Jeyamohan's Blog, page 663

December 13, 2022

நினைவுப்பெட்டகம், கமலதேவியின் கதைகள் – ரம்யா

[image error]ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடன் தொடர்புறுத்திக் கொள்ளும் கருவியாக அன்பு உள்ளது. அன்பு எவ்வகையிலும் இவ்வுலகம் கருதும் கூறுள்ள மனிதனாக ஒருவனை ஆக்குவதில்லை. அது மனிதர்களின் மேலான கரிசனத்தையும், பித்தையுமே பிரதானமாகக் கை கொண்டது. கூறுள்ள மனிதனாக வாழ்வதற்கான ஒன்றை இந்த சமூகம் அதுவல்லாதவனுக்காக தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறது. நேர்த்தியாக வாழ்வது, வெற்றிகரமாக வாழ்வது, மனிதர்களைப் பயன்படுத்திக் கொள்வது, உரிய காலத்தில் எல்லாம் சரிவர வர நடப்பது என்ற வரையறைகளை நோக்கி அப்படியெல்லாம் வாழத் தெரியாத மனிதனின் கேள்விகளாக கமலதேவியின் பெரும்பான்மைக் கதைகள் அமைந்துள்ளன

கமலதேவியின் புனைவுலகத்தில் புறத்தை விடவும் அகப்பிரபஞ்சம் விசாலமானது. நிதர்சன வாழ்க்கையிலும் கூட அவருடைய புறவுலகம் எல்லைக்குட்பட்டது தான். அந்த எல்லையை தன் புனைவுகளில் அக உரையாடல்களால் விரித்து விரித்து விசாலமாக்கிக் கொண்டே செல்கிறார். உறவுகளுக்கிடையேயான பிணைப்புகளில் எழும் உறவுச் சிக்கல்களில் எழும் கேள்விகளை உரையாடல்கள் வழியாக இக்கதைகளில் அகவிசாரணை செய்கிறார். சிக்கல்களுக்காகத் தான் நம்பும் தீர்வுகளை அவ்வுரையாடலிலேயே படிமமாக வைக்கிறார். வாசித்தபின் அப்படிமங்களே மனதில் எஞ்சுகின்றன. மீட்டெடுத்துப் பார்க்கையில் அப்படிமங்களே அவரின் கதைகளுக்கான வாசலாக அமைந்துள்ளது. இரு கேள்விகளுக்கான ஊசலாட்டமாக உரையாடல்கள் நிகழ்ந்தாலும் தான் தீர்க்கமாக நம்புபவற்றைத் தவிர்த்து பெரும்பாலும் இரண்டின்மையையே ஊசலாட்டத்திற்கான தீர்வாக முன்வைக்கிறார். கமலதேவியின் கதைகளில் மனதிற்கு நெருக்கமான கதைகளாக நெடுஞ்சாலைப்பறவை, சொல் பேச்சு கேட்காத கரங்கள், மித்ரா, புதையல் போன்ற கதைகளைச் சொல்லலாம்.

“மறக்க முடியாத ஒன்ன துறக்கறது எப்படி? முழுசா மறந்தா அது அல்சைமர் மாதிரி ஏதோ ஒன்னு… எதில இருந்தும் கொஞ்சம் தள்ளி இருக்கத்தான் மனுசங்களால முடியும்” என்ற வரிகள் நெடுஞ்சாலைப்பறவை சிறுகதையில் ஜென்ஸியின் வரிகளாக வருகிறது. அறுபது வயதில் ஆசிரியராகப் பணியாற்றியபின் ஓய்வு பெறும் ஜென்ஸியின் ஒட்டு மொத்த வாழ்க்கையே துறத்தலுக்கும், தள்ளி நிற்பதற்குமான ஊசலாட்டமாக அமைந்துள்ளது. தன் வாழ்நாளின் கண்டடைதலாக அவள் சொல்லும் இவ்வரிகள் துறந்து சென்றவர்களும், தள்ளி நின்றவர்களுக்கும், உலகியலில் புழங்குபவர்களுக்கும் கூட பொருத்தமானதாக உள்ளது. அப்படியாக உறவுகளிலிருந்து தள்ளி நின்று ஆசிரியப்பணி செய்து ஓய்வுபெற்றுச் செல்லும் ஒருவர் தான் இனி அமையுப்போகும் கூட்டைப் பற்றிய சிந்தனையில் சாலையோரத்து மரத்தின் உச்சிக் கிளையில் ஒரு கூட்டைப் பார்க்கிறார். “எந்தப்பறவையினுடையது!? இந்த இடம் எந்தவகையில் அதற்கு பாதுகாப்பானது?“ என்ற கேள்வியை தன்னுள் எழுப்புகிறார். “வானத்துப் பறவைகளைக் கூர்ந்து பாருங்கள். அவை நம்மைப் போல் விதைப்பதும் இல்லை, அறுவடை செய்வதும் இல்லை. ஏன், களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதும் இல்லை.” என்ற பைபிளின் வரிகள் நினைவு படுத்தும் இடமது. ஓரளவுக்கு மட்டுமே மனிதனால் பாதுகாப்பைப் பற்றி ஊகித்து செயலாற்ற முடியும். அதற்கு அப்பால் அது இயற்கையை, பெருங்கருணையையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது.

“ஒத்த ஊத்தும் அத்து போன கேணிய பாத்ததில்ல. எங்கயாச்சும் கண்ணுக்கு அகப்படாமயாச்சும் இருக்கும். உள்ளுக்குள்ளவே ஊறி காயற ஊத்தாவது இல்லாத கேணி பின்னால எந்த மழைக்கும் சுரக்காதும்பாங்க” என்ற ’சொல் பேச்சு கேட்காத கரங்கள்’ சிறுகதையில் வரும் வரி ஆழமானது. உள்ளிருந்து ஊறி வராத உணர்வுகளை ஒரு போதும் செயற்கையாச் செய்து விட முடியாது. அன்பு சிறு தொடுகைகளால் தன்னைத் தெரிவிக்கிறது. தொடுதலின் மேலான, ஐயம் பரவியிருக்கும் காலகட்டத்தில் அதன் மேலான கேள்விகளை எழுப்பும் மனப்போராட்டமாக கதை சொல்லிச் செல்கிறது.

புதையல் சிறுகதை காதல் முறிந்த ஆசிரியருக்கும், அவளின் மாணவிக்கும் இடையேயான இணக்கமான உறவு இழைந்தோடும் கதை. “காற்று கடந்து சென்றது. எப்போதும் சூழ்ந்திருக்கும் காற்று கடந்து சென்றுகொண்டேயிருப்பதும் தானே. கடந்து… கடந்து…கடந்து… அந்த மரத்தை, அதிலுறங்கும் புள்ளை, அடியில் நின்று இருட்டைத் துழாவும் நாய்களை, கடந்து சென்று புல்வெளியின் தலை கோதி கடந்து கொண்டேயிருந்தது. எதனாலும் தடுக்கவோ, தவிர்க்கவோ இயலாத காற்று. அது கடந்து செல்வதையும் ஒன்றும் செய்வதற்கில்லை” எனக் காதலும், பிரிவும் உலகில் நடந்து கொண்டே இருக்கும் ஒன்றென அந்த ஆசிரியர் ஏற்றுக் கொள்ளும் மன நிலையை காட்சியாக சித்தரித்திருக்கிறார்.

“ஏண்டா ருசியில்லாம போற… அது அப்படியே உன்ன இழுத்துக்கிட்டு போய் சலிப்பில நோயில் தள்ளிரும்…” என்ற மழை இரவு சிறுகதையில் வரும் சிவகாமி அம்மாளின் இந்த வரியே அவளின் மகனின் இறப்பிற்கான காரணத்தைச் சொல்கிறது. இழந்த மகனின் இறப்பைத் தாழாமல் அதை ஏற்றுக் கொள்ளாமல், இல்லாத அவனுடன் உரையாடும் தாயின் அன்பையும், இயலாமையையும் சொல்லும் கதை.

“மனுசங்கள அசஸ் பண்ற விட்டுட்டு யூஸ் பண்ணிக்கப்பாரு. சும்மா காரணமில்லாத செண்டிமெண்டல் இடியட்டா இருக்காத. கனவு இல்ல லைஃப். எதுவும் வந்து குதிக்காது” என மித்ரா சிறுகதையில் வரும் வரியே ஒட்டுமொத்த சிறுகதையின் மையமாக உள்ளது. இரு தோழிகளில் ஒருவர் மனிதர்களை நுகர்வுப் பொருளாக மட்டுமே பார்ப்பதும் இன்னொருவர் அப்படியல்லாமல் இருப்பதும் என வரும் கதையில் இருவருக்குமிடையேயான உரையாடல் வழியாக அவர்களின் வாழ்க்கையின் தற்போதைய நிலையை விவரிக்கிறார். அன்பினால் மட்டுமே மனிதனை அணுகுவதால் கிடைப்பது கண்களுக்கு புலப்படாத அக நிறைவு மட்டுமே. அத்தகைய தருணங்களை காட்சியாக மட்டுமே வைத்து “அஸஸ் பண்ணாத. யூஸ் பண்ணு” என்பவர்களின் முன் காண்பிக்கிறார்.

நண்பர்களுக்கிடையேயான கடித உரையாடலாக நிகழும் “இப்படிக்கு” சிறுகதையில் திருமணத்திற்குப் பின்னான உறவு முறிவில் ஆணாதிக்கம் என்றே ஆண்களை நோக்கி சுட்டும் தொனி வந்துவிட்ட காலத்தில் அதற்கு இணையாக அவனின் மனப்பதிவை சொல்லும் குரலாக சிறுகதை அமைந்துள்ளது. “நேத்து மெரினா மணலில் அமர்ந்து கடல் பார்க்கையில் தழும்பிக் கிட்டேயிருக்கு சிந்தவே இல்லனு தோணுச்சி. ஒருவேளை அது இங்க சிந்த பாத்துதுன்னு தோணுச்சு. இல்ல அது மீறாத வரைதான் நமக்கு வாழ்க்கைன்னு நினைச்சேன். அதே நேரம் கட்டட்றதுன்னு ஒன்னு இங்க இல்லவே இல்லன்னு தோணுது.” எனச் சொல்லும் ஆணின் நிலையை புரிந்து கொள்ள முடிகிறது. அதுவாகக் கனிந்து பெய்யும் மழைக்காக மட்டுமே உறவில் தான் காத்திருப்பதாகச் சொல்லும் வரியையும் இணைத்து ஆண்–பெண் உறவுச் சிக்கலுக்கான தீர்வாகப் பார்க்கலாம். ஒவ்வொன்றையும் அதனதன் இயல்பிலேயே நேசித்தால் மட்டுமே உறவு பூரணத்துவம் அடைகிறது. நேசிப்பதற்காகவென ஒன்றை மாற்றுவது என்பது ”சில்வர் அயோடைடு மழை” பெய்யச் செய்வது போலத்தான் என்ற சிந்தனையைத் தீர்வாக கதை முன்வைக்கிறது.

வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவனின் மன உளைச்சலை நண்பர்கள் அருகிருந்து போக்குவதான கதையாக சூழலில் மிதக்கும் பூ சிறுகதை சொல்கிறது. “கிணற்றில் ஊற்றுமுகம் வரை வற்றிய நீரை இறைப்பதைபோல நீண்டதொலைவு சென்றும், உள் நோக்கி  முகர்ந்தும், வெளியிழுக்கும் வேகத்தில் சிந்தியும் ஏதோவொரு பற்றுக்கயிறால் நினைவை இறைத்துக் கொண்டிருக்கும் ராமரை சொல்லாலும் சிரிப்பாலும், தொடுகையாலும் சூழ்ந்திருந்தான் பாலா.” என ராமரைப் பற்றியிருக்கும் நண்பர்களின் அன்பை வெளிக்காட்டுகிறார். “எந்நேரத்திலயும் முழுசா சிதறிடக்கூடாது. கற்பனையாவாவது எதையாவது பிடிச்சிக்கிடனும்” என அதன் மையத்தீர்வாக வைத்து அவன் மீட்சியைப் பற்றிய கதையைச் சொல்கிறார்.

