P.A. Krishnan's Blog, page 11

January 10, 2020

My speech on Dharampal’s Beautiful tree

23 March 2016

I am going to speak today on Dharampal seminal work The Beautiful Tree – Indigenous Indian Education in the 18th century. Until he came out with this piece, the Macaulay’s system was being roundly criticized but without any substantive proof that it replaced a much better system. Dharampal, as far as I know, was the first person to come out with impressive statistics of that period to make out a case that we had, at least in some parts of India, a functioning system of education before the British intervened.

The Beautiful tree, as we all know, was Gandhi’s expression. He posited in 1931 that the beautiful tree of Indian education was allowed to perish and the result was that India was more illiterate then than she had been fifty or one hundred years ago.

Dharampal, in his impressive essay, concludes that the neglect and uprooting of Indian education led to an obliteration of literacy and destroyed the Indian social balance in which people from all sections of society appear to have been able to receive an optimum schooling.

As many of you must have read this essay I don’t want to burden you with the statistics he had collected both from the Madras and Bengal Presidencies. But my contention is that the tree was not as beautiful as it is now made out to be. While it is true that the introduction of the new system of education led to severe disruption to the system that existed it was done with the active support of the higher classes of that day because they felt that the system had outlived its utility.

Now, how did the old system function? This was what Campbell, the Collector of Bellary , wrote that the books in use in the Telugu and Canarese schools in the district were in verse and in a dialect quite distinct from that of conversation and of business. He says: “The alphabets of the two dialects are the same, and he who reads one, can read, but not understand the other also. The natives therefore read these (to them unintelligible) books, to acquire the power of reading letters in the common dialects of business, but the poetical is quite different from the prose dialect which they speak and write, and though they read these books, it is to the pronunciation of syllables, not the meaning or construction of the words, that they attend. Indeed few teachers can explain, and still fewer scholars understand the purport of the numerous books they thus learn to repeat from memory. Every schoolboy can repeat verbatim a vast number of verses of the meaning of which he knows no more than the parrot which has been taught to utter certain words. Campbell, as Dharampal says, was a perceptive officer and it was he who explicitly stated the degeneration of education was ascribable to the gradual and general impoverishment of

the country. But the system as it existed during Campbell’s time, which was the early years of the 19th century, was not all that great. Firstly, it was a whimsical system without any set standard. Both the teachers and the students were hardly assessed. Secondly, women and Dalits were almost not in the picture. In the institutions of higher learning (the Veda Padashalas) in the Madras Presidency, Brahmins totally dominated, except perhaps in Malabar.

There was little wonder therefore the Indian elite demanded modern education in English For example in 1839, 70,000 persons, a really impressive number, petitioned Lord Elphinstone the then Governor of Madras demanding English education. They said in the petition that it would spread gradually to the inferior classes.

So it was clear that the persons who were supposed to nurture the tree were reluctant to do so.

Now let us come to the infamous Macaulay minutes:

Most of us who fulminate against him have read only portions of his minute. Its tone is arrogant, superior and blatantly racist. He spoke exactly like the imperialists that he represented. But what was the issue involved? Read this portion of his minute:

“All parties seem to be agreed on one point, that the dialects commonly spoken among the natives of this part of India contain neither literary nor scientific information, and are moreover so poor and rude that, until they are enriched from some other quarter, it will not be easy to translate any valuable work into them. It seems to be admitted on all sides, that the intellectual improvement of those classes of the people who have the means of pursuing higher studies can at present be affected only by means of some language not vernacular amongst them.

What then shall that language be? One-half of the committee maintain that it should be the English. The other half strongly recommend the Arabic and Sanskrit. The whole question seems to me to be– which language is the best worth knowing?”

Thus the choice was between Sanskrit and Arabic on the one hand and English on the other. The vernacular languages were nowhere on the scene.

Now what would have happened if Sanskrit had been chosen as the language of higher studies? I don’t want to speculate. What would have happened if Sanskrit or Arabic or even Persian had been chosen as the Lingua Franca? I don’t want to speculate either.

But there are several countries which have chosen Arabic as the medium of higher studies. We all know where they stand when it comes to science.

The other oft repeated quote of Macaulay is this: I feel with them that it is impossible for us, with our limited means, to attempt to educate the body of the people. We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern, –a class of persons Indian in blood and colour, but English in tastes, in opinions, in morals and in intellect. What they were supposed to do?

In the very next sentence he says this: To that class we may leave it to refine the vernacular dialects of the country, to enrich those dialects with terms of science borrowed from the Western nomenclature, and to render them by degrees fit vehicles for conveying knowledge to the great mass of the population. If the vernacular languages have not become fit vehicles for conveying knowledge, who is to shoulder the blame? Can we keep blaming the British, seventy years after independence?

My contention is that I am not sure that the tree was all that beautiful. Whatever tree that ever was, was felled by the higher classes of Indians themselves. The British no doubt helped them. They would have been fools if they had not done so.

Dharampal says this in his seminal essay: What India possessed in the sphere of education two centuries ago and the factors which led to its decay and replacement are indeed a part of history. Even if the former could be brought back to life, in the context of today, or of the immediate future, many aspects of it would no longer be apposite. Yet what exists today has little relevance either. An understanding of what existed and of the processes which created the irrelevance India is burdened with today, in time, could help generate what best suits India’s requirements and the ethos of her people.

Most of us will agree with him that what exists today has little relevance. In the task of helping generate what best suits India’s requirements, I am sure the works of Dharampal will surely play a major role. Thank you.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 10, 2020 20:48

November 30, 2019

பிராமணர்கள் மற்றவர்களைப் படிக்க விடாமல் தடுத்தார்களா?

திராவிட நாசி இனவெறியர்கள் திரும்பத் திரும்பச் சொல்வது பிராமணர்கள் மற்றவர்களைப் படிக்கவிடாமல் தடுத்தார்கள் என்பது. இதை தமிழ்நாட்டின் சாபக்கேடான அரையணா அறிஞர்களும் திரும்பத் திரும்ப ஊடகங்களில் சொல்கிறார்கள். பெரியாரியத் தடித்தனத்தில் பிறந்த இவ்வாதத்திற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

டி

1. நம்முடைய நாட்டில் இதுவரை கிடைத்திருக்கும் ஓலைச் சுவடிகளில் மிகப்பல பௌத்தமதத்தையும் ஜைனமதத்தையும் சார்ந்தவை. இவற்றில் ஒன்று கூட பிராமணர்களால் எழுதப்பட்டது அல்ல.


2. வடமொழியின் மிகப்பெரிய புலவர்களில் பலர் பிராமணர்கள் அல்ல.


3. தமிழின் முப்பெரும் புலவர்களான இளங்கோவோ, வள்ளுவரோ, கம்பனோ பிராமணர் அல்ல.


4. “வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவன் அவன்கண் படுமே” இது சங்கப்பாடல்.


5. பிராமணர்களிடம் என்றும் அதிகாரம் இருந்ததில்லை. அவர்கள் மற்றவர்களைச் சார்ந்துதான் வாழ்க்கையை நடத்தியிருக்கிறார்கள்.


6. மெய்கண்ட தேவரோ, இராமலிங்க அடிகளாரோ பிராமணர் அல்லர்.


7. தமிழுக்கு இலக்கண நூற்களை எழுதியவர்களில் பலர் பிராமணர்கள் அல்லர்.


8. குறிப்பாக தமிழ்நாட்டை 1947க்கு முன் நானூறு ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் ஆங்கிலேயர்கள் அல்லது இஸ்லாமியர்கள் (பெரும்பாலான பகுதிகளில்). இவர்களும் பிராமணர்களுடன் சேர்ந்து மற்றவர்களைத் தடுத்தார்களா?


9. இருமொழிகளில் புலமை பெற்று துபாஷிகளாக வேலைபார்த்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் பிராமணர்கள் அல்லர்- வெள்ளாளர்கள்.

.

10. வேதத்தை முதல் மூன்று வருணத்தவர்தாம் படிக்கலாம் என்ற விதி இருந்தது உண்மை. ஆனால் உபநிடதங்கள் 17ம் நூற்றாண்டிலேயே மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வேதங்கள் மொழிபெயர்க்கப்பட்டு விட்டன.

11. வேதங்களில் சொல்லப்பட்டவை குப்பை என்பது பெரியாரிய நாசி இனவெறியர்களின் நிலைப்பாடு. குப்பையைப் படிக்க வேண்டாம் என்று பிராமணர்கள் சொன்னால் அதனால் இவர்களுக்கு எந்த விதத்தில் குறைபாடு?


12. இவர்கள் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்க மறந்து விடுகிறார்கள். இஸ்லாமில் எல்லோரும் எல்லாவற்றையும் படிக்கலாம். எந்தத் தடையும் இல்லை. ஆனால் இஸ்லாமியர்களில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் ஏன் அதிகம் இருக்கிறார்கள்? இன்றுவரை ஏன் இருக்கிறார்கள்? அவர்களைப் படிக்க விடாமல் தடை செய்தது பிராமணர்களா?


12. காரணம் மிக எளிமையானது. படிப்பின்மைக்கும் ஏழ்மைக்கும் இடையே தொடர்பு இருக்கிறது. ஆனால் தொழிற்புரட்சிக்கும் முன்னால் பணம் இருந்தவர்களும் படிக்க வேண்டும் என்ற நினைப்போடு இருந்ததாகத் தெரியவில்லை. ‘படித்து என் பையன் செய்யப்போகிறான்?’ என்ற கேள்வி எனக்குத் தெரிந்து கேட்கப்பட்டுக் கொண்டிருந்தது. பரவலான எழுத்தறிவினால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என்ற உணர்வு வந்தது தொழிற்புரட்சிக்கு பின்னால்தான். இந்தியாவில் தொழிற்புரட்சியின் தாக்கம் மிகவும் பின்னால்தான் வந்தது. மேலைநாடுகளில் அதற்கு முன்னாலேயே மறுமலர்ச்சி ஏற்பட்டு விட்டது. அச்சிட்ட புத்தகங்கள் பரவலாகப் படிக்கப்பட்டது ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால். இந்தியாவில் அச்சிட்ட புத்தகங்கள் பரவலாகப் பதிக்கப்பட்டது பத்தொன்பதாம் நூற்றாண்டில். நம் மறுமலர்ச்சி அப்போதுதான் ஏற்பட்டது. படிப்பின் முக்கியத்துவம் நமக்குப் புரியத் துவங்கியது அப்போதுதான். அது முதலில் பிராமணர்களுக்குத் தெரிந்தது. அதனால் பிராமணர்களைக் கழுவில் ஏற்ற முடியாது.


