இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 14
April 2, 2025
03.2025
படித்தோரைபடித்த படிப்பிற்குபணி தேடித் திரிந்தோரைபணியில் அமர்ந்தோரைபணி தந்த ஊதியத்தில்சொகுசள்ளிப் புசித்தோரைகாதைத்திருகிகரம்பிடித்துஇடதிழுத்துபசித்தோரைபசிக்கான காரணத்தைஅறியாத எளியோரைநினைஅவனுக்காய்களமேகி உழை என்றுரைத்தஊனேஎங்கள் உயிரேசெங்கொடியேவைகை நீராடமாமதுரை போனவளேபார்க்க வாய்க்காமல்நான் போக வாய்ப்புண்டுபிள்ளைக்கும்பேரனுக்கும் வாய்க்காமல் போனாலும்என்எள்ளோகொள்ளோஇல்லைஅடுத்தடுத்து வருபவரோஉன்னை கோட்டை ஏற்றிவருங்காலம்காப்பார்கள்இன்குலாப்இன்குலாப்இன்குலாப்ஜிந்தாபாத்
02.04.2025
April 1, 2025
புல்டோசர் முன் நின்றபடி
அது சரி,
அவர்களுக்காச்சும் ஐகானா புல்டோசர் இருக்கு. உங்களுக்கென்னடா இருக்கு மாப்ள?
அவங்களுக்கு புல்டோசர் ஐகான் எனில் எங்களுக்கு
புல்டோசர் முன் நின்றபடி முடிஞ்சா இடிச்சுப் பாரென்று நின்று கர்ஜிக்கும் பிருந்தா படம்டா...
புல்டோசரை தங்களது கம்பீரத்தின் சின்னமாக
யோகி புல்டோசர் கொண்டு இடித்த ஐந்து வீடுகளுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது
ஐந்து வீடுகள்தானா
இல்லையெனில் கண்டுபிடித்து வழக்குத் தொடுக்க வேண்டும்
புல்டோசரை தங்களது கம்பீரத்தின் சின்னமாக பாஜக நினைத்தது
அடி விழுந்திருக்கிறது
65/66 காக்கைச் சிறகினிலே, மார்ச் 2025
பெரம்பலூர் புத்தகக் கண்காட்சி நிறைவுற்ற இரவு. நான், இந்திய மாணவர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் தோழர் ராமகிருஷ்ணன் மற்றும் திருப்பூர் தோழர் தங்கவேல் ஆகியோர் பாரதி புத்தகாலய ஸ்டாலில் அமர்ந்து கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்போது அங்கு இரண்டு நண்பர்கள் வருகிறார்கள். வந்தவர்கள் மிச்சப் புத்தகங்களைக் கணக்கெடுத்து பார்சல் செய்வதில் எங்களுக்கு உதவ ஆரம்பிக்கிறார்கள். வேலையினூடே ஆரம்பித்த உரையாடல் கணக்கெல்லாம் முடித்து பார்சல்களை ரெகுலர் சர்வீசில் ஒப்படைத்துவிட்டு தோழர் தங்கவேலு அவர்களை விடியற்காலம் பேருந்து ஏற்றிவிடும்வரை தொடர்கிறது.
ஆக, கிட்டத்தட்ட 26 ஆண்டுகள்சிறையில் இருந்த மனிதன்
இரண்டு ஆண்டுகள் தலைமறைவுவாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என்று கிடைக்கிற செய்திகள் எல்லாம் ஆர்வத்தைஅதிகப்படுத்துகின்றன.
March 31, 2025
அதை சொல்வதற்கான உரிமை நமக்கில்லை
அதிமுக பொதுச் செயலாளர் யார் என்பதை அதிமுகதான் முடிவுசெய்ய வேண்டும்
அதை சொல்வதற்கான உரிமை நமக்கில்லை
ஜெயலலிதா இறந்தது முதலே அதிமுகவை தன் கட்டுக்குள் கொண்டுவந்து கொஞ்சம் கொஞ்சமாக கபளீகரம் செய்வதற்கான முயற்சியில் பாஜக இறங்கியது
கிட்டத்தட்ட தன் கட்டுக்குள் கொண்டும் வந்துவிட்டது
தலைவர்கள் விலைபோய்க்கொண்டு இருக்கிறார்கள்
ஆனாலும் பாஜக உணராததும்
ஒரு போதும் அதனால் உணர்ந்து கொள்ள முடியாததுமான ஒன்று உண்டு
திமுகவோ அதிமுகவோ,
தொண்டர்கள் ஒருபோதும் விலைபோக மாட்டார்கள்
ஒரு கட்டத்தில் அவர்கள் விலை போன தலைவர்களைத் தூக்கி எறிந்துவிட்டு
தமக்கான தலைவனைத் தேர்ந்தெடுப்பார்கள்
31.03.2025
March 30, 2025
“போற்றா ஒழுக்கம்”
30.03.2025
பிஞ்ச செருப்பையும் ...
