Jeyamohan's Blog, page 739

July 28, 2022

வள்ளலார்

வள்ளலார் பற்றிய இப்பதிவு எத்தனை ஆளுமைகளை உள்ளிழுத்துக்கொண்டு விரிகிறது என்று பார்க்கையில் ஒரு காலகட்டத்தின் வரலாறே முன்னால் வருகிறது. கண்டன இலக்கியம் உட்பட அக்காலத்தின் அறிவியக்கத்தையே இப்பதிவில் இருந்து சென்று வாசிக்க முடியும்

 இராமலிங்க வள்ளலார் இராமலிங்க வள்ளலார் இராமலிங்க வள்ளலார் – தமிழ் விக்கி

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 28, 2022 11:34

விஷ்ணுபுரம் பதிப்பகம், புதிய நூல்கள்

விஷ்ணுபுரம் பதிப்பகம்

விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள், கோவை புத்தகக் கண்காட்சியில்

இந்த கோவை புத்தகக் கண்காட்சி அரங்கில் விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் பல புதிய நூல்கள் அரங்குக்கு வந்துள்ளன. அவற்றில் முக்கியமானது கோவை ஞானி பற்றி நான் எழுதிய ‘ஞானி’

அது ஞானி பற்றிய நூல் மட்டுமல்ல. சென்ற ஐம்பதாண்டுக்காலத்தில் தமிழ் இலக்கியம், அரசியல் களங்களில் பேசப்பட்டவற்றின் ஒரு வரலாற்றுச் சித்திரமும் அதிலுள்ளது. ஒரு பொதுவாசகன்கூட வாசிக்கக்கூடிய ஓட்டமும் கொண்டது.

அரங்கில் அதை நண்பர் அகரமுதல்வன் வெளியிட கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். ‘ஒரு தமிழ்த்தேசியவாதியின் வாழ்க்கைக்கதையை வெளியிட்டதில் மகிழ்ச்சி’ என்று அகரமுதல்வன் சொன்னார்.

புதிய நூல்களின் பட்டியல் விஷ்ணுபுரம் இணையதளத்தில் உள்ளது. கதாநாயகி புதிய நாவல். தொடராக வாசித்தவர்கள்கூட நூலாக வாசிக்கலாம். அதன் கதைக்குள் கதைக்குள் கதை என்னும் கட்டமைப்பு அப்போதுதான் தெளிவாகப்பிடிபடும்.

நான்காவது கொலை நான் 1999 வாக்கில் திண்ணை இணையதளத்தில் எழுதிய பகடிக்கதை. இப்போதுதான் நூல்வடிவம் பெறுகிறது. சொல்புதிது பதிப்பகம் வெளியிட்டு நீண்டநாள் அச்சில் இல்லாதிருந்த ஈராறுகால்கொண்டெழும் புரவி வெளிவந்துள்ளது.

விஷ்ணுபுரம் பதிப்பகம் வளர்கிறது. உண்மையில் லாபகரமாக நிகழ்ந்து, வளர்ச்சி வரும்போது பல புதிய அறைகூவல்கள் அமைகின்றன. இதுவரை ஊழியர் இல்லாமல் விஷ்ணுபுரம் பதிப்பகம் சமாளித்தது. பங்குதாரரான மீனாம்பிகையே பொட்டலங்களை எடுத்துவருவது முதல் எல்லா வேலையையும் செய்து வருகிறார். இனி ஊழியர்கள் இன்றி அமையாது என்னும் நிலை.

ஆகவே இனிமேல் என் எல்லா நூல்களையும் விஷ்ணுபுரம் பதிப்பகம் வெளியிடவேண்டும் என எண்ணியிருக்கிறோம். அடுத்த சென்னை புத்தகக் கண்காட்சிக்குள் இதுவரை வெளிவந்த என் எல்லா நூல்களுமே விஷ்ணுபுரம் வெளியீடாகக் கிடைக்கும்.  பிற பதிப்பகங்கள் வெளியிட்ட எல்லா நூல்களும் எங்களால் உடனடியாக வெளியிடப்படும்.

வெண்முரசும் முழுமையாக வெளியிடப்படவேண்டும் என்பது திட்டம். மொத்த வெண்முரசையும் ஒரே நூலகத் தொகுப்பாகக் கொண்டுவரும் திட்டம் உள்ளது. அதற்கான முதலீடும் திரட்டப்படவேண்டும். விரைவில் அறிவிப்போம்.

ஜெ

விஷ்ணுபுரத்தில் வெளிவந்துள்ள புதிய புத்தகங்கள் ஆன்லைனில் வாங்க

ஞானி ஆன்லைனில் வாங்க கதாநாயகி ஆன்லைனில் வாங்க நான்காவது கொலை ஆன்லைனில் வாங்க ஆலயம் எவருடையது ஆன்லைனில் வாங்க இந்துமெய்மை ஆன்லைனில் வாங்க சாதி – ஓர் உரையாடல் ஆன்லைனில் வாங்க வணிக இலக்கியம் ஆன்லைனில் வாங்க ஒருபாலுறவு ஆன்லைனில் வாங்க ஞானி ஆன்லைனில் வாங்க

 

விஷ்ணுபுரம் மறுபதிப்பு செய்துள்ள புத்தகங்கள் வாங்க

விசும்பு ஆன்லைனில் வாங்க ஈராறுகால் கொண்டெழும் புரவி ஆன்லைனில் வாங்க அனல் காற்று ஆன்லைனில் வாங்க

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 28, 2022 11:34

விஷ்ணுபுரம் பதிப்பகம், புதிய நூல்கள்

விஷ்ணுபுரம் பதிப்பகம்

விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள், கோவை புத்தகக் கண்காட்சியில்

இந்த கோவை புத்தகக் கண்காட்சி அரங்கில் விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் பல புதிய நூல்கள் அரங்குக்கு வந்துள்ளன. அவற்றில் முக்கியமானது கோவை ஞானி பற்றி நான் எழுதிய ‘ஞானி’

அது ஞானி பற்றிய நூல் மட்டுமல்ல. சென்ற ஐம்பதாண்டுக்காலத்தில் தமிழ் இலக்கியம், அரசியல் களங்களில் பேசப்பட்டவற்றின் ஒரு வரலாற்றுச் சித்திரமும் அதிலுள்ளது. ஒரு பொதுவாசகன்கூட வாசிக்கக்கூடிய ஓட்டமும் கொண்டது.

அரங்கில் அதை நண்பர் அகரமுதல்வன் வெளியிட கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். ‘ஒரு தமிழ்த்தேசியவாதியின் வாழ்க்கைக்கதையை வெளியிட்டதில் மகிழ்ச்சி’ என்று அகரமுதல்வன் சொன்னார்.

புதிய நூல்களின் பட்டியல் விஷ்ணுபுரம் இணையதளத்தில் உள்ளது. கதாநாயகி புதிய நாவல். தொடராக வாசித்தவர்கள்கூட நூலாக வாசிக்கலாம். அதன் கதைக்குள் கதைக்குள் கதை என்னும் கட்டமைப்பு அப்போதுதான் தெளிவாகப்பிடிபடும்.

நான்காவது கொலை நான் 1999 வாக்கில் திண்ணை இணையதளத்தில் எழுதிய பகடிக்கதை. இப்போதுதான் நூல்வடிவம் பெறுகிறது. சொல்புதிது பதிப்பகம் வெளியிட்டு நீண்டநாள் அச்சில் இல்லாதிருந்த ஈராறுகால்கொண்டெழும் புரவி வெளிவந்துள்ளது.