13. கல்லூரிகளில் பிராமணர் அல்லாதவர் சேரக்கூடாது என்று எந்தத் தடையும் இல்லை. பிராமணர்கள் பலர் சேர்ந்தார்கள். படிப்பின் முக்கியத்தை அவர்கள் புரிந்து கொண்டதால் சேர்ந்தார்கள். நிலவுடமைச் சமூகத்திலிருந்து வெளியேறினால் முன்னேறலாம் என்ற எண்ணத்தில் சேர்ந்தார்கள். அவர்களுக்குப் படிப்பு இலவசமாக அளிக்கப்படவில்லை. நிலங்களை விற்றுத்தான் பிள்ளைகளைப் படிக்க வைத்தார்கள்.


14. பிராமணர்கள் நிலைமையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று நான் சொல்லமாட்டேன். நிச்சயம் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் நிலைமை அவர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. மக்களாட்சி வந்தவுடன் நிலைமை சீரடைந்து விட்டது என்பதும் உண்மை. மக்களாட்சி வேண்டம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர் பெரியார் என்பதும் உண்மை.


திராவிட இயக்கம் ஓர் அப்பட்டமான நாசி இயக்கம். ஒரு சமூகத்தையே நூறு ஆண்டுகளாகச் சாடிக் கொண்டிருப்பதற்கு அசாத்தியமான அயோக்கியத்தனம் வேண்டும். தடித்தனம் வேண்டும். இவை திராவிட இயக்கத்திற்கு இன்றுவரை இருக்கின்றன.எந்தக் கூச்சமும் இல்லாமல் பெரியார் சொன்ன பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் இயக்கம் அது. அதை ஆதரிப்பவர்களில் பெரும்பாலானவர்களைச் சுரண்டிப் பார்த்தால் அவர்கள் நாசிகளாகத்தான் இருப்பார்கள் அல்லது பெரியார் திடலில் கூலி வேலை செய்பவர்களாக இருப்பார்கள் என்பதுதான் அவமானகரமான உண்மை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 30, 2019 23:17

November 28, 2019

கீழடி – என் எட்டு கேள்விகளும் தமிழக அரசின் பதிலும்

காலச்சுவடு நவம்பர் இதழில் திரு சிவானந்தம் மற்றும் திரு சுந்தர் கணேசன் எழுதிய “கீழடி: தென்னிந்திய தொல்லியல் வரலாற்றில் ஒரு ஒளிக்கீற்று” என்ற கட்டுரை வெளிவந்திருந்தது. இது அரசு தொல்லியல் துறை சார்பில் எழுதிய கட்டுரை என்பதும் தெளிவாக கட்டுரையின் உள்ளடக்கத்திலிருந்து தெரிந்தது.

கட்டுரை தொடர்பாக எனக்குச் சில கேள்விகள் இருந்தன. அவற்றை நான் காலச்சுவடு பத்திரிகைக்கு அனுப்பியிருந்தேன். இது என் கடிதம்:

எட்டு கேள்விகள்


அன்புள்ள கண்ணன், சுகுமாரன்,

இக்கேள்விகள் திரு சிவானந்தம் சுந்தர் கணேசன் கட்டுரை தொடர்பாக. தயது செய்து கேள்விகளை அவர்களுக்கு அனுப்பி பதில்களைப் பெறவும். விவாதம் தொடர அவை வழி செய்யும்.

1. உங்கள் கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டிருப்பது அனைத்துக் குழிகளிலும் வெளிப்பட்ட மண்ணடுக்குகள் கீழிருந்து மேல்வரை ஒரே மாதிரியான பண்பாட்டினைச் சார்ந்ததாக இருப்பது என்று. உடனே YP 7 குழியைக் குறிப்பிட்டு இதில் மூன்று பண்பாட்டுக் காலங்களைச் சேர்ந்த மண்ணடுக்குகள் காணப்படுகின்றன என்கிறீர்கள். எது உண்மை?

2. அரசு வெளியிட்ட புத்தகத்தில் குறிப்பிடப்ம்படுவது பண்பாட்டு காலங்கள் கிபி 12ம் நூற்றாண்டிலிருந்து கிமு ஆறாம் நூற்றாண்டு வரை. இதில் கடைசி அடுக்கின் பண்பாட்டுக்காலம் கிமு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கிமு மூன்றாம் நூற்றாண்டு வரை. ஆங்கில இதழான Frontline கட்டுரையில் நீங்கள் சொல்வது இது: There were three cultural layers found in this quadrant, the lowest layer being 353 cm to 200 cm below surface belonging to circa 580 BCE. அதாவது கடைசி அடுக்கில் கிடைத்த எல்லாப்பொருள்களும் ஏறத்தாழ (Circa) கிமு 580ம் ஆண்டில் கிடைத்தவை என்று சொல்கிறீர்கள். ஏறத்தாழ என்றால்? பத்து ஆண்டுகள்? ஒரு ஆண்டு? ஒரு மாதம்? இப்போது இக்கட்டுரையில் கீழடுக்கு (200 செமீயிலிருந்து 353 செமீ வரை) கிமு ஆறாம் நூற்றாண்டு என்று சொல்கிறீர்கள். ஒரே மாதத்திற்குள் மூன்றுவிதமான நிலைப்பாடுகளை எடுக்கக் காரணம் என்ன?


3. மூன்றாம் அடுக்கின் காலம் கிமு ஆறாம் நூற்றாண்டு என்று எவ்வாறு சொல்கிறீர்கள்? கரிப்பொருளின் காலத்தை வைத்துக் கொண்டா? அது எப்படிச் சொல்ல முடியும்? கிமு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த வேறு என்ன பொருட்கள் (artefacts) கிடைத்திருக்கின்றன? அடுக்குகளின் காலம் மண் பொதிந்துள்ள தன்மை, மண் நிறம் அதன் இழைத்தன்மை தொல் பொருள்களின் தன்மை இவற்றை வைத்து கணிக்கப்பட்டது என்று சொல்கிறீர்கள். தொல் பொருள்களின் தன்மையை எதை வைத்துக் கணித்தீர்கள். மண்ணின் தன்மைகளை எவ்வாறு கணித்தீர்கள்? அகழ்வாய்வில் பங்குபெற்ற மண்ணியலாளர் யார்? அகழ்வாய்வு செய்யப்பட்ட பரப்பில் (எல்லாப்பருவங்களையும் சேர்த்து) மண்ணின் தன்மை வேறுபடுமா? இது பற்றிய மண்ணியல் அறிக்கை எங்கே?


4. கரிப்பொருள் கிடைத்த அதே மண்ணடுக்கில் தமிழ் பிராமி பொறித்த பானையோடுகள் கிடைத்தன என்று சொல்கிறீர்கள். கிடைத்தது அதே குழியிலா ? அல்லது வேறு குழியிலா? வேறுகுழியில் கிடைத்திருந்தால் கிடைத்த குழியின் தன்மையைப் பற்றி ஏன் எழுதவில்லை? கரிப்பொருள் கிடைத்த குழியில் கிடைத்த வேறு பொருட்கள் என்ன? அவை கிடைத்த ஆழங்கள் என்ன?


5. அரசு வெளியிட்ட புத்தகத்தில் YP7/4ன் முக்கியத்துவத்தைப் பற்றி ஒரு குறிப்பு கூடக் கிடையாது. அது ஏன்? இக்குழி முக்கியமானது என்று Frontline கட்டுரையில் சொல்லப்படுகிறது. இது பின்னால் தெரியவந்ததா?


6. தமிழ் பிராமி பொறித்த பானையோடுகள் A3/2 கிடைத்தனவா? கிடைத்திருக்கும் ஐம்பத்தாறு ஓடுகளில் எத்தனை A3/2 குழியிலிருந்து கிடைத்திருக்கின்றன?


7. திரு அமர்நாத் ராமகிருஷ்ணாவும் கரிப்பொருளின் காலகட்டத்தை பீடா பகுப்பாய்வு ஆய்வகம் மூலம் கணித்திருக்கிறார். அவருக்கும் 2.5 மீட்டர் ஆழம் மற்றும் 1.95 மீட்டர் ஆழத்தில் கரிப்பொருள்கள் கிடைத்திருக்கின்றன். இவற்றின் காலகட்டம் கிமு 200- கிமு 195. ஆனால் அவர் அதே தளத்தில் கிடைத்த பானையோடுகளின் காலம் பாறை அடுக்கியல், தொல் எழுத்தியல் முறைகளின் படி கிமு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கிபி ஒன்றாம் நூற்றாண்டு என்று சொல்கிறார்.

தமிழக அகழ்வாய்வுத் துறை எந்த அடிப்படையில் கடைசி அடுக்கின் காலத்தைக் கணித்தது? அகழ்வாய்வுக் கொள்கைகளின் அடிப்படைகளில் ஒன்று அடுக்கின் வயது அதில் கிடைத்த ஆக இளைய பொருளின் வயதை விட மூத்ததாக இருக்க முடியாது என்பது – layers can be no older than the age of the most recent artefact discovered within them. நீங்கள் சொல்வது இதற்கு நேர்மாறாக இல்லையா? கரிப்பொருளின் வயதை மற்றவற்றிற்கும் அதுவும் 1.5 மீட்டர்களுக்கும் மேல் உயரத்தில் கிடைத்த பொருட்களின் மீது ஏற்றுவது எந்த அடிப்படையில்?


8.எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஐம்பத்தாறு பானையோடுகளும் எந்தெந்தக் குழிகளில் எந்தெந்த ஆழங்களில் கிடைத்தன என்பது பற்றிய தகவல் உங்களிடம் இருக்கும். அதை ஏன் வெளியிடக் கூடாது?


