Jeyamohan's Blog, page 765

June 9, 2022

வீரான்குட்டி கவிதைகள்-2

தண்ணீர் மூன்று கவிதைகள் -வீரான்குட்டி

வீரான்குட்டி கவிதைகள்- 1

 

கடவுளுக்குத் தெரியும்

கடவுளுக்குத் தெரியும்
நட்பை எப்படி பேணுவதென்று
கரிக்கட்டையாகத்தான் நம்மிடம் அது வருகிறது
பரஸ்பரம் பரிமாறி
நாம் அதனை
ஒளிரும் பொன்னாக்குவோம்.

இடையில் எப்போதாவது
தொலைந்துபோனால்
கவலை எதற்கு?
திரும்பக் கிடைக்கும்போது
ரத்தினமாகியிருக்கும் அது
கடவுளுக்குத் தெரியும்
அன்பை எப்படி
வலுவாக்குவதென்று.

***

நடனம்

நூல் கோக்கும்போது
லேஸ் கட்டும்போது
முடி பின்னும்போது
உன் கைவிரல்கள் புரிகின்ற
நடனம் போலொன்றை
கண்டதில்லை நான்
இன்றுவரை.

***

இளகிய மனது

அன்று நீ
எறும்புகள் போய்ச் சேரும்வரை காத்திருந்தாய்
தேநீர்க்கோப்பையைக் கழுவுவதற்கு
காலின் அடியில்
ஏதேனும் பிராணிகள் நசுங்கிவிடுமோ என
மெல்ல அடிகள் வைத்தாய்
பூவினைக் காம்புடன் விட்டுவைத்தாய்.
புறாக்கூண்டு திறந்து வைத்தாய்

இல்லையென்றாலும்
அன்பு தட்டி
இளகிய மனதை
யாரால் எளிதில்
ஒளித்துவைக்க முடியும்!

 ***

படம் வரைதல்

நீலம் கொண்டு வானும்
கடலும் வரைந்தாள்.
அடர்கருப்பால் யானையை.
சிவப்பும் மஜந்தாவும் மட்டுமே
தேவைப்பட்டன
வீடு கட்டுவதற்கு.
வெள்ளையில் புள்ளிகள் நிரம்பின
பசுவிற்கு.
எல்லாம் வரைந்து முடிந்ததும்தான்
நினைவுக்கு வருகிறது
பச்சையை என்ன செய்வது?
வரைவதற்கில்லை
சுற்றியெங்கும் மரங்கள்
பிறகு புற்கள், பச்சைக்கிளி
பாவம்!
பெரும் சங்கடமாகிவிட்டது அவளுக்கு
அதனால்
தன்னை வரையத் தொடங்கினாள்
பச்சையில் பாவாடை
பச்சை வளையல், ரிப்பன்
பச்சை நிற வாட்ச்
பச்சை செருப்பு, குடை
அவளே
பச்சையில் நிறைந்து
திளைத்தாள்
கைகள் உயர்த்தி ஆடுகிறாற்போல்
நிற்கும் தன்னை
யாராவது குட்டி மரமாக
நினைத்தால் அதுபோதும்
என்றுதானோ என்னவோ!

***

தமிழாக்கம் சுஜா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 09, 2022 11:35

வீரான்குட்டி கவிதைகள்-2

தண்ணீர் மூன்று கவிதைகள் -வீரான்குட்டி

வீரான்குட்டி கவிதைகள்- 1

 

கடவுளுக்குத் தெரியும்

கடவுளுக்குத் தெரியும்
நட்பை எப்படி பேணுவதென்று
கரிக்கட்டையாகத்தான் நம்மிடம் அது வருகிறது
பரஸ்பரம் பரிமாறி
நாம் அதனை
ஒளிரும் பொன்னாக்குவோம்.

இடையில் எப்போதாவது
தொலைந்துபோனால்
கவலை எதற்கு?
திரும்பக் கிடைக்கும்போது
ரத்தினமாகியிருக்கும் அது
கடவுளுக்குத் தெரியும்
அன்பை எப்படி
வலுவாக்குவதென்று.

***

நடனம்

நூல் கோக்கும்போது
லேஸ் கட்டும்போது
முடி பின்னும்போது
உன் கைவிரல்கள் புரிகின்ற
நடனம் போலொன்றை
கண்டதில்லை நான்
இன்றுவரை.

***

இளகிய மனது

அன்று நீ
எறும்புகள் போய்ச் சேரும்வரை காத்திருந்தாய்
தேநீர்க்கோப்பையைக் கழுவுவதற்கு
காலின் அடியில்
ஏதேனும் பிராணிகள் நசுங்கிவிடுமோ என
மெல்ல அடிகள் வைத்தாய்
பூவினைக் காம்புடன் விட்டுவைத்தாய்.
புறாக்கூண்டு திறந்து வைத்தாய்

இல்லையென்றாலும்
அன்பு தட்டி
இளகிய மனதை
யாரால் எளிதில்
ஒளித்துவைக்க முடியும்!

 ***

படம் வரைதல்

நீலம் கொண்டு வானும்
கடலும் வரைந்தாள்.
அடர்கருப்பால் யானையை.
சிவப்பும் மஜந்தாவும் மட்டுமே
தேவைப்பட்டன
வீடு கட்டுவதற்கு.
வெள்ளையில் புள்ளிகள் நிரம்பின
பசுவிற்கு.
எல்லாம் வரைந்து முடிந்ததும்தான்
நினைவுக்கு வருகிறது
பச்சையை என்ன செய்வது?
வரைவதற்கில்லை
சுற்றியெங்கும் மரங்கள்
பிறகு புற்கள், பச்சைக்கிளி
பாவம்!
பெரும் சங்கடமாகிவிட்டது அவளுக்கு
அதனால்
தன்னை வரையத் தொடங்கினாள்
பச்சையில் பாவாடை
பச்சை வளையல், ரிப்பன்
பச்சை நிற வாட்ச்
பச்சை செருப்பு, குடை
அவளே
பச்சையில் நிறைந்து
திளைத்தாள்
கைகள் உயர்த்தி ஆடுகிறாற்போல்
நிற்கும் தன்னை
யாராவது குட்டி மரமாக
நினைத்தால் அதுபோதும்
என்றுதானோ என்னவோ!

***

தமிழாக்கம் சுஜா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 09, 2022 11:35

ச.து.சு.யோகியார்- மர்மயோகி

கலைக்களஞ்சியப் பணியில் ஈடுபட்டு, வாசிக்கும்தோறும் திகைப்பூட்டும் விஷயங்கள் பல கண்ணுக்குப் படுகின்றன. அதில் முதன்மையானது தமிழ்ப்பொதுச் சமூகத்துக்கு நூல்கள், அறிவார்ந்த உழைப்பு ஆகியவற்றின்மேல் இருக்கும் அலட்சியமும் அறியாமையும். பல முக்கியமான நூல்களை பொதுமக்கள் மட்டுமல்ல அறிஞர்கள்கூட அலட்சியமாக தூக்கிப்போட்டு அழியவிட்டிருக்கிறார்கள். தேவையில்லா பொருள் என எரித்திருக்கிறார்கள்.

ஆண்டி சுப்ரமணியம் தொகுத்த நாடகக் கலைக்களஞ்சியத்தை சென்னை பல்கலைக்கழகம் தூக்கி கோப்புகளுடன் போட்டு அழியவிட்டது. அந்நூலுக்கு நகல் இல்லை. ஆகவே எப்போதைக்குமாக தொலைந்துவிட்டது. எண்பது அகவையில் அவர் இருபதாண்டுக்கால உழைப்பில் தொகுத்த  60,000 உட்தலைப்புகள் கொண்ட கலைக்களஞ்சியம் தொலைந்துவிட்டது என சென்னை பல்கலைக் கழகம் எளிதாகச் சொல்லிவிட்டது. ஆனால் மனம்தளராமல் அவர் இரண்டு ஆண்டுகளில் நினைவில் இருந்து மீண்டும் எழுத முடியும் என்றார். அதற்குள் மறைந்தார்.

அதே கதைதான் ச.து.சு.யோகியாருக்கும். ஈரோட்டில் அவர் தொல்தமிழ் நாடக இலக்கண நூலான கூத்தநூலை கண்டெடுத்தார். அச்சுவடிகளை வாசித்து மிக விரிவாக உரை எழுதினார். அதை தட்டச்சு செய்ய கொடுத்தார். தட்டச்சு செய்பவரின் மனைவி மொத்த நூலையும் தூக்கி அடுப்பில் வைத்து எரித்துவிட்டார். நோயுற்று மரணப்படுக்கையில் இருந்த யோகியாரிடம் அச்செய்தி சொல்லப்பட்டது. அவர் மனம் தளராமல் உடனே மீண்டும் எழுத ஆரம்பித்தார்.

யோகியார் அந்த உரையை எழுதி முடிக்கவில்லை. 1968ல் அவருடைய மரணத்துக்குப்பின் அவர் எழுதியவற்றின் முதல் பகுதி வெளிவந்தது. 198ல் அடுத்த பகுதி வெளிவந்தது. ஒன்பது இயல்களில் நான்கு மறைந்தே போயிற்று.

ச.து.சு யோகியாரின் வாழ்க்கை ஒரு மர்மக்கதைபோல வாசிக்கத் தக்கது. மாயாஜால ஈடுபாடு கொண்டவர். சித்தரியல் ஆய்வாளர். கவிஞர். மொழிபெயர்ப்பாளர். நவீன இலக்கியவாதிகளின் நண்பர். குறிப்பாக புதுமைப்பித்தனுக்கு மிக அணுக்கமானவர்

ச.து.சு. யோகியார் ச.து.சு. யோகியார் – தமிழ் விக்கி ச.து.சு.யோகியார்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 09, 2022 11:34

ச.து.சு.யோகியார்- மர்மயோகி

கலைக்களஞ்சியப் பணியில் ஈடுபட்டு, வாசிக்கும்தோறும் திகைப்பூட்டும் விஷயங்கள் பல கண்ணுக்குப் படுகின்றன. அதில் முதன்மையானது தமிழ்ப்பொதுச் சமூகத்துக்கு நூல்கள், அறிவார்ந்த உழைப்பு ஆகியவற்றின்மேல் இருக்கும் அலட்சியமும் அறியாமையும். பல முக்கியமான நூல்களை பொதுமக்கள் மட்டுமல்ல அறிஞர்கள்கூட அலட்சியமாக தூக்கிப்போட்டு அழியவிட்டிருக்கிறார்கள். தேவையில்லா பொருள் என எரித்திருக்கிறார்கள்.

