சாரு நிவேதிதா's Blog, page 117
February 6, 2023
Existential Void
Courtesy: The Indian Express, February 5, 2023 Article by Kirubhakar Purushothaman and expert opinion by Charu Nivedita et al. On January 11, 2023, a 19-year-old Ajith fan named Bharath Kumar climbed on top of a lorry that was moving past the Rohini Cinema Complex in Koyembedu, Chennai. As he was dancing to celebrate the first-day-first-show ... Read more
Published on February 06, 2023 01:48
February 5, 2023
எழுத்துலகில் ஒரு புதிய புரட்சி
இப்போது எழுதப் போகும் விஷயம் பற்றி சுமார் ஐம்பது கட்டுரைகள் எழுதியிருப்பேன். இப்போதும் எழுதுகிறேன். இன்னமும் என் உயிர் உள்ள வரை எழுதுவேன். எனக்குக் கிடைக்கும் ராயல்டி 1,90,000 ரூ. மாதமாக வகுத்தால் 16000. தெருவில் இஸ்திரி போடும் தொழிலாளியின் ஊதியம் 25000. அதை விட என் ஊதியம் கம்மி. என் புதிய நாவல் வெளிவந்தால் ஐந்து நாளில் 500 பிரதி விற்கும் ஒரு எழுத்தாளனின் வருமானம் இப்படி என்றால், மற்றவர்களின் நிலையை நான் எழுத வேண்டியதில்லை. ... Read more
Published on February 05, 2023 03:14
February 4, 2023
ஒரே பண்பாடு என்று ஒன்று இல்லை: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி
ஒரே பண்பாடு என்று ஒன்று இல்லை: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி https://www.arunchol.com/charu-nivedh...
Published on February 04, 2023 19:42
நரகத்தின் வாசலில் நின்று…
டியர் சாரு, இன்றும் கூட மனம் மிகுந்த சஞ்சலத்தோடு இருந்தது. பல குரல்கள் என் மூளையில் கேட்டுக்கொண்டே இருந்தன. உடம்பு பூராவும் பயத்தினால் ஆட்பட்டு அந்த பயம் பரவிக் கொண்டே இருந்தது. எனது அன்றாட அலுவலக, வீட்டு வேலையை செய்ய பயமாக இருந்தது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை. வாழ்க்கை ஒரு சூன்யம் என்பது போல் பயத்தை ஏற்படுத்தியது. எப்போது இவ்வாறு நடந்தாலும் உங்கள் புத்தகத்தில் ஏதாவது ஒன்றை எடுத்து முதலில் இருந்து வாசிக்க ... Read more
Published on February 04, 2023 08:30
February 3, 2023
நிரந்தரமாக ஒத்தி வைக்கப்படும் இறுதித் தீர்ப்பு: அன்பு நாவல் குறித்து சக்திவேல்
hஅன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு நாவலைப் பற்றிய சக்திவேலின் மதிப்புரை மயிர் சிற்றிதழில் வெளிவந்துள்ளது. இனி வரும் காலத்தில் சக்திவேல் முக்கியமான எழுத்தாளராக வருவார் என்று முன்னறிவிக்கிறேன். என் முன்னறிவிப்புகள் ஒருபோதும் தவறியதில்லை. நாவலைப் பாராட்டி விட்டார் என்பதற்காக அல்ல; மதிப்புரையில் ஒரு parable வருகிறது. இது போன்ற குட்டி நீதிக்கதைகளை ஃப்ரெஞ்சில் சியோரன் எழுதுவார். சக்திவேல் அந்தக் கதையைத் தனியாகவே எழுதியிருக்கலாம். எழுதியிருந்தால் அது அவரது புனைவு எழுத்தில் வரவு வைக்கப்பட்டிருக்கும். என்னைப் போலவே ... Read more
Published on February 03, 2023 22:15
அன்பின் ஒளி…
இன்று என் நண்பர் ஒருவர் ஃபோனில் அழைத்தார். அவர் பற்றிய எந்தக் குறிப்பைக் கொடுத்தாலும் அவர் யார் எனக் கண்டு பிடித்து விடுவீர்கள். அதனால் கொஞ்ச நாளைக்கு அப்படியே விடுகிறேன். அன்பு நாவல் பாதி வந்திருக்கிறேன் என்று சொல்லி விட்டு அது பற்றி நிறைய பேசினார். அதையெல்லாம் பதிவு செய்து வெளியிட்டாலே நாவலுக்கு நல்ல மதிப்புரையாக இருக்குமே என நினைத்தேன். இதையெல்லாம் எழுதுங்களேன் என்று லஜ்ஜையின்றி குறிப்பிட்டேன். நிச்சயம் என்றார். இந்த ஒட்டு மொத்த உரையாடலிலும் அவர் ... Read more
