Jeyamohan's Blog, page 662

December 15, 2022

நட்சத்திரவாசிகள் – ஆமருவி தேவநாதன்

அன்புள்ள ஜெயமோகன், நலமாயிருக்கிறீர்களா ?

விஷ்ணுபுரம் விழாவில் கார்த்திக் பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார் என்று அறிந்தேன். நான் சமீபத்தில் வாசித்த, துறை சார்ந்த, தரமான புனைவெழுத்து அவருடையது. அவரது ‘நட்சத்திரவாசிகள்’ நாவல் குறித்த என் பார்வையை எழுதியிருக்கிறேன். (பெரிய அளவில் மற்ற மொழி இலக்கிய வாசகர்களையும் அந்த நாவல் சென்று அடைய வேண்டும் என்பதால் வேண்டுமென்றே ஆங்கிலத்தில்) இந்த நாவலையும், ‘மறுபடியும்’ என்னும் நாவலையும் தவிர்த்துத் தமிழில் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பிறிதொரு நல்ல நாவல் இருப்பதாகத் தோன்றவில்லை.

நட்சத்திரவாசிகள் (Starlings) – a review நன்றிஆமருவி.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 15, 2022 10:31

யூசுப், கடிதம்

விஷ்ணுபுரம் விருந்தினர்: குளச்சல் மு யூசுப்  

வைக்கம் முகமது பஷீர் தமிழ் விக்கி

அன்புள்ள ஜெ

இந்த விஷ்ணுபுரம் விருதுவிழாவில் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த பெருமை அளிக்கும் விஷயம் மு.யூசுப் அவர்களின் அமர்வு. விஷ்ணுபுரம் மேடையிலே ஒரு மொழிபெயர்ப்பாளர் இடம்பெறுவது இதுதான் முதல்முறை என நினைக்கிறேன். வரும் நாட்களில் குறிஞ்சிவேலன், நிர்மால்யா, நல்லதம்பி போன்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கும் இடமளிக்கப்படவேண்டும். அவர்களுடைய பங்களிப்பு மிக முக்கியமானது.

மொழிபெயர்ப்பாளகள்தான் தமிழிலக்கியத்தின் நுரையீரல் என்று சொல்லலாம். அவர்கள் வழியாகத்தான் வெளிக்காற்று உள்ளே வருகிறது. நம் மூச்சு வெளியே செல்கிறது. தமிழிலிருந்து மொழிபெயர்ப்பு செய்யும் கல்யாணராமன், பிரியம்வதா, வசந்தசூரியா போன்றவர்களுக்கும் அரங்கு வைக்கப்படவேண்டும்.

நான் வைக்கம் முகமது பஷீரின் ரசிகன். ஏற்கனவே அவருடைய கதைகளை பலர் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். குகாரி சி.எஸ்.விஜயம் மொழிபெயர்ப்பு செய்து என்பிடி வெளியிட்ட நூலையே நான் வாசித்துள்ளேன். ஆனால் யூசுப் மொழிபெயர்த்த பிறகுதான் வைக்கம் முகமது பஷீர் உண்மையான வடிவிலே தமிழில் அறிமுகம் ஆனார்.

பஷீர் மலையாளத்திலே மாப்ளா வழக்கிலே எழுதுபவர். அவரை இங்கே செந்தமிழிலோ நம்முடைய பேச்சுவழக்கிலோ மொழிபெயர்த்தால் சரியாக வராது. யூசுப் அதை தேங்காப்பட்டணம் மொழியிலே மொழிபெயர்ப்பு செய்கிறர். அது தோப்பில் முகமது மீரான் வழியாக நமக்கு அறிமுகமான மொழி. அதோடு அது மாப்ளா மொழிக்கும் மிக நெருக்கமானது. ஆகவே உரையாடல்கள் நம்பகமாகவும் நுணுக்கமான பகடியெல்லாம் வெளிப்படும்படியாகவும் உள்ளன. பஷீரின் மூலக்கதையை படிப்பதுபோன்றே உள்ளது.

முஸ்லீம்பாஷை என்றால் நமக்கு இங்கே காயல்பட்டினம் பாஷைதான். அதில் அரபு கொஞ்சமாகவே உள்ளது. தேங்காப்பட்டினம் மொழியிலேதான் நல்ல அரபு ஊடுருவல் உள்ளது. அதை அழகாக யூசுப் மொழிபெயர்த்துள்ளார். அந்த மொழிபெயர்ப்புக்காகவே யூசுப் தமிழிலே என்றென்றைக்கும் நினைக்கப்படுவார்.

ஜி.சாந்தகுமார்

விஷ்ணுபுரம் விருந்தினர்

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 15, 2022 10:31

யூசுப், கடிதம்

விஷ்ணுபுரம் விருந்தினர்: குளச்சல் மு யூசுப்  

வைக்கம் முகமது பஷீர் தமிழ் விக்கி

அன்புள்ள ஜெ

இந்த விஷ்ணுபுரம் விருதுவிழாவில் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த பெருமை அளிக்கும் விஷயம் மு.யூசுப் அவர்களின் அமர்வு. விஷ்ணுபுரம் மேடையிலே ஒரு மொழிபெயர்ப்பாளர் இடம்பெறுவது இதுதான் முதல்முறை என நினைக்கிறேன். வரும் நாட்களில் குறிஞ்சிவேலன், நிர்மால்யா, நல்லதம்பி போன்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கும் இடமளிக்கப்படவேண்டும். அவர்களுடைய பங்களிப்பு மிக முக்கியமானது.

மொழிபெயர்ப்பாளகள்தான் தமிழிலக்கியத்தின் நுரையீரல் என்று சொல்லலாம். அவர்கள் வழியாகத்தான் வெளிக்காற்று உள்ளே வருகிறது. நம் மூச்சு வெளியே செல்கிறது. தமிழிலிருந்து மொழிபெயர்ப்பு செய்யும் கல்யாணராமன், பிரியம்வதா, வசந்தசூரியா போன்றவர்களுக்கும் அரங்கு வைக்கப்படவேண்டும்.

நான் வைக்கம் முகமது பஷீரின் ரசிகன். ஏற்கனவே அவருடைய கதைகளை பலர் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். குகாரி சி.எஸ்.விஜயம் மொழிபெயர்ப்பு செய்து என்பிடி வெளியிட்ட நூலையே நான் வாசித்துள்ளேன். ஆனால் யூசுப் மொழிபெயர்த்த பிறகுதான் வைக்கம் முகமது பஷீர் உண்மையான வடிவிலே தமிழில் அறிமுகம் ஆனார்.

பஷீர் மலையாளத்திலே மாப்ளா வழக்கிலே எழுதுபவர். அவரை இங்கே செந்தமிழிலோ நம்முடைய பேச்சுவழக்கிலோ மொழிபெயர்த்தால் சரியாக வராது. யூசுப் அதை தேங்காப்பட்டணம் மொழியிலே மொழிபெயர்ப்பு செய்கிறர். அது தோப்பில் முகமது மீரான் வழியாக நமக்கு அறிமுகமான மொழி. அதோடு அது மாப்ளா மொழிக்கும் மிக நெருக்கமானது. ஆகவே உரையாடல்கள் நம்பகமாகவும் நுணுக்கமான பகடியெல்லாம் வெளிப்படும்படியாகவும் உள்ளன. பஷீரின் மூலக்கதையை படிப்பதுபோன்றே உள்ளது.

முஸ்லீம்பாஷை என்றால் நமக்கு இங்கே காயல்பட்டினம் பாஷைதான். அதில் அரபு கொஞ்சமாகவே உள்ளது. தேங்காப்பட்டினம் மொழியிலேதான் நல்ல அரபு ஊடுருவல் உள்ளது. அதை அழகாக யூசுப் மொழிபெயர்த்துள்ளார். அந்த மொழிபெயர்ப்புக்காகவே யூசுப் தமிழிலே என்றென்றைக்கும் நினைக்கப்படுவார்.

 

ஜி.சாந்தகுமார்

விஷ்ணுபுரம் விருந்தினர்

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 15, 2022 10:31

போகன் -அபூர்வங்களையும், அபத்தங்களையும் காட்சிப்படுத்தும் கலைஞன்

விஜயராகவன் நெறியாள்கையில் போகன்விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 

போகன் சங்கர் என்ற எழுத்தாளரை வகைப்படுத்துவது மிகக் கடினமான செயல். அவர் ஒரு கவிஞரா, கட்டுரையாளரா, சிறுகதை ஆசிரியரா, குறுங்கதைகளின் முக்கியப் புள்ளியா அல்லது விமர்சகரா? இவை அனைத்தும் ஒருங்கிணைந்த கலவை அவர். ஆனால் அவர் கவிஞர் என நவீன தமிழிலக்கியச் சூழலில் அறியப்படுவதால் அதனையே முதன்மையாகக் கொண்டு அவருடைய எழுத்துக்கள் குறித்த வாசிப்புப் பார்வையாக இக்கட்டுரையைத் தொடங்குகிறேன்.

கவிஞர்:

போகனின் கவிதைகளுக்காகவே அவரைப் பின் தொடர்பவர்கள் ஏராளம். போகனின் எழுத்துக்களின் சிறப்பு என நான் கருதுவது அவருடைய சொற்தேர்ச்சி. மிகவும் சிக்கலான கருத்துக்களை விளக்க எளிமையான கவிதை நயமிக்க சொற்களைக் கொண்டு தான் சொல்ல வந்த செய்தியை மிக நேர்த்தியாக வாசகனுக்குக் கடத்தி விடுகிறார். இதை அவரின் நண்பர் சொற்சிக்கனம் எனக் குறிக்கிறார். உதாரணமாக ஒரு மனிதன் தன் வாழ்வில் எதிர்கொண்ட முக்குணப் பெண்களைப் பற்றிய கவிதையிலுள்ள படிமம் கூற வந்த மிக முக்கியமான கருதுகோளை வாசகனுக்கு எப்படிக் கடத்துகிறது எனப் பார்ப்போம்:

மறைந்து போன வானவில்லைப் பார்க்கச்
சென்ற முட்டாள் சிறுவனைப் போல
நின்றிருந்தேன்.

என்னும் முட்டாள் சிறுவன் படிமம்தவறவிட்ட அரிய தருணத்தை, இழப்பின் துயரை மிக அழகாகக் காட்சிப்படுத்துகிறது. மிக அரிதாக ஒரு மனிதனின் வாழ்வில் எதிர்ப்படும் சத்துவத்தின் நிதானம் கொண்ட பிரதிபலன் எதிர்பாராத பெண்ணின் அன்பின் சொற்களை நிகழும் கணத்தில் அதன் அருமையை உணராமல், அவள் மறைந்த சில வருடங்களுக்குப் பிறகு குப்பைக்கூடையில் தேடியலையும் ஒருவனை மறைந்த வானவில்லை விளையாட்டுப் புத்தியால் நிகழ் கணத்தில் தவற விட்டுப் பிறகு பார்க்க முடியாமால் சோர்ந்து, திகைத்து நிற்கும்சிறுவனுக்கு ஒப்பிட்டு காட்டும் கவிதை அழகிய காட்சிப் படிமம். அபூர்வத் தருணங்கள் அரிதாகவே கிடைக்கும் என்பதற்கு இதை விட நல்ல சான்று கிடைக்குமா?

