Jeyamohan's Blog, page 23
September 21, 2025
Temple art and Architecture class experience
For the next few decades, I hope I will contemplate the profound statement of the legendary Sthapathi V Ganapathy, “Temple is the melody created by rhythm”.
The statement reminds me of the story ‘Iraivan’ by Je in the Ezhukathir series. Where Manikkam Aasari says it’s all Calculation.
Temple art and Architecture class experience
மூன்றே நாளில் கர்நாடக இசையை எப்படி அறிமுகம் செய்ய முடியும்? அதைக் கற்க பல ஆண்டுகள் ஆகும் அல்லவா? ஒரு சந்தேகமாகவே இதைக் கேட்கிறேன்.
ஜெயக்குமாரின் இசை வகுப்புTemple art and Architecture class experience
For the next few decades, I hope I will contemplate the profound statement of the legendary Sthapathi V Ganapathy, “Temple is the melody created by rhythm”.
The statement reminds me of the story ‘Iraivan’ by Je in the Ezhukathir series. Where Manikkam Aasari says it’s all Calculation.
Temple art and Architecture class experience
மூன்றே நாளில் கர்நாடக இசையை எப்படி அறிமுகம் செய்ய முடியும்? அதைக் கற்க பல ஆண்டுகள் ஆகும் அல்லவா? ஒரு சந்தேகமாகவே இதைக் கேட்கிறேன்.
ஜெயக்குமாரின் இசை வகுப்புSeptember 20, 2025
காலம் சேர்ப்பதுதான் என்ன?
1951ல் வெளிவந்த படம் நீலக்குயில். ஜனாதிபதி விருது பெற்ற முதல் மலையாளப்படம். மலையாளத்தில் இடைநிலை படங்களுக்குத் தொடக்கம் உருவாக்கியது அது. ( நீலக்குயில்) புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரான உறூப் எழுதியது. பி.பாஸ்கரன், செம்மீன்புகழ் ராமு காரியட்டுடன் இணைந்து இயக்கியது. சத்யன், மிஸ்.குமாரி இருவரும் இணைந்து நடித்தது.
நீலக்குயில் அந்தக் காலத்தில் ஒரு புரட்சிகரமான திரைப்படம். தலித் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை, பாலியல் சுரண்டல் ஆகியவற்றை ஆக்ரோஷமாகப் பேசியது. அந்த சுரண்டலுக்கு அப்பால் எழும் மானுடநேயத்தை முன்வைத்தது. அதில் இடம் பெற்ற புகழ்பெற்ற பாடல் எல்லாரும் சொல்லணு…
அந்தப்பாடலை அண்மையில் நவீன இசைக்குழுவான அமிர்தம் கமய மறு ஆக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். அறுபத்தைந்து ஆண்டுகளுக்குப்பின் 2015 ல் வெளிவந்த அந்தப்பாடல் பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டிருக்கிறது. காலத்தால் என்ன கூடுதலாக வந்து சேர்ந்திருக்கிறது?
தாளம் கொஞ்சம் மாறியிருக்கிறது. இசைக்கருவிகள் மாறியிருக்கின்றன. நடனமுறை மாறியிருக்கிறது. மெட்டு அதேதான். பழையபடத்தில் ஒரு தலித் பெண் பாடும் , தலித்துக்களின் நாட்டார்ப் பாடல் நவீன ஒளியமைப்புடன் மேடையில் நவீனகாலப் பெண்களால் நடனத்துடன் பாடப்படும்போது முற்றிலும் இன்னொன்றாக ஆகிவிட்டிருக்கிறது.
அத்துடன் பாட்டின் நடுவே இன்னொரு புகழ்பெற்ற மலையாள நகைச்சுவைப்பாடல் ‘கேட்டில்லே கோட்டயத்தொரு மூத்த பிள்ளேச்சன், தொண்ணூறு கழிஞ்ஞப்போள் பெண்ணு கெட்டான் போய்” (கேட்டீர்களா, கோட்டயத்தில் ஒரு மூத்த பிள்ளைவாள், தொண்ணூறு வயதுக்குப்பின் பெண்ணைக் கட்ட போனார்) இணைக்கப்பட்டு விளையாட்டாகவும் ஆக்கப்பட்டுள்ளது.
அதுதான் உண்மையில் உருவாகவேண்டிய மாற்றமா என்ன? ஒடுக்குமுறையின் இழிவின் அடையாளங்களெல்லாம் வெறும் அடையாளங்களாகி, பின்னர் கலையாக மாறிவிடும்போது காலம் கடந்துசெல்கிறதா என்ன?
எல்லாரும் சொல்லணு. நவீன வடிவம். அமிர்தம் கமய பேண்ட்
எல்லாரும் சொல்லணு எல்லாரும் சொல்லணு
கல்லாணு ஈ நெஞ்சிலெந்நு
கரிங்கல்லாணு ஈ நெஞ்சிலெந்நு…
ஞானொந்நு தொட்டப்ப நீலக்கரிம்பின்றே
துண்டாணு கண்டதய்யா
சக்கரத் துண்டாணு கண்டதய்யா
நாடாகே சொல்லணு நாட்டாரும் சொல்லணு
கல்லாணு ஈ கரளில் எந்நு
ஞானொந்நு கேறியப்போ நீலக்குயிலின்றே
கூடாணு கண்டதய்யா குஞ்ஞி கூடாணு கண்டதய்யா
எந்தினு நோக்கணு எந்திநு நோக்கணு
சந்திரா நீ ஞங்களே அய்யோ சந்திரா நீ ஞங்களே
ஞானில்ல மேல்போட்டு ஞானில்ல மேல்போட்டு
கல்யாண செக்கனுண்டே தாழே கல்யாண செக்கனுண்டே
செண்டொந்நு வாங்கணம் முண்டு முறிக்கணம்
பூந்தாலி கெட்டீடேணம் பொன்னின் பூந்தாலி கெட்டீடேணம்
களியல்ல கிளிவாலன் வெற்றில திந்நென் சுண்டொந்நு சோப்பிக்கேணம்
என்றே சுண்டொந்நு சோப்பிக்கேணம்.
எல்லாரும் சொல்கின்றனர் எல்லாரும் சொல்கின்றனர்கல்தான் இந்த நெஞ்சில் என்றுநான் ஒருமுறை தொட்டபோதுநீலக்கரும்பின் துண்டைத்தான் கண்டேன்சர்க்கரைக் துண்டைத்தான் கண்டேன்.ஊரே சொல்கிறது, ஊராரும் சொல்கின்றனர்காடுதான் நெஞ்சில் என்று கொடும் காடுதான் நெஞ்சில் என்றுநான் நுழைந்தபோது நீலக்குயிலின் குஞ்சைத்தான் கண்டேன்சிறு குஞ்சைத்தான் கண்டேன்எதற்காகப் பார்க்கிறாய் எதற்காகப் பார்க்கிறாய்சந்திரா நீ எங்களைநான் வரமாட்டேன் மேலே நான் வரமாட்டேன் மேலேகீழே என் கல்யாணப்பையன் இருக்கிறான்செண்டு ஒன்று வாங்கவேண்டும். வேட்டி அறுத்து வாங்கவேண்டும்பூந்தாலி கட்டிக்கொள்ளவேண்டும் பொன் தாலி கட்டவேண்டும்வேடிக்கையல்ல, கிளிநிற வெற்றிலை போட்டு என்உதடுகளை சிவக்கச்செய்யவேண்டும்
அவினேனி பாஸ்கர்
தமிழில் இருந்து தெலுங்குக்கு நவீன இலக்கியங்களை மொழியாக்கம் செய்யும் படைப்பாளி. தெலுங்கிலிருந்து தமிழுக்கும் மொழியாக்கங்கள் செய்துள்ளார். ஜெயமோகன், அ.முத்துலிங்கம் உட்பட பலருடைய படைப்புகளை தெலுங்குக்குக் கொண்டுசென்றவர்
அவினேனி பாஸ்கர்
அவினேனி பாஸ்கர் – தமிழ் விக்கி
சூஃபிச் சுடர்களும் பிரபஞ்ச மெய்மையின் ஒருமைச் சமுத்திரமும். நிஷா மன்ஸூர்
(10 செப்டெம்பர் 2025 அன்று நாகர்கோயிலில் தெற்கிலிருந்து ஒளிரும் சூஃபி சுடர்கள் என்னும் நூலை வெளியிட்டு நிஷா மன்ஸூர் ஆற்றிய உரை)
தெற்கிலிருந்து ஒளிரும் சூஃபிச் சுடர்கள் கட்டுரைத் தொகுப்பின் நூல் அறிமுகம் என்கிற பெயரில் நூலின் உள்ளடக்கத்தை சுருக்கமாகச் சொல்வதைவிட இந்த நூலுக்குள் நுழைவதற்கான இரண்டு வாசல்களைத் திறந்து தருவதன் மூலம் இந்தத் தொகுப்பின் கட்டுரைகளை உள்வாங்குவதற்கும் அவை காட்டித்தரும் பாதையில் பயணிப்பதற்குமான முன் தயாரிப்பை நல்க முடியும் என நம்புகிறேன்.முதலாக சூஃபிஸம் என்றால் என்ன என்பதையும் அடுத்ததாக தமிழ் மண்ணுக்கான தனித்துவமான சூஃபிஸ மரபின் பண்பாட்டுக் கூறுகள் குறித்த அறிமுகத்தையும் பார்ப்போம்.
