Jeyamohan's Blog, page 118

May 3, 2025

மகரிஷி

[image error]பி.வி.ஆரின் நேரடித் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டப்படவேண்டியவர் மகரிஷி. எழுபது எண்பதுகளில் முக்கியமான பொதுவாசிப்பு எழுத்தாளராக திகழ்ந்தவர். அவருடைய ‘பனிமலை’ ‘வட்டத்திற்குள் ஒரு சதுரம்’ ‘நதியைத்தேடிவந்த கடல்’ ஆகியவை குறிப்பிடத்தக்க ஆக்கங்கள். ‘நதியைத் தேடிவந்த கடல்’, ‘வட்டத்திற்குள் ஒரு சதுரம்’ என்னும் இரு ஆக்கங்களும் இலக்கியத் தகுதி கொண்டவை.மகரிஷியின் ஒரு சில ஆக்கங்கள் இன்றைய வாசகனுக்கும் உரியவை. அவை தமிழ்ச்சூழலில் ஒழுக்கவியலில் ஒர் அடிப்படை மாற்றம் நிகழ்ந்த காலகட்டத்தின் உளவியல்சிக்கல்களை, உணர்ச்சி மோதல்களை காட்டுபவை

மகரிஷி மகரிஷி மகரிஷி – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 03, 2025 11:34

மகரிஷி

[image error]பி.வி.ஆரின் நேரடித் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டப்படவேண்டியவர் மகரிஷி. எழுபது எண்பதுகளில் முக்கியமான பொதுவாசிப்பு எழுத்தாளராக திகழ்ந்தவர். அவருடைய ‘பனிமலை’ ‘வட்டத்திற்குள் ஒரு சதுரம்’ ‘நதியைத்தேடிவந்த கடல்’ ஆகியவை குறிப்பிடத்தக்க ஆக்கங்கள். ‘நதியைத் தேடிவந்த கடல்’, ‘வட்டத்திற்குள் ஒரு சதுரம்’ என்னும் இரு ஆக்கங்களும் இலக்கியத் தகுதி கொண்டவை.மகரிஷியின் ஒரு சில ஆக்கங்கள் இன்றைய வாசகனுக்கும் உரியவை. அவை தமிழ்ச்சூழலில் ஒழுக்கவியலில் ஒர் அடிப்படை மாற்றம் நிகழ்ந்த காலகட்டத்தின் உளவியல்சிக்கல்களை, உணர்ச்சி மோதல்களை காட்டுபவை

மகரிஷி மகரிஷி மகரிஷி – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 03, 2025 11:34

காவியம் – 13

அடையாளம் தெரியாத சிலை, மாக்கல்செதுக்கு,  சாதவாகனர் காலம் பொமு1 -பைத்தான் அருங்காட்சியகம்

ஒரு முழுநாள், ஓர் இரவும் ஒரு பகலும் நீடித்த ஒரு புயல். மறுநாள் மாலையில் பைத்தானிலிருந்து பனாரஸ் திரும்பும்போது நான் அகத்தில் பெரும் பதைப்பு ஒன்றுடன் இருந்தேன். பஸ்ஸில் ரயிலில் அமரவும் படுக்கவும் முடியாமல் நிலையழிந்து தவித்தேன். ரயிலில் முழு இரவும் கதவுக்கு அருகே காற்று முகத்தில் அறைய நின்றுகொண்டே இருந்தேன். சிறுநீர் முட்டுவதுபோல இருந்தது, கழிப்பறையில் சிறுநீர் உள்ளே சிக்கிக்கொண்டதுபோல தவித்தது. அரிய எதையோ மறந்துவிட்டு நினைவுகூர்வதுபோல, எதையோ சட்டென்று அஞ்சுவதுபோல உள்ளம் அவ்வப்போது திடுக்கிட்டுக் கொண்டிருந்தது. அந்த ஒருநாள் எந்த வகையிலும் புரிந்துகொள்ள முடியாத ஒரு நிகழ்வு. என் தர்க்கங்கள் அனைத்தையும் நொறுக்கிய ஒரு நாள்.

ஒவ்வொருவரும் அவரவருக்கான தர்க்க அமைப்பு ஒன்றை கொண்டிருக்கிறார்கள். இளமையில் இருந்து அவர்கள் அடைந்த எல்லா அனுபவங்களையும் அந்த தர்க்கச்சரடில் கோத்துக்கொண்டே இருக்கிறார்கள். அது ஒரு பெரிய கட்டுமானமாகவே அவர்களுக்குள் உள்ளது. ஒன்றோடொன்று இணைந்திருப்பதுதான் அதன் வலிமையை உருவாக்குகிறது. அதைத்தான் அவர்கள் அறிவு என்றும் நினைவுத்தொகுப்பு என்றும் உள்ளம் என்றும் சொல்லிக்கொள்கின்றனர். அதுவே ஒருவரின் அடையாளம், தனித்தன்மை. அவருடைய உடல் பருவடிவ இருப்பு என்றால் அதுதான் நுண்வடிவ இருப்பு. உண்மையில் மனிதர்கள் என்பதே அந்த தர்க்கக் கட்டுமானம்தான்.  நாம் ஒருவரை விரும்புவதும், வெறுப்பதும், மதிப்பதும், மதிப்பிடுவதும் அதைக்கொண்டுதான்.

அந்த கட்டுமானத்தின் எல்லைக்கு அப்பாலிருக்கும் அனுபவங்களும் அடிக்கடி நிகழ்கின்றன. அந்த தர்க்கக் கட்டுமானத்தை எல்லையை உடைத்து, இளகவைத்து, கொஞ்சம் நீட்டிக்கொண்டால் அவற்றையும் உள்ளிழுத்து விட முடிகிறது. உள்ளிழுப்பது வரை ஒரு கொந்தளிப்பும் போராட்டமும் நிகழ்கிறது. உள்ளிழுத்துக் கொண்டதும் நிறைவும் தன்னம்பிக்கையும் உருவாகிறது. புதிய ஒன்றை நோக்கி முன்னகர்ந்தமையாலேயே அந்த அனுபவம் நமக்கு ஒருவகையில் இனியதாக ஆகிவிடுகிறது. பெரும்பாலானவர்கள் திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டிருப்பது அவர்களின் தர்க்கம் நெகிழ்ந்து, விரிந்து, மீண்டும் உறுதிப்பட்ட அந்த அனுபவங்களைப் பற்றித்தான். அவர்கள் கூறும் வரிகள் அந்த உறுதிப்பட்ட தர்க்கத்தை வெளிப்படுத்துபவை.

அன்று நான் முற்றத்திலேயே நின்றிருந்தேன். என் தொடை மட்டும் துள்ளிக்கொண்டே இருந்தது. கடும் தாகம் எடுத்து உடலெங்கும் அது தவித்தது. சட்டென்று மின்சாரம் வந்தது. நான் படிகளில் ஏறி காற்றில் பாதிமூடியிருந்த கதவை மெல்ல திறந்து மீண்டும் வீட்டுக்குள் நுழைந்தேன். அங்கே என் அம்மாவைப் பார்த்தேன், சுவர் மூலையில் விரித்திட்ட கூந்தலுடன் அமர்ந்திருந்தாள். ஆனால் அவளை நான் அவளாகப் பார்ப்பதற்கு அரைக்கணம் முன் அங்கே ஓர் இருளுருவம் அமர்ந்திருப்பதைக் கண்டேன். நீண்ட சடைக்கற்றைகள் விரிந்து வேர்கள் போல தரையில் பரவியிருக்க, நிர்வாணமான கரிய மயிரடர்ந்த உடலுடன் ஆணா பெண்ணா என்று அறியமுடியாத ஓர் உருவம். மின்னிய இரு கண்கள்.

நான் திடுக்கிட்டு ஓரடி பின்னால் வைத்து கதவில் முட்டிக்கொள்ள, கதவு ஓசையுடன் சுவரில் அறைய, அம்மா திகைத்தவள் போல எழுந்து என்னைப் பார்த்தாள். சிவந்து வெறித்த கண்களால் என்னை அடையாளம் காணமுடியவில்லை. கையை நீட்டி உரத்த குரலில் ஏதோ கூவினாள். அதே அறியாத பேய்மொழி. அதே முரட்டுக் கொடுங்குரல். அவள் வாயிலிருந்து சொற்கள் தெறித்தன. கையை நீட்டியபடி என்னை நோக்கி அவள் வந்தபோது நான் நடுங்கி பின்னடைந்து கதவில் ஒட்டிக்கொண்டேன். அம்மா ஆவேசமான கூச்சலுடன் என்னருகே வந்து ஓங்கி அக்கதவில் அறைந்தாள். அவளுடைய வெறித்துக் கலங்கிய கண்கள் என் முகத்தருகே வந்தன. அவள் தொண்டை நரம்புகள் இறுகி நார்நாராகப் புடைத்திருந்தன.

அத்தனை அருகே அவள் பேசியபோது அவள் உதடுகள் அசையாமல், நேரடியாகவே தொண்டையிலிருந்து அந்தக் குரல் வெளிவந்ததைக் கண்டேன். ஒன்றின்மேல் ஒன்று ஏறிக்கொண்ட சொற்களின் ஒழுக்கு. அவள் பேசுவதுபோலத் தெரியவில்லை, ஏதோ செய்யுளை ஒப்பிப்பதுபோல் இருந்தது. நன்கு மனப்பாடம் செய்த தொன்மையான நூல் ஒன்றின் பகுதி போல. அசைவற்று நான் நிற்க மீண்டும் கதவில் ஓங்கியறைந்தபடி அவள் சுழன்று திரும்பி அறைக்குள் சுற்றிவந்தபோது ஒரு சொல் தெறித்து என்னை அதிரச் செய்தது. ராதிகா! அவள் சொன்னாளா, அல்லது என் செவிப்பிரமையா என்று நான் திகைப்பதற்குள் மீண்டும் சொன்னாள், ராதிகா தேஷ்பாண்டே.

அப்படியென்றால் அது மொழிதான், வெறும் சொற்பெருக்கு அல்ல. நாமறியாத ஏதோ மொழி. மெல்ல உள்ளே சென்று என் அறைக்கதவைத் திறந்து நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டேன். வெளியே அம்மா கொந்தளித்துக் கொண்டிருந்தாள். என் அறைக்கதவின் மேல் அறைந்து அறைந்து கூச்சலிட்டாள். அந்த மொழியைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அது ஒரு மொழியேதானா? மொழி போலவே அது ஒலித்தது. அல்லது மானுட உதடுகளால் எழுப்பப்படும் எல்லா ஒலிகளையும் நாம்தான் மொழியாக எண்ணிக்கொள்கிறோமா? பிற உயிர்களின் எல்லா குரல்களையும் வெறும் ஓசைகள் என்று எண்ணுவதுபோல?

பனாரஸ் பல்கலையில் நான் ஏராளமான மொழிகளைக் கேட்டிருந்தேன். அங்கே இந்தியமொழிகளில் முதன்மையானவை அனைத்தையும் பயில வாய்ப்பிருந்தது. மானுட மொழிகள் பல்வேறு பேரமைப்புகளைச் சேர்ந்தவை. மொழிக்குழுக்கள் என அவற்றைப் பிரிப்பது முந்நூறாண்டுகளுக்கு முன்பு ஐரோப்பியர் உருவாக்கிய பார்வை. அது மொழிகளைப் புரிந்துகொள்ள மிகப்பெரிய கருவி. எல்லா மொழிகளும் அவற்றுக்கு முந்தைய தொல்மொழிகளில் இருந்து உருவானவை. அந்த தொல்மொழி கற்காலத்து மனிதர்களில் ஒரு குழுவினருக்குரிய சொற்கோவையாக இருந்திருக்கும். அந்த தொல்மொழி பல முளைகளாக எழுந்து பல கிளைகளாகப் பெருகியிருக்கும். மொழிகளில் கொஞ்சம் செவி பழகியவர்களால் ஒரு மொழி எந்த மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது என்று சொல்லிவிடமுடியும்.