கமலதேவியின் கதையுலகம் எளிமையானது. கதையுலகம் பெரும்பாலும் பள்ளி, ஆசியர்பயிற்சிக்கல்லூரி, கல்லூரி, வீடு, கோயில் போன்ற இடங்களாகவே உள்ளன. சக்யை, ராதேயன் போன்ற சில கதைகளில் புராண காலத்தில் சென்று கதைக்களத்தை அமைத்திருக்கிறார். எளிமையான உணர்வு, உறவுச்சிக்கல்களைப் பேசுபவராக இருக்கிறார். யாவற்றுக்குமான தீர்வை ஒட்டுமொத்த உரையாடல் வழி, அதில் எழும் ஒரு படிமம், ஒரு வரியின் வழி சொல்லிச் செல்கிறார். ”ஏன் எழுதுகிறீர்கள்?” என்ற கேள்விக்கு “மறதியின் மேலான ஓர் இனம்புரியா பயம் உள்ளது. எல்லாத்தையும் மறந்துவிடுவேனோ என்ற பயம் உள்ளது. எனக்காக எழுதி வைத்துக் கொள்கிறேன்” என்கிறார். இதிலிருந்து கமலதேவியின் புனைவுகத்திற்கான சாவி கிடைக்கிறது. தன் வாழ்க்கை, தான் சந்தித்த மனிதர்கள், உறவுகள், அக உலகம் என அவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய, தனக்குத்தானே நினைவூட்டிக் கொள்ளக்கூடியவைகளை தன் புனைவுலகமாக உருவாக்குகிறார். அதன் உள் நுழைந்து நாம் தரிசிப்பது அவரின் நினைவுப்பெட்டகத்தைத்தான்.

ரம்யா.

விஷ்ணுபுரம் விருந்தினர்

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 13, 2022 10:30

December 12, 2022

கதே இன்ஸ்டிடியூட் உரையாடல்

உலகம் முழுக்க ஜெர்மானிய கலை- கலாச்சார அமைப்பு கதே இன்ஸ்டிடியூட் என்னும் பெயரில் நிகழ்கிறது. சென்னையில் அதன் பெயர் மாக்ஸ்முல்லர் பவன். அங்கே தொடர்ச்சியாக இலக்கியச் சந்திப்புகள் முன்னொரு காலத்தில் நடைபெற்று வந்தன. நான் அதில் கலந்துகொண்டதில்லை.

இந்த ஆண்டு எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸி எழுதிய சித்தார்த்தா நாவல் வெளிவந்த 100 ஆவது ஆண்டு. அதை உலகமெங்கும் கொண்டாடுகிறது ஜெர்மானிய அரசு. அதன் ஒரு பகுதியாக கதே இன்ஸ்டிடியூர் ஓர் உரையாடல் அரங்கை சென்னையில் ஏற்பாடு செய்திருந்தது. ஜெர்மானிய எழுத்தாளர் கிறிஸ்டோபர் க்ளோபிள்  (Christopher Kloeble) என் மொழிபெயர்ப்பாளர் பிரியம்வதா மூவரும் உரையாடுவது. உடன் கோதே இன்ஸ்டிடியூட்டின் இயக்குநர் காதரினா கோர்ஜென் (Katharina Görgen) வழிநடத்துவார்.

தொடர்ச்சியாக இப்போது இலக்கிய விழாக்களில் இருந்து இலக்கிய விழாக்களுக்குச் சென்றுகொண்டிருக்கிறேன்.பெங்களூர் இலக்கியவிழாவில் இருந்து திரும்பி இரண்டுநாட்கள் கழித்து இந்த விழா. சென்னைக்கு ரயிலில் வந்திறங்கினேன். சென்னை குளிர்ந்திருந்தது. சென்னையில் ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு ஆட்கள் நடமாடுவதைக் கண்டேன்.

காலையில் ஒரு சினிமா சந்திப்புக்குச் சென்றேன். நடிகை ஷோபனாவை அவருடைய பிரம்மாண்டமான இல்லத்தில் சந்தித்தேன். ஒரு திரைப்படம் உருவாக்குவது பற்றி பேசி முன்வரைவை உருவாக்கினோம். நடனமங்கையர் பேசும்போது கவனிப்பது ஒரு நல்ல அனுபவம். அவர்களின் அசைவுகளில் எப்போதும் கொஞ்சம் நடனம் இருந்துகொண்டிருக்கும்.

மாலை ரத்தசாட்சி இயக்குநர் ரஃபீக் இஸ்மாயீல் வந்திருந்தார். ரஃபீக் கலைப்பட உருவாக்கத்தில் நம்பிக்கையுடன் நாற்பது வயது வரை உழைத்தவர். அதன்பொருட்டு வாழ்க்கையைச் செலவிட்டவர் என்றே சொல்லவேண்டும். இங்கே கலைப்பட உருவாக்கத்தின் எல்லைகளை அவரே முட்டி மோதி கண்டடைந்தார். இங்கே மாற்று சினிமா அல்லது சுதந்திர சினிமா அல்லது கலைப்படம் இயக்குநரின் சொந்தக் காசில் எடுக்கப்படவேண்டும். அதற்கு அரைக்கோடி பட்ஜெட் கிடைத்தால் அதிகம்.

ஆனால் அது ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பல கீழைநாடுகளிலும் அரசு உதவி, அல்லது பல்வேறு கலாச்சார அமைப்புகளின் நிதியுதவியுடன் எடுக்கப்பட்ட படங்களுடன் போட்டியிடவேண்டும். ஒளிப்பதிவு படத்தொகுப்பு தரத்தாலேயே நம் கலைப்படங்கள் கவனிக்கப்படாமலாகிவிடும்.

மலையாளப் படங்கள், உருது மற்றும் இந்திப்படங்களுக்கு இன்று கொஞ்சம் நிதியுதவி உள்ளது. அரசு நல்ல திரைப்படங்களை ஆதரிக்கும் போக்கு இந்தியாவில் அறவே நின்றுவிட்டது. இந்திய திரைவிழாக்களே வணிகமயமாகி, வணிகசினிமாக்களையும் நட்சத்திரங்களையும் கொண்டாடிக்கொண்டிருக்கின்றன. ரஃபீக் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறார். வணிகசினிமா வெற்றி வழியாக கலைப்படம் எடுக்கும் நிதியை பெற்றுவிடமுடியுமென நம்புகிறார். ரத்தசாட்சி அவ்வகையில் அவரது தொடக்கம்.

பிரியம்வதாவும் கணவர் விஜய் ரங்கநாதனும் வந்து என்னை அழைத்துச் சென்றனர். கதே இன்ஸ்டிடியூட்டுக்கு ஐந்து மணிக்குச் சென்று சேர்ந்தேன். அங்கே நம் நண்பர்கள் பலர் வந்திருந்தனர். நிலைய இயக்குநருடனும் ஜெர்மானிய எழுத்தாளருடனும் கொஞ்சநேரம் உரையாடினேன். காதரின்னா திரைப்படவியலில் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர். கிறிஸ்டோபர் திரைப்படங்களுக்கு எழுதுகிறார். அதன் வணிகச்சூழலில் இணைந்து பணியாற்றுவது எவ்வளவு கடினம் என்று சொல்லிக்கொண்டிருந்தார். நான் எளிதாக என் நண்பர்களான பாலா, வசந்தபாலன் வழியாக உள்ளே நுழைந்தேன். நான்கடவுள், அங்காடித்தெரு இரண்டுமே வெற்றிப்படங்களாக ஆனமையால் எங்கும் தேக்கம் நிகழவில்லை.

உரையாடல் ஆங்கிலத்தில் ஒன்றரை மணிநேரம் நடைபெற்றது. ஹெர்மன் ஹெஸ்ஸியில் தொடங்கி இலக்கியத்திற்கு ஒரு நிலத்தின் தேவை, அன்னிய நிலங்களைச் சார்ந்து எழுத முடியுமா என்ற வினாக்களுடன் முன்னகர்ந்தது. சிறப்பான உரையாடலாக அமைந்தது. அதன்பின் உரையாடல்கள், புகைப்படம் எடுத்தல்கள். என் நூல் Stories Of the True பிரதிகளில் கையெழுத்திட்டு கொடுத்தேன். நான் தமிழிலக்கியத்தில் ஹெஸ்ஸியின் இடம், அவருடைய நூல்களின் மொழியாக்கம் ஆகியவற்றைப் பற்றிச் சொன்னேன்.

அமெரிக்காவில் இருந்து நண்பர் ரஜினிகாந்த் வந்திருந்தார். அவரும், செல்வேந்திரனும், வழக்கறிஞர் செந்திலும், வழக்கறிஞர் சக்தி கிருஷ்ணனும் அறைக்கு வந்திருந்தார்கள்.  இரவு பதினொன்று மணிவரை பேசிக்கொண்டிருந்தோம். இனி நேராக அடுத்த இலக்கிய நிகழ்வு. திருவனந்தபுரம் திரைவிழாவில் டி.பி.ராஜீவன் பற்றி 13 ஆம் தேதி பேசுகிறேன். 18 அன்று விஷ்ணுபுரம் விழா. அப்படியே பல இலக்கிய விழாக்கள். நான் ஆங்கிலம் பேசி உலகுசுற்றும் ‘பையர்’ ஆக மாறிவிடுவேன் போலிருக்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 12, 2022 10:35

சாங்கோபாங்கர்

[image error]சாங்கோபாங்கம் என்றால் ச அங்கம் உப அங்கம் என்று பிரித்து, உடலுடன் இணைந்தவையும், எல்லா உறுப்புகளும் என பொருள்படும். அதாவது முழுதுடலும். சாங்கோபாங்கமாக விழுந்து கும்பிடுதல்.

