இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 32
February 28, 2024
இதைத்தான் காந்தி செய்தார்
காந்தி முஸ்லிம்களுக்காக மட்டுமே எப்போதும் பேசினார் என்பது காந்தியைக் குறித்து அவரது எதிரிகள் எப்போதும் வைக்கும் குற்றசாட்டுகளில் ஒன்று
கோட்சேயும் காந்தி மீதான தனது முக்கியமான குற்றச்சாட்டுகளுள் ஒன்றாக இதை வைத்தான்1947 ஜூலை மாதத்தில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த DAWN என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் பாகிஸ்தான் பகுதியில் இருக்கும் இந்துக்களின் பாதுகாப்பு குறித்து முஜிபுர் ரஹ்மானிடம் வாய் கிழிய பேசும் காந்தி, இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் பாதுகாப்பு குறித்து பேசுவாரா? என்று கேட்டிருந்தார்காந்தி கோவமேப் படவில்லை. அவர் சொன்னார்நான் எந்தப் பகுதியில் வசிக்கும் எந்த வகை சிறுபான்மையினராயினும் அவர்களது பாதுகாப்பு குறித்து கவலைப் படவும் பேசவுமே செய்வேன்நான் முஜிபுரிடம் பேசுவதுபோலவே ஜவஹரிடமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்என்று சொல்லியதோடு நிறுத்தாமல்டான் பத்திரிக்கையின் ஆசிரியரும் பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து உத்திரவாதமளிக்கக் கடமைப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்அவரும் இதை ஏற்கிறார்இதுதான் காந்திஒருக்கால் இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாகவும் சிங்களவர்கள் சிறுபான்மையாகவும் இருந்து சிங்களவர்களை தமிழர்கள் தாக்கிக் கொண்டிருந்தால் தான் சிங்களவர்களுக்கு ஆதரவாகத்தான் எழுதுவேன் என்று ஒருமுறை தோழர் இன்குலாப் கூறினார்இதைத்தான் காந்தி செய்தார்அழைப்பு 038
February 24, 2024
அழைப்பு 037
February 22, 2024
உறுதியான குரலில் சொன்னார் பெரியார்
ஆனால், காந்தி இறந்தபொழுது அப்படி வருந்தினார். ஒருபடி மேலே சென்று இந்த தேசத்திற்கு “காந்தி தேசம்” என்று பெயர் வைக்க வேண்டும் என்றும் கோரினார். பெரியாரை அதுவரை காந்தி எதிர்ப்பாளராகவே பார்த்து வந்தவர்களை இது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஏன், ஏனிந்த திடீர் மாற்றம்?
பெரியார் சொன்னார்,
“வாழ்ந்த காந்தி வேறு, செத்த காந்தி வேறு”
இந்த ஆறு சொற்களும் ஆழமானவை. எதையும் போகிற போக்கில் சொல்லும் வழக்கமற்ற பெரியார் இதையும் கூர்ந்த கவனிப்பிற்குப் பிறகே சொல்கிறார்.
இந்திய சுதந்திரத்தை தந்தை பெரியார் கொண்டாடவில்லை. அதைத் துக்க நாளாக என்று அறிவிக்குமளவிற்கு சென்றார். அவரது இந்த முடிவை அண்ணாவேகூட ஏற்கவில்லை.
காந்தி இதைத் துக்க நாளாகவெல்லாம் அறிவிக்காவிட்டாலும் இந்த விடுதலையில் இருக்கும் போதாமையைத் தன் இறுதிக் காலத்தில் உணர்ந்தவராகவே இருந்தார்
விடுதலை நாள் நெருங்க நெருங்க காந்தி ஒருவித மனச்சோர்வோடு இருந்ததை துயரத்தோடும் இருந்ததை அவரைச் சந்தித்த நண்பர்கள் உணர்கிறார்கள். ஏன் என்று வினவுகிறார்கள்.
தாம் உண்மையில் உணராத ஒரு மகிழ்ச்சியை தம்மால் வெளிப்படுத்த முடியாது, தன்னால் ஒருபோதும் அப்படியெல்லாம் பாசாங்கு செய்ய முடியாது என்று 20.07.1947 அன்று காந்தி கூறுகிறார்.
ஆக, பெரியார் அளவிற்கு தீவிரமாக வரப்போகும் விடுதலைகுறித்து கோவம் இல்லாதவராக இருந்தபோதிலும் இது மக்களுக்கான விடுதலையாக இருக்கப்போவதில்லை என்பதை உணர்ந்தவராகவும் அதன்பொருட்டு துயறுற்றவராகவுமே இருந்தார்
“உண்மையான சுயார்ஜ்யம் என்பது ஒரு சிலர் அதிகாரம் பெறுவது அல்ல. அதிகாரம் பெற்றவர்கள் தவறு செய்யும்போது அதை எதிர்ப்பதற்கான பலத்தை அனைவரும் பெறுவது” என்பதை வலியுறுத்தி வந்த அவர் விடுதலை நெருங்குகிற காலத்தில் அது அப்படியாக இருக்கப் போவதில்லை என்று உணர்ந்து நொந்துபோனவராகவே இருந்திருக்கிறார்.