இந்திய மொழிக்குடும்பங்களில் இந்தோ ஆரியமொழி அல்லது சம்ஸ்கிருதம், திராவிட மொழி அல்லது தென்னிந்திய மொழி இரண்டும் மிகத்தெரிந்த பெரிய மொழிக்குடும்பங்கள். அந்த மொழிகளில் இருந்து கிளைத்த எந்த மொழியையும் கொஞ்சம் சுற்றியலையும் இந்தியச் செவி கண்டுபிடித்துவிட முடியும். அவற்றில் சில மொழிகள் பாரசீகமும் அரபும் கலந்து உருவானவை. சில மொழிகள் கீழைமொழிகளின் கலப்பால் உருவானவை. ஒரு மொழிக்குடும்பத்திற்கு அதற்கே உரிய நாக்கை மடிக்கும் முறை, உதடுகளை குவித்து நீட்டும் முறை, மூச்சொலியை இணைக்கும் முறை, மூக்கிலிருந்தோ நெஞ்சிலிருந்தோ ஒலியை எடுக்கும் முறை என பல தனித்தன்மைகள் உண்டு.

பழங்குடிகளின் மொழிகள்தான் சிறியவை, ஆகவே அடையாளம் காணக் கடினமானவை. அவை வளர்ச்சியின் ஏதோ ஒரு புள்ளியில் நின்றுவிட்டவை, மிகச்சிறிய குழுவினரால் பேசப்படுபவை. வடகிழக்குப் பழங்குடியினர் இருநூற்று இருபது மொழிகளைப் பேசுகிறார்கள் என்று படித்திருக்கிறேன். சீனமொழிச்சாயல் கொண்ட சினோ-திபெத்திய மொழி, தாய்லாந்தின் வேர்கொண்ட க்ரா-தாய் என பலமொழிகள். அவற்றின் கலவையாக உருவாகி வந்த பிற்கால மொழிகள். இந்திய மையநிலத்தின் பழங்குடிகளின் முண்டா மொழிக்குடும்பமும் பெரியது. அதில் வியட்நாமிய மொழியின் சாயல்கூட உண்டு எனப்படுகிறது. தென்னிந்தியப் பழங்குடி மொழிகளில் ஊட்டியின் தோடர் மொழியில் எகிப்திய மொழியின் சாயல் உண்டு என்று படித்திருக்கிறேன். ஆக்டோவியா பாஸ் ஒரு கவிதையில் அதை வியந்து சொல்லியிருக்கிறார்.

ஆனால் எந்த மொழியையும் ஏதேனும் ஒரு மொழிக்குடும்பத்திற்குள் சேர்க்க முடியும். ஒரு மொழியைக் கேட்டதுமே இன்னொரு மொழி ஒன்று நினைவுக்கு வரும். வெறும் ஒலியாலேயே, உள்ளார்ந்த மெட்டினாலேயே. அதுதான் அந்த மொழிக்குடும்பத்தை உணர்வதற்கான வழி. ஆனால் அம்மாவிடமிருந்து கொட்டிக்கொண்டிருந்த மொழி எந்த மொழியின் நினைவையும் தொடவில்லை. அதை மொழி என ஓர் உள்ளம் உணரும்போதே இன்னொரு உள்ளம் அது வெறும் விலங்கொலிதான் என்றும் எண்ணிக்கொண்டிருந்தது.

அவை விலங்கொலிகள் அல்ல, ஐயமே இல்லை. சொற்கள் அர்த்தத்தால் கோக்கப்பட்டால்தான் அவை மொழி எனத் தோன்றும் இந்த ஒருமை உருவாகும். இது உணர்ச்சியினால் உருவாகும் ஒருமை அல்ல. குரல் உருவாக்கும் ஒருமையும் அல்ல. அர்த்தம் உருவாக்கும் ஒருமைதான். ஆனால் ஹிஸ்டீரியா நோயாளிகள் அப்படி புதுமொழி பேசுவதுண்டு. சில கிறிஸ்தவ மதக்குழுக்களில் அறியாதமொழி பேசுவதென்பது ஆவியிறங்குவதன் அடையாளமாக, தெய்வ அருளாக, அந்த ஆத்மா தன் எல்லையைக் கடந்து வேறொன்றை அறிந்துவிட்டது என்பதற்கான சான்றாகக் கொள்ளப்படுவதுண்டு. அந்தப் பேச்சுக்களை நான் கேட்டிருக்கிறேன். அவை நாமறிந்த சொற்களின் தாறுமாறான கலவையாகவே பெரும்பாலும் இருக்கும். அரிதாக அவை ஒரு சொல்கூட இல்லாத வெறும் ஒலிகளாக இருக்கும். அப்போதுகூட அவை நாமறிந்த மொழிகளின் சொற்களின் சிதைவொலிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டவையாக இருக்கும். அவற்றின் நாப்புரளலும், உதடிணைவும் நாம் அறிந்தவையாக இருக்கும்.

இது ஹிஸ்டீரியாவாக இருக்கலாம். என் குடும்பத்தில் மனசிக்கல் இருந்துகொண்டே இருந்திருக்கிறது. என் அம்மாவின் பாட்டிக்கு பைத்தியம் பிடித்து நாற்பதாண்டுகள் சங்கிலியில் பிணைக்கப்பட்டு வாழ்ந்தாள் என்று தெரியும். உளப்பிளவின் விதைகள் பாரம்பரியமாகவே மூளையில் விதைக்கப்பட்டிருக்கின்றன என்று படித்திருக்கிறேன். உரிய பொழுதில் அவை முளைக்கின்றன. எவரிடம் எப்போது அவை எழும் என்று சொல்லிவிடமுடியாது. என் மூளையிலும் அந்த விதை இருக்கலாம். என் அம்மா தன் பாட்டியையே நினைத்துக்கொண்டு இருந்திருக்கிறாள். அவள் அப்பாவும் அம்மாவும் இறந்துவிட்டனர். அவர்கள் இருந்த நிலமே இப்போது இல்லை. ஒரு பைத்தியத்தால் தீவைத்து கொளுத்தப்பட்டு அந்த ஊர் மறைந்துவிட்டது. அந்த நிலம் கரும்புவயலாக உருவெடுத்துவிட்டது. இப்போது பாட்டியின் நினைவு எஞ்சியிருப்பது அவளிடம் மட்டுமே. அந்நினைவுதான் வேறெங்கு போகும்?

என் உடம்பு விதிர்த்துவிட்டது. நினைவா அல்லது பேயேதானா? பேயா? அபத்தம். இந்த அறிவியல் நூற்றாண்டில், நவீனக் கல்வி கற்ற ஒருவன் அப்படி எண்ணிப் பார்ப்பதுகூட அசட்டுத்தனம். அது ஹிஸ்டீரியாதான். அம்மா திருமணமாகி இங்கே வந்து எனக்கு பாலூட்டிக்கொண்டிருந்த வயதில் அவளுக்கு முதல் ஹிஸ்டீரியா தாக்குதல் வந்திருக்கிறது. நான் அப்போது இரண்டு வயதுக் குழந்தை. என்னால் சரியாக நடக்கமுடியாது. என் கால்கள் சற்று மெலிந்து வளைந்திருந்தன. அம்மா என்னை எப்போதும் தூக்கிக்கொண்டே அலைந்தாள். ஆகவே நான் அப்போதும் அவள் முலைப்பால் குடித்துவந்தேன்.

அவளுடைய முதல் ஹிஸ்டீரியாத் தாக்குதலை சிலநாட்களுக்குப் பிறகுதான் அப்பா அறிந்தார். அம்மா தனிமையில் அமர்ந்து தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தாள். கண்ணீர் வழிந்துகொண்டே இருக்க கைகளை முஷ்டி பிடித்தபடியும், பற்களை நொறுநொறுவென கடித்தபடியும் இருந்தாள். ஆனால் வீட்டுவேலைகளை எல்லாம் செய்தாள், என்னை நன்றாகப் பார்த்துக்கொண்டாள். அவளுக்குள் நிழல்கள் புகுந்துவிட்டன என்று பக்கத்து வீட்டுக் கிழவிகள் சொன்னார்கள். அப்பாவின் அம்மா ஆற்றின் மறுகரையில் இருந்து ஒரு பூசாரியை வரவழைத்தாள். ‘பூசாரியாவது மண்ணாங்கட்டியாவது. அடித்து மண்டையைப் பிளந்துவிடுவேன்’ என்று அப்பா அவரை அடிக்கப்போனார். அவர் ‘பேய் இவனையும் பிடித்துவிட்டது’ என்று கூவிக்கொண்டு பாட்டி கொடுத்த கோழியுடன் ஓடிப்போனார்.

அப்பா அம்மாவை பைத்தானின் புகழ்பெற்ற ஆங்கிலோ இந்திய டாக்டரான மார்ட்டின் சார்ல்ஸிடம் காட்டினார். எனக்குப் பால் கொடுப்பதுதான் காரணம் என்று அவர் சொன்னார். வளர்ந்த குழந்தை அவள் உடலின் உப்புகளை முழுக்க உறிஞ்சிவிடுகிறது. அதை நிறுத்தும்படியும் அவள் உடலில் குறைந்துவிட்ட ரசாயனங்கள் சிலவற்றை ஈடுசெய்ய மாத்திரைகள் சாப்பிடும்படியும் அவர் பரிந்துரைத்தார். ஒருவாரத்திலேயே அம்மா சரியாகிவிட்டாள்.அப்பா மீண்டும் பூசாரி வீட்டுக்கு வந்தால் தன் அம்மாவின் மண்டையை பிளந்துவிடுவேன் என மிரட்டியபின் திரும்ப ராணுவத்திற்குச் சென்றார்.

நான் நாலைந்து நாள் கதறி அழுது, புரண்டு கைகால்களை அடித்துக்கொண்டு அடம் பிடித்தேன். “பட்டினி கிடக்கட்டும்… பட்டினியால்தான் உணவின் சுவை தெரியும்’ என்று அப்பா சொல்லியிருந்தார். நான் இரண்டு நாள் பசும்பாலைத் துப்பிக்கொண்டிருந்தேன். பிறகு பால் குடிக்க தொடங்கினேன். பதினைந்தே நாளில் சுவரைப் பிடித்துக்கொண்டு நடக்கவும் தொடங்கிவிட்டேன். ஆனால் நான் ஓடிவிளையாட மேலும் ஓராண்டு ஆகியது. என்னை பள்ளிக்கூடத்திற்கு சேர்த்ததே ஓராண்டு பிந்தித்தான்.

அப்பா மறைந்தபின் மீண்டும் ஒருமுறை அம்மாவுக்கு ஹிஸ்டீரியா தாக்குதல் வந்திருக்கிறது. நான் அப்பா மறைந்தபின் நிகழ்ந்த சட்டச்சிக்கல்களில் அலைந்து கொண்டிருந்தமையால் அதைக் கவனிக்கவில்லை. அவளே சீரடைந்தாள். இது மீண்டும் மூன்றாம் முறையாக. இந்த வீட்டில் அவள் தன்னந்தனியாக இருந்திருக்கிறாள். அவளுக்கு இங்கே நட்பென்றும் நெருக்கமென்றும் எவருமில்லை. அவளுடைய விலக்கத்தை நான் எனக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டிருக்கிறேன். தனிமையில் அவளுக்குள் நினைவுகள் எழுந்திருக்கலாம். மூளையின் நோய்விதைகள் முளைத்திருக்கலாம்.

மூளைநோய்கள் முழுமையாக விட்டகல்வதே இல்லை. தலைமுறைகள் தோறும் தொடர்கின்றன அவை. ஒருவரிடமிருந்து ஒருவருக்கு அவை தொற்றவும் கூடும்.  ஏனென்றால் நாம் ஒருவரை கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தால் அவரை நகலெடுக்கத் தொடங்குகிறோம், நம்மையறியாமலேயே அவர் நம்மில் படிகிறார். நாம் அவராகவே ஆகிவிடுகிறோம். பல குடும்பங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பைத்தியங்களாக இருக்கிறார்கள். பைத்தியங்களை பராமரிப்பவர்கள் பைத்தியங்கள் ஆகிவிடுகிறார்கள். தானாகவே பேசிக்கொள்ளும் முதியவர்களுடன் இருப்பவர்கள் தாங்களும் தனக்குத்தானே பேசிக்கொள்வதைக் கண்டிருக்கிறேன்.

மனப்பிளவுநோய் கொண்டவர்கள் ஒரு படி தீவிரமானவர்கள். அவர்களுக்கு கட்டுப்படுத்தும் தர்க்கம் இல்லை. ஆகவே அவர்களின் ஆழ்மனம் மிக ஆற்றல்மிக்கது. புயல்போல, காட்டாறுபோல. அது நம் தர்க்கங்களை உடைத்துவிடுகிறது. நம் ஆழ்மனதை ஆக்ரமித்துக் கொள்கிறது. உண்மையில் ஒருவரின் தர்க்கம் இன்னொருவரை ஆட்கொள்ளுவதே இல்லை. ஆழ்மனம்தான் இன்னொரு மனத்துடன் தொடர்புகொள்கிறது. இலக்கியங்கள் வழியாக, கலைகள் வழியாகவும் நிகழ்வது அதுவே.

