இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 21
November 18, 2024
அத்தனை சாபங்களையும்…
எத்தனை பொய்கள்? எத்தனை அவதூறுகள்? எத்தனையெத்தனை சாபங்கள்? எந்தவிதமான உச்சவரம்பும் இல்லாமல், எந்தவிதமான வயதுவரம்புமில்லாமல், கூச்சநாச்சம் என்பதே கொஞ்சமும் இல்லாமல் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரப்பிக்கொண்டே இருந்தார்கள்.நன்றாக இயங்கிக்கொண்டிருந்த நோக்கியோ தொழிற்சாலையை தமிழ்நாட்டைவிட்டே விரட்டியது CITU என்றார்கள். தொழிலாளிகளின் பாதுகாப்பில் கவனமாக இருந்த ஃபோர்ட் தொழிற்சாலைக்கு மூடுவிழா நடத்தியது CITU என்றார்கள். இதைவிட உச்சம் என்னவென்றால் CITU மூடுவிழாவை நடத்தியதாக அவர்கள் சொன்ன சில தொழிற்சாலைகளில் CITU கிளையே இல்லை. அவர்கள் சொன்ன சில மூடுவிழாக்களின்போது CITU பிறந்திருக்கவே இல்லை.எல்லாவற்றையும்விட உச்சமாக CITU என்பது CPM கட்சியின் தொழிற்சங்கம் என்றும் எனவேதான் அவர்கள் சீனாவின் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக சாம்சங் தொழிற்சாலையை எப்படியேனும் மூடிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள் என்றும் கூறினார்கள்.வலைதளம் முழுவதும் CITU விற்கு எதிரான வசைகளாலும் சாபங்களாலும் நிரம்பி வழிந்தது. உறக்கத்தில் இருந்து சிறுநீர் கழிப்பதற்காக எழுந்தவர்கள்கூட கழிவறை செல்லும் முன்னர் ஒரு பதிவு கழிவறையில் இருந்து வந்து படுக்கையில் விழுந்ததும் ஒன்று என்று CITU விற்கு எதிரான பதிவுகளை போட்டபிறகுதான் தூங்கினார்கள். மூன்று விஷயங்களை தெளிவுபடுத்திவிட்டு இவைகுறித்து உரையாடுவதே சரியெனப் படுகிறது.1) நோக்கியோ தமிழ்நாட்டில் இருந்த தனது கிளையை மூடியதற்கான காரணங்கள் அதன்மீது சுமத்தப்பட்ட வரி ஏய்ப்பு குற்றச்சாட்டும் அதன்பொருட்டு விதிக்கப்பட்ட அபராதமுமே ஆகும். சரியாக சொல்வதெனில் அந்த நிலையிலும் நோக்கியோவை தக்கவைப்பதற்கான முயற்சியை CITU செய்தது2) ஃபோர்ட் தொழிற்சாலை மூடப்பட்டதற்கு அது தயாரித்த கார்கள் விற்பனையாகமல் நட்டத்தை சந்தித்ததே ஆகும்3) அதன் தலைவர்கள் பலர் அந்தக் கட்சியில் இருக்கிறார்கள் என்பதைத் தவிர CITU என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கம் எல்லாம் இல்லை.நோக்கியோ வெளியேறியதற்கு CITU காரணமில்லை என்பதைக்கூட ஏற்கலாம். ஆனால் அதைத் தக்க வைப்பதற்கு அது முயற்சி செய்தது என்பதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது என்று சிலர் கேட்கலாம்.அப்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்த செய்தியை 25.07.2014 அன்று ஒன் இண்டியா வெளியிட்டிருக்கிறது.அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தோழர் ஆ.சௌந்தரராஜன் நோக்கியாவில் இருந்து இருபத்தி ஐந்து வயதை ஒட்டிய 5600 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார்கள் என்றும் 50 வயதிற்கு குறைவானவர்கள் விருப்ப ஓய்வு எடுக்க இயலாது என்பது விதி என்றும் குறிப்பிடுகிறார். இது விஷயத்தில் அரசு தலையிட வேண்டும் என்றும் அவர் அரசின் கவனத்தை ஈர்க்கிறார். அன்றைய அதிமுக அமைச்சராக இருந்த திரு தங்கமணி அவர்கள் இதை எதிர்கொள்கிறார்.