ஆண்டி சுப்ரமணியம் தொகுத்த நாடகக் கலைக்களஞ்சியத்தை சென்னை பல்கலைக்கழகம் தூக்கி கோப்புகளுடன் போட்டு அழியவிட்டது. அந்நூலுக்கு நகல் இல்லை. ஆகவே எப்போதைக்குமாக தொலைந்துவிட்டது. எண்பது அகவையில் அவர் இருபதாண்டுக்கால உழைப்பில் தொகுத்த  60,000 உட்தலைப்புகள் கொண்ட கலைக்களஞ்சியம் தொலைந்துவிட்டது என சென்னை பல்கலைக் கழகம் எளிதாகச் சொல்லிவிட்டது. ஆனால் மனம்தளராமல் அவர் இரண்டு ஆண்டுகளில் நினைவில் இருந்து மீண்டும் எழுத முடியும் என்றார். அதற்குள் மறைந்தார்.

அதே கதைதான் ச.து.சு.யோகியாருக்கும். ஈரோட்டில் அவர் தொல்தமிழ் நாடக இலக்கண நூலான கூத்தநூலை கண்டெடுத்தார். அச்சுவடிகளை வாசித்து மிக விரிவாக உரை எழுதினார். அதை தட்டச்சு செய்ய கொடுத்தார். தட்டச்சு செய்பவரின் மனைவி மொத்த நூலையும் தூக்கி அடுப்பில் வைத்து எரித்துவிட்டார். நோயுற்று மரணப்படுக்கையில் இருந்த யோகியாரிடம் அச்செய்தி சொல்லப்பட்டது. அவர் மனம் தளராமல் உடனே மீண்டும் எழுத ஆரம்பித்தார்.

யோகியார் அந்த உரையை எழுதி முடிக்கவில்லை. 1968ல் அவருடைய மரணத்துக்குப்பின் அவர் எழுதியவற்றின் முதல் பகுதி வெளிவந்தது. 198ல் அடுத்த பகுதி வெளிவந்தது. ஒன்பது இயல்களில் நான்கு மறைந்தே போயிற்று.

ச.து.சு யோகியாரின் வாழ்க்கை ஒரு மர்மக்கதைபோல வாசிக்கத் தக்கது. மாயாஜால ஈடுபாடு கொண்டவர். சித்தரியல் ஆய்வாளர். கவிஞர். மொழிபெயர்ப்பாளர். நவீன இலக்கியவாதிகளின் நண்பர். குறிப்பாக புதுமைப்பித்தனுக்கு மிக அணுக்கமானவர்

ச.து.சு. யோகியார் ச.து.சு. யோகியார் – தமிழ் விக்கி ச.து.சு.யோகியார்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 09, 2022 11:34

ஆனந்த் குமார் – கடிதம்

டிப் டிப் டிப் வாங்க ஆனந்த்குமார் தமிழ் விக்கி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம்.

முதுகலை படித்துவிட்டு வேலைகிடைக்காமல், ஆண்டிபட்டிக்கோட்டை பாண்டியன் டீ கடைக்கு வரும் தினத்தந்தியில் எனக்கேன்று ஒரு வேலைவாய்ப்பு வருமா என காத்திருக்கும் காலத்தில், உறவினர்கள் வீட்டுக்கு போவதேன்றால் கூச்சமாக இருக்கும். ‘இன்னுமா தம்பி வேலை கிடைக்கவில்லை’ கேள்விகளை சந்திப்பதற்கான கஷ்டகாலம் அது. ஆனால், அந்த உறவுக்கார வீடுகளிலிருக்கும் குழந்தைகளை பார்க்காமல் இருக்கமுடியாது. அவர்களுக்காக போயே ஆகவேண்டும். கொடுக்கின்ற வரக்காப்பியை குடித்துவிட்டு, கொஞ்ச நேரம், அந்தக் குழந்தைகளுடன் விளையாடிவிட்டு வந்துவிடுவேன். இப்பொழுது முகநூலின் பக்கம் செல்வதற்கு இன்னொரு வகை கூச்சம். யார் வேண்டுமென்றாலும் பிடித்துக்கொண்டு நலம் விசாரித்து குறுஞ்செய்தி அனுப்பலாம். இதுவரை என்னை பார்த்திராதவர் கூட இன்னாருடன் எனக்குத் தொடர்பு உண்டு என்று வார்த்தைகளால் என் தலையில் மண்ணை வாரிக் கொட்டலாம். இதையெல்லாம் கடந்து என்னை முகநூலை நோக்கி இழுப்பவர்கள் இருவர். ஒன்று லக்ஷ்மி மணிவண்ணன், இன்னொன்று ஆனந்த்குமார்.  அவர்கள் இருவரும் முகநூலில் பகிரும் கவிதைகள் என்னை ஈர்த்தன. ‘டிப் டிப் டிப்’ வெளிவரும் முன்னரே, ஆனந்தின் கவிதைகளுக்கு, ரசிகனாகியிருந்தேன். குழந்தைகளின் கண்களில் உலகைப் பார்த்து ஞானத்தை வழங்கிக்கொண்டிருந்தது அவரது கவிதைகள்.  சில கவிதைகள்   அனுபவமாக மனதில் வந்தமர்ந்திருந்தன. புத்தகத்தை வாங்கிப் பார்த்தால், அவற்றில் சிலவற்றை காணோம். அப்புறம்தான் தெரிந்தது, “மரணம் அவ்வளவு எளிமையில்லை  நிறைய காத்திருக்கவேண்டும்” வரிகளுக்கு சொந்தக்காரர் நிறைய வடிகட்டிவிட்டார் என்று.   பரவாயில்லை இன்னும் 97 கவிதைகளுக்கு அவர் முத்திரை வைத்திருக்கிறார் .

திருச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரியில் NCC-யிலிருந்த என் நண்பனை NCC ஆஃபிஸர்  அழைத்து, மாணவர்களுக்கு அனுப்பவேண்டிய இன்லேண்ட் கடிதங்களை அகரவரிசைப்படி அடுக்கச் சொன்னார். அவன் அடுக்கி முடித்ததும், இதையெல்லாம் கொண்டுபோய் தபால் பெட்டியில் போடு என்றார்.  ஆனந்த்குமாரின், ஒழுக்கவாதி என்ற கவிதை, அன்று வந்த அதே புன்முறுவலையும், முட்டாள்தனங்களில் வெளிப்படும் வாழ்வின் அழகையும் மீட்டெடுக்கிறது.

ஒழுக்கவாதி
நாளிதழ்களை
அடுக்கி வைக்கிறார்
ஒன்றின் மீது ஒன்றாக
அவர் நாட்களை அடுக்கி வைக்கிறார்.
மூன்று மாதங்கள் சேர்ந்ததும்
கட்டித்தூக்கி மேலே போடுகிறார்
பரணில் கொஞ்சம்
தூசி சேர்கையில்
எடைக்குப் போட மேலே ஏறுகிறார்
ஒவ்வொரு கட்டாய்
கீழே போட்டு
பெருமூச்சுடன் இறங்கியவர் தலையில்
ஆடி ஆடி வீழ்கிறது
போன வருடத்திற்கு இடையிலிருந்து
அவர் திறந்து பார்த்திராத
ஒரு ஞாயிற்றுக்கிழமையின்
வண்ணப்பக்கம்.

ஆனந்த்குமார் ஒழுக்கமின்மையை வைத்தே உலகையும், வாழ்வையும் அழகெனப் பார்க்கிறார். இங்கே ஒழுக்கமின்மை என்பது நன்னடத்தை சார்ந்ததல்ல. ஒருவகையான நிறைவின்மை. நிறைவின்றி இருப்பதே நிறைவு என்கிறார்.

பௌர்ணமிக்குப் பிந்தைய தினம்
நிலவுக்கென்ன குறை என்கிறான்
நிரம்பித் ததும்பும் காபியை
கொஞ்சம் சிந்திவிட்டே குடிக்கிறான்
பாதி கேட்ட பாடலைத்தான்
அன்று முழுதும் பாடுகிறான்.

ஒவ்வொரு குறையும்
மிகச்சரியாய் இருக்கிறது
அவன் அவனைப்
பொருத்தி நிரப்பும்
சிறுபள்ளமென.

கவிஞர் அபி, ‘கோடு’ கவிதையில், ‘ கோடு வரைவதெனில் சரி வரைந்து கொள்’ என்றார். ‘எதுவும் எவ்வாறும் இல்லை என்று சலிப்பாய்’ என்று சொல்லிப் பார்த்தார். ஆனந்த்குமார், சலிக்கவெல்லாம் இல்லை, முற்றிலும் நேரான கோடுகள் ஆர்வமிழக்க வைக்கிறன என்று கோடுகளை வளைத்து அழகு பார்க்கிறார். கோடுகளை கோடுகளால் வரைய வைக்கிறார். கணிதம் படித்தவன் புள்ளிகளை இணைத்து கோடுகள் வரைவான். இவரோ அபியின் பரம்பரை. புள்ளிகளை உடைந்து கோடுகள் பிறக்கின்றன என்கிறார்.

புள்ளிகள் உடைந்து
கோடுகள் பிறக்கின்றன
முற்றிலும் நேரான கோடுகள்
ஆர்வமிழக்க வைக்கின்றன
ஒவ்வொரு அடியையும்
மிகச்சரியாய் திசைமாற்றும் கோடு
முடித்துக்கொள்கிறது தன்னை
ஒரு வட்டமென.
நிலையழிந்த கோடு
வளைகிறது
வளையும் கோடு வரைகிறது
கண்டுகொண்டேயிருக்கும்
கனவென தன்னை
வரைந்து வரைந்து
எல்லைகள் தாண்டி
அழியும் பாவனையில்
எழுகிறது மேலே

ஆனந்த்குமார் வாழ்வை ரசிப்பவர். அது கொடுக்கும் இனிமையை முழுதாக ரசிக்கவேண்டும் என்று, நிறைய பணம் கொடுக்கும் அமெரிக்க வேலையை விட்டுவிட்டு, தாயகம் திரும்பி தனக்குப் பிடித்த புகைப்படத்தொழிலையும், கவிதை எழுதுதலையும் ஏற்றுக்கொண்டவர். ‘முகங்களை’ புன்னகையுடன் தனது கேமராவிற்குள் அடக்குபவர். புன்னகை ஒன்று போதும் எந்தப் பெரிய பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்கிறார்.