பித்துநிலையில் சாமியாடும் ஒருவரின் சொற்களை நாம் மறப்பதே இல்லை. அவரிடமிருந்து நம் விழிகளும் செவிகளும் விலகுவதுமில்லை. அவருடைய சொற்களும் பார்வையும் நேரடியாக நம் ஆழத்திற்குச் சென்றுவிடுகின்றன. நம் கனவில் கலந்துவிடுகின்றன. நாமே கண்ட கனவுபோல ஆகிவிடுகின்றன. ஆழ்மனம் மட்டுமே நேரடியாக உக்கிரமாக வெளிப்படும் பைத்தியங்கள் நம் மனதின் எல்லாச் சுவர்களையும் உடைத்துக்கரைத்து நம்மை முழுமையாக எடுத்துக்கொள்கின்றன. பெருவெள்ளம் கிணறுகளை எடுத்துக்கொள்வதுபோல.

ஆனால் நான் அந்த அறைமூலையில் அவளைப் பார்ப்பதற்கு முன் ஒரு கணத்தின் ஒரு துளியில் இன்னொன்றைக் கண்டேன். நானே என் கண்களால். அது என்ன? அல்லது எனக்கும் அந்த மனப்பிளவின் விதை முளைவிட தொடங்கிவிட்டதா? நான் அவ்வெண்ணத்தை முதுகில் ஓர் அறை விழுந்தது போல உணர்ந்து எழுந்தமர்ந்தேன். அந்த எண்ணத்தை ஒரு கணம்கூட எனக்குள் வைத்திருக்கக் கூடாது என்று எண்ணுபவன் போலத் துரத்தினேன். அதை உதறும் பொருட்டு அறைக்குள் நடமாடினேன். அது என் தோளிலும் முதுகிலும் எடையுடன் தொற்றிக்கொண்டு சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தது. அதை விரட்டுவதற்கென்றே கதவை விரியத்திறந்து வெளிவந்தேன்.

அம்மா கைகளை வீசியபடி, நெஞ்சிலும் சுவர்களிலும் அறைந்தபடி, அதேபோல ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தாள். “ஏய், வாயைமூடு!” என்று கூவினேன். “வாயை மூடு… வாயை மூடுடீ… நிறுத்து… அடித்து மண்டையைப் பிளந்துவிடுவேன்… நிறுத்துகிறாயா இல்லையா?”

அந்தக் கூச்சலால் என் அகத்தில் இருந்து அந்தச் சிந்தனை அகன்றுவிட்டது. அவள் முன் சென்று நின்று அவள் முகத்தைப் பார்த்து கத்தினேன். ஆனால் சிறிது நேரம் ஓசையிட்டதுமே என் தொண்டை அடைத்து ஓசை கம்மிவிட்டது. ஆனால் இவள் இத்தனை நேரம் இடைவிடாமல் கூவிக்கொண்டிருக்கிறாள்.

“நிறுத்து சனியனே… வெட்டிக் கொன்று போட்டுவிடுவேன். நிறுத்து.” அக்கணம் எனக்குள் ஓர் எண்ணம் எழுந்தது. நான் சற்றுமுன் நினைத்ததுதான் நடக்கிறதா, அவளிடமிருந்து எனக்குத் தொற்றிவிட்டதா? நானும் கூச்சலிடுகிறேனா? இல்லை, நான் உள்ளூர இதை திட்டமிட்டு செய்கிறேன். இதை விலகிநின்று கவனிக்கிறேன். நான் என்னை இழக்கவில்லை. அல்லது, இது தொடக்கமாக இருக்கலாம். அம்மா இப்படி நீண்டநாட்களாக இருந்திருக்கலாம்.

அம்மா என்னை பார்த்துச் சொன்ன வார்த்தைகளில் மீண்டும் அந்தச் சொல் வந்தது, ராதிகா தேஷ்பாண்டே. நான் குளிர்ந்து அசைவற்று நின்றுவிட்டேன். மீண்டும் ஓடிப்போய் என் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டேன். நாற்காலியில் அமர்ந்தபோது என் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

இதை நான் ஏன் எண்ணவில்லை? அம்மாவுக்கு எப்படி அவள் பெயர் தெரிந்தது? நான் இங்கே வந்ததே இல்லை. அம்மாவிடம் ஒரு சொல்கூட பேசியதில்லை. அவள் பெயரை வேறு வகையில் அவளிடம் சொல்ல எவருமில்லை. இது ஹிஸ்டீரியா அல்ல. ஸ்கிஸோஃபிர்னியா அல்ல. இது அதுதான், நிழல்தான். இந்த பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் இருட்டின் ஒரு துளியாகிய நிழல். அதற்கு காலமும் இடமும் இல்லை. ஆகவே அது அறியாத ஏதுமில்லை.

அஞ்சிக்கொண்டே இருக்கமுடியாது, அச்சம் உச்சமடைந்ததும் சட்டென்று நின்றுவிடுகிறது. அச்சம் என்பது பெருகிக்கொண்டே இருந்தாகவேண்டும். நின்றுவிட்டால் குறையத் தொடங்கிவிடுகிறது. நான் இயல்படைந்து கால்களை நீட்டிக்கொண்டேன். நான் இங்கே வரும்போது ராதிகாவை நேரில் சந்தித்ததில்லை. ஆனால் அவளை நான் அறிந்திருக்கலாம். அவள் என் கல்லூரியில்தான் படிக்கிறாள். அவள் பெயர் எனக்குள் எங்கோ பதிந்திருக்கலாம். அதனால்தான் முதல் சந்திப்பிலேயே அத்தனை அணுக்கமானவர்களாக ஆனோம். அவள் பெயரை நான் தூக்கத்தில் உளறியிருக்கலாம். பலமுறை சொல்லியிருக்கலாம்.

ஹிஸ்டீரியா நோயாளிகளின் புறஉள்ளம் பலவீனமானது, ஆகவே அவர்களின் அகம் மிகக்கூர்மையாக விழித்திருக்கிறது. கனவு எந்த புதிய ஒலியையும் தவற விடுவதில்லை. நனவை விட அது எச்சரிக்கையானது. ஹிஸ்டீரியா நோயாளிகள் எங்கோ கேட்ட ஒற்றைச்சொல்லை பற்பல ஆண்டுகளுக்குப்பின் சொல்லியிருக்கிறார்கள். அப்படி கேட்ட சொற்களை இணைத்து முற்றிலும் அவர்கள் அறியாத அயல்மொழியைப் பேசியிருக்கிறார்கள்.

இரவெல்லாம் அந்த ஊசல் என்னை சுழற்றியடித்துக் கொண்டிருந்தது. தர்க்கம் பெருகி அனைத்தையும் விளக்கியது. ஒரு புதுக்கேள்வி எழுந்து ஒட்டுமொத்தமாகச் சிதைத்து வெற்றுக்குவியல்களாக ஆக்கியது. மீண்டும் சிதைவுகளை பொறுக்கி அடுக்கி அடுக்கி தர்க்கத்தைக் கட்டினேன். அந்த உளஅலைவின் களைப்பை தாளமுடியாமல் மூளை அசைவிழந்தபோது மாறிமாறித் தலையை அறைந்துகொண்டேன். எழுந்து நின்று வெறியுடன் கூச்சலிடவேண்டும் போலிருந்தது. அந்தக்கூச்சல் வெளியே கேட்கும் அக்கூச்சலின் தொடர்ச்சியாக ஆகிவிடுமா என்னும் எண்ணத்தால் அக்கணமே குளிந்து உறைந்தேன்.

ஓர் இரவின் நீண்ட வதை. நரகம் என்பது அதுதான். சார்த்ரின் No exit நாடகத்தின் நரகம். காலமில்லை. காலத்தை கடந்து, அதனூடாக எல்லாவற்றையும் கடந்துவிடலாம் என்னும் நம்பிக்கைக்கு இடமில்லை. ஒவ்வொரு கணமும் ஒன்றே நிகழும். மறுகணத்தில் இன்னொன்று நிகழவில்லை என்றால் காலமென்பதே இல்லை. நான் பைத்தியமாக ஆகிவிட்டேனா? எனக்குள் ஓடும் இந்த எண்ணங்களில் எந்த ஒழுங்கும் இல்லை. வெறும் சொற்கள். மொழியே அல்ல, வெறும் சொற்கள். நல்லவேளை, அவை நானறிந்த மொழியின் சொற்கள். நினைத்தால் அவற்றை நான் கோத்து மொழியாக ஆக்கிக்கொள்ள முடியும். என் உள்ளத்தின் களைப்பால்தான் அவற்றை அப்படியே விட்டிருக்கிறேன். ஆனால் அவை என்னை மீறிச் சிதறிச்செல்கின்றன. விரைவிலேயே அவை தங்கள் அர்த்தங்களை இழந்து வெற்று ஒலிகளாக ஆகிவிடும். நானும் வெளியே கூச்சலிட்டுக்கொண்டிருப்பவள் போல் ஆகிவிடுவேன்.

காலைவிடிந்ததும் நான் எழுந்து வெளியே வந்தேன். என் வாய் கசந்தது. கண்கள் வீங்கி, முகத்தின்மேல் களிமண் படிந்து உலர்ந்து இறுகியதுபோலிருந்தது. அம்மா அதே வெறியுடன் கூவிக்கொண்டிருந்தாள். முற்றத்தில் சென்று நின்றிருந்தேன். நான் இரவெல்லாம் ஏதும் ஒரு வாய் தண்ணீர்கூட குடிக்கவில்லை என்று உணர்ந்தேன். என்னைக் கண்டதும் பக்கத்துவீட்டுக்காரர்கள் சட்டென்று அவர்களின் வீடுகளுக்குள்ச் சென்றுவிட்டனர். நான் இடுங்கிய சந்துவழியாக நடந்து ராம்பால் கடையை அடைந்து ஒரு டீ குடித்தேன். பெஞ்சில் டீக்கோப்பையுடன் முழுக்கத் தளர்ந்தவனாக அமர்ந்திருந்தேன்.

வயதானவரான ராம், ஏதோ ஒரு ராம், எங்கள் சாதியில் பாதிப்பேர் ராம்கள்தான், என்னிடம் “அவளுக்கு இரண்டுமுறை நிழல் வந்திருக்கிறது.” என்றார். “ஒருநாளில் அகன்றுவிடும்… இல்லாவிட்டால் பூசாரியைத்தான் கூப்பிடவேண்டும்”

”எப்போது?” என்றேன்.

“போன ஆண்டுகூட” என்றார். “நிழல் விலகிவிட்டால் மிக இனிமையானவள். ஏழைகளின் மேல் இரக்கம் உடையவள். குழந்தைகளை அணைத்து வளர்ப்பவள்… எனக்குக் கூட நாற்பது ரூபாய் கடனாக தந்தாள். நான் திருப்பிக் கொடுத்தபோது வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.”

நான் திரும்பி வந்து வீட்டுக்குள் புகுந்து அம்மாவை பார்த்துக்கொண்டிருந்தேன். சுழற்காற்றில் சிக்கிய சருகு போல அவள் வீட்டுக்குள் சுற்றிவந்தாள். சுவர்களில் இருந்து சுவர்களுக்குச் சென்று மோதினாள். ஏதோ கண்ணுக்குத் தெரியாத பேருருவம் ஒன்று அவளை எற்றிஎற்றி விளையாடிக்கொண்டிருக்கிறது. அவள் நாவிலிருந்து எழுவது அதன் மொழிதான்.

முழுப்பகலும் அதே வேகத்துடன் அம்மா பேசிக்கொண்டிருந்தாள். நான் என் அறைக்குள் நாற்காலியில் அமர்ந்து அப்படியே தூங்கிவிட்டேன். உடற்களைப்பும் மனக்களைப்பும் என்னை சாய்த்துவிட்டன. விழித்துக்கொண்டபோது நான் எங்கிருக்கிறேன் என்றே தெரியவில்லை. ஸ்ரீகர் மிஸ்ரா என்னிடம் சற்று முன்னர்தான் அந்த இனிய கரடியைப் பற்றி ஏதோ சொன்னார். ஆனால் அது பனாரஸில் அவரது இல்லம் அல்ல,  என் வீடு. பைத்தான் நகரில் எங்கள் குடியிருப்பு.

