Jeyamohan's Blog, page 664

December 12, 2022

அம்மாவின் பேனா – ஒரு கடிதம்

அம்மாவின் பேனா – கடிதம்

மதிப்பிற்குரிய ஜெ,

தினமும் காலையில் கல்லூரி பேருந்தில் பயணிக்கும் போது தங்கள் கட்டுரைகளைப் படிப்பது வழக்கம். அதில் ஏதாவது ஒன்று அன்று முழுவதும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.

 கவிஞர் சதாரா மாலதியை பற்றி அவரது தாய் எழுதிய கட்டுரையை தங்களது “அம்மாவின் பேனா ” மூலம் அறிந்தவுடன் உடனடியாக அதனை படிக்க வேண்டும் என ஆர்வம் மேலிட்டது.

திண்ணையில் தேடினால் கிடைக்கவில்லை. அது என்னவாக இருக்கும், அந்த வயது முதிர்ந்த தாய் அப்படி என்ன எழுதி இருப்பார் என என்னுள் எழுந்த எண்ண ஓட்டங்களுக்கு அளவேயில்லை.

பிறகு ஒருவழியாக அந்த பக்கத்தை தேடி கண்டுபிடித்துவிட்டேன்.

https://old.thinnai.com/?p=20904021

என்னவென்று சொல்வது. அந்த தாயின் சோகத்தை,  இழப்பை எத்தனை அற்புதமாக வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

“என் மாலாவின் பல வித உருவங்களை நினைத்து நினைத்து மருகுகிறேன். சின்ன வயதில், ஐந்து வயதிருக்கும். சிவப்பு பைஜாமாவும், மாம்பழக் கலர் குர்தாவும் போட்டு, இரட்டைப் பின்னல் போட்டு போட்டோ எடுத்தோம். மிக அழகாயிருப்பாள். அது ப்ளாக் அண்ட் வொயிட் போட்டோதான். எந்த உடை போட்டாலும் பொம்மை போலிருப்பாள். அவள் பெரியவளானபோது மயில் கழுத்துக் கலரில் பாவாடை சொக்காய், நைலான் தாவணி மிகமிக அழகாயிருக்கும். போட்டோ இல்லாவிட்டாலும் என்கண் முன்னே இன்னமும் அந்த உடையில் நிற்கிறாள்.”

“இன்னமும் நம்ப முடியவில்லை. போனில் பேசுவாள் என்றும் வெளியூருக்குப் போயிருப்பதாகவும், கடிதம் எழுதுவாள் என்றும் மனம் ஏமாற்றுகிறது.

எழுது, எழுதாவிட்டால் எழுத வராது என்பாள். இப்படி அவளைப்பற்றிப் புலம்பி எழுத வைத்துவிட்டாள்.

சுற்றிக் கொண்டே இரு, படுத்துவிட்டால் எழுந்திருக்க முடியாது என்று என்னைச் சொல்வாள். அவள் எழாமலேயே போய்விட்டாள்.”

பெற்றோரை இழந்து துயருறும் மக்களுக்கு இப்படி மகளை இழந்த தாயின் துயரம் நிச்சயமாக மிகந்த வருத்ததையே அளிக்கும். இன்றைய நாள் சதாரா மாலதியின் அம்மாவிற்கே சமர்ப்பணம்.

நன்றியுடன்,

பாபி முருகேசன்.

7.12.2022

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 12, 2022 10:30

December 11, 2022

திருவனந்தபுரம் திரைவிழாவில்…

திருவனந்தபுரம் திரைவிழாவில் மறைந்த மலையாளக் கவிஞர் டி.பி.ராஜீவன் நினைவாக அவர் எழுதி வெளிவந்த பாலேரி மாணிக்கம் – ஒரு பாதிரா கொலபாதகத்தின்றே கதா என்னும் படம் 13 டிசம்பரில் வெளியிடப்படுகிறது. அதையொட்டி மாலை 6 மணிக்கு டி.பி.ராஜீவன் நினைவுச் சிற்றுரை ஒன்றை நான் நிகழ்த்துகிறேன்.

இடம் கலாபவன் திரையரங்கம்

நாள் 13 டிசம்பர் 2022

நேரம் மாலை 6 மணி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2022 22:34

திருவனந்தபுரம் திரைவிழாவில்…

திருவனந்தபுரம் திரைவிழாவில் மறைந்த மலையாளக் கவிஞர் டி.பி.ராஜீவன் நினைவாக அவர் எழுதி வெளிவந்த பாலேரி மாணிக்கம் – ஒரு பாதிரா கொலபாதகத்தின்றே கதா என்னும் படம் 13 டிசம்பரில் வெளியிடப்படுகிறது. அதையொட்டி மாலை 6 மணிக்கு டி.பி.ராஜீவன் நினைவுச் சிற்றுரை ஒன்றை நான் நிகழ்த்துகிறேன்.

இடம் கலாபவன் திரையரங்கம்

நாள் 13 டிசம்பர் 2022

நேரம் மாலை 6 மணி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2022 22:34

பெங்களூர் இலக்கிய விழா

சர்வதேச , தேசிய இலக்கிய விழாக்களில் ஒரு பை கொடுப்பார்கள். அதில் பலவகை பரிசுப்பொருட்கள், நிகழ்ச்சி நிரல், சில புத்தகங்கள், குறிப்புதவி நோட்டுப்புத்தகம் இருக்கும். தோளில் போட்டுக்கொள்ள ஒரு அடையாள அட்டையும் உண்டு.

கே.ஜி.சங்கரப்பிள்ளை இப்படி இலக்கிய விழாவில் இருந்து இலக்கிய விழாவுக்கு சென்றுகொண்டிருப்பவர்களைப் பற்றி ‘சஞ்சிகள்’ என்னும் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். சஞ்சி என்றால் பை. சம்ஸ்கிருதத்தில் தொகுப்பு என்றும் பொருளுண்டு. சச்சிதானந்தனை சச்சி என அழைப்பார்கள். அதையொட்டிய பகடி என்றும் சொல்லப்படுவதுண்டு.

நானும் சஞ்சி ஆகிவிட்டேனா என்னும் ஐயத்தை 2 ஆம் தேதி பெங்களூருக்குக் கிளம்பும்போது அடைந்தேன். மலேசியா ஜார்ஜ்டவுன் இலக்கியவிழாவிலிருந்து வந்து பழைய சட்டைகளை வெளியே எடுத்துப்போட்டு புதிய சட்டைகளை உள்ளே வைத்து பெட்டியை மூடி கிளம்பிவிட்டேன், ரயிலில்தான் நல்ல தூக்கம்.

3 டிசம்பர் 2022 காலையில் பெங்களூர் வாசகர் நாகராஜன் ரயில்நிலையத்துக்கு வந்திருந்தார். நிகழ்ச்சி நடக்கும் அசோக் ஓட்டலிலேயே மாடியில் அறை. ஏற்கனவே அங்கே பிரியம்வதா வந்திருந்தார். அவரே எனக்கு அறை பெற்றுத் தர உதவினார்.

அசோக் முழுக்க ஒரே வைணவக்கூட்டம். பெரும்பாலும் வெள்ளையர். ஏதோ வைணவ அமைப்பின் கருத்தரங்கு நிகழ்ந்துகொண்டிருந்தது – இஸ்கான் நிகழ்ச்சி அல்ல. இன்னொன்று. தாவணி கட்டிய வெள்ளைக்காரப் பெண்கள் அழகாக இருந்தனர். எக்கணமும் ‘ஓய் மாமோய், கஞ்சி கொண்டாந்திருக்கேன்’ என்று கூவிவிடுவார்கள் போல தோன்றியது.

முதல்நாள் எனக்கு நிகழ்ச்சி ஏதுமில்லை. பார்க்கவந்திருந்த பெங்களூர் நண்பர்களுடன் ஆங்காங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். சில பிறமொழி எழுத்தாளர்களைப் பார்த்தேன். விவேக் ஷன்பேக் என் நண்பர். அவரைச் சந்தித்தது மகிழ்ச்சியான தருணம். அவர் கொங்கணி எழுத்தாளர்  தாமோதர் மௌஸோ (Damodar Mauzo) நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அரங்கில் பார்வையாளனாக இருந்தேன்.

