Jeyamohan's Blog, page 69
June 27, 2025
காவியம் – 68
கானபூதி சொன்னது. பிரதிஷ்டானபுரியின் சொல்லவையான காவியப் பிரதிஷ்டானத்தில் இடம்பெறவேண்டும் என்னும் கனவுடன் சோமசர்மன் என்னும் பிராமணன் தெற்கே காஞ்சீபுரத்தில் இருந்து ஓராண்டுக்காலம் நடந்து வந்து சேர்ந்தான். அவன் காஞ்சியின் புகழ்பெற்ற கடிகாஸ்தானம் என்னும் வித்யாசபையில் வியாகரணமும், காவியமும், அலங்காரமும் கற்றிருந்தான். அந்த சபையில் அவன் வரகவி என்று புகழப்பட்டான். அவனுடைய ஞானத்திற்கான இடம் இருப்பது பிரதிஷ்டானபுரியிலேயே என அவனைக் கற்பித்த ஆசிரியர்கள் சொன்னார்கள். அவர்களை வணங்கி ஆசிபெற்று அவன் பிரதிஷ்டானபுரிக்குக் கிளம்பினான்.
பிரதிஷ்டானபுரி அவனைத் திகைக்கச் செய்தது. ’நகரேஷு காஞ்சி’ என்று வேதங்கள் புகழும் பெருநகரில் பிறந்தவன் என அவன் தன்னைப் பற்றி எண்ணியிருந்தான். ஆனால் பிரதிஷ்டானபுரியுடன் ஒப்பிடும்போது காஞ்சி ஒரு சிறுகிராமம் போலத் தோன்றியது. அந்நகரம் ஒரு பெரிய சுழிபோல அவனை பலநாட்கள் சுழற்றியடித்தது. அந்தணன் என்பதனால் அவனுக்குச் சத்திரங்களில் உணவும் படுக்க இடமும் கிடைத்தது. அந்நகரை புரிந்துகொண்டு, அதன் காவியசபைக்குள் நுழையவேண்டும் என்று அவன் எண்ணினான். பல மாதங்களுக்குப் பின் அவனுக்கு புரிந்தது, அங்கே எவரும் எவரையும் கவனிப்பதில்லை என்று. ஒவ்வொருவரும் தங்களை எங்கேயாவது புகுத்திக்கொள்ள முட்டி மோதிக்கொண்டிருந்தார்கள். ஆகவே ஒவ்வொருவரையும் அவர்கள் தங்கள் எதிரிகளாகவே எண்ணினார்கள்.
சோமசர்மன் பலமுயற்சிகளுக்குப் பின்னர் ஒரு முடிவுக்கு வந்தான். அந்நகரின் காவியசபையின் முதல் வட்டத்திற்குள் நுழைவதுதான் மிகக்கடினம். அதற்கு எந்நேரமும் முயன்றபடி பல ஆயிரம்பேர் இருந்தனர், அவர்களே ஒரு முள்வேலியாக ஆகி பிறர் உள்நுழையமுடியாதபடிச் செய்தனர். அவர்களுடன் முட்டிமோதி அவர்களில் ஒருவனாக ஆவது வீண்வேலை. அந்த வட்டத்திற்குள் ஒரு சிறுவிரிசல் வழியாகவே நுழைய முடியும். அந்த விரிசலைக் கண்டடையவேண்டும். அதற்கு ஏதேனும் ஒரு இடத்தை தேர்வுசெய்து அங்கேயே முழுமூச்சாக முயலவேண்டும்.
சோமசர்மன் கோதாவரியின் கரையில் ஒவ்வொரு நாளும் காலையில் குளிக்கும்போது அங்கே குளிக்கவரும் பண்டிதர்களை கூர்ந்து கவனித்தான். தேவமித்ர சதகர்ணியின் காவியசபையில் இடம் பெற்றிருந்த ஒவ்வொரு புலவருக்கும் அவர் இருக்கும் வட்டத்திற்குரிய அடையாளங்கள் இருந்தன. அந்தச் சபையின் ரஜதமாலா என அழைக்கப்பட்ட மூன்றாவது வட்டத்தில் இருந்த நூற்றியெட்டு புலவர்களில் ஒருவரான பிரபாவல்லபர் தன் தந்தை மறைந்தபின் அந்த இடத்தை அடைந்திருந்தார். இளைஞரான அவருக்கு இரண்டு மாணவர்கள் மட்டுமே இருந்தார்கள். அவரை சோமசர்மன் தேர்வுசெய்தார்.
சோமசர்மன் சென்று பிரபாவல்லபரை வணங்கி தன்னை அவருடைய மாணவனாகச் சேர்க்கும்படி கேட்டுக்கொண்டார். தன் வயதை ஒத்த ஒருவர் வந்து அவ்வாறு கோரியது பிரபாவல்லபரை திகைக்கச் செய்தது. “நான் காஞ்சியின் கடிகாஸ்தானத்தில் கற்றவன். உங்கள் தந்தையின் புகழை அறிந்து அவரை தேடி வந்தேன். அவர் மறைந்துவிட்டார் என்பதனால் அவராக எண்ணி உங்கள் அடிகளில் பணிகிறேன்” என்று சோமசர்மன் சொன்னார்.
பிரபாவல்லபருக்கு புதியவர் மேல் சந்தேகம் இருந்தாலும் சபைக்கு அவரைப்போன்ற ஒருவரை மாணவராக அழைத்துச் செல்வது தனி மதிப்பை அளிக்கும் என்று நினைத்தார். ஆகவே மாணவராகச் சேர்த்துக் கொண்டார். சோமசர்மன் தன் கல்வியையோ கவித்திறமையையோ பிரபாவல்லபருக்கு முழுக்கக் காட்டாமல், அவருக்கு பணிவிடைசெய்வதில் கவனமாக இருந்தார். பிரபாவல்லபர் எண்ணுவதை எண்ணி முடிப்பதற்குள் செய்தார். ஆனாலும் பிரபாவல்லபர் அவரை ரகசியமாகக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.
ஒரு முறை பிரபாவல்லபர் நகரத்தின் ஞானசத்திரங்களில் ஒன்றில் தொல்கவிஞர் சீர்ஷபிந்துவின் கவிதை ஒன்றை தன்னிடம் பாடம்கேட்க வந்த இளைஞர்களுக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அருகே அமர்ந்து சோமசர்மர் ஏடு எடுத்துக் கொடுத்தார். ’யாழிசைத்து வரும் வண்டுக்கு இதழ்களில் நிறைந்த தேனுடன் காத்திருக்கும் வண்ணமலர்கள் காம்போஜத்தின் இல்லத்தரசியர்’ என்ற வரியை அவர் “வண்டு என்பது இங்கே நகரத்தின் அரசன். பெண்கள் அவனுக்காக மதநீருடன் காத்திருக்கிறார்கள்” என்று விளக்கியபோது சோமசர்மர் அறியாமல் ஒருமுறை அசைந்தார். அக்கணமே தான் சொன்னது எவ்வளவு பெரிய பிழை என்றும், அதை சோமசர்மர் உணர்ந்துவிட்டார் என்றும் பிரபாவல்லபருக்குத் தோன்றியது.
அந்த சபையில் இருந்த ஓர் இளைஞனே “இல்லத்தரசியர் என்று கவிஞர் சொல்லிவிட்டார். ஆகவே அது காமத்தால் காத்திருப்பது அல்ல. யாழ் மீட்டிவரும் வண்டு பிக்ஷை ஏற்கவரும் முனிவர். அவருக்கு தானம் கொடுப்பதற்காக கலங்களில் தேனுடன் நிற்கின்றனர் குலப்பெண்கள் என்றுதான் பொருள் கொள்ள முடியும்” என்றான்.
பிறர் “ஆமாம், அதுதான் சரியாகப் படுகிறது” என்றனர்.
பிரபாவல்லபர் திகைத்து “அதெப்படி? காம்போஜத்தின் அரசன்…” என்று ஏதோ சொல்லத் தொடங்கி நடுக்கத்துடன் நின்றுவிட்டார்.
சோமசர்மர் ஊடே புகுந்து “நீங்கள் எடுப்பது வழக்கமான அர்த்தம். என் ஆசிரியர் அளித்தது சிறப்பு அர்த்தம்” என்றார். “அரசன் என்பவன் இந்திரன். வண்டு வடிவில் இந்திரன் வருவதை ஏற்கனவே வியாசகாவியமும் சொல்கிறது. வண்டுக்காக மலர்கள் தேனுடன் காத்திருக்கின்றன என்பது இந்திரனுக்காக மகளிர் காத்திருப்பதற்குச் சமானம் என்பது அந்தவகையில் சரிதான். இந்திரன் தேவன், அவனை எண்ணினால் மானுடமகளிருக்கு கற்பு குறைவுபடுவதில்லை…” என்றார்.
”ஆம்” என்று பிரபாவல்லபர் சொன்னார்.
ஆனால் அன்று திரும்பும்போது அவர் அதைப்பற்றி சோமசர்மரிடம் எதையுமே பேசவில்லை. மறுநாள் மிக இயல்பாக உரையாடி அந்த நிகழ்வைக் கடந்தும் சென்றார். ஆனால் அவர் தன்னை அடையாளம் கண்டுகொண்டார் என்று சோமசர்மரும் உணர்ந்திருந்தார்.
ஓராண்டுக்காலம் கடந்தபோது சோமசர்மர் தன் எச்சரிக்கையுணர்ச்சியை கொஞ்சம் கொஞ்சமாக இழந்தார்.பிரபாவல்லபரிடம் உரிமை எடுத்துக்கொண்டு சற்று கேலிசெய்யவும்கூட துணிந்தார். பிரபாவல்லபர் சோமசர்மரின் மேல் பெரும் மதிப்பு கொண்டவராக தன்னைக் காட்டிக்கொண்டார்.
அரசரின் முதல்மகன் வீரியவர்மன் சூரியபுத்ர சதகர்ணி என்ற பெயரில் பட்டத்து இளவரசனாக அமர்த்தப்பட்டதை ஒட்டி பிரதிஷ்டானபுரியில் பன்னிரண்டுநாள் திருவிழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி இசையரங்குகளும், நடன அரங்குகளும், நாடக அரங்குகளும் தொடர்ச்சியாக நிகழ்ந்தன. வாக்பிரதிஷ்டானத்தில் எட்டு காவியங்கள் முன்வைக்கப்பட்டு அவற்றில் இரண்டு ஏற்பு பெற்றன. முதன்மைக்கவிஞர்கள் நீள்கவிதைகளையும் பிரபந்தங்களையும் அவையில் முன்வைத்தனர்.
பன்னிரண்டாம் நாள் வாக்பிரதிஷ்டான சபையையும், அரசரையும் பட்டத்து இளவரசரையும் புகழ்ந்து எவர் வேண்டுமென்றாலும் கவிதை பாடலாம் என்று அறிவிக்கப்பட்டது. அங்கே தலைக்கோலன் அளிக்கும் முதலடியை ஒட்டி அப்போதே கவிதை புனையப்பட்டு உடனே பாடப்படவேண்டும்.
‘இத்தனை வண்ணங்கள் என்றால் என்ன செய்வேன்?.’ என்னும் முதலடி அறிவிக்கப்பட்ட அதே கணத்தில் சோமசர்மன் எழுந்து கைதூக்கினார். சபை வியந்து திரும்பிப் பார்த்தது. பாடுக என்று தலைக்கோலன் கைகாட்டினான்.
சோமசர்மன் “இத்தனை வண்ணங்களென்றால் என்ன செய்வேன்? வாக்பிரதிஷ்டான மலர்ச்சோலையில் வழிதவறிவந்த பச்சோந்தி நான்!” என்றார்.
சபையில் வியப்பொலி எழுந்தது. ஆனால் அவர் அடுத்த வரியைச் சொல்வதற்குள் பிரபாவல்லபர் தலையில் ஓங்கி அறைந்தபடி எழுந்து “வித்வத்சபை என்னை மன்னிக்கவேண்டும். இவர் என் மாணவர் என்பதற்காக நான் வருந்துகிறேன்… இவர் காஞ்சியில் கடிகாஸ்தானத்தில் பயின்றவர். அந்த சிறுதோணியைக்கொண்டு இந்த கோதாவரியைக் கடக்கமுடியாது என்று பலமுறை சொன்னேன்” என்று கைகூப்பினார்.
சோமசர்மர் மேற்கொண்டு பேச முயல அதை தடுத்தபடி பிரபாவல்லபர் சொன்னார். “இந்தக் காவியசபை மலர்வனம். ஆனால் பச்சோந்திக்கு இந்த மலர்கள் பொருட்டே அல்ல. அது இங்கே பூச்சிகளை பிடித்து உண்ண வந்திருக்கிறது. இதிலுள்ள விரசம் இந்தச் சபைக்கு ஒவ்வாமையை அளிப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. தேனுண்ணவரும் வண்ணத்துப்பூச்சிகளின் வண்ணங்களுக்காக காத்திருக்கும் மலர்கள் இவை” என்றார்.
வாக்பிரதிஷ்டானத்தில் ஒரு சிறிய வழியை காட்டிவிட்டால்போதும் என பிரபாவல்லபர் அறிந்திருந்தார். அத்தனைபேரும் எழுந்து சோமசர்மரின் கவிதைவரியை ஏளனம் செய்யத் தொடங்கினார்கள். “பச்சோந்தி மலர்களை கண்டு முக்கி முக்கி ஏதோ சொல்ல முயல்கிறது” என்று ஒருவர் சொல்ல அரசனும் உரக்கச் சிரித்தான். “பச்சோந்தி தன்னை உடும்பாக நினைத்துக் கொள்கிறது” “உடும்பு அல்ல முதலை” என குரல்கள் எழுந்தன.
அவச்சுவை கொண்ட பாடலை முன்வைத்தமைக்காக சோமசர்மரை முதற்புலவரான கிரீஷ்மர் தண்டித்தார். சோமசர்மர் தன் ஆடைகளை அவிழ்த்துவிட்டு கோவணம் மட்டும் அணிந்து வாயில் எழுத்தாணியைக் கவ்விக்கொண்டு பச்சோந்தி போல தாவித்தாவி அந்தச் சபையில் இருந்து விலகவேண்டும் என்று ஆணையிடப்பட்டது. அவ்வாறே வெளியேறிய சோமசர்மனை வெளியே கூடியிருந்த இளம்புலவர்கள் சிரித்துக் கூச்சலிட்டுக்கொண்டே தூக்கி தலைக்குமேல் சுழற்றி வீசி விளையாடினார்கள். குடிகாரர்கள் அவர் மேல் கள்ளைக் கொட்டினார்கள்.
ஒரு மதுக்கடையின் மூலையில் விடியவிடியக் குடித்துக்கொண்டும் அழுதுகொண்டும் இருந்த சோமசர்மர் பின்னர் பிரதிஷ்டானபுரியின் மையவீதிகளில் தென்படவே இல்லை. அவர் கோதாவரிக்கரையில் உழவர்களின் குடில்களை ஒட்டி ஒரு குடிசை கட்டிக்கொண்டார். அவர்களுக்கு எண்ணும் எழுத்தும் கற்பித்து வாழ்ந்தார். அவர்கள் அவருக்குத் தேவையான கொடைகளை அளித்தனர்.
