இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 18

March 12, 2025

இருமொழி போதும்தானே என்று வாக்கெடுப்பு நடத்தினால் என்ன?

 

தமிழ்நாட்டில் ஏறத்தாழ 15 லட்சம் குழந்தைகள் CBSE வழியில் படிப்பதாக அமைச்சர் மகேஷ் சார் வழியாக அறிய முடிகிறது

இந்தக் குழந்தைகளிடம் இருமொழி போதும்தானே என்று வாக்கெடுப்பு நடத்தினால் என்ன?

12.03.2025

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 12, 2025 08:28

”மழை உங்களுக்கு ஒத்துக்காதா சார்?”

 

நேற்று தோழர் இ.தாஹிர் பாட்சா அவர்களின் அப்பாவை இறுதியாக வழியனுப்பி வைப்பதற்காகப் போயிருந்தோம்மழைகுடைக்குள் இருப்பதில் கவனமாக இருந்த என்னைப் பார்த்த நண்பர் கேட்டார்”மழை உங்களுக்கு ஒத்துக்காதா சார்?””செவிட்டு மிஷினுக்கு ஒத்துக்காதுங்க சார்”மருத்துவர் கருணாகரன் நிமிர்ந்து என்னைப் பார்க்கிறார்“இதில் ஒன்றும் இல்லை தோழர். ஆனால், கேட்காதபோது நிறைய அவமானப்பட்டிருக்கிறேன் .” என்கிறேன்.கண்கள் கசிந்தனதான். யாரும் பார்க்கவில்லை என்பது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.என்னை இழுத்துப் போய் மருத்துவரிடம் காட்டி மிஷினை மாட்டி கேட்கச் செய்த Kalai Mani மற்றும் தோழர் கணேசிற்கும்அதுவரை எனக்கு கேட்கவேண்டும் என்பதற்காக சத்தமாகப் பேசி சிரமப்பட்ட அனைவருக்கும் அன்பு
12.03.2025LikeCommentShare
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 12, 2025 01:11

March 11, 2025

இந்தியாகூட சாதிக்கலாம் ஆனால் …

 

ட்ரம்ப்தனது நண்பர் என்று மோடியும், மோடி தனது நல்ல நண்பர் என்று ட்ரம்ப்பும் அவ்வப்போது சொல்லிக்கொள்வது வாடிக்கைதான். ட்ரம்ப் போகிறபோக்கில் இதை சொல்லிவிட்டோ கேட்டுவிட்டோ கடந்து போய்விடுகிறார்.

 

ஆனால்மோடியைத் தனது நண்பரென்று எப்போதாவது ட்ரம்ப் சொல்லும்போதெல்லாம் அதைக் காசு செலவு செய்து விளம்பரப்படுத்தியாவது கொண்டாடித் தீர்த்துவிடுகிறார்கள் மோடியும் அவரது பரிவாரக் கூட்டமும்.

 

அவர்இவரையோ, இவர் அவரையோ நண்பா என விளித்துக்கொண்ட ஒவ்வொரு பொழுதிலும் அதற்கு விலையாக இந்தியா இழந்திருப்பது அதிகம்.

 

கொரோனாகாலத்தில்கூட இப்படியொரு விளித்தலுக்குப் பிறகு தனது நண்பரை மிரட்டி கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்டார் ட்ரம்ப். இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டிற்கு போதிய ஊசி மருந்துகளை வழங்க மறுத்தது மட்டுமல்ல நாங்களே ஊசி மருந்துகளை தயாரித்துக்கொள்கிறோம் என்று தமிழ்நாடு அரசு கேட்டபோது அதையும் மறுத்தவர் மோடி. மோடிக்கும் ட்ரம்ப்பிற்கும் இடையிலான நட்பின் அன்றைய விலை இது.

 

இந்தமுறைஅதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகும் ஒருமுறை மோடியை இப்படியாக விளித்தார் ட்ரம்ப். அந்த விளித்தல் மோடியை வந்தடையும் முன்பாகவே ’உலகிலேயே அதிகமாக வரி விதிக்கும் நாடு இந்தியா’ என்றும் கூறினார்.

 

பரவசமடைந்தமோடி அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் ஒரு வகை விஸ்கிக்கு ஐம்பது விழுக்காடு வரியைக் குறைத்தார்.

