Jeyamohan's Blog, page 1724

October 5, 2016

காந்தி கடிதங்கள் 2


சென்னை ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் இன்று உங்களின் பேச்சு அருமை. வித்தியாசமான தலைப்பு. (காந்தியம் தோற்கும் இடங்கள்) ஆற்றொழுக்கான உங்களின் பேச்சும், கவனம் சிதறாத எங்களின் கேட்பும் ஒத்திசைவுடன் இருந்தது.


அதிகார குவியம் மையப்படுத்துதலை காந்தி எதிர்கொண்ட விதம் குறித்த உங்களின் தொகுப்பு சிறப்பு. வரலாற்றை தொன்மங்களின் துணையுடன் அணுகாமல், கூரிய கத்தி கொண்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென கூறியது முக்கியத்துவம் வாய்ந்தது.


என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அப்படியே விலகிவிட்டேன். மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் நீண்டநேரம் உங்களுடன் செலவிடவேண்டும்.


அன்புடன்,


எம்.எஸ். ராஜேந்திரன்


திருவண்ணாமலை


***


அன்புள்ள ஜெ,


காந்தி உரை சிறப்பாக இருந்தது. நீங்கள் ஆரம்பித்த விதம் முக்கியமானது. அங்கே வழக்கமாகப்பேசப்படும் உரைகளில் இருந்து உங்கள் அணுகுமுறையை முழுமையாக வேறுபடுத்திக்கொண்டீர்கள். அவர்கள் புராணக்கதைகளை உருவாக்குகிறார்கள் என்று சொல்லி நீங்கள் இரக்கமற்ற வரலாற்றுநோக்கை முன்வைப்பதாகச் சொன்னீர்கள். காந்தியின் ஆராதகன் அல்லாத நான் என்னும் உங்கள் வரி மிக முக்கியமானது.


காந்தியைப் புரிந்துகொள்வதில் உள்ள முக்கியமான கேள்வி எனக்கும் இருந்தது. என் நண்பன் காந்தியை கண்டபடி விமர்சிப்பான். எல்லாமே உயர்ந்த அறநிலையில் நின்றபடித்தான். ஆனால் அவன் மு கருணாநிதியின் பரமரசிகன். முகவின் ஊழல், குடும்பப்பற்று , மோசடிகள், பசப்புகள் எல்லாமே அவனுக்குத்தெரியும். இந்த முரண்பாட்டை இப்போதுதான் ஓரளவு புரிந்துகொள்கிறேன்


கவி. கண்ணன் சென்னை


***


அன்புள்ள ஜெ


காந்தியம் தோற்கும் இடங்கள் சுருக்கமான அழகிய உரை. இன்னும் கொஞ்சம்கூட நீங்கள் பேசியிருக்கலாம் என்பதே என் எண்ணம். இத்தனை சுருக்கமான உரை மேலும் பல கேள்விகளை எழுப்பியபடி நின்றிருக்கும். காந்தி மையங்களுக்கு எதிரானவர் என்றீர்கள். அவரே ஒரு மையமாக ஆன காந்திய அரசியலை நீங்கள் எப்படிப்பார்க்கிறீர்கள் என அறிய ஆவல்


ஜெயக்குமார் பொன்னம்பலம்


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 05, 2016 11:32

காந்தி கடிதங்கள் 2


சென்னை ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் இன்று உங்களின் பேச்சு அருமை. வித்தியாசமான தலைப்பு. (காந்தியம் தோற்கும் இடங்கள்) ஆற்றொழுக்கான உங்களின் பேச்சும், கவனம் சிதறாத எங்களின் கேட்பும் ஒத்திசைவுடன் இருந்தது.


அதிகார குவியம் மையப்படுத்துதலை காந்தி எதிர்கொண்ட விதம் குறித்த உங்களின் தொகுப்பு சிறப்பு. வரலாற்றை தொன்மங்களின் துணையுடன் அணுகாமல், கூரிய கத்தி கொண்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென கூறியது முக்கியத்துவம் வாய்ந்தது.


என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அப்படியே விலகிவிட்டேன். மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் நீண்டநேரம் உங்களுடன் செலவிடவேண்டும்.


அன்புடன்,


எம்.எஸ். ராஜேந்திரன்


திருவண்ணாமலை


***


அன்புள்ள ஜெ,


காந்தி உரை சிறப்பாக இருந்தது. நீங்கள் ஆரம்பித்த விதம் முக்கியமானது. அங்கே வழக்கமாகப்பேசப்படும் உரைகளில் இருந்து உங்கள் அணுகுமுறையை முழுமையாக வேறுபடுத்திக்கொண்டீர்கள். அவர்கள் புராணக்கதைகளை உருவாக்குகிறார்கள் என்று சொல்லி நீங்கள் இரக்கமற்ற வரலாற்றுநோக்கை முன்வைப்பதாகச் சொன்னீர்கள். காந்தியின் ஆராதகன் அல்லாத நான் என்னும் உங்கள் வரி மிக முக்கியமானது.


காந்தியைப் புரிந்துகொள்வதில் உள்ள முக்கியமான கேள்வி எனக்கும் இருந்தது. என் நண்பன் காந்தியை கண்டபடி விமர்சிப்பான். எல்லாமே உயர்ந்த அறநிலையில் நின்றபடித்தான். ஆனால் அவன் மு கருணாநிதியின் பரமரசிகன். முகவின் ஊழல், குடும்பப்பற்று , மோசடிகள், பசப்புகள் எல்லாமே அவனுக்குத்தெரியும். இந்த முரண்பாட்டை இப்போதுதான் ஓரளவு புரிந்துகொள்கிறேன்


கவி. கண்ணன் சென்னை


***


அன்புள்ள ஜெ


காந்தியம் தோற்கும் இடங்கள் சுருக்கமான அழகிய உரை. இன்னும் கொஞ்சம்கூட நீங்கள் பேசியிருக்கலாம் என்பதே என் எண்ணம். இத்தனை சுருக்கமான உரை மேலும் பல கேள்விகளை எழுப்பியபடி நின்றிருக்கும். காந்தி மையங்களுக்கு எதிரானவர் என்றீர்கள். அவரே ஒரு மையமாக ஆன காந்திய அரசியலை நீங்கள் எப்படிப்பார்க்கிறீர்கள் என அறிய ஆவல்


ஜெயக்குமார் பொன்னம்பலம்


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 05, 2016 11:32

இணையத்தில் சுபமங்களா

suba


வணக்கம்.


திரு கோமல் சாமிநாதனை ஆசிரியராகக் கொண்டு சுபமங்களா இலக்கிய இதழாக 1991 முதல் 1995 வரை வெளிவந்தன. அந்த 59 இதழ்களையும் இணையத்தில் PDF வடிவில் கிடைக்க திருமதி.தாரிணி (கோமல் அவர்களின் மகள்) ஏற்பாடு செய்து வருகிறார். இன்னும் ஒரு வாரத்திற்குள் அவ்வேலை முடிவடைய உள்ளது.


அதனை வெளியிடும் நிகழ்வை வரும் அக்டோபர் 15 அன்று சென்னை மயிலையில் குவிகம் இலக்கிய வாசல் நடத்துகிறது.


நீங்கள் தற்சமயம் சிங்கப்பூரில் இருப்பதாகத் தெரிவித்து இருந்தீர்கள். நிகழ்வில் கலந்துகொள்ள வாய்ப்பு இல்லை என்று தெரிவித்திருந்தீர்கள். நிலைமையில் ஏதேனும் மாறுதல் உள்ளதா?


நிகழ்ச்சிக்கு நேரில் வர இயலவில்லை என்றால் இந்த முயற்சி குறித்த தங்கள் கருத்தினை ஓரிரு நிமிடங்களாவது ஒரு ஒளி அல்லது ஒலி வடிவத்தில் (VIDEO OR AUDIO) அனுப்பிவைக்க முடியுமா?


அந்த காலகட்டத்தில் சுபமங்களாவின் இலக்கியப்பணியில் தங்கள் பங்களிப்பு குறிப்பிடத் தக்கது என்பதால் இந்த வேண்டுகோள்.


அன்புடன்


கிருபானந்தன்


குவிகம்


இலக்கிய வாசல்










அன்புள்ள கிருபானந்தன்,


சுபமங்களா தமிழில் ஒரு திருப்புமுனை இதழ். அதில் தமிழ் நவீன எழுத்தாளர்களின் நீண்ட பேட்டிகள் வெளிவந்தபோது எழுந்த பதற்றத்தையும் பரபரப்பையும் நினைவுகூர்கிறேன். அதில் வண்ணதாசனின் பேட்டி வெளிவந்தபோது என் நண்பர் ஒருவர் “யார் இவர்?” என திகைத்தார். அவர் பாலகுமாரனின் பெரும் வாசகர் அன்று.