சோமசர்மன் உழவர்குலத்தைச் சேர்ந்த மானஸி என்னும் பெண்ணை முறைப்படி மணந்து கொண்டார். அவள் மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். வத்ஸன், குல்மாகன் என இரண்டு மகன்கள். மூன்றாவதாக சுருதார்த்தை என்னும் மகள். சோமசர்மன் பழைய நிகழ்வுகளை தன் மகன்களிடம் மட்டும் ரகசியமாகச் சொன்னார். ”நான் இறந்தால் என்னிடமிருக்கும் சுவடிகளை எல்லாம் என்னுடன் சேர்த்து எரித்துவிடுங்கள். அதுவரை இச்செய்திகளை எவரும் அறியவேண்டியதில்லை” என்றார்.
சுருதார்த்தைக்கு பதினைந்து வயதிருக்கையில் அவள் கருவுற்றாள். அந்தக் கருவுக்கு தந்தை யார் என்று கேட்டபோது அவள் பதில் சொல்ல உறுதியாக மறுத்துவிட்டாள். சோமசர்மன் அவரே ஜாதகத்தைப் பார்த்து அவள் எப்படிக் கருவுற்றாள் என்று கண்டடைந்தார். பாதாள நாகமான வாசுகியின் தம்பி கீர்த்திசேனன் என்னும் நாகம் அவள் கோதாவரியில் நீராடிக்கொண்டிருக்கையில் நீருக்கு அடியில் இருந்து அவளைப் பார்த்து காமம் கொண்டது. காலடிகளைத் தொடர்ந்து வந்து இரவில் வீட்டுக்குள் நுழைந்து அவளைப் புணர்ந்தது. அவள் கீர்த்திசேனனின் குழந்தையைப் பெற்றாள்.
அக்குழந்தைக்கு குணபதி என்று சோமசர்மன் பெயரிட்டார். அந்தக் குழந்தை இரண்டு வயது வரை பேச்சு வராமல், நடக்கவும் முடியாமல் இருந்தது. ஒருநாள் சுருதார்த்தை தன் குழந்தையை எடுத்துக்கொண்டு கோதாவரிக்குச் சென்று நீரில் பாய்ந்துவிட்டாள். அவள் கோதாவரிக்குச் செல்வதைக் கண்டு கூச்சலிட்டு துரத்திவந்த சோமசர்மன் கூடவே பாய்ந்து அவளைப் பிடிக்க முயன்றாலும் அவள் நீருடன் சென்றுவிட்டாள். ஆனால் அவர் கையில் இன்னொரு குழந்தை சிக்கியது.
அதுவும் இரண்டு வயதான ஆண் குழந்தை. அவர் அக்குழந்தையை கரைக்கு கொண்டுவந்து படிக்கட்டில் போட்டார். அவருடைய மகன்கள் வத்ஸனும் குல்மாகனும் அக்குழந்தையை குனிந்து பார்த்தார்கள். அது சமர் சாதிக்குழந்தை என்று வத்ஸன் அடையாளம் கண்டான். ஆனால் அப்போது அந்தக் குழந்தை மயக்கநிலையில் வேதச்சொல் ஒன்றை முணுமுணுத்தது. “மாதா பூமி புத்ரோகம் பிருத்வ்ய:” என்று அது சொன்னது.
திகைப்புடன் அக்குழந்தையை பார்த்த சோமசர்மன் தன் மகன்களிடம் ”இவன்தான் சுருதார்த்தையின் மகன்… இவனை எடுத்துக்கொண்டு ஏதாவது புதிய இடத்திற்கு போய்விடுங்கள். அங்கே இவன் உங்கள் தங்கைமகன் என்று சொல்லி வளர்த்து வாருங்கள். இவனுக்கு முன்னறிவு உள்ளது. எல்லாவற்றையும் இவனே கற்றுக்கொள்வான். அவன் வளர்ந்து வரும்போது என் கதையை அவனிடம் சொல்லி அச்சுவடிகளை அவனுக்குக் கொடுங்கள்” என்றார். அதன்பின் கோதாவரியில் பாய்ந்து தானும் ஜலசமாதி ஆனார்.
”அவர்கள் இருவரும் அக்குழந்தையுடன் பிரதிஷ்டானபுரியின் இன்னொரு பகுதியில் குடியேறினார்கள். அவனையே குணபதி என்று பெயரிட்டு வளர்த்தனர். அவன் ஏழுவயதுக்குள் நான்கு வேதங்களையும் கற்றான். பன்னிரண்டு வயதுக்குள் இலக்கணங்களை முழுமையாகக் கற்றான். பதினேழு வயதில் அவன் கற்காத எந்த நூலுமே இல்லை என்ற நிலையை அடைந்தான்” என்று கானபூதி சொன்னது.
“இந்தக் கதையை இப்படியே கதாசரிதசாகரத்தின் கதைகள் நடுவே வைத்துவிடலாம்” என்று நான் சொன்னேன். “காவியமா நாட்டுப்புறக் கதையா என்று தெரியாதபடி உள்ளது”
“ஆம், கதைகளில் பல செய்திகள் மறைக்கப்படும்போதுதான் அவை இத்தனை மாயங்களும் தற்செயல்களும் கொண்டவையாக ஆகின்றன” என்று கானபூதி சொன்னது. “இந்தக் கதையில் இருந்து எழும் கேள்விகள் இரண்டு. நான் கேட்கலாமா?”
“கேள்” என்று நான் சொன்னேன். “நான் எந்தக் கேள்விக்கும் பதிலைச் சொல்லிவிட முடியும் என்று நினைக்கிறேன்”
“சொல், யமி எவரிடமிருந்து கருவுற்றாள்?”
“பாதாள அரசன் வாசுகியின் தம்பியாகிய கீர்த்திசேனன். அவன் கோதாவரியில் வாழ்பவன்”. சிரித்துக்கொண்டு “அந்தக்கதையின் அதே தர்க்கம்தான் இதற்கும்” என்றேன்.
“உண்மை” என்று கானபூதி சிரித்தது.
“எல்லாம் எத்தனை எளிதாக ஆகிவிட்டன” என்று நானும் சிரித்தேன்.
சிரிப்பு மறைந்து முகம் இறுக “இரண்டாவது கேள்விக்கு நீ சரியான பதிலைச் சொல்லவில்லை என்றால் இந்த உரையாடல் இத்துடன் முடியும்” என்றது கானபூதி.
“சொல்” என்றேன்
“மால்யன், குணபதி, குணாட்யர் என்று உருமாறிய அந்த மனிதன் எங்கிருக்கிறார்?”
“நான்தான் அவர்” என்று நான் சொன்னேன். மிகமெல்ல, மந்திரம் போலச் சொன்னேன். “நான்தான் குணாட்யன்”
”ஆம், கண்டுபிடித்துவிட்டாய்” என்று சொல்லி சக்ரவாகி என் தோள்மேல் ஏறி அமர்ந்தது. “தொடக்கம் முதலே எங்களுக்குத் தெரியும். இந்தக் கதை அதை நோக்கியே புனைந்து கொண்டுசெல்லப்பட்டது”
“உண்மையில் குணாட்யரின் கதையில் நிறைய வேறுபாடுகள் உண்டு…”என்றது சூக்ஷ்மதரு. “சோமதேவரின் கதாசரிதசாகரத்தின் கதை உனக்குத் தெரியுமே…இந்தக் கதை உனக்காக உருவாக்கப்பட்டது. நீ வந்தடைந்துவிட்டாய்…”
ஆபிசாரன் என்னை தொட்டு உலுக்கி “நீ உன்னை குணாட்யர் என உணர்வது ஒரு பெரிய பொறி… அதில் சிக்கிக் கொள்ளாதே” என்றது.
நான் கானபூதியிடம் “இப்போது உன்னிடம் கேள்விகேட்பது என் முறை” என்றேன். ஆனால் கானபூதி வேறெங்கோ அமர்ந்திருப்பதுபோலத் தோன்றியது. நான் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே அதன் உருவம் மரத்தில் மறைந்தது.
“உன்னைச் சிக்கவைத்துவிட்டு விலகிவிடுகிறது, விடாதே” என்று ஆபிசாரன் சொன்னது. “அது மீண்டும் வந்து உனக்குக் கதைசொல்லியாகவேண்டும். அந்தக் கதை வழியாகவே நீ இப்போதுள்ள இந்தப் பொறியில் இருந்து வெளியே செல்லமுடியும்… அது வந்தே ஆகவேண்டும் என்பதுபோல ஒரு கேள்வியைக் கேள்…உடனே கேள்”
நான் வாயெடுப்பதற்குள் சக்ரவாகி “இதோபார், அது சொல்லவேண்டிய எல்லா கதைகளையும் சொல்லிவிட்டது. இனி அது தேவையில்லை. நீ உன் பணியைத் தொடங்கு” என்றது.
“என்ன பணி?”என்றேன்.
“முட்டாள், நீ ராதிகாவிடம் என்ன சொன்னாய்? உன்னை ஒரு கவிஞன் என்றாய், பெருங்காவியம் ஒன்றை எழுதப்போவதாகச் சொன்னாய்” சக்ரவாகி சொன்னது.
“ஆமாம்” என்று நான் பெருமூச்சுடன் சொன்னேன்.
“தொடங்கு….இதுதான் அந்தத் தருணம். உனக்குள் கானபூதி சொன்ன கதைகள் நிறைந்திருக்கின்றன. எந்தக் கதையும் கதைக்கடல் அலையே என்று அறிந்துவிட்டாய். இங்கிருப்பது ஒற்றைக்கதை என தெளிந்துவிட்டாய். ஒரு கதையின் ஒரு புள்ளியை விரித்து விரித்து வரலாறும் பண்பாடும் வாழ்வுமாக ஆக்க கற்றுக்கொண்டுவிட்டாய். இனி என்ன? தொடங்கு…”என்றது சக்ரவாகி
“அந்த முதற்சொல், அதைச் சொல்லிக்கொண்டே இரு. தொடங்கிவிடும்” என்றது சூக்ஷ்மதரு.
ஆபிசாரன் “நில், தொடங்குவது எளிது… குணாட்யர் என்ன ஆனார். அதைத் தெரிந்துகொண்டு தொடங்கு. உன்னை இழுத்துவிடப்பார்க்கிறார்கள். இன்னும்கூட உனக்கு வாய்ப்பிருக்கிறது. கானபூதி வரட்டும். அதற்குரிய ஒன்றைக் கேள்”
நான் “கதைசொல்லும் பிசாசாகிய கானபூதியே” என்று அழைத்தேன். “குணாட்யர் செய்த பிழை என்ன?”
மரத்தில் எந்த அசைவும் தெரியவில்லை.
“சொல், குணாட்யர் செய்த பிழைதான் என்ன?”
மெல்ல மரத்தில் கானபூதியின் இரு கண்கள் மட்டும் தெளிந்து வந்தன. “என்ன பிழை?” என்றது.
“அதைத்தான் கேட்டேன், அவர் செய்த பிழை என்ன?”
“பிழை என்று நான் சொல்லவில்லையே”
“சரி, ஏன் பிழை அல்ல என்று சொல்”
“நீ சூழ்ச்சிக்காரன்” என்றபடி கானபூதி தோன்றியது. “நான் ஒரு கதையைத்தான் மீண்டும் சொல்லமுடியும்…”
“சொல்”
“என் மரத்தடியில் வந்தமராத எந்த ஞானியுமில்லை” என்றது கானபூதி “ஏனென்றால் ஞானமும் முக்தியும் எல்லாம் கதைகளின் வழியாகவே சாத்தியமாகும். நான் கதைகளின் தலைவன்”
கானபூதி சொன்னது. என் மரத்தடியில் களைப்புடன் வந்தமர்ந்து முழங்காலை மடித்து அதன்மேல் கையையும் தலையையும் வைத்து அமர்ந்திருந்த முதியவர் அருகே நான் அவருடைய நிழல்போல தோன்றினேன். பின்னர் உருத்திரட்டி எழுந்து நின்று அவரை பார்த்தேன். அவர் என்னை நிமிர்ந்து பார்த்து, ஒருகணம் கழித்து புன்னகைத்து, ”கதைகளின் அரசனான கானபூதிக்கு வணக்கம்” என்றார்.
“மகாசூதரான உக்ரசிரவஸுக்கு வணக்கம்” என்று நான் சொன்னேன்.
“நான் உயிர்துறக்கும்பொருட்டு சென்றுகொண்டிருக்கிறேன். என் தந்தை சென்ற அதே பாதை இது. அவருடைய ஆசிரியர் வால்மீகியும் இவ்வழியேதான் சென்றார்” என்றார்
“ஆம், அவர்களை நான் சந்தித்தேன். ஆதிகவி உயிர்துறந்த அதே இடத்தில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள்” என்றேன்.
“என் தந்தை உங்களிடம் என்ன சொன்னார்? எனக்காக எதையேனும் சொல்லிச் சென்றாரா?” என்று உக்ரசிரவஸ் கேட்டார்.
“இல்லை, ஆனால் வால்மீகிக்கும் ரோமஹர்ஷ்ணருக்கும் சொன்னவற்றை நான் உங்களுக்கும் சொல்லமுடியும்”
“என்ன?” என்றார் உக்ரசிரவஸ்.
“உங்கள் கேள்விக்கான விடையை”
“என்ன கேள்வி? என்னிடம் அப்படிக் கேள்வி ஏதுமில்லை”
”மேயும் விலங்குகள் ஏன் நுனிப்புற்களையே தின்கின்றன? அதுதானே உங்கள் கேள்வி” என்றேன். “வேர் மீண்டும் முளைக்கவேண்டும், அதற்காகத்தான்”
அவர் சலிப்புடன் “ஆம்” என்றார். கால்களை நீட்டிக்கொண்டு “சொற்களின் சுமை” என்றார். ”நூறாண்டுக்காலம் சொற்களை அள்ளிக்கொட்டிக்கொண்டிருந்தேன். அகம் வரண்டுவிட்டது. போதும். இந்த உடலை மண்ணில் சாய்க்க விரும்புகிறேன்”
“நீங்கள் சொன்னவை மறைவதை, சொல்லாதவை முளைப்பதை, ஒவ்வொன்றும் உருமாறுவதை பார்த்தபடியே வந்தீர்கள் இல்லையா?”
“ஆம், அதைத்தான் என் வாழ்க்கை முழுக்க பார்த்துவந்தேன். நான் சொன்னவற்றை மீண்டும் மீண்டும் சொன்னேன். நான் சொல்லாதவற்றைத் திருத்தினேன். கண்ணுக்குத் தெரியாத மாபெரும் சக்தி ஒன்றுடன் வீணாகப்போரிட்டுக்கொண்டே இருந்தேன்” என்றார் உக்ரசிரவஸ்.
