இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 33
February 13, 2024
அழைப்பு 036
Published on February 13, 2024 17:54
பள்ளியில இன்னுமொருதரம் படிக்கணுமா?
வழக்கமாக படு சீரியசாக எழுதும் தோழர் அ.மார்க்ஸ்அவர்கள் ஒருமுறை பள்ளிக் கல்வி எப்படிப் பிள்ளைகளுக்கு தண்டனையாக அமைகிறது என்பதைவிளக்குவதற்காக மேற்காணும் சந்திரபாபுவின் பாடலாக பொதுவாக அறியப்படும் பட்டுக்கோட்டையாரின்பாடல் வரியினை மேற்கோள் காட்டியிருப்பார்
இல்லே பைத்தியம்போல் பாடி ஆடி நடிக்கணுமா
துள்ளிவரும் காவேரியில் குதிக்கணுமா
சொல்லு, சோறு தண்ணி வேறுஏதுமில்லாம கெடக்கணுமா”
2) பார்ப்பனர்களை அவமானப்படுத்தி இருக்கிறான்
3) வெட்கங்கெட்ட ஒரு காரியத்தை செய்திருக்கிறான்
காக்கைச் சிறகினிலே ஜனவரி 2024
Published on February 13, 2024 04:20
February 8, 2024
இதுதான் ஊடக அரசியலுக்கான அறம்
இன்றைய இந்தியத் தேர்தல் களம் பெரிதாக இரண்டாகவும் கொஞ்சம் உதிரிகளோடும்தான் தட்டுப்படுகிறது
ஒரு பக்கம் ஒரே சித்தாந்தம்ஒரே தலைவர்யாரும் எதுவும் கேட்கக் கூடாதுகேட்பதில்லைஅவர்களை அச்சமும் சுயநலமும் இப்படியாகக் கட்டிப் போட்டிருக்கிறதுஇன்னொருபக்கம் பல்வேறு கட்சிகள்பல்வேறு கோட்பாடுகள்பல்வேறு சிந்தனைகள்அப்படியான சிந்தனைகளுக்குள்ளும் சன்னமாக முரண்கள்கடந்து ”இந்தியா” என்ற சிந்தனை அவர்களை ஒன்றுபடுத்த முயற்சிக்கிறதுஆனாலும் முரண்களின் உரசல்களில் சில மாச்சரியங்கள்ஊடகங்கள் இதை ஏதோ தோல்விபோல குரல் எழுப்புவது அவர்களுக்கே ஆபத்தானதுஒன்று அந்தப் பக்கம் நில்லுங்கள்அல்லது இந்த முரண்களைக் களைந்து இவர்கள் ஒன்றுபட வேண்டிய அவசியத்தை எழுதுங்கள்இதுதான் ஊடக அரசியலுக்கான அறம்
Published on February 08, 2024 23:54
மூன்று முப்பதாகும்
ஒன்றிய அரசு
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மூன்று வகைகளில் தொல்லை தருவதாக கெஜ்ரிவால் கூறுகிறார்
வரியை ஒட்டக் கறந்துவிட்டு கொடுக்க வேண்டிய நிதியை விடுவிக்காமல் இருப்பது ஒன்று
ஆளுனர்களை விட்டு அடாவடி செய்வது இரண்டு
அமலாக்கதுறையை ஏவுவது என்பது மூன்று
நேற்று ஒன்றிணைந்து ஒன்றிய அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நாம் சொல்ல ஒன்று இருக்கிறது
மாச்சரியங்களை மறந்து இணைந்து நில்லுங்கள்
நீங்கள் எதன்பொருட்டு இரண்டுபட்டாலும் குறித்து வையுங்கள்
நீங்கள் குறிப்பிட்ட மூன்று முப்பதாகும்
x
Published on February 08, 2024 23:39
இந்த அன்பிற்குரிய தோழர்கள் பட்டியல் என்பது என்னையும் சேர்த்துதான்
1929
மீரட் சிறை
மீரட் சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தனித்தனிக் கொட்டடிகளில் அடைக்கப்படுகிறார்கள்
பிரிட்டிஷ் பேரரசரின் ஆட்சியை இந்தியாவில் இருந்து அப்புறப்படுத்த சதி செய்ததாக வழக்கு
இதற்கு அப்போது பெயர் சதி
இப்போது தேசப்பற்று
தேசத்திற்கு உண்மையற்றவர்களின் ஆட்சியில் தேசப்பற்றுக்கு தேசத் துரோகம் அல்லது சதி என்றே எப்போதும் பெயர்
கொட்டடியில் இருந்து வெளியே அழைத்து வரப்படும்போது சந்தித்துக்கொள்ளும் சிறிய சிறிய வாய்ப்புகளில் தோழர்கள் உரையாடிக் கொள்கிறார்கள்
நேரம் குறைவு
சுற்றிக் காவலர்கள்
