P.A. Krishnan's Blog, page 10
June 9, 2021
ஒரு தற்கொலையும் ஒரு பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டும்
திமுகவிற்காக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் தமிழன் பிரசன்னாவின் மனைவி நேற்று தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். ஆனால் சமூக ஊடகங்களில் எப்போதும் போல பல வதந்திகள் உலாவத் துவங்கி விட்டன. என்னைப் பொறுத்தவரை காவல்துறையினர் விசாரணை செய்து ஒரு முடிவிற்கு வரும்வரை கூச்சல் போடாமல் அமைதியாக இருப்பதைத்தான் நேர்மையானவர்கள் செய்வார்கள். இது போன்ற சம்பவம் பூணூல் போட்ட பிரபலம் ஒருவர் வீட்டில் நடந்திருந்தால் சிலர் பெருங்கூத்தாடியிருப்பார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் அவர்கள் செய்வார்கள் என்பதால் அத்தகைய செயற்பாடு நியாயம் ஆகி விடாது.
அரசு அதிகாரியாக இருக்கும் இளைஞர் ஒருவர் மீது ஆனந்த விகடன் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியிருக்கிறது. அவர் முன்னுக்கு வந்து கொண்டிருக்கும், மிகவும் அறிவுத் திறன் கொண்ட இளைஞர். அவருடைய எதிர்காலமே இப்போது கேள்விக்குறியாக ஆகி விட்டது என்பதில் ஐயம் இல்லை. ஆனந்த விகடன் மிகுந்த பொறுப்புணர்வோடுதான் நடந்து கொண்டிருக்கும் என்று கருதுகிறேன். அவ்வாறு நடந்து கொண்டிராத பட்சத்தில் ஆனந்த விகடன் மீது அவர் அவதூறு வழக்குத் தொடர வேண்டும்.
அரசு அதிகாரிகள் எவ்வாறு நடந்து கொள்ள வெண்டும் என்பதற்கு தெளிவான வழிமுறைகள் இருக்கின்றன. ஒரு வழிமுறை (Every Government servant shall at all times do nothing which is unbecoming of a Government servant). அரசு அதிகாரி எவ்வாறு நடந்து கொள்ளக் கூடாதோ அவ்வாறு எல்லா நேரங்களிலும் நடந்து கொள்ளக் கூடாது என்று சொல்கிறது. இது போன்ற பாலியற் குற்றச்சாட்டுகளை இந்த வழிமுறையை அவர் மீறினாரா இல்லையா என்ற கோணத்தில்தான் விசாரிக்க வேண்டும். ஆனந்த விகடன் கட்டுரை பொதுவெளியில் இருப்பதால் நிர்வாகம் எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இருக்க முடியாது. எடுக்கா விட்டால் வெளிப்படையாக குற்றம் சாட்டப்பட்ட பிறகும் அரசு ஏதும் செய்யாமல் இருக்கிறது என்ற குற்றச்சாட்டிற்கு அரசு ஆளாக நேரிடும். எனவே நிர்வாகம் ஆனந்த விகடனைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் இருக்கும் ஆதாரங்களைக் கேட்டு உடனடியாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.
நான் அதிகாரியாக இருந்த காலகட்டத்தில் பாலியல் அத்துமீறல்கள் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருந்தன என்பதுதான் உண்மை. அலுவலங்களில் வேலை பார்க்கும் பெண்களே அத்துமீறல்களைச் சகித்துக் கொண்டு போகும் நிலையில்தான் இருந்தார்கள் என்பதும் கசப்பான உண்மை. விசாகா சட்டங்கள் வந்த பிறகுதான் நிலைமை சற்று மாறத் துவங்கியது.
இது நான் 2018ல் எழுதியது.
“என்னுடைய உதாரணத்தையே சொல்கிறேன். நான் பணியில் இருந்த நாட்களில் பல பெண்களோடு பழகும் வாய்ப்புக் கிடைத்தது. சிலர் எனக்கு இணையான அதிகாரிகள். மற்றவர்கள் என்னிடம் வேலை பார்த்தவர்கள். பல முறைகள் பெரும் வீழ்ச்சிக்கு மிக அருகாமையில் இருந்திருக்கிறேன். இப்போது நினைத்தால் என்னை வெட்கப்பட வைப்பவை. ஆனால் என்னைப் பிடித்து இழுத்து வைத்திருந்தது என்னுடைய மனைவியின் அன்பு. எளிமையான, நேரடியான அன்பு. பாலுணர்வுக்கு பல மடங்கு மேம்பட்ட அன்பு. அதனுடன் அவளுக்கு என் மீது இருந்த நம்பிக்கை. ஆண்களுக்கே உரித்தான நாய்க்குணத்திற்கு மாற்றாக அவை அமைந்தன. நாய்க்குணம் இல்லாமல் இருந்ததில்லை. ஆனால் அதைக் கட்டுப்படுத்தி ஓரளவு வெற்றி பெற முடிந்தது நான் செய்த தவப்பயன் என்றுதான் சொல்ல வேண்டும். நேர்மையாக வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று உண்மையாக நினைக்கும் ஒவ்வொரு ஆணும் தன்னைச் சுற்றி அறம் சார்ந்த வட்டம் ஒன்றை வரைந்து கொள்கிறான். அதன் விட்டத்தை அவன் வாழும் சமுதாயம் நிர்ணயிக்கிறது. அது இன்னும் குறுகலாக இருக்கக் கூடாதா என்ற நினைப்பு எப்போதும் இருந்து கொண்டிருந்தால் நல்லது.”
அந்த இளைஞர் என்னுடன் சில ஆண்டுகள் தொடர்பில் இருந்தார். மிகுந்த மரியாதையுடன் நாகரிகம் பேணுபவராகத்தான் எனக்குத் தெரிந்தார். அவர் இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரங்கள் அற்றவை, தவறானவை என்று நிறுவினால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.
அரசு வேலைகளில் இருக்கும் இளைஞர்கள் பெண்களோடு பழகுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இச்சம்பவம் உறுதி செய்கிறது. அத்துமீறல்கள் எவை என்பதைத் தீர்மானிப்பவர்கள் பெண்கள். இந்த அடிப்படை உண்மையை நம் இளைஞர்கள் உணர்ந்து கொண்டாலே போதும்.
June 7, 2021
திராவிட இரு மூர்த்திகளும் வரவு செலவு கணக்குகளும்
மிகைப்படுத்துவதை ஒரு கலையாக பல ஆண்டுகள் செய்து கொண்டிருப்பவர்கள் திராவிட முன்னேற்றக்கழகக் கோமாளிகள். உதவாக்கரைகளிலிருந்து சிறிது திறமை கொண்டவர்கள் வரை திராவிட இயக்கத்திற்கு கொடி பிடித்தவர்களையும், பெரியாரின் ஹிட்லரிய இனவெறி பிரச்சாரத்திற்கு துணை போனவர்களையும் உலகமகா மேதைகள் போலவும், நோபல் பரிசுக்குத் தகுதியானவர்கள் போலவும் சித்தரிப்பதில் இவர்களுக்கு ஈடு கிடையாது. இன்று இவர்களுக்கு துணை போகின்றவர்கள் அரையாணா அறிஞர்கள். நேர்மை என்பதைத் துடைத்து விட்டு அலையும் கயவர்கள். கனவு இல்லம் கிடைக்காதா என்ற பேராசையில் மூன்றாம்தர விளம்பரங்கள் எழுதுபவர்களைப் போலச் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஊடகங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
1967 லிருந்து இன்று வரை திமுக ஆட்சி இருந்த்து 20 வருடங்களுக்கும் குறைவுதான். எம்ஜியாரும், ஜெயலலிதாவும் பழனிச்சாமியும்தான் தமிழகத்தை மீதி ஆண்டுகளில் தமிழகத்தை ஆட்சி செய்திருக்கிறார்கள். சென்ற பத்து ஆண்டுகளில் தமிழகம் வளர்ச்சியிலும் கல்வியிலும் முன்னிலையில் நிற்கிறது என்று இன்று செய்திகள் வந்திருக்கின்றன. அதிமுகவினர் யாரும் நாங்கள் வானத்தை வில்லாக வளைத்து விட்டோம் என்று புருடா விடவில்லை. அம்மா புகழ் பாடுவது Pavlovian response.
