
க.அப்புலிங்கம் – தமிழ் விக்கி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

