Jeyamohan's Blog, page 86

June 23, 2025

காவியம் – 64

சாதவாகனர் காலம், பொயு2 அமராவதி

பிரகாஷ் யாதவ் அவருடைய எதிரிகளாகிய ஆகாஷ் டாகூர் குடும்பத்தால் கொல்லப்பட்டான். பாட்னாவில் ஆகாஷ் டாகூர் குழுவுக்கும் பிரகாஷுக்கும்தான் நெடுங்காலமாக சண்டை நடந்துவந்தது. அது பிரகாஷின் தந்தை கனசியாம் யாதவுக்கும் ஆகாஷின் தந்தை ராதாமாதவ் டாகூருக்கும் இடையே தொடங்கியது. அவர்கள் இருவருமே எதிர்க்குழுக்களால் கொல்லப்பட்டார்கள். கனசியாம் கொல்லப்பட்ட பிறகு பிரகாஷ் அவரைக் கொன்ற ராதாமாதவ் டாகூரைக் கொன்றான். அதன்பிறகு மூன்று முறை பிரகாஷ் மேல் ஆகாஷ் கொலை முயற்சியில் ஈடுபட்டான். மூன்று முறையும் பிரகாஷ் தப்பித்ததுடன் ஆகாஷின் இரண்டு சகோதரர்களையும் கொன்றான்.

அதன்பிறகு ஒரு சமநிலையும், ஒருவரையொருவர் பயப்படும் நிலையும் உருவாகியது. ஆகாஷின் இளைய தம்பி சுகுமார் டாகூரின் கொலைக்காகத் தான் பிரகாஷ் இறுதியாக சிறையில் இருந்தான். எட்டாண்டுகள் அவனுக்கு சிறைத்தண்டனை கிடைத்தது. நன்னடத்தைக்காகவும் கர்ப்பூரி தாகூரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காகவும் என ஏராளமான நாட்களை கழித்து நான்கே ஆண்டுகளில் அவன் வெளியே வந்தான். வெளியே வந்தபோது ஆகாஷ் தன்னை தொடர்ந்து தாக்கக்கூடாது என்பதற்காக அவனே சென்று ஆகாஷின் இரண்டு கடைகளை தாக்கி மூன்று அடியாட்களை கொன்றான். ஆகாஷ் திரும்ப தாக்கியதில் பிரகாஷின் ஒரு அடியாள் இறந்து போனான்.

அதன்பின் இருவரும் பாட்னாவில் ரகுவீர் சிங் என்ற வழக்கறிஞரின் அலுவலகத்தில் சந்தித்து சமரசம் பேசினார்கள். இருவரும் ஒருவரையொருவர் தாக்குவதில்லை என்றும், ஒருவருடைய இடத்துக்கு இன்னொருவர் செல்வதில்லை என்றும் ஒப்பந்தம் போட்டுக் கைகுலுக்கிக் கொண்டனர். இருவருக்கும் பணம் சம்பாதிப்பதற்கும் வளர்வதற்குமான வாய்ப்புகள் பாட்னாவில் உருவாகிக்கொண்டிருந்தன.

சட்டென்று பாட்னா நான்கு பக்கமும் விரியத் தொடங்கியது. கடுகும் கோதுமையும் கரும்பும் விளைந்து கொண்டிருந்த வயல்கள் எல்லாமே வீடுகட்டும் நிலங்களாக மாறின. புதிய புதிய நகர்கள் உருவாகி வந்தன. விவசாயிகளை பேசிப் பயமுறுத்தி, பேருக்கு ஒரு முன்பணம் கொடுத்து நிலங்களை வாங்கி பதிவு செய்து, அவற்றை கட்டிடம் கட்டுவதற்கான துண்டுகளாக்கி, அதன்பின் கட்டிடம் கட்டும் நிறுவனங்களுக்கு விற்று, அந்தப்பணத்தில் ஒரு பகுதியை அந்த விவசாயிகளுக்குக் கொடுத்து, எஞ்சியதை எடுத்துக்கொள்வதுதான் இருவரும் செய்த தொழிலாக இருந்தது.

அவர்களைப் போன்றவர்கள் இல்லாமல் அந்த நிலத்தை கையகப்படுத்தவும் முடியாது. ஒவ்வொரு நிலமும் பல தலைமுறைகளாக பிரிக்கப்படாமலேயே இருந்ததனால் ஒரு நிலத்தின் மீது முப்பது நாற்பது பேர் உரிமை கொண்டாடினார்கள். யாருக்கு எவ்வளவு பங்கு எந்தவகையில் உரிமை என்பது பேசித் தீர்த்து வைக்க முடியாததாக இருந்தது. எவரும் விரும்பினால் கூட தங்கள் நிலத்தை வீடு கட்டுபவர்களுக்கு விற்க முடியாது.

ஆகாஷோ பிரகாஷோ அவர்கள் அத்தனை பேரையுமே ஒரே நாளில் மிரட்டி இழுத்து வந்து ஓரிடத்தில் அமர வைத்து, அத்தனை பேரிடமும் வரிசையாக பத்திரங்களை கொடுத்து எழுதி வாங்கி, அங்கேயே பத்திரப் பதிவாளரை வரவழைத்து அனைத்து சட்டச்சடங்குகளையும் முடித்து, முன்பணமும் கையில் கொடுத்து திருப்பி அனுப்பிவிடுவார்கள். ஒருவகையில் நிலத்தை அப்படி விற்றுவிட்டு டெல்லிக்கோ பாட்னாவுக்கோ கூலி வேலைக்கு சென்றுவிடுவது என்பது அவர்களுக்கும் உதவியாகத்தான் இருந்தது. தங்களுக்குள் நிலத்தின் உரிமைக்காக சண்டையிட்டு அடித்தும் வெட்டியும் அவர்கள் அதிலேயே சிக்கிக்கொண்டிருந்தார்கள்.

பிரகாஷ் சிறையிலிருந்து வெளிவந்த நான்காண்டுகளில் பாட்னாவில் ஐந்து இடங்களில் தன்னுடைய கட்டிடங்களை கட்டிவிட்டான். அவனுடைய மனைவியும் பிள்ளைகளும் அவனுடைய சொந்த ஊரிலேயே இருந்தார்கள். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று எதிரிகளுக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டான். அவர்களுக்குத் தனியாகக் காவலும் இருந்தது. மாதத்திற்கு இரண்டு முறை மட்டும் அவன் ஊருக்குச் சென்றுவந்தான். பாட்னாவில் அவனுக்கு நான்கு ஆசைநாயகிகள் தனித்தனி வீடுகளில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். அதைத்தவிர நினைத்தபோதெல்லாம் விமானத்தில் தாய்லாந்துக்கு சென்று வந்தான். ஒவ்வொரு முறையும் அவன் ராம்சரணையும் அழைத்துச் சென்றான்.

ராம்சரண் பிரகாஷின் ஒரு வேலைக்காக கல்கத்தா சென்றிருந்தான். மாலை தன் விடுதிக்கு திரும்பியதும் போன் வந்திருக்கும் செய்தியை விடுதி முகப்பில் சொன்னார்கள். அவன் திரும்ப அழைத்தபோது பிரகாஷ் கொல்லப்பட்ட செய்தியை அவனுடைய கணக்குப்பிள்ளை சொன்னார். பிரகாஷ் தன் ஆசைநாயகி ஒருத்தியின் வீட்டிற்கு சென்றிருந்தபோது நெடுநாட்களாக அவனை கண்காணித்துக் கொண்டிருந்த ஒரு கும்பல் அவன் காரை நிறுத்தி இறங்கி வீட்டை நோக்கி நடந்துகொண்டிருக்கும்போதே ஓடி வந்து அவனையும் அவனுடன் சென்ற மெய்க்காவலனாகிய  நீத்து யாதவையும் வெட்டிவிட்டு ஓடிச்சென்றுவிட்டார்கள். நீத்து அங்கேயே இறந்தான். பிரகாஷ் கூச்சல் கேட்டு ஓடிவந்தவர்களால் தூக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தான்.

“அத்தனை பேரும் தலைமறைவாகிவிட்டோம். எங்கள் எல்லா அலுவலகங்களையும் ஆகாஷின் கூட்டம் வந்து தாக்கியது. பத்து பேருக்கு மேல் நல்ல அடி. நாங்கள் இந்த நகரத்தை விட்டே ஓடவேண்டும் என்று மிரட்டிச் சென்றிருக்கிறார்கள்” என்றார் பிரகாஷின் கணக்காளர். “நீதான் எங்களைக் காப்பாற்றவேண்டும். நீ உடனே திரும்பி வா” என்று மன்றாடினார்.

ராம்சரண் உடனடியாக பாட்னா வரவில்லை. பதினைந்து நாட்கள் அவன் கல்கத்தாவிலேயே தங்கியிருந்தான். பாட்னாவில் என்ன நடக்கிறது என்று நன்றாகத் தெரிந்து கொண்டபிறகு அவன் கல்கத்தாவிலேயே மேலும் ஓராண்டு காலம் தங்கினான். பிரகாஷின் வீடுகள் மற்ற சொத்துகள் எல்லாமே டாகூர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டன. ஆனால் பிரகாஷின் ரகசியச் சொத்துகளின் விவரங்கள் பெரும்பாலும் ராம்சரணிடமே இருந்தன.

ஓராண்டுக்குப்பிறகு ராம்சரண் மீண்டும் பாட்னாவுக்கு வந்தான். பிரகாஷின் குழு முழுக்கவே கலைந்து நகரில் ஆகாஷ் மட்டுமே கொடி நாட்டிக்கொண்டிருந்தான். பாட்னாவின் இன்னொரு பகுதியில் ராம்சரண் தன் தொழிலைத் தொடங்கியபோது அதை கவனிக்காத அளவு ஆகாஷ் பெரியவனாக ஆகியிருந்தான். ராம்சரண் மீண்டும் தொழிலுக்கு வந்திருப்பது ஓராண்டுக்குப் பிறகுதான் ஆகாஷுக்கு தெரிந்தது . உடனே ஆகாஷை சென்று பார்த்து வணங்கி, ஒரு பெரிய தொகையையும் அளித்து பிரகாஷுக்காகத் தான் எந்த வகையிலும் பழி வாங்கப்போவதில்லை என்று ராம்சரண் ஆகாஷுக்கு தெரிவித்தான். அது தன் முழுமையான வெற்றி என எண்ணிய ஆகாஷ் ஓராண்டுகாலம் அவனை கண்காணித்த பிறகு விட்டுவிட்டான்.

மீண்டும் குழுச்சண்டைகளுக்குள் போக வேண்டியதில்லை என்று ராம்சரண் முடிவு செய்தான். பணம் சேர்ப்பதை ஒரு போதும் வெளியே காட்டிக்கொள்ளக்கூடாது என்பது அவன் கற்றுக்கொண்ட முதல் பாடம். எப்போதுமே அரசாங்கத்துடனும் அரசியல்வாதிகளுடனும் நெருக்கமாக இருக்கவேண்டும், அவர்கள் சொல்லும் வேலைகளை உடனடியாகச் செய்து கொடுக்கவேண்டும், ஆனால் அவர்களின் அரசியல் எதிரிகளுக்கு எதிரியாகிவிடக்கூடாது என்பது அவன் கற்றுக்கொண்ட இரண்டாவது பாடம்.  அது அவனை வலிமையானவனாக ஆக்கியது.

பாட்னாவில் ஒரு சிறு அலுவலகம் வைத்து அவன் நிலம் வாங்கி விற்றுவந்தான். தன்னை எப்போதுமே வெளியே அதிகம் தெரியாமலேயே வைத்துக்கொண்டான்.  உள்ளூர் எம்.எல்.ஏக்கு அவன் பங்காளி போல் செயல்பட்டான். ஆனால் அவர் அவனும் இணைந்திருப்பதையும் எங்கும் எப்போதும் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவர் வழியாகத்தான் அவன் அஸ்வத்தை அறிமுகம் செய்துகொண்டான்.

அஸ்வத் ராம்சரணுக்கு ஓர் உதவி செய்தான். அவன் ஒரு நிலத்தை வாங்க முயன்று கொண்டிருந்தபோது அதன் பன்னிரண்டு பங்காளிகளில் ஒருவனின் மகன் மட்டும்  எதையுமே புரிந்துகொள்ளாமல் கூச்சலிட்டுக் கொண்டிருந்தான். “போலீஸுக்குப் போவேன், போலீஸுக்குப் போவேன்” என்று அவன் கத்திக்கொண்டிருந்தான்.

ராம்சரணின் ஆட்கள் அவனை சமாதானம் செய்தார்கள், மிரட்டினார்கள். அவர்கள் அந்தப் பையனுடைய தந்தையை அழைத்துக் கொண்டு சென்றபோது அவன் ராம்சரணின் அடியாட்களில் ஒருவனை  அரிவாளுடன் வந்து ஓங்கி வெட்டப்போனான். அந்த அரிவாளைப் பிடுங்கிய அடியாள் திரும்பி அந்தப்பையனை வெட்டியபோது அங்கேயே அவன் வெட்டுப்பட்டு விழுந்து இறந்தான்.