சட்டென்று எனக்கு வேறுபாடு தெரிந்தது, அந்த ஓசை நின்றுவிட்டிருந்தது. கதவைத் திறந்து வெளியே சென்றேன். அம்மா தரையில் விழுந்து கிடந்தாள். அவள் இறந்துவிட்டாள் என்ற எண்ணமும், இல்லை என்ற மறு எண்ணமும் ஒரே கணத்தில் என வந்தன. அவளருகே சென்று குனிந்து பார்த்தேன். மூச்சு மெல்ல ஓடிக்கொண்டிருந்தது. எழுப்பலாமா என எண்ணி, வேண்டுமா என்று சந்தேகப்பட்டு அப்படியே நின்றேன். இரண்டு முறை கைநீட்டினாலும் அவளை எழுப்பத் தோன்றவில்லை.

அவள் இறந்திருப்பாள் என்னும் எண்ணம் ஓர் ஆறுதலாகவும் விடுதலையாகவும் என்னுள் தோன்றியதை அப்போது உணர்ந்தேன். அது எனக்கு என்மேலேயே எரிச்சலை அளித்தது, ஆகவே குனிந்து அம்மாவின் தோளைத் தொட்டு “அம்மா” என்று அழைத்தேன்.

அம்மாவின் இமைகளுக்குள் கருவிழிக்குமிழிகள் அசைந்தன. உதடுகள் ஒட்டியிருந்தவை ஓசையின்றி விடுபட்டுப் பிரிந்தன. அவள் கண்களை திறந்து என்னைப் பார்த்தாள். ஒருகணம் திகைத்தபின் “சோட்டூ” என்றாள். எழுந்து அமர்ந்து தலைமயிரை அள்ளிக் கட்டியபடி “எப்போது வந்தாய்?” என்றாள்.

“இப்போதுதான்… நீ தரையில் படுத்திருப்பதைக் கண்டேன்” என்றேன்.

“என்ன நடந்தது என்று தெரியவில்லை… நான் சமையலறையில் இருந்து இந்த கூடத்துக்கு வந்தேன். யாரோ அந்த மூலையில் கால்களை மடித்து குவிந்து அமர்ந்திருந்தார்கள். முதலில் நிழல் போலத் தோன்றியது. உடனே உருவம் தெளிந்தது. நான் மயங்கி விழுந்துவிட்டேன்.”

“பயந்திருப்பாய்… சரி வா. உனக்கு டீ போட்டுத் தருகிறேன்”

“வேண்டாம், நானே போட்டுக்கொள்கிறேன். உனக்கு டீ வேண்டுமா?”

அம்மாவுக்கு எதுவுமே நினைவில்லை. நான் எதையும் அவளிடம் சொல்லவுமில்லை. எப்படியும் இரண்டு நாட்களில் பக்கத்து வீட்டுக்காரர்கள் சொல்லிவிடுவார்கள். அம்மா எனக்கு பால்விடாத டீ போட்டுக் கொண்டுவந்து தந்தாள். பங்கிகள் வீட்டில் பால் வாங்குவதில்லை. எருமை வளர்த்தால்கூட அதன் பாலை குடிப்பதில்லை.

நான் களைப்புடன் என் அறைக்குச் சென்றேன். எதையும் படிக்கமுடியாமல் அப்படியே அமர்ந்திருந்தேன். அம்மா மதியத்திற்கு சப்பாத்தியும் பருப்புக்கறியும் சமைத்தாள். சாப்பிட்டுவிட்டு மதியம் ஆழ்ந்து தூங்கினேன். பின்மாலையில் விழித்துக் கொண்டபோது தெளிவாக இருந்தது மனம்.

அம்மாவிடம் நான் அப்பாவின் வழக்கை முடித்துவைப்பதற்காக வந்தேன் என்றும், அன்றே கிளம்பவேண்டும் என்றும் சொன்னேன். அம்மா ஒன்றும் சொல்லவில்லை. அந்திக்கு முன்னரே கிளம்பிவிட்டேன். பஸ்ஸில் ஏறி அமர்ந்ததும் என் உடலெங்கும் இருந்த பல்வேறு கட்டுகள் முடிச்சவிழ கைகால்கள் எல்லாம் தளர்ந்து உடல் நாற்புறமும் சரிவதைப்போல் உணர்ந்தேன். பழைய இந்தி சினிமாப்பாட்டு ஒன்று என்னுள் ஒலித்துக்கொண்டே இருந்தது. “ஆப் கி ஆங்கோன் மெ குச்…’ கிஷோர்குமாரின் குரல். அந்த மனநிலையுடன் தொடர்பே அற்ற ஏதோ வரி. ஆனால் உள்ளம் அப்படித்தான் அர்த்தமில்லாமல் எதையோ பற்றிக்கொள்கிறது.

ஔரங்காபாத் வரை அரைத்தூக்கமும் விழிப்புமாக இருந்தேன். கிஷோர்குமாரின் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. ”தும் ஆகயா ஹோ நூர் ஆகயா ஹோ” . ஔரங்காபாதில் இறங்கி ரயில் நிலையத்திற்குச் சென்றபோது நிகழ்ந்தவை எல்லாம் உண்மையா என் பிரமைகளா என்று தோன்றுமளவுக்கு விலகிச் சென்றுவிட்டிருந்தன. ஆனால் பனாரஸ் சென்றபின் உணர்ந்தேன், என் அகத்தர்க்கம் முழுமையாகச் சிதறிவிட்டிருந்தது. நான் அதுவரை திரட்டி உறுதிசெய்து வைத்திருந்த என் அடையாளம் முழுக்கச் சிதைந்ததன் தொடக்கப்புள்ளி அதுதான்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 03, 2025 11:33

காவியம் – 13

அடையாளம் தெரியாத சிலை, மாக்கல்செதுக்கு,  சாதவாகனர் காலம் பொமு1 -பைத்தான் அருங்காட்சியகம்

ஒரு முழுநாள், ஓர் இரவும் ஒரு பகலும் நீடித்த ஒரு புயல். மறுநாள் மாலையில் பைத்தானிலிருந்து பனாரஸ் திரும்பும்போது நான் அகத்தில் பெரும் பதைப்பு ஒன்றுடன் இருந்தேன். பஸ்ஸில் ரயிலில் அமரவும் படுக்கவும் முடியாமல் நிலையழிந்து தவித்தேன். ரயிலில் முழு இரவும் கதவுக்கு அருகே காற்று முகத்தில் அறைய நின்றுகொண்டே இருந்தேன். சிறுநீர் முட்டுவதுபோல இருந்தது, கழிப்பறையில் சிறுநீர் உள்ளே சிக்கிக்கொண்டதுபோல தவித்தது. அரிய எதையோ மறந்துவிட்டு நினைவுகூர்வதுபோல, எதையோ சட்டென்று அஞ்சுவதுபோல உள்ளம் அவ்வப்போது திடுக்கிட்டுக் கொண்டிருந்தது. அந்த ஒருநாள் எந்த வகையிலும் புரிந்துகொள்ள முடியாத ஒரு நிகழ்வு. என் தர்க்கங்கள் அனைத்தையும் நொறுக்கிய ஒரு நாள்.

ஒவ்வொருவரும் அவரவருக்கான தர்க்க அமைப்பு ஒன்றை கொண்டிருக்கிறார்கள். இளமையில் இருந்து அவர்கள் அடைந்த எல்லா அனுபவங்களையும் அந்த தர்க்கச்சரடில் கோத்துக்கொண்டே இருக்கிறார்கள். அது ஒரு பெரிய கட்டுமானமாகவே அவர்களுக்குள் உள்ளது. ஒன்றோடொன்று இணைந்திருப்பதுதான் அதன் வலிமையை உருவாக்குகிறது. அதைத்தான் அவர்கள் அறிவு என்றும் நினைவுத்தொகுப்பு என்றும் உள்ளம் என்றும் சொல்லிக்கொள்கின்றனர். அதுவே ஒருவரின் அடையாளம், தனித்தன்மை. அவருடைய உடல் பருவடிவ இருப்பு என்றால் அதுதான் நுண்வடிவ இருப்பு. உண்மையில் மனிதர்கள் என்பதே அந்த தர்க்கக் கட்டுமானம்தான்.  நாம் ஒருவரை விரும்புவதும், வெறுப்பதும், மதிப்பதும், மதிப்பிடுவதும் அதைக்கொண்டுதான்.

அந்த கட்டுமானத்தின் எல்லைக்கு அப்பாலிருக்கும் அனுபவங்களும் அடிக்கடி நிகழ்கின்றன. அந்த தர்க்கக் கட்டுமானத்தை எல்லையை உடைத்து, இளகவைத்து, கொஞ்சம் நீட்டிக்கொண்டால் அவற்றையும் உள்ளிழுத்து விட முடிகிறது. உள்ளிழுப்பது வரை ஒரு கொந்தளிப்பும் போராட்டமும் நிகழ்கிறது. உள்ளிழுத்துக் கொண்டதும் நிறைவும் தன்னம்பிக்கையும் உருவாகிறது. புதிய ஒன்றை நோக்கி முன்னகர்ந்தமையாலேயே அந்த அனுபவம் நமக்கு ஒருவகையில் இனியதாக ஆகிவிடுகிறது. பெரும்பாலானவர்கள் திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டிருப்பது அவர்களின் தர்க்கம் நெகிழ்ந்து, விரிந்து, மீண்டும் உறுதிப்பட்ட அந்த அனுபவங்களைப் பற்றித்தான். அவர்கள் கூறும் வரிகள் அந்த உறுதிப்பட்ட தர்க்கத்தை வெளிப்படுத்துபவை.

அன்று நான் முற்றத்திலேயே நின்றிருந்தேன். என் தொடை மட்டும் துள்ளிக்கொண்டே இருந்தது. கடும் தாகம் எடுத்து உடலெங்கும் அது தவித்தது. சட்டென்று மின்சாரம் வந்தது. நான் படிகளில் ஏறி காற்றில் பாதிமூடியிருந்த கதவை மெல்ல திறந்து மீண்டும் வீட்டுக்குள் நுழைந்தேன். அங்கே என் அம்மாவைப் பார்த்தேன், சுவர் மூலையில் விரித்திட்ட கூந்தலுடன் அமர்ந்திருந்தாள். ஆனால் அவளை நான் அவளாகப் பார்ப்பதற்கு அரைக்கணம் முன் அங்கே ஓர் இருளுருவம் அமர்ந்திருப்பதைக் கண்டேன். நீண்ட சடைக்கற்றைகள் விரிந்து வேர்கள் போல தரையில் பரவியிருக்க, நிர்வாணமான கரிய மயிரடர்ந்த உடலுடன் ஆணா பெண்ணா என்று அறியமுடியாத ஓர் உருவம். மின்னிய இரு கண்கள்.

நான் திடுக்கிட்டு ஓரடி பின்னால் வைத்து கதவில் முட்டிக்கொள்ள, கதவு ஓசையுடன் சுவரில் அறைய, அம்மா திகைத்தவள் போல எழுந்து என்னைப் பார்த்தாள். சிவந்து வெறித்த கண்களால் என்னை அடையாளம் காணமுடியவில்லை. கையை நீட்டி உரத்த குரலில் ஏதோ கூவினாள். அதே அறியாத பேய்மொழி. அதே முரட்டுக் கொடுங்குரல். அவள் வாயிலிருந்து சொற்கள் தெறித்தன. கையை நீட்டியபடி என்னை நோக்கி அவள் வந்தபோது நான் நடுங்கி பின்னடைந்து கதவில் ஒட்டிக்கொண்டேன். அம்மா ஆவேசமான கூச்சலுடன் என்னருகே வந்து ஓங்கி அக்கதவில் அறைந்தாள். அவளுடைய வெறித்துக் கலங்கிய கண்கள் என் முகத்தருகே வந்தன. அவள் தொண்டை நரம்புகள் இறுகி நார்நாராகப் புடைத்திருந்தன.

அத்தனை அருகே அவள் பேசியபோது அவள் உதடுகள் அசையாமல், நேரடியாகவே தொண்டையிலிருந்து அந்தக் குரல் வெளிவந்ததைக் கண்டேன். ஒன்றின்மேல் ஒன்று ஏறிக்கொண்ட சொற்களின் ஒழுக்கு. அவள் பேசுவதுபோலத் தெரியவில்லை, ஏதோ செய்யுளை ஒப்பிப்பதுபோல் இருந்தது. நன்கு மனப்பாடம் செய்த தொன்மையான நூல் ஒன்றின் பகுதி போல. அசைவற்று நான் நிற்க மீண்டும் கதவில் ஓங்கியறைந்தபடி அவள் சுழன்று திரும்பி அறைக்குள் சுற்றிவந்தபோது ஒரு சொல் தெறித்து என்னை அதிரச் செய்தது. ராதிகா! அவள் சொன்னாளா, அல்லது என் செவிப்பிரமையா என்று நான் திகைப்பதற்குள் மீண்டும் சொன்னாள், ராதிகா தேஷ்பாண்டே.