நெரிசலின் இடையில்
எதிரெதிர் மோதிக்கொண்டோம்
அவர் இடதென்க
நான் வலதென்றேன்
நான் இடதென்க
அவர் வலதென்றார்
அது ஒரு பெரிய பிரச்சினை
ஆகிவிடலாம் போல
நான் அவர் முகத்தை பார்த்தேன்
அவர், அப்படி ஒன்றும்
பெரிய பிரச்சினையில்லை
என்பதுபோல்
ஒரு புன்னகை செய்தார்

அது

வியர்த்த ஆடைக்குள்
காற்றைப்போல்
எனதிந்த நாளிற்குள்
புகுந்துகொண்டது

கசப்பு, வெறுப்பு, சலிப்பு என்று எதுவுமில்லாமல், வளைதலையும், பள்ளங்களையும், ஏற்றுக்கொண்டு, எதுவும் இனிமையென வாழ்வை அனுபவிக்கச் சொல்லும் ஆனந்த்குமாரின் கவிதைகளை வாசித்து, ஒரு மலர்ந்த முகத்துடன், மொத்த நட்சத்திரங்களையும் அவர் ஒரு அறையில் பூட்டிவைத்திருக்கிறார் என்பதை நம்புகிறேன்.  இந்த வருடம், 2022-ற்கான விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருது அவருக்கு கிடைப்பதில் மகிழ்கிறேன். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

ஆடல்வெளி- பாலாஜி பிருத்விராஜ்

எளிய கவிதையின் இன்றைய குரல்- கடலூர் சீனு

கவிதை விதைத்தல்- பாலாஜி ராஜு

நீந்தி வந்த குட்டிமீன் – கடிதங்கள்

நிச்சலனமாய் ஏந்திக்கொள்ளும் நீண்ட மடி

குழந்தைகளின் தந்தை- டி.கார்த்திகேயன்

விளையாடும் ஏரி- கடிதங்கள்

ஒருதுளி காடு- கடிதங்கள்

பலாப்பழத்தின் மணம் – பாவண்ணன்

ஒரு மலரை நிமிர்த்தி வைத்தல்- சுஜய் ரகு

டிப் டிப் டிப் வாங்க டிப் டிப் டிப் தன்னறம் நூல்வெளி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 09, 2022 11:34

ஆனந்த் குமார் – கடிதம்

டிப் டிப் டிப் வாங்க ஆனந்த்குமார் தமிழ் விக்கி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம்.

முதுகலை படித்துவிட்டு வேலைகிடைக்காமல், ஆண்டிபட்டிக்கோட்டை பாண்டியன் டீ கடைக்கு வரும் தினத்தந்தியில் எனக்கேன்று ஒரு வேலைவாய்ப்பு வருமா என காத்திருக்கும் காலத்தில், உறவினர்கள் வீட்டுக்கு போவதேன்றால் கூச்சமாக இருக்கும். ‘இன்னுமா தம்பி வேலை கிடைக்கவில்லை’ கேள்விகளை சந்திப்பதற்கான கஷ்டகாலம் அது. ஆனால், அந்த உறவுக்கார வீடுகளிலிருக்கும் குழந்தைகளை பார்க்காமல் இருக்கமுடியாது. அவர்களுக்காக போயே ஆகவேண்டும். கொடுக்கின்ற வரக்காப்பியை குடித்துவிட்டு, கொஞ்ச நேரம், அந்தக் குழந்தைகளுடன் விளையாடிவிட்டு வந்துவிடுவேன். இப்பொழுது முகநூலின் பக்கம் செல்வதற்கு இன்னொரு வகை கூச்சம். யார் வேண்டுமென்றாலும் பிடித்துக்கொண்டு நலம் விசாரித்து குறுஞ்செய்தி அனுப்பலாம். இதுவரை என்னை பார்த்திராதவர் கூட இன்னாருடன் எனக்குத் தொடர்பு உண்டு என்று வார்த்தைகளால் என் தலையில் மண்ணை வாரிக் கொட்டலாம். இதையெல்லாம் கடந்து என்னை முகநூலை நோக்கி இழுப்பவர்கள் இருவர். ஒன்று லக்ஷ்மி மணிவண்ணன், இன்னொன்று ஆனந்த்குமார்.  அவர்கள் இருவரும் முகநூலில் பகிரும் கவிதைகள் என்னை ஈர்த்தன. ‘டிப் டிப் டிப்’ வெளிவரும் முன்னரே, ஆனந்தின் கவிதைகளுக்கு, ரசிகனாகியிருந்தேன். குழந்தைகளின் கண்களில் உலகைப் பார்த்து ஞானத்தை வழங்கிக்கொண்டிருந்தது அவரது கவிதைகள்.  சில கவிதைகள்   அனுபவமாக மனதில் வந்தமர்ந்திருந்தன. புத்தகத்தை வாங்கிப் பார்த்தால், அவற்றில் சிலவற்றை காணோம். அப்புறம்தான் தெரிந்தது, “மரணம் அவ்வளவு எளிமையில்லை  நிறைய காத்திருக்கவேண்டும்” வரிகளுக்கு சொந்தக்காரர் நிறைய வடிகட்டிவிட்டார் என்று.   பரவாயில்லை இன்னும் 97 கவிதைகளுக்கு அவர் முத்திரை வைத்திருக்கிறார் .

திருச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரியில் NCC-யிலிருந்த என் நண்பனை NCC ஆஃபிஸர்  அழைத்து, மாணவர்களுக்கு அனுப்பவேண்டிய இன்லேண்ட் கடிதங்களை அகரவரிசைப்படி அடுக்கச் சொன்னார். அவன் அடுக்கி முடித்ததும், இதையெல்லாம் கொண்டுபோய் தபால் பெட்டியில் போடு என்றார்.  ஆனந்த்குமாரின், ஒழுக்கவாதி என்ற கவிதை, அன்று வந்த அதே புன்முறுவலையும், முட்டாள்தனங்களில் வெளிப்படும் வாழ்வின் அழகையும் மீட்டெடுக்கிறது.

ஒழுக்கவாதி
நாளிதழ்களை
அடுக்கி வைக்கிறார்
ஒன்றின் மீது ஒன்றாக
அவர் நாட்களை அடுக்கி வைக்கிறார்.
மூன்று மாதங்கள் சேர்ந்ததும்
கட்டித்தூக்கி மேலே போடுகிறார்
பரணில் கொஞ்சம்
தூசி சேர்கையில்
எடைக்குப் போட மேலே ஏறுகிறார்
ஒவ்வொரு கட்டாய்
கீழே போட்டு
பெருமூச்சுடன் இறங்கியவர் தலையில்
ஆடி ஆடி வீழ்கிறது
போன வருடத்திற்கு இடையிலிருந்து
அவர் திறந்து பார்த்திராத
ஒரு ஞாயிற்றுக்கிழமையின்
வண்ணப்பக்கம்.

ஆனந்த்குமார் ஒழுக்கமின்மையை வைத்தே உலகையும், வாழ்வையும் அழகெனப் பார்க்கிறார். இங்கே ஒழுக்கமின்மை என்பது நன்னடத்தை சார்ந்ததல்ல. ஒருவகையான நிறைவின்மை. நிறைவின்றி இருப்பதே நிறைவு என்கிறார்.

பௌர்ணமிக்குப் பிந்தைய தினம்
நிலவுக்கென்ன குறை என்கிறான்
நிரம்பித் ததும்பும் காபியை
கொஞ்சம் சிந்திவிட்டே குடிக்கிறான்
பாதி கேட்ட பாடலைத்தான்
அன்று முழுதும் பாடுகிறான்.

ஒவ்வொரு குறையும்
மிகச்சரியாய் இருக்கிறது
அவன் அவனைப்
பொருத்தி நிரப்பும்
சிறுபள்ளமென.

கவிஞர் அபி, ‘கோடு’ கவிதையில், ‘ கோடு வரைவதெனில் சரி வரைந்து கொள்’ என்றார். ‘எதுவும் எவ்வாறும் இல்லை என்று சலிப்பாய்’ என்று சொல்லிப் பார்த்தார். ஆனந்த்குமார், சலிக்கவெல்லாம் இல்லை, முற்றிலும் நேரான கோடுகள் ஆர்வமிழக்க வைக்கிறன என்று கோடுகளை வளைத்து அழகு பார்க்கிறார். கோடுகளை கோடுகளால் வரைய வைக்கிறார். கணிதம் படித்தவன் புள்ளிகளை இணைத்து கோடுகள் வரைவான். இவரோ அபியின் பரம்பரை. புள்ளிகளை உடைந்து கோடுகள் பிறக்கின்றன என்கிறார்.

புள்ளிகள் உடைந்து
கோடுகள் பிறக்கின்றன
முற்றிலும் நேரான கோடுகள்
ஆர்வமிழக்க வைக்கின்றன
ஒவ்வொரு அடியையும்
மிகச்சரியாய் திசைமாற்றும் கோடு
முடித்துக்கொள்கிறது தன்னை
ஒரு வட்டமென.
நிலையழிந்த கோடு
வளைகிறது
வளையும் கோடு வரைகிறது
கண்டுகொண்டேயிருக்கும்
கனவென தன்னை
வரைந்து வரைந்து
எல்லைகள் தாண்டி
அழியும் பாவனையில்
எழுகிறது மேலே

ஆனந்த்குமார் வாழ்வை ரசிப்பவர். அது கொடுக்கும் இனிமையை முழுதாக ரசிக்கவேண்டும் என்று, நிறைய பணம் கொடுக்கும் அமெரிக்க வேலையை விட்டுவிட்டு, தாயகம் திரும்பி தனக்குப் பிடித்த புகைப்படத்தொழிலையும், கவிதை எழுதுதலையும் ஏற்றுக்கொண்டவர். ‘முகங்களை’ புன்னகையுடன் தனது கேமராவிற்குள் அடக்குபவர். புன்னகை ஒன்று போதும் எந்தப் பெரிய பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்கிறார்.

