Jeyamohan's Blog, page 634

February 2, 2023

ஆரவல்லி சூரவல்லி

ஆரவல்லி சூரவல்லி கதை பெண்கள் ஆளும் கற்பனை அரசுக்கு எதிரான பாண்டவர்களின் போர் பற்றிய நாட்டார் காவியம். தெருக்கூத்து, நாடகம் ,சினிமா என பல வடிவங்களில் வந்து ஒரு காலகட்டத்தில் மிகவும் புகழ்பெற்றிருந்தது. பீமனுக்கு ஆரவல்லிக்கும் சேவல்சண்டை எல்லாம் கூட நடைபெறுகிறது

ஆரவல்லி சூரவல்லி கதை ஆரவல்லி சூரவல்லி கதை ஆரவல்லி சூரவல்லி கதை – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 02, 2023 10:34

தஞ்சையில் டால்ஸ்டாய்- எம்.கோபாலகிருஷ்ணன்

அண்மையில் ‘துருவம்’ இலக்கிய அமைப்பினர் ‘தீர்த்த யாத்திரை’ நாவல் குறித்த கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் கலந்துகொள்வதற்காக தஞ்சை சென்றிருந்தேன். நிகழ்ச்சி ஒரு புத்தகக் கடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தஞ்சை புறநகரில் அழகிய ஓர் வளாகத்தில் இருந்தது அந்தப் புத்தகக் கடை. உடனடியாக கவனம் ஈர்க்கும் பெயர், ‘டால்ஸ்டாய் புக் ஸ்டோர்’.

சிறிய கடைக்குள் எளிமையான அலமாரிகளில், ஒழுங்குடன் வகை பிரிக்கப்பட்டு நேர்த்தியாக அடுக்கப்பட்ட புத்தகங்கள். தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் தொடக்க நிலை வாசகனுக்கான எல்லாப் புத்தகங்களையும் பார்க்க முடிந்தது. அத்துடன் செவ்விலக்கிய வரிசையிலும் முக்கியமான நூல்கள் அனைத்துமிருந்தன. இதுவரை அச்சில் நான் பார்த்திராத எலினா ஃபெரான்டேவின் ‘தி டேஸ் ஆஃப் அபன்டன்மென்ட்’ நாவல் அங்கிருந்தது வியப்பில் ஆழ்த்தியது.

நூல் நிலையத்தை நடத்தும் அச்சுதன் பொறியியல் பட்டதாரி. சில காலம் வேலை பார்த்திருக்கிறார். பெருந்தொற்று காலத்துக்குப் பின் இந்த புத்தகக் கடையைத் தொடங்கி நடத்துகிறார். வாடகைக்கும் இதர செலவுகளுக்குமாய் நாளொன்றுக்கு அவர் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யவேண்டும். தஞ்சையில் இது சாத்தியமா? விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையுடன் இலக்கிய வாசகர்கள் உள்ள ஒரு ஊரில் இப்படியொரு முயற்சி தேவையா? இப்படியெல்லாம் கேள்விகள் என்னிடமிருந்தன. ஆனால், இதெல்லாம் எனக்குத் தெரியாதா என்பதுபோல மிக அமைதியாக புன்முறுவலுடன் ஆனால் தன் லட்சியம் சார்ந்த உறுதியுடன் அடக்கமாகப் பேசுகிறார் அச்சுதன்.

மாதத்தின் முதல் வாரத்தில் ஆங்கில நூல்களைக் குறித்து உரையாடும் ‘English Readers Club’ நிகழ்ச்சி. இறுதி வாரத்தில் ‘துருவம்’ அமைப்பினர் ஏற்பாடு செய்யும் கலந்துரையாடல் நிகழ்ச்சி. அதிகபட்சம் இருபது பேர் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுகள் மிகுந்த ஆர்வத்துடனும் ஊக்கத்துடனும் நடத்தப் படுகின்றன.

நூல் நிலையத்தின் வெளிப்பக்கம் ஒரு தகவல் பலகை. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் இருவரின் பரிந்துரைப் பட்டியல் அழகாக அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது. தமிழிலும் ஆங்கிலத்திலும் நாளிதழ்களில் வெளியான இலக்கியம் சார்ந்த செய்திகள், நேர்காணல்கள் அழகாக வெட்டப்பட்டு இடம்பெற்றிருந்தன.

ஒவ்வொரு காலகட்டத்திலும் எங்கேனும் ஓர் அதிசய மனிதர் இப்படித்தான் இலக்கியச் சுடரை பேணிப் பாதுகாக்கிறார்கள். பலாபலன்களைக் குறித்தோ லாப நட்டங்களைப் பற்றியோ கவலைப்படாத அவர்களைப் புரிந்துகொள்வது எளிதல்ல. அவ்வாறானவர்களின் தன்னலமற்ற காரியங்கள்தான் எழுத்தின் மீதும் இலக்கியத்தின் மேலும் நம்பிக்கைகொள்ளச் செய்கின்றன.

தஞ்சை செல்லும் நண்பர்கள் தவற விடக்கூடாத இடம் புதுக்கோட்டை சாலை, பிஷப் சுந்தரம் வளாகத்தில் அமைந்துள்ள ‘டால்ஸ்டாய் புக் ஸ்டோர்’.

எம்.கோபாலகிருஷ்ணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 02, 2023 10:31

தஞ்சையில் டால்ஸ்டாய்- எம்.கோபாலகிருஷ்ணன்

அண்மையில் ‘துருவம்’ இலக்கிய அமைப்பினர் ‘தீர்த்த யாத்திரை’ நாவல் குறித்த கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் கலந்துகொள்வதற்காக தஞ்சை சென்றிருந்தேன். நிகழ்ச்சி ஒரு புத்தகக் கடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தஞ்சை புறநகரில் அழகிய ஓர் வளாகத்தில் இருந்தது அந்தப் புத்தகக் கடை. உடனடியாக கவனம் ஈர்க்கும் பெயர், ‘டால்ஸ்டாய் புக் ஸ்டோர்’.

சிறிய கடைக்குள் எளிமையான அலமாரிகளில், ஒழுங்குடன் வகை பிரிக்கப்பட்டு நேர்த்தியாக அடுக்கப்பட்ட புத்தகங்கள். தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் தொடக்க நிலை வாசகனுக்கான எல்லாப் புத்தகங்களையும் பார்க்க முடிந்தது. அத்துடன் செவ்விலக்கிய வரிசையிலும் முக்கியமான நூல்கள் அனைத்துமிருந்தன. இதுவரை அச்சில் நான் பார்த்திராத எலினா ஃபெரான்டேவின் ‘தி டேஸ் ஆஃப் அபன்டன்மென்ட்’ நாவல் அங்கிருந்தது வியப்பில் ஆழ்த்தியது.

நூல் நிலையத்தை நடத்தும் அச்சுதன் பொறியியல் பட்டதாரி. சில காலம் வேலை பார்த்திருக்கிறார். பெருந்தொற்று காலத்துக்குப் பின் இந்த புத்தகக் கடையைத் தொடங்கி நடத்துகிறார். வாடகைக்கும் இதர செலவுகளுக்குமாய் நாளொன்றுக்கு அவர் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யவேண்டும். தஞ்சையில் இது சாத்தியமா? விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையுடன் இலக்கிய வாசகர்கள் உள்ள ஒரு ஊரில் இப்படியொரு முயற்சி தேவையா? இப்படியெல்லாம் கேள்விகள் என்னிடமிருந்தன. ஆனால், இதெல்லாம் எனக்குத் தெரியாதா என்பதுபோல மிக அமைதியாக புன்முறுவலுடன் ஆனால் தன் லட்சியம் சார்ந்த உறுதியுடன் அடக்கமாகப் பேசுகிறார் அச்சுதன்.

மாதத்தின் முதல் வாரத்தில் ஆங்கில நூல்களைக் குறித்து உரையாடும் ‘English Readers Club’ நிகழ்ச்சி. இறுதி வாரத்தில் ‘துருவம்’ அமைப்பினர் ஏற்பாடு செய்யும் கலந்துரையாடல் நிகழ்ச்சி. அதிகபட்சம் இருபது பேர் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுகள் மிகுந்த ஆர்வத்துடனும் ஊக்கத்துடனும் நடத்தப் படுகின்றன.

நூல் நிலையத்தின் வெளிப்பக்கம் ஒரு தகவல் பலகை. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் இருவரின் பரிந்துரைப் பட்டியல் அழகாக அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது. தமிழிலும் ஆங்கிலத்திலும் நாளிதழ்களில் வெளியான இலக்கியம் சார்ந்த செய்திகள், நேர்காணல்கள் அழகாக வெட்டப்பட்டு இடம்பெற்றிருந்தன.

ஒவ்வொரு காலகட்டத்திலும் எங்கேனும் ஓர் அதிசய மனிதர் இப்படித்தான் இலக்கியச் சுடரை பேணிப் பாதுகாக்கிறார்கள். பலாபலன்களைக் குறித்தோ லாப நட்டங்களைப் பற்றியோ கவலைப்படாத அவர்களைப் புரிந்துகொள்வது எளிதல்ல. அவ்வாறானவர்களின் தன்னலமற்ற காரியங்கள்தான் எழுத்தின் மீதும் இலக்கியத்தின் மேலும் நம்பிக்கைகொள்ளச் செய்கின்றன.

தஞ்சை செல்லும் நண்பர்கள் தவற விடக்கூடாத இடம் புதுக்கோட்டை சாலை, பிஷப் சுந்தரம் வளாகத்தில் அமைந்துள்ள ‘டால்ஸ்டாய் புக் ஸ்டோர்’.

எம்.கோபாலகிருஷ்ணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 02, 2023 10:31

மிளகு – வாசிப்பு-ஷங்கர் ப்ரதாப்

இரா முருகன் தமிழ் விக்கி

மிளகு தமிழ் விக்கி 

‘கடந்த கால ஏக்கம்’ என்பது தேனின் சுவை கொண்ட நஞ்சு என்ற உங்கள் வாக்கியத்தை வாசித்தபொழுது எங்கோ அகம் அறிந்த உண்மை சொல்லாகி முன்வந்து நிற்பதை காணும் உவகையே ஏற்பட்டது, இது ஒரு நஞ்சு மட்டுமல்ல ஒரு காலத்தில் Nostalgia என்பது முறையாக வரையறுக்கப்பட்டு மருத்துவ ஆவணங்களில் பட்டியலிடப்பட்ட நோயாகவே இருந்திருக்கிறது. மயக்கம், காய்ச்சல் துவங்கி மரணம் கூட ஏற்படலாம் என விக்கிப்பீடியா சொல்கிறது, எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இதைவிடப் பரவலான ஒரு நோய் இருக்க முடியாது என்பது உறுதி.

