Jeyamohan's Blog, page 631

February 7, 2023

வெண்முரசில் எஞ்சுவது….

முதற்கனல் வாங்க

முதற்கனல் செம்பதிப்பு வாங்க

அன்பின் ஜெ,

சமீப கால மன அழுத்தங்களின் எடை தாங்காமல், சில நாட்களுக்கு முன் பின்னிரவில் துயில் கலைந்து எழுந்து அமர்ந்து, அருகில் துயிலும் மனைவியையும், மகன், மகளையும் பார்த்துக்கொண்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தேன்.

என்ன செய்வதென அறியாமல், எழுந்து வெளியில் சென்று உலாத்தி விட்டு வந்தால் துயில் வர வாய்ப்பிருக்கும் எனக் கருதி, நகருலா சென்றேன். பழகிய கால்களைப் போல், நல்லதொரு கருப்புத்தேநீர் போட்டுத்தரும் கடையை அடைந்து தேநீர் அருந்தி, அங்கேயே மொபைலில் தடவிக்கொண்டிருந்தேன்.

எதையோ தேடப்போய் வெண்முரசின் பக்கங்களுக்குள் சிக்கி, சரி மீள் வாசிப்போமென முதல் பகுதியிலிருந்தே ஆரம்பித்தேன்.

வெண்முரசின் ஆரம்பத்திலிருந்தே நாள் விடாமல் வாசித்த கர்வம் மிக்கவனாக இருந்தேன்.

ஆனால், மீள்வாசிப்பில் அறிந்தது, என்னைத் திகைப்பில் ஆழ்த்தியது.

புதிதாக படிப்பது போல் இருந்தது.

முதற்கனலின் முடிவில், பீஷ்மர் சிகண்டிக்கு குருவாக பாடம் நடத்த ஆரம்பித்த பாலைவனக் காட்சிகள், புத்தம்புதிதாக வாசிப்பது போல் எண்ணம் வந்தது.

இப்போது 04/ஃபிப்ரவரி/2023 வாசித்துக்கொண்டிருக்கும் மழைப்பாடலின், திருதராஷ்டிரனின் அறிமுகக் காட்சியில், மேகராகம் கேட்டு/உணர்ந்து/பார்த்து கொண்டிருக்கும் காட்சியில் அயர்ந்து நின்று விட்டேன்.

மனதில் மொத்த வெண்முரசு, வாசித்தலையும் திரும்ப பார்க்க முயன்றேன்.

இளைய யாதவன், சம்பந்தப்பட்ட காட்சிகளைத் தவிர வேறு எதுவும் முழுக்க நினைவுக்கு வரவில்லை.

எதனால் என்று புரியவில்லை.

 

அன்புடன்,

 

சிவக்குமரன் இராமலிங்கம்

 

அன்புள்ள சிவக்குமரன்,

திரும்ப வாசிக்கும்போது ஏன் அத்தனை அன்னியமாக தெரிகிறதென்றால் முந்தைய வாசிப்பில் நீங்கள் இளைய யாதவனைச் சார்ந்து ஒரு குவிப்பை உங்கள் வாசிப்பில் இயல்பாக உருவாக்கிக் கொண்டீர்கள் என்பதனால்தான். நாவல் வாசிப்பில் அது இயல்பாக நிகழ்வதுதான். அந்தக்குவிப்பால் நீங்கள் இளைய யாதவரை கூர்ந்து அறிந்திருப்பீர்கள். கூடவே பிறரை இளைய யாதவர் மறைத்துமிருப்பார். முக்கியமான நாவல்களை மீண்டும் வாசிக்கவேண்டும் என்பது இதனால்தான். ம்

அப்படியென்றால் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனியாக வாசிக்கவேண்டுமா? தேவையில்லை. முதல் வாசிப்பில் மட்டுமே அந்தக்குவிதல் நிகழும். அடுத்த வாசிப்பு எப்போதுமே நுண்செய்திகளை நோக்கியதாக, விரிந்து பரவுவதாகவே இருக்கும். அது இயல்பான , அனைவருமே உணரக்கூடிய ஒன்றே .

அன்புடன்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 07, 2023 10:30

February 6, 2023

காமம், உணவு, யோகம்

அன்புள்ள அண்ணா,

இது எனது முதல் கடிதம்,ஆகவே மரியாதைக்குரிய ஆசானுக்கு என் பணிவான பாதம் பணிந்த வணக்கங்கள்,

என்னுள் பொங்கி வரும் சிந்தனைகள் அனைத்தும் இப்பொழுது உங்களால் நிறைக்கப்பட்டிருக்கிறது, உங்கள் சிந்தனை மட்டுமல்ல நீங்கள் வழிகாட்டிய பல ஆசான்களின் சிந்தனையும் என்னோடு ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.  நான் எனது கேள்விக்கு வருகிறேன்

நான் யோகம் பயின்று – முழுமையாக இல்லாவிட்டாலும் அரைகுறையாக ஆனால் தொடர்ச்சியாக பயிற்சியில் இருக்கிறேன் கிட்டத்தட்ட 15 வருடங்கள்… இதில் உணவு முறை என்று கூறப்பட்ட ,அசைவம் ஒருத்தலும், உற்ச்சாக பானம்- டீ காபி ஒறுத்தலும் சொல்லப்பட்டது. அவர்கள் எதையும் நிறுத்த சொல்லவில்லை, நிறுத்திப் பாருங்கள் உங்களுக்குள் வரும் மாற்றத்தை நீங்களே கவனியுங்கள் என்று சொன்னார்கள்.உண்மையில் எனக்குள் அசைவமும் டீ, காப்பியும் இல்லை என்றால் பதட்டம் குறைவாகவும்,காமம் பற்றிய நினைவு குறைவாகவும் மற்றும் சமநிலை கூடி இருத்தல் முடிகிறது. ஆனால் என்னால் தீயையும் அசைவத்தையும் விட முடியாமல் தவிக்கிறேன்.

ஆனால் உங்களுடன் ஆன எனது ஏழு வருட தொடர்பில் உங்களை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் பொழுது தோன்றுவதெல்லாம் இத்தகைய மகத்தான உழைப்பு என்பது அசைவம் சாப்பிட்டுக்கொண்டு, டீ அருந்திக்கொண்டு முடிகிறது என்றால் எவ்வாறு முடிகிறது, ஏன் எங்களுக்கு முடியவில்லை?.இதற்கு விளக்கம் கேட்கலாமா, என்ன செய்வது என்று தெரியாமல் இந்த கேள்வியை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன், இப்பொழுது இந்த கேள்வியின் எடை உங்கள் அதிகரிக்கும் பெரும் உழைப்பை பார்த்து தாள முடியாமல் ஆகிவிட்டது எனவே கேள்வியை உங்கள் முன்வைக்கிறேன்.

இந்த கேள்வி எனக்கு மட்டும் இல்லை,  என்னை சுற்றி இருப்பவர்களிடமும் இருக்கிறது என்பதை கண்டு கொண்டேன்-  உங்களை வாசிப்பவர்களும் இதில் அடக்கம். இதற்கு உங்களிடம் இருந்து விரிவான விளக்கம் எதிர்பார்க்கிறேன்.

சமீபத்தில் குரு நித்யசைதன்யா அவர்களைப் பற்றி ‘தத்துவத்தில் கனிதல்’ புத்தகம் வழியாக  அறிய முடிந்தது. அந்தப் புத்தகத்தில் நடராஜகுருவும், குரு சைதன்யாவும் காமத்தை கையாள்வது எப்படி என்று அறிந்திருந்தார்கள் – அவர்கள் குறிப்பிட்ட மனோ தத்துவ ஆய்வாளர்களின்- குறிப்பாக Havelock Ellis அவர்களின் புத்தகம் தமிழில் கிடைக்குமா அல்லது வேறு யாராவது புத்தகங்களை தாங்கள் பரிந்துரை செய்ய முடியுமா? அல்லது அது குறித்து தாங்கள் ஏன் புத்தகங்கள் எழுத கூடாது?, ஏனென்றால் இன்றைய இளைஞர்களுக்கும் என்னைப் போன்று முதுமையை நெருங்குபவர்களுக்கும் இம்மனோ மைதுனம் ஆற்றலை இழக்க வைக்கும் முக்கியமான விஷயமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் படிப்பது சற்று சிரமமாக இருக்கிறது,நேரம் எடுக்கிறது, இரண்டு கேள்விகளுக்கும் தயவு செய்து விளக்கம் கொடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பின்குறிப்பு :எனது மகன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார் உங்களது மேடைப்பேச்சு பயிற்சிக்கு பதிவு செய்துள்ளார்.அவருக்கு இலக்கிய பயிற்சி மிக குறைவாக இருந்தாலும் உங்கள் அண்மை அவருக்கு ஏற்றம் தரும் என்ற நம்பிக்கையில் அவர் கேட்டவுடன் பணம் கட்டி செல்ல சொல்லி இருக்கிறேன். தங்கள் ஆசீர்வாதமும் அண்மையும் அவருக்கு கிடைக்க இந்த வாய்ப்பினை நல்கியமைக்கு நன்றி.

அன்புடன்,

பாலசுப்பிரமணியன்.ந

அன்புள்ள பாலசுப்ரமணியன்,

உங்கள் கடிதம்போன்ற சில கடிதங்கள் வருவதுண்டு. அவற்றுக்கு யோகமரபு சார்ந்த விளக்கங்களை குரு சௌந்தர் போன்றவர்களே அளிக்க முடியும். நான் தீவிரமாகவோ, அதிகாரபூர்வமாகவோ எதுவும் சொல்லமுடியாது.

யோகப்பயிற்சி இன்று பரவியிருக்கிறது. அது நல்லதுதான். ஆனால் ஒருவரிலிருந்து ஒருவர் என பரவுகையில் அதற்கு அதிகாரபூர்வமான ஒரு தொடர்ச்சி இல்லாமலாகிறது. அவ்வகையில் தவறான பல நம்பிக்கைகள், சிந்தனைகள் அதில் நிலைகொள்கின்றன.

பெரும்பாலும் இந்த நம்பிக்கைகள் இருவகை. ஒன்று, இந்து மரபின் ஆசாரவாதம் சார்ந்தவை. இரண்டு, மேலைமரபில் இருந்து வரும் உதிரிவாழ்க்கை, மாற்றுவாழ்க்கை சார்ந்தவை. இரண்டுமே யோகத்துடன் தொடர்பற்றவை.

