Jeyamohan's Blog, page 28

September 12, 2025

எங்கே அந்த ஓநாய்?

கூடத்தில் வீடு. பாழடைந்த நிலையில்

அன்புள்ள ஜெ,

அண்மையில் லோகா -சந்திரா 1, சினிமாவை ஒட்டி உங்களுடைய நீலி- யட்சி கதைகளைப் பற்றி நண்பர்களிடையே ஓர் ஆர்வம் உருவாகியது. ஆகவே பல கதைகளைப் பற்றி பேசினோம். எத்தனை ஆற்றல் கொண்ட கதைகள் என்னும் எண்ணம் உருவாகியது. குறிப்பாக ஓநாயின் மூக்கு. ஒரு அற்புதமான சினிமாவாக ஆகியிருக்கும், இன்னொரு நாட்டில் என்றால். இங்கே நாம் சினிமாவைப் பற்றிப் பேசுவோம், சினிமா எடுக்க மாட்டோம். இங்கே சினிமா நடிகர்களின் கைகளில் உள்ளது. அவர்கள் அவர்களுக்காக குக் செய்யப்படும் கதைகளை மட்டும்தான் ஓகே சொல்வார்கள். சினிமா உலகில் எட்டாண்டுகளில் நான் கற்றுக்கொண்ட உண்மை இது.

நான் அந்த ஓநாயின் மூக்கு கதையை மீண்டும் வாசித்தேன். அதில் தொடக்கத்தில் ஔசேப்பச்சன் ஒரு உண்மையான சமகால கேஸ் சொல்லி, அதை ஒட்டி ஒரு நினைவைச் சொல்கிறார். கேரளத்தில் கரமனை பகுதியிலுள்ள கூடத்தில் என்ற மிகப்பெரிய குடும்பத்தில் அத்தனைபேரும் வரிசையாக கொல்லப்பட்ட வழக்கு அது. முழு சொத்தும் ரவீந்திரன் நாயர் என்ற காரியஸ்தன் பெயருக்கு மோசடியாக மாற்றி எழுதப்பட்டுள்ளது. கடைசியாக ஜயகிருஷ்ணன் என்பவர் சாவில் சந்தேகம் எழுந்தபோதுதான் சொத்துக்களை ரவீந்திரன் நாயர் விற்றிருப்பது தெரியவந்தது. பெரிய பரபரப்பை 2019ல் உருவாக்கிய வழக்கு இது.

ஓநாயின் மூக்கு கதையில் ஔசேப்பச்சன் இப்படிச் சொல்கிறார். “இப்போது விசாரணை எந்த நிலையில் இருக்கிறது தெரியுமா?… விசாரணை நிலையில். ஆனால் விசாரணை பல ஆண்டுகள் இழுக்கும். அதன்பிறகு எவருக்கும் நினைவிருக்காது. அப்படியே போகும். எந்த நிலையிலும் ரவீந்திரன் நாயர் தண்டிக்கப்படமாட்டார். ஆனால் முக்கால்வாசிச் சொத்துக்கள் அவரிடமிருந்து கைமாறப்படும், அவ்வளவுதான் வேறுபாடு”.

உண்மையிலேயே அப்படியே அந்த வழக்கு தேங்கிவிட்டது. சாட்சிகள் தடம் மாறிக்கொண்டிருந்தனர். வழக்கை போலீஸ் அப்படியே மூடிவிடவே முயல்கிறது. சொத்துக்களின் மதிப்பு 200 கோடிக்குமேல் என்கிறார்கள். அதெல்லாம் உரியமுறையில் கைமாற்றம் செய்யப்பட்டிருக்கும். ஒரு போலீஸ் அதிகாரி அந்த நிலத்தில் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸே கட்டியிருப்பதாக ஔசேப்பச்சன் சொல்கிறார்.

இதேதான் பலிக்கல் கதையைப் பற்றியும் சொல்லத் தோன்றுகிறது. அந்த பழி உண்மையில் உண்டா? ஒரு பரிதவிப்புதான் ஏற்பட்டது. எப்போதும் சரித்திரம் இப்படித்தான் செல்கிறது. உண்மையில் ஓநாயின் மூக்கு தொடர்ந்து வருகிறதா என்ன?

இரா.வேல்முருகன்

 

அன்புள்ள வேல்முருகன்,

இலக்கியம் அன்றாடயதார்த்தத்தில் இருந்தே உருவாகிறது. ஆனால் அதன் பேசுபொருள் அன்றாடம் அல்ல. அன்றாடம் கடந்த ஓர் அர்த்தம் உண்டா என்று அது தேடிச்செல்கிறது. நாம் இங்கே வாழும் வாழ்க்கை என்பது ஒன்றோடொன்று தொடர்பற்ற நிகழ்வுகளாலான ஒரு பெரும் பெருக்கு. அதில் உயிர்கள் ஒன்றையொன்று வென்றும் கொன்றும் தாங்கள் வாழவும், தங்கள் வாரிசுவரிசை பெருகவும் போட்டியிடுகின்றன. இதற்கப்பால் இங்கே உள்ள வாழ்வுக்கு ஏதேனும் பொருள் உண்டா? இந்த கண்கூடான பரப்புக்கு அடியில் இந்நிகழ்வுகள் ஏதேனும் வகையில் ஒன்றோடொன்று தொடர்புகொண்டுள்ளனவா? இந்த உதிரிப்புள்ளிகளுக்கு அர்த்தமளிக்கும் ஒரு அடித்தள நெசவுப்பரப்பு உண்டா?

இலக்கியத்தின் தேடல் எப்போதும் அதுதான். அப்படிச் ஓர் இணைப்புவலை இருந்தது என்றால் அது நம் எளிய அறிவுக்கு முழுமையாக அறியக்கூடுவதாக இருக்க வாய்ப்பில்லை. அப்படி பல இணைப்புவலைகள் உண்டு என்றும், அவற்றின் ஒத்திசைவில் பெருந்திட்டங்கள் வெளிப்படுகின்றன என்றும் அறிவியல் காட்டியிருக்கிறது. இங்குள்ள உயிர்களெல்லாமே உயிர்களின ஒத்திசைவு என்னும் பெருந்திட்டத்திற்குள்தான் உள்ளன. டி.என்.ஏ என்னும் மாபெரும் திட்டம் உயிர்வலைக்கு அடியிலுள்ள அறியாப் பெருந்திட்டம். பிரபஞ்சத்தின் கால-வெளி இணைவு ஒரு பெருந்திட்டம். நுண்துகள்களின் மின்னேற்பும் விலக்கமும் உருவாக்கும் இன்னொரு மாபெரும் திட்டம். அதைப்போல இங்கே நிகழும் மானுடத்தின் செயல்கள் மற்றும் விளைவுகளாலான ஒரு நுண்ணிய பெருந்திட்டம் உண்டா? இங்குள்ள மானுடத்துயர்களுக்கான காரணம் என ஏதேனும் உண்டா?