சமூகத்தில் எல்லோருமே இந்த நோயால் ஓரளவு பீடிக்கப்பட்டவர்கள், அதன்  தீவிரத்தன்மை வேண்டுமானால் ஆளுக்குஆள் மாறுபடலாம். பெரும்பாலானவர்களுக்கு நோய் இருப்பதே தெரியாது. அது குற்றமில்லை, மொத்தச் சமுகத்தையும் பிடித்திருந்தால் அது ஒரு நோய் அல்ல அங்கீகரிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை முறை மட்டுமே. நோயைக் கட்டுக்குள் வைக்கும் வழிமுறைகள் தெரிந்திருந்தால் சமாளித்துவிடலாம்.

அமெரிக்காவில் நினைவேக்கதுக்கான(nostalgia)  பத்திரிக்கைகள் நிறைய  உண்டு. நூலகங்களிலும், பல்பொருள் அங்காடியில் பணம் செலுத்தும் இடத்திலும் பார்த்திருக்கிறேன். நோயின் உட்பிரிவுகளுக்கு தகுந்தபடி செய்திகள், கட்டுரைகள், புனைவுகள், வாசகர் கடிதங்கள் எல்லாம் இருந்தாலும் அவற்றின் முக்கியமான அம்சம் என்பது அவை பிரசுரிக்கும் படங்களே. பெரும்பாலும் கருப்பு வெள்ளை படங்கள், அந்தக்கால வாழ்க்கையை மனிதர்களை சித்தரிக்கும் காட்சிகள், பார்ப்பவர்களின் ஏக்கத்தை மேலும் தூண்டும் வகையில் அமைந்திருப்பவை.

இணையத்தில் காணொலி வடிவிலும் இவை பரவலாகி விட்டன, அவையும் பெரும்பாலும்  கருப்பு வெள்ளை படங்களே, பழைய பாணி கட்டிடங்கள், டிராம் வண்டிகள், முழங்கால்வரை சாக்ஸும் தொப்பியும் அணிந்த செய்தித்தாள் விற்கும் சிறுவர்கள், லிங்கன் தொப்பியுடன் கோட்டும் கழுத்துப்பட்டையும்  அணிந்த கனவான்கள் , இறகுவைத்த அலங்காரத்தொப்பி அணிந்த சீமாட்டிகள், ஒன்றுக்கு மேல் ஒன்றாக பல அடுக்குகளில் நேர்த்தியாக உடையணிந்த சாதாரண மக்கள், அந்தக் காணொலிகளில் எல்லோருமே சார்லி சாப்ளின் போல வேக வேகமாக நடப்பார்கள்.

உலகம் இயல்பாக இயங்கும் வேகத்தை திரையில் கொண்டுவர வினாடிக்கு 24 படச்சட்டகங்கள் தேவை. ஆனால் புகைப்படக்கலை வளராத அந்தக்காலத்தில் எடுக்கப்பட்ட இந்த படங்கள் 24க்கும் குறைவான படச்சட்டகங்களையே கொண்டுள்ளன. ஆகவே இந்த வினோதமான நடையோட்டம்.

இன்றைய கணிப்பொறியியலில்  அந்த இல்லாத படச்சட்டகங்களை அதற்கு முன்னும் பின்னும் உள்ள சட்டகங்களை வைத்துக்கொண்டு செயற்கையாக உருவாக்கும் அளவுக்கு செயற்கை அறிவு வளர்ந்துவிட்டது, ஆகவே இந்த காணொலிகள் இயல்பான வேகத்துக்கு மாற்றப்பட்டன, அத்துடன் கருப்பு வெள்ளையின் செறிவை வைத்துக்கொண்டு வண்ணங்களை ஊகித்து அந்த காணொளிகள் நிறமேற்றப்பட்டன, இவையெல்லாம் நிகழ்ந்தவுடன் அந்தக் காணொளிகள் விசித்திரத்தன்மையை இழந்து சமகால அன்றாடத்தன்மையை அடைந்தன.

அப்படி சமகாலப் படுத்தப்பட்ட காணொலிகள் நினைவேக்க விருப்பு கொண்டவர்களால் முற்றாக புறக்கணிக்கப்பட்டன, அவர்களுக்கு தேவை மாயத்தன்மை கொண்ட, இடைவெளிகளை இட்டு நிரப்பாத பழைய கருப்பு வெள்ளைப் படங்களே. அந்தக்காலத்தில் சாதாரண மக்கள் அப்படி விஸ்தாரமாக அடுக்கடுக்காக உடை அணிந்தது அவர்களின்  ரசனை மேம்பாடு காரணமாக அல்ல, மாறாக கட்டிடங்களில் வெப்பமூட்டிகள் இல்லாததே என்ற உண்மையை கூட காதை பொத்திக்கொண்டு மறுக்கும் மனநிலை கொண்டவர்கள் அவர்கள்.

மிளகு நாவல் வாசிக்கையில் கலங்கலான பழைய மாயத்தன்மை கொண்ட காணொலியின் அன்றாடப் படுத்தப்பட்ட வடிவத்தை காணும் அனுபவமே ஏற்பட்டது, நாவலின் விவரணைகள் சமகாலத்தியவை ,கதை சொல்லும் காலத்துக்காக எந்த சமரசமும் இல்லாமல், கதை மனிதர்களையும் சூழல்களையும் சமகால நோக்கிலேயே அணுகுகின்றன, கிட்டத்தட்ட கணிப்பொறியின் செயற்கை அறிவுக்கு மட்டுமே சாத்தியமான பாரபட்சமற்ற கருணையின்மை.

சென்னபைரதேவிக்கு அவர் அரண்மனையில் புதிதாக செய்யப்பட்டிருக்கும்  பனிக்கூழ் உணவுப்பண்டம் மீது ஆவல், வைத்தியரின் பரிந்துரையை புறக்கணித்து அளவுக்கு மீறி சுவைத்து விடுகிறார், விஷயம் அறிந்த வைத்தியர்

“ராணி, நீங்க என்னை முதல்லே ஆனைக் கால்லே இடற வச்சுக் கொன்னுடுங்கோ.அப்புறம் பனிக்கூழோ கட்டியோ விருப்பம் போல சாப்பிடுங்கோ, என் சாவுக்கு பால் மட்டும் ஊத்திப் படைக்கச் சொல்லிடுங்கோ”  என்கிறார், இந்த மாதிரியான சம்பிரதாயமற்ற அரசவை உரையாடல்கள் எந்த தமிழ் சரித்திர நாவல்களிலும் வந்ததாக என் வாசிப்புக்கு எட்டியவரை இல்லை

”ஏண்டா வைத்தியா, நீ உங்க அப்பா வைத்தியரோடு சின்னப் பையனா மருந்து மூட்டையைத் தோளிலே தூக்கிக்கிட்டு வந்ததை இன்னிக்குத் தான் பார்த்த மாதிரி இருக்கு. நீயானா வளர்ந்து என் கிட்டேயே அழிச்சாட்டியம் பண்ணிண்டு நிக்கறே”

ஒரு சிறிய உரையாடல் வழியே மகாராணி அரச வைத்தியர் உறவு சமகாலப் படுத்தப்படுவதுடன் அவர்களின் உறவைப் பற்றி யதார்த்தத்தின் எல்லைக்குள் அடங்குகிற சித்திரம் வாசகனுக்கு அளிக்கப்படுகிறது, மகாராணி, அரசவை போன்ற கடந்தகாலத்தை சேர்ந்த விஷயங்களை பற்றி சரித்திர நாவல்களை வாசித்த தமிழ் வாசகன் கொண்டிருக்கச் சாத்தியமான கலங்கலான கற்பனைகளை இந்த சித்திரம் அழிக்கிறது. ஒருவகையில் இந்த நாவல் செய்யும் முதன்மை வாசக அனுபவமே இந்த வகை அழித்தல்கள் தான்.

வீர நரசிம்மர் விஜயநகர பேரரசில் பன்குடி என்ற சிறு தேசத்தின் அரசர், சென்னாவின் இளவயது பாடசாலைத் தோழர்.  தோழியை சந்திக்க அதிகாலையில் வருகிறார்

நேற்றிரவே வெளிநாட்டவர் குடிக்கும் மதுசாலையில் கலகம் விளைவித்து கடைநிலை துரைமார்களிடம் கட்டிப்புரண்டு சண்டைபோட்டு துரத்தப்பட்ட விஷயம் சென்னாவுக்கு தெரியும், எதற்கு வந்திருக்கிறார் என்பதே கேள்வி.

”அறுபது வயசிலேயும் நீ அழகா இருக்கே சென்னா” என்றெல்லாம் பேசி தோழியை மயக்கிய பின்னர் விஷயத்துக்கு வருகிறார்

“ஒரு நூறு வராகன் கொடு அவசரமா வேண்டியிருக்கு”.

அவரிடம் குதிரையோ சாரட் வண்டியோ கூட இல்லை, “எப்படி திரும்ப போகப் போறே?” என்று கேட்கிறாள் சென்னா “பெருவழி ஓரமா நின்னா, அரசன் நிக்கறான்னு போகிற வர்ற சாரட் எதுவாவது நிக்காதா என்ன?”. குடிமக்களிடம் லிப்ட் கேட்கும் அரசர்!.

இதைப்போன்ற தருணங்கள் நாவலில் வரிசையாக வந்துகொண்டே இருக்கின்றன. கதை நிகழ்காலத்திலும் கடந்தகாலத்திலுமாக ஆலப்புழை, ஜெருஸப்பா, நாக்பூர் என்று இந்தியாவிலும் லண்டன், ஆப்கானிஸ்தான் என்று வெளியே பல இடங்களிலும் நிகழ்கிறது.

தலிபான்கள் கடத்திய விமானத்தில் சிக்கிக்கொள்கிறான் சின்ன சங்கரன், போர்த்துப்பாக்கிகள் ஏந்தியபடி முகமுடி அணிந்த கடத்தல்காரர்கள் வாழ்வின் இறுதிக் கணத்தை கண்முன்னே காட்டுகிறார்கள், உயிர்ப்பயத்தில் சங்கரனின் கால்சட்டை நனைந்துவிட்டது, பக்கத்துக்கு இருக்கையில் துளசி மணி உருட்டி ஜபித்துக் கொண்டிருந்த முதியவர் ”எனக்கு வெங்காயம் இல்லாத மசாலாவும் சப்பாத்தியும் ராத்திரி சாப்பாடாக வேண்டும் என்று கோலாலம்பூரில் இருந்து வரும்போதே பதிந்து கொடுத்திருந்தேன். வைத்திருக்கிறார்களா கேள்” என்று சங்கரனை கேட்கச்சொல்கிறார். தீவிரமான கட்டங்களில் இடையே வரும் இம்மாதிரி கூர்மையான அங்கதத்  தருணங்கள் வாசகனை நிலைகுலைய வைக்கின்றன.

