Jeyamohan's Blog, page 1723
October 8, 2016
என் மலையாளக்குரல்
மாத்ருபூமி யாத்ரா இதழுக்கு நான் ஸ்பிடி சமவெளி பற்றி எழுதித்தருகிறேன் என்று சொன்னேன். அதை நம்பி அவர்கள் தங்கள் நட்சத்திரப் புகைப்படக்காரரை அனுப்பினார்கள். ஆனால் எழுதமுடியவில்லை. ஐரோப்பியப்பயணம். அங்கிருந்து சிங்கப்பூர். நடுவே வெண்முரசு
ஒன்றுசெய்யலாம் என்றார் இதழாசிரியர் விஸ்வநாதன். பேசிப் பதிவுசெய்து அளியுங்கள் எழுதிக்கொள்கிறோம் என்றார். பேசி அனுப்பினேன். அது எழுத்தில் வந்தபோது சிற்சில வார்த்தைகளைச் சீரமைத்தால் சரளமான நேர்த்தியான கட்டுரையாகவே இருந்தது
இப்போது மாத்ருபூமி இணையதளத்தில் அந்த குரல்பதிவையே வலையேற்றிவிட்டார். ஆச்சரியமாக இருக்கிறது, அதற்கும் வாசகர் வட்டம் இருக்கிறது. என்னைக் கூப்பிட்ட ஒரு வாசகி பரவசத்துடன் குரலுக்கு இணையாக எழுத்தே வராது என்றாள். ஏன் என்றேன். காதில் கேட்பானை மாட்டிக்கொண்டு கண்மூடினால் என்னுடன் மட்டும் பேசுவதுபோல் இருக்கிறது என்றாள்.
ஆனால் என் குரல் எனக்குப் பிடிக்கவில்லை. கம்பீரமே இல்லாமல் கெச்சலாக இருக்கிறது. சொல்ல ஆரம்பிக்கும்போது வரும் கனவுத்தன்மை மட்டுமே அதில் ஓரளவு நன்றாக இருக்கிறது என்று பட்டது
என் உச்சரிப்பில் தமிழ் ஒலிக்கிறது. என் மலையாளத்தமிழ்க்குரலைக் கேட்கவிரும்புபவர்களுக்காக—
மாத்ருபூமி யாத்ரா – ஸ்பிட்டி சமவெளி பயணம் பற்றி -1
மத்ருபூமி யாத்ரா ஸ்பிடிசமவெளி பயணம் பற்றி -2
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
October 7, 2016
பொதுவழியின் பெரும்சலிப்பு
ஜெயந்தி சங்கரின் புனைவுலகைப்பற்றி எழுதுவது மிகக்கடினமானது. குறுகியகாலத்தில் ஏராளமாக எழுதியிருக்கிறார். இணைய இதழ்களின் காலமாதலால் அவை தொடர்ந்து பிரசுரமாகியும் உள்ளன. அவரது சிறுகதைகளின் பெருந்தொகை தமிழின் மாபெரும் சிறுகதை ஆசிரியர்களின் தொகுதிகளை விடப்பெரியது. அனைத்துக்கதைகளையும் வாசித்துவிட்டு முழுமையான கருத்துச் சொல்வதே முறை என்றாலும் அவரது பெருந்தொகுதியான ‘ஜெயந்திசங்கர் கதைகள்’ என்னும் நூலின் கதைகளை மட்டும் வைத்து இவ்விமர்சனத்தை முன்வைக்கிறேன்.
ஜெயந்திசங்கரின் புனைவுலகம் தமிழகம் சார்ந்தது. அவர் எழுதும் பகைப்புலம் மட்டுமே சிங்கப்பூர். தமிழில் அவருக்கு முன்னோடிகளாக எவரைச் சொல்லமுடியும்? இரு பெயர்களைச் சுட்டலாம். ராஜம் கிருஷ்ணன் மற்றும் வாசந்தி. இருவரும் இருவேறு காலகட்டங்களைச் சார்ந்த எழுத்துமுறைகளைக் கொண்டவர்கள், ஆனால் ஒரே வகையானவர்களும் கூட. இருவக்குமான ஒற்றுமைகள் புறவய லௌகீக நோக்கு, வேறுபட்ட கதைக்களங்களைத் தேடிச்செல்லும் இயல்பு என வகுத்துக்கொள்ளலாம். ஜெயந்திசங்கரிலும் இவ்வியல்புகள் உள்ளன
ராஜம் கிருஷ்ணன் கலைமகள் யுகத்தைச் சேர்ந்தவர். ஐம்பதுகளில் அதுவரை இலக்கிய இதழாக இருந்த கலைமகள் மாத இதழ் தன்னை குடும்ப இதழாக மாற்றிக்கொண்டது. அதில் ஏராளமான பெண்கள் எழுத ஆரம்பித்தனர். அதிகமும் பிராமணப்பெண்கள். அநுத்தமா, எம்.ஆர்.ராஜம்மா, வசுமதி ராமசாமி, கமலா சடகோபன் என பெண்ணெழுத்தாளர்களின் ஒருவரிசை உண்டு. அவர்களில் வந்தவர் ராஜம் கிருஷ்ணன். கலைமகள் எழுத்தாளர்களில் அதிக்ப்புகழ்பெற்றவரும் அவரே.
கலைமகளின் பெண்எழுத்தாளர்களின் பொது அம்சம் என்ன? அவர்கள் ‘நேர்த்தியான’ உள்ளம் கொண்டவர்கள், ‘குடும்பபெண்கள்’ என்று சுருக்கமாகச் சொல்லலாம். அவ்வகை எழுத்தையே கலைமகள் வளர்த்து எடுத்தது. இலக்கியத்தில் வளைந்த நோக்குதான் எழுத்தாளனை தனித்துக்காட்டுகிறது. பொதுப்பார்வையை விட்டு விலகிச் செல்வது, எவரும் பார்க்காதவற்றைப் பார்ப்பது. அந்த அம்சம் கலைமகள் கதாசிரியைகளிடம் இல்லை. அவர்களின் ஒழுக்கநோக்கு, அறவுணர்வு நாம் அனைவரும் அறிந்ததாகவும் ,ஏற்றுக்கொண்டதாகவும் இருக்கும். வாசகன் அவற்றில் ஓர் எளிய நிறைவை மட்டும் அடையமுடியும். அவனை உலுக்கும், அவனை திறக்கும் எதுவும் அவற்றில் நிகழாது
ராஜம் கிருஷ்ணன் ஒரு சிறிய அம்சத்தால் அவர்களிடமிருந்து வேறுபட்டவர். அவர் பிற கலைமகள் எழுத்தாளர்களைப் போல குடும்பத்திற்குள் நின்று எழுதவில்லை. தூத்துக்குடித் துறைமுகப் பின்னணியிலும், கோவா சுதந்திரப் போராட்டப் பின்னணியிலும், குந்தா அணைக்கட்டு கட்டும் சூழலிலும் வாழ்ந்தவர். ஆகவே அந்தந்த நிலப்பகுதிகளைப் பற்றியும் மக்களைப்பற்றியும் கள ஆய்வுசெய்து அவற்றை பகைப்புலமாகக் கொண்டு கதைகளை எழுதினார். கரிப்புமணிகள், வளைக்கரம், குறிஞ்சித்தேன் போன்ற நாவல்கள் முறையே மேற்குறிப்பிட்ட பின்னணிகொண்டவை. அவரது கள ஆய்வு என்பது புறவயமான தகவல்களை நேரில் சென்றும் நூல்களில் இருந்தும் சேகரிப்பது மட்டுமே. இந்நாவல்கள் அந்நிலப்பகுதியின் வாழ்க்கையை இதழாளர் புகைப்படச்செய்திகளாக எழுதியதுபோல அமைந்திருக்கும்
வாசந்தி ராஜம் கிருஷ்ணனின் அடுத்தமுகம். கலைமகள் எழுத்தாளர்களின் பெரும்பாலான இயல்புகள் வாசந்தியிடமும் இருப்பதைப் பார்க்கலாம். முக்கியமாக மரபுசார்ந்த ஒழுக்க, அற நோக்கு. மானுட இயல்பையும், வாழ்க்கைத் தருணங்களையும் பொதுப்போக்கில் வைத்து மதிப்பிடும் இயல்பு. அரசியல், சமூகச்சூழல் அனைத்திலும் பொதுவான கருத்துக்களையும் முடிவுகளையும் மட்டுமே சென்று தொடும் பார்வை. ராஜம் கிருஷ்ணனைப் போலவே பல்வேறு வாழ்க்கைச் சூழல்களுக்குச் சென்று கள ஆய்வு செய்து எழுதப்பட்டவை வாசந்தியின் நாவல்கள்.
பஞ்சாப் கிளர்ச்சி [மௌனப்புயல்], இலங்கைப்போராட்டம் [நிற்க நிழல் வேண்டும்] போன்ற அவரது நாவல்களில் ஒரு செய்தித்தாள் வாசகன் அறிந்த புறவய உண்மைகள் மட்டுமே நிகழ்வுகளாக நேர்த்தியாக விரிக்கப்பட்டிருக்கும். அவற்றுக்கு அப்பால் அகவயமான ஓர் அறிதலை அவை அளிப்பதில்லை. ஆகவே அவை ஆவணமதிப்பும் புனைவு ஒருமையும் கொண்ட ஆக்கங்களாக இருக்கையிலேயே இலக்கியப் படைப்புகள் அளிக்கும் முழுமைநோக்கை அளிக்காதவையாக, வாசகனுடன் சேர்ந்து வளராதவையாகவும் இருக்கும்.
ஜெயந்தி சங்கர் சிங்கப்பூரை மையமாகக் கொண்டவர். சீனப் பண்பாட்டைக் குறித்து அவர் எழுதிய ‘பெருஞ்சுவருக்குப் பின்’ போன்ற நூல்கள் தமிழுக்கு முக்கியமானவை. ‘மிதந்திடும் சுயப்பிரதிமைகள்’ என்னும் தலைப்பில் அவர் மொழியாக்கம் செய்த சீனக் கவிதைககளின் பெருந்தொகை குறிப்பிடத்தக்க பங்களிப்பு. தமிழ்ச்சூழலில் இப்படி விடாப்பிடியான தீவிரத்துடன் பண்பாட்டுத்தளத்தில் பணியாற்றுபவர்கள் மிகவும் குறைவு. குறிப்பாக பெண்கள் மேலோட்டமான ஓரிரு வரிக் கவிதைகளை எழுதிவிட்டு உலகை வெல்லக் கிளம்பும் இன்றைய சூழலில் இது ஒரு அபூர்வ நிகழ்வே.
மிகச்சரியாக ஜெயந்திசங்கரை ராஜம் கிருஷ்ணன், வாசந்தி ஆகியோரின் நீட்சியாக முன்வைக்கலாம். மாறுபட்ட களங்களுக்குப் பதிலாக சிங்கப்பூர் என்னும் களத்தை மட்டுமே ஜெயந்தி எடுத்துக்கொள்கிறார். ஆனால் அதற்குள் வெவ்வேறு வாழ்க்கைத் தருணங்களை அவர் உருவாக்குவதில்லை. எளிமையான அன்றாட வாழ்க்கைக் கதைகள்தான். அவை சிங்கப்பூரில்தான் நிகழவேண்டும் என்பதில்லை. அவற்றை சென்னைப் புலத்திலும் எழுதலாம். அவ்வப்போது சில ‘லா’ க்களும் சில சிங்கப்பூர் பெயர்களும் மட்டுமே வந்து செல்கின்றன. சிங்கப்பூர் சீனர்களைப்பற்றிய தன் ஆய்வுகளிலிருந்துகூட அவர் கருக்களை எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை.