நாம் எப்போதுமே சிந்தனைகளை அந்தந்த மரபின் தொடர்ச்சியில் வைத்துப் பார்க்கவேண்டும். நாங்கள் தத்துவப்பயிற்சி அளிப்பதே அதை கற்பிப்பதற்காகத்தான். ஆசாரவாதம், பக்தி, யோகம், ஞானம் ஆகியவை வேறுவேறானவை. ஒன்றுடன் ஒன்று அவை உறவாடலாம், ஆனால் அவை ஒன்றைச் சொல்லவில்லை. அவற்றை கீதை தனித்தனியான வழிமுறையாகவே சொல்கிறது.

ஆசாரவாதம் என்பது பழைய வைதிக (பூர்வமீமாம்ச) மரபில் இருந்தும் சாதியாசாரங்களில் இருந்தும் உருவானது. கர்ம மார்க்கம் என அதைச் சொல்லலாம். அது வேள்விகள், பூஜைகள், வெவ்வேறு வகையான தற்கட்டுப்பாடுகள், தூய்மைபேணும் சடங்குகள் ஆகியவற்றைக் கொண்டது. தன்னை ஒடுக்கிக் கொள்ளும் தன்மை அதன் இயல்பு. எல்லா பக்கமும் விரியும் உள்ளத்தை, உடலை மிகமிகக் குறுக்கி ஒரே பாதையில் ஓடச்செய்வது அதன் வழிமுறை. அதன் வழியாக அடையப்படும் ஒரு விடுதலையை அது உத்தேசிக்கிறது

பக்தி என்பது ஆசாரவாதத்தின் தற்குறுக்கல் கொண்டது அல்ல. அது தன்னிச்சையான உளப்பெருக்குக்கு இடம் கொடுப்பது. அர்ப்பணிப்பே அதன் அடிப்படை. இசையும், கலையும், இலக்கியமும் அதன் வழிமுறைகள். உணர்வுபூர்வமான ஈடுபாடும், அதை பேணிக்கொள்ளும் செயல்முறைகளுமே பக்தியின் செயல்முறைகள்.

ஆசாரவாதமும் பக்தியும் இங்கே ஒன்றென கலந்து தெரிகின்றன. பக்தியில் சில ஆசாரங்களை ஒருவர் கடைப்பிடிக்கலாம். ஆசாரவாதி பக்தி கொண்டிருக்கலாம். ஆனால் அவையிரண்டும் வேறுவேறு. ஆசாரவாதத்தின் கடுமையான நெறிமுறைகள் பக்தியில் இன்றியமையாதவை அல்ல. நம் தொல்நூல்கள் அனைத்துமே அதைத்தான் சொல்கின்றன.

கண்ணப்பநாயனார் கதையே பக்திக்கும் ஆசாரத்திற்கும் இடையேயான போட்டிதானே? பெருமானை காலால் மிதிப்பதை உச்சகட்ட பக்தியென அக்கதை முன்வைக்கிறது. அத்தகைய பலகதைகள் உள்ளன. அக்கதைகளில் பக்தியை ஒரு படி மேலானதாக முன்வைக்கின்றன பக்தி காலகட்டக் கதைகள்.  ஆசாரவாதி காணமுடியாத தெய்வம் முரட்டு பக்தியின் முன் எழுந்தருள்வதை அவை சொல்கின்றன.

பக்தியில் உள்ள கட்டற்ற உணர்வுப்பெருக்கு, அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு பலசமயம் ஆசாரவாதம் தடையாக ஆகக்கூடும். ஆசாரவாதம் அளிக்கும் இறுக்கமான மனநிலை, தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளுதல் பக்தியை குறுக்கி ஒருவகை பிடிவாதமாகவும், பிறரை விலக்கும் வெறுப்பாகவும் ஆவதைக் காணலாம். இந்து மரபின் ஆசாரவாதம் பலசமயம் மனிதாபிமானமற்றதன்மையாக உருமாறக்கூடியது.

யோகம் என்பது ஆசாரவாதம், பக்தி இரண்டுக்கும் மாறானது. யோகம் என்பது அகச்செயல்களை குவித்தல், அதன் வழியாக அக ஆழங்களுக்குச் செல்லுதல்.

ஆசாரவாதத்திற்கும் யோகத்திற்கும் என்ன வேறுபாடு? ஆசாரவாதம் தன்னை இறுக்கி, கட்டுப்படுத்திக்கொண்டு, ஒரு குறுகியபாதையில் செல்லும் வழி. அதன் எல்லா நெறிகளும் புறவயமான வாழ்க்கை சார்ந்தவை. புறவயவாழ்க்கையை நெறிப்படுத்தினால் அகவயமான வாழ்க்கையும் நெறிப்படும் என நம்புகிறது அது. நெறிப்படுத்தப்பட்ட அக – புறவாழ்க்கையின் வழியாக விடுதலை சாத்தியம் என்கிறது.

யோகம் அகவயமான நெறிப்படுத்தலை முன்வைப்பது. அந்த அகவய நெறிப்படுத்தலை ‘கட்டுப்பாடுகள்’ வழியாக எய்த முடியாது. ஏனென்றால் அகத்தை கட்டுப்படுத்துவது இன்னொரு அகம். கட்டுப்படுத்த முயன்றால் அகம் இரண்டாகப் பிளந்து அகமோதல்தான் உருவாகும். அது மனஆற்றலை வீணாக்கி அழிக்கும்.

ஆகவே யோகம் அகத்தை கண்காணிப்பதை, அறிந்துகொள்வதை பற்றி மட்டுமே பேசுகிறது. அகத்தை கண்காணிக்கையிலேயே அது தன்னளவில் கட்டுப்பட ஆரம்பிக்கிறது. அகத்தை அறிய அறிய நாம் அதை கடக்கிறோம். யோகம் அதற்கான வழிமுறைகளைச் சொல்கிறது.

ஆசாரவாதத்தின் ‘தன்னை ஒறுக்கும்’ முறைகளை யோகம் சொல்வதில்லை. அகத்தை அகத்தால் ஒறுக்கமுடியாது என்றே அவை சொல்கின்றன. யோகத்தில் என்ன நிகழ்கிறதோ அதுவே நீங்கள். அதை அறிந்து, அதுதான் என ஏற்றுக்கொள்வதே செய்யவேண்டியது. யோக மரபில் குற்றவுணர்ச்சி, தாழ்வுணர்ச்சி, இழப்புணர்ச்சிகளுக்கு இடமே இல்லை. அவை யோகத்துக்கு நேர் எதிரானவை.

யோகத்தில் நீங்கள் உங்களைப் பற்றி என்ன அறிகிறீர்களோ அதுதான் நீங்கள். அதை ஏற்கவும் மேலும் அறியவுமே யோகம் பயிற்றுவிக்கிறது. அறிய அறிய உங்களை அறியாமலேயே நீங்கள் அறிந்தவற்றை கடந்துசெல்வீர்கள், அதுதான் யோகம் அளிக்கும் விடுதலை.

யோகப் பயிற்சியின் ஒரு செயல்முறையாக யம-நியமங்கள் சொல்லப்படுகின்றன. அக, புற ஒழுக்கங்கள் அவை. ஆனால் அவை ஆசாரவாதம் சொல்லும் இறுக்காமான நெறிமுறைகள் அல்ல. மீறக்கூடாத ஆணைகள் அல்ல. மீறினால் தண்டனையோ, சுயகண்டனமோ அடையவேண்டிய ஒழுக்கநெறிகளும் அல்ல.

யோக மரபில் காமம் ஒரு பாவமாக கருதப்படுவதில்லை. அது அஞ்சவோ அருவருக்கவோ தவிர்க்கவோ வேண்டிய ஒரு எதிர்ச்சக்தி அல்ல. அது மூலாதார சக்தி. முதன்மை உயிர்விசை. அதை கையாளவே யோகம் பயிற்றுவிக்கிறது. அகக்காமம், புறக்காமம் இரண்டுமே எந்தவகையிலும் யோகத்தில் எதிர்மறையாக பார்க்கப்படவில்லை.

நீங்கள் கற்றுக்கொண்ட மரபில் ஆசாரவாதத்தின் நெறிமுறைகளையும் உளநிலைகளையும் யோகத்தின் யம-நியமங்களுடன் கலந்துவிட்டார்கள். காமத்தை ஒறுக்கவேண்டிய ஒன்றாக கண்டு, அதற்கு எதிரான கடுமையான கட்டுப்பாடுகளை அளித்துள்ளனர். அதுவே முதற்பிழை.

காமத்தை ’வெல்ல வேண்டும்’ அதற்கு ’உணவுக் கட்டுப்பாடுகள்’ தேவை என்பதெல்லாமே மரபான யோகமுறையில் நிபந்தனைகளாகச் சொல்லப்படுவன அல்ல. அவை ஆசாரவாதம் சார்ந்தவை. காமத்தில் திளைப்பதும், கட்டற்ற உணவும் எல்லா யோகமுறைகளிலும் தடுக்கப்பட்டுள்ளன. ஆனால் குற்றவுணர்ச்சியை ஒருபோதும் யோகம் உருவாக்காது – உருவாக்கலாகாது.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 06, 2023 10:35

காமம், உணவு, யோகம்

அன்புள்ள அண்ணா,

இது எனது முதல் கடிதம்,ஆகவே மரியாதைக்குரிய ஆசானுக்கு என் பணிவான பாதம் பணிந்த வணக்கங்கள்,

என்னுள் பொங்கி வரும் சிந்தனைகள் அனைத்தும் இப்பொழுது உங்களால் நிறைக்கப்பட்டிருக்கிறது, உங்கள் சிந்தனை மட்டுமல்ல நீங்கள் வழிகாட்டிய பல ஆசான்களின் சிந்தனையும் என்னோடு ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.  நான் எனது கேள்விக்கு வருகிறேன்

நான் யோகம் பயின்று – முழுமையாக இல்லாவிட்டாலும் அரைகுறையாக ஆனால் தொடர்ச்சியாக பயிற்சியில் இருக்கிறேன் கிட்டத்தட்ட 15 வருடங்கள்… இதில் உணவு முறை என்று கூறப்பட்ட ,அசைவம் ஒருத்தலும், உற்ச்சாக பானம்- டீ காபி ஒறுத்தலும் சொல்லப்பட்டது. அவர்கள் எதையும் நிறுத்த சொல்லவில்லை, நிறுத்திப் பாருங்கள் உங்களுக்குள் வரும் மாற்றத்தை நீங்களே கவனியுங்கள் என்று சொன்னார்கள்.உண்மையில் எனக்குள் அசைவமும் டீ, காப்பியும் இல்லை என்றால் பதட்டம் குறைவாகவும்,காமம் பற்றிய நினைவு குறைவாகவும் மற்றும் சமநிலை கூடி இருத்தல் முடிகிறது. ஆனால் என்னால் தீயையும் அசைவத்தையும் விட முடியாமல் தவிக்கிறேன்.