இந்த நாவல் மாய யதார்த்த வகைமையை சேர்ந்ததாக பேசப்படுகிறது, ஒரு வாசகனாக தனிப்பட்ட முறையில் இந்த மாதிரி உத்திகள் மேல் சிறிய தயக்கமும் மன விலக்கமும் உண்டு, முதல் காரணம் இலக்கிய வகைமைகள் பற்றிய என் அறியாமை, இரண்டாவதாக இப்படி தேய்வழக்காக மாற்றப்பட்டுவிட்ட கூறுகளை கையில் வைத்துகொண்டுதான் ஒரு வாசகன் படைப்பை அணுக வேண்டுமா என்ற கேள்வி, தீட்டிய நுண்ணுணர்வுடனும் திறந்த மனதுடனும் படைப்பை அணுகும் வாசகன் இப்படிப்பட்ட இலக்கிய உத்திகள் வாக்களிக்கும் இறுதிப்  பெறுமதிப்பை தன் வாசிப்பு வழியே இயல்பாகவே அடைவான் என்ற நம்பிக்கையும் உண்டு.

அம்பலப்புழையில் தனிமையில் வாழும் திலீப் என்கிற வயசாளியை காலம் வெளி போன்ற எல்லைகளுக்கப்பால் இருக்கும் மனிதர்கள் வந்து சந்திக்கிறார்கள், காலை நடையை முடித்துவிட்டு வழக்கத்தைவிட தாமதமாக வரும் திலீப்பை  “வடசேரிக்காவிலே தொடுப்பு எவளையாவது பார்க்கப் போனீரா?” என்று அர்ச்சித்தபடி எதிர்கொள்கிறாள் வீட்டுக்காரி அகல்யா. “ஒருநாள் இல்லேன்னா ஒருநாள் பாரும். நான் உம்ம பின்னாலேயே வந்து கையும் களவுமா பிடிக்கத்தான் போறேன்” என்று தொடரும் கிண்டலும், மிரட்டலும் , கொஞ்சலும் கலந்த வயசாளி தம்பதிகளின் வழக்கமான தினசரி உரையாடலில் சம்பந்தமேயில்லாமல் திடுமென அகல்யா உயிருடன் இல்லை எனும் சமகால யதார்த்தம் குறுக்கிடுகிறது.

வயசாளி திலீப்பின் வீட்டுக்கு எந்தவித முன்னறிவிப்பும்  இன்றி அவர் தந்தை வந்து சேர்கிறார்,  திலீப்புக்கு சிறு வயதாக இருக்கும்போதே காணாமல் போனவர், இது உண்மையா அல்லது அகல்யாவை கண்டது போல மாயமா என்று திலீப்புக்கு குழப்பம், உண்மையாக இருந்தால் அவருக்கு நூற்றுப்பத்து வயது இருக்கும், மனக்குழப்பம் இருந்தாலும் சரளமாக அவருடன் உரையாட முடிகிறது, தந்தையும் மகனும் பேசுகிறார்கள், ஆசைதீர அப்பாவுக்கு பணிவிடைகள் செய்கிறார் மகன், பேரனிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறார், ஆனால் ஒரே ஒரு சிறிய பிரச்சினை, தந்தையார் அவர் காணாமல்போன பொழுது பயணத்தில் வழிதவறி தவறான காலத்தில்(!) விழுந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

அது ஒன்றும் பிரச்சினை இல்லை, காலம் இடம் எல்லாம் ஒரு சவுகர்யத்துக்காக நாம் நமக்குள் ஏற்படுத்திக்கொள்ளும் உடன்படிக்கைகள் தானே?, வசதிக்கேற்ப மாற்றிக்கொள்வதில் என்ன பிரச்சினை?, வாழ்வின் எல்லா அத்தியாயங்களையும் வாழ்ந்துமுடித்தபின் இறுதியில் ஒவ்வொரு மனிதரும் தங்கள் பெற்றோருடன் உரையாட வேண்டும் என்கிற நிறைவேறாத ஆசையை சுமந்து காத்திருந்து காத்திருந்து கடைசியில் எல்லையை கடந்து அவர்கள் இருக்கும் இடத்துக்கு சென்று சேர்வது வாழ்வின் விதிகளில் ஒன்று. ஆனால் இந்த நாவலில் தந்தையுடன் உரையாடும் ஆசையை நிறைவேற்ற திலீப்பின் அப்பா தர்க்கத்துக்கு எட்டாத கால வெளியில் இருந்து எழுந்து வருகிறார், அல்லது அவருக்குளே இருந்தே எழுந்து வருகிறாரா? ஒரு மனிதன் கடைசியில் அவன் முன்னோர்களின் எச்சம் மட்டும் தானா? அவர்கள் வாழ நினைத்து முடியாமல் போன வாழ்க்கையை தான் ‘மொத்தக் குருதியையும் கொடுத்து’ செயலாக்க முனைகிறோமா?

நாவல் இப்படிப்பட்ட கேள்விகளை எல்லாம் வெளிப்படையாக எழுப்புவதில்லை, அல்லது அப்படி எழுந்த கேள்விகள் எல்லாமே நான் செய்த  பிழை வாசிப்பாக இருக்கலாம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் வரும் இந்த பெரு நாவலை எழுத வேண்டுமென்றால் இதுவல்லாவிட்டாலும் இதைப்போன்ற ஆழமான அடிப்படை கேள்விகள் செலுத்து விசையாக இருந்திருக்கும்.

இப்படி ‘மருத்துவக்குறிப்பை வாசிக்கும் நோயாளியின் தீவிரத்தன்மையோடு’  இல்லாமல் மனமகிழ்ச்சிக்காக வாசிக்கும் வாசகருக்கும் இந்த நாவல் பெரு விருந்தை அளிக்கிறது, உவமையாக அல்ல நிஜமாகவே.

இரண்டாம் அத்தியாயத்தில் வரும் ராணியின் பிறந்த நாள் விருந்து விவரணைகள் படிப்பபவரின் இச்சையைத் தூண்டுபவை, இப்படிப்பட்ட விவரணைகள் நாவல் முழுக்க வருகின்றன. அதைப்பற்றி விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் நிகழ்த்திய கா.நா.சு கலந்துரையாடலில் எழுப்பப்பட்ட   கேள்விக்கு அத்தகைய விவரணைகளுக்கு எதிர்நிலையில் சென்னா சிறையில் அடைக்கப்பட்டு அவளுக்கு அளிக்கப்படும் ஒரு கோப்பை சூப்பை அணிலுக்கு உணவாக கொடுக்கும் கட்டத்தை சுட்டிக் காட்டினார்.

அதற்கும் மேல் இந்த விவரணைகள் எழுதுபவருக்கும் படிப்பவருக்கும் மகிழ்ச்சியை அளித்தால் அது இருந்துவிட்டுப் போகட்டுமே என்றார், அடிப்படை இச்சையை தூண்டும் இரு விஷயங்கள் காமமும் உணவும். காமத்தை பற்றி ஒரு எல்லைக்குமேல் எழுத முடியாது உணவைத்தவிர வேறு ஏதேனும் செலுத்துவிசையாக அமையாத பொழுது உணவின் மீதான ஆர்வத்தை விசையாக உபயோகித்து சந்தோஷமாக எழுதிவிட்டு போகிறேனே என்று பதிலளித்தார்.

இந்த நாவலில் துலங்கிவரும் கதை மாந்தர்களின் உலகம் துவங்கும் இடம் நாவலாசிரியரின் ‘அரசூர் வம்சம்’ என்று தெரிகிறது, அது இரா.முருகன் அவரது முன்னோர்களின் வாழ்க்கையைப் பற்றி கிடைத்த தகவல்களை வைத்துக்கொண்டு இடைவெளிகளை கற்பனையால் இட்டு நிரப்பி ஒரு முழுமையான சித்திரத்தை உருவாக்கும் முயற்சி என்று கலந்துரையாடலில் குறிப்பிட்டார்.

அரசூர் நாவலில் வரும் பகவதி எனும் பாத்திரம் அவரால் கற்பனையாக பெயர் சூட்டப்பட்டது ஆனால் சில காலம் கழிந்து நிஜ வாழ்வில் அந்த பாத்திரத்துக்கு கருப்பொருளாக இருந்த அவரது முன்னோர் பெயரும் பகவதி என்று அறிய வந்ததை கலந்துரையாடலில் குறிப்பிட்டார், தான் விசைப்பலகையில் எழுதும்பொழுது அவருடன் யாரோ கூடவே சேர்ந்து செயல்படுகிறார்கள் என்று அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் குறிப்பிட்டிருந்தார்.

அரசூர் வம்சத்தில் துவங்கும் மொத்த நாவல் வரிசை உருவாக்கும் கதையுலகம் பின்னால் திரும்பிப் பார்த்து காலத்தில் முன்னோர்களைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது ஆனால் நோய்க்கூறு கொண்ட நினைவேக்கம் அற்ற அணுகுமுறையை கொண்டிருக்கிறது, அப்படி ஏதேனும் இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி அவற்றை நையாண்டி செய்து கலைத்துபோட்டு, அன்றாடப்படுத்தி தெளியவைத்து ஒன்றுமில்லாமல் ஆக்குகிறது, இந்த படைப்புலகில் கற்பனையை உபயோகித்து வாழ்ந்து வெளிவரும் ஒரு வாசகனுக்கு அப்படிப்பட்ட நோய்க்கூறுகளை பற்றிய பிரக்ஞையை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பையும் இந்த நாவல் அளிக்கிறது என்றே சொல்வேன்.