மாறாக திரு ஸ்டாலின் வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. தொற்று பல உயிர்களைக் குடித்து விட்டது. முடிவு என்று வரும் என்பது தெரியவில்லை. ஆனால் திமுக கோமாளிகளும் அவர்கள் அடியாட்களும் உதிரிப் பிரிவினைவாதிகளும் ஏதோ பொற்காலம் கண்ணுக்கு தெரியும் தூரத்தில் இருப்பது போலப் பேயாட்டம் ஆடுகிறார்கள். குறிப்பாக திரு ஜெயரஞ்சனையும் திரு தியாகராஜனையும் குறித்து இவர்கள் எழுதுவது குமட்டலை வரவழைக்கிறது. இதை நான் எழுதுவதால் ‘இவன் பார்ப்பான் இப்படித்தான் எழுதுவான்’ என்றும் ‘கதறுங்கள்’ என்றும் அரைகுறைகளும் தற்குறிகளும் பொறுக்கிகளும் வசை பாடுவார்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் எழுத வேண்டிய கட்டாயம். யாராவது உண்மையைச் சொல்ல வேண்டும்.
திரு ஜெயரஞ்சனைப் பற்றிய தகவல்களை கூகிள் ஸ்காலரில் தேடினேன். சர்வதேச அளவில் அவர் எந்த குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிக் கட்டுரையையும் எழுதியதாகத் தெரியவில்லை. எழுதியிருந்தால் சுட்டிக் காட்டவும். திருத்திக் கொள்கிறேன். ஆனால் பில்லியன் என்றால் எத்தனை கோடி என்று எனக்குத் தெரியாது என்று அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். திமுகவின் ஊதுகுழலாகவும் பிராமண வெறுப்பைத் தூக்கிப் பிடிப்பவராகவும் செயல்பட்டிருக்கிறார். அவருடைய விடியோக்கள் சிலவற்றைப் பார்த்தேன். நான்காம்தர திராவிடப் பேச்சாளருக்கும் அவருக்கும் அதிக வித்தியாசம் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தடாலடியாக அடித்து விடுவதை இயல்பாகச் செய்கிறார். உதாரணமாக மருத்துவப் படிப்புக்கு சமஸ்கிருதம் தேவை என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்டது என்று சொல்கிறார். எப்போது சொல்லப்பட்டது? யார் சொன்னார்கள்? எந்தத் தரவும் கிடையாது. நான் பல ஆண்டுகளாகத் தரவுகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இது போன்று பெரியார் திடல் உளறல்களை வாந்தி எடுக்கிறவர்தான் திராவிடப் பொருளாதார மேதை.
திரு ஜெயரஞ்சன் மேதையாக இருக்க வேண்டிய எந்தக் கட்டாயமும் வேண்டியதில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அவர் மிகத் திறமையோடு மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் தலைவராகச் செயலாற்றலாம். தமிழக மக்கள் நன்மை பெற உறுதுணையாக இருக்கலாம். அப்படி நடந்தால் அவருக்கு பாராட்டுகளை அளிப்பதில் நான் முதலில் நிற்பேன். ஆனால் அதனால் அவரை வானத்து அமரரைப் போலத் தூக்கிப் பிடிப்பதை எந்த வெட்கமும் இல்லாத திமுகவினராலும் அவர்களின் அடியாட்களாலும்தான் செய்ய முடியும். எடப்பாடி பழனிச்சாமி எதிர்பார்த்த அளவிற்கு மேல் திறமையாகச் செயல்படவில்லையா? அவரை அரசியல் மேதை என்றோ, உலக அரசியல்தலைவர்களில் ஒருவர் என்றோ அதிமுக தூக்கிப் பிடித்த்தாகத் தெரியவில்லை.
ஆனால் திரு ஜெயரஞ்சனுக்கும் அவருடைய குழுவினருக்கும் அறிவுரைகள் வழங்கும் உரிமைகள் இருக்கின்றனவே தவிர அதிகாரங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. எந்த அளவு சுதந்திரமாக அவரும் அவருடைய குழுவினரும் செயல்பட முடியும் என்பதும் கேள்விக் குறியாக இருக்கிறது.
அடுத்தவர் திரு தியாகராஜன்.
திராவிடக் குஞ்சுகளும் அரையணா அறிஞர்களும் அவருக்கு மோசஸைப் போல அறிவுக் கொம்புகள் இருக்கின்றன என்று சொல்லாததுதான் மிச்சம். மீதி எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்கள்.
திரு சுந்தர் பிச்சைக்கு திரு மோதி இந்தியக் குடியுரிமை கொடுத்து நிதி அமைச்சராக நியமனம் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். திராவிட முன்னேற்றக கழகமும் கலப்படக் கம்யூனிஸ்டுகளும் எவ்வளவு பெரிய ஆட்டம் ஆடுவார்கள்? “இவர் யார்? இவருடைய பின்புலம் என்ன? கார்ப்பரேட் கைக்கூலியாக இருந்தவருக்கும் இந்தியப் பொருளாதாரத்திற்கும் என்ன தொடர்பு? பூணூல் போட்டால் பழையதெல்லாம் மறந்து விடுமா? அமெரிக்காவில் இருந்து விட்டு வந்தால் போதுமா? ஆங்கிலம் அழகாகப் பேசத் தெரிந்தால் போதுமா?” போன்ற பல கேள்விகள் எழும். எல்லாம் முட்டாள்தனமான, அரைகுறைப் புரிதல்கள் இருப்பவர்களின் கேள்விகளாக இருக்கும். இவை போன்ற கேள்விகளை திரு தியாகராஜனைக் குறித்தும் எழுப்ப முடியும். “இவர் யார்? இவர் பின்புலம் என்ன? கார்ப்பரேட் கைக்கூலியாக இருந்தவருக்கும் தமிழகப் பொருளாதாரத்திற்கும் என்ன தொடர்பு? முதலியாராக இருப்பதால் பழையதெல்லாம் மறந்து விடுமா? அமெரிக்காவில் இருந்து விட்டு வந்தால் போதுமா? ஆங்கிலம் அழகாகப் பேசத் தெரிந்தால் போதுமா?” போன்ற கேள்விகள். இவற்றை கழகத்தவர் யாரும் எழுப்ப மாட்டார்கள். திமுகவினருக்கும் அவர்கள் அடியாட்களுக்கும் என்றுமே தங்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு இன்னொரு நீதி. பெரியார் காலத்திலிருந்தே நேர்மை என்பதைப் பசையறத் துடைத்து விட்டு அலையும் கூட்டம் அது.
யோசித்துப் பாருங்கள்.
நிர்மலா சீதாராமன் திமிராகப் பேசுகிறார் என்று இவர்கள் வரிந்து வரிந்து எழுதவில்லையா? தியாகராஜன் அவர்கள் திருமதி சீதாராமனை விட பத்து மடங்கு திமிராகப் பேசுகிறார். இன்னும் பண்ணையார் போலத்தான் பேசுகிறார். இவர் தாத்தா யாராக இருந்தாலும் நமக்கு என்ன? பிரிட்டிஷ்காரனுக்கு துடைத்து விட்டுக் கொண்டிருந்த நீதி கட்சியில் அவர் இருந்தார் என்பது எவ்வாறு பெருமைக்கு உரியது? Low IQ என்றால் என்ன பொருள்? IQவை எது தீர்மானிக்கிறது? 80% சதவீதம் பிறப்புதான் தீர்மானிக்கிறது என்று ஆராய்ச்சிகள் சொல்லவில்லையா? பிறப்பு தீர்மானிக்கிறது என்றால் சமூகநீதி என்னவாயிற்று? வானதி ஸ்ரீனிவாசன் IQ பற்றிப் பேசுவது அடிப்படை நாகரிகத்திற்குப் புறம்பானது சமூகநீதிக்குப் புறம்பானது என்று இவருக்கு ஏன் தெரியவில்லை? இது போன்ற கேள்விகளைத்தான் அறவுணர்வு என்பது சிறிதளவாவது இருப்பவர்கள் கேட்பார்கள். ஆனால் திராவிட அரைகுறைகளுக்கு அவர்களுக்குத் தெரிந்த “சரி, சரி, கதறாதீர்கள்” என்றுதான் சொல்ல முடிந்தது.
திரு தியாகராஜன் திறமையாகச் செயல்பட மாட்டார் என்று நான் சொல்லவரவில்லை. அவர் திறமையாக, தமிழ்மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் செயல்பட்டால் Low IQ இருப்பவர்களும் அவரை வாழ்த்துவார்கள்.
இனி வரவு செலவிற்கு வருவோம்.