ஆனால் உங்களுடன் ஆன எனது ஏழு வருட தொடர்பில் உங்களை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் பொழுது தோன்றுவதெல்லாம் இத்தகைய மகத்தான உழைப்பு என்பது அசைவம் சாப்பிட்டுக்கொண்டு, டீ அருந்திக்கொண்டு முடிகிறது என்றால் எவ்வாறு முடிகிறது, ஏன் எங்களுக்கு முடியவில்லை?.இதற்கு விளக்கம் கேட்கலாமா, என்ன செய்வது என்று தெரியாமல் இந்த கேள்வியை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன், இப்பொழுது இந்த கேள்வியின் எடை உங்கள் அதிகரிக்கும் பெரும் உழைப்பை பார்த்து தாள முடியாமல் ஆகிவிட்டது எனவே கேள்வியை உங்கள் முன்வைக்கிறேன்.

இந்த கேள்வி எனக்கு மட்டும் இல்லை,  என்னை சுற்றி இருப்பவர்களிடமும் இருக்கிறது என்பதை கண்டு கொண்டேன்-  உங்களை வாசிப்பவர்களும் இதில் அடக்கம். இதற்கு உங்களிடம் இருந்து விரிவான விளக்கம் எதிர்பார்க்கிறேன்.

சமீபத்தில் குரு நித்யசைதன்யா அவர்களைப் பற்றி ‘தத்துவத்தில் கனிதல்’ புத்தகம் வழியாக  அறிய முடிந்தது. அந்தப் புத்தகத்தில் நடராஜகுருவும், குரு சைதன்யாவும் காமத்தை கையாள்வது எப்படி என்று அறிந்திருந்தார்கள் – அவர்கள் குறிப்பிட்ட மனோ தத்துவ ஆய்வாளர்களின்- குறிப்பாக Havelock Ellis அவர்களின் புத்தகம் தமிழில் கிடைக்குமா அல்லது வேறு யாராவது புத்தகங்களை தாங்கள் பரிந்துரை செய்ய முடியுமா? அல்லது அது குறித்து தாங்கள் ஏன் புத்தகங்கள் எழுத கூடாது?, ஏனென்றால் இன்றைய இளைஞர்களுக்கும் என்னைப் போன்று முதுமையை நெருங்குபவர்களுக்கும் இம்மனோ மைதுனம் ஆற்றலை இழக்க வைக்கும் முக்கியமான விஷயமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் படிப்பது சற்று சிரமமாக இருக்கிறது,நேரம் எடுக்கிறது, இரண்டு கேள்விகளுக்கும் தயவு செய்து விளக்கம் கொடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பின்குறிப்பு :எனது மகன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார் உங்களது மேடைப்பேச்சு பயிற்சிக்கு பதிவு செய்துள்ளார்.அவருக்கு இலக்கிய பயிற்சி மிக குறைவாக இருந்தாலும் உங்கள் அண்மை அவருக்கு ஏற்றம் தரும் என்ற நம்பிக்கையில் அவர் கேட்டவுடன் பணம் கட்டி செல்ல சொல்லி இருக்கிறேன். தங்கள் ஆசீர்வாதமும் அண்மையும் அவருக்கு கிடைக்க இந்த வாய்ப்பினை நல்கியமைக்கு நன்றி.

அன்புடன்,

பாலசுப்பிரமணியன்.ந

அன்புள்ள பாலசுப்ரமணியன்,

உங்கள் கடிதம்போன்ற சில கடிதங்கள் வருவதுண்டு. அவற்றுக்கு யோகமரபு சார்ந்த விளக்கங்களை குரு சௌந்தர் போன்றவர்களே அளிக்க முடியும். நான் தீவிரமாகவோ, அதிகாரபூர்வமாகவோ எதுவும் சொல்லமுடியாது.

யோகப்பயிற்சி இன்று பரவியிருக்கிறது. அது நல்லதுதான். ஆனால் ஒருவரிலிருந்து ஒருவர் என பரவுகையில் அதற்கு அதிகாரபூர்வமான ஒரு தொடர்ச்சி இல்லாமலாகிறது. அவ்வகையில் தவறான பல நம்பிக்கைகள், சிந்தனைகள் அதில் நிலைகொள்கின்றன.

பெரும்பாலும் இந்த நம்பிக்கைகள் இருவகை. ஒன்று, இந்து மரபின் ஆசாரவாதம் சார்ந்தவை. இரண்டு, மேலைமரபில் இருந்து வரும் உதிரிவாழ்க்கை, மாற்றுவாழ்க்கை சார்ந்தவை. இரண்டுமே யோகத்துடன் தொடர்பற்றவை.

நாம் எப்போதுமே சிந்தனைகளை அந்தந்த மரபின் தொடர்ச்சியில் வைத்துப் பார்க்கவேண்டும். நாங்கள் தத்துவப்பயிற்சி அளிப்பதே அதை கற்பிப்பதற்காகத்தான். ஆசாரவாதம், பக்தி, யோகம், ஞானம் ஆகியவை வேறுவேறானவை. ஒன்றுடன் ஒன்று அவை உறவாடலாம், ஆனால் அவை ஒன்றைச் சொல்லவில்லை. அவற்றை கீதை தனித்தனியான வழிமுறையாகவே சொல்கிறது.

ஆசாரவாதம் என்பது பழைய வைதிக (பூர்வமீமாம்ச) மரபில் இருந்தும் சாதியாசாரங்களில் இருந்தும் உருவானது. கர்ம மார்க்கம் என அதைச் சொல்லலாம். அது வேள்விகள், பூஜைகள், வெவ்வேறு வகையான தற்கட்டுப்பாடுகள், தூய்மைபேணும் சடங்குகள் ஆகியவற்றைக் கொண்டது. தன்னை ஒடுக்கிக் கொள்ளும் தன்மை அதன் இயல்பு. எல்லா பக்கமும் விரியும் உள்ளத்தை, உடலை மிகமிகக் குறுக்கி ஒரே பாதையில் ஓடச்செய்வது அதன் வழிமுறை. அதன் வழியாக அடையப்படும் ஒரு விடுதலையை அது உத்தேசிக்கிறது

பக்தி என்பது ஆசாரவாதத்தின் தற்குறுக்கல் கொண்டது அல்ல. அது தன்னிச்சையான உளப்பெருக்குக்கு இடம் கொடுப்பது. அர்ப்பணிப்பே அதன் அடிப்படை. இசையும், கலையும், இலக்கியமும் அதன் வழிமுறைகள். உணர்வுபூர்வமான ஈடுபாடும், அதை பேணிக்கொள்ளும் செயல்முறைகளுமே பக்தியின் செயல்முறைகள்.

ஆசாரவாதமும் பக்தியும் இங்கே ஒன்றென கலந்து தெரிகின்றன. பக்தியில் சில ஆசாரங்களை ஒருவர் கடைப்பிடிக்கலாம். ஆசாரவாதி பக்தி கொண்டிருக்கலாம். ஆனால் அவையிரண்டும் வேறுவேறு. ஆசாரவாதத்தின் கடுமையான நெறிமுறைகள் பக்தியில் இன்றியமையாதவை அல்ல. நம் தொல்நூல்கள் அனைத்துமே அதைத்தான் சொல்கின்றன.

கண்ணப்பநாயனார் கதையே பக்திக்கும் ஆசாரத்திற்கும் இடையேயான போட்டிதானே? பெருமானை காலால் மிதிப்பதை உச்சகட்ட பக்தியென அக்கதை முன்வைக்கிறது. அத்தகைய பலகதைகள் உள்ளன. அக்கதைகளில் பக்தியை ஒரு படி மேலானதாக முன்வைக்கின்றன பக்தி காலகட்டக் கதைகள்.  ஆசாரவாதி காணமுடியாத தெய்வம் முரட்டு பக்தியின் முன் எழுந்தருள்வதை அவை சொல்கின்றன.

பக்தியில் உள்ள கட்டற்ற உணர்வுப்பெருக்கு, அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு பலசமயம் ஆசாரவாதம் தடையாக ஆகக்கூடும். ஆசாரவாதம் அளிக்கும் இறுக்கமான மனநிலை, தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளுதல் பக்தியை குறுக்கி ஒருவகை பிடிவாதமாகவும், பிறரை விலக்கும் வெறுப்பாகவும் ஆவதைக் காணலாம். இந்து மரபின் ஆசாரவாதம் பலசமயம் மனிதாபிமானமற்றதன்மையாக உருமாறக்கூடியது.

யோகம் என்பது ஆசாரவாதம், பக்தி இரண்டுக்கும் மாறானது. யோகம் என்பது அகச்செயல்களை குவித்தல், அதன் வழியாக அக ஆழங்களுக்குச் செல்லுதல்.

ஆசாரவாதத்திற்கும் யோகத்திற்கும் என்ன வேறுபாடு? ஆசாரவாதம் தன்னை இறுக்கி, கட்டுப்படுத்திக்கொண்டு, ஒரு குறுகியபாதையில் செல்லும் வழி. அதன் எல்லா நெறிகளும் புறவயமான வாழ்க்கை சார்ந்தவை. புறவயவாழ்க்கையை நெறிப்படுத்தினால் அகவயமான வாழ்க்கையும் நெறிப்படும் என நம்புகிறது அது. நெறிப்படுத்தப்பட்ட அக – புறவாழ்க்கையின் வழியாக விடுதலை சாத்தியம் என்கிறது.

யோகம் அகவயமான நெறிப்படுத்தலை முன்வைப்பது. அந்த அகவய நெறிப்படுத்தலை ‘கட்டுப்பாடுகள்’ வழியாக எய்த முடியாது. ஏனென்றால் அகத்தை கட்டுப்படுத்துவது இன்னொரு அகம். கட்டுப்படுத்த முயன்றால் அகம் இரண்டாகப் பிளந்து அகமோதல்தான் உருவாகும். அது மனஆற்றலை வீணாக்கி அழிக்கும்.

ஆகவே யோகம் அகத்தை கண்காணிப்பதை, அறிந்துகொள்வதை பற்றி மட்டுமே பேசுகிறது. அகத்தை கண்காணிக்கையிலேயே அது தன்னளவில் கட்டுப்பட ஆரம்பிக்கிறது. அகத்தை அறிய அறிய நாம் அதை கடக்கிறோம். யோகம் அதற்கான வழிமுறைகளைச் சொல்கிறது.