நான் எழுத்தாளனாக மலர்ந்தது அதன் வழியாகவே. அதன் இரண்டாவது இதழிலேயே என் ‘ஜகன்மித்யை’ என்னும் சிறுகதை பிரசுரமாகியது. பல பெயர்களில் அதில் எழுதியிருக்கிறேன். கோமல் சுவாமிநாதனை வணக்கத்துடன் நினைத்துக்கொள்கிறேன்


மிகச்சிறந்த முயற்சி வாழ்த்துக்கள்


ஜெ


 







தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 05, 2016 11:31

இணையத்தில் சுபமங்களா

suba


வணக்கம்.


திரு கோமல் சாமிநாதனை ஆசிரியராகக் கொண்டு சுபமங்களா இலக்கிய இதழாக 1991 முதல் 1995 வரை வெளிவந்தன. அந்த 59 இதழ்களையும் இணையத்தில் PDF வடிவில் கிடைக்க திருமதி.தாரிணி (கோமல் அவர்களின் மகள்) ஏற்பாடு செய்து வருகிறார். இன்னும் ஒரு வாரத்திற்குள் அவ்வேலை முடிவடைய உள்ளது.


அதனை வெளியிடும் நிகழ்வை வரும் அக்டோபர் 15 அன்று சென்னை மயிலையில் குவிகம் இலக்கிய வாசல் நடத்துகிறது.


நீங்கள் தற்சமயம் சிங்கப்பூரில் இருப்பதாகத் தெரிவித்து இருந்தீர்கள். நிகழ்வில் கலந்துகொள்ள வாய்ப்பு இல்லை என்று தெரிவித்திருந்தீர்கள். நிலைமையில் ஏதேனும் மாறுதல் உள்ளதா?


நிகழ்ச்சிக்கு நேரில் வர இயலவில்லை என்றால் இந்த முயற்சி குறித்த தங்கள் கருத்தினை ஓரிரு நிமிடங்களாவது ஒரு ஒளி அல்லது ஒலி வடிவத்தில் (VIDEO OR AUDIO) அனுப்பிவைக்க முடியுமா?


அந்த காலகட்டத்தில் சுபமங்களாவின் இலக்கியப்பணியில் தங்கள் பங்களிப்பு குறிப்பிடத் தக்கது என்பதால் இந்த வேண்டுகோள்.


அன்புடன்


கிருபானந்தன்


குவிகம்


இலக்கிய வாசல்










அன்புள்ள கிருபானந்தன்,


சுபமங்களா தமிழில் ஒரு திருப்புமுனை இதழ். அதில் தமிழ் நவீன எழுத்தாளர்களின் நீண்ட பேட்டிகள் வெளிவந்தபோது எழுந்த பதற்றத்தையும் பரபரப்பையும் நினைவுகூர்கிறேன். அதில் வண்ணதாசனின் பேட்டி வெளிவந்தபோது என் நண்பர் ஒருவர் “யார் இவர்?” என திகைத்தார். அவர் பாலகுமாரனின் பெரும் வாசகர் அன்று.


நான் எழுத்தாளனாக மலர்ந்தது அதன் வழியாகவே. அதன் இரண்டாவது இதழிலேயே என் ‘ஜகன்மித்யை’ என்னும் சிறுகதை பிரசுரமாகியது. பல பெயர்களில் அதில் எழுதியிருக்கிறேன். கோமல் சுவாமிநாதனை வணக்கத்துடன் நினைத்துக்கொள்கிறேன்


மிகச்சிறந்த முயற்சி வாழ்த்துக்கள்


ஜெ


 







தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 05, 2016 11:31

October 4, 2016

அமைப்பு மனிதர்களின் இலக்கியம்

அமைப்பு மனிதர்களைப்பற்றிய ஒரு மனச்சுளிப்பு இலக்கியவாதிகளிடம் எப்போதும் உண்டு. அவர்களின் அடிப்படை இயல்பு என்பது சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வது. ஆகவே தனக்கென தனித்தன்மை ஏதும் இல்லாமலிருப்பது. கருத்துக்களில், ஆளுமையில் எப்போதும் ஒரு வளைந்து நெளியும் தன்மை அவர்களிடமிருக்கும். இந்த நிலையற்ற தன்மையை எழுத்தாளர்கள் சந்தர்ப்பவாதம் என்றும் ,கழைக்கூத்தாடித்தனம் என்றும் புரிந்துகொள்வார்கள்.


ஆனால் இந்த நெகிழ்தன்மையால் அமைப்பு மனிதர்கள் எளிதில் முக்கியமானவர்களிடம் தொடர்புகளை உருவாக்கிக்கொள்வார்கள். அமைப்புகளிடம் ஒத்துப்போவார்கள். எவரையும் சீண்டாதவர்களாகவும் எனவே ஆபத்தற்றவர்களாகவும் கருதப்படுவார்கள். அமைப்புமனிதர்களின் ஆற்றல் என்பது இவ்வாறு உருவாவதே.


அமைப்புமனிதர்களின் செயல்விசை என்பது புறவயமானது. அவர்கள் வென்றெடுக்கவேண்டிய அனைத்தும் வெளியேதான் உள்ளன. எனவே அமைப்புகளைக் கட்டி எழுப்புவது, அனைவரையும் ஒருங்கிணைத்து நிகழ்ச்சிகளை உருவாக்குவது போன்றவற்றை அவர்கள் சலிப்பில்லாமல் செய்வார்கள். தனியியல்பால் அவர்கள் ஒருவகை வணிகர்கள். இலக்கியவாதியிடம் இருக்கும் மனநிலைக்கொந்தளிப்புகள், சலிப்புகள், புண்படுத்தும் இயல்பு போன்றவை அவர்களிடமிருப்பதில்லை.


அமைப்புமனிதர்கள் மூன்று வகை. இலட்சியவாதிகளான அமைப்பு மனிதர்கள் முதல் வரிசை. அவர்களில் சிலர் வரலாற்றில் இடம்பெறுவார்கள், கல்கி சதாசிவம் போல. சிலர் நினைவுகளில் மட்டும் நீடிப்பார்கள். இலக்கியவீதி இனியவன் [சென்னை], இலக்கியவட்டம் நாராயணன் [காஞ்சிபுரம்] நெய்தல் கிருஷ்ணன் [நாகர்கோயில்] போல. கலையிலக்கியதளத்தில் அவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அவர்களைச் சார்ந்தே சில இலக்கிய அலைகள் உருவாகியிருப்பதை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் காணலாம்


இரண்டாவது வரிசை, வணிகர்கள். அவர்களின் நோக்கம் முதன்மையாக வணிக அமைப்புக்களை உருவாக்குவதே. கூடவே அவர்கள் தங்கள் பண்பாட்டு ஆர்வத்தாலும் இலக்கிய ரசனையாலும் பங்களிப்பையும் ஆற்றியிருப்பார்கள். எஸ்.எஸ்.வாசன், சாவி போல.


மூன்றாவது வரிசை ,அமைப்புமனிதர்கள் தங்கள் மொத்த ஆற்றலையும் பணியையும் தங்கள் எழுத்துக்களை முன்னிறுத்தவே செலவிடுவார்கள். நூல்களை எழுதுவார்கள். அதற்கு விழாக்களை ஒருங்கிணைப்பார்கள். தன் கீழே முதிராப் படைப்பாளிகளைத் திரட்டுவார்கள். அதற்கு அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் ஆதரவைச் சேர்த்துக்கொள்வார்கள். நிதிசேர்ப்பார்கள். காலப்போக்கில் அதிகாரமையமாக ஆகி அனைவரும அஞ்சும் ஆளுமைகளாக மாறுவார்கள்.


அந்நிலையில் சூழலின் தரத்தைக் கீழிறக்கும் சக்திகளாக, ஆக்கபூர்வப் பண்பாட்டுச்செயல்பாட்டுக்கு எதிரானவர்களாக அவர்கள் ஆகிவிடுவார்கள். எதிர்க்கப்படவேண்டியவர்கள் அவர்கள் மட்டுமே. அவர்கள் உருவாக்கியிருக்கும் புகழ்மொழிகளின் பெரிய வளையத்தைக் கடந்து அவர்களின் உண்மைத்தரத்தை அடையாளம் காட்டுவது சாதாரணமான வாசகர்களால் இயல்வது அல்ல. ஆனால் அது நிகழ்ந்தாகவேண்டும். இல்லையேல் அங்கே இலக்கிய இயக்கமே தேக்கம் கண்டுவிடும்,


*


மா.அன்பழகனின் கதைகளை வாசிப்பதற்கு முன்னரே அவருடைய ஆளுமையைப்பற்றி அறிந்துகொண்டேன். சிங்கப்பூரில் முக்கியமான இலக்கிய அமைப்புகளை வழிநடத்துபவர். இலக்கியவிழாக்களை ஒருங்கிணைப்பவர். அவர் தன் படைப்புகளையும், தன்னை ஏற்பவர்களின் படைப்புகளையும் மட்டுமே முன்னிறுத்துகிறார்.


