Jeyamohan's Blog, page 1725

October 3, 2016

சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் [சிறுகதை ]

index


அது சாத்தியமா என்ற சந்தேகம்தான் எனக்கு முதலில் எழுந்தது. பையிலிருந்து செல்பேசியை எடுத்து கணக்கிடத் துடித்த விரல்களை கஷ்டப்பட்டுத்தான் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது, கணக்குகள் போடப்படும்போது எல்லாக்கதைகளும் தப்புக்கணக்காகி நின்றிருக்கும் துயரத்தை நானும் பலமுறை அனுபவித்தவன்தான். விசித்திரமாகவோ விபரீதமாகவோ நமக்கு ஏதாவது நிகழும் போது கூட பத்து நிமிடத்திற்கு மேல் மகிழ்ச்சி அடைய முடியாதபடி அவை அனைத்தும் பலமுறை பொதுத்தகவல்குவியத்தில் எழுதப்பட்டு பல்லாயிரம் முறை பகிரப்பட்டிருப்பதைக் காணும் ஏமாற்றம் நிறைந்த சூழலில் வாழ்கிறோம்.


ஆகவே புறங்கையில் தற்செயலாக வந்து படிந்த நுரைக்குமிழியை கூடுமான வரை உடைக்காமல் அதன் வண்ணங்களைப் பார்க்கும் மனநிலையில்தான் நான் இருந்தேன். அனுதாபமான புன்னகையுடன் “அற்புதம்” என்று அவரிடம் சொன்னேன்.


அரைமணி நேரம் முன்புதான் விமான பணிப்பெண் வந்து அவரிடம் விமானத்தின் ஜன்னல் கதவை தாழ்த்தும்படி பணிவுடன் ஆணையிட்டுவிட்டுப் போனாள். அவர் “மன்னிக்கவேண்டும். மன்னிக்கவேண்டும்” என்று சொன்னபிறகு, விமானத்தின் உள்ளே அனைத்து ஜன்னல்களும் மூடப்பட்டிருப்பதை திரும்பிப்பார்த்தார். அவர் மூடுவதற்காக பணிப்பெண் அங்கேயே முன் இருக்கையில் கை வைத்து சற்றே உடலை வளைத்து, வரையப்பட்டது போன்ற புன்னகையுடன் காத்து நின்றாள்.


அவர் ஜன்னல் கதவை கீழிறக்கும்போது கைகள் சற்று நடுங்குகின்றனவா என்று எனக்கு சந்தேகமாக இருந்தது. இறக்கி மூடிவிட்டு “மன்னிக்கவேண்டும்” என்று மீண்டும் அவர் சொன்னார்.


ஜப்பானிய முகம். ஒவ்வொரு சொற்றொடருக்குப் பின்னாலும் சற்றே உடல் வளைத்து வணக்கம் சொல்வது போன்ற ஜப்பானிய பாவனை. ஜப்பானியர்கள் பணிவானவர்கள் என்ற சித்திரத்தை உலகமெங்கும் அளிப்பது அது. அந்தப் பணிவுக்குப் பின்னால்தான் உலகத்தின் மிக ஆணவம் கொண்ட, இனமேட்டிமை மனநிலை கொண்ட மக்கள் பிரிவு ஒன்று இருக்கிறது என்பதை என்னைப்போல உலகமெங்கும் சென்று வணிகம் செய்பவர்கள் அறிந்திருப்பார்கள்.


அவர் தன் இரு கைகளையும் கோர்த்து மடியில் வைத்துக் கொண்டார். அவை நடுங்கிக் கொண்டே இருந்தன. உதடுகள் மிக வெளிறி தோல் நிறத்திற்கே வந்துவிட்டிருந்தன. மஞ்சள் இனத்திற்கு இருப்பதே சிறிய உதடுகள். அவை நிறமிழந்தபோது இருப்பதே தெரியாமல் ஆயின. பணிப்பெண் “நன்றி” என்று சொல்லி மீண்டும் ஒரு அச்சிடப்பட்ட புன்னகையை அளித்துவிட்டு நடந்து சென்றாள்


ஜன்னல்கள் மூடப்பட்ட போது விமானத்தின் ஓசை அதிகரித்ததுபோல் ஒரு பிரமை எனக்கு ஏற்பட்டது. விமானத்தில் பெரும்பாலானவர்கள் கண்களுக்கு மேல் ஒளி மறைப்பானை இழுத்துவிட்டுக் கொண்டு மல்லாந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஒருமணி நேரத்திற்கு முன்புதான் மதுவகைகள் சுழன்று சுழன்று வந்திருந்தன.


ஜப்பானியர் மிகவும் நடுங்குவதை உணர்ந்தேன். அவ்வளவாக குளிரவில்லையே என்று எண்ணியபடி மேலே குளிர்காற்று வரும் குழாயை பார்த்தேன். அது மூடப்பட்டிருந்தது. அவர் முகம் வெளிறியிருப்பதை மீண்டும் நோக்கினேன். குளிரில் புல்லரித்தது போல் கழுத்திலும் காதுகளுக்குப்பின்பக்கமும் மயிர்ப்புள்ளிகள் தென்பட்டன. என்னை நோக்கி மங்கலாகப் புன்னகை புரிந்து மீண்டும் திரும்பிக் கொண்டார். அவரை நோக்கக்கூடாது என்று முடிவு செய்து நான் கால்களை நீட்டி உடலை விரித்து சாய்ந்து அமர்ந்தேன்


அவர் தன் நடுங்கும் விரல்களை விமானத்தின் ஜன்னல் கதவின் மேல் வைத்தார். அவை துள்ளி விழுபவை போல நடுங்குவதைப் பார்த்தேன். ஒருவேளை போதைப்பொருள் பழக்கம் இருக்குமோ? அவர் தன் உடலை நன்கு வளைத்து ஜன்னல் கதவு அருகே தலையை வைத்துக் கொண்டார். பின்பு அதிர்ந்து கொண்டிருந்த அந்த விரல்களால் கதவை மெல்லத்திறந்தார். உள்ளே சரிவான ஒளி வந்து என் மடியிலும் கால்களிலும் விழுந்தது. வெளியே உச்சிப் பொழுதாக இருக்க வேண்டும். அவர் தன் முகத்தை அந்த சிறிய இடைவெளி வழியாக வைத்து அதனூடாக வெளியே பார்த்தார்.


ஒருகணம் எனக்கு கோபம் தலையை நிறைத்தது. திரும்பத் திரும்ப இத்தகையவர்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். எங்கு எந்த விதியிருந்தாலும் அதை சற்றேனும் மீற முடியுமா என்று பார்ப்பவர்கள். ஒரு வரிசை என்றால், குறைந்தது ஒருவரையாவது தாண்டிச் சென்றாகவேண்டும். ஒரு சோதனை என்றால் எதையாவது ஏமாற்றியாகவேண்டும்.


ஆனால் பொதுவாக கள்ளத்தனம் இந்தியர்களின் குணம். ஆப்பிரிக்கர்களும் விதிமீறுவார்கள், ஆனால் எதிர்த்து மூர்க்கமாக சண்டையிடுவார்கள். தென்கிழக்கு நாட்டவர்களில் கொரியர்கள், தாய்வான்காரர்கள், சிங்கப்பூர்காரர்கள், ஜப்பானியர்கள் அனைத்து விதிகளுக்கும் முழுமையாக கட்டுப்பட்டு நடப்பதையே பார்த்திருக்கிறேன். விதிகளை மீறுகிறார் என்றால் அவர் வேறு வகை ஆள். விதிகளை மீறுவதையே தொழிலாகவும் வாழ்க்கையாகவும் கொண்டவர். அவர் சிறியவிதிகளை மீறுவதில்லை.


ஜன்னலின் கீழ்விளிம்பின் இடைவெளியினூடாக வந்த ஒளியை பணிப்பெண்ணுக்குத் தெரியாதபடி தன் தலையால் முழுக்க மறைத்துக் கொண்டு வெளியே பார்த்தபடி வந்தார். அதற்காக உடலை மிக விசித்திரமாக மடித்திருந்தார். கால்களும் வழக்கத்தை மீறிய வகையில் ஒடிந்தவை போல் தெரிந்தன. சூட்கேசுக்குள் வைத்த பிணம்போல என நினைத்துக்கொண்டதுமே அதை தவிர்த்தேன்.


பணிப்பெண் எங்களைக் கடந்து சென்றாள். அவள் அவரைப்பார்க்கிறாளா என்று பார்த்தேன். இயல்பாகத் திரும்பி பார்த்துவிட்டு கடந்து சென்றாள். அவள் கோணத்தில் ஜன்னல் கதவை அவர் திறந்திருப்பது தெரியவில்லை என்று ஊகித்தேன். அப்படியென்றால் மிகத் திறமையான உத்தி அது. இதை பலமுறை இவர் செய்து பார்த்திருக்கிறார். இப்போது பணிப்பெண் பார்வையில் ஜன்னல் மூடியிருக்கிறது. விதி அமலில் இருக்கிறது, ஆனால் அவருக்குத் தெரியும் அதை அவர் மீறியிருக்கிறார் என்று. என்ன சிறுமை இது என்று முதலில் சிரிப்பாக இருந்தது. பின்னர் மெல்லிய குரூரம் ஒன்றை அடைந்தேன்.


அவர் தோளில் தட்டி, “மன்னிக்கவேண்டும், ஜன்னல்களை மூடும்படி சொல்லப்படுகிறது. மூடுங்கள்” என்றேன். அவர் “மூடுகிறேன், மன்னிக்கவேண்டும்” என்று பணிவுடன் சொன்னார். ஆனால் மூடவில்லை. நான் மீண்டும், “தயவு செய்து ஜன்னலை மூடுங்கள் இது விதி” என்றேன். “மூடுகிறேன் இதோ…” என்று அவர் மீண்டும் சொல்லி ஜன்னல் கதவில் கையை வைத்து மூடுவது போல் ஒரு பாவனை செய்தார். கை மிக நன்றாகவே நடுங்கி அதிர்ந்தது. கதவு கீழிறங்கவில்லை.


நான் என் கையை அதில் வைத்து கீழே தள்ள தொடங்கியபோது அந்த இடைவெளியில் தன் கையை வைத்து மூடி கீழிறங்காமல் தடுத்துக் கொண்டார். “தயவு செய்து… தயவு செய்து…” என்றார். “ஏன் உங்களுக்கு என்ன பிரச்னை?” என்று நான் கேட்டேன்.“என்னை மன்னியுங்கள் வெளியே வெயில் இருக்கிறது அது எனக்கு வேண்டும்” என்றார். “ஆம் வெளியே உச்சிப்பொழுது இப்போது” என்றேன். “நான் அதைப்பார்க்க வேண்டும்” என்றார்.


“அங்கென்ன தெரியும்? கண்கூசும் வெளிச்சம் மட்டும்தான் இருக்கும். இந்த உயரத்தில் மேகங்கள் கூட இருக்காது. அதில் என்ன பார்க்கிறீர்கள்?” என்றேன். பதறியபடி “இல்லை, நான் பார்க்க வேண்டும். வெளிச்சத்தை பார்க்க வேண்டும்” என்றார். “பைத்தியக்காரத்தனம்..” என்று சொல்லி “கையை எடுங்கள், விதி என்பது இவ்விருக்கையில் இருக்கும் நம் மூவரையுமே கட்டுப்படுத்தும்.” என்றேன்.


எனக்கு அப்பால் விளிம்பு இருக்கையில் முழுப் போதையில் வாய்திறந்து தவளைத் தொண்டை அதிர தூங்கிக் கொண்டிருந்தவரை பார்த்துவிட்டு “அவருக்குத் தெரியாது” என்றார். “ஆம். ஆனால் எனக்குத் தெரியும் நான் விதிகளை கடைபிடிப்பவன்” என்றபின் அவர் தடையாக வைத்திருந்த அந்தக் கையை பிடித்து விலக்கிவிட்டு மூடியை இழுத்து நன்றாக மூடினேன். அவர் நடுங்கத் தொடங்கியதில் தொடைகள் துள்ளின. கைகூப்புவது போல இரு கைகளையும் சேர்த்தபடி என்னிடம், ”தயவு காட்டுங்கள் என் மேல் தயவு காட்டுங்கள்” என்றார்.


“உங்களுக்கு என்ன செய்கிறது? மது வேண்டுமா?” என்றேன். “இல்லைநான் மது அருந்துவதில்லை என்றார். “என்னதான் பிரச்னை உங்களுக்கு?” என்று நான் மீண்டும் கேட்டேன். “எனக்குப் பகல் வேண்டும். கதவுகளை மூடிவிட்டால் இரவாகிவிடுகிறது போலிருக்கிறது” என்றார். “ஆம் இங்கு உள்ளே இருப்பவர்களின் பெரும்பாலானவர்களின் உடல்களுக்கு இது இரவு. எனக்கும் கூட இரவுதான்” என்றேன். “அது தெரியும். ஆனால் நான் பகலில் இருக்க விரும்புகிறேன். பகலுக்காகத்தான் இந்த விமானத்தில் பயணம் செய்கிறேன்” என்றார்.


நான் அவரை நோக்கி “பகலுக்கு என்றால்…” என்றேன். “நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்வீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. நான் எப்போதும் பகலில் இருக்கிறேன்” என்றார். நான் அவர் கண்களைப்பார்த்தேன் சற்றே நீர் நிறைந்தது போல தோன்றியது. போதையடிமைகளின் கண்கள் அப்படித்தான் இருக்கும். உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. மிகுந்த அச்சத்தில் பேசுபவர் போல குரலும் நடுங்கியது. “தயவு செய்யுங்கள். இந்தக் கதவை திறந்து வைக்க என்னை அனுமதியுங்கள்” என்றார்.


திறக்காவிட்டால் இறந்துவிடுவார் என்று எண்ணிக் கொண்டேன். “சரி” என்றபின் திரும்பிக் கொண்டேன். அவர் ஜன்னல் கதவை நான்கு விரல் அளவுக்கு மேலே தூக்கி அவர் தேர்ந்திருந்த வகையில் முகத்தை அந்தப்பிளவில் பொருத்தி வெளியே பார்க்க ஆரம்பித்தார். நான் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அந்த நடுக்கம் இல்லாமலாகி மெல்ல தசைகள் விடுபடத்தொடங்கின. தூக்கத்தில் இருப்பது போல அமைதியான சீரான மூச்சுடன் அவர் வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். தூங்கிவிட்டாரா என்று நான் குனிந்து அவரைப்பார்த்தேன். அவர் உதடுகள் ஏதோ சொல்லிக் கொண்டிருப்பது போல் இருந்தது. தூங்கவில்லை. போதை அடிமையேதான் என்று நான் எண்ணிக் கொண்டேன்.


என் தொழில்முறைப் பயணங்களில் பலவகையான விருந்துகளில் பங்கெடுப்பதுண்டு. தென்கிழக்கு நாடுகளில் முழுக்க உயர்மட்ட விருந்து என்றாலே போதை இருக்கும். ஐம்பதாண்டுகளுக்கு முன்புவரை எக்ஸ்டஸி வரிசை மாத்திரைகள். இன்று மூளையில் கட்டுப்படுத்தப்பட்ட மின்சாரத்தை செலுத்திக்கொள்வதுதான் உலகமெங்கும் வழக்கம். மாத்திரைகளின் பேரரசான அமெரிக்கா அழிந்து மின்கருவிகளின் பேரரசாக சீனா எழுந்து வந்துவிட்டது. சில மின்சாரவருடல்கள், காது முரசுக்கும் செவிடாகிவிடும். இரண்டு ஆள் உயரமான ஒலிபெருக்கி பெட்டியின் முன்னால் சென்று நின்று அதைக் காதலியைப் போல தழுவியபடி நடனமிடும் போதை கொண்டவர்களை நான் பார்த்திருக்கிறேன். சிலருக்கு காரம் போதவே போதாது. பச்சை மிளகாய்களை மெல்வார்கள். இவருக்கு ஒளி போலிருக்கிறது.


அரை மணி நேரம் தூங்கியிருப்பேன். அப்போது இரவில் இருந்தேன். இரவுக்குரிய ஒலிகள், குளிர், இரவுக்குரிய மெல்லிய தூசு கலந்த நீராவி மணம். எங்கிருக்கிறேன் என்று வியந்தபடி விழித்துக் கொண்டபோது ஆறாயிரம்பேர் அமர்ந்திருக்கும் வசதிகொண்ட இரண்டடுக்கு அணுவெடிப்புவிசை விமானத்தின் பெருங்கூடத்தில் அரை இருள் பரவியிருந்தது. என் முழங்காலும் இடக்கையும் மட்டும் ஒளியுடன் இருந்தன. திரும்பிப் பார்த்த போது ஜப்பானியர் அவ்விடைவெளி வழியாக வெளியே பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டேன்.


முதலில் அவர் இறந்து மடிந்திருக்கிறார் என்ற அனிச்சையான எண்ணம் வந்தது. அதன் பிறகுதான் தூங்குவதற்கு முன்பு என்ன நிகழ்ந்தது என்பது நினைவில் எழுந்தது. உண்மையில் இவருக்கென்ன சிக்கல் என்று எண்ணிக் கொண்டே அவரைப்பார்த்தேன். ஆழ்ந்த தியானத்தில் இருப்பவர் போல் இருந்தார். முகம் அமைதி கொண்டிருந்தது. விரல்களின் நடுக்கம் மறைந்திருந்தது. நான் இரவில் இருக்கையில் அவர் பகலில் இருக்கிறார் என்று எண்ணிக் கொண்டேன். வெளியே சூரியன் தகதக்கும் உச்சிப்பொழுது. ஆனால் என் உடல் இரவில் இருக்கிறது. சீவிடுகளின் ரீங்காரத்தையும், புழுதிமணமும் நீராவியும் கலந்த காற்றையும், நட்சத்திரங்களையும் தனக்குள்ளிருந்து அது எடுத்துக் கொள்கிறது.