நெரிசலின் இடையில்
எதிரெதிர் மோதிக்கொண்டோம்
அவர் இடதென்க
நான் வலதென்றேன்
நான் இடதென்க
அவர் வலதென்றார்
அது ஒரு பெரிய பிரச்சினை
ஆகிவிடலாம் போல
நான் அவர் முகத்தை பார்த்தேன்
அவர், அப்படி ஒன்றும்
பெரிய பிரச்சினையில்லை
என்பதுபோல்
ஒரு புன்னகை செய்தார்

அது

வியர்த்த ஆடைக்குள்
காற்றைப்போல்
எனதிந்த நாளிற்குள்
புகுந்துகொண்டது

கசப்பு, வெறுப்பு, சலிப்பு என்று எதுவுமில்லாமல், வளைதலையும், பள்ளங்களையும், ஏற்றுக்கொண்டு, எதுவும் இனிமையென வாழ்வை அனுபவிக்கச் சொல்லும் ஆனந்த்குமாரின் கவிதைகளை வாசித்து, ஒரு மலர்ந்த முகத்துடன், மொத்த நட்சத்திரங்களையும் அவர் ஒரு அறையில் பூட்டிவைத்திருக்கிறார் என்பதை நம்புகிறேன்.  இந்த வருடம், 2022-ற்கான விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருது அவருக்கு கிடைப்பதில் மகிழ்கிறேன். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

ஆடல்வெளி- பாலாஜி பிருத்விராஜ்

எளிய கவிதையின் இன்றைய குரல்- கடலூர் சீனு

கவிதை விதைத்தல்- பாலாஜி ராஜு

நீந்தி வந்த குட்டிமீன் – கடிதங்கள்

நிச்சலனமாய் ஏந்திக்கொள்ளும் நீண்ட மடி

குழந்தைகளின் தந்தை- டி.கார்த்திகேயன்

விளையாடும் ஏரி- கடிதங்கள்

ஒருதுளி காடு- கடிதங்கள்

பலாப்பழத்தின் மணம் – பாவண்ணன்

ஒரு மலரை நிமிர்த்தி வைத்தல்- சுஜய் ரகு

டிப் டிப் டிப் வாங்க டிப் டிப் டிப் தன்னறம் நூல்வெளி
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 09, 2022 11:34

மைத்ரி – இயற்கையின் தெய்வீகம்- சுசித்ரா

மைத்ரி நாவல் இணைய தளம்

 

நித்யசைதன்ய யதி தன் இளம்வயதில் ஆசிரியர் நடராஜ குருவுடன் இமையமலையை காணச்சென்ற நிகழ்வை ‘குருவும் சீடனும்’ என்ற நூலில் பதிவுசெய்துள்ளார். அவர் இமயமலையைக் காண்பது அதுவே முதல் முறை. அவர்கள் முன் கம்பீரமாக எழுந்து நின்றது பனிமலை, வெண்முகில்கள் சூழ்ந்து நின்றன அதன் சிகரங்கள். நித்யாவின் பரவசத்தை கண்ட நடராஜ குரு, “இதோ இந்தப் பேரழகின் தரிசனமே காளிதாசனை கவிஞனாக்கியது” என்றார். “ஒருவன் இந்தக் காட்சியை கண்டபிறகும் அவனுக்குள் தெய்வீகத்தை பற்றிய ஞானம் உருவாகவில்லையென்றால் அவன் மீட்கப்படமுடியாத குருடன். நம் உள்ளங்களில் இந்தக்கணம் பொங்கும் பரவசமே கடவுள்.”

நித்யசைதன்ய யதியின் மாணவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர் ஜெயமோகன். அதேபோல அஜிதன் தன் மகன் மட்டும் அல்ல மாணவரும் கூட என்று ஜெயமோகன் பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறார். ஆக குருதி உறவுக்கு அப்பால் குருவழி தொடர்ச்சி ஒன்றும் இருக்கிறது, நடராஜ குருவில் தொடங்கி அஜிதன் வரை. அதன் செல்வாக்கு அஜிதனின் முதல் நாவலான ‘மைத்ரி’யில் தெரிகிறது. இது முழுக்க முழுக்க இயற்கையின் பேரழகை ஒரு மனித உள்ளம் சந்திக்கையில் உருவாகும் பரவசத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள நாவல். இயற்கையின் தெய்வீகம் என்று நடராஜ குரு சுட்டிக்காட்டும் பண்பால் நிறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ் இலக்கியத்தில் ‘மைத்ரி’ மிகப்புதுமையான முயற்சி.

அஜிதனை அறிந்த வகையில், அவருடைய நாட்டங்கள் ஒரு புறம் உயர் கலை சார்ந்தவை. குறிப்பாக இசை. அவர் இசைமேதை வாக்னர் மேல் கொண்டுள்ள மாபெரும் ஆராதனையை அவருடன் சற்றேனும் பழகிய அனைவரும் அறிவர். மறுபுறம் கீழை, மேலை தத்துவங்களில் ஆழமான படிப்பு உடையவர். குறிப்பாக ஷோப்பனவரில். அவருடைய விரிந்த கலை-தத்துவார்த்த படிப்புகளின் தாக்கம் இந்த நாவலில் காணக்கிடைக்கிறது.

பொதுவாக தத்துவார்த்தமான தளங்களை ஒரு நாவல் தொட்டுச்செல்லும் போது பல சமயங்களில் அடிவயிற்றில் கல்லை கட்டினாற்போல் தத்துவ மொழியின் கனம் அதில் விழுந்துவிடுகிறது. அப்போது அது அடிப்படையான அனுபவ உணர்ச்சியை சற்று குறைக்கிறது. இந்த நாவலில் அது நிகழவில்லை. ‘மைத்ரி’யின் மிகப்பெரிய பலம் முழுக்கவே புலன்விழிப்பினால், துளித்துளியான அனுபவ சேர்க்கையினால் ஆசிரியர் நமக்கு கதை சொல்வதுதான். ஓங்கும் இமயமலையைக்காணும் பரவசத்தின் வழியே நடராஜகுரு கடவுளை கண்டதுபோல் இந்த நாவல் அளிக்கும் உணர் அனுபவங்களே இதன் ஆழங்களை கடத்துகின்றன.

அதற்கு பெரிய உறுதுணையாக இருப்பது இந்த நாவலில் துடியுடன் வெளிப்படும் ‘இளமை’ என்ற அம்சம். நாவலின் கதைசொல்லி ஹரன் சற்று அறிவுஜீவியான சமகால இளைஞன் ஒருவனின் அமையமுடியாமை, தேடல், கசப்பு, நையாண்டி எல்லாம் வெளிப்படும் கதாபாத்திரம். ஒவ்வொரு கணமும் புலன்களை அகலத் திறந்து சுற்றத்தை துழாவிக்கொண்டே இருப்பவன். அழகுணர்ச்சி, காமம், கற்பனாவாத எழுச்சிகள் கொண்டவன். அதே சமயம் குழந்தைக்கால களங்கமின்மை முற்றாக அழியாத ஒருவன். இவை எல்லாம் அவனில் அலைமோதுகின்றன. இப்படிச்சொல்லலாம், எந்த ஆர்வமும் புலன் கூர்மையும் அழகுணர்ச்சியும் நடராஜ குரு போன்றவரில் கனிந்து ஞானமாகிறதோ, அதே விஷயங்கள் ஹரனில் இளம் ரத்தத்தின் உணர்ச்சிகளோடு கொப்பளிக்கின்றன. இப்படி அலைமோதி நுரைக்கும் இளமையே இந்த நாவலின் துடிப்பான தாளத்தை கட்டமைக்கிறது.

ஹரனில் இந்த வண்ணங்கள் மாறி மாறி வருவது நாவலின் மிக வசீகரமான அம்சங்களில் ஒன்று. உதாரணமாக நாவலில் ஹரன் சௌந்தரியலஹரியை பரவசத்துடன் நினைவுகூரும் ஒரு இடம் வருகிறது. அதற்கு அடுத்த வரியிலேயே ஆதிசங்கரர் மீதான அவனது சிறிய சீண்டல் வெளிப்படுகிறது. சௌந்தரியலஹரிக்கு உரை எழுதிய நடராஜ குருவும் அந்த இடத்தில் சிரித்திருப்பார்.

இறப்பும் பிரிவும் என அகச்சிக்கல்களால் அலைக்கழிக்கப்படும் ஹரன் ஏதோ உள்ளுணர்வால் கங்கையின் ஊற்றுநதிகளில் ஒன்றான மந்தாகினியின் பாதை வழியாக இமயமலை அடுக்குகளுக்குள் ஏறி கேதார்நாத் வரை போக முடிவெடுக்கிறான். வழியில் மைத்ரி பன்வார் என்ற இளம் கட்வாலி பெண்ணை சந்திக்கிறான். அவர்களுக்குள் ஒரு பந்தம் உருவாக, அவள் அவனை மலைகளுக்குள் இருக்கும் தன் மூதாதையர்களின் ஊருக்குக் கூட்டிச்செல்கிறாள்.

மலைகள், வானம், பருவம், பூக்கள் மட்டுமல்லாது, அந்த நிலத்தின் மக்கள், அவர்களுடைய வாழ்க்கை முறை என்று அனைத்தையும் ஆசிரியர் துளித்துளியாக இந்த பயணத்திற்குள் கட்டி வைத்திருக்கிறார். விலங்குகளின் பராமரிப்பு, இசை, மேய்ச்சல் நிலமக்களின் வாழ்வியல், உணவு பண்பாடு, பண்டிகைகள், கொண்டாட்டங்கள், குலதேவதா சடங்குகள் என்று ஒரு முழு பண்பாட்டையே படைக்கிறார்.

இந்தக்கதையை ஆழமாக்குவது மூன்று விஷயங்கள். ஒன்று, ஹரனின் இளமை, தீவிரம். இரண்டு, மைத்ரி, அவளுடனான பயணம் வழியே ஹரன் எதிர்கொள்ளும் இயற்கை. மூன்று, இந்தப் பயணத்திற்கு பின்னால் நிகழும் ஆழமான சுயவிசாரணை சார்ந்த பகுதிகள்.