ஷங்கர் ப்ரதாப்

தொடர்புடையவை :

கா. நா .சு உரையாடல் அரங்கு வரிசையில் இரா.முருகனுடனான உரையாடல் : https://www.youtube.com/watch?v=jNKBNgxmadw

மிளகு வாசிப்புக்கு உதவியாக முன்புரிதல்கள் : https://www.jeyamohan.in/162829/

மிளகு நாவல் வாசிக்க  : மிளகு: இரா முருகன் – நாவல் – சொல்வனம் | இதழ் 287 |22 ஜன 2023 (solvanam.com)

இரா முருகன் தமிழ் விக்கி பக்கம் : இரா.முருகன் – Tamil Wiki

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 02, 2023 10:31

மிளகு – வாசிப்பு-ஷங்கர் ப்ரதாப்

இரா முருகன் தமிழ் விக்கி

மிளகு தமிழ் விக்கி 

‘கடந்த கால ஏக்கம்’ என்பது தேனின் சுவை கொண்ட நஞ்சு என்ற உங்கள் வாக்கியத்தை வாசித்தபொழுது எங்கோ அகம் அறிந்த உண்மை சொல்லாகி முன்வந்து நிற்பதை காணும் உவகையே ஏற்பட்டது, இது ஒரு நஞ்சு மட்டுமல்ல ஒரு காலத்தில் Nostalgia என்பது முறையாக வரையறுக்கப்பட்டு மருத்துவ ஆவணங்களில் பட்டியலிடப்பட்ட நோயாகவே இருந்திருக்கிறது. மயக்கம், காய்ச்சல் துவங்கி மரணம் கூட ஏற்படலாம் என விக்கிப்பீடியா சொல்கிறது, எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இதைவிடப் பரவலான ஒரு நோய் இருக்க முடியாது என்பது உறுதி.

சமூகத்தில் எல்லோருமே இந்த நோயால் ஓரளவு பீடிக்கப்பட்டவர்கள், அதன்  தீவிரத்தன்மை வேண்டுமானால் ஆளுக்குஆள் மாறுபடலாம். பெரும்பாலானவர்களுக்கு நோய் இருப்பதே தெரியாது. அது குற்றமில்லை, மொத்தச் சமுகத்தையும் பிடித்திருந்தால் அது ஒரு நோய் அல்ல அங்கீகரிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை முறை மட்டுமே. நோயைக் கட்டுக்குள் வைக்கும் வழிமுறைகள் தெரிந்திருந்தால் சமாளித்துவிடலாம்.

அமெரிக்காவில் நினைவேக்கதுக்கான(nostalgia)  பத்திரிக்கைகள் நிறைய  உண்டு. நூலகங்களிலும், பல்பொருள் அங்காடியில் பணம் செலுத்தும் இடத்திலும் பார்த்திருக்கிறேன். நோயின் உட்பிரிவுகளுக்கு தகுந்தபடி செய்திகள், கட்டுரைகள், புனைவுகள், வாசகர் கடிதங்கள் எல்லாம் இருந்தாலும் அவற்றின் முக்கியமான அம்சம் என்பது அவை பிரசுரிக்கும் படங்களே. பெரும்பாலும் கருப்பு வெள்ளை படங்கள், அந்தக்கால வாழ்க்கையை மனிதர்களை சித்தரிக்கும் காட்சிகள், பார்ப்பவர்களின் ஏக்கத்தை மேலும் தூண்டும் வகையில் அமைந்திருப்பவை.

இணையத்தில் காணொலி வடிவிலும் இவை பரவலாகி விட்டன, அவையும் பெரும்பாலும்  கருப்பு வெள்ளை படங்களே, பழைய பாணி கட்டிடங்கள், டிராம் வண்டிகள், முழங்கால்வரை சாக்ஸும் தொப்பியும் அணிந்த செய்தித்தாள் விற்கும் சிறுவர்கள், லிங்கன் தொப்பியுடன் கோட்டும் கழுத்துப்பட்டையும்  அணிந்த கனவான்கள் , இறகுவைத்த அலங்காரத்தொப்பி அணிந்த சீமாட்டிகள், ஒன்றுக்கு மேல் ஒன்றாக பல அடுக்குகளில் நேர்த்தியாக உடையணிந்த சாதாரண மக்கள், அந்தக் காணொலிகளில் எல்லோருமே சார்லி சாப்ளின் போல வேக வேகமாக நடப்பார்கள்.

உலகம் இயல்பாக இயங்கும் வேகத்தை திரையில் கொண்டுவர வினாடிக்கு 24 படச்சட்டகங்கள் தேவை. ஆனால் புகைப்படக்கலை வளராத அந்தக்காலத்தில் எடுக்கப்பட்ட இந்த படங்கள் 24க்கும் குறைவான படச்சட்டகங்களையே கொண்டுள்ளன. ஆகவே இந்த வினோதமான நடையோட்டம்.

இன்றைய கணிப்பொறியியலில்  அந்த இல்லாத படச்சட்டகங்களை அதற்கு முன்னும் பின்னும் உள்ள சட்டகங்களை வைத்துக்கொண்டு செயற்கையாக உருவாக்கும் அளவுக்கு செயற்கை அறிவு வளர்ந்துவிட்டது, ஆகவே இந்த காணொலிகள் இயல்பான வேகத்துக்கு மாற்றப்பட்டன, அத்துடன் கருப்பு வெள்ளையின் செறிவை வைத்துக்கொண்டு வண்ணங்களை ஊகித்து அந்த காணொளிகள் நிறமேற்றப்பட்டன, இவையெல்லாம் நிகழ்ந்தவுடன் அந்தக் காணொளிகள் விசித்திரத்தன்மையை இழந்து சமகால அன்றாடத்தன்மையை அடைந்தன.

அப்படி சமகாலப் படுத்தப்பட்ட காணொலிகள் நினைவேக்க விருப்பு கொண்டவர்களால் முற்றாக புறக்கணிக்கப்பட்டன, அவர்களுக்கு தேவை மாயத்தன்மை கொண்ட, இடைவெளிகளை இட்டு நிரப்பாத பழைய கருப்பு வெள்ளைப் படங்களே. அந்தக்காலத்தில் சாதாரண மக்கள் அப்படி விஸ்தாரமாக அடுக்கடுக்காக உடை அணிந்தது அவர்களின்  ரசனை மேம்பாடு காரணமாக அல்ல, மாறாக கட்டிடங்களில் வெப்பமூட்டிகள் இல்லாததே என்ற உண்மையை கூட காதை பொத்திக்கொண்டு மறுக்கும் மனநிலை கொண்டவர்கள் அவர்கள்.

மிளகு நாவல் வாசிக்கையில் கலங்கலான பழைய மாயத்தன்மை கொண்ட காணொலியின் அன்றாடப் படுத்தப்பட்ட வடிவத்தை காணும் அனுபவமே ஏற்பட்டது, நாவலின் விவரணைகள் சமகாலத்தியவை ,கதை சொல்லும் காலத்துக்காக எந்த சமரசமும் இல்லாமல், கதை மனிதர்களையும் சூழல்களையும் சமகால நோக்கிலேயே அணுகுகின்றன, கிட்டத்தட்ட கணிப்பொறியின் செயற்கை அறிவுக்கு மட்டுமே சாத்தியமான பாரபட்சமற்ற கருணையின்மை.

சென்னபைரதேவிக்கு அவர் அரண்மனையில் புதிதாக செய்யப்பட்டிருக்கும்  பனிக்கூழ் உணவுப்பண்டம் மீது ஆவல், வைத்தியரின் பரிந்துரையை புறக்கணித்து அளவுக்கு மீறி சுவைத்து விடுகிறார், விஷயம் அறிந்த வைத்தியர்

“ராணி, நீங்க என்னை முதல்லே ஆனைக் கால்லே இடற வச்சுக் கொன்னுடுங்கோ.அப்புறம் பனிக்கூழோ கட்டியோ விருப்பம் போல சாப்பிடுங்கோ, என் சாவுக்கு பால் மட்டும் ஊத்திப் படைக்கச் சொல்லிடுங்கோ”  என்கிறார், இந்த மாதிரியான சம்பிரதாயமற்ற அரசவை உரையாடல்கள் எந்த தமிழ் சரித்திர நாவல்களிலும் வந்ததாக என் வாசிப்புக்கு எட்டியவரை இல்லை

”ஏண்டா வைத்தியா, நீ உங்க அப்பா வைத்தியரோடு சின்னப் பையனா மருந்து மூட்டையைத் தோளிலே தூக்கிக்கிட்டு வந்ததை இன்னிக்குத் தான் பார்த்த மாதிரி இருக்கு. நீயானா வளர்ந்து என் கிட்டேயே அழிச்சாட்டியம் பண்ணிண்டு நிக்கறே”

ஒரு சிறிய உரையாடல் வழியே மகாராணி அரச வைத்தியர் உறவு சமகாலப் படுத்தப்படுவதுடன் அவர்களின் உறவைப் பற்றி யதார்த்தத்தின் எல்லைக்குள் அடங்குகிற சித்திரம் வாசகனுக்கு அளிக்கப்படுகிறது, மகாராணி, அரசவை போன்ற கடந்தகாலத்தை சேர்ந்த விஷயங்களை பற்றி சரித்திர நாவல்களை வாசித்த தமிழ் வாசகன் கொண்டிருக்கச் சாத்தியமான கலங்கலான கற்பனைகளை இந்த சித்திரம் அழிக்கிறது. ஒருவகையில் இந்த நாவல் செய்யும் முதன்மை வாசக அனுபவமே இந்த வகை அழித்தல்கள் தான்.

வீர நரசிம்மர் விஜயநகர பேரரசில் பன்குடி என்ற சிறு தேசத்தின் அரசர், சென்னாவின் இளவயது பாடசாலைத் தோழர்.  தோழியை சந்திக்க அதிகாலையில் வருகிறார்

நேற்றிரவே வெளிநாட்டவர் குடிக்கும் மதுசாலையில் கலகம் விளைவித்து கடைநிலை துரைமார்களிடம் கட்டிப்புரண்டு சண்டைபோட்டு துரத்தப்பட்ட விஷயம் சென்னாவுக்கு தெரியும், எதற்கு வந்திருக்கிறார் என்பதே கேள்வி.

”அறுபது வயசிலேயும் நீ அழகா இருக்கே சென்னா” என்றெல்லாம் பேசி தோழியை மயக்கிய பின்னர் விஷயத்துக்கு வருகிறார்

“ஒரு நூறு வராகன் கொடு அவசரமா வேண்டியிருக்கு”.

அவரிடம் குதிரையோ சாரட் வண்டியோ கூட இல்லை, “எப்படி திரும்ப போகப் போறே?” என்று கேட்கிறாள் சென்னா “பெருவழி ஓரமா நின்னா, அரசன் நிக்கறான்னு போகிற வர்ற சாரட் எதுவாவது நிக்காதா என்ன?”. குடிமக்களிடம் லிப்ட் கேட்கும் அரசர்!.

இதைப்போன்ற தருணங்கள் நாவலில் வரிசையாக வந்துகொண்டே இருக்கின்றன. கதை நிகழ்காலத்திலும் கடந்தகாலத்திலுமாக ஆலப்புழை, ஜெருஸப்பா, நாக்பூர் என்று இந்தியாவிலும் லண்டன், ஆப்கானிஸ்தான் என்று வெளியே பல இடங்களிலும் நிகழ்கிறது.