அடியாளைக் கைது செய்த போலீஸ்காரர் தெற்கிலிருந்து வந்தவர் குண்டப்பா நாராயணன் என்ற கர்நாடகக்காரர். அவர் கைது செய்யப்பட்ட அந்த அடியாளை இரவு முழுக்க வைத்து அடித்து காலையில் யாருக்காக அந்தக் குற்றத்தை செய்தான் என்ற வாக்குமூலத்தை வாங்கிவிட்டார். கைது வாரண்ட் தயாராகவிருக்கிறது என்ற செய்தியை ஒரு போலீஸ்காரரிடமிருந்து ராம்சரண் தெரிந்துகொண்டான். உடனடியாக எம்.எல்.ஏவை சென்று பார்த்தான். அவர் அஸ்வத்தை சென்று பார்க்கும்படிச் சொன்னார்.

அஸ்வத் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்குச் சென்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு தான் சிக்கியிருக்கும் பிரச்னையைப் பற்றி ராம்சரண் சொன்னான். அஸ்வத் “இது உண்மையிலேயே பெரிய பிரச்னை. வழக்கு போட்டிருப்பவரும் முக்கியமான பதவியிலுள்ள அதிகாரிதான். அவர் ஒத்துக்கொள்ளாமல் இந்தப் பிரச்னையை தீர்க்க முடியாது” என்றான்.

ராம்சரண் அதைப்போன்ற பல பேச்சுகளை முன்னரே கேட்டிருந்தான். எப்போதுமே ஒரு பிரச்னையை பெரியதாக்கி, எளிதில் சமாளிக்க முடியாதது என்று காட்டிய பிறகுதான் அப்பிரச்னையை சமாளித்துக் கொடுப்பதைப்பற்றி அஸ்வத்தைப் போன்றவர்கள் பேசுவார்கள். அவர்களிடம் அந்தப் பிரச்னை உண்மையில் சிறியதுதான் என்று ஒருபோதும் வாதிடக்கூடாது. தான் சிக்கிக்கொண்டிருப்பது உண்மை, அஸ்வத் போன்ற ஒருவரால் அன்றி தனக்கு விடுதலையே கிடையாது என்ற நிலையைத்தான் எடுக்கவேண்டும். ஆகவே அவன் மேலும் மேலும்  தணிந்து இந்த முறை மட்டும் தன்னை எப்படியாவது காப்பாற்றிவிடும்படி கெஞ்சினான்.

ஒருகட்டத்தில் அஸ்வத் ”பார்க்கிறேன்” என்றான். ”ஆனால் நடக்கவில்லை என்றால் பிறகு என்னைக் குறைசொல்லக்கூடாது”

”நடக்கும் உங்களால் முடியும்” என்று சொன்ன பிறகு ராம்சரண் அஸ்வத்துக்கு தான் கொண்டுவந்திருந்த பணத்தைக் கொடுத்தான். பணத்தை பொருட்படுத்தாதது போன்ற பாவனையுடன் எடுத்து அப்பால் வைத்தான் அஸ்வத்.

நாற்பத்தைந்து நாட்களில் அந்த வழக்கில் ராம்சரணின் பெயர் நீக்கம் செய்யப்பட்டு வேறு இருவருடைய பெயர்கள் சேர்க்கப்பட்டன. அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்கள். முப்பது நாட்களில் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தபிறகு அந்த வழக்கு வழக்கம்போல தூக்கி நீதிமன்றக்கோப்புகளில் அடுக்கப்பட்டது. திரும்ப அது ஒருபோதும் விசாரணைக்கு வராது என்று உறுதியாக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்திலேயே அந்தக் கோப்பில் உள்ள முக்கியமான காகிதங்கள் அனைத்தும் எடுத்து அழிக்கப்பட்டன. மேலும் சில ஆண்டுகளுக்குள் அந்தக் கோப்பே காணாமல் ஆகிவிடும். திரும்ப  அது நீதிமன்றத்துக்கு ஒருபோதும் வரப்போவதில்லை என்பதே வழக்கம்.

அதிலிருந்து அஸ்வத்துக்கு ராம்சரண் நெருக்கமானவன் ஆனான். அஸ்வத் மேலும் சில வேலைகளுக்கு அவனிடம் வந்தான். ராம்சரண் சில வேலைகளுக்கு அஸ்வத்தை அணுகினான்.

ராம்சரண் ஒரு பாரில் குடித்துக்கொண்டிருந்தபோது அஸ்வத் அழைத்தான். அவன் தொலைபேசியை எடுத்து ”சொல்லுங்கள் பாய்சாப்” என்றான்

”உன்னை உன் அலுவலகத்திற்குக் கூப்பிட்டேன். நீ இங்கே பாரில் இருப்பதாக  சொன்னார்கள். அதனால் தான் பாருக்கு கூப்பிட்டேன்” என்றான்

”அவ்வளவு அவசியமா இந்த ராத்திரியில்?” என்றான்.

”அவசியம்தான். எனக்கு இதை நாளை வரைக்கும் வைத்திருக்க முடியாது” என்று அஸ்வத் சொன்னான்.

”இன்றைக்கு கொஞ்சம் முன்னால்தான் இதைக் கேள்விப்பட்டேன். இன்று முழுக்க இதுவே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இதை இப்போதே முடிக்கவேண்டும்.  இல்லாவிட்டால் கோழையும் மடையனும் ஆகிவிடுவேன்” என்றான்.

“நாமாக அப்படி ஆகவேண்டியதில்லை” என்று ராம்சரண் சொன்னான். “நாம் இயல்பாக இருந்தாலே போதும்”

அந்தக் கிண்டலைப் புரிந்துகொள்ளாமல் அஸ்வத் “நான் நேரில் வருகிறேன்” என்றான்.

“வாருங்கள், நான் காத்திருக்கிறேன்”

அவன் குடித்துக்கொண்டிருந்த பாருக்கு அஸ்வத் நேரில் வந்து எல்லாவற்றையும் விரிவாகச் சொல்லி முடித்து இன்னொரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டான்.  “அது அப்படித்தான் போகுமென்று எனக்குத் தெரியும்” என்று அவன் சிகரெட் புகையை தன் சுட்டுவிரலால் தட்டியபடி சொன்னான்.

உரையாடல் முடித்து அஸ்வத் மறுநாள் காலை பத்துமணிக்கு அழைப்பதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றான். ராம்சரண் அவனுக்கு விடைகொடுத்துவிட்டு மெல்லிய தள்ளாட்டத்துடன் நடந்து தன் காரை நோக்கிச் சென்றபோது தன்னை ஒரு ஷேக்ஸ்பியர் கதாபாத்திரமாக உணர்ந்தான். போலீஸிடம் அவன் கொடுத்த வாக்குமூலத்தில் ஒரு ஷேக்ஸ்பியர் மேற்கோள் இருந்தது. ஆனால் அந்த வாக்குமூலத்தை கொடுத்து நீண்டநாட்கள் ஆகிறது. அல்லது இனிமேல்தான் கொடுக்கப்போகிறானா? அதைப்பற்றி எவரோ எங்கோ பேசிக்கொண்டார்கள். ஆனால் அது எந்தக் கதாபாத்திரம்? எத்தனை யோசித்தாலும் அவனால் நினைவுகூர முடியவில்லை. ஒதெல்லோ? மாக்பெத்? ஹாம்லெட்? அவனுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் பிராஸ்பரோதான். ஆனால் அவருக்கும் அவனுக்கும் சம்பந்தமில்லை.

அவன் காரில் ஏறிக்கொண்டதுமே மனம் மாறி இன்னொரு பாருக்குச் செல்லும்படி காரை ஓட்டிய அபய்குமாரிடம் சொன்னான். அவன் மறுபேச்சு பேசாமல் அங்கே கொண்டுசென்றான். செல்லும்போது ராம்சரண் அபய்குமாரிடம் “நான் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்? ஷேக்ஸ்பியர் கதாபாத்திரம்…. இல்லையா?” என்றான். அபய்குமார் ஒன்றும் சொல்லவில்லை.

ராம்சரண் அந்த பாரில் அமர்ந்துகொண்டு மீண்டும் குடித்தான். தன் அலுவலகத்திற்கு அழைத்து போன் வந்தால் அந்த பாருக்கு அழைக்கும்படிச் சொன்னான். கொஞ்சநேரத்தில் போன் வந்தது. இம்முறை ஹரீந்திரநாத் அழைத்தார்.

அவன் அதற்குள் அஸ்வத் தன்னிடம் பேசியதை பெரும்பாலும் மறந்துவிட்டிருந்தான். “என்ன விஷயம்? ”என்றான். “நான் இங்கே ஹாம்லெட் ஆக இருக்கிறேன். To be or not to be… எப்படி இருக்கிறது? அதாவது To be or not to be…I am a bee, honey bee ”

ஹரீந்திரநாத் “நான் அங்கே வருகிறேன்… உன்னிடம் பேசவேண்டும்” என்றார்.

“உங்கள் மகன் பேசினார். அவர் ஏதோ சொன்னார்… அதாவது அவருடைய மனைவி… அதாவது ஊர்வசி தேஷ்பாண்டே. அவள் ஒரு சமர் பையனுடன்…”

“இரு, நானே வருகிறேன்”

அவர் பாருக்கு வந்து அவன் முன் அமர்ந்தபோது அவன் ஒரு சிறு தூக்கம் போட்டு விழித்து தெளிவாக இருந்தான்.

“உங்களுக்காகக் காத்திருந்தேன் பாயி” என்றான் ராம்சரண். ”உங்கள் மகன் சொன்னதெல்லாம் நினைவில் இருக்கிறது… உங்கள் மகள் ராதிகா விஷயம்தானே?”

“நான் சொல்வதைக் கேள்…” என்று அவர் சொன்னார். அவரும் அந்த பையனை சென்று பார்த்து மிரட்டவேண்டும் என்றுதான் சொன்னார். ஆனால் அது அஸ்வத்துக்கு தெரியக்கூடாது என்றார்.

அவர் சொல்லி முடித்ததும் ”இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அந்தப்பையனை மிரட்ட வேண்டிய தேவையெல்லாம் கிடையாது. உங்கள் பெண்ணை கூப்பிட்டு ஒரு வார்த்தை கடுமையாகச் சொல்லி, இது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று சொன்னாலே போதும். படிக்கும் பெண்கள்  எதையாவது படித்துவிட்டு இந்த மாதிரி கொஞ்சம் அத்துமீறுவதுண்டு. சொல்லபோனால் ஒரு நாலைந்து முறை அவனிடம் படுத்தாலே அவர்களுக்கு பித்தம் தெளிந்துவிடும்” என்றான் ராம்சரண்

தான் சொன்னதை எண்ணி தனக்குத்தானே சிரித்துக்கொண்டு ராம்சரண் “ஏற்கனவே அவள் படுத்திருந்தாளென்றால்  நாம் சொல்லும்போது கொஞ்சம் எதிர்த்து, கொஞ்சம் அழுது, கொஞ்சம் தனியாக அமர்ந்து சோகம் நடித்து, அதன்பிறகு உண்மையை உணர்ந்து வெளியே வந்துவிடுவாள். அவனிடமிருந்து தன்னை பிரித்த பழியை முழுக்க நம் மீது போட்டுவிட்டு வசதியாக நீங்கள் சொல்லும் பணக்காரனை கல்யாணம் செய்துகொண்டு வாழ ஆரம்பித்துவிடுவாள். கைநிறைய வளையலைப் போட்டுக்கொண்டு, நெற்றி நடுவகுப்பில் குங்குமம் வைத்து, சரிகை சேலையை தலைமேல் முக்காடாகப் போட்டுக்கொண்டு, குலதெய்வ கோயிலுக்கு பதவிசாகப் போய்க்கொண்டிருப்பாள். இதை ஒரு பத்துப் பதினைந்து முறையாவது பார்த்திருப்பேன்” என்றான்.

”இது அப்படியல்ல.  இவளை உனக்குத் தெரியாது. இவள் எது செய்தாலும் எனக்கு எதிராகத்தான் செய்வாள். இப்போது இதைச் செய்வதே எனக்கு எதிராகத்தான்.”

ராம்சரணின் மூளை மீண்டும் நழுவிச்செல்ல ஆரம்பித்தது. அரைக்கவனமாக, ”உங்களுக்கு எதிராகவா?” என்றான்.

”ஆமாம் என்னை அவள் ஒரு புழு என்று நினைக்கிறாள். நான் என்ன செய்கிறேன், எப்படிப்பட்டவன் என்று அவளுக்கு மிக நன்றாகவே தெரியும்.” என்றார் ஹரீந்திரநாத். “என்னையும் என் மகனையும் அவள் அளவுக்கு அறிந்த எவருமே இல்லை”

”அது எப்படி? நீங்கள் பேசிக்கொள்வதில்லையா?”