என் செல்பேசியில் வழக்கமாக இந்தியாவின் நேரத்தையே வைத்திருப்பேன். கைக்கடிகாரத்தில்தான் செல்லும் இடத்தின் நேரம். இந்திய நேரம் எனக்கு முக்கியமானது. வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு நேரங்களில் பயணம் செய்யும் போது உடல் தன் தாளத்தை மறந்துவிடாமல் இருக்கவேண்டும். அதற்கு நான் திட்டமிட்டு அதன் இரவை அதற்கு அளிக்க வேண்டியிருக்கிறது. இந்த உடலின் இரவில் நான் நன்றாக தூங்கி செல்லுமிடத்தில் சூரியனின் இரவில் சென்று இறங்க வேண்டும் நான். என் உடலுக்குள் அப்போது சூரியன் உதித்திருக்கும். ஆனால் இந்த ஜப்பானியர்…


நான் அவர் தோளை மெதுவாகத் தொட்டேன். அவர் அதை அறியவில்லை. மீண்டும் ஒரு முறை மெல்லத்தட்டினேன். திடுக்கிட்டு விழித்துக் கொண்டு “மன்னிக்கவேண்டும்” என்றார். உலகத்திடம் இடைவிடாத மன்னிப்புக் கேட்டுக்கொண்டே இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். அவர் சொன்னவை அப்போதுதான் என் மனதில் தெளிவாக உறைத்தன. “ஒன்றுமில்லை, நீங்கள் பகலுக்காக ஏன் இப்படி ஏங்குகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?” என்று அவர் கண்களை நோக்கியபடிக் கேட்டேன்


என் கேள்வியால் அவர் திடுக்கிட்டது போல வாய்திறந்து விழிகள் அசையாமல் இருக்க உற்றுபார்த்தார். நான் “மன்னிக்க வேண்டும் தவறாகக் கேட்டுவிட்டேன்” என்று சொல்லித் திரும்புவதற்குள் என் கைமேல் தன் கைகளை வைத்தார். “இல்லை… இல்லையில்லை” என்றார். அவரது கைகள் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்ததைப்போல் நனைந்து குளிர்ந்திருந்தன.


“உங்களுக்கு உடல் நலமில்லையா?” என்றேன். “இல்லை, நன்றாகத்தான் இருக்கிறேன். ஆனால் எனக்கு சற்று நரம்பு சிக்கல்கள் உண்டு” என்று அவர் சொன்னார். தெரிகிறது’ என்று எண்ணிக் கொண்டேன். “நான் சூரியன் இல்லாமல் வாழ்வதில்லை” என்றார். நான் அவரைக் கூர்ந்து பார்த்தேன். “எப்போதும் என் வானத்தில் சூரியன் இருக்கவேண்டும். அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்றார்.


“எத்தனை வருடங்களாக?” என்றேன். “இப்போது இருபத்து எட்டு வருடங்களாக. என் பதினெட்டுவயதுமுதல்…” என்றார். அவர் என்னிடம் விளையாடுகிறார் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஆனால் விளையாடுபவரைப்போல தெரியவில்லை. விளையாடுகிறார் என்றால் உலகின் தலைசிறந்த நடிகர் அவர்.


“அதாவது நீங்கள் இருபத்திஎட்டு வருடங்கள் எப்போதும் எங்கோ ஒரு ஊரில் பகலில் இருந்து கொண்டிருக்கிறீர்கள் அல்லவா?” என்றேன். “உண்மையில் பெரும்பாலும் விமான நிலையங்களில், விமானத்தில்” என்றார்.


நான் அவர் விளக்கட்டும் என்று காத்திருந்தேன். “சூரியன் இருபத்து நான்கு மணி நேரத்தில் பூமியைச் சுற்றிவருகிறது. ஒரு விமானம் இருபத்து நான்கு மணிநேரத்தில் டோக்கியோவில் கிளம்பி சிங்கப்பூர் மும்பை துபாய் அமெரிக்கா வழியாக மீண்டும் டோக்கியோவுக்கே வருமென்றால் அதன் அருகே எப்போதும் சூரியன் இருந்து கொண்டிருக்கும் அல்லவா?”


நான் “ஆம்” என்றேன். “ஆனால் என்று தொடங்குவதற்குள், “இன்றைய அணுஆற்றல் விமானங்கள் மிகவிரைவானவை. மணிக்கு ஆயிரத்தி இருநூறு மைல் வேகத்தில் பறப்பவை. ஆயினும் பயணிகள் விமானத்தில் சென்றால் எனக்கு இரண்டுநாளுக்கு ஒருமுறை எட்டுமணிநேர இழப்பு ஏற்படும். தனியார் விரைவு விமானத்தை ஏற்பாடுசெய்துகொண்டு அதை ஈடுகட்டிவிடுவேன்” என்றார் அவர் “ஆகவே நான் பூமியின் ஒளிமிக்க பக்கத்தில் மட்டுமே எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”


”இருபத்து நான்கு ஆண்டுகள் என்றால் முந்நூற்று அறுபத்தைந்தை இருபத்து நான்கால் பெருக்க வேண்டும். அத்தனை முறை நீங்கள் உலகத்தை சுற்றி வந்திருக்கிறீர்கள் அல்லவா?” என்றேன்.


”ஆம். ஆனால் உலகம் எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியாது. பெரும்பாலும் நான் விமான நிலையத்தில்தான் இருக்கிறேன். எப்போதாவது சில மணி நேரம் நகரங்களுக்குள் செல்வேன். தேவையான பொருட்களை வாங்கிக் கொள்வேன். உடல் நலம் இல்லாத போது சில முறை மருத்துவர்களை பார்த்திருக்கிறேன். மற்றபடி விமானநிலைய அறைகள்தான்.”


“உங்களுக்குத் தெரியும் உலகம் முழுக்க விமான நிலையங்கள் ஒன்று போலவே தான் இருக்கும். எனக்கு ஒரே விமான நிலையத்திற்குள் வந்து இறங்கி மீண்டும் விமானத்தில் ஏறுவதாகவே தோன்றுகிறது. எந்த விமான நிலையம் என்பதை என் மனம் உணர்வதே இல்லை. இன்று நான் சிங்கப்பூருக்கு சென்று இறங்கும் போது உச்சிப்பொழுதாகி இருக்கும். ஒன்றரை மணி நேரத்தில் மும்பை விமானத்தை பிடிப்பேன் அங்கு இரண்டு மணிக்கு சென்று இறங்குவேன். அங்கிருந்து துபாய், அங்கிருந்து அமெரிக்கா, சில தருணங்களில் தனியார் விமானங்கள் பிந்தும். எப்போதும் மாற்று பயணச்சீட்டு போட்டிருப்பேன்”


“சூரியனுடன். சூரியனுக்கு மிக அருகே!” என அவர் விழிகளின் பாப்பாக்கள் விரிய மூக்குத்துளைகள் அகன்று அசைய சொன்னார்.   “சூரியனைப்போல  பூமியைச் சுற்றிவருகிறேன்.சூரியக்கதிர்களுக்கு நேர்கீழே வாழ்கிறேன்”


நான் சற்று சலிப்புடன் அசைந்து அமர்ந்தேன். உண்மையில் நான் இணையத்தில் இருந்து அத்தனை விமான அட்டவணையையும் தரவிறக்கி விமானங்களின் வேகத்துடன் அவற்றை ஒப்பிட்டு ஒரு சரியான சித்திரத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் அலுப்பாகவும் இருந்தது. மேலும் இந்த மெலிந்த நரம்பு நோய் கொண்ட ஜப்பானியரை அவ்வளவு தூரம் ஆராய்ந்து புரிந்து கண்டுபிடித்து என்ன அடையப்போகிறேன்?


ஆங்காங்கே பலர் ஜன்னல் மூடிகளை மேலே தூக்கத் தொடங்கினர். பாய்ந்து அவரும் ஜன்னல் மூடியைத் தூக்கிவிட்டார். சூரிய ஒளியை பாலைவனத்தில் செல்பவன் தண்ணீரைப்பார்த்தது போல் பாய்ந்து சென்று அவர் அள்ளிக் கொள்வதைப் பார்த்தேன். வாயைத்திறந்து அதை குடிக்கிறார் என்று தோன்றியது. அருவியில் நீராடுபவர் போல ஒளியில் தலையைக் காட்டினார். உடம்பை கைகால்களைக் காட்டினார். அவருக்கு ஏதேனும் நோய் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அதற்காக வாழ்நாளெல்லாம் பயணம் செய்வார்களா என்ன?


”நீங்கள் பெரும் பணக்காரராக இருக்கவேண்டும்” என்றேன். அவர் என்னிடம் ”உண்மை. என் தந்தை பழைய ஜப்பானின் அனைத்து முக்கியமான நிறுவனங்களிலும் பங்குகள் வைத்திருந்தார். அவர் இறக்கும் போது நான் உலகின் முக்கியமான கோடீஸ்வரர்களில் ஒருவனாக இருந்தேன்.” ஜப்பான் சீனாவுடன் இணைந்து முப்பதாண்டுகளாகின்றன. அதற்குமுன்பு ஜப்பானிய நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தவர்கள் பூமியை விலைபேசிக்கொண்டிருந்தனர்.


“உங்கள் குடும்பம்…?” என்றேன்.”நான் திருமணம் செய்து கொள்ளவில்லை” என்றார் அவர். நல்லது என்று நான் நினைத்துக் கொண்டேன். நான் நினைப்பதை அவர் உணர்ந்தது போல சிரித்தபடி “விமானப்பணிப்பெண்களுக்கு என்னை நன்றாகத் தெரியும் முன்பொருமுறை ஒருத்தி தன்னை மணந்து கொள்ளும்படி கேட்டாள். அவள் தான் அதிகமான என்னுடன் செலவிடமுடியும்என்றாள்”


அவரால் சிரிக்க முடியும் என்பதை கண்டேன். பல்வரிசைகள் சீராக இருந்தன. பொதுவாக ஜப்பானியர்களுக்குப் பற்கள் சோழியடுக்கியவைபோலிருக்கும். இவை சிறியவெண்ணிறப்பற்கள்.


அவர் ஒரு பழைய கதையைச் சொல்லப்போகிறார் என்பது தெரிந்திருந்தது. அதை நானே கேட்பது அநாகரிகம். ஆனால் அத்தனை சொன்னபின் அதைச் சொல்லாமல் அவரால் இருக்க முடியாது. அது எனக்கு முக்கியமில்லை என்பது போன்ற பாவனையை நான் மேற்கொண்டாக வேண்டும்.


எனவே ”இதனால் உங்கள் உடலுக்கு பிரச்னை எதுமில்லையா?” என்றேன். அவர் “என்ன பிரச்னை?” என்றார். “இல்லை உயிரிகளின் உடல் இரவும் பகலும் கொண்டது. இரவையும் பகலையும் தூக்கத்தை மாற்றிக்கொள்வதன் மூலம் நீங்கள் ஓரளவு மாற்றிக் கொள்ளலாம். ஆனால் பகலிலேயே வாழ்வதென்பது…” என்றபின் “அதிலும் பெரும்பாலும் நீங்கள் சூரிய வெளிச்சத்திலேயே இருக்கிறீர்கள்” என்றேன்.


“ஆம் முடிந்த வரை வெயிலைப்பார்த்துக் கொண்டுதான் இருப்பேன். வெயில் படாத இடங்களில் நான் இருப்பது மிகக்குறைவுதான். நல்ல வேளையாக இன்றைய விமான நிலையங்கள் அனைத்தும் மின்சார சேமிப்பிற்காக சூரிய ஒளியை உள்ளே விடுவது போல் தான் அமைக்கப்பட்டிருக்கின்றன.” என்றார்.


“கண்கள் மட்டும் அல்ல தோலும் சூரியனை அறிகிறது. இவை இரண்டுக்கும் தொடர்பில்லாமலேயே மூளை சூரியனை அறிகிறது.புறஊதாக்கதிர்கள், அகச்சிவப்புக்கதிர்கள்…” என்றேன்


”நீங்கள் சொல்வது உண்மை மனித உடல் சூரியனை அறிகிறது. அதைக்கொண்டு இரவையும் பகலையும் பகுக்கிறது. எனக்கும் அப்பிரச்னைகள் இருந்தன. நான் பகலில் வாழ ஆரம்பித்தபோது தலைக்கு மேல் இருக்கும் சூரியனை பிடிவாதமாக மறுத்து என் உடல் இரவை நடிக்க ஆரம்பிக்கும். ஆனால் ஓரிரு மாதங்களுக்குள் உடலும் புரிந்து கொண்டது. இப்போது அது எப்போதும் பகலில் தான் இருக்கிறது. எப்போதுமிருக்கும் பகலில் தான் தூங்குகிறேன். நான் தூங்குவது மிகவும் குறைவுதான், ஒரு நாளுக்கு நான்கு மணிநேரம், அதுவும் சேர்ந்தாற்போல் அல்ல.”


திடீரென்று எழுந்த ஒரு குரூரமான உணர்வால் உந்தப்பட்டு நான் அவரிடம் ”இன்னும் எத்தனை காலம் இப்படி வானில் இருப்பீர்கள்?” என்றேன். அவர் புன்னகையுடன் “ஒரு நாள்” என்றார். “ எனக்கிருப்பது ஒருநாள்தான். அந்த முடிவற்ற நாளில்தான் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்” என்றார்


என்ன நோய், என்று நான் கேட்கவில்லை. ஒளியுடனோ இருளுடனோ தொடர்புடைய ஏதோ ஒரு நோய் என்று நான் எண்ணிக் கொண்டிருந்தபோது அவர் “ரத்தப்புற்று நோய்” என்றார்.என் எண்ண ஓட்டத்தை கூர்மையாக வெட்டி “எனக்கல்ல” என்று சேர்த்துக்கொண்டார்.


“ரத்தப்புற்றுநோய் ஜப்பானில் மிக அதிகம். உங்களுக்குத் தெரிந்திருக்கும் நூற்றைம்பதாண்டுகளுக்கு முன் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடித்தபின் அப்பகுதியில் புற்று நோய் பல மடங்கு அதிகரித்தது. எங்கள் குடும்பத்தில்கூட தலைமுறை தலைமுறையாகவே குழந்தைகள்கூட புற்றுநோயில் செத்துக் கொண்டிருக்கின்றன”


“புற்றுநோய் யாருக்கு?” என்றேன். அவர் சிலகணங்களுக்குப்பின் “என் இளமைக்காதலிக்கு” என்றார். நான் அதை ஓரளவு ஊகித்திருந்தேன். “அகேமி என்றால் ஜப்பானிய மொழியில் சுடர். நானும் அவளும் ஒரே வயது. ஒரே ஊர், ஹிரோஷிமாவுக்கு அருகில்தான்” என்றார். “ஒரே பள்ளியில் படித்தோம். ஒரே தோட்டங்களில்தான் விளையாடினோம்”


“நான் இளமையிலேயே ஆரோக்கியமான குழந்தையாக இருக்கவில்லை. மெலிந்த வெளிறிய உடல். இளமையிலேயே நரம்புச்சிக்கல்கள் இருந்தன.என் குடும்பத்தால் பொத்தி பொத்தி வளர்க்கப்பட்டேன். பாதுகாவலர்களுடன் தான் பள்ளிக்கூடத்திற்கு சென்று கொண்டிருந்தேன். வீட்டில் எப்போதும் வேலைக்காரர்களுடன் தான் வாழ்ந்தேன். வெளி உலகம் ஒன்று இருக்கிறது. அங்கு என்ன நிகழ்கிறது என்று எனக்குத்தெரியாது. என் வெளியுலகமே அவள்தான். எங்களைப்போலவே பணக்காரக்குடும்பம். என் குடும்பம் அவர்களுடன் தலைமுறை உறவு உடையது”


அவர் பெருமூச்சுவிட்டர். “எங்களூரில் தொடர்ந்து நோய்க்கான பரிசோதனை செய்து கொண்டிருப்போம் என்பதனால் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டார்கள். வழக்கமாக கதிரியக்கப் பாதிப்பால் வரும் புற்றுநோய் விரைவாகப் படராது. உடல் உபாதையாக நெடுநாள் நீடித்த பின்னரே உயிர் பறிக்கும் அளவுக்கு மாறும். மாறாக அவளுக்கு லுக்கிமியா உடலில் தீ போல பற்றி எரிந்து மேலேறியது. நோய் அடையாளம் காணப்பட்டுவிட்ட எட்டு மாதங்களுக்குள் வெளிறி நான்குமுறை கழுவப்பட்ட சுமிஇ ஓவியம்போல ஆகிவிட்டாள்”


“மூக்கின் சவ்வு உடைந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. கண்கள் ரத்தச் சிவப்பாக மாறிவிட்டன. மருத்துவமனையில் கிடந்தாள். அவளுடன் நானும் இருந்தேன். பகலா இரவா என்று தெரியாத வார்டில் உடல் முழுக்க குழாய்களும் கருவிகளும் கம்பிகளும் பொருத்திக் கொண்டு படுத்திருந்த அவளை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். சிலசமயம் எண்ணப்பெருக்கு. சிலசமயம் மனமே இல்லாமல் வெறும் வெண்ணிறமான புகைமூட்டமும் ரீங்காரமும்”


“என்னிடம் எதையும் எவரும் சொல்லவில்லை. அவள் அம்மா உடனிருந்தாள். என் அம்மா அடிக்கடி வந்துபோவாள். என் அம்மா இரு உடன்பிறந்தவர்களையும் கணவனையும் அதே நோய்க்குப் பறிகொடுத்தவள். அவள் அம்மாவின் இரு சகோதரர்களும் கணவரும் இறந்த நோயும் அதுவே. ஆகவே அவர்களுக்குக் கொந்தளிப்பு எதுவும் இல்லை. நான் அவர்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்களின் முகம் கொள்ளும் மாற்றம் வழியாகவே என்ன நிகழ்கிறதென்று புரிந்து கொண்டேன்.”