சூஃபிஸம் என்றால் என்ன ?
சூஃபிஸம் என்பது ஒரு மீள் பயணம், ஒரு வடியும் அலை.
எல்லையில்லாத சமுத்திரத்தில் வடியும் அலை ஒன்றில் மூழ்கி அது அடித்துச் செல்லும் பாதையில் அதன் நித்திய எல்லையற்ற மூல ஊற்றுக்குப் பயணிப்பது பற்றிய வாழ்க்கைத் தொழிலும் அறிவுத் துறையும் அறிவியலும் ஆகும்.
மாபெரும் குருநாதர் எனப் போற்றப்படும் ஷைகுல் அக்பர் முஹையத்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் முக்கியமான பிரார்த்தனை,
“இரட்சகா,உமது எல்லையில்லா ஒருமைச் சமுத்திரத்தின் ஆழத்தில் என்னைப் பிரவேசிக்கச் செய்வாயாக“இதுதான் சூஃபிஸ பாதையின் ஒற்றை இலக்கு ஆகும்.
ரூமி மெளலானாவின் ஞானகுருவான சம்ஸுத் தப்ரேஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் பிரகடனம் இது,
“நான் சூஃபி. இக்கணத்தின் குழந்தை.
ஒரே கூரையின் கீழ் இரண்டு இரவுகள் உறங்குபவன் அல்லன்
ஒரே உணவுத்தட்டில் இரண்டு வேலைகள் உண்ணுபவன் அல்லன்.” இதனை சூஃபியின் விளக்கமாக உணர்ந்து கொள்ளலாம்.
சூஃபிகள் எப்போதும் பரலோக ராஜ்ஜியத்தின் ரகசியங்களின் மீதும் பிரபஞ்ச ஊற்றின் கண்களின் மீதுமே கவனத்தைக் குவிப்பவர்களாக இருக்கிறார்கள்.
பதினோராம் நூற்றாண்டின் மாபெரும் சூஃபியான இமாம் கஸ்ஸாலி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மரணித்தபோது அவர் தம் அந்திம காலத்தில் எழுதிவைத்திருந்த கவிதையொன்று அவரது தலைமாட்டில் இருந்தது.அதில்,
“நானொரு பறவை; இவ்வுடல் எனது கூண்டு.
அதை அடையாளமாக வைத்துவிட்டு நான் பறந்து செல்கிறேன்” என்று எழுதப்பட்டிருந்தது. இதனை சூபி வாழ்வின் ஒட்டுமொத்த குறியீடு எனலாம்.
இன்னொரு விதமாகக் கூறினால் “சூஃபிஸம் ஒரு குறிப்பிட்ட மறை வெளிப்பாட்டையே முற்றிலும் சார்ந்திருப்பதால் அது வேறு எதனையும் அறவே சாராமல் தன்னிறைவு கொண்டுள்ளது. அதேசமயம் பகிர்வதற்கு பொருத்தமான அளவு உலகின் எல்லா நிலப்பகுதியில் நிலவும் பண்பாட்டுக் கூறுகளையும் கலை வடிவங்களையும் கருவியாக ஏற்றுக் கொள்ளவும் செய்கிறது“
நம் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒப்புவமையில்லாத சூபி ஞானியான கல்வத்து நாயகம் அவர்கள் தமது சீடர்களுக்கான தினசரி விர்து எனப்படும் தியான உச்சாடனங்களில் “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ” எனும் இறைமறை வசனத்தைப் பரிந்துரைக்கிறார்கள். “நாம் அனைவரும் இறைவனிடமிருந்து வந்தோம் மீண்டும் அவனிடமே திரும்பிச் செல்பவர்களாக இருக்கிறோம் ” எனும் பொருள் கொண்ட இவ்வசனம் மரணித்த செய்தியைக் கேட்க நேர்பவர் மொழியும் வழங்கு சொல்லாக எளிமைப் படுத்தப்பட்டாலும் இதன் அசல் பொருளானது ஒரு மனிதன் தன் வாழ்வின் அநித்தியத்தையும் தன் ஆன்மாவின் ரகசியத்தையும் உணர்ந்துகொள்ளப் பயன்படும் மந்திரமாக ஜொலிக்கிறது.இதனையே ரூமி மெளலானாவின் கவிதை இப்படிச் சொல்கிறது,
“ஆனால் நானறிவேன்
எனது ஆன்மா வந்தது வேறெங்கிருந்தோ
அங்கு சென்றடையவே விரும்புகிறேன் நான்
வேறேதோ மதுபான விடுதியிலிருந்து
பிறந்திருக்கிறது இந்த போதை
நான் அங்கு மீளும்போது
முற்றிலும் தெளிவடைந்திருப்பேன்
இப்போது இந்தக் கூட்டில்
அமர்ந்திருக்கும் நான்
வேறோர் நிலவுலகின் பறவை.
நான் பறந்து வெளியேறும் நாள்
வெகு தொலைவில் இல்லை“
சூஃபி எனும் சொல்லாடல் ஸுஃப்பா எனும் மூலச்சொல்லில் இருந்து பிறந்தது. நபிகள் நாயகத்தின் அவையில் திண்ணைத் தோழர்கள் (அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா) என்று குறிப்பிடப்பட்ட நூற்றுக்கணக்கான தோழர்கள் ஒரு திண்ணையில் தங்கி நபிகளாரின் ஒவ்வொரு அசைவையும் ஆவணமாக்கியதோடு மட்டுமின்றி வாழ்வியல் நெறிமுறைகள் சட்டதிட்டங்கள் போன்ற சமூக மனிதனுக்கான ஒழுங்குகளை போதிப்பதைத் தாண்டி ஆன்மீக ரகசியங்களையும் இறைமறையின் அகமியங்களையும் பயின்று வந்தனர்
அந்தத் திண்ணைத் தோழர்களின் நீட்சியாகவே இன்றுவரை உள்ள ஸூபிகள் இருக்கின்றனர். .அவ்வப்போது மனதில் ஏற்படும் சபலத்தை வெல்வதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளும் சாதாரண மனிதனைத் தாண்டி மனோ இச்சைகளுக்கெதிரான முழுமையான போரை மேற்கொள்வதே சூபிகளின் முழுமுதற் கொள்கையாகும். விரைந்து முன்னேறும் சூஃபியே ஷைகுவாக–சற்குருவாக இருந்து சீடர்களை வழிநடத்துகிறார்.அவர் இறைமறையாம் குரானுக்கு நெருக்கமானவர்.மனித உருவில் ஃபுர்கானை அடைவதற்கு நெருங்கி வருகிறார்.
உலக வாழ்வின் மீது பற்றற்றிருப்பது, எளிய உணவுகளை மட்டுமே உண்ணுவது, கிடைத்தவற்றைக் கொண்டு பொருந்திக் கொள்வது. என்று துறவற மனோநிலையில் வாழ்ந்தாலும் ஈராக்கின் ராபியத்துல் பஸ்ரியா தமிழ்நாட்டின் குணங்குடி மஸ்தான் சாகிபு அப்பா போன்ற மிகச்சிலரைத் தவிர ஏனைய அனைவருமே திருமண பந்தத்தை மேற்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பரிபூரணத்துவம் –இன்சானே காமில் என்பது சூஃபிஸத்தின் இலக்கு ஆகும். பரிபூரணம் என்பது கம்பீரம், அழகு,முழுமை ஆகிய பண்புகளின் கலவை ஆகும்.இந்த இறைப் பண்புகளைத் தரித்துக் கொள்வதுதான் சூஃபிஸம்.
அதாவது,
வீழ்ந்த மனிதனின் குறைபாடுகளை ஆன்மாவிலிருந்து அகற்றி
அவனது இரண்டாம் இயல்பாக ஆகிவிட்ட பழக்கவழக்கங்கள் மற்றும் தப்பெண்ணங்களைக் களைந்து இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட மனிதனின் ஆதி இயற்கையின் குணநலன்களை ஆன்மாவுக்கு அளிப்பது என்பதாகும்.
ஹதீஸே குத்ஸியில் இறைவன் கூறுகிறான்,
“நான் மறைந்த புதையலாக இருந்தேன்.பிறகு அறியப்பட விழைந்தேன்,எனவே இவ்வுலகைப் படைத்தேன்” என்பதாக.
இந்தப் புனித நபிமொழிதான் எல்லா சூஃபிஸ சிந்தனைப் பள்ளிகளும் முன்மொழியும் நபிமொழியாகும்.