வெவ்வேறு அரங்குகள். அவற்றை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக்கொள்வது கடினம். இத்தகைய பெருவிழாக்கள் அகன்று அகன்று கூர்மையற்றுவிடுகின்றன. சினிமாநடிகர்கள் மட்டுமல்ல சினிமா தயாரிப்பாளர்கள் சினிமா தயாரிப்பதன் சிக்கல்களைப் பேசும் ஓர் அரங்கும் இருந்தது ( வழக்கம்போல அரசு உதவி செய்யவேண்டும் என்ற கோரிக்கை) பெருங்கூட்டம் கிரிக்கெட் எழுத்தாளர்களின் அரங்குக்குத்தான்.

உதிரி உதிரியாக வெவ்வேறு அரங்குகளுக்குச் செவிகொடுத்தேன். மிகப்பொதுவான பேச்சுக்கள்தான் நிகழ்ந்து கொண்டிருந்தன. இப்போது நாளிதழ்களில் சாதாரணமாக அடிபடும்  ‘இலக்கியக் கைப்பிடிகள்’ ஆன அரசியல் -சமூகவியல் கருத்துக்கள். அவற்றைக்கொண்டே நம் இதழாளர்களால் இலக்கியத்தை பற்றவோ தூக்கவோ மதிப்பிடவோ முடியும்.  அழகியல், தனிப்பட்ட உணர்வுநிலைகள், உலக இலக்கிய மரபு உருவாக்கும் உளநிலைகள் ஆகிய மூன்றும் அவர்களுக்கு அன்னியமானவை.

Marxism, Feminism, Post-colonial, Oppression, Struggle, Resistance, Marginalized, decolonization, Oriental, Hegemony, Ideology, Social impact என சில சொற்களை எல்லா அரங்குகளிலும் கேட்க முடிந்தது. அவற்றைச் சொல்பவர்கள் அவற்றை அவ்வாறே ஒரு வாய்ப்பாடு போல வெவ்வேறு அரங்குகளில் சொல்லிச் சொல்லித் தேர்ந்தவர்கள். ஆகவே சரளமான ஊடக ஆங்கிலத்தில் அவற்றைச் சொன்னார்கள். இரண்டு ஆண்டுகளாக தீவிர இலக்கியம் வாசிக்கும் ஒருவருக்கு அவர்களிடமிருந்து தெரிந்துகொள்ள ஒன்றுமில்லை.

இலக்கியத்தின் முதன்மைக் கலைச்சொற்களே பலருக்கு தெரியவில்லை. ஒரு புகழ்பெற்ற கவிஞர் – கவிதைகளை தொகுப்பவர் modernism – modernity இரண்டுக்கும் வேறுபாடு தெரியாமல் பேசிக்கொண்டிருந்தார். அப்படிப்பட்ட கலைச்சொல் குளறுபடிகள் பெரும்பாலும் எல்லா உரைகளிலும் இருந்தன.

ஏனென்றால் மேடைகளில் தோன்றியவர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்தில், ஆங்கில நாளிதழ்களில், எழுதும் இதழாளர்கள். ஆகவே புகழ்பெற்றவர்கள். புத்தக மதிப்புரையாளர்கள் என்னும் வகையில் அவர்கள்மேல் அனைவருக்கும் அச்சம் கலந்த மதிப்பும் இருந்தது. ஆனால் இலக்கிய வாசிப்பு குறைவானவர்கள். பெரும்பாலும் சமகால புகழ்பெற்ற புனைவுகளையே வாசித்தவர்கள். நாளிதழ்களில் வரும் இலக்கிய அரட்டைகளையே இலக்கியக் கொள்கைகளை அறிந்துகொள்ளும் ஊடகமாகக் கொண்டவர்கள்.

இலக்கியவிவாதங்களில் தீவிரமான இலக்கிய விமர்சன வாசிப்பின் அடித்தளம் என்பது எந்த அளவுக்கு இன்றியமையாதது என்னும் எண்ணம் ஏற்பட்டது. அது இத்தகைய இலக்கியவிழாக்களில் எல்லாம் நான் உணர்வது. இந்திய ஆங்கில இலக்கியவாதிகள் மட்டுமல்ல இத்தகைய இலக்கிய விழாக்களுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து வரும் இலக்கியவாதிகளும் இதேபோல மேலோட்டமான இலக்கியப்பேச்சுகளையே அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.

தீவிரமான இலக்கியவாதிகள் இத்தகைய விழாக்களில் ஒரு விலக்கம் கொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன். பல்வேறு அமைப்புகளுடன் தொடர்புகொண்டு விழாக்கள் தோறும் சென்றுகொண்டே இருப்பவர்களே அதிகம் தென்படுகிறார்கள்.

அதிலும் அண்மைக்காலத்தில் இலக்கியவிழாக்கள் விரிவடையுந்தோறும் மையம் பொழுதுபோக்கு எழுத்து நோக்கிச் சென்று, அங்கிருந்து பயனுறு எழுத்து நோக்கிச் சென்று, அங்கிருந்து இன்று சினிமாநடிகர்கள் விளையாட்டு வீரர்கள் போன்ற பொது ஆளுமைகள் நோக்கி குவிவதாக ஆகிவிட்டிருக்கிறது. ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் நடிகர்களே நட்சத்திரங்கள், இந்திய ஆங்கில பல்ப் எழுத்தாளர்களான ‘செலிபிரிட்டி’க்கள்கூட இரண்டாமிடம்தான் என்று இலக்கிய நண்பர் சொன்னார்.

பெங்களூர் இலக்கிய விழாவுக்கு கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் இருந்து ஒரு மாணவர்குழு கல்லூரி செலவில் அனுப்பப்பட்டிருந்தது. அவர்கள் என்னை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நான் பொன்னியின் செல்வனுக்கு வசனம் எழுதியவன் என அறிந்திருந்தனர். மற்றபடி கோவை விஷ்ணுபுரம் நிகழ்ச்சி பற்றி எல்லாம் அவர்களுக்கு தெரியாது. அந்தக்கல்லூரி ஆசிரியர்களுக்கே ஜெயமோகன், விஷ்ணுபுரம், கோவை விழா பற்றியெல்லாம் எந்த அறிமுகமும் இல்லை என்று நண்பர் சொல்லி அறிந்திருக்கிறேன்.பெங்களூர் விழாவுக்கு இப்படி கூட்டம் வருவதே மேலே சொன்ன ‘பொது ஆளுமைகள்’ வழியாகத்தான்.

இந்த விழாவிலும் இந்தியச் சூழலில் தீவிர இலக்கியத்திற்கு எந்த அளவுக்கு இடமிருக்கிறதோ அதே விகிதாச்சாரத்தில்தான் இடமிருந்தது. ஆனால் இருந்தது என்பதே பெரிய விஷயம். சில அரங்குகள் சுவாரசியமானவை. புதிய இலக்கிய முகங்களை அறியத்தந்தவை. இந்தி எழுத்தாளர் அக்ஞெய்யின் வாழ்க்கைவரலாற்றை எழுதிய எழுத்தாளரின் பேச்சு கொஞ்சம் கேட்டேன். முக்கியமான நூல் என தோன்றியது.

தெலுங்கில் பிரசுரநிறுவனம் ஒன்றை நடத்தும் கீதா ராமசாமியை சந்தித்தேன். இடதுசாரி தீவிர இயக்கங்களில் பங்கெடுத்த போராளி. அதன்பொருட்டு இல்லத்தை துறந்து ஓடியவர். பின்னர் வெளியேறி கலாச்சாரச் செயல்பாட்டாளராக ஆனவர். அவருடைய சுயசரிதை Land, Guns, Caste, Woman: The Memoir of a Lapsed Revolutionary அண்மையில் மிகவும் கவனிக்கத்தக்க நூல்.