”நாங்கள் பேசிக்கொள்வதே இல்லை. அவள் சிறு பெண்ணாக இருக்கும்போதே  நாங்கள் பேசிக்கொண்டதில்லை. உண்மையில் பேசிக்கொண்டிருந்தால் எதையாவது சொல்லி நியாயப்படுத்தவோ மறைக்கவோ செய்துவிடலாம். ஒருவருக்கொருவர்  பேசாமலே ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்கும்போது எதையுமே மறைக்க முடிவதில்லை. அவளுக்குத்தான் எங்கள் குடும்பத்திலேயே என்னைப் பற்றித் தெரியும். என் மீது உள்ள கோபமும் அருவருப்பும்தான் அவளை அந்தத் திசைக்கு செல்ல வைத்தது.”

“இருக்கலாம்” என்றான் ராம்சரண். அதை வேறு எவரோ தன்னிடம் சொல்லிக்கொண்டிருப்பதாக அவனுக்கு தோன்றியது. கேட்டுக்கொண்டிருப்பவரும் வேறு யாரோதான். தலையை உலுக்கி, தழைந்து வந்த இமைகளை தூக்கிக்கொண்டான்.

“நான் அவளிடம் கெஞ்சினேன், பேசப்பேச அழுதுவிட்டேன். ஆனால் அவள் நான் சொல்வதைக் கேட்க மாட்டாள். நான் அழுதால் அவள் இன்னும் உறுதியாகத்தான் ஆவாள். என்னை ஜெயிப்பதாக நினைத்துக்கொள்வாள். இப்படிச் சொல்கிறேனே,  அவள் அவனை விடவேமாட்டாள். அவன் பயந்து போய் அவளை விட்டால் உண்டு” என்றார் ஹரீந்திரநாத்

அவன் ”இது அஸ்வத் பாய் பேசுவதுபோலவே இருக்கிறது” என்றான் ராம்சரண். “அல்லது நான் கொஞ்சம் கூடுதலாகவே குடித்திருக்கிறேன்… நீங்கள் ஹரீந்திரநாத் தேஷ்பாண்டேதானே? அல்லது அவர் மகனா?”

அவர் அவனை அலட்சியம்செய்து “பங்கிகள் பயந்தாங்கொள்ளிகள். சிறுவயதிலேயே அவர்கள் நிறைய அடிகளையும் அவமானங்களையும் பார்த்திருப்பார்கள். ஒரு பெரிய அடியோ அவமானமோ வருகிறது என்றால் பயந்து விலகிவிடுவார்கள். அது மிக எளிது. நீதான் அதை செய்ய வேண்டும்.” என்றார்.

”அதை செய்துவிடலாம் அது ஒரு பதினைந்து நிமிட வேலை. இங்கிருந்து காசி வரைக்கும் போகவேண்டும் அவ்வளவுதான்” என்று ராம்சரண் சொன்னான்.

“உடனே அதைச் செய்” என்றார் ஹரீந்திரநாத்.

”ஆனால் அது வேண்டுமா என்று  இன்னொரு தடவை நீங்கள் யோசிக்க வேண்டும். ஏனென்றால் ஒருவேளை அதில் ஏதாவது பிரச்னை ஆகலாம்.  இந்த மிரட்டல் எல்லாமே எங்கு நிற்கும் என்பதை நாம் முன்னரே சொல்லமுடியாது. சாதாரணமாக, நாம் நினைத்த இடத்தில் நிறுத்திவிடலாம். ஆனால் மிகச்சில தருணங்களில் அது நிறுத்த முடியாமலும் ஆகும். அது நம் கையை விட்டு போனால் கிரிமினல் கேஸ் ஆகலாம். செய்தி ஆகலாம். அப்படியெல்லாம் ஆனால் நீங்கள் இதில் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்ற விஷயம் வெளியே வந்துவிடும். நீங்கள் பெரிய மனிதர், எல்லாமே பெரியதாக ஆகிவிடும். நீங்கள் அவனை ஆள்வைத்து மிரட்டியது அவளுக்குத் தெரிந்தால் எப்படி எடுத்துக்கொள்வாள் என்பதும் நாம் யோசிக்கவேண்டியதுதான்”

”அப்படி ஆகாமல் தடுப்பது உன்னுடைய பொறுப்பு. அந்தப் பையனை நீ மிரட்டி ஓடவிடு” என்றபின் ”அவனுக்கு ஒரு நல்ல ரத்த காயம் வேண்டும்.” என்றார்.

ராம்சரண் ”ரத்தக்காயமா?” என்றான்.

”ஆம், அவன் சாகக்கூடாது. ஆனால் அவன் ரத்தத்தை பார்த்து அவன் பயப்பட வேண்டும். நான் இந்தப் பங்கிகளையும் சமர்களையும் மகர்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் அடிதடியில்லாத சாதியினர். ரத்தத்தை பார்த்தால் அவர்கள் அரண்டு விடுவார்கள். ரத்தம் கண்ணில் காட்டப்படவேண்டும். அவன் எங்கு போனாலும் அந்த ரத்தத்தின் வடு அவனுக்குத் தெரியவேண்டும். அதைப் பார்த்து அவன் பயந்துகொண்டே இருக்கவேண்டும்.”

ராம்சரண் யோசித்தபின் ”அதைச் செய்துவிடலாம். ஆனால் இன்னொருமுறை நீங்கள் யோசியுங்கள். அது புதிய ஊர். நம் கட்டுப்பாட்டிலுள்ள பாட்னா அல்ல அங்கே போய் நாங்கள் இதை செய்யவேண்டும். சட்டென்று ஊர்க்காரர்கள் எங்களைப் பிடித்துவிடலாம். ஒரு இடத்தை நாங்கள் கணக்குப்போட்டு வைத்திருப்போம், அந்த இடம் நாங்கள் நினைத்தது போல் இல்லாமல் இருக்கலாம். அல்லது சம்பந்தமே இல்லாத ஒரு முரட்டுப் போலீஸ்காரர் அங்கே வந்துவிடலாம்.” என்றான்.

இன்னொரு மிடறு அருந்திவிட்டு “எல்லாவற்றையும் விட அந்தப்பங்கிக்கு அங்கே கட்சிக்காரர்களோ சாதிச் சங்கமோ ஏதோ ஒன்று இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இன்றைக்கு அவர்கள் எல்லாருமே ஜெயப்பிரகாஷ் நாராயணனின் கோஷ்டியில் சேர்ந்திருக்கிறார்கள். சோஷலிஸம் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். நமக்கு எல்லாமே பிரச்னைகளாகக்கூடும். அதை எல்லாம் முன்னரே யோசிக்க வேண்டும்.” என்று சொன்னான்.

”இனி யோசிக்க நேரமில்லை. நீ இப்போதே இங்கிருந்தே கிளம்பி காசி செல்லவேண்டும். நாளை காலை நீ காசியில் இருக்கவேண்டும். மதியத்துக்குள் அவனுக்கு அடி விழுந்திருக்கவேண்டும்.”

ராம்சரண் ”அவ்வளவு சீக்கிரமாகவா?” என்றான்.

“ஆமாம், நமக்கு நேரமில்லை. நான் பேசியது அஸ்வத்துக்குத் தெரியவேண்டாம். நமக்கிடையே பேச்சு இருப்பதே அவனுக்குத் தெரியவேண்டாம். அவன் சொல்லி நீ செய்ததாகவே இருக்கட்டும்.” என்றார் ஹரீந்திரநாத். “அவன் உன்னைக் கண்டிப்பாக கூப்பிடுவான், அவனுக்கும் என்னைப்போலவே அவளிடம் பயம்தான். நீ வீட்டில்தானே இருப்பாய்?”

”நான் இன்னொரு பாருக்கு போகப் போகிறேன்” என்று ராம்சரண் நாயக் சொன்னான்.

”இன்னொரு பாரா?” என்று ஹரீந்திரநாத் கேட்டார்.

”நான் நேற்று எல்.எல்.பி பட்டம் வாங்கியிருக்கிறேன்”

”பணம் கொடுத்தா?”

”பணம் கொடுத்தா? பாய், நான் முறையாகப்படித்து பரிட்சை எழுதி ஜெயித்திருக்கிறேன்.”

“நீ பட்டம் பெற்றவனா?” என்று ஹரீந்திரநாத் கேட்டார்.

”ஜெயிலில் இருக்கும்போதே பி.ஏ பட்டம் பெற்றேன். ஜெயிலுக்கு போகும்போதே நான் ஓராண்டு  முடித்திருந்தேன். மிச்சம் இரண்டு ஆண்டுகளையும் அங்கேயே எழுதினேன். வெளியே வந்தபிறகு சட்டம் படிக்கவேண்டும் என்று நினைத்தேன். அதற்குள் பத்துப்பதினைந்து ஆண்டுகளாகிவிட்டிருந்தன.”

”வக்கீல் பட்டமா? அதை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறாய்?”

”ஒன்றும் செய்யப்போவதில்லை. ஏதாவது பாக்கியிருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தால் இது ஒன்றுதான் மிச்சம் இருக்கிறது. அதையும் செய்து வைப்போம். சட்டென்று யாராவது நம்மை வெட்டி தெருவில் போட்டால் கூட இது ஒன்று மிச்சமிருக்கிறதே என்று நினைத்துக்கொண்டு சாகமாட்டேனே…”

”ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பைத்தியம் இருக்கிறது. சரி நான் வருகிறேன்” என்று அவர் கிளம்பிச் சென்றார்.

அவர் சென்றபின் அவன் மீண்டும் அமர்ந்து யோசித்தான். அது என்ன ஷேக்ஸ்பியர் கதாபாத்திரம்? எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு வரவில்லை. பாரிலேயே மேஜைமேல் கவிழ்ந்து தூங்கிவிட்டான். அதன் கதவை உள்ளிருந்து மூடிவிட்டார்கள். அவனுடைய டிரைவர் வெளியே காவலிருந்தான். உள்ளே மின்விசிறி மட்டும் சுழன்றுகொண்டிருந்தது. அப்போதுதான் அஸ்வத் அவனை அழைத்தான்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 23, 2025 11:33

காவியம் – 64

சாதவாகனர் காலம், பொயு2 அமராவதி

பிரகாஷ் யாதவ் அவருடைய எதிரிகளாகிய ஆகாஷ் டாகூர் குடும்பத்தால் கொல்லப்பட்டான். பாட்னாவில் ஆகாஷ் டாகூர் குழுவுக்கும் பிரகாஷுக்கும்தான் நெடுங்காலமாக சண்டை நடந்துவந்தது. அது பிரகாஷின் தந்தை கனசியாம் யாதவுக்கும் ஆகாஷின் தந்தை ராதாமாதவ் டாகூருக்கும் இடையே தொடங்கியது. அவர்கள் இருவருமே எதிர்க்குழுக்களால் கொல்லப்பட்டார்கள். கனசியாம் கொல்லப்பட்ட பிறகு பிரகாஷ் அவரைக் கொன்ற ராதாமாதவ் டாகூரைக் கொன்றான். அதன்பிறகு மூன்று முறை பிரகாஷ் மேல் ஆகாஷ் கொலை முயற்சியில் ஈடுபட்டான். மூன்று முறையும் பிரகாஷ் தப்பித்ததுடன் ஆகாஷின் இரண்டு சகோதரர்களையும் கொன்றான்.

அதன்பிறகு ஒரு சமநிலையும், ஒருவரையொருவர் பயப்படும் நிலையும் உருவாகியது. ஆகாஷின் இளைய தம்பி சுகுமார் டாகூரின் கொலைக்காகத் தான் பிரகாஷ் இறுதியாக சிறையில் இருந்தான். எட்டாண்டுகள் அவனுக்கு சிறைத்தண்டனை கிடைத்தது. நன்னடத்தைக்காகவும் கர்ப்பூரி தாகூரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காகவும் என ஏராளமான நாட்களை கழித்து நான்கே ஆண்டுகளில் அவன் வெளியே வந்தான். வெளியே வந்தபோது ஆகாஷ் தன்னை தொடர்ந்து தாக்கக்கூடாது என்பதற்காக அவனே சென்று ஆகாஷின் இரண்டு கடைகளை தாக்கி மூன்று அடியாட்களை கொன்றான். ஆகாஷ் திரும்ப தாக்கியதில் பிரகாஷின் ஒரு அடியாள் இறந்து போனான்.

அதன்பின் இருவரும் பாட்னாவில் ரகுவீர் சிங் என்ற வழக்கறிஞரின் அலுவலகத்தில் சந்தித்து சமரசம் பேசினார்கள். இருவரும் ஒருவரையொருவர் தாக்குவதில்லை என்றும், ஒருவருடைய இடத்துக்கு இன்னொருவர் செல்வதில்லை என்றும் ஒப்பந்தம் போட்டுக் கைகுலுக்கிக் கொண்டனர். இருவருக்கும் பணம் சம்பாதிப்பதற்கும் வளர்வதற்குமான வாய்ப்புகள் பாட்னாவில் உருவாகிக்கொண்டிருந்தன.