எல்லா சூஃபி சிந்தனைப் பள்ளிகளுக்கும் இறைமறை திருக்குர்ஆன்–நபிமொழி ஆகியனவே வழிகாட்டுபவை ஆகும். ஒப்பாரும் மிக்காருமற்ற பரிசுத்த புனிதரான நபிகள் நாயகமே சூஃபிஸத்தின் பெருந்தலைவர் ஆவார்.
“நீர் ஓராயிரம் ஆண்டுகள் வாழ்வதுபோல இம்மைக்குச் செயலாற்றுவீராக.ஆனால் நாளை மரணிக்கத் தயாராக இருப்பதுபோல மறுமைக்குச் செயலாற்றுவீராக” என்பது நபிகளாரின் பிரபலமான கூற்று.
பூமியில் இறைவனின் நீதியை நிலைநாட்டுவதற்காகவும் சமதர்ம சமுதாயத்தைக் கட்டமைப்பதற்காகவும் செயலாற்றுவது சூஃபிகளின் சமூக கடமையாகும். உலகோடு ஒட்டாமல் வாழ்வது சூஃபிகளின் வழமை அல்ல. சமூகத்துடன் இணங்கிக் கூடி வாழ்ந்தாலும் மனதளவில் உலக ஆசாபாசங்களில் ஒட்டாமல் வாழ்வதுதான் சூஃபிகளின் வழமை ஆகும்.
“இவ்வுலகில் ஒரு அன்னியனைப் போல,அல்லது ஒரு வழிப்போக்கனைப் போல வாழ்வீராக” என்பது இன்னொரு முக்கியமான நபிமொழி. ஆகவே“திரும்பிச் செல்வதற்கான தயார்நிலையில்“தான் சூஃபி எப்போதும் இருப்பார். சிதிலமடைந்து துண்டுதுண்டான தனிமனித ஆன்மாவை அளவற்ற எல்லையற்ற இறை ஆன்மாவுடன் மறு ஒருங்கிணைப்பு செய்வதற்கான ஏக்கத்துடனே சூஃபியின் கண்கள் தவித்துக் கொண்டிருக்கும்.
அறிவியல் கண்டுபிடிப்புகளாலும் தொழில்நுட்ப வளர்ச்சிகளாலும் மனிதன் வானத்தில் பறந்தபோதும் காலத்தின் குறுக்கு நெடுக்குகளின் அடுக்குகளினூடே ஆழப் பயணித்த போதும் அவனது மனதானது இச்சைகளின் வளர்ப்புப்பிராணியாகவே இருந்துகொண்டிருக்கிறது.
ஒரு துளை வழியாக இந்தப் பிரபஞ்சத்துள் பிரவேசிக்கும் மனிதன் தன் மூலத்தை/அசலை அடைந்து ஞானசாகரத்தில் திளைக்க வேண்டும்.ஆனால் வந்த அதே துளையையே வாழ்நாள் முழுதும் சிந்தித்துப் பின்னர் அதற்குள்ளாகவே வீழ்ந்து வீணாகி மறைந்து விடுகிறான். வந்த வழியே திரும்பிச் செல்வதற்கல்லவே வாழ்வெனும் அருள்.
இதனையே பட்டினத்தார் இவ்வாறு பாடுவார்,
“சிற்றம் பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம் பலம் தேடி விட்டோமே – நித்தம்
பிறந்த இடத்தைத் தேடுதே பேதை மட நெஞ்சம்
கறந்த இடத்தை நாடுதே கண்”
“முடி சூழ்ந்த கண்ணில்
முளையடித்துக் கட்டிய மனசு” என்பார் நம் காலத்து பாணன் கவிஞர் விக்ரமாதித்யன். அவ்வாறு தன்னைப் பிரபஞ்சத்துடன் அடையாளம் கண்டுகொள்ளும்போது வாழ்வு இன்சான் எனும் மனிதன் காமிலான இன்சானாகப் பரிணமிக்கிறான் (இன்சானே காமில் –பரிபூரண மனிதன்).
சூஃபியும் எல்லா மனிதர்களைப் போலவே சாதாரண பிரபஞ்ச வாசலின் வழியாக இவ்வுலகத்திற்கு வந்தார். ஆனால் பெரும்பாலான மனிதர்களைப் போல தான் வந்த அந்த நுழைவாயில் வழியிலேயே வடிந்து செல்வதிலிருந்து தவிர்த்து தனது சிற்றலையை எல்லையற்ற பேரலையுடன் இணைத்துக் கொள்வதையே செயலாக்கிக் கொள்வார். இதற்கு தனது சொந்த முயற்சி மட்டுமே போதாது என்பதால் சற்குருநாதர் அந்த வாயிலில் கைதூக்கிக் காப்பவராக இருப்பார்.பரிபூரணத்தின் மையப்பகுதியில் இறைத்தூதர் சதா காத்துக் கொண்டிருக்கிறார். வந்து சேராதவர்களுக்கு அவர் ஒரு மீட்புக் கயிற்றை வீசுகிறார்.அந்தக் கயிரே ஆன்மீக வம்சாவழி எனப்படும் ஸில்ஸிலா ஆகும்.ஒவ்வொரு சூஃபி சிந்தனைப் பள்ளியும் இவ்வாறே இறைத்தூதர் வசமிருந்துதான் தோன்றி வருகின்றன.
“இறைவனின் பரிசுத்த மூச்சால் உள்ளிழுக்கப்பட்டு–உள்வாங்கப்பட்டு பிறகு வெளியேற்றப் படாமல் இருப்பதே சூஃபிஸத்தின் மேலான குறிக்கோள் ஆகும்.”
“சாந்தியடைந்த ஆத்மாவே…உம் இறைவனின் பக்கம் திரும்பிச் செல்.நீ அவன் மீது திருப்தியுற்றும் அவன் உம் மீது திருப்தியுற்றும் உள்ள நிலையில் எம் நல்லடியார்களுக்கு மத்தியில் நுழைந்துவிடு. என் சுவனபதிக்குள் நுழைந்துவிடு“
திருக்குர்ஆன்-89:27-30 வசனங்கள் குறிக்கும் இந்த நித்திய ஒருமைப்பாடுதான் சூஃபிகளின் உயரிய நோக்கம்.
2. தமிழ் மண்ணின் சூஃபிஸம்.
தமிழ் மண்ணுக்கான தனித்துவமான சூஃபி மரபைக் கொண்டுள்ளவர்கள் நாம். சதக்கத்துல்லாஹ் அப்பா,பீர் முஹம்மது அப்பா,குணங்குடி மஸ்தான் சாஹிப் அப்பா,நூஹ் லெப்பை ஆலிம்,கீழக்கரை தைக்கா சாஹிப் வலியுல்லாஹ்,கல்வத்து நாயகம் ரலி என்று மிக நீண்ட ஆளுமைகள் கொண்ட வரிசை அது.
இயல்பாகவே தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமியர்கள் அனைவரிடத்திலும் அந்தந்த நிலப்பகுதிக்கேற்ப பழமொழிகளும் சொலவடைகளும் கிஸ்ஸாக்கள் எனப்படும் மூத்தோர் வரலாறுகளும் வழங்கி வருகின்றன. மேலும் அரபு மொழியை எழுத்துருவாகவும் தமிழை உச்சரிப்பாகவும் கொண்ட அரபுத்தமிழ் எனப்படும் “அர்வி” மூலமாக பல வரலாற்று நூல்களும் இஸ்லாமிய மார்க்க சட்டதிட்டங்களின் தொகுப்புகளும் எழுதப்பட்டுள்ளன.
காயல்பட்டினத்தில் அடங்கியுள்ள உமர் வலியுல்லாஹ்வில் தொடங்கி கீழக்கரை சதக்கத்துல்லாஹ் அப்பாவில் உச்சம் பெற்ற ஞானமரபானது தமிழ்,அரபு,அரபுத்தமிழ் கவிதைகளாகவும் பாடல்களாகவும் விருத்தங்களாகவும் கண்ணிகளாகவும் வெளியாகியுள்ளன. உமர் வலியுல்லாஹ் அவர்களின் “கல்பைக் கழுவினாலே கரை சேரலாம்,கையைக் கழுவினால் கறைபோமோ” என்று துவங்கும் பாடல்கள் உள்ளிட்ட “மெஞ்ஞானப் புலம்பல்” பாடல்கள் தமிழிலும் “இலாஹி கம் துபக்கீனி” “தரீக்கல் வஸ்ல்” “அல்லபல் அலிபு” என்பதுபோன்ற அரபுக் கவிதைகளும் தமிழ் இஸ்லாமிய இலக்கிய ஞானமரபின் ஊற்றுக்கண்ணாக விளங்குகின்றன.
முகலாய மாமன்னர் ஒளரங்கசீப் அவர்களின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்து ஒளரங்கசீப்பின் “ஃபதாவா ஆலம்கீர் ” எனும் மார்க்க விளக்கக் கிரந்தத்தைத் தொகுக்கும் குழுவுக்குத் தலைமை தாங்கிய“சதக்கத்துல்லாஹ் அப்பா” அவர்களின் “வித்ரிய்யா” எனும் நபிபெருமானாரின் புகழ் பாடும் காவியமானது 29 கண்ணிகளைக் கொண்ட 2105 பாடல்களை உள்ளடக்கியதாகும். மேலும் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள்தான் உமறுப்புலவர் எழுதிய “சீறாப்புராணம்” காவியத்திற்கு முன்னுரை வழங்கியவர்கள் ஆவார்கள்.