“பாடபேதம் என்பது சூரியனுக்கு ஒளி போல. சூரியனை அந்த ஒளிதான் மறைக்கமுடியும்” என்று நான் சொன்னேன்.
“மூலம் என ஒன்று இங்கே எங்குமில்லை. பாரதநிலம் முழுக்க பல்லாயிரம் பாடபேதங்கள் மட்டுமே உள்ளன” என்றார் உக்ரசிரவஸ்.
“நான் உங்களுக்கு குணாட்யரின் கதையைச் சொல்கிறேன்” என்று நான் உக்ரசிரவஸிடம் சொன்னேன். “பிரதிஷ்டானபுரியின் தலைமைக் கவிஞராக திகழ்ந்தவர். வாதில் தோற்று, அறிந்த மொழிகள் அனைத்தையும் உதறி, ஐம்புலன்களையும் இழந்தவராக இங்கே வந்து இந்த மரத்தடியில் அமர்ந்தார். அவருக்கு நான் முதல்வேதச் சொல்லில் தொடங்கி அனைத்துக் கதைகளையும் சொன்னேன்”.
உக்ரசிரவஸ் என்னை கூர்ந்து நோக்கிக்கொண்டு தலையசைத்தார். நான் எங்கே செல்கிறேன் என்று அவர் யோசிக்கிறார் என்று புரிந்துகொண்டு நான் புன்னகைத்தேன். குணாட்யரைப் பற்றிச் சொல்லத்தொடங்கினேன்.
குணாட்யருக்கு நான் சொன்ன கதைகள் முடிந்தன. காற்று நின்றபின் கொடி படிவதுபோல என் நாக்கு ஓய்ந்தது. அவரையே உற்றுநோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தேன்.
என் கதைகளைக் கேட்டுக்கேட்டு எடைமிகுந்து வந்த குணாட்யர் ஒரு கட்டத்தில் மண்ணில் புதைந்தவர்போல அமர்ந்திருந்தார். “இது அழிவில்லாத பெருங்கதை. இதை நான் காவியமாக இயற்றவிருக்கிறேன். இது இங்கே இருக்கவேண்டும். இதுவே உண்மை என நிலைகொள்ள வேண்டும்” என்று அவர் நெஞ்சில் கைவைத்து கண்ணீருடன் சொன்னார். “இந்த உண்மையைக் கொண்டுதான் இங்குள்ள மற்ற அத்தனையும் மதிப்பிடப்படவேண்டும். அனைத்துக்கும் அடித்தளமாக நிலைகொள்ளும் பூமி போல.”
மண்ணில் அமர்ந்து பூமிஸ்பர்ஸமாக கைவைத்து, மறுகையை நெஞ்சில் சேர்த்து தன் பெருங்காவியத்தின் முதல் வரியை குணாட்யர் சொன்னார். “ப்ருத்வி ஏவ மாதா” . புவியே முதலன்னை.
கானபூதி சொன்னது. “இந்தப் பூமியில் இயற்றப்பட்டதிலேயே பெரிய காவியத்தை அவர் இயற்றும்போது நான் மட்டுமே உடனிருந்தேன்”
(மேலும்)
காவியம் – 68
கானபூதி சொன்னது. பிரதிஷ்டானபுரியின் சொல்லவையான காவியப் பிரதிஷ்டானத்தில் இடம்பெறவேண்டும் என்னும் கனவுடன் சோமசர்மன் என்னும் பிராமணன் தெற்கே காஞ்சீபுரத்தில் இருந்து ஓராண்டுக்காலம் நடந்து வந்து சேர்ந்தான். அவன் காஞ்சியின் புகழ்பெற்ற கடிகாஸ்தானம் என்னும் வித்யாசபையில் வியாகரணமும், காவியமும், அலங்காரமும் கற்றிருந்தான். அந்த சபையில் அவன் வரகவி என்று புகழப்பட்டான். அவனுடைய ஞானத்திற்கான இடம் இருப்பது பிரதிஷ்டானபுரியிலேயே என அவனைக் கற்பித்த ஆசிரியர்கள் சொன்னார்கள். அவர்களை வணங்கி ஆசிபெற்று அவன் பிரதிஷ்டானபுரிக்குக் கிளம்பினான்.
பிரதிஷ்டானபுரி அவனைத் திகைக்கச் செய்தது. ’நகரேஷு காஞ்சி’ என்று வேதங்கள் புகழும் பெருநகரில் பிறந்தவன் என அவன் தன்னைப் பற்றி எண்ணியிருந்தான். ஆனால் பிரதிஷ்டானபுரியுடன் ஒப்பிடும்போது காஞ்சி ஒரு சிறுகிராமம் போலத் தோன்றியது. அந்நகரம் ஒரு பெரிய சுழிபோல அவனை பலநாட்கள் சுழற்றியடித்தது. அந்தணன் என்பதனால் அவனுக்குச் சத்திரங்களில் உணவும் படுக்க இடமும் கிடைத்தது. அந்நகரை புரிந்துகொண்டு, அதன் காவியசபைக்குள் நுழையவேண்டும் என்று அவன் எண்ணினான். பல மாதங்களுக்குப் பின் அவனுக்கு புரிந்தது, அங்கே எவரும் எவரையும் கவனிப்பதில்லை என்று. ஒவ்வொருவரும் தங்களை எங்கேயாவது புகுத்திக்கொள்ள முட்டி மோதிக்கொண்டிருந்தார்கள். ஆகவே ஒவ்வொருவரையும் அவர்கள் தங்கள் எதிரிகளாகவே எண்ணினார்கள்.
சோமசர்மன் பலமுயற்சிகளுக்குப் பின்னர் ஒரு முடிவுக்கு வந்தான். அந்நகரின் காவியசபையின் முதல் வட்டத்திற்குள் நுழைவதுதான் மிகக்கடினம். அதற்கு எந்நேரமும் முயன்றபடி பல ஆயிரம்பேர் இருந்தனர், அவர்களே ஒரு முள்வேலியாக ஆகி பிறர் உள்நுழையமுடியாதபடிச் செய்தனர். அவர்களுடன் முட்டிமோதி அவர்களில் ஒருவனாக ஆவது வீண்வேலை. அந்த வட்டத்திற்குள் ஒரு சிறுவிரிசல் வழியாகவே நுழைய முடியும். அந்த விரிசலைக் கண்டடையவேண்டும். அதற்கு ஏதேனும் ஒரு இடத்தை தேர்வுசெய்து அங்கேயே முழுமூச்சாக முயலவேண்டும்.
சோமசர்மன் கோதாவரியின் கரையில் ஒவ்வொரு நாளும் காலையில் குளிக்கும்போது அங்கே குளிக்கவரும் பண்டிதர்களை கூர்ந்து கவனித்தான். தேவமித்ர சதகர்ணியின் காவியசபையில் இடம் பெற்றிருந்த ஒவ்வொரு புலவருக்கும் அவர் இருக்கும் வட்டத்திற்குரிய அடையாளங்கள் இருந்தன. அந்தச் சபையின் ரஜதமாலா என அழைக்கப்பட்ட மூன்றாவது வட்டத்தில் இருந்த நூற்றியெட்டு புலவர்களில் ஒருவரான பிரபாவல்லபர் தன் தந்தை மறைந்தபின் அந்த இடத்தை அடைந்திருந்தார். இளைஞரான அவருக்கு இரண்டு மாணவர்கள் மட்டுமே இருந்தார்கள். அவரை சோமசர்மன் தேர்வுசெய்தார்.
சோமசர்மன் சென்று பிரபாவல்லபரை வணங்கி தன்னை அவருடைய மாணவனாகச் சேர்க்கும்படி கேட்டுக்கொண்டார். தன் வயதை ஒத்த ஒருவர் வந்து அவ்வாறு கோரியது பிரபாவல்லபரை திகைக்கச் செய்தது. “நான் காஞ்சியின் கடிகாஸ்தானத்தில் கற்றவன். உங்கள் தந்தையின் புகழை அறிந்து அவரை தேடி வந்தேன். அவர் மறைந்துவிட்டார் என்பதனால் அவராக எண்ணி உங்கள் அடிகளில் பணிகிறேன்” என்று சோமசர்மன் சொன்னார்.
பிரபாவல்லபருக்கு புதியவர் மேல் சந்தேகம் இருந்தாலும் சபைக்கு அவரைப்போன்ற ஒருவரை மாணவராக அழைத்துச் செல்வது தனி மதிப்பை அளிக்கும் என்று நினைத்தார். ஆகவே மாணவராகச் சேர்த்துக் கொண்டார். சோமசர்மன் தன் கல்வியையோ கவித்திறமையையோ பிரபாவல்லபருக்கு முழுக்கக் காட்டாமல், அவருக்கு பணிவிடைசெய்வதில் கவனமாக இருந்தார். பிரபாவல்லபர் எண்ணுவதை எண்ணி முடிப்பதற்குள் செய்தார். ஆனாலும் பிரபாவல்லபர் அவரை ரகசியமாகக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.
ஒரு முறை பிரபாவல்லபர் நகரத்தின் ஞானசத்திரங்களில் ஒன்றில் தொல்கவிஞர் சீர்ஷபிந்துவின் கவிதை ஒன்றை தன்னிடம் பாடம்கேட்க வந்த இளைஞர்களுக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அருகே அமர்ந்து சோமசர்மர் ஏடு எடுத்துக் கொடுத்தார். ’யாழிசைத்து வரும் வண்டுக்கு இதழ்களில் நிறைந்த தேனுடன் காத்திருக்கும் வண்ணமலர்கள் காம்போஜத்தின் இல்லத்தரசியர்’ என்ற வரியை அவர் “வண்டு என்பது இங்கே நகரத்தின் அரசன். பெண்கள் அவனுக்காக மதநீருடன் காத்திருக்கிறார்கள்” என்று விளக்கியபோது சோமசர்மர் அறியாமல் ஒருமுறை அசைந்தார். அக்கணமே தான் சொன்னது எவ்வளவு பெரிய பிழை என்றும், அதை சோமசர்மர் உணர்ந்துவிட்டார் என்றும் பிரபாவல்லபருக்குத் தோன்றியது.
அந்த சபையில் இருந்த ஓர் இளைஞனே “இல்லத்தரசியர் என்று கவிஞர் சொல்லிவிட்டார். ஆகவே அது காமத்தால் காத்திருப்பது அல்ல. யாழ் மீட்டிவரும் வண்டு பிக்ஷை ஏற்கவரும் முனிவர். அவருக்கு தானம் கொடுப்பதற்காக கலங்களில் தேனுடன் நிற்கின்றனர் குலப்பெண்கள் என்றுதான் பொருள் கொள்ள முடியும்” என்றான்.
பிறர் “ஆமாம், அதுதான் சரியாகப் படுகிறது” என்றனர்.
பிரபாவல்லபர் திகைத்து “அதெப்படி? காம்போஜத்தின் அரசன்…” என்று ஏதோ சொல்லத் தொடங்கி நடுக்கத்துடன் நின்றுவிட்டார்.
சோமசர்மர் ஊடே புகுந்து “நீங்கள் எடுப்பது வழக்கமான அர்த்தம். என் ஆசிரியர் அளித்தது சிறப்பு அர்த்தம்” என்றார். “அரசன் என்பவன் இந்திரன். வண்டு வடிவில் இந்திரன் வருவதை ஏற்கனவே வியாசகாவியமும் சொல்கிறது. வண்டுக்காக மலர்கள் தேனுடன் காத்திருக்கின்றன என்பது இந்திரனுக்காக மகளிர் காத்திருப்பதற்குச் சமானம் என்பது அந்தவகையில் சரிதான். இந்திரன் தேவன், அவனை எண்ணினால் மானுடமகளிருக்கு கற்பு குறைவுபடுவதில்லை…” என்றார்.
”ஆம்” என்று பிரபாவல்லபர் சொன்னார்.
ஆனால் அன்று திரும்பும்போது அவர் அதைப்பற்றி சோமசர்மரிடம் எதையுமே பேசவில்லை. மறுநாள் மிக இயல்பாக உரையாடி அந்த நிகழ்வைக் கடந்தும் சென்றார். ஆனால் அவர் தன்னை அடையாளம் கண்டுகொண்டார் என்று சோமசர்மரும் உணர்ந்திருந்தார்.
ஓராண்டுக்காலம் கடந்தபோது சோமசர்மர் தன் எச்சரிக்கையுணர்ச்சியை கொஞ்சம் கொஞ்சமாக இழந்தார்.பிரபாவல்லபரிடம் உரிமை எடுத்துக்கொண்டு சற்று கேலிசெய்யவும்கூட துணிந்தார். பிரபாவல்லபர் சோமசர்மரின் மேல் பெரும் மதிப்பு கொண்டவராக தன்னைக் காட்டிக்கொண்டார்.
அரசரின் முதல்மகன் வீரியவர்மன் சூரியபுத்ர சதகர்ணி என்ற பெயரில் பட்டத்து இளவரசனாக அமர்த்தப்பட்டதை ஒட்டி பிரதிஷ்டானபுரியில் பன்னிரண்டுநாள் திருவிழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி இசையரங்குகளும், நடன அரங்குகளும், நாடக அரங்குகளும் தொடர்ச்சியாக நிகழ்ந்தன. வாக்பிரதிஷ்டானத்தில் எட்டு காவியங்கள் முன்வைக்கப்பட்டு அவற்றில் இரண்டு ஏற்பு பெற்றன. முதன்மைக்கவிஞர்கள் நீள்கவிதைகளையும் பிரபந்தங்களையும் அவையில் முன்வைத்தனர்.
பன்னிரண்டாம் நாள் வாக்பிரதிஷ்டான சபையையும், அரசரையும் பட்டத்து இளவரசரையும் புகழ்ந்து எவர் வேண்டுமென்றாலும் கவிதை பாடலாம் என்று அறிவிக்கப்பட்டது. அங்கே தலைக்கோலன் அளிக்கும் முதலடியை ஒட்டி அப்போதே கவிதை புனையப்பட்டு உடனே பாடப்படவேண்டும்.
‘இத்தனை வண்ணங்கள் என்றால் என்ன செய்வேன்?.’ என்னும் முதலடி அறிவிக்கப்பட்ட அதே கணத்தில் சோமசர்மன் எழுந்து கைதூக்கினார். சபை வியந்து திரும்பிப் பார்த்தது. பாடுக என்று தலைக்கோலன் கைகாட்டினான்.
சோமசர்மன் “இத்தனை வண்ணங்களென்றால் என்ன செய்வேன்? வாக்பிரதிஷ்டான மலர்ச்சோலையில் வழிதவறிவந்த பச்சோந்தி நான்!” என்றார்.