4 நவம்பர் 2019


அரசின் பதில்


நான் பதிலை ஆசிரியர்களிடமிருந்துதான் எதிர்ப்பார்த்தேன். தமிழக அரசின் தொல்லியல் துறையின் பதிலை எதிர்ப்பார்க்கவில்லை. இது காலச்சுவட்டிற்கு தொல்லியல் துறை அனுப்பியிருக்கும் பதில்:


தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2017-2018 ஆம் ஆண்டு மேற்கொண்ட நான்காம் கட்ட அகழாய்வில் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்கள் அறிவியல் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்பட்டு அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான முதற் அறிக்கை நூல் வடிவில் விரைவில் வெளியிடப்படும். இந்நூலின் தேவையான முழு விவரங்களும் இடம் பெற்றிருக்கும் என்பது தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.


15 நவம்பர் 2019


அரசின் பதில் சொல்வது என்ன?


அரசின் பதில் நமக்குத் தெரிவிப்பவை இவை:


1. இதுவரை வந்த எதுவும் அதிகாரப்பூர்வமானது அல்ல. அரசு வெளியிட இருக்கும் நூலே அதிகாரப்பூர்வமானது.

2. நான் கேட்ட கேள்விகளுக்கு கட்டுரையின் ஆசிரியர்களிடம் சரியான பதில்கள் இல்லை.

3. இதுவரை நம்மிடம் கொடுக்கப்பட்ட தகவல்கள் சரியாக இல்லாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. சரியான தகவல்களை அறிந்து கொள்ள நாம் அரசின் அதிகாரப்பூர்வமான நூலின் வெளியீட்டிற்காகக் காத்திருக்க வேண்டும்.


இரண்டு மாதங்களுக்கு முன்னால் அரசு மேள, தாள வாத்தியங்களோடு வெளியிட்ட நூல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது இப்போது தெளிவாக்த் தெரிகிறது. காரணம் அதில் உள்ள தவறுகள்.


இந்தப் பரிமாற்றம் இன்னொன்றையும் அறிவிக்கிறது. தமிழகத்தின் அரையாணா அறிஞர்களும் நாட்டார் உழக்கியல் நாயகர்களும் ஊடகச் சண்டியர்களும் எந்த நேர்மையும் இல்லாத பிறவிகள்; அடிப்படைக் கேள்விகளைக் கேட்கும் அறிவு கூட இல்லாத போலிகள். இவர்கள் படிக்கும் ஒரே அறிவியல் இதழ் வினவு.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 28, 2019 19:00

November 23, 2019

The IIT Madras and Our Intellectual Nazis

Let me make a few things clear at the very beginning.

1. I am not saying that there is no discrimination in the IIT Madras. It is not an island. It fairly represents India.

2. India has its share of persons who believe in their inherent superiority. But it also has many more who despise the prevailing inequality and want to do whatever they can to make the Indian society more equal, just and compassionate. IIT’s professors and students are the crème-de-la-crème of India and they come from every layer of society – except the poor, barring exceptions. They will surely have all the characteristics of the Indian society.

3. IIT Madras is not a small primary school. It is a gargantuan organization with all its attendant complexities. Its professors are not guaranteed to be angels. By the same token, if one of them is found to be not so angelic, others don’t automatically become villains. Also, it has a well- defined set of rules and regulations to follow, which do get continuously revised.

4. It no doubt produces graduates, year after year, who move out to occupy prize positions all over the world. But contrary to what we think, they form a small minority. The median salary of a fresh IIT graduate is between 8 and 10 lakhs per year – nothing to gloat about. About 15% of its graduates do not get recruited at the campus. And this is at the BTech level. The post graduate and humanities courses do not attract eager recruiters, if I am not wrong.

5. Thus, the arena is very competitive. The students are under tremendous pressure to do well. The relative grading system too encourages cutthroat competition.

6. The grading system in the IIT is transparent. Student- representatives are consulted, before grades are given. A student can dispute the marks/grades given to her and go right up to the senate of the IIT. A teacher has to defend the grades he has given.


Now, how does a student, who is achingly young, lonely, inexperienced in the ways of the world and having a high opinion of herself, face the motley crowd of other young achievers and the teachers who are supposed to shepherd them? Human beings are usually resilient and they adapt to the conditions, even when they are very unfamiliar and often harsh. Unfortunately, a few are not resilient. A caring institution should keep in mind those few who are unable to cope. I am not saying that IIT Madras doesn’t not care about its students, but it is obvious that its care is inadequate. Yes, all over the world, bright young persons who have come to learn in institutions of higher learning commit suicide. Every such event is tragic and, maybe, avoidable.


With this background, let me make a brief analysis of the unfortunate death of Ms. Fathima.


1. Ms. Fathima had spent just four months in the IIT before her unfortunate end.

2. She was supposed to have been topping the class though no proof has been given in support of this claim. There are others who say that she was not topping the class.

3. What is certain is that she had sent a mail to Professor Sudarsan Padmanabhan on the 8th of November for re-totalling of her marks and the professor immediately responded to her.

4. There are two versions of his response. One says that he had agreed with her request to add five more marks. The other version, which I have personally heard from a professor of the IIT, is that the professor wrote to her stating that he was out of station and she could meet him on the 11th and discuss the issue.

5. There are eye-witness accounts that Ms. Fathima was very upset on the night she took the extreme step.

6. We have the family’s version of a professor harassing her, based on a screen shot of which was supposedly taken from her cellphone. Later two more professors were added to the list. The police have, however, categorically stated that nobody had an access to the cellphone of the girl.

7. According to one source, Professor Padmanabhan’s response was that his only interaction with the girl outside the classroom was the lone email exchange and in the few months he had taught her there was not a single negative remark from his side, if his memory served him right.


What could be the possibilities?


1. The girl could have had serious psychological problems which got accentuated by her loneliness.

2. She might have had a tiff with a close friend.

3. She might have found the course to be overwhelmingly tough.

4. She might have had problems with her family.

5. She might have had problems in accepting fair criticisms by the professors.

6. Maybe all the three professors are unduly harsh on her.

7. Maybe Professor Padmanabhan was harsh on her.

8. Maybe either of the other two was harsh on her.

9. Maybe both were harsh on her.

10. May be all the three professors were so harsh on her that she was driven to suicide.

11. Maybe Professor Padmanabhan was so harsh on her that she was driven to suicide.

12. Maybe either of the two was so harsh on her that she was driven to suicide.

13. Maybe both of them were so harsh on her that she was driven to suicide.

14. Maybe it was a murder.

In any case, it is for the police to investigate.


How did the intellectual Nazis and the semi-literate media of Tamil Nadu react to the suicide?


1. They zeroed in on Professor Padmanabhan, only because he had a Brahmin sounding name. The other two professors were severely left alone.

2. They had started calling him names. One contemptible cretin went even to the extent of claiming that the professor went to one of the infamous German gas chambers and took a photograph of himself in front of it.

3. A few fake sociologists stepped in and said pompously that the IIT should be closed down.

4. The ever- present Periyarist Nazi lunatics had a field day. They cited the suicide as proof of Brahmin domination.

5. The Marxists, for their part, suspected of Islamophobia and the hand of the RSS.


Not one of them paused for a moment to consider the myriad possibilities. The most despicable of the lot are the ones who don the professorial cloak. They should use their cloaks to hang themselves, if they have any sense of shame.

Let us assume that one of the professors was indeed responsible for the death of the girl. Does it mean that the entire IIT is a place of attraction for human lemmings? No, it is most decidedly not. IIT is huge and it cannot be judged by stray events that take place in a corner. Only complete idiots or the sociology professors we are saddled with will make such an asinine judgement.


Let us now come to the bigger question of discrimination in the IITs, especially IIT Madras. We have heard many tear-jerking anecdotes about caste discrimination in the IIT Madras. Not one of them is verifiable. We have a professor complaining about Brahminical discrimination. She has proven herself to be one of the biggest fakes of professordom. I too have interacted with many professors of the IIT. I personally found them to be intelligent and totally dedicated to their profession. But my view is as unverifiable as those of others. So, if the Tamil media is able to discard its laziness, which is close to being impossible, it should do the following:


1. In its long years of existence, IIT must have sent out thousands of graduates and post graduates.

2. Many of them belong to the OBC, SC and ST.

3. Choose about a hundred of them in random and make a survey on the discriminatory practices, if any, experienced by them.

4. Analyze them scientifically.

5. Also, IIT Madras is not the lone centre of higher education in Tamil Nadu. There are several other major institutions. They are not exactly exemplars of social justice where the word discrimination is unheard of. Make similar analyses of them.

If the analyses reveal that the Tamil Brahmin is the sole culprit, enact laws which will specifically exclude Tamil Brahmins from places of education. I will fully support such a law in the interest of social justice. If, on the other hand, it turns out that every caste or every religion practices discrimination in one form or another, our putrid sociologists and purveyors of Periyarist idiocy should be asked not to open their mouths again.


In the meanwhile, if we happen to be sane, we must ask for the following from the IIT Madras:


1. IIT Madras should immediately start counselling sessions to all its first- year students and others who think they need counselling. The counsellors should include senior students themselves who have experienced the grind of first year.

2. All first- year students should be asked to write a preliminary assessment test, which will not be counted for grades. The submissions should be carefully evaluated and the professors should individually discuss with the students and point out their strengths and weaknesses and areas of improvement.

3. All its professors too should undergo a counselling session. They should be told that the days of tyrannical, idiosyncratic professors are gone.

4. If an unfortunate event happens, it should handled by professionals trained in grief management. It should be they who should handle the family members. In the same way, the press should also be given all information that could be shared. There is no point in being secretive, when facts could be gathered from other sources.