“ஒருநாள் இரவில் அவளுடன் நான் மட்டும் இருந்தேன். அப்பால் தாதி ஏதோ செய்துகொண்டிருந்தாள். செவிலியர் வேறு அறைக்குள் பேசிக்கொண்டிருந்த ஒலி. அவள் என்னைப் பெயர்சொல்லி அழைத்தாள். அல்லது அது என் பிரமை. அவள் குரலை இழந்திருந்தாள். நான் பார்த்தபோது அவள் உதடுகள் அசைந்தன. நான் எழுந்து சென்று அவள் உதடுகளில் என் காதை வைத்தேன். அவள் மெல்ல ‘விளக்குகளை அணை’ என்றாள்”


“நான் குழப்பமாக ‘ஏன்?” என்றேன். ‘விளக்குகளை அணை… ஒளி என்னை எரிக்கிறது’ என்றாள். நான் மீண்டும் ‘இந்த ஒளியா?’ என்றேன். மிதமான குளிர்ந்த மின்னொளி அது. ‘சூரிய ஒளி… அது என்னை உருக்குகிறது’ என்றாள் ‘தயவுசெய்து விளக்கை அணை’ நான் எழுந்து விளக்குகளை அணைத்தேன். ‘எல்லா விளக்கையும்…’ என்றாள். மேலும் விளக்குகளை அணைத்தேன். ‘முழு இருட்டு’ என்றாள். இறுதிவிளக்கையும் அணைத்தேன். அவள் கண்கள் இருளுக்குள் மின்னி மெல்ல அணைவதைக் கண்டேன்”


தாதி ஓடிவந்து ‘என்ன செய்கிறாய்?” என்றாள். விளக்குகளைப்போட்டு அவள் பார்த்தபோது நிலைகுத்தியவிழிகளுடன் அவள் இறந்திருந்தாள். ‘என்ன செய்தாய்? என்ன செய்தாய் நீ?’ என்று தாதி கூச்சலிட்டாள். செவிலியரும் கூச்சலிட்டபடி ஓடிவந்தார்கள். நான் ‘இதுதானா?’ என சொல்லிக்கொண்டேன். ‘இதுதான் இறப்பா?’ இறப்பு என்னும் சொல்லை உள்ளம் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தது


“பலநாட்கள் அச்சொல்லில் வாழ்ந்தேன். இது இப்போது சொல்லும்போது எளிதாக இருக்கிறது. இறப்பு என்னும் சொல் அல்ல இறப்பு என்பது. ஃப்யூஜியாமா என்ற வார்த்தையை எழுத்தில் படிப்பதற்கும் அந்த மாபெரும் எரிமலைக்கு முன் சென்று நிற்பதற்குமான வேறுபாடு. மன்னிக்க வேண்டும். நான் இதை இவ்வளவுதன் சொல்ல முடிகிறது என்னைவிட சிறப்பாக ஒரு எழுத்தாளர் புனைகதையில் சொல்லிவிடக்கூடும்” என்றார்.


“என்னால் உணரமுடிகிறது” என்றேன். “நான் மாதக்கணக்கில் என் இருண்ட அறைக்குள் வாழ்ந்தேன். கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிக்கொள்வேன். கைகளால் துழாவித்தான் மேஜையிலிருக்கும் காபிக்கோப்பையை எடுக்கமுடியும். அத்தனை அடர்ந்த இருள். அதற்குள் மட்டுமே என்னால் வாழமுடிந்தது. என் அன்னை பல மருத்துவர்களைக்கூட்டிவந்து என்னைக் காட்டினாள். நான் அந்த முடியாத இரவில் வாழ்ந்தேன்”


“அப்போதுதான் ஒரு கனவு வந்தது. அவளைக் கண்டேன். கனவா அல்லது உருவெளித்தோற்றமா என இப்போது சொல்லமுடியாது. அவள் ஒளிகொண்டிருந்தாள். கண்ணாடிசிலையில் வெயில்பட்டதுபோல. என்னிடம் ஏதோ சொன்னாள். என்ன சொல்கிறாள் என்று உற்று அவள் உதடுகளைப்பார்த்தேன். விழித்துக்கொண்டேன். உடனே அச்சொல் தெளிவாக என் தலைக்குள் வெடித்தது.  ‘ஒருபகல்தானே?’ என்று அவள் சொன்னாள்”


“ஒரு பகல்! எனக்கு ஒரு பகல் மட்டும் தான் எஞ்சியிருக்கிறது! முதலில் அது ஒரு பெரும் நிம்மதியாக இருந்தது. பின்னர் இனிய எதிர்பார்ப்பு. ஆனால் நேரம் செல்லச்செல்ல என் உள்ளம் அச்சம்கொள்ளத் தொடங்கியது. ஒரு பகல். இன்னும் சற்று நேரம். அதன்பின் இருள். எனக்குள் அமர்ந்து கொண்டு யாரோ பித்துப்பிடித்து பேசிக் கொண்டிருப்பது போல. நான் நினைத்தால் கூட அவர் பேசுவதை நிறுத்த முடியாது என்பது போல”


“அஞ்சியும் தயங்கியும் எழுந்துசென்று ஒரு கதவை கொஞ்சம் திறந்தேன். கூரிய வாள் போல ஒளிக்கீற்று அறையை இரண்டாகப்பிளந்தது.என் உடல் நடுங்கியது. கண்களை மூடிக்கொண்டேன். விழுந்துவிடாமலிருக்க ஜன்னல்கதவைப் பிடித்துக்கொண்டேன். ஒளியை என் உடலே உணர்ந்தது. என் திசுக்களெல்லாம் விரியத்தொடங்கின. சோடாநீர் போல குருதியில் கொப்புளங்கள் வெடித்து சிதறிக்கொண்டே இருந்ததை அறிந்தேன். மெல்ல கதவைத்திறந்து வெளியே வந்தேன்”


“நன்றாக விடிந்து வெயில் பெருகிக் கிடந்த மே மாதப் பின்காலை. பறவைகள் அனைத்தும் வானில் இருந்தன. அவற்றின் குரல்களின் கலவையோசையை தொலைவில் கேட்க முடிந்தது. அவ்வப்போது தரையில் நிழல்களாக கடந்து சென்றனபறவைக்கூட்டங்கள். ஒளியில் எனக்குக் கண்கூசியது. கண்ணீர் வழிந்து பார்வையை மறைத்து தாடை வழியாக நெஞ்சில் சொட்டிக் கொண்டிருந்தது. அங்கே நின்று நடுங்கிக்கொண்டிருந்தேன்”


“நான் வெயிலைப்பார்ப்பதே அபூர்வம். வெயில் அப்படி உருகிவழிந்து ஒளிகொண்டிருக்கும் என அப்போதுதான் அறிந்தேன். சூரியனைப்பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். சூரியனை எப்போதுமே நான் ஏறிட்டுப் பார்த்ததில்லை. வானில் அப்படி ஒன்று இருந்து ஒளியைக் கொட்டிக் கொண்டிருக்கிறது என்று மட்டுமே அறிந்திருந்தேன். உண்மையில் கண்ணாடிகளில் அதைப்பார்த்திருக்கிறேன். ஓவியங்களாக கண்டிருக்கிறேன். தற்செயலாக கண்ணில்விழும் ஒளிப்பெருக்காக உணர்ந்திருக்கிறேன்”


“பதினெட்டு வயதான ஒருவன் தன் வாழ்நாளில் முதல் முறையாக சூரியனை நிமிர்ந்து பார்த்தான். ‘எத்தனை மகத்தான ஒளிவட்டம்!’ என்று தான் முதலில் தோன்றியது. பொன்னிற வட்டத்திற்கு உள்ளே உருகும் வெள்ளி வட்டம் அதற்குள் இளநீலம் அலையடிக்கும் ஒரு தாலம். என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து மறைந்தது. மீண்டும் திறந்தபோது மிக அருகே என நானும் சூரியனும் மட்டுமே எஞ்சினோம்.”


”சொல்லப்போனால் சூரியனை நான் அப்போது வானத்தில் பார்க்கவில்லை. எனக்குச் சமானமான தூரத்தில் சற்று ஓடினால் தொட்டு விடும் போல அருகே என் அளவேயான ஒரு வட்டமாக பார்த்தேன். இதை ஒரு மனப்பிரமை என்று தான் நீங்கள் சொல்வீர்கள். நான் அப்படித்தான் எண்ணினேன். ஆனால் எது பிரமை எது உண்மை என்றெல்லாம் எப்படி கண்டுபிடிப்போம். எது நமக்கு மகிழ்வளிக்கிறதோ எது நம்மை வாழச்செய்கிறதோ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 03, 2016 11:32

விமர்சனங்கள் தொகுப்பு

ve


ஜெ


 


இணையத்தில் தேடிக்கொண்டிருந்தபோது இந்த தொகுப்பைக் கண்டேன். உங்கள் இணைய இலக்கியவிமர்சனங்கள் அனைத்தையும் தொகுத்திருக்கிறார். வாசிப்பவர்களுக்கு மிக உதவியான பணி. இத்தகைய வாசகர்கள் ஒரு எழுத்தாளருக்கு, விமர்சகருக்கு இருக்கிறார்கள் என்பதே பெரும் ஊக்கத்தை அளிக்கிறது


 


ஜெயராமன்


அனைத்து விமர்சனக்கட்டுரைகளும். தொகுதி


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 03, 2016 11:32

October 2, 2016

காட்சன் – பனைமரப்பாதை

index


அன்புள்ள அண்ணன்,


இப்பொழுது தான் பனைமரச் சாலையை நிறைவுசெய்தேன். பிரசவித்த மனநிலை என்பதைவிட பனம்பழம் உதிர்த்த பனை மரம்போல சலனமற்று இருக்கிறது மனசு. பனை எனும் பிரம்மாண்டத்தின் முன்னால் குருவியாக நான் உட்கார ஏதேனும் நிழந்திருந்தால் அதற்கு நான் தகுதியுடையவன் அல்ல. நான் உயர்ந்து நோக்கும் பலரும் இதைவிட பலபடிகள் முன்னோக்கி சென்று பெரும் பங்களிப்பாறியிருக்கவேண்டிய தருணத்தில், நான் ஒரு ஆத்மார்த்தமான முயற்சியை எடுக்க கடவுள் எனக்கு ஒரு நல் வாய்ப்பை அளித்தார் என்றே கொள்ளுகிறேன்.


 


 


பலவித சிக்கல்களுக்கு மத்தியில் எனது பயணம் நடைபெற்றதே பெரும் அதிசயம்.அதை விடுங்கள். நீங்கள் சிங்கபூர் செல்லும் முன்பு பார்க்கவேண்டும் என நினைத்து முடியவில்லை, ஆனால் நீங்கள் உங்கள் வாசகர் படையை என்னை நோக்கி திருப்பிவிட்டீர்கள். நான் 500 வார்த்தை எழுதினால் அவர்கள் 600 வார்த்தை எழுதுகிறார்கள். நல்ல பயிற்சி பெற்ற உலக வாசகர்களை உங்களாலேயே அடைந்தேன். நீங்கள் என்னை அறிமுகப்படுத்தி இரண்டே வாரத்தில் கோவையில் ஒரு நிகழ்ச்சியை பேராசிரியை லோகமாதேவி ஒழுங்கு செய்தார்கள், தினமும் பின்னூட்டமும் இட்டார்கள், கதிர் முருகன் உங்களால் எனக்கு கிடைத்த ஒரு தம்பி, சரவணன், இளங்கோ, நம்மூரைச் சார்ந்த சாகுல் ஹமீது, திருச்சி. டெய்சி மற்றும் அகிலன் ஆகியோர் கடிதங்கள் எழுதி ஊக்குவித்தனர். அனெகர் தொலைபேசியிலும் அழைத்க்டு வாழ்த்து தெரிவித்தனர். முதல் அழைப்பு சென்னையிலிருந்து ஒரு பேராசிரியை அழைத்தது என நினைக்கிறேன்.


 


நேற்று தான் சொல்வனத்தில் வெளியான கட்டுரையை வாசித்தேன், அதுவும் நீங்கள் என்னை அறிமுகம் செய்ததாலேயே சாத்தியமாகியிருக்கிறது  என்பதில் சந்தேகம் இல்லை.


அனைத்திற்கும் நன்றி


 


https://pastorgodson.wordpress.com/2016/09/29/பனà¯à®®à®°à®šà¯à®šà®¾à®²à¯-90/


 


தம்பி


காட்சன் சாமுவேல்


 


அன்புள்ள காட்சன்,


 


நலம்தானே?


உங்கள் பயணம் முக்கியமானது. நான் முதல் ஆர்வம் கொண்டது அதில்தான். அத்துடன் உங்களுக்கு எழுதவும் வருகிறது


 


இறைசேவை முதன்மையானது, ஆன்மாவுக்கு அணுக்கமானது. ஆனால் ஒருவர் அவருக்கு எது தனித்திறனோ அதில் இறைச்சேவை ஆற்றுவதே முழுமையானதாக அமையமுடியும். நீங்கள் செவை செய்யலாம். பேசலாம். ஜெபிக்கலாம். எழுதும்போது கிறிஸ்து மேலும் மகிழ்ச்சி அடைவார் என நினைக்கிறேன்


 


ஜெ



 


அன்புள்ள அண்ணன்,

பனைமரச்சாலை நிறைவுற்றது. அதை எழுதுகையில் சந்தித்த, உங்கள்  வாசகர்களையும்  பட்டியலிட்டிருக்கிறேன். மொத்தத்தில் எப்படி வந்திருக்கிறது  என உங்கள் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன். பொறுமையாக சொன்னால் போதும். மேலும் இது புத்தகமாக்கப்படுமானால் உங்களின் முன்னுரை ஒன்றும் வேண்டும் என இப்போதே முன்பதிவு செய்துகொள்ளுகிறேன்.

காட்சன்

 


இணைப்பு கட்டுரை பனைமரச்சாலை

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 02, 2016 11:32

காந்தியம் தோற்கும் இடங்கள் உரை – வீடியோ

தாங்கள் இன்று மாலை ஆற்றிய உரையின் காணொளித் தொகுப்பு எங்களது shruti.tv YouTube தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இத்துடன் அதன் சுட்டியை தங்களது பார்வைக்கு இணைத்துள்ளோம்.


இராமலிங்கர் பணி மன்றத்தின் 51 ஆம் ஆண்டு “அருட்பிரகாச வள்ளலார், மகாத்மா #காந்தி விழாவில்,

‘காந்தியம் தோற்கும் இடங்கள்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் #ஜெயமோகன் உரை


https://www.youtube.com/watch?v=CW9TyW3puQY


 


 


நன்றி

Team Shruti.tv

Rathinam

editor

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 02, 2016 11:06

October 1, 2016

ஒழுக்கப்பார்வையும் கலையும்

pon1

பொன் சுந்தர ராசு [நன்றி பொன் சுந்தர ராசு இணையதளம்]


தமிழகத்தில் 1960-70களில் எழுதிய எழுத்தாளர்களில் நா.பார்த்தசாரதி ஒருமுக்கியமான ஆளுமையாக இருந்தார். இன்றைய வாசகன் நா.பாவின் படைப்புகளைப் படிக்கும்போது அவருடைய புகழுக்குக் காரணம் அறியாமல் திகைக்கக் கூடும். அவருடைய பெரும்பாலான படைப்புகள் மிக எளிமையான நேரடிநடையில் சொல்லப்பட்டிருக்கும். கதையின் வாழ்க்கைக்களமோ, கதைமாந்தரின் சமூக அடையாளங்களோ, சிறப்பான தன்னியல்புகளோ கதைகளில் இருக்காது. அவை மராட்டிய எழுத்தாளர் வி.எஸ்.காண்டேகரின் லட்சியவாத படைப்புகளின் வழி வந்தவை.


ஒரு லட்சியவாத கருத்தை மட்டுமே முன்வைக்கக்கூடியவை அவ்வகை எழுத்துக்கள். அவை அக்கருத்துக்கு உரிய ஒரு தருணத்தை கண்டடைகின்றன. எளிமையாக நாடகப்படுத்தி அக்கருத்தை நேரடியாக வெளிப்படுத்தி முடிகின்றன. கதைகளின் இறுதியில் பெரும்பாலும் யாரோ யாரிடமோ கண்ணீர் மல்க மன்னிப்புக் கோருவார்கள். காலில் விழுவார்கள். யாரோ யாரையோ புரிந்துகொண்டு நிறைவடைவார்கள்.


இத்தகைய கதைகளுக்கு இன்று எந்த மதிப்பும் இல்லை என்றாலும் இப்போதும் இவை ஏராளமாக எழுதப்படுகின்றன. எழுபதுகள் வரை இக்கதைகளுக்கு ஏன் அத்தனை பெரிய செல்வாக்கு இருந்தது என்று யோசிப்பவர்களுக்கு ஒன்று தெரியும். அது ஒருவகையான பண்பாட்டு மாற்றத்தின் காலம். முந்தைய நிலப்பிரபுத்துவகால விழுமியங்களிலிருந்து நவீன முதலாளித்துவ விழுமியங்களை நோக்கி தமிழ்ச்சமூகம் தன்னை உடைத்து உருமாற்றிக் கொண்டிருந்த பொழுது.


ஆகவே பெரும்பாலான கதைகளின் உள்ளடக்கம் ஒரு பழமையான மதிப்பீடு ஒன்றிலிருந்து ஒரு புதிய மதிப்பீடு ஒன்றுக்கு கடந்துவரும் பயணமாக இருக்கும். அல்லது சீர்குலைந்த ஒரு சமகால விழுமியத்தை முன்வைத்து அதற்கு மாற்றாக தொன்று தொட்டே இருக்கக்கூடிய ஒரு விழுமியத்தை சொல்லக் கூடியதாக இருக்கும். விழுமியங்களின் உருமாற்றம் என்ற ஒற்றை வரியில் இந்த அத்தனை கதைகளையும் வரையறுத்துவிட முடியும்.