நாவலில் புறப்பயணத்துக்கு நிகராகவே அகப்பயணம் ஒன்றும் நிகழ்கிறது. புறமும் அகமும், இயற்கையும் காதலும், துடைத்துவைத்த கண்ணாடிகளைப்போல் துல்லியமாக ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன.

மேலோட்டமாக இந்த நாவலுக்கு முன்னோடி வடிவங்கள் என தோன்றுவது பத்தொன்பதாம் நூற்றாண்டின் கற்பனாவாத நாவல்கள்தான். கண்டிப்பாக அவற்றின் சாயல் இதில் உள்ளது. கதேயின் ‘காதலின் துயரம்’ (The Sorrows of Young Werther), அலெக்சாண்டர் குப்ரினின் ‘ஒலெஸ்யா’ (Olesya) போன்ற நாவல்களைச் உதாரணமாக சொல்லலாம். அவையும் வயதடைதலை (bildungsroman) சொல்லும் நாவல்களே. ஆகவே அவற்றுடனான ஒப்பீடுகளும் இயல்பானவை தான்.

அந்த நாவல்களிலிருந்து ‘மைத்ரி’ எங்கு வேறுபடுகிறது? ஒன்று, கற்பனாவாத நாவல்களின் முற்றிலும் ஒற்றைப்படையான உணர்வெழுச்சி இதில் இல்லை. உணர்வெழுச்சியை கதைசொல்லியின் அகக்குரலில் வெளிப்படும் தத்துவார்த்தமான மதிப்பீடு சமன்செய்கிறது. அனுபவங்களிலிருந்து சிந்தனைக்கும் இவை இரண்டிலிருந்தும் தரிசனத்துக்குமான  ஒரு பாய்ச்சல் இந்த நாவலில் நடக்கிறது. இரண்டு, இந்த நாவலின் இயல்புவாத யதார்த்தம் இதன் கற்பனாவாதத்திற்கு ஒரு தளத்தை அமைக்கிறதே ஒழிய கற்பனாவாதத்திற்கு எதிராகவோ அதை குலைக்கும் வகையிலேயோ முன்வைக்கப்படவில்லை. ‘கற்பனாவாதத்திற்கு யதார்த்தத்தில் இடம் என்ன’ என்ற கேள்வியை கேட்கவில்லை. நாவல் கற்பனாவாதம், யதார்த்தம் இரண்டையும் தாண்டிய ஒரு ஆன்மீக உன்னதத்தையே எட்ட முயல்கிறது.

அந்த அடிப்படையில் ‘மைத்ரி’யில் ஒரு செவ்வியல் பயண இதிகாசத்தின் தன்மையே மேலோங்கி இருக்கிறது. முக்கியமாக புறப்பயணத்தின் வழியே அகப்பயணத்தை உணர்த்துதல் எனும் அம்சம். இதுவே தொன்மங்களிலிருந்து நவீன கலைஞன் பெறும் படைப்பாற்றல். நோசிகாவை சந்திப்பதன் வழியாக ஒடீசியஸ் உளம் மாறி அமைந்தான். பியாட்ரிஸின் துணையுடன் தாந்தே இன்ஃபெர்னோவில் இருந்து பாரடைஸோவுக்கு எழுந்தார். இந்த நாவலில் மைத்ரியின் இடம் நோசிகாவையும் பியாட்ரிஸையும் ஒத்ததாக இருக்கிறது. நம்முடைய தொன்மங்களில் அர்ஜுனன் இப்படியான பயணங்கள் மேற்கொண்டவன். சௌகந்திக மலரை பெற சென்ற பீமன் மேலும் நெருக்கமானவன். நாவலில் அந்த தொன்மம் ஒரு விதத்தில் மறுஆக்கம் பெறுகிறது. காதலின் பரிசாக நிகழும் அந்த தருணம் நாவலின் உச்சங்களில் ஒன்று.

பயண இதிகாசங்களின் கதாநாயகன் ஒரு கட்டத்தில் தன் அகத்தின் ஓர் அம்சத்துடன் போராடி வென்றால் மட்டுமே மேலே செல்ல முடியும். அது தான் காவிய நியதி. நாவலின் முகப்பாக அமைந்திருக்கும் காஷ்மீரி சைவ கவிஞர் லல்லேஷ்வரியின் வரிகளிலும் அந்தக் கூற்று இருக்கிறது. ஹரன் கதாபாத்திரத்தின் மிகப்பெரிய ஈர்ப்புப் புள்ளியான அவனது இளம் அகத்தின் பற்றிக்கொள்ளும் தன்மையே அவன் போராடி வெல்ல வேண்டியதும் கூட. நாவலின் கடைசி பகுதியில் அது நிகழ்கிறது.

“இமயமலையை காண்கையில் கங்கையில் நீராடுகையில் நம்முடைய பாபங்களெல்லாம் தீரும் என்ற நம்பிக்கை வெறும் ஆசாரமல்ல. மலையையும் நதியையும் காணும் போது அதன் விரிவை உள்வாங்க நம் உள்ளமும் விரிகிறது. அப்படி விரியும் உள்ளத்தால் பரம்பொருளை எளிதாக உணர்ந்துவிட முடியும்” என்கிறார் நடராஜ குரு.

ஓரளவுக்கு மேல் இந்த இடங்கள் நாவல் தரும் அனுபவமாகவே எஞ்ச வேண்டும் என்று நினைக்கிறேன். புறவயமாக வகுத்துக் கூறுவது கடினம். சில சாத்தியங்களை மட்டும் சுட்டிக்காட்டலாம்.

தேவபூமி என்று அழைக்கப்படும் அந்த நிலத்தில் வேரூன்றிய சைவம் சார்ந்த படிமங்களும் தரிசனமும் நாவலில் வெகு இயல்பாக அமைந்துள்ளன. முக்கியமாக லல்லேஷ்வரியில் ஆரம்பித்து இதில் இடம் பெரும் காஷ்மீரி சைவத்தின் தாக்கம். ஹரனின் பயணத்தை மனிதனுள் உறையும் மும்மலங்களான ஆணவம், கர்மம், மாயா ஆகியவற்றை களையும் பயணமாக வாசிக்க சாத்தியம் உள்ளது. காஷ்மீரி சைவத்தின் ‘திரிகா’ தரிசனம் போல அதன் படிநிலைகள் அமைந்துள்ளது. ‘அபரம்,’ ‘பராபரம்,’ ‘பரம்’ என இந்நாவலின் மூன்று பகுதிகளை வாசிக்கலாம். ஆணவ மலமும் கர்ம மலமும் ஒருவனால் சுயமாக கடக்க முடியும், ஆனால் மாயா மலம் கடக்க சக்தியின் அருளாலேயே முடியும் என்கிறது காஷ்மீர சைவம். நாவலில் ஹரன் அதை எதிர்கொள்ளும் தருணம் ‘சப்ளைம்’ஆன பேரனுபவம். அந்த அனுபவத்துக்கு முன் ஒரு சுயமிழப்பு நிலையை எய்துகிறான், அது தன்முனைப்பான சுயம் அழிப்பும் கூட. பனிமலை உச்சியில் ஹரன் கண்டுகொள்வது காஷ்மீர சைவத்தின் ‘பிரத்யபிக்ஞா’ (மறுகண்டடைவு/Re-cognition) என்ற நிலைக்கு மிக நெருக்கமானது. சிவன் தன்னை தான் கண்டடைதல்.

இந்திய நிலத்தின் தொன்மையான தத்துவ தரிசனமான சாங்கியத்தில் தொடங்கி காஷ்மீரி சைவம் வரை நீளும் ஒரு கருத்து உண்டு. அது ‘பிரகிருதி’ என்று சொல்லப்படும் இயற்கையின் இரண்டு பக்கங்கள். ஒரு பக்கம் அது மனிதனுக்கு அனுபவங்களை கொடுக்கிறது. இதை போகம் என்கிறார்கள். மறுபக்கம் அந்த அனுபவங்களிலிருந்து உருவாகும் சுகதுக்கங்களை நிவர்த்தி செய்து வீடுபேறுக்கு வழி வகுக்கிறது. இதை அபவர்கம் என்கிறார்கள். சாங்கியத்தை பொருத்த வரை போகம்-அபவர்கம், அனுபவம்-மோட்சம், இரண்டையுமே அருள்வது இயற்கை தான். காஷ்மீரி சைவத்தில் பிரத்யபிக்ஞா நிலைக்கு இட்டுசெல்வது சக்திபாதை எனப்படுகிறது. இந்த நாவலின் சக்தி தரிசனம் இயற்கையின் புரிந்துகொள்ளமுடியாத இந்த இருமைநிலையை ஒரு பேரனுபவமாக ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்துள்ளது.

நாவலின் இறுதியில் ஹரன் முன் ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது. எந்த ஆன்மீக அகப்பயணமும் சென்று அடையும் கேள்வி அது. தேடல் அங்கு முடிகிறது. மற்றொன்று துவங்குகிறது.

இந்த உயர்தளத்தில் ஒரு எழுத்தாளரின் முதல் படைப்பு அமைவதென்பது சற்று அபூர்வமானது. அஜிதனுக்கு அது சாத்தியப்பட்டிருக்கிறது. இத்தருணத்தில் இந்த அழகிய படைப்பின் ஆசிரியரான என் நண்பனை மகிழ்ச்சியும் பெருமிதமுமாக எண்ணிக்கொள்கிறேன். அஜிதன் மென்மேலும் சிறந்த கலை ஆக்கங்களை படைக்க வேண்டும். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

சுசித்ரா

பாசல், சுவிட்சர்லாந்து

28.04.2022

விஷ்ணுபுரம் பதிப்பகம்

info@vishnupurampublications.com

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 09, 2022 11:34

மைத்ரி – இயற்கையின் தெய்வீகம்- சுசித்ரா

மைத்ரி நாவல் இணைய தளம்

 

நித்யசைதன்ய யதி தன் இளம்வயதில் ஆசிரியர் நடராஜ குருவுடன் இமையமலையை காணச்சென்ற நிகழ்வை ‘குருவும் சீடனும்’ என்ற நூலில் பதிவுசெய்துள்ளார். அவர் இமயமலையைக் காண்பது அதுவே முதல் முறை. அவர்கள் முன் கம்பீரமாக எழுந்து நின்றது பனிமலை, வெண்முகில்கள் சூழ்ந்து நின்றன அதன் சிகரங்கள். நித்யாவின் பரவசத்தை கண்ட நடராஜ குரு, “இதோ இந்தப் பேரழகின் தரிசனமே காளிதாசனை கவிஞனாக்கியது” என்றார். “ஒருவன் இந்தக் காட்சியை கண்டபிறகும் அவனுக்குள் தெய்வீகத்தை பற்றிய ஞானம் உருவாகவில்லையென்றால் அவன் மீட்கப்படமுடியாத குருடன். நம் உள்ளங்களில் இந்தக்கணம் பொங்கும் பரவசமே கடவுள்.”