விஷ்ணுபுரம் பதிப்பகம் வளர்கிறது. உண்மையில் லாபகரமாக நிகழ்ந்து, வளர்ச்சி வரும்போது பல புதிய அறைகூவல்கள் அமைகின்றன. இதுவரை ஊழியர் இல்லாமல் விஷ்ணுபுரம் பதிப்பகம் சமாளித்தது. பங்குதாரரான மீனாம்பிகையே பொட்டலங்களை எடுத்துவருவது முதல் எல்லா வேலையையும் செய்து வருகிறார். இனி ஊழியர்கள் இன்றி அமையாது என்னும் நிலை.

ஆகவே இனிமேல் என் எல்லா நூல்களையும் விஷ்ணுபுரம் பதிப்பகம் வெளியிடவேண்டும் என எண்ணியிருக்கிறோம். அடுத்த சென்னை புத்தகக் கண்காட்சிக்குள் இதுவரை வெளிவந்த என் எல்லா நூல்களுமே விஷ்ணுபுரம் வெளியீடாகக் கிடைக்கும்.  பிற பதிப்பகங்கள் வெளியிட்ட எல்லா நூல்களும் எங்களால் உடனடியாக வெளியிடப்படும்.

வெண்முரசும் முழுமையாக வெளியிடப்படவேண்டும் என்பது திட்டம். மொத்த வெண்முரசையும் ஒரே நூலகத் தொகுப்பாகக் கொண்டுவரும் திட்டம் உள்ளது. அதற்கான முதலீடும் திரட்டப்படவேண்டும். விரைவில் அறிவிப்போம்.

ஜெ

விஷ்ணுபுரத்தில் வெளிவந்துள்ள புதிய புத்தகங்கள் ஆன்லைனில் வாங்க

ஞானி ஆன்லைனில் வாங்க கதாநாயகி ஆன்லைனில் வாங்க நான்காவது கொலை ஆன்லைனில் வாங்க ஆலயம் எவருடையது ஆன்லைனில் வாங்க இந்துமெய்மை ஆன்லைனில் வாங்க சாதி – ஓர் உரையாடல் ஆன்லைனில் வாங்க வணிக இலக்கியம் ஆன்லைனில் வாங்க ஒருபாலுறவு ஆன்லைனில் வாங்க ஞானி ஆன்லைனில் வாங்க

 

விஷ்ணுபுரம் மறுபதிப்பு செய்துள்ள புத்தகங்கள் வாங்க

விசும்பு ஆன்லைனில் வாங்க ஈராறுகால் கொண்டெழும் புரவி ஆன்லைனில் வாங்க அனல் காற்று ஆன்லைனில் வாங்க

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 28, 2022 11:34

ஒரு விளக்கம் ஒரு பட்டியல்- விஷால் ராஜா

விஷால்ராஜாவும் ஒரு மொக்கையும்

அன்புள்ள ஜெ,

தளத்தில் வெளியான குறிப்பை படித்தேன். தமிழ் விக்கி பணி, ஈரட்டி திறப்பு விழா, கட்டண உரை என்று தீவிரமாக இயங்கி வருவதால் இந்த சர்ச்சை உங்கள் கண்களில் பட்டிருக்காது என நினைத்தேன். கெட்ட செய்தியின் ஆற்றலை அப்படி குறைத்து மதிப்பிட்டு விட முடியாதுதான்.

காலச்சுவடு இதழில் அக்கட்டுரையை வாசித்ததும் உடனடியாக எனக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. ஆனால் கொஞ்ச நேரத்திலேயே அதை கடந்துவிட்டேன். பிற்பாடு, காலச்சுவடு ஆசிரியர் சுகுமாரன் அவர்களுக்கு மட்டும் ஒரு தனிச் செய்தி அனுப்பினேன். என் பிரியத்துக்கும் மரியாதைக்கும் உரிய கவிஞர் என்பதோடு அவர் ஒரு சிறந்த இதழாளரும்கூட. எனினும் இந்த சழக்கு எப்படியோ அச்சேறி இருக்கிறது. அவரிடம் நான் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. சின்னதாக விளக்கம் மட்டும் கொடுத்தேன். அதையே மீண்டும் சொல்ல நினைக்கிறேன்.

தமிழ் விக்கி பாரபட்சமானது என்று கூறும் அக்கட்டுரை, தன் கருத்துக்கு ஆதாரமாக ஒரு முகநூல் பதிவை மேற்கோள் காட்டுகிறது. ஜெயமோகன் தளத்தில் மட்டுமே இலக்கியக் கட்டுரைகள் எழுதுகிறவர்களை, தமிழ் விக்கி பாராட்டுகிறது என்பது அப்பதிவின் சுருக்கம். அப்படி உங்கள் தளத்தில் மட்டும் எழுதுகிறவர்கள் என்று என்னையும் நண்பர் ஏ.வி.மணிகண்டனையும் அப்பதிவு குறிப்பிடுகிறது.

அடிப்படையில் இது பொய்யான தகவல். காலச்சுவடு, உயிர்மை போன்ற அச்சிதழ்களிலும் சொல்வனம், வல்லினம், அகழ் போன்ற இணைய இதழ்களிலும் நான் இலக்கியக் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். (சிறுகதைகளும்தான்). காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட அசோகமித்திரன் சிறுகதை நூலுக்கு முன்னுரை கூட எழுதியிருக்கிறேன். எனில் ஏன் அப்படி பொய்யாக ஒன்றை எழுத வேண்டும்?

உங்களுடனான என் நட்பு வெளிப்படையானது. அதன் அனுகூலத்தினால் நான் மிகையாக பாராட்டப்படுவதாக ஒருவர் நினைத்தால் அதை விமர்சிக்க எல்லா உரிமையும் இருக்கிறது. என் எழுத்தை முன்வைத்து அதை செய்யலாம். ஆனால் போகிறபோக்கில், ஆதாரமில்லாமல் பொய் சொல்வது ஏற்புடையதல்ல. ஆதாரமில்லாத எல்லா பொய்களும் உள்நோக்கத்தினாலேயே பிறக்கின்றன.

அந்த முகநூல் பதிவுதான் பொறுப்பில்லாமல் எழுதப்பட்டிருக்கிறது என்றால், அதை இன்னொருவர் அப்படியே எடுத்து தன் கட்டுரையில் மேற்கோளாகவும் போட்டிருக்கிறார். போரும் வாழ்வும் நாவலில் இளவரசர் வாசைலி தன் இரண்டு மகன்கள் பற்றி இப்படி சொல்வார்- “ஒருவன் படபடத்த முட்டாள். இன்னொருவன் அமைதியான முட்டாள்”. இதில் ஆகப்பெரிய அபத்தம் – அக்கட்டுரை நடுநிலைமைக்காக வாதிடுகிறது என்பதே. தமிழ் விக்கி பாரபட்சமில்லாமலும் ஆதாரங்கள் அடிப்படையிலும் செயல்பட வேண்டும் என்று அறிவுரை சொல்கிற அந்த நபர், ஆதாரமற்ற ஒரு முகநூல் பதிவை ஏதோ பத்திர ஆவணம் போல் மேற்கோள் காட்டுகிறார். “நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?”