சட்டென்று பாட்னா நான்கு பக்கமும் விரியத் தொடங்கியது. கடுகும் கோதுமையும் கரும்பும் விளைந்து கொண்டிருந்த வயல்கள் எல்லாமே வீடுகட்டும் நிலங்களாக மாறின. புதிய புதிய நகர்கள் உருவாகி வந்தன. விவசாயிகளை பேசிப் பயமுறுத்தி, பேருக்கு ஒரு முன்பணம் கொடுத்து நிலங்களை வாங்கி பதிவு செய்து, அவற்றை கட்டிடம் கட்டுவதற்கான துண்டுகளாக்கி, அதன்பின் கட்டிடம் கட்டும் நிறுவனங்களுக்கு விற்று, அந்தப்பணத்தில் ஒரு பகுதியை அந்த விவசாயிகளுக்குக் கொடுத்து, எஞ்சியதை எடுத்துக்கொள்வதுதான் இருவரும் செய்த தொழிலாக இருந்தது.

அவர்களைப் போன்றவர்கள் இல்லாமல் அந்த நிலத்தை கையகப்படுத்தவும் முடியாது. ஒவ்வொரு நிலமும் பல தலைமுறைகளாக பிரிக்கப்படாமலேயே இருந்ததனால் ஒரு நிலத்தின் மீது முப்பது நாற்பது பேர் உரிமை கொண்டாடினார்கள். யாருக்கு எவ்வளவு பங்கு எந்தவகையில் உரிமை என்பது பேசித் தீர்த்து வைக்க முடியாததாக இருந்தது. எவரும் விரும்பினால் கூட தங்கள் நிலத்தை வீடு கட்டுபவர்களுக்கு விற்க முடியாது.

ஆகாஷோ பிரகாஷோ அவர்கள் அத்தனை பேரையுமே ஒரே நாளில் மிரட்டி இழுத்து வந்து ஓரிடத்தில் அமர வைத்து, அத்தனை பேரிடமும் வரிசையாக பத்திரங்களை கொடுத்து எழுதி வாங்கி, அங்கேயே பத்திரப் பதிவாளரை வரவழைத்து அனைத்து சட்டச்சடங்குகளையும் முடித்து, முன்பணமும் கையில் கொடுத்து திருப்பி அனுப்பிவிடுவார்கள். ஒருவகையில் நிலத்தை அப்படி விற்றுவிட்டு டெல்லிக்கோ பாட்னாவுக்கோ கூலி வேலைக்கு சென்றுவிடுவது என்பது அவர்களுக்கும் உதவியாகத்தான் இருந்தது. தங்களுக்குள் நிலத்தின் உரிமைக்காக சண்டையிட்டு அடித்தும் வெட்டியும் அவர்கள் அதிலேயே சிக்கிக்கொண்டிருந்தார்கள்.

பிரகாஷ் சிறையிலிருந்து வெளிவந்த நான்காண்டுகளில் பாட்னாவில் ஐந்து இடங்களில் தன்னுடைய கட்டிடங்களை கட்டிவிட்டான். அவனுடைய மனைவியும் பிள்ளைகளும் அவனுடைய சொந்த ஊரிலேயே இருந்தார்கள். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று எதிரிகளுக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டான். அவர்களுக்குத் தனியாகக் காவலும் இருந்தது. மாதத்திற்கு இரண்டு முறை மட்டும் அவன் ஊருக்குச் சென்றுவந்தான். பாட்னாவில் அவனுக்கு நான்கு ஆசைநாயகிகள் தனித்தனி வீடுகளில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். அதைத்தவிர நினைத்தபோதெல்லாம் விமானத்தில் தாய்லாந்துக்கு சென்று வந்தான். ஒவ்வொரு முறையும் அவன் ராம்சரணையும் அழைத்துச் சென்றான்.

ராம்சரண் பிரகாஷின் ஒரு வேலைக்காக கல்கத்தா சென்றிருந்தான். மாலை தன் விடுதிக்கு திரும்பியதும் போன் வந்திருக்கும் செய்தியை விடுதி முகப்பில் சொன்னார்கள். அவன் திரும்ப அழைத்தபோது பிரகாஷ் கொல்லப்பட்ட செய்தியை அவனுடைய கணக்குப்பிள்ளை சொன்னார். பிரகாஷ் தன் ஆசைநாயகி ஒருத்தியின் வீட்டிற்கு சென்றிருந்தபோது நெடுநாட்களாக அவனை கண்காணித்துக் கொண்டிருந்த ஒரு கும்பல் அவன் காரை நிறுத்தி இறங்கி வீட்டை நோக்கி நடந்துகொண்டிருக்கும்போதே ஓடி வந்து அவனையும் அவனுடன் சென்ற மெய்க்காவலனாகிய  நீத்து யாதவையும் வெட்டிவிட்டு ஓடிச்சென்றுவிட்டார்கள். நீத்து அங்கேயே இறந்தான். பிரகாஷ் கூச்சல் கேட்டு ஓடிவந்தவர்களால் தூக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தான்.

“அத்தனை பேரும் தலைமறைவாகிவிட்டோம். எங்கள் எல்லா அலுவலகங்களையும் ஆகாஷின் கூட்டம் வந்து தாக்கியது. பத்து பேருக்கு மேல் நல்ல அடி. நாங்கள் இந்த நகரத்தை விட்டே ஓடவேண்டும் என்று மிரட்டிச் சென்றிருக்கிறார்கள்” என்றார் பிரகாஷின் கணக்காளர். “நீதான் எங்களைக் காப்பாற்றவேண்டும். நீ உடனே திரும்பி வா” என்று மன்றாடினார்.

ராம்சரண் உடனடியாக பாட்னா வரவில்லை. பதினைந்து நாட்கள் அவன் கல்கத்தாவிலேயே தங்கியிருந்தான். பாட்னாவில் என்ன நடக்கிறது என்று நன்றாகத் தெரிந்து கொண்டபிறகு அவன் கல்கத்தாவிலேயே மேலும் ஓராண்டு காலம் தங்கினான். பிரகாஷின் வீடுகள் மற்ற சொத்துகள் எல்லாமே டாகூர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டன. ஆனால் பிரகாஷின் ரகசியச் சொத்துகளின் விவரங்கள் பெரும்பாலும் ராம்சரணிடமே இருந்தன.

ஓராண்டுக்குப்பிறகு ராம்சரண் மீண்டும் பாட்னாவுக்கு வந்தான். பிரகாஷின் குழு முழுக்கவே கலைந்து நகரில் ஆகாஷ் மட்டுமே கொடி நாட்டிக்கொண்டிருந்தான். பாட்னாவின் இன்னொரு பகுதியில் ராம்சரண் தன் தொழிலைத் தொடங்கியபோது அதை கவனிக்காத அளவு ஆகாஷ் பெரியவனாக ஆகியிருந்தான். ராம்சரண் மீண்டும் தொழிலுக்கு வந்திருப்பது ஓராண்டுக்குப் பிறகுதான் ஆகாஷுக்கு தெரிந்தது . உடனே ஆகாஷை சென்று பார்த்து வணங்கி, ஒரு பெரிய தொகையையும் அளித்து பிரகாஷுக்காகத் தான் எந்த வகையிலும் பழி வாங்கப்போவதில்லை என்று ராம்சரண் ஆகாஷுக்கு தெரிவித்தான். அது தன் முழுமையான வெற்றி என எண்ணிய ஆகாஷ் ஓராண்டுகாலம் அவனை கண்காணித்த பிறகு விட்டுவிட்டான்.

மீண்டும் குழுச்சண்டைகளுக்குள் போக வேண்டியதில்லை என்று ராம்சரண் முடிவு செய்தான். பணம் சேர்ப்பதை ஒரு போதும் வெளியே காட்டிக்கொள்ளக்கூடாது என்பது அவன் கற்றுக்கொண்ட முதல் பாடம். எப்போதுமே அரசாங்கத்துடனும் அரசியல்வாதிகளுடனும் நெருக்கமாக இருக்கவேண்டும், அவர்கள் சொல்லும் வேலைகளை உடனடியாகச் செய்து கொடுக்கவேண்டும், ஆனால் அவர்களின் அரசியல் எதிரிகளுக்கு எதிரியாகிவிடக்கூடாது என்பது அவன் கற்றுக்கொண்ட இரண்டாவது பாடம்.  அது அவனை வலிமையானவனாக ஆக்கியது.

பாட்னாவில் ஒரு சிறு அலுவலகம் வைத்து அவன் நிலம் வாங்கி விற்றுவந்தான். தன்னை எப்போதுமே வெளியே அதிகம் தெரியாமலேயே வைத்துக்கொண்டான்.  உள்ளூர் எம்.எல்.ஏக்கு அவன் பங்காளி போல் செயல்பட்டான். ஆனால் அவர் அவனும் இணைந்திருப்பதையும் எங்கும் எப்போதும் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவர் வழியாகத்தான் அவன் அஸ்வத்தை அறிமுகம் செய்துகொண்டான்.

அஸ்வத் ராம்சரணுக்கு ஓர் உதவி செய்தான். அவன் ஒரு நிலத்தை வாங்க முயன்று கொண்டிருந்தபோது அதன் பன்னிரண்டு பங்காளிகளில் ஒருவனின் மகன் மட்டும்  எதையுமே புரிந்துகொள்ளாமல் கூச்சலிட்டுக் கொண்டிருந்தான். “போலீஸுக்குப் போவேன், போலீஸுக்குப் போவேன்” என்று அவன் கத்திக்கொண்டிருந்தான்.

ராம்சரணின் ஆட்கள் அவனை சமாதானம் செய்தார்கள், மிரட்டினார்கள். அவர்கள் அந்தப் பையனுடைய தந்தையை அழைத்துக் கொண்டு சென்றபோது அவன் ராம்சரணின் அடியாட்களில் ஒருவனை  அரிவாளுடன் வந்து ஓங்கி வெட்டப்போனான். அந்த அரிவாளைப் பிடுங்கிய அடியாள் திரும்பி அந்தப்பையனை வெட்டியபோது அங்கேயே அவன் வெட்டுப்பட்டு விழுந்து இறந்தான்.

அடியாளைக் கைது செய்த போலீஸ்காரர் தெற்கிலிருந்து வந்தவர் குண்டப்பா நாராயணன் என்ற கர்நாடகக்காரர். அவர் கைது செய்யப்பட்ட அந்த அடியாளை இரவு முழுக்க வைத்து அடித்து காலையில் யாருக்காக அந்தக் குற்றத்தை செய்தான் என்ற வாக்குமூலத்தை வாங்கிவிட்டார். கைது வாரண்ட் தயாராகவிருக்கிறது என்ற செய்தியை ஒரு போலீஸ்காரரிடமிருந்து ராம்சரண் தெரிந்துகொண்டான். உடனடியாக எம்.எல்.ஏவை சென்று பார்த்தான். அவர் அஸ்வத்தை சென்று பார்க்கும்படிச் சொன்னார்.

அஸ்வத் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்குச் சென்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு தான் சிக்கியிருக்கும் பிரச்னையைப் பற்றி ராம்சரண் சொன்னான். அஸ்வத் “இது உண்மையிலேயே பெரிய பிரச்னை. வழக்கு போட்டிருப்பவரும் முக்கியமான பதவியிலுள்ள அதிகாரிதான். அவர் ஒத்துக்கொள்ளாமல் இந்தப் பிரச்னையை தீர்க்க முடியாது” என்றான்.

ராம்சரண் அதைப்போன்ற பல பேச்சுகளை முன்னரே கேட்டிருந்தான். எப்போதுமே ஒரு பிரச்னையை பெரியதாக்கி, எளிதில் சமாளிக்க முடியாதது என்று காட்டிய பிறகுதான் அப்பிரச்னையை சமாளித்துக் கொடுப்பதைப்பற்றி அஸ்வத்தைப் போன்றவர்கள் பேசுவார்கள். அவர்களிடம் அந்தப் பிரச்னை உண்மையில் சிறியதுதான் என்று ஒருபோதும் வாதிடக்கூடாது. தான் சிக்கிக்கொண்டிருப்பது உண்மை, அஸ்வத் போன்ற ஒருவரால் அன்றி தனக்கு விடுதலையே கிடையாது என்ற நிலையைத்தான் எடுக்கவேண்டும். ஆகவே அவன் மேலும் மேலும்  தணிந்து இந்த முறை மட்டும் தன்னை எப்படியாவது காப்பாற்றிவிடும்படி கெஞ்சினான்.

ஒருகட்டத்தில் அஸ்வத் ”பார்க்கிறேன்” என்றான். ”ஆனால் நடக்கவில்லை என்றால் பிறகு என்னைக் குறைசொல்லக்கூடாது”

”நடக்கும் உங்களால் முடியும்” என்று சொன்ன பிறகு ராம்சரண் அஸ்வத்துக்கு தான் கொண்டுவந்திருந்த பணத்தைக் கொடுத்தான். பணத்தை பொருட்படுத்தாதது போன்ற பாவனையுடன் எடுத்து அப்பால் வைத்தான் அஸ்வத்.