மெய்யியல் அதைக் கண்டடைந்து முன்வைக்கிறது. அது கிருஷ்ணனோ , வர்த்தமானரோ, புத்தரோ, ஏசுவோ, நபியோ வள்ளுவரோ ஏதோ ஒருவகையில் அதைச் சொல்லியிருக்கிறார்கள். ஊழ் என்றோ, இறைநெறி என்றோ ஏதோ ஒரு சொல் அதற்கு அளிக்கப்பட்டுள்ளது. இலக்கியம் அதை நுணுக்கமான அக அறிதல்களாக உணர்கிறது. அந்த அறிதல்புள்ளிகளை தன் கற்பனை வழியாகக் கோலமாக பின்னி விரித்துக் காட்டுகிறது. திரும்பத் திரும்ப உலக இலக்கியங்கள் அனைத்தும் காட்டுவது ‘வாழ்க்கை ‘அர்த்தமற்றதற்செயல்களின் பெருக்கு அல்ல’ என்பதைத்தான். அதற்கொரு காரண-காரிய தொடர்பு உண்டு என்பதைத்தான். அது புனைவு என நான் நினைக்கவில்லை, அது மெய்மையின் புள்ளிகளைக்கொண்டு செய்யப்பட்ட ஒரு நெசவு என்றே நினைக்கிறேன்.

ஆகவே ஓநாய் உண்டு, அது கொஞ்சம் பொறுமையானது. சட்டென்று வந்துவிடாது. ஆனால் அது விடவே விடாது.

ஜெ

 

குமரித்துறைவி வாங்க வான் நெசவு சிறூகதைத்தொகுப்பு வாங்க பத்துலட்சம் காலடிகள் சிறுகதைத்தொகுப்பு வாங்க தங்கப்புத்தகம் சிறுகதைத்தொகுப்பு வாங்க ஆயிரம் ஊற்றுகள் சிறுகதைத்தொகுப்பு வாங்க வாசிப்பின் வழிகள் வாங்க ஆனையில்லா சிறுகதைத்தொகுப்பு வாங்க ஐந்து நெருப்பு சிறுகதைத்தொகுப்பு வாங்க தேவி சிறுகதைத்தொகுப்பு வாங்க அந்த முகில் இந்த முகில் – நாவல் வாங்க எழுகதிர் சிறுகதைத்தொகுப்பு வாங்க முதுநாவல் சிறுகதைத்தொகுப்பு வாங்க பொலிவதும் கலைவதும் சிறுகதைத்தொகுப்பு வாங்க பின்தொடரும் நிழலின் குரல் அச்சுநூல் வாங்க இருகலைஞர்கள் சிறுகதைத்தொகுப்பு வாங்க மலை பூத்தபோது சிறுகதைத்தொகுப்பு வாங்க இலக்கியத்தின் நுழைவாயிலில் அச்சு நூல் வாங்க நத்தையின் பாதை அச்சு நூல் வாங்க மைத்ரி நாவல் வாங்க ஆலயம் எவருடையது ஆன்லைனில் வாங்க இந்துமெய்மை ஆன்லைனில் வாங்க சாதி – ஓர் உரையாடல் ஆன்லைனில் வாங்க வணிக இலக்கியம் ஆன்லைனில் வாங்க ஈராறுகால் கொண்டெழும் புரவி ஆன்லைனில் வாங்க கதாநாயகி ஆன்லைனில் வாங்க ஒருபாலுறவு ஆன்லைனில் வாங்க அனல் காற்று ஆன்லைனில் வாங்க வெண்முரசு – நீர்ச்சுடர் (23) வாங்க ஞானி ஆன்லைனில் வாங்க நான்காவது கொலை ஆன்லைனில் வாங்க விசும்பு ஆன்லைனில் வாங்க வெண்முரசு – களிற்றியானை நிரை (24) வாங்க

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 12, 2025 11:35

எங்கே அந்த ஓநாய்?

கூடத்தில் வீடு. பாழடைந்த நிலையில்

அன்புள்ள ஜெ,

அண்மையில் லோகா -சந்திரா 1, சினிமாவை ஒட்டி உங்களுடைய நீலி- யட்சி கதைகளைப் பற்றி நண்பர்களிடையே ஓர் ஆர்வம் உருவாகியது. ஆகவே பல கதைகளைப் பற்றி பேசினோம். எத்தனை ஆற்றல் கொண்ட கதைகள் என்னும் எண்ணம் உருவாகியது. குறிப்பாக ஓநாயின் மூக்கு. ஒரு அற்புதமான சினிமாவாக ஆகியிருக்கும், இன்னொரு நாட்டில் என்றால். இங்கே நாம் சினிமாவைப் பற்றிப் பேசுவோம், சினிமா எடுக்க மாட்டோம். இங்கே சினிமா நடிகர்களின் கைகளில் உள்ளது. அவர்கள் அவர்களுக்காக குக் செய்யப்படும் கதைகளை மட்டும்தான் ஓகே சொல்வார்கள். சினிமா உலகில் எட்டாண்டுகளில் நான் கற்றுக்கொண்ட உண்மை இது.

நான் அந்த ஓநாயின் மூக்கு கதையை மீண்டும் வாசித்தேன். அதில் தொடக்கத்தில் ஔசேப்பச்சன் ஒரு உண்மையான சமகால கேஸ் சொல்லி, அதை ஒட்டி ஒரு நினைவைச் சொல்கிறார். கேரளத்தில் கரமனை பகுதியிலுள்ள கூடத்தில் என்ற மிகப்பெரிய குடும்பத்தில் அத்தனைபேரும் வரிசையாக கொல்லப்பட்ட வழக்கு அது. முழு சொத்தும் ரவீந்திரன் நாயர் என்ற காரியஸ்தன் பெயருக்கு மோசடியாக மாற்றி எழுதப்பட்டுள்ளது. கடைசியாக ஜயகிருஷ்ணன் என்பவர் சாவில் சந்தேகம் எழுந்தபோதுதான் சொத்துக்களை ரவீந்திரன் நாயர் விற்றிருப்பது தெரியவந்தது. பெரிய பரபரப்பை 2019ல் உருவாக்கிய வழக்கு இது.

ஓநாயின் மூக்கு கதையில் ஔசேப்பச்சன் இப்படிச் சொல்கிறார். “இப்போது விசாரணை எந்த நிலையில் இருக்கிறது தெரியுமா?… விசாரணை நிலையில். ஆனால் விசாரணை பல ஆண்டுகள் இழுக்கும். அதன்பிறகு எவருக்கும் நினைவிருக்காது. அப்படியே போகும். எந்த நிலையிலும் ரவீந்திரன் நாயர் தண்டிக்கப்படமாட்டார். ஆனால் முக்கால்வாசிச் சொத்துக்கள் அவரிடமிருந்து கைமாறப்படும், அவ்வளவுதான் வேறுபாடு”.