அந்த அறிதலை ஒதுக்கி வைத்து வாசகனுக்குரிய நல்லெண்ணத்துடன் அவருடைய இரு சிறுகதைத் தொகுதிகளை வாசித்தேன். மா.அன்பழகனின் அளந்துபோட்டச் சிறுகதைகள், விடியல் விளக்குகள். முழுக்கமுழுக்க அமைப்புமனிதரால் எழுதப்பட்ட மிக ஆரம்பநிலை ஆக்கங்கள் இவை. எவ்வகையிலும் இலக்கியரீதியாகப் பொருட்படுத்தத் தக்கவை அல்ல. வணிகஎழுத்தாகக் கொள்ளத்தக்கவை அல்ல. கல்வித்துறைசார்ந்த அடிப்படைத்தகுதியும் இவற்றுக்கில்லை.


இக்கதைகளில் ஒருசிலவற்றையேனும் எடுத்து ஏன் இவை இலக்கியமாக ஆகவில்லை என விவாதிக்கலாமென்னும் எண்ணம் எழுந்ததுமே சலிப்பும் வந்துசூழ்ந்துகொண்டது. இருநூல்களில் இருந்து ஒரு வரிகூட பொருட்படுத்தும்படி இல்லை என்னும்போது என்னதான் சொல்வது?


மிக எளிய முறையிலேனும் வாசிப்புடன் அறிமுகம் உடைய எவருக்கும் இவற்றின் தரம் பற்றி எதுவும் சொல்லவேண்டிய தேவை இல்லை. சர்வசாதாரணமான நிகழ்வுகள் செயற்கையான, தேய்வழக்குகளால் ஆன ஒரு மொழிநடையில் சொல்லப்பட்டு ஒரு எளிய அன்றாடக்கருத்தில் சென்று முடிகின்றன இக்கதைகள்.


நெடுங்காலமாக எழுதிவருகிறார் அன்பழகன். நாவல்கள் கவிதைகள் என எழுதிக்குவித்திருக்கிறார். அமைச்சர்கள், கல்வித்துறை உயரதிகாரிகள் போன்றவர்களை அழைத்து கொத்துக்கொத்தாக நூல்களை வெளியிட்டிருக்கிறார். ஆனால் தமிழில் வெளிவந்த இலக்கியநூல்கள் எவற்றுடனும் அவருக்கு எளிய அறிமுகம்கூட இல்லை என்பதை இக்கதைகள் காட்டுகின்றன.


வேறெந்த துறையிலும் இப்படி மிக ஆரம்பநிலைப் பயிற்சிகூட இல்லாமல் படைத்துவிட்டு மன்றில் நிற்கமுடியும் எனத் தோன்றவில்லை. வண்ணங்களை அள்ளி தாளிதில் தெளித்துவிட்டு ஓவியனாக சிங்கப்பூர் கலைக்கழகத்தில் ஒரு கண்காட்சி வைத்தால் அது எவ்வளவு கேலிக்குரியதாக இருக்கும். அதற்கு அதிகாரிகளும் அமைச்சர்களும் வந்து வாழ்த்துரை வழங்கினால் அதை எப்படி எடுத்துக்கொள்வோம்?


இலக்கியத்தில் மட்டும் இது ஏன் சாத்தியமாகிறது? பிரச்சினை உண்மையில் எங்கே இருக்கிறது? இந்தக்கதைகள் இத்தனை ஆர்ப்பாட்டமாக ஒரு சமூகத்தின் மையத்தில் நிறுத்தப்படவில்லை என்றால் காகிதவிரயம் என்பதோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம்


ஒருவர் எழுதுவது அவரது சுதந்திரம். ஆனால் அவர் அமைப்பு மனிதராக இருக்கையில் தன் அனைத்து ஆற்றல்களையும் கொண்டு தன் போலிப்படைப்புகளை உயர்த்தி முன்வைப்பார். அதன் மறுபக்கமாக உண்மையான ஆக்கங்களை மறைக்கவும் ஒடுக்கவும் முயல்வார். அந்த இடத்தில்தான் அவர் தீமைபயப்பவராக ஆகிறார்.


தமிழகத்தில் நமக்கு ஒரு அசட்டுநோக்கு உண்டு. ஒரு விருதோ பரிசோ ஒருவருக்கு அளிக்கப்படும் என்றால் அது அவர் லாட்டரியில் பரிசுபெற்றதற்கு நிகராகவே எண்ணுவோம். அவரது தகுதியை, அப்படைப்பின் தரத்தைப்பற்றி பேச்சு எழுமென்றால் ‘அடுத்தவனுக்கு கிடைச்சதை குறை சொல்லலாமா?’ என்ற அப்பாவிக்குரல் உடனே எழும்.


இலக்கியத்தில் படைப்புகள், அதற்கான அங்கீகாரங்கள் கறாராகவே அணுகப்படவேண்டும். அந்த நோக்கு இந்தியாவில் தமிழின் அண்டைமாநிலங்களான கேரளத்திலும் கர்நாடகத்திலும் மிகவலுவாகவே உள்ளது. அங்கு தகுதியற்ற ஒருவர் எவ்வகையிலேனும் அங்கீகரிக்கப்படுவார் என்றால் பொதுக்கண்டனம் மிகக்கடுமையாக எழுவது வழக்கம். ஆகவே அவ்வாறு நிகழ்வது மிகமிக அபூர்வம். தமிழில் அந்தக்குரல் க.நா.சுவாலும் சுந்தர ராமசாமியாலும் வன்மையாக முன்வைக்கப்பட்டது. ஆனால் அது பொதுப்போக்காக எழவில்லை. சிங்கப்பூர் இலக்கியத்தில் அது நிகழவேண்டும்.


அதைவிட முக்கியமான அமைப்புகளில் பொறுப்பிலிருப்பவர்கள் உண்மையான கலை இலக்கிய முயற்சிகளுக்கும் அமைப்புமனிதர்களின் ஏற்பாடுகளுக்கும் நடுவே வேறுபாடு காணும் குறைந்தபட்ச நுண்ணுணர்வுடன் இருக்கவேண்டும். தங்களை எளிதில் வந்தடைகிறார்கள், இணக்கமாக இருக்கிறார்கள் என்பதனாலேயே அமைப்பு மனிதர்களை படைப்பாளிகளின் இடத்தில் அவர்கள் வைப்பார்கள் என்றால் மிகப்பெரிய பிழை செய்கிறார்கள்.


இலக்கியத்தின் அடிப்படையே ரசனைதான். அது கூரிய பாகுபாடுகளால்தான் உருவாகும். எல்லாம் இலக்கியமே என்னும் வரி இலக்கியம் தேவையில்லை என்ற வரிக்குச் சமானமானது.


 


அளந்துபோட்ட சிறுகதைகள் – மா. அன்பழகன்


விடியல் விளக்குகள். – மா அன்பழகன்


 


சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் செல்நெறிகள்


இராம கண்ணபிரான் கதைகள் பற்றி


நா கோவிந்தசாமி


சூர்யரத்னா கதைகள் நூர்ஜகான் கதைகள்


கமலாதேவி அரவிந்தன்


உதுமான் கனி


புதுமைதாசன்


பெண் எழுத்தாளருகளின் ஆக்கங்கள் பற்றி


சிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 1


சிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 2


ந.பழனி வேலு  பற்றிய கட்டுரை


சிங்கை இளங்கண்ணன் பற்றிய கட்டுரை


பொன் சுந்தரராசு பற்றிய கட்டுரை


மலர்விழி இளங்கோவன்கட்டுரை


சிங்கப்பூர் விமர்சனம் அறிவுரைகள்


அழகுநிலா கதைகள் பற்றி


சிங்கப்பூர் கடிதங்கள் 3


சிங்கப்பூர் கடிதங்கள்: 4


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 04, 2016 11:33

அமைப்பு மனிதர்களின் இலக்கியம்

அமைப்பு மனிதர்களைப்பற்றிய ஒரு மனச்சுளிப்பு இலக்கியவாதிகளிடம் எப்போதும் உண்டு. அவர்களின் அடிப்படை இயல்பு என்பது சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வது. ஆகவே தனக்கென தனித்தன்மை ஏதும் இல்லாமலிருப்பது. கருத்துக்களில், ஆளுமையில் எப்போதும் ஒரு வளைந்து நெளியும் தன்மை அவர்களிடமிருக்கும். இந்த நிலையற்ற தன்மையை எழுத்தாளர்கள் சந்தர்ப்பவாதம் என்றும் ,கழைக்கூத்தாடித்தனம் என்றும் புரிந்துகொள்வார்கள்.