நாற்பத்தைந்து நாட்களில் அந்த வழக்கில் ராம்சரணின் பெயர் நீக்கம் செய்யப்பட்டு வேறு இருவருடைய பெயர்கள் சேர்க்கப்பட்டன. அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்கள். முப்பது நாட்களில் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தபிறகு அந்த வழக்கு வழக்கம்போல தூக்கி நீதிமன்றக்கோப்புகளில் அடுக்கப்பட்டது. திரும்ப அது ஒருபோதும் விசாரணைக்கு வராது என்று உறுதியாக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்திலேயே அந்தக் கோப்பில் உள்ள முக்கியமான காகிதங்கள் அனைத்தும் எடுத்து அழிக்கப்பட்டன. மேலும் சில ஆண்டுகளுக்குள் அந்தக் கோப்பே காணாமல் ஆகிவிடும். திரும்ப  அது நீதிமன்றத்துக்கு ஒருபோதும் வரப்போவதில்லை என்பதே வழக்கம்.

அதிலிருந்து அஸ்வத்துக்கு ராம்சரண் நெருக்கமானவன் ஆனான். அஸ்வத் மேலும் சில வேலைகளுக்கு அவனிடம் வந்தான். ராம்சரண் சில வேலைகளுக்கு அஸ்வத்தை அணுகினான்.

ராம்சரண் ஒரு பாரில் குடித்துக்கொண்டிருந்தபோது அஸ்வத் அழைத்தான். அவன் தொலைபேசியை எடுத்து ”சொல்லுங்கள் பாய்சாப்” என்றான்

”உன்னை உன் அலுவலகத்திற்குக் கூப்பிட்டேன். நீ இங்கே பாரில் இருப்பதாக  சொன்னார்கள். அதனால் தான் பாருக்கு கூப்பிட்டேன்” என்றான்

”அவ்வளவு அவசியமா இந்த ராத்திரியில்?” என்றான்.

”அவசியம்தான். எனக்கு இதை நாளை வரைக்கும் வைத்திருக்க முடியாது” என்று அஸ்வத் சொன்னான்.

”இன்றைக்கு கொஞ்சம் முன்னால்தான் இதைக் கேள்விப்பட்டேன். இன்று முழுக்க இதுவே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இதை இப்போதே முடிக்கவேண்டும்.  இல்லாவிட்டால் கோழையும் மடையனும் ஆகிவிடுவேன்” என்றான்.

“நாமாக அப்படி ஆகவேண்டியதில்லை” என்று ராம்சரண் சொன்னான். “நாம் இயல்பாக இருந்தாலே போதும்”

அந்தக் கிண்டலைப் புரிந்துகொள்ளாமல் அஸ்வத் “நான் நேரில் வருகிறேன்” என்றான்.

“வாருங்கள், நான் காத்திருக்கிறேன்”

அவன் குடித்துக்கொண்டிருந்த பாருக்கு அஸ்வத் நேரில் வந்து எல்லாவற்றையும் விரிவாகச் சொல்லி முடித்து இன்னொரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டான்.  “அது அப்படித்தான் போகுமென்று எனக்குத் தெரியும்” என்று அவன் சிகரெட் புகையை தன் சுட்டுவிரலால் தட்டியபடி சொன்னான்.

உரையாடல் முடித்து அஸ்வத் மறுநாள் காலை பத்துமணிக்கு அழைப்பதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றான். ராம்சரண் அவனுக்கு விடைகொடுத்துவிட்டு மெல்லிய தள்ளாட்டத்துடன் நடந்து தன் காரை நோக்கிச் சென்றபோது தன்னை ஒரு ஷேக்ஸ்பியர் கதாபாத்திரமாக உணர்ந்தான். போலீஸிடம் அவன் கொடுத்த வாக்குமூலத்தில் ஒரு ஷேக்ஸ்பியர் மேற்கோள் இருந்தது. ஆனால் அந்த வாக்குமூலத்தை கொடுத்து நீண்டநாட்கள் ஆகிறது. அல்லது இனிமேல்தான் கொடுக்கப்போகிறானா? அதைப்பற்றி எவரோ எங்கோ பேசிக்கொண்டார்கள். ஆனால் அது எந்தக் கதாபாத்திரம்? எத்தனை யோசித்தாலும் அவனால் நினைவுகூர முடியவில்லை. ஒதெல்லோ? மாக்பெத்? ஹாம்லெட்? அவனுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் பிராஸ்பரோதான். ஆனால் அவருக்கும் அவனுக்கும் சம்பந்தமில்லை.

அவன் காரில் ஏறிக்கொண்டதுமே மனம் மாறி இன்னொரு பாருக்குச் செல்லும்படி காரை ஓட்டிய அபய்குமாரிடம் சொன்னான். அவன் மறுபேச்சு பேசாமல் அங்கே கொண்டுசென்றான். செல்லும்போது ராம்சரண் அபய்குமாரிடம் “நான் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்? ஷேக்ஸ்பியர் கதாபாத்திரம்…. இல்லையா?” என்றான். அபய்குமார் ஒன்றும் சொல்லவில்லை.

ராம்சரண் அந்த பாரில் அமர்ந்துகொண்டு மீண்டும் குடித்தான். தன் அலுவலகத்திற்கு அழைத்து போன் வந்தால் அந்த பாருக்கு அழைக்கும்படிச் சொன்னான். கொஞ்சநேரத்தில் போன் வந்தது. இம்முறை ஹரீந்திரநாத் அழைத்தார்.

அவன் அதற்குள் அஸ்வத் தன்னிடம் பேசியதை பெரும்பாலும் மறந்துவிட்டிருந்தான். “என்ன விஷயம்? ”என்றான். “நான் இங்கே ஹாம்லெட் ஆக இருக்கிறேன். To be or not to be… எப்படி இருக்கிறது? அதாவது To be or not to be…I am a bee, honey bee ”

ஹரீந்திரநாத் “நான் அங்கே வருகிறேன்… உன்னிடம் பேசவேண்டும்” என்றார்.

“உங்கள் மகன் பேசினார். அவர் ஏதோ சொன்னார்… அதாவது அவருடைய மனைவி… அதாவது ஊர்வசி தேஷ்பாண்டே. அவள் ஒரு சமர் பையனுடன்…”

“இரு, நானே வருகிறேன்”

அவர் பாருக்கு வந்து அவன் முன் அமர்ந்தபோது அவன் ஒரு சிறு தூக்கம் போட்டு விழித்து தெளிவாக இருந்தான்.

“உங்களுக்காகக் காத்திருந்தேன் பாயி” என்றான் ராம்சரண். ”உங்கள் மகன் சொன்னதெல்லாம் நினைவில் இருக்கிறது… உங்கள் மகள் ராதிகா விஷயம்தானே?”

“நான் சொல்வதைக் கேள்…” என்று அவர் சொன்னார். அவரும் அந்த பையனை சென்று பார்த்து மிரட்டவேண்டும் என்றுதான் சொன்னார். ஆனால் அது அஸ்வத்துக்கு தெரியக்கூடாது என்றார்.

அவர் சொல்லி முடித்ததும் ”இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அந்தப்பையனை மிரட்ட வேண்டிய தேவையெல்லாம் கிடையாது. உங்கள் பெண்ணை கூப்பிட்டு ஒரு வார்த்தை கடுமையாகச் சொல்லி, இது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று சொன்னாலே போதும். படிக்கும் பெண்கள்  எதையாவது படித்துவிட்டு இந்த மாதிரி கொஞ்சம் அத்துமீறுவதுண்டு. சொல்லபோனால் ஒரு நாலைந்து முறை அவனிடம் படுத்தாலே அவர்களுக்கு பித்தம் தெளிந்துவிடும்” என்றான் ராம்சரண்

தான் சொன்னதை எண்ணி தனக்குத்தானே சிரித்துக்கொண்டு ராம்சரண் “ஏற்கனவே அவள் படுத்திருந்தாளென்றால்  நாம் சொல்லும்போது கொஞ்சம் எதிர்த்து, கொஞ்சம் அழுது, கொஞ்சம் தனியாக அமர்ந்து சோகம் நடித்து, அதன்பிறகு உண்மையை உணர்ந்து வெளியே வந்துவிடுவாள். அவனிடமிருந்து தன்னை பிரித்த பழியை முழுக்க நம் மீது போட்டுவிட்டு வசதியாக நீங்கள் சொல்லும் பணக்காரனை கல்யாணம் செய்துகொண்டு வாழ ஆரம்பித்துவிடுவாள். கைநிறைய வளையலைப் போட்டுக்கொண்டு, நெற்றி நடுவகுப்பில் குங்குமம் வைத்து, சரிகை சேலையை தலைமேல் முக்காடாகப் போட்டுக்கொண்டு, குலதெய்வ கோயிலுக்கு பதவிசாகப் போய்க்கொண்டிருப்பாள். இதை ஒரு பத்துப் பதினைந்து முறையாவது பார்த்திருப்பேன்” என்றான்.

”இது அப்படியல்ல.  இவளை உனக்குத் தெரியாது. இவள் எது செய்தாலும் எனக்கு எதிராகத்தான் செய்வாள். இப்போது இதைச் செய்வதே எனக்கு எதிராகத்தான்.”

ராம்சரணின் மூளை மீண்டும் நழுவிச்செல்ல ஆரம்பித்தது. அரைக்கவனமாக, ”உங்களுக்கு எதிராகவா?” என்றான்.

”ஆமாம் என்னை அவள் ஒரு புழு என்று நினைக்கிறாள். நான் என்ன செய்கிறேன், எப்படிப்பட்டவன் என்று அவளுக்கு மிக நன்றாகவே தெரியும்.” என்றார் ஹரீந்திரநாத். “என்னையும் என் மகனையும் அவள் அளவுக்கு அறிந்த எவருமே இல்லை”

”அது எப்படி? நீங்கள் பேசிக்கொள்வதில்லையா?”

”நாங்கள் பேசிக்கொள்வதே இல்லை. அவள் சிறு பெண்ணாக இருக்கும்போதே  நாங்கள் பேசிக்கொண்டதில்லை. உண்மையில் பேசிக்கொண்டிருந்தால் எதையாவது சொல்லி நியாயப்படுத்தவோ மறைக்கவோ செய்துவிடலாம். ஒருவருக்கொருவர்  பேசாமலே ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்கும்போது எதையுமே மறைக்க முடிவதில்லை. அவளுக்குத்தான் எங்கள் குடும்பத்திலேயே என்னைப் பற்றித் தெரியும். என் மீது உள்ள கோபமும் அருவருப்பும்தான் அவளை அந்தத் திசைக்கு செல்ல வைத்தது.”

“இருக்கலாம்” என்றான் ராம்சரண். அதை வேறு எவரோ தன்னிடம் சொல்லிக்கொண்டிருப்பதாக அவனுக்கு தோன்றியது. கேட்டுக்கொண்டிருப்பவரும் வேறு யாரோதான். தலையை உலுக்கி, தழைந்து வந்த இமைகளை தூக்கிக்கொண்டான்.

“நான் அவளிடம் கெஞ்சினேன், பேசப்பேச அழுதுவிட்டேன். ஆனால் அவள் நான் சொல்வதைக் கேட்க மாட்டாள். நான் அழுதால் அவள் இன்னும் உறுதியாகத்தான் ஆவாள். என்னை ஜெயிப்பதாக நினைத்துக்கொள்வாள். இப்படிச் சொல்கிறேனே,  அவள் அவனை விடவேமாட்டாள். அவன் பயந்து போய் அவளை விட்டால் உண்டு” என்றார் ஹரீந்திரநாத்

அவன் ”இது அஸ்வத் பாய் பேசுவதுபோலவே இருக்கிறது” என்றான் ராம்சரண். “அல்லது நான் கொஞ்சம் கூடுதலாகவே குடித்திருக்கிறேன்… நீங்கள் ஹரீந்திரநாத் தேஷ்பாண்டேதானே? அல்லது அவர் மகனா?”

அவர் அவனை அலட்சியம்செய்து “பங்கிகள் பயந்தாங்கொள்ளிகள். சிறுவயதிலேயே அவர்கள் நிறைய அடிகளையும் அவமானங்களையும் பார்த்திருப்பார்கள். ஒரு பெரிய அடியோ அவமானமோ வருகிறது என்றால் பயந்து விலகிவிடுவார்கள். அது மிக எளிது. நீதான் அதை செய்ய வேண்டும்.” என்றார்.

”அதை செய்துவிடலாம் அது ஒரு பதினைந்து நிமிட வேலை. இங்கிருந்து காசி வரைக்கும் போகவேண்டும் அவ்வளவுதான்” என்று ராம்சரண் சொன்னான்.

“உடனே அதைச் செய்” என்றார் ஹரீந்திரநாத்.