உண்மையிலேயே அப்படியே அந்த வழக்கு தேங்கிவிட்டது. சாட்சிகள் தடம் மாறிக்கொண்டிருந்தனர். வழக்கை போலீஸ் அப்படியே மூடிவிடவே முயல்கிறது. சொத்துக்களின் மதிப்பு 200 கோடிக்குமேல் என்கிறார்கள். அதெல்லாம் உரியமுறையில் கைமாற்றம் செய்யப்பட்டிருக்கும். ஒரு போலீஸ் அதிகாரி அந்த நிலத்தில் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸே கட்டியிருப்பதாக ஔசேப்பச்சன் சொல்கிறார்.

இதேதான் பலிக்கல் கதையைப் பற்றியும் சொல்லத் தோன்றுகிறது. அந்த பழி உண்மையில் உண்டா? ஒரு பரிதவிப்புதான் ஏற்பட்டது. எப்போதும் சரித்திரம் இப்படித்தான் செல்கிறது. உண்மையில் ஓநாயின் மூக்கு தொடர்ந்து வருகிறதா என்ன?

இரா.வேல்முருகன்

 

அன்புள்ள வேல்முருகன்,

இலக்கியம் அன்றாடயதார்த்தத்தில் இருந்தே உருவாகிறது. ஆனால் அதன் பேசுபொருள் அன்றாடம் அல்ல. அன்றாடம் கடந்த ஓர் அர்த்தம் உண்டா என்று அது தேடிச்செல்கிறது. நாம் இங்கே வாழும் வாழ்க்கை என்பது ஒன்றோடொன்று தொடர்பற்ற நிகழ்வுகளாலான ஒரு பெரும் பெருக்கு. அதில் உயிர்கள் ஒன்றையொன்று வென்றும் கொன்றும் தாங்கள் வாழவும், தங்கள் வாரிசுவரிசை பெருகவும் போட்டியிடுகின்றன. இதற்கப்பால் இங்கே உள்ள வாழ்வுக்கு ஏதேனும் பொருள் உண்டா? இந்த கண்கூடான பரப்புக்கு அடியில் இந்நிகழ்வுகள் ஏதேனும் வகையில் ஒன்றோடொன்று தொடர்புகொண்டுள்ளனவா? இந்த உதிரிப்புள்ளிகளுக்கு அர்த்தமளிக்கும் ஒரு அடித்தள நெசவுப்பரப்பு உண்டா?

இலக்கியத்தின் தேடல் எப்போதும் அதுதான். அப்படிச் ஓர் இணைப்புவலை இருந்தது என்றால் அது நம் எளிய அறிவுக்கு முழுமையாக அறியக்கூடுவதாக இருக்க வாய்ப்பில்லை. அப்படி பல இணைப்புவலைகள் உண்டு என்றும், அவற்றின் ஒத்திசைவில் பெருந்திட்டங்கள் வெளிப்படுகின்றன என்றும் அறிவியல் காட்டியிருக்கிறது. இங்குள்ள உயிர்களெல்லாமே உயிர்களின ஒத்திசைவு என்னும் பெருந்திட்டத்திற்குள்தான் உள்ளன. டி.என்.ஏ என்னும் மாபெரும் திட்டம் உயிர்வலைக்கு அடியிலுள்ள அறியாப் பெருந்திட்டம். பிரபஞ்சத்தின் கால-வெளி இணைவு ஒரு பெருந்திட்டம். நுண்துகள்களின் மின்னேற்பும் விலக்கமும் உருவாக்கும் இன்னொரு மாபெரும் திட்டம். அதைப்போல இங்கே நிகழும் மானுடத்தின் செயல்கள் மற்றும் விளைவுகளாலான ஒரு நுண்ணிய பெருந்திட்டம் உண்டா? இங்குள்ள மானுடத்துயர்களுக்கான காரணம் என ஏதேனும் உண்டா?

மெய்யியல் அதைக் கண்டடைந்து முன்வைக்கிறது. அது கிருஷ்ணனோ , வர்த்தமானரோ, புத்தரோ, ஏசுவோ, நபியோ வள்ளுவரோ ஏதோ ஒருவகையில் அதைச் சொல்லியிருக்கிறார்கள். ஊழ் என்றோ, இறைநெறி என்றோ ஏதோ ஒரு சொல் அதற்கு அளிக்கப்பட்டுள்ளது. இலக்கியம் அதை நுணுக்கமான அக அறிதல்களாக உணர்கிறது. அந்த அறிதல்புள்ளிகளை தன் கற்பனை வழியாகக் கோலமாக பின்னி விரித்துக் காட்டுகிறது. திரும்பத் திரும்ப உலக இலக்கியங்கள் அனைத்தும் காட்டுவது ‘வாழ்க்கை ‘அர்த்தமற்றதற்செயல்களின் பெருக்கு அல்ல’ என்பதைத்தான். அதற்கொரு காரண-காரிய தொடர்பு உண்டு என்பதைத்தான். அது புனைவு என நான் நினைக்கவில்லை, அது மெய்மையின் புள்ளிகளைக்கொண்டு செய்யப்பட்ட ஒரு நெசவு என்றே நினைக்கிறேன்.

ஆகவே ஓநாய் உண்டு, அது கொஞ்சம் பொறுமையானது. சட்டென்று வந்துவிடாது. ஆனால் அது விடவே விடாது.

ஜெ

 

குமரித்துறைவி வாங்க வான் நெசவு சிறூகதைத்தொகுப்பு வாங்க பத்துலட்சம் காலடிகள் சிறுகதைத்தொகுப்பு வாங்க தங்கப்புத்தகம் சிறுகதைத்தொகுப்பு வாங்க ஆயிரம் ஊற்றுகள் சிறுகதைத்தொகுப்பு வாங்க வாசிப்பின் வழிகள் வாங்க ஆனையில்லா சிறுகதைத்தொகுப்பு வாங்க ஐந்து நெருப்பு சிறுகதைத்தொகுப்பு வாங்க தேவி சிறுகதைத்தொகுப்பு வாங்க அந்த முகில் இந்த முகில் – நாவல் வாங்க எழுகதிர் சிறுகதைத்தொகுப்பு வாங்க முதுநாவல் சிறுகதைத்தொகுப்பு வாங்க பொலிவதும் கலைவதும் சிறுகதைத்தொகுப்பு வாங்க பின்தொடரும் நிழலின் குரல் அச்சுநூல் வாங்க இருகலைஞர்கள் சிறுகதைத்தொகுப்பு வாங்க மலை பூத்தபோது சிறுகதைத்தொகுப்பு வாங்க இலக்கியத்தின் நுழைவாயிலில் அச்சு நூல் வாங்க நத்தையின் பாதை அச்சு நூல் வாங்க மைத்ரி நாவல் வாங்க ஆலயம் எவருடையது ஆன்லைனில் வாங்க இந்துமெய்மை ஆன்லைனில் வாங்க சாதி – ஓர் உரையாடல் ஆன்லைனில் வாங்க வணிக இலக்கியம் ஆன்லைனில் வாங்க ஈராறுகால் கொண்டெழும் புரவி ஆன்லைனில் வாங்க கதாநாயகி ஆன்லைனில் வாங்க ஒருபாலுறவு ஆன்லைனில் வாங்க அனல் காற்று ஆன்லைனில் வாங்க வெண்முரசு – நீர்ச்சுடர் (23) வாங்க ஞானி ஆன்லைனில் வாங்க நான்காவது கொலை ஆன்லைனில் வாங்க விசும்பு ஆன்லைனில் வாங்க வெண்முரசு – களிற்றியானை நிரை (24) வாங்க

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 12, 2025 11:35

சுசித்ரா

தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். இருத்தலியல் சார்ந்த வாழ்வின் ஆதார கேள்விகளை கலை, அறிவியல் பின்புலங்களில் எழுப்பி கதைகளில் விவாதிக்கிறார். சுசித்ராவின் ‘ஒளி’ சிறுகதை பரவலாக வாசக மற்றும் விமர்சக கவனத்தை பெற்றது.