திமுகவினரும் அரையணா அறிஞர்களும் ஒன்றை வசதியாக மறந்து விடுகிறார்கள். இதுவரை திரு ஸ்டாலின் அறிவித்தவற்றை எல்லாம் செலவு கணக்கில்தான் எழுத வேண்டும். வருவாய்க்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யாரும் அதிகம் பேசியதாகத் தெரியவில்லை. நான் பேச முயற்சிக்கிறேன்.
அரசின் வருவாய் முக்கியமாக ஐந்து விதங்களில் வரும்.
மத்திய அரசிடம் இருந்து வருவதுதமிழக அரசின் வரிப்பணத்தில் வருவது. கடன் வாங்கியதால் வருவதுஇருக்கும் அரசு சொத்துக்களை விற்பதால் வருவது. அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் கிடைக்கும் லாபத்தால் வருவது.இதில் பொதுத்துறை நிறுவனங்களை மறந்து விடலாம். நமது மின் துறை நிறுவனங்கள் மட்டும் ₹ ஒரு லட்சம் கோடி நஷ்டத்தில் இயங்குகின்றன.
இன்றைய தமிழகத்தில் 39 சதவீதம் GST மூலம் வருகிறது 38 சதவீதம் மாநில விற்பனை மற்றும் VAT மூலம் வருகிறது. 11 சதவீதம் பத்திர பதிவு 5 சதவீதம் வாகனப் பதிவு. எக்ஸைஸ் ட்யூடி 6 சதவீதம். உதிரி வருமானம் 1 சதவீதம். இவை எல்லாமே குறைய வாய்ப்பிருக்கிறது.
தமிழக அரசு வரிகளை கணிசமாக அதிகரிக்க முடியாது. கடன் வாங்கலாம். சொத்துக்களை விற்கலாம். ஆனால் விற்றப்பணத்தை கொண்டு என்ன செய்வது? அரசின் வருமானம் சம்பளம், ஓய்வூதியம் வட்டி செலுத்துதல் போன்றவற்றில் 65% சதவீதத்திற்கும் மேல் செலவிடப் படுகிறது. இதில் மிஞ்சுவது 35%. அதில்தான் கட்டுமானப் பணிகளுக்குச் செலவு செய்ய வேண்டும். கடன் வாங்கும் தொகையில் பெரும் பகுதியைக் கட்டுமானப் பணிகளுக்குச் செலவிட்டால் எதிர்காலம் நன்றாக இருக்க வாய்ப்பிருக்கிறது. சென்ற ஆண்டு அதிமுக அரசு கட்டுமானப் பணிகளுக்கு மிக அதிகமாகச் செலவிட்டது. Revised estimates for capital expenditure this year are 8.72% higher than original Budget estimates and 58.65% higher than that incurred in 2019-20, என்று தி இந்து சொல்கிறது.
தியாகராஜன் அவர்கள் என்ன செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் ₹ 5.7 லட்சம் கோடி கடனை வைத்துக் கொண்டு அவரால் அதிகம் ஏதும் செய்ய முடியாது – அரசு ஊழியர்கள, ஆசிரியர் சம்பளங்களிலும் ஓய்வூதியங்களிலும் மாற்றங்கள் செய்தால் ஒழிய. உதாரணமாக அகவிலைப்படி 2021 ஜூலையில் 32 சதவீதமாக உயர வாய்ப்பு இருக்கிறது. இதை அமலுக்குக் கொண்டு வந்தால் இப்போது செலவிடுதை விட 15% அதிகம் செலவிட வேண்டும். குறைந்தது ₹ 15000 கோடி தேவைப்படும். இது போன்ற செலவினங்களை அரசு எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதைப் பொறுத்துதான் திரு தியாகராஜன் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை அளவிட முடியும்.
திமுகவினர்கள் பொறுத்திருக்க வேண்டும்.
ஒரு வேளை திரு ஜெயரஞ்சனுக்கு பொருளாதாரத்தில் நோபல் பரிசு கிடைக்கலாம். திரு தியாகராஜனின் திறமையைக் கண்டு வியந்து உலக வங்கி அவரைத் தலைமை தாங்க அழைக்கலாம். அப்படி நடந்தால் தமிழர்களுக்குப் பெருமை என்று நானும் திமுகவினருடன் சேர்ந்து மகிழ்ச்சியடைவேன். இன்று கூவுவதற்கு ஒன்றும் இல்லை.
June 5, 2021
The Impact of Covid-19 on the Service Sector
Let me start this piece with a personal experience of my wife.
When the last lockdown in Delhi was winding to a close, my wife visited a parlour near our apartment. The parlour hardly had any customers but my wife was relieved to see the girl who usually attended to her. When she asked about her the welfare of her family, she almost broke down. She had a very harrowing experience to narrate. Her salary in pre-pandemic days was 14000 rupees but the owner could not pay her during the lockdown. It had come down to 7000 rupees when it opened as the parlour hardly had any customers. Both here parents were ironing cloths for a living. The virus saw it that their incomes had reduced to zero. The tiny flat in which they lived was on rent and the house-owner was pestering them for payment. The only option available to them was to borrow money on a high interest (at 2% per month) and pay the dues. The future looked bleak even then for the poor girl. Then came the second wave. It has just subsided but the parlour is still closed. There is no way of knowing it will ever open all. My wife doesn’t know what has happened to the girl. She doesn’t have her number and there is no one answering the phone at the parlour.
The story is not unique. There are several such stories all over India in different horrific hues. Many end in unspeakable tragedies.
The “work from home” guys, pensioners, and Government servants with assured income, government school and college teachers have all personally suffered but not because their incomes have dried out. In fact, most times, their savings have ballooned. But the incomes of the persons who had been rendering them support service have almost completely dried out.
I have made some very rough calculations about their plight and the picture they present is truly horrific.
India’s total workforce will be around 50 crores. The service sector will comprise about 35% of the workforce that works out 17.5 crore. Of them IT sector employs 0.4 crore, the central and state governments and banks (including teachers) employ about 3.5 crore. Let us assume that the number of persons with assured income to whom the ‘working from home’ facility is available either fully or partially is around 4 crore. That leaves us 13.5 crore persons. Of them, at least 40% must be serving in major urban centres and they have all been severely affected. Even in semi-urban and rural areas the service sector would have certainly felt the impact of the ravage caused by the virus. Let us therefore assume that slightly over 50% of the 13.5 crore persons, that is about 7 crore persons need financial help. If we assume that at least three persons depend on them, the number of persons who are affected in various ways will be, at the very least, around 21 crore – a huge number.
The only way to prevent these people from meeting total disaster is to support them directly by giving them monetary help. A monthly payment of rupees 2000 to them for a period one year will go a long way. That will work out to approximately rupees 1.75 lakh crore. A major part of this help must come from the ‘work from home’ classes and the pensioners – and of course income-tax payers and the corporate sector employees. It is good to remember that India spends 8% of its GDP on government employees and pensioners. Our GDP is around rupees 140 lakh crore and hence the governments pay as salary and pensions around rupees 12 lakh crore. Add to it the salaries being paid by the private sector to its regular employees the total will be enormous. My suggestion is the government (s) start deducting 2% of the salaries of both Government employees, pensioners and private sector employees (earning more than rupees 20000 per month on a regular basis) until such time the total amount reaches, rupees 1.75 crore and use that money to provide succour to the hapless persons in the service sector. Of course there will be the usual howls which are best ignored. This is just one method. I am sure the economists will come out with much better methods.
Personally speaking, all of us, who are better placed, can help at least one such family by paying it rupees 2000 per month for at least one year. I am not talking about the drivers and helpers who work for us. I am talking about the nameless guy in the street. Choose anyone and help his or her family. A little extra effort is all that is needed.
June 3, 2021
தமிழ்நாடும் தமிழகமும்
தமிழ்நாடு என்ற பெயர் தமிழ்நாடு என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்ததற்கு முன்பே தமிழன் அறிந்திருந்தது. தமிழனுக்கு என்றும் பிடித்தமான பெயர் அது. செந்தமிழ் நாடு என்னும் போதினிலே என்று பாரதி பாடியிருக்கிறான். நாடு என்றாலே தனி நாடு மட்டும்தான் என்ற பொருள் என்றுமே தமிழில் இருந்ததில்லை. எனவே தமிழ்நாடு என்றால் தனிநாடு என்று வலிந்து பொருள் கொண்டு அதை மாற்ற வேண்டும் என்று கூச்சல் போடுவது முட்டாள்தனம்.
அதே போல தமிழகம் என்பதும் தமிழனுக்குப் பிடித்த பெயர். குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குப் பிடித்த பெயர்.