”ஆனால் அது வேண்டுமா என்று  இன்னொரு தடவை நீங்கள் யோசிக்க வேண்டும். ஏனென்றால் ஒருவேளை அதில் ஏதாவது பிரச்னை ஆகலாம்.  இந்த மிரட்டல் எல்லாமே எங்கு நிற்கும் என்பதை நாம் முன்னரே சொல்லமுடியாது. சாதாரணமாக, நாம் நினைத்த இடத்தில் நிறுத்திவிடலாம். ஆனால் மிகச்சில தருணங்களில் அது நிறுத்த முடியாமலும் ஆகும். அது நம் கையை விட்டு போனால் கிரிமினல் கேஸ் ஆகலாம். செய்தி ஆகலாம். அப்படியெல்லாம் ஆனால் நீங்கள் இதில் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்ற விஷயம் வெளியே வந்துவிடும். நீங்கள் பெரிய மனிதர், எல்லாமே பெரியதாக ஆகிவிடும். நீங்கள் அவனை ஆள்வைத்து மிரட்டியது அவளுக்குத் தெரிந்தால் எப்படி எடுத்துக்கொள்வாள் என்பதும் நாம் யோசிக்கவேண்டியதுதான்”

”அப்படி ஆகாமல் தடுப்பது உன்னுடைய பொறுப்பு. அந்தப் பையனை நீ மிரட்டி ஓடவிடு” என்றபின் ”அவனுக்கு ஒரு நல்ல ரத்த காயம் வேண்டும்.” என்றார்.

ராம்சரண் ”ரத்தக்காயமா?” என்றான்.

”ஆம், அவன் சாகக்கூடாது. ஆனால் அவன் ரத்தத்தை பார்த்து அவன் பயப்பட வேண்டும். நான் இந்தப் பங்கிகளையும் சமர்களையும் மகர்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் அடிதடியில்லாத சாதியினர். ரத்தத்தை பார்த்தால் அவர்கள் அரண்டு விடுவார்கள். ரத்தம் கண்ணில் காட்டப்படவேண்டும். அவன் எங்கு போனாலும் அந்த ரத்தத்தின் வடு அவனுக்குத் தெரியவேண்டும். அதைப் பார்த்து அவன் பயந்துகொண்டே இருக்கவேண்டும்.”

ராம்சரண் யோசித்தபின் ”அதைச் செய்துவிடலாம். ஆனால் இன்னொருமுறை நீங்கள் யோசியுங்கள். அது புதிய ஊர். நம் கட்டுப்பாட்டிலுள்ள பாட்னா அல்ல அங்கே போய் நாங்கள் இதை செய்யவேண்டும். சட்டென்று ஊர்க்காரர்கள் எங்களைப் பிடித்துவிடலாம். ஒரு இடத்தை நாங்கள் கணக்குப்போட்டு வைத்திருப்போம், அந்த இடம் நாங்கள் நினைத்தது போல் இல்லாமல் இருக்கலாம். அல்லது சம்பந்தமே இல்லாத ஒரு முரட்டுப் போலீஸ்காரர் அங்கே வந்துவிடலாம்.” என்றான்.

இன்னொரு மிடறு அருந்திவிட்டு “எல்லாவற்றையும் விட அந்தப்பங்கிக்கு அங்கே கட்சிக்காரர்களோ சாதிச் சங்கமோ ஏதோ ஒன்று இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இன்றைக்கு அவர்கள் எல்லாருமே ஜெயப்பிரகாஷ் நாராயணனின் கோஷ்டியில் சேர்ந்திருக்கிறார்கள். சோஷலிஸம் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். நமக்கு எல்லாமே பிரச்னைகளாகக்கூடும். அதை எல்லாம் முன்னரே யோசிக்க வேண்டும்.” என்று சொன்னான்.

”இனி யோசிக்க நேரமில்லை. நீ இப்போதே இங்கிருந்தே கிளம்பி காசி செல்லவேண்டும். நாளை காலை நீ காசியில் இருக்கவேண்டும். மதியத்துக்குள் அவனுக்கு அடி விழுந்திருக்கவேண்டும்.”

ராம்சரண் ”அவ்வளவு சீக்கிரமாகவா?” என்றான்.

“ஆமாம், நமக்கு நேரமில்லை. நான் பேசியது அஸ்வத்துக்குத் தெரியவேண்டாம். நமக்கிடையே பேச்சு இருப்பதே அவனுக்குத் தெரியவேண்டாம். அவன் சொல்லி நீ செய்ததாகவே இருக்கட்டும்.” என்றார் ஹரீந்திரநாத். “அவன் உன்னைக் கண்டிப்பாக கூப்பிடுவான், அவனுக்கும் என்னைப்போலவே அவளிடம் பயம்தான். நீ வீட்டில்தானே இருப்பாய்?”

”நான் இன்னொரு பாருக்கு போகப் போகிறேன்” என்று ராம்சரண் நாயக் சொன்னான்.

”இன்னொரு பாரா?” என்று ஹரீந்திரநாத் கேட்டார்.

”நான் நேற்று எல்.எல்.பி பட்டம் வாங்கியிருக்கிறேன்”

”பணம் கொடுத்தா?”

”பணம் கொடுத்தா? பாய், நான் முறையாகப்படித்து பரிட்சை எழுதி ஜெயித்திருக்கிறேன்.”

“நீ பட்டம் பெற்றவனா?” என்று ஹரீந்திரநாத் கேட்டார்.

”ஜெயிலில் இருக்கும்போதே பி.ஏ பட்டம் பெற்றேன். ஜெயிலுக்கு போகும்போதே நான் ஓராண்டு  முடித்திருந்தேன். மிச்சம் இரண்டு ஆண்டுகளையும் அங்கேயே எழுதினேன். வெளியே வந்தபிறகு சட்டம் படிக்கவேண்டும் என்று நினைத்தேன். அதற்குள் பத்துப்பதினைந்து ஆண்டுகளாகிவிட்டிருந்தன.”

”வக்கீல் பட்டமா? அதை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறாய்?”

”ஒன்றும் செய்யப்போவதில்லை. ஏதாவது பாக்கியிருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தால் இது ஒன்றுதான் மிச்சம் இருக்கிறது. அதையும் செய்து வைப்போம். சட்டென்று யாராவது நம்மை வெட்டி தெருவில் போட்டால் கூட இது ஒன்று மிச்சமிருக்கிறதே என்று நினைத்துக்கொண்டு சாகமாட்டேனே…”

”ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பைத்தியம் இருக்கிறது. சரி நான் வருகிறேன்” என்று அவர் கிளம்பிச் சென்றார்.

அவர் சென்றபின் அவன் மீண்டும் அமர்ந்து யோசித்தான். அது என்ன ஷேக்ஸ்பியர் கதாபாத்திரம்? எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு வரவில்லை. பாரிலேயே மேஜைமேல் கவிழ்ந்து தூங்கிவிட்டான். அதன் கதவை உள்ளிருந்து மூடிவிட்டார்கள். அவனுடைய டிரைவர் வெளியே காவலிருந்தான். உள்ளே மின்விசிறி மட்டும் சுழன்றுகொண்டிருந்தது. அப்போதுதான் அஸ்வத் அவனை அழைத்தான்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 23, 2025 11:33

நீலி பெண்ணிய உரையாடல்கள்- சைதன்யா

அன்பு நண்பர்களுக்கு,

நீலியின் இரண்டாவது கலந்துரையாடல் நிகழ்வு ஜுன் 28 (சனிக்கிழமை), மாலை 6-7.30 வரை நிகழ உள்ளது. இந்த நிகழ்வில் எழுத்தாளர் சைதன்யா “பெண் சிந்தனையாளர்கள் இடம் – அறம் சார்ந்த தத்துவம் (ethical philosophy)” என்ற தலைப்பில் 30 நிமிட உரை நிகழ்த்துகிறார். அதன்பிறகு ஒரு மணி நேர கேள்வி–பதில் அரங்கு நிகழும். இதில் கலந்து கொள்ளும் நண்பர்கள் சைதன்யா நீலியில் எழுதிய கட்டுரைகளை வாசித்துவிட்டு வந்து உரையாடலாம்.

நீலி குழு

சைதன்யா கட்டுரைகள்: https://neeli.co.in/author/chaidhanya/

சைதன்யா – தமிழ் விக்கி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 23, 2025 11:31

நீலி பெண்ணிய உரையாடல்கள்- சைதன்யா

அன்பு நண்பர்களுக்கு,

நீலியின் இரண்டாவது கலந்துரையாடல் நிகழ்வு ஜுன் 28 (சனிக்கிழமை), மாலை 6-7.30 வரை நிகழ உள்ளது. இந்த நிகழ்வில் எழுத்தாளர் சைதன்யா “பெண் சிந்தனையாளர்கள் இடம் – அறம் சார்ந்த தத்துவம் (ethical philosophy)” என்ற தலைப்பில் 30 நிமிட உரை நிகழ்த்துகிறார். அதன்பிறகு ஒரு மணி நேர கேள்வி–பதில் அரங்கு நிகழும். இதில் கலந்து கொள்ளும் நண்பர்கள் சைதன்யா நீலியில் எழுதிய கட்டுரைகளை வாசித்துவிட்டு வந்து உரையாடலாம்.

நீலி குழு

சைதன்யா கட்டுரைகள்: https://neeli.co.in/author/chaidhanya/

சைதன்யா – தமிழ் விக்கி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 23, 2025 11:31

முதல்நாவலை எழுதுவது…

ஆங்கில நாவல்போட்டி பற்றிய செய்தியை வாசித்தேன். பெண்களுக்கான நாவல்போட்டி என்பது ஓர் அருமையான கருத்து. இன்றைக்குப் பெண்கள் எழுதுகிறார்கள், ஆனால் கவனிக்கப்படுவதில்லை. தாங்களாகவே அமேசானில் வலையேற்றம் செய்கிறார்கள். சிலர் பணம் கொடுத்து நூலாக வெளியிடுகிறார்கள். ஒரு நல்ல பதிப்பகம் வெளியிடுவதென்பது மிகச்சிறந்த ஒரு வாய்ப்பு.

முதல்நாவலை எழுதுவது…

I am a medical doctor, and I feel that philosophy is essential for medical practitioners, too. Without philosophy, you cannot understand medicine in the real sense. A surgeon without a philosophical base is just a mechanic or plumber.

Why Philosophy?
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 23, 2025 11:30

முதல்நாவலை எழுதுவது…

ஆங்கில நாவல்போட்டி பற்றிய செய்தியை வாசித்தேன். பெண்களுக்கான நாவல்போட்டி என்பது ஓர் அருமையான கருத்து. இன்றைக்குப் பெண்கள் எழுதுகிறார்கள், ஆனால் கவனிக்கப்படுவதில்லை. தாங்களாகவே அமேசானில் வலையேற்றம் செய்கிறார்கள். சிலர் பணம் கொடுத்து நூலாக வெளியிடுகிறார்கள். ஒரு நல்ல பதிப்பகம் வெளியிடுவதென்பது மிகச்சிறந்த ஒரு வாய்ப்பு.

முதல்நாவலை எழுதுவது…

I am a medical doctor, and I feel that philosophy is essential for medical practitioners, too. Without philosophy, you cannot understand medicine in the real sense. A surgeon without a philosophical base is just a mechanic or plumber.

Why Philosophy?
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 23, 2025 11:30

தமிழ்விக்கி- தூரன் விருது: வெ.வேதாசலம்

[image error]

2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்விக்கி- தூரன் விருது ஆய்வாளர் வெ.வேதாசலம் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. தமிழ் வரலாறு- பண்பாட்டுக் களத்தில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக பங்களிப்பாற்றி வரும் வேதாசலம் தமிழின் முதன்மையான ஆய்வாளர்களில் ஒருவர். தமிழ்விக்கி தூரன் விருது வேதாசலம் அவர்களுக்கு வழங்கப்படுவதனூடாக எங்கள் அமைப்பு பெருமை கொள்கிறது

வெ.வேதாசலம் தமிழ்விக்கி

vedachalamthiru@gmail.com

விருது விழா ஆகஸ்ட் 15 மற்றும் 16 தேதிகளில் ஈரோட்டில் நிகழும்.

தமிழ்விக்கி  இணையக் கலைக்களஞ்சியம் 7 மே 2022 அன்று தொடங்கப்பட்டது. வாஷிங்டனில் வெளியீட்டு விழா நிகழ்ந்தது. தொடர்ச்சியாக நண்பர்களின் பங்களிப்புடன் இந்த இணையக்கலைக்களஞ்சியம் வளர்ந்து வருகிறது.