சுசித்ரா ராமச்சந்திரன்

நூல்கள்

ஒளி (2020, யாவரும் பதிப்பகம்) – சிறுகதைத்தொகுப்புThe Abyss (2023, Juggernaut Books) – எழாம் உலகம் நாவலின் ஆங்கில மொழியாக்கம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 12, 2025 11:33

சுசித்ரா

தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். இருத்தலியல் சார்ந்த வாழ்வின் ஆதார கேள்விகளை கலை, அறிவியல் பின்புலங்களில் எழுப்பி கதைகளில் விவாதிக்கிறார். சுசித்ராவின் ‘ஒளி’ சிறுகதை பரவலாக வாசக மற்றும் விமர்சக கவனத்தை பெற்றது.

சுசித்ரா ராமச்சந்திரன்

நூல்கள்

ஒளி (2020, யாவரும் பதிப்பகம்) – சிறுகதைத்தொகுப்புThe Abyss (2023, Juggernaut Books) – எழாம் உலகம் நாவலின் ஆங்கில மொழியாக்கம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 12, 2025 11:33

அறம், ஒரு சிறுவனின் மதிப்பீடு

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்கள் எழுத்துக்களைப் பல வருடங்களாக வாசித்து வருகிறேன். உங்கள் படைப்புகள் எனக்குள் ஆழ்ந்த தாக்கத்தையும், சிந்தனையையும் ஏற்படுத்தியுள்ளன.

சமீபத்தில், எனது மகனுக்கு உங்கள் ‘அறம்‘ சிறுகதைத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘Stories of the True’ புத்தகத்தைப் பரிசளித்தேன். ஐக்கிய அரபு அமீரகத்தில் வளர்ந்ததால், அவனுக்குத் தமிழ் வாசிக்கத் தெரியாது. அவனுக்குத் தமிழ்ப் படைப்புலகத்தின் அழகையும் ஆழத்தையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.

இந்தப் புத்தகத்தை வாசித்து அவன் மிகுந்த உற்சாகமும், உத்வேகமும் அடைந்தான். உங்கள் கதைகளைப் பற்றி என்னிடம் பல நேரம் மனம் திறந்து பேசினான். இந்தப் புத்தகத்தைப் பற்றிய தனது எண்ணங்களையும் உணர்வுகளையும் ஒரு விமர்சனமாக எழுதி, தனது வலைப்பதிவில் வெளியிட்டுள்ளான். அந்த விமர்சனத்தை இந்த இணைப்பில் காணலாம்: 

https://iwashereyousee.blogspot.com/2025/09/book-review-stories-of-true-by-jeyamohan.html

இத்தகைய அற்புதமான படைப்பை உலகிற்கு அளித்தமைக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி, இப்படிக்கு,

ஶ்ரீராம், துபாய்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 12, 2025 11:31

அறம், ஒரு சிறுவனின் மதிப்பீடு

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்கள் எழுத்துக்களைப் பல வருடங்களாக வாசித்து வருகிறேன். உங்கள் படைப்புகள் எனக்குள் ஆழ்ந்த தாக்கத்தையும், சிந்தனையையும் ஏற்படுத்தியுள்ளன.

சமீபத்தில், எனது மகனுக்கு உங்கள் ‘அறம்‘ சிறுகதைத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘Stories of the True’ புத்தகத்தைப் பரிசளித்தேன். ஐக்கிய அரபு அமீரகத்தில் வளர்ந்ததால், அவனுக்குத் தமிழ் வாசிக்கத் தெரியாது. அவனுக்குத் தமிழ்ப் படைப்புலகத்தின் அழகையும் ஆழத்தையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.

இந்தப் புத்தகத்தை வாசித்து அவன் மிகுந்த உற்சாகமும், உத்வேகமும் அடைந்தான். உங்கள் கதைகளைப் பற்றி என்னிடம் பல நேரம் மனம் திறந்து பேசினான். இந்தப் புத்தகத்தைப் பற்றிய தனது எண்ணங்களையும் உணர்வுகளையும் ஒரு விமர்சனமாக எழுதி, தனது வலைப்பதிவில் வெளியிட்டுள்ளான். அந்த விமர்சனத்தை இந்த இணைப்பில் காணலாம்: 

https://iwashereyousee.blogspot.com/2025/09/book-review-stories-of-true-by-jeyamohan.html

இத்தகைய அற்புதமான படைப்பை உலகிற்கு அளித்தமைக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி, இப்படிக்கு,

ஶ்ரீராம், துபாய்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 12, 2025 11:31

பேருருவனின் சொல், கடிதம்

அன்புள்ள ஜெ,

உங்கள் கீதை உரையை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் ஒலிப்பதிவுச் சிக்கல்களால் முழுமையாக கேட்கமுடியவில்லை. கீதையை அறிதல் நூலை வாசித்தேன். ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். ஒரு பெரிய அனுபவம். ஒரு சிறிய நூல். ஆனால் கீதையின் வரலாற்றுப்பின்புலம், கீதையின் அரசியல், அதன் குறியீடுகளை வாசிக்கவேண்டிய விதம், அதன் தத்துவ- ஆன்மிக உள்ளடக்கம், அதன் அழகியல் எல்லாமே சொல்லப்பட்டுவிட்டது. கீதையை வாசிக்க மிகச்சிறந்த ஒரு முன்னுரை இந்த நூல்.

நான் என் 28 ஆவது வயதில் கீதையை வாசிக்க ஆரம்பித்தேன். அதிலிருந்து அவ்வப்போது வாசிப்பேன். சித்பவானந்தர் உரை எனக்குப் பிடித்தமானது. ஆனால் கீதையைப் பற்றிச் சிந்திப்பதற்கான ஒரு தொடக்கம் இந்த நூல்தான். கீதை எனக்கு நன்றாகத் தெரிந்த நூல் என்னும் மாயை எனக்கு இருந்தது. ஆனால் இந்நூலை வாசிக்கையில்தான் கீதையை நான் உபதேசங்களாக மட்டுமே அறிந்திருக்கிறேன் என்ற உணர்வு வந்தது.அதன் வரலாற்றுப்பின்னணிகூட எனக்கு தெரிந்திருக்கவில்லை. இந்நூலை வாசிக்கையில்தான் ஒன்று தோன்றியது கிருஷ்ணனை ஒரு மனிதனாக, ஒரு வரலாற்று ஆளுமையாக எண்ணினாலொழிய கீதையை உண்மையாக அணுகமுடியாது என்று.