அப்பெயரில் ஒரு தமிழறிஞர் இருந்தார். அவர் தமிழரல்ல, கோவாவைச் சேர்ந்தவர். தமிழுக்கும் தமிழருக்கும் பணிபுரிந்த கிறிஸ்தவ மதபோதகர்களில் ஒருவர். ஜாக்கோமே கொன்சால்வெஸ் என்னும் இயற்பெயர் கொண்டவர்

சாங்கோபாங்கர்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 12, 2022 10:34

சாரு நிவேதிதா ஏன் இப்படி  எழுதுகிறார் ?- அனீஷ் கிருஷ்ணன் நாயர்

(அ)

சில நாட்கள் முன்பு “பிரியாணி” என்ற மலையாள திரைப்படத்தை பார்த்தேன். The Great Indian kitchen அளவிற்கு ஊடக வெளிச்சத்தை பெறாத திரைப்படம். திரைப்படத்தின் கருப்பொருள் மற்றும் கதாபாத்திரங்களின் பின்னணி ஆகியவை நமது அறிவு ஜீவிகள் பலருக்கும் ஒவ்வாமையை தருவதாக இருந்ததால் இத்திரைப்படத்தை குறித்து சமூக ஊடகங்களிலும் பெரிதாக உரையாடல் எதுவும் நிகழவில்லை. எனது வட்டத்தில் உள்ள ஹிந்துத்துவ நண்பர் ஒருவரது பதிவினால் கவனம் பெற்று இத்திரைப்படத்தை பார்த்தேன். படத்தின் உச்சக்கட்ட காட்சி கதாநாயகி பிரியாணி விருந்து தயார் செய்யும் காட்சி தான். அக்காட்சியை பார்த்ததும் இதே போன்ற ஒன்றை எங்கோ வாசித்திருக்கிறோமே என்ற எண்ணம் எழுந்தது. சில நிமிடங்களில் பிடிபட்டு விட்டது. சாரு நிவேதிதாவின் ஜீரோ டிகிரீ நாவலில் இதே போன்ற ஒரு பகுதி வரும், பிரியாணி திரைப்படத்தின் இயக்குனரான சஜின் பாபு ஜீரோ டிகிரீ நாவலை வாசித்திருப்பாரா என்ற கேள்வி எழுந்தது. கேரள அறிவு ஜீவி வட்டங்களில் சாருவின் படைப்புகள் கொண்டாடப்படுகின்றன. சஜின் பாபுவின் முந்தைய திரைப்படங்கள் குறித்து வாசித்த போது ஒரு விஷயம் தெளிவானது. சாரு வழியாகவோ அல்லது வேறு வகையிலோ Transgressive கூறுகளை சஜின் உள்வாங்கியிருக்கிறார். இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் விருதுகளை பெற்ற பிரியாணி திரைப்படம் பலான படமாக கருதப்பட்டு அதன் துண்டுகள் இணையும் எங்கும் சிதறி இருக்கிறது. சாருவின் நாவல்கள் மீது வைக்கப்படும் அதே விமர்சனம் தான் இந்த இயக்குநர் மீதும் பலரால் வைக்கப்படுகிறது. இருவரது படைப்புகள் மீதும் ஒரே வகையான குற்றச்சாட்டுகள்; பாலியல் என்ற ஒரே வார்த்தையில் அவற்றை சுருக்குதல் நடக்கிறது. ஆனால் சஜினின் தரப்பை உடனடியாக புரிந்து கொள்ளக் கூடிய அளவு விரிந்த பார்வை உடைய திறனாய்வாளர்கள் பலர் உண்டு. சாரு எழுதத்தொடங்கிய காலக்கட்டத்தில் அத்தகைய பார்வை தமிழ் இலக்கிய சூழலில் மிக அபூர்வமான விஷயமாகவே இருந்தது. இப்போதும் பெரிய அளவு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியாது.

(ஆ)

சாரு நிவேதிதாவின் படைப்புகளை குறித்து உரையாடும் போதும் பின் நவீனத்துவம் Transgressive எழுத்து போன்ற சொற்களை பயன்படுத்தியே விளக்க வேண்டி வருகிறது. இன்னும் சொல்லப்போனால் பல திறனாய்வாளர்கள் மேற்கண்ட பதப்பிரயோகங்களைக் கொண்டு தான் சாருவின் நாவல்களை விளக்க மட்டும் அல்ல நியாயப்படுத்தவும் முயல்கிறார்கள். அவற்றின் இலக்கிய தன்மையை நிறுவுவதற்கு கூட ஐரோப்பிய மாதிரிகளை சுட்டிக்காட்ட வேண்டி இருக்கிறது. சாருவும் இந்த வகைப்படுத்துதல்களை ஆதரிக்கிறார். ஆனால் இத்தகைய பன்னாட்டு / கோட்பாட்டு நிலைப்புள்ளிகள் எதுவும் இல்லாமலே சாருவின் நாவல்களுக்கு நியாயம் கற்பிக்க முடியும் என்பது எனது நம்பிக்கை. அதற்கான முயற்சியாகவே இக்கட்டுரையை எழுதுகிறேன்.

(இ)

சாரு நிவேதிதாவின் எக்ஸிஸ்டன்ஷியலிஸமும் ஃபேன்சி பனியனும் நாவல் 1989 ஆம் வருடம் வெளிவந்தது. பெருநகரத்தில் தனிப்பட்ட பிரச்சனைகளாலும், தத்துவ சிக்கல்களாலும்  அலைகழிக்கப்படும் வந்தேறி இளைஞனது நினைவு குறிப்புகள் என்று ஒரு தளத்தில் சொல்லலாம். நான் சில வகை நாவல்களை குமாஸ்தா நாவல்கள் என்று விவரிப்பதுண்டு. மேலை நாட்டுக்கல்வி அறிவு பெற்று தலைநகர்களில் குமாஸ்தாக்களாக பணிபுரியும் இந்திய இளைஞர்களுக்கு ஏற்படும் குழப்பங்கள் தனி வகையை சார்ந்தது. ஆதவனது நாவல்களிலும் இக் கூறுகள் உள்ளன. இத்தகைய இளைஞர்களது இருத்தலிய சிக்கல்களை இந்நாவல்கள் காட்சிப்படுத்துகின்றன. எக்ஸிஸ்டன்ஷியலிஸம்… நாவலின்  குறிப்பிடத்தக்க தன்மை என்னவென்றால் கதைச் சொல்லி இரு வேறு  தன்மைகளை தன்னுள் கொண்டிருக்கிறான் என்பது தான், அவன் பூரணமாக அந்நகர ஜோதியில் கலக்கவுமில்லை. அதே நேரம் அந்நகரின் அறிவு சூழல் மீதான மயக்கம் அவனுக்கு தெளியவும் இல்லை. ஆதவனிடம் காணப்படும் கசப்போ அல்லது கரிச்சான் குஞ்சிடம் (அவர்கள் ஒரு மாதிரியானவர்கள் குறு நாவல்) காணப்படும் வெறுப்பேர மட்டும் அல்ல இக்கதைச்சொல்லியிடம் எஞ்சுவது.  அதனையும் தாண்டிய எவ்விதத்திலும் யாருடனும் தன்னை பொருத்திக்கொள்ள முடியாத, இரட்டை வேடங்களை எதிர்கொண்டு எதிர்கொண்டு மனம் வெதும்பிய ஒரு தன்மையை நாம் சூர்யாவிடம் காணலாம். ஒரு பக்கம் நாகூர், குடும்பம் எல்லாவற்றையும் தொலைத்து தலை முழுகி விட்டு டெல்லியில் ஹிந்துஸ்தானி இசை, தூதரக விருந்துக்கள் என்று வாழவும் முடியவில்லை. இன்னொரு பக்கம் டெல்லியை உதறித்தள்ளி விட்டு காவிரி க்ரையில் அக்கடாவென்று இருக்கவும் முடியவில்லை. இவ்வுலகிலம் இருக்கும் போது அவ்வுலகின் நினைவாலும் அவ்வுலகில் இருக்கும் போது இவ்வுலகின் நினைவாலும் சூர்யா அலைக்கழிக்கப்படுகிறான். டெல்லியோ நாகூரோ சக மனிதர்களது வேடங்கள் மட்டுமே மாறாதவையாக இருக்கின்றன. இந்த வேடதாரிகள் மீது ஏற்படும் அருவருப்பே கதைச் சொல்லியின் கச்சாப்பொருள். கதைச்சொல்லி தன்னை ஆதர்ச நாயகனாக முன்வைக்கவில்லை. தன்னிடம் இருக்கும் குறைகளை அவன் உணர்ந்தே இருக்கிறான், அவனுடைய பிரச்சனை என்னவென்றால் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை உதாரண நாயான்  யாரும் காணக்கிடைக்கவில்லை என்பது தான்.

இந்த நாவலில் சாரு நிவேதிதா ஆவணப்படுத்தியிருக்கும் / சொல்லியிருக்கும் ஒரு சில விஷயங்கள் வியப்பானவை. சூர்யாவின் ஊரில் நிகழ்ந்த ஆர் எஸ் எஸ் செயல்பாடுகளை குறித்த சில வரிகள் ஒரு உதாரணம், எனக்கு தெரிந்து ஆர்எஸ்எஸ் அமைப்பு முதல் முறையாக ஒரு நாவலில் வருவது இங்கு தான், இத்தனைக்கும் மண்டைக்காடு பிரச்சனைகள் நடந்து சில வருடங்களான பிறகு எழுதப்பட்ட நாவல் இது. ஐக்கிய அமெரிக்க அரசு/ கல்வி நிறுவனங்களிடம் இருந்து இடதுசாரி போக்கிற்கு எதிராக இலக்கியம் படைப்பதற்கு மற்றும்உதவித்தொகையை கூசாமல் பெற்றுக்கொண்டவர்கள் கூட ஆர் எஸ் எஸ் குறித்து மூச்சு விட்டதில்லை. ஆனால் சாரு இதைக் குறித்து எல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை. சாருவின் படைப்புகள் அனைத்திலும் இந்த சொல்லாதன சொல்ல துணிவதை பார்க்கலாம்.

(ஈ)

சாருவின் அடுத்த நாவலான ஜீரோ டிகிரீ இந்திய இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க படைப்பு. எண்ணற்ற பரிசோதனை முயற்சிகளை தன்னுள் கொண்ட நாவல் என்பதைத் தாண்டி எந்த கோட்பாட்டு அடவுகளும் தெரியாத வாசகனுக்கும் வாசிக்கத்தக்கதாக இருக்கும் படைப்பு. இப்பிரதியை எதிர்கொள்ளும் வாசகன் இதனை ஒரு புதிர் பெட்டியாகவும் கருதலாம்; அல்லது ஒரு விந்தை விளையாட்டாகவும் கருதலாம். மரபான கதை சொல்லலை எதிர்பார்க்கும் வாசகன் ஏமாந்து விடுவான் என்று எண்ணுவதற்கு எந்த அவசியமும் இல்லை. வாசித்தல் என்பது வாசகனும் எழுத்தாளனும் இணைந்து நிகழ்த்தும் நிகழ்கலை தான். பழங்குடி கதை சொல்லிகள் கூட இடை இடையே நிறுத்தி கதை கேட்பவர்களை பங்கு பெற வைப்பது உண்டு. காத்திரமான பிரதியை வாசிக்கும் வாசகனும் இடை இடையே நிறுத்தி கதையின் போக்கை குறித்தோ அதற்கும் தன் வாழ்க்கைக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள்/ வேற்றுமைகள் குறித்தும் சிந்திப்பது உண்டு. ஜீரோ டிகிரியில் சாரு இதனை இன்னும் வெளிப்படையான ஒரு விளையாட்டாக மாற்றுகிறார். சில இடங்களில் குவி மையத்தை வாசகனை நோக்கி திருப்புகிறார். சில்லு சில்லாக சிதறி கிடக்கும் ஆடி அல்ல இந்த படைப்பு. மாறாக நுட்பமாக திட்டமிடப்பட்டு வாசகனை சீண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வினோத கோலம் இது. “There is a method in his madness” என்ற வரி தான் நினைவிற்கு வருகிறது.

இந்த நாவலிலும் மத்யமரின் எலி வாழ்க்கையுடனோ மேல்தட்டு வர்க்கத்தின் பூனை வாழ்க்கையுடனோ ஒத்திசைய முடியாத இந்த இருமைகள் இடையில் சிக்கி மூச்சு திணரும் சிதைந்த மனதின் இருப்பை காண முடியும், இந்த நாவல் போகிற போக்கில் தொட்டு செல்லும் விஷயங்கள் ஏராளம். அவற்றை மட்டும் கொண்டே செறிவான உரையாடல்களை நிகழ்த்த முடியும். பொன்பரப்பி நிகழ்வு ஒரு உதாரணம். பகடிக்குள் பொதிந்து இருக்கும் வெடிகுண்டு திரிகள் எண்ணற்றவை. பொன்பரப்பி நிகழ்வை குறித்து எதுவும் தெரியாத வாசகனுக்கு கூட  விவாதப்பொருள் என்னவென்று புரியும். “லால் சலாம்” அத்தியாயம்  குறிப்பிடத்தக்க மற்றொரு பகுதி. அரசு, அதிகாரம், அதிகாரிகள், கருத்து சுதந்திரம் ஆகியவற்றை குறித்து விவாதித்திக் கொண்டே இருக்கிறோம். அவ்வாறு விவாதிப்பவர்கள் இந்த பகுதியை வாசிக்க வேண்டும்.

