இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 71

May 1, 2020

எதை வெட்டிக் கூட்டம் என்கிறீர்கள்

“அரசை எதிர்க்கக் கூடாது”என்று சொல்பவர்எத்தனை பெரிய விருது பெற்றவர் ஆயினும்அல்லது இப்படி சொன்னதற்காகவே சில விருதுகளைப் பெற இருப்பவராயினும்நீங்கள்“எங்கள் எழுத்தாளர்”என்ற இடத்தினை இழக்கிறீர்கள் தர்மன் அய்யாஇதிலென்ன நட்டம் என நீங்கள் கேட்கலாம்ஒருமுறைமரியெலேனாவில் உள்ள ஒரு செம்புச் சுரங்கத்திற்கு செல்கிறார் நெருதாசுரங்கத்திலிருந்து ஊர்ந்து வந்த தோழர்கள்உடல் முழுக்க அழுக்குகைகளை நீட்டுகிறார்கள்கைகுலுக்குகிறார்“உங்களை எங்களுக்குத் தெரியும் தோழர்நீங்கள் எங்கள் கவி”என்கிறார்கள்நெகிழ்ந்த நெருதா“நான் எத்தனையோ விருதுகளைப் பெற்றிருக்கிறேன்.நீங்கள் எங்கள் கவி என்ற உங்களது வார்த்தைகளுக்கு முன்பு அவையெல்லாம் தூசு”என்கிறார்எதை இழந்திருக்கிறீர்கள் என்று புரிகிறதா தர்மன் அய்யாஆமாம்எதை வெட்டிக் கூட்டம் என்கிறீர்கள்ட்ரம்ப் வந்தபோது திரட்டப்பட்ட கூட்டத்தையா?அல்லது“வேலை இல்லை,சோறும் இல்லைஎங்களை எங்கள் ஊர்களுக்கு அனுப்புங்கள்”என்று திரண்ட கூட்டத்தையா?
30.04.2020
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 01, 2020 20:04

தேடிச்சென்று சோதிக்கத் தொடங்கும்போதுதான்

தினமும் கொரோனா தொற்று குறித்த பட்டியல் வருகிறதுஒருநாள் கூடுகிறதுஒருநாள் குறைகிறதுநீங்கள் தருகிற புள்ளிவிவரங்களில் எமக்கேதும் அய்யமில்லைசோதித்துதான் சொல்கிறீர்கள்ஆனால் யாரை சோதிக்கிறீர்கள்?ஏதோ ஒருவகையில் நலமின்மை காரணமாக சிகிச்சைக்காக உம்மிடம் வருபவர்களை கொரோனா தொற்றியிருந்தால் கணக்கில் சேர்க்கிறீர்கள்பிறகு அவரோடு சம்பந்தப்பட்டவர்களை சோதிக்கிறீர்கள்தொற்றிருந்தவருக்கு நலமின்மை ஏற்படாது உம்மிடம் சிகிச்சைக்காக உம்மிடம் வராதிருந்தால்அவரும் கணக்கில் இல்லைஅவரோடு தொடர்புடையோரும் கணக்கில் வரப்போவதில்லைவருபவர்களில் இருந்து சோதனையைத் தொடங்காமல்தேடிச்சென்று சோதிக்கத் தொடங்கும்போதுதான் நிலவரம் தெரியும்
29.04.2020
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 01, 2020 20:03

சிதம்பரம் சார் ஏன் ஆதரிக்கிறார் என்று புரியும்

ப்ராங்ளின் டெம்லட்டான்இந்தியாவில் இயங்கி வரும் அமெரிக்க ம்யூச்சுவல் பண்ட் நிறுவனம்அமெரிக்காவின் நிதி நிலைமையால் தள்ளாடி வருகிறதுநிதித் தள்ளாட்டத்தில் இருந்து அந்த நிறுவனத்தை மீட்கும் முயற்சியாக மத்திய அரசு 50000 கோடியை நேற்று கடனாக அனுமதித்திருக்கிறதுஅதை மேநாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்றிருக்கிறார்என்ற தகவலை மிகுந்த கோவத்தோடு பதிந்திருக்கிறார் தோழர் புலியூரார் (புலியூர் முருகேசன்)ஒன்றுமில்லை தோழர்,50000 கோடி அவர்களுக்குப் போனபிறகு ஒரு வாரம் கவனியுங்கள்அந்த நிறுவனத்தில் இருந்து யார் யாருடைய டெபாசிட்டுகள் திரும்பப் பெறப்படுகின்றன என்றுஅவர்கள் ஏன் கொடுக்கிறார்கள்சிதம்பரம் சார் ஏன் ஆதரிக்கிறார் என்று புரியும்
29.04.2020
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 01, 2020 20:02