*
ஜெயந்தி சங்கர் தொடர்ச்சியாக எழுதுவதனால் அவரது மொழி இயல்பான ஒழுக்குடன் உள்ளது. எளிய இதழியல் தேய்வழக்குகள் இல்லாத நடை பொதுவாசகனை அவருடைய கதைகளை வாசிக்கத்தக்கவை என எண்ணச்செய்கிறது. கதைமாந்தருக்காக ஆசிரியர் குரலெழுப்புவது, கதைச் சுருக்கத்தைச் சொல்வது, கதைக்கருவை கதைக்குள் விரித்துரைப்பது போன்ற ஆரம்பகட்டப் பிழைகள் எவையும் பெரும்பாலான கதைகளில் இல்லை. பலதரப்பட்ட வாழ்க்கைச்சித்திரங்கள் என்னும் வகையில் இவை ஆர்வமூட்டும் ஆக்கங்கள்.
வடிவரீதியாக ஜெயந்தி சங்கரின் கதைகளில் உள்ள முக்கியமான குறை என்பது இவை பெரும்பாலும் இரண்டாம்கட்டக் கண்டடைதல் நிகழாத வாழ்க்கைச்சித்தரிப்புகள் மட்டுமே என்பதுதான். இக்காரணத்தால் பெரும்பாலான கதைகளில் சிறுகதைக்கு இன்றியமையாத இறுதிக்கணம், உச்சம் , திருப்பம், மேலெழல் நிகழ்வதே இல்லை. வாழ்க்கையின் ஒரு கணத்தை கதை சுற்றிச்சுற்றி வந்து சித்தரிக்கிறது. வாசகன் அவற்றில் தனக்கென ஒரு வாசல் திறக்கக்கூடும் என எதிர்பார்க்கும் தருணத்தில் கதை எளிமையான கருத்து ஒன்றை, அல்லது சாதாரண உணர்வுநிலை ஒன்றைச் சொல்லி முடிந்துவிடுகிறது. மீண்டும் மீண்டும் இவர் கதைகளில் இந்த ஏமாற்றம் நிகழ்வதனால்தான் இத்தனை எழுதிய இந்தப் படைப்பாளி வாசகர்களின் கவனத்தில் நிற்காமல் போகிறார்
இந்த அம்சத்தை வெறும் வடிவச்சிக்கல் என்று சொல்லிவிடமுடியாது. ஆசிரியையின் வாழ்க்கைநோக்கு சார்ந்த பிரச்சினை இது. அவருக்கு வாழ்க்கைமேல் மையச்சாலை சார்ந்த பார்வை மட்டுமே இருக்கையில் கதையில் மேலதிகமாக ஒன்று வெளிப்படமுடியாது. அன்றாட வாழ்க்கை சார்ந்த எளிய சிக்கல்களும் தீர்வுகளுமே அவர் உள்ளத்தை நிறைத்திருக்குமென்றால் கதையை கவித்துவம் நோக்கி, தத்துவார்த்தமான முழுமைநோக்கு நோக்கிக் கொண்டுசெல்லும் எழுச்சி நிகழமுடியாது.
ஜெயந்தி சங்கரின் கதைகளில் இருக்கும் இன்னொரு முக்கியமான அழகியல் குறைபாடு அவை கட்டற்ற செய்தியோடைகளாக இருக்கின்றன என்பது. கதைமாந்தரின் பார்வை வழியாக, எண்ண ஓட்டம் வழியாகச் சொல்லப்படும் புறச்சூழல் எவ்வகையில் கதையின் உணர்வுகளுக்கோ கதைமையத்திற்கோ சம்பந்தமுள்ளது என்பதை வாசகன் திணறத் திணற யோசிக்க வேண்டியிருக்கிறது. பெரும்பாலான கதைகள் ஒரு சூழலில் உள்ள அனைத்தையும் சொல்லிச் செல்கின்றன. அவற்றுடன் இணைந்த எண்ணங்கள் அனைத்தும் வந்து செல்கின்றன. கதை அலைபாய்ந்து பலவகையான குரல்களில் முட்டித் திரும்பி மீண்டு வந்து முடிவை அடைகிறது.
வாசந்தியின் கூறுமுறைக்கு மிக அணுக்கமானது ஜெயந்தி சங்கருடையது. புறக்காட்சிகளும் கூடவே நினைவுகளும். இந்த வடிவம் எல்லாவற்றையும் உள்ளே கொண்டு வரும் வசதியை அளிக்கிறது. ஆனால் கதைமையம் சார்ந்து செயல்படாவிட்டால் அனைத்தையும் அள்ளி அடைத்த பை போல கதையை ஆக்கிவிடும் அபாயம் உண்டு. ஜெயந்தி சங்கரின் கதைகள் பெரும்பாலும் அனைத்துமே இக்காரணத்தால் சரிவடைந்தவை என நினைக்கிறேன்.
ஜெயந்தி சங்கரின் கதைகளின் உள்ளடக்கம் சார்ந்து ஒரு விரிவான விவாதம் நிகழ்த்துவது எளிதல்ல, அத்தனை கதைகள் உள்ளன. மேலே குறிப்பிட்ட பொதுமைப்படுத்தலை அடையாளம் காணும் சிலகதைகளை மட்டும் சுட்டிச் செல்லலாம் என நினைக்கிறேன். முகங்கள் கதையில் சார்ஸ் நோய் சிங்கப்பூரைத் தாக்கும் சித்திரம் உள்ளது. அதற்கு பொது மக்கள் காட்டும் எதிர்வினை, செவிலியரை அவர்கள் நோயைப் பரப்பிவிடுவார்களோ என எண்ணி அருவருப்பது என விரிந்து விரிந்து செல்லும் கதை செவிலியரின் பணியை அம்மக்கள் உணர்வதைக் குறித்த குறிப்புடன் பன்னிரண்டு நீண்ட பக்கங்களுக்குப் பின் முடிகிறது.
சிறுகதையின் களம் சார்ஸ் என்றால் அதன் அனைத்து உளநிலைகளையும் கதைக்குள் சொல்லிவிடவேண்டும் என்பதில்லை. அந்நோய் நோய் என்பதற்கு அப்பால் என்னவாக ஆழ்மனப்பொருள் கொள்கிறது என்பதே கதையில் முக்கியம். உண்மையில் அக்கதை தொடங்கியதும் சீனப்பக்கத்து வீட்டுக்காரி கதைநாயகியான செவிலியின் வீட்டு முகப்பில் கிருமிநாசினி தெளிக்கும் சித்திரம் வந்தபோது நான் அக்கதை மானுட உள்ளத்தை நிறைத்திருக்கும் பிரிவினை எண்ணம், ஐயம் ஆகிய நோயை நோக்கி நீளப்போகிறது என்றே எதிர்பார்த்தேன். ஆனால் சார்ஸ் அப்படியே புறவயமாக விரிவாகி செவிலியரின் சேவைமகத்துவம் வரை சென்று முடிந்தது.
மிக இயல்பாகவே பெருவழியுண்மைகளின் தடம்நோக்கித்தான் கதை எழுதும்போது ஆசிரியனின் மனம் செல்லும். எழுத்தாளன் எண்ணவேண்டியது அவை ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டனவே, இதழியலில் அவை மேலும் சிறப்பாக எழுதப்படமுடியுமே என்றுதான். உதாரணம் ‘கணக்கு’. பணிப்பெண்ணைச் சுரண்டும் உரிமையாளரின் கதை. பணிப்பெண்களின் துயரங்கள். இறுதியில் அவள் கொள்ளும் எதிர்ப்பு. ஐம்பதாண்டுகளுக்கு முன்பு மலேயா தோட்டங்களில் நிகழ்ந்த சுரண்டலும் இப்படித்தான் எழுதப்பட்டது. இன்றும் அதே பாணியில் வேறு களத்தில் ஒரு கதை என்பது சலிப்பூட்டுவது. [ஆனால் மலேயா தோட்டம் முதல் இன்றைய கணிப்பொறி காலம் வரை அதே சுரண்டல் தொடர்வதை ஒரு கதை சுட்டமுடியும் என்றால் அதன் தளம் வேறு]
’அந்தரகாந்தாரத்தைக் காதலிப்பவள்’ இறந்த மகளின் வீணையைக் கொண்டு சென்று எங்காவது கொடுத்துவிட முயலும் தந்தை, கலங்கிப் போன தாய் ஆகியோரின் கதை. அதை கொடுத்துவிட முடியாது என்பதும், கொடுத்தாலும் அதன் இசை நீடிக்கும் என்பதும்தான் அக்கதை என்பதை இலக்கிய வாசகன் எளிதில் ஊகித்துவிட முடியும். ஜானகிராமன் காலம் முதலே எழுதப்பட்ட கதைதான். அந்நிலையில் அதில் பிறிதொன்றைக் கண்டடைய வேண்டியிருக்கிறது. அந்த வீணை என்னவாக விரிய முடியும் என்பதே அக்கதையின் புதிய சவால்
ஜெயந்தியின் ஒவ்வொரு கதையை வாசிக்கும் போதும் இதில் அந்த பிறிதொன்று நிகழாதா என்னும் ஏக்கமும் இறுதி ஏமாற்றமும்தான் மிஞ்சுகிறது. தம் மக்கள் இன்னொரு உதாரணம். சிங்கப்பூரில் இருக்கும் தந்தை தன் மகளை பார்க்க இந்தியா செல்லவே முடியவில்லை. ஒருவருடம் கழித்து செல்லும்போது குழந்தை தவழும் வயதைக் கடந்துவிட்டாள். அவளை வலுக்கட்டாயமாகத் தவழவைக்க அவர் முயல்கிறார். கதை அங்கே முடிகிறது
இக்கதையை வாசிக்கும் போது ஜெயந்தியின் எழுதுமுறையில் அல்ல மையப்பிரச்சினை, அவர் கதையை உருவகிக்கும் முறையில்தான் என்ற எண்ணம் எழுந்தது. அவர் கதைக்கரு தன்னில் வந்ததுமே எழுத ஆரம்பிக்கிறார். ஆகவே வழக்கமான ஒரு தடத்தில் சென்று விழுந்து விடுகிறது கதை. கதையின் பல்வேறு வாய்ப்புகளை அவர் தவறவிட்டுவிடுகிறார்
தம்மக்கள் கதையின் மையம் குழந்தை தவழ்வதுதான். தவழ்தல் என்னும் அனுபவத்தை மட்டுமே கதை மையமாக்கி இருக்கவேண்டும். தவழும் குழந்தை தந்தைக்கு என்னவாகப் பொருள் கொடுக்கிறது என்பதே கதைவிரிவு. அதைத்தான் அவர் இழக்கிறார். அவ்விழப்பின் பல தளங்களே அதை இலக்கியமாக ஆக்கும். மாறாக ஊருக்கு வரமுடியாத சிக்கல், ஊரும் உறவும் பேசும் புறணி, கணவன் மனைவி உரையாடல், சிங்கப்பூரின் குடியேற்றச் சிக்கல்கள் என அக்கதையின் அத்தனை லௌகீகத்தளங்களையும் சொல்லிச் சென்று சாதாரணமாக முடிகிறது கதை. தவழ்தல் சந்தடிசாக்கில் வந்துசெல்கிறது.