இரவு வரை அங்குமிங்குமாக அலைந்து அரங்குகளை கேட்டுவிட்டு அறைக்குச் சென்றேன். சென்றபின் ஒரு தமிழ் விக்கி பதிவு போட்டேன். அதன்பின் தூக்கம். காலையில் எட்டுமணிக்கு கீழே சென்று காலையுணவு. இலக்கியத் தொகுப்பாளரான கனிஷ்காவைச் சந்தித்தேன். பதிப்பாளர் ரவி டிசியை சந்தித்தேன். அவருக்கு ஒரு நூல் அளிப்பதாகவும், டிசி இலக்கிய விழாவில் பங்கேற்பதாகவும் ஒப்புக்கொண்டேன்.  பத்து மணிக்கு அரங்குகள் தொடங்கின.

ஒன்பது மணிமுதல் என் வாசகர்கள் பலர் வந்து கூட தொடங்கியிருந்தனர். தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தோம். கூடவே அரங்குகளையும் கவனித்தோம். தமிழச்சி தங்கபாண்டியன் பேசிய ஓர் அரங்கை கேட்டேன். சிவகாமியை வழியில் சந்தித்தேன். அம்பை பேசிய அரங்குக்கு போகும் வழியில் இன்னொரு அரங்கால் ஈர்க்கப்பட்டேன்.

இந்த அரங்குகளில் இரண்டுவகை உண்டு. கூட்டமர்வு (Panel Discussion) என்ற பேரில் நான்கு பேர் ஐந்துபேர் அமர்ந்து ஒருமணிநேரம் ஒரு தலைப்பில் உரையாடுவது ஒருவகை. இந்த கூட்டமர்வுகளில் வாயாடி ஒருவர் அமைந்துவிட்டால் அங்கே அதன்பின் அவர் குரல் மட்டுமே ஒலிக்கும். தயங்கி, யோசித்து பேசுபவருக்கு முனக மட்டுமே இடம் கிடைக்கும். இன்னொன்று ஓர் ஆசிரியருக்கு மட்டுமாக அமைந்த அரங்கு. அரைமணிநேரம். அவருடன் இன்னொருவர் கேள்விகள் கேட்பவராக மட்டும் அமர்வார்

பதினொரு மணிக்கு என் அரங்கு. பிரியம்வதா கேள்வி கேட்க நான் பதில் சொன்னேன். எனக்கு ஆங்கிலம் பேச பெருந்தயக்கம் உண்டு. என் ஆங்கில உச்சரிப்பு பற்றிய ஐயம்தான். நான் ஆங்கிலம் பேசுவதே இல்லை. நான் சொல்லும் ஆங்கிலச் சொற்கள் என் காதில் விழுந்தால் எனக்கே அன்னியமாக ஒலிக்கும். அத்துடன் நான் ஆங்கிலத்தில் பேசும்போது தன்னியல்பாகப் பேசுவதில்லை. தமிழில் யோசித்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து பேசுகிறேன். அந்த மொழியாக்கம் எங்காவது தடைபட்டால் சிக்கல்தான்.

ஆனால் இந்த இலக்கிய அரங்குகளில் பேசும் புகழ்பெற்றவர்கள்டை விட நான் நன்றாகவே பேசுகிறேன் என்ற எண்ணம் எனக்கு அண்மையில் உருவானது. சரளமாக, நல்ல உச்சரிப்புடன் பேசுபவர்கள் மிகப்பொதுவான தளத்தில் பெரும்பாலும் எளிய தேய்வழக்குகளையே பேசுகிறார்கள். புதியதாக எதையாவது சொல்பவர்கள் என்னைப்போலவே யோசித்துத்தான் பேசுகிறார்கள். அமெரிக்காவில் ஆங்கிலம் பேசும்போதுதான் தன்னம்பிக்கையே வருகிறது. அங்கே எல்லா உச்சரிப்பும் நல்ல உச்சரிப்பே. சீனர்களை விட நாம் பலமடங்கு மேல். பேசும் விஷயத்தையே கவனிக்கிறார்கள்.

பிரியம்வதாவின் கேள்விகளுக்கு நான் பதிலளித்தேன். அரைமணிநேர உரையாடல். அரங்கு நிறைந்து கூட்டம் சூழ நின்றுகொண்டும் இருந்தது. அரங்கில் இருந்து கைத்தட்டல்களும் ஏற்பொலிகளும் வந்துகொண்டே இருந்தன. கீதா ராமசாமி, இன்னொரு வங்காள வாசகி ஆகியோர் அவர்கள் கேட்டவற்றிலேயே மிகச்சிறந்த இலக்கிய உரையாடல் என்றனர். பொதுவாக நல்ல உரையாடல் என்றே அனைவரும் சொன்னார்கள். அதற்குக் காரணம் நான் பேசியவை வெறும் கல்வித்துறை கோட்பாடுகள் அல்ல, அதேசமயம் மேலோட்டமான இதழியல் தேய்வழக்குகளும் அல்ல என்பதே. உண்மையான உணர்வுகள் மற்றும் எண்ணங்களை அவற்றுக்குரிய கலைச்சொற்களுடன் சொன்னேன்.

மதியம் இரண்டுமணிக்கு உணவு. அதுவரை நின்றும் அமர்ந்தும் நண்பர்களுடன் பேசிக்கொண்டே இருந்தேன். நூறுபேருக்குமேல் என் வாசகர்கள் மட்டும் வந்திருந்தனர். நூல்கள் எல்லாமே விற்றுத்தீர்ந்தன என்றனர். எனக்கு ஐந்து மணிக்கு ரயில். இன்னொரு இலக்கியப் பயணம் நிறைவுற்றது. ரயிலில் ஏறியதும் சற்றும் தயங்காமல் தமிழ்விக்கியின் அடுத்த பதிவை தொடங்கினேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2022 10:35

பெங்களூர் இலக்கிய விழா

சர்வதேச , தேசிய இலக்கிய விழாக்களில் ஒரு பை கொடுப்பார்கள். அதில் பலவகை பரிசுப்பொருட்கள், நிகழ்ச்சி நிரல், சில புத்தகங்கள், குறிப்புதவி நோட்டுப்புத்தகம் இருக்கும். தோளில் போட்டுக்கொள்ள ஒரு அடையாள அட்டையும் உண்டு.

கே.ஜி.சங்கரப்பிள்ளை இப்படி இலக்கிய விழாவில் இருந்து இலக்கிய விழாவுக்கு சென்றுகொண்டிருப்பவர்களைப் பற்றி ‘சஞ்சிகள்’ என்னும் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். சஞ்சி என்றால் பை. சம்ஸ்கிருதத்தில் தொகுப்பு என்றும் பொருளுண்டு. சச்சிதானந்தனை சச்சி என அழைப்பார்கள். அதையொட்டிய பகடி என்றும் சொல்லப்படுவதுண்டு.

நானும் சஞ்சி ஆகிவிட்டேனா என்னும் ஐயத்தை 2 ஆம் தேதி பெங்களூருக்குக் கிளம்பும்போது அடைந்தேன். மலேசியா ஜார்ஜ்டவுன் இலக்கியவிழாவிலிருந்து வந்து பழைய சட்டைகளை வெளியே எடுத்துப்போட்டு புதிய சட்டைகளை உள்ளே வைத்து பெட்டியை மூடி கிளம்பிவிட்டேன், ரயிலில்தான் நல்ல தூக்கம்.

3 டிசம்பர் 2022 காலையில் பெங்களூர் வாசகர் நாகராஜன் ரயில்நிலையத்துக்கு வந்திருந்தார். நிகழ்ச்சி நடக்கும் அசோக் ஓட்டலிலேயே மாடியில் அறை. ஏற்கனவே அங்கே பிரியம்வதா வந்திருந்தார். அவரே எனக்கு அறை பெற்றுத் தர உதவினார்.