ஆனால் இந்த நெகிழ்தன்மையால் அமைப்பு மனிதர்கள் எளிதில் முக்கியமானவர்களிடம் தொடர்புகளை உருவாக்கிக்கொள்வார்கள். அமைப்புகளிடம் ஒத்துப்போவார்கள். எவரையும் சீண்டாதவர்களாகவும் எனவே ஆபத்தற்றவர்களாகவும் கருதப்படுவார்கள். அமைப்புமனிதர்களின் ஆற்றல் என்பது இவ்வாறு உருவாவதே.


அமைப்புமனிதர்களின் செயல்விசை என்பது புறவயமானது. அவர்கள் வென்றெடுக்கவேண்டிய அனைத்தும் வெளியேதான் உள்ளன. எனவே அமைப்புகளைக் கட்டி எழுப்புவது, அனைவரையும் ஒருங்கிணைத்து நிகழ்ச்சிகளை உருவாக்குவது போன்றவற்றை அவர்கள் சலிப்பில்லாமல் செய்வார்கள். தனியியல்பால் அவர்கள் ஒருவகை வணிகர்கள். இலக்கியவாதியிடம் இருக்கும் மனநிலைக்கொந்தளிப்புகள், சலிப்புகள், புண்படுத்தும் இயல்பு போன்றவை அவர்களிடமிருப்பதில்லை.


அமைப்புமனிதர்கள் மூன்று வகை. இலட்சியவாதிகளான அமைப்பு மனிதர்கள் முதல் வரிசை. அவர்களில் சிலர் வரலாற்றில் இடம்பெறுவார்கள், கல்கி சதாசிவம் போல. சிலர் நினைவுகளில் மட்டும் நீடிப்பார்கள். இலக்கியவீதி இனியவன் [சென்னை], இலக்கியவட்டம் நாராயணன் [காஞ்சிபுரம்] நெய்தல் கிருஷ்ணன் [நாகர்கோயில்] போல. கலையிலக்கியதளத்தில் அவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அவர்களைச் சார்ந்தே சில இலக்கிய அலைகள் உருவாகியிருப்பதை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் காணலாம்


இரண்டாவது வரிசை, வணிகர்கள். அவர்களின் நோக்கம் முதன்மையாக வணிக அமைப்புக்களை உருவாக்குவதே. கூடவே அவர்கள் தங்கள் பண்பாட்டு ஆர்வத்தாலும் இலக்கிய ரசனையாலும் பங்களிப்பையும் ஆற்றியிருப்பார்கள். எஸ்.எஸ்.வாசன், சாவி போல.


மூன்றாவது வரிசை ,அமைப்புமனிதர்கள் தங்கள் மொத்த ஆற்றலையும் பணியையும் தங்கள் எழுத்துக்களை முன்னிறுத்தவே செலவிடுவார்கள். நூல்களை எழுதுவார்கள். அதற்கு விழாக்களை ஒருங்கிணைப்பார்கள். தன் கீழே முதிராப் படைப்பாளிகளைத் திரட்டுவார்கள். அதற்கு அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் ஆதரவைச் சேர்த்துக்கொள்வார்கள். நிதிசேர்ப்பார்கள். காலப்போக்கில் அதிகாரமையமாக ஆகி அனைவரும அஞ்சும் ஆளுமைகளாக மாறுவார்கள்.


அந்நிலையில் சூழலின் தரத்தைக் கீழிறக்கும் சக்திகளாக, ஆக்கபூர்வப் பண்பாட்டுச்செயல்பாட்டுக்கு எதிரானவர்களாக அவர்கள் ஆகிவிடுவார்கள். எதிர்க்கப்படவேண்டியவர்கள் அவர்கள் மட்டுமே. அவர்கள் உருவாக்கியிருக்கும் புகழ்மொழிகளின் பெரிய வளையத்தைக் கடந்து அவர்களின் உண்மைத்தரத்தை அடையாளம் காட்டுவது சாதாரணமான வாசகர்களால் இயல்வது அல்ல. ஆனால் அது நிகழ்ந்தாகவேண்டும். இல்லையேல் அங்கே இலக்கிய இயக்கமே தேக்கம் கண்டுவிடும்,


*


மா.அன்பழகனின் கதைகளை வாசிப்பதற்கு முன்னரே அவருடைய ஆளுமையைப்பற்றி அறிந்துகொண்டேன். சிங்கப்பூரில் முக்கியமான இலக்கிய அமைப்புகளை வழிநடத்துபவர். இலக்கியவிழாக்களை ஒருங்கிணைப்பவர். அவர் தன் படைப்புகளையும், தன்னை ஏற்பவர்களின் படைப்புகளையும் மட்டுமே முன்னிறுத்துகிறார்.


அந்த அறிதலை ஒதுக்கி வைத்து வாசகனுக்குரிய நல்லெண்ணத்துடன் அவருடைய இரு சிறுகதைத் தொகுதிகளை வாசித்தேன். மா.அன்பழகனின் அளந்துபோட்டச் சிறுகதைகள், விடியல் விளக்குகள். முழுக்கமுழுக்க அமைப்புமனிதரால் எழுதப்பட்ட மிக ஆரம்பநிலை ஆக்கங்கள் இவை. எவ்வகையிலும் இலக்கியரீதியாகப் பொருட்படுத்தத் தக்கவை அல்ல. வணிகஎழுத்தாகக் கொள்ளத்தக்கவை அல்ல. கல்வித்துறைசார்ந்த அடிப்படைத்தகுதியும் இவற்றுக்கில்லை.


இக்கதைகளில் ஒருசிலவற்றையேனும் எடுத்து ஏன் இவை இலக்கியமாக ஆகவில்லை என விவாதிக்கலாமென்னும் எண்ணம் எழுந்ததுமே சலிப்பும் வந்துசூழ்ந்துகொண்டது. இருநூல்களில் இருந்து ஒரு வரிகூட பொருட்படுத்தும்படி இல்லை என்னும்போது என்னதான் சொல்வது?


மிக எளிய முறையிலேனும் வாசிப்புடன் அறிமுகம் உடைய எவருக்கும் இவற்றின் தரம் பற்றி எதுவும் சொல்லவேண்டிய தேவை இல்லை. சர்வசாதாரணமான நிகழ்வுகள் செயற்கையான, தேய்வழக்குகளால் ஆன ஒரு மொழிநடையில் சொல்லப்பட்டு ஒரு எளிய அன்றாடக்கருத்தில் சென்று முடிகின்றன இக்கதைகள்.


நெடுங்காலமாக எழுதிவருகிறார் அன்பழகன். நாவல்கள் கவிதைகள் என எழுதிக்குவித்திருக்கிறார். அமைச்சர்கள், கல்வித்துறை உயரதிகாரிகள் போன்றவர்களை அழைத்து கொத்துக்கொத்தாக நூல்களை வெளியிட்டிருக்கிறார். ஆனால் தமிழில் வெளிவந்த இலக்கியநூல்கள் எவற்றுடனும் அவருக்கு எளிய அறிமுகம்கூட இல்லை என்பதை இக்கதைகள் காட்டுகின்றன.


வேறெந்த துறையிலும் இப்படி மிக ஆரம்பநிலைப் பயிற்சிகூட இல்லாமல் படைத்துவிட்டு மன்றில் நிற்கமுடியும் எனத் தோன்றவில்லை. வண்ணங்களை அள்ளி தாளிதில் தெளித்துவிட்டு ஓவியனாக சிங்கப்பூர் கலைக்கழகத்தில் ஒரு கண்காட்சி வைத்தால் அது எவ்வளவு கேலிக்குரியதாக இருக்கும். அதற்கு அதிகாரிகளும் அமைச்சர்களும் வந்து வாழ்த்துரை வழங்கினால் அதை எப்படி எடுத்துக்கொள்வோம்?


இலக்கியத்தில் மட்டும் இது ஏன் சாத்தியமாகிறது? பிரச்சினை உண்மையில் எங்கே இருக்கிறது? இந்தக்கதைகள் இத்தனை ஆர்ப்பாட்டமாக ஒரு சமூகத்தின் மையத்தில் நிறுத்தப்படவில்லை என்றால் காகிதவிரயம் என்பதோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம்


ஒருவர் எழுதுவது அவரது சுதந்திரம். ஆனால் அவர் அமைப்பு மனிதராக இருக்கையில் தன் அனைத்து ஆற்றல்களையும் கொண்டு தன் போலிப்படைப்புகளை உயர்த்தி முன்வைப்பார். அதன் மறுபக்கமாக உண்மையான ஆக்கங்களை மறைக்கவும் ஒடுக்கவும் முயல்வார். அந்த இடத்தில்தான் அவர் தீமைபயப்பவராக ஆகிறார்.