இந்தியத் தொன்மங்களில் இப்பிரபஞ்சத்தின் முதல் சலனம் ஒலி வடிவிலானது என்ற கோட்பாடு உண்டு. பிரபஞ்சத்தின் இறுதி என்பது சலனமின்மையே எனக் கூறுவோரும் உண்டு. மானுட வாழ்வென்பதும் சலனத்தில் (ஒலியில்) தொடங்கி சலனமின்மையில் (மவுனம்) முடியக்கூடியது. இதை கிருஷ்ணனும் சிவனும் என்ற கவிதையில் எழுதியிருக்கிறார்.

கிருஷ்ணனும் சிவனும்.

‘அவன் விடாது
ஒலிக்கும் த்ருபத் இசை”
என்றார் அவர்.
“விடாது என்னை
இசைய வைக்கும்
ஒரு பாடகன்.
ஒவ்வொரு இலையாய்ப்
பார்த்துப் பார்த்துச்
சலசலக்கவைக்கும் காற்று.
கூவியே இரவை விடிய வைக்கும்
பறவை .

மூச்சு முட்டுகிறது எனக்கு.
நெகிழ்ந்து நெகிழ்ந்து
கரைந்து
நான் என்பதே சிறுத்து சிறுத்து இல்லாமல்
போய்விடுவேனோ என்ற பயம்
வந்துவிட்டது எனக்கு.

நான் உன்னிடம் வந்தேன்

அசையாது
வசந்தகால நதியொழுக்கை
சரத் கால வெள்ளப்பெருக்கை
வறள்கால வெறுமையை
உச்சியிலிருந்து
உற்று நோக்கி நிற்கும்
ஆதிக்கல் போல
உன்னிடம் உறைந்திருக்கும்
மவுனம் தேடி…

கல் தெய்வமாவது எப்படி?
என்று
இப்போது புரிகிறது எனக்கு.”

போகனின் கவிதைகளில் பெண் குழந்தைகள் அடிக்கடி வருவார்கள். அவர்கள் இடம்பெறும் கவிதைகளெல்லாம் நெகிழ்ச்சியான தருணங்களை வாசகர்களின் மனதில் விட்டுச் சென்றிருப்பவை. ஊழ் என்னும் பெரு வலி முன்பு தகப்பன் எனும் பாத்திரம் ஏந்திய மனிதனின் இயலாமையையும், எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாத வாழ்வின் அபத்தத்தையும் எரிக் பெர்ன் எனத் தொடங்கும் நீள் கவிதையில் விவரிக்கிறார், கவிதையின் பிற்பாதியை மட்டும் கீழே தருகிறேன். மகள்களைப் பெற்ற அனைத்து தந்தைகளையும் இக்கவிதை நெகிழ்வூட்டக்கூடியது.

எல்லா பாத்திரங்களையும் முயன்றுவிட்டு
இறுதியாக நான் மிகவும் முயன்றேன்
ஒரு நல்ல தகப்பன் பாத்திரம் வகிப்பதற்காகவும்.
ஆனாலும் நான் அறிவேன்
நான் இதையும் மோசமாகச் செய்கிறேன்.

இதை நினைக்கையில் என் கண்கள் பொங்குகின்றன.
ஹரிணி என் மகளே
இந்த பாத்திரத்துக்கு என்னை
ஏன் தேர்ந்தெடுத்தாய்?
உன் அளவுகடந்த கருணையினால்
நீ
நான் உன் கைகளைப் பற்றிச்
சாலைகளைக் கடக்க உதவ அனுமதித்தாய்.

என் மீது நீ வைத்திருக்கும்
தூய நம்பிக்கையை
உன் கண்களில் காணும்போதெல்லாம்
நான் என் நடுக்கத்தை மறைத்துக் கொள்கிறேன்.
இந்தப் பாரத்தால்
என் மனம் தளும்பும்போதெல்லாம்
நான் கோவில்களில் போய்ப் போய் நின்றுகொள்கிறேன்.

அங்கே நிற்கிறது
என்னைப்போலவே
தன் பாத்திரத்தைச்
சரியாகச் செய்யாததொரு தெய்வம்.

உச்சியிலிருந்து உற்று நோக்கும் ஆதிக்கல்லில் உறைந்திருக்கும் மௌனம், தானேற்ற பாத்திரத்தைச் சரியாக செய்யாத தெய்வம் போன்ற வரிகள் வாசகனின் உள்ளத்தில் பல்வேறு வாசிப்புக்கான சாத்தியங்களை வழங்கி மீண்டும் மீண்டும் படிக்குந்தோறும் அவனுக்கு புதிய திறப்புகளை அளிக்கும் முடிவுறாச் சொற்கள்.

கட்டுரையாளர்:

போகன் அவர்களது கட்டுரைகள் அவரது பரந்த வாசிப்பின் விஸ்தீரனத்தைக் காட்டுபவை. எப்பொருளை எடுத்துக்கொண்டாலும் அதில் தனக்கே உரிய புதிய பார்வையுடன் அதன் முழுக்கோணத்தையும் (360°) அணுகுபவர். உதாரணமாக எதுவும் கடந்து போகும் என்ற தலைப்பில் சில மாதங்களுக்கு முன் ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரையைப் பார்ப்போம். இக்கட்டுரையில் இவ்வாக்கியத்தின் மூலம் இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பான பெர்சிய, யூதத் தொன்மங்களில் இருக்கலாம் எனத் தொடங்குபவர் அவ்வாக்கியத்தை பிரபலமாக்கிய எட்வர்ட் பிட்ஜெரால்ட் வழியாக தமிழின் திருக்குறள், திருமந்திர உதாரணங்களைக் கொண்டு நிலையாமையை இது குறிக்கும் என நிறுவுகிறார். அதன் முழுமைப் பொருளை Stocism மற்றும் மார்க்கஸ் அரேலியஸின் படைப்பைச் சுட்டி விளக்குபவர் அது எப்படி தன் வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது இரு பிரிவுகளாக விவரிக்கிறார்.
தாரளமயமாக்கலுக்கு முன்பான தென் தமிழக, கேரள வாழ்வின் காத்திருப்புகளை கலாப்ரியா, பாரதிமணி, எம். டி. வாசுதேவன் நாயர், கே. பாலச்சந்தர் படைப்புகளைக் கொண்டு விளக்கி, கிராமங்களில் உறைந்திருந்த காலம் கடப்பதின் பிரக்ஞை இல்லாமலே கடந்ததையும், 1990களுக்குப் பின் அதி வேகமாகக் கடந்து செல்லும் காலத்தினால் மனித உறவுகளில் ஏற்படும் சிக்கல்களையும், நுகர்வுக் கலாச்சாரம் உண்டாக்கும் நிறைவின்மையையும் காட்டி யுவால் நோவா ஹராரியின் உதாரணம் வழி சிக்கலிருந்து மீள வழிகாட்டி கலாப் பிரியாவின் கவிதை வழியாக இதுவும் பழகிப் போகும் என முடிக்கிறார். 50 வருட வாழ்வை ஒற்றை வாக்கியம் கொண்டு முழுமையாகக் காண்பிக்கிறார். இதுவே போகனின் கட்டுரைகளின் சிறப்பு.

சிறுகதை, குறுங்கதை ஆசிரியர்:

போகனின் குறுங்கதைகளைப் பொருத்தவரையில் கவிதைகளின் நீட்சியே அவை. கவித்துவமான உரைநடை வழியாக இவை குறுங்கதைகளாக பரிமணிப்பதாகத் தோன்றுகிறது. இவற்றைப் பேய்க்கதைகள், பகடிக் கதைகள், உலகியலில் ஈடுபடும் கலைஞனின் அகச் சிக்கல்களைப் பேசும் கதைகள் என மேலோட்டமாகப் பிரிக்கலாம். இக்குறுங்கதைகளின் வழியாக முன்னோடி எழுத்தாளர்களையும் கவர்ந்த பாருக்குட்டி என்ற புனைவுக் கதாபாத்திரம் மிகுந்த பிரபலம். இக்கதாபாத்திரம் ஒரு தேவதை வடிவம் என எண்ணுகிறேன். ஆனால் போகன் யட்சி எனச் சொல்லக்கூடும். ஆணின் பகல் கனவுகளில் தோன்றும் பள்ளியறையில் தாசியாய், உலகியல் வாழ்வில் தோழியாய், நோயுற்ற போது தாதியாய், உளச்சோர்வு அடையும் போது ஊக்கமளிக்கும் ஆசிரியையாய் நேர்மறைப் பண்புகள் மிகுந்த பிரபலமான இப்பாத்திரத்தை அவர் பெரும்பாலான குறுங்கதைகளில் பயன்படுத்தி உள்ளார். கதையின் முக்கியத் தருணங்களை பாருக்குட்டியின் இயல்பான அப்பாவித்தனமான செயல்கள் மற்றும் சொற்கள் வழியாக வாசகனுக்கு எளிதில் புரிய வைத்து விடுவது இக்கதைகளின் பலம். சமீபத்தில் எழுதிய இஷ்டம் கதையில் பாருக்குட்டித் தன் வழக்கமான செயல்களின் வழியாகவே கதை சொல்லியின் தற்கொலை எண்ணத்தைத் தடுக்கிறார்.

கார்வை என்ற கதையில் ஒரு எழுத்தாளரைச் சந்திக்கும் கதை சொல்லி அவருடைய படைப்புகளின் பெறுமதியை உணராமல் உரையாடிவிட்டு வீடு திரும்பிய பின் விமர்சகர்களால் அவ்வெழுத்தாளரின் சுமாரான படைப்பு எனச் சொல்லப்பட்ட ஒரு நூலை வாசிக்கிறார். அந்நூல் அவரைக் கலங்கடித்து விடுகிறது. குற்றவுணர்வில் எழுத்தாளரைச் சந்தித்தது குறித்தும், அவருடைய படைப்பு குறித்தும் கண்ணீருடன் இரவெல்லாம் உறங்காமல் பாருவிடம் பகிர்ந்து கொள்கிறார். விடிகாலையில் அக்காக் குருவி கூவுகிறது. அப்போது பாரு சொல்கிறாள்:

‘அக்காக்குருவியின் ஆழ்ந்த சோகத்தை கொண்டுவர முடிகிற வாத்தியத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பதுதான் உண்மை.இல்லையா?’