சாரு நிவேதிதா ஜீரோ டிகிரியை எழுதிய காலத்தில் கருத்திற்காக கம்பி எண்ண வேண்டிய துர்பாக்கியம் எல்லாம் எழுத்தாளர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் மட்டுமே விதிக்கபட்ட விஷயமாக இருந்தது, இன்று சமூக ஊடகத்தில் இருக்கும் எந்த குடிமகனும் இந்த தீக்கனவில் இருந்து தப்ப முடியாது. அதனால் அதிகாரத்தின் நகர்வுகளை படம் பிடித்துக்காட்டும் இந்த அத்தியாயம் தவிர்க்க முடியாததாகுகிறது. ஒரு புறம் புரட்சி வேட்கை, இன்னொரு பக்கம் நடுக்கம் என்னும் அவஸ்தை நாவல் முழுக்க நக்கல் செய்யப்படுகிறது. 31 ஆம் அத்தியாயத்தில் வரும் வரிகள் // அவன் பயந்தாங்கொள்ளி. அவன் சொல்வது போல அவனது எழுத்துக்கள் எதுவும் தடை செய்யப்பட போவதில்லை…. உண்மையில் அவன் பஸ் கண்டக்டர்களுக்கும் போலீஸ்காரர்களுக்கும் பெண் எழுத்தாளர்களுக்கும் சிறு பத்திரிக்கைகாரர்களுக்கும்… பிச்சைக்காரர்களுக்கும் ரயில் தண்டவாளங்களுக்கும் வாகனங்களுக்கும் பயப்படுபவன்” இவ்வாறாக நாவல் முழுவதும் முரணனான இரட்டைகள் வருகின்றன.

சாரு நிவேதிதா இந்த நாவலில் பயன்படுத்தியிருக்கும் உத்திகளுக்கு மேற்குலகில் தான் முன்மாதிரிகளை தேட வேண்டும் என்றில்லை. அவற்றில் பலவற்றை அவரது முன்னோடிகளே பயன்படுத்தியுள்ளனர். உதாரணத்திற்கு கதையின் இடையில் மாந்த்ரீக குறிப்பை தருவதை பாரதியார் செய்திருக்கிறார். ஜயந்த பட்டரின் வடமொழி நாடகமான ஆகமடம்பனத்தில் சூத்ரதாரன் (இயக்குநர்) அந்த நாடக ஆசிரியரையே நக்கல் செய்யும் பகுதி உண்டு. இவன் எழுதிய நாடகத்தை எல்லாம் அரங்கேற்ற வேண்டியிருக்கிறதே என்று புலம்புவதாக ஒரு காட்சி இருக்கும். சாரு நிவேதிதா தனது கதையாடலுக்கான கருவிகளை மேல் நாட்டு படைப்புகளில் கண்டடைந்திருக்கலாம். ஆனால் அவை எல்லாம் இம்மண்ணில் இருந்தவையே. இம்மண்ணிற்கு அந்தியமானவை அல்ல. பின்னாட்களில் இதனை உணர்ந்த சாரு பழுப்பு நிற பக்கங்கள் நூலில் ஒரு எல்லை வரையிலும் இதனை ஏற்றுக்கொண்டு ஆவணப்படுத்தினார்.

(உ)

சாரு நிவேதிதாவின் நாவல்களை வசிக்காதவர்கள் எதிலிருந்து தொடங்கலாம் என்று கேட்டால் அவர்களுக்கு நான் ராசலீலாவை பரிந்துரைப்பது வழக்கம். சாதாரணனுக்கு அதிகார மையங்களின்  வீணை வாசிப்பையும் தங்களது பிராண வேதனையும் புரிந்து கொள்ள ஃபூகோவின் உதவி தேவை இராது. அவர்களது வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடி ஒன்றை அவர்கள் முன்பு வைத்தாலே போதும். சட்டென்று புரிந்து கொள்வார்கள். (கோட்பாடு சடுகுடுகள் எல்லாம் கல்வியாளர்களுக்குத்தான் தேவை). ராசலீலை அத்தகைய ஒரு கண்ணாடி. வகையான வகையான வதைகளை குறித்தும் வதை முகாம்களை குறித்தும் சாரு நிவேதிதாவின் நாவல்களில் ஏராளமான சித்தரிப்புகள் உண்டு. அவற்றுள் ஆகச்சிறந்தது இதில் வரும் கீழ் நடுத்தர வர்க்க ஊழியனின் வாழ்க்கை சித்தரிப்பு தான். நரகத்தில் இருக்கிறோம் என்பதையே உணராத நரக வாசிகள்; அல்லது நரகத்திலாவது இடம் கிடைத்ததே என்று ஆறுதலடையும் நரகவாசிகள். இவர்களுடன் வாழ்வது தான் பிரக்ஞை உடையவனுக்கு மிகப்பெரிய சோர்வைத்தரும் விஷயமாக இருக்கும்.

வேதாந்த கதை ஒன்று உண்டு. ஒருவனை புலி துரத்தியதால் கண் மண் தெரியாமல் ஓடி பாழுங் கிணற்றில் விழப்போனான். சட்டென்று விழுது ஒன்றை பிடித்து தொங்கினான். புலி கிணற்றை சுற்றி வருகிறது. பிடித்திருக்கும் விழுதை ஒரு குரங்கு உலுக்குகிறது. ஒரு பாம்பு ஊர்ந்து வந்து கொண்டு இருக்கிறது . கீழே விழுந்தால் அதோ கதி. இத்தனைக்கும் இடையே மரத்தில் இருந்த தேன் கூட்டில் இருந்து ஒரு துளி தேன் நாவில் வந்து விழுகிறது. பிராண அவஸ்தைக்கு இடையேயும் அந்த ருசியை அம்மனிதன் அனுபவிக்கிறான். அதே போலத்தான் ராசலீலையில் வரும் சில கதாபாத்திரங்களின் வாழ்வும் போகிறது. வதை முகாமில் பத்து வருடங்கள் வசித்தால் அங்குள்ள வாழ்விலும் இன்பம் காண முடியும். இத்தகைய வாழ்க்கையை உயிர் வாழ்வதற்கான ஆதார விசையின் வெற்றி என்று சொல்வதா அல்லது மாபெரும் வீழ்ச்சி என்று சொல்வதா என்பது தான் கேள்வி. பல நேரங்களில் அந்த ஒரு சொட்டு தேன் தான் பிடியை விடாமல் இருப்பதற்கான ஊக்கத்தை தருகிறது, வாழ்க்கைக்கு ஏதோ ஒரு பொருளை தருகிறது என்பதையும் மறுக்க முடியாது.

(ஊ)

காமரூப கதைகள் நாவலை 108 குறுங்கதைகளின் தொகுப்பு எனலாம். இத்தகைய வடிவை யுவன் பயன்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு கதையும் தன்னளவில் முழுமையானது. அதே நேரத்தில் இக்கதைகளை இணைத்து ஒரே பெரும்படைப்பாகவும் பார்க்கலாம். கதைகளை இணைக்கும் சரடாக ஒரு கதாபாத்திரமோ  ஒன்றிற்கு மேற்பட்ட கதாபாத்திரங்களோ இருப்பார்கள். இந்த நாவல் இணைய தொடராக வெளிவந்தது. இதனை இன்டர்நெட் நாவல் என்கிறார் சாரு நிவேதிதா. இந்த நாவலின் Hypertextuality காரணமாக அதாவது ஒன்றைத் தொட்டு இன்னொன்றாக ஒரு சுட்டியில் இருந்து இன்னொரு சுட்டிக்கு போவது போல இருப்பது காரணமாகவும் இதனை சாரு அவ்வாறு அழைத்திருக்கலாம். ஆனால் hypertextuality digital humanities எல்லாம் தெரியாத இந்திய வாசகன் கூட இந்த படைப்பை எளிதாக வாசிக்க முடியும்; ரசிக்க முடியும், தன்னளவில் முழுமையான ஒரு கதையை சொல்லும் தனித்தனி அத்தியாயங்கள், அதே நேரம் ஒட்டு மொத்தமாக ஒரு மற்றொரு வகையில் படைப்பாக விளங்கும் பாணி மிகத் தொன்மையானது. வேதாள பஞ்சாசத் அதன் முன்னோடி. விக்கிரமாதித்தன் கதைகள் என்ற பெயரில் நாம் அதை தமிழில் வாசித்திருப்போம். பிறகு இதே வடிவம் 1001 அரேபிய இரவுகளிலும் பயன்படுத்தப்பட்டது. க்ஷண சித்தம் க்ஷண பித்தம் என்பது இயல்பாகி போன ஒரு சமூகத்தின்/காலகட்டத்தின் ஆவணம் என இவற்றை கூறலாம்.

(எ)

சாரு தனது நாவல்களில் ஆகச்சிறந்ததாக எக்ஸைலை சொல்வதுண்டு. இந்நாவல் இரண்டாவது (திருத்தப்பட்ட) பதிப்பு புதிய எக்சைல் என்னும்  பெயரில் வெளி வந்தது. குருவாயூர் கேசவனில் தொடங்கி ப்ளாக்கியில் முடியும் இந்நாவல் ஒரு வித ஆவணமும் கூட. அபுனைவாக ஆவணப்படுத்த முடியாது பல விஷயங்கள் புனைவில் வாழும், மாட்டுக்கறியை தின்ன முடியாமல் குப்பையில் மொத்தமாக கொட்டும் மாற்று கலாச்சார பூர்ஷவாக்கள் மாட்டுகறி விருந்து நடத்துவது தொடங்கி ஏராளமான வேடிக்கை வினோதங்கள் நிறைந்த படைப்பு இது.

இந்த நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் ஊழலுக்கு எதிரான பெரிய எழுச்சி இந்தியாவில் ஏற்பட்டது. ப்ரும்மாண்ட ஊழல்களை குறித்த செய்திகள் இந்தியாவையே உலுக்கியது. பல வழக்குகள் தொடுக்கப்பட்டன (அவற்றில் பலதும் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியாத காரணத்தால் தள்ளுபடி ஆயின / குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்). ஊழல்கள் நடந்தனவோ இல்லையோ, இச்செய்திகளை ஒட்டி ஏற்பட்ட மக்கள் எழுச்சியும், நிகழ்ந்த போராட்டங்கள் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானவை. இலக்கியத்தை அரசியல் கருவியாக காண்பதாகவும் எழுத்து என்பதே ஒரு அரசியல் செயல்பாடு தான் என்று கூறுபவர்கள் பலருடைய படைப்புலகில் மேலே குறிப்பிட்ட நிகழ்வுகளின் தாக்கம் ஏதும் இல்லை. எனக்கு தெரிந்து இந்த கொந்தளிப்புகளுக்கு தமிழ் எழுத்துலகில் எதிர்வினையாற்றியது இருவர் தான

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 12, 2022 10:34

அகரமுதல்வனின் பான் கீ மூனின் றுவாண்டா தொகுப்பை முன்வைத்து

மக்களின் வாழ்க்கைத் துயரங்களை சொல்லும் கதைகளை இதற்கு முன் படித்திருந்த போதும், படுகொலைகளுக்கு நடுவே மீண்டு வந்து அகரமுதல்வன் எழுதும் கதைகள், படிக்கிறவாசகனை சல்லி சல்லியாய் துளைத்தெடுத்து விடுகின்றன. ஈழத்து மக்களின் நிலை குறித்துநாம் டிவியிலும், தினசரிகளிலும், இங்கிருக்கும் அரசியல்வாதிகளின் உணர்ச்சி மிக்க பேச்சுக்களின் வழியும் நாம் அறிந்தவற்றையெல்லாம் எண்ணும்போது நம்மை பார்த்து நமக்கே சிரிக்கத் தோன்றுகிறது. எழுத்தாளர் கதை வழியே நம்மை அந்நிலத்துக்கே அழைத்து செல்கிறார். பிணக்குவியலின் நடுவே, பதுங்கு குழிகளுக்குள்ளே, இடிந்து போன மருத்துவமனைகளை, கைவிடப்பட்ட ஊர்களை இடம்பெயர்வே வாழ்வாகி மக்களாக நாமும் மாறிப் போகக்கூடும்.