ஆசாரவாதத்தின் ‘தன்னை ஒறுக்கும்’ முறைகளை யோகம் சொல்வதில்லை. அகத்தை அகத்தால் ஒறுக்கமுடியாது என்றே அவை சொல்கின்றன. யோகத்தில் என்ன நிகழ்கிறதோ அதுவே நீங்கள். அதை அறிந்து, அதுதான் என ஏற்றுக்கொள்வதே செய்யவேண்டியது. யோக மரபில் குற்றவுணர்ச்சி, தாழ்வுணர்ச்சி, இழப்புணர்ச்சிகளுக்கு இடமே இல்லை. அவை யோகத்துக்கு நேர் எதிரானவை.

யோகத்தில் நீங்கள் உங்களைப் பற்றி என்ன அறிகிறீர்களோ அதுதான் நீங்கள். அதை ஏற்கவும் மேலும் அறியவுமே யோகம் பயிற்றுவிக்கிறது. அறிய அறிய உங்களை அறியாமலேயே நீங்கள் அறிந்தவற்றை கடந்துசெல்வீர்கள், அதுதான் யோகம் அளிக்கும் விடுதலை.

யோகப் பயிற்சியின் ஒரு செயல்முறையாக யம-நியமங்கள் சொல்லப்படுகின்றன. அக, புற ஒழுக்கங்கள் அவை. ஆனால் அவை ஆசாரவாதம் சொல்லும் இறுக்காமான நெறிமுறைகள் அல்ல. மீறக்கூடாத ஆணைகள் அல்ல. மீறினால் தண்டனையோ, சுயகண்டனமோ அடையவேண்டிய ஒழுக்கநெறிகளும் அல்ல.

யோக மரபில் காமம் ஒரு பாவமாக கருதப்படுவதில்லை. அது அஞ்சவோ அருவருக்கவோ தவிர்க்கவோ வேண்டிய ஒரு எதிர்ச்சக்தி அல்ல. அது மூலாதார சக்தி. முதன்மை உயிர்விசை. அதை கையாளவே யோகம் பயிற்றுவிக்கிறது. அகக்காமம், புறக்காமம் இரண்டுமே எந்தவகையிலும் யோகத்தில் எதிர்மறையாக பார்க்கப்படவில்லை.

நீங்கள் கற்றுக்கொண்ட மரபில் ஆசாரவாதத்தின் நெறிமுறைகளையும் உளநிலைகளையும் யோகத்தின் யம-நியமங்களுடன் கலந்துவிட்டார்கள். காமத்தை ஒறுக்கவேண்டிய ஒன்றாக கண்டு, அதற்கு எதிரான கடுமையான கட்டுப்பாடுகளை அளித்துள்ளனர். அதுவே முதற்பிழை.

காமத்தை ’வெல்ல வேண்டும்’ அதற்கு ’உணவுக் கட்டுப்பாடுகள்’ தேவை என்பதெல்லாமே மரபான யோகமுறையில் நிபந்தனைகளாகச் சொல்லப்படுவன அல்ல. அவை ஆசாரவாதம் சார்ந்தவை. காமத்தில் திளைப்பதும், கட்டற்ற உணவும் எல்லா யோகமுறைகளிலும் தடுக்கப்பட்டுள்ளன. ஆனால் குற்றவுணர்ச்சியை ஒருபோதும் யோகம் உருவாக்காது – உருவாக்கலாகாது.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 06, 2023 10:35

புகையிலை விடு தூது

தமிழின் 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று தூது. அதில் அழகர் கிள்ளைவிடு தூது போன்ற பக்தி இலக்கியங்களும் உமாபதி சிவாச்சாரியாரின் நெஞ்சுவிடு தூது போன்ற தத்துவநூல்களும் உள்ளன. சுவாரசியமான ஒரு நூல் புகையிலை விடு தூது. உ.வே.சாமிநாதையர் பதிப்பித்த இந்நூல் தமிழின் பழைய பகடிநூல்களில் ஒன்று.

புகையிலை விடு தூது புகையிலை விடு தூது புகையிலை விடு தூது – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 06, 2023 10:34

புகையிலை விடு தூது

தமிழின் 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று தூது. அதில் அழகர் கிள்ளைவிடு தூது போன்ற பக்தி இலக்கியங்களும் உமாபதி சிவாச்சாரியாரின் நெஞ்சுவிடு தூது போன்ற தத்துவநூல்களும் உள்ளன. சுவாரசியமான ஒரு நூல் புகையிலை விடு தூது. உ.வே.சாமிநாதையர் பதிப்பித்த இந்நூல் தமிழின் பழைய பகடிநூல்களில் ஒன்று.

புகையிலை விடு தூது [image error] புகையிலை விடு தூது – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 06, 2023 10:34

மரபு, குறள் – ஓர் இணையதளம்

அன்பு ஜெ,

வேலையாக வெளியிலே அலையும்போதெல்லாம் எதையேனும் கேட்டுக்கொண்டே செல்வது எனக்கு விருப்பம். அது என்னைக் காரோட்டும் அலுப்பிலிருந்து விரட்டும். 15 மணிநேரம்கூட நில்லாமல் காரோட்டுவதுண்டு. இன்றைக்கு ஒருமணி நேர ஓட்டத்தில் உங்களுடைய மரபு இலக்கியம் (ஏப்ரல் 13, 2021 தேதியிட்ட ஸ்பாட்டிபை ஒலிக்கோப்பு) உரையைக் கேட்டேன். கண்களி நீர் கசியக் கேட்டேன். அது உங்களது அதே ஆனந்தத்தை, உணர்வை நான் என்னுள் கண்டுகொண்டதன் வெளிப்பாடே. ஒரு ஆசிரியன் ஆனந்தத்தையே கற்பிக்கிறான் என்று வேறெங்கோ சொன்னீர்கள்.

எனது மூச்சுப் பயிற்சி வகுப்பு முடிந்து அன்றைக்கு ஒருவர் அவ்வகுப்பு ஆனந்தமாக இருந்தது என்னிடம் சொன்னார்!  அழகு, அறம், சொல்லழகு, மெய்யியல் என்ற யாவற்றையும் இணைத்துணர்த்திய சிறந்த உரை. விசும்பின் துளியைக் கண்ட புல்லாகக் கசிந்தேன். விசும்பு என்ற வார்த்தையைச் சிவ வாக்கியத்திலும் நிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ எனக் கோர்த்துப் பார்த்தது மனது.

அம்மாவின் அன்பு செழிந்த மறத்தைப் பற்றிக் கேட்டபோது எனக்கொரு நிகழ்வு நினைவுக்கு வந்தது. ஒரு முறை அமெரிக்க விமான நிலையத்தில் நின்றிருந்தேன். கரோனா தொற்று முடிந்து பயண இறுக்கம் சற்றே தளர்ந்து, ஆனால் முகக் கவசம் அணிந்தே இருக்க வேண்டிய கட்டாயத்துடன் பயணங்கள் அனுமதிக்கப்பட்ட காலம். ஒரு இளைஞன், கனடாக்காரன். முகக்கவசமணியாமல் தன் செல்பேசியில் யாருடனோ பேசுகிறான். உரத்துச் சிரித்து, இங்கே பார் நான் முகக்கவசமணியாமல் திரிகிறேன், யாரும் கண்டுகொள்ளவில்லை என்றவாறு, சில இழிசொற்களையும் வரிசையாகத் தூவியபடி பேசிக்கொண்டேயிருக்கிறான். எனக்கு உள்ளே கொதித்துத் துடிக்கிறது. அவனை எப்படி அடக்கலாம் என்று படபடக்கிறேன். சில நிமிடங்களில் ஒரு அம்மா எழுந்து அவனிடம் வந்து ‘இங்கே குழந்தைகள் இருக்கிறார்கள், உன் வார்த்தைகளைக் கட்டுப்படுத்திக் கொள்’ என்றார். நான் அந்த அம்மாவுக்குத் துணையாக, ஆமாம் இது சரியில்லை என்றேன் அவனிடம். அவன் மன்னிக்கவும் என்று சொல்லிவிட்டு அமைதியானான். குழந்தைகள் இருக்கிறார்கள் என்று அந்தம்மா சொன்னது எனக்கேன் தோன்றவில்லை! அது அறம் மட்டுமல்ல, அன்பும், தாய்மையும், பொறுப்பும், எவரும் மாறுபட முடியாத புத்திக் கூர்மையும் கொண்ட சொற்களும் கூட. அன்றுமுதல் பொது இடங்களில் குழந்தைகளை மையப்படுத்திப் பார்க்கக் கற்றுக் கொள்கிறேன்.

அப்புறம் கெய்ஷா சிறுகதையையும் கேட்டேன். ஏதிற்பிணந்தழீஇ யற்று என்று சொல்வீர்களோ என எதிர்பார்த்தேன். அந்தத் துள்ளற் காலங்களின் முடிவில் சாரமற்று நீண்டு விரியும் வருடங்களில் ஒருவர் எதைத் தேடுவார் அல்லது துய்ப்பார். அங்குதான் போய்க்கொண்டிருக்கிறேன். அந்த ஓட்டந்தான் கல்பொரு சிறுநுரையற்று ஓடும் தெளிவோ.

ஜவகர் நேசனின் நூலைப் பற்றி எங்கேனும் சொன்னீர்களா எனத் தெரியவில்லை. புதிய கல்விக் கொள்கை குறித்த அவரது உரைகளைக் கேட்டேன். எது கல்வி, ஏன் தமிழ் படிக்கவேண்டும் என்ற உரைகளினூடு நான் உணர்ந்த உங்கள் பார்வைகளோடு அவரது கருத்துக்களில் நிறைய ஒற்றுமைகளைக் காண்கிறேன். அவரது தலைமையிலமைந்திருக்கும் பள்ளிக் கல்விக்கான ஒரு குழுவில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பொன்று உருவாகியுள்ளது.

எனக்குத் திருக்குறள் விருப்பம். 1330 குறட்பாக்களையும் நண்பர்களைக் கொண்டு ஓதுதல் முறையில் உருவாக்கினேன். தற்போது திருக்குறள் மற்றும் மரபிலக்கியங்களோடு மூச்சுப் பயிற்சிகளையும் இணைத்துக் கற்பிக்கிறேன். 2008 வாக்கில் நாங்கள் தயாரித்த திருக்குறள் மறையோதுதலை இயன்றால் கேட்டுப் பாருங்கள்: maraimozhi.wordpress.com

உங்கள் உரைகளை இன்னும் நிறையக் கேட்டு ஆனந்தமடைய வேண்டும்!
நன்றி!