அவ்வெழுத்தாளரும் சற்றேறக்குறைய அதே போன்ற ஒன்றை சொல்லியிருப்பார். அதை கதைசொல்லி பாருக்குட்டியிடம் சொல்லாத போதும் இரவு முழுதும் நடந்த உரையாடல் வழியாக அவர் சொல்ல வததின் சாரத்தைப் புரிந்து கேள்வியாக்குவது கதையின் தனி அறிதல் தருணம்.கர்மயோக வாழ்வைப் பற்றிய கதையாக பின்வரும் வரிகளுடன் போகன் இக்கதையை முடிக்கிறார்.அக்காக் குருவி யாருக்காகவும் பாடுவதில்லை. அது தன்னையேதான் பாடிப் பாடி அழைத்துக்கொள்கிறது.

மேலும் ஒரு கதையில் திருச்செந்தூர் கோயில் மண்டபத்தில் “சாச்சா” என்று கை நீட்டும் வட இந்தியச் சிறுமியின் வழியாக பசியின் துயரையும்,”மாப் கரோ சாப்” எனக் குழந்தையின் தாய் தடுப்பதையும் இரவச்சம் என வள்ளுவர் கூறும் விழுமியத்தையும் வட இந்தியப் பெண் வழியாகக் காட்டுவது இந்நிலம் பண்பாடுகள் வழி ஒருங்கிணைந்திருப்பதைக் குறிப்பதாகத் தெரிகிறது. வாழ்வின் இறுதிக் கணத்தில் நோயுற்ற குழந்தைகள் பெற்றோரைத் தேற்றுவது, பேருந்தில் நூறு ரூபாய் மதிப்புள்ள விளையாட்டுப் பொருளை வாங்கித் தரத் தயங்கும் தந்தையின் இயலாமையைக் காட்டுவது. ஆனாலும் அவர் இரக்கத்துடன் உதவ முன்வருபவரின் உதவியை ஏற்க மறுப்பது. உதவ முன்வந்தவரும், ஏற்க மறுத்தவரும், சம்பந்தப்பட்டக் குழந்தையின் ஏக்கத்தைப் பார்த்து மருகுவது என நுட்பமான அகச் சிக்கல்களைப் பேசும் அன்றாட தன் வரலாற்றுக் கதைகள் மனிதனின் ஆபூர்வ குணங்களையும், அபத்தமானமான, குற்ற உணர்வுகளையும் ஒருங்கே காட்டுபவை. இவற்றைப் பெரும்பாலும் குறுங்கதை வடிவிலேயே போகன் எழுதுகிறார். ஒரு நாவலுக்கான பேசு பொருள் உள்ள கருவைச் சுருக்கி குறுங்கதையாக மாற்றுகிறார் எனப் பல கதைகளிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. இதுவே ( சுருங்கச் சொல்லுதலே) போகன் படைப்புகளின் சிறப்பு எனலாம்,

அடுத்து போகனின் சிறுகதைகளில்தான் கதையின் பகைப்புலன், சூழல் சித்திரிப்புகளைப் பற்றிய விரிவான அணுகுமுறையைக் காணலாம். ஆரம்ப காலச் சிறுகதைகளில் சூழல் குறித்து விரிவாக எழுதியவர் சமீபங்களில் கதையின் தேவைக்கு மீறி ஓரிரு சித்தரிப்புகளைச் செய்வதைக் கூட தவிர்க்க முனைகிறார் எனத் தோன்றுகிறது. பூ, சிறுத்தை நடை போன்ற கதைகளில் எழுதப்பட்ட சூழல், களன் பற்றிய சித்தரிப்பை சமீபத்திய பொட்டை, மெல்லுடலிகள் ஆகிய கதைகளில் காண முடியவில்லை. சிறுத்தை நடை கதையில் காட்டும் வால்பாறை மலைப் பின்னணியில் திடீரென மின்மினிகளால் தோன்றும் ஒளி ஓவியம் நாயகன், நாயகி உள்ளங்களில் உருவாக்கும் எண்ணங்களின் மாறுதல் கதையின் போக்கையே மாற்றும். அதே போல் பூ கதையில் அம்மனின் உருவம் வழி கதை மாந்தரில் அகத்தில் உருவாகும் எண்ணத் திறப்புகளை சமீபத்திய கதைகளில் காண முடியவில்லை. நவீன இலக்கியம் மானுடத்தின் குரூரத்தையே ஒளி கூட்டிக் காண்பிக்கிறது என்ற கருதுகோளை போகனின் படைப்புகள் மறுதலிக்கின்றன என்றே தோன்றுகிறது. பொட்டை, மெல்லுடலிகள் ஆகிய கதைகளின் மொழி நடை அதிர்ச்சியூட்டக் கூடியதாக இருந்தாலும், கசப்புணர்வை தோற்றுவிப்பதில்லை. மாறாக பொட்டை கையறு நிலையையும், மெல்லுடலிகள் பிரதிபலன் எதிர்பாரத உதவி எனும் மானுடத்தின் மகத்தான விழுமியத்தையுமே காட்டி முடிகிறது.

போகனின் ஒரு சில கதைகளைக் கொண்டு அவர் ஒரு பெண் வெறுப்பாளர் அல்லது ஆணியவாதி என்போர் உண்டு. போகனின் பெண் கதை மாந்தர் பெரும்பாலும் மரபான பெண்கள். முனைந்து பெண்ணியம் பேசும் பெண்களை அவர் காட்டுவதில்லை. யதார்தத்தில் நாம் அன்றாடம் எதிர் கொள்ளும் பெண்களே அவரது கதை மாந்தர்கள். கசப்பின் கனிகள் என்று அவர் தன் அன்னையைப் பற்றி எழுதியது மிக அப்பட்டமாக யதார்தத்தைப் பேசுவது மற்றும் சென்ற தலைமுறைப் பெண்களின் மனவோட்டத்தைச் சொல்லும் அழகிய ஆவணம்.

விமர்சகர் :

சுஜாதாவிற்குப் பின் அமெரிக்க வாழ் ஆங்கிலக் கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் தமிழில் அதிகம் அறிமுகப்படுத்தியவர் போகன் என்றே நினைக்கிறேன். விக்கிரமாத்தியத்தன் கவிதைகள், எம். கோபால கிருஷ்ணனின் தீர்த்த யாத்திரை, ஜெய மோகனின் பத்து லட்சம் காலடிகள் ஆகிய படைப்புகள் குறித்தும் மற்றும் சாருவின் படைப்புலகு பற்றி சமீபத்தில் எழுதிய விமர்சனம், கொரனோ காலத்தில் காலச்சுவடில் எஸ்.ரா எழுதிய குறுங்கதைகள் பற்றிய பார்வை ஆகியன போகன் விமர்சகராக கூர்ந்து கவனிக்கப் படுகிறார் எனத் தோன்றுகிறது. குமரகுருபரன் விருது விழாவில் விருது பெற்ற கவிஞர்கள் பற்றி அவர் ஆற்றிய உரை, அன்றைய கலந்துரையாடவில் கார்ல் மார்க்ஸ் வீரான் குட்டியிடம் கேட்ட கவிதையின் சமூகக் கடப்பாடு குறித்து போகன் அவரது பேச்சில் கவிதை உள்ளுறையாக தனக்கான ஒரு நீதியைக் கொண்டுள்ளது. நீதியை, உண்மையை அல்லது அறத்தை மறுதலிக்கும் ஒரு விசயம் கவிதையாக நிலைபெறாது என முன்னோடிக் கவிஞர்களின் படைப்புகள் கொண்டு நிறுவியது கவிதை பற்றி சமீப காலத்தில் வெளியான மிக முக்கியமான கருத்து.

சமகாலத்தின் மிக முக்கிய இலக்கியப் படைப்பாளி போகன் சங்கர் என்பதில் ஐயமேதுமில்லை. அவருடைய குளம் போல் நடிக்கும் கடல் கவிதைத் தொகுப்பிற்கு வாழ்த்துகள்.

தேவதாஸ்

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 15, 2022 10:30

விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்

விஷ்ணுபுரம் விருதை ஒட்டி ஆவணப்படம் எடுக்கும் எண்ணம் ஞானக்கூத்தனுக்கு விருது வழங்கப்பட்டதை ஒட்டி தோன்றியது. கே.பி.வினோத் வெறும் 16000 ரூ செலவில் தனியொருவராக, ஒளிப்பதிவும் இயக்கமும் செய்து அதை தயாரித்தார். அத்தனை சுருக்கமான செலவில் ஆவணப்படங்களை எடுக்கமுடியும் என அறிந்தபின் விருதுவிழாவின் ஒரு பகுதியாக ஆவணப்படங்களை எடுக்கலானோம். இன்று அவை ஓர் அரிய சேமிப்பாக ஆகியுள்ளன. சாகித்ய அக்காதமி மட்டுமே எழுத்தாளர்களை ஆவணப்படம் எடுக்கும் இன்னொரு அமைப்பாக தமிழ்நாட்டில் உள்ளது.

ஞானக்கூத்தன் ஆவணப்படம் இலைமேல் எழுத்து

இயக்கம் கே.பி,வினோத்

 

தேவதச்சன் ஆவணப்படம் நிசப்தத்தின் சப்தம்

இயக்கம் சரவணவேல் 

 

 

வண்ணதாசன் ஆவணப்படம் நதியின்பாடல்

இயக்கம் செல்வேந்திரன்

பாட்டும் தொகையும். ராஜ் கௌதமன் ஆவணப்படம்

எழுத்து இயக்கம் கே.பி.வினோத்

இசை பி.சி.சிவன்

சீ.முத்துசாமி தமிழ் விக்கி

சீ முத்துசாமி ஆவணப்படம் ரப்பர்விதைகளுடன் விளையாடும் கலைஞன்

இயக்கம் ம.நவீன்

தற்செயல்களின் வரைபடம் சுரேஷ்குமார இந்திரஜித் ஆவணப்படம்

எழுத்து இயக்கம் கே.பி.வினோத்

இசை ராஜன் சோமசுந்தரம்

அந்தரநடை அபி ஆவணப்படம்

எழுத்து இயக்கம் கே.பி.வினோத்

இசை ராஜன் சோமசுந்தரம்

வீடும் வீதிகளும். விக்ரமாதித்யன் ஆவணப்படம்

ஒளிப்பதிவு இயக்கம் ஆனந்த் குமார்

இசை ராஜன் சோமசுந்தரம்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 15, 2022 10:30

December 14, 2022

திருவனந்தபுரம் திரைவிழாவில்

13 டிசம்பர் 2022 காலை நாகர்கோயிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நானும் ஷாகுல் ஹமீதும் என் காரில் கிளம்பினோம். ஷாகுல் காரை ஒட்ட பேசிக்கொண்டே சென்றோம். திருவனந்தபுரத்திற்கு ரயில் தவிர எப்படிச் சென்றாலும் எனக்கு தலைசுற்றும். இந்தியாவிலேயே நெரிசலான சாலை. அதை மேம்பாலம் கட்டி மேலும் நெரிசலாக ஆக்கிவிட்டிருக்கிறார்கள்.