கனகச்சிதமான ஒரு ராஜம் கிருஷ்ணன் கதை ‘சுநாதர்’. தான் போகும் புதிய இடங்களில் உள்ள ‘விசித்திரமான’ மனிதர்களைப்பற்றி ஒரு கோட்டுச்சித்திரத்தை அளிப்பது அவர் பாணி. பெரும்பாலான கதைகளில் அந்தக் கோட்டுச்சித்திரம் ராஜம் கிருஷ்ணனின் பிரமையாகவே இருக்கும். புதுநிலத்தின் புதுமைக்கவர்ச்சிகளில் ஒருபகுதியே அவருக்கு அங்குள்ள மக்களும்கூட. ஜெயந்தியின் இந்தக்கதை தமிழில் அரைநூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்டது என்று சொல்லியிருந்தால் வாசகன் எளிதில் நம்பிவிடுவான்
பொது உண்மைகளை அன்றாட வாழ்க்கைச்சித்திரங்கள் வழியாகச் சொல்லும்போது கதைககளில் வகைமாதிரிக் கதாபாத்திரங்கள் வரத்தொடங்குகின்றன. வெறுப்புக்குரியவை, அன்புக்குரியவை என எளிதில் வகைப்படுத்தத் தக்கவை அவை. ஆழங்களற்றவை. சிக்கல்களும் ஊடுபாவுகளும் இல்லாதவை. வகைமாதிரிக் கதாபாத்திரங்களில் இருவகை. அரசியல் சார்ந்து எழுதுபவர்கள், கருத்துக்கள் சார்ந்து எழுதுபவர்கள் கொள்கைகளையோ கருத்துக்களையோ பிரதிநிதித்துவம் செய்யும் வகை மாதிரிகளை உருவாக்குகிறார்கள். ஜெயந்தி போன்றவர்கள் பொதுப்புத்தியில் உள்ள வகை மாதிரிகளை எடுத்துக் கொள்கிறார்கள்
உதாரணம் ‘நிழலின் குரல்’. தந்தை, மகன், அம்மா ஆகியோரின் கடிதங்களால் ஆன கதை. கடிதவரிகளே மிகச் சம்பிரதாயமானவையாக உள்ளன. கடிதம் வழி கதை என்னும் உத்தியேகூட பழமையானது. இந்தக்கதையில் வரும் மகன் அப்பாவுடன் கொள்ளும் உரசல் மிகமிக வழக்கமானது. வழக்கமான தியாக அப்பா ஒரு வகைமாதிரி. இதில் சுயநலம் மிக்க இன்னொரு அப்பாவின் வகைமாதிரி தோன்றுகிறது.
இத்தகைய கதைகளுக்கு ஒரு பயன்மதிப்பு சந்தையில் உள்ளது. ஆகவேதான் வணிக இதழ்களில் இவை எழுதிக் குவிக்கப்படுகின்றன. இவை வெகுஜன நுண்ணுணர்வுகளை பிரதிநிதிகரிக்கின்றன, வெகுஜன விழைவுகளை நிறைவுசெய்கின்றன. உதாரணம் செம்பாதி என்னும் கதை. கணவன் மனைவியைவிட அதிகமாக செடிகளுடன் நேரம் செலவிடுகிறானோ என அவள் எண்ணுகிறாள். தூக்கமாத்திரையை விழுங்கி தற்கொலை செய்ய முயல்கிறாள். அவன் அவள் தனக்குத்தேவை என்று உணர்ந்து அச்செடிகளை வேண்டாமென முடிவுசெய்கிறான்.
“காலையில் எழுந்ததும் சமையலறைக்குள் போய் மீனாவைப் பார்த்ததைக் கவனித்தவள் மேலும் பிரகாசமானாள். அதேபோல மாலையிலும் இனி மீனாவை அடிக்கடி வெளியே கூட்டிக்கொண்டு செல்லவேண்டும் என்று மனதுக்குள் தீர்மானித்துக்கொண்டேன். அவளோடு என் நேரத்தையெல்லாம் செலவிடவும்தான். அவளுக்காக, அவள் யதார்த்ததை உணரும்வரை. அதைவிட முக்கியமாக கவிதாவுக்கும் சவிதாவுக்கும் அம்மா வேண்டுமே, அதற்காக’ என அந்தக் கணவன் எண்ணும்போது கதை முடிகிறது.
இக்கதை குடும்பமனைவிகளுக்குப் பிடிக்கும். ஏனென்றால் அவர்களுக்குரிய எளிய மெல்லுணர்ச்சி நேரடியாகவே இதிலுள்ளது. ஆனால் எந்தக்கணவனும் ‘நேரத்தை எல்லாம்’ மனைவிக்காகச் செலவிட முடியாது. செலவிட்டான் என்றால் அவன் மனநோயாளி ஆகக்கூடும். கணவன் செடிகளுடன் நேரம் செலவிட்டான் என தற்கொலைக்கு முயலும் மனைவிக்குத் தேவை அன்பு அல்ல, நல்ல உளவியல் சிகிழ்ச்சை. இந்த அசட்டுத்தனமான உலகப்பார்வையைத்தான் நம் வார இதழ்களில் பெண் கதாசிரியைகள் எழுதித்தள்ளுகிறார்கள். ரமணி சந்திரனும் முத்துலட்சுமி ராகவனும் எழுதும் கதைகளின் உலகிலேயே ஜெயந்தியின் பெரும்பாலான கதைகள் உலவுவது மீண்டும் மீண்டும் ஏமாற்றமளிக்கிறது
நான் சிங்கப்பூரில் பார்த்த முக்கியமான விஷயம் அங்குள்ள பலகணித்தோட்டங்கள். சில கட்டிடங்களைச் செங்குத்தான பூங்காக்கள் என்றே சொல்லலாம். கட்டிடக்காடான சிங்கப்பூரில் இந்தச்சிறு பூங்காக்கள் என்னவாகப் பொருள்படுகின்றன என்பது மிகமுக்கியமான கேள்வி. அவை அளிக்கும் ஆறுதல் என்ன? அவை அவற்றை வளர்ப்பவர்களுக்குள் வாழும் காட்டின் துளிகள்தானா? எத்தனை கவித்துவச் சாத்தியங்கள். ஆனால் செடிகளை தூக்கிப் போட்டு மனைவியை கொஞ்சு என்னும் எளிய ஆணையாக ஒரு கதை எழுதப்படுமென்றால் அதை எப்படி எடுத்துக் கொள்வது?
கிட்டத்தட்ட நூறு கதைகள். மூன்று குறுநாவல்கள் கொண்ட இத்தொகுதியை இரண்டு நாட்கள் மொத்தம் எட்டு மணிநேரம் எடுத்துக்கொண்டு வாசித்தேன். [அதிவேக வாசகனாகிய எனக்கு இது மிகநீண்டநேரம்] என் வாசிப்பை அடுத்தகட்டம் நோக்கிக் கொண்டுசெல்லும் ஒருகதைக்காகத் தேடித்தேடி எரிச்சல் எழப்போன தருணத்தில் என்னை வென்று மீட்டேன். ஒரு கட்டத்தில் இயல்பானேன். ஜெயந்தி சங்கரின் அளவே இதுதான் என தெளிந்தேன்.
ஜெயந்தி சங்கர் எழுதிக்கொண்டிருப்பவை தமிழ் வணிக எழுத்தின் எளிய வகைமாதிரிகள் என அவர் உணராமல் முன்னகர்தலே சாத்தியமில்லை. இன்றைய நிலையில் இக்கதைகள் எவற்றுக்குமே நவீனத் தமிழிலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க இடம் இல்லை. மீண்டும் மீண்டும் உதாரணங்களைக் காட்டலாம். மறுபக்கம் விவாகரத்தான பெண்ணை அவள் மகளுடன் மணந்து கொண்ட ஒருவரின் கோணத்தில் விரிகிறது. தன் பெண்ணை சிங்கப்பூருக்கு அழைத்துவந்து படிக்கவைக்க அவள் தந்தை விரும்புகிறார் என்பது முடிச்சு
அதைச்சூழ்ந்து எல்லா உணர்ச்சிகளையும் மிகமிகப் பழக்கமான வகையில் உருவாக்கிக் கொண்டு செல்கிறார் ஜெயந்தி சங்கர். அவள் தாயின் கணவர் அவள் தன்னை விட்டுச் சென்றுவிடுவாரோ என பதற்றமடைகிறார். மகள் ‘நீதான் என் அப்பா. இன்னொருவரை அப்பா என்று அழைக்கமுடியாது’ என கண்கலங்குகிறாள். கடைசியில் அந்த அப்பா அவரது இரண்டாம் மனைவி முதல் மனைவியின் மகளை வீட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லும் இடத்தில் கதை முடிகிறது.
இந்தக்கதையின் முடிச்சே மிகச்சாதாரணமானது, முன்பும் பலரால் மீளமீள எழுதப்பட்டது. அந்த முடிச்சைக்கூட ஜெயந்தி கையாண்டிருக்கும் விதம் இலக்கியத்திற்குரிய வழி அல்ல. பிரச்சினைக்கு முடிவு கதையில் ஒரு கதாபாத்திரம் மனம் மாறுவது அல்ல. அல்லது அந்தப் பிரச்சினை ஒத்திப்போடப்படுவது அல்ல. குருதியுறவுக்கும் ஏற்புறவுக்குமான முரண்பாடு. உறவு என்பது உண்மையில் என்ன என்னும் வினா. ஒரு மனம் உறவில் விரிய இன்னொன்று உறவில் சுருங்கும் வாழ்க்கையின் எதிரெதிர் நகர்வு. எதுவுமே நிகழவில்லை இக்கதையில்.
பெருந்தொகையாக கதைகளைச் சேர்க்கும்போது நிகழும் அபத்தங்களும் இத்தொகுதியில் உள்ளன. பார்வை ஒன்றே போதுமே என்னும் கதை பள்ளிக்குழந்தைகள் எழுதியது போலிருக்கிறது. ஒரு பெண் பார்வையிழக்கிறாள். அப்பா அம்மா கஷ்டப்படுகிறார்கள். இப்படி பல வருட வாழ்க்கையை சுருக்கி தட்டையாகச் சொல்லிவிட்டு அவள் பார்வையிழந்தவர் பள்ளியில் வேலைக்குச்செல்கிறாள் என்று நீள்கிறது கதை. அங்கே ஒரு குழந்தை வெள்ளை என்றால் என்ன என்று கேட்டபோது என்ன சொல்வது என தடுமாறுகிறாள். ‘பஞ்சைப்போல என்று சொல்லமுடியும். வெள்ளையாய் சிரித்த அவன் சிரிப்பைப்போல என்று சொன்னால் ஒருவேளை புரிந்துகொள்வானோ?’ என முடிகிறது ஆசிரியையின் ஆர்வம்
விழியிழந்தோரின் உலகம் பற்றி விழியுடையவர் சொல்லும் அத்தனை தேய்வழக்குகளும் கொண்டிருக்கிறது இக்கதை. உண்மையில் அவர்கள் சொற்பொருள் கொள்ளும் விதமே வேறு. ‘பார்த்துநாளாச்சே’ என விழியிழந்தோர் சாதாரணமாகச் சொல்வார்கள். ‘பச்சை இலை’ என அவர்கள் குறிப்பிடுவார்கள். பிறிதொருவகையில் அவர்கள் அதை வகுத்து வைத்திருப்பார்கள். மொழியை விழியின்மை சந்திப்பது மானுட உள்ளத்தின் சாத்தியங்கள் வெளிப்படும் தருணம்.