“கழகம் வென்றது! அதைத் தமிழகம் இன்று சொன்னது!
இனித் தமிழகம் வெல்லும்!- அதை நாளைய தமிழகம் சொல்லும்!”
இது திரு ஸ்டாலின் ஒரு மாதத்திற்கு முன்னால் சொன்னது. கழகம் வென்றது தமிழ்நாட்டில்தான். அவர் நாளையத் தமிழகம் வெல்லும் என்று சொன்னதும் தமிழ்நாட்டைக் குறித்துதான். எனவே சிலர் தமிழகம் என்று மட்டும்தான் சொல்ல வேண்டும் என்பதால் அச்சொல் தீண்டத்தகாததாக ஆகி விடாது.
இன்னொன்றும் சொல்லியாக வேண்டும்.
திமுகவிற்குச் சாபக்கேடாகத் திரிந்து கொண்டிருக்கும் ஹிட்லரிய இனவெறியினரையும் இலக்கிய உலக்கை பட்டத்தோடு கனவு இல்லமும் கிடைக்காதா என்று காத்திருக்கும் அரையணா அறிஞர்களையும், பிரிவினைப் பொறுக்கிகளையும் இச்சர்ச்சை சிலிர்க்க வைத்து விட்டது. உள்நாட்டுப்போர் மூளும் என்று அம்பேத்கர் சொல்லியிருக்கிறார் என்று ஒரு முழுப் பிரிவினைவாதி எழுதுகிறார். அம்பேத்கர் தேவைப்பட்டால் இந்தியா Unitary State ஆக மாறும் என்றும் சொல்லியிருக்கிறார். உள்நாட்டுப் போர் மூண்டால் நான் முன்னால் சொன்னதுபோல முள்ளிவாய்க்கால் பிள்ளை விளையாட்டுப் போலத் தோன்றத் துவங்கி விடும். தமிழக மக்கள் கொத்துகொத்தாக மடிய வேண்டும் என்ற எண்ணமுள்ளவர்களும் தமிழ் நாட்டிற்கும், இந்தியாவிற்கும் துரோகம் செய்ய நினைப்பவர்களுமே உள்நாட்டுப் போரைப் பற்றி இவ்வளவு எளிதாகப் பேச முடியும்.
திமுக இவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
திமுக இன்று வரலாற்றின் முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. ‘அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு’ என்று வெற்று வசனம் பேசிக் கொண்டிருந்த திமுகவிற்கும் இன்றைய திமுகவிற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் என்ற கொள்கையின் மீது தெளிவும் பிடிப்பும் இருக்கும் ஒரே கட்சி இந்தியா முழுவதிலும் திமுகவாகத்தான் இருக்க முடியும். மற்றைய எல்லா மாநிலக் கட்சிகளிலிருந்தும் அதை வேறுபடுத்துவது இக்கொள்கை மட்டும்தான். இதை நான் இன்று சொல்லவில்லை. பல ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்ட்டிருக்கிறேன். ஆனால் அவ்வதிகாரங்கள் இந்தியா ஒரே நாடு என்ற அடித்தளத்தின் மீது தான் கட்டபடும் என்ற உறுதிமொழியை கட்சி இதுவரை கொடுக்கத் தவறி விட்டது என்றுதான் நான் நினைக்கிறேன்.
இதற்குக் காரணம் தனித்தனியாகவும் சேர்ந்தும் இயங்கக் கூடிய மூன்று குழுவினர். இவர்கள்:
பெரியாரின் ஹிட்லரிய இனவாதத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு அலையும் அழித்தொழிப்பு வெறியர்கள். விருதுகளையும், பல்கலைக்கழகப்பதவிகளையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும், அடிப்படை நேர்மை அறவே அற்ற அரையணா அறிஞர்கள். மற்றும்இந்தியாவைப் பிரித்தே தீர வேண்டும் என்று கனவு கண்டுக் கொண்டிருக்கும் பொறுக்கிகள்.இக்குழுவினரை இனம் கண்டு கொள்ள வேண்டிய கட்டாயம் கட்சிக்கு இருக்கிறது. இவர்களை ஒதுக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. வெளியில் இருந்து கூச்சல் போடட்டும். எதிர்கூச்சல் ஹிந்துத்துவர்களிடமிருந்து வரும். தமிழக மக்களுக்குப் பொழுது போகும். எனக்கும் பொழுது போகும். உதவாக்கரை ஊடகங்களுக்குத் தீனி கிடைக்கும். ஆனால், நடுவீட்டிற்குக் கொண்டு வந்தால் கட்சிக்கு எந்தப் பலனும் இல்லை. மாறாக தங்கள் வெறித்தனத்தால் இவர்கள் கட்சியை நெறித்து மூச்சடைக்கச் செய்து விடும் அபாயம் இருக்கிறது.
திமுகவில் உண்மையான அறிஞர்கள் இருக்கிறார்கள், இந்தியா பிரிய வேண்டும் என்று எண்ணாதவர்கள் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் ஒன்று சேர வேண்டும்.
அவர்கள் தூக்கிப் பிடிக்க வேண்டிய முக்கியமான ஒரே கொள்கை மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள். தமிழ்நாடு இன்று எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு இதில் இருக்கிறது.
இதை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல திமுக செய்ய வேண்டியது என்ன?
முதலில் அசைக்க முடியாத அடித்தளம் பிரிக்க முடியாத இந்தியா என்று திமுக சொல்ல வேண்டும். பிரிந்து போகும் அதிகாரம் எந்த மாநிலத்திற்கும் கிடையாது என்பதையும் உறுதிபடச் சொல்ல வேண்டும்.மாநிலங்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாக வரையறுத்து ஓர் ஆவணத்தைத் தயார் செய்து அதை எல்லா மாநிலங்களுக்கும் (பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் உட்பட) அனுப்ப வேண்டும். அவர்கள் ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு, பெரும்பாலோனரகளின் சம்மதங்களைப் பெற்று வரைவு ஒன்றைத் தயாரிக்க வேண்டும். அதற்கு இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற கடுமையாக உழைக்க வேண்டும்.இது ஒரு சில ஆண்டுகளில் நடக்கக் கூடியது அல்ல. இப்படித்தான் நடக்கும் என்ற கட்டாயமும் இல்லை.
ஆனால் இந்தியா ஒரே நாடாக இருந்தால்தான் தமிழ்நாடு வளமாக இருக்கும் என்ற அடிப்படையை ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்று திமுகவிற்கு உயர்த்தி சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. “பிரிவினை வேண்டாம் என்று சொல்லி விட்டோமே தவிர பிரிவினைக்கான காரணங்க்ள் இன்னும் இருக்கின்றன” என்று சொல்வது திமிர்த்தனம் மட்டுமன்று, அடிமுட்டாள்தனம். இவ்வாறு சொல்வதால் தமிழகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்பதை உணர வேண்டிய கட்டாயமும் கட்சிக்கு இருக்கிறது.
மேற்கூறியது அனைத்தும் பார்ப்பனச் சூழ்ச்சியின் ஒரு அங்கம் என்று ஹிட்லரிய இனவெறிச் சாக்கடையில் குளித்துக் கொண்டிருப்பவர்களும் அரையணா அறிஞர்களும் பிரிவினைப் பொறுக்கிகளும் நிச்சயம் சொல்வார்கள். சூழ்ச்சியா இல்லையா என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ளும் தன்மை கொண்டவர்கள் திமுகவில் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
June 1, 2021
ஒன்றியம் என்றால் என்ன?
பெரியார் காலத்திலிருந்தே திராவிட இயக்கத்தில் மிகைப்படுத்துபவர்களுக்குப் பஞ்சம் இருந்தது கிடையாது. அன்று ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளாக இருந்தவர்கள் தமிழ்நாடு தமிழருக்கே என்ற கூச்சலை தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருந்தார்கள். இன்று திமுக மாநிலத்தில் வெற்றி பெற்று விட்டது என்ற திமிரில் பிரிவினைவாதிகளும் பிரிவினைக்கு எதிராக இருந்தாலும் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களும் ‘ஒன்றியம்’ என்ற சொல்லை வைத்துக் கொண்டு உளறத் துவங்கி விட்டார்கள்.
இனி ஒன்றியம் என்ற சொல்லைப் பார்ப்போம்.