Published on February 03, 2023 02:29
அன்பு: பிரபு கங்காதரன்
“அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில் புகும் அரசே அன்பெனும் வலைக்குட்படு பரம் பொருளே….” என இறைவனை விளிக்கிறார் வள்ளல் பெருமான். அன்பு உயிர்களை இன்புற்றிருக்க செய்யவேண்டுமேயன்றி அது தீராத துன்பத்தில் தள்ளிவிடலாகாது என்பதே இப்புதினத்தின் நோக்கமாக கருதுகிறேன். அன்பாயிலும் அளவிற்கு மிஞ்சினால் நஞ்சுதான். நிற்க. என் சொந்தக்கார பெண் ஒருவர் உண்டு, ஊர் பயணம் வந்தாலும் என் பிள்ளைகளுக்கு நான் ஊற்றுகிற தோசைதான் பிடிக்கும், என் கணவருக்கு நான் வைக்கும் மீன் குழம்புதான் பிடிக்குமென்று ... Read more
Published on February 03, 2023 02:23
அன்பு: ஆயிரம் சுடர் கொண்டு ஒளி விடும் நாவல்
அன்புள்ள சாரு, அன்பே வடிவான இயேசு பிரானை கடவுளாக வரித்த ஒரு வைகிங் ராஜா அந்த அன்பினாலேயே இயேசு சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டி மற்ற பேகன் வழிபாட்டாளர்களைக் கொன்று குவிக்கும் வல்ஹலா எனும் தொடரை Netflix இல்சமீபத்தில் பார்த்தேன். ரத்தம், நிணம், நெருப்பு, பேரழிவு, பல நூற்றாண்டுகளான கலாச்சாரத்தின் முழுமையான அழித்தொழிப்பு எல்லாமே அன்பே வடிவான ராச்சியத்தை உருவாக்க!அந்த ராஜாவிற்கு அன்பின்மேல் இருக்கும் அதிதீவிர அர்ப்பணிப்பு, செய்யும்அழிவுகளை அவனுக்கு மிகச்சுலபமாக நியாயப்படுத்திவிடுகிறது. ”எல்லாம் உங்கள் நன்மைக்குத்தான்” இதைப் ... Read more
Published on February 03, 2023 02:11
February 2, 2023
ஆரோவில் சிறுகதைப் பட்டறை
இப்போது நான் 2020இல் ஆறு மாதங்களில் எழுதிய பூச்சி பதிவுகளைத் தொகுத்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் நான்கு தொகுதிகள். ஆயிரம் பக்கங்களுக்கு மேல். இப்போதுதான் இரண்டாம் தொகுதியை முடித்தேன். இன்னும் இரண்டு தொகுதிகள். அதனால்தான் ஆரோவில் பட்டறை பற்றி எழுதவில்லை. சுமார் முப்பது பேர் வந்திருந்தார்கள். எல்லோரும் புதுமுகம். ஒரு நாள் முழுவதும் இருந்து விவாதித்தார்கள். எல்லோருமே மூன்று கதைகளையும் படித்து விட்டு வந்திருந்தார்கள். குடி, கொண்டாட்டம், டான்ஸ் என்று போட்ட போது நூறு பேர். இப்போது மதியம் ... Read more
Published on February 02, 2023 02:51
முராகாமியும் அடியேனும்…
பின்வரும் கடிதம் 2020 மே இறுதி வாரத்தில் எனக்கு வந்தது. இணைய தளத்திலும் வெளியிட்டேன். நீண்டதொரு பதிலும் எழுதினேன். கார்த்திக் என்ற வாசக நண்பர் எழுதியிருக்கிறார். திருமணமானவர் என்பதால் என் வாசகர் வட்டத்தில் உள்ள கார்த்திக் இல்லை என்று தெரிகிறது. இந்தக் கடிதத்தை எழுதிய கார்த்திக் என்னைத் தொடர்பு கொள்ளவும். என் மின்னஞ்சல் முகவரி charu.nivedita.india@gmail.com கார்த்திக்கின் கடிதம்: அன்புள்ள சாரு அப்பாவிற்கு, என் கண்களில் கண்ணீருடன் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம் இதுதான். நான் உங்களை ... Read more
Published on February 02, 2023 01:40
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