ஜெயந்தியின் கதைகளில் விவாகரத்தும் அதற்குப்பின் உள்ள வாழ்க்கையும் அடிக்கடி பேசுபொருள் ஆகின்றன. சுயம் விவாகரத்தான ஒரு பெண் ‘இனி எனக்காகவும்தான் வாழ்ந்து பார்க்கலாமே’ என நினைக்கத் தொடங்கும் எளிய வரியில் முடிகிறது. அதுவும் அவள் தொலைபேசியில் அந்த எண்ணத்தை தன் அப்பாவிடம் சொல்வதுபோல. நான் இதே கதையை ஐம்பதுதடவைக்குமேல் வெவ்வேறு பெண்கள் எழுதி வாசித்திருக்கிறேன் . இதே முடிவைக்கூட!
உண்மையில் இது எவ்வளவு சிக்கலானதாக இன்றும் உள்ளது. நம் பண்பாடு பெண்ணுக்கு அவள் உடலே அவள் என கற்பிக்கிறது. உடல் சார்ந்த பிரக்ஞையே பெண்ணின் சுயமாக உருவாகி வருகிறது இங்கு. அவள் ஒரு திருமணத்திலிருந்து வெளியேறும்போது உடலை மீட்டுக்கொள்வது எப்படி என்பதே மிகப்பெரிய அறைகூவலாக உள்ளது. தனிப்பட்ட முறையில் எனக்கு வாசகியர் பலர் இதைச் சொல்லியிருக்கிறார்கள். அவள் உடல் திருமணத்திற்கு முந்தையது அல்ல என்னும் உணர்வு அவளை படுத்துகிறது. அவள் அதை வெல்லாமல் தன் சுயத்தை அடைவதில்லை.
ஓர் உறவைக் கடந்துசெல்லும்போது கசப்பும் உவப்புமான நினைவுகளை என்ன செய்வது என்னும் கேள்வி இன்றும் உள்ளது. சிறிய விடைகளைச் சொல்லிவிடமுடியாது அதற்கு. விவாகரத்தான என் வாசகி ஒருத்தி எழுதினாள். அவள் மிகமிக வெறுக்கும் முன்னாள் கணவனின் செயல்கள் அல்ல அவளைப் படுத்தி எடுக்கும் நினைவாகத் தொடர்வது. அவனுடன் அவள் கொண்ட காமத்தின் கணங்களில் அவள் உண்மையாகவே மகிழ்ந்து திளைத்திருந்தாள் என்பதுதான். ஒற்றைச்சொல்லில் கடந்துசெல்லும் எளிய உளச்சிக்கல் அல்ல இது. அதற்குள் கன்னிமையை, உடலொழுக்கத்தை, பால் அடையாளத்தை வரையறுத்துப்பேணிய ஆயிரமாண்டுப் பண்பாட்டின் அழுத்தம் உள்ளது
இன்று ஒருபக்கம் இத்தகைய கடும் இக்கட்டுகள் வாழ்க்கையை அலைக்கழிக்கும்போது ஏன் எழுதப்படும் கதைகள் இத்தனை எளிமையான உணர்வுநிலைகளும் ‘தீர்வு’களும் கொண்டவையாக உள்ளன? ஏனென்றால் நான் முன்னரே சொன்ன அந்த நேர்வழி நோக்குதான். கலைமகளில் இருந்து ஜெயந்தி சங்கர் வரை அது வந்து கொண்டிருக்கிறது. பொதுவான அறங்களையும் ஒழுக்கங்களையும் ‘எல்லாரும் ஏற்கும்படிச்’ சொல்வது. அது கலைமகள் கதைகளுக்குத்தான் சரிவரும், இலக்கியத்திற்கு அல்ல.
கிட்டத்தட்ட சிங்கப்பூர் வாழ்க்கையின் அத்தனை நடைமுறைச் சிக்கல்களையும் கருவாக்கியிருக்கிறார் ஜெயந்தி சங்கர். பிம்பம் கருப்பாக பிறந்தமையால் தாழ்வுணர்ச்சி கொண்ட ஒரு பெண்ணின் கதை. அவளுக்குத் தாழ்வுணர்ச்சி என்று மட்டும் கதையில் மீண்டும் மீண்டும் வருகிறது. அந்தப் பெண்ணுக்கு ஏற்படும் ஒவ்வொரு அவமானமும் சொல்லப்படுகிறது. அப்பா அம்மா சொல்லும் அத்தனை உபதேசங்களும் விரிவாக எழுதப்பட்டுள்ளன
கடைசியில் அந்தப் பெண் தாழ்வுணர்ச்சியை ஒரு நிகழ்ச்சி வழியாக வெல்கிறாள். காரணம் புற்றுநோய் வந்து படுக்கையில் இருக்கும் ஒரு பெண்ணைப் பார்த்துப் பேசுவது. அதாவது அவளை விட தான் மேல் என்னும் எண்ணம் வருவது. உடனே படிக்கவேண்டும் என்னும் எண்ணம் வருகிறது. ஆங் மோ கியோவில் தமிழ்ப்படம் பார்க்கவேண்டாம் லைப்ரரி போகவேண்டும் என முடிவெடுக்கிறாள். ‘கருப்புதான் எனக்குப்பிடிச்ச கலரு’ என பாடவேறு செய்கிறாள்
’மகளின் பிரச்சினை எவ்வாறு தீரும் என்று பயந்தப்டி இருந்த வந்தனாவுக்கு அந்த ஆண்டவனே சின்யீ உருவில் வந்தது போல சுலபமாகத் தீர்ந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி. கூன்குருடு செவிடுபேடு நீங்கி பிறந்த இந்த அரிய மானுடப்பிறவியில் ஞாலமும் கல்வியும் நயத்தல்வேண்டும் என்று புவனாவுக்கு சின்யீ என்னும் அந்த தேவதை போதித்ததில் வந்தனா பேருவகை அடைந்தாள்’ என்கிறார் ஆசிரியை.
ஆனால் வாசகனாக எனக்கு பெரும் எரிச்சலையே இக்கதை அளித்தது. ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை வர இன்னொருத்திக்கு புற்றுநோய் வரவேண்டுமா என்ன? நல்லவேளை அவளாக நான் இல்லை என்பதா வாழ்க்கையைப் பற்றிய புரிந்துணர்வு? எத்தனை சிறுமை நிறைந்த உலகியல்நோக்கு இது! ஜெயந்தி சங்கரின் கதைகளின் பிரச்சனை அவரது ஆன்மிக வறுமைதான் என்று வரையறுக்கலாமா என எண்ண வைத்தது இக்கதை.
பிற வாழ்க்கைக்குள் செல்லும் கதைகள் இத்தொகுதியில் மிகக்குறைவு. ‘ஒரே கேள்வி’ போல ஓரிரு உதாரணங்கள் சொல்லலாம். அவையும் மிக எளிமையான புரிதல்களைக் கொண்டவை. ஒர் இளைஞன் தாழ்வுணர்வால் பெண்நட்புகளில் இடருறுவதைச் சொல்லும் கதை அவனைப்பற்றி அவன் நண்பன் அறிந்துகொண்டு, எண்ணிக்கொள்ளும் பாணியில் நேரடியாக எழுதப்பட்டிருக்கிறது.
இப்பெருந்தொகுதியின் எந்தக்கதையையுமே இலக்கியத் தரமான படைப்பு என்று சொல்லமுடியவில்லை என்றே உணர்கிறேன். ஒரு பெருந்தொகுதி அப்படி இருக்க வாய்ப்பில்லை என மீண்டும் மீண்டும் தேடி கடைசியில் 99 கதைகளையுமே படித்துமுடித்தபோது பெரும் சோர்வையே சென்றடைந்தேன். ஜெயந்தி சங்கர் தமிழின் நவீன இலக்கியப் படைப்புகளை வாசிக்கிறாரா அல்லது வாசந்தி சிவசங்கரி கதைகளுடன் நின்றுவிட்டாரா என்னும் ஐயம்தான் ஏற்பட்டது.
வாசித்திருந்தார் என்றால் தமிழ்நவீனச் சிறுகதை வாழ்க்கையின் பொதுவான உண்மைகளைச் சொல்வதை முழுமையாகத் தவிர்த்துவிடுவதை அவர் கவனித்திருக்கமாட்டாரா? இலக்கியம் எப்போதும் அசாதாரண வெளிப்பாடுகளையே தேடிச்செல்வதை அறிந்திருக்கமாட்டாரா? சொல்வதை விட குறிப்புணர்த்துவதையே அது இலக்காக கொண்டிருப்பதை உணர்ந்திருக்கமாட்டாரா?
ஜெயந்தி சங்கர் அவர் இதுவரை எழுதிய எந்தக்கதைக்கும் இலக்கிய மதிப்பு இல்லை என்றும் அவை எளிய வணிகப் படைப்புகளின் கட்டமைப்பும் மனநிலையும் கொண்டவை என்றும் உணர்ந்தார் என்றால், இதுவரை எழுதிய அனைத்தையும் நிராகரித்துவிட்டு இலக்கிய வாசிப்பினூடாக சிறுகதையின் சாத்தியங்களை உணர்ந்தபின் அடுத்த அடியை எடுத்து வைக்கத் துணிந்தார் என்றால் மட்டுமே அவர் நவீன இலக்கியத்தினுள் புகமுடியும்.
[ஜெயந்திசங்கர் கதைகள் . காவ்யா பிரசுரம்]
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
கிராதம் பற்றி
ஜெ,
சொல்வளர் காடு முடிந்ததில் இருந்து என்று என்றென காத்திருந்ததை இன்று கண்டேன். எப்பொழுதும் வெண்முரசு நாவலுக்கான தலைப்பு தரும் எந்தவித உணர்வெழுச்சிகளும் சில நொடிகளுக்கு மேல் நிலைக்கவில்லை. அதன் காரணம் தலைப்பு ஒரு சமஸ்கிருத சொல் என்பதே.வெண்முரசின் சொல்லழகியலில் முக்கியமானது, பலரையும் கவர்வது அதன் தமிழாக்கச் சொற்கள் தான் என நினைக்கிறேன். என் மனதில் உறுத்துவது ‘கிராதம்’ தமிழ்ச் சொல்லா? அல்லது குறியீட்டு ரீதியில் சமஸ்கிருத சொல் தான் இந்நாவலுக்குத் தேவையா?
அன்புடன்,
செந்தில்நாதன்
அன்புள்ள செந்தில்நாதன்
உண்மைதான்.
வெண்முரசு எழுதும்போது நான் கொண்ட தன்னெறிகளில் ஒன்று கூடுமானவரை தனித்தமிழ் என்பது. அதுவே இதுவரை கடைப்பிடிக்கப்பட்டது. விதிவிலக்கு பிரயாகை, காண்டீபம்
கிராதம் என்னும் சொல்லுக்கு தமிழில் காட்டுத்தன்மை என்னும் பொருள் வரும். ஆனால் ஒலியமைவில் அச்சொல் எனக்கு இயைந்துவிட்டது.
அதற்கு தர்க்கம் ஏதுமில்லை. சொற்களைத் திரும்பத்திரும்பச் சொல்லி போதையேற்றிக்கொண்டு அதிலிருந்தே பிம்பங்களை அடைவது என் வழக்கம்.
ஆகவே வேறு வழியில்லை. இச்ச்சொல்லைத்தொடர்வதுதான்.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
பெருந்துயர் நோக்கி – பின் தொடரும் நிழலின் குரல் குறித்து
உயிர்த்தெழுதலுடன் பின் தொடரும் நிழலின் குரல் முடிவுற்றதாகவே எண்ணியிருந்தேன். மறுமுறை படிக்கையில் மிஞ்சும் சொற்களில் ஜெயமோகனின் கடிதமே நாவலை முடித்து வைப்பதை உணர முடிகிறது. அருணாசலம் சுய மீட்பாக கதிருக்கு எழுதுவதையும் ஜெயமோகன் அருணாசலத்துக்கு எழுதுவதையும் இணைத்து வாசித்தால் மட்டுமே நாவலிலிருந்து முழுமையாக வெளிவர முடிகிறது.