(These are not my suggestions but of a very senior and respected person who has years of experience in handling sensitive and talented young persons)


To sum up:


1. What had happened in the IIT is unfortunate.

2. Maybe it could have been avoided.

3. It is for the police to do the investigation.

4. The Intellectual Nazis of Tamil Nadu have a different agenda. They are not expected to be sensible.

5. Yes, there could be discrimination in the IIT. But it is not necessary that it is available only in Brahmin-flavour.

6. The IIT Madras should immediately take measures to avoid recurrence such incidents.

7. In the event of such an incident occurring it should be handled professionally and in a humane manner.


+++++++++++++++++++

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 23, 2019 00:14

November 16, 2019

பழங்காலப் பானையோடுகள் மற்றும் கல்வெட்டுகளின் கதை

காலச்சுவடு நவம்பர் 2019ல் வெளிவந்த கட்டுரை:


பழங்காலப் பானையோடுகள் மற்றும் கல்வெட்டுகளின் கதை


இன்று பானை ஓடுகள் மிகவும் புகழ் பெற்று விட்டன. கீழடியில் கிடைத்திருக்கும் பானை ஒடுகளைப் பற்றி பல பதிவுகள் வந்து விட்டன. அகழ்வாராய்ச்சியில் பானை ஓடுகள் கிடைப்பது இது முதல்முறை அல்ல. பெயர்கள் எழுதப்பட்ட பானை ஓடுகள் கிடைப்பதும் இது முதல்முறை அல்ல. அரிக்கமேடு, அழகன்குளம், கொடுமணல், போன்ற இடங்களிலும் பானையோடுகள் கிடைத்திருக்கின்றன. சொல்லப்போனால் உலகெங்கிலும் பானையோடுகள் தோண்டும் போதெல்லாம் கிடைக்கின்றன. உலகின் மிகப்பழைய பானையின் வயது 20,000 ஆண்டுகள். சீனாவில் கிடைத்திருக்கிறது. இந்தியாவில் பானைகள் சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே வனையப்பட்டன.


கீழடியில் கிடைக்கும் பானையோடுகள் பேசப்படுவதின் காரணம் அவற்றின் மீது பொறிக்கப்பட்டிருக்கும் பெயர்கள். முன்னால் கிடைத்த பானையோடுகளிலும் பெயர்கள் கிடைத்திருந்தாலும் கீழடியில் இவை மிக அதிகமாகக் கிடைத்திருக்கின்றன என்ற செய்தியும், அங்கு கிடைத்திருக்கின்ற கரித்துண்டின் வயது கிமு ஆறாம் நூற்றாண்டு என்ற செய்தியும் இங்கு கிடைத்திருக்கும் பானையோடுகளை மிக முக்கியமானதாக ஆகின்றன. இவற்றை ஆதாரமாக வைத்துக் கொண்டு கரித்துணடின் வயதை பானையோடுகள் மேல் ஏற்றி இந்தியாவிலேயே எழுதும் முறை தமிழ்நாட்டில்தான் கண்டு பிடிக்கப்பட்டது என்று சில தமிழ் அறிஞர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். கரித்துண்டின் அதே வயதை பானை ஓடுகள் மீது ஏற்ற முடியாது. அது எந்த அடுக்கில் கிடைத்ததோ அந்த அடுக்கின் வயதைத்தான் அதில் கிடைக்கும் மற்ற பொருட்களுக்குக் கொடுக்க முடியும். அதற்கும் பல நிபந்தனைகள் இருக்கின்றன. நாம் அந்த விவாதத்திற்குள் செல்ல வேண்டாம். நாம் பானை ஓடுகளில் எழுதியிருப்பவை என்ன என்பதைப் பற்றிப் பேசுவோம். அவற்றைப் பற்றி மற்றைய வரலாற்று அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றிப் பேசுவோம். எழுத்துக்கள் பானையோடுகளில் மட்டும் அல்ல, கல்வெட்டுகளிலும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. எனவே பானையோடுகளை மட்டும் நாம் கருத்தில் கொள்ள முடியாது. கல்வெட்டுகளில் என்ன எழுதப்பட்டிருக்கின்றன என்பதையும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டும்.


எழுத்தைக் கண்டு பிடித்தவர்கள் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்க மாட்டார்கள். எழுத்தைக் கொண்டு மொழியை வளப்படுத்த முயல்வார்கள். எழுதுவதில் பழக்கம் ஏற்பட ஏற்பட எழுதும் முறையிலும், எழுதப்பட்டிருப்பவற்றின் உள்ளடக்கங்களிலும் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் ஏற்படும். உதாரணமாக ஒன்றாம் வகுப்பு மாணவன் எழுதுவதிலும், முனைவர் பட்டம் பெற்றவர் எழுதுவதிலும் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் இருக்கும் என்பதை ஒன்றாம் வகுப்பு மாணவன் கூட அறிவான். அவ்வாறு தமிழில் எழுத்தும் எழுதியிருப்பவற்றின் உள்ளடக்கமும் வளர்ச்சி அடைந்ததா என்ற கேள்வியையும் நாம் கேட்க வேண்டும்.


அதற்கு முன்னால் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது இது: எழுத்து வளர்ச்சியடைய வேண்டுமானால் அதன் தேவை மக்களுக்கு இருக்க வேண்டும். தமிழகத்தில் அப்படிப்பட்ட தேவை இருந்ததா? யாருக்கு அது இருந்திருக்க முடியும்?


பரவலான எழுத்தறிவு தமிழகத்தில் இருந்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றனவா?


நான் என்னுடைய ‘தமிழ், வடமொழிகள், கீழடி – ஆதாரங்களின் வெளிச்சத்தில்’ கட்டுரையில் உலகில் எங்கும் அந்தக் காலகட்டத்தில் பரவலாக எழுத்தறிவு இருக்க வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால் கீழடியில் கிடைத்த பானையோடுகளை வைத்துக் கொண்டு சிலர் சொல்வது இது: பானையில் பானையின் சொந்தக்காரர்தான் எழுதியிருக்க வேண்டும்;பானை எளியவர் பயன்படுத்துவது; எல்லாப்பானைகளின் சொந்தக்காரர்களும் பானைகள் மீது எழுதியிருக்க வேண்டும்; எனவே எழுதப் படிக்கத் தெரிந்திருப்பது பரவலாக இருந்திருக்க வேண்டும். மகாதேவனும் இதைச் சொல்கிறார். ஆனால் எழுத்துகள் எல்லாப்பானைகளிலும் கிடைக்கவில்லை. சில பானைகளிலேயே கிடைக்கின்றன. பானைகளை எதற்காகப் பயன்படுத்தினார்கள் என்பதும் நமக்குத் தெரியாது. அவை சடங்குகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட பானைகளாக இருக்கலாம். மேலும் பானையில் பெயரை பானையின் சொந்தக்காரர்தான் எழுதியிருக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. இன்றும் பாத்திரங்களில் பெயரை நாமே பொறித்துக் கொள்வதில்லை. அதற்கென்றே இருப்பவரின் உதவியைத்தான் நாடுகிறோம்.


மேலும் முக்கியமான ஒன்றை மறந்து விடுகிறோம். பானையில் எழுதுபவர் எழுத எப்படி, எங்கே கற்றுக் கொண்டார்? அவர் எதை வைத்து எழுதக் கற்றுக் கொண்டார்? எதில் எழுதினார்? கல்வியறிவு என்பது அவருக்கு ஏன் தேவையாக இருந்தது? இவற்றிற்கெல்லாம் பதில்கள் கிடைத்த பிறகுதான் தமிழகத்தில் கல்வியறிவு பரவலாக இருந்தது என்ற நிலைப்பாட்டை எடுக்க முடியும்.


கிரேக்க சமுதாயத்திலும் கல்வி அறிவைப் பரப்ப தீவிரமான முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனாலும் கீழ்தட்டு மக்களுக்கும் கைவினைஞருக்க்கும் கல்வியைக் கொண்டு சேர்க்க முடியவில்லை. வில்லியம் ஹாரிஸ் எழுதிய Ancient Literacy என்ற புத்தகம் சொல்வது இது:

The conclusion which should be drawn from all this is that archaic Greece reached no more than a rather low level of craftsman’s literacy. It would be astonishing if as much as IO% of the population as a whole was literate in the sense defined earlier. ( பழங்கால கிரேக்கத்தில் கைவினைஞரின் எழுத்தறிவு மிகவும் குறைவாகத்தான் இருந்தது என்ற முடிவிற்குத்தான் வர வேண்டும். பொதுமக்களிடையே எழுத்தறிவு 10 சதவீதத்திற்கு மேல் இருந்தால் ஆச்சரியப்பட வேண்டும்). தமிழ்நாடு விதி விலக்காக இருந்தது என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. கிரேக்க நாட்டிலும் பானை எழுத்துக்கள் பரவலாகக் கிடைக்கின்றன. கிமு எட்டாம் நூற்றாண்டிலிருந்தே கிடைக்கின்றன.

எனவே தமிழகத்தில் பரவலான எழுத்தறிவு இருக்க வாய்ப்பில்லை என்றே இப்போது கிடைத்திருக்கும் ஆதாரங்களைக் கொண்டு கூற முடியும்.


அப்படியென்றால் பானைகளில் யார் எழுதினார்கள்? அதை அறிய பானையோடுகளில் எழுதப்பட்டிருப்பவை என்ன என்பதைப் பார்க்க வேண்டும்


பானையோடுகளில் எழுதப் பட்டிருப்பவை என்ன?


முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது பானையோடுகளில் அனேகமாக பெயர்கள் மட்டும் பொறிக்கப்பட்டிருக்கின்றன என்பதை. பானைகளின் காலம் துவங்குவது கிமு ஆறாம் நூற்றாண்டு என்றே எடுத்துக் கொண்டாலும் கிபி மூன்றாம் நூற்றாண்டு வரை எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானைகள் கிடைக்கின்றன. அதாவது தொள்ளாயிரம் ஆண்டுகள்! அவற்றில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பெயர்களே பொறிக்கப் பட்டிருக்கின்றன.


இவற்றைக் கருத்தில் வைத்துக் கொண்டு வரலாற்று அறிஞர் சுப்பராயுலு என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.


Pottery Inscriptions of Tamil Nadu – A Comparative View என்ற மிக அருமையான கட்டுரையை அவர் ஐராவதம் மகாதேவன் பாராட்டு மலரில் எழுதியிருக்கிறார்.

அவர் சொல்பவை இவை:


1. பானையில் தமிழின் 18 மெய்யெழுத்துகளும் கிடைக்கின்றன


2. உயிர் எழுத்துக்களில் அ, ஆ, இ, உ, ஊ, எ, ஒ இவை சொற்களின் முதல் எழுத்துகளாகக் கிடைக்கின்றன. ‘ஆ’ மிக அரிதாகவே கிடைக்கிறது.


3. சொற்களின் நடுவில் அ, ஆ, இ, ஈ, உ ஊ, எ, ஏ, ஐ கிடைக்கின்றன. ‘ஓ’ இதுவரை எங்கும் கிடைக்கவில்லை.