தமிழ்விக்கி தூரன் விருது மறைந்த கலைக்களஞ்சியத் தொகுப்பாளர் பெரியசாமித் தூரன் நினைவாக தமிழ்விக்கி சார்பாக வழங்கப்படும் விருது. 2022 முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்விக்கி இணையக்கலைக்களஞ்சியம் தமிழ்விக்கி தூரன் விருது பெரியசாமித்தூரன்

இதுவரை விருது பெற்றவர்கள்

2022 கரசூர் பத்மபாரதி (மானுடவியல் ஆய்வாளர்)2023 மு. இளங்கோவன் (பண்பாட்டு ஆய்வாளர்)2023 எஸ்.ஜே. சிவசங்கர் (வட்டாரப் பண்பாட்டு ஆய்வாளர்)(சிறப்பு விருது)2024 மோ.கோ. கோவைமணி (சுவடியியல் ஆய்வாளர்)2025 வெ. வேதாசலம் (தொல்லியல், வரலாற்று ஆய்வாளர்)

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 23, 2025 02:41

தமிழ்விக்கி- தூரன் விருது: வெ.வேதாசலம்

[image error]

2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்விக்கி- தூரன் விருது ஆய்வாளர் வெ.வேதாசலம் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. தமிழ் வரலாறு- பண்பாட்டுக் களத்தில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக பங்களிப்பாற்றி வரும் வேதாசலம் தமிழின் முதன்மையான ஆய்வாளர்களில் ஒருவர். தமிழ்விக்கி தூரன் விருது வேதாசலம் அவர்களுக்கு வழங்கப்படுவதனூடாக எங்கள் அமைப்பு பெருமை கொள்கிறது

வெ.வேதாசலம் தமிழ்விக்கி

vedachalamthiru@gmail.com

விருது விழா ஆகஸ்ட் 15 மற்றும் 16 தேதிகளில் ஈரோட்டில் நிகழும்.

தமிழ்விக்கி  இணையக் கலைக்களஞ்சியம் 7 மே 2022 அன்று தொடங்கப்பட்டது. வாஷிங்டனில் வெளியீட்டு விழா நிகழ்ந்தது. தொடர்ச்சியாக நண்பர்களின் பங்களிப்புடன் இந்த இணையக்கலைக்களஞ்சியம் வளர்ந்து வருகிறது.

தமிழ்விக்கி தூரன் விருது மறைந்த கலைக்களஞ்சியத் தொகுப்பாளர் பெரியசாமித் தூரன் நினைவாக தமிழ்விக்கி சார்பாக வழங்கப்படும் விருது. 2022 முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்விக்கி இணையக்கலைக்களஞ்சியம் தமிழ்விக்கி தூரன் விருது பெரியசாமித்தூரன்

இதுவரை விருது பெற்றவர்கள்

2022 கரசூர் பத்மபாரதி (மானுடவியல் ஆய்வாளர்)2023 மு. இளங்கோவன் (பண்பாட்டு ஆய்வாளர்)2023 எஸ்.ஜே. சிவசங்கர் (வட்டாரப் பண்பாட்டு ஆய்வாளர்)(சிறப்பு விருது)2024 மோ.கோ. கோவைமணி (சுவடியியல் ஆய்வாளர்)2025 வெ. வேதாசலம் (தொல்லியல், வரலாற்று ஆய்வாளர்)

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 23, 2025 02:41

June 22, 2025

கல்வியின் வருங்காலம்

வணக்கம் ஜெ,

இன்றைய உலகில், தொழில்முறை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் பலரும் ஏதோ ஒன்றைக் கற்பிக்கும் இடத்தில் உள்ளனர். ஒரு மென்பொருள் அணியின் தலைவர், கணினி நிரலை இளம் பொறியாளர்களுக்கு கற்பிக்கிறார்.  குழந்தைகளுக்கான கோடை முகாம்களில் பல வித கல்வி, கலை, விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. புதிய தொழில்கள், இயக்கங்கள் முதலியன தொடங்குவோர், அந்த நிறுவனத்தின் கொள்கை மற்றும்  செயல்பாடுகளை உறுப்பினர்களுக்கு கற்பிக்க வேண்டி உள்ளது. கற்பிக்கும் இடத்தில் இருப்பவர்கள் துறை-சார் நிபுணர்களாக இருந்தாலும், கற்பிக்கும் முறையில் அனுபவம் இல்லாமல் இருக்கக் கூடும்.

நம் நாடு வளர வளர, கற்கும் ஆர்வமும், துறை-சார் ஆசிரியர்களுக்கான தேவையும் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒரு கலையை, அல்லது கல்வியைக் கற்பிப்பதற்கான அடிப்படை நெறிகள் யாவை?

நன்றி,

ஹரீஷ்

நவீன கல்வித்துறை சார்ந்த பயிற்றியல் பற்றி கல்வித்துறையாளர்களே பொருட்படுத்தும்படியான ஒரு கருத்தை சொல்ல முடியும் என்று நான் நினைக்கிறேன். எந்தத்துறை ஆனாலும் அதில் நீண்ட கால நேரடி அனுபவம், அதன் விளைவான அவதானிப்புகள், அந்த அவதானிப்புகளை பொதுவெளியில் வைத்து அதன்மீது வரும் எதிர்வினைகள் சார்ந்த விவாதங்கள் -ஆகியவற்றினூடாகத் திரண்டு வரும் கருத்துக்கே மதிப்புள்ளது. தமிழில் பயிற்றியல் பற்றி எழுதப்பட்டவற்றில் பிரசுரமான நூல்களில் வசந்தி தேவி – சுந்தர ராமசாமி உரையாடல் ஒன்றே நான் கவனித்தவரை பெருமதியானது. (தமிழகத்தில் கல்வி)

தகுதி அடிப்படையில் ஆசிரியர்களை நியமிப்பது என்பது ஒரு கல்வித்துறையின் முதல் விதிகளில் ஒன்று. தமிழகத்தில் அதுவே நிகழ்வதில்லை. கல்லூரி ஆசிரியர் பணிக்கு ஒரு கோடி ரூபாய் வரை கையூட்டு என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் பயிற்றியலின் நுட்பங்களைப்பற்றியோ அதன் அடுத்த கட்ட வளர்ச்சியைப்பற்றியோ பேசுவதைப்போல பொருளற்ற ஏதுமில்லை.

முற்றிலும் தகுதியற்றவர்கள் பெரும் தொகை கொடுத்து அரசுப்பணிக்கு இன்று செல்ல முடியும். அவர்கள் எந்நிலையிலும் ஆசிரியராக ஒரு பங்களிப்பை வழங்கிவிட முடியாது. அத்தகைய கல்லூரிகளில் எந்த வகையிலும் தகுதியற்ற பல ஆசிரியர்கள் எந்தவகையிலும் பொருட்படுத்தப்பட முடியாத அளவுக்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகம் முழுக்க அனைத்து கல்லூரிகளிலும் முற்றிலும் தகுதி அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படும்போது மட்டுமே பயிற்றியலின் அடுத்த கட்டத்தைப்பற்றி நாம் எவ்வகையிலேனும் நாம் பேச முடியும்.

தனியார் கல்லூரிகள் இன்னொரு எல்லையில் உள்ளன. ஒரு கல்லூரியில் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர் பெறவேண்டிய நியாயமான ஊதியத்தில் ஐந்தில் ஒரு பங்கு கூட அவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. பல தருணங்களில் அந்த ஊதியம் அவர் உயிர்வாழ்வதற்கே போதுமானதாக இருப்பதில்லை. ஒரு அரசு கடைநிலை ஊழியருடைய சம்பளத்தைவிட குறைவாகவே ஒரு தனியார் கல்லூரியின் உயர்நிலை பேராசிரியர் ஊதியம் பெறுகிறார் எனும்போது அவர்களிடம் பயிற்றியல் நெறிகளைப்பற்றி பேசுவதோ தரமான பயிற்றுவித்தலை எதிர்பார்ப்பதோ எந்தவகையிலும் நியாயமானதல்ல.

அத்துடன் இன்றைய கல்வி முறை என்பது தனியார் துறைகளில் கடும்போட்டி கொண்டது. மாணவர்களின் வெற்றி விகிதம் மட்டுமே அப்போட்டியின் இறுதி இலக்காக இருக்கிறது. அதில் வெல்லும் கல்லூரிகளே லாபம் ஈட்டக்கூடியதாக திகழ முடிகிறது ஆகவே மாணவர்களை தேர்வு வெற்றிக்காக முரட்டுத்தனமாக பயிற்றுவித்தல் மட்டுமே அங்கே நிகழ்கிறது. அதை டீச்சிங் (Teaching) என்பதை விட கோச்சிங் (Coaching) என்பதே சரியானதாக இருக்கும். திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை சொல்லி எழுதவைத்து, மாணவர்களின் மண்டைக்குள் புகுத்தி ,அவர்கள் தன்னிச்சையாகத் தேர்வில் அவற்றை எழுதச்செய்து உயர்மதிப்பெண் பெற வைத்து வெளியே அனுப்புவது மட்டுமே தனியார் கல்லூரிகளில் இன்றுள்ள கல்வி முறையாக இருக்கிறது. அங்கும் இந்த பயிற்றியலின் நெறிகளைப் பற்றி எந்தக்கவலையும் எவருக்கும் இருப்பதில்லை.

இவ்விரண்டு தளங்களுக்கும் அப்பால் ஒரு சிறிய வட்டத்தில் இங்கே தரமான கல்வி நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அது பெரும்பாலும் தனிப்பட்ட அக்கறையுடன் சில நிறுவனங்கள் நடத்தி வரும் கல்வி நிலையங்களே. உதாரணமாக ஜே.கிருஷ்ணமூர்த்தி அமைப்பின் ரிஷிவேலி போன்ற நிறுவனங்கள்.

இவை ஒரு பாதுகாக்கப்பட்ட வட்டத்துக்குள் அக்கல்வியை வழங்குகின்றன கல்விப்போட்டியில் இருந்து விலகி, ஊழலுக்கு அப்பால் இவற்றை நடத்த வேண்டும் என்றால் அவற்றுக்கான நிதி ஆதாரம் வலுவானதாக இருக்கவேண்டும். அந்த நிதியாதாரத்துக்கு பங்களிப்பாற்றக்கூடிய மாணவர்களே அதில் சேரமுடியும். ஆகவே பெரும்பாலும் இந்தக் கல்வி நிலையங்களில் செல்வந்தர்களின் குழந்தைகளே படிக்கிறார்கள். அவர்கள் அங்கிருந்து நேரடியாக ஐரோப்பியக் கல்லூரிகளுக்கு சென்றுவிடுகிறார்கள்.

இந்தியாவின் கல்வி முறையின் மிகப்பெரிய பலவீனமென்பது அக்கல்விமுறையின் போக்குகளை தீர்மானிப்பவர்களின் குழந்தைகள் எவரும் அதில் பயில்வதில்லை என்பதுதான். ஆரம்பப்பள்ளி முதலே ஆசிரியர்களின் குழந்தைகள் அவர்கள் பயிற்றுவிக்கும் பள்ளிகளில் படிப்பதில்லை. செல்வந்தர்களின் பிள்ளைகள், அதிகாரிகளின் பிள்ளைகள், அரசியல்வாதிகளின் பிள்ளைகள் தரமான பள்ளிகளில் பயில்கிறார்கள். பெரும்பாலும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு சென்றுவிடுகிறார்கள்.

ஆகவே இங்கிருக்கும் கல்வி முறை என்பது ஒருவகையில் மாணவர்களின் இயலாமையை அதிகாரிகளும் அரசும் கல்வியாளர்களும் சேர்ந்து சுரண்டுவதாகவே உள்ளது. இன்றைய சூழலில் பயிற்றியலின் சீர்திருத்தங்கள் அல்லது முன்னெடுப்புகளைப்பற்றி பேசுவதென்பது முற்றிலும் பொருளற்றது. அடிப்படையில் இங்குள்ள கல்வி முறையில் சீர்திருத்தம் வந்தாலொழிய நாம் அந்த விவாதங்களுக்குள் கடக்க முடியாது.

அவ்வாறெனில் தனி பயிற்றியல் வட்டங்களை உருவாக்கிக்கொள்ள முடியுமா? அது எந்தவகையில் சாத்தியமென்று அதில் நடைமுறை பிரச்னைகள் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. இன்று அறிவியலை கலைகளை சர்வதேச தரத்துடன் கற்பிக்கும் சிறிய கல்வி நிறுவனங்களை உருவாக்க முடியும். அக்கல்வி நிறுவனங்கள் தங்களுக்குள் இணைந்து ஒரு கல்வி வட்டமாக ஆகிக்கொள்ள முடியும். அவர்கள் அதற்குரிய மாணவர்களையும் கண்டடைய முடியும்.

அந்த மாணவர்கள் இன்றைய வெறிகொண்ட கல்விப்போட்டிக்குள் நுழையக்கூடாது. மறுபக்கம் முற்றிலும் ஊழல்மயமான அரசு சார் கல்வி அமைப்புக்குள்ளும் நுழையக்கூடாது என்றால் அவர்களுக்கான நிதி ஆதாரம் எங்கிருந்து வரும் என்பது பெரிய கேள்வி .அதை அளிக்கும் மாணவர்கள் மிகச்சிலரே. அவர்களுக்காக மட்டும் அந்நிறுவனங்களை நடத்த முடியாது. தகுதியும் ஆர்வமும் கொண்ட அனைவருக்கும் இடமளிப்பதாக கல்வி நிறுவனங்கள் இருக்க வேண்டும்.