‘ஒன்றியம்’ அல்லது Union என்ற சொல் கெட்ட வார்த்தை அல்ல. நம்மிடம் Union Public Service Commission இருக்கிறது. Union territories இருக்கின்றன. வருடா வருடம் மத்திய அரசு நமக்குத் தருவது Union Budget. எனவே மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்தால், பூமி அதிர்ச்சி ஏற்பட்டு விடாது. திராவிடக் குஞ்சுகள் புளகாங்கிதம் அடையலாம். இதனால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.ஆனால் இதை வைத்துக் கொண்டு இந்தியா தேசிய இனங்களின் கூட்டு என்று புலம்புவது நகைப்பிற்குரியது. தமிழ் தேசிய இனம், இந்தி தேசிய இனம் என்று ஒரு இனமும் கிடையாது. தமிழ்நாட்டில் இன்று இருப்பதில் 40 சதவீதம் பிற மொழி பேசுபவர்கள். ஒன்றியம் என்று அலறுவது Dravidian Stock என்று உளறுவது போல்தான். Dravidian Stock, திராவிட இனம் என்ற சொற்றொடரே வரலாற்றிற்கும் அறிவியலுக்கும் எதிரானது. இதை திராவிட முன்னேற்றக் கழகத்தினர் பிடித்துக் கொண்டு தொங்குவதில் எந்த வியப்பும் இல்லை. இவர்கள் ஹிட்லரின் இனவெறிக் கொள்கையை இந்தியாவில் தொடர்ந்து பரப்பிய பெரியாரின் சீடர்கள் என்பதை மறந்து விடக் கூடாது. அடிப்படையில் இனவாதிகள். ஆனால் இனவாதம் தமிழ்நாட்டில் மட்டுமே செல்லுபடியாகும். இங்கு இருக்கும் பிறமொழி பேசும் பிராமணர் அல்லாதவர்கள் தங்குதடை இல்லாமல் அரசியல் செய்ய திராவிடம் பயன்படலாம். ஆனால் இவர்கள் திராவிட இனம் என்று கேரளாவிலோ, ஆந்திராவிலோ, தெலிங்கானாவிலோ அல்லது கர்நாடகாவிலோ சொன்னால் வாரியலை எடுத்துக் கொண்டு வருவார்கள். திராவிட இனம் என்று சொல்லி மக்களை ஏமாற்றுவது போலத்தான் ஒன்றியம் என்று சொல்லி ஏதோ புரட்சி நிகழ்ந்து விட்டது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றுவது. இவர்கள் ஒன்றியம் என்று சொல்லி விட்டதனால் இந்திய அரசியல் சட்டம் மாறப் போவதில்லை. மத்திய அரசிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. நமது அரசியல் சாசனம் இவ்வாறு சொல்கிறது:India, that is Bharat, shall be a Union of States. The States and the territories thereof shall be as specified in the First Schedule. The territory of India shall comprise—
(a)the territories of the States; (b) the Union territories specified in the First Schedule; and (c) such other territories as may be acquired.
இதில் என்று நிலைத்து நிற்பது இந்தியா மட்டும்தான். மற்றவை எல்லாம் மாறக் கூடியவை. தமிழ்நாடு என்ற மாநிலமே அரசியல் சாசனம் பிறந்த 1949ல் இல்லை என்பதை திராவிடக் கோமாளிகள் மறந்து விடுகிறார்கள். அன்று இருந்தது மதராஸ் மாநிலம். அது மாற்றப்பட்டு தமிழ்நாடானது 1954ல்தான். தமிழ்நாடு என்பது இந்திய யூனியனால் உருவாக்கப்பட்டது. இந்திய யூனியன் அல்லது இந்திய ஒன்றியம் நினைத்தால் தமிழ்நாட்டின் வரைபடத்தை மாற்றி அமைக்கவும் முடியும். இதுதான் சமீபத்தில் ஜம்மு -காஷ்மீர் மாநிலத்திற்கு நடந்தது. இந்திய ஒன்றியம் நினைத்தால் கோவையைச் சுற்றியிருக்கும் நிலப்பரப்பையும் மாவட்டங்களையும் தமிழ்நாட்டிலிருந்து பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவிக்க முடியும். அப்படி அறிவிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அது மக்களாட்சி முறைக்கு எதிரானது. இதே போன்று, இந்தியாவிற்கும் இந்திய அரசியல் சட்டத்திற்கும் எதிராக அலறுவதும் இந்திய ஒருமைப்பாட்டிற்கும் இந்திய மக்களுக்கும் எதிரானது என்பதைக் கோமாளிகள் உணர வேண்டும்.
5. ஒன்றியம் என்பதை வலியுறுத்தி, இந்தியா தேசிய இனங்களின் ஒன்றியம் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் அது பிரிவினைப் பாதையில் மக்கள் செல்ல வழிவகுக்கும் என்று நினைப்பவர்களும் பலர் தமிழ்நாட்டில் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தியா எப்படிப் பிரியும்?
1. இந்தியாவில் இருக்கும் மாநிலங்கள் தாங்களாகவே பிரிய முடிவு எடுக்கும் போது.
2. போர் மூண்டு இந்தியாவைப் பிரிக்க பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் முயன்று வெற்றியடையும் போது.
3. உள்நாட்டுப் போர் மூண்டு மாநிலங்கள் குழுக்களாகச் சேர்ந்து தனியரசு அமைக்க முயலும் போது.
4. மாநிலங்கள் தனித்து நின்று போரிட்டு இந்தியாவிலிருந்து பிரியும் முயற்சியில் வெற்றி அடையும் போது.
5. அமைதியாக பிரிவோம் என்ற முடிவை எல்லா மாநிலங்களும் எடுக்கும் போது.
இவற்றை ஒன்றொன்றாக ஆராய்வோம்.
1. இந்தியாவில் இருக்கும் மாநிலங்கள் தாங்களாகவே பிரிய முடிவு எடுக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு. இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் வளர்ச்சி பெற்றதே அவை இந்தியாவின் ஓர் அங்கமாக இருப்பதால்தான். இது எல்லா மாநிலங்களுக்கும் தெரியும்.
2. போர் மூண்டால் இந்தியாவின் ஒற்றுமை வலுவடைய வாய்ப்புக்கள் இருக்கின்றனவே தவிர பிரிவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. சீனாவோ, பாகிஸ்தானோ போரில் (சண்டைகளில் அல்ல) வெற்றி பெற்று விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். அத்தகைய வெற்றி ஒரு அணு ஆயுதப் போரிற்கு பின்னால்தான் நிகழ முடியும். அணு ஆயுதப் போரிற்குப் பின்னால் பிரிப்பதற்கு அதிகம் ஏதும் இருக்காது.
3. குழுக்களாகச் சேர்ந்து தனியரசு அதாவது திராவிட நாடு போன்ற ஒன்றை டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் கோமாளிகள் அமைக்கலாம். ஆனால் அது நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்று. உள்நாட்டுப் போர் மூளும் சாத்தியம் இல்லை. அப்படியே போர் மூண்டாலும் அது பேரழிவிற்குத்தான் கொண்டு சேர்க்கும். அது நடக்கும் போது முள்ளி வாய்க்கால் பிள்ளை விளையாட்டாகத் தெரியும். வெளிநாட்டு உதவியில்லாமல் இந்தியாவில் உள்நாட்டுப் போர் மூள்வது முடியாத காரியம். போருக்கு உதவி செய்பவர்கள் ஜீவகாருண்யத்திற்காகச் செய்ய மாட்டார்கள் என்பது திராவிட, தனித்தமிழ் கோமாளிளுக்கே உறைக்கும் என்று நம்புகிறேன்.
4. இந்தியாவின் மீது உரிமை எல்லா இந்தியர்களுக்கும் இருக்கிறது. எனக்கு தில்லி மீதும் தமிழ்நாடு மீதும் உத்தரப் பிரதேசம் மீதும் உரிமை இருக்கிறது. எனவே என்னுடைய உரிமை குறைக்கப்படுவதை என்னைக் கேட்டுத்தான் செய்ய வேண்டும். தமிழ்நாடு தனியாகப் பிரியலாம் என்ற முடிவை பெரும்பாலான இந்தியர்கள் சம்மதம் தந்தால்தான் எடுக்க முடியும். அது நடைபெறும் என்று நினைப்பது கனவு. மேலும் தமிழ்நாடு தனித்து நின்று போர் செய்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போரில் இந்தியாதான் வெற்றி பெறும். தமிழகம் ஒருவேளை கிடைத்தாலும் அது ஆதிச்ச நல்லூர் தமிழகமாகத்தான் இருக்கும். கற்காலத்திலிருந்து திரும்பத் துவங்க வேண்டியதுதான். துவங்கினாலும் தொடர்ந்து போர் மேகங்கள் சுழ்ந்திருக்கும் நாடாகத்தான் அது இருக்கும். முதலீடுகள் அருகி விடும்.