இதனைப்போலவே உமர் வலி அவர்களின் சீடராகவும் பிரதிநிதியாகவும் திகழ்ந்த கீழக்கரை தைக்கா சாஹிப் வலியுல்லாஹ் அவர்கள் 28 கண்ணிகளைக் கொண்ட “ஷிஃப் இய்யா” எனும் காவியத்தை இயற்றினார்கள். ஆனால் அதனை அச்சாக்கம் செய்யவில்லை. ஏனெனில் அவர்கள் மிகவும் கண்ணியமாக மதிக்கும் சதக்கத்துல்லாஹ் அப்பாவின் “வித்ரிய்யா” வுக்கு போட்டியாக எழுதப்பட்டதுதான் இந்தக் காவியம் என்று எவரும் பிற்காலத்தில் கூறிவிடலாகாது என்கிற பேணுதல்தான் காரணம். மேலும் அரபியிலும், அரபுத்தமிழிலும், தமிழிலும் பல நூல்களை எழுதியுள்ளார்கள். அவற்றில் நான்காயிரம் மஸ் அலாக்களை ( வாழ்வியல் சட்டக் கோர்வைகள்) ஒருங்கிணைந்த “மஸாயிலுத்தீன்” மற்றும் “குஸாலத்துத் திராயா” என்கிற அரபு நூல்களும் “மஃரிஃபத்தேசல்” மற்றும் நாற்பது மாலைகள் கொண்ட “அடைக்கல மாலை” எனும் தமிழ் நூல்களும் மிக முக்கியமானவை ஆகும்.
“காலமடங்கிலும் நீயே அதிலுன்னைக் கண்டதுண்டோ?
கோலமடங்கிலும் நீயே உனக்கொரு கோலமுண்டோ?
ஆலமனைத்தும் அடையாளம் உனை அறிதற்கென்றால்
ஆல நபிக்குன்னருள் புரிவாய் உன் அடைக்கலமே“
எனும் பாடல் வஹ்தத்துல் உஜூத்(ஒற்றை உள்ளமையின் வெளிப்பாடு) எனும் ஞான மரபின் நீட்சியாகத் திகழ்கிறது.
கீழக்கரை தைக்கா சாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் சீடர்களில் ஐவர் மிக முக்கியமானவர்கள் ஆவார்கள். அவர்களில் ஒருவர்தான் குணங்குடி மஸ்தான் சாஹிப். ஏனைய நால்வர் புலவர் நாயகம் எனப் போற்றப்படும் சேகனாப் புலவர் மற்றும் “அரூஸிய்யா” எனும் ஞான பீடத்தை உருவாக்கிய மாப்பிள்ளை லெப்பை ஆலிம், சுன்த்து சுஃப்யான் எனும் அரபுத்தமிழ் கிரந்தத்தை இயற்றிய அம்மாபட்டினம் யூசுஃப் லெப்பை ஆலிம், மற்றும் அப்துல் காதிர் லெப்பை ஆலிம் ஆகியோர் ஆவர்.
தமிழின் முதல் நாவலாகக் கருதப்படும் 1879-ல் வெளியான மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் எழுதிய “பிரதாப முதலியார் சரித்திரம்” நாவலுக்கு 21 வருடங்களுக்கு முன்னதாக 1858 ல் அரபுத்தமிழில் “மதீனத்துன் நுஹாஸ்” எனும் தலைப்பில் எழுதப்பட்ட “தாமிரப் பட்டினம்” நாவல் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களுடையது. அதாவது தமிழ் பேசும் மக்களால் எழுதப்பட்ட முதல் நாவல் இதுவேயாகும். பின்னர் 1979 ல் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியானது இந்நாவல். மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் “மஙானி” எனும் இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாட்டு நூல் இன்றளவும் மார்க்க அறிஞர்களுக்கு ஒளிவிளக்காகத் திகழ்கிறது. இலங்கையின் முதலாவது அரபுக் கல்லூரியை “வெலிகம” நகரத்தில் அமைத்த இவர்கள் 350 பள்ளிவாசல்களை அமைத்து இஸ்லாமிய மறுமலர்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளார்கள். மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் பங்களிப்புகளானவை தனியாக ஒரு கருத்தரங்கு நிகழ்த்தி ஆய்வுநூல் வெளியிடும் அளவு மகத்தானவை ஆகும்.
அடுத்ததாக பீரப்பா,
சூஃபிகளைப் பொறுத்தவரை நான்கு வகையான சூஃபி இறைநேசர்களை இறைவன் இந்த மண்ணுக்குப் பரிசாக அளித்திருக்கிறான்.
1)தர்க்க ரீதியாக,அறிவு ரீதியாக சகலத்தையும் நேர்த்தியான சூத்திரங்களுடன் மெய்ப்பிக்கும் ஞான ஆசிரியர்கள்.
2)தம் நஃப்ஸை (கீழான மனதை) வென்று வணக்க வழிபாடுகள் மூலமாகவும் இதயத்தைப் பரிசுத்தப்படுத்துவதன் மூலமாகவும் தனக்குள் பூரணமாகி மெளனித்து நின்ற மகான்கள்.
3) இறையணுக்கத்தில் தன்னை மறந்து மஜ்தூபாகி (தன்னிலை மறந்து) அலையும் ஞானச் சிறகுகள்.
4)நீதியை நிலைநாட்ட அநீதிக்கெதிராக போரிட்டு தன்னுயிரைத் தியாகம் செய்த ஷுஹதாக்கள் (வீரமரணம் அடைந்தவர்கள்)
தக்கலை பீரப்பா முதலாவது வகையில் காலத்தை வென்று உறுதியாக நிற்கிறார்கள், இந்த வகைமையினர்கள் எந்த ஒரு இடத்திலும் தடுமாறுவதில்லை–தயங்குவதில்லை. இறைமை,பிரபஞ்ச உருவாக்கம்,தாத் எனும் இறைசுயத்தின் தன்மை,சிஃபாத் எனும் இறை குணங்களின் வகைமை,
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் மேன்மை,ஹக்கும் ஹல்க்கும் யாவை (படைத்தவனுக்கும் படைப்புக்கும்) என்கிற தெளிவு,சுவர்க்கம்,நரகம்,கேள்விகணக்கு,சிராத்துல் முஸ்தகீம் எனும் மயிர்ப்பாலம்,மலக்குகள்,ஜின்கள்,இன்னபிற படைப்பினங்கள் குறித்த விளக்கம்,ஸூர் ஊதுவதன் அகமியம்,மஹ்ஸர் மைதானத்தின் தாத்பர்யம்,மெய்ப்பொருளுடன் அடைக்கலமாகும் அப்து எனும் அடிமை ஆன்மாவின் படித்தரங்கள் என்று எல்லாக் கேள்விகளுக்கும் துல்லியமான, கறாரான விளக்கங்கள் அவர்களிடம் உண்டு. ஷரகு எனும் ஷரீயத்துக்காக சுருட்டி மறைத்தவை போக சொல்லத்தகுந்த அனைத்தையும் தெள்ளத் தெளிவாக தமிழில் அட்சர சுத்தமாக விளக்கிக் கூறுயிருக்கிறார்கள் பீரப்பா.
“நீ கடலின் ஒரு துளி அல்ல,
ஒரு துளிக்குள் நிறைந்திருக்கும் கடல்“
என்கிறார்கள் ஆசான் ரூமி மெளலானா.
பெருங் கடலானது என்னவிதமான மூலக்கூறுகளைத் தன்னுள் கொண்டுள்ளதோ அவை அத்தனையும் ஒரு துளிக்குள்ளும் உண்டு. அவற்றின் அளவில் குறைவு இருக்கலாம்.கைகளில் முழுக்கடலையும் அள்ள இயலாது.ஆனால் கைகளுக்குள் இருப்பது கையளவு கடலாகவேதான் இருக்கும். இதையேதான் பீரப்பா இவ்வாறு கூறுகிறார்கள்,
“நீயே யுனைப்புகழ்ந் துற்றவந் நாளுன்னை நீயுணர்ந்து
நீயே யுனக்கு ஸுஜூதுசெய் தாய்பின் நினைந்துருவாய்
நீயே புவிக்குள் றசூலாக வந்தவன் நேர்வழிக்கும்
நீயே துணையெனக் கல்லாது வேறில்லை நிச்சயமே“
இவ்வளவு அப்பட்டமாக உடைத்து நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல இந்த ஞான விளக்கத்தைச் சொல்ல பீரப்பாவால்தான் முடியும்.