அகிலன், நா.பா இருவரும் இக்காலகட்டத்தின் நாயகர்கள். இன்று அகிலன் கதைகளில் அநேகமாக எவையுமே நினைவுகூரப்படுவதில்லை. நா.பாவின் கதைகளைப்பற்றி சென்ற முப்பதாண்டுகளில் தமிழிலக்கிய விமர்சனச் சூழலில் எவரேனும் எங்கேனும் ஒரு வரியேனும் பேசி நான் கேட்டதில்லை. அக்கதைகளை இன்று திரும்பிப் பார்க்கையில் அவற்றின் கலைமதிப்பு நமக்கு பெரிதாகத் தோன்றாது. உணர்வுரீதியாகவும் அவை நம்மை வந்தடையா. ஆயினும் அவை பேசிய அந்த விழுமியங்களின் மாற்றத்தை ஒட்டி இன்றைய சூழலில் நின்றுகொண்டு நிறைய அவதானிப்புகளை நிகழ்த்த முடியுமென்று தோன்றுகிறது.


அதாவது எப்படி தமிழ்ச்சமூகம் தன்னை ஒரு பொது விவாதம் மூலம் மாற்றிக் கொண்டது என்று அவற்றை வைத்து சொல்ல முடியும். அந்தப் பொது விவாதம் பலவகையான இடக்கரடக்கல்கள் நிறைந்தது. எந்த கூரிய விமர்சனங்களும் இல்லாமலேயே அந்த விழுமிய மாற்றத்தை அது செய்து கொண்டது. உதாரணமாக நா.பா அல்லது அகிலனின் ஆண் பெண் உறவு பற்றிய கதைகள் எவற்றிலும் அந்த ஆணும் பெண்ணும் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது இருப்பதில்லை. அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள சமூக பின்புலமே இருப்பதில்லை. அவை எந்த மக்களையும் குறிப்பாகச் சீண்டக்கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருந்தனர்.


பெரும்பாலும் அக்கதாபாத்திரங்கள் ஆணும் பெண்ணுமாக மட்டுமாக இருக்கும். அவர்கள் வாழும் சூழல் ஆசிரியரால் செயற்கையாக கட்டமைக்கப்பட்டதாக இருக்கும். இது சரி, இது தவறு என்பதற்கு அப்பால் சென்று இப்படி பார்க்கலாமே, இதுதான் சிறந்ததாக இருக்ககூடுமோ என்ற அளவிலே அந்தக் கதைகள் நின்றுவிடும்.


அவை வெகுஜன தளத்திலே எழுதப்பட்ட கதைகள். வெகுஜன ஏற்பு அவற்றுக்குக் கட்டாயம். ஆகவே அவை நுணுக்கமான வாசகப் பின்னூட்டம் வழியாக மெல்லமெல்ல உருமாற்றிக்கொண்டு தங்களை உருவாக்கிக் கொண்டவை. வாசகர்கள் அத்தகைய கதைகளை விரும்பியிருக்கிறார்கள். தங்கள் விழுமியங்களை மறுபரிசீலனை செய்யவும் தங்களை மறுகட்டமைப்பு செய்யவும் அவர்கள் ஆசைப்படும்போதே, தங்கள் சமூகப்பின்புலத்தையோ மதத்தையோ விமர்சனம் செய்ய அவர்கள் ஒப்பவில்லை. தங்கள் பழமையை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. இன்றியமையாத புதுமையை மட்டும் வசதிகருதி ஏற்க விரும்புகிறார்கள்.


அதாவது தங்கி வாழ்வதற்கு ஏற்ற சுயநலம் சார்ந்த மாறுதல்களை மட்டுமே தங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திக் கொள்ள விரும்புகிறார்கள். அவை என்ன என்றுதான் அகிலனிடமும் நா.பாவிடமும் கேட்கிறார்கள். அகிலனும் நா.பாவும் அவற்றை புரிந்துகொண்டு அந்த தளத்திற்குள் நின்று எழுதியதால்தான் அவர்கள் அத்தனை புகழ் பெற்றார்கள்.


அவர்களைத் தொடர்ந்து வந்த ஜெயகாந்தன் எழுத்தாளனின் ஆண்மையுடன் அவ்வாசகர்களின் அனைத்து பாவனைகளையும் மோதி உடைத்தார். அவர்களை அறைந்து திருத்த முயன்றார். மிக மென்மையான சில பாலியல் – குடும்பஉறவு மாற்றங்களை மட்டுமே பேசிக் கொண்டிருந்த நா.பாவுக்கும் அகிலனுக்கும் மாறாக ஜெயகாந்தன் ஒட்டுமொத்தமான மாற்றத்திற்காகவும் ஆன்மீகமான பரிணாமத்துக்காகவும் அறைகூவினார். இந்த ஒரு அம்சமே ஜெயகாந்தனை பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது என்று தோன்றுகிறது.


மலேசிய, இலங்கை, சிங்கப்பூர்ச் சூழலில் ஜெயகாந்தனின் செல்வாக்குள்ள படைப்பாளிகள் பலர் உள்ளனர். அகிலன் மற்றும் நா.பாவுடைய செல்வாக்கு இங்கு இருந்துள்ளது. ஆனால் அவர்கள் ஒரு மரபாக முன்னெழவில்லை. அகிலன் , நா.பாவின் மரபில் வந்த எழுத்தாளர் என்று பொன்.சுந்தரராசுவை கணிக்கிறேன். 1981-ல் அவரது சிறுகதைத் தொகுதி அகிலனுடைய முன்னுரையுடன் வெளிவந்துள்ளது. சிங்கப்பூர் மலாய் இதழ்களில் தொடர்ந்து எழுதியவர் பொன்.சுந்தரராசு. தொடர்ந்து அவர் படைப்புகளை எழுதினாரா என்பது இப்போது தெரியவில்லை.


முதல் கதை ‘என்னதான் செய்வது’. நா.பாவும், அகிலனும் சிங்கப்பூர் சூழலில் எழுதியிருந்தால் என்னவகையான இக்கட்டுகளைச் சந்தித்திருப்பார்கள் என்பதை எனக்குக் காட்டியது. கதாநாயகன் விருந்துக்குச் செல்கிறான். அங்கொரு அழகிய இளநங்கையை கண்டு உடனே அவளுடன் இடை கோத்து நடனமிடுகிறான். பார்த்த முதல் நாளிலேயே அவனுடைய தோளில் முகம் புதைத்து அவனிடம் ரகசியம் பேசும் அளவுக்கு அவளால் நெருங்கவும் முடிகிறது. அது அங்கே எவராலும் தவறாக பார்க்கப்படாத ஒரு வாழ்க்கைச் சூழல் அங்கு இருக்கிறது.


ஆனால் அவளை மணந்து கொண்ட முதலிரவில் அவள் தான் ஏற்கனவே ஒருவனை காதலித்திருப்பதாகச் சொல்கிறாள். அது கதாநாயகனை உடைந்து சிதற வைக்கிறது. பொன்.சுந்தரராசு அதற்கு பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் முக்கியமானவை. ”எவ்வளவு பெரிய ஏமாற்றம்! அவன் மட்டுமே அருந்த வேண்டிய பால் !அவன் மட்டுமே முகர வேண்டிய மலர் !அவன் மட்டுமே மீட்ட வேண்டிய வீணை! ஏற்கனவே எச்சிலாக்கப்பட்டு முகரப்பட்டு மீட்டித் தந்தியறுந்த அவலநிலை.”


உண்மையின் இதுதான் கதையின் முடிச்சாக தென்படுகிறது. புலம்பெயர்ந்து ஓர் அதிநவீன நாகரிகச் சூழலில் வாழும் தமிழனின் உள்ளே இருக்கும் கண்ணகிச் சீக்கு இங்கு வெளிப்படுகிறது. விருந்தில் சந்தித்து இடைவளைத்து நடனமாடும் பெண் தான்மட்டுமே முகரவேண்டிய மலராகவும் இருந்தாகவேண்டும் என்கிற அவனுடைய பிடிவாதம் . ஆனால் அது சாத்தியமும் அல்ல. ஆகவே ஓர் இரவு முழுக்க துன்புற்றுவிட்டு அவளுக்கு அவன் ‘வாழ்வு கொடுக்கிறான்’. அவளை ‘இனிமேல் நீ எனக்கு மட்டுமே சொந்தம்’ என சத்தியம் செய்யச்சொல்லிவிட்டு ஏற்றுக் கொள்கிறான். கதைமுடிவில் என்னதான் செய்வது என்று ஆசிரியர் கேட்கும் கேள்வி புன்னகை வரவழைக்கிறது.


இந்தக் கதையில் ‘என்னை மன்னிப்பீர்களா? எனக்கு வாழ்வு கொடுப்பீர்களா?’ என்று கதாநாயகி கேட்பது இன்னும் சுவாரசியமானது. சந்தித்த முதல் நாளே ஒருவனுடன் இடை வளைத்து நடனமாடக்கூடிய பெண்தான் அவள். ஏற்கனவே ஒரு காதல் அனுபவம் உள்ளவளும் கூட. ஆனால் களங்கப்பட்டுவிட்ட ஒருத்தியாகவே அவள் தன்னை எண்ணிக் கொள்கிறாள். அவன் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்பதனால் தன் காதலை மறைக்கிறாள். நாண் அறுந்த தந்தி என அவளை எண்ணும் அவன் அவளை ஏற்றுக்கொண்டாலும் அவ்வுறவு என்னவாக இருக்கும் என்றே எண்ணத்தோன்றுகிறது.


முற்றிலும் மாறுபட்ட ஒரு அந்நிய வாழ்க்கைச்சூழலில் தமிழ்ச்சமூகம் தங்களை பலவகையாகத் தகவமைத்துக் கொள்வதைக் காட்டும் இந்தக் கதை ஒரு கலைப்படைப்பாக முக்கியத்துவம் உடையதல்ல. நேரடியான உரத்தகுரலும் செயற்கையான கதைத்தருணங்களும் இதன் கலைமதிப்பைக் குறைக்கின்றன. ஆனால் ஒரு காலகட்டத்தின் வாழ்க்கையைக் காட்டுவது இது. இத்தொகுதியின் கதைகள் அனைத்தையுமே இப்படி வரையறைசெய்யலாம்


பொன்.சுந்தரராசுவின் பல கதைகளில் இந்தப் பிரச்னை ஓடிக் கொண்டிருக்கிறது. தெரிந்தும் தெரியாததும் கதை இதற்கிணையான ஒன்று. பெண்கள் தங்கள் கணவர்களைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் ஒரு காலகட்டம் வந்திருக்கிறது, உடலழகை பார்த்து அவர்கள் ஆண்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று சலித்துக்கொள்கிறது இக்கதை. வீட்டில் அமர்ந்து பாலியல் விஷயங்களை சகஜமாக பேசிக் கொள்ளும் அண்ணன் தம்பிகளின் குடும்பம். அந்த வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு வந்த வசந்தி அவர்கள் அனைவரையும் ஒழுக்கம் தவறியவர்களாகவே பார்க்கிறாள். அருவருப்பு கொள்கிறாள்.


வசந்தியின் பார்வையில் இந்தக் கதை சொல்லப்படுவதால் உண்மையில் அவர்கள் ஒழுக்கம் தவறியவர்களா என்ற கேள்வி கதைக்கு வெளியே இருந்து கொண்டு தான் இருக்கிறது. தன் தங்கையை கணவனின் தம்பி திருமணம் செய்யும்போது அவள் அதைக் கடுமையாக எதிர்க்கிறாள். ஆனால் தங்கையின் கட்டாயத்துக்கு ஏற்ப அந்த திருமணம் நடக்கிறது. அதை ஒருவழியாக ஏற்றுக்கொள்ளும்போது அடுத்த தங்கை இன்னொரு தம்பியை திருமணம் செய்யும் முடிவை எடுக்கிறாள். இந்தப் பொட்டைக்கழுதைகளுக்குகாதல் பண்ணத்தான் தெரியுதே ஒழிய கண்ணியமான ஒருத்தனைத் தேர்ந்தெடுக்கத் தெரியுதா? என்று வசந்தி அங்கலாய்ப்பதில் இக்கதை முடிகிறது.


சாதாரணமாக பெண்களின் தன்முடிவுகள் தவறாகவே இருக்கின்றன என்று ஆசிரியர் கருதுவது போல இக்கதை அமைந்திருந்தாலும் கூட வேறொரு காலகட்டத்தைச் சேர்ந்த பெண்மணி புதுயுகப்பெண்மணிகளைப் பார்த்து அடையும் பதற்றமே இக்கதைகளில் உள்ளது என்று தோண்றுகிறது.


பொன்.சுந்தரராசின் பெரும்பாலான கதைகள் ஒழுக்கம் சார்ந்த இக்கட்டுகளை பேசுவனவாகவே இருக்கின்றன. இருநூறு வெள்ளி என்றொரு கதை. நடுத்தர வயதில் வெள்ளைக்கார மாதுவுடன் உடலுறவு கொள்வதற்காக இருநூறு வெள்ளியை இயல்பாகச் செலவழிக்கும் ஒருவர் சற்றே கஞ்சப்புத்தியுடையவர். தமிழர்களுக்குரிய பொதுத் தேவை ஒன்றுக்காக இருநூறு வெள்ளி கொடுப்பதை அவர் எப்படிப்பார்க்கிறார், அவருடைய மகன் அதை எப்படி பார்க்கிறான் என்பதுதான் கதை. அன்றைய ஒரு மனநிலைக்கீற்று கடந்துசெல்வதனாலேயே நேரடியான பிரச்சாரமாகிய இக்கதை என்னைக் கவர்ந்தது.ஸ்பைரோஸ் என்னும் கப்பல் விபத்துக்குள்ளான தகவல் இக்கதைக்குள் வருகிறது. அந்த எளிமையான தகவல் சட்டென்று ஒரு காலச்சித்திரம் தருவதை ஆச்சரியத்துடன் வாசித்தேன்.


இத்தொகுதியின் ஒரே நல்ல கதை என்று நான் எண்ணுவது பட்டுச் சேலை. அகிலனும் அதையே சிறந்த கதையாக சொல்கிறார். அகிலன் சொல்லும் அதே காரணத்துக்காகவே நான் நல்ல கதை என்று சொல்வேன். ஐநூறு வெள்ளிக்கு ஒரு பட்டுப்புடவை திருமணத்துக்கு எடுக்கவேண்டுமென்று ஆசைப்படும் ஒரு குடும்பம், அது படும் வேதனைகள், அந்தப்பெண்ணின் கனவு என கதை செல்கிறது. அதை உணர்ந்துகொண்டு அவளுக்கு மாப்பிள்ளையே ஐநூறு வெள்ளி பணம் கொடுத்து புடவையை எடுக்க வைக்கிறார்.


அந்தக் காலத்தில் எழுதப்பட்ட கதைகள் பலவற்றில் பெண்ணின் உள்ளத்தை புரிந்து கொள்ள கணவன் இவ்வாறு செய்வது இறுதித் திருப்பமாக வந்திருக்கிறது. ஆனால் இக்கதையில் நான் இதன் நுட்பமாக பார்ப்பது முற்றிலும் மாறுபட்ட சிங்கைச் சூழலிலும் கூட பெண் அதே பட்டுப்புடவையைத்தான் ஆசைப்படுகிறாள் என்ற தகவல் தான்.


ஒரு சிறந்த சிறுகதையை இத்தொகுதியில் என்னால் காணமுடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் நா.பார்த்தசாரதியும் அகிலனுமே என் நோக்கில் சிறந்த கதை எதையும் எழுதவில்லை. அவர்களைப்போலவே இத்தொகுதியின் எல்லாக் கதைகளுமே எளிமையான முடிப்புகளும் எளிமையான தீர்வுகளும் கொண்டவை. ஆனால் இவை சிங்கப்பூரின் ஒரு காலகட்டத்தைக் காட்டுகின்றன. சமூக சீர்திருத்த நோக்கமும் மனிதாபிமானத்தை வலியுறுத்தும் தன்மையும் கொண்ட கதைகள். அவ்வகையில் அவை ஒரு வரலாற்று முக்கியத்துவம் உடையவை.


[என்னதான் செய்வது? பொன் சுந்தரராசு]


பொன் சுந்தர ராசுவின் வலைத்தளம்


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 01, 2016 11:33

ஒழுக்கப்பார்வையும் கலையும்

pon1

பொன் சுந்தர ராசு [நன்றி பொன் சுந்தர ராசு இணையதளம்]


தமிழகத்தில் 1960-70களில் எழுதிய எழுத்தாளர்களில் நா.பார்த்தசாரதி ஒருமுக்கியமான ஆளுமையாக இருந்தார். இன்றைய வாசகன் நா.பாவின் படைப்புகளைப் படிக்கும்போது அவருடைய புகழுக்குக் காரணம் அறியாமல் திகைக்கக் கூடும். அவருடைய பெரும்பாலான படைப்புகள் மிக எளிமையான நேரடிநடையில் சொல்லப்பட்டிருக்கும். கதையின் வாழ்க்கைக்களமோ, கதைமாந்தரின் சமூக அடையாளங்களோ, சிறப்பான தன்னியல்புகளோ கதைகளில் இருக்காது. அவை மராட்டிய எழுத்தாளர் வி.எஸ்.காண்டேகரின் லட்சியவாத படைப்புகளின் வழி வந்தவை.


ஒரு லட்சியவாத கருத்தை மட்டுமே முன்வைக்கக்கூடியவை அவ்வகை எழுத்துக்கள். அவை அக்கருத்துக்கு உரிய ஒரு தருணத்தை கண்டடைகின்றன. எளிமையாக நாடகப்படுத்தி அக்கருத்தை நேரடியாக வெளிப்படுத்தி முடிகின்றன. கதைகளின் இறுதியில் பெரும்பாலும் யாரோ யாரிடமோ கண்ணீர் மல்க மன்னிப்புக் கோருவார்கள். காலில் விழுவார்கள். யாரோ யாரையோ புரிந்துகொண்டு நிறைவடைவார்கள்.