அன்புடன்
சுந்தர் பாலகிருஷ்ணன்

***

அன்புள்ள சுந்தர்,

மறைமொழி இணையப்பக்கம் சிறப்பாக உள்ளது. குறிப்பிடத்தக்க முயற்சி. திருக்குறளை வெறும் அறிவுநூலாக, ஆய்வு நோக்குடன் அணுகுவதற்கு எதிரான எண்ணம் எனக்கு எப்போதுமே உண்டு. அது ஒரு மறை, அதை ஓதவேண்டும் என்றே சொல்லிவருகிறேன். அந்த நிறைவை அடைந்தேன். வாழ்த்துக்கள்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 06, 2023 10:31

மரபு, குறள் – ஓர் இணையதளம்

அன்பு ஜெ,

வேலையாக வெளியிலே அலையும்போதெல்லாம் எதையேனும் கேட்டுக்கொண்டே செல்வது எனக்கு விருப்பம். அது என்னைக் காரோட்டும் அலுப்பிலிருந்து விரட்டும். 15 மணிநேரம்கூட நில்லாமல் காரோட்டுவதுண்டு. இன்றைக்கு ஒருமணி நேர ஓட்டத்தில் உங்களுடைய மரபு இலக்கியம் (ஏப்ரல் 13, 2021 தேதியிட்ட ஸ்பாட்டிபை ஒலிக்கோப்பு) உரையைக் கேட்டேன். கண்களி நீர் கசியக் கேட்டேன். அது உங்களது அதே ஆனந்தத்தை, உணர்வை நான் என்னுள் கண்டுகொண்டதன் வெளிப்பாடே. ஒரு ஆசிரியன் ஆனந்தத்தையே கற்பிக்கிறான் என்று வேறெங்கோ சொன்னீர்கள்.

எனது மூச்சுப் பயிற்சி வகுப்பு முடிந்து அன்றைக்கு ஒருவர் அவ்வகுப்பு ஆனந்தமாக இருந்தது என்னிடம் சொன்னார்!  அழகு, அறம், சொல்லழகு, மெய்யியல் என்ற யாவற்றையும் இணைத்துணர்த்திய சிறந்த உரை. விசும்பின் துளியைக் கண்ட புல்லாகக் கசிந்தேன். விசும்பு என்ற வார்த்தையைச் சிவ வாக்கியத்திலும் நிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ எனக் கோர்த்துப் பார்த்தது மனது.

அம்மாவின் அன்பு செழிந்த மறத்தைப் பற்றிக் கேட்டபோது எனக்கொரு நிகழ்வு நினைவுக்கு வந்தது. ஒரு முறை அமெரிக்க விமான நிலையத்தில் நின்றிருந்தேன். கரோனா தொற்று முடிந்து பயண இறுக்கம் சற்றே தளர்ந்து, ஆனால் முகக் கவசம் அணிந்தே இருக்க வேண்டிய கட்டாயத்துடன் பயணங்கள் அனுமதிக்கப்பட்ட காலம். ஒரு இளைஞன், கனடாக்காரன். முகக்கவசமணியாமல் தன் செல்பேசியில் யாருடனோ பேசுகிறான். உரத்துச் சிரித்து, இங்கே பார் நான் முகக்கவசமணியாமல் திரிகிறேன், யாரும் கண்டுகொள்ளவில்லை என்றவாறு, சில இழிசொற்களையும் வரிசையாகத் தூவியபடி பேசிக்கொண்டேயிருக்கிறான். எனக்கு உள்ளே கொதித்துத் துடிக்கிறது. அவனை எப்படி அடக்கலாம் என்று படபடக்கிறேன். சில நிமிடங்களில் ஒரு அம்மா எழுந்து அவனிடம் வந்து ‘இங்கே குழந்தைகள் இருக்கிறார்கள், உன் வார்த்தைகளைக் கட்டுப்படுத்திக் கொள்’ என்றார். நான் அந்த அம்மாவுக்குத் துணையாக, ஆமாம் இது சரியில்லை என்றேன் அவனிடம். அவன் மன்னிக்கவும் என்று சொல்லிவிட்டு அமைதியானான். குழந்தைகள் இருக்கிறார்கள் என்று அந்தம்மா சொன்னது எனக்கேன் தோன்றவில்லை! அது அறம் மட்டுமல்ல, அன்பும், தாய்மையும், பொறுப்பும், எவரும் மாறுபட முடியாத புத்திக் கூர்மையும் கொண்ட சொற்களும் கூட. அன்றுமுதல் பொது இடங்களில் குழந்தைகளை மையப்படுத்திப் பார்க்கக் கற்றுக் கொள்கிறேன்.

அப்புறம் கெய்ஷா சிறுகதையையும் கேட்டேன். ஏதிற்பிணந்தழீஇ யற்று என்று சொல்வீர்களோ என எதிர்பார்த்தேன். அந்தத் துள்ளற் காலங்களின் முடிவில் சாரமற்று நீண்டு விரியும் வருடங்களில் ஒருவர் எதைத் தேடுவார் அல்லது துய்ப்பார். அங்குதான் போய்க்கொண்டிருக்கிறேன். அந்த ஓட்டந்தான் கல்பொரு சிறுநுரையற்று ஓடும் தெளிவோ.

ஜவகர் நேசனின் நூலைப் பற்றி எங்கேனும் சொன்னீர்களா எனத் தெரியவில்லை. புதிய கல்விக் கொள்கை குறித்த அவரது உரைகளைக் கேட்டேன். எது கல்வி, ஏன் தமிழ் படிக்கவேண்டும் என்ற உரைகளினூடு நான் உணர்ந்த உங்கள் பார்வைகளோடு அவரது கருத்துக்களில் நிறைய ஒற்றுமைகளைக் காண்கிறேன். அவரது தலைமையிலமைந்திருக்கும் பள்ளிக் கல்விக்கான ஒரு குழுவில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பொன்று உருவாகியுள்ளது.

எனக்குத் திருக்குறள் விருப்பம். 1330 குறட்பாக்களையும் நண்பர்களைக் கொண்டு ஓதுதல் முறையில் உருவாக்கினேன். தற்போது திருக்குறள் மற்றும் மரபிலக்கியங்களோடு மூச்சுப் பயிற்சிகளையும் இணைத்துக் கற்பிக்கிறேன். 2008 வாக்கில் நாங்கள் தயாரித்த திருக்குறள் மறையோதுதலை இயன்றால் கேட்டுப் பாருங்கள்: maraimozhi.wordpress.com

உங்கள் உரைகளை இன்னும் நிறையக் கேட்டு ஆனந்தமடைய வேண்டும்!
நன்றி!

அன்புடன்
சுந்தர் பாலகிருஷ்ணன்

***

அன்புள்ள சுந்தர்,

மறைமொழி இணையப்பக்கம் சிறப்பாக உள்ளது. குறிப்பிடத்தக்க முயற்சி. திருக்குறளை வெறும் அறிவுநூலாக, ஆய்வு நோக்குடன் அணுகுவதற்கு எதிரான எண்ணம் எனக்கு எப்போதுமே உண்டு. அது ஒரு மறை, அதை ஓதவேண்டும் என்றே சொல்லிவருகிறேன். அந்த நிறைவை அடைந்தேன். வாழ்த்துக்கள்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 06, 2023 10:31

ஆசிரியன் எனும் நிலை, கடிதம்

உளம் கனிந்த ஜெவிற்கு,

இன்றைய  ஏற்பும் நிறைவும் என்ற அற்புதமான கடிதம் படித்ததும் மனம் இக்கடிதத்தை எழுத தூண்டியது. 2022 வருடம் எனக்கு பல அதிசயங்கள் நிகழ்ந்த வருடம். 2021  விஷ்ணுபுரம் விழாவில் தங்களை பார்பதற்காகவே வந்தேன். அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் கல்தூணும் கனிமரமும் உரை கேட்க வந்தேன். முதல் வரிசையில் அமர்ந்து சிதறல் இல்லாமல் கேட்ட முதல் உரை முதல் திறவு எனக்கு. பின்பு, ஜூலையில் நாமக்கல்லில் விடுதலை என்பது என்ன? என்ற தலைப்பில் நீங்கள் ஆற்றிய உரை தத்துவத்திற்கான நற்துவக்கமாக இருந்தது, சந்தேகத்திற்கு விளக்கமும் அளித்தீர்கள். அதே மாதம் கோவை புத்தக திருவிழாவில் குடவாயில் பாலசுப்ரமணியம் ஐயாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளித்து நீங்கள் ஆற்றிய உரை வரலாற்றை எப்படி அணுக வேண்டும் அதன் தேவை,வரலாற்று வாதம், வரலாற்றுத்  தன்மை போன்றவற்றை தெளிவாக புரிந்து கொள்ள உதவியது.

செப்டம்பர் மாத தத்துவ வகுப்பில் கலந்து கொண்ட 3 நாட்களும் வேறு உலகத்தில் இருந்தது போன்ற உணர்வு, குருகுல முறைப்படி கற்பது போல அமைந்த வகுப்பு ஒரு ஞான துவக்கம்.  உங்கள் முன்பு திருமுறை பாடியதும் மறக்க முடியாது ஒன்று.அக்டோபர் மாதத்தில் ஜெ 60 நிகழ்வு கோவையில் நடைபெற்றது.    என் உள்ளம் கவர் பட்டி பெருமானின் தலத்தில் நீங்கள் மாலை மாற்றிய தருணம் நீங்காத பரவசத்தையும்  மகிழ்வையும் தந்த தருணம்.அன்றைய உரைகளும் நெகிழ்வை தந்தன. மேலும் முத்துலிங்கம் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் தங்களின் சிற்றுரை கேட்டு பங்கு கொண்டது, நிறைவாக விஷ்ணுபுர விழாவில் வெள்ளி முதல் திங்கள் காலை வரை அங்கு பெற்றதை எழுதி மாளாது.

அறிதலுக்கான பெரும்விழைவு உள்ளே பொறிக்கப்பட்டுள்ளது. அறிதலின்போது மட்டுமே அவன் அடையும் நிகரற்ற இன்பம் ஒன்று உண்டு  என்று நீங்கள் கூறியது போல இந்த வருடம் ஏழு முறை தங்களை சந்தித்து இன்பம் பெற வாய்ப்பளித்த திருவருளுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். திருமுறையில் ஏழாவது நம்பியாரூரக்குரியது.  இலக்கிய நம்பிக்கும் எனக்கும். செப்டம்பர் மாதம் முதல் ஒன்பதாம் திருமுறையை கவனத்திற்கு கொண்டு வர பன்முக நோக்கில் ஒரு வருடம் சிந்திக்க ஏற்பாடு செய்து அதில் வாரம் ஒருமுறை நானும் பேசி வருகிறேன். வரும் வருடத்தில் சில திட்டங்கள் உள்ளன. செயலூக்கம் உங்கள் சொல் வழிப்பெற்றதே.