அசோக் முழுக்க ஒரே வைணவக்கூட்டம். பெரும்பாலும் வெள்ளையர். ஏதோ வைணவ அமைப்பின் கருத்தரங்கு நிகழ்ந்துகொண்டிருந்தது – இஸ்கான் நிகழ்ச்சி அல்ல. இன்னொன்று. தாவணி கட்டிய வெள்ளைக்காரப் பெண்கள் அழகாக இருந்தனர். எக்கணமும் ‘ஓய் மாமோய், கஞ்சி கொண்டாந்திருக்கேன்’ என்று கூவிவிடுவார்கள் போல தோன்றியது.

முதல்நாள் எனக்கு நிகழ்ச்சி ஏதுமில்லை. பார்க்கவந்திருந்த பெங்களூர் நண்பர்களுடன் ஆங்காங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். சில பிறமொழி எழுத்தாளர்களைப் பார்த்தேன். விவேக் ஷன்பேக் என் நண்பர். அவரைச் சந்தித்தது மகிழ்ச்சியான தருணம். அவர் கொங்கணி எழுத்தாளர்  தாமோதர் மௌஸோ (Damodar Mauzo) நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அரங்கில் பார்வையாளனாக இருந்தேன்.

வெவ்வேறு அரங்குகள். அவற்றை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக்கொள்வது கடினம். இத்தகைய பெருவிழாக்கள் அகன்று அகன்று கூர்மையற்றுவிடுகின்றன. சினிமாநடிகர்கள் மட்டுமல்ல சினிமா தயாரிப்பாளர்கள் சினிமா தயாரிப்பதன் சிக்கல்களைப் பேசும் ஓர் அரங்கும் இருந்தது ( வழக்கம்போல அரசு உதவி செய்யவேண்டும் என்ற கோரிக்கை) பெருங்கூட்டம் கிரிக்கெட் எழுத்தாளர்களின் அரங்குக்குத்தான்.

உதிரி உதிரியாக வெவ்வேறு அரங்குகளுக்குச் செவிகொடுத்தேன். மிகப்பொதுவான பேச்சுக்கள்தான் நிகழ்ந்து கொண்டிருந்தன. இப்போது நாளிதழ்களில் சாதாரணமாக அடிபடும்  ‘இலக்கியக் கைப்பிடிகள்’ ஆன அரசியல் -சமூகவியல் கருத்துக்கள். அவற்றைக்கொண்டே நம் இதழாளர்களால் இலக்கியத்தை பற்றவோ தூக்கவோ மதிப்பிடவோ முடியும்.  அழகியல், தனிப்பட்ட உணர்வுநிலைகள், உலக இலக்கிய மரபு உருவாக்கும் உளநிலைகள் ஆகிய மூன்றும் அவர்களுக்கு அன்னியமானவை.

Marxism, Feminism, Post-colonial, Oppression, Struggle, Resistance, Marginalized, decolonization, Oriental, Hegemony, Ideology, Social impact என சில சொற்களை எல்லா அரங்குகளிலும் கேட்க முடிந்தது. அவற்றைச் சொல்பவர்கள் அவற்றை அவ்வாறே ஒரு வாய்ப்பாடு போல வெவ்வேறு அரங்குகளில் சொல்லிச் சொல்லித் தேர்ந்தவர்கள். ஆகவே சரளமான ஊடக ஆங்கிலத்தில் அவற்றைச் சொன்னார்கள். இரண்டு ஆண்டுகளாக தீவிர இலக்கியம் வாசிக்கும் ஒருவருக்கு அவர்களிடமிருந்து தெரிந்துகொள்ள ஒன்றுமில்லை.

இலக்கியத்தின் முதன்மைக் கலைச்சொற்களே பலருக்கு தெரியவில்லை. ஒரு புகழ்பெற்ற கவிஞர் – கவிதைகளை தொகுப்பவர் modernism – modernity இரண்டுக்கும் வேறுபாடு தெரியாமல் பேசிக்கொண்டிருந்தார். அப்படிப்பட்ட கலைச்சொல் குளறுபடிகள் பெரும்பாலும் எல்லா உரைகளிலும் இருந்தன.

ஏனென்றால் மேடைகளில் தோன்றியவர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்தில், ஆங்கில நாளிதழ்களில், எழுதும் இதழாளர்கள். ஆகவே புகழ்பெற்றவர்கள். புத்தக மதிப்புரையாளர்கள் என்னும் வகையில் அவர்கள்மேல் அனைவருக்கும் அச்சம் கலந்த மதிப்பும் இருந்தது. ஆனால் இலக்கிய வாசிப்பு குறைவானவர்கள். பெரும்பாலும் சமகால புகழ்பெற்ற புனைவுகளையே வாசித்தவர்கள். நாளிதழ்களில் வரும் இலக்கிய அரட்டைகளையே இலக்கியக் கொள்கைகளை அறிந்துகொள்ளும் ஊடகமாகக் கொண்டவர்கள்.

இலக்கியவிவாதங்களில் தீவிரமான இலக்கிய விமர்சன வாசிப்பின் அடித்தளம் என்பது எந்த அளவுக்கு இன்றியமையாதது என்னும் எண்ணம் ஏற்பட்டது. அது இத்தகைய இலக்கியவிழாக்களில் எல்லாம் நான் உணர்வது. இந்திய ஆங்கில இலக்கியவாதிகள் மட்டுமல்ல இத்தகைய இலக்கிய விழாக்களுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து வரும் இலக்கியவாதிகளும் இதேபோல மேலோட்டமான இலக்கியப்பேச்சுகளையே அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.

தீவிரமான இலக்கியவாதிகள் இத்தகைய விழாக்களில் ஒரு விலக்கம் கொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன். பல்வேறு அமைப்புகளுடன் தொடர்புகொண்டு விழாக்கள் தோறும் சென்றுகொண்டே இருப்பவர்களே அதிகம் தென்படுகிறார்கள்.

அதிலும் அண்மைக்காலத்தில் இலக்கியவிழாக்கள் விரிவடையுந்தோறும் மையம் பொழுதுபோக்கு எழுத்து நோக்கிச் சென்று, அங்கிருந்து பயனுறு எழுத்து நோக்கிச் சென்று, அங்கிருந்து இன்று சினிமாநடிகர்கள் விளையாட்டு வீரர்கள் போன்ற பொது ஆளுமைகள் நோக்கி குவிவதாக ஆகிவிட்டிருக்கிறது. ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் நடிகர்களே நட்சத்திரங்கள், இந்திய ஆங்கில பல்ப் எழுத்தாளர்களான ‘செலிபிரிட்டி’க்கள்கூட இரண்டாமிடம்தான் என்று இலக்கிய நண்பர் சொன்னார்.

பெங்களூர் இலக்கிய விழாவுக்கு கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் இருந்து ஒரு மாணவர்குழு கல்லூரி செலவில் அனுப்பப்பட்டிருந்தது. அவர்கள் என்னை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நான் பொன்னியின் செல்வனுக்கு வசனம் எழுதியவன் என அறிந்திருந்தனர். மற்றபடி கோவை விஷ்ணுபுரம் நிகழ்ச்சி பற்றி எல்லாம் அவர்களுக்கு தெரியாது. அந்தக்கல்லூரி ஆசிரியர்களுக்கே ஜெயமோகன், விஷ்ணுபுரம், கோவை விழா பற்றியெல்லாம் எந்த அறிமுகமும் இல்லை என்று நண்பர் சொல்லி அறிந்திருக்கிறேன்.பெங்களூர் விழாவுக்கு இப்படி கூட்டம் வருவதே மேலே சொன்ன ‘பொது ஆளுமைகள்’ வழியாகத்தான்.