அவரது நாவல் மரம் கதையில் வரும் நாயகன் தன் காதலியின் கண்களை கன்னிவெடியோடு ஒப்பிடுகிறான். இந்த நிலத்தில் இடம்பெயரும் கால்கள் எங்க இளைப்பாறும், சாவைத் தவிரபோன்ற வலிகள். இனி நாவல் பழங்களை பார்க்கும் போதெல்லாம் ஆரணிதான் நினைவில் வருவாள். வீழ்ந்தவர்களின் புரவி கதையை படிப்பது விரல்களில் நகங்களை பிடுங்கி, கொஞ்சம் கொஞ்சம் சித்ரவதை செய்து கொள்வதற்கு சமம். படித்து கடந்து வருவது நேரம் எடுக்கும். அந்த துயரமே வாழ்வாகி போன பெண்களில் ஒருவர் தன் இரண்டு பிள்ளைகளை வெளியே அனுப்பிவிட்டு செஞ்சிலுவை சங்கத்தினை சேர்ந்தவர்களிடம் தன் பாவாடை அவிழ்த்து காண்பிப்பாள், வெள்ளை நூலால் தைக்கப்பட்டிருக்கும் அவள் யோனி. அங்குள்ள பெண்கள் எல்லோரும் வெள்ளை நூலையும் ஊசியையும் தேடிக் கொண்டிருப்பார்கள். இவ்வளவு துயரை ஏன் எழுத வேண்டும் என்று எண்ணுகையில் உடல் சிதைக்கப்பட்டு இறந்து போன எனக்காகத்தான், கற்பழிக்கப்பட்டு ரத்த பெருக்கில் இறந்து போன பதினான்கு வயதான சிறுமியாகிய எனக்காகத்தான் என்று எழுதுகிறார்.

அந்த சின்னப் பிள்ளைகளை காப்பாற்றுங்கோ என்ற சிவகலையின் முனகல் உலகெங்கும் போர்களினாலும், கலவரங்களினாலும் கற்பழிக்கப்படும் சிறுமிகளுக்காகவும், பெண்களுக்காகவும் ஒலித்து கொண்டே இருக்கிறது. தீபாவளி கதை முழுவதும் வலி நிரம்பி கிடக்கிறது. சோதனையிடும் ராணுவக்காரனை, நிறைமாத கர்ப்பிணியின் பாவாடைக்குள் கைவிடுகிற இவனுகதான் பாஞ்சாலிக்கு கண்ணீர் விட்டவன். இந்த வரிகளை படித்து கடந்து வரவே முடிவதில்லை. சந்திராவின் பிரசவ வலியை கூட கறுப்பு அடிமையின் துயரிரைச்சல் என்கிறார். கதிர்காமன் தன் மனைவியை பற்றி சொல்கையில் இவள்தான் இந்திராவின் தாய் இவளை சுட்டதும் ஆர்மிக்காரன் என்று சொல்லி அழுவார்.

இவர் கதையை படிப்பவர்கள் போர் நிலத்தில் வீரனாக, குவிந்த பிணங்களின் நடுவே பிணமாக, உடல் சிதைந்து உயிருக்கு போராடுபவராகவும் மாறிப் போவார்கள். இவன் என்கிறகதை இயக்கத்தின் சட்டங்களையும், குற்றங்களுககான தண்டனையையும் பற்றி சொல்கிறது. இறக்கும் நிலையிலும் தன் நிலத்தை வீட்டு நீங்காத பாட்டியும் கதையில் வந்து போகிறார்கள். போரில் குண்டு மழை கதையெங்கும் உவமை மழை. எல்லோருக்கும் ஆச்சியின் கதைகள் உண்டு. இங்கிருக்கும் பாட்டிகள் விவசாய வேலையிலோ, டிவியிலோ, ஊர்க்கதைகளை பேசிக்கொண்டு இருப்பார். இவர்கள் ஆச்சியை விட்டு, தங்கள் தெய்வங்களை விட்டு, தங்கள் மூதாதையர்களின் தொல் பொருளையெல்லாம் விட்டு புலம்பெயர்ந்து பெயரற்ற அகதிகளாய் வாழ்ந்து மடிகின்றனர். பான் கீ முனின் றுவாண்டா என்றதலைப்பு உலக போர் குற்றங்களுக்கெதிரான கண்டனம். இவ்வளவு துயரை ஏன் எழுத வேண்டும். முடிந்து போன போரை பற்றி ஏன் எழுதுகிறார் என்று தோன்றினாலும், இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கும், இனி நடக்க போகும் போர்களில் அல்லல்படும் மக்களுக்காகவும் இந்த கதைகள்போல.

பான் கீ மூனின் றுவாண்டா கதைகள் முழுவதுமே பெண் பாத்திரங்களாலே எடுத்துச் செல்லப்படுகிறது. பெயர் கதையில் வரும் பெண் பாத்திரம் ஈழத்தில் தன்னுடைய கணவனைஇழந்து பின்பு புலம்பெயர்ந்து சென்னையில் வாழும் போது நண்பர் ஒருவனால் அறிமுகமான வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் வாழ்வாள். வெளிநாட்டு இருந்து வந்தவன் திருமணம்செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி வெளிநாடு சென்று விடுவான். பின்பு இளம் அகதியுடன்காமத்தை தீர்த்துக் கொள்வாள். அகதியானவள் யாரையும் எந்த குறையும் சொல்வதில்லை அவளுக்கு துயரங்கள் இருந்த போதும் மிச்ச வாழ்வை எதிர்கொண்டு வாழ்வாள். கள்ளு என்கிற கதையில் வரக்கூடிய பெண் தன்னுடைய குடிகார கணவனின் எல்லா கொடுமைகளையும் பொறுத்துக் கொள்வாள். ஆனால் அவள் மகனை கணவன் தூக்கிஎறிகையில் தன்னுடைய கணவனை அடித்து கீழே தள்ளுவாள். இன்னொரு கதாபாத்திரமான தெய்வானை தன் உறவு வைத்திருந்த இருவரும் விட்டுச் சென்ற போதும் தன்னுடைய மகளுக்காய் வாழ்வாள் ஊரே வேசி என்று திட்டிய போதும் கண்டி வீரன் என்பவன் தன்னோடு உறவு வைத்துள்ளதாக வதந்தி பரப்பிக் கொண்டிருக்கையில் அதனை இயக்கத்தாரிடம் முறையிட்டு அவனுக்கு தண்டனை வாங்கி கொடுப்பாள். இரண்டு பேருடன்படுத்த நான் வேசை என்றால் என்னோடு படுத்த ஆம்பளைகள் யாரென்று இயக்கத்தாரிடம் கேட்பாள்.

கரை சேராத மகள் என்ற கதையில் வரும் பூரணி என்ற கதாபாத்திரமும் , தன் கணவர்விட்டுச் சென்ற போதும் தன் மகளுக்காக வாழ்ந்து கொண்டிருப்பாள். தன் உடல்நிலைமோசம் அடைந்த பின்னும் மருத்துவமனையில் தன்னுடைய மகள் எரிகணைகள் விழுந்து இரண்டு கால்களையும் ஒரு கண்ணையும் இழக்க நேரிட்ட போதும் தன் உயிர் உள்ளவரைதன்னுடைய மகளுக்காக வாழ்ந்து தீர்ப்பாள். இவரின் எல்லா கதைகளிலும் பெண் பாத்திரங்களே வலிமை மிக்க பனையாகவும் கருகிய பனையாகவும் இருக்கிறார்கள். ஆண் கதாபாத்திரங்கள் அவர்களுக்கு துணையாகவே வந்து செல்கிறார்கள். மாபெரும் தாயின் எஞ்சி நிற்கும் மகனுக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை அவர் கரங்களை இறுகப் பற்றி கொள்வதை தவிர.

நண்பர் மலர்கண்ணன் தூண்டுதலே இந்த வாசிப்பனுவத்தை எழுத தூண்டியது இதற்கு முன் இதுபோல் முயன்றதில்லை.

நன்றி

விக்னேஷ்

திண்டுக்கல்

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 12, 2022 10:30

அம்மாவின் பேனா – ஒரு கடிதம்

அம்மாவின் பேனா – கடிதம்

மதிப்பிற்குரிய ஜெ,

தினமும் காலையில் கல்லூரி பேருந்தில் பயணிக்கும் போது தங்கள் கட்டுரைகளைப் படிப்பது வழக்கம். அதில் ஏதாவது ஒன்று அன்று முழுவதும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.

 கவிஞர் சதாரா மாலதியை பற்றி அவரது தாய் எழுதிய கட்டுரையை தங்களது “அம்மாவின் பேனா ” மூலம் அறிந்தவுடன் உடனடியாக அதனை படிக்க வேண்டும் என ஆர்வம் மேலிட்டது.

திண்ணையில் தேடினால் கிடைக்கவில்லை. அது என்னவாக இருக்கும், அந்த வயது முதிர்ந்த தாய் அப்படி என்ன எழுதி இருப்பார் என என்னுள் எழுந்த எண்ண ஓட்டங்களுக்கு அளவேயில்லை.

பிறகு ஒருவழியாக அந்த பக்கத்தை தேடி கண்டுபிடித்துவிட்டேன்.

https://old.thinnai.com/?p=20904021

என்னவென்று சொல்வது. அந்த தாயின் சோகத்தை,  இழப்பை எத்தனை அற்புதமாக வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

“என் மாலாவின் பல வித உருவங்களை நினைத்து நினைத்து மருகுகிறேன். சின்ன வயதில், ஐந்து வயதிருக்கும். சிவப்பு பைஜாமாவும், மாம்பழக் கலர் குர்தாவும் போட்டு, இரட்டைப் பின்னல் போட்டு போட்டோ எடுத்தோம். மிக அழகாயிருப்பாள். அது ப்ளாக் அண்ட் வொயிட் போட்டோதான். எந்த உடை போட்டாலும் பொம்மை போலிருப்பாள். அவள் பெரியவளானபோது மயில் கழுத்துக் கலரில் பாவாடை சொக்காய், நைலான் தாவணி மிகமிக அழகாயிருக்கும். போட்டோ இல்லாவிட்டாலும் என்கண் முன்னே இன்னமும் அந்த உடையில் நிற்கிறாள்.”

“இன்னமும் நம்ப முடியவில்லை. போனில் பேசுவாள் என்றும் வெளியூருக்குப் போயிருப்பதாகவும், கடிதம் எழுதுவாள் என்றும் மனம் ஏமாற்றுகிறது.

எழுது, எழுதாவிட்டால் எழுத வராது என்பாள். இப்படி அவளைப்பற்றிப் புலம்பி எழுத வைத்துவிட்டாள்.

சுற்றிக் கொண்டே இரு, படுத்துவிட்டால் எழுந்திருக்க முடியாது என்று என்னைச் சொல்வாள். அவள் எழாமலேயே போய்விட்டாள்.”

பெற்றோரை இழந்து துயருறும் மக்களுக்கு இப்படி மகளை இழந்த தாயின் துயரம் நிச்சயமாக மிகந்த வருத்ததையே அளிக்கும். இன்றைய நாள் சதாரா மாலதியின் அம்மாவிற்கே சமர்ப்பணம்.