நித்யசைதன்ய யதியின் மாணவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர் ஜெயமோகன். அதேபோல அஜிதன் தன் மகன் மட்டும் அல்ல மாணவரும் கூட என்று ஜெயமோகன் பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறார். ஆக குருதி உறவுக்கு அப்பால் குருவழி தொடர்ச்சி ஒன்றும் இருக்கிறது, நடராஜ குருவில் தொடங்கி அஜிதன் வரை. அதன் செல்வாக்கு அஜிதனின் முதல் நாவலான ‘மைத்ரி’யில் தெரிகிறது. இது முழுக்க முழுக்க இயற்கையின் பேரழகை ஒரு மனித உள்ளம் சந்திக்கையில் உருவாகும் பரவசத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள நாவல். இயற்கையின் தெய்வீகம் என்று நடராஜ குரு சுட்டிக்காட்டும் பண்பால் நிறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ் இலக்கியத்தில் ‘மைத்ரி’ மிகப்புதுமையான முயற்சி.

அஜிதனை அறிந்த வகையில், அவருடைய நாட்டங்கள் ஒரு புறம் உயர் கலை சார்ந்தவை. குறிப்பாக இசை. அவர் இசைமேதை வாக்னர் மேல் கொண்டுள்ள மாபெரும் ஆராதனையை அவருடன் சற்றேனும் பழகிய அனைவரும் அறிவர். மறுபுறம் கீழை, மேலை தத்துவங்களில் ஆழமான படிப்பு உடையவர். குறிப்பாக ஷோப்பனவரில். அவருடைய விரிந்த கலை-தத்துவார்த்த படிப்புகளின் தாக்கம் இந்த நாவலில் காணக்கிடைக்கிறது.

பொதுவாக தத்துவார்த்தமான தளங்களை ஒரு நாவல் தொட்டுச்செல்லும் போது பல சமயங்களில் அடிவயிற்றில் கல்லை கட்டினாற்போல் தத்துவ மொழியின் கனம் அதில் விழுந்துவிடுகிறது. அப்போது அது அடிப்படையான அனுபவ உணர்ச்சியை சற்று குறைக்கிறது. இந்த நாவலில் அது நிகழவில்லை. ‘மைத்ரி’யின் மிகப்பெரிய பலம் முழுக்கவே புலன்விழிப்பினால், துளித்துளியான அனுபவ சேர்க்கையினால் ஆசிரியர் நமக்கு கதை சொல்வதுதான். ஓங்கும் இமயமலையைக்காணும் பரவசத்தின் வழியே நடராஜகுரு கடவுளை கண்டதுபோல் இந்த நாவல் அளிக்கும் உணர் அனுபவங்களே இதன் ஆழங்களை கடத்துகின்றன.

அதற்கு பெரிய உறுதுணையாக இருப்பது இந்த நாவலில் துடியுடன் வெளிப்படும் ‘இளமை’ என்ற அம்சம். நாவலின் கதைசொல்லி ஹரன் சற்று அறிவுஜீவியான சமகால இளைஞன் ஒருவனின் அமையமுடியாமை, தேடல், கசப்பு, நையாண்டி எல்லாம் வெளிப்படும் கதாபாத்திரம். ஒவ்வொரு கணமும் புலன்களை அகலத் திறந்து சுற்றத்தை துழாவிக்கொண்டே இருப்பவன். அழகுணர்ச்சி, காமம், கற்பனாவாத எழுச்சிகள் கொண்டவன். அதே சமயம் குழந்தைக்கால களங்கமின்மை முற்றாக அழியாத ஒருவன். இவை எல்லாம் அவனில் அலைமோதுகின்றன. இப்படிச்சொல்லலாம், எந்த ஆர்வமும் புலன் கூர்மையும் அழகுணர்ச்சியும் நடராஜ குரு போன்றவரில் கனிந்து ஞானமாகிறதோ, அதே விஷயங்கள் ஹரனில் இளம் ரத்தத்தின் உணர்ச்சிகளோடு கொப்பளிக்கின்றன. இப்படி அலைமோதி நுரைக்கும் இளமையே இந்த நாவலின் துடிப்பான தாளத்தை கட்டமைக்கிறது.

ஹரனில் இந்த வண்ணங்கள் மாறி மாறி வருவது நாவலின் மிக வசீகரமான அம்சங்களில் ஒன்று. உதாரணமாக நாவலில் ஹரன் சௌந்தரியலஹரியை பரவசத்துடன் நினைவுகூரும் ஒரு இடம் வருகிறது. அதற்கு அடுத்த வரியிலேயே ஆதிசங்கரர் மீதான அவனது சிறிய சீண்டல் வெளிப்படுகிறது. சௌந்தரியலஹரிக்கு உரை எழுதிய நடராஜ குருவும் அந்த இடத்தில் சிரித்திருப்பார்.

இறப்பும் பிரிவும் என அகச்சிக்கல்களால் அலைக்கழிக்கப்படும் ஹரன் ஏதோ உள்ளுணர்வால் கங்கையின் ஊற்றுநதிகளில் ஒன்றான மந்தாகினியின் பாதை வழியாக இமயமலை அடுக்குகளுக்குள் ஏறி கேதார்நாத் வரை போக முடிவெடுக்கிறான். வழியில் மைத்ரி பன்வார் என்ற இளம் கட்வாலி பெண்ணை சந்திக்கிறான். அவர்களுக்குள் ஒரு பந்தம் உருவாக, அவள் அவனை மலைகளுக்குள் இருக்கும் தன் மூதாதையர்களின் ஊருக்குக் கூட்டிச்செல்கிறாள்.

மலைகள், வானம், பருவம், பூக்கள் மட்டுமல்லாது, அந்த நிலத்தின் மக்கள், அவர்களுடைய வாழ்க்கை முறை என்று அனைத்தையும் ஆசிரியர் துளித்துளியாக இந்த பயணத்திற்குள் கட்டி வைத்திருக்கிறார். விலங்குகளின் பராமரிப்பு, இசை, மேய்ச்சல் நிலமக்களின் வாழ்வியல், உணவு பண்பாடு, பண்டிகைகள், கொண்டாட்டங்கள், குலதேவதா சடங்குகள் என்று ஒரு முழு பண்பாட்டையே படைக்கிறார்.

இந்தக்கதையை ஆழமாக்குவது மூன்று விஷயங்கள். ஒன்று, ஹரனின் இளமை, தீவிரம். இரண்டு, மைத்ரி, அவளுடனான பயணம் வழியே ஹரன் எதிர்கொள்ளும் இயற்கை. மூன்று, இந்தப் பயணத்திற்கு பின்னால் நிகழும் ஆழமான சுயவிசாரணை சார்ந்த பகுதிகள்.

நாவலில் புறப்பயணத்துக்கு நிகராகவே அகப்பயணம் ஒன்றும் நிகழ்கிறது. புறமும் அகமும், இயற்கையும் காதலும், துடைத்துவைத்த கண்ணாடிகளைப்போல் துல்லியமாக ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன.

மேலோட்டமாக இந்த நாவலுக்கு முன்னோடி வடிவங்கள் என தோன்றுவது பத்தொன்பதாம் நூற்றாண்டின் கற்பனாவாத நாவல்கள்தான். கண்டிப்பாக அவற்றின் சாயல் இதில் உள்ளது. கதேயின் ‘காதலின் துயரம்’ (The Sorrows of Young Werther), அலெக்சாண்டர் குப்ரினின் ‘ஒலெஸ்யா’ (Olesya) போன்ற நாவல்களைச் உதாரணமாக சொல்லலாம். அவையும் வயதடைதலை (bildungsroman) சொல்லும் நாவல்களே. ஆகவே அவற்றுடனான ஒப்பீடுகளும் இயல்பானவை தான்.

அந்த நாவல்களிலிருந்து ‘மைத்ரி’ எங்கு வேறுபடுகிறது? ஒன்று, கற்பனாவாத நாவல்களின் முற்றிலும் ஒற்றைப்படையான உணர்வெழுச்சி இதில் இல்லை. உணர்வெழுச்சியை கதைசொல்லியின் அகக்குரலில் வெளிப்படும் தத்துவார்த்தமான மதிப்பீடு சமன்செய்கிறது. அனுபவங்களிலிருந்து சிந்தனைக்கும் இவை இரண்டிலிருந்தும் தரிசனத்துக்குமான  ஒரு பாய்ச்சல் இந்த நாவலில் நடக்கிறது. இரண்டு, இந்த நாவலின் இயல்புவாத யதார்த்தம் இதன் கற்பனாவாதத்திற்கு ஒரு தளத்தை அமைக்கிறதே ஒழிய கற்பனாவாதத்திற்கு எதிராகவோ அதை குலைக்கும் வகையிலேயோ முன்வைக்கப்படவில்லை. ‘கற்பனாவாதத்திற்கு யதார்த்தத்தில் இடம் என்ன’ என்ற கேள்வியை கேட்கவில்லை. நாவல் கற்பனாவாதம், யதார்த்தம் இரண்டையும் தாண்டிய ஒரு ஆன்மீக உன்னதத்தையே எட்ட முயல்கிறது.

அந்த அடிப்படையில் ‘மைத்ரி’யில் ஒரு செவ்வியல் பயண இதிகாசத்தின் தன்மையே மேலோங்கி இருக்கிறது. முக்கியமாக புறப்பயணத்தின் வழியே அகப்பயணத்தை உணர்த்துதல் எனும் அம்சம். இதுவே தொன்மங்களிலிருந்து நவீன கலைஞன் பெறும் படைப்பாற்றல். நோசிகாவை சந்திப்பதன் வழியாக ஒடீசியஸ் உளம் மாறி அமைந்தான். பியாட்ரிஸின் துணையுடன் தாந்தே இன்ஃபெர்னோவில் இருந்து பாரடைஸோவுக்கு எழுந்தார். இந்த நாவலில் மைத்ரியின் இடம் நோசிகாவையும் பியாட்ரிஸையும் ஒத்ததாக இருக்கிறது. நம்முடைய தொன்மங்களில் அர்ஜுனன் இப்படியான பயணங்கள் மேற்கொண்டவன். சௌகந்திக மலரை பெற சென்ற பீமன் மேலும் நெருக்கமானவன். நாவலில் அந்த தொன்மம் ஒரு விதத்தில் மறுஆக்கம் பெறுகிறது. காதலின் பரிசாக நிகழும் அந்த தருணம் நாவலின் உச்சங்களில் ஒன்று.