ஓவர் டு ஜீயர் சாமிகள்

ஜீயர் சுவாமிகள்:சொன்னதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையென்றால் தீக்குளிப்பேன்சூர்யா:சொன்னதில் உறுதியாக இருக்கிறோம்ஓவர் டு ஜீயர் சாமிகள்
29.04.2020
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 01, 2020 20:00

சாப்பாட்டு அரிசியில் எத்தனால் எடுப்பது நியாயந்தானா?

அன்னதானத்திற்கு அரசி கேட்கிறீர்கள் திரு முருகன்நல்லதுஎனில்அன்னதானத்தை நம்பி எம் மக்கள் இருக்கிறார்கள் என்று பொருள்உண்மைதான்இத்தனை மக்கள் சாப்பாட்டிற்கு அரிசி இல்லாமல்அலையும்போதுசாப்பாட்டு அரிசியில் எத்தனால் எடுப்பது நியாயந்தானா?
27.04.2020
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 01, 2020 19:59

இன்று எத்தனை பேருக்கு சோதிக்கட்டது என்ற தகவலையும்

மூன்று மாவட்டங்களைத் தவிர எந்த மாவட்டத்திலும் இன்று புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லைமகிழ்ச்சிதான்கோரிக்கை ஒன்றுஎந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு தொற்று என்ற பட்டியலைத் தருவது போலவேஎந்தெந்த மாவட்டத்தில் இன்று எத்தனை பேருக்கு சோதிக்கட்டது என்ற தகவலையும் தருவதுதான் சரி
27.04.2020
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 01, 2020 19:58

April 24, 2020

இல்லாத நமக்கு கல்வியும் சுகாதாரமும் தானே சாமிகளே முக்கியம்

திரு சீமான் அவர்களை முதன்முதலில் முழு அட்டைப் படத்தில் வைத்தது அநேகமாக “இளைஞர் முழக்கம்” என்றுதான் நினைக்கிறேன்கொஞ்சம் முன்னப் பின்ன இருக்கலாம். ஆனால் விஷயம் இதுதான். அந்த அட்டைப் படத்தில்,“ஆலயங்களைவிடவும் கழிவறைகளே முக்கியமானவை”என்றிருக்கும்அவரது செறிவான பேட்டிகளில் அதுவும் ஒன்றுஅதனாலேயே அவரைப் பிடித்துப் போனதுஇப்படிப் பேசிய சீமான் எப்படி இப்படி மாறினார் என்று அவ்வப்போது வருத்தம் எழும்சில வருஷங்களுக்கு முன்னால்“Toilet first
Temple later”என்று பிரதமர் சொன்னார்என்ன ஆச்சு?ஏனிவர்இப்படி?சரி யார் சொன்னாரென்பதோ
ஏன் சொன்னாரென்பதோ வேண்டாம்விஷயம் சரிதானே என்று
அவர்வாய் கேட்டபோதும் மெய்ப்பொருள் கண்டோம்சமயபுரம் பூச்சொரிதலுக்கு வசூலுக்கு வருவார்கள்என்னோடு பேசுவார்கள்தேநீர் சாப்பிடுவார்கள்என்னிடம் காசு மட்டும் கேட்கமாட்டார்கள்அவர்களில் ஆர்எஸ்எஸ் பிள்ளைகளும் உண்டுஆனால் அவர்களே தங்கள் தெரு பிள்ளைகளின் படிப்பிற்காக மருத்துவ செலவிற்காக வம்படித்து வாங்கிப் போவார்கள்அதைத்தானே ஜோதிகா சொன்னார்ஏன் கோவம்?இல்லாத நமக்கு கல்வியும் சுகாதாரமும் தானே சாமிகளே முக்கியம்அமைதியா யோசிங்கப்பா
23.04.2020
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 24, 2020 00:33

