ரமேஷ் பிரேதன் விருது, ஒரு கேள்வி

ரமேஷ் பிரேதன்

 

அன்புள்ள ஜெ,

நீங்கள் விஷ்ணுபுரம் விருதை ரமேஷ் பிரேதனுக்கு வழங்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள், மகிழ்ச்சி. ஆனால் ரமேஷ் பிரேதன் என்ற பெயரில் இன்று எழுதும் எழுத்தாளர் முன்பு பிரேம் அவர்களுடன் இணைந்துதான் தன் படைப்புக்களை எழுதியுள்ளார். (உங்கள் சொல் புதிது இதழிலேயே அவர்கள் இருவரும் எழுதியதாகவே படைப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றை அப்போதே நான் வாசித்துள்ளேன்) இந்த விருது அப்படியென்றால் பிரேமுக்கும் சேர்த்துத்தானே வழங்கப்படவேண்டும்?

ராஜப்ரியன்

அன்புள்ள ராஜப்ரியன்,

இந்த விருது குறிப்பிட்ட படைப்புக்காக அல்ல, படைப்பாளியின் ஒட்டுமொத்த ஆளுமைக்காகவே வழங்கப்படுகிறது. கௌரவிக்கப்படாத படைப்பாளிகளுக்கான விருது இது. ரமேஷ் தமிழின் முதன்மையான இலக்கிய ஆளுமைகளில் ஒருவர், கௌரவிக்கப்படவேண்டியவர். அவர் தன் பெயரில் எழுதிய படைப்புக்களே அவர் எவர் என்பதற்கான சான்றுகள். அந்த அடிப்படையிலேயே இந்த விருது வழங்கப்படுகிறது.

ஜெ

அன்புள்ள ஜெ,

உங்கள் பதிலுக்கு நன்றி. அப்படியென்றால் நீங்கள் முன்பு ரமேஷ் பிரேமுடன் இணைந்து எழுதிய கதை கவிதைகளிலும் ஓங்கியிருப்பது ரமேஷின் ஆளுமைதான் என நினைக்கிறீர்களா? அவர் மட்டும்தான் கௌரவிக்கப்படவேண்டும் என நினைக்கிறீர்களா?

ராஜப்ரியன்

அன்புள்ள ராஜப்பிரியன்,

நீங்கள் உண்மையில் வாசகரா என தெரியவில்லை. ரமேஷ் தனியாக பிரிந்தபின் எழுதிய படைப்புகளில் அவர் மேலும் பலமடங்கு வீரியத்துடன், அசலான படைப்பாளிக்குரிய அலைக்கழிப்புகளுடனும் ஆழ்நிலைகளுடனும் வெளிப்படுகிறார். அதுவே சான்று.

ஜெ 

உடல்நலிந்த நிலையில் இருக்கும் ரமேஷ் பிரேதனுக்கு தனிப்பட்ட முறையில் உதவிசெய்ய விரும்புபவர்கள் செய்யலாம்.

RAMESH . MS.B. A/C. No. 32821202848STATE BANK OF INDIAMUTHIALPET BRANCHIFSC CODE: SBIN0015420
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 20, 2025 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.