தலிபான்கள் கடத்திய விமானத்தில் சிக்கிக்கொள்கிறான் சின்ன சங்கரன், போர்த்துப்பாக்கிகள் ஏந்தியபடி முகமுடி அணிந்த கடத்தல்காரர்கள் வாழ்வின் இறுதிக் கணத்தை கண்முன்னே காட்டுகிறார்கள், உயிர்ப்பயத்தில் சங்கரனின் கால்சட்டை நனைந்துவிட்டது, பக்கத்துக்கு இருக்கையில் துளசி மணி உருட்டி ஜபித்துக் கொண்டிருந்த முதியவர் ”எனக்கு வெங்காயம் இல்லாத மசாலாவும் சப்பாத்தியும் ராத்திரி சாப்பாடாக வேண்டும் என்று கோலாலம்பூரில் இருந்து வரும்போதே பதிந்து கொடுத்திருந்தேன். வைத்திருக்கிறார்களா கேள்” என்று சங்கரனை கேட்கச்சொல்கிறார். தீவிரமான கட்டங்களில் இடையே வரும் இம்மாதிரி கூர்மையான அங்கதத்  தருணங்கள் வாசகனை நிலைகுலைய வைக்கின்றன.

இந்த நாவல் மாய யதார்த்த வகைமையை சேர்ந்ததாக பேசப்படுகிறது, ஒரு வாசகனாக தனிப்பட்ட முறையில் இந்த மாதிரி உத்திகள் மேல் சிறிய தயக்கமும் மன விலக்கமும் உண்டு, முதல் காரணம் இலக்கிய வகைமைகள் பற்றிய என் அறியாமை, இரண்டாவதாக இப்படி தேய்வழக்காக மாற்றப்பட்டுவிட்ட கூறுகளை கையில் வைத்துகொண்டுதான் ஒரு வாசகன் படைப்பை அணுக வேண்டுமா என்ற கேள்வி, தீட்டிய நுண்ணுணர்வுடனும் திறந்த மனதுடனும் படைப்பை அணுகும் வாசகன் இப்படிப்பட்ட இலக்கிய உத்திகள் வாக்களிக்கும் இறுதிப்  பெறுமதிப்பை தன் வாசிப்பு வழியே இயல்பாகவே அடைவான் என்ற நம்பிக்கையும் உண்டு.

அம்பலப்புழையில் தனிமையில் வாழும் திலீப் என்கிற வயசாளியை காலம் வெளி போன்ற எல்லைகளுக்கப்பால் இருக்கும் மனிதர்கள் வந்து சந்திக்கிறார்கள், காலை நடையை முடித்துவிட்டு வழக்கத்தைவிட தாமதமாக வரும் திலீப்பை  “வடசேரிக்காவிலே தொடுப்பு எவளையாவது பார்க்கப் போனீரா?” என்று அர்ச்சித்தபடி எதிர்கொள்கிறாள் வீட்டுக்காரி அகல்யா. “ஒருநாள் இல்லேன்னா ஒருநாள் பாரும். நான் உம்ம பின்னாலேயே வந்து கையும் களவுமா பிடிக்கத்தான் போறேன்” என்று தொடரும் கிண்டலும், மிரட்டலும் , கொஞ்சலும் கலந்த வயசாளி தம்பதிகளின் வழக்கமான தினசரி உரையாடலில் சம்பந்தமேயில்லாமல் திடுமென அகல்யா உயிருடன் இல்லை எனும் சமகால யதார்த்தம் குறுக்கிடுகிறது.

வயசாளி திலீப்பின் வீட்டுக்கு எந்தவித முன்னறிவிப்பும்  இன்றி அவர் தந்தை வந்து சேர்கிறார்,  திலீப்புக்கு சிறு வயதாக இருக்கும்போதே காணாமல் போனவர், இது உண்மையா அல்லது அகல்யாவை கண்டது போல மாயமா என்று திலீப்புக்கு குழப்பம், உண்மையாக இருந்தால் அவருக்கு நூற்றுப்பத்து வயது இருக்கும், மனக்குழப்பம் இருந்தாலும் சரளமாக அவருடன் உரையாட முடிகிறது, தந்தையும் மகனும் பேசுகிறார்கள், ஆசைதீர அப்பாவுக்கு பணிவிடைகள் செய்கிறார் மகன், பேரனிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறார், ஆனால் ஒரே ஒரு சிறிய பிரச்சினை, தந்தையார் அவர் காணாமல்போன பொழுது பயணத்தில் வழிதவறி தவறான காலத்தில்(!) விழுந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

அது ஒன்றும் பிரச்சினை இல்லை, காலம் இடம் எல்லாம் ஒரு சவுகர்யத்துக்காக நாம் நமக்குள் ஏற்படுத்திக்கொள்ளும் உடன்படிக்கைகள் தானே?, வசதிக்கேற்ப மாற்றிக்கொள்வதில் என்ன பிரச்சினை?, வாழ்வின் எல்லா அத்தியாயங்களையும் வாழ்ந்துமுடித்தபின் இறுதியில் ஒவ்வொரு மனிதரும் தங்கள் பெற்றோருடன் உரையாட வேண்டும் என்கிற நிறைவேறாத ஆசையை சுமந்து காத்திருந்து காத்திருந்து கடைசியில் எல்லையை கடந்து அவர்கள் இருக்கும் இடத்துக்கு சென்று சேர்வது வாழ்வின் விதிகளில் ஒன்று. ஆனால் இந்த நாவலில் தந்தையுடன் உரையாடும் ஆசையை நிறைவேற்ற திலீப்பின் அப்பா தர்க்கத்துக்கு எட்டாத கால வெளியில் இருந்து எழுந்து வருகிறார், அல்லது அவருக்குளே இருந்தே எழுந்து வருகிறாரா? ஒரு மனிதன் கடைசியில் அவன் முன்னோர்களின் எச்சம் மட்டும் தானா? அவர்கள் வாழ நினைத்து முடியாமல் போன வாழ்க்கையை தான் ‘மொத்தக் குருதியையும் கொடுத்து’ செயலாக்க முனைகிறோமா?

நாவல் இப்படிப்பட்ட கேள்விகளை எல்லாம் வெளிப்படையாக எழுப்புவதில்லை, அல்லது அப்படி எழுந்த கேள்விகள் எல்லாமே நான் செய்த  பிழை வாசிப்பாக இருக்கலாம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் வரும் இந்த பெரு நாவலை எழுத வேண்டுமென்றால் இதுவல்லாவிட்டாலும் இதைப்போன்ற ஆழமான அடிப்படை கேள்விகள் செலுத்து விசையாக இருந்திருக்கும்.

இப்படி ‘மருத்துவக்குறிப்பை வாசிக்கும் நோயாளியின் தீவிரத்தன்மையோடு’  இல்லாமல் மனமகிழ்ச்சிக்காக வாசிக்கும் வாசகருக்கும் இந்த நாவல் பெரு விருந்தை அளிக்கிறது, உவமையாக அல்ல நிஜமாகவே.

இரண்டாம் அத்தியாயத்தில் வரும் ராணியின் பிறந்த நாள் விருந்து விவரணைகள் படிப்பபவரின் இச்சையைத் தூண்டுபவை, இப்படிப்பட்ட விவரணைகள் நாவல் முழுக்க வருகின்றன. அதைப்பற்றி விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் நிகழ்த்திய கா.நா.சு கலந்துரையாடலில் எழுப்பப்பட்ட   கேள்விக்கு அத்தகைய விவரணைகளுக்கு எதிர்நிலையில் சென்னா சிறையில் அடைக்கப்பட்டு அவளுக்கு அளிக்கப்படும் ஒரு கோப்பை சூப்பை அணிலுக்கு உணவாக கொடுக்கும் கட்டத்தை சுட்டிக் காட்டினார்.

அதற்கும் மேல் இந்த விவரணைகள் எழுதுபவருக்கும் படிப்பவருக்கும் மகிழ்ச்சியை அளித்தால் அது இருந்துவிட்டுப் போகட்டுமே என்றார், அடிப்படை இச்சையை தூண்டும் இரு விஷயங்கள் காமமும் உணவும். காமத்தை பற்றி ஒரு எல்லைக்குமேல் எழுத முடியாது உணவைத்தவிர வேறு ஏதேனும் செலுத்துவிசையாக அமையாத பொழுது உணவின் மீதான ஆர்வத்தை விசையாக உபயோகித்து சந்தோஷமாக எழுதிவிட்டு போகிறேனே என்று பதிலளித்தார்.

இந்த நாவலில் துலங்கிவரும் கதை மாந்தர்களின் உலகம் துவங்கும் இடம் நாவலாசிரியரின் ‘அரசூர் வம்சம்’ என்று தெரிகிறது, அது இரா.முருகன் அவரது முன்னோர்களின் வாழ்க்கையைப் பற்றி கிடைத்த தகவல்களை வைத்துக்கொண்டு இடைவெளிகளை கற்பனையால் இட்டு நிரப்பி ஒரு முழுமையான சித்திரத்தை உருவாக்கும் முயற்சி என்று கலந்துரையாடலில் குறிப்பிட்டார்.

அரசூர் நாவலில் வரும் பகவதி எனும் பாத்திரம் அவரால் கற்பனையாக பெயர் சூட்டப்பட்டது ஆனால் சில காலம் கழிந்து நிஜ வாழ்வில் அந்த பாத்திரத்துக்கு கருப்பொருளாக இருந்த அவரது முன்னோர் பெயரும் பகவதி என்று அறிய வந்ததை கலந்துரையாடலில் குறிப்பிட்டார், தான் விசைப்பலகையில் எழுதும்பொழுது அவருடன் யாரோ கூடவே சேர்ந்து செயல்படுகிறார்கள் என்று அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் குறிப்பிட்டிருந்தார்.

அரசூர் வம்சத்தில் துவங்கும் மொத்த நாவல் வரிசை உருவாக்கும் கதையுலகம் பின்னால் திரும்பிப் பார்த்து காலத்தில் முன்னோர்களைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது ஆனால் நோய்க்கூறு கொண்ட நினைவேக்கம் அற்ற அணுகுமுறையை கொண்டிருக்கிறது, அப்படி ஏதேனும் இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி அவற்றை நையாண்டி செய்து கலைத்துபோட்டு, அன்றாடப்படுத்தி தெளியவைத்து ஒன்றுமில்லாமல் ஆக்குகிறது, இந்த படைப்புலகில் கற்பனையை உபயோகித்து வாழ்ந்து வெளிவரும் ஒரு வாசகனுக்கு அப்படிப்பட்ட நோய்க்கூறுகளை பற்றிய பிரக்ஞையை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பையும் இந்த நாவல் அளிக்கிறது என்றே சொல்வேன்.