கீதையை வெவ்வேறு கோணங்களில் அழகாக விரித்துச் சொன்ன நூல் இது. இந்நூல் ஓர் உரை என்பதனால்தான் இந்த ஓட்டம் வந்திருக்கிறது. யோசித்து எழுதிய நூலில் செறிவு இருக்கும். ஓட்டம் அமையாது. இந்நூலில் என்னுடன் நீங்கள் பேசிக்கொண்டே இருக்கும் அனுபவம் அமைந்தது.

எந்த நூலையும் வாசித்து உள்வாங்கிக்கொள்ள ஒரு critical approach தேவையாகிறது. நாம் ஒரு நூலை வழிபட ஆரம்பித்தால் அந்த அணுகுமுறை இல்லாமலாகிவிடுகிறது. இந்நூலில் ஒரு துணிச்சலான விமர்சனப்பார்வை உள்ளது. அது இன்னும் ஆழமாக கீதைக்குள் செல்ல நம்மை அழைத்துச்செல்கிறது

நன்றி.

எஸ்.ரகோத்தமன்.

கீதையை அறிதல் வாங்க

அங்குலப்புழுவின் நடனம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 12, 2025 11:31

பேருருவனின் சொல், கடிதம்

அன்புள்ள ஜெ,

உங்கள் கீதை உரையை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் ஒலிப்பதிவுச் சிக்கல்களால் முழுமையாக கேட்கமுடியவில்லை. கீதையை அறிதல் நூலை வாசித்தேன். ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். ஒரு பெரிய அனுபவம். ஒரு சிறிய நூல். ஆனால் கீதையின் வரலாற்றுப்பின்புலம், கீதையின் அரசியல், அதன் குறியீடுகளை வாசிக்கவேண்டிய விதம், அதன் தத்துவ- ஆன்மிக உள்ளடக்கம், அதன் அழகியல் எல்லாமே சொல்லப்பட்டுவிட்டது. கீதையை வாசிக்க மிகச்சிறந்த ஒரு முன்னுரை இந்த நூல்.

நான் என் 28 ஆவது வயதில் கீதையை வாசிக்க ஆரம்பித்தேன். அதிலிருந்து அவ்வப்போது வாசிப்பேன். சித்பவானந்தர் உரை எனக்குப் பிடித்தமானது. ஆனால் கீதையைப் பற்றிச் சிந்திப்பதற்கான ஒரு தொடக்கம் இந்த நூல்தான். கீதை எனக்கு நன்றாகத் தெரிந்த நூல் என்னும் மாயை எனக்கு இருந்தது. ஆனால் இந்நூலை வாசிக்கையில்தான் கீதையை நான் உபதேசங்களாக மட்டுமே அறிந்திருக்கிறேன் என்ற உணர்வு வந்தது.அதன் வரலாற்றுப்பின்னணிகூட எனக்கு தெரிந்திருக்கவில்லை. இந்நூலை வாசிக்கையில்தான் ஒன்று தோன்றியது கிருஷ்ணனை ஒரு மனிதனாக, ஒரு வரலாற்று ஆளுமையாக எண்ணினாலொழிய கீதையை உண்மையாக அணுகமுடியாது என்று.

கீதையை வெவ்வேறு கோணங்களில் அழகாக விரித்துச் சொன்ன நூல் இது. இந்நூல் ஓர் உரை என்பதனால்தான் இந்த ஓட்டம் வந்திருக்கிறது. யோசித்து எழுதிய நூலில் செறிவு இருக்கும். ஓட்டம் அமையாது. இந்நூலில் என்னுடன் நீங்கள் பேசிக்கொண்டே இருக்கும் அனுபவம் அமைந்தது.

எந்த நூலையும் வாசித்து உள்வாங்கிக்கொள்ள ஒரு critical approach தேவையாகிறது. நாம் ஒரு நூலை வழிபட ஆரம்பித்தால் அந்த அணுகுமுறை இல்லாமலாகிவிடுகிறது. இந்நூலில் ஒரு துணிச்சலான விமர்சனப்பார்வை உள்ளது. அது இன்னும் ஆழமாக கீதைக்குள் செல்ல நம்மை அழைத்துச்செல்கிறது

நன்றி.

எஸ்.ரகோத்தமன்.

கீதையை அறிதல் வாங்க

அங்குலப்புழுவின் நடனம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 12, 2025 11:31

மதுரை புத்தகவிழாவில் இறுதிநாளாக இன்றும் இருப்பேன்

மதுரை புத்தகவிழா 5 செப்டெம்பர் (வெள்ளி) முதல் 15 செப்டெம்பர் (திங்கள்) வரை நிகழ்கிறது. விஷ்ணுபுரம் அரங்கு எண் 44 மற்றும் 45.

மதுரை புத்தகவிழாவின் இறுதிநாளான இன்று (14 ஞாயிறு 2025) மாலை 5 முதல் இருப்பேன். நண்பர்களை வரவேற்கிறேன்

2025 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெற்ற ரமேஷ் பிரேதன் அவர்களின் படைப்புகள் கிடைக்குமா என விசாரிக்கிறார்கள். மதுரை புத்தகவிழாவில் யாவரும் புத்தக அரங்கில் (அரங்கு எண் 31-32) அவர் நூல்கள் கிடைக்கும்.

எங்கள் புதிய நூல்கள்

ஜெயமோகனின் புதிய நாவல். கடல் என்னும் திரைப்படம் இந்நாவலை ஒட்டி உருவானது. செவ்வியல் தன்மை கொண்ட இப்படைப்பில் ஓர் ஆன்மாவின் கடலில் தெய்வமும் சாத்தானும் மோதிக்கொள்ளும் அலைகள் கொந்தளிக்கின்றன. மகாகவி தாந்தேயின் டிவைன் காமெடியின் நீட்சியென அமையும் படைப்பு இது.

ஜெயமோகன் கீதை பற்றி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். நான்கு நாட்களில் ஆற்றிய தொடர் உரை என்பதனால் எளிய நடையில், நேரடியாக வாசகனுடன் பேசும் தன்மைகொண்டது. கீதைக்குள் நுழைய இன்றைய நவீன வாசகனுக்கு திறக்கப்படும் மிகச்சிறந்த வாசல்.

பண்பாடு பற்றிய ஜெயமோகனின் கட்டுரைகளின் தொகுப்பு. நாம் ஆன்மிகம், பண்பாடு என எண்ணியிருப்பவை பலசமயம் சம்பிரதாயமான கருத்துக்கள். அவற்றை நவீன வாழ்க்கையுடன் இணைத்துப்பார்க்கும் பார்வைகள் கொண்ட நூல் இது.