தமிழகத்தில் நமக்கு ஒரு அசட்டுநோக்கு உண்டு. ஒரு விருதோ பரிசோ ஒருவருக்கு அளிக்கப்படும் என்றால் அது அவர் லாட்டரியில் பரிசுபெற்றதற்கு நிகராகவே எண்ணுவோம். அவரது தகுதியை, அப்படைப்பின் தரத்தைப்பற்றி பேச்சு எழுமென்றால் ‘அடுத்தவனுக்கு கிடைச்சதை குறை சொல்லலாமா?’ என்ற அப்பாவிக்குரல் உடனே எழும்.


இலக்கியத்தில் படைப்புகள், அதற்கான அங்கீகாரங்கள் கறாராகவே அணுகப்படவேண்டும். அந்த நோக்கு இந்தியாவில் தமிழின் அண்டைமாநிலங்களான கேரளத்திலும் கர்நாடகத்திலும் மிகவலுவாகவே உள்ளது. அங்கு தகுதியற்ற ஒருவர் எவ்வகையிலேனும் அங்கீகரிக்கப்படுவார் என்றால் பொதுக்கண்டனம் மிகக்கடுமையாக எழுவது வழக்கம். ஆகவே அவ்வாறு நிகழ்வது மிகமிக அபூர்வம். தமிழில் அந்தக்குரல் க.நா.சுவாலும் சுந்தர ராமசாமியாலும் வன்மையாக முன்வைக்கப்பட்டது. ஆனால் அது பொதுப்போக்காக எழவில்லை. சிங்கப்பூர் இலக்கியத்தில் அது நிகழவேண்டும்.


அதைவிட முக்கியமான அமைப்புகளில் பொறுப்பிலிருப்பவர்கள் உண்மையான கலை இலக்கிய முயற்சிகளுக்கும் அமைப்புமனிதர்களின் ஏற்பாடுகளுக்கும் நடுவே வேறுபாடு காணும் குறைந்தபட்ச நுண்ணுணர்வுடன் இருக்கவேண்டும். தங்களை எளிதில் வந்தடைகிறார்கள், இணக்கமாக இருக்கிறார்கள் என்பதனாலேயே அமைப்பு மனிதர்களை படைப்பாளிகளின் இடத்தில் அவர்கள் வைப்பார்கள் என்றால் மிகப்பெரிய பிழை செய்கிறார்கள்.


இலக்கியத்தின் அடிப்படையே ரசனைதான். அது கூரிய பாகுபாடுகளால்தான் உருவாகும். எல்லாம் இலக்கியமே என்னும் வரி இலக்கியம் தேவையில்லை என்ற வரிக்குச் சமானமானது.


 


அளந்துபோட்ட சிறுகதைகள் – மா. அன்பழகன்


விடியல் விளக்குகள். – மா அன்பழகன்


 


சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் செல்நெறிகள்


இராம கண்ணபிரான் கதைகள் பற்றி


நா கோவிந்தசாமி


சூர்யரத்னா கதைகள் நூர்ஜகான் கதைகள்


கமலாதேவி அரவிந்தன்


உதுமான் கனி


புதுமைதாசன்


பெண் எழுத்தாளருகளின் ஆக்கங்கள் பற்றி


சிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 1


சிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 2


ந.பழனி வேலு  பற்றிய கட்டுரை


சிங்கை இளங்கண்ணன் பற்றிய கட்டுரை


பொன் சுந்தரராசு பற்றிய கட்டுரை


மலர்விழி இளங்கோவன்கட்டுரை


சிங்கப்பூர் விமர்சனம் அறிவுரைகள்


அழகுநிலா கதைகள் பற்றி


சிங்கப்பூர் கடிதங்கள் 3


சிங்கப்பூர் கடிதங்கள்: 4


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 04, 2016 11:33

காந்தி தோற்கும் இடங்கள் -கடிதங்கள்

05884aa23728fd8e765d73a75044fe34[1]


அன்புள்ள ஜெயமோகன் சாருக்கு


நேற்று காந்தி குறித்த உரை, ஒரு மகத்தான மானிட அறத்தை முன் வைத்த காந்தியை அவருடைய கருத்துக்களை எவ்வளவு தோற்கடித்துக் கொண்டிருக்கின்றோம் என்று உணர்த்தியது. எவ்வளவு எளிமையாக அவரை வசை பாட முடிகிறது இந்நாட்டில்.


ஜெயக்குமார் பரத்வாஜ்


***


மிக அருமையான உரை. எனது நீண்ட நாள் கேள்விக்கான பதில் இதில் கிடைத்தது; ஏன் காந்தி மீது மீண்டும் மீண்டும் மலத்தையும் முள்ளையும் போட்டு கொண்டு இருக்கிறார்கள் என்று, மிக அழுத்தமான உண்மை ஆம் ! இவர்கள் அவர்கள் என்ற பேதம் காந்திக்கு இல்லை


காந்தியை அனைவரும் நம்மவர் என்று யாரும் பார்க்கவில்லை, மாறாக அவர்கள் ” அவர்” என்று அனைவராலும் பார்க்கப்பட்டார்!!! கடைசியில் காந்தி மட்டுமே தனித்து நின்றார்–One Man Army


ராமகிருஷ்ணன்


***


ஜெ


34 நிமிட காணொளியைப் பார்க்க எனக்கு 1 மணி நேரத்திற்கும் மேலாக தேவைப் பட்டது. பல முறை நிறுத்தி சிந்தனையில் ஆழ்ந்து விட்டேன்.உங்கள் எழுத்துக்களுக்கும் பேச்சுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதைப் பல காணொளிகளில் கண்டு கொண்டிருக்கிறேன். அவ்வளவு கச்சிதம்.


காந்தியத்தை முழுவதும் எழுதி விட்டீர்கள், மேலும் சொல்ல ஏதும் இருக்கிறதா என்று தான் காணொளியைத் திறந்தேன். ஆனால் என்று தான் உங்களிடம் இருந்து அனைத்தையும் கற்றுத் தீருவோமோ? என்ற கேள்வி தான் எஞ்சியது.


இவ்வளவு வரலாற்று நிகழ்வையும், அதில் பங்கு கொள்ளும் ஆளுமைகளையும், படைத்தளிக்கக்கூடிய ஞாபக ஆற்றலைக் கண்டு மிரண்டு தான் போகிறேன் ஒவ்வொரு முறையும்.


நன்றி,


ரமேஷ்.


***


அன்புள்ள சார்!


நலம் தானே. இந்த சுட்டி உங்கள் பார்வைக்காக..


http://www.thenewsminute.com/article/andhra-pradesh-village-mahatma-gandhi-goddess-who-will-bring-good-luck-50759


மிக்க அன்புடன்,


ராஜு.


***


ஜெ


உங்கள் நல்ல உரைகளில் ஒன்று. அன்று திரண்டு வந்திருந்த உங்கள் வாசகர்களுக்கு நீண்ட சம்பிரதாயமான சில உரைகள் சலிப்பை உருவாக்கியிருக்கும். பொதுவான வாசகர்களுக்கு அவை பிடித்திருக்கும். ஆனால் நூல்வாசிப்பில் ஈடுபாடுள்ளவர்களிடம் சொல்ல அவர்களிடம் ஏதுமில்லை


ஆனால் அன்றுவெளியான இளம்தாகூர் நூல் மிக முக்கியமானது. போகும் வழியிலேயே வாசித்தேன். அதை வெளியிட்டது ஒரு பெரிய சேவை


நிறைய மேடைகளில் பேசிப்பேசி உங்கள் பேச்சும் குரலும் மிகவும் தெளிவாகி உள்ளது. பேச்சுக்கு ஒரு கட்டமைப்பை முன்னரே உருவாக்கியிருக்கிக் கொண்டு வருகிறீர்கள். ஆகவே பேச்சு அலைபாய்வதில்லை


நேற்றைய பேசிலேயே மூன்றே மூன்று கருத்துக்கள். ஒரு கருத்துக்கு சராசரியாக பத்து நிமிடம். காந்தியை எவர் அறிய முடியாது? நம்மவர் பிறர் என வகுத்து நோக்கும் பார்வை கொண்டவர்கள். நுகர்வில் ஊறியவர்கள். மையத்தை நோக்கியே சிந்திப்பவர்கள். அவ்வளவுதான் உரை


நல்ல உரைக்கு நன்றி


எஸ்.ஆர். சுரேஷ்குமார்


***


அன்பு ஜெயமோகன்,


நலம்தானே? என்னுடைய முந்தைய கடிதத்தில் ‘டின்னிடஸ்’ பிரச்சினை பற்றியும், ‘யுதனேசியா’ பற்றியும் எழுதியிருந்தேன். நேரம் கிடைக்கும்போது உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்.