இறைவன் இந்தப் பிரபஞ்சத்தின் சகலவிதமான படைப்புகளையும் உருவாக்க, தன்னையன்றி இன்னொரு பொருளின் மீது தேவையாகவில்லை. ஏனெனில் அவன் தேவையற்றவன்.இந்த நுணுக்கமான புள்ளியை மையப்படுத்தி சகலவிதமான சூத்திரங்களுடன் இதனை மெய்ப்பிக்கிறார்கள்.
அதே சமயம் எல்லையற்ற இறைமையின் ஆகிருதியானது யாராலும் முற்றுமுழுதாக அறியக்கூடியதோ தெரியமுடிந்ததோ அல்ல என்னும் சத்தியத்தை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தவும் செய்கிறார்கள்.
“அல்லாஹு லில்லாஹி ஆதியானவனே
***ஆராருமணுகாத தீதாருள்ளோனே***
வல்லானே எல்லாம் வணங்க உரியோனே
மாறாத சோதிவடிவான பெரியோனே
லில்லாஹி யென்றன் பிரானே வல்லோனே
இறையோனே நீ யெற்குன் உதவியருள்வாயே
பொல்லாத சூமரென்னை வெல்லாமலடியேன்
புண்ணியனே யுன்றனடைக் கலமதானேன்“
(ஞானப்புகழ்ச்சி-47)
இந்தப் பாடலில் வரும் ஆராருமணுகாத தீதாருள்ளோனே எனும் வரி அதனைத்தான் சொல்கிறது.ரட்சகனின் பிரமாண்டமான ஆகிருதியானது எவராலும் அறிய முடிந்தது அல்ல.
எவ்வளவுதான் ஹக்கில் (படைத்தவன்) மூழ்கித் திளைத்திருந்தாலும் ஹல்க்கின்(படைப்பு) தான்மை முற்றிலுமாக அழிவதே இல்லை.அப்படித்தான் அதன் கட்டுமானம் வரையறுக்கப்பட்டுள்ளது. வஹ்தத்துல் உஜூத் (ஏக உள்ளமை) எனும் கோட்பாட்டை உலகுக்குத் தந்த முஹையத்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் “எவ்வளவுதான் கீழே இறங்கி வந்தாலும் ரப்பு ரப்புதான். எவ்வளவுதான் மேலேறிச் சென்றாலும் அப்து அப்துதான்” என்று இத்தன்மையையே கூறுகிறார்கள்.
“எல்லை அறிந்ததுன்னை வணங்கவல்லார்க்கு
இரங்கியிருப்போனே துணை செய்வாயே” (ஞா.பு:17)
என்கிற வரிகளும்.
“வேதியர்க ளாருமறி யாதபொருளேயான்
விரும்பி நின்னோடிரந்ததற்கு நுதவியருள் வாயே“(ஞா.பு:48)
என்கிற வரிகளும் இன்னும் பற்பல பாடல் வரிகளும் இதனையே வலியுறுத்துகின்றன
அல்லாஹ் அறிபொருள்,தெரிபொருள் அல்லன்” என்கிறார்கள் கம்பம் நகரில் வாழ்ந்த ஞானவள்ளல் ஷைகுணா ஜல்வத்து நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். கண்மணி நாயகம் முஹம்மது முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களது மிஃராஜ் எனும் விண்ணேற்றத்தில் உடன் வந்த வானவர்களின் தலைவரான ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “ஸித்ரதுல் முன்தஹா” எனும் தலத்திற்கு மேலாக முன்னகரத் தனக்கு வலிமை இல்லையென்றும் ஒருவேளை அப்படி முன்னகர முயன்றால் தனது கட்டுமானம் சிதைந்து அழிந்து விடுவேனென்றும் சொன்னது நபிகளாரின் வரலாற்றுப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏன் அவ்வாறு சொன்னார்கள் என்றால் அவ்வல் அஹதாக இருந்த மெய்ப்பொருள் ஆகிர் அஹமதாகப் பூத்ததன் பிறகுதான் ஜிப்ரயீலின் ஆன்மா உருவாக்கப்படுகிறது. எப்படி ஒரு பிள்ளை தான் பிறப்பதற்கு முன்னர் தாய் தந்தையரின் கோடானுகோடி உயிரணுக்களுக்குள் தனித்த அடையாளமின்றி சங்கமித்து விடுகிறதோ அதேபோல ஜிப்ரயீல் ஆனவர் தனது ஆன்மா உருவான “ஸித்ரதுல் முன்தஹா” எனும் தலத்துக்கு மேலாகச் செல்லும் போது “மகாமே மஹ்மூத்” எனும் திருத்தலத்தில் அடையாளமின்றிக் கரைந்து விடுவார்.
மகாமே மஹ்மூத்–நூரே முஹம்மதிய்யா எனும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் ஆன்மா உருவான திருத்தலம் அது. “நான் ஏக இறைவனின் ஜோதியில் நின்றும் உள்ளவன்,என்னுடைய ஜோதியில் நின்றும் சகல வஸ்துகளும் உருவாகின” என ஹதீஸே குத்ஸியில் நபிகளார் கூறியதன் படி ஜிப்ரயீல் உட்பட எதுவுமே இல்லாத அஹதாகி நின்ற மெய்ப்பொருளும் ஜோதியாக இலங்கிய நூரே முஹம்மதியாவும் மட்டுமே பல்லாயிரக்கணக்கான யுகங்கள் தனித்திருந்த தலம் அது.
மகாமே மஹ்மூதுக்கு மேலே சென்றால் அங்கே முஹம்மது நபிகளாரின் ஆன்மா இல்லை.அஹதாய்த் தனித்திருந்த பொக்கிஷமான, தன்னுள் சகலத்தையும் கொண்டிருக்கும் ஆதியனாதி மெய்ப்பொருளான அல்லாஹ் மட்டுமே இருப்பான்.அவனை அவனே அறிவான்,அவன் மட்டும்தான் அறிவான். “அல்லாஹு அக்பர்” எனும் இறைமையின் மகத்துவத்தை ஒவ்வொரு இறைநம்பிக்கையாளனும் தினந்தோறும் பலநூறு முறை கூறிக்கொண்டே இருக்கிறான்.அதன் பொருள் “இறைவன் பெரியவன்” என்பதாகும்,எந்த அளவுக்குப் பெரியவனென்றால் படைப்பினங்களின் அறிவின் விஸ்தீரணத்தைக் காட்டிலும் பெரியவன்,இதுவரை அறிந்தவற்றை விடவும் இனி அறியப்போவதைக் காட்டிலும் பெரியவன்,வானம் எவ்வாறு நம் பார்வையின் எல்லையைக் காட்டிலும் விரிந்து பரந்துள்ளதோ பிரபஞ்சம் எவ்வாறு நம் அறிதலின் விஸ்தீரணத்தைக் காட்டிலும் பற்பல மடங்குகள் ஆழமும் நீளமும் கொண்டதோ அதேபோல இறைவன் நாம் யூகிக்க இயலாத அளவு பெரியவன். வேதியர்களாலும் அதனை கற்பனிக்கவோ அறியவோ முடியவே
முடியாது.
அந்த மெய்ப்பொருளிடத்தில்
“கல்லாரெனை மண்ணில் பகை செய்யாமல் கத்தனே யானுன் அடைக்கலமதானேன்” என அடைக்கலமாகலாம்.
“கருடனினைவிட் டெனைப்படைத்த ஹக்கேயெனது தீவினையால்
குருடன்வனத்திற் கோலிழந்த குறிபோல் முறையிட்டுனையடியேன்
வருடிப் புகழ்ந்துன்னோடிரப்பேன் வடிவேயுனது வல்லபத்தால்
திருடனளவுற் றிரங்கியின்னஞ் செய்வாய்றகுமத் தெனசீமானே“
(ஞானப்புகழ்ச்சி-82) என இரந்து நிற்கலாம்
“ஆதியுனக்கிணை யற்றவனே யழிவற்றுல காள்பவனே
நீதிகொடெத்திசையும் படைத்தஞ்சில் நினைத்திடு முட்பொருளே” எனப் புகழ்ந்து துதிக்கலாம்
“பொல்லாக் குபிர்களும் வருங்குற்றமும்
பொருந்தாப் பிணிதுன்பம் பலவாபத்தும்
நில்லா வறுமையும் மனச்சலிப்பும்
நினைப்பு மறப்பும்வந் தெய்திடாமல்
எல்லா வினைகளு முசீபத்தும்வந்
தென்னை யணுகாமல் காத்தருள்வாய்
அல்லா வுனைப்புகழ்ந்துன் னோடிரப்பேன்
அடியேன் துஆப்பேறீ டேற்றுவாயே” எனப் பிரார்த்தித்து கண்ணீரும் கம்பலையுமாக மன்றாடலாம்.