இத்தகைய கதைகளுக்கு இன்று எந்த மதிப்பும் இல்லை என்றாலும் இப்போதும் இவை ஏராளமாக எழுதப்படுகின்றன. எழுபதுகள் வரை இக்கதைகளுக்கு ஏன் அத்தனை பெரிய செல்வாக்கு இருந்தது என்று யோசிப்பவர்களுக்கு ஒன்று தெரியும். அது ஒருவகையான பண்பாட்டு மாற்றத்தின் காலம். முந்தைய நிலப்பிரபுத்துவகால விழுமியங்களிலிருந்து நவீன முதலாளித்துவ விழுமியங்களை நோக்கி தமிழ்ச்சமூகம் தன்னை உடைத்து உருமாற்றிக் கொண்டிருந்த பொழுது.


ஆகவே பெரும்பாலான கதைகளின் உள்ளடக்கம் ஒரு பழமையான மதிப்பீடு ஒன்றிலிருந்து ஒரு புதிய மதிப்பீடு ஒன்றுக்கு கடந்துவரும் பயணமாக இருக்கும். அல்லது சீர்குலைந்த ஒரு சமகால விழுமியத்தை முன்வைத்து அதற்கு மாற்றாக தொன்று தொட்டே இருக்கக்கூடிய ஒரு விழுமியத்தை சொல்லக் கூடியதாக இருக்கும். விழுமியங்களின் உருமாற்றம் என்ற ஒற்றை வரியில் இந்த அத்தனை கதைகளையும் வரையறுத்துவிட முடியும்.


அகிலன், நா.பா இருவரும் இக்காலகட்டத்தின் நாயகர்கள். இன்று அகிலன் கதைகளில் அநேகமாக எவையுமே நினைவுகூரப்படுவதில்லை. நா.பாவின் கதைகளைப்பற்றி சென்ற முப்பதாண்டுகளில் தமிழிலக்கிய விமர்சனச் சூழலில் எவரேனும் எங்கேனும் ஒரு வரியேனும் பேசி நான் கேட்டதில்லை. அக்கதைகளை இன்று திரும்பிப் பார்க்கையில் அவற்றின் கலைமதிப்பு நமக்கு பெரிதாகத் தோன்றாது. உணர்வுரீதியாகவும் அவை நம்மை வந்தடையா. ஆயினும் அவை பேசிய அந்த விழுமியங்களின் மாற்றத்தை ஒட்டி இன்றைய சூழலில் நின்றுகொண்டு நிறைய அவதானிப்புகளை நிகழ்த்த முடியுமென்று தோன்றுகிறது.


அதாவது எப்படி தமிழ்ச்சமூகம் தன்னை ஒரு பொது விவாதம் மூலம் மாற்றிக் கொண்டது என்று அவற்றை வைத்து சொல்ல முடியும். அந்தப் பொது விவாதம் பலவகையான இடக்கரடக்கல்கள் நிறைந்தது. எந்த கூரிய விமர்சனங்களும் இல்லாமலேயே அந்த விழுமிய மாற்றத்தை அது செய்து கொண்டது. உதாரணமாக நா.பா அல்லது அகிலனின் ஆண் பெண் உறவு பற்றிய கதைகள் எவற்றிலும் அந்த ஆணும் பெண்ணும் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது இருப்பதில்லை. அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள சமூக பின்புலமே இருப்பதில்லை. அவை எந்த மக்களையும் குறிப்பாகச் சீண்டக்கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருந்தனர்.


பெரும்பாலும் அக்கதாபாத்திரங்கள் ஆணும் பெண்ணுமாக மட்டுமாக இருக்கும். அவர்கள் வாழும் சூழல் ஆசிரியரால் செயற்கையாக கட்டமைக்கப்பட்டதாக இருக்கும். இது சரி, இது தவறு என்பதற்கு அப்பால் சென்று இப்படி பார்க்கலாமே, இதுதான் சிறந்ததாக இருக்ககூடுமோ என்ற அளவிலே அந்தக் கதைகள் நின்றுவிடும்.


அவை வெகுஜன தளத்திலே எழுதப்பட்ட கதைகள். வெகுஜன ஏற்பு அவற்றுக்குக் கட்டாயம். ஆகவே அவை நுணுக்கமான வாசகப் பின்னூட்டம் வழியாக மெல்லமெல்ல உருமாற்றிக்கொண்டு தங்களை உருவாக்கிக் கொண்டவை. வாசகர்கள் அத்தகைய கதைகளை விரும்பியிருக்கிறார்கள். தங்கள் விழுமியங்களை மறுபரிசீலனை செய்யவும் தங்களை மறுகட்டமைப்பு செய்யவும் அவர்கள் ஆசைப்படும்போதே, தங்கள் சமூகப்பின்புலத்தையோ மதத்தையோ விமர்சனம் செய்ய அவர்கள் ஒப்பவில்லை. தங்கள் பழமையை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. இன்றியமையாத புதுமையை மட்டும் வசதிகருதி ஏற்க விரும்புகிறார்கள்.


அதாவது தங்கி வாழ்வதற்கு ஏற்ற சுயநலம் சார்ந்த மாறுதல்களை மட்டுமே தங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திக் கொள்ள விரும்புகிறார்கள். அவை என்ன என்றுதான் அகிலனிடமும் நா.பாவிடமும் கேட்கிறார்கள். அகிலனும் நா.பாவும் அவற்றை புரிந்துகொண்டு அந்த தளத்திற்குள் நின்று எழுதியதால்தான் அவர்கள் அத்தனை புகழ் பெற்றார்கள்.


அவர்களைத் தொடர்ந்து வந்த ஜெயகாந்தன் எழுத்தாளனின் ஆண்மையுடன் அவ்வாசகர்களின் அனைத்து பாவனைகளையும் மோதி உடைத்தார். அவர்களை அறைந்து திருத்த முயன்றார். மிக மென்மையான சில பாலியல் – குடும்பஉறவு மாற்றங்களை மட்டுமே பேசிக் கொண்டிருந்த நா.பாவுக்கும் அகிலனுக்கும் மாறாக ஜெயகாந்தன் ஒட்டுமொத்தமான மாற்றத்திற்காகவும் ஆன்மீகமான பரிணாமத்துக்காகவும் அறைகூவினார். இந்த ஒரு அம்சமே ஜெயகாந்தனை பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது என்று தோன்றுகிறது.


மலேசிய, இலங்கை, சிங்கப்பூர்ச் சூழலில் ஜெயகாந்தனின் செல்வாக்குள்ள படைப்பாளிகள் பலர் உள்ளனர். அகிலன் மற்றும் நா.பாவுடைய செல்வாக்கு இங்கு இருந்துள்ளது. ஆனால் அவர்கள் ஒரு மரபாக முன்னெழவில்லை. அகிலன் , நா.பாவின் மரபில் வந்த எழுத்தாளர் என்று பொன்.சுந்தரராசுவை கணிக்கிறேன். 1981-ல் அவரது சிறுகதைத் தொகுதி அகிலனுடைய முன்னுரையுடன் வெளிவந்துள்ளது. சிங்கப்பூர் மலாய் இதழ்களில் தொடர்ந்து எழுதியவர் பொன்.சுந்தரராசு. தொடர்ந்து அவர் படைப்புகளை எழுதினாரா என்பது இப்போது தெரியவில்லை.


முதல் கதை ‘என்னதான் செய்வது’. நா.பாவும், அகிலனும் சிங்கப்பூர் சூழலில் எழுதியிருந்தால் என்னவகையான இக்கட்டுகளைச் சந்தித்திருப்பார்கள் என்பதை எனக்குக் காட்டியது. கதாநாயகன் விருந்துக்குச் செல்கிறான். அங்கொரு அழகிய இளநங்கையை கண்டு உடனே அவளுடன் இடை கோத்து நடனமிடுகிறான். பார்த்த முதல் நாளிலேயே அவனுடைய தோளில் முகம் புதைத்து அவனிடம் ரகசியம் பேசும் அளவுக்கு அவளால் நெருங்கவும் முடிகிறது. அது அங்கே எவராலும் தவறாக பார்க்கப்படாத ஒரு வாழ்க்கைச் சூழல் அங்கு இருக்கிறது.


ஆனால் அவளை மணந்து கொண்ட முதலிரவில் அவள் தான் ஏற்கனவே ஒருவனை காதலித்திருப்பதாகச் சொல்கிறாள். அது கதாநாயகனை உடைந்து சிதற வைக்கிறது. பொன்.சுந்தரராசு அதற்கு பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் முக்கியமானவை. ”எவ்வளவு பெரிய ஏமாற்றம்! அவன் மட்டுமே அருந்த வேண்டிய பால் !அவன் மட்டுமே முகர வேண்டிய மலர் !அவன் மட்டுமே மீட்ட வேண்டிய வீணை! ஏற்கனவே எச்சிலாக்கப்பட்டு முகரப்பட்டு மீட்டித் தந்தியறுந்த அவலநிலை.


உண்மையின் இதுதான் கதையின் முடிச்சாக தென்படுகிறது. புலம்பெயர்ந்து ஓர் அதிநவீன நாகரிகச் சூழலில் வாழும் தமிழனின் உள்ளே இருக்கும் கண்ணகிச் சீக்கு இங்கு வெளிப்படுகிறது. விருந்தில் சந்தித்து இடைவளைத்து நடனமாடும் பெண் தான்மட்டுமே முகரவேண்டிய மலராகவும் இருந்தாகவேண்டும் என்கிற அவனுடைய பிடிவாதம் . ஆனால் அது சாத்தியமும் அல்ல. ஆகவே ஓர் இரவு முழுக்க துன்புற்றுவிட்டு அவளுக்கு அவன் ‘வாழ்வு கொடுக்கிறான்’. அவளை ‘இனிமேல் நீ எனக்கு மட்டுமே சொந்தம்’ என சத்தியம் செய்யச்சொல்லிவிட்டு ஏற்றுக் கொள்கிறான். கதைமுடிவில் என்னதான் செய்வது என்று ஆசிரியர் கேட்கும் கேள்வி புன்னகை வரவழைக்கிறது.


இந்தக் கதையில் ‘என்னை மன்னிப்பீர்களா? எனக்கு வாழ்வு கொடுப்பீர்களா?’ என்று கதாநாயகி கேட்பது இன்னும் சுவாரசியமானது. சந்தித்த முதல் நாளே ஒருவனுடன் இடை வளைத்து நடனமாடக்கூடிய பெண்தான் அவள். ஏற்கனவே ஒரு காதல் அனுபவம் உள்ளவளும் கூட. ஆனால் களங்கப்பட்டுவிட்ட ஒருத்தியாகவே அவள் தன்னை எண்ணிக் கொள்கிறாள். அவன் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்பதனால் தன் காதலை மறைக்கிறாள். நாண் அறுந்த தந்தி என அவளை எண்ணும் அவன் அவளை ஏற்றுக்கொண்டாலும் அவ்வுறவு என்னவாக இருக்கும் என்றே எண்ணத்தோன்றுகிறது.


முற்றிலும் மாறுபட்ட ஒரு அந்நிய வாழ்க்கைச்சூழலில் தமிழ்ச்சமூகம் தங்களை பலவகையாகத் தகவமைத்துக் கொள்வதைக் காட்டும் இந்தக் கதை ஒரு கலைப்படைப்பாக முக்கியத்துவம் உடையதல்ல. நேரடியான உரத்தகுரலும் செயற்கையான கதைத்தருணங்களும் இதன் கலைமதிப்பைக் குறைக்கின்றன. ஆனால் ஒரு காலகட்டத்தின் வாழ்க்கையைக் காட்டுவது இது. இத்தொகுதியின் கதைகள் அனைத்தையுமே இப்படி வரையறைசெய்யலாம்


பொன்.சுந்தரராசுவின் பல கதைகளில் இந்தப் பிரச்னை ஓடிக் கொண்டிருக்கிறது. தெரிந்தும் தெரியாததும் கதை இதற்கிணையான ஒன்று. பெண்கள் தங்கள் கணவர்களைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் ஒரு காலகட்டம் வந்திருக்கிறது, உடலழகை பார்த்து அவர்கள் ஆண்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று சலித்துக்கொள்கிறது இக்கதை. வீட்டில் அமர்ந்து பாலியல் விஷயங்களை சகஜமாக பேசிக் கொள்ளும் அண்ணன் தம்பிகளின் குடும்பம். அந்த வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு வந்த வசந்தி அவர்கள் அனைவரையும் ஒழுக்கம் தவறியவர்களாகவே பார்க்கிறாள். அருவருப்பு கொள்கிறாள்.


வசந்தியின் பார்வையில் இந்தக் கதை சொல்லப்படுவதால் உண்மையில் அவர்கள் ஒழுக்கம் தவறியவர்களா என்ற கேள்வி கதைக்கு வெளியே இருந்து கொண்டு தான் இருக்கிறது. தன் தங்கையை கணவனின் தம்பி திருமணம் செய்யும்போது அவள் அதைக் கடுமையாக எதிர்க்கிறாள். ஆனால் தங்கையின் கட்டாயத்துக்கு ஏற்ப அந்த திருமணம் நடக்கிறது. அதை ஒருவழியாக ஏற்றுக்கொள்ளும்போது அடுத்த தங்கை இன்னொரு தம்பியை திருமணம் செய்யும் முடிவை எடுக்கிறாள். இந்தப் பொட்டைக்கழுதைகளுக்குகாதல் பண்ணத்தான் தெரியுதே ஒழிய கண்ணியமான ஒருத்தனைத் தேர்ந்தெடுக்கத் தெரியுதா? என்று வசந்தி அங்கலாய்ப்பதில் இக்கதை முடிகிறது.


சாதாரணமாக பெண்களின் தன்முடிவுகள் தவறாகவே இருக்கின்றன என்று ஆசிரியர் கருதுவது போல இக்கதை அமைந்திருந்தாலும் கூட வேறொரு காலகட்டத்தைச் சேர்ந்த பெண்மணி புதுயுகப்பெண்மணிகளைப் பார்த்து அடையும் பதற்றமே இக்கதைகளில் உள்ளது என்று தோண்றுகிறது.


பொன்.சுந்தரராசின் பெரும்பாலான கதைகள் ஒழுக்கம் சார்ந்த இக்கட்டுகளை பேசுவனவாகவே இருக்கின்றன. இருநூறு வெள்ளி என்றொரு கதை. நடுத்தர வயதில் வெள்ளைக்கார மாதுவுடன் உடலுறவு கொள்வதற்காக இருநூறு வெள்ளியை இயல்பாகச் செலவழிக்கும் ஒருவர் சற்றே கஞ்சப்புத்தியுடையவர். தமிழர்களுக்குரிய பொதுத் தேவை ஒன்றுக்காக இருநூறு வெள்ளி கொடுப்பதை அவர் எப்படிப்பார்க்கிறார், அவருடைய மகன் அதை எப்படி பார்க்கிறான் என்பதுதான் கதை. அன்றைய ஒரு மனநிலைக்கீற்று கடந்துசெல்வதனாலேயே நேரடியான பிரச்சாரமாகிய இக்கதை என்னைக் கவர்ந்தது.ஸ்பைரோஸ் என்னும் கப்பல் விபத்துக்குள்ளான தகவல் இக்கதைக்குள் வருகிறது. அந்த எளிமையான தகவல் சட்டென்று ஒரு காலச்சித்திரம் தருவதை ஆச்சரியத்துடன் வாசித்தேன்.


இத்தொகுதியின் ஒரே நல்ல கதை என்று நான் எண்ணுவது பட்டுச் சேலை. அகிலனும் அதையே சிறந்த கதையாக சொல்கிறார். அகிலன் சொல்லும் அதே காரணத்துக்காகவே நான் நல்ல கதை என்று சொல்வேன். ஐநூறு வெள்ளிக்கு ஒரு பட்டுப்புடவை திருமணத்துக்கு எடுக்கவேண்டுமென்று ஆசைப்படும் ஒரு குடும்பம், அது படும் வேதனைகள், அந்தப்பெண்ணின் கனவு என கதை செல்கிறது. அதை உணர்ந்துகொண்டு அவளுக்கு மாப்பிள்ளையே ஐநூறு வெள்ளி பணம் கொடுத்து புடவையை எடுக்க வைக்கிறார்.


அந்தக் காலத்தில் எழுதப்பட்ட கதைகள் பலவற்றில் பெண்ணின் உள்ளத்தை புரிந்து கொள்ள கணவன் இவ்வாறு செய்வது இறுதித் திருப்பமாக வந்திருக்கிறது. ஆனால் இக்கதையில் நான் இதன் நுட்பமாக பார்ப்பது முற்றிலும் மாறுபட்ட சிங்கைச் சூழலிலும் கூட பெண் அதே பட்டுப்புடவையைத்தான் ஆசைப்படுகிறாள் என்ற தகவல் தான்.


ஒரு சிறந்த சிறுகதையை இத்தொகுதியில் என்னால் காணமுடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் நா.பார்த்தசாரதியும் அகிலனுமே என் நோக்கில் சிறந்த கதை எதையும் எழுதவில்லை. அவர்களைப்போலவே இத்தொகுதியின் எல்லாக் கதைகளுமே எளிமையான முடிப்புகளும் எளிமையான தீர்வுகளும் கொண்டவை. ஆனால் இவை சிங்கப்பூரின் ஒரு காலகட்டத்தைக் காட்டுகின்றன. சமூக சீர்திருத்த நோக்கமும் மனிதாபிமானத்தை வலியுறுத்தும் தன்மையும் கொண்ட கதைகள். அவ்வகையில் அவை ஒரு வரலாற்று முக்கியத்துவம் உடையவை.


[என்னதான் செய்வது? பொன் சுந்தரராசு]


பொன் சுந்தர ராசுவின் வலைத்தளம்


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 01, 2016 11:33

சிங்கப்பூர் கடிதங்கள் 4

22


 


அன்புள்ள ஜெ


சிங்கப்பூர் இலக்கியம் குறித்த உங்கள் திறனாய்வுகளை வாசித்தேன். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக சிங்கப்பூரின் இலக்கியச் சூழலை நீங்கள் அறிவீர்கள். உண்மையான இலக்கியம்வளர நீங்கள் செய்வது ஒரு ’முக்கியமான கட்டுடைப்பு’. வருங்கால இலக்கிய தலைமுறையினரைப் பார்த்து இவைகளைக்கூறுவதாகவே நான் நம்புகிறேன்.