நோக்கியோ தனது தொழிற்சாலையை மூடிவிட்டு போனதற்கு தாங்கள் எந்த விதத்திலும் பொறுப்பேற்க இயலாது என்றும் அது அப்போது திமுகவும் அங்கம் வகித்த ஒன்றிய அரசின் நடவடிக்கையினால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் கூறினார். அதுமட்டுமல்ல, விருப்ப ஓய்வு கொடுத்தவர்கள் நான்கு லட்சம் ரூபாய் முதல் பத்து லட்சம் ரூபாய் வரைக்கும் இழப்பீடு பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.சுருக்கமாக சொன்னால் நோக்கியோ வரி ஏய்ப்பு செய்திருந்தது. அதை அன்றைய ஒன்றிய அரசு கண்டுபிடித்தது. உடனடியாக கட்ட வேண்டிய வரியை அபராதத்தோடு கட்டவேண்டும் என்று சொன்னது. அவர்களுக்கிடையில் என்ன பிரச்சினையோ தெரியவில்லை, தனது முடிவில் ஒன்றிய அரசு பிடிவாதமாக இருந்தது. தொழிற்சாலையே கையைவிட்டு போனாலும் பரவாயில்லை வரியையும் அபராதத்தையும் கட்டுவதில்லை என்பதில் நோக்கியோவும் பிடிவாதமாக இருந்தது.அந்த இருவரின் பிடிவாதத்தின் விளைவாக நோக்கியோ ஸ்ரீபெரும்புதூரில் இருந்த தனது தொழிற்சாலையை மூடியது. என்னென்ன வகைகளில் இந்த விஷயத்தில் CITU தலையிட்டது என்றால்,1) வரியையும் அபராதத்தையும் உடனடியாக, ஒரே தவனையில் என்பதை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அது கோரியது. குறைந்தபட்சம் ஒரு கால அவகாசத்தையேனும் நோக்கியோவிற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்றும் அது கோரியது2) வேறு வழியே இல்லை, நோக்கியோ தனது தொழிற்சாலையை மூடவே செய்யும் என்ற நிலை வந்தபின் அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகைக்காகப் போராடி பெற்றுக் கொடுத்ததுஃபோர்ட் விஷயத்தில் அது தொழிலாளிகளின் பாதுகாப்பிற்காக நிறைய ஏற்பாடுகளை செய்தது என்பது உண்மை. ஃபோர்ட் தரமான கார்களுக்காக செயல்பட்டது என்பதும் உண்மை. அதற்காக நிறைய செலவு செய்தது. இதனால் அதன் உற்பத்தி செலவு அதிகரித்தது. எனவே அதன் விலையும் பெருமளவு அதிகமாக இருந்தது. அதன் விளைவாக சந்தையில் விற்பனை மந்தப்பட்டது, நட்டம் ஏற்பட்டது. இந்த நட்டத்தின் காரணமாகத்தான் ஃபோர்ட் தனது தொழிற்சாலையை மூடியது.இப்படி ஒரு போரட்டத்தின் மூலமாகத்தான் CITU சென்னையில் அற்புதமாக இயங்கி வந்த “பின்னி” மில்லை இழுத்து மூடியது என்றவொரு வதந்தியையும் அவர்கள் பரப்பினார்கள். இதுவரை உலகில் பரப்பப்பட்ட மிக உச்சமான பத்து வதந்திகளுள் நிச்சயமாக இதையும் ஒன்றெனக் கொள்ளலாம். உண்மை என்னவெனில் பின்னி மில் பிரச்சினை நடைபெற்றது 1952 ஆம் ஆண்டுவாக்கில். அந்த நேரத்தில் CITU பிறந்திருக்கவே இல்லை. அந்த சம்பவம் நடந்தபோது தோன்றியே இருக்காத ஒரு சங்கம்தான் அதற்கு காரணம் என்று பொய்யைப் பரப்புவதற்கு எவ்வளவு வன்மம் வேண்டும். பின்னி மில்லில் தொழிலாளர்கள் சங்கமென ஒன்றிணைந்ததற்கான காரணம் சுவாரஸ்யமானது.