on this day பார்த்துக்கொண்டிருக்கிறேன்சென்ற வருடம் இதே நாளில்,“மொழி உணர்வை பிஞ்ச செருப்பைப் போலக் கழட்டிக் கிடாச வேண்டும்” என்று தனக்கே உரிய கேவலமான உடல்மொழியோடு அண்ணாமல் கூறியிருக்கிறார்சென்ற ஆண்டு அவருக்கு சொன்ன பதில்தான் இப்போதும்தமிழர்கள் பிஞ்ச செருப்பையும் ஒரு காரியத்திற்காகப் பயன்படுத்துவார்கள்வேண்டாம் அண்ணாமலை
இதுக்கு எதுக்குப்பா டில்லி போனீங்க
அமித்ஷாவை எடப்பாடி அவரது கோஷ்டியோடு சந்தித்தாராம்இப்போது செங்கோட்டையன் சந்தித்திருக்கிறாராம்ஸ்டாலின் அவ்வளவுதானாம்லூசுங்களா,அமித்ஷா பேரைச் சொன்னாலே தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொகுதியிலும் 1000 வாக்குகள் குறையும்அவரைச் சந்திக்க நினைத்தால் இன்னுமொரு 1000 வாக்குகள் குறையும்சந்தித்தால் இன்னுமொரு 1000 வாக்குகள் குறையும்அதுகுறித்து பெருமையாக பேசினால் இன்னுமொரு 10,000 வாக்குகள் குறையும்என்னமோ போனாங்களாம்அமித்ஷாவப் பாத்தாங்களாம் ....அட லூசுங்களாஇதுக்கு எதுக்குப்பா டில்லி போனீங்கஉங்க தெருவுலேயே யாராவது வீடு கட்டிட்டு இருந்தா அங்க போய் கொஞ்சம் மணலெடுத்துதலையில் போட்டுட்டு வந்திருக்கலாமே0 others
March 28, 2025
கற்றுக்கொள்ளத் தொடங்குங்கள் விஜய்
"மரம்வெட்டிக் கொண்டிருக்கிறார்கள்மரம்நடுவதற்காக "என்ற கவிதை எண்பதுகளில் ரொம்பப் பிரபலம்இந்தக் கவிதைக்கு நேற்றைய தவெக பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜுனா பொழிப்புரை எழுதினார்2026 தேர்தலில் மன்னராட்சியை ஒழித்துவிட்டு தங்களது மன்னரை ஆட்சியில் அமர்த்துவார்களாம்விஜய் இவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்காலம் நிறைய இருக்கிறதுகற்றுக்கொள்ளத் தொடங்குங்கள் விஜய்29.03.2025
வருடத்திற்கு 1000 கோடி எனில்
இன்று தவெகவின் பொதுக்குழு கூடியிருக்கிறது
அதன் முக்கியப் பொறுப்பாளர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது
வருடத்திற்கு 1000 கோடி ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்த தங்கள் தலைவர் அதை விட்டு விட்டு அரசியலுக்கு வந்திருப்பதாகக் கூறுகிறார்
மகிழ்ச்சி
நான் 30 விழுக்காடு வருமான வரி கட்டிக்கொண்டு இருந்தவன்
அதற்குமேல் இருக்கிறதா என்று தெரியவில்லை
வருடத்திற்கு 1000 கோடி எனில்
எப்படிப் பார்த்தாலும் வருடத்திற்கு 300 கோடி ரூபாய் வருமான வரி கட்டியிருக்க வேண்டும்
கட்டினாரா என்பதை அவர் பொதுவெளியில் நிறுவ வேண்டும்
அல்லது வருமான வரித்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆதவ் சொன்னது பொய் எனில்
இவர்கள் சொல்வதனைத்தும் பொய் என்பதை மக்களிடம் நாம் கொண்டுபோக வேண்டும்
28.03.2025
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)