திருவனந்தபுரம் மஸ்கட் ஓட்டலில் தங்குமிடம் ஏற்பாடு செய்திருந்தனர். மஸ்கட் நாடுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. 1919ல் திருவனந்தபுரத்தில் இருந்த பிரிட்டிஷ் ரெஸிடெண்ட் முதல் உலகப்போரில் பங்கேற்ற ராணுவ அதிகாரிகள் தங்குவதற்காகக் கட்டிய விடுதி இது. கர்னல் மஸ்கட் (Coloniel Mascot) பெயர் சூட்டப்பட்டது. பின்னர் திருவிதாங்கூர் அரசரின் விருந்தினர் மாளிகையாக இருந்தது. இப்போது கேரள சுற்றுலாத்துறையின் ஐந்து நட்சத்திர விடுதி.

சற்று பாழடைந்திருக்கும் இந்த கட்டிடத்தை 25 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கவிருக்கிறார்கள். (தி இந்து செய்தி) திருவனந்தபுரத்தின் பெருமிதங்களில் ஒன்றாக இந்த மாளிகை கருதப்படுகிறது.

சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுத்து ஐந்தரைக்கு கலாபவன் அரங்குக்குச் சென்றோம். அங்கே கல்பற்றா நாராயணன் வந்திருந்தார். அவருடனும் இயக்குநர் ரஞ்சித் (கேரள அரசின் திரைப்பட நிறுவனத்தின் தலைவர், திரைவிழாவை இந்த அமைப்பு நடத்துகிறது) ஆகியவர்களைச் சந்தித்தேன். நண்பர் சாம்ராஜ் வந்திருந்தார்.

விழாவில் பத்துநிமிடம் டி.பி.ராஜீவனைப் பற்றிப் பேசினேன். பின்னர் பாலேரி மாணிக்கம் ஒரு பாதிரா கொலபாதகத்தின்றே கதா சினிமாவை பார்த்தேன். நாவல் பலவகையான பகடிகள் கொண்டது. சினிமா நேரடியான குற்றப்புலனாய்வாக அமைந்திருந்தது. மூன்று கதாபாத்திரங்கள் நடுவே வேறுபாடு காட்டி நடித்திருந்தார் மம்மூட்டி.

ரஞ்சித் உறுதியான இடதுசாரி ஆதரவாளர். ஆனால் பாலேரி மாணிக்கம் இடதுசாரிகளை விமர்சிக்கும் நாவல், படமும் அப்படித்தான். 1956 ல் முதல் கேரள அரசு பதவிஏற்றபோது எப்படி அடித்தள மக்களின் கனவுகள் சிதைந்தன, எப்படி பழைய நிலப்பிரபுத்துவம் உருமாறி நீடித்தது என்றுதான் அந்தப்படம் பேசுகிறது. அதனால் ரஞ்சித்தை எந்த இடதுசாரியும் அங்கே வசைபாடவில்லை. அவருக்கு பதவி கிடைக்காமலும் இல்லை.

பாலேரி மாணிக்கத்தை இன்று தமிழில் எடுக்க முடியுமா? அதில் நிலவுடைமையாளர், அடக்குமுறையாளர், பெண்களைச் சூறையாடுபவர் ஓர் இஸ்லாமியர். ஹாஜியும் கூட. ஒடுக்கப்படும் மக்களின் சாதிப்பெயர்கள் சாதாரணமாக படம் முழுக்க வருகின்றன.  தமிழில் ஒடுக்குமுறையாளராக பிராமணரை மட்டுமே காட்டமுடியும், அல்லது சாதியற்றவராகக் காட்டலாம். இல்லையேல் இங்குள்ள அரைகுறை அரசியல் கும்பல் கடித்து கீறி படைப்பாளியைச் சிதைத்துவிடும்.

கலைக்கு இருக்கும் சுதந்திரத்தை அனுமதிப்பதனால்தான் கேரளத்தில் இந்தியாவின் தலைசிறந்த திரைவிழா நிகழ்கிறது. திரைவிழாவில் தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்வதுபோல கெட்டுகெட்டி நோன்பிருந்து தமிழ் சினிமா ரசிகர்கள் சென்று குவிகிறார்கள். இங்கே அப்படி ஒன்று நிகழமுடியாதென அவர்களுக்கு தெரியும்

படம் முடிந்ததுமே கிளம்பி தாகூர் தியேட்டருக்குச் சென்று இன்னொரு சினிமா பார்த்தோம். Triangle of Sadness . சுமாரான படம்தான். கலைப்படங்களுக்குரிய சுதந்திரத்தை பயன்படுத்தி கொஞ்சம் இலக்கு தவறி அலைந்தது. கலையின் ஒருமையும் முழுமையும் கைகூடாத உதிரிக் காட்சிகளின் தொகுப்பு, குழப்பமான முடிவு.ஆனால் மெல்லிய – ஆனால் நுட்பமற்ற – பகடி அதை பார்க்கச் செய்தது.

இன்றைய திரைவிழாக்களில் நல்ல படங்கள் அரிதாகிவருகின்றன. சென்ற ஆண்டு அருண்மொழி சென்று பதினெட்டு படங்களைப் பார்த்து பதினெட்டும் மட்கும்குப்பை என சொல்லி இவ்வாண்டு செல்லவேண்டாம் என முடிவெடுத்தாள்.

உலகளவிலேயே கலைப்பட இயக்கம் சோர்வுற்றிருக்கிறது. (நம்மூரில் ‘உலகசினிமா’ பார்ப்பவர்களாக சொல்லிக்கொள்பவர்கள் பார்ப்பதெல்லாம் மேலைநாட்டு வணிகப்படங்களைத்தான். நான் அவற்றைச் சொல்லவில்லை). உலகக் கலைப்பட இயக்கத்திற்கான பெருநிகழ்வுகளாக இருந்த கேன்ஸ், டோக்கியோ திரைவிழாக்களில் பெரும்பாலும் சுமாரான படங்கள் அரங்கேறுகின்றன. வெனிஸ், கார்லேவாரி பற்றி பேச்சே இல்லை. கேன்ஸ் திரைவிழாவில் வணிகசினிமா ஆளுமைகள் கொண்டாடப்படுகிறார்கள்.

பல காரணங்களில் முதன்மையானது சென்ற இருபதாண்டுகளாக உலக அளவில் இலட்சியவாதத்தின்மேல் விழுந்த அடி, அதன்விளைவான அவநம்பிக்கை. இன்று இருவகை சினிமாக்களே வருகின்றன. ஒன்று வழக்காமன இடதுசாரி அரசியல் கொள்கைகளை அப்படியே விழுங்கி அப்படியே கக்கும் படங்கள். எந்தவகை புதுமையும் அற்றவை. தனிப்பார்வை அற்றவை. மூன்றாமுலக அரசியல், பெண்ணிய அரசியல் என்றெல்லாம் எளிய முத்திரைகள் கொண்டவை. அந்த முத்திரைகளை மட்டுமே படைப்பில் தேடுபவர்களுக்கு அவை உதவலாம்.

அத்தகையவர்கள் இன்று உலகமெங்கும் கலையிலக்கியத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஏனென்றால் சோவியத் வீழ்ச்சிக்குப் பின் இடதுசாரிகளை ஆபத்தானவர்களாக எந்த அரசும் கருதவில்லை. இடதுசாரித்தனம் என்பது ஒரு வகை எளிய ‘மோஸ்தர்’ மட்டுமாக ஆகிவிட்டது. ஆபத்தற்ற ஒரு பாவலா. பெரும்பணம் புழங்கும் உயர்கல்வி, உயர்கலாச்சாரத் தளங்களில் அந்த ஆடம்பரம் மற்றும் சுகபோகம் பற்றிய குற்றவுணர்வின்றி அவற்றில் திளைக்க அந்த பாவனை உதவுகிறது. ஃபைவ்ஸ்டார் ஹோட்டல் மார்க்ஸிஸம். காடாத்துணிச் சட்டை, தடித்த கண்ணாடி, தாடி, கலைந்த தலை,தோள்பையுடன் நட்சத்திரவிடுதிகளில் ஷாம்பேன் அருந்தியபடி பேசப்படுவது.

ஆனால் துரதிருஷ்டவசமாக இவர்கள் கல்வி, கலாச்சாரத் துறைகளை கைப்பற்றியிருப்பதனால் இவர்களுக்கு புரியும் எளிய முத்திரைகளுடன் வராத படைப்புகள் ஏற்கப்படுவதில்லை, அசட்டுத் தயாரிப்புகள் மேடையேறுகின்றன. உலகளாவிய கலையிலக்கியச் சரிவுக்கு இவர்கள் முக்கியமான காரணம்.

இன்னொரு வகை படங்கள் வன்முறை, காமம், உளச்சிக்கல் ஆகியவற்றைப் பேசுபவை. ‘கச்சாவான’ படங்கள்.  கலை என்றுமே கனவுகள், இலட்சியங்கள் சார்ந்தது. உயர் உணர்வுகளை நாடுவது. எதிர்நிலை கொண்ட கலை கூட அதன் உச்சத்தில் மானுடம்பேசுவதே. இன்று அவ்விழுமியங்கள் ஐரோப்பாவின் Snobbery சூழலில் மையப் பேசுபொருளாக இல்லை. விளைவாக வன்முறையும் காமமும் பகடியுமே பெரும்பாலான படங்களில் உள்ளன. ரசிகனை அதிர்ச்சிக்குள்ளாக்கும் கொடூரச் சித்திரங்கள். அவை நிறையவே இணையத்தில் கிடைப்பதனால் அதிர்ச்சி உருவாவதுமில்லை.

உலகு பிரம்மாண்டமானது, விரிந்து பரவிய உலகப் பண்பாட்டுவெளியில் இருந்து ஐரோப்பாவின் சோர்வுச்சூழலை நிகர்செய்யும் புதுமையான படைப்புகள் வரலாமே என்று கேட்கலாம். வருவதில்லை. காரணம், இன்றைய கலைப்பட இயக்கமே ஐரோப்பாவை மையமாக்கியது. ஏற்பு ஐரோப்பாவில் இருந்தே வரவேண்டும். உள்ளூரில் அதற்கு பார்வையாளர்களே இல்லை. ஐரோப்பிய வரவேற்பு மட்டுமே ஒரு கலைப்படத்திற்கு மதிப்பை உருவாக்கும். முதலீட்டையும் திரும்பத் தரும். ஆகவே உலகமே ஐரோப்பாவுக்காக சினிமா எடுக்கிறது. கொரியாவானாலும் சரி, ஜப்பான் ஆக இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சரி. ஆகவே அவற்றில் வெளிப்படுவது ஐரோப்பிய ரசனைதான்.