சுந்தர ராமசாமியின் ஆளுமையை தன் நினைவுகளினூடாக ஜெயமோகன் சித்தரிக்கும் இந்நூல் அக்காலகட்டத்தில் நிகழ்ந்த அழகியல் விவாதங்களையும் தொட்டுக்கொண்டு ஒரு நாவலைப்போல் விரிவது. நுணுக்கமான காட்சிவிவரணைகளும், புன்னகைக்கவைக்கும் தருணங்களும் கொண்டது.

தினமலரில் தொடராக வந்த எளிமையான கட்டுரைகள். இவை நம் ஜனநாயகத்தின் அடிப்படைகளை விவாதிக்கின்றன. நாம் அறிந்த தகவல்களை அறியாத கோணத்தில் காட்டி இன்றியமையாதவற்றைப் புரியவைப்பது இவற்றின் பாணி.

நாஞ்சில்நாடனைப் பற்றிய ஜெயமோகனின் நூல். அவரை பிரியமான நகைச்சுவையுடன் மதிப்பிடுகிறது, நட்பை விவரிக்கிறது.

எங்கள் நூல்கள்

தமிழில் விஷ்ணுபுரம் அளவுக்கு எந்த நாவலும் அத்தனை கவனமான வாசிப்பைப் பெற்றதில்லை. பல கோணங்களில் அவரவர் அரசியலுக்கும் கருத்துநிலைக்கும் ஏற்ப அதை வாசித்துள்ளனர். இரண்டாவது தலைமுறையில் விஷ்ணுபுரம் குறியீடுகளின் அடுக்குகள் செறிந்த, உணர்வுநிலைகள் உச்சம் தொட்ட, ஒரு நவீன இந்தியக் காவியநாவலாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் உலகவாசகர்களின் வாசிப்புக்குச் செல்லவுள்ளது.

குறைத்துச்சொல்லும் அழகியல் கொண்ட கதைகள். இளம்படைப்பாளியான விஷால்ராஜாவின் குறிப்பிடத்தக்க சிறுகதைத் தொகுதி இது. வாழ்க்கையின் மென்மையான புதிர்களைப் பேசும் கதைகள்

பின்தொடரும் நிழலின் குரல் தமிழின் முதன்மையான அரசியல் நாவலாக பல விமர்சகர்களால் மதிப்பிடப்பட்டது. அரசியலின் அடிப்படையாக உள்ள கருத்தியல் என்பதை ஆராயும் நாவல் இது. ஒரு கருத்துநிலைபாடு சாமானியனை எப்படி அபாயகரமான ஆயுதமாக ஆக்கிவிடுகிறது என்னும் கேள்வி வரலாற்றில் என்றும் உள்ள ஒன்று. அதை ஆராயும் படைப்பு இது.

மைத்ரி ஓர் உருவகக் கதை. ஒரு மலை. ஒரு பயணி. ஒரு காதல். ஆனால் இந்த பயணம் மலையின் ஆழங்களின் மடிப்புகளில் இருந்து மலையுச்சியின் வெறுமையின் பரவசம் வரை நீள்கையில் ஆன்மிகமான இன்னொரு பரிணாமத்தை அடைகிறது.

மருபூமி வைக்கம் முகமது பஷிர் தன்னந்தனியாக பாலைவனத்தை கடந்த அனுபவத்தைப் பற்றி எழுதிய சுருக்கமான குறிப்பில் இருந்து விரிவாக்கம் செய்யப்பட்ட குறுநாவல். ஓர் அகப்பாலையை கடக்கும் ஒருவனின் அனுபவம் என வகைப்படுத்தலாம். புகழ்பெற்ற பல சிறுகதைகள் அடங்கிய நூல்.

அல்கிஸா தமிழின் முதல் இஸ்லாமிகேட் நாவல் என்று விமர்சகர்களால் குறிப்பிடப்பட்டது. இஸ்லாமிய அழகியல் உச்சம் என சொல்லத்தக்க கவாலி இசை, இஸ்லாமிய ஆன்மிக உச்சம் என சொல்லத்தக்க சூஃபி மரபு ஆகியவை ஓர் அழகிய காதல்கதையால் இணைக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் விரைவில் வெளிவரவுள்ளது.

தமிழின் தலைசிறந்த நாவல் என வாசகர்கள் பலரால் கருதப்படும் காடு மனித உறவின் உருவகமான குறிஞ்சி நிலத்தில் நிகழும் ஒரு காதல்கதை. வாழ்க்கையில் பாலை வரலாம். காதல் என்றும் ‘வறனுறல் அறியாச் சோலை’தான் என இந்நாவல் காட்டுகிறது.

சினிமாப்பின்னணியில் எழுதப்பட்ட ஓர் இழந்த காதலின் கதை. கறுப்புவெள்ளை சினிமாவின் உலகம் கவித்துவக்குறியீடாக ஆக்கப்பட்டுள்ளது இந்நாவலில். கற்பனாவாத அழகியல் கொண்ட படைப்பு.

முதுநாவல் ஜெயமோகனின் 133 சிறுகதைகளின் தொகுப்புகளான 14 நூல்களில் ஒன்று. இந்திய சூஃபி மரபின் ஆன்மிகநிலைகளில் இருந்து இந்திய வாழ்க்கையை ஆன்மிகம் வந்து தொடும் தருணங்களைச் சொல்லும் மகத்தான சிறுகதைகள் அடங்கியது. இதில் பல கதைகள் இன்று உலகப்புகழ்பெற்ற  அமெரிக்க இலக்கிய இதழ்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

கதாநாயகி ஓரு பேய்க்கதை. ஆனால் அந்தப் பேய்க்கதை சமகாலத்தில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தை அடைகிறது. அதற்கு முந்தைய லண்டனை ஊடுருவி ரோமாபுரிக்காலம் வரை நீள்கிறது. பல அடுக்குகளாலான நாவல் இது.

முற்றிலும் மங்கலத்தன்மை கொண்ட நாவல். மதுரை மீனாட்சி திருமணத்தின் அழகியபெருந்தோற்றம். ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் வரவிருக்கிறது.

தமிழகத்தின் தலித் எழுச்சியின் தொடக்கப்புள்ளியை, இந்தியப்பெரும் பஞ்சங்களின் பின்னணியில் திகைப்பூட்டும் கச்சிதத்துடன் சொல்லும் படைப்பு. ஆங்கிலத்தில் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் வெளியாகவுள்ளது. தெலுங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆண் -பெண் உறவின் நுணுக்கமான சில ஆழங்களுக்குள் ஊடுருவிச்செல்லும் கன்யாகுமரி இருபத்தைந்தாண்டுகளாகத் தொடர்ச்சியாக வாசிக்கப்படும் நாவல். காலம் மாறுந்தோறும் அதன் அடிப்படை வினாக்கள் கூர்கொள்கின்றன.

பி.கே.பாலகிருஷ்ணன் என்னும் மலையாளச் சிந்தனையாளரின் கட்டுரைகள். நாவல் என்னும் கலையை புரிந்துகொள்ள, அதை வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முறையாகப் பயன்படுத்த வழிகாட்டும் நூல். கட்டுரை நூலாயினும் உத்வேகமிக்க வாசிப்பை அளிப்பது.