5. அமைதியாக எல்லா மாநிலங்களும் பிரிவோம் என்ற முடிவை எடுக்கும் என்பதற்கு நடைமுறையில் இன்று சாத்தியம் இல்லை. நாளையும் இல்லை. உலகம் ஒன்றாகுமே தவிர துண்டு துண்டுகளாக ஆகி விடாது. மக்கள் வட்டம் பெரிதாகுமே தவிர, சிறு சிறு வட்டங்களாகச் சுருங்கி விடாது.
மாநிலங்கள் மாநிலங்களாக, அதிக உரிமைகளோடு இருக்க வேண்டும் என்று கேட்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் தேசிய இனம், திராவிட இனம், ஒன்றியம் என்று உளறிக் கொண்டிருந்தால் அது பிரிவினை வாதத்தை கொல்லைபுறம் வழியாகக் கொண்டு வருவது என்றுதான் இந்தியாவின் மீது நேசம் கொண்டவர்கள் நினைப்பார்கள்.
May 30, 2021
The Tasks Ahead
I must say Mr. Thiagarajan has begun reasonably well. His speech in the GST meeting had its share of rhetoric but I completely agree with him that the states should have more financial powers. His example of what Mr. Modi demanded when he was the Chief Minister of Gujarat was quite apt. His spat with the Goa’s finance minister shows his arrogance remains as incandescent as ever. As a minister of a big state he should have been more graceful.
In any case, speeches are not going to take care of the finances of Tamil Nadu. It is common knowledge that the financial condition of the state is pathetic. Let us make a survey of it:
Around 65% of the income of the state is spent on salaries, pensions and interest payment.In addition to the existing subsidies and concessions, DMK’s election manifesto has announced a host of other measures. This means that the Government will have very little money left for either infrastructure or job creation activities. It is a well known fact that the Tamil Nadu Generation and Distribution Corporation is running at a huge loss. Its borrowings are around 110,000 Crores and its loss in the financial year 2019-20 is around 12,600 crores. Yes, Tamil Nadu will be a surplus power state for some more years, but a bleeding TANGEDCO will be a drain on the finances of the state. The overall outstanding debt of Tamil Nadu as of March 31, 2021 is around ₹4,85,000 crore which will balloon to ₹5,70,000 crore in March 2022. Though this might be well within the norms prescribed by the 15th Finance Commission, the debts are huge and they are getting huger. The Covid-19 crisis has crippled the economy of India but its effect on industrialized states like Tamil Nadu will be of a much higher order. Tax collections are likely to take a big blow and the state, in all likelihood, will be facing a financial crisis, rarely seen in its history. The Business Standard says that 97% of Indians are poorer post second wave and there is a steady fall in the salaried jobs. Tamil Nadu cannot be an exception to the general trend. When people are losing their regular income, it is natural that their consumption will shrink and so will the indirect taxes that they pay to the government. The service sector which contributes around 55% of the economic activity of the state was fortunately not much affected, relatively speaking, during the first wave, but that may not be the case during the second wave. In any case, the growth in this sector is already plateauing. It is good to keep in mind that even when things were not very bad, the employment generation in Tamil Nadu was anemic. For instance, in the period between September 2017 and October 2019 only 50000 formal jobs were created. 179 projects at a cost of Rs. 8.6 lakh crore relating to Tamil Nadu have been included in the national infrastructure pipeline. These projects are to be implemented in the five years between 2020 and 2025. The Covid-19 crisis must have delayed them considerably. There is nothing that the state can do in the matter of debt repayment, but it might have to bite the bullet in respect of salaries and pension payment, which may cost the DMK dear, politically speaking. Add to this, the likely clamour from the people that the welfare measures promised in the manifesto be implemented, the cup of woe of the government will be overflowing. Yes, Tamil Nadu is still an Industry-friendly state. Yes, Stalin has clearly said there is no room for corruption during his tenure. Yes, there will certainly be private companies willing to invest in Tamil Nadu. However, incessant sabre-rattling, shrill and vacuous publicity and submitting to the Nazi elements in the party will chase the investors away.The new finance minister has a very tough, though not an insuperable, task ahead.
பத்மா சேஷாத்திரி பள்ளியை அரசுடைமை ஆக்க வேண்டுமா?
பத்மா சேஷாத்திரி பள்ளியைக் குறித்து திரு சுப்ரமணியன் சுவாமி ஆளுனருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் தமிழ் நாட்டின் பிராமணர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர் எழுதியது:
The targetting of Brahmins in the state and the verbal terrorizing of this hapless disorganized community is very much like as happened during the early period of Nazi government led by Hitler in Germany.
நான் திரு சுவாமியோடு உடன்படவில்லை. ஹிட்லரின் முதலாண்டுகளில் நடந்ததுதான் இப்போது நடப்பது என்ற கூற்றோடு நான் ஒத்துப் போகவில்லை. இன்று வரை அரசு பிராமணர்களுக்கு எதிராகவோ, அல்லது தமிழ்நாட்டின் எந்த சமூகத்திற்கும் எதிராகவோ நடந்து கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. திரு ஸ்டாலின் மிகத் தெளிவாக இது எல்லோருக்குமான அரசு என்று சொல்லியிருக்கிறார். அவர் தன் சொல்லை மீறமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் நீர்த்துப் போகவில்லை.
ஆனால் ஸ்டாலினே 3 சதவீதம் என்று பேசியிருக்கிறார் என்பதை எளிதாக மறந்து விட முடியாது. திமுகவினர் பலர் பிராமணர்களை ஒரு கை பார்த்து விடுவோம் என்று சமூக ஊடகங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் எழுதி வருகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக திராவிட இயக்கத்தின் மூலவரான பெரியார் மிகத் தெளிவாக நான் ஒழிக்க விரும்பவது பிராமணர்களைத்தான் பிராமணத்துவத்தை அல்ல என்று பல தடவைகள் சொல்லியிருக்கிறார். எனவே பெரியாரைத் தூக்கிப் பிடிக்கும் எந்த இயக்கத்தையும் ஹிட்லரின் நாஜி இயக்கத்தோடுதான் ஒப்பிட்டுப் பேசுவதில் எந்த வியப்பும் ஏற்பட முடியாது. திராவிட இயக்கத்தினர் நாங்கள் ஒரு சாதியைக் குறிப்பிட்டுப் பேச மாட்டோம் என்று சொல்லும் வரை, அவர்கள் மீது ஹிட்லரின் நிழல் விழுந்து கொண்டுதான் இருக்கும். ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் திரு விஜயசங்கர் திராவிட நாஜிகள் என்று சொல்வது அயோக்கியத்தனம் என்று திரும்பச் சொல்லியிருக்கிறார். அடிப்படை நேர்மையையோடு மார்க்சியத்தையும் விலைக்கு கொடுத்து விட்ட மண்ணாங்கட்டி மார்க்சியர்களால் மட்டுமே இது போன்று எழுத முடியும். இது மார்க்சியத்திற்குச் செய்யப்படும் வெட்ககரமான துரோகம். நாஜிகளைப் போன்று பேசுபவர்களை நாஜிகள் போன்று பேசுகிறார்கள் என்றுதான் சொல்ல முடியும். உதாரணமாக திரு கரு. பழனியப்பனும் திரு சுப. வீரபாண்டியனும் பேசிக் கொள்ளும் விடியோ ஒன்றைப் பார்த்தேன். பத்து ஆண்டுகளில் பிராமணர்களின் மூக்கு வெளுத்து விட்டதாம. பிராமணர்களை அரசு அண்ட விடக் கூடாதாம். இது அப்பட்டமான நாஜிப் பேச்சு. இனவெறிப் போதையில் இருப்பவர்கள் பேசும் பேச்சு. தமிழ் பிராமணர்கள் பிரச்சினைகளை திமுக அரசு கண்டு கொள்ளக் கூடாது என்பதை இவர்கள் விரும்புகிறார்கள் என்பது தெளிவு. இவர்கள் நாஜிகளைப் போலப் பேசுகிறார்கள் என்றால் அழித்தொழிப்பு எங்கே நடந்திருக்கிறது என்று கேட்பது வரலாற்றை அறியாதவர்கள் கேட்கும் கேள்வி. அவ்வாறு நடந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் திராவிட இயக்கத்தினரிடம் பெரியாரின் பிராமண வெறுப்பு நிலைப்பாடு அப்பட்டமான நாஜிகளின் நிலைப்பாடு அதை நீங்கள் தூக்கிப் பிடித்தால் நீங்களும் நாஜிகள்தாம் என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டிய கட்டாயம் வரலாற்றை அறிந்தவர்களுக்கும இருக்கிறது. குறிப்பாக உண்மையான மார்க்சியர்களுக்கு இருக்கிறது.