4. ஆனால் பிராகிருத மொழி எழுத்துகள் (ஷ, ஸ, ஹ போன்ற) பதினொன்று கிடைக்கின்றன. பிராகிருதப் பெயர்களை எழுத பிராகிருத எழுத்துகளையே சில சமயங்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.


5. எழுத்துக்களைப் பொறிக்கும் விதமும் அதிக வளர்ச்சியடைந்ததாகத் தெரியவில்லை.


6. எழுதியிருப்பவற்றைப் படிப்பதற்கும் சில விதிகள் தெரிந்தால்தான் படிக்க முடியும். ‘ஸாதனதை அனதவான’ என்று எழுதியிருப்பதை ஸாதந்தை அந்தவன் என்று படிக்க வேண்டும். ‘அனதாவான அதன’ என்று எழுதியிருப்பதை அந்தவன் அதன் என்று படிக்க வேண்டும். ‘காணணான அதன’ என்று எழுதியிருப்பதை கண்ணன் அதன் என்று படிக்க வேண்டும் ‘முலான பெற அனதானன ஊம (ணெ)’என்பதை முலன் பெற அந்தனன் ஊம (ணெ) என்று படிக்க வேண்டும்.


7. அவர் அட்டவணைப் படுத்தியிருக்கும் 270 பானையோடுகளில் 192 ஒரு சொல் கொண்டவை;64 இரு சொற்கள் கொண்டவை; 8 மூன்று சொற்கள் கொண்டவை; 5 நான்கு சொற்கள் கொண்டவை. ஒரே ஒரு ஓட்டில்தான் ஆறு சொற்கள் இருக்கின்றன.


(கீழடியில் கிடைத்தவை எல்லாம் ஒரு சொல் கொண்டவையாகத்தான் இருக்கின்றன என எண்ணுகிறேன்.)


8. மொத்தப் பெயர்களில் ஐந்தில் ஒரு பங்கு பிராகிருதப் பெயர்கள். தமிழ்ப்படுத்தி எழுதப்பட்ட பிராகிருதப் பெயர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், பாதி பிராகிருதப் பெயர்கள்.


9 கிடைத்த பெயர்களில் இருபதைத் தருகிறேன்: 1. விஸாகி 2. கித்த. 3. மாஸாபாக 4. மாகிசம்ப 5 இலோகிபா 6. டகாஸி. 7. குவிரன் அதன் 8. தூகா 9. அந்தைய சம்பன் அகல் 10. ஸந்ததன் 11. ஸாசா 12. லிகன். 13 வாருணி. 14. ஸாதன். 15. தேவா. 16. அஸூ 17 ரஜக 18 சமுதஹ 19 யகமித்ரஸ 20. மதினகா

இவை தமிழ்ப்பெயர்கள் என்று சொல்ல முடியுமா? (கீழடியில் கிடைத்த பெயர்களுக்கும் இப்பெயர்களுக்கும் உள்ள் ஒற்றுமையைப் பார்க்க வேண்டும் – ‘குவிரன் அதன்’ ‘அதன்’ போன்ற பெயர்கள்.)


10. கொடுமணலில் ‘நிகம’ என்ற பெயர் பொறித்த பானை கிடைத்திருக்கிறது. நிகம என்றால் வர்த்தகர்களின் குழுமம்.


இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு சுப்பராயுலு பிராகிருதம் பேசும் வணிகர்கள் அசோகப்பிராமி (பிராமி என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் தெளிவிற்காக அசோகப்பிராமி என்று சொல்கிறேன்) எழுத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்ததாகச் சொல்கிறார். தமிழில் எழுதும் முறை பிராகிருத மொழியின் தாக்கம் பெற்றிருக்கின்றது என்பதையும் அவர் மிகத் தெளிவாகச் சொல்கிறார்.


எழுத்தின் தேவை அந்தக் காலகட்டத்தில் அதிகமாக வணிகர்களுக்கு மட்டுமே இருந்தது. எனவேதான் வணிகர்கள் புழங்கும் இடங்களில் அதிகமாக எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானையோடுகள் கிடைக்கின்றன.


இப்போது கல்வெட்டுகளுக்கு வருவோம்.


கல்வெட்டுகள் என்ன சொல்கின்றன?


தமிழ் பிராமியிலிருந்துதான் அசோகப் பிராமி பிறந்தது என்று சொல்பவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் என்ன சொல்கின்றன என்பதைப் பற்றி அறியாதவர்கள். தன்னுடைய புகழ் பெற்ற நூலான Early Tamil Epigraphy என்ற நூலில் கிமு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கிபி ஆறாம் நூற்றாண்டு வரை நமக்குக் கிடைத்திருக்கும் தமிழ் பிராமி மற்றும் வட்டெழுத்துக் கல்வெட்டுகளைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். மொத்தம் 121 கல்வெட்டுகள். நான் முந்தையக் கட்டுரையில் சொன்னதைப் போல இவை அனைத்தையும் ஒரு A4 அளவுத் தாளில் எழுதி விடலாம்.

அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்


மாங்குளம் கல்வெட்டு- கிமு இரண்டாம் நூற்றாண்டு:

கணிய் நந்தாஅஸிரிய்இ

குவ்அன்கே தம்மம்

இத்தாஅ நெடுஞ்செழியன்

பணஅன் கடல்அன் வழுத்திய்

கொட்டுபித்தஅ பளிஇய்

பொருள்: பார்! நந்தஸிரி குவன் கணிக்கு அளித்த கொடை. இக்குடில் கடலன் வழுதி (என்ற பெயருள்ள) நெடுஞ்செழியனின் பணியாளரின் ஆணையால் குடையப்பட்டது.


இன்னொரு மாங்குளம் கல்வெட்டு:

கணிஇ நதஸிரிய் குவ(ன்)

வெள்அறைய் நிகமது

காவிதிஇய் காழிதிக அந்தை

அஸூ தன் பிணஉ கொடுபிதோன்


பொருள்: நந்தஸ்ரீ குவன், கணத்தின் தலைவன்(கணி). அந்தை அஸூதன், முத்துகளைக் கண்காணிப்பவன், வெள்ளறை வணிகர் குழுமத்தின் தலைவன் (காவிதி -அரசு கொடுக்கும் பட்டம்) கொடுத்த குகை.


அரிட்டாபட்டி – கிமு இரண்டாம் நூற்றாண்டு:


நெல்வெளிஇய் சிழிவன் அதினன்

வெளியன் முழாகை கொடுபிதோன்

பொருள்: நெல்வேலி சிழிவன் அதினன் வெளியன் கொடுத்த குகை,


கிமு இரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் அனைத்தும் இதே போன்றுதான் இருக்கின்றன. அனேகமாக எல்லாம் ஒரு வரிதான் (மாங்குளம் கல்வெட்டுகளைத் தவிர). . கிமு ஒன்றாம் நூற்றாண்டிலும் இதே கதைதான். ஆகப்பெரிய கல்வெட்டு சித்தன்னவாசலில் இருக்கிறது.

எருமிநாடு குமுழ்ஊர் பிறந்த கவுடிஇ

தென்கு சிறுபொசில் இள

யர் செய்த அதிட்அனம்

பொருள்: எருமை நாசு குமுழூரில் பிறந்த கவுதி(க்கு) (காவிதி). தென்கு சிறுபொசில் இளையர் செய்த இருக்கை (அதிட்டானம்).


கிபி ஒன்றாம் நூற்றாண்டின் ஆகப்பெரிய கல்வெட்டு இது திருப்பரங்குன்றத்தில் இருக்கிறது.

எருகாடுர் இழகுகுடும்பிகன் பொலாலையன்

செய்தா(ன்) ஆய்சயன் நெடுசாதன்

பொருள்: பொலாலையன் (தந்த பரிசு). எருக்காட்டில் இருக்கும் (குடும்பிகன்) ஆய்ச்சயன் நெடுச்சாத்தன் செய்தது.

ஜம்பை கல்வெட்டு:

ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பளி

பொருள்: சத்தியபுத்தன் (புத்திரன்) அதியன் நெடுமான் அஞ்சி கொடுத்த பள்ளி.


கிபி இரண்டாம் நூற்றாண்டு கல்வெட்டுகளிலும் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை.

புகளூர் கல்வெட்டு:

முதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய்

கோ ஆதன் செல்லிரும்பொறை மகன்

பெருங்கடுங்கோன் மகன் (இ)ளங்

கடுங்கோ (இ)ளங்கோ ஆக அறுத்த கல்

பொருள்: முதிய அமணத்துறவி யாற்ற்றூர் செங்காயபன் இருப்பிடம். இக்கல் குடையப்பட்டது இளங்கடுங்கோ, ஆதன் செல் இரும்பொறை மகன் பெருங்கடுங்கோவின் மகன் இளவரசனாக ஆகிய போது.


கிபி நான்காம் நூற்றாண்டு நேகனூர்பட்டி கல்வெட்டைப் பார்ப்போம்:

பெரும்பொகழ்

சேக்கந்தி தாயியரு

சேக்கந்தண்ணி செ

யிவித்த பள்ளி

பொருள்: இக்குடில் சேக்கந்தி அண்ணி, பெரும்பொகழ் சேக்கந்தியின் தாயாரால் செய்விக்கப்பட்டது.


பானைகளில் இருக்கும் பெயர்களில் பல கல்வெட்டுகளிலும் இருக்கின்றன. குவிரன், அதன் போன்ற பெயர்கள். அனேகமாக வணிகர்களின் பெயர்கள். சமணப் பெயர்கள்.


இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் நாம் தமிழ் பிராமியின் பிறப்பை ஆராய வேண்டும்.

தமிழ் பிராமி எவ்வாறு பிறந்தது?


அறுநூறு ஆண்டுகள் கல்வெட்டுகள் அனைத்தும் ‘இவருக்கு இவர் கொடுத்தது’ என்ற வகையில்தான் இருக்கின்றன. இவற்றோடு பானையோடுகளின் மொழியையும் சேர்த்துக் கொண்டால் 1000/1200 வருடங்களில் கிடைத்திருக்கும் ஆதாரங்கள் நம் கையில் இருக்கின்றன. இக்காலகட்டத்தில்தான் சங்க இலக்கியம் தோன்றியது. அழகாக, நுண்ணுணர்வோடு உலகமே மெச்சத்தக்க படைப்புகள் தமிழில் பிறந்தன. ஆனால் அவற்றின் தாக்கம் எழுத்தில் ஏன் கிடைக்கவில்லை? ஏன் இவ்வளவு பிழைகளோடு கல்வெட்டு மற்றும் பானையோட்டுப்பதிவுகள் இருக்கின்றன? இவற்றிற்கும் சங்கத் தமிழுக்கும் ஏன் தொடர்பே இல்லாதது போல் இருக்கிறது?

இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது தமிழ் மொழியின் எழுத்து வளர்ச்சி பல நூற்றாண்டுகளாக – கிபி ஐந்தாம் நூற்றாண்டு வரை – குறிப்பிடத்தக்கதாக இல்லை என்பது நன்றாகத் தெரிகிறது. இதே காலகட்டத்தில் பிராகிருத, சமஸ்கிருதக் கல்வெட்டுக்கள் இந்தியா முழுவதும் மிகப் பரவலாக, அழகிய சொல்லாட்சிகளோடு கிடைக்கின்றன. பல்லவக் கல்வெட்டுகளும் முதலில் பிராகிருதத்திலும் பின் சமஸ்கிருதத்திலும் எழுதப் பட்டிருக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பானை ஓடுகளிலும் பிராகிருத மொழியைக் குறிக்கும் பிராமி எழுத்துகள் மிகவும் எளிதாகக் கலந்திருக்கின்றன என்பதையும் நாம் பார்த்தோம்.


இதனால்தான் ஐராவதம் மகாதேவன் தமிழ் பிராமி அசோகப் பிராமியிலிருந்து பிறந்தது என்று சொல்கிறார்: தமிழ் பிராமி கல்வெட்டுகளின் பரிணாம வளர்ச்சி குறிப்பாக அதன் முந்தைய ஆண்டுகளில் வடக்குப்பிராமி, தெற்குபிராமியை ஒப்பிடும்போது மிகவும் மெதுவாக நிகழ்ந்தது என்றும் சொல்கிறார்.

அவர் சொல்பவை:

1. தமிழ் பிராமியின் 26 எழுத்துக்களில் 22 எழுத்துக்கள் அசோகப் பிராமியின் எழுத்துக்களைப் போல அப்படியே அல்லது கிட்டத்தட்ட அப்படியே இருக்கின்றன.

2. தமிழ் எழுத்து வரிசைப் படுத்தியிருப்பதும் அசோகப் பிராமியை ஒத்தே இருக்கிறது.

3. தமிழின் கூடுதல் எழுத்துகளான ‘ற’ ‘ன’ ‘ழ’ ‘ள’போன்றவற்றை தொல்காப்பியர் வல், மெல், இடையெழுத்துகளின் வரிசைகளில் கடைசியில் சேர்த்திருக்கிறார்.


மகாதேவன் காட்டும் கால அட்டவணை இது

அசோகப் பிராமி

(கிமு மூன்றாம் நூற்றாண்டு)


தமிழ் பிராமி

(கிமு இரண்டாம் நூற்றாண்டு)


வட்டெழுத்து

(கிபி ஐந்தாம் நூற்றாண்டு)


தமிழெழுத்து

(ஏழாம் நூற்றாண்டு)


மகாதேவனைக் கடந்து நாம் செல்ல வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். நிச்சயம் செல்ல வேண்டும். ஆனால் அதற்கு நம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். மகாதேவனின் புத்தகத்தைப் போன்று வலுவான சான்றுகளுடன் உலக வரலாற்று, அகழ்வாரய்ச்சி, கல்வெட்டு, மொழி வல்லுனர்களின் பார்வைக்கு கொண்டு வரும்படியான புத்தங்களை எழுத வேண்டும். தமிழ் ஊடகங்களிலும் மாநாடுகளிலும் பேசி கைதட்டுகள் வாங்குவது எளிது. ஆனால் அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் வேலை.


கீழடி மொழி வரலாற்றைத் திருப்பிப் போடுகிறதா?


இதுவரை கிடைத்திற்கும் சான்றுகளை வைத்துப் பார்த்தால் நிச்சயம் இல்லை.


கீழடியில் கிடைத்திருக்கும் பானையோடுகளிலும் புதிதாக ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அவை அனைத்தும் பெயர்களையே குறிக்கின்றன. பழைய பெயர்கள். தமிழ் பிராமியிலிருந்து அசோகப் பிராமி பிறந்தது என்பதற்கான எந்தத் தடையமும் கீழடி பானையோடுகளிலிருந்து கிடைக்கவில்லை. வலுவான சான்றுகள் கிடைக்கும் வரை ‘தமிழ் பிராமியிலிருந்து பிறந்த அசோகப் பிராமி பெரும் வளர்ச்சி அடைந்தது ஆனால் தமிழ் பிராமி மட்டும் 1200 ஆண்டுகளாக கிட்டத்தட்ட ஒரே நிலையில் இருந்தது’ என்ற நிலைப்பாடு தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்காது. அது தர்க்கப்பூர்வமாகவும் சரியாகாது.


தமிழ் பிராமியில் விரிவாக, தேர்ந்த தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டுகளைத் தேட வேண்டும். அவை கிடைத்தால், அவற்றின் காலம் கிமு மூன்றாம் நூற்றாண்டிற்கு முந்தையது என்று அறுதியிடப்பட்டால், தமிழின் வரலாறு மாற்றி எழுதப்பட வாய்ப்பு இருக்கிறது. பானைத்துண்டுகள் அதைச் செய்ய முடியாது.


பி ஏ கிருஷ்ணன்

கட்டுரை எழுத உதவிய நூல்கள்:

Early Tamil Epigraphy – Iravatham Mahadevan Cre-A, Harvard, 2003

Pottery inscriptions of Tamil Nadu – A comparative view, Y Subbrayulu, in Airavati, Varalaru.com, 2008

Ancient Literacy, William Harris, Harvard University Press, 1989

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 16, 2019 20:44

November 15, 2019

Ersatz Nazism

ERSATZ NAZISM


1. What is Ersatz Nazism?

The ideology of Hindutva guys at the national level and the ideology of Periyrists and their lick-spittles at the state level.

2. Is Ersatz Nazism totalitarian?

No. There is no need for it to be totalitarian when democracy admirably serves its purpose. The Indian elections ensure that the ideology remains enmeshed in the very process of democracy. Any political party can openly practice Ersatz Nazism so long as it pays lip service democratic ideals and at the same time invoke an imagined past.

3. Are the practitioners of Ersatz Nazism exterminatory?

They are not openly so. Hindutva guys maintain that the idea is to tame Islamism and not to kill persons who practice Islam. Periyarists maintain that the idea is to tame Braminism and not to kill Brahmins.

At times, however, taming involves considerable violence and loss of lives – especially Muslim lives. Gujarat killings are a perfect example. Though Periyarists too threatened violence in the past, Tamil Brahmins are themselves tame and hence not much taming is required. Moreover, Periyarists are not strong enough to practice violence on Tamil Brahmins who have behind them entire India and the sane people of Tamil Nadu. Muslims inherent strength – what demography and history have given them – works against them. In the case of Tamil Brahmins, they are insignificant, demographically speaking and mouse-like, historically speaking.

4. Does Ersatz Nazism support deportation?

Yes – whenever it is possible. NRC is an example. Periyarists desperately want to get rid of the Brahmin vermin at least from all public institutions and the Brahmins are obliging. The population of Brahmins in Tamil Nadu is steadily dwindling. Though it may never reach zero, it will surely touch Parsi proportions. When that day arrives there is a likelihood that Brahmins will be considered museum pieces and left alone.


5. What about intellectuals?

The sad fact is Indian intellectuals have betrayed the Muslims. The Hindutva guys even have some Muslims rationalizing the turn of events. Similarly, Tamil intellectuals are a sorry, dishonest spectacle. The Periyarists too have Brahmin, intellectual gatekeepers, who rationalize without any sense of shame all acts of Periyarist thuggery.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 15, 2019 19:23

November 8, 2019

சமணர்களும் சமத்துவமும்

தமிழகத்தில் திராவிடத்தின் சார்பில் எழுதும் பல பேராசிரியர்கள் சோம்பேறிகள், முட்டாள்கள் அல்லது விலை போனவர்கள் என்று நான் ஏன் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறேன்?


ஒரு முழுச் சோம்பேறிப் பேராசிரியர் வள்ளுவரைத் திராவிடத்தாரகை என்ற அளவில் பேசியிருக்கிறார். அதானால்தான் பெரியார் அவரை ஓரளவு ஏற்றுக் கொண்டாராம். பெரியார் அதிகம் படிக்காதவர். அதுவும் தமிழ் இலக்கியத்தை முழுவதும் வெறுத்தவர். அவர் ஏற்றுக் கொண்டதால் அது திருவள்ளுவருக்குப் பெருமை என்று பெரியார் திடலில் கூலி வேலை பார்க்கும் அடியாட்கள்தாம் சொல்ல முடியும். இதைப் பேராசிரியர் சொல்கிறார் என்பது வெட்கக்கேடு.

தமிழர் கடந்த ஈராயிரம் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான நூற்களை எழுதியிருக்கிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை அவர்களால் எழுதப்பட்ட முக்கியமான நூல்கள் அனைத்தும் ஏதாவது ஒரு சமய நோக்கில் எழுதப்பட்டவை. சங்க இலக்கியங்கள் கூட கடவுள்களைப் பற்றிப் பேசுகின்றன.

திருவள்ளுவர் இந்தியாவில் பிறந்த சமயங்களில் ஒன்றைச் சார்ந்தவர் என்பது திருக்குறளைத் சில தடவைகள் படித்தாலே புரிந்து விடும்.

திருவள்ளுவர் சமணராக இருந்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. ஆனால்

சமணர்களைச் சமத்துவச் சான்றோர்களாகப் பார்ப்பது முழு முட்டாள்தனம். ஊழை நம்பும் யாரும் சமத்துவத்தை நம்ப மாட்டார்கள். இதற்கு சமணநூல்களில் தடுக்கி விழுந்தால் சான்றுகள் கிடைக்கின்றன.


சிந்தாமணியில் மரம் நல்லதுதான் குலம் நல்லதல்ல என்று திருத்தக்க தேவர் சொல்கிறார். “சீர்சால் கணிகை சிறுவன்போல் சிறப்பின்றம்ம இதுவென்றான்” என்கிறார்.