April 23, 2020

இதுதான் எங்கள் அரசியல்

”கோட்சேயின் குருமார்கள்” தோழர் அருணனின் மிக முக்கியமான நூல்களுள் ஒன்று.72 பக்கம் உள்ள அந்த நூலில் எந்த ஒரு பகுதியையும் ஒதுக்கிவிட முடியாதுஅதிலும் முதல் பதிப்பிற்கான முன்னுரையில் ஒரு பகுதி இன்றைக்கு முக்கியமானது”இது (இந்த நூல்) தொடர்பான நூல்களைத் தேடத் தொடங்கினேன். கீர் எழுதிய ‘வீர் சவார்கர்’ என்கிற பழைய நூல் கிடைத்தது. டாமேங்கர் எழுதிய ‘சர்தார்’ ‘நள்ளிரவில் சுதந்திரம்’ ‘சதார் படேலின் கடிதங்கள்’ ‘இந்திய விடுதலை இயக்க வரலாற்’, காதியின் தொகுப்பு நூல்கள்’ ஆகியவை கைவசம் இருந்தனஆனாலும் ஒரு இடைவெளி இருந்தது. அது கோட்சே தரப்பு வாதம்.”கோட்சேவை அம்பலப்படுத்துகிற நூலை எழுதுகிறபோதும் கோட்சேயின் தரப்பு வாதமௌம் தேவை என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார் தோழர்“கோட்சேயின் வாக்குமூலம் நூலினைத் தேடி அலைந்திருக்கிறார்.நூலகம் நூலகமாக அலைந்திருக்கிறார்அறிஞர்களிடம் உதவி கோரியிருக்கிறார்கோன்ராட் எழுதிய “காந்தியும் கோட்சேயும்” நூல் கிடைக்கிறதுஇரண்டே நாட்களுக்குள் திருப்பித் தரவேண்டும்இந்த நூலுக்குத் தேவையானவை அங்கே இருக்கின்றனவேக வேகமாக குறிப்பெடுக்கிறார்நூலினை உரியவரிடம் சேர்ப்பிக்கிறார்அதன் பிறகுதான் இந்த நூலை எழுதத் தொடங்குகிறார்ஒருவர்மீத்ஆன குற்றசாட்டை ஆவணப்படுத்தும் முன்
குற்றம் சாட்டப்பட்டவரின் கருத்தையும் பரிசீக்கவும் ஆவணப் படுத்தவும் வேண்டும் என்ற அறத்தின் வெளிப்பாடு இதுதாழர் அருணன் எனக்கு முந்தையத் தலைமுறையைச் சார்ந்தவர்இன்று மதுரையில் ஒரு பட்டருக்கு தொற்று இருப்பதாக ஒரு செய்தியை ஒரு சேனல் வெளியிடுகிறதுஇதுவரை இஸ்லாமியர்கள்தான் தொற்று பரவுவதற்கான ஒரே சோர்ஸ் என்று பெருமக்கள் வெறுப்பினை விதத்துக் கொண்டிருந்த நேரத்தில் இது அந்தக் கருத்திற்கு எதிர்வினையளிப்பதற்கான வாய்ப்பினைத் தருகிறதுஆனால்பட்டருக்கு தொற்று இல்லை என்றும்சேனல் பொய் கூறுகிறது என்றும் சக பட்லர்கள் கூறுகிறார்கள்இதுவரை சிங்கிள் சோர்ஸ் என்பதை மறுத்து எழுதி வந்த இளந்தோழன் ப்ரதாபன் (Prathaban Jayaraman)செய்தியையும் பதிகிறான்பட்டர்களது மறுப்பையும் பதிகிறான்சேனலின் பதிலுக்காகக் காத்திருப்பதாகவும் கூறுகிறான்இவன் எனக்கு அடுத்த தலைமுறைபட்டருக்கு இருந்தாலும் அவருக்காகவும் வருத்தப் படவே செய்வோம்ஆனால் இதுவரை சிங்கிள் சோர்ஸ் என்று பொய்யுரைத்தோரை எதிர் கொள்வோம்இதுதான் எங்கள் அரசியல்#சாமங்கவிய13நிமிடங்கள்
23.04.2020
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 23, 2020 23:57