சபையில் வியப்பொலி எழுந்தது. ஆனால் அவர் அடுத்த வரியைச் சொல்வதற்குள் பிரபாவல்லபர் தலையில் ஓங்கி அறைந்தபடி எழுந்து “வித்வத்சபை என்னை மன்னிக்கவேண்டும். இவர் என் மாணவர் என்பதற்காக நான் வருந்துகிறேன்… இவர் காஞ்சியில் கடிகாஸ்தானத்தில் பயின்றவர். அந்த சிறுதோணியைக்கொண்டு இந்த கோதாவரியைக் கடக்கமுடியாது என்று பலமுறை சொன்னேன்” என்று கைகூப்பினார்.
சோமசர்மர் மேற்கொண்டு பேச முயல அதை தடுத்தபடி பிரபாவல்லபர் சொன்னார். “இந்தக் காவியசபை மலர்வனம். ஆனால் பச்சோந்திக்கு இந்த மலர்கள் பொருட்டே அல்ல. அது இங்கே பூச்சிகளை பிடித்து உண்ண வந்திருக்கிறது. இதிலுள்ள விரசம் இந்தச் சபைக்கு ஒவ்வாமையை அளிப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. தேனுண்ணவரும் வண்ணத்துப்பூச்சிகளின் வண்ணங்களுக்காக காத்திருக்கும் மலர்கள் இவை” என்றார்.
வாக்பிரதிஷ்டானத்தில் ஒரு சிறிய வழியை காட்டிவிட்டால்போதும் என பிரபாவல்லபர் அறிந்திருந்தார். அத்தனைபேரும் எழுந்து சோமசர்மரின் கவிதைவரியை ஏளனம் செய்யத் தொடங்கினார்கள். “பச்சோந்தி மலர்களை கண்டு முக்கி முக்கி ஏதோ சொல்ல முயல்கிறது” என்று ஒருவர் சொல்ல அரசனும் உரக்கச் சிரித்தான். “பச்சோந்தி தன்னை உடும்பாக நினைத்துக் கொள்கிறது” “உடும்பு அல்ல முதலை” என குரல்கள் எழுந்தன.
அவச்சுவை கொண்ட பாடலை முன்வைத்தமைக்காக சோமசர்மரை முதற்புலவரான கிரீஷ்மர் தண்டித்தார். சோமசர்மர் தன் ஆடைகளை அவிழ்த்துவிட்டு கோவணம் மட்டும் அணிந்து வாயில் எழுத்தாணியைக் கவ்விக்கொண்டு பச்சோந்தி போல தாவித்தாவி அந்தச் சபையில் இருந்து விலகவேண்டும் என்று ஆணையிடப்பட்டது. அவ்வாறே வெளியேறிய சோமசர்மனை வெளியே கூடியிருந்த இளம்புலவர்கள் சிரித்துக் கூச்சலிட்டுக்கொண்டே தூக்கி தலைக்குமேல் சுழற்றி வீசி விளையாடினார்கள். குடிகாரர்கள் அவர் மேல் கள்ளைக் கொட்டினார்கள்.
ஒரு மதுக்கடையின் மூலையில் விடியவிடியக் குடித்துக்கொண்டும் அழுதுகொண்டும் இருந்த சோமசர்மர் பின்னர் பிரதிஷ்டானபுரியின் மையவீதிகளில் தென்படவே இல்லை. அவர் கோதாவரிக்கரையில் உழவர்களின் குடில்களை ஒட்டி ஒரு குடிசை கட்டிக்கொண்டார். அவர்களுக்கு எண்ணும் எழுத்தும் கற்பித்து வாழ்ந்தார். அவர்கள் அவருக்குத் தேவையான கொடைகளை அளித்தனர்.
சோமசர்மன் உழவர்குலத்தைச் சேர்ந்த மானஸி என்னும் பெண்ணை முறைப்படி மணந்து கொண்டார். அவள் மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். வத்ஸன், குல்மாகன் என இரண்டு மகன்கள். மூன்றாவதாக சுருதார்த்தை என்னும் மகள். சோமசர்மன் பழைய நிகழ்வுகளை தன் மகன்களிடம் மட்டும் ரகசியமாகச் சொன்னார். ”நான் இறந்தால் என்னிடமிருக்கும் சுவடிகளை எல்லாம் என்னுடன் சேர்த்து எரித்துவிடுங்கள். அதுவரை இச்செய்திகளை எவரும் அறியவேண்டியதில்லை” என்றார்.
சுருதார்த்தைக்கு பதினைந்து வயதிருக்கையில் அவள் கருவுற்றாள். அந்தக் கருவுக்கு தந்தை யார் என்று கேட்டபோது அவள் பதில் சொல்ல உறுதியாக மறுத்துவிட்டாள். சோமசர்மன் அவரே ஜாதகத்தைப் பார்த்து அவள் எப்படிக் கருவுற்றாள் என்று கண்டடைந்தார். பாதாள நாகமான வாசுகியின் தம்பி கீர்த்திசேனன் என்னும் நாகம் அவள் கோதாவரியில் நீராடிக்கொண்டிருக்கையில் நீருக்கு அடியில் இருந்து அவளைப் பார்த்து காமம் கொண்டது. காலடிகளைத் தொடர்ந்து வந்து இரவில் வீட்டுக்குள் நுழைந்து அவளைப் புணர்ந்தது. அவள் கீர்த்திசேனனின் குழந்தையைப் பெற்றாள்.
அக்குழந்தைக்கு குணபதி என்று சோமசர்மன் பெயரிட்டார். அந்தக் குழந்தை இரண்டு வயது வரை பேச்சு வராமல், நடக்கவும் முடியாமல் இருந்தது. ஒருநாள் சுருதார்த்தை தன் குழந்தையை எடுத்துக்கொண்டு கோதாவரிக்குச் சென்று நீரில் பாய்ந்துவிட்டாள். அவள் கோதாவரிக்குச் செல்வதைக் கண்டு கூச்சலிட்டு துரத்திவந்த சோமசர்மன் கூடவே பாய்ந்து அவளைப் பிடிக்க முயன்றாலும் அவள் நீருடன் சென்றுவிட்டாள். ஆனால் அவர் கையில் இன்னொரு குழந்தை சிக்கியது.
அதுவும் இரண்டு வயதான ஆண் குழந்தை. அவர் அக்குழந்தையை கரைக்கு கொண்டுவந்து படிக்கட்டில் போட்டார். அவருடைய மகன்கள் வத்ஸனும் குல்மாகனும் அக்குழந்தையை குனிந்து பார்த்தார்கள். அது சமர் சாதிக்குழந்தை என்று வத்ஸன் அடையாளம் கண்டான். ஆனால் அப்போது அந்தக் குழந்தை மயக்கநிலையில் வேதச்சொல் ஒன்றை முணுமுணுத்தது. “மாதா பூமி புத்ரோகம் பிருத்வ்ய:” என்று அது சொன்னது.
திகைப்புடன் அக்குழந்தையை பார்த்த சோமசர்மன் தன் மகன்களிடம் ”இவன்தான் சுருதார்த்தையின் மகன்… இவனை எடுத்துக்கொண்டு ஏதாவது புதிய இடத்திற்கு போய்விடுங்கள். அங்கே இவன் உங்கள் தங்கைமகன் என்று சொல்லி வளர்த்து வாருங்கள். இவனுக்கு முன்னறிவு உள்ளது. எல்லாவற்றையும் இவனே கற்றுக்கொள்வான். அவன் வளர்ந்து வரும்போது என் கதையை அவனிடம் சொல்லி அச்சுவடிகளை அவனுக்குக் கொடுங்கள்” என்றார். அதன்பின் கோதாவரியில் பாய்ந்து தானும் ஜலசமாதி ஆனார்.
”அவர்கள் இருவரும் அக்குழந்தையுடன் பிரதிஷ்டானபுரியின் இன்னொரு பகுதியில் குடியேறினார்கள். அவனையே குணபதி என்று பெயரிட்டு வளர்த்தனர். அவன் ஏழுவயதுக்குள் நான்கு வேதங்களையும் கற்றான். பன்னிரண்டு வயதுக்குள் இலக்கணங்களை முழுமையாகக் கற்றான். பதினேழு வயதில் அவன் கற்காத எந்த நூலுமே இல்லை என்ற நிலையை அடைந்தான்” என்று கானபூதி சொன்னது.
“இந்தக் கதையை இப்படியே கதாசரிதசாகரத்தின் கதைகள் நடுவே வைத்துவிடலாம்” என்று நான் சொன்னேன். “காவியமா நாட்டுப்புறக் கதையா என்று தெரியாதபடி உள்ளது”
“ஆம், கதைகளில் பல செய்திகள் மறைக்கப்படும்போதுதான் அவை இத்தனை மாயங்களும் தற்செயல்களும் கொண்டவையாக ஆகின்றன” என்று கானபூதி சொன்னது. “இந்தக் கதையில் இருந்து எழும் கேள்விகள் இரண்டு. நான் கேட்கலாமா?”
“கேள்” என்று நான் சொன்னேன். “நான் எந்தக் கேள்விக்கும் பதிலைச் சொல்லிவிட முடியும் என்று நினைக்கிறேன்”
“சொல், யமி எவரிடமிருந்து கருவுற்றாள்?”
“பாதாள அரசன் வாசுகியின் தம்பியாகிய கீர்த்திசேனன். அவன் கோதாவரியில் வாழ்பவன்”. சிரித்துக்கொண்டு “அந்தக்கதையின் அதே தர்க்கம்தான் இதற்கும்” என்றேன்.
“உண்மை” என்று கானபூதி சிரித்தது.
“எல்லாம் எத்தனை எளிதாக ஆகிவிட்டன” என்று நானும் சிரித்தேன்.
சிரிப்பு மறைந்து முகம் இறுக “இரண்டாவது கேள்விக்கு நீ சரியான பதிலைச் சொல்லவில்லை என்றால் இந்த உரையாடல் இத்துடன் முடியும்” என்றது கானபூதி.
“சொல்” என்றேன்
“மால்யன், குணபதி, குணாட்யர் என்று உருமாறிய அந்த மனிதன் எங்கிருக்கிறார்?”
“நான்தான் அவர்” என்று நான் சொன்னேன். மிகமெல்ல, மந்திரம் போலச் சொன்னேன். “நான்தான் குணாட்யன்”
”ஆம், கண்டுபிடித்துவிட்டாய்” என்று சொல்லி சக்ரவாகி என் தோள்மேல் ஏறி அமர்ந்தது. “தொடக்கம் முதலே எங்களுக்குத் தெரியும். இந்தக் கதை அதை நோக்கியே புனைந்து கொண்டுசெல்லப்பட்டது”
“உண்மையில் குணாட்யரின் கதையில் நிறைய வேறுபாடுகள் உண்டு…”என்றது சூக்ஷ்மதரு. “சோமதேவரின் கதாசரிதசாகரத்தின் கதை உனக்குத் தெரியுமே…இந்தக் கதை உனக்காக உருவாக்கப்பட்டது. நீ வந்தடைந்துவிட்டாய்…”
ஆபிசாரன் என்னை தொட்டு உலுக்கி “நீ உன்னை குணாட்யர் என உணர்வது ஒரு பெரிய பொறி… அதில் சிக்கிக் கொள்ளாதே” என்றது.
நான் கானபூதியிடம் “இப்போது உன்னிடம் கேள்விகேட்பது என் முறை” என்றேன். ஆனால் கானபூதி வேறெங்கோ அமர்ந்திருப்பதுபோலத் தோன்றியது. நான் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே அதன் உருவம் மரத்தில் மறைந்தது.
“உன்னைச் சிக்கவைத்துவிட்டு விலகிவிடுகிறது, விடாதே” என்று ஆபிசாரன் சொன்னது. “அது மீண்டும் வந்து உனக்குக் கதைசொல்லியாகவேண்டும். அந்தக் கதை வழியாகவே நீ இப்போதுள்ள இந்தப் பொறியில் இருந்து வெளியே செல்லமுடியும்… அது வந்தே ஆகவேண்டும் என்பதுபோல ஒரு கேள்வியைக் கேள்…உடனே கேள்”
நான் வாயெடுப்பதற்குள் சக்ரவாகி “இதோபார், அது சொல்லவேண்டிய எல்லா கதைகளையும் சொல்லிவிட்டது. இனி அது தேவையில்லை. நீ உன் பணியைத் தொடங்கு” என்றது.
“என்ன பணி?”என்றேன்.
“முட்டாள், நீ ராதிகாவிடம் என்ன சொன்னாய்? உன்னை ஒரு கவிஞன் என்றாய், பெருங்காவியம் ஒன்றை எழுதப்போவதாகச் சொன்னாய்” சக்ரவாகி சொன்னது.
“ஆமாம்” என்று நான் பெருமூச்சுடன் சொன்னேன்.
“தொடங்கு….இதுதான் அந்தத் தருணம். உனக்குள் கானபூதி சொன்ன கதைகள் நிறைந்திருக்கின்றன. எந்தக் கதையும் கதைக்கடல் அலையே என்று அறிந்துவிட்டாய். இங்கிருப்பது ஒற்றைக்கதை என தெளிந்துவிட்டாய். ஒரு கதையின் ஒரு புள்ளியை விரித்து விரித்து வரலாறும் பண்பாடும் வாழ்வுமாக ஆக்க கற்றுக்கொண்டுவிட்டாய். இனி என்ன? தொடங்கு…”என்றது சக்ரவாகி
“அந்த முதற்சொல், அதைச் சொல்லிக்கொண்டே இரு. தொடங்கிவிடும்” என்றது சூக்ஷ்மதரு.
ஆபிசாரன் “நில், தொடங்குவது எளிது… குணாட்யர் என்ன ஆனார். அதைத் தெரிந்துகொண்டு தொடங்கு. உன்னை இழுத்துவிடப்பார்க்கிறார்கள். இன்னும்கூட உனக்கு வாய்ப்பிருக்கிறது. கானபூதி வரட்டும். அதற்குரிய ஒன்றைக் கேள்”
நான் “கதைசொல்லும் பிசாசாகிய கானபூதியே” என்று அழைத்தேன். “குணாட்யர் செய்த பிழை என்ன?”
மரத்தில் எந்த அசைவும் தெரியவில்லை.
“சொல், குணாட்யர் செய்த பிழைதான் என்ன?”
மெல்ல மரத்தில் கானபூதியின் இரு கண்கள் மட்டும் தெளிந்து வந்தன. “என்ன பிழை?” என்றது.
“அதைத்தான் கேட்டேன், அவர் செய்த பிழை என்ன?”
“பிழை என்று நான் சொல்லவில்லையே”
“சரி, ஏன் பிழை அல்ல என்று சொல்”
“நீ சூழ்ச்சிக்காரன்” என்றபடி கானபூதி தோன்றியது. “நான் ஒரு கதையைத்தான் மீண்டும் சொல்லமுடியும்…”
“சொல்”
“என் மரத்தடியில் வந்தமராத எந்த ஞானியுமில்லை” என்றது கானபூதி “ஏனென்றால் ஞானமும் முக்தியும் எல்லாம் கதைகளின் வழியாகவே சாத்தியமாகும். நான் கதைகளின் தலைவன்”
கானபூதி சொன்னது. என் மரத்தடியில் களைப்புடன் வந்தமர்ந்து முழங்காலை மடித்து அதன்மேல் கையையும் தலையையும் வைத்து அமர்ந்திருந்த முதியவர் அருகே நான் அவருடைய நிழல்போல தோன்றினேன். பின்னர் உருத்திரட்டி எழுந்து நின்று அவரை பார்த்தேன். அவர் என்னை நிமிர்ந்து பார்த்து, ஒருகணம் கழித்து புன்னகைத்து, ”கதைகளின் அரசனான கானபூதிக்கு வணக்கம்” என்றார்.