பின்னி தொழிலாளிகள் ஒவ்வொரு நாளும் 14 மணி நேரம் உழைக்கவேண்டி இருந்தது. வீட்டில் இருந்து வீட்டை அடையும் நேரத்தையும் கணக்கில் கொண்டால் 18 மணிநேரம் என்று இருந்தது. வாரத்திற்கு ஆறு நாள் பணி. சொல்லொன்னா துரத்தில் இருந்த தொழிலாளிகள் தங்களது துயரத்தை பகிர்ந்துகொள்ளக்கூட ஆளற்று இருந்தார்கள். அந்த நேரத்தில் தங்களது ஊழியர்களுக்காக ஆன்மீகக் கூட்டங்களை ஆலை நிர்வாகம் ஏற்பாடு செய்கிறது. ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதற்காக திரு.வி.க வருகிறார்.அவரிடம் ஊழியர்கள் தங்களது குறைகளைக் கூறினால் மனது ஆறுதலடையும் என்று கருதுகிறார்கள். அப்படித்தான் சாய்ந்து படுக்கக்கூட தங்களுக்கு ஓய்வற்று கிடப்பதாக அவரிடம் புலம்புகிறார்கள்.திரு.வி.க அவர்களது நிலையை சரியாகப் புரிந்துகொள்கிறார். தொழிற்சங்கத்தில் அனுபவம் உள்ள அவரது நண்பர் ஒருவரிடம் விஷயத்தைக் கூறுகிறார். அவரது நண்பரும் திரு.வி.க அவர்களோடு ஆன்மீக சொற்பொழிவுகளுக்கு வருகிறார்.அவரடிம் தங்களது துயரங்களைக் கூறுமாறும் அவர் அவர்களுக்கு மன ஆறுதலைத் தருவார் என்றும் தொழிலாளிகளிடம் திரு.வி.க கூறுகிறார்.அந்த மனிதர்தான் தமக்கு மன ஆறுதலைத் தரவல்ல மானுட ரட்சகர் என்று தொழிலாளார்கள் நம்புகிறார்கள். அவரிடம் தமது மனக்குமுறல்களைக் கொட்டித் தீர்க்கிறார்கள். அவர் மற்றதைப் பார்த்துக் கொள்கிறார்.இதுதான் வரலாறு. இதற்குமேல் இந்த விஷயத்தை நீட்டுவது இந்தக் கட்டுரைக்கு தேவை இல்லை.இப்படியாக ஆன்மீகக் கூட்டங்களின் வழியாக நடந்த ஒரு சம்பவத்திற்கு CITU வை கொண்டுவந்து நிறுத்துவது உள்நோக்கம் கொண்டது என்பதை உணர்த்துவதற்காகத்தான் இதை சொல்லவேண்டி வந்தது.தற்போது சாம்சங் தொழிலாளார்கள் ஒன்றிணைந்து CITU சங்கம் கட்டு தங்களது கோரிக்கைகளைக் கட்டி வேலைநிறுத்தத்தை தொடங்கியதால்தான் இந்த வதந்திகளை அவர்கள் பரப்ப ஆரம்பித்தார்கள். அவர்கள் எரிச்சல் கொள்வதற்கு காரணங்கள் இரண்டு1) அவர்கள் தாராளமயவாதிகள்2) சாம்சங் தொழிலாளர்கள் CITU பதாகையின்கீழ் ஒன்றிணைந்திருப்பதுCITU உள்ளே புகுந்தால் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொள்ள நேரிடும் என்றார்கள். மோதலும் தாக்குதலும் பூமியை ரத்தக் கறையாக்கும் என்றார்கள். ஒருபோதும் இந்தப் பதாகையின்கீழ் தொழிலாளார்கள் வெற்றிபெற முடியாது என்றார்கள்.அத்தனையையும் பொய்யாக்கி சாம்சங் தொழிலாளர்கள் CITU பதாகையின்கீழ் ஒன்றிணைந்து போராடி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.சாம்சங் பிளைகளுக்கு CITU கையளித்த நம்பிக்கை வார்த்தைகளில் ஒன்றைக்கூட பூமியின்மேல் சிந்தவிடாமல் பத்திரமாக பாதுகாத்துக் கொடுத்திருக்கிறது.17.10.2024 காலை 10.15 மணிக்கு இந்தப் பகுதியை நான் தட்டச்சு செய்துகொண்டிருக்கிறேன். இந்த நொடியில் சாம்சங்கில் வேலைபார்க்கும் நம் பிள்ளைகள் 38 நாட்களுக்குப் பிறகு மீண்டும் வேலை செய்துகொண்டிருப்பார்கள்.அவர்களது மகிழ்ச்சி நிலைக்கட்டும். புதிய ஆசிரியன் நவம்பர் 2024
Published on November 18, 2024 21:51
October 22, 2024
ஏன் இன்னும் எங்களை வெட்டாமல் விட்டு வைத்திருக்கிறார்கள்?