அப்படியென்றால் அது மொழிதான், வெறும் சொற்பெருக்கு அல்ல. நாமறியாத ஏதோ மொழி. மெல்ல உள்ளே சென்று என் அறைக்கதவைத் திறந்து நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டேன். வெளியே அம்மா கொந்தளித்துக் கொண்டிருந்தாள். என் அறைக்கதவின் மேல் அறைந்து அறைந்து கூச்சலிட்டாள். அந்த மொழியைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அது ஒரு மொழியேதானா? மொழி போலவே அது ஒலித்தது. அல்லது மானுட உதடுகளால் எழுப்பப்படும் எல்லா ஒலிகளையும் நாம்தான் மொழியாக எண்ணிக்கொள்கிறோமா? பிற உயிர்களின் எல்லா குரல்களையும் வெறும் ஓசைகள் என்று எண்ணுவதுபோல?

பனாரஸ் பல்கலையில் நான் ஏராளமான மொழிகளைக் கேட்டிருந்தேன். அங்கே இந்தியமொழிகளில் முதன்மையானவை அனைத்தையும் பயில வாய்ப்பிருந்தது. மானுட மொழிகள் பல்வேறு பேரமைப்புகளைச் சேர்ந்தவை. மொழிக்குழுக்கள் என அவற்றைப் பிரிப்பது முந்நூறாண்டுகளுக்கு முன்பு ஐரோப்பியர் உருவாக்கிய பார்வை. அது மொழிகளைப் புரிந்துகொள்ள மிகப்பெரிய கருவி. எல்லா மொழிகளும் அவற்றுக்கு முந்தைய தொல்மொழிகளில் இருந்து உருவானவை. அந்த தொல்மொழி கற்காலத்து மனிதர்களில் ஒரு குழுவினருக்குரிய சொற்கோவையாக இருந்திருக்கும். அந்த தொல்மொழி பல முளைகளாக எழுந்து பல கிளைகளாகப் பெருகியிருக்கும். மொழிகளில் கொஞ்சம் செவி பழகியவர்களால் ஒரு மொழி எந்த மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது என்று சொல்லிவிடமுடியும்.

இந்திய மொழிக்குடும்பங்களில் இந்தோ ஆரியமொழி அல்லது சம்ஸ்கிருதம், திராவிட மொழி அல்லது தென்னிந்திய மொழி இரண்டும் மிகத்தெரிந்த பெரிய மொழிக்குடும்பங்கள். அந்த மொழிகளில் இருந்து கிளைத்த எந்த மொழியையும் கொஞ்சம் சுற்றியலையும் இந்தியச் செவி கண்டுபிடித்துவிட முடியும். அவற்றில் சில மொழிகள் பாரசீகமும் அரபும் கலந்து உருவானவை. சில மொழிகள் கீழைமொழிகளின் கலப்பால் உருவானவை. ஒரு மொழிக்குடும்பத்திற்கு அதற்கே உரிய நாக்கை மடிக்கும் முறை, உதடுகளை குவித்து நீட்டும் முறை, மூச்சொலியை இணைக்கும் முறை, மூக்கிலிருந்தோ நெஞ்சிலிருந்தோ ஒலியை எடுக்கும் முறை என பல தனித்தன்மைகள் உண்டு.

பழங்குடிகளின் மொழிகள்தான் சிறியவை, ஆகவே அடையாளம் காணக் கடினமானவை. அவை வளர்ச்சியின் ஏதோ ஒரு புள்ளியில் நின்றுவிட்டவை, மிகச்சிறிய குழுவினரால் பேசப்படுபவை. வடகிழக்குப் பழங்குடியினர் இருநூற்று இருபது மொழிகளைப் பேசுகிறார்கள் என்று படித்திருக்கிறேன். சீனமொழிச்சாயல் கொண்ட சினோ-திபெத்திய மொழி, தாய்லாந்தின் வேர்கொண்ட க்ரா-தாய் என பலமொழிகள். அவற்றின் கலவையாக உருவாகி வந்த பிற்கால மொழிகள். இந்திய மையநிலத்தின் பழங்குடிகளின் முண்டா மொழிக்குடும்பமும் பெரியது. அதில் வியட்நாமிய மொழியின் சாயல்கூட உண்டு எனப்படுகிறது. தென்னிந்தியப் பழங்குடி மொழிகளில் ஊட்டியின் தோடர் மொழியில் எகிப்திய மொழியின் சாயல் உண்டு என்று படித்திருக்கிறேன். ஆக்டோவியா பாஸ் ஒரு கவிதையில் அதை வியந்து சொல்லியிருக்கிறார்.

ஆனால் எந்த மொழியையும் ஏதேனும் ஒரு மொழிக்குடும்பத்திற்குள் சேர்க்க முடியும். ஒரு மொழியைக் கேட்டதுமே இன்னொரு மொழி ஒன்று நினைவுக்கு வரும். வெறும் ஒலியாலேயே, உள்ளார்ந்த மெட்டினாலேயே. அதுதான் அந்த மொழிக்குடும்பத்தை உணர்வதற்கான வழி. ஆனால் அம்மாவிடமிருந்து கொட்டிக்கொண்டிருந்த மொழி எந்த மொழியின் நினைவையும் தொடவில்லை. அதை மொழி என ஓர் உள்ளம் உணரும்போதே இன்னொரு உள்ளம் அது வெறும் விலங்கொலிதான் என்றும் எண்ணிக்கொண்டிருந்தது.

அவை விலங்கொலிகள் அல்ல, ஐயமே இல்லை. சொற்கள் அர்த்தத்தால் கோக்கப்பட்டால்தான் அவை மொழி எனத் தோன்றும் இந்த ஒருமை உருவாகும். இது உணர்ச்சியினால் உருவாகும் ஒருமை அல்ல. குரல் உருவாக்கும் ஒருமையும் அல்ல. அர்த்தம் உருவாக்கும் ஒருமைதான். ஆனால் ஹிஸ்டீரியா நோயாளிகள் அப்படி புதுமொழி பேசுவதுண்டு. சில கிறிஸ்தவ மதக்குழுக்களில் அறியாதமொழி பேசுவதென்பது ஆவியிறங்குவதன் அடையாளமாக, தெய்வ அருளாக, அந்த ஆத்மா தன் எல்லையைக் கடந்து வேறொன்றை அறிந்துவிட்டது என்பதற்கான சான்றாகக் கொள்ளப்படுவதுண்டு. அந்தப் பேச்சுக்களை நான் கேட்டிருக்கிறேன். அவை நாமறிந்த சொற்களின் தாறுமாறான கலவையாகவே பெரும்பாலும் இருக்கும். அரிதாக அவை ஒரு சொல்கூட இல்லாத வெறும் ஒலிகளாக இருக்கும். அப்போதுகூட அவை நாமறிந்த மொழிகளின் சொற்களின் சிதைவொலிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டவையாக இருக்கும். அவற்றின் நாப்புரளலும், உதடிணைவும் நாம் அறிந்தவையாக இருக்கும்.

இது ஹிஸ்டீரியாவாக இருக்கலாம். என் குடும்பத்தில் மனசிக்கல் இருந்துகொண்டே இருந்திருக்கிறது. என் அம்மாவின் பாட்டிக்கு பைத்தியம் பிடித்து நாற்பதாண்டுகள் சங்கிலியில் பிணைக்கப்பட்டு வாழ்ந்தாள் என்று தெரியும். உளப்பிளவின் விதைகள் பாரம்பரியமாகவே மூளையில் விதைக்கப்பட்டிருக்கின்றன என்று படித்திருக்கிறேன். உரிய பொழுதில் அவை முளைக்கின்றன. எவரிடம் எப்போது அவை எழும் என்று சொல்லிவிடமுடியாது. என் மூளையிலும் அந்த விதை இருக்கலாம். என் அம்மா தன் பாட்டியையே நினைத்துக்கொண்டு இருந்திருக்கிறாள். அவள் அப்பாவும் அம்மாவும் இறந்துவிட்டனர். அவர்கள் இருந்த நிலமே இப்போது இல்லை. ஒரு பைத்தியத்தால் தீவைத்து கொளுத்தப்பட்டு அந்த ஊர் மறைந்துவிட்டது. அந்த நிலம் கரும்புவயலாக உருவெடுத்துவிட்டது. இப்போது பாட்டியின் நினைவு எஞ்சியிருப்பது அவளிடம் மட்டுமே. அந்நினைவுதான் வேறெங்கு போகும்?

என் உடம்பு விதிர்த்துவிட்டது. நினைவா அல்லது பேயேதானா? பேயா? அபத்தம். இந்த அறிவியல் நூற்றாண்டில், நவீனக் கல்வி கற்ற ஒருவன் அப்படி எண்ணிப் பார்ப்பதுகூட அசட்டுத்தனம். அது ஹிஸ்டீரியாதான். அம்மா திருமணமாகி இங்கே வந்து எனக்கு பாலூட்டிக்கொண்டிருந்த வயதில் அவளுக்கு முதல் ஹிஸ்டீரியா தாக்குதல் வந்திருக்கிறது. நான் அப்போது இரண்டு வயதுக் குழந்தை. என்னால் சரியாக நடக்கமுடியாது. என் கால்கள் சற்று மெலிந்து வளைந்திருந்தன. அம்மா என்னை எப்போதும் தூக்கிக்கொண்டே அலைந்தாள். ஆகவே நான் அப்போதும் அவள் முலைப்பால் குடித்துவந்தேன்.

அவளுடைய முதல் ஹிஸ்டீரியாத் தாக்குதலை சிலநாட்களுக்குப் பிறகுதான் அப்பா அறிந்தார். அம்மா தனிமையில் அமர்ந்து தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தாள். கண்ணீர் வழிந்துகொண்டே இருக்க கைகளை முஷ்டி பிடித்தபடியும், பற்களை நொறுநொறுவென கடித்தபடியும் இருந்தாள். ஆனால் வீட்டுவேலைகளை எல்லாம் செய்தாள், என்னை நன்றாகப் பார்த்துக்கொண்டாள். அவளுக்குள் நிழல்கள் புகுந்துவிட்டன என்று பக்கத்து வீட்டுக் கிழவிகள் சொன்னார்கள். அப்பாவின் அம்மா ஆற்றின் மறுகரையில் இருந்து ஒரு பூசாரியை வரவழைத்தாள். ‘பூசாரியாவது மண்ணாங்கட்டியாவது. அடித்து மண்டையைப் பிளந்துவிடுவேன்’ என்று அப்பா அவரை அடிக்கப்போனார். அவர் ‘பேய் இவனையும் பிடித்துவிட்டது’ என்று கூவிக்கொண்டு பாட்டி கொடுத்த கோழியுடன் ஓடிப்போனார்.

அப்பா அம்மாவை பைத்தானின் புகழ்பெற்ற ஆங்கிலோ இந்திய டாக்டரான மார்ட்டின் சார்ல்ஸிடம் காட்டினார். எனக்குப் பால் கொடுப்பதுதான் காரணம் என்று அவர் சொன்னார். வளர்ந்த குழந்தை அவள் உடலின் உப்புகளை முழுக்க உறிஞ்சிவிடுகிறது. அதை நிறுத்தும்படியும் அவள் உடலில் குறைந்துவிட்ட ரசாயனங்கள் சிலவற்றை ஈடுசெய்ய மாத்திரைகள் சாப்பிடும்படியும் அவர் பரிந்துரைத்தார். ஒருவாரத்திலேயே அம்மா சரியாகிவிட்டாள்.அப்பா மீண்டும் பூசாரி வீட்டுக்கு வந்தால் தன் அம்மாவின் மண்டையை பிளந்துவிடுவேன் என மிரட்டியபின் திரும்ப ராணுவத்திற்குச் சென்றார்.