“மகாசூதரான உக்ரசிரவஸுக்கு வணக்கம்” என்று நான் சொன்னேன்.
“நான் உயிர்துறக்கும்பொருட்டு சென்றுகொண்டிருக்கிறேன். என் தந்தை சென்ற அதே பாதை இது. அவருடைய ஆசிரியர் வால்மீகியும் இவ்வழியேதான் சென்றார்” என்றார்
“ஆம், அவர்களை நான் சந்தித்தேன். ஆதிகவி உயிர்துறந்த அதே இடத்தில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள்” என்றேன்.
“என் தந்தை உங்களிடம் என்ன சொன்னார்? எனக்காக எதையேனும் சொல்லிச் சென்றாரா?” என்று உக்ரசிரவஸ் கேட்டார்.
“இல்லை, ஆனால் வால்மீகிக்கும் ரோமஹர்ஷ்ணருக்கும் சொன்னவற்றை நான் உங்களுக்கும் சொல்லமுடியும்”
“என்ன?” என்றார் உக்ரசிரவஸ்.
“உங்கள் கேள்விக்கான விடையை”
“என்ன கேள்வி? என்னிடம் அப்படிக் கேள்வி ஏதுமில்லை”
”மேயும் விலங்குகள் ஏன் நுனிப்புற்களையே தின்கின்றன? அதுதானே உங்கள் கேள்வி” என்றேன். “வேர் மீண்டும் முளைக்கவேண்டும், அதற்காகத்தான்”
அவர் சலிப்புடன் “ஆம்” என்றார். கால்களை நீட்டிக்கொண்டு “சொற்களின் சுமை” என்றார். ”நூறாண்டுக்காலம் சொற்களை அள்ளிக்கொட்டிக்கொண்டிருந்தேன். அகம் வரண்டுவிட்டது. போதும். இந்த உடலை மண்ணில் சாய்க்க விரும்புகிறேன்”
“நீங்கள் சொன்னவை மறைவதை, சொல்லாதவை முளைப்பதை, ஒவ்வொன்றும் உருமாறுவதை பார்த்தபடியே வந்தீர்கள் இல்லையா?”
“ஆம், அதைத்தான் என் வாழ்க்கை முழுக்க பார்த்துவந்தேன். நான் சொன்னவற்றை மீண்டும் மீண்டும் சொன்னேன். நான் சொல்லாதவற்றைத் திருத்தினேன். கண்ணுக்குத் தெரியாத மாபெரும் சக்தி ஒன்றுடன் வீணாகப்போரிட்டுக்கொண்டே இருந்தேன்” என்றார் உக்ரசிரவஸ்.
“பாடபேதம் என்பது சூரியனுக்கு ஒளி போல. சூரியனை அந்த ஒளிதான் மறைக்கமுடியும்” என்று நான் சொன்னேன்.
“மூலம் என ஒன்று இங்கே எங்குமில்லை. பாரதநிலம் முழுக்க பல்லாயிரம் பாடபேதங்கள் மட்டுமே உள்ளன” என்றார் உக்ரசிரவஸ்.
“நான் உங்களுக்கு குணாட்யரின் கதையைச் சொல்கிறேன்” என்று நான் உக்ரசிரவஸிடம் சொன்னேன். “பிரதிஷ்டானபுரியின் தலைமைக் கவிஞராக திகழ்ந்தவர். வாதில் தோற்று, அறிந்த மொழிகள் அனைத்தையும் உதறி, ஐம்புலன்களையும் இழந்தவராக இங்கே வந்து இந்த மரத்தடியில் அமர்ந்தார். அவருக்கு நான் முதல்வேதச் சொல்லில் தொடங்கி அனைத்துக் கதைகளையும் சொன்னேன்”.
உக்ரசிரவஸ் என்னை கூர்ந்து நோக்கிக்கொண்டு தலையசைத்தார். நான் எங்கே செல்கிறேன் என்று அவர் யோசிக்கிறார் என்று புரிந்துகொண்டு நான் புன்னகைத்தேன். குணாட்யரைப் பற்றிச் சொல்லத்தொடங்கினேன்.
குணாட்யருக்கு நான் சொன்ன கதைகள் முடிந்தன. காற்று நின்றபின் கொடி படிவதுபோல என் நாக்கு ஓய்ந்தது. அவரையே உற்றுநோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தேன்.
என் கதைகளைக் கேட்டுக்கேட்டு எடைமிகுந்து வந்த குணாட்யர் ஒரு கட்டத்தில் மண்ணில் புதைந்தவர்போல அமர்ந்திருந்தார். “இது அழிவில்லாத பெருங்கதை. இதை நான் காவியமாக இயற்றவிருக்கிறேன். இது இங்கே இருக்கவேண்டும். இதுவே உண்மை என நிலைகொள்ள வேண்டும்” என்று அவர் நெஞ்சில் கைவைத்து கண்ணீருடன் சொன்னார். “இந்த உண்மையைக் கொண்டுதான் இங்குள்ள மற்ற அத்தனையும் மதிப்பிடப்படவேண்டும். அனைத்துக்கும் அடித்தளமாக நிலைகொள்ளும் பூமி போல.”
மண்ணில் அமர்ந்து பூமிஸ்பர்ஸமாக கைவைத்து, மறுகையை நெஞ்சில் சேர்த்து தன் பெருங்காவியத்தின் முதல் வரியை குணாட்யர் சொன்னார். “ப்ருத்வி ஏவ மாதா” . புவியே முதலன்னை.
கானபூதி சொன்னது. “இந்தப் பூமியில் இயற்றப்பட்டதிலேயே பெரிய காவியத்தை அவர் இயற்றும்போது நான் மட்டுமே உடனிருந்தேன்”
(மேலும்)
எஸ்.குலசேகரன்
எஸ். குலசேகரன் பொதுவாசிப்புக்குரிய படைப்புகளையும், சிறார்களுக்கான நூல்களையும் எழுதிய எழுத்தாளராகவும், வேலூர் வட்டார மூத்த நாடக நூலாசிரியர்களுள் ஒருவராகவும் அறியப்படுகிறார்.

எஸ்.குலசேகரன்
எஸ். குலசேகரன் பொதுவாசிப்புக்குரிய படைப்புகளையும், சிறார்களுக்கான நூல்களையும் எழுதிய எழுத்தாளராகவும், வேலூர் வட்டார மூத்த நாடக நூலாசிரியர்களுள் ஒருவராகவும் அறியப்படுகிறார்.

The secular fanatics
இரண்டாம் நிலை யோக பயிற்சி கடந்த வாரம் கலந்துகொண்டேன். முதல் நிலை பயிற்சிகளை விட்டு விட்டு செய்து கொண்டிருந்தேன். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறேன். அதனுடன் இந்த புதிய பயிற்சிகளை செய்து வருவது மிகுந்த அமைதியையும் உளக்குவிப்பையும் கொடுக்கிறது.
இரண்டாம்நிலை யோகம், கடிதம்The secular fanatics
இரண்டாம் நிலை யோக பயிற்சி கடந்த வாரம் கலந்துகொண்டேன். முதல் நிலை பயிற்சிகளை விட்டு விட்டு செய்து கொண்டிருந்தேன். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறேன். அதனுடன் இந்த புதிய பயிற்சிகளை செய்து வருவது மிகுந்த அமைதியையும் உளக்குவிப்பையும் கொடுக்கிறது.
இரண்டாம்நிலை யோகம், கடிதம்June 26, 2025
மனு நூற்கொடை இயக்கம்
அன்பிற்கினிய ஜெயமோகன் அவர்களுக்கு
சூழலியல் ஆவணப்படமான ‘தி கிரீன் பிளானட்‘ படத்தில் சூழலியலாளர் டேவிட் அட்டன்பரோ, ஆளிவிதைச் செடிவகையின் பரவல் குறித்து விவரித்திருப்பார். கான்கிரீட் கட்டிடங்களும் தார்ச்சாலைகளும் நிறைந்த நகர்ப்புறப் பகுதிகளிலும்கூட அச்செடிகள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, அங்குள்ள நெருக்கடிச்சூழல்களைத் தாக்குப்பிடித்து வளர்கின்றன. காற்று, நீர் மற்றும் விலங்குகளின் உரோமங்களில் ஒட்டிக்கொண்டு பயணித்து வருகிற சின்னஞ்சிறு விதைகள் நகர்ப்புற சாலைகள் மற்றும் சுவர்களில் உள்ள விரிசல்களுக்குள் புகுந்துவிடுகின்றன.
அவ்வாறு விரிசல்களுக்குள் தஞ்சமடையும் விதைகள் தகுந்த காலச்சூழல் வரும்வரை தீராப்பொறுமையுடன் காத்திருக்கின்றன. உகந்த சூழ்நிலை உருவாகி உரிய சத்துக்களும் தண்ணீரும் பெற்றடைந்த பிறகு அவ்விதைகள் முளைத்து வேர்பரப்பி வளர்ந்தெழுகின்றன. சிறுகொடிகளாகவும் படர்கொடிகளாகவும் ஆளிவிதைகள் முளைத்து ஊதாமஞ்சள் பூக்களாகப் பூத்துச் செழிக்கின்றன. நகரத்து தார்ச்சாலைகளிலும் கான்கிரீட் சுவர்களிலும் பச்சையிலைகளைப் படரவிட்டு சுருள்சுருளாக முளைத்திருக்கும் அச்செடிகள் ஒவ்வொன்றுமே… இறுகிப்போன கற்பரப்பில் நம்பிக்கையின் வெளிச்சம் படிந்த நூறாயிரம் சிறுபூக்களை மலர்த்துகின்றன.
மண்ணில் புதைந்து இருளைத்தாங்கும் சின்னஞ்சிறிய விதைகளின் கனவென்பது வானின் வெளிச்சத்தைத் தங்கள் இலைகளால் வாழ்நாள் வரைப் பருகிமகிழ்தலே. தன்னிலிருந்து இன்னொன்றாகத் தன்னையே பிறப்பித்து பல்லாயிரம் தலைமுறைகள் தாண்டி விதைகள் தங்கள் கனவுகளைக் காப்பாற்றுகின்றன. மனித மனம் இவ்வாழ்வின் மீது மீளமீள நம்பிக்கையடைவதற்கான நற்குறியீடு இது. அவநம்பிக்கையும் அறமின்மையும் பெருகத்துவங்கியுள்ள சமகாலத்தில் அன்பை முளைப்பிக்கும் செயல்கள் அனைத்துமே மானுடத்தின் மீட்சிக்கானவை. அத்தகைய மானுடச் செயல்பாடுகளின் சிறுநீட்சியே ‘மனு அறக்கட்டளை‘.
மனு அறக்கட்டளைச் செயல்பாடுகளின் நல்லசைவாக ‘மனுநூல்கொடை இயக்கம்‘ துவங்கப்படுகிறது. இச்செயலசைவின் முதன்மைநோக்கம் என்பது மிகச்சிறந்த புத்தகங்களை சமகால இளைய வாசிப்பு மனங்களுக்கு கொடையாக அளிப்பதே. புத்தகங்களைத் தேர்ந்த நேர்த்தியுடன் உருவாக்கி, அவைகளை விலையில்லா பிரதிகளாக அனுப்பிவைத்தலே இந்நூல்கொடை இயக்கத்தின் பணியாக அமையும். வாசிப்பு எனும் முன்னெடுப்பின் வழியாக நிறைய இருதயங்களைச் செயலைநோக்கி விருப்புறச்செய்வது மனுநூல்கொடையின்அகநோக்கங்களுள் ஒன்று. முதற்கட்டமாக நான்கு புதிய புத்தகங்களைப் பதிப்பிக்கும் பணி துவக்கமடைந்துள்ளது. அதில் முதலாவதாக வருவது தாவரயியலாளர் டாக்டர் லோகமாதேவியின் இரு நூல்கள்.
தந்தைப்பெருமரம்கல்லெழும் விதைகுக்கூ காட்டு பள்ளியில் வருகின்ற 28ம் தேதி வெளியீட்டு நிகழ்வு
எதும்மற்று பொட்டல் மலையாக இருந்த திருவண்ணாமலையை பசுமையாக மாற்றும் முயற்சியை 35 வருடங்களுக்கு முன்பு துவங்கி இப்போது வரை செயலாற்றும் சுப்பிரமணி, இந்தியாவெங்கும் மரபு விதைகளை தேடி அலையும் யாத்ரிகன் யசோக், மரபு காய்கறி உற்பத்தி சார்ந்து ஒரு பெரும் இயற்கையியல் அறிவை தன்னகத்தே வைத்து, தமிழகத்தின் எண்ணற்ற குறுங்காடுகளை உருவாக்கி வரும் கருப்பசாமி நண்பர்கள், காளிங்கராயன் பாசன பகுதிகளில் சத்தம் இல்லாமல் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக பல்லுயிர் சூழலை காக்கும் பச்சைஇதயம் பார்த்திபன் ஆகியோர் நூலை பெற்றுக்கொள்கிறார்கள்.
இந்த காலகட்டத்தில் நடக்கும் எல்லாவற்றிற்கும் துவக்கம் நீங்கள்தான். ஒவ்வொரு நாளும் நன்றியோடு நினைத்து கொள்கிறோம்.
நன்மையைத் தருவித்தலின் வழியாக ஒரு மனிதக் கனவை நம்மால் நீளாயுள் கொண்டதாக நிலைநிறுத்த முடிகிறது.
எந்த ஒரு உயிரின் தன்மையும் எல்லா உயிர்களிடமும் நிறைந்திருப்பதை நாம் அறிதலும், அந்தப் புரிதலினால் நம் அகம் நிறைதலும் இவ்வாழ்வை அருளப்பட்டதாக மாற்றுகிறது. ஏதோவொரு ஒற்றைமனிதரின் நீட்சிதான் இங்குள்ள எல்லா மனிதர்களும் என்கிற தெளிவுண்மையை நாமடைவது அக்கணம்தான். எல்லா கோட்பாடுகளையும் அறிந்து கொள்ளுங்கள். ‘எல்லா நுட்பங்களையும் ஆராய்ந்து திறனடையுங்கள். ஆனால், ஒரு மனித ஆன்மாவைத் தொடும்போது மற்றொரு மனித ஆன்மாவாகவே இருங்கள்‘ என உளவியலாளர் கார்ல் யுங் சொல்வது அந்த மானுட ஞானத்தைத்தான்.