இந்த விழாவிலும் இந்தியச் சூழலில் தீவிர இலக்கியத்திற்கு எந்த அளவுக்கு இடமிருக்கிறதோ அதே விகிதாச்சாரத்தில்தான் இடமிருந்தது. ஆனால் இருந்தது என்பதே பெரிய விஷயம். சில அரங்குகள் சுவாரசியமானவை. புதிய இலக்கிய முகங்களை அறியத்தந்தவை. இந்தி எழுத்தாளர் அக்ஞெய்யின் வாழ்க்கைவரலாற்றை எழுதிய எழுத்தாளரின் பேச்சு கொஞ்சம் கேட்டேன். முக்கியமான நூல் என தோன்றியது.

தெலுங்கில் பிரசுரநிறுவனம் ஒன்றை நடத்தும் கீதா ராமசாமியை சந்தித்தேன். இடதுசாரி தீவிர இயக்கங்களில் பங்கெடுத்த போராளி. அதன்பொருட்டு இல்லத்தை துறந்து ஓடியவர். பின்னர் வெளியேறி கலாச்சாரச் செயல்பாட்டாளராக ஆனவர். அவருடைய சுயசரிதை Land, Guns, Caste, Woman: The Memoir of a Lapsed Revolutionary அண்மையில் மிகவும் கவனிக்கத்தக்க நூல்.

இரவு வரை அங்குமிங்குமாக அலைந்து அரங்குகளை கேட்டுவிட்டு அறைக்குச் சென்றேன். சென்றபின் ஒரு தமிழ் விக்கி பதிவு போட்டேன். அதன்பின் தூக்கம். காலையில் எட்டுமணிக்கு கீழே சென்று காலையுணவு. இலக்கியத் தொகுப்பாளரான கனிஷ்காவைச் சந்தித்தேன். பதிப்பாளர் ரவி டிசியை சந்தித்தேன். அவருக்கு ஒரு நூல் அளிப்பதாகவும், டிசி இலக்கிய விழாவில் பங்கேற்பதாகவும் ஒப்புக்கொண்டேன்.  பத்து மணிக்கு அரங்குகள் தொடங்கின.

ஒன்பது மணிமுதல் என் வாசகர்கள் பலர் வந்து கூட தொடங்கியிருந்தனர். தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தோம். கூடவே அரங்குகளையும் கவனித்தோம். தமிழச்சி தங்கபாண்டியன் பேசிய ஓர் அரங்கை கேட்டேன். சிவகாமியை வழியில் சந்தித்தேன். அம்பை பேசிய அரங்குக்கு போகும் வழியில் இன்னொரு அரங்கால் ஈர்க்கப்பட்டேன்.

இந்த அரங்குகளில் இரண்டுவகை உண்டு. கூட்டமர்வு (Panel Discussion) என்ற பேரில் நான்கு பேர் ஐந்துபேர் அமர்ந்து ஒருமணிநேரம் ஒரு தலைப்பில் உரையாடுவது ஒருவகை. இந்த கூட்டமர்வுகளில் வாயாடி ஒருவர் அமைந்துவிட்டால் அங்கே அதன்பின் அவர் குரல் மட்டுமே ஒலிக்கும். தயங்கி, யோசித்து பேசுபவருக்கு முனக மட்டுமே இடம் கிடைக்கும். இன்னொன்று ஓர் ஆசிரியருக்கு மட்டுமாக அமைந்த அரங்கு. அரைமணிநேரம். அவருடன் இன்னொருவர் கேள்விகள் கேட்பவராக மட்டும் அமர்வார்

பதினொரு மணிக்கு என் அரங்கு. பிரியம்வதா கேள்வி கேட்க நான் பதில் சொன்னேன். எனக்கு ஆங்கிலம் பேச பெருந்தயக்கம் உண்டு. என் ஆங்கில உச்சரிப்பு பற்றிய ஐயம்தான். நான் ஆங்கிலம் பேசுவதே இல்லை. நான் சொல்லும் ஆங்கிலச் சொற்கள் என் காதில் விழுந்தால் எனக்கே அன்னியமாக ஒலிக்கும். அத்துடன் நான் ஆங்கிலத்தில் பேசும்போது தன்னியல்பாகப் பேசுவதில்லை. தமிழில் யோசித்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து பேசுகிறேன். அந்த மொழியாக்கம் எங்காவது தடைபட்டால் சிக்கல்தான்.

ஆனால் இந்த இலக்கிய அரங்குகளில் பேசும் புகழ்பெற்றவர்கள்டை விட நான் நன்றாகவே பேசுகிறேன் என்ற எண்ணம் எனக்கு அண்மையில் உருவானது. சரளமாக, நல்ல உச்சரிப்புடன் பேசுபவர்கள் மிகப்பொதுவான தளத்தில் பெரும்பாலும் எளிய தேய்வழக்குகளையே பேசுகிறார்கள். புதியதாக எதையாவது சொல்பவர்கள் என்னைப்போலவே யோசித்துத்தான் பேசுகிறார்கள். அமெரிக்காவில் ஆங்கிலம் பேசும்போதுதான் தன்னம்பிக்கையே வருகிறது. அங்கே எல்லா உச்சரிப்பும் நல்ல உச்சரிப்பே. சீனர்களை விட நாம் பலமடங்கு மேல். பேசும் விஷயத்தையே கவனிக்கிறார்கள்.

பிரியம்வதாவின் கேள்விகளுக்கு நான் பதிலளித்தேன். அரைமணிநேர உரையாடல். அரங்கு நிறைந்து கூட்டம் சூழ நின்றுகொண்டும் இருந்தது. அரங்கில் இருந்து கைத்தட்டல்களும் ஏற்பொலிகளும் வந்துகொண்டே இருந்தன. கீதா ராமசாமி, இன்னொரு வங்காள வாசகி ஆகியோர் அவர்கள் கேட்டவற்றிலேயே மிகச்சிறந்த இலக்கிய உரையாடல் என்றனர். பொதுவாக நல்ல உரையாடல் என்றே அனைவரும் சொன்னார்கள். அதற்குக் காரணம் நான் பேசியவை வெறும் கல்வித்துறை கோட்பாடுகள் அல்ல, அதேசமயம் மேலோட்டமான இதழியல் தேய்வழக்குகளும் அல்ல என்பதே. உண்மையான உணர்வுகள் மற்றும் எண்ணங்களை அவற்றுக்குரிய கலைச்சொற்களுடன் சொன்னேன்.

மதியம் இரண்டுமணிக்கு உணவு. அதுவரை நின்றும் அமர்ந்தும் நண்பர்களுடன் பேசிக்கொண்டே இருந்தேன். நூறுபேருக்குமேல் என் வாசகர்கள் மட்டும் வந்திருந்தனர். நூல்கள் எல்லாமே விற்றுத்தீர்ந்தன என்றனர். எனக்கு ஐந்து மணிக்கு ரயில். இன்னொரு இலக்கியப் பயணம் நிறைவுற்றது. ரயிலில் ஏறியதும் சற்றும் தயங்காமல் தமிழ்விக்கியின் அடுத்த பதிவை தொடங்கினேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2022 10:35

அ.சிதம்பரநாதச் செட்டியார்

[image error]ஏ.சி.செட்டியார் என அழைக்கப்படும் அ.சிதம்பரநாதன் செட்டியார் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க கல்வியாளர்களில் ஒருவர். தமிழிலக்கிய ஆய்விலும், தமிழிலக்கியத்தை ஆங்கிலத்தில் அறிமுகம் செய்ததிலும் பங்களிப்பாற்றியவர். நவீன இலக்கிய அறிதலும் கொண்டிருந்தார். தமிழ்ச்சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய முதல் ஆய்வுநூலை எழுதினார்

ஏ.சி.செட்டியாரின் மறைவு இன்றளவும் தமிழ்ச்சூழலில் ஒரு மர்மமாக நீடிக்கிறது.