உங்களின் வார்த்தைகளையும், நோக்கங்களையும்,திரித்து வளைத்து நுண்அரசியல் செய்து தன் இடங்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் பதற்றத்தையுமே இப்போதைய இலக்கியவாதிகள் அடைவார்கள், தேனீர் கோப்பைக்குள் புயல்களை உருவாக்குவார்கள். மாறாக காத்திரமான இலக்கிய விவாதத்திற்கு வருவார்களேயானால் தமிழ் இலக்கியம் இலத்தீன் அமெரிக்க இலக்கியம், வட்டாரஇலக்கியம் போல அசலான சிங்கப்பூர் இலக்கியம் தமிழுக்குக் கொடையாகக்கிடைக்கும், மலேசிய-சிங்கப்பூரரின் பிரச்சனைகள் தனியானவை அவைகளைப் பேசும் டைப்புகள் அசலானவைகளாக அமையும்.இலக்கியத்தரம் வரைபடங்களைத்தாண்டியது என்ற அடிப்படை உண்மையைக்கூடமீண்டும் மீண்டும் வலியுறுத்தியாகக் கூடிய சூழல்.


சமீபத்தில் நவீன் இத்தகைய முயற்சியை ஆரம்பித்த போதே இது நிகழுமென நான் நினைத்தேன். நா.கோ, இளங்கோவன் இத்தகைய சூழல்களையே எதிர்கொண்டார்கள்.இராம.கண்ணபிரான், ரெ.பாண்டியன், இந்திரஜித, கனகலதா போன்றோரின் நேர்மறையான .பகளிப்புகளும் இத்தகைய சூழல்களினாலே வீணாகின்றன.


சிங்கப்பூரின் நூலகத்துறையும் அரசும் சிறப்பான செயல்களைச் செய்கின்றன மேலும் செய்யத் தயாராய் இருக்கின்றன, மொழியின் வளர்ச்சி சார்ந்து ஏதேனும் பங்களிக்க சிலதனியார் நிறுவனங்களும் தனி நபர்களும் கூட ஆர்வம்கொண்டிருக்கின்றன. விருதுகளை விட, இளையோரை உள்ளடக்கிய பயிற்சிப்பட்டறைகளும், வாசிப்பு இயக்கங்களும் நிறைய மாற்றங்களை விளைவிக்கும்.

அவர்கள் தங்களின் பண்பாட்டு அடையாளங்கள் என இப்போதைய சிங்கப்பூர் இலக்கியம் காட்டும் போலி அடையாளங்களின் மீது குழப்பமும், விரக்தியும் கொண்டுள்ளனர்.திறனையும், தகுதியையுமே தலையானதாய் போற்றும் சிங்கப்பூரின் மையநீரோட்டத்தில் தமிழர்கள் பின் தங்குவதற்கான காரணங்களில் ஒன்று தமிழரின் இத்தகைய மன நிலை. விமர்சனங்களின் மூலம் தன்னை மாற்றிக் கொள்ளவும் செழுமைப்படுத்திக் கொள்ளவும் மறுப்பது மாறாக வெற்றுப் பழம் பெருமை பேசும் வழியை தெரிவு செய்வது.


சுப்பிரமணியன் ரமேஷ்.


 


அன்புள்ள சுப்ரமணியம் ரமேஷ்,


 


உண்மையில் என்ன பிரச்சினை என நீங்களே அறிவீர்கள். பயிற்சிப்பட்டறைகள் நடத்தலாம். ஆனால் அங்குள்ள எழுத்தாளர்கள் அதற்கெல்லாம் வரமாட்டார்கள். அவர்கள் பயிற்சிப்பட்டறைகளை நடத்தவே வருவார்கள். அவர்கள் அங்கே மாதாமாதம் நடக்கும் ‘இலக்கிய விழா’க்களில் சென்று சால்வையும் போலிப்பாராட்டும் பெற்று மீளவே விரும்புகிறார்கள். முதலில் அவர்கள் எழுதுவதெல்லாம் பயிற்சியற்ற குப்பை எழுத்து என்பதை அவர்களின் மூளைக்கு உறைக்கும்படிச் சொல்லவேண்டியிருக்கிறது.  இல்லை நீதான் சீமோங் த பூவா என்று சொல்ல இங்கிருந்து பிழைப்புவாதிகள்ம் சென்றுகொண்டிருக்கிறார்கள்.


 


நா.கோவிந்தசாமி முதல் நவீன் வரை முன்வைத்த விமர்சனங்களை இந்த வெற்றுக்கூட்டம் எதிர்கொண்ட விதத்தை நான் அறிவேன். அந்த மொண்ணைத்தனமே இந்தக்கடுமையான விமர்சனமொழிக்குக் காரணம். இங்கேபோல வாழ்வதற்கே போராடும் நிலை என்றால்கூட மன்னிக்கலாம். ஒரு வளர்ந்த நாடு அளிக்கும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்திக்கொண்டு சீலைப்பேன் வாழ்க்கையையே வாழ்வோம் என்னும் அடம் தான் பொறுமையிழக்கவைக்கிறது


 


ஜெ


 


அன்புள்ள ஜெ


 


சிங்கப்பூர் இலக்கியம் பற்றி எழுதியிருந்தீர்கள். 1990ல் இங்கே சுந்தர ராமசாமி ஒரு சிறுகதைப்போட்டிக்கு நடுவராக வந்தார். அவருக்கு  அளிக்கப்பட்ட எந்தக்கதையுமே ஒரு போட்டியில் கலந்துகொள்ளும் தகுதிகூட இல்லாதது, வெற்றுக்குப்பை என்று சொல்லி எவருக்கும் பரிசே கொடுக்காமல் திரும்பிச்சென்றார். அவரை வாய்க்குவந்ததுபோல திட்டினார்கள். அதன்பின் வந்து வாழ்த்திவிட்டுப்போகிறவர்களை மட்டுமே சிங்கப்பூருக்கு அழைக்கவேண்டும் என்று முடிவெடுத்தார்கள். அந்த மாபெரும் படைப்பாளி ஏன் அப்படிச் சொன்னார் என்றுகூட எண்ணிப்பார்க்கவில்லை.


 


அதன்பின் இந்தியாவில் இருந்து வந்து சிங்கப்பூர் இலக்கியம் பற்றி கடுமையான கருத்தைச் சொன்னவர் என்றால் இமையம். அசோகமித்திரன் வந்து தனிப்பட்ட முறையில் வருத்தப்பட்டுச் சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார். அதன்பின் இப்போது நீங்கள். இதெல்லாம் இவர்களை ஒன்றுமே செய்யப்போவதில்லை.  நீங்கள் இங்கே தனிப்பட்ட முயற்சியில் ஒரு இலக்கியப்பட்டறை நடத்தினீர்கள். எத்தனை சிங்கை எழுத்தாளர்கள் வந்தார்கள்? அத்தனைபேரும் அதே நாட்களில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய பரஸ்பர சொறிதலுக்குத்தான் சென்றனர். இதுதான் இங்குள்ள மனநிலை.


 


இதெல்லாம் எளிதில் மாறாது. இதற்குப்பின்னால் உள்ளது திறமையின்மை அல்ல. அப்படியென்றால் சொல்லிக்கொடுக்கலாம். அக்கறையின்மை சுயநலம் அசட்டு ஆணவம் இதெல்லாம்தான். அதற்கு மருந்தே கிடையாது


 


[என் பெயர் வேண்டாம். நானும் இங்குள்ள இலக்கிய வன்முறையைக் கண்டு பயப்பட்டு ஒடுங்கியிருக்கும் ஒரு வாயில்லாப்பூச்சிதான்]


 


எஸ்


 


*


 


 


அன்புள்ள ஜெ,


 


என்பெயர் வேண்டாம். நான் சிங்கையின் குடியேறி.  திருமதி சூர்யரத்னாவின் ஃபேஸ்புக் குறிப்பில் இருந்து நீங்கள் குறிப்பிட்ட ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டவே இந்தக்கடிதம்


 


நீங்களோ நாஞ்சில்நாடனோ இங்கே வரும்போது மட்டும் தேர்ந்த வாசகர்களின் ஒரு பெரிய கூட்டம் வந்து அவையில் அமர்ந்திருப்பதைக் கண்டிருப்பீர்கள். உங்கள் வீட்டுக்கே பெரியகூட்டம் வந்தது. ஆனால் இங்குள்ள தமிழ் அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் ஏன் இவர்கள் செல்வதில்லை? சொல்லப்போனால் உங்கள் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் வந்து நேரில் அழைக்கிறார்கள். இருந்தும் ஏன் செல்வதில்லை?


 


முதல் விஷயம் சலிப்பு. திரும்பத்திரும்ப பல ஆண்டுகளாக ஒரே முகங்கள். ஒரேமாதிரி பாராட்டுகள். அசட்டு எழுத்துக்கள். வாசிப்பவர்களே கிடையாது. அதிகாரத்தை அண்டி நிதிபெறுவதைத்தவிர வேறு நோக்கமே கிடையாது. அதைவிட முக்கியமானது குடியேறிகள் – குடிமகன்கள் என்னும் வேறுபாடு. சூர்யரத்னா அசட்டுத்தனமாக அதை சமூகவலைத்தளத்திற்குக் கொண்டுவந்துவிட்டார். அது இங்கே குற்றம். எவராவது புகார் கொடுத்தால் அவர்மேல் நடவடிக்கை வரும். ஆனால் மற்றவர்கள் இதை மனதிலேயே வைத்திருப்பார்கள்.


 


ஆகவே ஒரு சின்ன விமர்சனம் கூட வைக்கமுடியாது. நீ பி.ஆர் தானே [பெர்மனெண்ட் ரெசிடெண்ட்]  என்றுதான் அடுத்த கேள்வி வரும். சகட்டுமேனிக்கு புகார்கள் அனுப்புவார்கள். வேலைபோய்விடும் என மிரட்டுவார்கள். நமக்கு எதுக்கு வம்பு என என்னைப்போன்றவர்கள் முடிந்தவரை ஒதுங்கி வாய்மூடி இருக்கிறோம்.சூர்யரத்னாவுக்கு நீங்கள் பி.ஆர் இல்லை, அரசு விருந்தினர் என்பதுகூட தெரியவில்லை பார்த்தீர்கள் அல்லவா?


 


இதுதான் நிலைமை. இந்த உண்மைக்குமேலேதான் தமிழக ஒற்றுமை, தமிழ்மேன்மை என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்


 


ஆர்


*


ஜெ,


என்னை போன்றோருக்கு வேலைப் போக  கிடைப்பது சொற்ப நேரம்…அதில் தினமும் சில பக்கங்களே படிக்க முடிகிறது. நீங்கள் குறிப்பிட்டு விட்டீர்களே என அந்த அம்மாவை ஒரு நாள் படிக்க நேர்ந்து நொந்து கொண்டேன்.


இன்றைய தினம் வரை  அந்த  பெண்மணிக்கு கிடைத்த மிகப் பெரிய விருது நீங்கள் விமர்சனம் செய்தது தான் . உங்கள் வாசகர்களின் கடித நேர்த்தியை பார்த்தாவது இவர் தமிழைக் கற்றுக் கொள்ளட்டும்.


நன்றி
பிரசாந்த்

 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 01, 2016 11:32

சிங்கப்பூர் கடிதங்கள் 4

22


 


அன்புள்ள ஜெ


சிங்கப்பூர் இலக்கியம் குறித்த உங்கள் திறனாய்வுகளை வாசித்தேன். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக சிங்கப்பூரின் இலக்கியச் சூழலை நீங்கள் அறிவீர்கள். உண்மையான இலக்கியம்வளர நீங்கள் செய்வது ஒரு ’முக்கியமான கட்டுடைப்பு’. வருங்கால இலக்கிய தலைமுறையினரைப் பார்த்து இவைகளைக்கூறுவதாகவே நான் நம்புகிறேன்.


உங்களின் வார்த்தைகளையும், நோக்கங்களையும்,திரித்து வளைத்து நுண்அரசியல் செய்து தன் இடங்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் பதற்றத்தையுமே இப்போதைய இலக்கியவாதிகள் அடைவார்கள், தேனீர் கோப்பைக்குள் புயல்களை உருவாக்குவார்கள். மாறாக காத்திரமான இலக்கிய விவாதத்திற்கு வருவார்களேயானால் தமிழ் இலக்கியம் இலத்தீன் அமெரிக்க இலக்கியம், வட்டாரஇலக்கியம் போல அசலான சிங்கப்பூர் இலக்கியம் தமிழுக்குக் கொடையாகக்கிடைக்கும், மலேசிய-சிங்கப்பூரரின் பிரச்சனைகள் தனியானவை அவைகளைப் பேசும் டைப்புகள் அசலானவைகளாக அமையும்.இலக்கியத்தரம் வரைபடங்களைத்தாண்டியது என்ற அடிப்படை உண்மையைக்கூடமீண்டும் மீண்டும் வலியுறுத்தியாகக் கூடிய சூழல்.


சமீபத்தில் நவீன் இத்தகைய முயற்சியை ஆரம்பித்த போதே இது நிகழுமென நான் நினைத்தேன். நா.கோ, இளங்கோவன் இத்தகைய சூழல்களையே எதிர்கொண்டார்கள்.இராம.கண்ணபிரான், ரெ.பாண்டியன், இந்திரஜித, கனகலதா போன்றோரின் நேர்மறையான .பகளிப்புகளும் இத்தகைய சூழல்களினாலே வீணாகின்றன.


சிங்கப்பூரின் நூலகத்துறையும் அரசும் சிறப்பான செயல்களைச் செய்கின்றன மேலும் செய்யத் தயாராய் இருக்கின்றன, மொழியின் வளர்ச்சி சார்ந்து ஏதேனும் பங்களிக்க சிலதனியார் நிறுவனங்களும் தனி நபர்களும் கூட ஆர்வம்கொண்டிருக்கின்றன. விருதுகளை விட, இளையோரை உள்ளடக்கிய பயிற்சிப்பட்டறைகளும், வாசிப்பு இயக்கங்களும் நிறைய மாற்றங்களை விளைவிக்கும்.

அவர்கள் தங்களின் பண்பாட்டு அடையாளங்கள் என இப்போதைய சிங்கப்பூர் இலக்கியம் காட்டும் போலி அடையாளங்களின் மீது குழப்பமும், விரக்தியும் கொண்டுள்ளனர்.திறனையும், தகுதியையுமே தலையானதாய் போற்றும் சிங்கப்பூரின் மையநீரோட்டத்தில் தமிழர்கள் பின் தங்குவதற்கான காரணங்களில் ஒன்று தமிழரின் இத்தகைய மன நிலை. விமர்சனங்களின் மூலம் தன்னை மாற்றிக் கொள்ளவும் செழுமைப்படுத்திக் கொள்ளவும் மறுப்பது மாறாக வெற்றுப் பழம் பெருமை பேசும் வழியை தெரிவு செய்வது.


சுப்பிரமணியன் ரமேஷ்.


 


அன்புள்ள சுப்ரமணியம் ரமேஷ்,


 


உண்மையில் என்ன பிரச்சினை என நீங்களே அறிவீர்கள். பயிற்சிப்பட்டறைகள் நடத்தலாம். ஆனால் அங்குள்ள எழுத்தாளர்கள் அதற்கெல்லாம் வரமாட்டார்கள். அவர்கள் பயிற்சிப்பட்டறைகளை நடத்தவே வருவார்கள். அவர்கள் அங்கே மாதாமாதம் நடக்கும் ‘இலக்கிய விழா’க்களில் சென்று சால்வையும் போலிப்பாராட்டும் பெற்று மீளவே விரும்புகிறார்கள். முதலில் அவர்கள் எழுதுவதெல்லாம் பயிற்சியற்ற குப்பை எழுத்து என்பதை அவர்களின் மூளைக்கு உறைக்கும்படிச் சொல்லவேண்டியிருக்கிறது.  இல்லை நீதான் சீமோங் த பூவா என்று சொல்ல இங்கிருந்து பிழைப்புவாதிகள்ம் சென்றுகொண்டிருக்கிறார்கள்.


 


நா.கோவிந்தசாமி முதல் நவீன் வரை முன்வைத்த விமர்சனங்களை இந்த வெற்றுக்கூட்டம் எதிர்கொண்ட விதத்தை நான் அறிவேன். அந்த மொண்ணைத்தனமே இந்தக்கடுமையான விமர்சனமொழிக்குக் காரணம். இங்கேபோல வாழ்வதற்கே போராடும் நிலை என்றால்கூட மன்னிக்கலாம். ஒரு வளர்ந்த நாடு அளிக்கும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்திக்கொண்டு சீலைப்பேன் வாழ்க்கையையே வாழ்வோம் என்னும் அடம் தான் பொறுமையிழக்கவைக்கிறது


 


ஜெ


 


அன்புள்ள ஜெ


 


சிங்கப்பூர் இலக்கியம் பற்றி எழுதியிருந்தீர்கள். 1990ல் இங்கே சுந்தர ராமசாமி ஒரு சிறுகதைப்போட்டிக்கு நடுவராக வந்தார். அவருக்கு  அளிக்கப்பட்ட எந்தக்கதையுமே ஒரு போட்டியில் கலந்துகொள்ளும் தகுதிகூட இல்லாதது, வெற்றுக்குப்பை என்று சொல்லி எவருக்கும் பரிசே கொடுக்காமல் திரும்பிச்சென்றார். அவரை வாய்க்குவந்ததுபோல திட்டினார்கள். அதன்பின் வந்து வாழ்த்திவிட்டுப்போகிறவர்களை மட்டுமே சிங்கப்பூருக்கு அழைக்கவேண்டும் என்று முடிவெடுத்தார்கள். அந்த மாபெரும் படைப்பாளி ஏன் அப்படிச் சொன்னார் என்றுகூட எண்ணிப்பார்க்கவில்லை.