இந்த எல்லைகளைக் கடந்து கலை செல்லவும்கூடும். கலைக்கு எப்போதுமே அந்த மீறல்தன்மை உண்டு. அத்தகைய படங்கள் நிகழும் தருணங்களையே சலிக்காமல் எதிர்பார்க்கிறோம். 2018 திரைவிழாவில் பார்த்த ரோமா (Roma) ஆகா (Aga ) ஆகிய படங்கள் அத்தகையவை. இம்முறை அத்தகைய அரியநிகழ்வுகள் ஏதும் நிகழ்ந்தனவா என்று தெரியவில்லை.

இரவு 1130 க்கு ஓட்டலுக்கு வந்தேன். அங்கே கேரள தொழில் வளர்ச்சித்துறை உயரதிகாரி உமேஷ் இ.ஆ.ப (N.S.K.Umesh I.A.S) வை சந்தித்தேன். சிலநாட்களுக்கு முன்புதான் அறம் வாசித்ததாகச் சொன்னார். அவருடைய மனைவி விக்னேஸ்வரிதான் கேரள சுற்றுலாத் துறை இயக்குநர்.

காலை எழுந்ததுமே திரும்ப நாகர்கோயில் கிளம்பிவிட்டோம். கே.பி.வினோதின் படப்பிடிப்பு அரங்குக்குச் செல்லலாம் என நினைத்தோம். ஆனால் அவர் இன்று சாலையில் காரில் இருந்தபடி படப்பிடிப்பை நடத்துவதாகச் சொன்னார். ஆகவே திரும்பி நாகர்கோயில்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 14, 2022 10:35

சாரு பற்றி, லட்சுமி சரவணக்குமார்

 

’சர்வாதிகார ஆட்சியின் முக்கிய அம்சங்கள் : அதிகாரம், வன்முறை.  தந்தை வழிச் சமூகமும் லிங்க மையவாதமும்  இதே போன்றதுதான் என்று பார்த்தோம். அது வேட்கையையும் திளைப்பையும் கண்கானிக்கிறது; தடை செய்கிறது; மொழியைத் தணிக்கை செய்கிறது. இதைத்தான் sexual and textual suppression என்கிறார்கள். இதை மீறுவதே க்றிஸ்டினாவின் எழுத்து. இதுதான் போர்னோவின் அரசியல். இவ்வகை எழுத்தே transgressive writing என்பது.’

கிறிஸ்டினா பெரி ரோஸி குறித்த கட்டுரையொன்றில் சாரு இப்படிக் குறிப்பிடுகிறார். பெரி ரோஸியின் எழுத்துகள் குறித்து அவர் எழுதியிருப்பது அப்படியே  தமிழ் சூழலில் அவருக்கும் அவரது எழுத்துகளுக்கும் பொருத்தும்.  நாற்பது வருடங்களுக்கும் மேலாக தமிழில் தனக்கென தனித்த போக்கையும் வேறு யாரும் முயன்று பார்க்காத மீறல்களையும் எழுதிக் கொண்டிருப்பவர்  சாரு நிவேதிதா.   பேச விழையாதவற்றின் மீதும் அருவருப்பானவையென ஒதுக்கித் தள்ளப்பட்டவற்றின் மீதும் தமிழ்  இலக்கிய உலகம் பெரும் விலக்கம் கொண்டிருந்த சூழலில் சாரு  அவற்றின் அழகியலையும்  கலை மதிப்பையும் தனது படைப்புகளில் அழுத்தமாய் பதிவு செய்தார். அப்படி பதிவு செய்ததற்காக இன்று வரையிலும் புறக்கணிக்கப்படுகிறவராகவும் இருக்கிறார்.  ஆனால் தன்னை நோக்கி வரும் வசைகளையும் தாக்குதல்களையும் ஒருபோதும் அவர் பொருட்படுத்தியதில்லை.  எழுத வந்த காலத்தில் எத்தனை தீவிரமாக இயங்கினாரோ அதே தீவிரத்தோடு இன்றளவும் இயங்கி வருகிறார் என்பது வியக்கத்தக்கது.

1984 ம் வருடம் என்று நினைக்கிறேன், மதுரையில் நடந்த நாடக விழாவில் சாருவின் ரெண்டாம் ஆட்டம் என்னும் நாடகம் அரங்கேற்றப்பட்டது. அந்த நாடகம் துவங்கிய சில நிமிடங்களிலேயே  பெரும் சலசலப்புகள் உருவாகி பார்வையாளர் வரிசையிலிருந்தவர்கள் நாடகத்தைப் பாதியிலேயே நிறுத்தும்படி கூச்சலிட்டதோடு சாருவையும் அவரோடு இருந்தவர்களையும் தாக்கத் துவங்கிவிட்டார்கள்.  அப்படித் தாக்கியவர்களில் பலரும் தீவிர இலக்கிய வாசிப்பு கொண்டவர்கள் என்பதோடு அரசியல் இயக்கங்களில் பங்காற்றிக் கொண்டிருந்தவர்கள்.   அந்த நிகழ்வில் அவரை தாக்கியதன் மூலம் பெரிதாய் சாதித்து விட்டதாய் நினைத்தவர்கள் எவரும் இன்று என்னவானார்கள் தெரியவில்லை. காலம் கலைஞனை ஒருபோதும் கைவிடுவதில்லை.  பொது சமூகத்தின் மனதை தொந்தரவு செய்வதுதான் ஒரு  கலைஞனின் அடிப்படை  குணம்.

’அறிவுப் பரவல் இரண்டு வகையான அடக்குமுறைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்பார் ஃபூக்கோ. சிலவற்றை அறிவுப் புலத்திலிருந்து அகற்றுவது என்பது ஒன்று. ஒரு சில ஒழுங்குகளை அறிவினூடாகத் திணிப்பது மற்றொன்று. பண்பாடு என்கிற ஆயுதத்தின் மூலம் உடல் சார்ந்த அறிவு, உடலைப் பேசும் உரிமை, பாலியல் தேர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது சமூகம். அதன்மூலம் எல்லாவிதமான ஒடுக்குமுறைகளையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமுள்ள குடிமகன், மகள் தயாரிக்கப்படுகின்றனர். ’ என ஒரு கட்டுரையில் அ.மார்க்ஸ்  எழுதுகிறார். சாருவின் எழுத்துகள் சமூகத்தின் மீது திணிக்கப்படும் இந்த ஒழுங்குகளுக்கு எதிராகவே   இயங்கி வருவதால்தான் அவர் தொடர்ந்து இங்கு புறக்கணிக்கப்படுகிறவராய் இருந்திருக்கிறார். அவருக்கென பெரும் வாசகப்பரப்பு இருக்கின்ற பொழுதும் இந்த நாற்பதாண்டுகளில் அவருக்கு எத்தனை விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்று தேடிப் பார்த்தோமானால் ஒரு கை விரல்களுக்குள் அடங்கிவிடும். தமிழ் சமூகத்தின் பெரும்பான்மையான விருதுகள் குறித்தும் அவற்றிற்குப் பின்னாலிருக்கும் அரசியல் குறித்தும் அவர்  கடந்த பல வருடங்களாகவே நிறைய எழுதியிருக்கிறார். எழுத்தையும் எழுத்தாளனையும்  இரண்டாம்பட்சமாக பொருட்படுத்தக் கூடியவையாகவே பெரும்பாலான இலக்கிய அமைப்புகள் இருப்பதால் அவர்களுக்கு  விருதுகள் என்பது எழுத்தாளர்களின் ஒழுக்கம்,  தனிப்பட்ட வாழ்வு இவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கக் கூடியதாக  இருக்கிறது.

ஒரு எழுத்தாளன் தனது முன்னோடிகளின் எழுத்திலிருந்து மட்டுமல்ல, வாழ்விலிருந்தும் தான் தன்னை உருவாக்கிக் கொள்கிறான். அந்த வகையில் நான் எழுத வந்த இந்த பதினாறு வருடங்களில் எனக்கான படைப்பு மனத்தையும் வாழ்வதற்கான பெரும் நம்பிக்கைகளையும் எனது முன்னோடிகளிடமிருந்தே நான் பெற்று வந்திருக்கிறேன்.   தமிழின்  முக்கிய எழுத்தாளர்கள் ஒவ்வொருவருமே எனக்கு அந்த   வகையில் ஆசான்கள் தான். இன்றைக்கிருக்கும் தகவல் தொடர்பு வசதிகள் பத்துப் பதினைந்து வருடங்களுக்குமுன் குறைவாக இருந்தது  என் தலைமுறையினருக்குக் கிடைத்த ஒருவகை அதிர்ஸ்டம்தான். ஒவ்வொரு எழுத்தாளரையும் தேடிச் சென்று சந்தித்ததும் உரையாடியதும் இன்றைக்கு நினைத்துப் பார்க்கையில் பெறுமதியானவையாய்த் தோன்றுகின்றன.

சாருவை வாசிக்கத் துவங்கியபோது எனக்கு பதினைந்து வயதிருக்கலாம். சின்னஞ்சிறிய நகரமொன்றில் உலகை எதிர்கொள்வதற்கான துணிவோ தெளிவோ இல்லாத  அந்த நாட்களில் வறுமையின் காரணமாய் கடுமையான தாழ்மையுணர்ச்சி கொண்டவனாய் இருந்தவனுக்கு இலக்கியம்  பெரும் துணையாய் அமைந்தது.  இடைவிடாத வாசிப்பு முதலிலில் எனக்குத் தந்தது தன்னுணர்ச்சியையும் நம்பிக்கையையும்தான். உலகை எழுத்தாளர்களின் கண்களின் வழியாய்க் காணத் துவங்கியபோது நானும் எனக்கான புதிய கனவுகளை உருவாக்கிக் கொள்ளத் துவங்கினேன்.

எக்ஸிடென்சியலிசமும் ஃபேன்ஸி பனியனும் துவங்கி  ஸீரோ டிகிரி, ராஸலீலா, எக்ஸைல், தேகம் என  அவரது நாவல்களும் அவரது சிறுகதைகளும்    வாசகனின் சமநிலையைக் குலைக்கக் கூடியவை.  வாழ்வு  குறித்தும் தத்துவங்கள் குறித்தும் நமக்கிருக்கும் இருக்கும் ஒழுங்குகளை குலைப்பதோடு விளிம்பின் கொண்டாட்டங்களை பிரதானப்படுத்துவதாய் அமைகின்றன. தமிழில் அனேக நாவல்கள் குடும்பம் என்ற அமைப்பினைச் சுற்றியேதான் இன்றளவும் எழுதப்படுகின்றன. சாருவின்  எழுத்துகள் குடும்பம் என்ற அமைப்பு தனிமனிதனின் மீது நிகழ்த்தும் வன்முறைகளுக்கு எதிரானதாக இருக்கின்றன.   மிக முக்கியமாய் நடுத்தர வர்க்கத்து வாழ்வு  ஒரு மனிதனை எந்தவிதமான அரசியல் நிலைப்பாடுகளும் அற்றவனாய் மாற்றிவிட்டிருப்பதை அவரது கதைகளில் நாம்  காணமுடியும்.