இன்னொன்றையும் சொல்ல வேண்டும். இலக்கிய இடம் என்பது ஒருவருடைய எழுத்தின் அடிப்படையிலேயே தீர்மானம் ஆகிறது. அவர் எழுத்து எங்கே பிரசுரமாகிறது என்பதை பொறுத்தல்ல. சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் முதலிய மாஸ்டர்களின் பக்கத்து அலமாரியில் வைத்துதான் காலச்சுவடு மற்றவர்களின் புத்தகங்களையும் விற்பனை செய்கிறது. அப்படி அடுத்த வரிசையில் இருப்பதாலும் நவீன ஓவிய அட்டைப்படத்தோடு அழகிய வடிவமைப்பில் அச்சாவதினாலும் ஒரு சுமாரான எழுத்தாளர் நல்ல எழுத்தாளராகிவிட முடியுமா? எனில் இலக்கிய விமர்சனம் எனும் துறையே தேவை இல்லையே. தரமான எழுத்தாளர்கள் கூட தேவை இல்லை. தரமான அச்சகங்களே போதும் எனும் முடிவுக்கு வந்துவிடலாம். மேலும், “நூறு பேருக்கு எழுதுகிறவர்கள்” என சிற்றிதழ் எழுத்தாளர்களை வெகுஜனச் சூழல் மட்டம் தட்டுவதற்கு பின்னால் என்னவிதமான மேட்டிமை நோக்கும், பாதுகாப்பின்மையும் தொழில்படுகின்றனவோ அவையே “ஜெயமோகன் தளத்தில் எழுதுகிறவர்கள்” எனும் குரலுக்கு அடியிலும் உள்ளன. அம்மனநிலையே பிழையானது.

அந்த முகநூல் பதிவில் என்னோடு சேர்த்து நண்பர் ஏ.வி.மணிகண்டனும் வம்புக்கு இழுக்கப்பட்டுள்ளார். மணி, உங்கள் தளத்தில் மட்டுமே எழுதியிருக்கிறார் என்பது உண்மையே. ஆனால் அவருடைய கலை இலக்கிய கட்டுரைகள் முக்கியமானவை. காண்பியல் கலை மற்றும் இந்திய தத்துவம் சார்ந்த நுட்பமான அவதானங்களையும் புதிய கண்டடைதல்களையும் முன்வைப்பவை. கவிதைகள் பற்றியும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார். ஷங்கர் ராமசுப்ரமணியன் பற்றி அவர் எழுதிய “பழம் உண்ணும் பறவை” கட்டுரைக்கு நிகராகக் குறிப்பிட, தமிழில் நிறையக் கட்டுரைகள் கிடையாது. உங்கள் தளத்தில் வெளியிடாமல் வெறுமனே நோட்டீஸாக அச்சடித்து வினியோகித்திருந்தால்கூட அதன் தரத்தில் ஒரு குறையும் நேர்ந்திருக்காது. எனவே ஓர் எழுத்தாளனை விமர்சிக்கவும் நிராகரிக்கவும் அவன் எழுத்தை படிக்கும் வழக்கத்தையாவது இவர்கள் வளர்த்துக் கொள்ளலாம்.

*

க.நா.சுவின் தொடர்ச்சியில் வருகிற இலக்கிய விமர்சகனாக தமிழ் விக்கி என்னை அடையாளப்படுத்துகிறது. நான் அடிக்கடி வியப்போடு நினைத்துக் கொள்கிற ஆளுமை க.நா.சு. சமீபத்தில்கூட அவரை மிக உயர்வாக நினைத்துக் கொண்டேன். மேத்யூ அர்னால்டின் புகழ் பெற்ற “நிகழ்காலத்தில் விமர்சனத்தின் பயன்” (1864) கட்டுரையை படிக்கும்போது அவர் ஞாபகத்தில் வந்தபடி இருந்தார்.

ஒரு சூழலில் ஏன் இலக்கிய விமர்சனம் காத்திரமாக நிகழ வேண்டும் என்பதை தன் கட்டுரையில் மேத்யூ அர்னால்ட் விரிவாக விளக்குகிறார். சிறந்த எழுத்தாளர்கள் தம் தனித் திறமையினால் மட்டும் தோன்றுவதில்லை; ஒரு சூழலின் வளத்தினாலேயே தோன்றுகிறார்கள் எனும் மேத்யூ அர்னால்ட் எந்த பெரும் படைப்பும் ஒரு மனிதனின் ஆற்றலும் ஒரு தருணத்தின் ஆற்றலும் சந்திக்கும் புள்ளியிலேயே உருவாகிறது என்கிறார். ஷெல்லி, வோர்ட்ஸ்வொர்த் இருவரைவிடவும் கதே சிறந்த கவிஞனாக இருப்பதற்கு காரணம் ஜெர்மானியச் சூழலே. எனவே இலக்கியக் கருத்துக்கள் செழிப்பாக இருக்கும் இடத்திலேயே சிறந்த எழுத்தாளர்கள் உருவாக முடியும் என்பது மேத்யூ அர்னால்டின் முடிவு. இதை படிக்கையில், இந்த கருத்தை முன்வைக்கவே க.நா.சு தமிழில் ஓயாமல் போராடினார் என்பது கவனத்தில் எழுந்தது. தன் விமர்சனக் கலை நூலில் அவர் இப்படி எழுதுகிறார். “தமிழ் இலக்கியத்தில் வளம் தொடர்ந்து ஏற்படுவது என்பது இந்த இலக்கிய விமரிசனக் கலை வளர்ந்து மேஜராவதைப் பொறுத்தே இருக்கிறது என்றும் எனக்குத் தோன்றுகிறது”. தீர்க்கமான விமர்சனக் கருத்துக்கள் வழியாக சூழலை மேம்படுத்தி, நல்ல எழுத்தாளர்கள் உருவாவதற்காக நம் மண்ணை வளப்படுத்தியவர் க.நா.சு.

இந்த நேரத்தில் இதுவரையிலான என் கட்டுரைகளில் நான் முக்கியமாக கருதுகிறவற்றை இங்கே பதிகிறேன். வேலைக்கு விண்ணப்பிப்பது போல் இப்படி பட்டியல் போட வேண்டிய நிலையில்தான் நம் சூழல் இருக்கிறது.

பலூன் கோடாரி

மனிதனாக இருப்பது என்றால் என்ன? அல்லது கொலை செய்யாமல் இருப்பது எப்படி?

இன்னும் நிகழாதவை இங்கு ஏற்கனவே வந்துவிட்டன!

முதல் மனிதன்

குணச்சித்திரன் பராக்

அந்த மூன்றாவது கை

அழியாத் தடம்

ஒரு உலகத்தில் ஒரு வீட்டில் ஒரு மனிதன்

புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கு உடனடியாக கிடைக்கும் அங்கீகாரங்களும் பாராட்டு மொழிகளும், நல்லது செய்யும் அளவுக்கே – சமயங்களில் நல்லதைவிடவும் கூடுதலாக – தீமை விளைவிக்கக் கூடியவை என்பது நான் கவனித்த விஷயம். எனவே தமிழ் விக்கியில் உள்ள அந்த வரியை அசௌகர்யத்துடனே முதலில் படித்தேன். அது எழுதப்பட்டிருக்க வேண்டாம் என்றே எனக்கு தோன்றியது. மேலும் புனைவாசிரியன் என்பதே எந்நிலையிலும் என் அடையாளம். இலக்கியத்தை புரிந்துகொள்ளவே நான் விமர்சனக் கட்டுரைகளும் எழுதுகிறேன். ஆனால் விரிவாக எழுதப்பட்டிருக்கும் என் கட்டுரைகளை திரும்பி பார்க்கும்போது, தமிழ் விக்கியின் அந்த வரியில் எந்த தவறும் இல்லை என்று படுகிறது. முன்முடிவுகளில்லாத வாசகர்களும் அதே எண்ணத்தையே அடைவார்கள். க.நா.சு இருந்திருந்தால் அவருக்கும் இவை பிடித்தமாய் இருந்திருக்கும்.