சுரேஷ் பிரதீப் பின் தொடரும் நிழலின் குரல் குறித்து எழுதிய கட்டுரை
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
சிங்கப்பூர் கடிதங்கள் -6
அன்புள்ள ஜெ,
சிங்கை விமர்சனம் குறித்து வந்த கடிதம் கண்டு ஜெயந்தி சங்கர் பிளாக்கை படித்தேன்.
2007 ஆண்டு வரை மட்டுமே பதிவிடப்பட்டுள்ளது. படித்த சிறுகதைகள் நான்கும் சிங்கை சூழலியலை வேலை, சீனர், சொந்த ஊர், போன்றவற்றை மட்டும் பயன்படுத்தி பலவீனமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்டபடியே சம்பவ விவரணையை தேடினாலும் கிடைக்கவில்லை. இக்கதைக்கான தேவை என்பதென்ன என்றே புரியவில்லை. திராவகம் என்ற கதை குடியை பற்றியது, சாதாரணமாக எங்கும் நடக்கும் குடிகாரனின் தொடக்கம், பொய் சத்தியங்கள். காமம் கொண்டு மகளிடம் தவறாக நடக்க முயல்கிறார் தந்தை, ஏதோ பெரிதாக நிகழ போகிறது என பார்த்தால், குற்ற உணர்வில் நாளை திருந்திவிடுவார் என்று கதை முடிகிறது. உச்சத்தில் மாடிவீட்டில் குழந்தை அழ சீன பெண் சமாதானபடுத்துகிறார் (சிங்கையல்லவை??) தலைவலிக்க வைக்கும் கதை.
பொதுவாக இவர்களின் கதை யோசிக்க வைக்கும் அல்லது உணர்வெழ வைக்கும் கதைகளல்ல. சாதாரண சம்பவகதைகள், சாமான்யர்களால் நிகழ்கிறது. மனதை எழுத்தில் ஊன்றி படிக்க வேண்டிய அவசியமில்லாததே இவர்களின் வெற்றி. எங்கும் இவர்கள் இருக்கிறார்கள், சாமானியர் படிக்க கதை எழுதி கொண்டு, சிங்கையில் அவர்களே பிரதான எழுத்தாளுமைகள் என்பது வியக்கவைக்கிறது. சற்றே செலவு செய்து சிங்கை சென்றுவிட்டால் நானும் ஒர் நாட்டின் சிறந்த எழுத்தாளராக வாய்ப்புள்ளது என்று அறிகிறேன்.
சிங்கம் சிவா
*
சூர்யரத்னா குறித்த உங்கள் கருத்தும் அதற்கான அவரின் சிறுபிள்ளைத்தனமான எதிர்வினையும் பார்த்தேன்
Is this guy worth my time? என்ற பின்னும் சூர்ய ரத்னா நிறைய நேரம் செலவழித்தும், நிறைய reference செய்தும் இதை எழுதியிருக்கிறார் என்பதே பெரிய விஷயம்தான்.
this “guy ” is worth என்பதால் தான் சிங்கப்பூரில் எழுதித்தள்ளிக்கொண்டிருக்கும் இவர்களையெல்லாம் விட்டுவிட்டு இவரை அழைத்திருக்கிறார்கள?.
ஆக்கபூர்வமான விமர்சனம் என்றால் என்னவென்று தெரியுமா எனவேறு கேட்டிருக்கிறார் இதுதானே ஆக்கபூர்வமான விமர்சனம்!!
சூர்யரத்னாவிற்கு இது மட்டுமல்ல சபை நாகரீகமும் கூடத்தான்தெரியவில்லை. விமர்சனங்கள் தன்னை பண்படுத்தும் எனும் அடிப்படையைக்கூட அறியாத இவர், இதற்கு போய் காவல்துறையில் புகாரளிக்கும் அளவிற்கு குழந்தைத்தனமுள்ள இவர், விளக்கு பிடிப்பது, வெறி நாய் என்றெல்லாம் கட்டுப்பாடு இன்றி உணர்ச்சிகளை ஒரு சமூக ஊடகத்தில் கொட்டும் இவர் எப்படி, எவற்றை சிங்கை வாழ் இளைஞர்களுக்கு கற்றுத்தரப்போகிறார்?
அதுவும் அவரின் ஆங்கிலப்புலமை அபாரம். இவர் ஆங்கிலக்கதைகளும் கூட முயற்சிக்கலாம் (அதையும் ஏன் விட்டு வைக்கணும்?)
எழுத்துலகில் தடம் பதிக்க தடுமாறும் பெண்கள்குறித்த இவரது அக்கறையும் கவலையும் மிகவும் போற்றுதலுக்குரியதே!!
இதில் அந்த கதகளி எங்கு வந்தது ?
அவருக்கும் அவரது பதிப்பகத்தாருக்கும் உள்ள புரிதலும் மிக மிக பாராட்டப்படவேண்டிய ஒன்றே
‘எல்லா தரப்பு வாசகர்களும் படிக்கக்கூடியதாக எளிமையாக இருக்க வேண்டும்’..! அது எப்படி? அந்த எல்லா தரப்பிலும் தீவிர இலக்கிய வாசகர்களில்லையா என்ன? ஏன் இப்படி அவரின் திறமைகளையெல்லம் சுருக்கி எளிமையான ஒரு வட்டத்திற்குள் சூரியரத்னா இருக்கவேண்டும்? உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல அவர் உண்மையில் அதற்கும் மேலே எழுதுவார் என்பதை அவரின் இந்த ஆகச்சிறந்த எதிர்வினை நமக்கு தெரியப்படுதுகிறது. சூர்யரத்னாவின் கதைகளை படிக்கவே வேண்டாம். இந்த எதிர்வினையொன்றே போதும் அவரின் எல்லா ‘படைப்புக்களையும் (!)’ படித்த அனுபவத்தை நமக்கு கொடுக்க.
உண்மையில் சூரியரத்னா மனது வைப்பின் வருங்காலத்தில் எளிமையான கதைகளைப் படைக்க முடியும் என்ற நம்பிக்கையை மட்டுமல்லாது மிக தீவிரமான அழியாக்காவியங்களையும் இலக்கியப்படைப்புகளையும் படைக்கும் நம்பிக்கையை மாணவர்களிடையே ஊட்ட முடியும், ஊட்டுவாராக!
அடிப்படை அறிவு `இல்லை என்று சொல்வதன் வழியாக அந்த விருதைக் கொடுத்தவர்களுக்கும் அந்த அறிவு இல்லை என்று சொல்ல நினைக்கிறீர்களா? என்று உங்களைக்கேட்கும் இவர் நீங்கள் சிங்கப்பூர் அரசின் விருந்தினர் உங்களை நாய் என்றும் விளக்குப்பிடிப்பவர் என்றும் அவமதிப்பது சிங்கை அரசை அவமதிப்பதாகும் என்று தெரியாதா?
நீங்கள் அவரின் எழுத்துக்களின் குறை நிறைகளை சுட்டிக்காட்டி மேம்படும் வழியைத்தானே சொல்லி இருக்கிறீர்கள்? ஏன் இவர் உங்களை இப்படிக் கடித்துக்குதறுகிறார்?
காமாலைக்கண்ணர்களுக்கு அவர் காட்டும் வண்ணமயமான உலகம் நிஜமாலுமே அற்புதமானது ஆனால் அவர் நிறக்குருடு என்பதுதான் இதில் விஷேசம!’
சிங்கப்பூர்ச் சூழலைப் பற்றி you know nuts என்கிறார். அதனால் தான் அந்த அரசு உங்களைக்ககூப்பிட்டு 2 மாதம் தங்க வைத்ததா?
இத்தனையும் கொஞ்சமாவது என்னால் புரிந்து கொள்ள முடிந்தது சார் ஆனால் இதுதான் சுத்தமாக புரியவில்லை
If you have issues that you can’t handle, please don’t bring your war to my doorstep? என்ன சொல்ல வருகிறார்?
“கொக்கென்று எண்ணினாயோ கொங்கணவா ?” உச்சகட்ட நகைச்சுவை சார் இது. இரண்டு மாதமாக நீங்களும் சிங்கப்பூரில் இருந்ததால் நகைச்சுவையாக ஒன்றும் எங்களுக்கும் படிக்கக் கிடைக்கவில்லை. ஏதோ இதுவாவது கிடைத்ததே இலுப்பைப்பூ சர்க்கரையைபோல
என் வருத்தமெல்லாம் நீங்கள் இந்த சூர்யரத்னாவிற்கு மிக அதிகமான publicity கிடைக்கும் படி செய்துவிட்டீர்கள். மேலும் உங்கள் மோதிரக்கையால் குட்டுப்படவும் ஒரு தகுதி வேண்டாமா சார்?
நான் பலவருடங்களாக தமிழ் முனைவர் பட்ட ஆய்வேடுகள் ஏன் மற்ற துறைகளில் உள்ளது போல வெளிநாடுகளுக்கு மதிப்பீட்டிற்கு அனுப்பப்படுவதில்லை. சிங்கப்பூருக்கெல்லாம் அனுப்பலாமே என்று பேசிக்கொண்டிருந்தேன் இனி வாயையே திறக்கமாட்டேன்
லோகமாதேவி
***
அன்புள்ள ஜெ
உங்கள் கட்டுரைகளில் இங்கிருந்து peer review அளிக்கும்பொருட்டு செல்லும் இந்த ஊர் எழுத்தாளர்கள் சிங்கப்பூரில் பல்லிளித்துவிட்டு வருவதைப்பற்றி எழுதியிருந்தீர்கள். மாலன் பாய்ந்துவந்து அவரே வாக்குமூலம் கொடுத்துவிட்டார்
உண்மையில் இலக்கியத்தில் மட்டும் அல்ல ஆய்வுகளிலும் நிகழ்வது இதுதான். peer reviewக்காக சிங்கப்பூர் மலேசியா இலங்கை போன்ற ‘அயல்நாட்டுப் பல்கலை’ கழகங்களுக்கு ஆய்வேடுகளை அனுப்புவார்கள். அங்கிருந்து இங்கே ஆய்வேடுகள் வரும். எல்லாம் ஒரு ஒத்துவேலையாகவே முடியும். எந்தக்கருத்துநேர்மையும் இருக்காது. இருசராரும் சேர்ந்துகொண்டு அரசுகளை ஏமாற்றுவதுதான் இது.
அங்கிருந்து இங்கே வரும் அசடுகளை உட்கார வைத்து குளிரக்குளிரப் புகழ்ந்து ‘international conference முடிப்பார்கள். இவர்கள் அங்கே சென்று international conference முடிப்பார்கள். சூர்யரத்னாவுக்கு தஞ்சைப்பல்கலைகழகம் இலக்கியவிருது அளித்திருக்கிறது, கவனித்திருப்பீர்கள்.