ஆசிரியனுக்கு வாசகன் செய்யவேண்டியது,அவனை முழுதறிவதுதான். அவனை தொடர்ந்து அணுகுவதுதான். அவன் எழுதிய எல்லாவற்றையும் வாசிப்பதுதான். இந்த வருடம் அதற்கான முதற்படியை எடுத்து வைத்ததாக உணர்கிறேன். முதற்கனல் மற்றும் மழைப்பாடல் நிறைவு பெற்றது, மற்ற படைப்புகளையும் இந்த வருடம் படிக்க வேண்டும் என எண்ணியுள்ளேன். தங்களினால்  இந்த வருடம் இனிமையான நிறைவான வருடம். புத்தாண்டு வாழ்த்துக்கள்  ஜெ, பட்டி பெருமான் எல்லா வளங்களையும் நலங்களையும் தர வேண்டிக் கொள்கிறேன். நிறைவாக, இவ்வருடம் பல அறிதலை தந்தீர்கள்.

ஆசிரியனுக்கும் மாணவனுக்குமான அன்புதான் ஞானத்தின் ஊடகம், ஆதலால்,

uங்கள் ஆசிகளை எதிர்நோக்கி,

பிரியமுடன்

பவித்ரா, மசினகுடி

***

அன்புள்ள பவித்ரா

நலம்தானே? முன்பெல்லாம் ஆசிரியர் என்னும் இடத்தை நான் சூடிக்கொள்வதில்லை. அதை ஏற்க மறுப்பதே வழக்கம். இன்று அப்படி இல்லை. ஆசிரியர் என என்னை முன்வைக்கலாமென ஒரு துணிவை மெல்ல அடைந்துள்ளேன். அதற்குப்பின்னரே உரைகளாற்றவும் வகுப்புகள் நடத்தவும் துணிந்தேன். நான் எண்ணுவது தனிப்பட்ட முறையில் என்னிடமிருந்து இந்த வேகத்தைப் பெற்றுக்கொள்ளும் சிலரை கண்டடையவேண்டும் என்பதே. எழுத்து என்றுமிருக்கும், அதற்கும் அப்பாலிருப்பது மனிதனிடமிருந்து மனிதனுக்குச் செல்லும் ஒரு விசை. அதையே முன்வைக்க விரும்புகிறேன். வாழ்த்துக்கள்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 06, 2023 10:30

ஆசிரியன் எனும் நிலை, கடிதம்

உளம் கனிந்த ஜெவிற்கு,

இன்றைய  ஏற்பும் நிறைவும் என்ற அற்புதமான கடிதம் படித்ததும் மனம் இக்கடிதத்தை எழுத தூண்டியது. 2022 வருடம் எனக்கு பல அதிசயங்கள் நிகழ்ந்த வருடம். 2021  விஷ்ணுபுரம் விழாவில் தங்களை பார்பதற்காகவே வந்தேன். அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் கல்தூணும் கனிமரமும் உரை கேட்க வந்தேன். முதல் வரிசையில் அமர்ந்து சிதறல் இல்லாமல் கேட்ட முதல் உரை முதல் திறவு எனக்கு. பின்பு, ஜூலையில் நாமக்கல்லில் விடுதலை என்பது என்ன? என்ற தலைப்பில் நீங்கள் ஆற்றிய உரை தத்துவத்திற்கான நற்துவக்கமாக இருந்தது, சந்தேகத்திற்கு விளக்கமும் அளித்தீர்கள். அதே மாதம் கோவை புத்தக திருவிழாவில் குடவாயில் பாலசுப்ரமணியம் ஐயாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளித்து நீங்கள் ஆற்றிய உரை வரலாற்றை எப்படி அணுக வேண்டும் அதன் தேவை,வரலாற்று வாதம், வரலாற்றுத்  தன்மை போன்றவற்றை தெளிவாக புரிந்து கொள்ள உதவியது.

செப்டம்பர் மாத தத்துவ வகுப்பில் கலந்து கொண்ட 3 நாட்களும் வேறு உலகத்தில் இருந்தது போன்ற உணர்வு, குருகுல முறைப்படி கற்பது போல அமைந்த வகுப்பு ஒரு ஞான துவக்கம்.  உங்கள் முன்பு திருமுறை பாடியதும் மறக்க முடியாது ஒன்று.அக்டோபர் மாதத்தில் ஜெ 60 நிகழ்வு கோவையில் நடைபெற்றது.    என் உள்ளம் கவர் பட்டி பெருமானின் தலத்தில் நீங்கள் மாலை மாற்றிய தருணம் நீங்காத பரவசத்தையும்  மகிழ்வையும் தந்த தருணம்.அன்றைய உரைகளும் நெகிழ்வை தந்தன. மேலும் முத்துலிங்கம் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் தங்களின் சிற்றுரை கேட்டு பங்கு கொண்டது, நிறைவாக விஷ்ணுபுர விழாவில் வெள்ளி முதல் திங்கள் காலை வரை அங்கு பெற்றதை எழுதி மாளாது.

அறிதலுக்கான பெரும்விழைவு உள்ளே பொறிக்கப்பட்டுள்ளது. அறிதலின்போது மட்டுமே அவன் அடையும் நிகரற்ற இன்பம் ஒன்று உண்டு  என்று நீங்கள் கூறியது போல இந்த வருடம் ஏழு முறை தங்களை சந்தித்து இன்பம் பெற வாய்ப்பளித்த திருவருளுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். திருமுறையில் ஏழாவது நம்பியாரூரக்குரியது.  இலக்கிய நம்பிக்கும் எனக்கும். செப்டம்பர் மாதம் முதல் ஒன்பதாம் திருமுறையை கவனத்திற்கு கொண்டு வர பன்முக நோக்கில் ஒரு வருடம் சிந்திக்க ஏற்பாடு செய்து அதில் வாரம் ஒருமுறை நானும் பேசி வருகிறேன். வரும் வருடத்தில் சில திட்டங்கள் உள்ளன. செயலூக்கம் உங்கள் சொல் வழிப்பெற்றதே.

ஆசிரியனுக்கு வாசகன் செய்யவேண்டியது,அவனை முழுதறிவதுதான். அவனை தொடர்ந்து அணுகுவதுதான். அவன் எழுதிய எல்லாவற்றையும் வாசிப்பதுதான். இந்த வருடம் அதற்கான முதற்படியை எடுத்து வைத்ததாக உணர்கிறேன். முதற்கனல் மற்றும் மழைப்பாடல் நிறைவு பெற்றது, மற்ற படைப்புகளையும் இந்த வருடம் படிக்க வேண்டும் என எண்ணியுள்ளேன். தங்களினால்  இந்த வருடம் இனிமையான நிறைவான வருடம். புத்தாண்டு வாழ்த்துக்கள்  ஜெ, பட்டி பெருமான் எல்லா வளங்களையும் நலங்களையும் தர வேண்டிக் கொள்கிறேன். நிறைவாக, இவ்வருடம் பல அறிதலை தந்தீர்கள்.

ஆசிரியனுக்கும் மாணவனுக்குமான அன்புதான் ஞானத்தின் ஊடகம், ஆதலால்,

uங்கள் ஆசிகளை எதிர்நோக்கி,

பிரியமுடன்

பவித்ரா, மசினகுடி

***

அன்புள்ள பவித்ரா

நலம்தானே? முன்பெல்லாம் ஆசிரியர் என்னும் இடத்தை நான் சூடிக்கொள்வதில்லை. அதை ஏற்க மறுப்பதே வழக்கம். இன்று அப்படி இல்லை. ஆசிரியர் என என்னை முன்வைக்கலாமென ஒரு துணிவை மெல்ல அடைந்துள்ளேன். அதற்குப்பின்னரே உரைகளாற்றவும் வகுப்புகள் நடத்தவும் துணிந்தேன். நான் எண்ணுவது தனிப்பட்ட முறையில் என்னிடமிருந்து இந்த வேகத்தைப் பெற்றுக்கொள்ளும் சிலரை கண்டடையவேண்டும் என்பதே. எழுத்து என்றுமிருக்கும், அதற்கும் அப்பாலிருப்பது மனிதனிடமிருந்து மனிதனுக்குச் செல்லும் ஒரு விசை. அதையே முன்வைக்க விரும்புகிறேன். வாழ்த்துக்கள்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 06, 2023 10:30

மழை பாடலாகும்போது… ரம்யா மனோகரன்

மழைப்பாடல் – செம்பதிப்பு வாங்க

மழைப்பாடல் மின்னூலகம்

நேற்றுவரை வாழ்ந்திருந்த மழைப்பாடல் வாழ்க்கைப் பகுதியின், குறிப்பு தொகுப்பாய் இப்பதிவு அமையட்டும் என்று மனம் விழைந்தாலும்,இதில் ஆசிரியர் சொல்வது போல், “கைக்குக் கிடைத்த வண்ணத்தை அள்ளி திரையில் வீசியபின் அதன் இயல்பான வழிதல்களைக்கொண்டே ஓவியத்தை அமைக்கும் ஒரு முறை உண்டு”, அதைப்போல் நானும் இந்த நொடிக்கு என்னை தந்துவிட்டு அது கொடுக்கும் வார்த்தைகளை கோர்த்து கொண்டு செல்ல போகிறேன்.

முதல் பகுதி படித்தப்பொழுதே எனக்குள் எழுந்த அந்த உணர்வினை எழுத முடியாமல் தவித்தேன். இதில் அவர் முடியும் தருவாயில் சொல்லியிருப்பதை போல் , என்னால் அந்த உணர்வினை முழுதாய் தீண்டி தெரிந்து இங்கு வார்த்தையில் வடித்துவிட முடியுமா என்ற பிரம்மாண்ட மலைப்பு எழுந்தது. ஆம் , இது சரியான வார்த்தை என்று தோன்றுகிறது.

இவர் எழுத்துக்களில் மூழ்கி இந்த அண்ட பெருவெளியில் நான் தனியாய் சுற்றிக்கொண்டிருந்தேன் . ஆயினும், நான் அஞ்சவில்லை .அது தனிமையுமில்லை. ஒரு வகையில் அது ஒரு விடுதலையாகவே உணர்கிறேன்.

அலகிலா நடனம் மட்டுமே இருந்தது என்று அவர் ஆரம்பித்திருக்கும் ஆட்டத்தை, பெருங்களியாட்டமாய் ஆடி தீர்த்திருக்கிறார் என்றே சொல்ல தோன்றுகிறது.