 

வெறிகொண்டமதப் பழமைவாதத்திலும் வெறுப்பை விதைப்பதிலும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஒருபோதும் சளைத்தவர்கள் அல்ல. இவருக்கு அகண்ட பாரதம் என்றால் அவருக்கு காசாவை அழித்து அதை அமெரிக்காவின் கேளிக்கை நகரமாக்க வேண்டும்.

 

2014 இல் பிரதமரானதும் தடாலடியாக மோடி அறிவித்தவற்றுள் ஒன்று ’இந்தியாவில் தயாரிப்போம்’ என்பது. “Make in India” என்பதை அவர்கள் ஏதோ யாருக்குமே யோசிக்க வாய்க்காத கருத்து என்பதுபோல் கொண்டாடித் தீர்த்தார்கள்.

 

நமதுவரிப்பணத்தில்ஒரு பகுதியை இந்த மூன்று வார்த்தைகளே இந்தியாவின் வெற்றி என்பதுபோல் மக்களிடம் இதைக் கொண்டுபோய் சேர்க்க படாதபாடு பட்டார்கள்.

 

இந்தவார்த்தைகள் ட்ரம்ப்பை ஏதோ ஒரு வகையில் ஈர்த்திருக்க வேண்டும். இந்தமுறை பதவியேற்றதும் ‘அமெரிக்காவில் தயாரிப்போம்’ என்று அவர் கூறினார். ஆனால் “Make in America” என்ற வார்த்தைகளின் கோரிக்கையை வெறுமனே மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று மோடியைப்போல அவர் மெனக்கெடவில்லை. மாறாக, தொழிலதிபர்களின் மாநாட்டைக் கூட்டினார்.

 

எவ்வளவுவேண்டுமானாலும்வரிச்சலுகைகளைதருவதாகவும் முதலீடுகளை அமெரிக்காவில் செய்யவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். அதே நேரம் இதில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்றும் கூறிக்கொண்டார். ‘அப்பாடா’ என்று முதலீட்டாளர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்குக்கூட அவர் அவகாசம் தரவில்லை.

 

நீங்கள்சீனா உள்ளிட்டு எங்கு வேண்டுமானாலும் முதலீடு செய்துகொள்ளலாம். ஆனால் அங்கு தயாரிக்கப்பட்டு அமெரிக்காவிற்குள் இறக்குமதியாகும் பொருட்களுக்கு எத்தனை மடங்கு வரி இருக்கும் என்று தன்னால் உறுதியாகக் கூறமுடியாது என்றார்.

 

இந்தவிஷயத்தில் மோடிக்கும் ட்ரம்ப்பிற்கும் இடையேயுள்ள வேறுபாடு ட்ரம்ப்பின் இந்த மிரட்டல்தான். முதலீட்டாளர்கள் என்றால் இந்த மிரட்டல் இருக்காது மோடியிடம், அப்படியே விழுந்துவிடுவார்.

 

மோடி‘Make in India’ முழக்கத்தைவைத்து பதினோரு ஆண்டுகளாகின்றன. இந்த முழக்கம் இந்தியாவில் சாத்தியப்படவில்லை. இன்னும் பத்து ஆண்டுகள் கடந்தாலும் வாய்ப்பில்லை என்றே படுகிறது. அமெரிக்காவிலும் இதற்கான வாய்ப்புகள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்

 

முதலீடுகடந்து தொழில் உற்பத்திக்கு மிக அவசியமானது தொழில் செய்வதற்கான மனித வளம். இது இந்தியாவில் கணக்கற்றுக் கிடக்கிறது. பொதுவாக பதினெட்டிற்கும் அறுபத்தி நான்கிற்கும் (18-64) இடைப்பட்ட காலமே உழைக்கும் திறன்கொண்ட வயது என்று 04.01.2025 அன்றைய தனது தமிழ் இந்து கட்டுரையில் கூறுகிறார் திரு மு.ராமனாதன்.

 

இரண்டாயிரத்திற்கும் இரண்டாயிரத்தி இருபத்திஐந்திற்கும் இடையேயான இருபத்தி நான்கு ஆண்டு காலத்தில் இந்த வயது கொண்டோரின் எண்ணிக்கை விகிதாச்சாரம் சீனாவில் கணிசமாகக் குறைந்துள்ள நிலையில் இந்தியாவில் இந்த வயதினரின் விகிதாச்சாரம் குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்கு வளர்ந்திருப்பதாகவும் அவர் அந்தக் கட்டுரையில் கூறுகிறார். .