இந்த பரஸ்பர அயோக்கியத்தனம் ரொம்பநாளாக நடந்துகொண்டிருக்கிறது. இழுத்து தெருவிலே விட்டுவிட்டீர்கள். நல்லது
கல்யாணராமன்
அன்புடன் ஆசிரியருக்கு
சிங்கப்பூர் இலக்கியச் சூழல் குறித்த விமர்சனங்களை படித்து வருகிறேன். குறுகிய காலத்தில் இவ்வளவு அதிகமான படைப்புகளை படித்து ஒரு சூழலின் ஒட்டுமொத்தத்தை காண்பது வியக்க வைக்கும் பேருழைப்பு. சிங்கப்பூர் எழுத்தாளர்களும் இலக்கிய வாசகர்களும் தங்களை அறிந்து கொள்வதற்கும் சூழலில் ஏற்பட வேண்டிய ஒட்டுமொத்த மாற்றத்தை புரிந்து கொள்வதற்கும் உங்கள் கட்டுரைகள் நிச்சயம் நல்ல தொடக்கமாக அமைந்திருக்கும். நம்மூர் அளவிற்கு அவர்கள் “புண்பட” மாட்டார்கள் என நம்புகிறேன்.
அன்புடன்
சுரேஷ் ப்ரதீப்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
October 6, 2016
கைநழுவிய கலைக்கணங்கள்
ஷாநவாஸின் முட்டை பரோட்டாவும் கொத்து புரோட்டாவும் என்ற தொகுதி தான் முதல் முதலாக என் கவனத்துக்கு வந்தது. நண்பர் மனுஷ்யபுத்திரன் அதை அனுப்பி எனது கவனத்துக்குரிய படைப்பு என்று தெரிவித்திருந்தார். பொதுவாக தமிழர்கள் தாங்கள் செல்லும் இடங்களின் வாழ்க்கையை எவ்வகையிலும் அவதானிப்பதில்லை என்ற மனக்குறை எனக்கு உண்டு. இன்று புலம்பெயர்ந்து உலகெங்கும் தமிழர்கள் சென்றிருந்த போதும் கூட உலகத்தைப் பற்றி தமிழில் எழுதப்பட்ட நூல்கள் மிகக்குறைவானவை. ஐரோப்பாவைப் பற்றிக்கூட சொல்லும்படியாக எதுவும் தமிழில் எழுதப்பட்டதில்லை.
நெடுங்காலம் பாரிசில் வாழும் ஓர் ஈழநண்பர் மதுக்கடையில் பரிமாறுபவராக இருக்கிறார். நான் பாரிசின் அடையாளமாக இருக்கும் ஒயினை பற்றி நீங்கள் ஏன் ஒரு புத்தகம் எழுதக்கூடாது என்று கேட்டபோது, எழுதும் அளவுக்கு அவர் எதையுமே அவதானித்ததில்லை என்று தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தேன். இதை ப.சிங்காரம் அவருடைய ஒரு பேட்டியிலே சொல்லுகிறார். செல்லுமிடங்களில் புற உலகை சற்றும் கவனிக்காமல் இருப்பது தமிழர்களின் வழக்கம் என்கிறார். ஒருமுறை அவர்கள் பினாங்கிலிருந்து கப்பலில் செல்லும்போது புயல் வந்து உயிராபத்தான நிலையை அடைகிறார். பதினைந்து வருடம் கழித்து அவ்வனுபவத்தை திரும்பி எழுத முயலும் ப.சிங்காரம் அன்று படகில் இருந்தவர்களிடம் தொடர்பு கொண்டு அவ்வனுபவத்தின் சில தகவல்களை கேட்கும்போது எவருக்குமே அன்று படகில் சென்ற அனுபவமே மெலிதாகத்தான் நினைவில் இருக்கிறது என்கிறார்கள்.
இந்நிலையில் புலம்பெயர்ந்த ஒருவர் புலம்பெயர்ந்த நாட்டின் ருசியைப்பற்றி எழுதின கட்டுரை நூல் என்பது ஒரு மிக முக்கியமான வரவாக எனக்குத் தெரிந்தது. அதன்பிறகு நான் வாசித்த ஷாநவாசின் ’அயல்பசி’ இன்னும் மொழிக்கச்சிதமும் கூர்ந்த அவதானிப்பும் கொண்ட நூலாகத் தென்பட்டது. தமிழில் உணவுபற்றி எழுதப்பட்ட சிறந்த நூல்கள் எவை என்றால் சற்றும் தயங்காமல் ஷாநவாசின் அந்த நூல்களை சொல்ல முடியும்.
அந்த எதிர்பார்ப்புடன் தான் ஷாநவாசின் இத்தொகுதியை படித்தேன். ஷாநவாசின் கதைகளின் சிறப்பு என்னவென்றால் தொடர்ந்து வாசிப்பு இருப்பதனால் பெரிய தடங்கல்கள் இல்லாமல் மொழியைக் கையாள முடிகிறது என்பதுதான். தேய்வழக்குகளோ செயற்கையான சொல்லாட்சிகளோ மிகைக்கூற்றுகளோ இல்லாத மொழி படிப்பதற்கு உகந்ததாகவும் உள்ளது. இதற்கப்பால் இக்கதைகளை பார்க்கும்போது இத்தகைய ஆரம்பகட்ட கதைகளில் இருக்கும் அனைத்து பிரச்னைகளும் இதில் உள்ளன. ஒன்று அன்றாட வாழ்க்கை தருணத்தை அப்படியே பதிவு செய்வதுதான் கதை என்னும் எண்ணம். இரண்டு அன்றாட வாழ்க்கையின் தருணங்களில் மானுட மேன்மை, அன்பு, தியாகம், கருணை போன்ற சில தருணங்களை கண்டடைவதற்கான முயற்சி. அதைக் கண்டடைந்த உடனே அதை அப்படியே பதிவு செய்தல்.
இலக்கியத்தில் இத்தகைய கதைகளுக்கான இடம் அருகி நெடுநாள் ஆகிறது. அன்றாட வாழ்க்கையின் தருணங்களில் மானுடம் வெளிப்படுகிறது என்றால் ‘ஆமாம் அதுதான் தெரியுமே மேலே என்ன?’ என்று தான் இலக்கிய வாசகன் கேட்பான். இந்தத் தொகுதியின் ஒவ்வொரு கதையாக படித்துக் கொண்டே செல்லும் போது அந்த எதிர்பார்ப்பு மெல்ல அணைந்து கொண்டே இருக்கும் அனுபவம் தான் எனக்கு ஏற்படுகிறது.
சாட்சி ஒரு உதாரணம். தனக்கு சிக்கல் வரும் என்பதற்காக ஒருவர் சாட்சி சொல்ல மறுக்கிறார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணை மடியில் அமர்த்தியிருக்கும் சீனப்பெண்ணும் ஒரு பார்வையாளர்தான் என்று உணர்ந்த போது மனம் திருந்துகிறார். மூன்றாவது கை சிங்கப்பூருக்கு பணிப்பெண்ணாக வரும் பெண்களின் சித்திரத்தை சொல்லும் கதைகளுக்கு ஒரு மாற்றாக இருக்கிறது. இங்கே தான் கொடுமைப்படுத்தப்படுவோம் என்று நினைத்து வரக்கூடிய பெண் அவ்வாறு நிகழவில்லை என்பதை அக்குடும்பம் தனக்கு ஆதரவாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்கிறாள்.
இத்தகைய கதைகள் இன்றைய சூழலில் வாசகனிடம் எந்த மேலதிக பெறுமானத்தையும் பெறுவதில்லை. மட்டுமல்ல, இவற்றிற்கு சிங்கப்பூருக்கே உரித்தான தனித்தன்மை எதுவுமில்லை. சூழல் சிங்கப்பூராக இருக்கலாம். ஆனால் இது எங்கு வேண்டுமானாலும் நிகழக்கூடிய கதைகள் மட்டுமே. சில கதைகள் வலுவான வேறு கதைகளின் பாதிப்புடையவை என்று எனக்குத் தோன்றுகிறது. உதாரணம் அனுமான். சக்கியின் [Hector Hugh Munro] சோப் என்ற கதையின் வலுவான பாதிப்பு இக்கதை தொகுப்பில் உள்ளது. பல உரைகளில் நான் குறிப்பிட்டிருக்கும் ஒரு கதை அது.
கறிவேப்பிலை ஒரு சாதாரண வாசிப்பில் நல்ல கதை. ஆனால் கறிவேப்பிலையைப்பற்றி அசோகமித்திரன் எழுதியிருக்கிறார். ஏறத்தாழ அதே பாணியில் விமலாதித்த மாமல்லன் இன்னும் சுமாரான ஒரு கதையை எழுதியிருக்கிறார். அதிலிருந்து மீண்டும் கீழிறங்கி அதைவிட சுமாரான கதையை ஷாநவாஸ் எழுதும்போது அதை இன்றைய வாசகனால் ஒத்துக் கொள்ள முடியாது.
கறிவேப்பிலைக்கு இரு குறியீட்டு அர்த்தங்கள் உண்டு சூழல் வெளியில் பயனளித்ததும் தூக்கிப்போடப்படுவது, நட்டு வளர்க்க மிகக் கடினமானது. ‘கறிவேப்பிலைக் கன்று போல என்ற பழமொழி அதைச் சுட்டுகிறது. மிகச் சிரமமாக நட்டு வளர்க்கப்படவேண்டிய ஒன்று உறவுகளுக்குள்ளே பூப்பதை இந்தக்கதை குறியீட்டு ரீதியாக சொல்கிறது என்றே எடுத்துக் கொள்ளலாம். அதன் உச்சகட்ட வாசிப்பு சாத்தியமும் அதுதான். அது தளிர்விடும் தருணம் ஒரு சிறுகதைக்கு உரியதுதான். ஆனால் வலுவாக சிறுகதையாக ஆவதற்கு இக்கதையில் இன்னும் அதிகமான மர்மங்கள் தேவை. கறிவேப்பிலையைப்பற்றிய இன்னும் அழகிய அழுத்தமான சித்திரம் தேவை.
நிஜங்கள், அழைப்பு போன்ற கதைகள் எல்லாமே மிக எளிதான வாழ்க்கை சித்திரங்களாகவே அமைகின்றன. தனிமையில் இருக்கும் முதியவரின் இறந்து போன மனைவியின் கலைச்சேகரிப்பை இளம்நண்பன் சீரமைத்துக் கொடுக்கிறான். அதுவரை அதைத்தான் செய்யாமல் இருந்ததை அவர் உணர்கிறார். அவருக்குள்ளும் அந்த நினைவுகள் சீரடைகின்றன என்று எடுத்துக் கொள்ளலாம்,
இக்கதைகளில் மொழி அல்லது கூறுமுறை சார்ந்து குறைபாடுகள் எதுவும் அதிகமாக இல்லை. ஷாநவாஸ் கதையின் விதிகளைப் பயிலவேண்டிய அவசியம் இல்லை. மொழியும் கைவந்துள்ளது. ஆனால் வாழ்க்கைச் சித்திரம் எப்படி கலையாகிறது என்ற ஒரு மர்மத்தை நோக்கி அவர் கவனம் திசை திரும்பும் என்றால், இப்போது எழுதியிருக்கும் எளிய வாழ்க்கைச் சித்திரங்கள் இலக்கியத்துக்கு போதாது என்ற தன்னுணர்வை அவர் அடைவாரென்றால், வலுவான கதைகளை அவரால் எழுத முடியும். இன்றைய கதை என்பது கவித்துவத்தை கைப்பற்றும்போதே முழுமையடைகிறது. இந்த விமர்சனத்தில் அவருக்கு அதையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இரு உதாரணங்களை சுட்டலாம். ஒன்று பேசாமொழி. தன் மகனுக்கு முறைப்பெண்ணை திருமணம் செய்து வைப்பதற்காக சிங்கப்பூருக்கு வரும் ஊமைப்பள்ளிக்கூட ஆசிரியை பக்கத்து குடியிருப்பில் இருக்கும் பேசமுடியாத சீனப்பெண்ணுடன் சைகை மொழியால் உறவாடுகிறார். மகனுடன் பேசியும் புரிந்து கொள்ள முடியாதவள் ஊமைப்பெண்ணின் கையசைவுகளை புரிந்து கொள்கிறாள். மகனுடைய பேசாத மொழியை அவள் கண்டு கொள்கிறாள்.