நன்றியுடன்,

பாபி முருகேசன்.

7.12.2022

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 12, 2022 10:30

December 11, 2022

திருவனந்தபுரம் திரைவிழாவில்…

திருவனந்தபுரம் திரைவிழாவில் மறைந்த மலையாளக் கவிஞர் டி.பி.ராஜீவன் நினைவாக அவர் எழுதி வெளிவந்த பாலேரி மாணிக்கம் – ஒரு பாதிரா கொலபாதகத்தின்றே கதா என்னும் படம் 13 டிசம்பரில் வெளியிடப்படுகிறது. அதையொட்டி மாலை 6 மணிக்கு டி.பி.ராஜீவன் நினைவுச் சிற்றுரை ஒன்றை நான் நிகழ்த்துகிறேன்.

இடம் கலாபவன் திரையரங்கம்

நாள் 13 டிசம்பர் 2022

நேரம் மாலை 6 மணி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2022 22:34

திருவனந்தபுரம் திரைவிழாவில்…

திருவனந்தபுரம் திரைவிழாவில் மறைந்த மலையாளக் கவிஞர் டி.பி.ராஜீவன் நினைவாக அவர் எழுதி வெளிவந்த பாலேரி மாணிக்கம் – ஒரு பாதிரா கொலபாதகத்தின்றே கதா என்னும் படம் 13 டிசம்பரில் வெளியிடப்படுகிறது. அதையொட்டி மாலை 6 மணிக்கு டி.பி.ராஜீவன் நினைவுச் சிற்றுரை ஒன்றை நான் நிகழ்த்துகிறேன்.

இடம் கலாபவன் திரையரங்கம்

நாள் 13 டிசம்பர் 2022

நேரம் மாலை 6 மணி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2022 22:34

பெங்களூர் இலக்கிய விழா

சர்வதேச , தேசிய இலக்கிய விழாக்களில் ஒரு பை கொடுப்பார்கள். அதில் பலவகை பரிசுப்பொருட்கள், நிகழ்ச்சி நிரல், சில புத்தகங்கள், குறிப்புதவி நோட்டுப்புத்தகம் இருக்கும். தோளில் போட்டுக்கொள்ள ஒரு அடையாள அட்டையும் உண்டு.

கே.ஜி.சங்கரப்பிள்ளை இப்படி இலக்கிய விழாவில் இருந்து இலக்கிய விழாவுக்கு சென்றுகொண்டிருப்பவர்களைப் பற்றி ‘சஞ்சிகள்’ என்னும் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். சஞ்சி என்றால் பை. சம்ஸ்கிருதத்தில் தொகுப்பு என்றும் பொருளுண்டு. சச்சிதானந்தனை சச்சி என அழைப்பார்கள். அதையொட்டிய பகடி என்றும் சொல்லப்படுவதுண்டு.

நானும் சஞ்சி ஆகிவிட்டேனா என்னும் ஐயத்தை 2 ஆம் தேதி பெங்களூருக்குக் கிளம்பும்போது அடைந்தேன். மலேசியா ஜார்ஜ்டவுன் இலக்கியவிழாவிலிருந்து வந்து பழைய சட்டைகளை வெளியே எடுத்துப்போட்டு புதிய சட்டைகளை உள்ளே வைத்து பெட்டியை மூடி கிளம்பிவிட்டேன், ரயிலில்தான் நல்ல தூக்கம்.

3 டிசம்பர் 2022 காலையில் பெங்களூர் வாசகர் நாகராஜன் ரயில்நிலையத்துக்கு வந்திருந்தார். நிகழ்ச்சி நடக்கும் அசோக் ஓட்டலிலேயே மாடியில் அறை. ஏற்கனவே அங்கே பிரியம்வதா வந்திருந்தார். அவரே எனக்கு அறை பெற்றுத் தர உதவினார்.

அசோக் முழுக்க ஒரே வைணவக்கூட்டம். பெரும்பாலும் வெள்ளையர். ஏதோ வைணவ அமைப்பின் கருத்தரங்கு நிகழ்ந்துகொண்டிருந்தது – இஸ்கான் நிகழ்ச்சி அல்ல. இன்னொன்று. தாவணி கட்டிய வெள்ளைக்காரப் பெண்கள் அழகாக இருந்தனர். எக்கணமும் ‘ஓய் மாமோய், கஞ்சி கொண்டாந்திருக்கேன்’ என்று கூவிவிடுவார்கள் போல தோன்றியது.

முதல்நாள் எனக்கு நிகழ்ச்சி ஏதுமில்லை. பார்க்கவந்திருந்த பெங்களூர் நண்பர்களுடன் ஆங்காங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். சில பிறமொழி எழுத்தாளர்களைப் பார்த்தேன். விவேக் ஷன்பேக் என் நண்பர். அவரைச் சந்தித்தது மகிழ்ச்சியான தருணம். அவர் கொங்கணி எழுத்தாளர்  தாமோதர் மௌஸோ (Damodar Mauzo) நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அரங்கில் பார்வையாளனாக இருந்தேன்.

வெவ்வேறு அரங்குகள். அவற்றை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக்கொள்வது கடினம். இத்தகைய பெருவிழாக்கள் அகன்று அகன்று கூர்மையற்றுவிடுகின்றன. சினிமாநடிகர்கள் மட்டுமல்ல சினிமா தயாரிப்பாளர்கள் சினிமா தயாரிப்பதன் சிக்கல்களைப் பேசும் ஓர் அரங்கும் இருந்தது ( வழக்கம்போல அரசு உதவி செய்யவேண்டும் என்ற கோரிக்கை) பெருங்கூட்டம் கிரிக்கெட் எழுத்தாளர்களின் அரங்குக்குத்தான்.

உதிரி உதிரியாக வெவ்வேறு அரங்குகளுக்குச் செவிகொடுத்தேன். மிகப்பொதுவான பேச்சுக்கள்தான் நிகழ்ந்து கொண்டிருந்தன. இப்போது நாளிதழ்களில் சாதாரணமாக அடிபடும்  ‘இலக்கியக் கைப்பிடிகள்’ ஆன அரசியல் -சமூகவியல் கருத்துக்கள். அவற்றைக்கொண்டே நம் இதழாளர்களால் இலக்கியத்தை பற்றவோ தூக்கவோ மதிப்பிடவோ முடியும்.  அழகியல், தனிப்பட்ட உணர்வுநிலைகள், உலக இலக்கிய மரபு உருவாக்கும் உளநிலைகள் ஆகிய மூன்றும் அவர்களுக்கு அன்னியமானவை.

Marxism, Feminism, Post-colonial, Oppression, Struggle, Resistance, Marginalized, decolonization, Oriental, Hegemony, Ideology, Social impact என சில சொற்களை எல்லா அரங்குகளிலும் கேட்க முடிந்தது. அவற்றைச் சொல்பவர்கள் அவற்றை அவ்வாறே ஒரு வாய்ப்பாடு போல வெவ்வேறு அரங்குகளில் சொல்லிச் சொல்லித் தேர்ந்தவர்கள். ஆகவே சரளமான ஊடக ஆங்கிலத்தில் அவற்றைச் சொன்னார்கள். இரண்டு ஆண்டுகளாக தீவிர இலக்கியம் வாசிக்கும் ஒருவருக்கு அவர்களிடமிருந்து தெரிந்துகொள்ள ஒன்றுமில்லை.

இலக்கியத்தின் முதன்மைக் கலைச்சொற்களே பலருக்கு தெரியவில்லை. ஒரு புகழ்பெற்ற கவிஞர் – கவிதைகளை தொகுப்பவர் modernism – modernity இரண்டுக்கும் வேறுபாடு தெரியாமல் பேசிக்கொண்டிருந்தார். அப்படிப்பட்ட கலைச்சொல் குளறுபடிகள் பெரும்பாலும் எல்லா உரைகளிலும் இருந்தன.

ஏனென்றால் மேடைகளில் தோன்றியவர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்தில், ஆங்கில நாளிதழ்களில், எழுதும் இதழாளர்கள். ஆகவே புகழ்பெற்றவர்கள். புத்தக மதிப்புரையாளர்கள் என்னும் வகையில் அவர்கள்மேல் அனைவருக்கும் அச்சம் கலந்த மதிப்பும் இருந்தது. ஆனால் இலக்கிய வாசிப்பு குறைவானவர்கள். பெரும்பாலும் சமகால புகழ்பெற்ற புனைவுகளையே வாசித்தவர்கள். நாளிதழ்களில் வரும் இலக்கிய அரட்டைகளையே இலக்கியக் கொள்கைகளை அறிந்துகொள்ளும் ஊடகமாகக் கொண்டவர்கள்.

இலக்கியவிவாதங்களில் தீவிரமான இலக்கிய விமர்சன வாசிப்பின் அடித்தளம் என்பது எந்த அளவுக்கு இன்றியமையாதது என்னும் எண்ணம் ஏற்பட்டது. அது இத்தகைய இலக்கியவிழாக்களில் எல்லாம் நான் உணர்வது. இந்திய ஆங்கில இலக்கியவாதிகள் மட்டுமல்ல இத்தகைய இலக்கிய விழாக்களுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து வரும் இலக்கியவாதிகளும் இதேபோல மேலோட்டமான இலக்கியப்பேச்சுகளையே அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.

தீவிரமான இலக்கியவாதிகள் இத்தகைய விழாக்களில் ஒரு விலக்கம் கொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன். பல்வேறு அமைப்புகளுடன் தொடர்புகொண்டு விழாக்கள் தோறும் சென்றுகொண்டே இருப்பவர்களே அதிகம் தென்படுகிறார்கள்.

அதிலும் அண்மைக்காலத்தில் இலக்கியவிழாக்கள் விரிவடையுந்தோறும் மையம் பொழுதுபோக்கு எழுத்து நோக்கிச் சென்று, அங்கிருந்து பயனுறு எழுத்து நோக்கிச் சென்று, அங்கிருந்து இன்று சினிமாநடிகர்கள் விளையாட்டு வீரர்கள் போன்ற பொது ஆளுமைகள் நோக்கி குவிவதாக ஆகிவிட்டிருக்கிறது. ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் நடிகர்களே நட்சத்திரங்கள், இந்திய ஆங்கில பல்ப் எழுத்தாளர்களான ‘செலிபிரிட்டி’க்கள்கூட இரண்டாமிடம்தான் என்று இலக்கிய நண்பர் சொன்னார்.

பெங்களூர் இலக்கிய விழாவுக்கு கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் இருந்து ஒரு மாணவர்குழு கல்லூரி செலவில் அனுப்பப்பட்டிருந்தது. அவர்கள் என்னை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நான் பொன்னியின் செல்வனுக்கு வசனம் எழுதியவன் என அறிந்திருந்தனர். மற்றபடி கோவை விஷ்ணுபுரம் நிகழ்ச்சி பற்றி எல்லாம் அவர்களுக்கு தெரியாது. அந்தக்கல்லூரி ஆசிரியர்களுக்கே ஜெயமோகன், விஷ்ணுபுரம், கோவை விழா பற்றியெல்லாம் எந்த அறிமுகமும் இல்லை என்று நண்பர் சொல்லி அறிந்திருக்கிறேன்.பெங்களூர் விழாவுக்கு இப்படி கூட்டம் வருவதே மேலே சொன்ன ‘பொது ஆளுமைகள்’ வழியாகத்தான்.