 

பதினெட்டிற்கும் அறுபத்திநான்கிற்கும் இடைப்பட்ட இன்றைய உழைக்கும் இந்தியர்களின் விகிதாச்சாரம் அறுபத்தி நான்கு என்கிறார். நூறு பேரில் அறுபதுபேர் உழைக்கத் தயாராக இருக்கிற மக்களைக் கொண்ட நாடு இந்தியா என்பது எத்தகைய வரம்.

 

இதைவிடவும்இன்னுமொரு பெரிய வரம் இந்தியாவில் முதலீடு செய்பவர்களுக்கு உண்டு. உலகிலேயே மிகக் குறைவான கூலிக்கு தயாரக இருக்கக்கூடிய உழைப்பாளர்களைக் கொண்ட நாடு இந்தியா.

 

இன்னுமொருகொசுறான வரமும் இந்தியாவில் உண்டு. அது அத்தனையையும் முதலீட்டாளர்கள் சுரண்டிக்கொண்டு போவதையும் புன்னகையோடு வேடிக்கைப் பார்க்கும் அரசு இந்தியாவில்.

 

முதலீடுகளுக்கான இத்தனைசாதகமான சூழல் இந்தியாவில் இருக்கும்போது ‘இந்தியாவில் தயாரிப்போம்’ வெற்றிபெறாது என்று சொல்வது பைத்தியக்காரத்தனமானது அல்லவா என்று ஒரு கேள்விக்கான வாய்ப்பு இருக்கிறது. இதற்கான காரணங்கள் சிலவற்றையும் அதே கட்டுரையில் வைத்திருக்கிறார் மு.ராமனாதன்,

 

1)  சாலைகள்தரமாக இல்லை
2)  கல்விதரமாக இல்லை
3)  பாலங்கள்தரமாக இல்லை
4)  ரயில்கள்தரமாக இல்லை
5)  துறைமுகங்கள்தரமாக இல்லை
6)  தரமானதண்ணீர் இல்லை

 

இந்தப்பட்டியலில் சிலவற்றோடு நமக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனாலும் இந்தப் பட்டியலோடு ஊழியர்களின் நலன் மற்றும் திடம் ஆகியவற்றில் நமது அதிகப்படியான கவனத்தை செலுத்த வேண்டும்

 

இதைவிடமிக முக்கியமான இந்தியாவில் உள்ள பெரிய சிக்கல் ஒன்றிய அரசும் மதவாதிகளும் தொடர்ந்து ஏற்பாடு செய்துகொண்டிருக்கக் கூடிய மத மற்றும் ஜாதி மோதல்கள்.

 

மேற்சொன்னபட்டியலை சரிசெய்வது ஒன்றும் கடினமான காரியம் இல்லை. அதற்கான ஒரு அரசை மக்கள் தேர்ந்தெடுத்து விட்டால் இவற்றை சரி செய்துவிடலாம். அப்படி ஒரு அரசை அமைப்பதற்கான இயக்கம் கட்டமைக்கப்பட்டால் ’இந்தியாவில் தயாரிப்போம்’ சாத்தியமானதுதான்.

 

மேற்சொன்னபட்டியலில் காணும் குறைகளில் பெரும்பகுதி அமெரிக்காவில் இல்லை என்பது உண்மைதான். ஆனாலும் ‘அமெரிக்காவில் தயாரிப்போம்’ சாத்தியமில்லைதான்.

 

அங்குபோதுமான உழைக்கும் மனித வளம் இல்லை. அமெரிக்காவிற்குள் எப்படியேனும் நுழைந்துவிட்டால் போதும் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு அமெரிக்காவில் நுழைந்துவிட்ட ஒரு பெருந்திரள் இருக்கிறது. இவர்கள் சட்டத்திற்கு புறம்பாக எந்தவிதமான உரிய ஆவணங்களும் இன்றி அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்கள்.

 

ஆனால்இவர்கள் அமெரிக்க இனத்தவரைப்போல் இல்லாமல் உழைப்பதற்கான உடல் தகுதியோடும் உழைப்பதற்கு தயாராகவும் இருப்பவர்கள்.

 

அமெரிக்காஇவர்களுக்கு உரிய விசாவை வழங்கி பயிற்சியைக் கொடுத்து பயன்படுத்தி இருந்தால் அமெரிக்காவிலும் தயாரித்திருக்க முடியும்.

 

அந்தஉழைக்கும் திறன் கொண்ட இளைய சக்தியை கைகளில் விலங்கிட்டு கால்களை சங்கிலியால் பிணைத்து விலங்குகளை லாரிகளில் ஏற்றுவதுபோல விமானங்களில் ஏற்றி அந்தந்த நாடுகளில் கொண்டுவந்து கொட்டிவிட்டு போயிருக்கிறது.