என் வட்டத்திலுள்ள வாசிக்கும் நண்பர்களுள் சிலர்

முன்பெல்லாம் பிசாசு மாதிரி வாசிப்பவன்தான்.வயது கொஞ்சம்சோம்பேறித்தனம் கொஞ்சம்பணிப்பழு கொஞ்சம்இணையம் கொஞ்சம் என்றுவாசிப்பு குறைந்து போனதுஒரு நாளைக்கு சில நேரங்களில் 200, 150 என்கிற அளவிற்கு வாசிக்கிற பக்கங்களின் எண்ணிக்கை குறைகிறதுஒரு கெட்ட பழக்கம் என்னவென்றால் ஒரு புத்தகத்தை முடித்துவிட்டு மறு புத்தகம் எடுக்கிற பழக்கம் இல்லைஇப்போதுகூட மஹத், காடோடி, நண்டு, இந்நாள் இதற்கு முன்னால்,பணவீக்கம் என்றால் என்ன என்று கலந்துகட்டிதான் வாசிக்கிறேன்என் வட்டத்தில் உள்ள சில வாசிக்கும் நண்பர்கள்இந்த நொடியில் வந்தவர்களை மட்டுமே வைக்கிறேன்பட்டியல் நீளமானது. அவ்வப்போது வரும்1 மார்க்கண்டன் முத்துசாமி ( Markandan Muthusamy) ********************************************************************
மனுஷன் பிசாசுமாதிரி வாசிக்கிறார். தேர்ந்தெடுத்து வாசிக்கிறார்.இவரது வாசிப்பு அனுபவங்களை புத்தகமாக்கித் தரவேண்டும் என்றும்தண்ணீரும் தேநீரும் மட்டும் அருந்துவதற்கானவை குவளைகள் என்று கொள்ள வேண்டும்கூட்டங்கள் மூலமாக இவரது அறிவைப் பந்தி வைக்க வேண்டும் என்பது கொள்ளநாள் ஆசைவாழ்த்துக்கள் மார்க்கண்டன்2 செல்வபாண்டியன் ( Mahathma Selvapandiyan )
*************************************************************
எனக்கு மிகவும் பிடித்த தோழர்மிகப் பெரிய நூலகம் ஒன்றினை அவரது அரும்பாவூர் இல்லத்திலே வைத்திருக்கிறார்அதில் சன்னமான அளவேனும் நம்மிடம் சுடப்பட்டவைஆழமான வாசிப்பாளர்அளந்து பேசுபவர்92 இல் இருந்து ஆவரிடம் ஒரு கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தேன்ஏதேனும் ஒரு பகுதியில் கவனம் குவியுங்கள் என்றுபௌத்தம் பக்கமாக இப்போது கவனம் குவித்திருக்கிறார்இதற்காக தினமும் தினமும் நூற்றுக் கணக்கான மைல்கள் பயணிக்கிறார்இவரது உழைப்பை இணையத்தில் ஆவணப் படுத்திக்கொண்டே இருக்கிறார்அச்சிலும் அதை இவர் செய்ய வேண்டும்முத்தம் பாண்டியன்3 தாஹீர்பாட்ஷா ( Dhahir Batcha)
********************************************
நிறைய களப்பணிஇடையேயும் விடாது வாசிக்கிறார்வாசிப்பை தமது இதழொன்றில் தொடர்ந்து எழுதி வருகிறார்இவரது சிறப்பு இணையரின் ஆளுமை வளர்ச்சிக்கான கருவியாய் இருப்பதுஒருமுறை சில நூல்களை கொடுத்தபோது அவற்றை பார்த்ததும்இதையெல்லாம் பார்த்தா சந்தோசம்மா ஆயிடுவான்னேஎன்றார்எனக்குத் தெரிய இணையரின் வளர்ச்சிக்கு இவ்வளவு மெனக்கெடும் ஆள் அரிதுநிறைய எழுதலாம் இவர்4 ரமேஷ் (Ramesh Babu)
*****************************8*
இந்த மனிதனுக்கு எப்படி இவ்வளவு வாசிக்க நேரம் இருக்கிறது என்று வியக்குமளவிற்கு அப்படி ஒரு வாசிப்புஇந்த லாக் அவுட்டைப் பயன்படுத்தி 2000 பக்கங்களுக்குமேல் வாசித்ததாக பத்து நாட்களுக்கு முன்னாள் போட்டிருந்தார்இந்நேரம் 4000 ஆகியிருக்கும்“யார் கையில் இந்து ஆலயங்கள்?” என்ற இவரது சமீபத்திய நூல் அவசியம் வாசிக்க வேண்டியதுமுத்தம் ரமேஷ்5 சிராஜுதீன் ( Mohammed Sirajudeen )
************************************************
அநேகமாக பாரதி புத்த்காலயம் வெளியிட்ட அனைத்து நூல்களையும் வாசித்து முடித்தவர்எனக்கு கிடைத்த தகவலின்படி வலம்புரி ஜான் அளவிற்கு அதிகமாகவும் விரைவாகவும் வாசிக்கிறார்புத்தகமாகவும் தரவேண்டும்வணக்கம் சிராஜ்6 அன்பாதவன் (Anbaadhavan Shivam Bob)