சுரண்டவும் செய்வார்கள், சுரண்டுபவர்களின் கால்களில் விழுந்து கிடக்கவும் செய்வார்கள் என்பதை உணர்ந்தவராகவும் துயருற்றவராகவே இருந்திருக்கிறார்.
“இந்தியை சென்னை மாகாணம் மட்டும் ஏற்க மறுக்கிறதே. அதை எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள் என்று 1925 வாக்கில் தம்மிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு “அது, சிறுபான்மையினரின் கொடுங்கோண்மை” என்று பதில் சொன்னவர் காந்தி.
இன்னும் எழுத்துவடிவம் இல்லாத மொழிகள் அழிந்து இந்தி வளம் பெற வேண்டும் என்றுகூட அந்தக் காலகட்டத்தில் ஆசைப்பட்டவர் அவர்.
ஆனால் அந்த சிந்தனை அவரது இறுதிக் காலத்தில் மாறி இருந்தது
வங்கப் பிரிவினை குறித்து அவரிடம் 1947 ஜூலை மாதத்தில் கேட்கப்பட்டபோது
இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் கிழக்கு வங்கம் என்றும் இந்துக்கள் அதிகம் வாழும் மேற்கு வங்கம் என்று பிரிக்கப்பட்டாலும் இரண்டு பகுதிகளிலும் வாழும் இஸ்லாமியரும் இந்துவும் வங்க மொழியைத்தான் பேசுவார்கள். அவர்கள் வங்காளிகள் என்ற பார்வை அவருக்கு வந்திருந்தது
இந்தியர்கள் அனைவரும் மற்ற இந்திய மக்களின் மொழி மற்ரும் பண்பாடு குறித்து அறிந்தவர்களாகவும் மதிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் கோருகிறார்
இந்த காந்தி நம்மிடம் வருவதற்கு காலமாகி இருக்கிறது
தந்தை பெரியாரோ காந்தியிடம் உருவாகிக் கொண்டிருந்த இந்த மாற்றக்கங்களை கவைத்தவராகவே இருந்திருக்கிறார்
அதனால்தான் உறுதியான குரலில் சொன்னார்
“வாழ்ந்த காந்தி வேறு, செத்த காந்தி வேறு
February 21, 2024
அன்பற்று இருத்தல் குற்றம்
”அறம்” என்பது நமது கல்வியின் அடிப்படைக் கூறுகளுள் ஒன்று. மற்ற எந்த பூமியை விடவும் தமிழ் மண் அறத்தின்பால் விருப்பத்தோடு நிற்கக்கூடியது. அதனால்தான்தனது பச்சைக் குழந்தைகளுக்கு எழுதச் சொல்லித்தரும் முன்பே ‘அறம்செய விரும்பு’ என சொல்வதற்கு சொல்லித் தருகிறது
2) அறம் மறுப்பதை செய்யாது நிற்பது
செய்யாமையானும் கெடும்” என்கிறார் வள்ளுவர்
2) எது அறம் என்பதையும் குழந்தைகளுக்கு நாம் தெளிவாக சொல்லிக் கொடுத்தோம் இல்லை
அன்பிலதனை அறம்”
இது அவர்களது மொழியாதிக்கத்தின் மீதான நமது எதிர்வினை
பொதுவாகவே எல்லா மொழிகளும் வாழ்வாங்கு வாழவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் நாம்
இந்தியும் வாழ வேண்டும்சமஸ்கிருதமும் வாழ வேண்டும்என்னதென்றே பெயர் தெரியாத எந்தவொரு மொழியும் சிறந்து வாழவேண்டும் என்பதே நம் ஆசைமொழிகளிடையே பகையை விதைத்துக் கொண்டிருப்பவர்கள் நாமல்லஅதை அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்சமஸ்கிருதத்தை இந்திய ஒன்றியத்தின் ஒற்றை மொழியாக்க படாதபாடு படுகிறார்கள்அதற்கு முன்காப்பாக இந்தியை முன்னெடுக்கிறார்கள்அதற்கான எதிர்வினைதான் ஒன்றியரசின் மொழிக்கொள்கை மீதானது நமது கோவம்மற்றபடி உலகின் எந்தவொரு மொழிமீதும் நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லைஇது அவர்களது மொழியாதிக்கத்தின் மீதான நமது எதிர்வினைஉலகின் எல்லா மொழிபேசும் மனிதர்களுக்குமானது நமது தாய்மொழிநாள் வாழ்த்துஇப்படி முடிக்கிறேன்ஆதிக்கம் எதுவாயினும் எதிர்க்கவே எதிர்ப்போம் என்ற வகையில்எம் மீதான இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பை எதிர்ப்போம்தான்ஆனாலும் அந்த மொழிகளின் மக்களுக்கும் அனைத்து மொழி மக்களுக்கும்எமது தாய்மொழிநாள் வாழ்த்துகள்All reactions[image error]