காந்தர்வதத்தையார் இலம்பகம்


நீர் நின்று இளகிற்று இது வேண்டா நீரின் வந்தது இதுபோக

வார் நின்று இளகும் முலையினாய் வாள் புண் உற்றது இது நடக்க

ஓரும் உரும் ஏறு இது உண்டது ஒழிக ஒண் பொன் உகு கொடியே

சீர்சால் கணிகை சிறுவன் போல் சிறப்பு இன்று அம்ம இது என்றான்
(


வீணைக்காக மரத்தை தேர்ந்தெடுக்கும் போது சீவகன் சில மரங்களை குற்றமுள்ளவை என்று ஒதுக்குகிறான்.

இந்த மரம் நீரிலேயே இருந்தது. இது தண்ணீரில் வந்த மரம். இது வாளால் அடிபட்டது . இது இடியுண்டது என்று சொல்லி விட்டு இது சிறப்பான கணிகையின் (விலைமகளிரின்) மகனைப் போல சிறப்பற்றது என்கிறான். அதாவது அது நல்லது போலத் தோன்றினாலும் தூய்மையான பிறப்பை உடையதல்ல என்கிறான்!


இது பதுமையார் இலம்பகம்

அந்தணன் நாறும் ஆன் பால் அவியினை அலர்ந்த காலை

நந்தியா வட்டம் நாறு நகை முடி அரசன் ஆயின்

தந்தியாம் உரைப்பின் தாழைத் தடமலர் வணிகன் நாறும்

பந்தியாப் பழுப்பு நாறின் சூத்திரன் பாலது என்றான்


பாம்பின் கடிவாயில் பசும்பால் மணம் இருந்தால் கடித்த பாம்பு அந்தணப்பாம்பு. நந்தியாவட்டை மலர் மணம் இருந்தால் அரசசாதிப் பாம்பு. தாழம்பூ மணம் இருந்தால் வைசியப் பாம்பு. பழுப்பு (கஸ்தூரி) மணம் இருந்தால் சூத்திரப் பாம்பு! பாம்பிற்கும் வர்ணம் பார்த்தவர்கள் சமணர்கள்.


இது பழமொழி நானூறு. முன்றுறை அரையனார் என்ற சமணப் புலவர் எழுதியது.


உரைமுடிவு காணான் இளமையோன் என்ற

நரைமுது மக்கள் உவப்ப – நரைமுடித்துச்

சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை

கல்லாமல் பாகம் படும்.


சோழனுக்கு நீதி வழங்குவதில் தேர்ச்சியில்லை என்றாலும் அவனால் ஒழுங்காக நீதி வழங்க முடிந்தது, ஏனென்றால் அவனுக்கு தன் குலத்தின் திறன் படிக்காமலேயே வந்து விடும் என்கிறார் புலவர்.


நாலடியார் குலத்தின் பெருமையைப் பேசுவது இப்படி:


செந்நெல்லா லாய செழுமு ளை மற்றுமச்

செந்நெல்லே யாகி விளைதலால் – அந்நெல்

வயனிறையக் காய்க்கும் வளவயலூர!

மகனறிவு தந்தை அறிவு —


சிவப்பு நெல்லுக்குச் சிவப்பு நெல்தான் பிறக்கும் என்று தெளிவாகச் சொல்கிறது.


திருவள்ளுவர் ‘நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்

உண்மையறிவே மிகும்’ என்று சொல்கிறார். இதற்குப் பரிமேலழகர் எழுதிய உரை:


நுண்ணிய நூல் பல கற்பினும் – பேதைப்படுக்கும் ஊழுடையான் ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல் பலவற்றையும் கற்றானாயினும், மற்றும் தன் உண்மை அறிவே மிகும் – அவனுக்குப் பின்னும் தன் ஊழான் ஆகிய பேதைமை உணர்வே மேற்படும். (பொருளின் உண்மை நூலின்மேல் ஏற்றப்பட்டது. மேற்படுதல் – கல்வியறிவைப் பின் இரங்குவதற்கு ஆக்கிச் செயலுக்குத் தான் முற்படுதல். ‘காதன் மிக்குழிக் கற்றவும் கைகொடா, ஆதல் கண்ணகத்தஞ்சனம் போலுமால்’ (சீவக.கனக. 76) என்பதும் அது. செயற்கையானாய அறிவையும் கீழ்ப்படுத்தும் என்பதாம்.). கண்ணுக்கிட்ட மை கண்ணுக்குப் பயன் தராது. அதே போல கல்வி பயன் தருவது ஊழைப் பொறுத்திருக்கிறது.

இது போன்று பல மேற்கோட்களைக் காட்டலாம்.


எனவே பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறளுக்கு பரிமேலழகர் சரியாகத்தான் உரை எழுதியிருக்கிறார் என்று தோன்றுகிறது:


எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் – எல்லா மக்களுயிர்க்கும் பொதுவாகிய பிறப்பியல்பு ஒக்குமே யெனினும்; சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான் – பெருமை சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள் ஒவ்வா அவை செய்யும் தொழில்களது வேறுபாட்டான். (வேறுபாடு – நல்லனவும், தீயனவும், இரண்டுமாயினவும், இரண்டுமல்லவாயினவுமாய அளவறிந்த பாகுபாடுகள். வினைவயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதன் பயன் அனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கும் ஒத்தலின் ‘பிறப்பு ஒக்கும்’ என்றும், பெருமை சிறுமைகட்குக் கட்டளைக் கல்லாகிய தொழிற்பாகுபாடுகள் வருணந்தோறும் யாக்கைதோறும் வேறுபடுதலின், ‘சிறப்பு ஒவ்வா’ என்றும் கூறினார்.

இப்பாடலுக்கு மணக்குடவர் எழுதியிருக்கும் உரை: எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை. ஆயினும் தான்செய் தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது. எனவே, இது பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும் கூறிற்று.
இதுவும் ஊழை வலியுறுத்துவதுதாகத்தான் இருக்கிறது.


குலங்கள் இருக்கின்றன, குலவொழுக்கங்கள் இருக்கின்றன என்பதையும் அவர் சொல்கிறார். “நலத்திற்கண் நாரின்மை தோன்றின் அவனைக்

குலத்திற்கண் ஐயப்படும்”
என்று சொல்லும் அவர் குலங்களுக்கு என்று சில ஒழுக்கங்கள் இருக்கின்றன என்பதை நம்புகிறார் என்பது தெளிவு. இதையேதான்

திருவள்ளுவர் பிராமணர்களைப் பற்றிப் பேசும் போது பிறப்பொழுக்கம் என்று ஒன்று இருக்கிறது என்பதைத் கூறுகிறார். “மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்” என்று அவர் சொல்லும் போது இங்கு ஒழுக்கம் என்பது பிராமணர் தங்கள் தொழில செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளைச் சொல்கிறது. பிராமணர்களுக்கு நெறிமுறைகள் இருந்ததைப் போல மற்ற வர்ணங்களுக்கும் நெறிமுறைகள் இருந்தன என்பது சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது.


வள்ளுவர் காலத்தைக் கடந்து சிந்தித்தாலும் அவர் தான் வாழ்ந்த காலத்தின் குழந்தை. அதன் தளைகளை ஓரளவுதான் அவரால் மீறியிருக்க முடியும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 08, 2019 20:03

November 5, 2019

பெரியாரியச் சோம்பேறிப் பேராசிரியர்கள் பண்டைத் தமிழ் இலக்கியத்தை ஒதுக்கித் தள்ள வேண்டும்!

தமிழன் முதன்முதலில் இயற்கையைத்தான் வழிபட்டான். அதனால் அவனுக்கு மதம் கிடையாது என்று சொல்வது கடைந்தெடுத்த முட்டாள்தனம்.


தமிழன் மட்டுமல்ல, உலகெங்கிலும் மனிதன் ஆரம்பகாலங்களில் இயற்கையைத்தான் வழிபட்டான். ஆவி வழிபாடு, இயற்கை வழிபாடு, குலக்குறி வழிபாடு, முன்னோர் வழிபாடு போன்ற வழிபாட்டு முறைகள் உலகெங்கிலும் உள்ள பழங்குடி மக்களுக்குச் சொந்தம். அவற்றிலிருந்து வளர்ச்சி அடைந்துதான் மதங்கள் பிறந்தன.


வேதங்களும் இயற்கை வழிப்பாட்டை முன்னிறுத்தின. காயத்திரி மந்திரம் “செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம். அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” என்றுதான் சொல்கிறது.


சங்ககால வழிபாட்டு முறையைப் பற்றி வரிந்து வரிந்து எழுதுபவர்கள் ஒன்றை வசதியாக மறந்து விடுகிறார்கள். வழிபடுபவர்கள் பாடல்களை எழுதுபவதில்லை. அவர்களைப் பார்ப்பவர்கள்தாம் அவற்றை எழுதியிருக்கிறார்கள். இது இன்றைய பழங்குடி மக்களைப் பார்த்து எழுதும் கட்டுரை போன்றது. கட்டுரை எழுதுபவனும், பழங்குடி மக்களும் ஒன்றாகி விட மாட்டார்கள். இதே போன்றுதான் சங்க இலக்கியப் புலவர்களும். அவர்கள் தங்கள் காலத்தில் பார்த்தவற்றை, கவனித்தவற்றை எழுதினார். உதாரணமாக தொல்காப்பியரை எடுத்துக் கொள்வோம்.

அவர் சொல்கிறார்:


காலம் உலகம் உயிரே உடம்பே

பால்வரை தெய்வம் வினையே பூதம்

ஞாயிறு திங்கள் சொல்என வரூஉம்

ஆயீ ரைந்தொடு பிறவும் அன்ன

ஆவயின் வரூஉம் கிளவி யெல்லாம்

பால்பிரிந் திசையா உயர்திணை மேன.


பால்வரை தெய்வம் என்பது பரம்பொருளைக் குறிக்கிறது என்பது தெய்வச்சிலையார் உரை.


ஐம்பூதங்களையும் தெய்வத்தையும் வழிபடும் தமிழன் மற்றவர்களையும் வழிபடுகிறான் என்று தொல்காப்பியர் கூறுகிறார்:


மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே


இது திருமால், முருகன், இந்திரன், வருணன் போன்ற தெய்வங்களைக் குறிப்பிடுகிறது.