‘எதார்த்தம் பற்றிய கருத்தியல் அல்லது மாயப்புனைவு சார்ந்த வீரியம் குறித்த கருத்தியலைக் கைவிட்டாலொழிய – ஆண்பால் மேன்மை ஒரு பிறப்புரிமை என்று பிடித்துத் தொங்குவதை ஒரேயடியாகக் கைவிட்டாலொழிய, எல்லாவிதமான ஒடுக்குமுறை அமைப்புக்களும் செயல்படுவது தொடரும்.’ இதற்குக் காரணம்: முதன்மையான மானிட சந்தர்ப்ப சூழலில் அவை பெற்றுள்ள தருக்க ரீதியான உணர்ச்சிகரமான சம்மதமாகும். நவீன மனிதன் ஒற்றைக் குரலுக்கு எதிரானவனாய் இருக்க வேண்டியது அவசியம்.    நான் லீனியர் முறையில் கதை சொல்லும் போது வெவ்வேறு குரல்களை பதிவு செய்வதற்கான சாத்தியங்கள் உருவாகின்றன. ஆனால் நான் லீனியர் எழுத்துமுறை என்பது வேடிக்கையாக செய்து பார்க்கக் கூடிய ஒன்றல்ல.  அது கலையாக கை கூடி வர, தேர்ந்த வாசிப்பும் நுண்ணுனர்வும் அவசியமாகிறது. கோபி கிருஷ்ணனின் உள்ளேயிருந்த சில குரல்கள் நாவல் தழிழில்  இந்த வகை  எழுத்துக்கான ஒரு  துவக்கப்புள்ளி என்று கொண்டால் சாருவின் நாவல்கள்  இதில் உச்சமான வாசிப்பனுவத்தைத் தரக்கூடியவை.  “வித்தியாசத்தை விடுவிக்க நமக்கு ஒரு வேறுபட்ட சிந்தனை வேண்டும். இச்சிந்தனை தருக்கமும் மறுப்பும் அற்றது. பன்மையை வரவேற்பது. அங்கீரிக்கப்பட்டதிலிருந்து விலகும் பாதைகளை உள்ளடக்கியது.ஒப்புதல் உள்ளது, அதே சமயத்தில தனிப்படுத்துவதை உபகரணமாக கொண்டது.பாண்டித்திய விதிகளுக்குள் கட்டுப்படாது தீர்வில்லாத கேள்விகளை எதிர்கொண்டு மீண்டும் மீண்டும் விளையாடும் வேறுபட்ட சிந்தனை.’ என பின் நவீனத்தும் குறித்து ஃபூக்கோ குறிப்பிடுவதைக் கொண்டு சாருவின் எழுத்துகளை நாம் மதிப்பிட்டால் பன்மையை வரவேற்பதன் முக்கியத்துவம் பிடிபடும்.

சாரு தனது முன்னோடிகளாகக் குறிப்பிடும் ழார் பத்தாய், ஜெனே, சார்த்தர் இவர்களை கொஞ்சமே கொஞ்சமாய் வாசித்தாலும் அவர்களின் எழுத்துக்களை வாசிப்பதில் எத்தனை திவீரம் காட்டியிருக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். சாருவின் புனைவுகளில் வரும் முனியாண்டி நமக்கு ஜெனேயின் அர்மாண்டை பல சமயங்களில் நினைவுபடுத்துகிறான். முனியாண்டியும் அர்மாண்டும் வெவ்வேறு நிலத்தில் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்த ஒரே மனிதர்கள். ஜெனேயின் திருடனுடைய குறிப்பு புத்தகம் நாவலில் வரும் அர்மாண்ட் தனது எல்லாவிதமான கீழ்மைகளுக்கு இடையில் மிகவும் புராதனமானவனாக, ஒரு கனவானை விட மிகவும் தருக்கப்பூர்வமானவனாக இருக்கிறான்; மரியாதைக்குரிய பூர்ஷ்வா வைவிட மிகவும் நேர்மையானவனாகவும், நேரடியாகவும் நடந்து கொள்ளுகிறான். பூர்ஷ்வாவின் (நடுத்தர வணிக வர்க்கம்) உண்மையான நம்பிக்கைகளை எஜமானத்துவம் பற்றிய மாயையின் பொருட்டு அனுபவிக்கிறான்.

இலக்கியத்தில் பாலியலையும் மீறலையும் எழுதும் போது வாசிப்பவருக்கு அது என்னவிதமான அனுபவத்தைத் தருகிறது என்கிற கேள்வியும் குழப்பமும் பெரும்பாலனவர்களுக்கு வருவதுண்டு. இச்சையைத் தூண்டும்படியான ஒன்றை ஒரு எழுத்தாளன் ஏன் எழுத வேண்டுமென்கிற கேள்வியை தொடர்ந்து எழுப்புகிறார்கள். கலை படைப்புகளில் அழகுணர்ச்சியை எதிர்கொள்வது குறித்து காண்ட் என்னும் அறிஞர் நமக்கு  சில விளக்கங்களைத் தருகிறார்.  அழகால் இன்புறுவது, வேறுவிதமான இன்பங்களிலிருந்து தனித்தன்மை கொண்டது.  என் தோட்டத்திலிருக்கும் பழுத்த ஸ்ட்ராபெரி களிப்பூட்டும்  சிவந்த நிறத்துடனும், மிருதுத்தன்மையுடனும்,  நல்ல மணத்துடனும் இருப்பதால் அதை என் வாயில் போட்டுக் கொண்டேனென்றால் என்  இரசனை மாசுபட்டதாகும். நம் எதிர்வினை அசிரத்தையானதாக இருக்கவேண்டும், அதன் குறிக்கோள் அது உருவாக்கும் இன்ப உணர்வுகளிலிருந்து தனித்து இயங்குவதாக இருக்க வேண்டும் என காண்ட் நினைக்கிறார். இத்தாலிய ஓவியர் போட்டிசெல்லியின் வீனசை ஒரு கவர்ச்சிப் பாவையாக நினைத்து ஒரு பார்வையாளர் காம இச்சையோடு எதிர்வினை செய்தால் அவர் அவளை அழகுக்காக ரசிக்கவில்லை.  உண்மையில் அவ்விடத்தில் அழகோடுள்ள அழகியல் முறையான உணர்வு அறுந்துபோகிறது. இலக்கியத்தில் எழுதப்படும் இச்சைகளை எதிர்கொள்வதற்கும் நாம் இந்த விதிகளை பொருத்திப் பார்த்துக் கொள்வது நல்லது. ’நமக்கு அளிக்கப்பட்டுள்ள அழகியல் கோட்பாடுகள்  அனைத்தும் உடலையும், உடல் சார்ந்த இச்சைகளையும் விலக்கி வைத்து, அதன்மூலம் மனித சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றன. முழு முற்றான அதிகாரத்தை நிறுவுகின்றன. ’  என தனது எரோட்டிசம் நூலில் ழார் பத்தாய் எழுதுகிறார். ஒரு நல்ல வாசகன் எல்லா விதமான படைப்புகளையும் வாசிக்கக் கூடியவனாகவும் அதனைப் புரிந்துகொள்ள முயற்சிப்பவனாகவும் இருக்க வேண்டும்.

புனைவுகள், அ புனைவுகள், மொழிபெயர்ப்புகள் என சாரு தான் தேர்ந்தெடுக்கும் எல்லாவற்றிலும் ஒரு தனித்துவத்துவமுண்டு.   இசை குறித்து அவர் எழுதின  ஒவ்வொரு கட்டுரையுமே முக்கியமானது. கெளத சித்தார்த்தன் உன்னதம் துவங்கியபோது அதன் முதல் இதழில் இசை குறித்து சாரு எழுதிய கட்டுரை ஒரு மகத்தான வாசிப்பனுபவம்.  கலகம் காதல் இசை,  தீராக்காதலி இரண்டும் தமிழில் இசை குறித்து எழுதப்பட்ட மகத்தான நூல்கள்.  நவீன இலக்கிய வாசகன் குறிப்பிட்டதொரு புள்ளியில் அடங்கி விடாமல் பரந்துபட்ட அறிவைப் பெற விழைகிறான். இசை சினிமா அரசியல் இலக்கியம் வரலாறு எல்லாவற்றைக் குறித்தும் அவனுக்கு அக்கறை இருக்கிறது. சாரு இத்தனை வருட காலம் தொடர்ந்து வாசிக்கப்பட்டு வருவதற்கு அவர் இந்த எல்லா வகைமைகளிலும் இடையறாது எழுதிக்கொண்டிருக்கிறார் என்பதுதான் முக்கியமான காரணம்.

மொழியை விருப்பமானதொரு மிருகம் போல் பழக்குதல் அத்தனை எளிதில்லை. புனைவெழுத்தாளனுக்கு அவன் மொழியே அவனது உடலாக வேண்டும். நல்ல கதை சொல்லிகளுக்கும் கூட கதைமொழியில் சிக்கல் ஏற்படுவதுண்டு. போலவே, எதைச் சொல்லலாம் எதைச் சொல்ல வேண்டாமென்கிறத் தேர்விலும் குழப்பமிருக்கும். சாருவின் எழுத்து ஒரு வாசகனுக்கு எதை வேண்டுமானாலும் சுவாரஸ்யமாய்ச் சொல்லலாமென உணர்த்தக் கூடியதொன்று.