2) வர்ண அமைப்பிற்கு நேர் எதிராக கொண்டுவரப்பட்டுள்ள இந்திய அரசமைப்பு சட்டம்
3) வர்ண அமைப்பினுள் கட்டுப்படாத இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்
2) இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்காகவே பதவிக்கு வந்தவர்கள் அரசமைப்பு சட்டப் புத்தகத்தை வணங்க வேண்டியத் தேவை எப்படி வந்தது
Published on October 22, 2024 04:07
September 29, 2024
இத்தனைக்குப் பிறகும் காந்தி …
.
1982 ஆம் ஆண்டின் சிறந்த படமாக “காந்தி”யையும், சிறந்த இயக்குநராக அந்தப் படத்தை இயக்கிய ஆட்டன்பரோவையும் ஆஸ்கார் தேர்வு செய்கிறது. இவைபோக இன்னும் ஆறு விருதுகள் என்ற வகையில் அந்த ஆண்டு எட்டு ஆஸ்கார் விருதுகளை மொத்தமாக அள்ளுகிறது ”காந்தி” திரைப்படம்.
2) காந்தியின் இடத்தில் சவார்க்கரை கொண்டுவந்து இருத்துவது
அவர்கள் விரும்பிய இந்து ராஷ்ட்ரத்தை அடைய முடியாமல் போனதற்கு காந்தியின் பங்கு என்ன என்பதை அவர்கள் உணர்ந்தவர்களாகவே இருந்தார்கள். அதனால்தான் காந்தியைக் கொல்வதற்கு அவர்கள் திட்டம் தீட்ட கோட்சே அதை செய்து முடித்தான்.
தீக்கதிர்29.09.2024
Published on September 29, 2024 04:23
September 19, 2024
உங்கள் பெயர் என்ன?
உங்கள் பெயர் என்ன?” என்று எப்போதாவது அவர்கள் உங்களைக் கேட்டிருக்கிறார்களா?. ஆம் எனில் நீங்கள் அவர்களால் நேர்மையாக பதிலளிக்க முடியாத கேள்வியை அவர்களைக் கேட்டிருக்கிறீர்கள் என்று பொருள். இல்லை எனில் அப்படி ஒரு கேள்வியை நீங்கள் அவர்களை இதுவரை கேட்டதில்லை என்று பொருள்.
கிறிஸ்தவர்கள்மீதான வெறுப்பினை குழந்தைகளிடம் கொண்டு வரும் என்பதையும்உணர்ந்த அந்தப் பள்ளியின் தமிழாசிரியர் திரு சங்கர் அவர்கள் அவரது உரைக்கு எதிராக் குரல் கொடுக்கிறார்.