அ.சிதம்பரநாதச் செட்டியார்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2022 10:34

அ.சிதம்பரநாதச் செட்டியார்

[image error]ஏ.சி.செட்டியார் என அழைக்கப்படும் அ.சிதம்பரநாதன் செட்டியார் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க கல்வியாளர்களில் ஒருவர். தமிழிலக்கிய ஆய்விலும், தமிழிலக்கியத்தை ஆங்கிலத்தில் அறிமுகம் செய்ததிலும் பங்களிப்பாற்றியவர். நவீன இலக்கிய அறிதலும் கொண்டிருந்தார். தமிழ்ச்சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய முதல் ஆய்வுநூலை எழுதினார்

ஏ.சி.செட்டியாரின் மறைவு இன்றளவும் தமிழ்ச்சூழலில் ஒரு மர்மமாக நீடிக்கிறது.

அ.சிதம்பரநாதச் செட்டியார்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2022 10:34

பகிரங்க சித்தரிப்பு, ஸீரோ டிகிரி-ஆஸ்டின் சௌந்தர்

முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் வெளியேறிச் சென்றவனாக, எனது ஆன்டெனாவை தமிழ்நாட்டை நோக்கித் திருப்பி வைக்க, நவீனத் தமிழ் இலக்கியத்தில் எனக்கு மூன்று மும்மூர்த்திகள் தெரிந்தார்கள் –ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் சாரு நிவேதிதா. இதில் யார் சிவன், யார் விஷ்ணு, யார் பிரம்மன் என்ற வாதத்திற்கு செல்லவில்லை. ஒவ்வொருவரது பங்கும் முக்கியம் என்றுதான் இலக்கிய வாசகனாக நான் பார்த்தேன். படைப்புகளை படித்ததன் மூலம் எஸ். ராமகிருஷ்ணனையும் ஜெயமோகனையும், கண்டடைந்தேன், அல்லது அவர்கள்பால் ஈர்க்கப்பட்டேன்.

ஒரு காணொளியைப் பார்த்ததன் மூலம் சாரு நிவேதிதாவைக் கண்டடைந்தேன். அவரது தோற்றத்தாலும் (எழுத்தாளர்களில் இப்படி ஒரு ஸ்டைலான ஆளா?), வெளிப்படையான பேச்சாலும் ஈர்க்கப்பட்டேன். நான் பெரிதும் போற்றும் அசோகமித்தரனை அவரும் பாராட்டி சீராட்டுவதையும், உலக இலக்கியங்கள் பற்றி அவர் பேசுவதையும் கேட்டு அவரது ரசிகனாகவும் ஆனேன். அவரது கட்டுரைகளை , குறிப்பாக அவரது தளத்தில் வாசித்திருக்கிறேன். ஆழமாக அதிகம் அவர் படைப்புகளை வாசித்திராததால், அவருக்கு கடிதம் எழுதி தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளவில்லை.

‘ஸீரோ டிகிரி’ நாவல் எனது வாசிக்கவேண்டிய நூல்களில் பல வருடங்களாக இருந்தது.  நான், எப்பொழுதும் ஒரு எழுத்தாளனை நானாக வாசித்து ஒரு அவதானிப்பை ஏற்படுத்திக்கொளும் வரை அவரை தொடர்பு கொள்வதில்லை. இந்த வருடத்திற்கான விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் விருது சாரு நிவேதிதாவிற்கு என்று அறிவித்த பிறகு, அவரது நூல்களை அமேசானில் வாங்குவதற்காக பார்த்தவன், ‘ஸீரோ டிகிரி’ ஆங்கிலப் பதிப்பின் முதல் சில பக்கங்களை வாசித்தேன். பெண் வாசகியை அவர் விழித்து நீ இதைச் செய்துகொண்டிருக்கலாம். அதைச் செய்துகொண்டிருக்கலாம் என அவர் சொன்ன ஒவ்வொன்றும் உண்மையாக வெளிப்படையாக இருந்தது. ஆங்கிலத்தில்தான் வாசித்தேன் என்றாலும், அதன் தீவிரத்தால், இரண்டு முறை வாசித்தேன். Transgression, பின் நவீனத்துவம் என்ற இலக்கியக் கோட்பாடுகள் , பயிற்சிகள் என எதுவும் யோசிக்காமல் என்னால் நாவலினுள் இயல்பாக நுழைய முடிந்தது.

‘ஸீரோ டிகிரி’ நாவலில் 4-ம் அத்தியாயத்தில், கதைசொல்லி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வதே, என்னுடைய விமர்சனமாக / வாசிப்பனுபவமாக முதலில் வைக்கிறேன்.

இந்நாவலில், குறிப்பிடப்பட்டிருக்கும், லத்தீன் அமெரிக்க நாவல்களைப் படிப்பது அவசியம் என்று கருதுகிறாயா?

இல்லை. ( இந்த நாவலைப் புரிந்துகொள்வதற்காக வேண்டியதில்லை)

ஆம்  (இலக்கிய வாசகனாக வேண்டும் என்றால் சொல்லலாம்).

இந்த நாவல் தமிழ் நாவல்களில் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என நம்புகிறாயா?

ஆம்.

(ஜெயமோகன் சொல்வது செவ்விலக்கியம் வாசிக்கும்பொழுது ஒரு  நிறைவு வரும்.  நவீன இலக்கியம் தொந்தரவு செய்யும். இந்த நாவல் சரியான தொந்தரவு செய்கிறது. அப்புறம் என்ன?)

இந்நாவலை எழுதியவன் தண்டிக்கப்படவேண்டுமா?

இல்லை (இந்தக் கேள்வி எனக்கு அபத்தமாகப் படுகிறது)

இந்த நாவலில் ஒரிஜானலிட்டியை  நீ காணமுடிகிறதா ?

ஆம்.

(பால் கறக்கும் பெண்ணையும் குறிப்பிடுகிறீர்கள், தோழியுடன் புணர்ச்சியில் இருப்பவளையும் குறிப்பிட்டு என் நூலை வாசிக்கலாம் என்று எல்லோரையும் சம நிலையில் பார்க்கிறீர்கள். பதினெட்டு நிமிடங்களில் பதினெட்டு இடங்களில் குண்டு வெடித்திருக்கிறது. பதினெட்டு பேர் சாவு என்று அரசுத் தரப்பிலும், நூற்றியெட்டுபேர் என்று எதிர்க்கட்சிகள் சார்பிலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது   என்று அரசியல் நியாயங்களை சொல்கிறீர்கள். கடல் ஆமை தொண்ணூறு முட்டையிட்டாலும் கடலில் சேர்வது என்னவோ பதினெட்டுதான் என்ற நிதர்சனத்தையும் சித்தரிக்கிறீர்கள். அவந்திகாவின் டி.என்.சி. அனுபவங்களை வாசிக்கும்பொழுது என் உடம்பெல்லாம் இரத்தம். நீங்கள் எழுத்தாளன் எனும் பித்து நிலையில் இல்லாமல் இதையெல்லாம் எப்படி எழுதமுடியும்?)

மஸாக் மற்றும் மார்க்கி தெ ஸாத் இவர்களை வாசிக்காமல் இந்த நாவலை வாசிக்க வேண்டாம் என்கிறான் முனியாண்டி.

ஒத்துக்கொள்கிறாயா?

இல்லை (இதை வாசித்துவிட்டுக்கூட அவர்களை வாசிக்கலாம் இல்லையா?)

***

நல்ல சிறுகதை /  நாவல் வாசித்து முடித்தபிறகு தரிசனம் கிடைக்கலாம். அதில் வரும் பாத்திரங்கள் மனதில் அழிந்துவிடா ஓவியங்களாக (தொந்தரவாக ?) நின்றுவிடலாம். ஜெயமோகனது தேவகிச் சித்தியின் டைரியின் தேவகி, அசோகமித்தரனின் தண்ணீர் நாவலின் ஜமுனா,  எஸ். ராமகிருஷ்ணனின், ‘உனக்கு முப்பது வயதாகிறது’ சுகந்தி, இவர்களுடன் ‘ஸீரோ டிகிரி’ நாவலில் வரும் அவந்திகாவும், ஆர்த்தியும் எனக்கு அறிமுகமான பெண்களின் நிரையில் நிற்கிறார்கள். ஆர்த்தியின் கதை என்று ஸீரோ டிகிரியில் வர, அவளின் முன்கதையை அறிந்துகொள்ள, ‘எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்’  நாவலையும் வாங்கி வாசித்தேன்.