மானுடத்தை போதிக்கும் அத்தனை தத்துவங்களையும் கைதொழுது வணங்கி மனுநூல்கொடையின் கனவாக இதை விதையூன்றுகிறோம்.
Manu Foundation
மின்னணு அடிமைத்தனமும் மீட்பும்
எனக்கு வரும் கடிதங்களில் கணிசமானவை தங்களுடைய பிள்ளைகள் எதையுமே படிப்பதில்லை என்றும், பெரும்பாலான நேரங்களை ஏதேனும் மின்னணு ஊடகத்தில் செலவழிக்கிறார்கள் என்றும் மனக்குறைபட்டு பெற்றோர் எழுதுபவைதான்.
தமிழ்ச்சூழலில் ஒரு பெற்றோர் அவ்வாறு உணர்வதே மிக அரிதானது. நான் பார்த்தவரை மிக இளவயதிலேயே செல்பேசிகளையும் கணிப்பொறிகளையும் குழந்தைகளின் கைகளுக்கு எடுத்துக்கொடுப்பவர்கள் பெற்றோர்தான். அவர்கள் அதில் கணிப்பொறி விளையாட்டுகளையும் சூதாட்டங்களையும் விளையாடும்போது பெற்றோர் அடையும் பரவசத்தை காண்கிறேன். குழந்தைகளின் வெறியைக் கண்டு தன் பிள்ளைகள் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருப்பதாக நினைத்துக்கொள்பவர்களை நிறையவே கண்டிருக்கிறேன். ரயிலில் ஏதேனும் ஒரு தாய் ’எந்நேரமும் கம்ப்யூட்டர் தாங்க கைய வச்சான்னா எடுக்க மாட்டான்’ என்று தாள முடியாத பெருமிதத்துடன் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.
இந்த மனநிலையை உண்மையிலேயே என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. தன்னுடைய குழந்தைகள் ஒரு அச்சிட்ட நூலை புரட்டிப் பார்த்தால்கூட படிப்பிலிருந்து கவனம் விலகிவிடும் என்று பதறியடித்து பிடுங்கி அப்பால் வைக்கும் அதே பெற்றோர்தான் செல்போனை அவர்களிடம் எடுத்துக் கொடுத்து அதில் கொட்டிக்கிடக்கும் மின்னணு விளையாட்டுகளை விளையாட வைக்கிறார்கள். அதிலுள்ள சமூக வலைத்தளங்களிலெல்லாம் இணைந்துகொண்டு முகம் தெரியாதவர்களிடம் எல்லாம் உரையாடி என்னவென்றே தெரியாத தொடர்புகளை உருவாக்க வழியமைக்கிறார்கள். ஐந்தாம் வகுப்பு ஆறாம் வகுப்பிலிருந்தே பிள்ளைகளை ’போர்னோகிராபி’க்குள் செல்லவும் ராஜபாதை அமைத்துக்கொடுக்கிறார்கள்.
ஓரிருமுறை ரயிலில் இந்தப்பெற்றோருடன் பேசிப்பார்த்திருக்கிறேன். இதிலுள்ள அபாயங்களை சொல்லி புரியவைக்க முயன்றிருக்கிறேன். அவர்கள் மூர்க்கமாக ‘அதெல்லாம் அவன் ரொம்ப பிரில்லியண்ட். அவனுக்கு அதெல்லாம் தெரியும்’ என்று தவிர்த்துவிடுகிறார்கள்.
உண்மையான பிரச்னை இருப்பது நம் பெற்றோர்களிடம்தான். அவர்களுக்கு நவீனத் தொழில்நுட்பம் என்பது நவீன அறிவியல் என்ற எண்ணம் இருக்கிறது. அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்குமான வேறுபாடு அவர்களுக்குத் தெரிவதில்லை. தொழில் நுட்பமே அறிவியல் என்றோ எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தொழில்நுட்பம் என்பது பெரும்பாலும் இன்று நுகர்வின் கருவிதான். நுகர்வியத்தைத்தான் நவீன அறிவியல் உலகம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளில் தொழில்நுட்பம் அடைந்திருக்கும் பெரும்பாய்ச்சல் என்ன என்று நமக்குத்தெரியாது. தகவல்சேகரிப்பு, ஆய்வில் அடைந்துள்ள முன்னேற்றம் தெரியாது. ஏனென்றால் நமக்கு எந்த அறிவுத்துறையில் அறிமுகம் இல்லை. ’உங்களுக்குத் தெரிந்த தொழில் நுட்பத்தைச் சொல்லுங்கள்’ என்றால் பெரும்பாலானவர்கள் செல்பேசி, தொலைக்காட்சி அல்லது ஏதாவது நுகர்வு இயந்திரங்களைத்தான் சொல்வார்கள்.
இந்த மனப்போக்கு இருப்பதனால் நுகர்வுப்பொருட்களாகிய செல்போன் போன்றவற்றின் மேல் பெரும் மோகம் நம் மக்களுக்கு இருக்கிறது. அது உண்மையில் பழங்குடிகளுக்கு புதியபொருட்களின் மீது இருக்கக்கூடிய ஒருவகையான அப்பாவித்தனமாக மோகம் தான். Gods Must Be Crazy படத்தில் வானத்தில் இருந்து விழும் கொக்கோகோலா புட்டி மீது அந்த மக்கள்ம் அடையும் வியப்பும் பரவசமும்தான் அது.. அம்மக்கள் அந்தப் புட்டியை கடவுளாக வழிபடுவதும், அது அவர்கள் வாழ்க்கையை அழிக்க ஆரம்பிப்பதும் நமது செல்போன் மோகத்துடன் ஒப்பிடப்படவேண்டியது.
இன்று செல்போன் மோகத்தில் மூழ்கிக்கிடக்கும் ஒரு சமூகம் தன்னுடைய அடுத்த தலைமுறையையும் செல்போனுக்குள் கொண்டு செல்கிறது. செல்போனுக்கு அடிமையான பெற்றோருக்கு அதில் தெரிந்தது ஒன்றிரண்டு விஷயங்கள்தான். ஆனால் அவர்களின் குழந்தைகள் உள்ளே செல்லும்போது அவர்கள் மிக எளிதில் மிகப்பெரிய ஒரு வலைச்சிக்கலுக்குள் மாட்டிக்கொள்கிறார்கள். அது அவர்களால் கையாளப்படத்தக்க அளவுக்கு சிறியது அல்ல. எந்த ஒரு தனிமனிதனும், அவன் எத்தனை மெய்ஞானியாக இருந்தாலும் இன்றைய சமூக வலைத்தளங்களின் விரிவை, இன்றைய கணிப்பொறி சூதுகளின் உலகை, தனித்து கையாள முடியாது. தானாக விரும்பி அதிலிருந்து வெளிவரவும் முடியாது. அதற்கு அதற்கே உரிய வழிமுறைகள் தேவை. அதற்கு நீண்ட காலம் ஆகும். இன்று அதற்குள் செல்லாமல் இருப்பதே மிகச்சிறந்தது.
இவ்வாறு ஒரு சமூகத்தின் மக்களில் பெரும்பாலானவர்கள் இதில் உழன்று கொண்டிருக்கும்போது அதில் ஒரு குழந்தை மட்டும் தனித்திருப்பதென்பது சாதாரண ஒன்றல்ல. அந்தச் சவாலை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அது ஒரு கட்டிடத்தின் இருக்கும் ஒரு செங்கல் மட்டும் தனித்திருப்பது போல. அந்தச் செங்கல் மீதுதான் அக்கட்டிடத்தின் மொத்த எடையும் வந்து அழுத்தும். அந்த செங்கல்லுக்கு உடையும் வாய்ப்பும் அதிகம். ஒரு குழந்தை பள்ளியில், நண்பர்கள் மத்தியில் வேறுபட்டிருப்பது என்பது பெரும் வதை. அந்த வேறுபடுத்தலின் வழியாக உருவாகும் தனிமையை வெல்லவே சற்று புத்திசாலியான குழந்தைகள் கூட பிற குழந்தைகள் விளையாடும் அதே ’கேம்ஸ்’ உலகில், ’சோஷியல் மீடியா’ உலகில் சென்று சேர்கிறார்கள்.
இதை நாம் தடுப்பது என்பது ஒருவகையில் அவர்கள் மேல் இன்னொரு வன்முறையை செலுத்துவதாகவே அமையும். தடுத்து, கட்டுப்படுத்தி இன்றைய தொழில்நுட்ப விளையாட்டுகளின், சமூக வலைத்தளங்களின் உலகிலிருந்து எந்தக்குழந்தையையும் வெளியே கொண்டு வந்துவிட முடியாது. தன்னடிமைத்தனம் (Addiction) என்று சொல்லப்படும் எதற்கும் அதிலிருந்து வெளிவருவதற்கான வழி என்பது மேலும் தீவிரமான ஒன்றைப் பற்றிக்கொள்வதுதான். மதுஅடிமைகள் மதுவை நிறுத்திவிட்டால் அதே அளவுக்கு ஆட்கொள்ளும் இன்னொன்றுக்கு செல்லவில்லையென்றால் அதிகபட்சம் ஓராண்டுக்குள் மீண்டும் மதுவுக்குள் திரும்பிச் செல்வார்கள். அந்த இன்னொன்று என்ன என்பதுதான் கேள்வி.
அந்த இன்னொன்று புத்தக வாசிப்பாக இருக்கலாம். புத்தகங்களுக்குள் சென்ற ஒருவர் அதன் பிறகு அந்த பிரம்மாண்டமான அறிவுலகத்தையும் வீச்சையும் விரிவையும் அறிந்த பிறகு ஒருபோதும் மின்னணு உலகத்திற்குள் வரமாட்டார்கள். ஆனால் அதில் மிகக்குறைவான பேரால் மட்டுமே உள்ளே செல்ல முடியும். அனைவருக்கும் அது இயல்வதல்ல. அதிலும் குறிப்பாக குழந்தைகள் அத்தனை எளிதாக புத்தகங்களுக்குள் செல்ல முடியாது. இன்னும் சொல்லப்போனால் மின்னணு ஊடகங்களில் உள்ள மின்னும் விரைவுக்குக் கண்ணும் மனமும் பழகிவிட்டால் புத்தகத்தின் நிலைத்த உலகம் மிகமிக அன்னியமானதாக இருக்கும். காணொளிக்கு பழகிய ஒருவரால் ஒரு பக்கம்கூட படிக்கமுடியாது. ஏற்கனவே நிறைய படித்துக்கொண்டிருந்தவர் கூட அந்த திறனை இழக்கக்கூடும். குழந்தைகளால் அதிலிருந்து வெளியேறி வாசிப்புக்கு வர முடிவதேயில்லை.
குழந்தைகள் புத்தகங்களுக்குள் செல்ல வேண்டுமென்றால் அந்தப் பெற்றோர் ஏற்கனவே புத்தகங்களுக்குள் வாழ்பவர்களாக இருக்கவேண்டும். பெற்றோரில் ஒருவர் புத்தகங்களின் மீதான் வெறுப்பை வெளிப்படுத்திக்கொண்டிருந்தால் கூட குழந்தைகள் புத்தகங்களுக்குள் வருவதற்கான வாய்ப்பு குறைவு. அவர்கள் மின்னணு ஊடகங்களுக்கும் இணைய வலைத் தொடர்புகளுக்கும் செல்வதற்கான வாய்ப்புகளே அதிகம். நமது தமிழ்ச்சூழலில் குடும்பப்பெண்கள் குழந்தைகளை புத்தகங்களிலிருந்து அகற்றி செல்போன் உலகுக்குள் செலுத்துவதில் முழுமூச்சாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெற்றோர் வாசிப்பவர்களாக இருந்து ,மிக இளம் வயதிலேயே வீட்டில் தொடர்ந்து புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி, வாசிப்பின் சுவையை இளமையிலேயே குழந்தைகளுக்கு அளித்துவிட்டால் அவர்கள் வாசிப்பிற்குள் செல்வது மிக எளிது. மேலை நாடுகளில் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பது அதுதான். இன்று அதை ஒரு இயக்கமாகவே அமெரிக்க்கா போன்ற நாடுகளில் முன்னெடுக்கிறார்கள். நமது நாட்டில் அதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. அப்படிப்பட்ட சிறு வாசிப்பு குழுக்களை அல்லது வாசிப்புச் சமூகங்களை உருவாக்கி அதற்குள்ளேயே குழந்தைகளை ஈடுபடுத்தி வாசிப்பு உலகிற்குள் கொண்டு வர முடியும்.
இன்னொன்று வாசிப்புக்கு இணையாக செயல்பாடுகளில் ஈடுபடுத்துவது. எங்களுடைய அனுபவத்தில் செல்போனில் மூழ்கிக்கிடக்கும் குழந்தைகளை வெளியே கொண்டு வருவதற்கு புத்தக வாசிப்பதை விட உதவியாக இருப்பவை நேரடிச் செயல்பாடுகள் தான். அதாவது பறவை பார்த்தல், தாவரங்களை அவதானித்தல் போன்ற களச்செயல்பாடுகள். அவை நேரடியாக இயற்கையை அறிமுகம் செய்கின்றன. குழந்தைக்குள் இருக்கும் அறிந்துகொள்ளும் துடிப்பை, செயலாற்றும் விசையை அவை வளர்க்கின்றன. குழந்தை மிக எளிதாக அவற்றில் ஈடுபடமுடிகிறது. புத்தக வாசிப்பில் இருப்பது உடல் ரீதியான ஒரு சோம்பல், கூடவே மூளை ரீதியான ஒரு செயலூக்கம். குழந்தைகளின் உடல் மிகச்செயலூக்கமானது என்பதனால் அமர்ந்து வாசிப்பது என்பது அவர்களுக்கு மிகக் கடினமாக இருக்கக்கூடும். ஆனால் ஒரு பகல் முழுக்க பறவையைத்தேடி காட்டுக்குள் அவர்களால் செல்ல முடியும். ஒரு தாவரத்தை அடையாளம் காண்பதற்கான முழுநாளும் தோட்டத்திற்குள் சுற்றிவர முடியும். அது அவர்களை இன்னும் தீவிரமாக ஈடுபடுத்துகிறது.
அப்படி செயல் வழியாக ஒரு கற்றலும் அதன் துணைச் செயல்பாடாக வாசிப்பும் இருக்குமென்றால் குழந்தைகளை வாசிப்புக்குள் எளிதில் கொண்டுவர முடியும் என்பது எங்களுடைய நடைமுறை அனுபவமாக இருக்கிறது. மிகக்குறைந்த அளவில் அதை செய்து பார்க்கிறோம். அச்செயல்முறை தொடர் வெற்றியைத்தான் அளித்து வருகிறது அதிகபட்சம் நூறு குடும்பங்களுக்குள் மட்டுமே எங்களுடைய இச்செய்தி சென்று சேர்ந்திருக்கிறது. தமிழகத்தின் மனநிலையை வைத்துப்பார்த்தால் அந்த நூறு குடும்பங்களே அரிதானவர்கள், தனித்தவர்கள் என்று தோன்றுகிறது. அந்த எண்ணிக்கையைப் பெருக்கவே தொடர்ந்து முயல்கிறோம்.