பயண இதிகாசங்களின் கதாநாயகன் ஒரு கட்டத்தில் தன் அகத்தின் ஓர் அம்சத்துடன் போராடி வென்றால் மட்டுமே மேலே செல்ல முடியும். அது தான் காவிய நியதி. நாவலின் முகப்பாக அமைந்திருக்கும் காஷ்மீரி சைவ கவிஞர் லல்லேஷ்வரியின் வரிகளிலும் அந்தக் கூற்று இருக்கிறது. ஹரன் கதாபாத்திரத்தின் மிகப்பெரிய ஈர்ப்புப் புள்ளியான அவனது இளம் அகத்தின் பற்றிக்கொள்ளும் தன்மையே அவன் போராடி வெல்ல வேண்டியதும் கூட. நாவலின் கடைசி பகுதியில் அது நிகழ்கிறது.

“இமயமலையை காண்கையில் கங்கையில் நீராடுகையில் நம்முடைய பாபங்களெல்லாம் தீரும் என்ற நம்பிக்கை வெறும் ஆசாரமல்ல. மலையையும் நதியையும் காணும் போது அதன் விரிவை உள்வாங்க நம் உள்ளமும் விரிகிறது. அப்படி விரியும் உள்ளத்தால் பரம்பொருளை எளிதாக உணர்ந்துவிட முடியும்” என்கிறார் நடராஜ குரு.

ஓரளவுக்கு மேல் இந்த இடங்கள் நாவல் தரும் அனுபவமாகவே எஞ்ச வேண்டும் என்று நினைக்கிறேன். புறவயமாக வகுத்துக் கூறுவது கடினம். சில சாத்தியங்களை மட்டும் சுட்டிக்காட்டலாம்.

தேவபூமி என்று அழைக்கப்படும் அந்த நிலத்தில் வேரூன்றிய சைவம் சார்ந்த படிமங்களும் தரிசனமும் நாவலில் வெகு இயல்பாக அமைந்துள்ளன. முக்கியமாக லல்லேஷ்வரியில் ஆரம்பித்து இதில் இடம் பெரும் காஷ்மீரி சைவத்தின் தாக்கம். ஹரனின் பயணத்தை மனிதனுள் உறையும் மும்மலங்களான ஆணவம், கர்மம், மாயா ஆகியவற்றை களையும் பயணமாக வாசிக்க சாத்தியம் உள்ளது. காஷ்மீரி சைவத்தின் ‘திரிகா’ தரிசனம் போல அதன் படிநிலைகள் அமைந்துள்ளது. ‘அபரம்,’ ‘பராபரம்,’ ‘பரம்’ என இந்நாவலின் மூன்று பகுதிகளை வாசிக்கலாம். ஆணவ மலமும் கர்ம மலமும் ஒருவனால் சுயமாக கடக்க முடியும், ஆனால் மாயா மலம் கடக்க சக்தியின் அருளாலேயே முடியும் என்கிறது காஷ்மீர சைவம். நாவலில் ஹரன் அதை எதிர்கொள்ளும் தருணம் ‘சப்ளைம்’ஆன பேரனுபவம். அந்த அனுபவத்துக்கு முன் ஒரு சுயமிழப்பு நிலையை எய்துகிறான், அது தன்முனைப்பான சுயம் அழிப்பும் கூட. பனிமலை உச்சியில் ஹரன் கண்டுகொள்வது காஷ்மீர சைவத்தின் ‘பிரத்யபிக்ஞா’ (மறுகண்டடைவு/Re-cognition) என்ற நிலைக்கு மிக நெருக்கமானது. சிவன் தன்னை தான் கண்டடைதல்.

இந்திய நிலத்தின் தொன்மையான தத்துவ தரிசனமான சாங்கியத்தில் தொடங்கி காஷ்மீரி சைவம் வரை நீளும் ஒரு கருத்து உண்டு. அது ‘பிரகிருதி’ என்று சொல்லப்படும் இயற்கையின் இரண்டு பக்கங்கள். ஒரு பக்கம் அது மனிதனுக்கு அனுபவங்களை கொடுக்கிறது. இதை போகம் என்கிறார்கள். மறுபக்கம் அந்த அனுபவங்களிலிருந்து உருவாகும் சுகதுக்கங்களை நிவர்த்தி செய்து வீடுபேறுக்கு வழி வகுக்கிறது. இதை அபவர்கம் என்கிறார்கள். சாங்கியத்தை பொருத்த வரை போகம்-அபவர்கம், அனுபவம்-மோட்சம், இரண்டையுமே அருள்வது இயற்கை தான். காஷ்மீரி சைவத்தில் பிரத்யபிக்ஞா நிலைக்கு இட்டுசெல்வது சக்திபாதை எனப்படுகிறது. இந்த நாவலின் சக்தி தரிசனம் இயற்கையின் புரிந்துகொள்ளமுடியாத இந்த இருமைநிலையை ஒரு பேரனுபவமாக ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்துள்ளது.

நாவலின் இறுதியில் ஹரன் முன் ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது. எந்த ஆன்மீக அகப்பயணமும் சென்று அடையும் கேள்வி அது. தேடல் அங்கு முடிகிறது. மற்றொன்று துவங்குகிறது.

இந்த உயர்தளத்தில் ஒரு எழுத்தாளரின் முதல் படைப்பு அமைவதென்பது சற்று அபூர்வமானது. அஜிதனுக்கு அது சாத்தியப்பட்டிருக்கிறது. இத்தருணத்தில் இந்த அழகிய படைப்பின் ஆசிரியரான என் நண்பனை மகிழ்ச்சியும் பெருமிதமுமாக எண்ணிக்கொள்கிறேன். அஜிதன் மென்மேலும் சிறந்த கலை ஆக்கங்களை படைக்க வேண்டும். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

சுசித்ரா

பாசல், சுவிட்சர்லாந்து

28.04.2022

விஷ்ணுபுரம் பதிப்பகம்

info@vishnupurampublications.com

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 09, 2022 11:34

குருதிப்புனல்- வாசிப்பு

குருதிப்புனல் வாங்க

அன்புள்ள ஜெ,

முன்பு ஒரு முறை நான் உங்களிடம் “முத்துலிங்கம் ஏன் இலங்கை போர் குறித்து எழுதவில்லை?” எனக் கேட்டதற்கு “ஒரு படைப்பாளன் தான் வாழ்ந்த காலத்தில் நடந்த எல்லா நிகழ்வுகள் பற்றியும் எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை, எது அவனை பாதிக்கிறதோ அதை மட்டுமே எழுதுவான். சுதந்திர போராட்ட காலத்தில் வாழ்ந்த புதுமைப்பித்தன் சுதந்திர போர் பற்றி எழுதவில்லை” என்றீர்கள். கீழ்வெண்மணி சம்பவத்தை மையமாக கொண்டு பாட்டாளியின் “கீளைத் தீ”, சோலை சுந்தரப் பெருமாள் எழுதிய “செந்நெல்” என முன்பே வந்திருந்தாலும் இ. பா வின் குருதிப்புனல் ஒரு முக்கிய படைப்பு. பல பத்திரிகைகள் இந்தக் கதையை பிரசுரிக்க மறுத்து பின் கணையாழியில் தொடராக வெளிவந்தது. 1968 டிசம்பர் 25 அன்று கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டு போராடிய மக்கள் மீது தாக்குதல் நடந்து பின் 44 பேர் குடிசையில் வைத்து கொளுத்தப்பட்டனர், சொல்லப்போனால் இன்னொரு சிலுவையேற்றம். இந்த சம்பவத்தை கொஞ்சம் புனைவு கலந்து கொடுத்துள்ளார். இதில் உண்மையில் பாதிக்கப்பட்ட ராமையா என்பவரையும், அதற்கு போராடிய கம்யூனிஸ்ட் போராளி பி.சீனிவாசராவ் என்ற பிராமணர் கதாபாத்திரத்தில் சிவா என்று மாற்றி படைத்துள்ளார். மற்றபடி சம்பவங்கள் அனைத்தும் உண்மையே. சம்பவத்தில் தொடர்புடைய கோபாலகிருஷ்ண நாயுடுவை கண்ணையா நாயுடு என மாற்றியுள்ளார்.

டெல்லியில் வசிக்கும் சிவா என்ற பிராமண இளைஞன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருவாரூர் சென்ற தன் நண்பன் கோபாலைத் தேடி திருவாரூர் வருகிறான். வந்த உடன் திருவாரூரில் வந்து தங்கும் போது லாட்ஜில் ‘உங்களுக்கு மலையாள பெண் வேண்டுமா? பிராமணப் பெண் வேண்டுமா?’ என அங்கு உள்ளவன் கேட்கிறான். தி.ஜானகிராமன் சிறுகதைகளில் தஞ்சை பகுதியில் காட்டும் தேவதாசிகள் போலவே இங்கும் காட்டுகிறார். கோபாலை கிராமத்தில் சந்திக்கிறான். கோபால் கிராமத்தில் உள்ள கம்யூனிஸ்ட் போராளி ராமையாவின் வீட்டில் தங்கி அவருடன் இணைந்து அந்த கிராமத்து மக்களுக்காக போராடுகிறான். அங்குள்ள தலித் மக்கள் மீது கண்ணையா நாயுடு நிகழ்த்தும் கொடுமைகள் பற்றி அறிந்து கொள்கிறான் சிவா. தன நண்பன் கோபாலுடன் இணைந்து போராட முடிவெடுக்கிறான். தன்னைக் காண வந்த அமைதியின் வடிவான சிவா தங்களுடன் இணைந்து போராடுவது கோபாலுக்கு ஆச்சர்யம்.