இந்த கதையின் அமைப்பு ஒரு சிறுகதைக்கு மிகப்பிழையானது. எடுத்த எடுப்பிலேயே அந்தக் கதை மகனை ஒரு திருமணத்துக்கு வலியுறுத்தும்பொருட்டு அன்னை வருவதாக ஆரம்பிக்கிறது. அந்தப்பிரச்னை பேசப்பட்ட பிறகு தனியாக சீனப் பெண் அறிமுகமாகிறாள். அதன் பிறகு சீனப்பெண்ணுக்கும் அவளுக்குமான உறவை நோக்கி கதை செல்கிறது. அந்த உறவு முடிந்த பிறகு மீண்டும் மகனுடனான உறவுக்கு வந்து மகனைப்பற்றி தன் மகளுக்கு ஒரு கடிதத்தை அந்த ஆசிரியை எழுதும்போது முடிகிறது.
இக்கதையின் மையமென்பது அந்த சைகை மொழி மட்டுமே. ஆகவே அந்த சைகை மொழியில் தான் இயல்பாக அந்தக் கதை ஆரம்பிக்க முடியும். சினிமா என்றால்கூட முதல் ஷாட்டே அதுதான். வாசகனின் முழுக்கவனத்தையும் அந்த சைகை மொழியை நோக்கியே கொண்டு செல்லவேண்டும். அந்தச் சைகை மொழியின் அழகையும் உயிர்ப்பையும் காட்டவேண்டும். உண்மையில் மொத்த வெளியுலகையும் சைகைமொழி எப்படி குறியீடுகளாக மாற்றியிருக்கிறது என்பது எழுத்தாளனுக்கு மிக முக்கியமான ஒரு அழகியல் வாய்ப்பு அல்லவா. ஒரு சிறுகதையாளன் அதை தவரவிடமாட்டான்.
உதாரணமாக திருமணம் ஒரு மோதிரத்தை கழற்றுவது போல எப்படி ஆகிறது? ஆசிரியை என்பது எப்படி ஒரு புத்தகமாக மாறுகிறது? இவ்வாறு சைகைமொழி வழியாக மொத்த உலகும் குறியீடுகளாக மாறும்போது வார்த்தைகளின் உலகம் எந்த அளவுக்கு பின்னுக்கு செல்கிறது! அதுதான் இந்தக்கதையில் எழுத்தாளனின் கற்பனையைச் சிறகடிக்க வைக்கும் ஒன்றாக இருக்கும். ஷாநவாஸ் அந்த சாத்தியத்தை மட்டும் கண்டடைந்திருந்தார் என்றால் இக்கதையில் பல பக்கங்களுக்கு வந்திருக்கும் திருமணப்பிரச்னை, அம்மா மகன் பிரச்னை எதையுமே கதைக்குள் அனுமதித்திருக்க மாட்டார்.
பல ஆண்டுகளுக்கு முன் எனது உதவியாளர் ஒரு சர்வதேச போட்டிக்காக ரோமாபுரிக்கு சென்றார். அவர் வாய்பேச முடியாதவர். செவி கேளாதவர். உலகெங்கும் அவருக்கு மொழிப்பிரச்னை இருக்கவில்லை. மொழி உலகத்தை பிரிக்கும் போது மொழியின்மை உலகத்தை இணைக்கும் ஆச்சரியத்தை அன்று கண்டுகொண்டேன். அத்தகைய நுணுக்கமான தருணங்களில் தான் கதை இருக்கிறதே ஒழிய அதை இழுத்துக் கொண்டு வந்து ஒரு அன்றாட வாழ்க்கையின் பிரச்னைக்கு ஒரு எளிய தீர்வாக முன்வைப்பதில் அல்ல.
ரேமண்ட் கார்வரின் கதீட்ரல் என்ற கதையில் கண் தெரியாத ஒருவர் கதீட்ரலை பார்க்கும்படி செய்யும் ஒரு தருணம் வருகிறது. அவர் கையைப் பிடித்து ஓவியர் ஒரு கதீட்ரலை வரைகிறார். இருவரும் புதிதாக ஒரு கதீட்ரலை கண்டுகொள்கிறார்கள். இப்படிச் சொல்லலாம், அன்றாட வாழ்க்கையில் அன்றாடத்தன்மையாலேயே மறைக்கப்பட்டிருக்கும் விஷயங்களில் அந்த அன்றாடத்தன்மையை விலக்கிக்காட்டுவதில் தான் கலை இருக்கிறதே ஒழிய ஏதாவது ஒரு கருத்தைக் கொண்டு வந்து அன்றாட வாழ்க்கையில் பொருத்தி பார்ப்பதில் அல்ல.
இன்னொரு கதை தோடம்பழம். குறியீட்டு ரீதியாக சிங்கப்பூரின் வாழ்க்கை சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த கதை சொல்லப்பட்டிருக்கும் விதம் மிக சம்பிரதாயமான ஒன்றாக இருக்கிறது. ’அந்த வீட்டில் காட்டு அருநெல்லி மரம் ஒன்று இருக்கிறதே, அதன் வேர்கள் எந்த மரத்தையும் வளரவிடாமல் வேரறுத்துவிடும் அருநெல்லி மரத்தை வெட்டினாலும் அதில் புதைந்திருக்கும் அதன் வேர்கள் நம்மை தோட்டம் அமைக்க விடாது’ என்பது தான் இந்தக் கதையின் மைய வரி அது அளிக்கும் குறியீட்டு சாத்தியங்கள்தான் கதை
ஆகவே அதைக் கவனி என்றுதான் அந்தக் கதாசிரியன் சொல்ல ஆரம்பிக்கவேண்டும். அந்த அருநெல்லி மரம் வாசகனின் மனதில் பலவகையாக வளர்ந்து கொள்ள அவன் அனுமதிப்பான். சிறுவயதிலேயே எனக்கு தோட்டமளிக்க ஆர்வமுண்டு என்று இந்தக் கதை ஆரம்பிக்கும்போதே அதற்கான வாய்ப்பு பறிக்கப்பட்டுவிடுகிறது. [அல்லது அந்த அருநெல்லிமரம் சட்டென்று கதைக்குள் புகவேண்டுமென ஆசிரியன் எண்ணியிருக்கவேண்டும். அப்படியென்றால் அதன் அமைப்பே வேறு] அந்த மரம் ஓரு படிமமாக எதைச் சுட்டுகிறது என்பது குறிப்பாக உணர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால் அது அருநெல்லி மரத்தைச் சார்ந்து மேலும் வளரவேண்டும்.
ஷாநவாசின் இத்தொகுதியில் பல கதைகள் சிறுகதைக்கான வாய்ப்பு கொண்டவை. ஆனால் வாய்ப்பு ஆசிரியரால் கண்டடையப்படவில்லை. சிறுகதையைக் குறித்த தொடர்விவாதமும், அவ்விவாதங்கள் வழியாக உருவாகும் சாத்தியங்களைக் குறித்த பிரக்ஞையின்மையும் தான் இதற்கு காரணம் என்று தோன்றுகிறது. இன்னொரு உதாரணமாக, மனைவியின் கலைப்பொருட்களை கலைத்து குவியலாக தன் வீட்டில் வைத்திருக்கும் முதியவரின் கதையில் அந்தக் கலைப்பொருட்கள் எவை என்ற ஒரு சித்திரத்தை ஆசிரியர் அளித்திருந்தால் அந்த மனைவி நமக்கு மிக அருகில் வந்திருப்பார்.
உதாரணமாக அவள் வைத்திருந்தவை அராபிய குத்துவாள்கள் என்றால் அக்கதை என்னவாக இருக்கும்? ஆப்ரிக்க அன்னைதெய்வங்கள் என்றால் என்னவாக இருக்கும்? அவள் அடுக்கி வைத்திருந்த முறைக்கு முற்றிலும் மாறாக அவன் அடுக்கி வைத்திருப்பதாக அந்தக் கதை முடிந்திருந்தால் அது வேறொரு கதையாக அமைந்திருக்கும்.
அனைத்திற்கும் மாறாக மறைந்து போன ஒரு முதிய பெண்ணின் கலைச்சேகரிப்பை ஒர் இளைஞன் எப்படி அணுகுகிறான், அவன் அதை எப்படி மாற்றுகிறான் என்பது ஒரு எழுத்தாளனின் கற்பனையை சிறகுவிரிக்க வைத்திருக்கவேண்டாமா? அதில் உள்ளோடும் உளவியல் ஆடல் சற்றேனும் வெளிப்பட்டிருந்தால் இது சர்வதேசத் தரம் கொண்ட ஒரு சிறுகதையாக இருந்திருக்கும்.
ஷாநவாஸின் இத்தொகுப்பை தவறவிடப்பட்ட அற்புதமான சாத்தியங்களின் தொகை என்றே சொல்வேன். கதைக்கான கருக்களை தெரிவுசெய்வதில் கலைஞனின் கண்களை வெளிப்படுத்தும் ஷாநவாஸ் அவற்றை கலையாக்கும்போது தோற்பதற்குக் காரணம் எந்த நரம்புமுடிச்சில் கதாசிரியனின் கை சென்று தொடவேண்டும் என அறிந்திருக்காததுதான். மொண்ணையான பாராட்டுரைகள், வாழ்த்துரைகளுக்குப் பதிலாக கூரிய விமர்சனங்களை அவர் எதிர்கொண்டிருந்தார் என்றால் மிக எளிதில் அந்த தடையை அவர் கடந்திருப்பார்.
[மூன்றாவது கை – (சிறுகதைகள்)
ஷாநவாஸ்
வெளியீடு : தமிழ்வனம்]
சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் செல்நெறிகள்
சூர்யரத்னா கதைகள் நூர்ஜகான் கதைகள்
பெண் எழுத்தாளருகளின் ஆக்கங்கள் பற்றி
சிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 1
சிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 2
ந.பழனி வேலு பற்றிய கட்டுரை
சிங்கை இளங்கண்ணன் பற்றிய கட்டுரை
பொன் சுந்தரராசு பற்றிய கட்டுரை
மலர்விழி இளங்கோவன்கட்டுரை
சிங்கப்பூர் விமர்சனம் அறிவுரைகள்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
சிங்கப்பூர் -கடிதங்கள் 5
வணக்கம்.
ஒரு படைப்பு பொதுவெளிக்குள் வரும்போது விமர்சனங்கள் வருவது இயல்புதான். அதுவும் நேர்மையான.. நியாயமான விமர்சனங்கள் நம்மை வளர்த்துக் கொள்ள ஏதுவாக உள்ளவை.
ஆனால் இந்த சூழல்களுக்குள் அறிமுகமேபடாமல் புகழ்ச்சி என்ற பொய்யுலகில் இருப்பது இலக்கியம் என்றில்லாதவரை யாருக்கு என்ன பிரச்சனை..? ஆனால் தாங்கள் சொல்வதுபோல இது நல்லிலக்கியங்களை மூடிவிடும் அபாயம் கொண்டுள்ளது.