 

இனிஇப்படி ஒரு உழைக்கும் திரளை அமெரிக்காவிற்குள் கொண்டு வருவதற்கு அமெரிக்கா படாதபாடு படவேண்டும். போகவும் உக்ரைன், சீனா உள்ளிட்ட ட்ரம்ப்பின் செயல் திட்டங்களைக் காணும்போது இதற்கெல்லாம் அவருக்கு நேரம் இருக்கும் என்றே தோன்றவில்லை

 

n புதிய ஆசிரியன்
மார்ச் 2025

 


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 11, 2025 21:26

March 10, 2025

அதுவும் மீதம் இருந்தால்தான்

 

திருமணங்களில் உணவு பறிமாறும் பிள்ளைகளிடம் கொஞ்சம் அன்பாக நடந்துகொள்வோம்அவர்களில் நிறையபேர் கல்லூரி குழந்தைகள்இரண்டு அல்லது மூன்றுவேளை சாப்பாடுஅதுவும் மீதம் இருந்தால்தான், இருப்பதுதான் பல இடங்களில் போக, 300 இல் இருந்து 400 ரூபாய் ஊதியம்பேண்டில் ஏற்படும் சாம்பார் கறையைத் துவைக்கவே அவர்கள் சிரமப்பட வேண்டும்இலை போடுவதில், பறிமாறுவதில் ஏதேனும் குறை இருப்பின் கொஞ்சம் கனிவோடு நடந்து கொள்வோம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 10, 2025 04:31

அமைதியை குலைத்தால் ...

 

01.05.1924 அன்று திருவனந்தபுரத்தில் குஞ்சு கிருஷ்ணாபிள்ளை அவர்கள் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ”எடபாடம்” என்ற ஒரு ஊரைக் குறித்து பேசுகிறார்

அந்த ஊர் முழுமையான காங்கிரஸ் ஊர்

முழுமையான கதர் கிராமம்

யாரும் மது அருந்துவதில்லை

காவலர்கள் மட்டுமே மதுக்கடைக்கு போகிறார்கள்

யாரும் ஒருவரோடு சண்டை போடுவதில்லை

அஹிம்சையைக் கடைபிடிக்கும் அமைதியான ஊர்

மது விற்பனை ஆகாதது சிலரை உறுத்துகிறது

காரணத்தை அலசுகிறார்கள்

அமைதியை குலைத்தால் மது ஊருக்குள் வந்துவிடும் என்று உணர்கிறார்கள்

ஒரு அடாவடியான காவலரை அந்த ஊருக்கு மாறுதலில் அனுப்புகிறார்கள்

அவர் அந்த ஊரின் பழைய முரட்டு மனிதன் ஒருவரிடம் வம்பிழுக்கிறார்

அவர் காவலரை பிய்த்து எடுக்கிறார்

காவல்துறை ஊரை சூறையாடுகிறது

ஊர் பழையபடி கலவர பூமி ஆகிறது

இதை சொல்லி வைக்கம் யுத்தத்தை கலவரத்திற்கு இடம் கொடுக்காமல் அமைதியாக நடத்த வேண்டும் என்கிறார் பெரியார்

ஆமாம் எடப்பாடம் எங்கு இருக்கிறது?

09.03.2025

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 10, 2025 01:16

March 8, 2025

”அது எப்படி பள்ளி நகரும்” என்றுகூட

 