உங்கள் ‘காந்தியம் தோற்கும் இடங்கள்’ உரை பார்த்தேன். ஆழமான சிந்தனை, அதை அழகாக வெளிப்படுத்திருயிருந்தீர்கள்.


கடந்த முறை இந்தியா வந்திருந்தபோது மும்பை விமான நிலையத்தில் காந்தி சிலை ஒன்றைப் பார்த்தேன். நிஜமான காந்தியே வந்து அமர்ந்திருப்பது போல அவ்வளவு தத்ரூபமாக இருந்தது. நான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நண்பர்களிடம் பகிர்ந்தேன். அவ்வளவுதான் என்னைத் தூக்கிப் பந்தாடிவிட்டார்கள். காந்தியைப் பற்றி பல கோட்பாடுகளைக் கூறி எனக்கு அறிவொளியூட்டினார்கள். அவை பெரும்பாலும் வலைத்தளங்கள், திண்ணைப் பேச்சு, தேநீர்க்கடை விவாதங்களிலிருந்து அவர்கள் பெற்றுக்கொண்டவை. ஆர்.பி.தத் புத்தகமெல்லாம் அவர்கள் படித்திருக்கமாட்டார்கள். காந்தியின் சுயசரிதையை நிச்சயம் இவர்கள் தொட்டுக்கூடப் பார்த்ததில்லை என்பது அவர்கள் பேச்சிலிருந்தே தெரிந்தது. ஏனென்றால் இவற்றையெல்லாம் படித்திருந்தால் அவர்கள் விவாதத்துக்குத் துணைபுரிய அதில் இன்னும் நிறைய அம்சங்கள் இருக்கின்றனவே.


எனக்கும் சத்திய சோதனை படிக்கும்போது சில இடங்களில் சத்திய சோதனையாக இருந்தது. அவர்மீது விமர்சனங்கள் இருக்கிறது. ஆனால், எந்த ஒரு மனிதனையும் முழுமையாக நிராகரிக்கவோ, முழுமையாக ஏற்றுக்கொள்ளவோ என்னால் முடிவதில்லை. ஏனெனில் முழுமை என்பது சாத்தியமேயில்லாத ஒன்று என்பதே என்னுடைய கருத்து. நான் செம்மைவாதியல்ல.


ஆனால் ஒரு மனிதனைப் பற்றி முடிவெடுப்பதற்கு முன்பு அவனை புரிந்துகொள்ளவேண்டும் என்று நேர்மையாக அணுக நினைக்கிறேன். அப்படித்தான் காந்தியையும் அணுகினேன். உங்களையும் அணுகுகிறேன். படைப்பாளிகளை பற்றியும், பிற மனிதர்களை பற்றிமான உங்கள் விமர்சனக் கட்டுரைகளில் எனக்குப் பிடித்த அம்சம் அதுதான். யாரைப் பற்றி எழுதினாலும், அந்த மனிதனின் வாழ்க்கையின் நீள, அகல, ஆழங்களில் முழுவதுமாக நீந்தி அனைத்தையும் எழுதுகிறீர்கள். நுனிப்புல் மேய்ப்பவர்கள் யார் யாருக்கு என்ன வேண்டுமோ அதை எடுத்துக்கொண்டு பாராட்டுகிறார்கள் அல்லது ஏசுகிறார்கள்.


உண்மையை விடப் பொய் மனிதர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. காரணம் பொய் பெரும்பாலும் அவர்களது அநுமானங்களுக்கு ஒத்துப்போவதாக இருக்கிறது. அவர்களுக்குச் சாதகமானதாக இருக்கிறது. அவர்களுக்குப் பிடித்தமானதாய் இருக்கிறது. இப்படி எதுவாக இல்லாவிட்டாலும், பொய் வளைக்கக்கூடியதாக இருக்கிறது. தமக்கு வேண்டியது போல் வளைத்துக்கொள்ள முடிகிறது. இப்படி வளைக்கும் முயற்சியில் உண்மையின் அழகை சிறிது சிதைக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள், வெறுக்கிறார்கள், நிராகரிக்கிறார்கள், முடிவில் விலகிச் சென்றுவிடுகிறார்கள்.


ஒரு கட்டத்தில் பொய்களே உண்மையாகவும் ஆகிவிடுகிறது. தனிமரமாய் இந்த வேடிக்கையை அதுதரும் வலிகளைத் தாங்கிக்கொண்டு நின்று புன்னகைப்பதைத் தவிர, உண்மைக்கு வேறு வழியில்லை என்று நான் ஒருமுறை எழுதியிருந்தேன். உங்கள் கட்டுரைகளில் பல இப்படித்தான் அணுகப்படுகிறது என்பது என் கருத்து. நானுமே உங்களுடைய கட்டுரைகள் சிலவற்றை அப்படித்தான் அணுகியிருக்கிறேன். ஏனெனில் நானுமே பல நேரங்களில் நுனிப்புல் மேய்பவன்தான். ஆனால், நான் ஆழமாகப் பார்த்திராத விஷயங்களில் என் மூக்கை விடுவதில்லை. அமைதியையே கடைப்பிடிக்க விரும்புகிறேன்.


காந்தியைப் பற்றிய உங்கள் உரை சிறிய உரைதானென்றாலும் பல விஷயங்கள் சுவாரசியமாக இருந்தது. குறிப்பாக ‘Decentralization’ பற்றி நீங்கள் பேசியிருந்ததை மிகவும் ரசித்தேன். இன்றைக்கு என்னுடைய வேலையே அதுதான். :-) It is about Reinventing the Organizations by applying the principles of ‘Decentralization’ and forming ‘Self-organizing’/’Self-managing’ teams. அதைப் பற்றியெல்லாம் நீங்கள் பேசியிருந்தது மிகவும் பிடித்தது. எங்களுடைய அணியில் இன்னும் சில Change Managers தேவை. எங்களுடன் செய்ந்துகொள்ள விருப்பமிருந்தால் தெரிவிக்கவும்.


இன்றைக்கு இன்றைய சிந்தனைகளை ஆஹா ஓஹோ என்கிறார்கள். உண்மையில் ஐரோப்பாவிலேயே அதிகம் சம்பளம் வாங்குபவர்கள் இந்தக் கொள்கைகளையெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த Agile Consultant-கள்தான். ஏனெனில் இந்த மாற்றங்களையெல்லாம் கொண்டுவருவதற்கு பகீர பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. “Change, or Become Extinct!” என்று கோஷங்கள் எழுப்ப வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் மாற்ற இந்த காலத்திலேயே முடியவில்லை.


காந்தி தொலைநோக்குப் பார்வையுடன் அன்றைக்கே பேசியிருக்கிறார், கிராம சுவராஜ்ஜியம் பற்றி ஏற்கனவே படித்திருந்தாலும் உங்கள் உரையைப் பார்த்த பிறகே இப்படி என்னுடைய பணியுடன், இன்றைய நிறுவனங்களில் நிகழ்ந்து வரும் தவிர்க்கவே முடியாத மாற்றங்களுடன் இணைத்துப் பார்க்க முடிந்தது. எந்தத் தலைப்பில் நீங்கள் பேசினாலும், எழுதினாலும், அது வேறொரு பரிமாணத்தைத் தருகிறது.


இன்று காலைக்கூட என்னுடைய பெல்கிய நண்பரிடம் அலுவலகத்தில் உங்கள் உரையின் கடைசிப் பகுதியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். ‘தீவிரவாத அமைப்புகள் கூட இன்றைக்கு பரவலாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் காவல்துறையைப் பாருங்கள்? ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பு எப்படி பரவலாக்கப்பட்ட அமைப்பை எதிர்கொள்ளமுடியும்?’ என்று கூறினார். நல்ல வேலை அவருடனாவது இப்படி ஆழமாக விவாதிக்க முடிந்தது. ‘ஆங்கிலேயர்கள் அவர்களாகவே வெளியேறிவிட்டார்கள். விடுதலை போராட்டமே தேவையற்ற ஒன்று.’ என்றெல்லாம் நேற்று கேட்டுக்கொண்டிருந்தது சலிப்பாக இருந்தது.


காந்தியில் தொடங்கி தீவிரவாதம் வரைக்கும் வந்துவிட்டேன். உங்கள் உரையைப் பற்றிய என்னுடைய எண்ணங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று தோன்றியதால் எழுதினேன்.