மீண்டும் சொல்கிறேன்.
இவ்வாறு சொல்வதனால் இன்று தமிழகத்தில் நாஜி ஆட்சி நடக்கிறது என்ற பொருளல்ல. தமிழகத்தில் இன்று நடப்பது மக்களாட்சி. திரு ஸ்டாலின் மக்களாட்சி கொள்கைகளுக்கு எதிராக இன்று வரை நடந்து கொள்ளவில்லை. தமிழ் பிராமணர்கள் தங்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய உரிமைகளை ஜனநாயக வழியில் அமைதியாகப் போராடிப் பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதனால்தான் திராவிட நாஜிகள் பேசுவதையும் செய்வதையும் அரசின் பார்வைக்குக் கொண்டு வர வேண்டிய கட்டாயம் நாஜி கொள்கைகளில் நம்பிக்கை இல்லாதவர்கள் அனைவருக்கும் இருக்கிறது. பிராமணர்கள் தமிழ்நாட்டில் இருக்க, அரசு வேலைகளில் தங்களுக்கு உரிய பங்கை கேட்க எல்லா உரிமைகளும் இருக்கிறது. அரசும் அவ்வுரிமைகள் பிராமணர்களுக்குக் கிடையாது என்று சொல்லவில்லை.
இந்த நோக்கில் பார்க்கும் போது திரு சுவாமி எழுதியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குறிப்பாக, எந்த மாநில அரசையும் அரசியல் சட்டம் எண் 356ல் கீழ் கலைப்பது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது.
இனி பத்மா சேஷாத்திரி பள்ளிக்கு வருவோம்:
பள்ளி நிர்வாகம் இதுவரை தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன். நான் பலதடவைகள் சொல்லியிருப்பது போல பாலியல் அத்துமீறலை இன்று கண்டு கொள்ளாமல் இருப்பது என்பது நிர்வாகம் தற்கொலை செய்து கொள்வதற்குச் சமமானது. எந்த நிர்வாகமும் அவ்வாறு செய்யாது. ஆனால் எந்த நிர்வாகமும் விசாரணை செய்யாமல் ஒருதலைப் பட்சமான நிலைப்பாட்டை எடுக்க முடியாது. அமைச்சர் மகேஷ் கூட திரும்பத் திரும்ப, நல்ல ஆசிரியர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகள் சாட்டப்படுவதையும் அரசு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். எனவே தீர விசாரிக்காமல் திரு ராஜகோபாலனைக் கழுவில் ஏற்றுவது தவறு.
பள்ளியின் அறிக்கை இது:
Padma Seshadri School acts swiftly, extends full cooperation to authorities. Padma Seshadri’s KK Nagar School, where a male teacher has allegedly behaved in an inappropriate behaviour with students, has moved swiftly to suspend the teacher and take appropriate steps to avoid recurrence in the future. The issue was first brought to the School’s attention through Social Media. A formal enquiry into the conduct of the teacher has been initiated, and the School will take the necessary action based on the findings. The School welcomes all assistance from the concerned authorities to deal with this situation and take needed action.
Said Mrs Geeta Govindarajan, Principal, PSBB KK Nagar School: “We have never received any written complaint on this matter from anyone. The behaviour of one teacher does not in any way detract from the highest standards of professionalism that our teachers uphold. For us, our students’ welfare is absolutely sacrosanct.”
இவ்வறிக்கையில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.
வாய்வழியாக ஏதாவது நிர்வாகத்திற்குப் புகார் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுவது இயற்கை. வாய்வழியாக யாரிடம் புகார் செய்யப்பட்டதா, அது நிர்வாகத்திடம் போய்ச் சேர்ந்ததா என்பதெல்லாம் விசாரணையின் போதுதான் வெளி வரும். பள்ளி நிர்வாகம் மெத்தனமாக நடந்து கொண்டது என்பது விசாரணையில் தெரியவந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நானும் வலியுறுத்துகிறேன். அதற்கு முன்னால் அலறுவதைத்தான் அப்பட்டமான நாஜி வெறிக் கூச்சல், பிராமணர்கள் மீது இருக்கும் அடிப்படை வெறுப்பினால் எழுவது என்று நான் சொல்கிறேன்.
இனி பத்மா சேஷாத்திரி பள்ளியை அரசுடைமை ஆக்குவது பற்றி.
என்னைக் கேட்டால் எல்லாப்பள்ளிகளையும் அரசுதான் நடத்த வேண்டும் என்று சொல்லுவேன். ஆனால் அது நடைமுறைக்கு ஒவ்வாது என்பது எனக்குத் தெரியும். என் கருத்தை மக்கள் மீது திணிக்க முடியாது என்பதும் எனக்குத் தெரியும். மேலும் பள்ளி தங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஓரளவு ஏற்ப நடந்து கொள்கிறதா என்பதைத் தீர்மானிப்பவர்கள் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள். எனவே பதமா சேஷாத்திரி பள்ளி சரியாக நடக்கிறதா இல்லையா என்பதை அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களிடம்தான் கேட்க வேண்டும். அவர்களிடம் மட்டும் இல்லை, தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பும் எல்லாப் பெற்றோர்களையும் கேட்க வேண்டும்.
உண்மையாகவே சரியாக நடத்தப்படாத பள்ளிகளை அரசுடைமை ஆக்கப் படவேண்டும் வேண்டும் என்று அரசு நினைத்தால், ஒவ்வொரு தனியார் பள்ளிகளின் படிக்கும் குழந்தைகளின் தாய் தந்தையரிடம் அப்பள்ளியை அரசுடைமை ஆக்க வேண்டுமா வேண்டாமா என்பதைக் குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும். பெரும்பான்மையான தாய் தந்தையர் அவ்வாறு நினைத்தால் மட்டுமே பள்ளிகள் அரசுடைமை ஆக்கப்பட வேண்டும். இது பத்மா சேஷாத்திரி பள்ளிக்கும் பொருந்தும். மற்றைய தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும்.
பத்மா சேஷாத்திரி மட்டும் குறி வைத்து அதை மட்டும் அரசுடைமை ஆக்க வேண்டும் என்ற நிலைப்பாடுதான் நாஜி நிலைப்பாடு. இதை எந்த வெட்கமும் இன்றிச் செய்துக் கொண்டிருப்பவர்களை திராவிட நாஜிகள் என்றுதான் அழைக்க முடியும். இவர்களுக்கு வக்காலத்து வாங்கும் மார்க்சியர்களை மண்ணாங்கட்டி மார்க்சியர்கள் என்றுதான் அழைக்க முடியும்.
This is what I propose to do
I stopped posting on Facebook for three reasons:
I found that I was being regularly trolled by fanatics and half-wits ( of Dravidian, Hindutva and margarine Marxist varieties) and it was impossible to make them see reason. Yes, there are several other persons who read my posts and find them reasonable, but even they get confused in the cacophony. I was dreadfully behind schedule in fulfilling several things I promised to myself and to others. – for instance, I wanted to revise my novel which had remained unattended for several months and I had promised that I would deliver a series of lectures on Western Philosophy in Tamil. My reading had taken a terrible beating. I used to read at least one book in three days but during the last year or so I had hardly read anything worthwhile.I have now decided that I will devote my Sunday mornings to the events of the previous week which I consider are important and write my views on them – either in English or Tamil – and post them here, which I will share on my Facebook page.
May 22, 2021
பெருமாள் முருகனின் கவிதை
“
பஞ்சமர் என்றீர்கள்
சூத்திரர் என்றீர்கள்
வேசி மக்கள் என்றீர்கள்
வைப்பாட்டி பிள்ளைகள் என்றீர்கள்
கீழ்மக்கள் என்றீர்கள்
உங்கள் மொழியில் எத்தனை வசவுகள்
உங்கள் மொழி நாகரிகமற்றது
உங்கள் மொழி ஆபாசமானது
உங்கள் மொழி கேவலமானதுஉங்கள் மொழியை
ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது
இன்று என் சகோதரன்
கோபக் கணமொன்றில்
உங்களை நோக்கி
உங்கள் குரைக்கும் தன்மை கண்டு\
‘நாய், வெறிநாய்’ எனக் குறிப்பிட்டான்
உங்கள் மொழி இழிவானது
உங்களை நோக்கிக்கூட
உங்கள் மொழியை
ஒருபோதும் பயன்படுத்தக் கூடாதுதான்
ஆனால் எங்களுக்கோ
அப்படி ஒரு மகிழ்ச்சி
அப்படி ஒரு துள்ளல்
அப்படி ஒரு சமாதானம்
சகோதரன் முகத்தில் தெரிந்தது
வரலாற்றுக் கோபம் அல்லவா?”