இன்றைய சூழலில் அதற்கான நிதி உண்டு என்றெனக்கு தோன்றவில்லை. வருங்காலத்தின் கல்வி எந்தவகையில் இருக்கக்கூடும் என்று ஒரு எழுத்தாளனாகவும், கல்வி பற்றி தொடர்ந்து அக்கறை கொண்டவனாகவும், சர்வதேச அளவில் நல்ல கல்வி நிலையங்களுக்கு சென்று அங்கு நிகழும் கல்வியை ஓரளவு பார்த்தவனாகவும் சில எண்ணங்கள் எனக்கு இருக்கின்றன.

இன்று போல் ஒரு தொழிலுக்கு தேவையான அடிப்படைப் பயிற்சியை மட்டுமே மூர்க்கமாக அளிக்கும் பயிற்சிமுறைக் கல்வி மெல்ல வழக்கொழிந்து வருகிறது. அது தேவைதான், அப்பயிற்சியை அடையும் பல்லாயிரவர் எப்போதும் இருக்க வேண்டும்தான். அது கைத்தொழில் பயிற்சி போல ஒருவகையான தேர்ச்சி மட்டும்தான். தொழில்தேர்ச்சி கொண்டவர்கள் எப்போதும் தேவைதான். ஆனால் அதற்கு மேல் தனி அறிவுதகுதி கொண்ட மாணவர்களுக்கான இன்னொரு வகையான கல்லூரிகள் இருக்கவேண்டும்.

அக்கல்லூரிகளில் இன்று போல அறிவியலும் கலைகளும் தொழில் நுட்பமும் முற்றாகப் பிரிந்திருக்க முடியாது. ஏனெனில் இன்றைய செயற்கை நுண்ணறிவு காலகட்டத்துக்குப் பிறகு எல்லாக் கலைகளும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன. தொழில்நுட்பத்தை மானுட நுண்ணறிவால் எவ்வாறு திறம்படப் பயன்படுத்தி செயற்கையறிவுத் தொழில்நுட்பம் சென்றடைய முடியாத களங்களுக்கு படைப்பூக்கம் சென்றடைய முடியும் என்பதுதான் இன்றைய வினா.

உதாரணமாக இசை. இன்று செயற்கையறிவுத் தொழில்நுட்பம் ஒரு சராசரி இசையை, அதாவது இன்று வரை போடப்பட்ட இசையிலிருந்து உருவாக்கப்பட்ட ஓர் இசையை, மிக எளிதாக உருவாக்கித் தரமுடியும். ஆகவே இன்று வரையிலான இசையை கற்பித்து, அவற்றிலிருந்து தேவையான ஓர் இசையை உருவாக்கும் பயிற்சியை மட்டும் அளித்து, ஒரு மாணவனை வெளியே விட்டால் அவன் எல்லாவகையிலும் செயற்கை நுண்ணறிவுடன் தோற்றுபோய்விடுவான்.

மாறாக இன்றுவரையிலான இசையை அவனுக்கு கற்பிக்கும்போதே நவீன ஒலித்தொழில்நுட்பங்கள் அனைத்தையும் கற்பித்து, கூடவே அடுத்தகட்ட முன்நகர்வுக்கான கற்பனையையும், அது சார்ந்த நுண்ணறிவையும் பயிற்றுவிக்கும் ஒரு கல்வி இருக்குமென்றால் இன்று இசைக்கல்வியே மிகப்பெரிய தொழில் வாய்ப்பாக ஆகக்கூடும். இதையே இலக்கியத்திற்கும் பிற கலைகளுக்கும் சொல்ல முடியும்.

எதிர்காலத்தில் desigining என்று சொல்லப்படும் வடிவ வரைவுகள் மற்றும் planing என்று சொல்லத்தக்க திட்ட வரைவுகளில் எது நுண்ணறிவால் செய்யப்படுமோ அதற்கு அப்பால் செல்லும் கற்பனைக்கு மட்டுமே மதிப்பிருக்கும். அத்தகைய திறமை வாய்ந்த நிபுணர்களை உருவாக்க வேண்டுமென்றால் முழுக்க முழுக்க சுயஅறிவை ,சுயசிந்தனையை சுயகற்பனையை வளர்க்கும் ஒரு கல்வி முறை உருவாக்கப்படவேண்டும்;

அந்தக் கற்பனை இனிதாக எனக்குள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. எனக்கு மட்டும் ஒரு கல்வி நிறுவனத்தை நடத்தும் வாய்ப்பு அமைந்தால் அப்படி ஒன்றை தொடக்கம் முதல் இறுதி வரை வடிவமைத்து உருவாக்குவேன் என்று ஒரு பகல்கனவாக எனக்குள்ளே சொல்லிக்கொள்வேன். அதில் இலக்கியமும் கலைகளும், அறிவியலும், தொழில் நுட்பமும் ஒன்றை ஒன்று ஆதரிப்பவையாக இருக்கும். ஒன்றின் இடைவெளியை இன்னொறு நிரப்பக்கூடியதாக, ஒன்று இன்னொன்றை பயன்படுத்துவதாக இருக்கும்.

ஒரு மென்பொருள் நிபுணர் ஓவியத்தில் நுண்பயிற்சி உடையவராக இருந்தால் அவர் அதனூடாக செயற்கை நுண்ணறிவை கடந்து செல்ல முடியும். அவருக்கு இலக்கியத்தில் ஆழ்ந்த பயிற்சி இருக்குமென்றால் செயற்கை நுண்ணறிவு ஒருபோதும் யோசிக்காத ஒரு களத்துக்கு சென்று அவர் நிற்க முடியும். அவர் இசையில் தேர்ச்சி கொண்டவராக இருந்தால் செயற்கை நுண்ணுணர்வை தன் நுண்ணுணர்வால் கடந்து செல்ல முடியும். அப்படிப்பட்ட கல்வியை பலவகையில் கலைத்திறனும் கற்பிக்கும் திறனும் கொண்ட கலைஞர்கள் தொழில் நுட்ப நிபுணர்கள் ஆகியவர்களை இணைத்து தான் உருவாக்க முடியும்

 

இன்றைய நமது பேராசியர்களில் கல்வியலாளர்களில் கணிசமானவர்கள் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்தை அப்படியே மாணவர்களுக்கு கற்பித்து மூளையில் ஏற்றும் முனைப்பு கொண்டவர்கள். அத்தகையோரால் சுயசிந்தனையையோ சுய கற்பனையையோ கண்டடையவோ வளர்க்கவோ முடியாது.மரபான வகுப்புகளும் உறுதியான பாடத்திட்டங்களும் மாணவர்களின் சுயசிந்தனை, நுண்ணுணர்வு ஆகியவற்றை வளர்ப்பதில் பயனளிக்காது. ஆனால் ஒருவகையான கற்கும் குழுக்களாக வகுப்புகளை அமைக்க முடியுமென்றால் அது சாத்தியமாகும்.

மிகச்சிறிய அளவில் அதை முழுமையறிவு வகுப்புகளினூடாக மிக வெற்றிகரமாக செய்து நிறைவுற்றிருக்கிறேன். அது சாத்தியம்தான் என்றும், அதன் வெற்றிகளும் தோல்விகளும் என்னென்ன என்றும் இப்போது கண்டுகொண்டிருக்கிறேன். ஆனால் இதை நம் சூழலில் எவ்வகையிலும் முன்னெடுக்க இயலாதென்றும் தெரிகிறது. இத்தகைய ஒரு கல்விநிறுவனம் இன்று நிகழவேண்டும் என்றால் அதற்கான நிதி எங்கிருந்து வரும் என எண்ணினாலே இது பகற்கனவாக சுருங்கிவிடும்.

 

தமிழ்ச் சூழலில் முதலில் முற்றிலும் தகுதி கொண்ட, முழு ஆர்வத்தால் மட்டுமே ஒன்றை கற்க வருகிற மாணவர்கள் அவசியமானவர்களாக இருக்கிறார்கள். தொழில் வாய்ப்புக்காக மட்டுமே கற்க வரக்கூடிய ஒருவர், வெறும் தொழில் நுட்பம் மட்டுமே தெரிந்துகொள்ள வரும்  ஒருவர் இதற்கு எந்தவகையிலும் பயனற்றவர்.

உதாரணமாக ஒரு குறிப்பிட்ட கல்வியில் மாணவருக்கு இலக்கியப் வாசிப்பு தேவை என்றிருக்கும்போது, ஒருபோதும் நூல்களை வாசிக்க மனமில்லாதவரும் அதை குறுக்கு வழியில் தாண்டிச்செல்ல முயல்பவருமான ஒரு மாணவர் அக்கல்விக்கு வந்தால் அவர் விலக்கப்பட வேண்டும். அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட வேண்டும். அதாவது அவர் தோற்கடிக்கப்படவேண்டும். வாசிக்காமல் அக்கல்வியை முடிக்கமுடியாது என்னும் நிலை இருந்தாகவேண்டும்.

ஒரு மேல்நாட்டு பல்கலைக்கழகம் மிக எளிதாக அவர்களை வெளியே அனுப்பிவிடும். ஆனால் இங்கே ஒரு குறிப்பிட்ட படிப்பில் நுழையும் அத்தனை பேரையுமே எப்படியேனும் அந்தப்பட்டத்தை அளித்து வெளியே விடுவதைத்தான் எல்லா கல்வி நிறுவனங்களும் செய்து வருகின்றன. தோல்வி என்பதே இல்லாத கல்விதான் இன்று இருக்கிறது. ஒரு படிப்பில் சேர்வதுதான் முக்கியம், சேந்தவர் ஒருபோதும் அதை முடிக்காமல் ஆவதில்லை.

ஓர் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் நுழைபவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் முதல் ஆண்டிலேயே வெளியே அனுப்பப்படுகிறார்கள். உண்மையான ஆர்வமில்லாத ஒருவர் அக்கல்வியைக் கற்கவே முடியாது. ‘என்னால் புத்தகங்கள் வாசிக்க முடியாது. நான் புத்தககங்களை பற்றிய குறிப்புகளை மட்டுமே தேர்வு எழுதுவேன். ஆனால் எனக்கு ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெறவேண்டும்’ என்று ஒருவர் சொன்னாரென்றால் அது கேலிக்குரியதாகத்தான் அங்கு பார்க்கப்படும் ஆனால் தமிழகத்தில் இருக்கும் பல நூறு ஆங்கிலத்துறைகளில் ஒரு மாணவர் கூட ஒரு புத்தகத்தைக்கூட ஒருமுறை கூட வாசிக்காமல் முனைவர் பட்டம் வரை சென்றடைபவர்களே மிகுதி. இந்த சவாலைத்தான் நாம் சந்திக்க வேண்டும்.

 

எந்தத்துறையிலானாலும் மெய்யாகவே. அதில் ஆர்வம் கொண்ட ஒருவர் தான் அதற்குள் நுழைய வேண்டும் அண்மைக்காலம் வரை ஓவியம் இசை போன்ற கலைகளில் இந்த வாய்ப்பு இருந்தது. ஏனெனில் முற்றிலும் இசையார்வம் இல்லாத, முற்றிலும் ஓவிய ஆர்வமில்லாத ஒருவர் அந்தக் கல்லூரியில் சேர்வதற்கே வாய்ப்பில்லை. ஆகவே எப்படியோ அதற்குள் சென்றபிறகு அக்கலைகளை அவர் கற்று தேர்ந்துகொள்ள ஆரம்பிக்கிறார். அதே நியதி அறிவியலுக்கும் இலக்கியத்துக்கும் பிற துறைகளுக்கும் வருமெனில் இங்கும் நாம் உண்மையான திறனுடைய நிபுணர்களை கல்வி வழியாக உருவாக்க முடியும். அது தான் இன்றைய காலகட்டத்துக்கு தேவையான கல்வி என்று நான் நினைக்கிறேன்.

இப்போதிருக்கும் அக்கறையற்ற அரசுக்கல்லூரிக் கல்வி, குரங்குகளைப் பழக்குவதுபோன்ற தனியார்க்கல்லூரிக் கல்வி இரண்டுமே மிகமிக வேகமாக செயற்கை நுண்ணறிவால் செல்லாதவையாக ஆக்கப்பட்டுவிடும். நாமாகவே எந்த கல்வியியல் மாற்றத்தையும் செய்யமாட்டோம். ஏனென்றால் இன்று இங்கே கல்வி என்பது ஒரு மாபெரும் தொழில். ஆனால் அது முற்றாகத் தோற்கடிக்கப்படும்போது மாறியே ஆகவேண்டிய நிலை வரும். அதைப்பற்றியே பேசுகிறேன்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 22, 2025 11:35

அரசூர் கன்னிமார் கருப்பராயன் கோவில்

அரசூர் கன்னிமார் கருப்பராயன் கோவில் கோவை மாவட்டம் சூலூர் வட்டம் அரசூரில் அமைந்துள்ளது. இக்கோவில் கன்னிமார் சன்னதியும், கருப்பராயன் சன்னதியும் தனியே அமையப் பெற்றது.

அரசூர் கன்னிமார் கருப்பராயன் கோவில் அரசூர் கன்னிமார் கருப்பராயன் கோவில் அரசூர் கன்னிமார் கருப்பராயன் கோவில் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 22, 2025 11:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.