“வெல்லா வீழா பெருவிளையாடல் “- வெல்லவியலா சொல்லாடல் . இங்கு ஆடிய சொற்பகடையாட்டத்தில், அவரே சகுனி. அவர் தெளித்த உவமைகளும், ஒப்புமைகளும் ஒப்பற்றவை. அதை மட்டுமே தனியாய் தொகுத்து வைத்துக்கொள்ள ஆசை. அதில், ஓரு சோற்றுப்பதம் எனக்காக :

“காலை இளவெயில் முற்றத்தின் சிவந்த மண்பரப்பில் பரவியிருக்க அதில்கிடந்த சிறுகற்களின் நிழல்கள் மேற்குநோக்கி நீண்டு கறைகள்போலத் தெரிந்தன”.

அம்மா செய்யும் பூரி கிழங்குடன், சிறு வயதில் சன் டிவியில் காலை 10 மணிக்கு  ‘இது மஹாபாரதக் கதை ‘ என்று ஆரம்பிப்பதே ஞாயிற்றுக்கிழமைகள். இரண்டில் ஒன்று இல்லையென்றாலும் அது ஞாயிற்றுக்கிழமையாய் இராது. அதில் வந்த பீஷ்மரும், சகுனியும் இன்னும் என் நினைவில் உள்ளனர். இருப்பினும் எனக்கு மஹாபாரதம் முழுமையாக தெரியாது. அதுவே நான் இப்படைப்பை இன்னும் ரசிப்பதற்கு  பெரும் வாய்ப்பாய் அமைந்தனவோ என்று எண்ணிக்கொள்கிறேன்.

ஒவ்வொரு பக்கத்திலும் ஏதேனும் ஒரு தேன்துளி – நாவால் தொட்டு இனிப்புக்கொள்ளவோ, அல்லது தீத்துளி- தீண்டப்பட்டு உயிர் துடிக்கவோ.

சில இடங்களில் , தேன் குளத்தில் திளைத்திருந்தேன்.சில இடங்களில், தீத்துளிகளால் திகைத்து சிலைத்திருந்தேன்.தெளிந்த நீரோடையாய் அவர் எண்ணத்திசை நோக்கி கைக்கோர்த்து சென்ற‌ அனுபவங்கள், பல இடங்களில்.

பீஷ்மர், திருதிராஷ்டிரருக்கு கற்பிக்கும் முதல் பாடம், நான் ரசித்த பலவற்றுள் முந்தியடித்து இதோ இங்கு வந்து விழுகிறது.

கைகளைக் கீழே போடு . கையை நீட்டி நீ நடந்தால் உன் எதிரி தன்னம்பிக்கையை அடைவான் . பிறரைப்போலவே இரு . அதுதான் தொடக்கம் ”

மனித உடலும் மனமும் எத்தனை ஆற்றல்கொண்டதானாலும் மிகமிக நொய்மையான சில இடங்கள் அவற்றில் உண்டு . நொய்ந்த இடங்களை வல்லமைமிக்க இடங்களைக் கொண்டு காத்துக்கொள்பவனே உடலையும் மனதையும் வெல்லமுடியும் ”

திருதிராஷ்டிரர் என்று என்னை மரியாதையுடன் அழைக்க வைத்தது இவர் அந்த கதாப்’பாத்திரத்தை’ வனைத்த விதமே.

நான் அறிந்த திருதிராஷ்டிரன், தான் பார்வையற்றவன் என்பதை பெருங்குறையாய் பார்த்தவன். அந்த முகத்தில் எப்பவும் ஒரு சோகம் இழைந்தோடிய நினைவு எனக்குள்.

ஜெ.மோ‍வின், திருதிராஷ்டிரரோ வளர்ந்த இளகிய மரம் போன்றவர். பாசத்தால், இசையால் கணிந்து உடைபவர். வீரத்தால், மூர்க்கத்தால் தடைகளை உடைத்து எண்ணியதை அடைபவர். அவர் காந்தார வசுமதியை அடைந்த விதம் , அடைந்து அமர்ந்து அமைத விதம், காந்தாரி அவர் அமைத கோலத்தில், தன் மன கோலத்தை தொடங்கிய விதம், நான் சுவைத்த‌ தேந்துளிகளுள் ஒன்று.

பாலை நிலத்தையும் , அங்கு சுழன்ற‌ காற்றையும் அவர் விதர்த்த விதம் , நான் வியர்த்த‌ கணம்.

அவர் சகுனியை அறிமுகப்படுத்திய தருணத்தில், ஒரு மாபெரும் யுத்தத்திற்கான வியூகன் என்று சிறு வயதில் கேள்வியுற்றதோ, நம் அன்றாட‌ பேச்சு வழக்கில், சகுனியை புழக்கத்தில் வைத்திருந்ததாலோ என்னவோ, எனக்குள் ஒரு சின்ன அதிர்வு. மேலும், இதுவரை சகுனியின், சகுனித்தனம் என்று நாம் சொல்லி வந்த கட்டத்தை ஆசிரியர் இந்த பாகத்தில் தொடவில்லை. ஆனால், இதுவரை பகைமையின் மொத்த உருவாய் மட்டுமே நான் கண்ட சகுனியின் சகோதரத்துவ பக்கத்தை எனக்கு காட்டிய விதம் பிடித்திருந்தது.

மேலும் சகுனி, அமைச்சரவையில் கையாளும் முறை வாயிலாய், நமக்கு தலைமைத்துவ குணங்களை அழகாய் எடுத்து கூறியுள்ள விதம் – ரசிக்கத்தக்கது, பின்பற்றத்தக்கது.

அதே வகையில் குந்தி, காந்தார அரசிகளை கையாண்ட விதமும் உற்று நோக்க வேண்டியவை.

இதுவரை இரண்டு நாவல்களை வாசித்த பல தருணங்களில், நான் ‘ச்சே என்னமா எழுதியிருக்கிறார்’ என்றும், அம்மாதிரி நான் சிலிர்த்த நொடிகளில்,  ஜெ.மோ எவ்வாறு அதை எழுதியிருப்பார்? அதை எழுதும்போது, எவ்வகையான உணர்வுக்கு ஆளாகியிருப்பார்? அவர், தூங்கியிருப்பாரா? இந்த அனுபவ கட்டுரையை நான் எழுதி முடிப்பதற்குள்ளயே, என்னால் பிறவற்றை யோசிக்க முடியாமல், இதிலேயே லயித்து இருக்கிறேன். இது மட்டுமல்ல, நான் ஒரு சிறு கவிதை எழுதுவதாய் இருந்தாலும் அப்படித்தான். இவர் எப்படி அந்த 7 வருடங்களில் தூங்கினார்? மற்ற இயல்பு செயல்களையெல்லாம் செய்தார்? இதற்கிடையில் திரைக்கதைகள் வேறு எழுதிக்கொண்டிருந்தார் என கேள்வியுற்று பிரமித்திருக்கிறேன்.

அம்மாதிரி நான் பிரமித்த‌ நொடிகளை மட்டுமே இங்கு தொகுத்தாலே, மேலும் ஒரு 500 வார்த்தைகளை, இக்கட்டுரை சர்வ சாதாரணமாய் தொட்டுவிடும். இருத்தாலும், ஆரம்பத்தில் கூறியதை போலே, அவர் குலைத்த வண்ணங்களுக்குள் என் கைககளை வளைத்து விரிந்து செல்கிறேன். இதோ அது அடுத்து தொடுகிற‌ வண்ணம் _ செல்வத்திற்கான விளக்கம், காந்தாரி_சத்யவிரதை உரையாடலில்:

“சத்யவிரதை புன்னகைசெய்து “ நாம் எவற்றைப் பயன்படுத்துகிறோமோ அவையல்ல , எவற்றை வைத்திருக்கிறோமோ அவையே நம் செல்வம் ” என்றாள் . காந்தாரி சிரித்தபடி “ இல்லை சத்யை , நாம் எவற்றையெல்லாம் துறக்கும் உரிமைகொண்டிருக்கிறோமோ அவையே நம் செல்வம் . மற்றவை நம்முடையவையே அல்ல ” என்றாள். _ தேந்துளியில் லயித்த மற்றுமொரு தருணம்.

மேலும், காந்தாரத்திற்கு மணமுடிக்க செல்லும்போதும், அத்தருணம் நெருங்கும்போதும், தன் விதுர மூடனிடம், திருதர் கொள்ளும் உரையாடல்கள் அனைத்தும் முத்துக்கள். (உ.ம். இது இனிய அனுபவமாக இருக்கிறது . நெஞ்சுக்குள் உறையடுப்பின் கனல்மூட்டம் இருப்பதைப்போல இருக்கிறது ” என்றான் . “ ஆம் , இனிய உணர்வுதான் ” என்றான் விதுரன் . திருதராஷ்டிரன் “ நீ அதை அறியவே போவதில்லை மூடா . நீ கற்ற நூல்கள் அனைத்தும் குறுக்கே வந்து நிற்கும் . இந்த உணர்ச்சிகளை எல்லாம் சொற்களாக மாற்றிக்கொண்டு உன் அகத்தின் வினாக்களத்தில் சோழிகளாகப் பரப்பிக்கொள்வாய் ” என்றான்)

தொலைக்காட்சியில் வந்த எல்லா மஹாபாரத கதைமாந்தர்களும் சிவப்பு நிறங்கொண்டவரே. ஆனால், ஜெ.மோ.வின் கதைமாந்தர்கள் பெரும்பாலும் கருமை நிறங்கொண்டவர். மேலும், நான் பார்த்த எல்லா பெண்டீரும், மெல்லிய இடை, நல்ல உயரம், சிவப்பு நிறம். ஆனால், இதில் எல்லா வகையான உருவ அடையாளங்களுடன் பெண்களை படைத்திருந்தார். அது என்னை உற்று நோக்க செய்தது.

பீஷ்மரை முதலில் துவந்த யுத்தத்திற்கு அழைத்து மற்போரிடும் இடத்தில் ‘பன்றியை போல் அவர் மார்பில் பாய்ந்தான்’ என்ற வரிக்கண்ணாடியில், சிகண்டியின் பிம்பத்தை காட்டிய வினாடியை நான் தவறவிடவில்லை.

குந்தி – இதுவரை இவள் என்னை இவ்வளவு கம்பீரமாய் அணுகியதில்லை. அந்த கம்பீரத்தின் தொடர்ச்சி, பிள்ளை பருவத்தில் கால் பதியாமல், தாண்டிச் சென்று, தலைவனாய் உருவெடுத்து நின்ற  பாண்டவ‌ தலைமகன் தருமனிடம் கண்டது, அவன் அன்னையுடன் சேர்த்து என்னையும் கர்வப்படுத்தியது.