இந்த விழாவிலும் இந்தியச் சூழலில் தீவிர இலக்கியத்திற்கு எந்த அளவுக்கு இடமிருக்கிறதோ அதே விகிதாச்சாரத்தில்தான் இடமிருந்தது. ஆனால் இருந்தது என்பதே பெரிய விஷயம். சில அரங்குகள் சுவாரசியமானவை. புதிய இலக்கிய முகங்களை அறியத்தந்தவை. இந்தி எழுத்தாளர் அக்ஞெய்யின் வாழ்க்கைவரலாற்றை எழுதிய எழுத்தாளரின் பேச்சு கொஞ்சம் கேட்டேன். முக்கியமான நூல் என தோன்றியது.

தெலுங்கில் பிரசுரநிறுவனம் ஒன்றை நடத்தும் கீதா ராமசாமியை சந்தித்தேன். இடதுசாரி தீவிர இயக்கங்களில் பங்கெடுத்த போராளி. அதன்பொருட்டு இல்லத்தை துறந்து ஓடியவர். பின்னர் வெளியேறி கலாச்சாரச் செயல்பாட்டாளராக ஆனவர். அவருடைய சுயசரிதை Land, Guns, Caste, Woman: The Memoir of a Lapsed Revolutionary அண்மையில் மிகவும் கவனிக்கத்தக்க நூல்.

இரவு வரை அங்குமிங்குமாக அலைந்து அரங்குகளை கேட்டுவிட்டு அறைக்குச் சென்றேன். சென்றபின் ஒரு தமிழ் விக்கி பதிவு போட்டேன். அதன்பின் தூக்கம். காலையில் எட்டுமணிக்கு கீழே சென்று காலையுணவு. இலக்கியத் தொகுப்பாளரான கனிஷ்காவைச் சந்தித்தேன். பதிப்பாளர் ரவி டிசியை சந்தித்தேன். அவருக்கு ஒரு நூல் அளிப்பதாகவும், டிசி இலக்கிய விழாவில் பங்கேற்பதாகவும் ஒப்புக்கொண்டேன்.  பத்து மணிக்கு அரங்குகள் தொடங்கின.

ஒன்பது மணிமுதல் என் வாசகர்கள் பலர் வந்து கூட தொடங்கியிருந்தனர். தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தோம். கூடவே அரங்குகளையும் கவனித்தோம். தமிழச்சி தங்கபாண்டியன் பேசிய ஓர் அரங்கை கேட்டேன். சிவகாமியை வழியில் சந்தித்தேன். அம்பை பேசிய அரங்குக்கு போகும் வழியில் இன்னொரு அரங்கால் ஈர்க்கப்பட்டேன்.

இந்த அரங்குகளில் இரண்டுவகை உண்டு. கூட்டமர்வு (Panel Discussion) என்ற பேரில் நான்கு பேர் ஐந்துபேர் அமர்ந்து ஒருமணிநேரம் ஒரு தலைப்பில் உரையாடுவது ஒருவகை. இந்த கூட்டமர்வுகளில் வாயாடி ஒருவர் அமைந்துவிட்டால் அங்கே அதன்பின் அவர் குரல் மட்டுமே ஒலிக்கும். தயங்கி, யோசித்து பேசுபவருக்கு முனக மட்டுமே இடம் கிடைக்கும். இன்னொன்று ஓர் ஆசிரியருக்கு மட்டுமாக அமைந்த அரங்கு. அரைமணிநேரம். அவருடன் இன்னொருவர் கேள்விகள் கேட்பவராக மட்டும் அமர்வார்

பதினொரு மணிக்கு என் அரங்கு. பிரியம்வதா கேள்வி கேட்க நான் பதில் சொன்னேன். எனக்கு ஆங்கிலம் பேச பெருந்தயக்கம் உண்டு. என் ஆங்கில உச்சரிப்பு பற்றிய ஐயம்தான். நான் ஆங்கிலம் பேசுவதே இல்லை. நான் சொல்லும் ஆங்கிலச் சொற்கள் என் காதில் விழுந்தால் எனக்கே அன்னியமாக ஒலிக்கும். அத்துடன் நான் ஆங்கிலத்தில் பேசும்போது தன்னியல்பாகப் பேசுவதில்லை. தமிழில் யோசித்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து பேசுகிறேன். அந்த மொழியாக்கம் எங்காவது தடைபட்டால் சிக்கல்தான்.

ஆனால் இந்த இலக்கிய அரங்குகளில் பேசும் புகழ்பெற்றவர்கள்டை விட நான் நன்றாகவே பேசுகிறேன் என்ற எண்ணம் எனக்கு அண்மையில் உருவானது. சரளமாக, நல்ல உச்சரிப்புடன் பேசுபவர்கள் மிகப்பொதுவான தளத்தில் பெரும்பாலும் எளிய தேய்வழக்குகளையே பேசுகிறார்கள். புதியதாக எதையாவது சொல்பவர்கள் என்னைப்போலவே யோசித்துத்தான் பேசுகிறார்கள். அமெரிக்காவில் ஆங்கிலம் பேசும்போதுதான் தன்னம்பிக்கையே வருகிறது. அங்கே எல்லா உச்சரிப்பும் நல்ல உச்சரிப்பே. சீனர்களை விட நாம் பலமடங்கு மேல். பேசும் விஷயத்தையே கவனிக்கிறார்கள்.

பிரியம்வதாவின் கேள்விகளுக்கு நான் பதிலளித்தேன். அரைமணிநேர உரையாடல். அரங்கு நிறைந்து கூட்டம் சூழ நின்றுகொண்டும் இருந்தது. அரங்கில் இருந்து கைத்தட்டல்களும் ஏற்பொலிகளும் வந்துகொண்டே இருந்தன. கீதா ராமசாமி, இன்னொரு வங்காள வாசகி ஆகியோர் அவர்கள் கேட்டவற்றிலேயே மிகச்சிறந்த இலக்கிய உரையாடல் என்றனர். பொதுவாக நல்ல உரையாடல் என்றே அனைவரும் சொன்னார்கள். அதற்குக் காரணம் நான் பேசியவை வெறும் கல்வித்துறை கோட்பாடுகள் அல்ல, அதேசமயம் மேலோட்டமான இதழியல் தேய்வழக்குகளும் அல்ல என்பதே. உண்மையான உணர்வுகள் மற்றும் எண்ணங்களை அவற்றுக்குரிய கலைச்சொற்களுடன் சொன்னேன்.

மதியம் இரண்டுமணிக்கு உணவு. அதுவரை நின்றும் அமர்ந்தும் நண்பர்களுடன் பேசிக்கொண்டே இருந்தேன். நூறுபேருக்குமேல் என் வாசகர்கள் மட்டும் வந்திருந்தனர். நூல்கள் எல்லாமே விற்றுத்தீர்ந்தன என்றனர். எனக்கு ஐந்து மணிக்கு ரயில். இன்னொரு இலக்கியப் பயணம் நிறைவுற்றது. ரயிலில் ஏறியதும் சற்றும் தயங்காமல் தமிழ்விக்கியின் அடுத்த பதிவை தொடங்கினேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2022 10:35

பெங்களூர் இலக்கிய விழா

சர்வதேச , தேசிய இலக்கிய விழாக்களில் ஒரு பை கொடுப்பார்கள். அதில் பலவகை பரிசுப்பொருட்கள், நிகழ்ச்சி நிரல், சில புத்தகங்கள், குறிப்புதவி நோட்டுப்புத்தகம் இருக்கும். தோளில் போட்டுக்கொள்ள ஒரு அடையாள அட்டையும் உண்டு.

கே.ஜி.சங்கரப்பிள்ளை இப்படி இலக்கிய விழாவில் இருந்து இலக்கிய விழாவுக்கு சென்றுகொண்டிருப்பவர்களைப் பற்றி ‘சஞ்சிகள்’ என்னும் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். சஞ்சி என்றால் பை. சம்ஸ்கிருதத்தில் தொகுப்பு என்றும் பொருளுண்டு. சச்சிதானந்தனை சச்சி என அழைப்பார்கள். அதையொட்டிய பகடி என்றும் சொல்லப்படுவதுண்டு.

நானும் சஞ்சி ஆகிவிட்டேனா என்னும் ஐயத்தை 2 ஆம் தேதி பெங்களூருக்குக் கிளம்பும்போது அடைந்தேன். மலேசியா ஜார்ஜ்டவுன் இலக்கியவிழாவிலிருந்து வந்து பழைய சட்டைகளை வெளியே எடுத்துப்போட்டு புதிய சட்டைகளை உள்ளே வைத்து பெட்டியை மூடி கிளம்பிவிட்டேன், ரயிலில்தான் நல்ல தூக்கம்.

3 டிசம்பர் 2022 காலையில் பெங்களூர் வாசகர் நாகராஜன் ரயில்நிலையத்துக்கு வந்திருந்தார். நிகழ்ச்சி நடக்கும் அசோக் ஓட்டலிலேயே மாடியில் அறை. ஏற்கனவே அங்கே பிரியம்வதா வந்திருந்தார். அவரே எனக்கு அறை பெற்றுத் தர உதவினார்.

அசோக் முழுக்க ஒரே வைணவக்கூட்டம். பெரும்பாலும் வெள்ளையர். ஏதோ வைணவ அமைப்பின் கருத்தரங்கு நிகழ்ந்துகொண்டிருந்தது – இஸ்கான் நிகழ்ச்சி அல்ல. இன்னொன்று. தாவணி கட்டிய வெள்ளைக்காரப் பெண்கள் அழகாக இருந்தனர். எக்கணமும் ‘ஓய் மாமோய், கஞ்சி கொண்டாந்திருக்கேன்’ என்று கூவிவிடுவார்கள் போல தோன்றியது.

முதல்நாள் எனக்கு நிகழ்ச்சி ஏதுமில்லை. பார்க்கவந்திருந்த பெங்களூர் நண்பர்களுடன் ஆங்காங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். சில பிறமொழி எழுத்தாளர்களைப் பார்த்தேன். விவேக் ஷன்பேக் என் நண்பர். அவரைச் சந்தித்தது மகிழ்ச்சியான தருணம். அவர் கொங்கணி எழுத்தாளர்  தாமோதர் மௌஸோ (Damodar Mauzo) நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அரங்கில் பார்வையாளனாக இருந்தேன்.

வெவ்வேறு அரங்குகள். அவற்றை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக்கொள்வது கடினம். இத்தகைய பெருவிழாக்கள் அகன்று அகன்று கூர்மையற்றுவிடுகின்றன. சினிமாநடிகர்கள் மட்டுமல்ல சினிமா தயாரிப்பாளர்கள் சினிமா தயாரிப்பதன் சிக்கல்களைப் பேசும் ஓர் அரங்கும் இருந்தது ( வழக்கம்போல அரசு உதவி செய்யவேண்டும் என்ற கோரிக்கை) பெருங்கூட்டம் கிரிக்கெட் எழுத்தாளர்களின் அரங்குக்குத்தான்.

உதிரி உதிரியாக வெவ்வேறு அரங்குகளுக்குச் செவிகொடுத்தேன். மிகப்பொதுவான பேச்சுக்கள்தான் நிகழ்ந்து கொண்டிருந்தன. இப்போது நாளிதழ்களில் சாதாரணமாக அடிபடும்  ‘இலக்கியக் கைப்பிடிகள்’ ஆன அரசியல் -சமூகவியல் கருத்துக்கள். அவற்றைக்கொண்டே நம் இதழாளர்களால் இலக்கியத்தை பற்றவோ தூக்கவோ மதிப்பிடவோ முடியும்.  அழகியல், தனிப்பட்ட உணர்வுநிலைகள், உலக இலக்கிய மரபு உருவாக்கும் உளநிலைகள் ஆகிய மூன்றும் அவர்களுக்கு அன்னியமானவை.