அன்புடன்,

விஷால் ராஜா.

***

அன்புள்ள விஷால்

அந்த முகநூல் உளறல் மற்றும் காலச்சுவடு மொக்கை பற்றி நண்பர்கள் அமர்ந்திருந்தபோது ஒரு சின்ன விவாதம் வந்தது. அவையில் இந்த ஆண்டு இலக்கியம் அறிமுகமான 21 வயதான இளைஞர் இருந்தார். அவரிடம் மூலப்பதிவுகளை வாசிக்கச் சொன்னேன். “நீங்க என்ன நினைக்கிறீங்க?’ என்று கேட்டேன்.

“சார், க.நா.சுவுக்கு நான்கு தலைமுறையா விமர்சன மரபிலே வாரிசுகள் இருக்காங்கன்னு விக்கி பதிவு சொல்லுது. நாலாம் தலைமுறை வாரிசா விஷால்ராஜாவோட பேரு இருக்கு. க.நா.சு 1988 வரை வாழ்ந்தவர். அப்டின்னா நாலாம்தலைமுறைக்கு 35 வயசுகூட ஆகியிருக்காது. இப்ப எழுத வந்த ஒருத்தரத்தான் சொல்லமுடியும். ஒரு நாலஞ்சு கட்டுரை எழுதினவரத்தான் சொல்லமுடியும்… விஷால்ராஜா எழுத்துக்களிலே க.நா.சுவோட பார்வை இருக்குன்னு சொல்லுது இந்த பதிவு… அதிலே என்ன தப்பு?” என்றார்.

இந்த ஒன்றாம் பாடத்தைக்கூட புரிந்துகொள்ளும் திராணி இல்லாத மோட்டாக்கள் நடுவேதான் இங்கே அத்தனை விவாதமும் நடந்துகொண்டிருக்கிறது. ஆகவே நமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டியது பொறுமை, பொறுமை, பொறுமை என்றுதான்.

*

பொதுவாக தமிழ்ச்சூழலில் அன்றுமுதல் இன்றுவரை பாமரர் சொல்லும் ஒரு சில பொதுப்புரிதல்கள் உண்டு. ஜி.நாகராஜன் பற்றி பேசினால் “அவர் இவ்ளவுதானே எழுதியிருக்கார்” என்பார்கள். யுவன் சந்திரசேகர் பற்றி பேசினால் “அவரு இருநூறு பேர் படிக்கிற புக்லே எழுதுறவர்” என்பார்கள். எந்த சிற்றிதழ் எழுத்தாளருடைய விக்கிப்பீடியா பக்கத்திற்கும் செல்லுங்கள் “இவரை பற்றி எழுதவேண்டுமா? இவருக்கு தகுதி உண்டா?’ என்று ஒரு மொக்கை வந்து கேட்டிருக்கும்.

எண்ணிக்கையை அளவீடாகக் கொண்டால் நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியவர்கள் சிலநூறு பேர் தமிழகத்தில் உள்ளனர். ஆனந்தவிகடனிலேயே எழுதிக்குவித்தவர்களும் பலநூறுபேர் உள்ளனர். தமிழ் விக்கியின் அளவுகோல்கள் அவை அல்ல. தமிழ்விக்கிக்கு ஓர் ஆசிரியர் குழு உள்ளது. அதில் இருப்பவர்களை விட தகுதியானவர்கள் என எவரும் வெளியே இல்லை. அந்த ஆசிரியர்குழு ஒருவரின் பங்களிப்பை மதிப்பிடுகிறது. அவருடைய தொடர்ச்சியை வரையறை செய்கிறது. தமிழ்விக்கி உங்களுடைய எல்லா விமர்சனக் கட்டுரைகளையும் மதிப்பிட்டு, அதிலுள்ள தனிப்பட்ட ரசனை சார்ந்த விமர்சன அளவுகோலை க.நா.சு மரபு என அடையாளம் கண்டே அந்த வரியை எழுதியிருக்கிறது. அது எதிர்காலத்தை முழுதுற நோக்கி எழுதப்பட்ட வரி. ஏனென்றால் இது ஒரு சாதாரணக் கட்டுரை அல்ல. கலைக்களஞ்சியத்தில் ஒரு வரி. என்றும் அது இங்கே இருக்கும்.

தமிழ் விக்கியின் நோக்கமே எப்படியாவது தமிழ் நவீன இலக்கியம், பண்பாட்டாய்வில் மெய்யாகவே நடந்துள்ள சாதனைகளையும் அவற்றின் தொடர்ச்சியையும் இங்குள்ள பொதுச்சூழலுக்கு கொண்டுசெல்வதுதான். ஆனால் பாமர உள்ளமோ ‘எனக்கு ஏற்கனவே தெரியாததைச் சொன்னால் அது முக்கியமென நான் நினைக்க மாட்டேன்’ என்கிறது. அதற்கு ஒன்றும் தெரியவும் தெரியாது. அந்தப் பாமரக்குரலை தன்னை சிற்றிதழ் மரபின் தொடர்ச்சி என எண்ணிக்கொள்ளும் ஓர் இதழ் வெளியிடுகிறது. இந்த அபத்தமே சுட்டிக்காட்டப்படவேண்டியது.

*

பொதுவாக ஓர் இளம்படைப்பாளி கவனம்பெற்றதுமே சூழலில் ஒரு கசப்பு உருவாகிறது. அது நையாண்டியாக, முத்திரை குத்தலாக வெளிப்படுகிறது. குறிப்பாக குழு முத்திரை உடனடியாக வந்து சேரும். எனக்கு சுந்தர ராமசாமி குழு என்னும் முத்திரை கொஞ்சநாள் இருந்தது. அந்த குழுமுத்திரை குத்தும் குரல்களின் உட்பொருளை எளிதில் ஊகிக்கலாம். திறனற்ற, எவரையும் கவரும் தகுதி அற்ற எழுத்தாளர்களின் இயல்பான வெளிப்பாடு அது. ‘கவனிக்கப்பட்டவர்கள் எல்லாருமே குழு அரசியல் செய்து அதை அடைந்தவர்கள். எனக்கு குழு அரசியலில் ஆர்வமில்லை. ஆகவே என்னை எவரும் கவனிப்பதில்லை’ அந்த சுயசமாதானத்தில் உள்ள தன்னிரக்கத்தின் இழிவை நாம் பொறுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். அந்த எளிய மனிதர்கள் வேறு எப்படி தன்னை தேற்றிக்கொள்ளவும், இங்கே தொடர்ந்து இருக்கவும் முடியும்?

ஓர் இளம் எழுத்தாளர் தன் இடத்தை நிறுவுந்தோறும் தீவிரமான எதிர்ப்பும், நிராகரிப்பும் உருவாகும். அதைக் கடந்து நிலைகொள்வதே எழுத்தாளனின் முன் உள்ள அறைகூவல். தன் படைப்பாணவத்தால், தன் படைப்புகள் மீதுள்ள நம்பிக்கையால் அவன் அதை எதிர்கொள்ளவேண்டும். அதற்கான மனநிலைகளை அவனே உருவாக்கிக் கொள்ளவேண்டும். சிலர் எதிர்த்து நிமிர்ந்து நிற்பார்கள். சிலர் முற்றிலும் ஒதுங்கிச் செல்வார்கள். சிலர் படைப்புக்குள் ஒடுங்கிக்கொள்வார்கள். அவரவர் இயல்பு சார்ந்தது அது. அது ஓர் ஆரம்பகட்ட ‘அமிலச்சோதனை’. புகழுக்குக் கொடுத்தாக வேண்டிய விலை. ஆனால் கவனிக்கப்படாமல் போவதை விட அது மேல்.