ஷங்கர் ப்ரதாப்

தொடர்புடையவை :

கா. நா .சு உரையாடல் அரங்கு வரிசையில் இரா.முருகனுடனான உரையாடல் : https://www.youtube.com/watch?v=jNKBNgxmadw

மிளகு வாசிப்புக்கு உதவியாக முன்புரிதல்கள் : https://www.jeyamohan.in/162829/

மிளகு நாவல் வாசிக்க  : மிளகு: இரா முருகன் – நாவல் – சொல்வனம் | இதழ் 287 |22 ஜன 2023 (solvanam.com)

இரா முருகன் தமிழ் விக்கி பக்கம் : இரா.முருகன் – Tamil Wiki

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 02, 2023 10:31

அன்பெனும் பிடி, கடலூர் சீனு

இனிய ஜெயம்

பொதுவாக, மழை குளிர் காரணம் கொண்டு ஜன்னல்கள் அடைக்கப்பட்ட பேருந்தில் இரவுப் பயணங்களில், வேடிக்கை பார்க்க ஏதும் அற்று மொபைலில் ஏதேனும் இயற்கை சார்ந்த ஆவணப்படம் பார்த்தபடி செல்வேன். அப்படி இந்தப் பயணத்தில் நான் பார்க்க கிடைத்தது கார்த்திகி கொன்சல்வாஸ் இயக்கிய இந்த முக்கால் மணி நேர அற்புதம். ஆம் அற்புதம் என்று மட்டுமே சொல்வேன்.

கணவரை புலி கொன்றுவிட்ட மலைகுடிப் பெண். அவளை மணக்கக் காத்திருக்கும் மற்றொரு மலைக்குடிக் காதலன். மத்திய வயதில் இருக்கும் இருவருக்கும் தொழில் யானை பாகனாக இருப்பது. அவர்கள் வசம் வளர்க்க சொல்லி வனத்துறை இரண்டு அனாதை யானைக் குட்டிகளை கொண்டு வந்து சேர்க்கிறது. இந்த நால்வர் குடும்பத்தில் சில நாட்கள் வாழ்ந்து மீளும் அனுபவத்தை நல்கும் ஆவணம்.

மயங்க வைக்கும் சூழல் பின்னணியை அவ்வாறே கொண்டு வந்து நிறுத்தும், திறந்து விட்ட ஒரு பிரம்மாண்ட கேலரி ஒன்றில் நின்று அதன் வழியே இந்த காட்சிகளை பார்க்கிறோம் என்று உணர வைக்கும் வகையிலான ஒளிப்பதிவு. வருடும் நீரோடை போன்ற பின்னணி இசை. நாம் கண்களை இமைப்பது எப்படி நமது போதத்திலேயே இருக்காதோ, அப்படி ஒரு எடிட்டிங்.

மெல்ல மெல்ல ரகு இருராலும் வளர்த்து எடுக்கப்படும் சித்திரம். பின்னர் அம்மு வந்து சேர்ந்ததும் ரகுவுக்கும் அம்முவுக்கும் இடையே நடக்கும் உரசல், அம்மா அப்பாவின் கைகள் வழியே ஊட்டும் உணவுக் கவளத்தை இருவரும் முதலில் யார் வாங்குவது எனும் போட்டியில் ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு முண்டி அடிப்பது, குளிப்பது, உண்பது, விளையாடுவது, கண்வளர்வது, எழுந்ததும் அம்மாவை தேடுவது என அந்த இரண்டு குழந்தைகளும் கூடி பார்ப்பவர் அனைவரையும் பிள்ளைப்பாசப் பித்தில் கரைய வைத்து விடுகிறார்கள்.  எத்தனை எத்தனை துளித் துளிச் சித்திரங்கள் வழியே இந்த யானைக் குட்டிகள் எனும் அற்புதம் இதில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது என்று நினைக்க வியப்பு மேலிடுகிறது.

அந்த குழந்தைகள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இரண்டு யானைகளில் ஒன்றை மீண்டும் வனத்துக்குள் சென்று விட வேண்டிய சூழல்.

குமரித்துறைவிக்குப் பிறகு இப்படி ஒரு உணர்வெழுச்சி அளிக்கக்கூடிய பிரிதொன்றை இனி நான் காணவே போவதில்லை என்று எண்ணி இருந்தேன். இந்த ஆவணம் அந்த எண்ணத்தை முறியடித்து விட்டது. இங்கு இரண்டு குட்டிகளும் அலங்காரம் பூணும் தருணம், இரண்டில் ஒரு குட்டி அந்த வீடு விட்டு மீண்டும் காடு புகும் தருணம், அந்த தருணத்தில் அம்மா அப்பா அம்மு என்று குடும்பமே தவிக்கும் சித்திரம்,  எல்லாவற்றுக்கும் மேலே இந்த ஆவணம் நெடுக திகழும் மங்கலமும், ஆவணம் நிறைகையில் உள்ளே எழும் சந்துஷ்டியும் என எல்லா நிலையிலும் குமரித்துறைவி நாவல் அளிக்கும் உணர்வு நிலைக்கு நிகர் நிற்கும் படைப்பு இது. உங்கள் குடும்பத்துடன் மொத்தமாக அமர்ந்து இந்த ஆவணத்தை நீங்கள் காணவேண்டும் என்று விரும்புகிறேன்.

கடலூர் சீனு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 02, 2023 10:30

February 1, 2023

தன்னை விலக்கி அறியும் கலை

வணக்கத்திற்குரிய குருநாதர்களே, நண்பர்களே,

குரு நித்யாவின் நினைவுநாளான இன்று அவரைப்பற்றிப் பேசுவதற்காக பதினாறு மணிநேரம் பேருந்தில் அமர்ந்து வந்து இறங்கி நேராக மேடையேறியிருக்கிறேன். அவரைப்பற்றி இக்குருகுல நிகழ்ச்சியில் பொதுவான பேச்சுகள் அவரை ஒரு ஞானியாக, தத்துவ சிந்தனையாளராக, ஆன்மீக வழிகாட்டியாகக் கண்டு விளக்குபவையாகவே இருப்பது வழக்கம். அதுவே இயல்பும் கூட

ஆனால் அவர் ஓர் இலக்கியவாதியும்கூட. கேரளத்தில் ஓர் இலக்கியவாதியாக அவருக்கு அழியா இடம் ஒன்று உண்டு. அவருடன் உரையாடி அதன்மூலம் தன்னை உருவாக்கிக் கொண்ட படைப்பாளிகள் பலர் உண்டு. அவர்களில் ஒருவனாகவே நான் இங்கு பேச வந்துள்ளேன். என் பணி நித்யாவை ஒரு குருவாக மட்டுமிலலமல் ஓர் இலக்கியப் படைப்பாளியாகவும் நினைவுகூர்வதேயாகும்.

t0840

சென்றசில நாட்களுக்குமுன்னர் நான் இகோர் கூஸெங்கோ என்ற எழுத்தாளர் எழுதிய The Fall of a Titan என்ற நாவலின் தமிழாக்கத்தைப் படிக்க நேர்ந்தது. 1954ல் மூலநூல் வெளிவந்த மறுவருடமே வாணி சரணன் என்பவரால் தமிழாக்கம் செய்யப்பட்டும்கூட இங்கே அதை எவரும் கவனித்ததாக தெரியவில்லை. மிக முக்கியமான நாவல் இது .

கூஸெங்கோ ருஷ்ய உளவமைப்பில் குறியீடுகளை பகுப்பாய்வுசெய்யும் நிபுணராக கனடாவில் வேலைபார்த்தார். அப்போது அவருக்கு ஒரு தகவல் கிடைக்கிறது, அவரை ருஷ்யாவுக்கே திருப்பி அனுப்ப போகிறார்கள். அவ்வளவு விஷயங்கள் தெரிந்தவரை கண்டிப்பாக அங்கே கொலைசெய்துவிடுவார்கள்.ஆகவே இகோர் கூஸெங்கோ தன்னிடமிருந்த 109 முக்கியமான ஆவணங்களுடன் கனடா அரசிடம் சரணடைகிறார். அந்த ஆவணங்கள் மூலம் அமெரிக்கா, கனடா ,பிரிட்டன் நாடுகளில் பரவியிருந்த ருஷ்ய உளவாளிகள் பலர் பிடிபட்டனர்.

கூஸெங்கோ ஒரு சுயசரிதையும் இநத நாவலையும் எழுதியிருக்கிரார். இந்நாவல் மக்ஸீம் கோர்க்கியைப்பற்றியது. இதில் கோரின் என்றபேரில் கோர்க்கிமையக்கதாபாத்திரமாக வருகிறார். கோரின் ருஷ்யப்புரட்சியின்போது வெளிநாட்டில் இருக்கிறார். ஸ்டாலினின் அழைப்பின்பேரில் அவர் ருஷ்யா திரும்புகிறார். ஸ்டாலினின் சர்வாதிகாரக் கொடுங்கோலாட்சி மீது பரவலாக ஐயங்கள் ஏற்பட்ட காலம் அது. ஆகவே கோரினின் வருகை ஸ்டாலினுக்கு தேவைபபட்டது

தொடக்கத்தில் ஸ்டாலின் காட்டிய சித்திரங்களை நம்பி கோரின் ஸ்டாலினின் சீர்திருத்தங்களை புகழ்ந்து எழுதுகிறார். பின்னர் உண்மை தெரிகிறது. அவருக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. ஆனால் அதை எதிர்கொள்ளும் துணிவு இல்லை. ஆகவே சொந்த ஊரான ராஸ்டோவுக்கு கோரின் திரும்பி வருகிறார். அங்கே ஸ்டாலினின் உளவமைப்பு அவரை வற்புறுத்தியமையால் பயங்கர இவான் என்ற பழைய ருஷ்ய சக்ரவர்த்தியை புகழ்ந்து அதன் மூலம் கொடுங்கோலாட்சியை நியாயப்படுத்தி ஒரு நாடககத்தை எழுதுகிறார் கோரின்

அந்நாடகத்தை பெரிய அளவில் தேசம் முழுக்க கொண்டுசெல்கிறார்கள். உலகமெல்லாம் மொழிபெயர்க்கிறார்கள். கோரின் ஆதரவளித்தது உறுதிப்படுத்தப்பட்டபின்னர் கோரினை கொல்ல முடிவெடுக்கிறார்கள். ஸ்டாலினின் உளவுத்துறையால் தன் மகன் கொல்லபப்ட்டதை அறிந்த கோரின் மனமுடைந்து செயலிழந்து இருக்கிறார். அவரும் கொல்லப்படுகிறார். அவரை இயற்கையாக மரணமடைந்தவர் என அறிவித்து கம்யூனிசத்தின் மாபெரும் படைப்பாளியாக புகழ்ந்து நினைவுச்சின்னம் உருவாக்குகிறார்கள். இதுதான் நாவலின் கதை.