தமிழில் இளைஞர்களிடையே மிக அதிகமாக வாசிக்கப்படும் ஜெயமோகனின் நூல் இரவு. இது அவர்களின் உலகம். இரவில் விழித்து பகலில் தூங்கும் ஒரு சிறு சமூகத்தை சித்தரிக்கும் படைப்பு.

இலக்கியத்தை வாசிப்பதெப்படி? எது நல்ல இலக்கியம்? எது வணிக எழுத்து? இலக்கிய அடிப்படைகள் பற்றிய பல கேள்விகளுக்கு விடைசொல்லும் கட்டுரைகள் கொண்ட நூல்.

காமம் பாவமென உருக்கொள்வது சமூக உறவுகள் வழியாக. காமத்தையும் பாவத்தையும் பிரித்திப்பார்ப்பது ஒரு மனமுதிர்ச்சி. அனுபவத்தினூடாக நிகழும் பரிமாணம் அது. அந்த விடுதலையைப் பேசும் நாவல் இது.

இந்து மெய்யியலை மதத்தின் சம்பிரதாயங்கள் மற்றும் நம்பிக்கைகளில் இருந்து விலக்கி தத்துவமாகவும் ஆன்மிகமாகவும் அணுக முற்படும் நவீன மனத்திற்குரியவை இந்தக் கட்டுரைகள். விரிவான விவாதங்களை உருவாக்கியவை.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் செய்த பயணத்தின் நேரடிப்பதிவுகள். வடக்கின் அரசியலையும், பண்பாட்டையும் எளிய கோட்டுச்சித்திரம் வழியாக தெரியவைப்பது இந்நூல்.

ஜெயமோகன் கல்லூரிப்படிப்பை விட்டு அரைத்துறவியாக வீட்டைவிட்டுக் கிளம்பிச்சென்று திரும்பி வந்த அனுபவங்களைப் பேசும் நூல் இது. அவரது புனைவுகளுக்கு நிகரான உத்வேகத்துடன் சொல்லப்பட்ட நிகழ்வுகள் கொண்டது. விஸ்வநாதன் மொழியாக்கத்தில் ஆங்கிலத்தில் வெளிவரவுள்ளது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 12, 2025 11:31

மதுரை புத்தகத் திருவிழாவில் இன்றும் இருப்பேன்

மதுரை புத்தகவிழா 5 செப்டெம்பர் (வெள்ளி) முதல் 15 செப்டெம்பர் (திங்கள்) வரை நிகழ்கிறது. விஷ்ணுபுரம் அரங்கு எண் 44 மற்றும் 45.

மதுரை புத்தகவிழாவில் இன்று (13 சனி 2025) மாலை 5 முதல் இருப்பேன். நண்பர்களை வரவேற்கிறேன்

2025 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெற்ற ரமேஷ் பிரேதன் அவர்களின் படைப்புகள் கிடைக்குமா என விசாரிக்கிறார்கள். மதுரை புத்தகவிழாவில் யாவரும் புத்தக அரங்கில் அவர் நூல்கள் கிடைக்கும்.

எங்கள் புதிய நூல்கள்

ஜெயமோகனின் புதிய நாவல். கடல் என்னும் திரைப்படம் இந்நாவலை ஒட்டி உருவானது. செவ்வியல் தன்மை கொண்ட இப்படைப்பில் ஓர் ஆன்மாவின் கடலில் தெய்வமும் சாத்தானும் மோதிக்கொள்ளும் அலைகள் கொந்தளிக்கின்றன. மகாகவி தாந்தேயின் டிவைன் காமெடியின் நீட்சியென அமையும் படைப்பு இது.

ஜெயமோகன் கீதை பற்றி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். நான்கு நாட்களில் ஆற்றிய தொடர் உரை என்பதனால் எளிய நடையில், நேரடியாக வாசகனுடன் பேசும் தன்மைகொண்டது. கீதைக்குள் நுழைய இன்றைய நவீன வாசகனுக்கு திறக்கப்படும் மிகச்சிறந்த வாசல்.

பண்பாடு பற்றிய ஜெயமோகனின் கட்டுரைகளின் தொகுப்பு. நாம் ஆன்மிகம், பண்பாடு என எண்ணியிருப்பவை பலசமயம் சம்பிரதாயமான கருத்துக்கள். அவற்றை நவீன வாழ்க்கையுடன் இணைத்துப்பார்க்கும் பார்வைகள் கொண்ட நூல் இது.

சுந்தர ராமசாமியின் ஆளுமையை தன் நினைவுகளினூடாக ஜெயமோகன் சித்தரிக்கும் இந்நூல் அக்காலகட்டத்தில் நிகழ்ந்த அழகியல் விவாதங்களையும் தொட்டுக்கொண்டு ஒரு நாவலைப்போல் விரிவது. நுணுக்கமான காட்சிவிவரணைகளும், புன்னகைக்கவைக்கும் தருணங்களும் கொண்டது.

தினமலரில் தொடராக வந்த எளிமையான கட்டுரைகள். இவை நம் ஜனநாயகத்தின் அடிப்படைகளை விவாதிக்கின்றன. நாம் அறிந்த தகவல்களை அறியாத கோணத்தில் காட்டி இன்றியமையாதவற்றைப் புரியவைப்பது இவற்றின் பாணி.

நாஞ்சில்நாடனைப் பற்றிய ஜெயமோகனின் நூல். அவரை பிரியமான நகைச்சுவையுடன் மதிப்பிடுகிறது, நட்பை விவரிக்கிறது.

 

எங்கள் நூல்கள்

தமிழில் விஷ்ணுபுரம் அளவுக்கு எந்த நாவலும் அத்தனை கவனமான வாசிப்பைப் பெற்றதில்லை. பல கோணங்களில் அவரவர் அரசியலுக்கும் கருத்துநிலைக்கும் ஏற்ப அதை வாசித்துள்ளனர். இரண்டாவது தலைமுறையில் விஷ்ணுபுரம் குறியீடுகளின் அடுக்குகள் செறிந்த, உணர்வுநிலைகள் உச்சம் தொட்ட, ஒரு நவீன இந்தியக் காவியநாவலாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் உலகவாசகர்களின் வாசிப்புக்குச் செல்லவுள்ளது.

குறைத்துச்சொல்லும் அழகியல் கொண்ட கதைகள். இளம்படைப்பாளியான விஷால்ராஜாவின் குறிப்பிடத்தக்க சிறுகதைத் தொகுதி இது. வாழ்க்கையின் மென்மையான புதிர்களைப் பேசும் கதைகள்

பின்தொடரும் நிழலின் குரல் தமிழின் முதன்மையான அரசியல் நாவலாக பல விமர்சகர்களால் மதிப்பிடப்பட்டது. அரசியலின் அடிப்படையாக உள்ள கருத்தியல் என்பதை ஆராயும் நாவல் இது. ஒரு கருத்துநிலைபாடு சாமானியனை எப்படி அபாயகரமான ஆயுதமாக ஆக்கிவிடுகிறது என்னும் கேள்வி வரலாற்றில் என்றும் உள்ள ஒன்று. அதை ஆராயும் படைப்பு இது.