காவியம் – 67
கானபூதி சொன்னது. நான்கு கோட்டைகளுக்குள் எட்டு அரண்மனை வளாகங்களும், பதினெட்டு ஆலயங்களும், பன்னிரண்டு வணிகர் சந்தைகளும், இருபத்தாறு உழவர் சந்தைகளும், ஒவ்வொரு சாதிக்கும் உரிய சிற்றாலயங்களும், அவர்களுக்கான குடி சபைக் கூடங்களும், ஆயிரம் சத்திரங்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கூடங்களும் கொண்ட பிரதிஷ்டானபுரிக்குள் சமர்கள் மைய வாசல்கள் எதனூடாகவும் உள்ளே நுழைய அனுமதி இருக்கவில்லை. அவர்களுக்கான எட்டு வழிகள் வேறு இருந்தன.
கோதாவரியின் கரையின் சதுப்பில், நாணல்கள் செறிந்த சரிவில் இருந்த அவர்களின் புற்குடில்களில் இருந்து அந்த பாதைகள் தொடங்கின. கோதாவரியின் பெருக்கை வந்தடைந்த அழுக்கு நீரோடைகளின் விளிம்பினூடாக நகருக்குள் புகுந்தன. எதிரே வருபவருக்கு சுவரோடு ஒட்டி வழிவிடவேண்டிய அளவுக்குச் சிறிய பாதைகள் அவை. இருபுறமும் ஓங்கிய மாளிகைகளின் பின்புறச் சுவர்கள் குறுகிய இடைவெளிவிட்டு நின்றன. அவற்றின் நடுவே உள்ள பாதை மடிந்து மடிந்து செல்லும் சுரங்கப்பாதைகள் போல் இருண்டு, குளிர்ந்திருந்தன. பெருச்சாளிகளும் அவ்வப்போது தென்படும் காட்டுப்பூனைகளும் தவிர அங்கே சமர்கள் மட்டுமே நடமாடினர். அவர்களுக்கே அந்த வழி தெரிந்திருந்தது.
ஒவ்வொரு மாளிகையும் யானையின் குதவாய் போல சிறிய பின்வாயிலைக் கொண்டிருந்தது. அங்கே சென்று நின்று அவர்கள் தங்கள் கையிலுள்ள சிறிய மணியை ஒலிக்கவேண்டும். வாயில் திறந்து அவர்கள் உள்ளே விடப்படுவார்கள். அங்கே கழிப்பறைகளின் கற்பலகையிலுள்ள துளைக்கு அடியில் வைக்கப்பட்டிருக்கும் மரவாளியில் மலம் நிறைந்திருக்கும். வாளியில் இருந்த உமியின் மேல் விழுந்த மலத்தின்மேல் சாம்பலை போட்டு மூடி ஈ மொய்க்காமல் செய்திருப்பார்கள். வாளியில் இருந்து மலத்தை எடுத்துவந்து மரப்பீப்பாய்களில் கொட்டி அவற்றுடன் இணைந்த மாட்டுத்தோல் பட்டையை தோளில் மாட்டிக்கொண்டு, தூக்கியபடி குனிந்து நடந்து கோதாவரிக் கரைக்கு வருவார்கள்.
அவர்களின் நிலம் நோக்கிய கண்களுக்கு முன் அவர்களின் கால்கள் ஒன்றையொன்று முந்த முயல்வதுபோல எடையுடன் பதிந்து எழுந்து சென்றுகொண்டிருக்கும். கோதாவரியின் சதுப்பை வந்தடைந்ததும் அங்கே ஒவ்வொருவருக்கும் அவர்களே வெட்டி வைத்திருக்கும் குழியில் அந்த மலத்தைக் கொட்டி, பீப்பாயை கழுவி அதன்மேல் ஊற்றி, குழியின் மலத்தின் மேல் மண்போட்டு மூடிவிட்டு மீண்டும் தங்கள் குடில்களுக்குச் சென்று உணவுக்கான கலங்களுடன் அதே வழியில் நகருக்குள் நுழைவார்கள். ஒவ்வொரு இல்லத்தின் பின்வாயிலிலும் நின்று இன்னொரு வகை மணியோசையை எழுப்புவார்கள். இம்முறை மிகவும் காலம் தாழ்த்தியே அக்கதவுகள் திறக்கும். பணிப்பெண்கள் வந்து முந்தையநாள் அவ்வில்லத்தில் உண்டு மிஞ்சிய எச்சிலையும், புளித்தவையும் கெட்டவையுமான உணவையும் ஒன்றாகக் கலந்து அவர்களின் கலங்களில் கொட்டுவார்கள்.
குடிலுக்குத் திரும்பி வந்து அடுப்பு மூட்டி அந்த உணவை மீண்டும் கொதிக்கச் செய்தால் மட்டுமே உண்ண முடியும். உழைப்பும், அலைச்சலும் தனித்தனியாக என்றாலும் உணவு ஒன்றாகவே நிகழவேண்டும் என்பது சமர்களின் வழக்கம். அனைவரும் உணவுடன் திரும்பிவந்து, எல்லா உணவும் கொதித்து இறக்கப்பட்டபின் அத்தனை உணவையும் ஒன்றாகக் கலந்து அனைவருக்கும் தேவைக்கேற்ப தாமரை இலைகளில் பகிர்ந்து, கூடி அமர்ந்து உண்பார்கள். அனைத்து உணவும் அனைவருக்கும் என்பது தலாதேவியின் ஆணை. பன்றிமுகம் கொண்ட அந்த தெய்வத்தை நகரிலுள்ள உயர்குடியினர் வராஹி என்று வழிபட்டார்கள்.
கரைச்சதுப்பில் அமர்ந்து உண்பது அவர்களின் கொண்டாட்டம். மெல்லும், சுவைக்கும், உணவை பகிரும், மேலும் கோரும் ஒலிகள் அங்கே நிறைந்திருக்கும். அதன் பின் அங்கேயே நாணல்கள் மேல் மரநிழலில் படுத்து துயில்வார்கள். மாலையில் மீண்டும் நகரெங்கும் சென்று அந்நாளின் குப்பைகளை எல்லாம் அள்ளி மீண்டு வரவேண்டும். அவற்றில் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்ட பின் எஞ்சியவற்றை ஆற்றங்கரைக் குழிகளில் புதைக்கவேண்டும்.
அக்குப்பைகளில் இருந்து எடுத்துச் சேர்த்த காய்களையும் கனிகளையும் கலந்து கலங்களில் புதைத்து வைத்து ஓராண்டு கழித்து எடுத்து கலங்களில் காய்ச்சி வடித்து எடுக்கப்படும் மதுவை முதலில் தலாதேவிக்குப் படைப்பார்கள். பின்னர் குடித்தலைவர் முதல் குடுவையை அருந்திவிட்டு அனைவரையும் வாழ்த்துவார். அதன்பின் ஆண்களும் பெண்களும் கூடி அமர்ந்து குடிப்பார்கள். கோதாவரியில் தூண்டிலிட்டு பிடித்த மீனையும், கரைச்சதுப்பில் கண்ணியிட்டு பிடித்த சிற்றுயிர்களையும் சுட்டு உடன் உண்பார்கள்.
இரவில் நெடுநேரம் அவர்களில் சிலர் பாடிக்கொண்டிருப்பார்கள். நீர்க்காயின் குடுவையில் தவளைத் தோலும் பெருச்சாளித் தோலும் சேர்த்து செய்யப்பட்ட குறுமுழவையும், துடியையும் உடன் முழக்குவார்கள். இளையோர் ஆடத்தொடங்குவர். அப்பாடல்களில் உயிர்நீத்து கோதாவரியில் கரைந்து மறைந்த அவர்களின் மூதாதையர் எழுந்து வந்தனர். அவர்களின் நூற்றெட்டு தெய்வங்களும், ஆயிரத்தொரு பூதங்களும், பன்னிரண்டாயிரத்து எட்டு பேய்களும் எழுந்து வந்தன. அவை நிழல்களாக மாறி அவர்களுடன் சேர்ந்து நடனமிட்டன.
அவர்கள் ஒவ்வொருவரும் ஆடிக்களைத்து விழுவது வரை அந்தப் பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும். அவர்கள் அனைவரும் உறங்கிவிட்ட பின்னர் அப்பாடலை மூதாதையரும் தெய்வங்களும் பூதங்களும் பேய்களும் சேர்ந்து தொடர்ந்து பாடிக்கொண்டிருக்கும். விடியும்வரை நாணல்பூக்கள் இளங்காற்றில் அப்பாடலுக்கு அசைந்துகொண்டிருக்கும்.
தமி இளமையில் சமர்களியிலேயே சிறந்த பாடகியாகவும், அனைவரும் விழுந்தபின் இறுதியாக களைத்து மண்ணில் சரியும் நடனக்காரியாகவும் இருந்தாள். அவளுடைய குரல் மூங்கில்கீறி உருவாக்கப்பட்ட சீனி என்னும் இசைக்கருவிபோல கூர்மையாக ஒலித்தது. அதன் ஓசை கோதாவரியின் அலைதிகழ்ந்த நீர்ப்பரப்பின் மேல் காற்றில் ஏறி நெடுந்தொலைவுக்குச் சென்று அங்கே இரவில் பெரும்பறவைகள் போல பாய்விரித்து சென்றுகொண்டிருக்கும் வணிகர்களின் படகுகளைச் சென்றடைந்தது. அவர்கள் அது ஏதோ நீர்த்தெய்வத்தின் குரல் என எண்ணி அஞ்சி எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தனர். காற்றலைகளுக்கு ஏற்ப எழுந்தமைந்தும், கரைந்து மறைந்து மீண்டுவந்தும் அக்குரல் அவர்களுடன் விளையாடியது. கரையின் இருளைக் கூர்ந்து பார்த்துக்கொண்டும், அஞ்சி சொல்லிழந்து குறுகியமர்ந்தும் அவர்கள் அப்பாடலைக் கேட்டனர்.
ஒருநாள் அத்தனைபேரும் சரிந்தபின்னரும் தமி அதே வேகத்துடன் பாடிக்கொண்டிருந்தாள். அந்த நிலவொளி நிறைந்த இரவில் தன் பாடல் அலைகளாக காற்றிலேறி கோதாவரியின்மேல் செல்வதை அவள் கண்ணால் கண்டாள். அதை பிடிப்பதற்காக அவள் அதன்பின்னால் ஓடினாள். நீரில் பாய்ந்து அதை துரத்திச்சென்றாள். அவள் செல்லுந்தோறும் அவள் குரல் அவளிடமிருந்து விலகி விலகிச்சென்றது. ஏழுநாட்களுக்குப் பின் அவள் திரும்பி வந்தபோது இன்னொருத்தியாக இருந்தாள். அவள் அதன் பின் எவரையும் ஏறிட்டுப் பார்க்கவில்லை, எவரிடமும் உரையாடவில்லை.
அதன்பின் அவள் பாடிய பாடல்கள் முற்றிலும் அறியாத மொழியில் அமைந்திருந்தன. அந்த மொழியை சமர்கள் முன்னரே அறிந்திருந்தனர், அது பைசாசங்களின் மொழி. அவர்கள் குடியில் அவ்வப்போது எவரேனும் திடீரென்று அந்த மொழியைப் பேசத்தொடங்கி விடுவதுண்டு. அவர்கள் கோதாவரியின் மறு கரையில் இருந்த காட்டுக்குள் வழிதவறிச் சென்றோ, கோதாவரியில் நீர்ப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு மீளும்போதோ அந்த மொழி அவர்களுக்குள் குடியேறியிருக்கும். அவர்கள் பைசாசங்களைப் பார்த்துவிட்டிருப்பார்கள்.
தமி கருவுற்றபோது அவளுக்கு கணவன் என எவரும் இருக்கவில்லை. சமர்களில் அது அனுமதிக்கப்பட்டிருந்தது. அவள் ஆற்றைக் கடந்துசென்று பைசாசத்துடன் கூடி அக்கருவை அடைந்தாள் என்று சலை சொன்னாள். “அந்தக் குழந்தையைப் பாருங்கள். அதன் கரிய உருவமும் வாயிலுள்ள வெண்பற்களும் பிசாசுக்குரியவை. அந்தக் கண்கள் பிசாசின் கண்கள்…”
தமி ஒவ்வொரு நாளும் தன்னுள் திரும்பிச்சென்றுகொண்டே இருந்தாள். அவள் கோதாவரியின் ஒரு சுழி என ஆகிவிட்டதாகச் சலை சொன்னாள். அருகே சென்றால் பிறரையும் இழுத்து தன் ஆழத்துக்குக் கொண்டுசென்றுவிடுவாள் என்று தோன்றினாள். அவள் மகன் அவள்மேல் எந்நேரமும் ஒட்டியிருந்தான். அவளுக்கு முதுக்குப்பின் இரண்டு விழிகள் முளைத்துவிட்டதுபோல. அவள் கடந்துசெல்லும்போது அவனுடைய பார்வையே அவர்களைத் தொட்டுச்சென்றது. அவர்கள் எவரையும் பார்க்காத கண்கள் என்றும், அவர்கள் அனைவரையும் நன்கறிந்த கண்கள் என்றும் ஒரே சமயம் தோன்றச்செய்தவை.
எப்போதும் நகருக்குள் முதலில் நுழைபவள் தமிதான். விடிவெள்ளி தோன்றியதுமே அவள் தன் பீப்பாயை ஒரு தோளிலும் மகனை மறுதோளிலும் சுமந்தபடி இருண்ட பாதையினூடாக கூன்விழுந்த சிற்றுடலுடன் விரைந்து அடிவைத்து செல்வாள். அவளுடைய இல்லங்களைத் தூய்மைசெய்து முடிக்க அவள் நான்குமுறை கோதாவரிக் கரைக்கு வந்துசெல்லவேண்டியிருக்கும். முதற்காலையின் ஒளி எழும்போது அவள் பணி முடிந்துவிட்டிருக்கும். அதன்பின் குளித்துவிட்டு, உணவுக்கான மண்கலத்துடன் மீண்டும் நகருக்குள் நுழைவாள்.
செல்லும் வழியெங்கும் அவள் தன் மகனிடம் பேசிக்கொண்டே இருந்தாள். தான் அறிந்த கதைகளை, தன் கண்முன் காண்பவற்றை அவள் சொல்லிக்கொண்டே சென்றாள். ஆனால் பேச்சின் நடுவே அவள் தன்னை முற்றிலுமாக இழந்தாள். நீண்டநேரம் கடந்து அவளுக்கு தன்னுணர்வு வரும்போது அவள் அது வரை பேசிக்கொண்டிருந்ததை உணர்ந்தாள். ஆனால் என்ன பேசினாள் என்பதே நினைவில் மீளவில்லை. உண்மையில் பேசிக்கொண்டிருந்தாளா? அல்லது வெறும் ஒலிகளை எழுப்பினாளா? இரவுகள் வெளியே காற்று சுழன்றடிக்கும்போது அவள் தன் மகனை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கையில் தூக்கத்தில் ஆழ்ந்தாள். கனவில் அவள் அவனிடம் வேறொரு மொழியில் பேசிக்கொண்டிருந்தாள். அவளே அந்த மொழியை கண்டு திகைத்து விழித்துக்கொண்டாள். அவள் மகன் விழித்த கண்களுடன் அவளை பார்த்துக்கொண்டிருந்தான். அவன் என்ன கேட்டுக்கொண்டிருந்தான் என அவள் வியந்தாள்.