நாயுடு வெளியூரிலிருந்து ஆட்களை வைத்து வேலை வாங்குகிறார். போராடும் கம்யூனிஸ்ட் கட்சியினரை மிரட்டுகிறார் மேலும் தன் சங்கத்தில் அவர்கள் சேர்ந்தால் மட்டுமே வேலை என்றும் கூறுகிறார். நாயுடுவை எதிர்த்து ராமையா மற்றும் கோபால் எடுக்கும் முடிவுகளை நாயுடு முறியடிக்கிறார். ஊரில் வசிக்கும் பாப்பாத்தி மற்றும் வடிவேலு இருவரையும் பிடித்து தனி அறையில் வைத்து அவர்கள் காணாமல் போனதற்கு கரணம் கோபாலும் ராமையவுமே என கதை கட்டி விடுகிறார் நாயுடு. இதை கண்டறிய நாயுடுவின் வைப்பாட்டி பங்கஜத்தை பார்க்க செல்லும் கோபால் அங்கே வடிவேலுவும் பாப்பாத்தியும் இருப்பதை கண்டறிகிறான். இருவரையும் மீட்டுவிடுகிறான். ஆனால் இரண்டு நாட்களில் பாப்பாத்தியை நாயுடுவின் ஆட்கள் கொலை செய்கிறார்கள். பழியை கோபால் மீது போட கோபாலை போலீஸ் தேடுகிறது. ராமையா மற்றும் அவரது தோழர்கள் பலரையும் நாயுடு போலீசில் மாட்டிவிட இறுதியில் கோபால் நாயுடுவை தேடி ஊருக்குள் போக அங்கே குடிசையில் வைத்து பெண்களை, குழந்தைகளை அடைத்து வைத்து நெருப்பிட்டு கொளுத்துகிறார்கள். தூரத்தில் நெருப்பு எரிவதையும் மக்களின் மரண ஓலத்தையும் கேட்கிறான் கோபால். அவன் நிற்கும் ஓடையில் தண்ணீர் முழுவதும் ரத்தம் கலந்து குருதி புனலாக வருவதுடன் கதை முடிகிறது.

உண்மை சம்பவத்தில் கோபால கிருஷ்ண நாயுடு திருமணமாகாதவர் அதனால் கதையில் கன்னையா நாயுடு ஆண்மை அற்றவராக காட்டியதாக இ. பா. கூறுகிறார். அதனால் தான் பல பெண்கள் உடன் தொடர்புள்ளதாக தன்னைக் காட்டுகிறார். அந்த இயலாமையின் காரணமாகவே பாபாத்தி, பங்கஜம், என பெண்களை கொடுமை செய்வதாக காட்டுகிறார். பாலியல் பிறழ்வுகள் நாவல் முழுதும் விரவி வருகிறது. பிராய்டிய வழியில் பாலின பிரச்சனையை கொண்டுவந்து பொருளாதார பிரச்சனையை கொச்சைப்படுத்தி விட்டதாக மார்க்சியர்கள் இந்த நாவலை எதிர்த்தனர். பின்னால் அதற்காக வருத்தப்பட்டதும் நடந்தேறியது. கீழவெண்மணி சம்வம் குறித்து எழுதப்பட்ட “குருதிப்புனல்” தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கிய நாவல்.

மாறா அன்புடன்

செல்வா

பட்டுக்கோட்டை.

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 09, 2022 11:31

குருதிப்புனல்- வாசிப்பு

குருதிப்புனல் வாங்க

அன்புள்ள ஜெ,

முன்பு ஒரு முறை நான் உங்களிடம் “முத்துலிங்கம் ஏன் இலங்கை போர் குறித்து எழுதவில்லை?” எனக் கேட்டதற்கு “ஒரு படைப்பாளன் தான் வாழ்ந்த காலத்தில் நடந்த எல்லா நிகழ்வுகள் பற்றியும் எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை, எது அவனை பாதிக்கிறதோ அதை மட்டுமே எழுதுவான். சுதந்திர போராட்ட காலத்தில் வாழ்ந்த புதுமைப்பித்தன் சுதந்திர போர் பற்றி எழுதவில்லை” என்றீர்கள். கீழ்வெண்மணி சம்பவத்தை மையமாக கொண்டு பாட்டாளியின் “கீளைத் தீ”, சோலை சுந்தரப் பெருமாள் எழுதிய “செந்நெல்” என முன்பே வந்திருந்தாலும் இ. பா வின் குருதிப்புனல் ஒரு முக்கிய படைப்பு. பல பத்திரிகைகள் இந்தக் கதையை பிரசுரிக்க மறுத்து பின் கணையாழியில் தொடராக வெளிவந்தது. 1968 டிசம்பர் 25 அன்று கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டு போராடிய மக்கள் மீது தாக்குதல் நடந்து பின் 44 பேர் குடிசையில் வைத்து கொளுத்தப்பட்டனர், சொல்லப்போனால் இன்னொரு சிலுவையேற்றம். இந்த சம்பவத்தை கொஞ்சம் புனைவு கலந்து கொடுத்துள்ளார். இதில் உண்மையில் பாதிக்கப்பட்ட ராமையா என்பவரையும், அதற்கு போராடிய கம்யூனிஸ்ட் போராளி பி.சீனிவாசராவ் என்ற பிராமணர் கதாபாத்திரத்தில் சிவா என்று மாற்றி படைத்துள்ளார். மற்றபடி சம்பவங்கள் அனைத்தும் உண்மையே. சம்பவத்தில் தொடர்புடைய கோபாலகிருஷ்ண நாயுடுவை கண்ணையா நாயுடு என மாற்றியுள்ளார்.

டெல்லியில் வசிக்கும் சிவா என்ற பிராமண இளைஞன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருவாரூர் சென்ற தன் நண்பன் கோபாலைத் தேடி திருவாரூர் வருகிறான். வந்த உடன் திருவாரூரில் வந்து தங்கும் போது லாட்ஜில் ‘உங்களுக்கு மலையாள பெண் வேண்டுமா? பிராமணப் பெண் வேண்டுமா?’ என அங்கு உள்ளவன் கேட்கிறான். தி.ஜானகிராமன் சிறுகதைகளில் தஞ்சை பகுதியில் காட்டும் தேவதாசிகள் போலவே இங்கும் காட்டுகிறார். கோபாலை கிராமத்தில் சந்திக்கிறான். கோபால் கிராமத்தில் உள்ள கம்யூனிஸ்ட் போராளி ராமையாவின் வீட்டில் தங்கி அவருடன் இணைந்து அந்த கிராமத்து மக்களுக்காக போராடுகிறான். அங்குள்ள தலித் மக்கள் மீது கண்ணையா நாயுடு நிகழ்த்தும் கொடுமைகள் பற்றி அறிந்து கொள்கிறான் சிவா. தன நண்பன் கோபாலுடன் இணைந்து போராட முடிவெடுக்கிறான். தன்னைக் காண வந்த அமைதியின் வடிவான சிவா தங்களுடன் இணைந்து போராடுவது கோபாலுக்கு ஆச்சர்யம்.

நாயுடு வெளியூரிலிருந்து ஆட்களை வைத்து வேலை வாங்குகிறார். போராடும் கம்யூனிஸ்ட் கட்சியினரை மிரட்டுகிறார் மேலும் தன் சங்கத்தில் அவர்கள் சேர்ந்தால் மட்டுமே வேலை என்றும் கூறுகிறார். நாயுடுவை எதிர்த்து ராமையா மற்றும் கோபால் எடுக்கும் முடிவுகளை நாயுடு முறியடிக்கிறார். ஊரில் வசிக்கும் பாப்பாத்தி மற்றும் வடிவேலு இருவரையும் பிடித்து தனி அறையில் வைத்து அவர்கள் காணாமல் போனதற்கு கரணம் கோபாலும் ராமையவுமே என கதை கட்டி விடுகிறார் நாயுடு. இதை கண்டறிய நாயுடுவின் வைப்பாட்டி பங்கஜத்தை பார்க்க செல்லும் கோபால் அங்கே வடிவேலுவும் பாப்பாத்தியும் இருப்பதை கண்டறிகிறான். இருவரையும் மீட்டுவிடுகிறான். ஆனால் இரண்டு நாட்களில் பாப்பாத்தியை நாயுடுவின் ஆட்கள் கொலை செய்கிறார்கள். பழியை கோபால் மீது போட கோபாலை போலீஸ் தேடுகிறது. ராமையா மற்றும் அவரது தோழர்கள் பலரையும் நாயுடு போலீசில் மாட்டிவிட இறுதியில் கோபால் நாயுடுவை தேடி ஊருக்குள் போக அங்கே குடிசையில் வைத்து பெண்களை, குழந்தைகளை அடைத்து வைத்து நெருப்பிட்டு கொளுத்துகிறார்கள். தூரத்தில் நெருப்பு எரிவதையும் மக்களின் மரண ஓலத்தையும் கேட்கிறான் கோபால். அவன் நிற்கும் ஓடையில் தண்ணீர் முழுவதும் ரத்தம் கலந்து குருதி புனலாக வருவதுடன் கதை முடிகிறது.

உண்மை சம்பவத்தில் கோபால கிருஷ்ண நாயுடு திருமணமாகாதவர் அதனால் கதையில் கன்னையா நாயுடு ஆண்மை அற்றவராக காட்டியதாக இ. பா. கூறுகிறார். அதனால் தான் பல பெண்கள் உடன் தொடர்புள்ளதாக தன்னைக் காட்டுகிறார். அந்த இயலாமையின் காரணமாகவே பாபாத்தி, பங்கஜம், என பெண்களை கொடுமை செய்வதாக காட்டுகிறார். பாலியல் பிறழ்வுகள் நாவல் முழுதும் விரவி வருகிறது. பிராய்டிய வழியில் பாலின பிரச்சனையை கொண்டுவந்து பொருளாதார பிரச்சனையை கொச்சைப்படுத்தி விட்டதாக மார்க்சியர்கள் இந்த நாவலை எதிர்த்தனர். பின்னால் அதற்காக வருத்தப்பட்டதும் நடந்தேறியது. கீழவெண்மணி சம்வம் குறித்து எழுதப்பட்ட “குருதிப்புனல்” தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கிய நாவல்.

மாறா அன்புடன்

செல்வா

பட்டுக்கோட்டை.

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 09, 2022 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.