இவ்வாறாக இந்த இகவாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் ஒளி விளக்காக வழிகாட்டி நிற்கின்றன பீரப்பாவின் பாடல்கள். பீர்முஹம்மது அப்பா என்பது நிச்சயமாகத் தனி மனிதர் அல்ல,அது ஓர் இயக்கம்.ஒற்றை ஆளுமையே ராணுவமாக நின்று தேசத்தைக் காப்பதைப்போல பீரப்பாவின் பாடல்கள் பிரபஞ்ச ரகசியத்தையும் எல்லையற்ற மெய்ப்பொருளான இறைவனின் மகத்துவத்தையும் நபிகளாரின் முக்கியத்துவத்தையும் இன்னும் இன்னும் வாழ்வின் ஒவ்வொரு கணங்களுக்கான பிரார்த்தனைகளையும் அறியத்தந்து பூரணப்புதையலாக ஜொலிக்கின்றன.
பொதுவாக தெற்கு வடக்கு கிழக்கு மேற்கு என்பன நம்மைப்போன்ற மண்மீது பற்றுக் கொண்டுள்ள எளிய மனிதர்களுக்கானவை.சூஃபி ஞானியரை இந்தக் கட்டுக்குள் அடக்குவது ஏற்புடையதன்று. கன்னியாகுமாரி மாவட்ட மக்களுக்கு இந்த மண்ணின் பற்று பெருமை ஆகியன கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும்.
தேசம்,மாநிலம்,மாவட்டம்,நகரம்,சிற்றூர்,கிராமம்,இனக்குழு, குடும்பம் என்று வட்டங்கள் குறுகிக் கொண்டே வந்து ஒற்றை மனிதனில் மனித கவனம் மையம் இந்தச் சூழலில் வட்டத்தைப் பெரிதாக்கிக் கொண்டே சென்று மொத்தப் பிரபஞ்சத்தையும் தன்னுடைய மையமாக்கிக் கொள்ளும் சூஃபிகளின் பாதையில்தான் நாம் பயணிக்க வேண்டும்.
இந்த நூலானது தமிழ் மண்ணின் சூஃபிகளின் படைப்புகளை–அவை சுட்டிக் காட்டும் ஞானக் குறிப்புகளை புரிந்துகொள்ள உதவும் அருஞ்சொற்பொருள் அகராதியாக இருக்கின்றது. முனைவர் முஹம்மது சலீம் அவர்களின் எண்ணென்ப, எழுத்தென்ப ஆகிய மிக முக்கியமான நூல்களுக்குப் பிறகு இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. தக்கலை மெஞ்ஞானி ஷைகு பீர் முஹம்மது அப்பாவின் இலக்கியப் படைப்புகள் குறித்தும் அவற்றில் ஆன்மீகக் கோட்பாடுகள் மற்றும் சமூகப் புரிதல்கள் குறித்ததுமான கட்டுரை ஆகியன குறிப்பிடத்தக்க கட்டுரைகள் ஆகும்.
இவற்றின் மூலமாக நாம் பீரப்பாவை அணுகும்போது
பீரப்பாவின் மெஞ்ஞானப் பாடல்களான,
ஞானப்புகழ்ச்சி
ஞானமணி மாலை
ஞானக்குறம்
ஞான இரத்தினக் குறவஞ்சி
ஞான நடனம்
ஞான முச்சுடர் பதிகங்கள்
ஞான விகட சமத்து
மகரிபத்து மாலை
மெஞ்ஞான அமிர்த கலை
மிகுராசு வளம்
ஈடேற்ற மாலை
பிஸ்மில் குறம்
திருநெறி நீதம்
ஞானத் திறவுகோல்
ஞானக் கண்
ஞானப் பால்
ஞான உலக உருளை
ஞான மலைவளம்
மெஞ்ஞானக் களஞ்சியம்
ஞானப்பூட்டு
ரோசு மீசாக்கு மாலை
ஞான ஆனந்தக் களிப்பு
ஞானச் சரநூல்
ஆகிய பாடல்களைப் புரிந்து கொள்ளவும் அவற்றுடன் இணைந்து இறைத்தேடலின் பாதையில் பயணிக்கவும் உதவியாக இருக்கும்.
அடுத்ததாக நம் தமிழ் மண்ணின் மஹ்மூத் தர்வேஷ் ஹாமீம் முஸ்தஃபாவின் கட்டுரைகள். கன்னியாகுமரி மண்ணின் பிரத்யேக தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் கூறுகளையும் தமிழ் மண்ணின் சூஃபிஸ இலக்கியச் செறிவையும் சமகால அரசியல் சமூகப் போக்குகளின் மீதான அறச்சீற்றத்தையும் ஒருங்கே வெளிப்படுத்தும் முக்கிய ஆளுமையாக அண்ணன் ஹாமீம் முஸ்தஃபா திகழ்கிறார். அவரது அனைத்து படைப்புகளையும் ஒட்டுமொத்தமாக ஆய்வு செய்து ஒரு முழுநாள் ஆய்வரங்கம் நிகழ்த்த வேண்டியது காலத்தின் அவசியமும் இந்த படைப்பாளிக்குக் கொடுக்க வேண்டிய கண்ணியமும் ஆகும்.
மேலும் நூஹ் லெப்பை ஆலிம் அவர்களது வேதபுராணம் தொடர்பான கட்டுரையை தக்கலை பஷீர் எழுதியிருக்கிறார்.
நூஹ் வலியுல்லாஹ் அவர்கள் நிகழ்த்திய கராமத் எனும் அற்புதங்கள் குறித்த கட்டுரையை ரஹ்மத் ராஜகுமாரனும்,
கோட்டாறு ஞானியார் சாகிப் குறித்த கட்டுரையை
சதாவதானி செய்குத்தம்பி பாவலர் அவர்களின் மகனான செந்தாமரை கே.பி.எஸ்.ஹமீது அவர்களும் எழுதியுள்ளானர். நன்னூல் பதிப்பகத்தார் அழகிய முறையில் அச்சிட்டுள்ளனர்.
நன்றி
எல்லாப் புகழும் இறைவனுக்கே
அன்புடன்,
நிஷா மன்சூர்
தொடர்புக்கு–nisha.mansur@gmail.com
ரமேஷ் பிரேதன் விருது, ஒரு கேள்வி
ரமேஷ் பிரேதன்
அன்புள்ள ஜெ,
நீங்கள் விஷ்ணுபுரம் விருதை ரமேஷ் பிரேதனுக்கு வழங்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள், மகிழ்ச்சி. ஆனால் ரமேஷ் பிரேதன் என்ற பெயரில் இன்று எழுதும் எழுத்தாளர் முன்பு பிரேம் அவர்களுடன் இணைந்துதான் தன் படைப்புக்களை எழுதியுள்ளார். (உங்கள் சொல் புதிது இதழிலேயே அவர்கள் இருவரும் எழுதியதாகவே படைப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றை அப்போதே நான் வாசித்துள்ளேன்) இந்த விருது அப்படியென்றால் பிரேமுக்கும் சேர்த்துத்தானே வழங்கப்படவேண்டும்?
ராஜப்ரியன்
அன்புள்ள ராஜப்ரியன்,
இந்த விருது குறிப்பிட்ட படைப்புக்காக அல்ல, படைப்பாளியின் ஒட்டுமொத்த ஆளுமைக்காகவே வழங்கப்படுகிறது. கௌரவிக்கப்படாத படைப்பாளிகளுக்கான விருது இது. ரமேஷ் தமிழின் முதன்மையான இலக்கிய ஆளுமைகளில் ஒருவர், கௌரவிக்கப்படவேண்டியவர். அவர் தன் பெயரில் எழுதிய படைப்புக்களே அவர் எவர் என்பதற்கான சான்றுகள். அந்த அடிப்படையிலேயே இந்த விருது வழங்கப்படுகிறது.
ஜெ
அன்புள்ள ஜெ,
உங்கள் பதிலுக்கு நன்றி. அப்படியென்றால் நீங்கள் முன்பு ரமேஷ் பிரேமுடன் இணைந்து எழுதிய கதை கவிதைகளிலும் ஓங்கியிருப்பது ரமேஷின் ஆளுமைதான் என நினைக்கிறீர்களா? அவர் மட்டும்தான் கௌரவிக்கப்படவேண்டும் என நினைக்கிறீர்களா?
ராஜப்ரியன்
அன்புள்ள ராஜப்பிரியன்,
நீங்கள் உண்மையில் வாசகரா என தெரியவில்லை. ரமேஷ் தனியாக பிரிந்தபின் எழுதிய படைப்புகளில் அவர் மேலும் பலமடங்கு வீரியத்துடன், அசலான படைப்பாளிக்குரிய அலைக்கழிப்புகளுடனும் ஆழ்நிலைகளுடனும் வெளிப்படுகிறார். அதுவே சான்று.
ஜெ
உடல்நலிந்த நிலையில் இருக்கும் ரமேஷ் பிரேதனுக்கு தனிப்பட்ட முறையில் உதவிசெய்ய விரும்புபவர்கள் செய்யலாம்.