 


அதன்பின் இந்தியாவில் இருந்து வந்து சிங்கப்பூர் இலக்கியம் பற்றி கடுமையான கருத்தைச் சொன்னவர் என்றால் இமையம். அசோகமித்திரன் வந்து தனிப்பட்ட முறையில் வருத்தப்பட்டுச் சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார். அதன்பின் இப்போது நீங்கள். இதெல்லாம் இவர்களை ஒன்றுமே செய்யப்போவதில்லை.  நீங்கள் இங்கே தனிப்பட்ட முயற்சியில் ஒரு இலக்கியப்பட்டறை நடத்தினீர்கள். எத்தனை சிங்கை எழுத்தாளர்கள் வந்தார்கள்? அத்தனைபேரும் அதே நாட்களில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய பரஸ்பர சொறிதலுக்குத்தான் சென்றனர். இதுதான் இங்குள்ள மனநிலை.


 


இதெல்லாம் எளிதில் மாறாது. இதற்குப்பின்னால் உள்ளது திறமையின்மை அல்ல. அப்படியென்றால் சொல்லிக்கொடுக்கலாம். அக்கறையின்மை சுயநலம் அசட்டு ஆணவம் இதெல்லாம்தான். அதற்கு மருந்தே கிடையாது


 


[என் பெயர் வேண்டாம். நானும் இங்குள்ள இலக்கிய வன்முறையைக் கண்டு பயப்பட்டு ஒடுங்கியிருக்கும் ஒரு வாயில்லாப்பூச்சிதான்]


 


எஸ்


 


*


 


 


அன்புள்ள ஜெ,


 


என்பெயர் வேண்டாம். நான் சிங்கையின் குடியேறி.  திருமதி சூர்யரத்னாவின் ஃபேஸ்புக் குறிப்பில் இருந்து நீங்கள் குறிப்பிட்ட ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டவே இந்தக்கடிதம்


 


நீங்களோ நாஞ்சில்நாடனோ இங்கே வரும்போது மட்டும் தேர்ந்த வாசகர்களின் ஒரு பெரிய கூட்டம் வந்து அவையில் அமர்ந்திருப்பதைக் கண்டிருப்பீர்கள். உங்கள் வீட்டுக்கே பெரியகூட்டம் வந்தது. ஆனால் இங்குள்ள தமிழ் அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் ஏன் இவர்கள் செல்வதில்லை? சொல்லப்போனால் உங்கள் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் வந்து நேரில் அழைக்கிறார்கள். இருந்தும் ஏன் செல்வதில்லை?


 


முதல் விஷயம் சலிப்பு. திரும்பத்திரும்ப பல ஆண்டுகளாக ஒரே முகங்கள். ஒரேமாதிரி பாராட்டுகள். அசட்டு எழுத்துக்கள். வாசிப்பவர்களே கிடையாது. அதிகாரத்தை அண்டி நிதிபெறுவதைத்தவிர வேறு நோக்கமே கிடையாது. அதைவிட முக்கியமானது குடியேறிகள் – குடிமகன்கள் என்னும் வேறுபாடு. சூர்யரத்னா அசட்டுத்தனமாக அதை சமூகவலைத்தளத்திற்குக் கொண்டுவந்துவிட்டார். அது இங்கே குற்றம். எவராவது புகார் கொடுத்தால் அவர்மேல் நடவடிக்கை வரும். ஆனால் மற்றவர்கள் இதை மனதிலேயே வைத்திருப்பார்கள்.


 


ஆகவே ஒரு சின்ன விமர்சனம் கூட வைக்கமுடியாது. நீ பி.ஆர் தானே [பெர்மனெண்ட் ரெசிடெண்ட்]  என்றுதான் அடுத்த கேள்வி வரும். சகட்டுமேனிக்கு புகார்கள் அனுப்புவார்கள். வேலைபோய்விடும் என மிரட்டுவார்கள். நமக்கு எதுக்கு வம்பு என என்னைப்போன்றவர்கள் முடிந்தவரை ஒதுங்கி வாய்மூடி இருக்கிறோம்.சூர்யரத்னாவுக்கு நீங்கள் பி.ஆர் இல்லை, அரசு விருந்தினர் என்பதுகூட தெரியவில்லை பார்த்தீர்கள் அல்லவா?


 


இதுதான் நிலைமை. இந்த உண்மைக்குமேலேதான் தமிழக ஒற்றுமை, தமிழ்மேன்மை என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்


 


ஆர்


*


ஜெ,


என்னை போன்றோருக்கு வேலைப் போக  கிடைப்பது சொற்ப நேரம்…அதில் தினமும் சில பக்கங்களே படிக்க முடிகிறது. நீங்கள் குறிப்பிட்டு விட்டீர்களே என அந்த அம்மாவை ஒரு நாள் படிக்க நேர்ந்து நொந்து கொண்டேன்.


இன்றைய தினம் வரை  அந்த  பெண்மணிக்கு கிடைத்த மிகப் பெரிய விருது நீங்கள் விமர்சனம் செய்தது தான் . உங்கள் வாசகர்களின் கடித நேர்த்தியை பார்த்தாவது இவர் தமிழைக் கற்றுக் கொள்ளட்டும்.


நன்றி
பிரசாந்த்

 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 01, 2016 11:32

September 30, 2016

அறியாமை இறக்குமதி

Head against the Wall


 


சிங்கப்பூர் இலக்கியத்தின் சங்கடமான ஒரு நடைமுறைச் சிக்கல் அதிகம் பேசப்படுவதில்லை. இங்கு அரசாங்கத்தின் அறிவுறுத்தலால் கட்டாயத்தமிழ்க் கல்வி உண்டு. ஆனால் கல்வியின் சிறுபகுதிதான் அது. சிங்கையின் தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் வகுப்புகளில் வாரம் மூன்று மணி நேரம் மட்டுமே கற்பிக்கப்படுகின்ற தமிழ்க் கல்விக்கு அப்பால் தமிழுடன் தொடர்பற்றவர்கள். இல்லத்திலும் தமிழ் பேசுபவர்கள் மிகக் குறைவு. ஆகவே சிங்கப்பூர்ப் பின்னணியில் இருந்து தமிழ் இலக்கிய வாசிப்போ அது சார்ந்த முயற்சிகளோ அரிதாகவே நிகழ்கின்றன.


சிங்கை இலக்கிய முன்னோடிகளான புதுமைதாசன், இளங்கண்ணன், இராம கண்ணபிரான்  போன்றவர்களைக்கூட அவர்கள் பாடப்புத்தகங்களிலன்றி பெரிதாகத் தெரிந்திருப்பதில்லை. ஆகவே அவர்களில் அரிதாகச் சிலர் எழுதவரும்போதுகூட நடை பலவீனமானதாக இருக்கிறது. நடை என்பது வாழ்வின் அத்தனைதருணங்களிலும் புழங்கும் மொழியிலிருந்து திரண்டு உருவாவது. அச்சூழல் அங்கில்லை. கதைக்கருக்கள் என்பவை வாழ்க்கையின் அனைத்துத் தருணங்களிலும் இருந்து எழுவன. மொழி சமையலறைக்குள் மட்டும் புழங்கும்போது அந்த வாய்ப்பும் குறுகிவிடுகிறது.


ஆனால் கலை என்பது தன் புற எல்லைகளையே சாதகமான வாய்ப்புகளாக ஆக்கிக்கொள்வது. உதாரணமாக அமெரிக்காவில் குடியேறிய யூதர்கள் தாங்கள் மட்டுமே வீட்டில் பேசிக்கொள்ளும் இட்டிஷ் மொழியில் மகத்தான ஆக்கங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.என் மனம் கவர்ந்த ஐசக் பாஷவிஸ் சிங்கர் அவ்விலக்கியத்தின் உச்சம்.


சிங்கப்பூரில் உள்ள அந்த இடைவெளியை நிரப்புவது தமிழகத்தில் இருந்து பணிநிமித்தமோ அல்லது திருமணமாகியோ வரும் புதியகுடியேறிகள் எழுதும் இலக்கியம். சிங்கப்பூரிலிருந்து எழுதப்படுவதனாலேயே இவை சிங்கப்பூர் இலக்கியங்கள் என்று அறியப்படுகின்றன. இவற்றில் கணிசமானவை மிக ஆரம்பகட்ட எழுத்துக்கள். தமிழக வணிக இதழ்களை மட்டும் அறிந்தவர்களால் உருவாக்கப்படுபவை. இவற்றின் பெருக்கம் சிங்கை இலக்கியத்துக்கு மேலும் சுமையை அளிக்கிறது. இங்கு பிறந்து வாழும்  மக்கள் எழுதுவது இவர்களால் முழுமையாக மறைக்கப்பட்டுவிடுமோ என்ற ஐயம் ஏற்படுகிறது.


ஆகவே சிங்கப்பூர் இலக்கியவிமர்சனத்தில் அவ்வெழுத்து சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவரால் எழுதப்பட்டதா இல்லை தமிழகத்தில் பிறந்து வளர்ந்து அங்கே குடியேறியவரால் எழுதப்பட்டதா என்ற பிரிவினை விமர்சகனால் செய்யபடவேண்டும். அங்கே பிறந்து வளர்ந்தவர்களுக்குச் சலுகை காட்டப்படவேண்டும் என்றோ இங்கிருந்து குடியேறியவர்களின் எழுத்தை குறைத்துப்பார்க்கவேண்டும் என்றோ சொல்லவரவில்லை. இலக்கியத்திற்குல் அப்படி குறைத்தலுக்கோ கூட்டலுக்கோ இடமில்லை. இலக்கியப்படைப்பு படைப்பாளியின் புற அடையாளத்தால் நிலைகொள்வது அல்ல, அவன் உள்ளம் நாடு இன மொழியடையாளங்களுக்கு அப்பாற்பட்டது. நான் சொல்வது பண்பாட்டுரீதியாக ஓர் அடையாளப்படுத்தல் நிகழ்த்தப்படவேண்டும் என்று மட்டுமே


ஏனென்றால் தமிழ் காதில் விழுந்துகொண்டே இருக்கும் சூழலில் பிறந்து வளர்ந்து தமிழ் வணிகஎழுத்துக்களை அறிமுகம் செய்துகொண்டவர்கள் சரளமாகத் தமிழ் எழுதிவிடமுடியும். அதைச் சிங்கைச்சூழலில் வைத்து ஒரு மேலதிகத் தகுதியாகக் கொண்டு அவர்கள் எளிய புகழைப் பெற்றுவிடமுடியும். அதை விமர்சகன் சாதக அம்சமாகக் கருத வேண்டியதில்லை. அவர்களின் படைப்பின் இலக்கியத்தன்மை மட்டுமே கருத்தில்கொள்ளப்படவேண்டும். அங்கு பிறந்துவளர்ந்தவர்கள் அங்கிருந்து உருவாக்கும் மொழியும் அழகியலும் தமிழுக்கு புதியகொடையாக எழுந்து வரக்கூடும். நான் சிங்கை இலக்கியத்தில் தேடுவது அதைத்தான்.


சரியான உதாரணமாகச் சொல்லவேண்டும் என்றால் ஷோபா சக்தியை குறிப்பிடலாம். அவரது மொழியும் கலைத்தன்மையும் முற்றிலும் யாழ்ப்பாணத்தன்மை கொண்டவை. அது தமிழ்தான். ஆனால் இருபத்தைந்து வயதில் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடியேறிய ஒருவர் அதை எழுதிவிடமுடியாது.அது பேச்சுமொழியில் ஊறி ஒரு படைப்பாளியின் அகத்தில் கனிந்து உருவாகும் ஒன்று.


சிங்கப்பூர் இலக்கியத்தில்கூட அத்தகைய அழகியல் உருவாகி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உதாரணம் சித்துராஜ் பொன்ராஜின் கதைகள் . ஆனால் அதற்கு  இந்தியாவிலிருந்து வந்தவர்கள் எழுதும் சிங்கப்பூர்ப்பின்னணி மட்டுமே கொண்ட எழுத்திலிருந்து அவ்வெழுத்துக்களைப் பிரித்துப்பார்க்கவேண்டியுள்ளது. கூடவே அங்கேயே பிறந்துவளர்ந்த கமலாதேவி அரவிந்தன், சூர்யரத்னா போன்றவர்கள் உருவாக்கும் எந்த முயற்சியும் இல்லாத அசட்டு எழுத்துக்களை புறமொதுக்கி எது தங்கள் மொழியும் வடிவும் என அடையாளம் காணும் கண் அங்குள்ள வாசகர்களுக்கும் விமர்சகர்களுக்கும் அமையவும்வேண்டும்.


தமிழகத்திலிருந்து சென்று அங்குள்ள சூழலை மாசுபடுத்தும் எழுத்துக்கு மிகச்சிறந்த உதாரணம் மலர்விழி இளங்கோவனின் சொல்வதெல்லாம் பெண்மை என்ற சிறுகதைத்தொகுதி. தமிழகத்தில் இந்தக் கதைகள் எழுதப்பட்டிருந்தால் மிக மிகத் தரமற்ற சிறுகதைகளை வெளியிடும் ராணி, தேவி, தினமலர் வாரமலர் போன்ற இதழ்கள் கூட இவற்றை பொருட்படுத்தியிருக்கமாட்டா.  மலர்விழி இளங்கோவனுக்கு தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்ல தமிழ் வணிக இலக்கியத்தில் கூட எந்த வாசிப்பும் இல்லையென்று தெரிகிறது.


ஒரு கதை ஏன் எழுதப்படவேண்டும், ஒரு கதையினுடைய வடிவம் என்ன என்பது கூட தெரியாமல் சிங்கப்பூர் வந்த பிறகு இப்படி ஒரு வாய்ப்பு இங்கு இருப்பதை அறிந்துகொண்டு   ‘எழுதிப்பார்த்த’ கதைகள் இவை. எழுதக்கூடாது, பிரசுரிக்கக்கூடாது என்றில்லை. ஆனால் அவை வைக்கவேண்டிய இடத்தில் வைக்கப்படவேண்டும். ஆனால் இந்த நூலிலேயே திருமதி மலர்விழி இளங்கோவன் பெற்ற பத்துக்கு மேற்பட்ட விருதுகளின் பட்டியல் உள்ளது.


வாசகன் என்ற முறையில் இந்தக் கதைகள் பெரும் எரிச்சலைக் கிளப்புகின்றன. ஏனெனில் இந்தக் கதைகளுக்குள் உள்ள மனநிலை என்பது வாசகன் ஒன்றுமறியாத மூடன் என்ற முன்முடிவு. ஒரு கதையை அவனுக்காக எழுதும்போது அவனிடம் என்னதான் சொல்ல வேண்டுமென்று விரும்புகிறீர்கள், அவன் இதை எப்படி புரிந்துகொள்ள வேண்டுமென்று எண்ணுகிறீர்கள் என்ற கேள்வி நமக்குள் எழுகிறது.


விமர்சகன் என்ற வகையில் உருவாவது அதைவிட பெரிய எரிச்சல். மேடையில் ஏறிப் பாடும் ஒருவன் குறைந்த பட்சம் குளியலறையில் பாடும் தகுதியையாவது கொண்டிருக்க வேண்டும் அல்லவா? ஓவியர் என்று ஒரு கண்காட்சி நடத்துபவர் பிசிறின்றி ஒரு வட்டம் போடவாவது தெரிந்திருக்க வேண்டுமல்லவா? கதை எழுத வேண்டுமென்றால் மட்டும் எந்த அடிப்படைத் தகுதியும் தேவையில்லை என்ற முடிவுக்கு இவர்கள் எப்படி வருகிறார்கள்?


இந்த தொகுதியில் உள்ள அனைத்து கதைகளுமே மிக ஆரம்பநிலை ஆக்கங்கள். தலைப்புகள் கூட வளர்த்த கடா, அனிச்ச மலர்கள், தன்வினை, அன்பின் வழியது என அக்கதையின் மையக்கருத்தை ஓங்கிச் சொல்லும் பாடப்புத்தகத்தன்மை கொண்டவை. எல்லாக் கதைகளும் ஒரு வசனத்துடன் ஆரம்பிக்கின்றன. “அம்மா என்ற மகிழ்ச்சித் துள்ளலுடன் வீட்டுக்குள் நுழைந்தான் அவன். அவனுக்கிருந்த மனநிலையில் தாயை அப்படியே தூக்கி தட்டாமாலை சுற்றினான்.’’ என்று ஆரம்பிக்கின்றது ஒரு கதை. வெளிநாட்டுக்குச் சென்று குடியேறும் மகனுக்கு தாய்நாட்டின் பெருமைகளைப் பற்றி படிக்காத அம்மா ஒரு பெரிய நல்லுபதேசத்தை சொல்லும்போது கதை முடிகிறது. கதாபாத்திர கட்டமைப்பிலோ சூழல் சித்தரிப்பிலோ ஒரு அடிப்படை பயிற்சி கூட தெரியவில்லை


பெரும்பாலான கதைகள் சம்மந்தமில்லாமல் எங்கோ ஆரம்பிக்கின்றன. ’’இப்ப எழுப்பினாதான் இன்னும் அரைமணி நேரத்திலாவது எந்திரிப்பா எழுப்பிவிடுங்க அபியை’’ என்று கணவனிடம் கூறியபடி தன் மகளுக்குப்பிடித்த ஆப்பமும் தேங்காய் பாலும் தயாரிக்க ஆரம்பித்தாள் புவனா என்று ஆரம்பிக்கும் கதை சம்மந்தமே இல்லாமல் ஒரு கிழவி நன்கொடைச் சீட்டை தூக்கி வீசும் இடத்தில் முடிகிறது.