நான் நாலைந்து நாள் கதறி அழுது, புரண்டு கைகால்களை அடித்துக்கொண்டு அடம் பிடித்தேன். “பட்டினி கிடக்கட்டும்… பட்டினியால்தான் உணவின் சுவை தெரியும்’ என்று அப்பா சொல்லியிருந்தார். நான் இரண்டு நாள் பசும்பாலைத் துப்பிக்கொண்டிருந்தேன். பிறகு பால் குடிக்க தொடங்கினேன். பதினைந்தே நாளில் சுவரைப் பிடித்துக்கொண்டு நடக்கவும் தொடங்கிவிட்டேன். ஆனால் நான் ஓடிவிளையாட மேலும் ஓராண்டு ஆகியது. என்னை பள்ளிக்கூடத்திற்கு சேர்த்ததே ஓராண்டு பிந்தித்தான்.

அப்பா மறைந்தபின் மீண்டும் ஒருமுறை அம்மாவுக்கு ஹிஸ்டீரியா தாக்குதல் வந்திருக்கிறது. நான் அப்பா மறைந்தபின் நிகழ்ந்த சட்டச்சிக்கல்களில் அலைந்து கொண்டிருந்தமையால் அதைக் கவனிக்கவில்லை. அவளே சீரடைந்தாள். இது மீண்டும் மூன்றாம் முறையாக. இந்த வீட்டில் அவள் தன்னந்தனியாக இருந்திருக்கிறாள். அவளுக்கு இங்கே நட்பென்றும் நெருக்கமென்றும் எவருமில்லை. அவளுடைய விலக்கத்தை நான் எனக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டிருக்கிறேன். தனிமையில் அவளுக்குள் நினைவுகள் எழுந்திருக்கலாம். மூளையின் நோய்விதைகள் முளைத்திருக்கலாம்.

மூளைநோய்கள் முழுமையாக விட்டகல்வதே இல்லை. தலைமுறைகள் தோறும் தொடர்கின்றன அவை. ஒருவரிடமிருந்து ஒருவருக்கு அவை தொற்றவும் கூடும்.  ஏனென்றால் நாம் ஒருவரை கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தால் அவரை நகலெடுக்கத் தொடங்குகிறோம், நம்மையறியாமலேயே அவர் நம்மில் படிகிறார். நாம் அவராகவே ஆகிவிடுகிறோம். பல குடும்பங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பைத்தியங்களாக இருக்கிறார்கள். பைத்தியங்களை பராமரிப்பவர்கள் பைத்தியங்கள் ஆகிவிடுகிறார்கள். தானாகவே பேசிக்கொள்ளும் முதியவர்களுடன் இருப்பவர்கள் தாங்களும் தனக்குத்தானே பேசிக்கொள்வதைக் கண்டிருக்கிறேன்.

மனப்பிளவுநோய் கொண்டவர்கள் ஒரு படி தீவிரமானவர்கள். அவர்களுக்கு கட்டுப்படுத்தும் தர்க்கம் இல்லை. ஆகவே அவர்களின் ஆழ்மனம் மிக ஆற்றல்மிக்கது. புயல்போல, காட்டாறுபோல. அது நம் தர்க்கங்களை உடைத்துவிடுகிறது. நம் ஆழ்மனதை ஆக்ரமித்துக் கொள்கிறது. உண்மையில் ஒருவரின் தர்க்கம் இன்னொருவரை ஆட்கொள்ளுவதே இல்லை. ஆழ்மனம்தான் இன்னொரு மனத்துடன் தொடர்புகொள்கிறது. இலக்கியங்கள் வழியாக, கலைகள் வழியாகவும் நிகழ்வது அதுவே.

பித்துநிலையில் சாமியாடும் ஒருவரின் சொற்களை நாம் மறப்பதே இல்லை. அவரிடமிருந்து நம் விழிகளும் செவிகளும் விலகுவதுமில்லை. அவருடைய சொற்களும் பார்வையும் நேரடியாக நம் ஆழத்திற்குச் சென்றுவிடுகின்றன. நம் கனவில் கலந்துவிடுகின்றன. நாமே கண்ட கனவுபோல ஆகிவிடுகின்றன. ஆழ்மனம் மட்டுமே நேரடியாக உக்கிரமாக வெளிப்படும் பைத்தியங்கள் நம் மனதின் எல்லாச் சுவர்களையும் உடைத்துக்கரைத்து நம்மை முழுமையாக எடுத்துக்கொள்கின்றன. பெருவெள்ளம் கிணறுகளை எடுத்துக்கொள்வதுபோல.

ஆனால் நான் அந்த அறைமூலையில் அவளைப் பார்ப்பதற்கு முன் ஒரு கணத்தின் ஒரு துளியில் இன்னொன்றைக் கண்டேன். நானே என் கண்களால். அது என்ன? அல்லது எனக்கும் அந்த மனப்பிளவின் விதை முளைவிட தொடங்கிவிட்டதா? நான் அவ்வெண்ணத்தை முதுகில் ஓர் அறை விழுந்தது போல உணர்ந்து எழுந்தமர்ந்தேன். அந்த எண்ணத்தை ஒரு கணம்கூட எனக்குள் வைத்திருக்கக் கூடாது என்று எண்ணுபவன் போலத் துரத்தினேன். அதை உதறும் பொருட்டு அறைக்குள் நடமாடினேன். அது என் தோளிலும் முதுகிலும் எடையுடன் தொற்றிக்கொண்டு சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தது. அதை விரட்டுவதற்கென்றே கதவை விரியத்திறந்து வெளிவந்தேன்.

அம்மா கைகளை வீசியபடி, நெஞ்சிலும் சுவர்களிலும் அறைந்தபடி, அதேபோல ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தாள். “ஏய், வாயைமூடு!” என்று கூவினேன். “வாயை மூடு… வாயை மூடுடீ… நிறுத்து… அடித்து மண்டையைப் பிளந்துவிடுவேன்… நிறுத்துகிறாயா இல்லையா?”

அந்தக் கூச்சலால் என் அகத்தில் இருந்து அந்தச் சிந்தனை அகன்றுவிட்டது. அவள் முன் சென்று நின்று அவள் முகத்தைப் பார்த்து கத்தினேன். ஆனால் சிறிது நேரம் ஓசையிட்டதுமே என் தொண்டை அடைத்து ஓசை கம்மிவிட்டது. ஆனால் இவள் இத்தனை நேரம் இடைவிடாமல் கூவிக்கொண்டிருக்கிறாள்.

“நிறுத்து சனியனே… வெட்டிக் கொன்று போட்டுவிடுவேன். நிறுத்து.” அக்கணம் எனக்குள் ஓர் எண்ணம் எழுந்தது. நான் சற்றுமுன் நினைத்ததுதான் நடக்கிறதா, அவளிடமிருந்து எனக்குத் தொற்றிவிட்டதா? நானும் கூச்சலிடுகிறேனா? இல்லை, நான் உள்ளூர இதை திட்டமிட்டு செய்கிறேன். இதை விலகிநின்று கவனிக்கிறேன். நான் என்னை இழக்கவில்லை. அல்லது, இது தொடக்கமாக இருக்கலாம். அம்மா இப்படி நீண்டநாட்களாக இருந்திருக்கலாம்.

அம்மா என்னை பார்த்துச் சொன்ன வார்த்தைகளில் மீண்டும் அந்தச் சொல் வந்தது, ராதிகா தேஷ்பாண்டே. நான் குளிர்ந்து அசைவற்று நின்றுவிட்டேன். மீண்டும் ஓடிப்போய் என் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டேன். நாற்காலியில் அமர்ந்தபோது என் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

இதை நான் ஏன் எண்ணவில்லை? அம்மாவுக்கு எப்படி அவள் பெயர் தெரிந்தது? நான் இங்கே வந்ததே இல்லை. அம்மாவிடம் ஒரு சொல்கூட பேசியதில்லை. அவள் பெயரை வேறு வகையில் அவளிடம் சொல்ல எவருமில்லை. இது ஹிஸ்டீரியா அல்ல. ஸ்கிஸோஃபிர்னியா அல்ல. இது அதுதான், நிழல்தான். இந்த பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் இருட்டின் ஒரு துளியாகிய நிழல். அதற்கு காலமும் இடமும் இல்லை. ஆகவே அது அறியாத ஏதுமில்லை.

அஞ்சிக்கொண்டே இருக்கமுடியாது, அச்சம் உச்சமடைந்ததும் சட்டென்று நின்றுவிடுகிறது. அச்சம் என்பது பெருகிக்கொண்டே இருந்தாகவேண்டும். நின்றுவிட்டால் குறையத் தொடங்கிவிடுகிறது. நான் இயல்படைந்து கால்களை நீட்டிக்கொண்டேன். நான் இங்கே வரும்போது ராதிகாவை நேரில் சந்தித்ததில்லை. ஆனால் அவளை நான் அறிந்திருக்கலாம். அவள் என் கல்லூரியில்தான் படிக்கிறாள். அவள் பெயர் எனக்குள் எங்கோ பதிந்திருக்கலாம். அதனால்தான் முதல் சந்திப்பிலேயே அத்தனை அணுக்கமானவர்களாக ஆனோம். அவள் பெயரை நான் தூக்கத்தில் உளறியிருக்கலாம். பலமுறை சொல்லியிருக்கலாம்.

ஹிஸ்டீரியா நோயாளிகளின் புறஉள்ளம் பலவீனமானது, ஆகவே அவர்களின் அகம் மிகக்கூர்மையாக விழித்திருக்கிறது. கனவு எந்த புதிய ஒலியையும் தவற விடுவதில்லை. நனவை விட அது எச்சரிக்கையானது. ஹிஸ்டீரியா நோயாளிகள் எங்கோ கேட்ட ஒற்றைச்சொல்லை பற்பல ஆண்டுகளுக்குப்பின் சொல்லியிருக்கிறார்கள். அப்படி கேட்ட சொற்களை இணைத்து முற்றிலும் அவர்கள் அறியாத அயல்மொழியைப் பேசியிருக்கிறார்கள்.

இரவெல்லாம் அந்த ஊசல் என்னை சுழற்றியடித்துக் கொண்டிருந்தது. தர்க்கம் பெருகி அனைத்தையும் விளக்கியது. ஒரு புதுக்கேள்வி எழுந்து ஒட்டுமொத்தமாகச் சிதைத்து வெற்றுக்குவியல்களாக ஆக்கியது. மீண்டும் சிதைவுகளை பொறுக்கி அடுக்கி அடுக்கி தர்க்கத்தைக் கட்டினேன். அந்த உளஅலைவின் களைப்பை தாளமுடியாமல் மூளை அசைவிழந்தபோது மாறிமாறித் தலையை அறைந்துகொண்டேன். எழுந்து நின்று வெறியுடன் கூச்சலிடவேண்டும் போலிருந்தது. அந்தக்கூச்சல் வெளியே கேட்கும் அக்கூச்சலின் தொடர்ச்சியாக ஆகிவிடுமா என்னும் எண்ணத்தால் அக்கணமே குளிந்து உறைந்தேன்.

ஓர் இரவின் நீண்ட வதை. நரகம் என்பது அதுதான். சார்த்ரின் No exit நாடகத்தின் நரகம். காலமில்லை. காலத்தை கடந்து, அதனூடாக எல்லாவற்றையும் கடந்துவிடலாம் என்னும் நம்பிக்கைக்கு இடமில்லை. ஒவ்வொரு கணமும் ஒன்றே நிகழும். மறுகணத்தில் இன்னொன்று நிகழவில்லை என்றால் காலமென்பதே இல்லை. நான் பைத்தியமாக ஆகிவிட்டேனா? எனக்குள் ஓடும் இந்த எண்ணங்களில் எந்த ஒழுங்கும் இல்லை. வெறும் சொற்கள். மொழியே அல்ல, வெறும் சொற்கள். நல்லவேளை, அவை நானறிந்த மொழியின் சொற்கள். நினைத்தால் அவற்றை நான் கோத்து மொழியாக ஆக்கிக்கொள்ள முடியும். என் உள்ளத்தின் களைப்பால்தான் அவற்றை அப்படியே விட்டிருக்கிறேன். ஆனால் அவை என்னை மீறிச் சிதறிச்செல்கின்றன. விரைவிலேயே அவை தங்கள் அர்த்தங்களை இழந்து வெற்று ஒலிகளாக ஆகிவிடும். நானும் வெளியே கூச்சலிட்டுக்கொண்டிருப்பவள் போல் ஆகிவிடுவேன்.