தன் உள்ளம் பித்துகொண்டிருக்கிறது என்று அவளுக்குத் தோன்றியது. அந்தப் பித்தைத்தான் மகனுக்கு ஊட்டிக்கொண்டிருக்கிறேனா என அவள் தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள். அவள் நீண்டநாள் உயிர்வாழப்போவதில்லை. அவள் உடல் நலிந்துவருவதிலேயே அது தெரிந்தது. அவள் இறந்த பின் அவன் என்ன ஆவான்? அவனால் எவரிடமும் பேசமுடியவில்லை. எழுந்து நிற்கக்கூட கால்களில் ஆற்றல் இல்லை. ஆடையில் இறங்கிய பேன் அதற்கேற்ப உருமாறிவிடுவதுபோல அவன் அவளுடைய உடலுடன் இணைந்து விட்டான் என்று சலை சொன்னாள். “ஆடைப்பேன் ஆடையுடன் அழியும்” என்றாள். ஆனால் அவளுக்கு வேறுவழி இருக்கவில்லை.
ஒருநாள் அவள் அவனை தூக்கிக்கொண்டு மலத்தொட்டியுடன் திரும்ப நடக்கும்போது ஒரு மெல்லிய குரல் ஏதோ சொன்னது. அவள் திடுக்கிட்டு நின்றுவிட்டாள். அவள் செவிகளுக்குள் அக்குரல் ஒலித்தது. அவள் உடலில் இருந்தே எழுவதுபோன்ற குரல். அவள் திகைப்புடன் சுற்றிலும் பார்த்தாள். இருண்ட அப்பாதையில் எவரும் இல்லை. மீண்டும் அது கேட்டபோதுதான் அவன் அதைச் சொல்வதை அறிந்து அதிர்ந்தாள். அவனை சுழற்றி தரையில் வைத்து அவன் உதடுகளைப் பார்த்தாள். அவன் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். அவள் அதுவரை கேட்காத மொழி. ஆனால் கனவில் அவள் கேட்ட மொழி அல்ல அது. அது மானுடமொழிதான்.
அச்சொற்களை அவன் எப்போது கேட்டான்? அவள் அவர்கள் செல்லும் வழிகளை முழுக்க மீண்டும் மீண்டும் தன் எண்ணத்தில் ஓடவிட்டுப் பார்த்தாள். ஒருமுறை அவனை அவள் அந்த சிறுபாதையின் ஓரிடத்தில் ஒரு கல்லின் மேல் அமரச்செய்துவிட்டு ஓர் இல்லத்திற்குள் நுழைந்தாள். திரும்பி வந்து பார்த்தபோது அவன் அங்கில்லை. அவனை காட்டுப்பூனை கொண்டுசென்றிருக்கலாம் என அவள் அஞ்சினாள். கூச்சலிட்டபடி அந்தச் சிறு சந்தினூடாக முன்னும் பின்னும் ஓடினாள்.
அவன் நெடுந்தொலைவுக்குச் சென்றுவிட்டிருந்தான். ஒரு மாளிகையின் அடியில் அழுக்குநீர் வருவதற்காக போடப்பட்டிருந்த மடை வழியாக நுழைந்து அப்பால் சென்று அங்கே அமர்ந்து அப்பால் நோக்கிக்கொண்டிருந்தான். அவள் மண்டியிட்டு அந்த மடையினூடாக தவழ்ந்து சென்று அவன் காலைப்பிடித்து இழுத்தாள். அவன் வழுக்கி அவளிடம் வந்தபோது அவன் உடல் மறைத்திருந்த மடை திறந்து அப்பால் நிறைந்திருந்த ஒளி தெரிந்தது. அது ஒரு கூடம் என்று தோன்றியது. அங்கே பலர் எதையோ ஓதும் ஒலி கலைந்து முழக்கமாக கேட்டது. அங்கே அவர்கள் பூஜை போல எதையோ செய்துகொண்டிருந்தார்கள்.
அவன் அந்த முழக்கத்தை மட்டும்தான் கேட்டிருந்தான், அதை மொழியாக மாற்றிக்கொண்டுவிட்டான். அவன் பேச ஆரம்பித்துவிட்டான். ஆனால் அவளால் புரிந்துகொள்ள முடியாத பேச்சு அது. அவள் அதை எவரும் கேட்கக்கூடாதே என்று அஞ்சினாள். நெருப்பை வணங்குபவர்கள் பாடும் சொற்களை அவள் குடியினர் செவிகளால் கேட்டால் அச்செவிகளில் ஈயம் உருக்கி ஊற்றப்படவேண்டும் என்ற விதி உண்டு என அவள் அறிந்திருந்தாள். அச்சொற்களைச் சொல்லும் சமர்களின் நாக்குகள் வெட்டி தீயிலிடப்படவேண்டும் என்று அந்நகரில் ஆணை இருந்தது. அவன் சொல்வது அந்தச் சொற்களைத்தானா?
அவன் உதடுகளில் அச்சொற்கள் எப்போதுமிருந்தன. அவன் தூங்கும்போதும் அச்சொற்கள் அவன் உதடுகளை அசையச்செய்தன. அவள் அவனருகே விழித்து அமர்ந்து அவன் உதடுகளையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஏன் அச்சொற்கள் ஏன் அவனிடம் வந்துசேர்ந்தன? புழுக்களுக்கு ஓர் உயிர், விலங்குகளுக்கு இரண்டு உயிர், பறவைகளுக்கு மூன்று உயிர், மனிதர்களுக்கு நான்கு உயிர், சொற்களுக்கு நூறு உயிர் என அவள் அறிந்திருந்தாள். சொற்கள் உயிரிழப்பதில்லை. அவை ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு நாவிலும் வேறு உயிர்களை அடைகின்றன. அச்சொற்கள் அவனை தேர்ந்தெடுத்திருக்கின்றன. அவனை அவை அழைத்துச் செல்கின்றன. எங்கே?
அவள் ஒருகணம் தன்மேல் குளிர்ந்த நீரலை வந்து அறைந்ததுபோல் உணர்ந்தாள். கொழுந்து விட்டெரியும் தீயில் தன் மகனின் உடல் எரிந்து துடித்து துவள்வதைக் கண்டாள். ஊன் வெந்து, கொழுப்பு நீலத்தழலாகி, கபாலம் வெடிப்பதை அருகென நோக்கினாள். நெஞ்சில் கைவைத்து அலறிக்கொண்டு எழுந்து நின்றாள். பின்னர் நெஞ்சில் அடித்துக்கொண்டு அருகே அமர்ந்து அவன் உதடுகளை இரு விரல்களால் பற்றி அவற்றின் அசைவை நிறுத்தினாள். அப்போது அவன் விரல்கள் அசைந்தன, அவ்வசைவில அச்சொற்கள் இருந்தன. அவன் மெலிந்த கால்களின் அசைவிலும் அச்சொற்கள் திகழ்ந்தன.
அவள் அவன் அருகே அமர்ந்து விடியும்வரை அழுதுகொண்டிருந்தாள். தன்னால் ஒன்றும் செய்யமுடியாதென்று உணர்ந்தாள். ’கோதாவரியை அதில் வாழும் மீன்கள் திசைதிருப்ப முடியாது’ என்பது அவள்குடியின் பழமொழி. முதல் ஒளி வானில் விடிந்த நேரத்தில் தன் மகனை தோளிலேற்றிக்கொண்டு கோதாவரியின் பெருக்கை நோக்கி நின்றபோது அவள் உள்ளம் அடங்கியிருந்தது. அதில் ஒரு சொல்கூட எஞ்சியிருக்கவில்லை.
அதன்பின் அவள் அமைதியாக தன் வேலைக்குச் சென்று மீண்டாள். தன் முதுகின்பின் மகன் இருப்பதையே மறந்துவிட்டவள் போலிருந்தாள். அவன் தொடர்ந்து அச்சொற்களைச் சொல்லிக்கொண்டே இருந்தான். அவை அவளுக்குள்ளும் வெளியிலும் ஒலித்துக் கொண்டிருந்தன. அவள் அவனை தனியாக விடவே இல்லை. சுமைதூக்கும்போதும், உணவுச்சட்டியை ஏந்திச்செல்லும்போதும் எப்போதும் தன் தோளிலேயே வைத்திருந்தாள். தரையில் இறங்க அவன் முயன்றபோதெல்லாம் அவனை உறுமி, அதட்டி மீண்டும் அமரச்செய்தாள்.
ஒருநாள் அவள் மலப்பீப்பாயை சுழற்றி தோளிலேற்றும்பொருட்டு குனிந்த போது அவன் அவள் தோளில் இருந்து வழுக்கி இறங்கிவிட்டான். அவளால் தோல்வார்களை விடுவித்து எடைமிக்க பீப்பாயை உடனே நிலத்தில் வைக்க முடியவில்லை. அதற்குள் அவன் விழுந்தும் எழுந்தும் ஓட ஆரம்பித்தான். அவள் திரும்பியபோது அவன் சுவரை கையால் தொட்டுக்கொண்டும் பிடித்துக்கொண்டும் இரண்டு கால்களால் ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டாள்.
ஒருகணம் அதை நம்ப முடியாமல் நின்றபின் அவள் அவனைத் தொடர்ந்து ஓடினாள். அப்போதுதான் எடையில்லாமல் ஓடுவதற்கு தன் உடல் பழகியிருக்கவில்லை என உணர்ந்தாள். கால்கள் தடுக்கி மீண்டும் மீண்டும் அவள் அழுக்குநீரில் விழுந்தாள். கூன்விழுந்த அவளால் நிலத்தையே பார்க்கமுடிந்தது. ஆகவே சுவர்களில் முட்டிக்கொண்டாள். பின்னர் மூச்சிரைக்க அழுதபடி அமர்ந்தாள். கைகளை விரித்து ”மால்யா! மால்யா!” என அழைத்து கதறினாள்.
அவன் மறைந்துவிட்டிருந்தான். அவள் அவன் சென்றிருக்கக்கூடிய வழிகளை எண்ணிக் கணக்கிட்டு அந்த இடுங்கிய பாதையினூடாகத் தேடினாள். பின்னர் ஒரு கணத்தில் அவன் எங்கிருப்பான் என அவளுக்கு தெரிந்தது. அவள் அங்கே சென்றபோது அந்த அழுக்குநீர் மடைக்குள் அவன் தவளைபோல செறிந்து அமர்ந்திருப்பதைக் கண்டாள்.
அவள் அதற்குள் நுழைந்து அவன் கால்களைப் பற்றி இழுத்தாள். அவன் அவள் பிடியை உதறி அவளை உதைத்தான். அவள் “வா! வந்துவிடு… வேண்டாம்!” என்று முனகியபடி அவனை மீண்டும் மீண்டும் இழுக்க அவன் அவளை ஓங்கி உதைத்து உறுமினான். அப்போது அவ்வொலியைக் கேட்ட ஒருவன் மறுபக்கம் ஒளியை மறைத்தபடி குனிந்து பார்த்தான். அவர்களைக் கண்டதும் அவன் அஞ்சியவன் போல குளறியபடி கூச்சலிட்டான்.
தமி மகனை வெறியுடன் இழுத்து எடுத்துக்கொண்டு மடையில் இருந்து வெளியே வந்தாள். அப்பால் கூச்சல்களும் ஆணையோலிகளும் கேட்டன. எவரோ ஒரு மணியை விரைவாக அடித்தனர். அவள் அவனை அள்ளி நெஞ்சோடு அணைத்தபடி இடுங்கலான அழுக்குப்பாதையில் விழுந்தும் எழுந்தும் மூச்சொலி முழக்கமிட ஓடினாள். விரைந்து ஓடமுடியாமல் நெஞ்சு உடையும்படி மூச்சு அழுந்த அப்படியே கீழே விழுந்தாள். அவளை துரத்தி எவரோ வரும் ஓசைகள் எங்கெங்கோ எதிரொலிகளாக கேட்டன. அவள் புரண்டு பெருகிச்செல்லும் கழிவுநீரோடைக்குள் விழுந்தாள். அது சரிந்த நிலத்தில் விசையுடன் சுழித்தும் எழுந்தமைந்து அலைகொண்டு கோதாவரி நோக்கி ஓடியது. அவளையும் அவனையும் அது கவ்வித் தூக்கிக் கொண்டு சென்றது.
செல்லுந்தோறும் அதில் பிற கழிவோடைகள் இணைந்துகொள்ள நீர் பெருகி மேலும் விசைகொண்டது. அவர்களை அது பாறைகளில் முட்டிச் சுழற்றியும், கரைகளில் அறைந்து திரும்ப இழுத்தும் கொண்டுசென்றது. ஒசையுடன் அருவியென நீர் விழுந்துகொண்டிருந்த ஓரு பள்ளத்திற்குள் தூக்கி வீசியது. அதன் சுழியிலிருந்து எழுந்து தலையை நீருக்குமேல் தூக்கியபோது மால்யன் தன் அன்னையின் தலையில் முன்நெற்றியில் ஒரு சிவந்த வாய் திறந்திருப்பதுபோல புண் உருவாகியிருப்பதைக் கண்டான். அவள் மீண்டும் நீரில் மூழ்கி மறைந்தாள். அவன் அலறியபடி அவளை நோக்கி நீந்திச்சென்றான். அவனுடைய மெலிந்த கைகால்களால் நீரின் விசையை ஆளமுடியவில்லை. அவன் மீண்டும் நீரில் மூழ்கினான்.
ஓடை அவனை கோதாவரியை நோக்கி தூக்கி வீசியது. ஆற்றுநீரில் விழுந்து அவன் ஆழத்திற்குள் சுழற்றிச் செலுத்தப்பட்டான். அவனைச்சுற்றி மட்கிய இலைகளும் குப்பைகளும் சுழன்றன. ஆனால் நீர் ஒளிகொண்டிருந்தது. மிக அப்பால் அவன் ஆழம் நோக்கிச் சுழன்று சுழன்று செல்லும் தமியைக் கண்டான்.
(மேலும்)
க.அ.செல்லப்பன்
திராவிடர் கழகத்திலிருந்து அண்ணா விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்தபோது, அதற்கு நிதியுதவி அளித்த முதல் பத்து பேரில் செல்லப்பனும் ஒருவர். ‘தி.மு.க. வரலாறு’, ‘மாநில சுயாட்சி’ போன்ற நூல்களை பாரி நிலையம் மூலம் பதிப்பித்து வெளியிட்டார்.

Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