உயிர்மை இதழ் துவங்கப்பட்ட காலகட்டம் தமிழ் இலக்கியத்தில் முக்கியமானதெனக் கருதுகிறேன். சாரு நிவேதிதா, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், ரமேஷ் ப்ரேம் என தமிழின் அத்தனை ஜாம்பவான்களும் தொடர்ச்சியாக அந்த இதழ்களில் எழுதிய கட்டுரைகள்  முக்கியமானவை.  கலை இலக்கியம் குறித்தும் அரசியல் குறித்தும் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகளின் வழியாகத்தான்  எழுத்தை ஒரு வாழ்வாகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்கிற விருப்பம் எனக்குள் உருவானது.  முதல் சிறுகதையிலிருந்து நான்  எல்லோராலும் கவனிக்கப்பட்டவன் என்கிற மகிழ்ச்சி எப்போதும்  எனக்குண்டு. சாரு அப்படி எனது சிறுகதையை வாசித்துவிட்டுத்தான் முதல்முறையாக என்னை அழைத்துப் பேசினார். 2007 ம் வருடத்தின் இறுதி நாட்களில் மதுரைக்கும் சென்னைக்குமாய் அலைந்து கொண்டிருந்தவனுக்கு சென்னையில் நிரந்தரமாகத் தங்கிவிடலாமென்கிற நம்பிக்கையை  உருவாக்கியவர்களில் சாருவும் ஒருவர்.  தன்னை சந்திக்க வருகிறவர்களை சாருவைப் போல் உபசரிக்கும் இன்னொரு தமிழ் எழுத்தாளரை நான் இதுவரையிலும் சந்தித்ததில்லை. கதைகளுக்கான உலகை தேர்ந்தெடுப்பதில் மட்டுமில்லாமல் வாழ்வை நிறைவாக வாழ்வதற்கான வழிமுறைகளையும் நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டதுண்டு. ஒரு எழுத்தாளன் எத்தனை குழப்பமானவனாக இருந்தாலும் அவன் எந்தவிதமான அரசியல் நிலைப்பாடு கொண்டவனாய் இருந்தாலும் தன்னள்வில் தனக்கு நேர்மையானவனாக இருக்க வேண்டியது அவசியம். சாருவின் எழுத்துக்கள் அவரோடு சில புள்ளிகளில் இணையவும் சில புள்ளிகளில் நம்மை விலக்கவும் செய்யக்கூடியது. அந்த இணைவும் விலகலுமாகவே அவரை ஏற்றுக் கொள்ளவேண்டியது அவசியமெனப் படுகிறது.  மனிதர்களை அவர்களின் அத்தனை பிசிறுகளோடும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதை நான் அடிக்கடிச் சொல்வதுண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தேர்வுகள் என்பதுதான் பரிணாமத்தின் இயல்பு.  கலை குறித்த  சாருவின் நிலைப்பாடுகள், அரசியல் இவற்றோடு சில சமயங்களில் என்னால் உடன்பட முடியாமல் போவதுண்டு. அதற்காக சமூக ஊடகங்களில் கடுமையாக எழுதியதுமுண்டு. ஆனால் ஒருபோதும் அது அவரின் மீதான வெறுபாய் மாறியதில்லை. சாருவை என்றில்லை ஒரு எழுத்தாளனாக என்னால் இன்னொரு எழுத்தாளனை ஒருபோதும் வெறுக்க முடியாது.

 

 

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 14, 2022 10:33

நட்சத்திரவாசிகள், ஒரு வாசிப்பு

உலகமயமாக்கலுக்கு பின்னர் வேலைவாய்ப்பின்மையின் வீதம் பெரிதும் குறைந்துவிட்டதன் விளைவாக,நம் மக்கள் எதிர்கொண்டது மெல்லிய பணவீக்கத்தை.பல்வேறு வித வேலைவாய்ப்புகள் தோன்றியது, பொருளியல் ரீதியாக மக்களை தேற்றினாலும் அதனுடனே அத்தியாவசிய பட்டியலில் பல விஷயங்களும்,பொருட்களும் சேர்ந்து கொண்டன. பொருளாதார மேம்பாடு அடைய கல்வியை கருவியாக பயன்படுத்த தொடங்கிய நம்மக்கள்,அதிகாரத்தை எட்ட உதவும் நோக்கிலும் மிக விரைவாக கல்வியை நகர்த்த தொடங்கினர்.வர்க்க முன்னேற்றம் அடைய கல்வி பயன்படுத்தியது சற்றே பின்னே தள்ளப்பட்ட காலத்தில் வாழ்வதாக நாம் இந்த காலத்தை வரையறுக்கலாம் என்று நினைக்கிறேன்.

பிரபலமாக இருக்கக்கூடிய எதுவும் முன்முடிவுகளுக்கு இடமளிப்பதாகத்தான் இருக்கும். சினிமா, மருத்துவம் என்று பட்டியலிட்டால் மிக நிச்சயமாக தகவல் தொழில்நுட்பத்துறையும் வரும்.அது சூழலில்  ஏற்படுத்தி தாக்கம் என்பது சற்றே பரந்துபட்டது.தோராயமாக ஒரு இளைஞனை அழைத்து பேசினால் கூட மிக நிச்சயமாக அவனுக்கு இத்துறை சார்ந்த நெருங்கிய உறவுகள் யாராவது இருப்பார்கள்.பல்வேறு விதமான வாழ்க்கை சூழலை சார்ந்தவர்கள் சேரும் களமாக இருக்கிறது அத்துறை.அதனாலேயே பல வேறு விதமான வாழ்க்கை முறையை கொண்டயிடமாகவும் அது இருக்கிறது.தமிழ் சமூகத்திற்கு சற்றே விலகிய மக்களையும் அவர்களின் பழக்க வழக்கங்களை இங்கிருந்து எட்டி பார்க்கும் மக்கள் பலவிதமான அகச்சலனங்களை அடைவதை நாம் பார்க்கிறோம்.சிலர் காழ்ப்படைவதும்,அத்துறை சார்ந்த முன்முடிவுகள் உள்ளவர்கள் அதை பற்றின மேலதிகமான பதின்ம கனவும் கொண்டிருப்பதையும் நாம் பார்க்கலாம்.ஊடகம் இதற்கு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்.முக்கியமாக சினிமா.

கார்த்திக் பாலசுப்பிரமணியத்தின் இந்த நாவல் தகவல் தொழில்நுட்பத்துறையை பாடுபொருளாக கொண்டிருத்தாலும்,மேலே சொன்ன உலகமயமாக்கல்,கல்வி, நவீன வாழ்க்கை முறை ஏற்படுத்தும் சிக்கல் போன்றவற்றையே அதிகம் பேசுகிறது அல்லது இதை பேசாமல் அவர்களின் வாழ்க்கையை முன் வைக்க முடியாது.நாவலின் தொடக்கத்தில் வரும் ஸ்விகி இளைஞன் தொடங்கி,டெக்சி ஓட்டுனர்,செக்யூரிட்டி என்று இக்கால நெருக்கடியின் மக்களே சூழலை வரைய நாவலாசிரியரால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.பெருவாரியான பாத்திரங்கள் தமிழ் சமூகத்தை சேர்ந்தது தான்.இதனால் செய்தி தாளில் இடம் பெரும் சம்பவங்களை விடுத்து வலுவான பிரச்சனைகளே வருகிறது.

சிறு சிறு பாத்திரங்களும் அதனதன் வாழ்வில் ஒரு நவீன சிக்கலில் இருக்கிறது.பால்குடி மறவாத குழந்தையை அலுவலகத்தின் கிழே காப்பகத்தில் விடுகிறது ஒரு பாத்திரம்.திட்டமிடாமல் தங்கிய கருவை அணுகுவது பற்றி குழம்பும் பாத்திரம்.மேலதிமான நுகர்வில் உள்ள சிக்கல் என்று பெரும்பாலன பாத்திரங்களின் சிக்கல்கள் புறவயமாக ஆசிரியரியரால் வகுத்தளிக்கப்படுகிறது.ஒருகணம் இந்த நூற்றாண்டின் நாவலாக மட்டுமே இது இருப்பது வெளிபடையாக தெரிகிறது.தத்துவ வீழ்ச்சியையோ, அறவீழ்ச்சியையோ பாடுபொருளாக கொண்ட நாவலை இப்போது கற்பனை செய்வதில் உள்ள அடிப்படை தடைகளில் ஒன்று, அவகளுக்கான தற்காலிக விடுதலையை கோரும் பல வஸ்துகள் நம்மை சுற்றியே சதா காலமும் இருக்கிறது.தன் வாழ்விலிருந்தே வாரம் ஒரு முறையாவது வெளிவரும் மக்களாக தான் இந்த பாத்திரங்களை நாம் புரிந்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

நாவலின் தொடக்கத்தில் கடந்த கால நினைவின் தாபத்தில் உழலும் பாத்திரங்கள் வருகிறது.கடந்த காலத்தை ஒரு பொற்காலமாக கற்பிதம் செய்யும் மனச்சாய்வு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.உண்மையில் அவர்கள் கடந்த காலத்திலும் அவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்வை வாய்த்தவர்களாக இருக்கமுடியாது.கடந்த கால பிடிமானம் என்ற பாவனை. நாவலின் தொடக்கத்தில் கார் ஓட்டுனர் தாய்நிலமான தஞ்சையை கற்பனை செய்வது இதற்கு நல்ல உதாரணம்.

முதல் பத்து அத்தியாயங்களில் வரும் பாத்திரங்கள் அனைத்துமே இதே நினையில் தான் இருக்கிறது.பதினான்காவது அத்தியாத்திலிருந்தது தான் நாவலில் தன்னை கண்டறிய தொடங்குகிறார் ஆசிரியர்.அதற்கு பின்னான அத்தியாயங்கள் அனைத்திலும் உள்ள கூர்மை, முற்றுப்பெறாத பாத்திர உணர்நிலைகள் என்று நாவல் வலுபெர தொடங்குகிறது.வலுவான தத்துவார்த்த தளத்தை எட்ட தொடங்கிய தருணம் அதற்கு பின்னர் தான் வருகிறது.உதாரணமாக அங்கிகாரத்தை பேசக்கூடிய அத்தியாயங்களான நித்திலனின் ஆரம்ப கால கதை.வேணுகோபால் சர்மாவுடன் – அங்கிகாரம்(நாற்காலி) மறுக்கப்படுவதும் மீண்டும் மூன்று மாதங்கள் கழித்து வரும்போது அளிக்கப்படுவதும்.

அதிகாரத்திற்கு அடிபணிய நேரும் மனங்கள் தன்னிலையை உதாசீனம் செய்ய பழக என்னென்ன பாவனைகள் செய்யவேண்டும் என்பதை கிட்டதட்ட ஒவ்வொரு பாத்திரமுமே தெரிந்து வைத்திருக்கிறது.இயல்பு என்று ஏற்றுக்கொண்டு நகரும் பாத்திரங்கள் தமிழ் உலவியிலை கீறி காட்டுகிறது.

சாஜு என்ற பாத்திரம் ஒரு கட்டத்தில் அதில் தோற்றுவிடுவதை நாவல் கண்டடைகிறது.அவன் அக உரையாடல் மேலதிகமான அதிகாரத்தை ‘இயல்பு’ என்று ஏற்றுக்கொள்ள முயற்சி செய்து தோற்கும் போது “நடைமுறைக்கும் இயல்புக்கும் ” உள்ள இடைவெளி ஒரு வகையில் வெடிக்கிறது.அதாவது தான் என்ற தன்னிலையை மெல்ல வளைக்க முயற்சி செய்வது நடைமுறை.வளைய முடியாமை இயல்பு.