கதைகளின் ஊடாக செல்லும்போது மலர்விழி இளங்கோவன் எளிமையான அன்றாட வாழ்க்கைச் சித்திரங்களை எடுத்து அதில் மேலும் அன்றாட கருத்துக்களைச் சேர்த்து திறனற்ற உரைநடையில் சுருட்டி வைப்பதைத்தான் காண முடிகிறது. ஒரு சிறுகதையில் இருக்கக்கூடாதென்று இலக்கியவடிவம் அறிந்தவர்கள் சொல்லும் அனைத்தும் ஒன்றுவிடாமல் அடங்கிய சிறுகதைகள் என்று இவற்றைச் சொல்ல முடியும்.


சம்பந்தமே இல்லாத செயற்கையான உரையாடலைத் தொடர்ந்து சில நிகழ்ச்சிகளைச் சுருக்கிச் சொல்லி இறுதியில் எல்லாருக்கும் தெரிந்த ஒரு நற்கருத்தை புகுத்தி இவை முடிக்கப்படுகின்றன. கதைகளின் உரையாடல்கள் விவரணைகள் அனைத்திலுமே தமிழின் நாலாந்தர வார இதழ்களில் வரும் கதைகளில் தென்படும் அனைத்து தேய்வழக்குகளும் ஒன்றுவிடாமல் அடுக்கப்பட்டுள்ளன.


மலர்விழி இளங்கோவனுக்கு விமர்சகனாக நான் சொல்ல ஒன்றுதான் இருக்கிறது. இலக்கியம் என்பது மிகப்பெரிய ஒரு மானுட இயக்கம். வாழ்வின் நுண்மைகளைக் கண்டு சொல்வதும் கனவுகளை நிறுத்திச் செல்லவும் முயன்று கொண்டிருக்கும் ஒரு தளம் அது.  உலகின் மாபெரும் படைப்பாளிகளுக்கு நிகரான எழுத்தாளர்கள் எழுதிய, எழுதிக் கொண்டிருக்கும் மொழி தமிழ். நானும் ஒரு எழுத்தாளன் என இதில் எழுதவரும்போது தயவு செய்து கொஞ்சமேனும் இலக்கியத்தை அறிமுகம் செய்து கொள்ளுங்கள். தயவு செய்து கொஞ்சமேனும் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்.


ஒரு ஊருக்குச் செல்லும்போது அந்த ஊரைப்பற்றிய ஐந்து பக்க அளவிலேனும் ஒரு வழிகாட்டி நூலைப்படிக்காமல் இருக்க மாட்டீர்கள். இலக்கியம் என்னும் உலகுக்குள் நுழையும்போது அதற்குரிய ஒரு பத்துப்பக்கத்தையாவது படித்துப்பார்த்தால் உங்களுக்கு என்ன குறைந்துவிடுகிறது?


[சொல்வதெல்லாம் பெண்மை. மலர்விழி இளங்கோவன் ]


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 30, 2016 11:34

அறியாமை இறக்குமதி

Head against the Wall


 


சிங்கப்பூர் இலக்கியத்தின் சங்கடமான ஒரு நடைமுறைச் சிக்கல் அதிகம் பேசப்படுவதில்லை. இங்கு அரசாங்கத்தின் அறிவுறுத்தலால் கட்டாயத்தமிழ்க் கல்வி உண்டு. ஆனால் கல்வியின் சிறுபகுதிதான் அது. சிங்கையின் தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் வகுப்புகளில் வாரம் மூன்று மணி நேரம் மட்டுமே கற்பிக்கப்படுகின்ற தமிழ்க் கல்விக்கு அப்பால் தமிழுடன் தொடர்பற்றவர்கள். இல்லத்திலும் தமிழ் பேசுபவர்கள் மிகக் குறைவு. ஆகவே சிங்கப்பூர்ப் பின்னணியில் இருந்து தமிழ் இலக்கிய வாசிப்போ அது சார்ந்த முயற்சிகளோ அரிதாகவே நிகழ்கின்றன.


சிங்கை இலக்கிய முன்னோடிகளான புதுமைதாசன், இளங்கண்ணன், இராம கண்ணபிரான்  போன்றவர்களைக்கூட அவர்கள் பாடப்புத்தகங்களிலன்றி பெரிதாகத் தெரிந்திருப்பதில்லை. ஆகவே அவர்களில் அரிதாகச் சிலர் எழுதவரும்போதுகூட நடை பலவீனமானதாக இருக்கிறது. நடை என்பது வாழ்வின் அத்தனைதருணங்களிலும் புழங்கும் மொழியிலிருந்து திரண்டு உருவாவது. அச்சூழல் அங்கில்லை. கதைக்கருக்கள் என்பவை வாழ்க்கையின் அனைத்துத் தருணங்களிலும் இருந்து எழுவன. மொழி சமையலறைக்குள் மட்டும் புழங்கும்போது அந்த வாய்ப்பும் குறுகிவிடுகிறது.


ஆனால் கலை என்பது தன் புற எல்லைகளையே சாதகமான வாய்ப்புகளாக ஆக்கிக்கொள்வது. உதாரணமாக அமெரிக்காவில் குடியேறிய யூதர்கள் தாங்கள் மட்டுமே வீட்டில் பேசிக்கொள்ளும் இட்டிஷ் மொழியில் மகத்தான ஆக்கங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.என் மனம் கவர்ந்த ஐசக் பாஷவிஸ் சிங்கர் அவ்விலக்கியத்தின் உச்சம்.


சிங்கப்பூரில் உள்ள அந்த இடைவெளியை நிரப்புவது தமிழகத்தில் இருந்து பணிநிமித்தமோ அல்லது திருமணமாகியோ வரும் புதியகுடியேறிகள் எழுதும் இலக்கியம். சிங்கப்பூரிலிருந்து எழுதப்படுவதனாலேயே இவை சிங்கப்பூர் இலக்கியங்கள் என்று அறியப்படுகின்றன. இவற்றில் கணிசமானவை மிக ஆரம்பகட்ட எழுத்துக்கள். தமிழக வணிக இதழ்களை மட்டும் அறிந்தவர்களால் உருவாக்கப்படுபவை. இவற்றின் பெருக்கம் சிங்கை இலக்கியத்துக்கு மேலும் சுமையை அளிக்கிறது. இங்கு பிறந்து வாழும்  மக்கள் எழுதுவது இவர்களால் முழுமையாக மறைக்கப்பட்டுவிடுமோ என்ற ஐயம் ஏற்படுகிறது.


ஆகவே சிங்கப்பூர் இலக்கியவிமர்சனத்தில் அவ்வெழுத்து சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவரால் எழுதப்பட்டதா இல்லை தமிழகத்தில் பிறந்து வளர்ந்து அங்கே குடியேறியவரால் எழுதப்பட்டதா என்ற பிரிவினை விமர்சகனால் செய்யபடவேண்டும். அங்கே பிறந்து வளர்ந்தவர்களுக்குச் சலுகை காட்டப்படவேண்டும் என்றோ இங்கிருந்து குடியேறியவர்களின் எழுத்தை குறைத்துப்பார்க்கவேண்டும் என்றோ சொல்லவரவில்லை. இலக்கியத்திற்குல் அப்படி குறைத்தலுக்கோ கூட்டலுக்கோ இடமில்லை. இலக்கியப்படைப்பு படைப்பாளியின் புற அடையாளத்தால் நிலைகொள்வது அல்ல, அவன் உள்ளம் நாடு இன மொழியடையாளங்களுக்கு அப்பாற்பட்டது. நான் சொல்வது பண்பாட்டுரீதியாக ஓர் அடையாளப்படுத்தல் நிகழ்த்தப்படவேண்டும் என்று மட்டுமே


ஏனென்றால் தமிழ் காதில் விழுந்துகொண்டே இருக்கும் சூழலில் பிறந்து வளர்ந்து தமிழ் வணிகஎழுத்துக்களை அறிமுகம் செய்துகொண்டவர்கள் சரளமாகத் தமிழ் எழுதிவிடமுடியும். அதைச் சிங்கைச்சூழலில் வைத்து ஒரு மேலதிகத் தகுதியாகக் கொண்டு அவர்கள் எளிய புகழைப் பெற்றுவிடமுடியும். அதை விமர்சகன் சாதக அம்சமாகக் கருத வேண்டியதில்லை. அவர்களின் படைப்பின் இலக்கியத்தன்மை மட்டுமே கருத்தில்கொள்ளப்படவேண்டும். அங்கு பிறந்துவளர்ந்தவர்கள் அங்கிருந்து உருவாக்கும் மொழியும் அழகியலும் தமிழுக்கு புதியகொடையாக எழுந்து வரக்கூடும். நான் சிங்கை இலக்கியத்தில் தேடுவது அதைத்தான்.


சரியான உதாரணமாகச் சொல்லவேண்டும் என்றால் ஷோபா சக்தியை குறிப்பிடலாம். அவரது மொழியும் கலைத்தன்மையும் முற்றிலும் யாழ்ப்பாணத்தன்மை கொண்டவை. அது தமிழ்தான். ஆனால் இருபத்தைந்து வயதில் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடியேறிய ஒருவர் அதை எழுதிவிடமுடியாது.அது பேச்சுமொழியில் ஊறி ஒரு படைப்பாளியின் அகத்தில் கனிந்து உருவாகும் ஒன்று.


சிங்கப்பூர் இலக்கியத்தில்கூட அத்தகைய அழகியல் உருவாகி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உதாரணம் சித்துராஜ் பொன்ராஜின் கதைகள் . ஆனால் அதற்கு  இந்தியாவிலிருந்து வந்தவர்கள் எழுதும் சிங்கப்பூர்ப்பின்னணி மட்டுமே கொண்ட எழுத்திலிருந்து அவ்வெழுத்துக்களைப் பிரித்துப்பார்க்கவேண்டியுள்ளது. கூடவே அங்கேயே பிறந்துவளர்ந்த கமலாதேவி அரவிந்தன், சூர்யரத்னா போன்றவர்கள் உருவாக்கும் எந்த முயற்சியும் இல்லாத அசட்டு எழுத்துக்களை புறமொதுக்கி எது தங்கள் மொழியும் வடிவும் என அடையாளம் காணும் கண் அங்குள்ள வாசகர்களுக்கும் விமர்சகர்களுக்கும் அமையவும்வேண்டும்.


தமிழகத்திலிருந்து சென்று அங்குள்ள சூழலை மாசுபடுத்தும் எழுத்துக்கு மிகச்சிறந்த உதாரணம் மலர்விழி இளங்கோவனின் சொல்வதெல்லாம் பெண்மை என்ற சிறுகதைத்தொகுதி. தமிழகத்தில் இந்தக் கதைகள் எழுதப்பட்டிருந்தால் மிக மிகத் தரமற்ற சிறுகதைகளை வெளியிடும் ராணி, தேவி, தினமலர் வாரமலர் போன்ற இதழ்கள் கூட இவற்றை பொருட்படுத்தியிருக்கமாட்டா.  மலர்விழி இளங்கோவனுக்கு தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்ல தமிழ் வணிக இலக்கியத்தில் கூட எந்த வாசிப்பும் இல்லையென்று தெரிகிறது.


ஒரு கதை ஏன் எழுதப்படவேண்டும், ஒரு கதையினுடைய வடிவம் என்ன என்பது கூட தெரியாமல் சிங்கப்பூர் வந்த பிறகு இப்படி ஒரு வாய்ப்பு இங்கு இருப்பதை அறிந்துகொண்டு   ‘எழுதிப்பார்த்த’ கதைகள் இவை. எழுதக்கூடாது, பிரசுரிக்கக்கூடாது என்றில்லை. ஆனால் அவை வைக்கவேண்டிய இடத்தில் வைக்கப்படவேண்டும். ஆனால் இந்த நூலிலேயே திருமதி மலர்விழி இளங்கோவன் பெற்ற பத்துக்கு மேற்பட்ட விருதுகளின் பட்டியல் உள்ளது.


வாசகன் என்ற முறையில் இந்தக் கதைகள் பெரும் எரிச்சலைக் கிளப்புகின்றன. ஏனெனில் இந்தக் கதைகளுக்குள் உள்ள மனநிலை என்பது வாசகன் ஒன்றுமறியாத மூடன் என்ற முன்முடிவு. ஒரு கதையை அவனுக்காக எழுதும்போது அவனிடம் என்னதான் சொல்ல வேண்டுமென்று விரும்புகிறீர்கள், அவன் இதை எப்படி புரிந்துகொள்ள வேண்டுமென்று எண்ணுகிறீர்கள் என்ற கேள்வி நமக்குள் எழுகிறது.


விமர்சகன் என்ற வகையில் உருவாவது அதைவிட பெரிய எரிச்சல். மேடையில் ஏறிப் பாடும் ஒருவன் குறைந்த பட்சம் குளியலறையில் பாடும் தகுதியையாவது கொண்டிருக்க வேண்டும் அல்லவா? ஓவியர் என்று ஒரு கண்காட்சி நடத்துபவர் பிசிறின்றி ஒரு வட்டம் போடவாவது தெரிந்திருக்க வேண்டுமல்லவா? கதை எழுத வேண்டுமென்றால் மட்டும் எந்த அடிப்படைத் தகுதியும் தேவையில்லை என்ற முடிவுக்கு இவர்கள் எப்படி வருகிறார்கள்?


இந்த தொகுதியில் உள்ள அனைத்து கதைகளுமே மிக ஆரம்பநிலை ஆக்கங்கள். தலைப்புகள் கூட வளர்த்த கடா, அனிச்ச மலர்கள், தன்வினை, அன்பின் வழியது என அக்கதையின் மையக்கருத்தை ஓங்கிச் சொல்லும் பாடப்புத்தகத்தன்மை கொண்டவை. எல்லாக் கதைகளும் ஒரு வசனத்துடன் ஆரம்பிக்கின்றன. “அம்மா என்ற மகிழ்ச்சித் துள்ளலுடன் வீட்டுக்குள் நுழைந்தான் அவன். அவனுக்கிருந்த மனநிலையில் தாயை அப்படியே தூக்கி தட்டாமாலை சுற்றினான்.’’ என்று ஆரம்பிக்கின்றது ஒரு கதை. வெளிநாட்டுக்குச் சென்று குடியேறும் மகனுக்கு தாய்நாட்டின் பெருமைகளைப் பற்றி படிக்காத அம்மா ஒரு பெரிய நல்லுபதேசத்தை சொல்லும்போது கதை முடிகிறது. கதாபாத்திர கட்டமைப்பிலோ சூழல் சித்தரிப்பிலோ ஒரு அடிப்படை பயிற்சி கூட தெரியவில்லை


பெரும்பாலான கதைகள் சம்மந்தமில்லாமல் எங்கோ ஆரம்பிக்கின்றன. ’’இப்ப எழுப்பினாதான் இன்னும் அரைமணி நேரத்திலாவது எந்திரிப்பா எழுப்பிவிடுங்க அபியை’’ என்று கணவனிடம் கூறியபடி தன் மகளுக்குப்பிடித்த ஆப்பமும் தேங்காய் பாலும் தயாரிக்க ஆரம்பித்தாள் புவனா என்று ஆரம்பிக்கும் கதை சம்மந்தமே இல்லாமல் ஒரு கிழவி நன்கொடைச் சீட்டை தூக்கி வீசும் இடத்தில் முடிகிறது.


கதைகளின் ஊடாக செல்லும்போது மலர்விழி இளங்கோவன் எளிமையான அன்றாட வாழ்க்கைச் சித்திரங்களை எடுத்து அதில் மேலும் அன்றாட கருத்துக்களைச் சேர்த்து திறனற்ற உரைநடையில் சுருட்டி வைப்பதைத்தான் காண முடிகிறது. ஒரு சிறுகதையில் இருக்கக்கூடாதென்று இலக்கியவடிவம் அறிந்தவர்கள் சொல்லும் அனைத்தும் ஒன்றுவிடாமல் அடங்கிய சிறுகதைகள் என்று இவற்றைச் சொல்ல முடியும்.


சம்பந்தமே இல்லாத செயற்கையான உரையாடலைத் தொடர்ந்து சில நிகழ்ச்சிகளைச் சுருக்கிச் சொல்லி இறுதியில் எல்லாருக்கும் தெரிந்த ஒரு நற்கருத்தை புகுத்தி இவை முடிக்கப்படுகின்றன. கதைகளின் உரையாடல்கள் விவரணைகள் அனைத்திலுமே தமிழின் நாலாந்தர வார இதழ்களில் வரும் கதைகளில் தென்படும் அனைத்து தேய்வழக்குகளும் ஒன்றுவிடாமல் அடுக்கப்பட்டுள்ளன.


மலர்விழி இளங்கோவனுக்கு விமர்சகனாக நான் சொல்ல ஒன்றுதான் இருக்கிறது. இலக்கியம் என்பது மிகப்பெரிய ஒரு மானுட இயக்கம். வாழ்வின் நுண்மைகளைக் கண்டு சொல்வதும் கனவுகளை நிறுத்திச் செல்லவும் முயன்று கொண்டிருக்கும் ஒரு தளம் அது.  உலகின் மாபெரும் படைப்பாளிகளுக்கு நிகரான எழுத்தாளர்கள் எழுதிய, எழுதிக் கொண்டிருக்கும் மொழி தமிழ். நானும் ஒரு எழுத்தாளன் என இதில் எழுதவரும்போது தயவு செய்து கொஞ்சமேனும் இலக்கியத்தை அறிமுகம் செய்து கொள்ளுங்கள். தயவு செய்து கொஞ்சமேனும் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்.


ஒரு ஊருக்குச் செல்லும்போது அந்த ஊரைப்பற்றிய ஐந்து பக்க அளவிலேனும் ஒரு வழிகாட்டி நூலைப்படிக்காமல் இருக்க மாட்டீர்கள். இலக்கியம் என்னும் உலகுக்குள் நுழையும்போது அதற்குரிய ஒரு பத்துப்பக்கத்தையாவது படித்துப்பார்த்தால் உங்களுக்கு என்ன குறைந்துவிடுகிறது?


[சொல்வதெல்லாம் பெண்மை. மலர்விழி இளங்கோவன் ]


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 30, 2016 11:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.