"instead, the school should go to the student"என்று மார்த்தி சொன்னதாகப் படித்திருக்கிறேன்“மாறாக, பள்ளி குழந்தையை நோக்கி நகர வேண்டும் என்று இதை தமிழில் கொள்வது சரியாக இருக்கும்"the school should go to the student" என்றால் பள்ளி குழந்தையை நோக்கி நகர வேண்டும் என்று பொருள்"instead, the school should go to the student" என்றால் ”மாறாக, பள்ளி குழந்தையை நோக்கி நகர வேண்டும்” என்றாகிறது முன்னது கட்டமைப்பதற்கான கோரிக்கைபின்னது இருக்கிற கட்டமைப்பை மாற்றுவதற்கான கோரிக்கைஇருக்கிற கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்றால்,இருப்பதில் பிழை இருக்கிறது என்று பொருள். குறைந்தபட்சம் போதாமை இருக்கிறது என்றாவது கொள்ளவேண்டியத் தேவை இருக்கிறதுஎனில்,முன்னதைவிடவும் பின்னதில் அதிக கவனம் கொள்ளப்பட வேண்டும் என்றும் பொருள்எந்தக் குழந்தையையும், எக்காரணத்தைக் கொண்டும் விடுபடாமல் பள்ளிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதைத்தான் எல்லோரும் தங்கள் தங்கள் மொழியில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்The purpose of education is to include the excluded" என்றுதான் அமைப்புகளேகூட சிந்திக்கின்றனஆனால் ,மாணவனை நோக்கி பள்ளி வரவேண்டும் என்று மார்த்தி கூறுவது பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கலாம்சில புத்திசாலிகள் கிண்டல் செய்யக் கூடும்”கல்வி என்ன அவ்வளவு சல்லிசா போச்சா?”என்று சிலர் கொதிநிலையின் உச்சத்திற்கே போகக் கூடும்“”மலைவாழை அல்லவோ கல்வி -நீவாயார உண்ணுவாய் போ என் புதல்வி”என்று பாரதிதாசனேகூட குழந்தையைத்தானே பள்ளிக்குப் போகச் சொன்னார் என்றுகூட கூறலாம்ஆமாம், உண்மைதான்மார்த்தி பள்ளிக்கூடம் என்ற கட்டிடத்தை நகரக் கோரவில்லைபள்ளி என்கிற கட்டுமானத்தை நகரச் சொல்கிறார்மார்த்தி சொன்ன ஆழத்தில்கூட இதை அணுக வேண்டாம். கொஞ்சம் கருணையோடு இப்படி அணுகவே கோருகிறோம்பள்ளிக்கு செல்லும் வயதுடைய குழந்தைகளை எப்பாடு பட்டேனும் பள்ளிக்கு கொண்டு வரவேண்டும்தான்ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் பள்ளிக்கு வரவே முடியாதவனை என்ன செய்யலாம்?எக்கேடோ கெட்டுப் போகட்டும் என்று விட்டுவிடலாமா?அவனுக்கு ஏதோ ஒரு வகையில் கல்வியைக் கொண்டுபோக வேண்டாமா? என்பதைத்தான் மார்த்தி இப்படிக் கூறுகிறார்இளமதி கூறிய ஒரு செய்தி என்னை அந்த இடத்திலேனும் குறைந்தபட்சம் மார்த்தியின் இந்த கோரிக்கையைப் பொறுத்திப் பார்க்கக் கூடாதா என்று ஆதங்கப்பட வைத்ததுஅப்போது நடந்துகொண்டிருந்த மேல்நிலைப் பொதுத் தேர்விற்கு ஒரு பள்ளியில் ”சொல்வதை எழுதும்” பணிக்கு இளமதி அமர்த்தப் பட்டிருக்கிறாள்தேர்வினை எழுத இயலாதபடிக்கு உடல் பாதிப்பு உள்ள குழந்தைகள் கூறுவதைக் கேட்டு இவர்கள் அந்தக் குழந்தைகளுக்காகத் தேர்வெழுத வேண்டும்ஒரு பார்வையற்ற குழந்தைக்கு தேர்வெழுதும் பணி மதிக்குஅந்த தேர்வு மையத்தில் ஏறத்தாழ 20 கும் மேற்பட்ட பார்க்கும் திறனற்ற குழந்தைகள் தேர்வெழுத வருகிறார்கள்அந்தக் குழந்தைகள் படிக்கும் பள்ளி 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறதுகுறைந்த பட்சம் இதுமாதிரிக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு தேர்வறைகளைக் கொண்டுபோகக் கூடாதா?
09.03.2025
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 08, 2025 20:10

வணங்குவதற்கு எங்கள் வீட்டிலேயே ஒரு பிள்ளை

 