இதே தொல்காப்பியர் சமூக வளர்ச்சியை

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப என்ற சூத்திரத்தின் மூலம் குறிப்பிடுகிறார். எனவே அவர் வாழ்ந்த சமூகம் சடங்குகள் தோன்றிய பிறகுதான் இருந்திருக்க வேண்டும். இவரே” நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய” என்றும் சொல்கிறார். “அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் ஐவகை மரபின் அரசர் பக்கமும் இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்” என்றும் அவர் சொல்கிறார். “காட்சி, கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல் என்று இருமூன்று மரபில் கல்லொடு புணர” என்று வீரக்கல் நடுவது பற்றியும் குறிப்பிடுகிறார்.


எனவே தமிழில் இலக்கியம் தோன்றிய காலத்திலிருந்து சமயம் இருந்திருக்கிறது. பல்வேறு விதமான வழிபாடுகளும் – இயற்கை, முன்னோர், ஆவி, குலக்குறி வழிபாடுகள் உட்பட இருந்திருக்கின்றன. இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று இணைந்து இயங்கி இருந்திருக்கின்றன. இன்றும் அவ்வாறே நடக்கிறது.


சங்க இலக்கியத்தில் கூறப்படும் கடவுள்கள் இந்தியா முழுவதும் வழிபடக் கூடிய கடவுள்கள். வழிபாட்டு முறைகளில் மாற்றம் இருக்கலாம். ஆனால் வழிபடும் கடவுள்களில் மாற்றம் அனேகமாக இருந்ததில்லை.


மாயோன், சேயோன் போன்றவர்கள் தனித்தமிழ்க் கடவுள்கள் என்று சொல்வது பித்துக்குளித்தனம். சங்க இலக்கியம் அவ்வாறு சொல்லவில்லை.

திருமாலை எடுத்துக் கொண்டால் அவனுடை புட்கொடியைப் பேசுகிறது. பாம்பணையைப் பேசுகிறது. சங்கு சக்கரத்தைச் சொல்கிறது. திருமகளை மார்பில் உடையவன் என்று சொல்கிறது.


“தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ

கல்லினுள் மணியும் நீ ; சொல்லினுள் வாய்மை நீ;

அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;

வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;

வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;

அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ” என்று அவனை வணங்குகிறது.


செவ்வேள் என்று அழைக்கப்படும் முருகன் சிவனுக்கும் உமையவளுக்கும் கார்த்திகைப் பெண்டிருக்கும் பிறந்தவன் என்று பரிபாடல் தெளிவாகக் கூறுகிறது. சூரபதுமனை அழித்ததையும் கூறுகிறது. ஆறுமுகத்தையும் பன்னிரு கைகளையும் கூறுகிறது. திருமுருகாற்றுப்படை முருகனின் ஆறு முகங்களில் ஒரு முகம் அந்தணர் வேள்வியை ஏற்கும் என்கிறது:

ஒருமுகம்,

மந்திர விதியின் மரபுளி வழாஅ

அந்தணர் வேள்விஓர்க் கும்மே


பெரியாருக்கு நேர்மையிருந்ததால் அவர் சங்ககாலத்திலிருந்தே தமிழ் இலக்கியம் என்பது பார்ப்பனக் குப்பை என்று ஒதுக்கினார். திருக்குறளை வேண்டாவெறுப்பாக ஏற்றுக் கொண்டார். பெரியாரிய, திராவிடச் சோம்பேறிப் பேராசிரியர்களுக்கு கடுகளவாவது நேர்மை இருந்தால் பெரியாரைப் போல சங்க இலக்கியத்திலிருந்து தமிழர்கள் படைத்தவற்றையெல்லாம் -சங்க இலக்கியம்,கீழ்கணக்கு நூல்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், சிற்றிலக்கியங்கள், கம்பராமாயணம் போன்றவற்றை -குப்பை என்று ஒதுக்க வேண்டும். பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி, படைப்புகளிலிருந்து திராவிட மதத்தைத் துவங்க வேண்டும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 05, 2019 19:18

November 3, 2019

தோண்டக் கிடைக்கும் அதிசயங்கள்!

(சிறுவர்களுக்காக எழுதப்பட்டது. தினமலர் வெளியிடும் ‘பட்டம்’ இதழில் 4 நவம்பர் 2019ல் வந்தது)

நம் எல்லோருக்கும் பூமிக்கு அடியில் என்ன புதைந்து கிடைக்கிறது என்பதை அறிய நிச்சயம் ஆர்வம் இருக்கும். மர்மக்கதைகள் படிப்பவர்களுக்கு எலும்புக் கூடுகள் கிடைக்கலாம் என்று தோன்றும். சிலருக்கு புதையல் கிடைக்கும் என்ற ஆசை இருக்கும்.


நீங்களும் தோண்டிப் பார்க்கலாம். நண்பர்கள் சிலரைச் சேர்த்துக் கொண்டு தோண்டிப் பார்க்கலாம். தோண்டும் போது என்ன கிடைக்கும் என்பதைச் சொல்ல முடியாது.


நான் சிறுவனாக இருக்கும் போது என் வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்தில் நான் தோண்டிப் பார்த்திருக்கிறேன். எனக்கு George VI King Emperor என்று பொறிக்கப்பட்ட ஓர் அணா நாணயம் கிடைத்தது. ஓர் அணா என்பது ஒரு ரூபாயில் பதினாறில் ஒரு பங்கு. 1938ம் ஆண்டு நாணயம். என்னிடம் பல வருடங்கள் இருந்தது.


1946ல் ராஜஸ்தானில் பரத்பூருக்கு அருகில் ஒரு சிறிய கிராமத்தில் தோண்டிக் கொண்டிருந்த சில சிறுவர்களுக்கு செப்புப்பானை ஒன்று கிடைத்தது. பானை முழுவதும் தங்க நாணயங்கள்! இரண்டாயிரம் தங்க நாணயங்கள்! எல்லாம் குப்தர்கள் காலத்தியவை. இன்றிலிருந்து 1500 ஆண்டுகளுக்கு முந்தையவை. நாணயங்களை ஆராய்ந்ததன் மூலம் குப்தர்கள் காலத்து வரலாற்றைப் பற்றிய பல முக்கியமான தகவல்கள் கிடைத்தன.


நம் மூதாதையர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை அறிவதற்காகவும் தோண்டுவது உண்டு. இதைத்தான் நாம் அகழ்வாராய்ச்சி என்று அழைக்கிறோம்.

அகழ்வாராய்ச்சியில் தேர்ச்சி பெற்றவர்கள் என்னைப் போன்றோ அல்லது ராஜஸ்தான் சிறுவர்களைப் போன்றோ, கிடைத்த இடத்தில் தோண்டிப் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு எந்த இடத்தில் தோண்டினால் பழைய காலத்துப் பொருட்கள் கிடைக்கும் என்பது பற்றிய புரிதல் இருக்கும். பல புத்தகங்களை ஆழ்ந்து படித்ததால் ஏற்படும் புரிதல். அப்படிப்பட்ட இடங்களைத் தேர்வு செய்து தோண்டுவார்கள். மிக நிதானமாகத் தோண்டி கிடைத்தப் பொருட்களை – அவை சிறிய பொருள்களாக இருந்தாலும் – கவனமாகச் சேகரித்து ஆராய்ச்சி செய்வார்கள். ஆராய்ச்சியின் மூலம் பல தகவல்கள், இதுவரை தெரிந்திராத தகவல்கள் கிடைக்கும். அல்லது தெரிந்த தகவல்களுக்கு ஆதாரங்கள் கிடைக்கும்.


உதாரணமாக கீழடியை எடுத்துக் கொள்வோம். உங்களுக்குக் கீழடி அகழ்வாய்வைப் பற்றித் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நம் முன்னோர்கள் சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பதைப் பற்றி தகவல்கள் திரட்ட அங்கு அகழ்வாராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. கிடைத்தெல்லாம் கவனமாகப் பாதுகாக்கப்படுகின்றன. சீப்புகள், நகைகள், தாயக்கட்டைகள், கிணறுகள், சுடுமண் சிற்பங்கள் போன்ற பல பொருட்கள் கிடைத்திருக்கின்றன. பானைத்துண்டுகளும் கிடைத்திருக்கின்றன.


கீழடியில் கிடைத்த பானைத் துண்டுகள் மிக முக்கியமானவை.


பல துண்டுகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கும் பானைத் துண்டுகள் இந்தியாவிலேயே அதிகம் தமிழ்நாட்டில்தான் கிடைத்திருக்கின்றன. இவற்றை ஆராய்ந்து இந்தியாவில் முதல் முதலாக எங்கு எழுத்துகள் பிறநதன என்பதைக் கண்டு பிடிக்க பல வல்லுனர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள்


எழுத்து என்றால் நாம் இப்போது எழுதும் தமிழ் எழுத்து அல்ல. பழங்காலத் தமிழ் எழுத்து. அதன் பெயர் தமிழ் பிராமி அல்லது தமிழி. இதில் ‘அ’ என்பது ஆங்கில எழுத்தான K ஐ திருப்பி போட்டது போல இருக்கும். ‘இ’ என்பது ‘ஃ’ஐ பக்கவாட்டில் திருப்பியது போல இருக்கும். ‘உ’ என்பது ஆங்கில எழுத்தான L போன்று இருக்கும். தமிழி எழுத்துகள் முழுவதையும் அறிந்து கொள்ள வேண்டுமானல் உங்கள் தமிழ் ஆசிரியரை அல்லது வரலாற்று ஆசிரியரை அணுகுங்கள். அவர் நிச்சயம் உதவி செய்வார். உங்கள் பெயரை தமிழியில் எழுதிப் பழகுங்கள். உங்கள் தாத்தாவிற்கும் தாத்தாவிற்கும் தாத்தாவிற்கும், பல தாத்தாக்களுக்கும் தாத்தா இதே போன்றுதான் எழுதிப் பழகியிருப்பார்!


பி ஏ கிருஷ்ணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 03, 2019 19:34

P.A. Krishnan's Blog

P.A. Krishnan
P.A. Krishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow P.A. Krishnan's blog with rss.