அரச குடும்பங்களில், ஆண்களை விட பெண்களே அதிகார வேட்கை உடையவராய் இருந்திருக்கின்றனர். அரசியல் வாரிசுகளை உருவாக்குவதயே பிரதானமாய் கொண்டிருந்திருப்பது, பிள்ளையை பெறுபவள் எப்படி போனாலும் பரவாயில்லை, பிள்ளையை பெற்று எடுப்பதே முக்கியம் என்று வழிவழியாய் எண்ணியது, அதுவும் பெண்களே அவ்வாறு எண்ணியது சற்று பதற்றத்தை உருவாக்கியது. அக்கால பெண்களின் வாழ்க்கை முறையில் 1 சதவிகித உண்மையையாவது இதிகாசம் காட்டியிருக்கும் என்பதுதான் அந்த பதற்றத்திற்கு காரணமோ என்று தோன்றுகிறது.

இக்கதையில் விதுரனை ஈன்ற அவன் தாய், அவனை ஈன்றுத்தரும் கருவியாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டதும், ஈன்றவள் மீது பெரிய ஈடுபாடு காட்டாதவனாய் அவன் இருந்ததும், எல்லாவற்றிற்கும் மேல், அவள் தன் மகனின் மஞ்சத்தின் வாசலில் வந்து ஓலமிட்டதும் என்னை வருத்தியது. அந்த ஓலத்திற்கு இதுதான் காரணம் என்று தெரியாதது இன்னும் உலைச்சலே. ஆசிரியரிடம் எனக்கிருக்கும் கேள்வி இது. எதனால் அவளை கதற வைத்தீர்கள்? எனக்குள் பல காரணங்கள் வந்து மோதினாலும், அவள் மஞ்சத்தின் அறையை மோதி முட்டி மண்டியிட்டு துடித்த காரணம் தெரிந்துக் கொள்ள மனம் விரைகிறது.

90களின் குழந்தைகள் என்ற வகையில், எனக்கு படத்திலேயே கதாநாயகி நாயகன் சேர வேண்டும். இல்லையென்றால் அதன் தாக்கம் ஒரு நாளாவது என் மனதில் தங்கும்.

அப்படியிருக்க, குந்தியை, பாண்டு கடைசி வரையிலும் நெருங்காமல் வைத்திருந்தது, குந்தியின் அணுக்க தோழியாய், (ஆசிரியரே, நீங்கள் காட்டிய உவமை போல) என் மனதில் ஒரு வலி மின்னல் வெட்டி விலகுவதை சொல்லாமல் இருக்கமுடியவில்லை. குந்தி அதை எதிர்ப்பார்க்கவில்லை என்று கூறமுடியாது. இரு இடத்தில் அவள் தவிப்பை வேறு விதத்தில் வெளிக்காட்டியிருப்பாள். ஒரு பெண்ணாகாவும், உங்கள் வரிகள் மூலமாகவும் அதனை என்னால் உணர்ந்துக்கொள்ள முடிந்தது.

இப்போது நினைக்கையில், தன் பிறந்த நாட்டிற்கு வலிமை சேர்ப்பதற்காய், வலிமையற்ற பாண்டுவை திருமணம் செய்துக்கொண்டதே, அவனை அவளிடமிருந்து விலக்கி வைத்திருக்குமோ என்றும் தோன்றுகிறது.

அவன் தன்னை பயன்படுத்திக் கொண்டதாய் நினைத்திருந்தாலும், அவளை ஒரு தாயாய் எண்ண தொடங்கியதாய் வரிகளுண்டு. அன்றிரவு மட்டுமே எனக்கு தெரிந்து அவன் அவளுடன் சற்று நேரம் பேசியிருந்ததாய் நினைவு. பேசிய பொழுதை சரியாக பயன்படுத்தி பாண்டுவின் பாண்டவர்கள் பிறப்பிற்கான கருவை வைத்தது, நான் ரசித்த மற்றுமொரு தேந்துளி.

கர்ணனின் பிறப்பை பாண்டுவிடம் அனகையை விட்டு ஆசிரியர் சொன்ன விதம் மற்றும் விடயங்கள் – நான் பிரமித்தவை.

அதன்பின், தன்னாட்டு படை பலத்தை கொண்டு தாய் நாட்டை காத்தவாறு, அவன் அவளைக்கொண்டு தன் சந்ததியை விருத்தி செய்ய நினைத்து மற்றும் அவன் அளித்த அனுமதி, எனக்கு வியாசரின் காலத்தை நினைவுக் கொள்ள செய்தது.

அவர் இந்நூலை எழுதிய காலத்தில், உடன்கட்டை ஏறுதல் இருந்திருக்கலாம். அதற்கு எதிர்வினையாய் இப்படி ஒரு விடயம் வைத்திருப்பாரோ என்று எண்ணிப்பார்த்தேன்.

கர்ணனின் கருவேற்று நின்ற‌ குந்தியின் அம்சங்களும், அமைந்த நிமித்தங்களும் அற்புதமான கற்பனைகள்.

எனக்கு இங்கு ஒரு பெரிய கேள்வி முளைத்தது. அது ஏன் குந்தி பெற்ற பிள்ளைகள் அனைத்தும் நன்னிமித்தங்களுடனும், காந்தாரியின் தலைப்புதல்வன் ஒருவனுக்கு கொடுத்த நிமித்தங்களே பயங்கரமானவையுமாக இருந்தன?

கருவிலேயே காலத்தின் கோலங்களை கோள்களுடன் இணைக்கப்பார்க்கிறாரோ ஆசிரியர் என்று தோன்றியது. இதை நினைத்த மாத்திரத்தில் ‘எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே’ என்ற வரி நினைவில் மோதி சென்றது. பின் ‘அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே’ என்ற வரி முளைத்த நொடியில், ஆசிரியரின் வரிகளான, ‘மடமையெனும் பாவனையால் பெண்மை ஆடுகிறது . அதன்முன் சரணடையும் பாவனையால் ஆண்மை ஆடுகிறது’ என்பது என் நினைவடுக்கிலிருந்து இங்கு நழுவி விழுகிறது.

மடமையெனும் பாவனையால் பெண்மை ஆடிய ஆட்டம் முடிந்த நொடிதானோ அம்பிகை அம்பாலிகையை நோக்கி சென்றதும், சத்யவதி அந்த‌ முடிவை எடுத்ததும்? அவர்கள் ஆட்டம் முடிந்தது, ஆனால் அவர்கள் போட்ட விதை?

(“கனி மண்ணை நோக்கி விழும் முடிவை எப்போது எடுக்கிறது என்று ஒரு பழமொழி உண்டு . அதற்குத்தெரிகிறது அவ்வளவுதான் ” என்றாள்).

இதே மடமை என்னும் வார்த்தையை நினைக்கும்போது, மாத்ரியின் நினைவலை என் மன ஆழியில் எழும்புகிறது. ‘அவர் காமத்தை நிறைவு செய்யவில்லை, நான் அவருடன் செல்ல வேண்டும். அவருடன் ஏறி விட்டால், உடல் எங்களின் தடைகளாய் இராது’ என்று அவள் கூறுகிறாள். அப்படி உடல் தடையில்லையென்றால், மனதால் அனுதினமும் ஆயிரமுறை புணர்ந்திருப்பாரே? இங்கு எதை காமம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்? எதற்காக மாத்ரி அம்முடிவு எடுத்தாள் என்று தெரிந்துக்கொள்ள வேண்டும் ஆசிரியரிடம். அவள் எடுத்து, இயல்பாய் கடந்து சென்ற அந்நொடியை என்னால் கடக்கமுடியவில்லை சில மணி நேரங்களுக்கு.

இங்கு நான் கண்டிப்பாக ஒன்று குறிப்பிட வேண்டும். மணக்கோலம் பூண்டு அவள் வந்த காட்சியில், மனம் அவள் எப்படி இருப்பாள் என்று புரட்டிக்கொண்டிருக்க‌, அடுத்த வரியில், அவளது உருவ அடையாளங்களை மறுபடி குறிப்பிட்டிருந்தார்.

அதே போல், அம்பாலிகை காதோரம் நரை தழுவி, செய்தி கேட்டு உட்கார்ந்திருந்த தருணம், அவள் முதன்முதலில் அரண்மனைக்கு வந்த நொடியை மனம் அசைப்போட்டதை, ஆசிரியர் தெரிந்துக்கொண்டு, அடுத்த வரிகளில் வைத்திருந்ததை கண்டு வாய் பொத்தி விழி விரிந்தேன்.

அம்பாலிகையை பற்றி நினைக்கும்போது,அவள் மகன் பாண்டுவால் இந்த பிறவியில் காமத்தை உய்த்துணர முடியாது என்பதை கேள்விப்பட்டதும், அவள் ஏன் உள்ளூர குதூகளித்தாள்? ஒரு வேளை அதுதான் பாண்டு எடுத்த எல்லா முடிவுகளுக்கும், முடிவுக்கும் காரணமோ?

அந்த முடிவால், பாதிப்புக்குள்ளான ஆன்மாவையும், அந்த நொடிகளையும் ஆசிரியர் விவரித்த விதங்கள் நான் தீத்துளிகளில் துடிதுடித்த தருணங்கள். அதை தானே உணர்ந்திருந்தாலொழிய அவ்வாறு எழுதுதல் சாத்தியமில்லை என்ற எண்ணம் ஆணித்தரமாக இருக்கிறது.

குந்தி சொல்வதாய் ஒரு வரி, இந்தத் தருணத்துக்கு அப்பால் இனி என்ன நிகழும் என்று எண்ணாமலிருப்பதே இதைக் கையாள்வதற்கான சிறந்த வழி” – சரியாக இதே வகையில் 2 வருடத்திற்கு முன் நான் கையாள முயற்சித்திருக்கிறேன்.

இறப்பின் கணத்தில் உருவாகும் எண்ண ஓட்டங்கள் எல்லாமே இறப்பை எளிதாக்கிக் கொள்வதற்காகத்தான் . பெரிய உணவை சிறு துண்டுகளாக ஆக்கிக்கொள்வதுபோல அந்தப்பேரனுபவத்தை கூறு போட்டுக்கொள்வதற்காகத்தான்.

அங்கிருக்கும் அனைவரிலும் பாண்டு ஒரு பழைய நினைவாக மட்டுமே எஞ்சுவான் . அவளுக்குள்ளும் அப்படித்தான் . வரலாற்றில் அவனுடைய இடமே அதுதான் . தருமனுக்கு மட்டும்தான் அவன் ஒவ்வொருநாளும் துணையிருக்கும் à

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 06, 2023 10:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.