தொடர்பிலிருக்க வேண்டுகிறேன். நன்றி.


அன்புடன்,


மாதவன் இளங்கோ


பெல்ஜியம்


 






தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 04, 2016 11:33

காந்தி தோற்கும் இடங்கள் -கடிதங்கள்

05884aa23728fd8e765d73a75044fe34[1]


அன்புள்ள ஜெயமோகன் சாருக்கு


நேற்று காந்தி குறித்த உரை, ஒரு மகத்தான மானிட அறத்தை முன் வைத்த காந்தியை அவருடைய கருத்துக்களை எவ்வளவு தோற்கடித்துக் கொண்டிருக்கின்றோம் என்று உணர்த்தியது. எவ்வளவு எளிமையாக அவரை வசை பாட முடிகிறது இந்நாட்டில்.


ஜெயக்குமார் பரத்வாஜ்


***


மிக அருமையான உரை. எனது நீண்ட நாள் கேள்விக்கான பதில் இதில் கிடைத்தது; ஏன் காந்தி மீது மீண்டும் மீண்டும் மலத்தையும் முள்ளையும் போட்டு கொண்டு இருக்கிறார்கள் என்று, மிக அழுத்தமான உண்மை ஆம் ! இவர்கள் அவர்கள் என்ற பேதம் காந்திக்கு இல்லை


காந்தியை அனைவரும் நம்மவர் என்று யாரும் பார்க்கவில்லை, மாறாக அவர்கள் ” அவர்” என்று அனைவராலும் பார்க்கப்பட்டார்!!! கடைசியில் காந்தி மட்டுமே தனித்து நின்றார்–One Man Army


ராமகிருஷ்ணன்


***


ஜெ


34 நிமிட காணொளியைப் பார்க்க எனக்கு 1 மணி நேரத்திற்கும் மேலாக தேவைப் பட்டது. பல முறை நிறுத்தி சிந்தனையில் ஆழ்ந்து விட்டேன்.உங்கள் எழுத்துக்களுக்கும் பேச்சுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதைப் பல காணொளிகளில் கண்டு கொண்டிருக்கிறேன். அவ்வளவு கச்சிதம்.


காந்தியத்தை முழுவதும் எழுதி விட்டீர்கள், மேலும் சொல்ல ஏதும் இருக்கிறதா என்று தான் காணொளியைத் திறந்தேன். ஆனால் என்று தான் உங்களிடம் இருந்து அனைத்தையும் கற்றுத் தீருவோமோ? என்ற கேள்வி தான் எஞ்சியது.


இவ்வளவு வரலாற்று நிகழ்வையும், அதில் பங்கு கொள்ளும் ஆளுமைகளையும், படைத்தளிக்கக்கூடிய ஞாபக ஆற்றலைக் கண்டு மிரண்டு தான் போகிறேன் ஒவ்வொரு முறையும்.


நன்றி,


ரமேஷ்.


***


அன்புள்ள சார்!


நலம் தானே. இந்த சுட்டி உங்கள் பார்வைக்காக..


http://www.thenewsminute.com/article/andhra-pradesh-village-mahatma-gandhi-goddess-who-will-bring-good-luck-50759


மிக்க அன்புடன்,


ராஜு.


***


ஜெ


உங்கள் நல்ல உரைகளில் ஒன்று. அன்று திரண்டு வந்திருந்த உங்கள் வாசகர்களுக்கு நீண்ட சம்பிரதாயமான சில உரைகள் சலிப்பை உருவாக்கியிருக்கும். பொதுவான வாசகர்களுக்கு அவை பிடித்திருக்கும். ஆனால் நூல்வாசிப்பில் ஈடுபாடுள்ளவர்களிடம் சொல்ல அவர்களிடம் ஏதுமில்லை


ஆனால் அன்றுவெளியான இளம்தாகூர் நூல் மிக முக்கியமானது. போகும் வழியிலேயே வாசித்தேன். அதை வெளியிட்டது ஒரு பெரிய சேவை


நிறைய மேடைகளில் பேசிப்பேசி உங்கள் பேச்சும் குரலும் மிகவும் தெளிவாகி உள்ளது. பேச்சுக்கு ஒரு கட்டமைப்பை முன்னரே உருவாக்கியிருக்கிக் கொண்டு வருகிறீர்கள். ஆகவே பேச்சு அலைபாய்வதில்லை


நேற்றைய பேசிலேயே மூன்றே மூன்று கருத்துக்கள். ஒரு கருத்துக்கு சராசரியாக பத்து நிமிடம். காந்தியை எவர் அறிய முடியாது? நம்மவர் பிறர் என வகுத்து நோக்கும் பார்வை கொண்டவர்கள். நுகர்வில் ஊறியவர்கள். மையத்தை நோக்கியே சிந்திப்பவர்கள். அவ்வளவுதான் உரை


நல்ல உரைக்கு நன்றி


எஸ்.ஆர். சுரேஷ்குமார்


***


அன்பு ஜெயமோகன்,


நலம்தானே? என்னுடைய முந்தைய கடிதத்தில் ‘டின்னிடஸ்’ பிரச்சினை பற்றியும், ‘யுதனேசியா’ பற்றியும் எழுதியிருந்தேன். நேரம் கிடைக்கும்போது உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்.


உங்கள் ‘காந்தியம் தோற்கும் இடங்கள்’ உரை பார்த்தேன். ஆழமான சிந்தனை, அதை அழகாக வெளிப்படுத்திருயிருந்தீர்கள்.


கடந்த முறை இந்தியா வந்திருந்தபோது மும்பை விமான நிலையத்தில் காந்தி சிலை ஒன்றைப் பார்த்தேன். நிஜமான காந்தியே வந்து அமர்ந்திருப்பது போல அவ்வளவு தத்ரூபமாக இருந்தது. நான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நண்பர்களிடம் பகிர்ந்தேன். அவ்வளவுதான் என்னைத் தூக்கிப் பந்தாடிவிட்டார்கள். காந்தியைப் பற்றி பல கோட்பாடுகளைக் கூறி எனக்கு அறிவொளியூட்டினார்கள். அவை பெரும்பாலும் வலைத்தளங்கள், திண்ணைப் பேச்சு, தேநீர்க்கடை விவாதங்களிலிருந்து அவர்கள் பெற்றுக்கொண்டவை. ஆர்.பி.தத் புத்தகமெல்லாம் அவர்கள் படித்திருக்கமாட்டார்கள். காந்தியின் சுயசரிதையை நிச்சயம் இவர்கள் தொட்டுக்கூடப் பார்த்ததில்லை என்பது அவர்கள் பேச்சிலிருந்தே தெரிந்தது. ஏனென்றால் இவற்றையெல்லாம் படித்திருந்தால் அவர்கள் விவாதத்துக்குத் துணைபுரிய அதில் இன்னும் நிறைய அம்சங்கள் இருக்கின்றனவே.


எனக்கும் சத்திய சோதனை படிக்கும்போது சில இடங்களில் சத்திய சோதனையாக இருந்தது. அவர்மீது விமர்சனங்கள் இருக்கிறது. ஆனால், எந்த ஒரு மனிதனையும் முழுமையாக நிராகரிக்கவோ, முழுமையாக ஏற்றுக்கொள்ளவோ என்னால் முடிவதில்லை. ஏனெனில் முழுமை என்பது சாத்தியமேயில்லாத ஒன்று என்பதே என்னுடைய கருத்து. நான் செம்மைவாதியல்ல.


ஆனால் ஒரு மனிதனைப் பற்றி முடிவெடுப்பதற்கு முன்பு அவனை புரிந்துகொள்ளவேண்டும் என்று நேர்மையாக அணுக நினைக்கிறேன். அப்படித்தான் காந்தியையும் அணுகினேன். உங்களையும் அணுகுகிறேன். படைப்பாளிகளை பற்றியும், பிற மனிதர்களை பற்றிமான உங்கள் விமர்சனக் கட்டுரைகளில் எனக்குப் பிடித்த அம்சம் அதுதான். யாரைப் பற்றி எழுதினாலும், அந்த மனிதனின் வாழ்க்கையின் நீள, அகல, ஆழங்களில் முழுவதுமாக நீந்தி அனைத்தையும் எழுதுகிறீர்கள். நுனிப்புல் மேய்ப்பவர்கள் யார் யாருக்கு என்ன வேண்டுமோ அதை எடுத்துக்கொண்டு பாராட்டுகிறார்கள் அல்லது ஏசுகிறார்கள்.