கி.ரா அவர்கள், நாட்டுப்புற பாலியல் கதைகள் அடங்கிய ‘வயதுவந்தவர்களுக்கு மட்டும்’ தொகுப்பு நூலில், பாலியல் கதைகள் படிப்பதால் யாரும் கெட்டுப்போகமாட்டார்கள். அது சிரிப்பைத்தான் வரவைக்கும் என்று சொல்லியிருப்பார். ஸீரோ டிகிரி நாவலில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு செத்த மூளையின் கதையும் கதைக்குள் வரும் கதைகளும் அவ்வகைக் கதைகள்.

கி.பி.ஒ.நூ.செ.மூ-யின் நண்பன் குள்ளச் சித்தன் வைத்திருந்த ஓலை இப்படி இருந்தது என்று இரண்டு பக்கங்களுக்கு ஒற்று எழுத்துக்களை மேலே புள்ளியில்லாமல் எழுதியிருக்கிறார், சாரு. பழுப்பு நிறப் பக்கங்களில், உ.வே. சாமிநாத ஐயரைப் பற்றிய கட்டுரையில், “உ.வே.சா எழுதிய மகா வைத்தியநாதர் என்ற நூலை உஸ்மானியா பல்கலைக்கழக நூலகத்திலிருந்து எடுத்துக் கொடுத்தார் என் நண்பர் ஒருவர். அதிலும் புத்தகம் நெடுகிலும் ஒற்றெழுத்துக்களுக்குப் புள்ளியே காணோம்.” என்று கூறியிருப்பார். சாரு, அந்த அனுபவத்தை இங்கே வாசகனுக்கு கொடுக்கிறார்.

நாவல் வெளிவந்த சமயம் இருபத்து நான்கு வருடங்களுக்கு முன்னால் வாசித்திருந்தாலும், இந்த நாவலை இப்பொழுதுபோலவே வாசித்திருப்பேன் எனவே தோன்றுகிறது. வாழ்க்கையையும் நல்ல நாவல்களையும் ஒன்றென பார்க்கும் வாசகனாக நான் சொல்வது இதுதான். தெரியாமல் மலத்தில் கால் வைக்கும் அருவருப்பையல்ல கையூன்றீ குப்புற விழுந்துவிட்ட அனுபவத்தை, வாழ்வில் சந்தித்தவர்களும், அல்லது அப்படி விழுந்தவர்களை தானாக நினைத்து (empathy) துக்கப்படுபவர்களும் இந்த நாவலை எந்தவிதமான அயர்ச்சியுமில்லாமல் வாசிக்கமுடியும் என்பதே என் அனுமானம். வாழ்க்கை நாம் நினைத்தவாறா செல்கிறது? வாழ்வைச் சொல்லும் நாவலும் நினைத்தபடி இந்தக் கட்டுப்பாட்டில் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கவேண்டும்? வாழ்வில்  என்றோ ஒரு நாள் நடந்ததற்கும், இன்று நடப்பதற்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்று பார்த்தால்தானே இருப்பதுபோல் இருக்கிறது. தொடர்பு இல்லையெனப் பார்த்தாலும் அப்படித்தான் இருக்கப் போகிறது. எப்படிப் பார்த்தாலும், குறைந்தபட்ச பாத்திரங்களை எடுத்துக்கொண்டு அபத்தமான வாழ்வைச் சித்தரிப்பதில் அதுவும் பகிரங்கமாக கூச்சமில்லாமல் விவரிப்பதில் ‘ஸீரோ டிகிரி’ வெற்றி பெற்றிருக்கிறது.

2022-ற்கான விஷ்ணுபுரம் விருது பெறும் எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களை வாழ்த்துகிறேன். அவரிடம், இனி நான் அவரது எழுத்துக்களை வாசித்தவனாக அணுக முடியும். விவாதிக்க முடியும்.

ஆஸ்டின் சௌந்தர்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2022 10:31

பகிரங்க சித்தரிப்பு, ஸீரோ டிகிரி-ஆஸ்டின் சௌந்தர்

முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் வெளியேறிச் சென்றவனாக, எனது ஆன்டெனாவை தமிழ்நாட்டை நோக்கித் திருப்பி வைக்க, நவீனத் தமிழ் இலக்கியத்தில் எனக்கு மூன்று மும்மூர்த்திகள் தெரிந்தார்கள் –ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் சாரு நிவேதிதா. இதில் யார் சிவன், யார் விஷ்ணு, யார் பிரம்மன் என்ற வாதத்திற்கு செல்லவில்லை. ஒவ்வொருவரது பங்கும் முக்கியம் என்றுதான் இலக்கிய வாசகனாக நான் பார்த்தேன். படைப்புகளை படித்ததன் மூலம் எஸ். ராமகிருஷ்ணனையும் ஜெயமோகனையும், கண்டடைந்தேன், அல்லது அவர்கள்பால் ஈர்க்கப்பட்டேன்.

ஒரு காணொளியைப் பார்த்ததன் மூலம் சாரு நிவேதிதாவைக் கண்டடைந்தேன். அவரது தோற்றத்தாலும் (எழுத்தாளர்களில் இப்படி ஒரு ஸ்டைலான ஆளா?), வெளிப்படையான பேச்சாலும் ஈர்க்கப்பட்டேன். நான் பெரிதும் போற்றும் அசோகமித்தரனை அவரும் பாராட்டி சீராட்டுவதையும், உலக இலக்கியங்கள் பற்றி அவர் பேசுவதையும் கேட்டு அவரது ரசிகனாகவும் ஆனேன். அவரது கட்டுரைகளை , குறிப்பாக அவரது தளத்தில் வாசித்திருக்கிறேன். ஆழமாக அதிகம் அவர் படைப்புகளை வாசித்திராததால், அவருக்கு கடிதம் எழுதி தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளவில்லை.

‘ஸீரோ டிகிரி’ நாவல் எனது வாசிக்கவேண்டிய நூல்களில் பல வருடங்களாக இருந்தது.  நான், எப்பொழுதும் ஒரு எழுத்தாளனை நானாக வாசித்து ஒரு அவதானிப்பை ஏற்படுத்திக்கொளும் வரை அவரை தொடர்பு கொள்வதில்லை. இந்த வருடத்திற்கான விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் விருது சாரு நிவேதிதாவிற்கு என்று அறிவித்த பிறகு, அவரது நூல்களை அமேசானில் வாங்குவதற்காக பார்த்தவன், ‘ஸீரோ டிகிரி’ ஆங்கிலப் பதிப்பின் முதல் சில பக்கங்களை வாசித்தேன். பெண் வாசகியை அவர் விழித்து நீ இதைச் செய்துகொண்டிருக்கலாம். அதைச் செய்துகொண்டிருக்கலாம் என அவர் சொன்ன ஒவ்வொன்றும் உண்மையாக வெளிப்படையாக இருந்தது. ஆங்கிலத்தில்தான் வாசித்தேன் என்றாலும், அதன் தீவிரத்தால், இரண்டு முறை வாசித்தேன். Transgression, பின் நவீனத்துவம் என்ற இலக்கியக் கோட்பாடுகள் , பயிற்சிகள் என எதுவும் யோசிக்காமல் என்னால் நாவலினுள் இயல்பாக நுழைய முடிந்தது.

‘ஸீரோ டிகிரி’ நாவலில் 4-ம் அத்தியாயத்தில், கதைசொல்லி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வதே, என்னுடைய விமர்சனமாக / வாசிப்பனுபவமாக முதலில் வைக்கிறேன்.

இந்நாவலில், குறிப்பிடப்பட்டிருக்கும், லத்தீன் அமெரிக்க நாவல்களைப் படிப்பது அவசியம் என்று கருதுகிறாயா?