ஜெ

***

விஷால் ராஜா – தமிழ்விக்கி

க.நா.சுப்ரமணியம்- தமிழ் விக்கி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 28, 2022 11:34

சுனில் கிருஷ்ணனின் காந்திய நூல்கள்

சுனில் கிருஷ்ணன் தமிழ் விக்கி

சுனில் கிருஷ்ணன் சுனில் கிருஷ்ணன் – தமிழ் விக்கி

தமிழில் இன்றைய தலைமுறையின் முதன்மைப் படைப்பாளி என்பதுடன் இளைய உலகின் காந்திய முகமாகவும் சுனில் கிருஷ்ணன் அறியப்படுகிறார். சுனில் கிருஷ்ணன் தொகுத்தவை, மொழியாக்கம் செய்தவை என காந்திய நூல்கள் பல உள்ளன. அவர் எழுதிய காந்தியக் கட்டுரைகளின் தொகுதிகளும் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் முக்கியமானவை. தமிழ் காந்திய இலக்கியத்தின் முதன்மைநூல்கள் என சொல்லத்தக்கவை.

குறிப்பாக, இவை எவையும் மரபான காந்தியர்களின் வழக்கமான விதந்தோதல்கள் அல்ல. சுனில் காட்டுவது பாடப்புத்தகக் காந்தி அல்ல. இன்று காந்திமேல் வைக்கப்படும் விமர்சனங்களைக் கடந்து காந்தியை கண்டடைவதற்கான வழி. இன்றைய பின்நவீனத்துவ யுகத்து இளைஞர்களுக்கான காந்தி அவருடைய எழுத்துக்கள் வழியாக திரண்டு வருபவர்.

கல்மலர் (காந்திய நெடுங்கட்டுரை)காந்தி எல்லைகளுக்கு அப்பால் ( மொழியாக்க தொகை நூல்)அன்புள்ள புல்புல் (காந்தி கடிதங்கள்)காந்தியைச் சுமப்பவர்கள் (காந்தியக் கதைகள்)ஆயிரம் காந்திகள்நாளைய காந்தி

கதைகளின் ஊடாக காந்தி- காந்தியைச் சுமப்பவர்கள் தொகுதியின் முன்னுரை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 28, 2022 11:31

July 27, 2022

குடவாயில் பாலசுப்ரமணியம், கோவை புத்தகக் கண்காட்சி

விஷ்ணுபுரம் பதிப்பகம்

விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள், கோவை புத்தகக் கண்காட்சியில்

குடவாயில் பாலசுப்பிரமணியன்  தமிழ் விக்கி

கோவையில் புத்தகக் கண்காட்சியில் விஷ்ணுபுரம் அரங்கு (எண் 255)  போடப்பட்டிருக்கிறது. விஷ்ணுபுரம் பதிப்பகம் தொடங்கப்பட்டபின் இதுவே முதல் புத்தகக் கண்காட்சி அரங்கு. ஆகவே நண்பர்களுக்கு உற்சாகம். நான் செல்வதா வேண்டாமா என குழம்பிக்கொண்டிருந்தேன். குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் செய்தி வந்தது. நான் பேசமுடியுமா என நண்பர் நடராஜன் கேட்டுக்கொண்டார். கோவை பயணத்துக்கான முடிவை எடுத்தேன்.

அதற்கு முன் சென்னையில் ‘இரவுபகலாக’ முட்டிமோதி பேட்டிகள் அளித்துக்கொண்டிருந்தேன். என் ஆங்கிலநூல் வெளியாகிறது. அறம் கதைகளின் ஆங்கிலவடிவம். பிரியம்வதா மொழியாக்கம் செய்து ஜக்கர்நாட் பதிப்பகம் இந்தியாவிலும் தென்னாசியநாடுகளிலும் வெளியிடுகிறது. அதற்கு கிட்டத்தட்ட சினிமா மாதிரியே பேட்டிகள். அதில் உச்சம் கமல்ஹாசனுடனான உரையாடல். அதன் சுருக்கப்பட்ட வடிவம் காணொலியாகவும் வெளியாகியது.

என்னை பேட்டி எடுத்தவர்கள் பெரும்பாலும் பெண்கள். ஒருவர் கேட்டார், ’உங்கள் மொழிபெயர்ப்பாளர்கள் பெரும்பாலும் பெண்களாக இருக்கிறார்கள், ஏன்?’. நான் சொன்னேன் ‘என்னிடம் பெண்களுக்காக பரிந்துபேசும் குரல் இல்லை. பெண்களுக்காக ஒரு சலுகையும் காட்டுவதில்லை. எவரிடமும் எதிர்பார்ப்பதுபோல அவர்களின் உச்சகட்ட வெளிப்பாட்டையே எதிர்பார்க்கிறேன். அறிவுத்திறனும் அதற்கான ஆணவமும் கொண்ட பெண்களுக்கு என்னுடைய இந்த இயல்பு பிடித்திருக்கிறது’

அத்துடன் பொன்னியின்செல்வன் பேட்டிகள். பொன்னியின் செல்வனை வடக்கே ஒரு குழு ‘தமிழ்ப்பெருமிதம்’ பேசும் படைப்பு என எடுத்துக்கொண்டு அதை மட்டம்தட்ட ஆரம்பித்துவிட்டது. சோழர்கள் ஒன்றும் நல்லவர்கள் அல்ல என்று ஒரு நீண்ட கட்டுரை வாசித்தேன். எழுதியவர் வரலாற்றாசிரியர் அல்ல. ஆனால் இன்று வரலாற்றாசிரியர் அல்லாதவர்கள் வரலாற்றை பொதுவாசிப்புக்காக எழுதுவது ஒரு மோஸ்தர். அந்நூல்கள் அதிகம் விற்கின்றன. ஆகவே மேலும் மேலும் பாதிவெந்த எழுத்தாளர்கள் உள்ளே வருகிறார்கள்.

வரலாற்றெழுத்தின் அடிப்படைகளை அறியாமல், வெறுமே தரவுகளை வெவ்வேறு நூல்களில் இருந்து எடுத்துக்கொண்டு, சமகாலத்தில் எது எடுபடுமோ அந்தப்பார்வையை கொண்டு பொதுப்புத்தித்தனமாக எழுதப்படுபவை இந்நூல்கள். அதே தரம் கொண்ட வாசகர்களுக்குச்  ‘சரிதானே?’ என்னும் எண்ணத்தையும் அளிக்கின்றன.

அந்த கட்டுரையாளர் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் இவை. சோழர்கள் குறுநிலமன்னர்களை ஒடுக்கினர். (அவர் ஆதாரமாகச் சொல்வது பொன்னர்சங்கர் கதைப்பாடல்) சோழர்கள் செல்வத்தை மையத்தில் குவித்தனர். சோழர்காலத்தில் வரிவசூல் கூடுதலாக இருந்தது… இப்படிச் சில. இதைவிடக் கடுமையான பல குற்றச்சாட்டுக்களை கே.கே.பிள்ளை போன்றவர்கள் சோழர்கள் பற்றி எழுதி அரைநூற்றாண்டு கடந்துவிட்டது. இந்த நவயுக வரலாற்றாசிரியர் அங்கே இன்னும் வந்துசேரவில்லை.