அப்படியாக ஒரு சந்திப்பில் டாக்டர் அதிகாரியும் தோழர் முசாபரும் சந்தித்துக் கொண்ட அந்தச் சின்ன இடைவெளியில்
கான்பூர் சதிவழக்கில் நீதிமன்றத்தை அரசியல் களமாக தன்னால் மாற்ற முடியாமல் போனதற்காக வருந்திய தோழர் முசாபர்
மீரட் வழக்கில் நீதிமன்றத்தை பிரச்சாரக் களமாக மாற்ரினால் என்ன எனக் கேட்க
தோழர் அதிகாரி சரி என்று சொல்ல
அதற்கான திட்டங்கள் தீட்டப்படுகின்றன
நீதிமன்றத்தில் ஒவ்வொரு நாளும் தனித்தனி வாக்குமூலங்கள் கொடுப்பது
பொதுவான வாக்குமூலங்கள் கொடுப்பது
முன்கூட்டியே கற்பது என
வாய்த்த சின்னச் சின்ன சந்திப்புகளில் தோழர்கள் முடிவெடுக்கிறார்கள்
செய்து காட்டுகிறார்கள்
சிறைகளை,
நீதிமன்றங்களை,
தூக்குமேடைகளை
அரசியல் களமாக்கி இருக்கிறார்கள்
சிறையில் இருக்கிறார்கள்
தனித் தனிக் கொட்டடி
கற்றுக் கொண்டு எதிர்கொள்ள வேண்டும் என்கிறார்கள்
அன்பிற்குரிய தோழர்களே,
இந்த அன்பிற்குரிய தோழர்கள் பட்டியல் என்பது என்னையும் சேர்த்துதான்
சுயபரிசீலனை செய்வோம்
பின் குறிப்பு: கையில்பாரதி புத்தகாலயம் வெளியீடான தோழர் முசாபர் எழுதிய “மீரட் சதிவழக்கு” என்ற குறு நூல்
Published on February 08, 2024 10:35
February 7, 2024
தெளிவாக புரிந்து வைத்திருக்கிற அந்தப் பக்கத்து ஆட்கள்
1953 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஸ்ரீவில்லிபுதூர் அருகில் உள்ள ரெட்டியபட்டி கிராமத்தில் அந்த கிராம சங்கித்தினரால் கட்டப்பட்ட “கஸ்தூரி ஆரம்பப் பாடசாலை”யை குன்றக்குடி அடிகளார் தலைமையில் ஓமாந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் திறந்து வைத்த செய்தியை 15.10.1953 நாளிட்ட ‘விடுதலை’ தருகிறது
அப்போது
சென்னை சர்க்காரின் புதியக் கல்விக் கொள்கை என்னவென்றே பலருக்கும் புரியவில்லை என்றும்
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் சுத்தமாகப் புரியவில்லை என்றும் கூறி இருக்கிறார்
இப்போதும் அப்படித்தான் இருக்கிறது
தெளிவாக புரிந்து வைத்திருக்கிற அந்தப் பக்கத்து ஆட்கள் நமக்குப் புரிந்துவிடாத மாதிரி ஜிகினா வேலைகளை செய்துகொண்டு இருக்கிறார்கள்
சரியாகப் புரிந்துகொள்ளாத சிலர் புரிந்த மாதிரி நம்மைக் குழப்பப் பார்க்கிறார்கள்
நாம் பேசியாக வேண்டும்
2024 மார்ச் “ புதிய ஆசிரியன்” இதழில் ஏதேனும் ஒன்றிரண்டைப் பேசுவோம்
Published on February 07, 2024 20:45
30
குளத்தில் முழுகிச் செத்த
குழந்தையின் படத்தை
பேப்பரில் பார்த்த நொடியில்
என்னோடு
கலியன் கடையில்
தேநீர் குடித்துக்கொண்டிருந்த காலன்
தம்ளரில் மிச்சம் இருந்த தேநீரில் முழுகிச்
செத்துப் போனான்
Published on February 07, 2024 19:54
February 6, 2024
31
வைப்பர்
அழிக்க அழிக்க
எனக்கான கவிதையை
எழுதிக்கொண்டே இருக்கிறது
மழை
Published on February 06, 2024 17:54
February 5, 2024
பழம் விடத் தெரியாதவங்க ஏன் காய் விடறீங்க?
கிரோஷனும் லேஷந்த் சாரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்கிரோஷன் யாரோடோ காய் விட்டுட்டு பழமே விடமாட்டேங்கறான்போலபழம் விடத் தெரியலைனா ஏண்டா காய் விட்டங்கறார் லேஷந்த்நியாயம்தான,பழம் விடத் தெரியாதவங்க ஏன் காய் விடறீங்க?
Published on February 05, 2024 03:06
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)