இல்லை. ( இந்த நாவலைப் புரிந்துகொள்வதற்காக வேண்டியதில்லை)

ஆம்  (இலக்கிய வாசகனாக வேண்டும் என்றால் சொல்லலாம்).

இந்த நாவல் தமிழ் நாவல்களில் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என நம்புகிறாயா?

ஆம்.

(ஜெயமோகன் சொல்வது செவ்விலக்கியம் வாசிக்கும்பொழுது ஒரு  நிறைவு வரும்.  நவீன இலக்கியம் தொந்தரவு செய்யும். இந்த நாவல் சரியான தொந்தரவு செய்கிறது. அப்புறம் என்ன?)

இந்நாவலை எழுதியவன் தண்டிக்கப்படவேண்டுமா?

இல்லை (இந்தக் கேள்வி எனக்கு அபத்தமாகப் படுகிறது)

இந்த நாவலில் ஒரிஜானலிட்டியை  நீ காணமுடிகிறதா ?

ஆம்.

(பால் கறக்கும் பெண்ணையும் குறிப்பிடுகிறீர்கள், தோழியுடன் புணர்ச்சியில் இருப்பவளையும் குறிப்பிட்டு என் நூலை வாசிக்கலாம் என்று எல்லோரையும் சம நிலையில் பார்க்கிறீர்கள். பதினெட்டு நிமிடங்களில் பதினெட்டு இடங்களில் குண்டு வெடித்திருக்கிறது. பதினெட்டு பேர் சாவு என்று அரசுத் தரப்பிலும், நூற்றியெட்டுபேர் என்று எதிர்க்கட்சிகள் சார்பிலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது   என்று அரசியல் நியாயங்களை சொல்கிறீர்கள். கடல் ஆமை தொண்ணூறு முட்டையிட்டாலும் கடலில் சேர்வது என்னவோ பதினெட்டுதான் என்ற நிதர்சனத்தையும் சித்தரிக்கிறீர்கள். அவந்திகாவின் டி.என்.சி. அனுபவங்களை வாசிக்கும்பொழுது என் உடம்பெல்லாம் இரத்தம். நீங்கள் எழுத்தாளன் எனும் பித்து நிலையில் இல்லாமல் இதையெல்லாம் எப்படி எழுதமுடியும்?)

மஸாக் மற்றும் மார்க்கி தெ ஸாத் இவர்களை வாசிக்காமல் இந்த நாவலை வாசிக்க வேண்டாம் என்கிறான் முனியாண்டி.

ஒத்துக்கொள்கிறாயா?

இல்லை (இதை வாசித்துவிட்டுக்கூட அவர்களை வாசிக்கலாம் இல்லையா?)

***

நல்ல சிறுகதை /  நாவல் வாசித்து முடித்தபிறகு தரிசனம் கிடைக்கலாம். அதில் வரும் பாத்திரங்கள் மனதில் அழிந்துவிடா ஓவியங்களாக (தொந்தரவாக ?) நின்றுவிடலாம். ஜெயமோகனது தேவகிச் சித்தியின் டைரியின் தேவகி, அசோகமித்தரனின் தண்ணீர் நாவலின் ஜமுனா,  எஸ். ராமகிருஷ்ணனின்,‘உனக்கு முப்பது வயதாகிறது’ சுகந்தி, இவர்களுடன் ‘ஸீரோ டிகிரி’ நாவலில் வரும் அவந்திகாவும், ஆர்த்தியும் எனக்கு அறிமுகமான பெண்களின் நிரையில் நிற்கிறார்கள். ஆர்த்தியின் கதை என்று ஸீரோ டிகிரியில் வர, அவளின் முன்கதையை அறிந்துகொள்ள, ‘எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்’  நாவலையும் வாங்கி வாசித்தேன்.

கி.ரா அவர்கள், நாட்டுப்புற பாலியல் கதைகள் அடங்கிய ‘வயதுவந்தவர்களுக்கு மட்டும்’ தொகுப்பு நூலில் , பாலியல் கதைகள் படிப்பதால் யாரும் கெட்டுப்போகமாட்டார்கள். அது சிரிப்பைத்தான் வரவைக்கும் என்று சொல்லியிருப்பார். ஸீரோ டிகிரி நாவலில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு செத்த மூளையின் கதையும் கதைக்குள் வரும் கதைகளும் அவ்வகைக் கதைகள்.

கி.பி.ஒ.நூ.செ.மூ-யின் நண்பன் குள்ளச் சித்தன் வைத்திருந்த ஓலை இப்படி இருந்தது என்று இரண்டு பக்கங்களுக்கு ஒற்று எழுத்துக்களை மேலே புள்ளியில்லாமல் எழுதியிருக்கிறார், சாரு. பழுப்பு நிறப் பக்கங்களில், உ.வே. சாமிநாத ஐயரைப் பற்றிய கட்டுரையில், “உ.வே.சா எழுதிய மகா வைத்தியநாதர் என்ற நூலை உஸ்மானியா பல்கலைக்கழக நூலகத்திலிருந்து எடுத்துக் கொடுத்தார் என் நண்பர் ஒருவர். அதிலும் புத்தகம் நெடுகிலும் ஒற்றெழுத்துக்களுக்குப் புள்ளியே காணோம்.” என்று கூறியிருப்பார். சாரு, அந்த அனுபவத்தை இங்கே வாசகனுக்கு கொடுக்கிறார்.

நாவல் வெளிவந்த சமயம் இருபத்து நான்கு வருடங்களுக்கு முன்னால் வாசித்திருந்தாலும், இந்த நாவலை இப்பொழுதுபோலவே வாசித்திருப்பேன் எனவே தோன்றுகிறது. வாழ்க்கையையும் நல்ல நாவல்களையும் ஒன்றென பார்க்கும் வாசகனாக நான் சொல்வது இதுதான். தெரியாமல் மலத்தில் கால் வைக்கும் அருவருப்பையல்ல கையூன்றீ குப்புற விழுந்துவிட்ட அனுபவத்தை, வாழ்வில் சந்தித்தவர்களும், அல்லது அப்படி விழுந்தவர்களை தானாக நினைத்து (empathy) துக்கப்படுபவர்களும் இந்த நாவலை எந்தவிதமான அயர்ச்சியுமில்லாமல் வாசிக்கமுடியும் என்பதே என் அனுமானம். வாழ்க்கை நாம் நினைத்தவாறா செல்கிறது? வாழ்வைச் சொல்லும் நாவலும் நினைத்தபடி இந்தக் கட்டுப்பாட்டில் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கவேண்டும்? வாழ்வில்  என்றோ ஒரு நாள் நடந்ததற்கும், இன்று நடப்பதற்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்று பார்த்தால்தானே இருப்பதுபோல் இருக்கிறது. தொடர்பு இல்லையெனப் பார்த்தாலும் அப்படித்தான் இருக்கப் போகிறது. எப்படிப் பார்த்தாலும், குறைந்தபட்ச பாத்திரங்களை எடுத்துக்கொண்டு அபத்தமான வாழ்வைச் சித்தரிப்பதில் அதுவும் பகிரங்கமாக கூச்சமில்லாமல் விவரிப்பதில் ‘ஸீரோ டிகிரி’ வெற்றி பெற்றிருக்கிறது.

2022-ற்கான விஷ்ணுபுரம் விருது பெறும் எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களை வாழ்த்துகிறேன். அவரிடம், இனி நான் அவரது எழுத்துக்களை வாசித்தவனாக அணுக முடியும். விவாதிக்க முடியும்.

ஆஸ்டின் சௌந்தர்

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2022 10:31

மலேசியா உரைகள்

மலேசியாவில் பிரம்மவித்யாரண்யத்தில் ஜார்ஜ்டவுன் லிட்ஃபெஸ்ட் – வல்லினம் சார்பில் டிசம்பர் 26ல் நடைபெற்ற தமிழ் விக்கி ஆய்வுக்கூட்டத்தில் ஆற்றப்பட்ட உரைகள்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2022 10:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.