Marxism, Feminism, Post-colonial, Oppression, Struggle, Resistance, Marginalized, decolonization, Oriental, Hegemony, Ideology, Social impact என சில சொற்களை எல்லா அரங்குகளிலும் கேட்க முடிந்தது. அவற்றைச் சொல்பவர்கள் அவற்றை அவ்வாறே ஒரு வாய்ப்பாடு போல வெவ்வேறு அரங்குகளில் சொல்லிச் சொல்லித் தேர்ந்தவர்கள். ஆகவே சரளமான ஊடக ஆங்கிலத்தில் அவற்றைச் சொன்னார்கள். இரண்டு ஆண்டுகளாக தீவிர இலக்கியம் வாசிக்கும் ஒருவருக்கு அவர்களிடமிருந்து தெரிந்துகொள்ள ஒன்றுமில்லை.

இலக்கியத்தின் முதன்மைக் கலைச்சொற்களே பலருக்கு தெரியவில்லை. ஒரு புகழ்பெற்ற கவிஞர் – கவிதைகளை தொகுப்பவர் modernism – modernity இரண்டுக்கும் வேறுபாடு தெரியாமல் பேசிக்கொண்டிருந்தார். அப்படிப்பட்ட கலைச்சொல் குளறுபடிகள் பெரும்பாலும் எல்லா உரைகளிலும் இருந்தன.

ஏனென்றால் மேடைகளில் தோன்றியவர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்தில், ஆங்கில நாளிதழ்களில், எழுதும் இதழாளர்கள். ஆகவே புகழ்பெற்றவர்கள். புத்தக மதிப்புரையாளர்கள் என்னும் வகையில் அவர்கள்மேல் அனைவருக்கும் அச்சம் கலந்த மதிப்பும் இருந்தது. ஆனால் இலக்கிய வாசிப்பு குறைவானவர்கள். பெரும்பாலும் சமகால புகழ்பெற்ற புனைவுகளையே வாசித்தவர்கள். நாளிதழ்களில் வரும் இலக்கிய அரட்டைகளையே இலக்கியக் கொள்கைகளை அறிந்துகொள்ளும் ஊடகமாகக் கொண்டவர்கள்.

இலக்கியவிவாதங்களில் தீவிரமான இலக்கிய விமர்சன வாசிப்பின் அடித்தளம் என்பது எந்த அளவுக்கு இன்றியமையாதது என்னும் எண்ணம் ஏற்பட்டது. அது இத்தகைய இலக்கியவிழாக்களில் எல்லாம் நான் உணர்வது. இந்திய ஆங்கில இலக்கியவாதிகள் மட்டுமல்ல இத்தகைய இலக்கிய விழாக்களுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து வரும் இலக்கியவாதிகளும் இதேபோல மேலோட்டமான இலக்கியப்பேச்சுகளையே அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.

தீவிரமான இலக்கியவாதிகள் இத்தகைய விழாக்களில் ஒரு விலக்கம் கொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன். பல்வேறு அமைப்புகளுடன் தொடர்புகொண்டு விழாக்கள் தோறும் சென்றுகொண்டே இருப்பவர்களே அதிகம் தென்படுகிறார்கள்.

அதிலும் அண்மைக்காலத்தில் இலக்கியவிழாக்கள் விரிவடையுந்தோறும் மையம் பொழுதுபோக்கு எழுத்து நோக்கிச் சென்று, அங்கிருந்து பயனுறு எழுத்து நோக்கிச் சென்று, அங்கிருந்து இன்று சினிமாநடிகர்கள் விளையாட்டு வீரர்கள் போன்ற பொது ஆளுமைகள் நோக்கி குவிவதாக ஆகிவிட்டிருக்கிறது. ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் நடிகர்களே நட்சத்திரங்கள், இந்திய ஆங்கில பல்ப் எழுத்தாளர்களான ‘செலிபிரிட்டி’க்கள்கூட இரண்டாமிடம்தான் என்று இலக்கிய நண்பர் சொன்னார்.

பெங்களூர் இலக்கிய விழாவுக்கு கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் இருந்து ஒரு மாணவர்குழு கல்லூரி செலவில் அனுப்பப்பட்டிருந்தது. அவர்கள் என்னை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நான் பொன்னியின் செல்வனுக்கு வசனம் எழுதியவன் என அறிந்திருந்தனர். மற்றபடி கோவை விஷ்ணுபுரம் நிகழ்ச்சி பற்றி எல்லாம் அவர்களுக்கு தெரியாது. அந்தக்கல்லூரி ஆசிரியர்களுக்கே ஜெயமோகன், விஷ்ணுபுரம், கோவை விழா பற்றியெல்லாம் எந்த அறிமுகமும் இல்லை என்று நண்பர் சொல்லி அறிந்திருக்கிறேன்.பெங்களூர் விழாவுக்கு இப்படி கூட்டம் வருவதே மேலே சொன்ன ‘பொது ஆளுமைகள்’ வழியாகத்தான்.

இந்த விழாவிலும் இந்தியச் சூழலில் தீவிர இலக்கியத்திற்கு எந்த அளவுக்கு இடமிருக்கிறதோ அதே விகிதாச்சாரத்தில்தான் இடமிருந்தது. ஆனால் இருந்தது என்பதே பெரிய விஷயம். சில அரங்குகள் சுவாரசியமானவை. புதிய இலக்கிய முகங்களை அறியத்தந்தவை. இந்தி எழுத்தாளர் அக்ஞெய்யின் வாழ்க்கைவரலாற்றை எழுதிய எழுத்தாளரின் பேச்சு கொஞ்சம் கேட்டேன். முக்கியமான நூல் என தோன்றியது.

தெலுங்கில் பிரசுரநிறுவனம் ஒன்றை நடத்தும் கீதா ராமசாமியை சந்தித்தேன். இடதுசாரி தீவிர இயக்கங்களில் பங்கெடுத்த போராளி. அதன்பொருட்டு இல்லத்தை துறந்து ஓடியவர். பின்னர் வெளியேறி கலாச்சாரச் செயல்பாட்டாளராக ஆனவர். அவருடைய சுயசரிதை Land, Guns, Caste, Woman: The Memoir of a Lapsed Revolutionary அண்மையில் மிகவும் கவனிக்கத்தக்க நூல்.

இரவு வரை அங்குமிங்குமாக அலைந்து அரங்குகளை கேட்டுவிட்டு அறைக்குச் சென்றேன். சென்றபின் ஒரு தமிழ் விக்கி பதிவு போட்டேன். அதன்பின் தூக்கம். காலையில் எட்டுமணிக்கு கீழே சென்று காலையுணவு. இலக்கியத் தொகுப்பாளரான கனிஷ்காவைச் சந்தித்தேன். பதிப்பாளர் ரவி டிசியை சந்தித்தேன். அவருக்கு ஒரு நூல் அளிப்பதாகவும், டிசி இலக்கிய விழாவில் பங்கேற்பதாகவும் ஒப்புக்கொண்டேன்.  பத்து மணிக்கு அரங்குகள் தொடங்கின.

ஒன்பது மணிமுதல் என் வாசகர்கள் பலர் வந்து கூட தொடங்கியிருந்தனர். தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தோம். கூடவே அரங்குகளையும் கவனித்தோம். தமிழச்சி தங்கபாண்டியன் பேசிய ஓர் அரங்கை கேட்டேன். சிவகாமியை வழியில் சந்தித்தேன். அம்பை பேசிய அரங்குக்கு போகும் வழியில் இன்னொரு அரங்கால் ஈர்க்கப்பட்டேன்.

இந்த அரங்குகளில் இரண்டுவகை உண்டு. கூட்டமர்வு (Panel Discussion) என்ற பேரில் நான்கு பேர் ஐந்துபேர் அமர்ந்து ஒருமணிநேரம் ஒரு தலைப்பில் உரையாடுவது ஒருவகை. இந்த கூட்டமர்வுகளில் வாயாடி ஒருவர் அமைந்துவிட்டால் அங்கே அதன்பின் அவர் குரல் மட்டுமே ஒலிக்கும். தயங்கி, யோசித்து பேசுபவருக்கு முனக மட்டுமே இடம் கிடைக்கும். இன்னொன்று ஓர் ஆசிரியருக்கு மட்டுமாக அமைந்த அரங்கு. அரைமணிநேரம். அவருடன் இன்னொருவர் கேள்விகள் கேட்பவராக மட்டும் அமர்வார்

பதினொரு மணிக்கு என் அரங்கு. பிரியம்வதா கேள்வி கேட்க நான் பதில் சொன்னேன். எனக்கு ஆங்கிலம் பேச பெருந்தயக்கம் உண்டு. என் ஆங்கில உச்சரிப்பு பற்றிய ஐயம்தான். நான் ஆங்கிலம் பேசுவதே இல்லை. நான் சொல்லும் ஆங்கிலச் சொற்கள் என் காதில் விழுந்தால் எனக்கே அன்னியமாக ஒலிக்கும். அத்துடன் நான் ஆங்கிலத்தில் பேசும்போது தன்னியல்பாகப் பேசுவதில்லை. தமிழில் யோசித்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து பேசுகிறேன். அந்த மொழியாக்கம் எங்காவது தடைபட்டால் சிக்கல்தான்.

ஆனால் இந்த இலக்கிய அரங்குகளில் பேசும் புகழ்பெற்றவர்கள்டை விட நான் நன்றாகவே பேசுகிறேன் என்ற எண்ணம் எனக்கு அண்மையில் உருவானது. சரளமாக, நல்ல உச்சரிப்புடன் பேசுபவர்கள் மிகப்பொதுவான தளத்தில் பெரும்பாலும் எளிய தேய்வழக்குகளையே பேசுகிறார்கள். புதியதாக எதையாவது சொல்பவர்கள் என்னைப்போலவே யோசித்துத்தான் பேசுகிறார்கள். அமெரிக்காவில் ஆங்கிலம் பேசும்போதுதான் தன்னம்பிக்கையே வருகிறது. அங்கே எல்லா உச்சரிப்பும் நல்ல உச்சரிப்பே. சீனர்களை விட நாம் பலமடங்கு மேல். பேசும் விஷயத்தையே கவனிக்கிறார்கள்.

பிரியம்வதாவின் கேள்விகளுக்கு நான் பதிலளித்தேன். அரைமணிநேர உரையாடல். அரங்கு நிறைந்து கூட்டம் சூழ நின்றுகொண்டும் இருந்தது. அரங்கில் இருந்து கைத்தட்டல்களும் ஏற்பொலிகளும் வந்துகொண்டே இருந்தன. கீதா ராமசாமி, இன்னொரு வங்காள வாசகி ஆகியோர் அவர்கள் கேட்டவற்றிலேயே மிகச்சிறந்த இலக்கிய உரையாடல் என்றனர். பொதுவாக நல்ல உரையாடல் என்றே அனைவரும் சொன்னார்கள். அதற்குக் காரணம் நான் பேசியவை வெறும் கல்வித்துறை கோட்பாடுகள் அல்ல, அதேசமயம் மேலோட்டமான இதழியல் தேய்வழக்குகளும் அல்ல என்பதே. உண்மையான உணர்வுகள் மற்றும் எண்ணங்களை அவற்றுக்குரிய கலைச்சொற்களுடன் சொன்னேன்.

மதியம் இரண்டுமணிக்கு உணவு. அதுவரை நின்றும் அமர்ந்தும் நண்பர்களுடன் பேசிக்கொண்டே இருந்தேன். நூறுபேருக்குமேல் என் வாசகர்கள் மட்டும் வந்திருந்தனர். நூல்கள் எல்லாமே விற்றுத்தீர்ந்தன என்றனர். எனக்கு ஐந்து மணிக்கு ரயில். இன்னொரு இலக்கியப் பயணம் நிறைவுற்றது. ரயிலில் ஏறியதும் சற்றும் தயங்காமல் தமிழ்விக்கியின் அடுத்த பதிவை தொடங்கினேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2022 10:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.