சமீரன் நூல் வெளியீடு

சோழர்கள் என்றல்ல, எந்த ஒரு பேரரசும் குறுநில அரசுகளை அடக்கி, எதிர்ப்பவர்களை ஒடுக்கியே உருவாக முடியும். பேரரசுகள் உருவாகியிருக்கலாகாது என்று அறிவுள்ள எவரும் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் நாம் வரலாற்றை மாற்றமுடியாது. அப்படித்தான் வரலாறு வளர்ந்து வந்துள்ளது. அது நிலவுடைமைச் சமூகத்தின் பரிணாம நெறி. பேரரசுகள் சிற்றரசுகளை அழிப்பது உலகமெங்கும் உள்ளது. ஆனால் சோழர்காலகட்டத்தில் அச்சிற்றரசுகள் ஒருவகையான கூட்டமைப்பாக சோழப்பேரரசுக்குள்ளேயே நீடித்தன. பொன்னியின்செல்வன் வாசகர்களுக்கே கடம்பூர், பழுவூர், கொடும்பாளூர் என எத்தனை சிற்றரசர்கள் சோழப்பேரரசுக்குள் இருந்தனர் என்றும் அவர்கள் எத்தனை அதிகாரம் கொண்டிருந்தனர் என்றும் தெரியும்.

சோழர்கள் கொங்குப் பகுதியில் அவர்களை எதிர்த்தவர்களை அழித்திருக்கலாம். ஆனால் மறுபக்கம் உண்டு. கொங்குப் பகுதியிலுள்ள எல்லா நிலப்பிரபுக்களும் சோழர்களால் உருவாக்கப்பட்டவர்கள். சோழர்கால குலப்பட்டங்கள் கொண்டவர்கள். அழிவும் ஆக்கமும் சேர்ந்ததே வரலாறு. அதை அந்த பாதிவேக்காட்டு வரலாற்றுக் கட்டுரையாளருக்கு எவர் சொல்லிப்புரியவைக்க முடியும்?

சோழர்களின் வரிவசூல் மிக அதிகம். ஏனென்றால் அவர்கள் நிலைப்படை என்னும் நிலையான பெரிய ராணுவத்தை வைத்திருந்தனர். அதற்கான செலவும் மிகுதி. அந்த நிலைப்படை இருந்தமையால்தான் முந்நூறாண்டுக்காலம் தமிழகத்தில் அன்னியப்படையெடுப்பு இல்லாத அமைதி நிலவியது. தமிழகம் சூறையாடப்படாமல் மூன்றுநூற்றாண்டுக்காலம் வாழமுடிந்தது. அந்த நிலைப்படை போரில்லா காலங்களில் ஏரிகளை வெட்டியது. அந்த ஏரிகளில் ஒன்றே மாபெரும் ஏரியான வீராணம். அந்த ஏரிகளால்தான் இன்றும் நாம் சோறு சாப்பிடுகிறோம்.

பெருநிதிக் குவிப்பு இல்லாமல் பேரரசுகள் இல்லை. பேரரசுகள் இல்லையேல் பெரிய திட்டங்களும், உள்நாட்டு அமைதியும் இல்லை. இதுவே வரலாறு. சோழர்கள் பெரு அது நிதிக்குவிப்பைச் செய்தமையால்தான் காவிரி பல ஆறுகளாக பிரிக்கப்பட்டது. பலஆயிரம் ஏரிகள் வெட்டப்பட்டன. வேளாண்மை பலமடங்காகியது. சோழர்களின் ஏரிகளே தமிழகத்தின் முதன்மைப்பெருஞ்செல்வம்

மீண்டும் மீண்டும் இதையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. சினிமா ‘பிரமோஷன்’ தான். ஆனால் கூடவே ஓர் அறிவுப்பணியும்தான். குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களுக்கான விருது வழங்கும் உரையிலும் இதை இறுதியில் தனியாகச் சொன்னேன். (உரை வெளியாகுமென நினைக்கிறேன்)

குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களை முதன்முறையாகப் பார்க்கிறேன். நீண்டநாட்களாகத் தெரிந்தவர் போலிருந்தார். ஏனென்றால் அவரை வாசிக்க ஆரம்பித்து இருபதாண்டுகள் ஆகிறது. தஞ்சை வரலாறு எனக்கு எப்போதும் ஆர்வமுள்ள துறை. ஆனால் குமரிமாவட்டத்தவருக்கு சோழர்கள்மேல் கொஞ்சம் கசப்பு உண்டு. காரணம் அவர்கள் எங்கள் மேல் படைகொண்டு வந்து முந்நூறாண்டுகள் அடக்கி ஆண்டவர்கள்.

அக்காழ்ப்பு இல்லாதவர் அ.கா.பெருமாள்தான். கே.கே.பிள்ளையின் ‘கடுப்பு’ ஊரறிந்தது. அ.கா.பெருமாள் குமரிமாவட்ட ஏரிகள் பற்றிய ஓர் ஆய்வை நிகழ்த்தியபோதுதான் குமரிமாவட்டத்தின் நஞ்சைநிலவளம் சோழர்களின் கொடை என தெரிந்துகொண்டார். அந்த நல்லெண்ணம் எனக்கும் அவரிடமிருந்து கிடைத்தது.

விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் அரங்கில் இரண்டு மாலைநேரங்கள் இருந்தேன். ஏராளமான வாசகர்கள் வந்து நூல்களை வாங்கினர். நிறைவூட்டும் விற்பனை என்று நண்பர்கள் சொன்னார்கள். ஆனால் பொதுவாக கோவை புத்தகக் கண்காட்சிக்கு வருகையாளர் குறைவு. கோவையை ஒட்டிய சிறுநகர்களில் போதிய விளம்பரங்கள் செய்யப்பட்டிருக்கவேண்டும். புத்தகக் கண்காட்சிகள் வெல்வது பெருநகர்களின் வருகையாளர்களால் அல்ல, அணுக்கநகர்களில் இருந்து வருபவர்களால்தான்.

இந்தப் புத்தகக் கண்காட்சியில் சந்தித்தவர்களில் முக்கியமானவர் கோவை ஆட்சியர் சமீரன். உற்சாகமான இளைஞர். கோவை புத்தகக் கண்காட்சிக்கு மிகுந்த ஆதரவு அளித்தவர். பி.பத்மராஜன் பிறந்த முதுகுளம் என்னும் ஊரில் பிறந்தவர். இளமையில் பத்மராஜனின் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதியிருக்கிறார். அதன்பின் முதுகுளம் ராகவன் பிள்ளை என்னும் தொடக்ககால நாடகாசிரியர் வாழ்க்கையை எழுதியிருக்கிறார். முதுகுளம் ராகவன் பிள்ளை மலையாளத்தின் முதல் பேசும்படமான பாலன் படத்தின் திரைக்கதையாசிரியர். இந்நூல்கள் விஜயா பதிப்பகத்தால் தமிழிலும் வெளியிடப்பட்டுள்ளன.

எஸ்.ராமகிருஷ்ணனின் தேசாந்த்ரி அரங்கு உள்ளது. அங்கே சென்று அவரை பார்த்தேன். அரங்கு முழுக்க நூல்கள். தொடர்ந்து பில்போட்டுக்கொண்டு அவர் பையன் பிஸியாக இருப்பதைக் காண மகிழ்ச்சியாக இருந்தது. எஸ்.ராமகிருஷ்ன்ணனின் எல்லா நூல்களுமே அந்த அரங்கில் இருக்கின்றன. மேடைக்கு சென்றுகொண்டிருந்தார். ஆகவே ஓரிரு சொற்களே பேசமுடிந்தது. ஸீரோ டிகிரி அரங்கில் காயத்ரியும் ராம்ஜியும் இருந்தனர். அவர்களின் அரங்கில் அருண்மொழி சார்பில் கொஞ்சநேரம் அமர்ந்திருந்தேன்.