2) திரு சங்கரது பார்வைக் குறைபாடு என்பது அவரது போன ஜென்மத்து கர்மவினை என்றிருக்கிறார்
3) தான் பேசியவற்றை எல்லாம் பள்ளிகள் தாமே சொல்லிக் கொடுத்திருக்கும் என்றால் தான் பள்ளிகளுக்கு வரவேண்டிய தேவையே இருந்திருக்காது என்றிருக்கிறார்
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகமம் ஆகிநின்று அ@ண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க”
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”
இவைதான் இறை நம்பிக்கை இல்லாத நாத்திக மனிதனையும் முகம் சுளிக்காது புன்னகைக்க வைக்கும் தமிழ் ஆன்மீகம்.
தெய்வத்துள் வைக்கப்படும்”
தீக்கதிர்
12.09.2024
Published on September 19, 2024 02:53
நாகரிக சமூகக் கட்டமைப்பிற்கான முன் நிபந்தனை பெண்கல்வி
தந்தை பெரியாரை சிந்தனையாளர் வரிசையில் வைத்து உலகம் கொண்டாடவில்லை. ஆனால்உலகத்தில் எந்த தலைசிறந்த சிந்தனையாளர் அளவிற்கும் கடுகளவு குறைவாகவும் சிந்தித்தவர்இல்லை அவர். பிறகு ஏன் அவரை உலகம் சிந்தனையாளர்கள் அடுக்கு வரிசையில்வைக்கவில்லை.
2) துரதிருஷ்டவசமாக நான் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்றால்ஐந்து ஆண்டுகளுக்கு பெண்களுக்கு மட்டுமே பள்ளிக்கல்வி என்று ஒரு சட்டத்தைஇயற்றுவேன்
3) உங்களுக்கு பெண்குழந்தை இருந்து உங்கள் ஊரில் பள்ளி இல்லை என்றால்பள்ளி இருக்கும் ஊருக்கு அவள் படிப்பு முடியும் வரைக்குமாகிலும் குடும்பத்தை மாற்றுங்கள்
புதிய ஆசிரியன்செப்டம்பர் 2024
Published on September 19, 2024 02:44
September 12, 2024
கவிதை 103
காசா
ஒரு பள்ளியின்
சுற்றுச்சுவருக்கும்
சிதிலமடைந்த
ஒரு கட்டிடத்திற்குமிடையே
பதுங்கிப் பதுங்கி
சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த சிறுவனை
இஸ்ரேலியத் துப்பாக்கி ஒன்று
சுட்டுத் தள்ளியதை எப்படியோ
மோப்பம் பிடித்து
வந்து சேர்கின்றன
இரண்டு பிணந்தின்னிக் கழுகுகள்
வழக்கமாக
தின்னப் பிணம் கொடுத்த கடவுளுக்கு
நன்றி சொல்லி
தாய்க் கழுகு தொடங்கும் துதிபாடலை
ஆமேன் சொல்லி முடித்துவைக்கும்
இளைய கழுகு
துப்பாக்கியையும்
ரவைகளையும் தந்த
அமெரிக்காவையும்
குறிபார்த்து சுடும் ஆற்றலை
சுட்டவனுக்கு கொடுத்த
கடவுளையும் சபித்தது
முதல் கொத்திற்காக
ஆமேனை எதிர்பார்த்திருந்த
தாய்க்கழுகிற்கு
வரமல்ல
தம் முன்னே கிடக்கும் உணவு
சாபம் என்று தோன்றியது
போய்விடலமா மகனே என்கிறது
நாம் போனால்
குப்பை வண்டியில்
குப்பையோடு குப்பையாய்
இந்த குழந்தையின் உடலை
கொண்டு போவார்கள்
இந்த உடலை புசிப்பது
இந்த உடலுக்கான நம் மரியாதையும்
கடவுளுக்கான நமது சாபமும் என்றது
இளைய கழுகு
குழந்தையின் உடலில்
அலகை இறக்குகிறது
தாய்க்கழுகு
Published on September 12, 2024 01:45
September 3, 2024
இந்தியாவிற்குமான திருப்பத்தை மக்கள் தருவார்கள்