RAMESH . MS.B. A/C. No. 32821202848STATE BANK OF INDIAMUTHIALPET BRANCHIFSC CODE: SBIN0015420மாய யவனிகையின் பின்னே எழுந்த மலர்த்திடல்
தடுத்தாட்கொண்ட நாதர் மீதான சுந்தரர் தேவாரத்தோடு திரு. ஜெயக்குமார் இந்த ஆலயக்கலை வகுப்பை ஆரம்பித்தார். பித்தா பெருமானே என அவர் குரலுயர்ந்த அந்தத் தருணம், பலவிதங்களில் அலைந்து கொண்டிருந்த சிந்தனையையும், மனத்தையும் தடுத்தாட்கொண்டது. அடுத்த மூன்று நாள்களும் எங்களை பக்தியால். பாரம்பரியப் பெருமைகளால், ஆலயக்கோட்பாடுகளால், சிற்ப மரபால், இசையால், நகைச்சுவையால் மற்ற எந்த உலகாதீயச் செயல்களுக்கும் கவனம் கொண்டு செல்லாமல் ஆட்கொண்டிருந்தார்.
மாய யவனிகையின் பின்னே எழுந்த மலர்த்திடல்They believe every nonsensical claim made by silly so-called gurus. They develop hatred for other religions. They have meaningless beliefs and a kind of ridiculous mentality about all kinds of rational things.
About ritualism…September 19, 2025
இன்று இலட்சியவாதம் உள்ளதா என்ன?
”இன்றைக்கு எவன் சார் யோக்கியன்? காமராஜர் கக்கன் காலமெல்லாம் இனிமே வராது சார்” என்று சொல்பவரை நாம் நல்லவர், இலட்சியவாத நம்பிக்கை கொண்டவர், மனம் புண்பட்டவர் என நினைக்கிறோம். இல்லை, அவர் உண்மையில் இலட்சியவாதம் என்பது இன்று இல்லை என நிறுவவிரும்பும் ஓர் அயோக்கியர். ஏனென்றால் அவர் தன் அயோக்கியத்தனத்தை மறைக்க விரும்பி, அல்லது நியாயப்படுத்த விரும்பித்தான் அதைச் சொல்கிறார்.
இந்தியா மீதான அலட்சியம், சல்மான் ருஷ்தியின் விக்டரி சிட்டி.-2
சல்மான் ருஷ்தியின் இந்த நாவல் பாம்பா என்னும் ஒரு பெண்ணில் இருந்து தொடங்குகிறது. அவள் எந்த குலத்தை சேர்ந்தவள் என்பதும் அவளுடைய வரலாற்றுப் பின்னணி என்ன என்பதும் இந்நாவலில் இல்லை. குத்துமதிப்பான ஒரு கற்பனையே அளிக்கப்படுகிறது. ஆனால் பாம்பாவின் சிற்றரசை ஆக்ரமிக்கும் எதிரிகளிடமிருந்து தப்பிக்கும்பொருட்டு அவளுடைய அன்னையும் பிற அரசகுடிப்பெண்டிரும் தீக்குளித்து இறக்கிறார்கள். பொதுவாக படை எடுத்து வருபவர்களிடம் தப்பும் பொருட்டு ஜோஹர் எனும் எரியூட்டலுக்கு ஆளாவது என்பது ராஜஸ்தானிய அரசு அரசகுடிக்கு மட்டுமே இருந்துவந்த ஒரு தனித்தன்மை. அதிலும் அவர்கள் சுல்தானியப்படையெடுப்பை ஒட்டி உருவாக்கிக்கொண்ட ஒன்று. தென்னிந்தியாவில் எங்கும் அது நிகழ்ந்ததற்கான சான்று இல்லை. இவ்வாறு தொடக்கம் முதலே இந்நாவல் ஒரு அந்தரத்திலேயே நிகழ்கிறது.
உயிர்தப்பும் பாம்பா அவள் பெயரைக்கொண்ட தெய்வத்திடமிருந்து மந்திர சக்திகளை பெறுகிறாள். அங்கு மாடு மேய்ப்போராக ஒளிந்து வாழும் இருவருக்கு (இவர்கள் ஹரிஹரன் புக்கரின் மாற்று வடிவங்கள் என்பது வெளிப்படை) சில விதைகளை கொடுக்கிறார். அந்த விதைகளை அவர்கள் விதைக்க அது முளைத்து வெற்றி நகராக மாறுகிறது. பிறகு அந்நகரின் வரலாறு பல்வேறு நிகழ்வுகள் வழியாக விரிகிறது. அது வெவ்வேறு காலகட்டங்களாக நகர்ந்து சரிகிறது. இந்தச் சித்தரிப்பில் வெவ்வேறு நார்ஸ்–கெல்டிக் தொன்மங்களின் சாயல்கள் கொண்ட மாயங்கள் நிகழ்கின்றன.
இந்தியாவில் நிகழும் கதையில் எந்த இந்தியச் சாயலும் இல்லை. எல்லா நிகழ்வுகளும் செயற்கையாக கட்டமைக்கப்பட்டவையாக, பெரும்பாலும் நவீனப்புனைகதை எழுத்தாளர்கள் எழுதும் வழக்கமான நிகழ்வுகளின் சாயல்கொண்டவையாக உள்ளன. இந்த அறுநூறு பக்க நாவலில் எங்குமே வாழ்க்கையின் நுட்பங்களோ, தவிர்க்கமுடியாமைகளோ வெளிப்படும் தருணங்கள் இல்லை. எங்குமே இந்திய வரலாற்றை அல்லது மானுட வரலாற்றை நோக்கும் ஒரு புனைவெழுத்தாளன் மட்டுமே கண்டடையும் புள்ளிகள் இல்லை. ஒரு கட்டத்தில் வெறும் சொற்சுழலாக மட்டுமே இந்நாவலை வாசித்துச்செல்லவேண்டியிருந்தது.
விஜயநகரத்தின் மெய்யான வரலாறு என்பது இந்நாவலை விட பல மடங்கு உத்வேகமும் திருப்பங்களும் அபத்தங்களும் நிறைந்தது. நம்ப முடியாத பெரும் துரோகங்களின் கதைகள் கொண்டது. விஜயநகர சாம்ராஜ்யத்தின் முதன்மை மன்னராகிய கிருஷ்ணதேவராயரின் மகன் திருமலைராயன் சிறுவனாக இருக்கையிலேயே அவருடைய அமைச்சரால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டான். மகனின் மரணத்தால் மனமடைந்து கிருஷ்ணதேவராயர் மறைந்தார். மொத்த விஜயநகர வரலாறும் துரோகங்களின் தொடர்தான். அதற்குக் காரணங்கள் மிக நுட்பமானவை. விஜயநகரை வெவ்வேறு பெருங்குடும்பங்கள்தான் ஆட்சி செய்தன. ஒரு குடும்பத்தை வீழ்த்தாமல் இன்னொரு குடும்பம் ஆட்சிக்கு வரமுடியாது.
விஜயநகரின் இறுதிப்போர்க்களமான தலைக்கோட்டையில் விஜயநகரத்தின் அமைச்சரும் அரசரும் ஆகிய ராமராயர் மறைந்துவிட்டார் என்று எதிரிகள் வதந்தி கிளப்ப தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்கும் பொருட்டு அவர் யானை மேலே தோன்றினார். அக்கணமே அவர் அம்பெய்து வீழ்த்தப்பட்டார். அவர் வீழ்ந்ததும் படை பின்வாங்கியது. அது ஒரு சூழ்ச்சி. எதிரிப்படைகளை விட விஜயநகரப்படை மிகப்பெரியது. ஒரு தனிமனிதருக்கு ஒரு கணத்தில் உருவான ஏதோ ஒரு தாழ்வுணர்ச்சியால் ஒரு பேரரசு அழிந்தது. அவர் பிராமணர் என்பது அந்த தாழ்வுணர்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம்.
விஜயநகரம் அழிந்ததே ஒரு அபாரமான சித்திரம். ஓராண்டுக்காலம் அது தொடர்ச்சியாக இடிக்கப்பட்டது. கல்லால் ஆன அதன் கட்டிடங்கள் நெருப்பு மூட்டி சுட்டுப்பழுக்கவைத்து, அதன் மேல் குளிர்ந்த தண்ணீரை ஊற்றி கற்களை வெடிக்க வைத்து யானைகளைக் கொண்டு இடித்துத் தள்ளப்பட்டது. பல நூற்றாண்டு காலம் விஜயநகரம் மயான நகரமாக திகழ்ந்தது. இன்று கூட விஜயநகரத்தைப் பார்ப்பவர்கள் அந்த மாபெரும் இடிபாடு விரிiவை ஒரு பெரும் மாய அனுபவமாகத்தான் அடைய முடியும். அந்நகரம் மறக்கப்பட்டது. அங்கிருந்த அரசகுடியினர் வெவ்வேறு ஊர்களுக்கு இடம்பெயர்ந்தனர். பின்னர் அந்நககரத்தை ராபர்ட் சிவெல் (Robert Sewell) கண்டடைந்தார். மறக்க முடியாத நகரம் என்ற பெயரிலே அதைப் பற்றி ஒரு நூல் எழுதினார். அதனூடாக விஜயநகரம் உலகின் கவனத்திற்கு வருகிறது.