மைத்ரி ஓர் உருவகக் கதை. ஒரு மலை. ஒரு பயணி. ஒரு காதல். ஆனால் இந்த பயணம் மலையின் ஆழங்களின் மடிப்புகளில் இருந்து மலையுச்சியின் வெறுமையின் பரவசம் வரை நீள்கையில் ஆன்மிகமான இன்னொரு பரிணாமத்தை அடைகிறது.

மருபூமி வைக்கம் முகமது பஷிர் தன்னந்தனியாக பாலைவனத்தை கடந்த அனுபவத்தைப் பற்றி எழுதிய சுருக்கமான குறிப்பில் இருந்து விரிவாக்கம் செய்யப்பட்ட குறுநாவல். ஓர் அகப்பாலையை கடக்கும் ஒருவனின் அனுபவம் என வகைப்படுத்தலாம். புகழ்பெற்ற பல சிறுகதைகள் அடங்கிய நூல்.

அல்கிஸா தமிழின் முதல் இஸ்லாமிகேட் நாவல் என்று விமர்சகர்களால் குறிப்பிடப்பட்டது. இஸ்லாமிய அழகியல் உச்சம் என சொல்லத்தக்க கவாலி இசை, இஸ்லாமிய ஆன்மிக உச்சம் என சொல்லத்தக்க சூஃபி மரபு ஆகியவை ஓர் அழகிய காதல்கதையால் இணைக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் விரைவில் வெளிவரவுள்ளது.

தமிழின் தலைசிறந்த நாவல் என வாசகர்கள் பலரால் கருதப்படும் காடு மனித உறவின் உருவகமான குறிஞ்சி நிலத்தில் நிகழும் ஒரு காதல்கதை. வாழ்க்கையில் பாலை வரலாம். காதல் என்றும் ‘வறனுறல் அறியாச் சோலை’தான் என இந்நாவல் காட்டுகிறது.

சினிமாப்பின்னணியில் எழுதப்பட்ட ஓர் இழந்த காதலின் கதை. கறுப்புவெள்ளை சினிமாவின் உலகம் கவித்துவக்குறியீடாக ஆக்கப்பட்டுள்ளது இந்நாவலில். கற்பனாவாத அழகியல் கொண்ட படைப்பு.

முதுநாவல் ஜெயமோகனின் 133 சிறுகதைகளின் தொகுப்புகளான 14 நூல்களில் ஒன்று. இந்திய சூஃபி மரபின் ஆன்மிகநிலைகளில் இருந்து இந்திய வாழ்க்கையை ஆன்மிகம் வந்து தொடும் தருணங்களைச் சொல்லும் மகத்தான சிறுகதைகள் அடங்கியது. இதில் பல கதைகள் இன்று உலகப்புகழ்பெற்ற  அமெரிக்க இலக்கிய இதழ்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

கதாநாயகி ஓரு பேய்க்கதை. ஆனால் அந்தப் பேய்க்கதை சமகாலத்தில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தை அடைகிறது. அதற்கு முந்தைய லண்டனை ஊடுருவி ரோமாபுரிக்காலம் வரை நீள்கிறது. பல அடுக்குகளாலான நாவல் இது.

முற்றிலும் மங்கலத்தன்மை கொண்ட நாவல். மதுரை மீனாட்சி திருமணத்தின் அழகியபெருந்தோற்றம். ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் வரவிருக்கிறது.

தமிழகத்தின் தலித் எழுச்சியின் தொடக்கப்புள்ளியை, இந்தியப்பெரும் பஞ்சங்களின் பின்னணியில் திகைப்பூட்டும் கச்சிதத்துடன் சொல்லும் படைப்பு. ஆங்கிலத்தில் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் வெளியாகவுள்ளது. தெலுங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆண் -பெண் உறவின் நுணுக்கமான சில ஆழங்களுக்குள் ஊடுருவிச்செல்லும் கன்யாகுமரி இருபத்தைந்தாண்டுகளாகத் தொடர்ச்சியாக வாசிக்கப்படும் நாவல். காலம் மாறுந்தோறும் அதன் அடிப்படை வினாக்கள் கூர்கொள்கின்றன.

பி.கே.பாலகிருஷ்ணன் என்னும் மலையாளச் சிந்தனையாளரின் கட்டுரைகள். நாவல் என்னும் கலையை புரிந்துகொள்ள, அதை வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முறையாகப் பயன்படுத்த வழிகாட்டும் நூல். கட்டுரை நூலாயினும் உத்வேகமிக்க வாசிப்பை அளிப்பது.

தமிழில் இளைஞர்களிடையே மிக அதிகமாக வாசிக்கப்படும் ஜெயமோகனின் நூல் இரவு. இது அவர்களின் உலகம். இரவில் விழித்து பகலில் தூங்கும் ஒரு சிறு சமூகத்தை சித்தரிக்கும் படைப்பு.

இலக்கியத்தை வாசிப்பதெப்படி? எது நல்ல இலக்கியம்? எது வணிக எழுத்து? இலக்கிய அடிப்படைகள் பற்றிய பல கேள்விகளுக்கு விடைசொல்லும் கட்டுரைகள் கொண்ட நூல்.

காமம் பாவமென உருக்கொள்வது சமூக உறவுகள் வழியாக. காமத்தையும் பாவத்தையும் பிரித்திப்பார்ப்பது ஒரு மனமுதிர்ச்சி. அனுபவத்தினூடாக நிகழும் பரிமாணம் அது. அந்த விடுதலையைப் பேசும் நாவல் இது.

இந்து மெய்யியலை மதத்தின் சம்பிரதாயங்கள் மற்றும் நம்பிக்கைகளில் இருந்து விலக்கி தத்துவமாகவும் ஆன்மிகமாகவும் அணுக முற்படும் நவீன மனத்திற்குரியவை இந்தக் கட்டுரைகள். விரிவான விவாதங்களை உருவாக்கியவை.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் செய்த பயணத்தின் நேரடிப்பதிவுகள். வடக்கின் அரசியலையும், பண்பாட்டையும் எளிய கோட்டுச்சித்திரம் வழியாக தெரியவைப்பது இந்நூல்.

ஜெயமோகன் கல்லூரிப்படிப்பை விட்டு அரைத்துறவியாக வீட்டைவிட்டுக் கிளம்பிச்சென்று திரும்பி வந்த அனுபவங்களைப் பேசும் நூல் இது. அவரது புனைவுகளுக்கு நிகரான உத்வேகத்துடன் சொல்லப்பட்ட நிகழ்வுகள் கொண்டது. விஸ்வநாதன் மொழியாக்கத்தில் ஆங்கிலத்தில் வெளிவரவுள்ளது.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 12, 2025 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.