தன்வசம் இருந்த ஆறு இஸ்ரேலிய பிணையக்கைதிகளை ஹமாஸ் கொன்றுள்ளதாக தகவல்கள் வருகின்றனஅப்பாவி மக்களை யார் கொன்றாலும் கண்டனத்திற்கு உரியதுதான்கண்டிக்கிறோம்இந்த நிலைக்கு ஹமாஸைத் தள்ளியதில் இஸ்ரேலின் அணுகுமுறைதான் காரணம்இதை மிகச் சரியாக இஸ்ரேலிய மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்ஹமாஸ் ஆறு இஸ்ரேலியர்களை கொன்றதற்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் அலட்சியமும் ஆணவமுமே காரணம் என்றும்ஆகவே நேதன்யாகு பதவி விலகவேண்டும் என்றும் கோரிஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தெருவிற்கு வந்திருக்கிறார்கள்இஸ்ரேலின் மக்கள் தொகை 97 லட்சம்தான்இதில் குழந்தைகள், முதியவர்கள், இயலாதவர்கள் கணக்கு 30 லட்சம் வரும்ஆக போராடும் சக்தி கொண்டவர்களில் பன்னிரண்டில் ஒருவர் தெருவிற்கு வந்து விட்டார்கள்இது சிறுகச் சிறுகக் கூடும்கிட்டத்தட்ட ஒரு சதவிகிதம் சீனர்களின் போராட்டம்தான் சீனத்தை மாற்றியதுஎகிப்து இப்படியான கொதிநிலையில்தான் மாறியதுஇலக்கிலும் நெறிப்படுத்துதலிலும் கொண்டிருந்த போதாமை எகிப்தை ஒழுங்கமையாமல் தடுத்தனகிட்டத்தட்ட இலங்கைசமீபத்தில் வங்கதேசம்திருந்தாவிட்டால்மக்களை முன்னிருத்தாவிட்டால்இஸ்ரேலுக்கு மட்டுமல்லஇந்தியாவிற்குமான திருப்பத்தை மக்கள் தருவார்கள்மக்கள் பலம் எதனினும் பெரிது
Published on September 03, 2024 06:19
September 2, 2024
ஹிமந்த பிஸ்வா சர்மா யாருக்கும் இரண்டாம் நபராகத் தெரியவில்லை
இஸ்லாமிய எதிர்ப்பில்அசாம் மாநில முதல்வர் இஸ்லாமியர்கள்மீது தனது வன்மத்தைக் காட்ட எந்த அபத்தத்தையும் அசிங்கத்தையும் செய்வதற்கு இவர் தயங்குவதே இல்லைஅசாம் சட்டமன்றம் கூடும் நாட்களில்வெள்ளியன்று மதியம் 12 மணிமுதல் 02 மணிவரை தொழுவதற்காக இடைவேளை விடப்பட்டு வந்ததை ரத்து செய்திருக்கிறார்பாஜக கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளமும் லோக் ஜனசக்தியும்கூட கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன
Published on September 02, 2024 00:04
September 1, 2024
நடைமுறையில் பொய் கவிதை 102

அண்ணே டீ என்றுகலியன் சொல்வதற்கும்சரியாக இருந்தது
கல்லுமாதிரிநிற்கும் நான்
கலியன் கடையில்ஒரு கிளாஸ் தேநீர் பருகியபடிஒன்றரை பேரல்அரசியல் பேசும் நான்
செத்ததாக நம்பமுடியவில்லைதானே
ஆனால்,
அனிதாசெத்துப்போனதாகவும்
மருத்துவம் இல்லைனாபடிக்க ஏதும் இல்லையா என்ன என்றுபிள்ளையின் மரணத்தைஏளனித்தவர்கள்
காரில் போவதாகவும்சாமி போவதாகவும்நம்பமுடியவில்லைதானே
செத்தவர்களைத்தான்புதைப்போம் என்பதும்
செத்தவர்களால்காரில் போகவோகறி வாங்கப் போகவோமுடியாது என்பதெல்லாம்
நடைமுறையில் பொய்
Published on September 01, 2024 23:47
August 26, 2024
கவிதை 089
முகில்கள்என் தலைக்குமேல்உரசிக்கொள்ளத் துவங்கும்ஒவ்வொரு முறையும்நீ உரையாடத் துவங்குவதுதற்செயலாகத்தான்
Published on August 26, 2024 00:47
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)