காலைவிடிந்ததும் நான் எழுந்து வெளியே வந்தேன். என் வாய் கசந்தது. கண்கள் வீங்கி, முகத்தின்மேல் களிமண் படிந்து உலர்ந்து இறுகியதுபோலிருந்தது. அம்மா அதே வெறியுடன் கூவிக்கொண்டிருந்தாள். முற்றத்தில் சென்று நின்றிருந்தேன். நான் இரவெல்லாம் ஏதும் ஒரு வாய் தண்ணீர்கூட குடிக்கவில்லை என்று உணர்ந்தேன். என்னைக் கண்டதும் பக்கத்துவீட்டுக்காரர்கள் சட்டென்று அவர்களின் வீடுகளுக்குள்ச் சென்றுவிட்டனர். நான் இடுங்கிய சந்துவழியாக நடந்து ராம்பால் கடையை அடைந்து ஒரு டீ குடித்தேன். பெஞ்சில் டீக்கோப்பையுடன் முழுக்கத் தளர்ந்தவனாக அமர்ந்திருந்தேன்.

வயதானவரான ராம், ஏதோ ஒரு ராம், எங்கள் சாதியில் பாதிப்பேர் ராம்கள்தான், என்னிடம் “அவளுக்கு இரண்டுமுறை நிழல் வந்திருக்கிறது.” என்றார். “ஒருநாளில் அகன்றுவிடும்… இல்லாவிட்டால் பூசாரியைத்தான் கூப்பிடவேண்டும்”

”எப்போது?” என்றேன்.

“போன ஆண்டுகூட” என்றார். “நிழல் விலகிவிட்டால் மிக இனிமையானவள். ஏழைகளின் மேல் இரக்கம் உடையவள். குழந்தைகளை அணைத்து வளர்ப்பவள்… எனக்குக் கூட நாற்பது ரூபாய் கடனாக தந்தாள். நான் திருப்பிக் கொடுத்தபோது வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.”

நான் திரும்பி வந்து வீட்டுக்குள் புகுந்து அம்மாவை பார்த்துக்கொண்டிருந்தேன். சுழற்காற்றில் சிக்கிய சருகு போல அவள் வீட்டுக்குள் சுற்றிவந்தாள். சுவர்களில் இருந்து சுவர்களுக்குச் சென்று மோதினாள். ஏதோ கண்ணுக்குத் தெரியாத பேருருவம் ஒன்று அவளை எற்றிஎற்றி விளையாடிக்கொண்டிருக்கிறது. அவள் நாவிலிருந்து எழுவது அதன் மொழிதான்.

முழுப்பகலும் அதே வேகத்துடன் அம்மா பேசிக்கொண்டிருந்தாள். நான் என் அறைக்குள் நாற்காலியில் அமர்ந்து அப்படியே தூங்கிவிட்டேன். உடற்களைப்பும் மனக்களைப்பும் என்னை சாய்த்துவிட்டன. விழித்துக்கொண்டபோது நான் எங்கிருக்கிறேன் என்றே தெரியவில்லை. ஸ்ரீகர் மிஸ்ரா என்னிடம் சற்று முன்னர்தான் அந்த இனிய கரடியைப் பற்றி ஏதோ சொன்னார். ஆனால் அது பனாரஸில் அவரது இல்லம் அல்ல,  என் வீடு. பைத்தான் நகரில் எங்கள் குடியிருப்பு.

சட்டென்று எனக்கு வேறுபாடு தெரிந்தது, அந்த ஓசை நின்றுவிட்டிருந்தது. கதவைத் திறந்து வெளியே சென்றேன். அம்மா தரையில் விழுந்து கிடந்தாள். அவள் இறந்துவிட்டாள் என்ற எண்ணமும், இல்லை என்ற மறு எண்ணமும் ஒரே கணத்தில் என வந்தன. அவளருகே சென்று குனிந்து பார்த்தேன். மூச்சு மெல்ல ஓடிக்கொண்டிருந்தது. எழுப்பலாமா என எண்ணி, வேண்டுமா என்று சந்தேகப்பட்டு அப்படியே நின்றேன். இரண்டு முறை கைநீட்டினாலும் அவளை எழுப்பத் தோன்றவில்லை.

அவள் இறந்திருப்பாள் என்னும் எண்ணம் ஓர் ஆறுதலாகவும் விடுதலையாகவும் என்னுள் தோன்றியதை அப்போது உணர்ந்தேன். அது எனக்கு என்மேலேயே எரிச்சலை அளித்தது, ஆகவே குனிந்து அம்மாவின் தோளைத் தொட்டு “அம்மா” என்று அழைத்தேன்.

அம்மாவின் இமைகளுக்குள் கருவிழிக்குமிழிகள் அசைந்தன. உதடுகள் ஒட்டியிருந்தவை ஓசையின்றி விடுபட்டுப் பிரிந்தன. அவள் கண்களை திறந்து என்னைப் பார்த்தாள். ஒருகணம் திகைத்தபின் “சோட்டூ” என்றாள். எழுந்து அமர்ந்து தலைமயிரை அள்ளிக் கட்டியபடி “எப்போது வந்தாய்?” என்றாள்.

“இப்போதுதான்… நீ தரையில் படுத்திருப்பதைக் கண்டேன்” என்றேன்.

“என்ன நடந்தது என்று தெரியவில்லை… நான் சமையலறையில் இருந்து இந்த கூடத்துக்கு வந்தேன். யாரோ அந்த மூலையில் கால்களை மடித்து குவிந்து அமர்ந்திருந்தார்கள். முதலில் நிழல் போலத் தோன்றியது. உடனே உருவம் தெளிந்தது. நான் மயங்கி விழுந்துவிட்டேன்.”

“பயந்திருப்பாய்… சரி வா. உனக்கு டீ போட்டுத் தருகிறேன்”

“வேண்டாம், நானே போட்டுக்கொள்கிறேன். உனக்கு டீ வேண்டுமா?”

அம்மாவுக்கு எதுவுமே நினைவில்லை. நான் எதையும் அவளிடம் சொல்லவுமில்லை. எப்படியும் இரண்டு நாட்களில் பக்கத்து வீட்டுக்காரர்கள் சொல்லிவிடுவார்கள். அம்மா எனக்கு பால்விடாத டீ போட்டுக் கொண்டுவந்து தந்தாள். பங்கிகள் வீட்டில் பால் வாங்குவதில்லை. எருமை வளர்த்தால்கூட அதன் பாலை குடிப்பதில்லை.

நான் களைப்புடன் என் அறைக்குச் சென்றேன். எதையும் படிக்கமுடியாமல் அப்படியே அமர்ந்திருந்தேன். அம்மா மதியத்திற்கு சப்பாத்தியும் பருப்புக்கறியும் சமைத்தாள். சாப்பிட்டுவிட்டு மதியம் ஆழ்ந்து தூங்கினேன். பின்மாலையில் விழித்துக் கொண்டபோது தெளிவாக இருந்தது மனம்.

அம்மாவிடம் நான் அப்பாவின் வழக்கை முடித்துவைப்பதற்காக வந்தேன் என்றும், அன்றே கிளம்பவேண்டும் என்றும் சொன்னேன். அம்மா ஒன்றும் சொல்லவில்லை. அந்திக்கு முன்னரே கிளம்பிவிட்டேன். பஸ்ஸில் ஏறி அமர்ந்ததும் என் உடலெங்கும் இருந்த பல்வேறு கட்டுகள் முடிச்சவிழ கைகால்கள் எல்லாம் தளர்ந்து உடல் நாற்புறமும் சரிவதைப்போல் உணர்ந்தேன். பழைய இந்தி சினிமாப்பாட்டு ஒன்று என்னுள் ஒலித்துக்கொண்டே இருந்தது. “ஆப் கி ஆங்கோன் மெ குச்…’ கிஷோர்குமாரின் குரல். அந்த மனநிலையுடன் தொடர்பே அற்ற ஏதோ வரி. ஆனால் உள்ளம் அப்படித்தான் அர்த்தமில்லாமல் எதையோ பற்றிக்கொள்கிறது.

ஔரங்காபாத் வரை அரைத்தூக்கமும் விழிப்புமாக இருந்தேன். கிஷோர்குமாரின் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. ”தும் ஆகயா ஹோ நூர் ஆகயா ஹோ” . ஔரங்காபாதில் இறங்கி ரயில் நிலையத்திற்குச் சென்றபோது நிகழ்ந்தவை எல்லாம் உண்மையா என் பிரமைகளா என்று தோன்றுமளவுக்கு விலகிச் சென்றுவிட்டிருந்தன. ஆனால் பனாரஸ் சென்றபின் உணர்ந்தேன், என் அகத்தர்க்கம் முழுமையாகச் சிதறிவிட்டிருந்தது. நான் அதுவரை திரட்டி உறுதிசெய்து வைத்திருந்த என் அடையாளம் முழுக்கச் சிதைந்ததன் தொடக்கப்புள்ளி அதுதான்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 03, 2025 11:33

நீலி மே இதழ்

அன்பு ஜெ,

நீலியின் மே 2025 இதழ் வெளிவந்துள்ளது. இந்த இதழில் வரலாற்று ஆய்வாளர் R.உமாமகேஸ்வரியை ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம், ஆய்வு மாணவர்கள் முத்துப்பாண்டி, ராஜகுமாரன் ஆகியோர் எடுத்த நேர்காணலும், நாட்டார் இசைப் பாடகர், செயல்பாட்டாளர் தேஜாஸ்ரீ இங்கவ்லெ–ஐ ரம்யா எடுத்த நேர்காணலும் வெளிவந்துள்ளது. 

அறிவியல்–ஆய்வுத் துறையில் பெண் ஆய்வாளர்கள்/அறிஞர்களின் பங்களிப்பு குறித்து கனடா நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் வெங்கட்ரமணன் எழுதும் புதிய கட்டுரைத்தொடரில் முதலாவதாக ”எம்மி நூர்த்தெர்” பற்றிய கட்டுரை வெளிவந்துள்ளது. பெண் பூசக மரபு பற்றிய விரிவான அலசல் கொண்ட கட்டுரையை வீர. ராஜமாணிக்கம் எழுதியுள்ளார். 

அனுராதா ஆனந்த்–ன் மயிற்பீலி சிறுகதைத் தொகுப்பு பற்றி சக்திவேலும், குர்அதுல்ஐன் ஹைதரின் சிறுகதைகள் பற்றி மதுமிதாவும், ஆய்வாளர் பத்மபாரதியின் ’திருநங்கை சமூக வரைவியல்’ குறித்து வயலட்–ம் ரசனை, விமர்சனக் கட்டுரைகள் எழுதியுள்ளனர். நீங்கள் 2003-ல் எழுதிய “தோற்கடிக்கப்பட்ட அன்னை” கட்டுரை மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. ஹெப்சிபா ஜேசுதாசனின் பிறந்தநாள் நூற்றாண்டை ஒட்டி அவர் தீபம் இதழில் 1966-ல் எழுதிய கட்டுரை ஒன்று மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கு பக்தி காலகட்டத்தைச் சேர்ந்த முக்கியமான பெண் கவியான ஆத்துக்குரி மொல்லா பற்றி எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணனும், ஜப்பானிய பெண் கவிஞரான இஷுமி ஷிகிபுவின் கவிதைகள் பற்றிய ரசனைக்கட்டுரையை பா.ரேவதியும் எழுதியுள்ளனர். இஷுமி ஷிகிபுவின் கவிதைகளை வேணு வேட்ராயன் மொழிபெயர்த்துள்ளார். எலிஃப் ஷஃபாக்–ன் “விழாப்பந்தல்” என்ற பெண்ணியம் தொடர்பான கட்டுரையை விக்னேஷ் ஹரிஹரன் மொழிபெயர்த்துள்ளார். 

தாரா பரேக் என்ற எழுத்தாளரின் “Take a seat at the Cosmic Campfire” என்ற அறிபுனைவு சிறுகதைகள் குறித்த உரையாடலை ஸ்வர்ணமஞ்சரி சென்ற மாதம் ஜூம் செயலி வழியாக ஒருங்கிணத்திருந்தார். அதைப்பற்றிய நிகழ்வுக்குறிப்பு வெளிவந்துள்ளது. இது ஸ்வர்ணாவின் முதல் படைப்பு. நீலி பதிப்பகத்தின் முதல் நூலாக “விந்தியா எனும் தீற்றல்” என்ற சிறுகதைத்தொகுப்பு இந்த மாத இறுதிக்குள் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த தொகுப்பு நூலுக்கு விந்தியாவின் தமையன் ரங்கன் எழுதிய அணிந்துரையும், ரம்யா எழுதிய முன்னுரையும் வெளியாகியுள்ளது.