‘
இது பெருமாள் முருகனின் கவிதை.
அப்படியா?
வரலாற்றுக் கோபத்தை யார் மீது வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம். அதாவது முன்னோர்களை இழிவு படுத்தினார்கள் என்று இவர் நினைக்கும் சாதியில் பிறந்த அனைவர் மீதும் வெளிப்படுத்தலாம் என்பதைக் இக்கவிதை தெளிவாக்குகிறது. காலச்சுவடு கண்ணன், இவர் புத்தகங்களை மொழிபெயர்த்து உலகமறியச் செய்த அனிருத்தன் வாசுதேவன், கல்யாண் போன்றவர்கள் மீதும் வெளிப்படுத்தலாம்.
உங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சி, துள்ளல், இருக்கும். ஏனென்றால் உங்கள் கோபம் வரலாற்றுக் கோபம். என்ன, வெளிப்படையாக இது போன்று கவிதை எழுத முடியாது. அவ்வளவுதான்.
இதே போன்ற வரலாற்று நோக்குடைய இந்துத்துவர் இஸ்லாமியரைக் குறித்து கவிதை எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம்
உங்கள் செயல் இழிவானது
உங்களை மீது
உங்கள் செயலை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாதுதான்
ஆனால் எங்களுக்கோ
அப்படி ஒரு மகிழ்ச்சி
அப்படி ஒரு துள்ளல்
அப்படி ஒரு சமாதானம்
சகோதரன் முகத்தில் தெரிந்தது
வரலாற்றுக் கோபம் அல்லவா?”
இப்படி இஸ்லாமியர்கள் மீது இந்துத்துவர் எழுதினாலும் அதை எதிர்த்துப் பேச இக்கவிதையைத் தூக்கிப் பிடிப்பவர்கள் யாருக்கும் தகுதியில்லை. பெருமாள் முருகனுக்கும் தகுதியில்லை. இவர் நாவலை எதிர்த்து சாதியைத் தூக்கிப் பிடித்துப் போராடியவர்களுக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் தங்கள் சாதியை தாங்குகிறார்கள். இவர் இனவெறியைத் தாங்குகிறார். அவ்வளவுதான். வரலாற்றுக் கோபம் என்பதெலாம். புருடா. அது இனவெறி அம்மணத்தை மறைத்து கொள்ள உதவும் என்று அவர் நினைக்கும் கோவணம். அது எதையும் மறைக்கவில்லை.
ராஜாவை இந்துத்துவ வெறியராக அடையாளப்படுத்துவதும் அவரை பிராமணராக அடையாளப்படுத்துவதும் வேறு என்று தெரியவிட்டால் மலினமான் திராவிடச் சண்டியருக்கு இருக்கும் புரிதல்தான் பெருமாள் முருகனுக்கு இருக்கிறது என்பதில் எந்த ஐயமும் இருக்காது. அதிலும் திரு தியாகராஜன் மிகப் பெரிய நிலவுடமைச் சமூகத்திலிருந்து வந்தவர். இவருடைய முன்னோர்கள் பஞ்சமர்களையும் உழைக்கும் இதர ஒடுக்கப்பட்ட சாதிகளையும் எப்படி நடத்தியிருப்பார்கள் என்பதைப் பற்றி நான் சொல்லத் தேவையேயில்லை. எனவே இது வரலாற்றுக் கோபம் அல்ல. மனதிற்குள் கனன்று கொண்டிருந்த இனவெறி இன்று திமுக அரசு வந்ததும் வெளியில் வருகிறது. அவ்வளவுதான்.
பெருமாள் முருகனுக்கு ஒரு பரிந்துரை. இக்கவிதையை திரு கிருஷ்ணா அவர்களைப் பாடச் சொல்லி பதிவு செய்யுங்கள். திராவிடக் கழக, திராவிட முன்னேற்றக் கழகப் பிரச்சாரக் கூட்டங்களுக்குப் பயன்படும். பெரியாரின் அழித்தொழிப்புப் பிரச்சார ஒலிநாடாவுடன் இசைந்து ஒலிக்கும்.
February 21, 2020
The Joy of Admiring a Ravi Varma
We have in our Delhi flat a small, strange, black & white print of Krishna titled ‘Shri Krishna in Om’. There is nothing remarkable about this print, except that, on the right side of the picture, at the bottom, there is a legend which says: ‘S S Brijbasi & Sons, Bunder Road, Karachi.’ On the left side, you can read, if you look carefully, the words, ‘Made in Germany.’ Add to this information the fact that the print was accidentally discovered by my wife, when she was rummaging through her mother’s old cup-board in Tirunelveli, and you have before you some delicious nuggets of history.
That this print is at least of pre-independence vintage there is little doubt, but it must also be pre- World War II. The British were traders all right, but surely they weren’t trading with the Germans when the Luftwaffe was flattening the British towns. Brijbasi & sons must have doing roaring business in Karachi as their prints were selling in such southerly places as Tirunelveli. Just for fun, I googled their name and I found an oleograph from them on sale for the grand sum of $125. The oleograph that I have wouldn’t fetched me this much as it is in black and white. And it is not as maudlin as the ones usually preferred by pious housewives.
More than all this, it is not a Ravi Varma.
Ravi Varma is justly famous for the unique Indian world he had created through his grand, opulent paintings of Indian legends. As A Ramachandran says in his brilliant essay on Ravi Varma, he represented them in his paintings as frozen moments of literary descriptions like Shakuntala stealing a glance at Dushyanta, pretending to remove a thorn from her feet. Even though he borrowed his vocabulary from European art, his language acquired a distinct south Indian flavour as if an educated south Indian was narrating the Indian stories in English with south Indian accent.
One of the perennial joys of admiring a Ravi Varma is to observe the dress of the women he had painted. For instance, there is a grand painting of his in the Mysore art gallery titled Jatayu Vadham – the slaying of Jatayu. Unlike his usual, staid, stationary paintings, this one is full of movement. Ravana’s left hand is around the waist of Sita. In his right hand is a sword which swings backwards after cutting one of the wings of Jatayu. It is about to descend again on the hapless bird. The air is breathing menace and spewing feathers. Sita doesn’t want to witness this ignominy. Her face is not fully visible. Her hands are, which are full of purple bangles. She is wearing a lovely mango-coloured sari and a bright red jacket with a zari border. Ravana is not abducting the ancient Sita. He has in his vile grasp, an innocent south Indian housewife.
There is another painting of his that greatly amuses me. Rama has just broken the famed Siva’s bow. The king Janaka watches his future son-in-law with surprise and, perhaps, joy. But what I love in this paint is not the act of valor but the building that frames King Janaka and his attendants. With arches and a half-hidden dome, it is pure Mughal.
The street where I lived as a young boy was full of Brahmins. Their houses always had scores of bright Ravi Varmas adorning the wall. The one that loved most was the one depicting the descent of Ganges on the flowing tresses of Siva and disappearing in them. I desperately liked to possess this print. The problem was not that it was expensive. I could get it free from a friend whose father was rearranging the wall-portraits of his rather capacious house. The problem was with my household. Ours was a pure Vaishnava family where the act of adoring the wall of your hall with a picture of Shiva would be considered a cardinal sin – at least by my rather stern, hectoring grandmother. With my father’s silent consent, I worked out a compromise. I hung the picture on the wall of my room upstairs, away from the prancing eyes of my grandmother.
Years later, I was visiting Penang. My host who took me an incredibly beautiful temple dedicated to Lord Subramania. It was like visiting a rich Chettinadu house, with raised platforms to relax in the front and long corridors that led to the sanctum sanctorum. The corridors had some sinuous pillars supporting the roof (wooden, if I remember correctly) and in the space that covered the walls that rose up to meet the roof hung row after row of Ravi Varma oleographs.
Yes, he was there. The majestic Siva with flowing locks. He took me back to my uncompromising grandmother.
P.Ananthakrishnan
P.A. Krishnan's Blog
- P.A. Krishnan's profile
- 18 followers