உற்சாகமான மூன்று நாட்கள். நான் தங்கியிருந்த ஃபார்ச்சூன் சூட்ஸுக்கு நண்பர்கள் வந்துகொண்டே இருந்தனர். இரவுபகலாக இலக்கியம், வேடிக்கை என வழக்கமான கொண்டாட்டத்துடன் இருந்தோம். திங்களன்று காலை சென்னை சில்க்ஸ் உரிமையாளர் வினாயகம் அவர்களின் இல்லத்திற்கு காலையுணவுக்குச் சென்றேன். இயக்காகோ சுப்ரமணியம், நடராஜன் இருவரும் வந்திருந்தனர். ’பாரதி’ ஞானராஜசேகரன் வந்திருந்தார்.

கோவையில் இருந்து திருவனந்தபுரம். ஒருநாள் நாகர்கோயில். மறுபடியும் சென்னை. அங்கிருந்து நேராக மதுரை. அங்கிருந்து மீண்டும் ஒரு பயணம். நடுவே திரைக்கதைகள் இரண்டு. தமிழ்விக்கி பணிகள். பொழுதை நாம் உணராமலிருக்கும் வாழ்வே நன்று.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 27, 2022 11:51

Stories of the True : கடிதம்

Stories of the True : Translated from the Tamil by Priyamvada

அன்புள்ள ஜெ

அறம் கதைகளின் ஆங்கில மொழியாக்கம் இன்றைய சூழலில் மிக மிக முக்கியமானது என நினைக்கிறேன். இந்தியாவில் ஆங்கிலத்தில் இன்றைய வாசகர்கள் பெரும்பாலும் ஆங்கிலம் வழியாகக் கல்விகற்ற நாற்பது வயதுக்கும் குறைவான வாசகர்கள். இன்று ஆங்கில மொழியில் இந்தியாவில் அழகியல் மதிப்பீடுகளை முன்வைக்கும் நல்ல விமர்சகர்கள் அனேகமாக யாரும் இல்லை. அவ்வப்போது சிலர் எழுதுவதுண்டு. ஆனால் ஓர் ஆளுமையாக எவரும் இல்லை. வட்டார மொழிகளில் எல்லாம் அப்படி அழகியலை முன்வைக்கும் முன்னோடிகள் இருக்கின்றனர். அவர்களே பெரும்பாலும் முன்னோடி எழுத்தாளர்களாகவும் உள்ளனர்.

இந்தச் சூழல் ஆங்கிலத்தில் இல்லை. ஆங்கிலத்தில் இன்று இந்தியா முழுக்கக் கேட்கும் குரல்கள் எல்லாமே இதழாளர்கள்தான். அவர்களுக்கு இலக்கியம் முக்கியமல்ல. இலக்கியம் அவர்களின் மேலதிக ஆர்வம் மட்டுமே.  அத்துடன் அவர்களின் தொழில் செய்தி சார்ந்தது, எனவே அவர்கள் அன்றாடச்சிக்கல்களையே முக்கியமாகக் கவனிக்கிறார்கள். அரசியல்பிரச்சினைகளும் சமூகப்பிரச்சினைகளும்தான் அவர்களுக்கு முக்கியமாக தெரிகின்றன.

இக்காரணத்தினால் இதுவரை ஆங்கிலச் சூழலில் பேசப்பட்ட எல்லா படைப்புகளுமே அரசியல் அல்லது சமூகவியல் சார்ந்தவைதான். சமகாலப்பிரச்சினை ஒன்றை எடுத்துக்கொண்டு மிகவும் சர்ச்சைக்குள்ளாகும்படிப் பேசுவதே இங்கே கவனிக்கப்படுவதற்கான வழி அல்லது அனைவரையும் சீண்டும்படி பேசுவது (லீனா மணிமேகலை போன்றவர்கள் இதைச் செய்கிறார்கள். மலையாள எழுத்தாளர்களின் வழக்கமே இதுதான்) ஆகவே ஒருவகை முற்போக்கு இலக்கியம் மட்டுமே இங்கே அதிகம் கவனிக்கப்படுகிறது. அவற்றைப் பற்றியே பேசப்படுகிறது. இதழ்களும் நூல்களை அந்தக்கோணத்திலேயே முன்னிலைப்படுத்துகின்றன.

என் பார்வையில் ஆங்கிலத்திலே வந்தாகவேண்டிய படைப்பு என்றால் கொற்றவை, குமரித்துறைவி எல்லாம்தான். அவைதான் தமிழ்க்கலாச்சாரத்தில் ஊறிய படைப்புகள். வாசிப்பவனின் ஆன்மிகத்துடன் உரையாடுபவை. ஆனால் அவற்றுக்கு இங்கே இடமில்லை. இன்றைய சூழல் இதுதான்.

[image error]

அறம் கதைகளில் அரசியல், சமூகவியல் உள்ளது. யானைடாக்டர், நூறுநாற்காலிகள் எல்லாம் அத்தகைய கதைகள். ஆனால் இவற்றை எவராவது எடுத்துப் பேசவேண்டும். ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்காவது சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் கவனிக்கப்படாது. தமிழில் அப்படிச் சொல்லிக்கொண்டே இருக்கும் கனாய்ஸியர்கள் இன்றைக்கு இல்லை. தீவிரமான வாசகர்களும் இல்லை.

ஆங்கிலப்பதிப்புத்துறை என்பது இந்தியா முழுக்க விரிந்து கிடக்கும் ஒரு துறை. அன்றாடம் நூல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. தொடர்ச்சியாகப் பேசப்படும் படைப்புக்கு மட்டுமே ஒரு தீவிரமான வாசிப்பு அமைய முடியும். இதுவரை தமிழின் எந்த நல்ல படைப்புக்கும் அப்படி ஒரு நல்ல வரவேற்பு அமையவில்லை. நான் அசோகமித்திரன், பூமணி, அம்பை ஆகியோருக்கு அப்படிப்பட்ட வாசிப்பு அமையும் என எதிர்பார்த்தேன். அறம் வாசிக்கப்படுமென்றால் ஒரு நல்ல தொடக்கமாக அமையும்

ராகவ்ராம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 27, 2022 11:33

பி.எம்.கண்ணன்

பி.எம்.கண்ணன் எழுதிய நாவல்களை வாசித்தவர்களை நான் இதுவரை சந்தித்ததில்லை. என் அம்மாவுக்கு அவருடைய சில நாவல்கள் மிகப்பிடித்தமானவை. எளிமையான குடும்பக் கதைகள். அம்மாவுக்கு அவற்றின் இலக்கிய மதிப்பு தெரியும். ஆனாலும் அவை நேர்த்தியானவை என அம்மா நினைத்தார். பி.எம்.கண்ணனின் இன்பப்புதையல் என்னும் நாவல் அக்கால குடும்ப வாழ்க்கையின் அவலத்தைச் சித்தரிப்பது. அம்மா அந்நாவலின் நாயகியுடன் தன்னை அடையாளம் கண்டுகொண்டிருக்கலாம்

பி.எம்.கண்ணன் பி.எம்.கண்ணன் பி.எம்.கண்ணன் – தமிழ் விக்கி

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 27, 2022 11:33

விஷால்ராஜாவும் ஒரு மொக்கையும்

விஷால்ராஜா விஷால் ராஜா

அன்புள்ள ஜெ

நான் தொடக்கத்தில் உங்களை வாசிக்கும்போது உங்களிடமிருக்கும் எரிச்சல் எனக்கு ஒவ்வாமையை அளித்தது. இது எதற்கு என நினைப்பேன். பெரிய நினைப்பு என்றும் சிலசமயம் தோன்றும். இப்போது நானே எரிச்சலடைய ஆரம்பித்துவிட்டேன். மொண்ணைத்தனம், அறியாமை, அறியாமையையே ஒரு தகுதியாகக் கொண்டு துள்ளிக்கொண்டே இருப்பது, மொண்ணைத்தனம் மட்டுமே கொடுக்கும் தன்னம்பிக்கை…. நீங்கள் எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்று இப்போது நினைக்கிறேன்.