இந்த மெய்யான வரலாறு அளிக்கும் திகைப்புகளில் ஒரு துளி இல்லாமல் முற்றிலும் செயற்கையாக கட்டமைக்கப்பட்ட மாயப்படிமங்களால் ஆன ஒரு நாவல் இது. இத்தகையவை யாருக்காக எழுதப்படுகின்றன? இந்தியாவைப் பற்றி மெல்லிய ஆர்வம் கொண்ட ஐரோப்பிய, அமெரிக்கர்களுக்காக. மேலோட்டமாக மட்டுமே அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், அதற்கு அப்பால் அதை அறிய எந்தக் கவனத்தையும் அளிக்கத் அளிக்கத தயாராக இல்லை என்றும் எண்ணும் ஒரு மேல் நாட்டு வாசகர்கூட்டம் உள்ளது. அவர்களுக்கான படைப்பு இது அவ்வகையில் ஓர் அமெரிக்க ’பெஸ்ட்செல்லர்’ நூலுக்கான அனைத்து இலக்கணங்களும் கொண்ட படைப்பு இது என்று சொல்ல முடியும்.
இதன் வாசிப்பு இரண்டு வகைகளில் மட்டுமே செயல்படுகிறது. ஒன்று மாயதார்த்தம் பற்றி தெரிந்தவர்களுக்கு ஒவ்வொன்றும் எந்தெந்த திசைகளுக்கு செல்லும் என்பதை எளிதாக ஊகித்து அதை ரசிக்க முடிகிறது, அவ்வாறு நாம் ஊகிப்பதை அவ்வப்போது ருஷ்டி சில உத்திகள் வழியாக தோற்கடிப்பதையும் ரசிக்க முடிகிறது. இந்நாவலின் கதையோட்டத்தின்படி ஒரு பானையிலிருந்து ஒரு சம்ஸ்கிருத காவியம் மீட்டெடுக்கப்படுகிறது. அதிலுள்ளதே இந்நாவலின் கதை.(முப்பதாண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய விஷ்ணுபுரம் நாவல் இந்த வடிவம் கொண்டது, இந்நாவலை விட மிக நுட்பமான அடுக்குள் கொண்டது) ருஷ்டியின் இந்நாவலில், அதாவது அந்த மூலக்காவியத்தில் உள்ள பேசுபொருட்கள் எல்லாமே சமகாலத்தைச் சேர்ந்த அரசியல்தலைப்புகள்.
உதாரணமாக, ஆணும் பெண்ணும் நிகராக வாழ்ந்த ஒரு பொற்காலம் அந்த வெற்றிநகரில் அமைந்திருந்ததாக ருஷ்தி குறிப்பிடுகிறார். பாம்பாவின் நோக்கமே அதுவாக இருந்தது. அது நிகழவில்லை. உண்மையில் இந்தியாவெங்கும் ஒரேவகையான பெண்ணடிமைத்தனம் இருக்கவில்லை. ஒவ்வொரு இடத்திலும் அதன் இயல்புகள் நுணுக்கமாக வேறுபட்டன. விஜயநகரைப் பொறுத்தவரை அரசி என்னும் இடம் அரசனுக்கு நிகரானதாகவே இருந்தது. பிற இடங்களில் பெண்கள் போருக்குச் செல்லவில்லை, அதிலும் விஜயநகரம் விதிவிலக்கு. உதாரணமாக, விஜயநகரப் பேரரசின் படையில் பெண் போராளிகள் இருந்தார். விளமர் எனும் குடியைச் சேர்ந்த வில்லாளிகளில் பெண்கள் நிறையபேர் உண்டு. வில்லில் தேர்ச்சி பெறுவதன் பொருட்டு ஒரு மார்பை வெட்டி கொண்டார்கள் அவர்கள் என்று ஒரு கதை உண்டு. அவர்களின் சிற்பங்களை அகோபிலத்திலும், சிவசைலத்திலும் காணலாம். இந்தியாவின் பெண்ணடிமைத்தனம் பற்றி ஓரு சராசரி அமெரிக்க வாசகனுக்கு இருக்கும் பொதுப்புரிதலையே ருஷ்டி இங்கே கையாள்கிறார்.
பாம்பா ஓர் அழிவற்ற அன்னை. 200 ஆண்டுகளுக்கும் மேல் அவள் உயிர்வாழ்கிறாள். அத்தகைய அன்னையுருவகங்கள் இந்தியாவில் உண்டு. ஆனால் அவர்களின் வண்ணங்களும் இயல்புகளும் வேறு. தென்னிந்திய வரலாற்றிலேயே ராணி ருத்ராம்பா, ராணி மங்கம்மாள் போன்ற அன்னையுருவங்கள் உண்டு. மங்கம்மாளின் துயரம் நிறைந்த முடிவு பாம்பாவின் முடிவை விட ஆழமான ஒரு வரலாற்று நிகழ்வு. ஆனால் பாம்பா கப்ரியேல் கர்ஸியா மார்க்யூஸில் உர்சுலாவின் சாயலுடன் படைக்கப்பட்டிருக்கிறார். பாம்பா அவர் உருவாக்கிய நகர் பற்றி அவரே எழுதிய காவியத்தின் பலவகையான விளக்கங்களாக இந்நாவல் உள்ளது. ஆனால் இதில் இந்தியக் காவியங்களின் அழகியலோ, மனநிலையோ இல்லை. இந்நாவலை வாசித்தால் பாம்பா எழுதியது ஒரு லத்தீன் அமெரிக்க மாயயதார்த்த நாவல் என்று தோன்றிவிடும்.
‘பாலியல் சமத்துவம்’ என்னும் கருத்தை வரலாற்று மாயப்புனைவாக ஆக்கியிருப்பதாக இந்நாவல் பற்றிய மதிப்புரைகளில் வாசித்தேன். பாலியல் சமத்துவத்தை வலியுறுத்துவது, அதன் அடிப்படையாக அனைத்து விதைகளையும் அளிக்கும் அன்னைமரமாக ஒரு பெண்ணை உருவகிப்பது எல்லாமே எத்தனை தேய்ந்துபோன உருவகங்கள். எந்த அரசியலெழுத்தாளனும் பேசும் ஒரு கருத்துக்கு செயற்கையாக படிமங்களை அளிப்பதா ஒரு இலக்கியப் படைப்பாளியின் வேலை? பாலியல்சமத்துவம் என்னும் அந்த பேசுபொருளுக்குள்ளேயே பொதுப்புத்தியால் கண்டடைய முடியாத வாழ்க்கையின் உண்மைகளை, வரலாற்றின் உள்ளுறைகளை வெளிப்படுத்தவில்லை என்றால் எதற்காக இலக்கியம் எழுதவேண்டும்? இத்தனை பக்கங்கள் வழியாக ருஷ்டி உருவாக்குவது மிகச்சாதாரணமான அரசியல் கருத்துநிலையைத்தான் என்பது அளிக்கும் சலிப்பு மிகப்பெரியது.
நான் எப்போதும் இந்திய ஆங்கில இலக்கியத்தைப் பற்றி ஓர் ஒவ்வாமையை அடைவதுண்டு. அவை இந்தியாவின் நுணுக்கமான பண்பாட்டுத்தகவல்களை அறியாத இந்திய உயர்குடியினருக்காகவும் அமெரிக்கர்களுக்காகவும் எழுதப்படுகின்றன. அவற்றை இந்திய எழுத்து என்று ஒரு அமெரிக்க இலக்கிய வாசகன் வாசிப்பானாயின் அவன் இந்திய பண்பாட்டுக்கும் இந்திய மக்களுக்கு மிகப்பெரிய அநீதி ஒன்றை இழைக்கிறான். ஒருவரைப் பற்றி மேலோட்டமாக தெரிந்து கொள்வது என்பது உண்மையில் அவர்மீது பெரும் அலட்சியத்தை காட்டுவதுதான். எப்படி ஓர் அமெரிக்கர் இந்தியாவை பார்க்க விரும்புகிறார், எப்படி அவருடைய எல்லைகள் அமைந்திருக்கும் என நன்கறிந்து அதற்குள் நின்று எழுதப்பட்ட ஒரு செயற்கையான நாவல் இது. உலகெங்கும் இத்தகைய படைப்புகளே இந்தியாவின் இலக்கியமாக வாசிக்கப்படுவது என்பது மிகவும் துரதிஷ்டவசமானது.
எஸ்.ஜெயக்குமார்
இசைக்கலைஞர், கோயிற்கலை ஆய்வாளர், வரலாறு, கோயில் கட்டிடகலை, சிற்பகலை ஆசிரியர், சினிமா துறையில் வரலாற்று ஆராய்ச்சி ஆலோசகராக உள்ளார். ப்ரஸ்தாரா அமைப்பின் நிறுவனர். பண்பாட்டு சுற்றுலா பயணங்களை இந்தியா முழுவதும் ஒருங்கிணைத்து வருகிறார்.
எஸ்.ஜெயக்குமார் – தமிழ் விக்கி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