நந்தலாலாவின் உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு வந்து கீழே அமர்ந்திருக்கிறோம்அப்போது அந்தப் பக்கமாக வந்த தோழர் இளங்குமனை அழைக்கிறாள் கலைமணி வருகிறார்நாளைக்கு ஏதேனும் சடங்குகள் உண்டா என்று கேட்கிறாள்தலைமாட்டில் விளக்குகூட ஏற்றப்படவில்லைஎந்தச் சடங்கும் இருக்காதுதான்ஆனாலும் பிரச்சினை வராதமாதிரி தோழர் பதில் சொல்லவேண்டுமே என்று பயம் தொற்றிக் கொண்டதுகாரணம் ஏதேனும் சடங்கு இருப்பதாக சொன்னால் விடமாட்டாள்நாளை இங்கு ஒரு இரங்கல் கூட்டம் வேறு சடங்கு இல்லை தோழர் என்ற பதிலில் "அப்பாடா" என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவற்குள்அநேகமா அவரது மாப்பிள்ளை கொள்ளி வைப்பார்போல என்றார்போல என்றுதான் சொன்னார்பிடித்துக் கொண்டாள்ஏன் பாரதியோ நிவேதியோ கொள்ளி வச்சா வேகாதா என்றதோடு விடவில்லைபோய் பேசுங்க தோழர் என்கிறாள்ஏம்பா அவங்க முடிவில்லையா என்றால்எனில் இது தப்பான முடிவென்கிறாள்எங்கும் எதுகுறித்தும் கவலை கொள்ளாமல் பயமற்று எதிர்வினை செய்வாள்ஆனால் எந்தவொரு சிறு சடங்கும் இல்லாமல் நந்தலாலாவின் இறுதி வழியனுப்பு நிகழ்ந்ததுஇன்று மகளிர் தினம்வணங்குவதற்கு எங்கள் வீட்டிலேயே ஒரு பிள்ளைவணக்கம் கலை
08.03.2025
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 08, 2025 19:07

March 7, 2025

எப்போதுமான என் ஆசை

 


எப்போதுமான என் ஆசையும்நான் எல்லோரிடமும் சொல்லி வந்ததும்"வேணா பாருங்க, என் மரணத்தன்று அண்ணன் வெடித்து அழுவான்"இப்படி செஞ்சுட்டியே
07.03.2025





 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 07, 2025 09:42

ஒன்றிய அரசை தற்காப்பாட்டத்தை நோக்கித் தள்ள வேண்டும்

 

இந்தித் திணிப்பின் கயமை குறித்தும்தாய்மொழிகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும்இந்தித் திணிப்பை எதிர்த்து ஆங்கிலத்தை கையிலெடுத்ததன் காரணமாக தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் ஆங்கிலம் கற்றுக் கொண்டால் இந்தி மக்கள் பாய்ச்சசலைக் காணலாம் என்ற எதார்த்ததம் குறித்தும்இந்தியா முழவதும் நாம் பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டும்இந்தி போதாது எங்களுக்கு ஆங்கிலம் கொடு என்று இந்தி மக்களிடம் கையெழுத்து இயக்கத்தை தொடங்க வேண்டும்நாங்கள் பிழைப்பதற்கு தமிழ்நாடுதான் போகவேண்டும்ஆகவே எங்களுக்கு தமிழைச் சொல்லிக்கொடு என்று அந்த மக்களை கேட்கச் சொல்ல வேண்டும்ஒன்றிய அரசை தற்காப்பாட்டத்தை நோக்கித் தள்ள வேண்டும்
07.03.2025
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 07, 2025 09:05

March 4, 2025

எனக்கு அழவேண்டியதில்லை நீ

 




04.09.2024 தோழர் Babu Ganesan மகள் திருமண வரவேற்புஅன்று ஏதோ ஒரு அவசர வேலை இருந்ததுபாபுவிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறேன்காம்பவுண்டைத் தாண்டுவதற்குள் விரட்டிக்கொண்டுவந்த பாபு பிடித்து விடுகிறார்நந்தலாலா உங்களை அவசியம் பார்க்கனுமாம். பிடித்துவைக்க சொன்னார் என்கிறார்அது கடைசி சந்திப்பு என்றோ, இதுதான் கடைசிப் படமென்றோ தெரியாதுண்ணேநிறையப் பேசினாய்வேலையைச் சொல்லி கிளம்பப் பார்த்தவனை “இரு, சாப்பிட்டுட்டு கிளம்பலாம் “ என்கிறாய் பக்கத்தில் இருக்க வைத்து சாப்பிட வைக்கிறாய்உன்னிடம் மட்டுமே சொல்வதற்கு சில என்னிடம் உள்ளனஎனக்குத் தெரியும்என்னக்கே எனக்கான சில சொற்களும் உன்னிடம் இருந்திருக்கும்எத்தனையோமுறை உனக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்து அழைத்துப் போனவனுக்குஉன் உடலுக்காக காத்திருக்க வலிக்கிறதுகிஷோர் திருமணத்தில் ஆனந்தத்தில் கலங்கினாய்எனக்கு அழவேண்டியதில்லை நீ
04.03.2025
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 04, 2025 01:01

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.