*****************************************************
வாசிப்பதும் அந்த அளவிற்கு எழுதுவதும் இவரது சிறப்புஇவரிடம் பிடிட்ஜ்ஹ்த இரண்டு விஷயங்கள்அ ) படித்து முடித்தததும் அது இஅரது எதிரியினுடைய நூலாயினும் அவரைத் தொடர்பு கொண்டு பாராட்டிவிடுவார்
ஆ) வாசிக்கவும் எழுதவும் தோழர்களையும் இளைஞர்களையும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார்வணக்கம் அன்பாதவன்7 புலியூரார் ( புலியூர் முருகேசன்)
*********************************************
வாசித்துக் கொண்டே இருக்கிறார்யாரேனும் சிறுகதை எழுத இருக்கிறார் என்று தெரிந்தால் அவர் பேனா வாங்கும் முன்பே அவருக்கு போன் போட்டு உங்களுக்கு நல்லா எழுத வரும் என்று உற்சாகப் படுத்துபவர்இன்னொன்றுஇவர் ஜெயமோகனின் விமர்சகர் என்று எல்லோருக்கும் தெரியும்இவரளவிற்கு ஜெயமோகனை வாசித்தவர் ஜெயமோகனேகூட இல்லைஇன்னும் இரண்டு வருஷங்களுக்குப் பிற்கு ஜெயமோகன் என்ன எழுதுவார் என்பதை இப்போதே அறிந்து வைத்திருப்பவர்முத்தம் தோழர்8 யமுனா (Yamuna Rajendran)
**************************************
இவர் குறித்து எழுதுமளவு எனக்கிருக்கிறதா தெரியவில்லைவியந்து போகிறேன்வாசிப்பின் வழியேயான இவரது களமாடல் கொள்ளத் தக்கதுவணக்கம் சார்9 கஸ்தூரி (Kasthuri Rengan)
************************************
ஆங்கிலத்திலும் தமிழிலும் என்று வாசித்துக் குவிக்கிறார்டூவீலர்ல போகும்போதும் படிச்சுக்கிட்டே போவானாப்பா இந்த ஆளு என்று நண்பர்களிடம் கூறுவேன்வாசிப்பனுபவத்தை தனது முகநூலில் வைத்துக் கொண்டே இருக்கிறார்10 சுரேஷ் (Suresh Kathan)
*********************************
அப்படி ஒரு வாசிப்புவாசித்ததை பகடியோடு இவர் பதிவது அப்படி ஒருஅழகானதுஎன்ன,நான் ஏன் இப்படி வாசிக்கிறேன்னா “அமெரிக்கன் காலேஜ் அப்படிக் கத்துக் கொடுத்தது” என்று இவர் சொல்லாமல் இருக்க வேண்டும்இப்படி ஒரு மாணவர் அந்தக் கல்லூரிக்கு ஒருபோதும் வாய்க்காதுமுத்தம் சுரேஷ்11. செல்வகுமார் ( ப. செல்வகுமார்)
***********************************************
நல்ல வாசிப்பாளர்இந்த லாக் டவுனை வாசித்தலுக்காக சிறப்பாகப் பயன் படுத்துகிறார்இன்னும் இன்னுமாய் இவர் வாசிக்க வேண்டும்முத்தம் செல்வா
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 23, 2020 23:56

April 22, 2020

அரசு மரியாதையுடன் அடக்கம்...

கொரோனா தடுப்பில் ஈடுபடுபவர்கள் அந்தப் பணியினூடே இறந்தால் அரசு மரியாதையுடன் அவர்களது உடல் அடக்கம் செய்யப்படும்என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசுநன்றி சொல்லி பாராட்டுவோம்ரெண்டே ரெண்டு கோரிக்கைகள் இதனை ஒட்டி1 மருத்துவர் சைமன் அவர்களது மனைவியின் கோரிக்கை2 தடுக்கும் பணியில் என்பதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டாற்றும் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
22.04.2020
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 22, 2020 13:21

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.