இயல்பாமவே இலக்கிய பிரதியில் ஒரு அம்சம் மீண்டும் வருகையில்  அது முன்னர் வந்தது போல் இருக்காது.வேணுவிடம் சாஜூ வேலையிழக்கும் போது சொல்லும் அதே வரிகளை பின்னர் வேணு ஸ்ரீபனிடம் சொல்லும் போது ஏற்படக்கூடிய நிதர்சனம் முன்பு இல்லாதது.

நவீன குடும்ப அமைப்பு எதிர்கொள்ளும் சிக்கல்கள் நாவலில் விரிவாக பேசப்படுகிறது.பொருளியல் ரீதியாக குடும்ப அமைப்பு, தருவதும் கேட்பதும் தொடர்ந்து மாறியவண்ணம் இருப்பதால்,பலிகெடாவை  வாங்கிய வண்ணமே அது உள்ளது.இதற்கு காதல் திருமணம் செய்து கொண்ட சாஜூவும் , நிச்சயத்திருமணம் செய்த நித்திலனும் ஒன்று தான்.

நாவலின் பலவீனம் என்பது உறவு சிக்கல் தான் என்று தோன்றுகிறது.வண்ணங்கள் மாறினாலும்,அதன் இருப்பும்,சாரமும் ஆசிரியரின் மெனகெடலை காட்டுகிறது.அங்கு வெளிப்படக்கூடிய ஆழம் சற்றே நயந்துகொண்டும், துறுத்திக்கொண்டும் தெரிகிறது.

உருவகங்களும், படிமங்களும் வாசிப்பை மேலதிக இடத்திற்கு இட்டு சென்றாலும் கூட, நாவலின் கால எல்லை ஆதார கேள்விகளை வலுகுன்ற செய்கிறது.அதாவது சேவைதுறைகள் இல்லாமல் ஆகும் ஒரு காலம் வரும் என்றால், அது நாவலின் பெறுமானத்தை நிச்சயம் கேள்விக்கு உட்பட்டதாக்கும்.

நாவல் வாசித்து சில மாதங்கள் கழித்த பின்னர் சென்னையில் ஒரு முக்கிய மாலிற்கு செல்ல நேர்ந்தது.சினிமா மற்றும் காட்சி ஊடகங்கள் வழியாக அறிமுகமாகியிருந்தது அச்சூழல்.திடுக்கிடும்  ஓர் உண்மையா சொல்லியது.உள்ளே வந்தது முதல் உணவு மேசைகளின் அணி வகுப்பு வரை எங்கும் என் கண்ணில் அகப்பட்டதே ஒன்றேதான்.சிறுவர்கள்/சிறுமிகள்.முதல் நிலையை தாண்டாத மழலைகள்.அவர்களுக்கு உணவு ஊட்டும் தாய்மார்கள், இருகிய ஜீன்சும், டீ – சர்ட்டுமாக.பணிபுரியும் பெண்கள்.குழந்தைகளை வார இறுதியில் வைத்து மேய்க்க முடியாது, மாலுள் சரணாகதியாகியவர்கள்.’நட்சத்திரவாசிகள்’ என்று சொல்லிக்கொண்டேன்.

அ. க. அரவிந்தன்.

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 14, 2022 10:31

அ.வெண்ணிலா, ஒரு கடிதம்

அ.வெண்ணிலா, தமிழ் விக்கி

அன்புள்ள ஜெ,

அ.வெண்ணிலாவின் எழுத்துக்களை ஒட்டுமொத்தமாக வாசிப்பதற்கான ஒரு வாய்ப்பு இந்த விஷ்ணுபுரம் விருதை ஒட்டி அமைந்தது. அவருடைய எழுத்திற்கு உரிய ஒரு தனிச்சிறப்பைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இது வேறெவரையும் offensive ஆகச் சொல்வதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

நான் அக்காடமிஷியன். எனக்கு தெரிந்து இன்றைய எழுத்தின் மிகப்பெரிய சிக்கலே அகடமிக் ஆக ஒரு definition எல்லாருக்கும் அளிக்கப்பட்டுவிடுகிறது என்பதும் வாசகன் அதைவிட்டு வெளியேபோக மிகவும் கடினம் என்பதும்தான். இலக்கியவிழாக்கள், ஏராளமான ஆய்வுக்கட்டுரைகள் வழியாக இந்த விஷயம் நடைபெறுகிறது. நான் பணியாற்றும் பல்கலை முழுநேரமாக இதையே செய்துகொண்டிருக்கிறது.

நல்லவேளையாக தமிழ்நாட்டில் இது கொஞ்சம் கம்மி. தமிழ்ப்பல்கலையில் இருந்து இதேபோல சமகால எழுத்தாளர்கள் மீது defining and limiting process எதுவும் நிகழ்வதில்லை. அந்த அளவுக்கு எவரும் எழுதுவதில்லை. அவர்களின் அகடமிக் கேரியரின் பாகமாக ஒரு சில ஆய்வெடுகள் எழுதப்படும். அதெல்லாம் அந்த டெம்ப்ளேட்டிலேயே இருக்கும். அதன்பிறகு ஒன்றும் எழுதமாட்டார்கள். எவரும் அதையெல்லாம் படிப்பதுமில்லை. நவீன இலக்கியம் சார்ந்து பல்கலைகளில் பெரிதாக ஒரு ஆக்டிவிட்டியும் நடப்பதுமில்லை.

ஆனாலும் இந்த கட்டாயம் சூழலிலே உள்ளது. குறிப்பாக இந்திய அளவிலோ வெளிநாடுகளிலோ இலக்கியக் கருத்தரங்குகளுக்குச் செல்லும் எழுத்தாளர்களுக்கு இந்த டெம்ப்ளேட் அபாயம் உண்டு. இது சீனாவில் லோட்டஸ் ஃபூட் வைப்பது மாதிரி விசயம். காலை உயிருடன் இரும்புச்செருப்புக்குள் போட்டு வளர்ச்சிகுன்ற வைத்துவிடுகிறார்கள். அதையே அழகு என்று சொல்லி நம்பவும் வைத்துவிடுகிறார்கள். குறிப்பாக பெண் எழுத்தாளர்கள், தலித் எழுத்தாளர்களுக்கு இந்த அபாயம் அதிகம். முற்போக்கு எழுத்தாளர்களுக்கும் உண்டு இந்த மருந்து.

இதனால் ஒரு பெண் எழுதவந்ததுமே பெமினிச முத்திரை வந்துவிடும். அதன்பின் அதைத்தான் எழுதியாகவேண்டும். எல்லா அரங்கிலும் அதையே சொல்லியாகவேண்டும். வேறு எதையும் சொல்லமுடியாது. இந்த கட்டாயத்தை பல பெண் எழுத்தாளர்கள் ஒரு பிரிவிலேஜ் ஆக எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் சொல்வதையே எழுதினால் பேரும் புகழும் கிடைக்கிறதே. பிறகு ஏன் வேறுமாதிரி எழுதவேண்டும்? தமிழில் எழுதும் பெண் எழுத்தாளர்கள் அத்தனைபேருமே இந்த Snare களிலே சிக்கியவர்கள்தான். என் பார்வையில் தமிழிலே சிறந்த எழுத்தாளர்களிலே ஒருவரான அம்பைகூட இந்த சிக்கலிலே மாட்டிக்கொண்டவர்தான். அது armour என நினைக்கிறார்கள். அது cage என்று தெரிவதில்லை.

இந்தச் சூழலில் அ.வெண்ணிலா தனித்து நிற்கிறார். அவரும் முற்போக்கு முகாமிலேதான் இருக்கிறார் என நினைக்கிறேன். ஆனால் அவர் எழுத்து அதிலே சிக்கிக் கொள்ளவில்லை. அவருடைய தேடல்கள் எல்லா பக்கமும் இருக்கின்றன. கங்காபுரம் மாதிரி ஒரு வரலாற்றுநாவலை எழுதுகிறார். அது சோழர்வரலாற்றுக்குள்ளே செல்கிறது. அதிலுள்ள சாகசம், டிராமா எதையும் கவனிக்காமல் அன்றிருந்த அரசியல்நுட்பங்களுக்குள்ளே செல்கிறது. அது சாதாரணமாகப் பெண்கள் எழுதும் இலக்கியம் அல்ல. உடனே சாலாம்புரி சமகால அரசியலுக்குள்ளே செல்கிறது. trap politics அரசியலின் முகங்களை பேசுகிறது. இப்படி அவருடைய புனைவுகள் சுதந்திர்மாக உள்ளன.

அதேமாதிரி அவருடைய ஆய்வுகளும். தேவரடியார் வாழ்க்கை பற்றிய ஒரு ஆய்வு. இன்னொரு ஆய்வு நீரதிகாரம். அது இன்னொரு பகுதி. ஆய்வுகள், நூல்பதிப்புகள் என்று ஒரு முழுமையான அறிவுஜீவியாகவே செயல்படுகிறார். இந்த தளத்திலே இன்றைக்கு தமிழில் செயல்படும் எழுத்தாளர்களே இல்லை. ஆச்சரியமான ஒரு தீவிரம் இது. அவருடைய எழுத்துக்களுக்கு வாழ்த்துக்கள்

ஸ்ரீனிவாஸ்

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 14, 2022 10:31

விஷ்ணுபுரம் விழா உரைகள்

விஷ்ணுபுரம் விழா 2010 முதல் நிகழ்கிறதென்றாலும் சுருதிடிவி வந்தபின்னர்தான் முறையாக அனைத்து உரைகளும் ஆவணப்படுத்தப்படுகின்றன. நவீன தொழில்நுட்பத்தின் ஒரு சாதனை. கூடுதலாக சுருதி டிவி கபிலன் அவர்களின் ஆர்வம்.

2020 விஷ்ணுபுரம் விழா பெரிதாக ஆவணப்படுத்தப்படவில்லை. ஏனென்றால் அது உள்ளறை நிகழ்வு.

2021 விக்ரமாதித்யன்

விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள் 2020 சுரேஷ்குமார இந்திரஜித்

விஷ்ணுபுரம் விருது விழா 2020 உரை

 

2019 அபி

விஷ்ணுபுரம் விழா 2019 உரைகள் அனைத்தும்

 

2018 ராஜ் கௌதமன்

விஷ்ணுபுரம் விழா 2018 உரைகள் அனைத்தும் 2017 சீ. முத்துசாமி

விஷ்ணுபுரம் விருது 2017 உரைகள் அனைத்தும் 2016 வண்ண தாசன்

விஷ்ணுபுரம் விருது விழா 2016 உரைகள் அனைத்தும்

2015 தேவதச்சன்

பதிவாகவில்லை.

2014 ஞானக்கூத்தன் 

2013 தெளிவத்தை ஜோசப் விஷ்ணுபுரம் விருது விழா 2013 காணொளி விஷ்ணுபுரம் விருது 2013 உரைகள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 14, 2022 10:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.