உண்மையை விடப் பொய் மனிதர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. காரணம் பொய் பெரும்பாலும் அவர்களது அநுமானங்களுக்கு ஒத்துப்போவதாக இருக்கிறது. அவர்களுக்குச் சாதகமானதாக இருக்கிறது. அவர்களுக்குப் பிடித்தமானதாய் இருக்கிறது. இப்படி எதுவாக இல்லாவிட்டாலும், பொய் வளைக்கக்கூடியதாக இருக்கிறது. தமக்கு வேண்டியது போல் வளைத்துக்கொள்ள முடிகிறது. இப்படி வளைக்கும் முயற்சியில் உண்மையின் அழகை சிறிது சிதைக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள், வெறுக்கிறார்கள், நிராகரிக்கிறார்கள், முடிவில் விலகிச் சென்றுவிடுகிறார்கள்.


ஒரு கட்டத்தில் பொய்களே உண்மையாகவும் ஆகிவிடுகிறது. தனிமரமாய் இந்த வேடிக்கையை அதுதரும் வலிகளைத் தாங்கிக்கொண்டு நின்று புன்னகைப்பதைத் தவிர, உண்மைக்கு வேறு வழியில்லை என்று நான் ஒருமுறை எழுதியிருந்தேன். உங்கள் கட்டுரைகளில் பல இப்படித்தான் அணுகப்படுகிறது என்பது என் கருத்து. நானுமே உங்களுடைய கட்டுரைகள் சிலவற்றை அப்படித்தான் அணுகியிருக்கிறேன். ஏனெனில் நானுமே பல நேரங்களில் நுனிப்புல் மேய்பவன்தான். ஆனால், நான் ஆழமாகப் பார்த்திராத விஷயங்களில் என் மூக்கை விடுவதில்லை. அமைதியையே கடைப்பிடிக்க விரும்புகிறேன்.


காந்தியைப் பற்றிய உங்கள் உரை சிறிய உரைதானென்றாலும் பல விஷயங்கள் சுவாரசியமாக இருந்தது. குறிப்பாக ‘Decentralization’ பற்றி நீங்கள் பேசியிருந்ததை மிகவும் ரசித்தேன். இன்றைக்கு என்னுடைய வேலையே அதுதான். :-) It is about Reinventing the Organizations by applying the principles of ‘Decentralization’ and forming ‘Self-organizing’/’Self-managing’ teams. அதைப் பற்றியெல்லாம் நீங்கள் பேசியிருந்தது மிகவும் பிடித்தது. எங்களுடைய அணியில் இன்னும் சில Change Managers தேவை. எங்களுடன் செய்ந்துகொள்ள விருப்பமிருந்தால் தெரிவிக்கவும்.


இன்றைக்கு இன்றைய சிந்தனைகளை ஆஹா ஓஹோ என்கிறார்கள். உண்மையில் ஐரோப்பாவிலேயே அதிகம் சம்பளம் வாங்குபவர்கள் இந்தக் கொள்கைகளையெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த Agile Consultant-கள்தான். ஏனெனில் இந்த மாற்றங்களையெல்லாம் கொண்டுவருவதற்கு பகீர பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. “Change, or Become Extinct!” என்று கோஷங்கள் எழுப்ப வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் மாற்ற இந்த காலத்திலேயே முடியவில்லை.


காந்தி தொலைநோக்குப் பார்வையுடன் அன்றைக்கே பேசியிருக்கிறார், கிராம சுவராஜ்ஜியம் பற்றி ஏற்கனவே படித்திருந்தாலும் உங்கள் உரையைப் பார்த்த பிறகே இப்படி என்னுடைய பணியுடன், இன்றைய நிறுவனங்களில் நிகழ்ந்து வரும் தவிர்க்கவே முடியாத மாற்றங்களுடன் இணைத்துப் பார்க்க முடிந்தது. எந்தத் தலைப்பில் நீங்கள் பேசினாலும், எழுதினாலும், அது வேறொரு பரிமாணத்தைத் தருகிறது.


இன்று காலைக்கூட என்னுடைய பெல்கிய நண்பரிடம் அலுவலகத்தில் உங்கள் உரையின் கடைசிப் பகுதியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். ‘தீவிரவாத அமைப்புகள் கூட இன்றைக்கு பரவலாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் காவல்துறையைப் பாருங்கள்? ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பு எப்படி பரவலாக்கப்பட்ட அமைப்பை எதிர்கொள்ளமுடியும்?’ என்று கூறினார். நல்ல வேலை அவருடனாவது இப்படி ஆழமாக விவாதிக்க முடிந்தது. ‘ஆங்கிலேயர்கள் அவர்களாகவே வெளியேறிவிட்டார்கள். விடுதலை போராட்டமே தேவையற்ற ஒன்று.’ என்றெல்லாம் நேற்று கேட்டுக்கொண்டிருந்தது சலிப்பாக இருந்தது.


காந்தியில் தொடங்கி தீவிரவாதம் வரைக்கும் வந்துவிட்டேன். உங்கள் உரையைப் பற்றிய என்னுடைய எண்ணங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று தோன்றியதால் எழுதினேன்.


தொடர்பிலிருக்க வேண்டுகிறேன். நன்றி.


அன்புடன்,


மாதவன் இளங்கோ


பெல்ஜியம்


 






தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 04, 2016 11:33

மின்னங்காடி


அன்புடையீர்,


வணக்கம்.


உலகமெலாம் தமிழ் நூல்கள் கிடைக்க வேண்டும் என்ற தீரா ஆவலில் இந்தப் பெரும் பணியில் இறங்கியிருக்கிறேன். மின்னங்காடி டாட் காம் உங்கள் அனைத்து நாட்களையும் புத்தகத் திருவிழாவாக மாற்றும். அல்லும் பகலும் அங்காடி நடத்திய நாம், இந்த டிஜிடல் யுகத்திலும் கடை விரிப்போம். தமிழின் அனைத்துப் பதிப்பக நூல்களும் மின்னங்காடியில் கிடைக்கும். எழுத்தாளர், நூல் பெயர், பதிப்பகப் பெயர் மூலமாகவும் நூல்களைக் கண்டெடுக்கலாம்.


இந்தியாவுக்குள் என்றால் ஐந்து தினங்களுக்குள்ளும் வெளிநாடுகள் என்றால் பதினைந்து தினங்களுக்குள்ளும் நூல்களைச் சேர்ப்பிக்க ஆவன செய்யப்படும்.


கார்டுகள் மூலமாகப் பணம் செலுத்திப் புத்தகங்களை வாங்க முடியும். இந்தியாவுக்குள் என்றால் வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பி நூல்களைப் பெறலாம். காசோலை, மணியார்டர் செலுத்தி மட்டுமே புத்தகம் பெற முடியும் என்பாருக்கும் அதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி முதல் அங்காடி செயல்படத் தொடங்கும். என் மகன் வே.மாக்ஸிம், மகள் வே.அஞ்சலி இதைச் செம்மையாக செயல்படுத்துகிறார்கள்.


அன்புடன்,


தமிழ்மகன்


www.minnangadi.com


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 04, 2016 11:32

மின்னங்காடி


அன்புடையீர்,


வணக்கம்.


உலகமெலாம் தமிழ் நூல்கள் கிடைக்க வேண்டும் என்ற தீரா ஆவலில் இந்தப் பெரும் பணியில் இறங்கியிருக்கிறேன். மின்னங்காடி டாட் காம் உங்கள் அனைத்து நாட்களையும் புத்தகத் திருவிழாவாக மாற்றும். அல்லும் பகலும் அங்காடி நடத்திய நாம், இந்த டிஜிடல் யுகத்திலும் கடை விரிப்போம். தமிழின் அனைத்துப் பதிப்பக நூல்களும் மின்னங்காடியில் கிடைக்கும். எழுத்தாளர், நூல் பெயர், பதிப்பகப் பெயர் மூலமாகவும் நூல்களைக் கண்டெடுக்கலாம்.


இந்தியாவுக்குள் என்றால் ஐந்து தினங்களுக்குள்ளும் வெளிநாடுகள் என்றால் பதினைந்து தினங்களுக்குள்ளும் நூல்களைச் சேர்ப்பிக்க ஆவன செய்யப்படும்.


கார்டுகள் மூலமாகப் பணம் செலுத்திப் புத்தகங்களை வாங்க முடியும். இந்தியாவுக்குள் என்றால் வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பி நூல்களைப் பெறலாம். காசோலை, மணியார்டர் செலுத்தி மட்டுமே புத்தகம் பெற முடியும் என்பாருக்கும் அதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி முதல் அங்காடி செயல்படத் தொடங்கும். என் மகன் வே.மாக்ஸிம், மகள் வே.அஞ்சலி இதைச் செம்மையாக செயல்படுத்துகிறார்கள்.


அன்புடன்,


தமிழ்மகன்


www.minnangadi.com


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 04, 2016 11:32

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.