கிருஷ்ணா

***

அன்புள்ள கிருஷ்ணா,

நான் இப்போது அந்த எரிச்சலை பெருமளவு கடந்துவிட்டேன். பதிவுகளில் அனேகமாக அந்த எரிச்சல் இல்லை. இடித்துரைப்பதே குறைந்துவிட்டது. மாறாக, பொறுமையாக மீண்டும் மீண்டும் சொல்வோம் என்னும் மனநிலைக்கு வந்துவிட்டேன்.

அதையும் மீறி அண்மையில் அடங்காத சீற்றம் வந்தது காலச்சுவடு இதழில் எந்த பங்களிப்பும், எந்த அடிப்படை அறிதலும் இல்லாத ஓருவர் தமிழ்விக்கி பற்றி எழுதியிருந்ததை வாசித்தபோது. அவருக்கு ஒன்றும் தெரியாது. முழுமையான அறியாமையின் தன்னம்பிக்கை என்பது இங்கே சாதாரணம். காலச்சுவடு தமிழ் விக்கியை அடிக்க ஆசைப்பட்டு அவரை தேர்வு செய்திருக்கிறது. ஐம்பதுரூபாய்க்கு அடியாள் தேற்றுவது அவ்விதழின் வழக்கம். அவர்கள் அடித்து ஒரு புல்கூட இதுவரை சாய்ந்ததில்லை என அவர்களுக்குப் புரியவே போவதில்லை. ஆகவே அப்படியே கடந்துவிட்டேன்.

என்ன சிக்கல் என்றால் அதிலுள்ள ஒரு மனநிலை. தமிழ் விக்கிப்பீடியாவை ஆட்சி செய்வதே அந்த மனநிலைதான். அதற்கு எதிராகத்தான் தமிழ்விக்கி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் விக்கியில் விஷால்ராஜா பற்றி ஒரு பதிவு உள்ளது. தமிழின் இளைய தலைமுறையின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர் அவர். ஆனால் இங்கே அவரைப்போன்றவர்களுக்கு ஊடகக்கவனம் இல்லை. அவர்களும் முண்டியடிப்பவர்கள் அல்ல. அது சிற்றிதழ் இலக்கிய இயக்கத்தின் பொதுமனநிலை. அத்தகையோரை அடையாளம் கண்டு முன்வைக்கவேண்டும் என்பதே தமிழ் விக்கியின் நோக்கம். அவர்களிடம் நம் பொதுசூழல் அடையாள அட்டை கேட்கும். தமிழ்விக்கி அவர்களை தேடிச்செல்லும். இதுவே வேறுபாடு.

தமிழ்விக்கியில் ஓர் ஆசிரியர் குழு உள்ளது. ஒரு பங்களிப்பாளர் குழு உள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கியவாதிகளாலும் ஆய்வாளர்களாலும் ஆனது அது. இன்று அதை வாசிக்கும் எவரைவிடவும் மேலதிகத் தகுதிகள் கொண்டவர்கள் அதன் ஆசிரியர்கள். எவருக்கும் கற்பிக்கும் நிலையில் இருப்பவர்கள். அவர்கள் சொல்லி தெரிந்துகொள்ளவேண்டியவர்களே இங்கே பெரும்பாலானவர்கள். தமிழ்விக்கி பதிவுகளை மேலோட்டமாக பார்க்கும் கொஞ்சம் அறிவுத்திறன் கொண்ட எவருக்கும் அது கண்கூடாகத் தெரியும்.

ஆனால் அந்தக் காலச்சுவடுக் கட்டுரை எழுதிய மொக்கைக்கு அவருக்கு முன்னரே தெரியாத ஒருவருக்கு எப்படி விக்கி பதிவு இருக்கமுடியும் என்று தோன்றுகிறது. ‘சரி, உனக்கு அப்படி எவரை தெரியும்?’ என்று கேட்டால் குண்டு கல்யாணம் வரை எல்லா நடிகர்களையும் தெரிந்து வைத்திருப்பார். அதற்குமேல் ஆர்வமோ முயற்சியோ இருக்காது. ஒரு கூகிள் தேடல் செய்து பார்க்கும் அளவுக்குக்கூட அடிப்படைப் புரிதல் இருக்காது. நானும் அந்த ஆளுக்கு ஏதாவது வாசிப்புப் பின்னணி இருக்குமா என தேடிப்பார்த்தேன். சரியான முன்னுதாரண மொக்கை. காலச்சுவடிலேயே விஷால்ராஜாவின் முக்கியமான கதைகள் வெளியாகியிருக்கின்றன. அடுத்த இதழிலும் வெளியாகியிருக்கின்றன. இந்த மொக்கை காலச்சுவடையே படிப்பதில்லை.

உண்மையில் எப்படியாவது இவர்களைப் போன்ற சிலருக்கு இலக்கியத்தை, பண்பாட்டாய்வுகளை கொண்டு சென்று சேர்த்துவிடலாம் என்பதே எங்கள் முயற்சி. அதற்கு இவர்களின் பதில் ‘எங்களுக்கு ஏற்கனவே தெரியாததை மேற்கொண்டு தெரிந்துகொள்ளவேண்டிய தேவை இல்லை’. இதற்கிணையான ஒரு மொக்கைத்தனம் எங்காவது உண்டா தெரியவில்லை. இதுதான் தமிழ் விக்கிப்பீடியாவிலும். அசோகமித்திரன் பற்றி ஒரு பதிவு போட்டால் ‘யாரது, ஊர்பேர் தெரியாத ஆளுக்கு எதற்கு பதிவு?’ என்று கேட்பவர்கள் அதில் ஏறி அமர்ந்திருக்கிறார்கள்.

அறிவுச்செயல்பாடு எப்போதுமே அறியாமையுடன் போராடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அறியாமையை மணிமுடியாகச் சூடிக்கொண்டிருக்கும் கூட்டத்திடம் அறிவுச்செயல்பாடு தோற்று திகைத்துவிடும். அப்போது எழும் எரிச்சலை விழுங்குவது அரைலிட்டர் அமிலத்தை ஜீரணித்துக்கொள்வதற்கு நிகர்.

ஜெ

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 27, 2022 11:32

அகரமுதல்வன், காதல் மானம் வீரம்!

அகரமுதல்வன் – தமிழ் விக்கி

சற்று தாமதமாக நான் வாசித்த இந்தக் கட்டுரை விளையாட்டுத்தனமான ஒரு கூறுமுறையுடன் அகரமுதல்வனின் உலகுக்குள் நுழைகிறது. புறநாநூற்றுக் காலம் முதல் தமிழில் பேசுபொருளாக இருந்து வந்த காதலும் வீரமும் ஈழப்படைப்பாளியான அகரமுதல்வனின் உலகில் எவ்வண்ணம் உருமாறுகின்றன என்று காட்டுகிறது.

போரும் வாழ்வும் – அகரமுதல்வன் கதைகளை முன்வைத்து: ஆர். காளிப்பிரஸாத்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 27, 2022 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.