இந்நாவலில் கொலையாளி நோவிக்கோவ் என்பவன் கோரினைக் கொல்வதற்கு முன் அவருடன் பேசும் ஆழமான உரையாடல் மிக அழுத்தமாக உள்ளது. ‘நீதான் எங்கள் மனதில் கனவுகளை எழுப்பினாய். இன்றைய அனைத்து சரிவுகளுக்கும் காரணம் உங்கள் தலைமுறையே. கொலைக்கு அஞ்சாத என்னைப்போன்றவர்களின் தலைமுறை நீங்கள் படைத்ததே ‘ என்கிறான்.

பல வருடங்களுக்கு முன் நித்யா கோர்க்கிபற்றிய ஒரு முழு நூலை மலையாளத்தில் எழுதினார். புகழ்பெற்ற அந்நூல் எழுதப்படுகையில் நான் அடிக்கடி வந்து நித்யா சொல்வதையும் பிறர் எழுதுவதையும் கேட்டிருப்பேன். நித்யாவுக்கு மிகவும் பிடித்தமான ருஷ்யப் படைப்பாளி தல்ஸ்தோய்தான். எனக்கு அப்போது தஸ்தயேவ்ஸ்கி. அதைப்பற்றி நாங்கள் விவாதித்திருக்கிறோம்.

நித்யா இருவரையுமே மேதைகள் என்பார். ஆனால் தல்ஸ்தோய் ஒருபடி மேல் என்று சொல்வார். தஸ்தயேவ்ஸ்கியால் மனிதப்பிரச்சினைகளை மட்டுமே பார்க்க முடிந்தது, வரலாற்றையும் அதில் மிகச்சாதாரண உயிர்கள் கூட பங்காற்றுவதையும் அவரால் பார்க்க முடியவில்லை. ஆன்மீகமான தெளிவு ஒருவிதமான நிதானத்தை உருவாக்கும். அதற்கு முந்தையநிலையே ஆன்மீகமான கொந்தளிப்புநிலை. தல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கியைவிட நிதானமானவர் என்பது நித்யாவின் கருத்து. பிற்பாடு இதை நானே ஏற்றுக்கொண்டேன். என்னுடைய ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலில் இவ்விரு படைப்பாளிகளையும் ஒப்பிடும் ஒருபகுதி உள்ளது

அப்படியானால் நித்யா ஏன் கோர்க்கிபற்றி எழுதினார்? நான் அதைக் கேட்டேன். நித்யா சொன்னார், ஒருபெரும் கனவு கலைந்து மனிதன் நிதரிசனத்தின் வெட்ட வெளியில் வெயிலில் தகித்து நிற்கும் காலம் இது. அக்கனவினை உருவாக்கியவர்களில் ஒருவர் கார்க்கி. அக்கனவின் சிருஷ்டாக்களில் அவரே மாபெரும் கனவு ஜீவி. அவரைபற்றி மேலும் ஆராய விரும்பினேன். இலட்சியவாதத்தின் எழுச்சி வீழ்ச்சி பற்றி எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு, என் வாழ்நாளெல்லாம் நான் ஒரு லட்சியவாதியாக, கனவாளியாகவே இருந்திருக்கிறேன்.

அப்போதுதான் நான் என் நாவலுக்கான வாசிப்பை நிகழ்த்திக் கொண்டிருந்த காலம். கார்க்கியைப்பற்றி படித்தேன். எனக்கு ஆழமான மனச்சோர்வை அளித்தது கார்க்கியின் வாழ்க்கை. திரும்பி ருஷ்யாவுக்குவந்த கோர்க்கி உடனடியாக தன் கனவுகள் குரூரமாக கலைந்துவிட்டதை உணர்ந்திருப்பார். கலைஞன் அப்படி உணராமலிருப்பான் என நான் நினைக்கவில்லை. அவனுக்கு ஒரு துளி தகவலே போதும். சொந்த சகோதரர்கள் லட்சக்கணக்கில் கொல்லப்படுவதை கோர்க்கி அறிந்திருப்பார். சக எழுத்தாளர்கள் கட்டாய உழைப்பு முகாம்களில் மட்கி அழிவதைக் கண்டிருப்பார். ஆனால் ஸ்டாலினை ஆதரித்து எழுதினார். ஒரு கட்டத்துக்குப் பின்னர் அவர் மௌனம் சாதித்தார்.

505px-Maxim_Gorky_authographed_portrait_1

ஏன்? மனசாட்சியை ஏன் கோர்க்கிமூடிவைத்தார்? என்ன ஆயிற்று அவருக்கு? ஷோல்ஷெனிட்ஸினுக்கும் பாஸ்டர்நாக்குக்கும் இருந்த தைரியமும் தியாக உணர்வும்கூட இல்லாதவரா அவர்? இல்லை, அப்படி நினைக்க இடமில்லை. கோர்க்கி ஒரு மேதை, ஐயமே இல்லை. அப்படியானால் ஏன்?

கோர்க்கிஉண்மையை தனக்குத்தானே ஒப்புக்கொள்ள மறுத்தார். அதை என்னால் நுட்பமாக உணர முடிகிறது. அவரே உருவாக்கிய கனவு. அதன் சரிவை இல்லை என கற்பனைசெய்ய அவர் விரும்பினார். சரியாகிவிடும், இதெல்லாம் சிறு பிசிறுகள் மட்டுமே என சமாதானம் செய்துகொள்ள முயன்றார். உண்மையைக் காண்பதை அவர் கடைசி நிமிடம் வரை ஒத்திப்போட்டார்.

காரணம் உண்மை அவ்வளவு கொடூரமானது. அவரது உடலை கூறுபோடும் வாள் போன்றது அவ்வுண்மை. அவரது அதுநாள் வரையிலான வாழ்க்கையே ஒரு பெரிய பிழை என்று சொல்லக்கூடியது அவ்வுண்மை. அவர் தன் மொத்த வாழ்க்கையை தன் படைப்புகளை மொத்தமாக நிராகரிக்கவேண்டியிருக்கும். அவ்வேதனையை அவர் அஞ்சினார். அவ்வெறுமையை அவர் தவிர்க்க முயன்றார்.

ஆனால் அவர் வெடித்திருக்கக் கூடும். அதை உணர்ந்தமையால்தான் அவர் கொல்லபப்ட்டார். கார்க்கியின் மரணம் இயற்கையானது என சொல்லிய அரசே சில வருடம் கழித்து அவரையும் மகனையும் கொன்றமைக்காக உளவுத்தலைவர் யகோதாவைக் குற்றம் சாட்டி கொலைசெய்தது. யகோதா ஸ்டாலின் உத்தரவில்லாமல் அதைச் செய்திருக்கமாட்டார் என சின்னக்குழந்தையும் அறியும்.

ஒருநாள் நான் நித்யாவிடம் நா தழுதழுக்க கண்ணீருடன் கோர்க்கியின் இந்த வீழ்ச்சி குறித்து பேசியதை நினைவுகூர்கிறேன். அது என்னுடைய சொந்த வீழ்ச்சி. நான் சிறுவயதில் படித்து உள்ளம் பொங்கிய நாவல் ‘தாய்’. நான் முன்னுதாரணமாகக் கொண்ட படைப்பாளி கோர்க்கி. அவரது சரிவு என் நெஞ்சில் உள்ள எழுத்தாளன் என்ற பிம்பத்தின் சரிவே.

நித்யா சொன்னார், பாவம் கோர்க்கி. அவர் உண்மையான மரணத்தை அஞ்சவில்லை, ‘பிம்ப மரணத்தை’ அஞ்சினார். எல்லா எழுத்தாளர்களும் அஞ்சுவது அதையே. எழுத்தாளன் தான் இறந்தபின்னும் தன் ஆக்கங்கள் மூலம் வாழவேண்டுமென்ற பெரும் கனவு கொண்டவன். அதற்காக தன் சொந்தவாழ்க்கையையே பலிகொடுக்க தயங்காதவன். அந்த பிம்பம் தன் கண்முன் இறப்பதை அவன் மரணத்தைவிடமேலானதாகக் கருதுவான். அப்பிம்பம் அவ்னுடைய ஆக்கம், அவன் மகன் போல. தான் இறப்பதைவிட தன் மக்கள் இறப்பதையே மனிதர்கள் மிக அஞ்சுவார்கள். அதன் பொருட்டே சமரசம் செய்துகொள்வார்கள்.

ஆனால் கோர்க்கி உண்மையை எதிர்கொண்டிருந்தால் மேலும் வீரியம் மிக்க பிம்பத்துடன் காலத்தில் வாழ்ந்திருப்பார். ஏனேனில் உண்மையே அழிவற்றது. அத்துடன் பிணைத்துக் கொள்ளும்போதே மனிதர்களும் அழிவில்லாதவர்கள் ஆகிறார்கள். எழுத்தாளனை அமரனாக்குவது அவனுள் இருந்து வரும் உண்மையே.

கார்க்கியின் பிழை என்ன? ‘நான் ஆக்கினேன்., இது எனது ஆக்கம்’ என்றெல்லாம் அவர் எண்ணிக் கொண்டதே. அதுவே பெரும் பற்றாக மாறி அவரைக் கட்டிப்போட்டது. ஒரு பெரும் விளையாட்டில் வெறும் கருவி அவரென அவர் உணரவில்லை. சரி, அவருக்கு கடவுள் என்றோ பிரம்மம் என்றொ தர்மம் என்றோ என்ண முடியாவிட்டால் ‘சரித்திரம்’ என்று வைத்துக் கொண்டிருக்கலாம். சரித்திரத்தின் லீலையில் தானும் ஒரு துளி என அவர் உணரவில்லை. தன்னை சரித்திரத்தின் சிற்பி என்று எண்ணிக் கொண்டார். அந்த சுமையே அவரை கூன்விழ வைத்தது.

கார்க்கியின் கடைசி நாட்கள். எவ்வளவு பெரிய நரகம் அது? அவரே உருவாக்கிக் கொண்ட சொந்த நரகம். அந்தப் பெரிய துயரத்தில் இருந்து அவரை பகவத் கீதையின் நான்கு சுலோகங்கள் விடுவித்திருக்கும்.