February 19, 2024
”பே…” எனும் பேரன்புப் பிரவாகம்
“Great thingsare done
when
men and mountains meet”
என்ற ப்ளேக்கின் வரிகளோடு கவிக்கோவின்
“உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன்” என்ற நூலிற்கான தன்னுடைய முன்னுரையைத் தொடங்குவார் சிற்பி
அதையே அச்சுப் பிசகாமல் தோழர் தேனி சுந்தர் அவர்களுடைய இந்தநூலுக்கு செய்துவிட ஆசைப்படுகிறேன்

அதுதான் பொருத்தமும்கூட
மனிதனும் மலைகளும் சந்திக்கும்போது மகத்துவங்கள் நிகழ்கின்றன
மனிதனும் மலைகளும் சந்திக்கும்போது மட்டுமே மகத்துவங்கள் நிகழும்
இன்னும் தெளிவுபட சொல்ல வேண்டும் எனில்,
மனிதனும் மலைகளும் ஒருவரை ஒருவர் சந்திப்பதற்கான பயணப்பட்டு இருவரும் சந்திக்கும் அந்தப் புள்ளியில்தான் மகத்து வம்நிகழும்
இங்கு ஒவ்வொரு முறையும் அதுதான் நிகழ்கிறது
பிள்ளைகளிடம் சுந்தர் வருகிறாரா என்றால்
ஆமாம்,
வருகிறார்தான்
அப்படி மட்டும்தான் எனில் கற்றல் கற்பித்தல் மட்டுமே நிகழ்ந்திருக்கும்
ஆனால்,
இங்குள்ள ஒவ்வொரு கட்டுரையும் மகத்துவத்தின் ஆவணத் தழும்புகளாக உள்ளன.
இதுஎப்படிசாத்தியம்?
சுந்தரும் பிள்ளைகளை நோக்கிப் போகிறார்.
குழந்தைகளும் சுந்தரை நோக்கி வருகிறார்கள்.
இருவரும் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் சந்திப்பிடம் மாண்பால் நிறைகிறது.
பிள்ளைகளும் பயணப்படுகிறார்கள் என்கிறாய்,
சுந்தரும் பயணப்படுகிறார் என்கிறாய்.
சந்திப்பு மட்டும் சரியாய் வகுப்பறையில் நிகழ்கிறதே. அதுஎப்படி?
குழந்தைகள் கிளம்ப எத்தனிக்கும் நேரத்தில் சுந்தர் வந்தடைந்து விடுகிறார்.
அவரது வேகமும் குழந்தைகளைக் காண அவருக்கிருக்கும் தாகமும் அப்படி
மனிதன் யார்?,
மலைகள்யார்?
மலைகள் குழந்தைகள்
அவர்களின் மறுபுறத்தைக் காணவேண்டும் எனில்,
உச்சி ஏறி அந்தப் புறம் இறங்க வேண்டும். அற்புதங்கள் நிறைந்தது மலை,
ஆனால் ஏறுவது சிரமம்.
அதிகாரியின் வருகை குறித்த கட்டுரை,
“சார் ,காலைல வந்தார்ல,
அவர்லாம் நம்ம ஸ்கூலுக்கு ஹெச்.எம்மா வர்றதா இருந்தா முன்னமே சொல்லிருங்கசார். நாங்கல்லாம் வேற ஸ்கூலுக்கு போய்க்கிறோம்”
இதுதான் குழந்தை.
அதுமாதிரி ஒரு முசுடு வந்தால் சுந்தரே இருந்தாலும் குழந்தைகள் இடை நிற்பார்கள்
”பே…” என இவரை குழந்தைகள் பயமுறுத்தும் கட்டுரை இருக்கிறதே. வாசித்துப்பாருங்கள். அப்படி ஒரு அழகான கவிதை
காமராஜ் தாத்தா தனது வீட்டிற்கு வந்து வகைவகையாய் சாப்பிட்டதாக சொல்லும் அம்முவிற்கு என் முத்தம்
பிரியாணி வரைக்கும் போகிறது
நானும் பிள்ளைகளால் வருபட்டவன் என்கிற முறையில் இந்த நூல் அப்படி சுவைக்கிறது எனக்கு
குழந்தைகள் அளவிற்கு குனியத் தெரிகிறது தோழர் சுந்தருக்கு
இது ஒரு தேவையான ஆசிரியக் குணம்
அருகி வருகிற அதிசயமாகி வருகிறது
இந்தநூலை ஆசிரியர்களிடம்,
குறிப்பாகத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களிடம் கொண்டு சேர்ப்போம்
சுந்தர்கள் கிடைப்பார்கள்
February 16, 2024
எழுதும் செயலை எளிதாக்கிய பெரியார்

February 15, 2024
அந்த இரண்டு அப்புறமும் ’வள்ளுவர்’ எழுத மறந்தது
ஏ சாமி தாத்தா சீக்கிரமா கேளுஅப்புறம் மறந்துடும்சொல்லு கிரிஷ்அது வந்துஅகர...முதல...எழுத்தெல்லாம்...அப்புறம்ஆதிபகவன்அப்புறம்முதற்றேஉலகுஅப்புறம்அந்த இரண்டு அப்புறமும் வள்ளுவர் எழுத மறந்தது
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)