மே இதழ் 2025: https://neeli.co.in/category/%e0%ae%ae%e0%af-2025/

நன்றி

நீலி குழு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 03, 2025 11:32

நீலி மே இதழ்

அன்பு ஜெ,

நீலியின் மே 2025 இதழ் வெளிவந்துள்ளது. இந்த இதழில் வரலாற்று ஆய்வாளர் R.உமாமகேஸ்வரியை ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம், ஆய்வு மாணவர்கள் முத்துப்பாண்டி, ராஜகுமாரன் ஆகியோர் எடுத்த நேர்காணலும், நாட்டார் இசைப் பாடகர், செயல்பாட்டாளர் தேஜாஸ்ரீ இங்கவ்லெ–ஐ ரம்யா எடுத்த நேர்காணலும் வெளிவந்துள்ளது. 

அறிவியல்–ஆய்வுத் துறையில் பெண் ஆய்வாளர்கள்/அறிஞர்களின் பங்களிப்பு குறித்து கனடா நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் வெங்கட்ரமணன் எழுதும் புதிய கட்டுரைத்தொடரில் முதலாவதாக ”எம்மி நூர்த்தெர்” பற்றிய கட்டுரை வெளிவந்துள்ளது. பெண் பூசக மரபு பற்றிய விரிவான அலசல் கொண்ட கட்டுரையை வீர. ராஜமாணிக்கம் எழுதியுள்ளார். 

அனுராதா ஆனந்த்–ன் மயிற்பீலி சிறுகதைத் தொகுப்பு பற்றி சக்திவேலும், குர்அதுல்ஐன் ஹைதரின் சிறுகதைகள் பற்றி மதுமிதாவும், ஆய்வாளர் பத்மபாரதியின் ’திருநங்கை சமூக வரைவியல்’ குறித்து வயலட்–ம் ரசனை, விமர்சனக் கட்டுரைகள் எழுதியுள்ளனர். நீங்கள் 2003-ல் எழுதிய “தோற்கடிக்கப்பட்ட அன்னை” கட்டுரை மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. ஹெப்சிபா ஜேசுதாசனின் பிறந்தநாள் நூற்றாண்டை ஒட்டி அவர் தீபம் இதழில் 1966-ல் எழுதிய கட்டுரை ஒன்று மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கு பக்தி காலகட்டத்தைச் சேர்ந்த முக்கியமான பெண் கவியான ஆத்துக்குரி மொல்லா பற்றி எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணனும், ஜப்பானிய பெண் கவிஞரான இஷுமி ஷிகிபுவின் கவிதைகள் பற்றிய ரசனைக்கட்டுரையை பா.ரேவதியும் எழுதியுள்ளனர். இஷுமி ஷிகிபுவின் கவிதைகளை வேணு வேட்ராயன் மொழிபெயர்த்துள்ளார். எலிஃப் ஷஃபாக்–ன் “விழாப்பந்தல்” என்ற பெண்ணியம் தொடர்பான கட்டுரையை விக்னேஷ் ஹரிஹரன் மொழிபெயர்த்துள்ளார். 

தாரா பரேக் என்ற எழுத்தாளரின் “Take a seat at the Cosmic Campfire” என்ற அறிபுனைவு சிறுகதைகள் குறித்த உரையாடலை ஸ்வர்ணமஞ்சரி சென்ற மாதம் ஜூம் செயலி வழியாக ஒருங்கிணத்திருந்தார். அதைப்பற்றிய நிகழ்வுக்குறிப்பு வெளிவந்துள்ளது. இது ஸ்வர்ணாவின் முதல் படைப்பு. நீலி பதிப்பகத்தின் முதல் நூலாக “விந்தியா எனும் தீற்றல்” என்ற சிறுகதைத்தொகுப்பு இந்த மாத இறுதிக்குள் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த தொகுப்பு நூலுக்கு விந்தியாவின் தமையன் ரங்கன் எழுதிய அணிந்துரையும், ரம்யா எழுதிய முன்னுரையும் வெளியாகியுள்ளது.

மே இதழ் 2025: https://neeli.co.in/category/%e0%ae%ae%e0%af-2025/

நன்றி

நீலி குழு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 03, 2025 11:32

The art and the nature

உங்கள் காணொளிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். வெறும் உரைகளாக அல்லாமல் வெவ்வேறு நிலக்காட்சிகளில் நின்று பேசுகிறீர்கள். ஏராளமான புதிய இடங்களில் நின்று பேசுகிறீர்கள். தொல்லியல் சின்னங்களிலும் கோயில்களிலும் பேசுகிறீர்கள்.

எத்தனை வாழ்க்கைகள்!

We are imagining the connection between the objects of nature, and in that way we are creating the phenomenon called nature. Alternatively, there is an inherent connection between the elements of nature that we can understand only through our imagination. Likewise, we are assuming a phenomenon called the universe, cosmos, or infinity only through our imagination.

The art and the nature
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 03, 2025 11:30

The art and the nature

உங்கள் காணொளிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். வெறும் உரைகளாக அல்லாமல் வெவ்வேறு நிலக்காட்சிகளில் நின்று பேசுகிறீர்கள். ஏராளமான புதிய இடங்களில் நின்று பேசுகிறீர்கள். தொல்லியல் சின்னங்களிலும் கோயில்களிலும் பேசுகிறீர்கள்.

எத்தனை வாழ்க்கைகள்!

We are imagining the connection between the objects of nature, and in that way we are creating the phenomenon called nature. Alternatively, there is an inherent connection between the elements of nature that we can understand only through our imagination. Likewise, we are assuming a phenomenon called the universe, cosmos, or infinity only through our imagination.

The art and the nature
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 03, 2025 11:30

May 2, 2025

வரலாற்றுக்கும் – இலக்கியத்துக்கும் தத்துவம் ஏன் அவசியம்

வரலாற்று ஆசிரியர்களுக்கும், வரலாற்று மாணவர்களுக்கும் ஏன் தத்துவம் அவசியம்? இலக்கியவாதிகளுக்கும் இலக்கியவாசகர்களுக்கும் ஏன் தத்துவம் அவசியமாகிறது? ஏன் தத்துவம் ஓர் அடிப்படையான கல்வியாக கருதப்படுகிறது?

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 02, 2025 11:36

செவ்வியல் சாளரம்

ஆங்கிலநாவல்கள் பற்றி நான் அரிதாகவே தமிழில் எழுதியிருக்கிறேன். தொடர்ச்சியாக நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலத்தில் வாசிப்பவன் என்றபோதிலும்கூட. ஏனென்றால், நான் தமிழ்ச் சிற்றிதழ்ச்சூழலில் எழுதவந்தபோது இங்கே ஆங்கில நூல்களை குறிப்பிடுவது ஒரு மோஸ்தராக இருந்தது. தமிழில் எந்த நாவல்களைப் பற்றியும் எதுவும் எழுதப்பட்டதில்லை. ஆனால் பேசும்போது கண்கள் செருகி உணர்ச்சிகரமாக விவரிப்பார்கள். மலையாளத்தின் செவ்வியல்படைப்புகள் பற்றி விரிவான கட்டுரைகள் மாத்ருபூமி உள்ளிட்ட பெரிய இதழ்களில் வெளிவருவதை தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டிருந்தவன் நான். அதைப்போல தமிழில் எழுதவேண்டும் என ஆசைப்பட்டேன். ஆகவே தமிழ்ப்படைப்புகள் பற்றியே விரிவாக எழுதினேன். தமிழில் முன்னோடிப் படைப்பாளிகளைப் பற்றி எழுதப்பட்ட மொத்த பக்கங்களே மிகக்குறைவு– அதில் கணிசமான பக்கங்கள் நான் ஒருவன் எழுதியவையே.

ஆனால் பின்னர் கண்டுகொண்டேன், இங்கே ஆங்கிலவழிப் படைப்புகள் பற்றிக்கூட எதுவும் கட்டுரையாக எழுதப்படவில்லை. அசோகமித்திரன் மட்டுமே அமெரிக்க நவீன இலக்கியவாதிகள் பற்றி குறிப்பிடும்படி எழுதியிருக்கிறார். வெளிநாட்டு இலக்கியம் வாசிக்கிறேன் என்று காட்டிக்கொள்ள பெயர் சுட்டுவது மட்டுமே இங்கே நடந்துகொண்டிருந்தது – இன்றும் அவ்வழக்கமே நீடிக்கிறது. ஆகவே ஆங்கிலம் வழியாக வாசித்த உலக இலக்கியம் பற்றி நிறைய எழுதலாமெனும் எண்ணம் எனக்கு வந்தது. ஆனால் அப்போது நான் விமர்சனத்தில் எனக்கான கொள்கைகளைக் கொண்டவன் ஆகிவிட்டிருந்தேன்.

சில பேரிலக்கியங்கள் பற்றி நான் மட்டுமே தமிழில் விரிவாக எழுதியிருக்கிறேன், உதாரணமாக ழீன் கிறிஸ்தோஃப் (ரொமெய்ன் ரோலந்து), லெ மிசரபில்ஸ் (விக்தர் யூகோ) . என் கொள்கைகளை ஒட்டி, எழுதவேண்டும் எனத்தோன்றிய நூல்களைப் பற்றி மட்டும் அவ்வப்போது நீண்ட கட்டுரைகளை எழுதினேன். உதாரணமாக, மேரி கெரெல்லி. அவருடைய மாஸ்டர் கிறிஸ்டியன் என் உளம்கவர்ந்த பேரிலக்கியம். இன்று அவரைப்பற்றி தேடினாலே கூகிள் என்னை நோக்கிக் கொண்டுவந்து விட்டுவிடும் என பகடியாகச் சொல்வதுண்டு. நான் தவிர எவரும் அவரைப்பற்றி சொல்வதில்லை. ஆனால் எனக்கு அவர் தல்ஸ்தோய் அளவுக்கே முக்கியமான படைப்பாளி .ஆகவே அவரைப்பற்றி எழுதினேன்.

அவ்வாறு நான் எழுதிய படைப்புகளைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இது. மேற்குச்சாளரம்தான், ஆனால் அதனூடாக வழக்கமாகத் தெரியும் படைப்பாளிகள் இதில் இல்லை. அரிதாகவே வாசகர்கள் அறிந்த படைப்பாளிகளே மிகுதி. நவீனத்துவம் என்னும் வடிவ இறுக்கத்திற்கு எதிராக என் கருத்துக்களை முன்வைக்கும் பொருட்டு செவ்வியல் நாவல்களை நான் விரித்துப்பேசினேன். அவ்வகை படைப்புகளே இதிலுள்ளன. விதிவிலக்கு கோபோ ஆப் எழுதிய மணல்மேடுகளின் பெண் போன்ற நாவல்கள்.

இவை வாசகர்களுக்கு உலக இலக்கியத்தின் அறியப்படாத சில பக்கங்களைக் காட்டும் என நினைக்கிறேன். உலக இலக்கியத்தை மட்டுமல்ல, இலக்கியத்தின் புதிய சில வழிகளைக் காட்டுபவை இவை. முன்பு நான் எழுதிய சிலகட்டுரைகளை இந்நூலில் சேர்க்க முயன்றேன். அன்று எனக்கு அவை கிடைக்கவில்லை.  உதாரணமாக புடன்புரூக்ஸ் (தாமஸ் மன் )பற்றி நான் எழுதிய கட்டுரை. அவற்றையும் சேர்த்து எதிர்காலத்தில் இன்னொரு தொகுப்பு வெளிவரக்கூடும்.

இந்நூல் அடிப்படையில் ஆன்மிகம் என நான் நினைக்கும் ஒன்றைச் சொல்லும் நாவல்களைப் பற்றியது. மானுடவாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் பேசும் படைப்புகளை நான் தொடர்ச்சியாக முன்வைத்துவந்தேன். வாழ்க்கையை துண்டுபடுத்தி செறிவாகப்பேசும் நவீனத்துவப் படைப்புகளை நிராகரிப்பதே என் நோக்கம். அவ்வகையில் பார்த்தால் நவீனச்செவ்வியலுக்கான ஒரு வலியுறுத்தலே இந்நூல் என்பேன்.

இந்நூல் மீண்டும் பதிப்பு பெறுகிறது. இதை முதலில் வெளியிட்ட மனுஷ்யபுத்திரன் (உயிர்மை பதிப்பகம்) ,பின்னர் வெளியிட்ட கிழக்கு பதிப்பகம் ஆகியவற்றுக்கும் இப்பதிப்பை வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்துக்கும் நன்றி.

ஜெ

மேற்குச்சாளரம் வாங்க மேற்குச்சாளரம் மின்னூல் வாங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 02, 2025 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.