கோர்க்கி கர்மவீரர். என் நூலில் அவரை நான் அப்படியே காட்டப்போகிறேன். எதிர்மறை விமரிசனங்களை சொல்லப்போவதில்லை. ஆனால் எல்லா கர்ம வீரர்களுக்கும், அவர்கள் எந்தத் துறையில் எப்படிபப்ட்ட சேவை செய்தாலும் சரி, வாழ்க்கையின் இறுதியில் மிகப்பெஇய வெறுமையும் தனிமையுமே காத்திருக்கிறது. அது வாழ்வின் நியதி. குரூரமாக இருக்கலாம், ஆனால் இது உண்மை

ஆகவேதான் பார்த்தசாரதி கர்மயோகியாக இரு என்கிறார். ‘யோகாத்ம சிந்தனை’ என்றால் என்ன என்று நடராஜ குரு விளக்கியிருக்கிறார். அது டைலடிக்ஸ் என்று மேலைச் சிந்தனையில் சொல்லப்படும் முரணியக்கமே.

download

பிரபஞ்சமென்ற மாபெரும் முரணியக்கத்தை ஒவ்வொரு காலக்கணத்திலும் பார்ப்பவனே யோகி. அம்முரணியக்கத்தின் ஒரு துளியே தான் என அவன் உணர்வான். ஆகவே அவன் தன் கடமையைச் செய்வான், அதற்கு ஒரு பலனை தானே கற்பிதம் செய்துகொண்டு அதை எதிர்பார்க்கமாட்டான். அது நினைப்புக்கு எட்டாத மாபெரும் முரணியக்கத்தின் ஊகிக்கமுடியாத விளைவாக இருக்கும் என்று அறிந்து தன்னில் தான் நிறைவு கொள்வான்.

நித்யாவின் சொற்களை இத்தருணத்தில் நினைவுகூர்கிறேன். உண்மையே எழுத்தாளனின் தேடல் என்றார் நித்யா. படைக்கும் கணத்தில் தன்னகங்காரம் அழியும்போதே பெரும் படைப்பு உருவாகிறது. தன்னைவிட பெரிய விஷயங்களுக்கு படைப்பாளி தன்னை ஒப்புக் கொடுக்கிறான். ஒவ்வொரு கணத்திலும் தன்னில் இருந்து தானை விலக்கி உண்மையை தரிசிப்பதே அவன் தவம்.

அச்சொற்களை மீண்டும் சொல்லி இவ்வுரையை நிறைவு செய்கிறேன். குருபாதங்களுக்கு என் அஞ்சலி

[25-3- 2007 ல் ஊட்டி ·பெர்ன் ஹில், நாராயணகுருகுலத்தில் நடந்த நித்ய சைதன்ய யதி நினைவு கூட்டத்தில் ஆற்றிய மலையாள உரை]

மறுபிரசுரம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 01, 2023 10:35

அந்தியூர் குருநாதசாமி ஆலயம்

அந்தியூர் குருநாதசாமி கோயில் சிதம்பரம் அருகில் இருந்து வன்னிய மக்களால் கொண்டுவரப்பட்டு ‘பதியம்போட்டு’ உருவாக்கப்பட்ட ஆலயம். இந்த ஆலயத்தின் தனித்தன்மை ஒன்றுண்டு, தமிழகத்தின் மாபெரும் குதிரைச்சந்தை அந்தியூர் குருநாதசாமி ஆலயத்தில் நடைபெறுவதுதான்.

அந்தியூர் குருநாதசாமி ஆலயம் அந்தியூர் குருநாதசாமி ஆலயம் அந்தியூர் குருநாதசாமி ஆலயம் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 01, 2023 10:34

எதிர்நோக்கியா, கடிதம்

அழைப்பை எதிர்நோக்கியா?

அய்யா, வணக்கம்.

அழைப்பை எதிர்நோக்கியா? என்ற தங்களின் பதிவைப் படித்தேன்.

யாரும் தூக்கிப் பிடித்து நீங்கள் முன்னேறியவர் இல்லை. விருது ஒளிவட்டத்தால் புகழ்பெற்றவரும் இல்லை. முழுக்க முழுக்க உங்களின் உழைப்பும் ஆற்றலும் வாசிப்பும் எழுத்தும்தாம் உங்கள் உயர்வுக்குக் காரணங்கள்.

அந்தக் கடிதத்தை எழுதியவர் திமுக காரராக இருப்பார் என்று நான் கருதவில்லை. திராவிட முன்னேற்றம் கழகம் ஆளும் அரசின் சில செயல்களைக்கூட நீங்கள் ஆதரிக்கக் கூடாது என்ற எண்ணம் உடையவராகவே அவர் இருப்பார் என்று கருதுகிறேன்.

“இலையைப் போட்டுக்கொண்டு நீங்கள் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது ; என் அனுதாபங்கள்” என்று, உங்களைக் கீழ்மைப்படுத்தி அவர் எழுதி இருப்பதை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

தோரணம் கட்டி, பொன்இலை பரப்பி பத்மஸ்ரீ விருது அளிக்க முன்வந்ததையே மறுத்து ஒதுக்கியவர் நீங்கள் என்பதை அவர் அறிந்திருக்க மாட்டார்.

எந்தத் தரப்புக்கும் இன்னொரு எதிர்த்தரப்பு இருக்கும். பொதுவாக நீங்கள் திராவிடவியல் சிந்தனைக்கு எதிர்நிலையில் இருப்பவராகவே அறியப் படுகிறீர்கள். அதனால்கூட அரசு உங்களை அழைக்கத் தயங்கும். அரசு உங்களுக்குச் சிறப்புச் செய்ய நினைத்தால், நீங்கள் வர மறுப்பீர்கள் என்றும் கருதக்கூடும்.

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் எழுத்தாளர்களுக்கும் இந்த அரசு நல்ல செயல்களைச் செய்து வருவதை நீங்கள் நடுநிலையோடு பாராட்டி இருக்கிறீர்கள். உங்களின் பாராட்டும் இந்த அரசுக்கு நற்பெயரைத் தந்துள்ளது.

நீங்கள் பாராட்டியது உங்களுக்காக அல்ல. எழுத்தாளர்கள் மதிக்கப்பட வேண்டும். உலக அளவில் தமிழ் இலக்கியம் வளர வேண்டும் என்பதுதான் உங்கள் நோக்கம். அதை யார் செய்தாலும் நீங்கள் மனம் திறந்து ஆதரிப்பீர்கள்.

நீங்கள் அரசின் உதவியை எதிர்பார்க்கும் நிலையில் அறவே இல்லை. ஆனாலும் உங்களுக்கு அரசு சிறப்புச் செய்ய வேண்டும் என்பது என் தனிவிருப்பம். அரசுகள் கொண்டாடினாலும் கொண்டாடாவிட்டாலும், காலம் உங்களைக் கொண்டாடும்.

பணிவுடன்

கோ. மன்றவாணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 01, 2023 10:32

நீலி, பெண்ணிய இதழ்

அன்பு ஜெ,

நீலி மின்னிதழின் மூன்றாவது இதழும், இந்த வருடத்தின் முதல் இதழுமான பிப்ரவரி_2023 நீலி இதழ் வெளிவந்துள்ளது. உலகப்பெண் எழுத்தாளர்கள்/படைப்புகள் பற்றி சைதன்யா, சுசித்ரா, நந்தகுமார் எழுதியுள்ளனர். நவீனத்தமிழ் எழுத்தாளர்கள்/படைப்புகள் பற்றி கமலதேவி, சுரேஷ்ப்ரதீப், ரம்யா  எழுதியுள்ளனர். ஒளவையாரின் பாடல்கள் பற்றிய ரசனைக்கட்டுரைத் தொடரை இசை எழுதியுள்ளார். பிறமொழி பெண் எழுத்தாளர்கள்/படைப்புகள் பற்றி பார்கவி, பா.கண்மணி எழுதியுள்ளனர். ஆஷாபூர்ணாதேவியின் ஒரு சிறுகதை சுசித்ரா மொழிபெயர்ப்பில் அவரின் முன்னுரையுடன் வெளிவந்துள்ளது. புதிய முயற்சியாக எழுத்து இதழில் வெளிவந்த வெங்கட்சாமிநாதனின் விமர்சனக் கட்டுரை சுவாரசியமான முன்னுரையுடன் வெளிவந்துள்ளது.

ஒரு கட்டுரை இன்னொரு கட்டுரையோடு முயங்கும் ஒன்றைக் கண்டடையும்போது கிடைக்கும் பரவசமும், இங்கிருந்து சரடை முன் வந்த இதழிலுள்ள கட்டுரைகளோடு இணைக்கும்போது அடையும் திறப்புகளும் மகிழ்வையும் நிறைவையும் அளிக்கிறது. நண்பர்கள் இணைந்து செய்யும் தொகுத்தல் பணியிது. மீண்டும் நல்ல கட்டுரைகளை வழங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி.

 

பிப்ரவரி_2023 நீலி இதழ் நன்றிநீலி ஆசிரியர் குழு

அன்புள்ள ரம்யா,

ஓர் இணைய இதழ் இன்று ஏராளமான படைப்புகளுடன் வருவது பெரிய விஷயம் அல்ல. ஆசிரியரின் உழைப்பு, ரசனை வெளிப்படும்படி தேர்வுசெய்யப்பட்ட படைப்புகளுடன் வருவது முக்கியமானது. அதன் எல்லா படைப்புகளும் ஒரு பொது இலக்கைக்கொண்டிருப்பது, அவ்விதழுக்கு ஒரு முதன்மைநோக்கம் இருப்பது அதைவிட முக்கியமானது.

வெளிவந்த சில இதழ்களிலேயே நீலி மின்னிதழ் தமிழின் முக்கியமான ஒரு பெண்ணிய இதழாக அமைந்திருப்பதை உணரமுடிகிறது. தமிழில்  வெளிவந்த பெண்ணிய இதழ்களில் ஓர் இடம் நீலி இதழுக்கு உண்டு.

இங்கே பெண்ணிய இலக்கியத்திற்கான இதழ்கள் வெளிவந்ததில்லை. பெண்ணியம் என்ற பெயரில் ஏற்கனவே பொதுவெளியில் பேசப்படும் சாதாரண அரசியலை திரும்பப் பேசுவதே இங்குள்ள வழக்கம். பெண்ணிய இலக்கியத்தின் முகங்கள் நீலி இதழில் தீவிரமாக வெளிப்படுவது நிறைவளிக்கிறது.

ஜெயமோகன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 01, 2023 10:32

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.