யாருமே ஊதாத சங்கை நீங்கள் துணிச்சலாக எடுத்து ஊதுகிறீர்கள்.. வாழ்த்துகள். (இதில் ஒரு விஷயம்.. தங்களுக்கு அந்த எழுத்தாளர் மீது காழ்ப்புணர்வாம்.. இப்படி ஒரு பின்னுாட்டம்.. இதற்கு மேல் ஒரு நகைச்சுவை உண்டா இவ்வுலகில்..?)
அன்புடன்
கலைச்செல்வி.
***
அன்புள்ள ஜெ
சிங்கை இலக்கிய போக்குகள் குறித்து தாங்கள் எழுதிய கட்டுரைகள் எவ்வாறு எதிர்கொள்ளப்படுகின்றன என கவனித்து வருகிறேன் .நமது அறிவு ஜீவிகள் திறனாய்வு கட்டுரைகளை முதல் தகவல் அறிக்கை வாயிலாக எதிர்கொள்வதை குறித்து என்ன எண்ணுகிறார்கள்? கூட்டு கண்டன அறிக்கை ஏதும் தயாராகி கொண்டு இருக்கிறதா? யாராவது விருதுகளை திருப்பிக் கொடுப்பார்களா? ஓடி வந்து, பறிபோகும், கருத்து சுதந்திரத்தை காப்பார்களா? எனக்கு தெரியவில்லை? இணையத்தில் பல போராளிகளும் பிரம்படியின் மகிமைகளை குறித்து களிப்புடன் சர்சை செய்து கொண்டு இருந்தனர் .அவர்களை சிங்கை அரசு ஏமாற்றி விட்டது .எல்லாம் ஆரிய ஹிந்துத்துவா சதிதான் .
நன்றி
அனீஷ் க்ருஷ்ணன்
***
அன்புள்ள ஐயா திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். உங்களின் சிங்கப்பூர் கடிதங்களுக்கான மறுவினையினைப் படித்தேன்.
“நல்லுபதேசங்களுக்கு நன்றி. ஆனால் நான் செய்வதென்ன என்பது எனக்குத் தெரியும். அதன் விளைவுகள் என்னவென்றும் அறிவேன். இத்தனை ஆண்டுகளாக இலக்கியம் எழுதி வாசித்து விமர்சிப்பதனால் சுயபுத்தி என்பதும் கொஞ்சம் இருக்கிறது. தயவுசெய்து அதையும் கொஞ்சம் நம்புங்கள்”
கடைசி வரி தேவை இல்லை. இல்லாவிட்டால் ‘ஏலி ஏலி லாமா சபக்தானி’ வரை செல்ல வேண்டிஇருக்கும். முடிந்த வரை இந்த ஞானப் பழங்களை மன்னித்து விட்டு உங்கள் எழுத்தை தொடருங்கள். அடுத்த வெண்முரசு அத்தியாயத்தை விரைவில் எதிர்பார்க்கிறோம். (பன்மை உண்மையில் ஒரு இதுக்காக மட்டுமே).
வாசகன்?
தயானந்த்
***
அன்புள்ள ஜெ.மோ,
உங்களுடைய சூர்யரத்னா விமர்சனத்தையும் அதற்கு அவரின் எதிர்வினையையும் வாசித்தேன். ஒரு வளரும் எழுத்தாளரை ஊக்குவிக்காமல் நசுக்கிவிட்டீர்களோ என்று எண்ணினேன் அவருடைய இந்த http://malaigal.com/?p=9023 ”விதையில்லாமல் வேரி(றி)ல்லை” என்ற சிறுகதையைப் படிக்கும்வரை. Soft porn படிப்பது போலுள்ளது. பாலியல் உறவு மீறல்களை எழுத்தாள ஜாம்பவான்கள் எப்படிக் கையாண்டிறுக்கிறார்கள் என்று இவர் படித்திருக்கிறாரா என்பதே சந்தேகம்தான். நடை, நீங்கள் சொன்னதுபோல, எழுதப்பட்ட பேச்சுதான். அதையும் ரசித்து வரும் பின்னூட்டங்கள் அவருக்கு மேலும் இவை போல எழுதத்தூண்டுகின்றன என நினைகிறேன்.
-முருகன் கண்ணன்
***
அன்புள்ள ஜெமோ
மாலன் முகநூலில் எம்பிக்குதிப்பதை நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன். அவருக்கு நீங்கள் எழுதுவது உண்மையிலேயே புரியவில்லையா, இல்லை சும்மா கால்பிடித்து காசுபார்க்க முயல்கிறாரா என்றே சந்தேகமாக இருக்கிறது. சிங்கப்பூர் இலக்கியத்தை இங்கிருக்கும் இலக்கியத்தில் இருந்து பிரித்து அங்குள்ள சமூகச் சூழலில் வைத்துப் பார்ப்பதற்கும் , அந்த மண்ணுக்குரிய அழகியல் என்ன என்று காண்பதற்கும் நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். பக்கம் பக்கமாக அதை எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். அங்குள்ள முன்னோடிகளை முன்னிறுத்துகிறீர்கள். இந்த ஆசாமி ‘அங்குள்ள அழகியலே வேறு’ என பிலாக்கணம் வைக்கிறார். இந்தமாதிரி ஆசாமிகள்தான் தமிழிலக்கியத்தின் கௌரவத்தையே சீரழித்துவருகிறார்கள்
சாரங்கன்
***
அன்புள்ள சாரங்கன்,
மாலன் நவீனத்தமிழிலக்கியத்தைச் சேர்ந்தவர் அல்ல. அவர் இதழாளர். பல்லாண்டுக்காலமாக அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா அடிக்கும் பிழைப்புவாதி. அவர் குரல் எப்போதும் அப்படித்தான் ஒலிக்கும். அங்கே அவருக்கு கிடைக்கப்போகும் சில்லறைக்காகப் பேசுகிறார்.
நவீனத்தமிழிலக்கியத்தின் குரலாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவர்கள் இங்கே ஏதாவது உருப்படியாக எழுதியவர்கள். இங்குள்ள வாசகர்களால் கருத்தில்கொள்ளப்பட வேண்டியவர்கள்.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
கேதார்நாத் பயணம்
சிங்கப்பூரில் இருக்கும்போதே தோன்றியது, கேதாநாத் செல்லவேண்டும் என. அடுத்த வெண்முரசு நாவலுக்குரிய மனநிலைக்காக. அது சிவனிடமிருந்து பார்த்தன் பாசுபதம் வாங்கிய நிகழ்வில் சென்று முடியும் நாவல். பெயர் மட்டுமே இன்று மனதில் உள்ளது ‘கிராதம்’
கிராதார்ஜூனியம் என ஒரு குறுங்காவியம் சம்ஸ்கிருதத்தில் புகழ்பெற்றது. கிராதம் கதகளியில் முக்கியமான ஒன்று. காட்டுமிராண்டிவேதம் நோக்கிய ஒரு பயணம். ஆனால் இந்தமுறை சைதன்யா வரவேண்டுமென விரும்பியமையால் முதல்முறையாக விதிகளைத் தளர்த்தி பெண்களைச் சேர்த்திருக்கிறோம். இனிமேல் விதி விதியேதான்
இன்றுகாலை 7 மணிக்கு விமானத்தில் சண்டிகர் கிளம்புகிறோம். வழக்கம்போல ராக்கெட் ராஜா ஏற்பாடு.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
October 5, 2016
எழுந்துவரும் படைப்புக்குரல்
சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர்கள், சிங்கப்பூருக்கு குடியேறியவர்கள் என்னும் இருசாராரையும் ஒப்பிடும்போது மொழி சார்ந்த சில அவதானிப்புகள் ஏற்படுகின்றன. சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர்களுக்கு மொழிசார்ந்த ஒரு முக்கியமான சிக்கல் இருக்கிறது. அவர்கள் தமிழ் மொழியை பள்ளியில் ஓரளவு கற்றுக் கொள்கிறார்கள். வீட்டில் மட்டும் தமிழ் பேசுகிறார்கள். அவர்கள் புழங்கும் சூழலில் தமிழ் இல்லை. அத்துடன் அவர்களிடம் இருக்கும் ஆங்கிலமும் சிங்கப்பூருக்கே உரிய ஒருவகையான சமரச ஆங்கிலம். அதாவது சீனர், மலாயர் அனைவருக்கும் எளிய முறையில் புரியும் ஓர் நடைமுறை ஆங்கிலம் அது.
பொதுவாக ஆங்கிலத்தில் அவர்கள் சிந்தனைகளையோ கோட்பாடுகளையோ பேசுவதில்லை. ஆகவே உடைந்த சொற்றொடர்களும் பொத்தாம்பொதுவான சொற்களும் கொண்ட ஒரு மொழியாகவே ஆங்கிலம் அவர்களிடமிருக்கிறது. ஆகவே தமிழிலும் ஆங்கிலத்திலும் சிந்தனைகளைச் சொல்ல அவர்களால் முடிவதில்லை. உண்மையில் ஒருவர் ஆங்கிலத்தில் சரளமாகச் சிந்தித்து கொஞ்சம் கஷ்டப்பட்டு தமிழில் எழுதினால்கூட அது நல்ல மொழியாகவே அமையும். ஏனென்றால் மொழி என்பது சிந்தனைதானே ஒழிய சொற்கள் அல்ல. உதாரணம் சித்துராஜ் பொன்ராஜ். தமிழ் அதிகம் அறியாதவர். ஆனால் ஆங்கிலத்தில் நிறையபடிப்பவர் என்பதனாலேயே அவரது தமிழ்நடை நவீனமானதாக உள்ளது.
பிறர் எந்த மொழியிலும் சிந்திக்கத் திறனற்றவர்கள். ஆகவேதான் நடையில் அத்தனை சிக்கல் அல்லது முதிர்ச்சியின்மை. இந்த அம்சத்தைச் சிங்கப்பூர் மாணவர்களிடம் கண்டேன். சிங்கப்பூர் நெடுங்காலமாக கலை இலக்கியத்திற்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காத நாடாக இருந்தது. 90களுக்குப் பிறகு கலை இலக்கியங்களை நோக்கி அவர்களுடைய கவனம் குவிந்தது. ஆகவே முதிரா மொழிநடை என்பது அங்கு இலக்கியத்தில் மட்டும் அல்ல சாதாரணக் கருத்துவெளிப்பாட்டிலேயே காணக்கிடைக்கிறது.
சிங்கப்பூரின் ஆரம்ப கட்ட எழுத்தாளர்களான ந.ப்ழனிவேலு, இளங்கண்ணன், கண்ணபிரான், புதுமைதாசன் போன்றவர்கள் அவர்களுடைய இளமைப்பருவத்தை ஒருங்கிணைந்த மலேசியாவில் கழித்தவர்கள். அன்று தமிழ்க் கல்வி சிறப்பாகவே இருந்திருக்கிறது என்று அவர்களுடைய தமிழ்ப் பயிற்சியிலிருந்து தெரிகிறது. மேலும் தமிழ் உணர்வை வலியுறுத்திய அக்கால அரசியல் இயக்கங்களும் தமிழகத்தில் இருந்து தமிழ் மீதான பற்றையும் பயிற்சியையும் இங்கு இறக்குமதி செய்தன. ஆரம்பகால சிங்கப்பூர்ப் படைப்பாளிகள் பலபேர் தனித்தமிழ் இயக்கத்தில் ஆர்வம் கொண்டவர்களாகவும் தூய தமிழைக் கையாளத் தெரிந்தவர்களாகவும் இருப்பதை பார்க்கிறோம். தொழில்நுட்பக்கல்வியின் வளர்ச்சியினால் அந்தத் தமிழ்ப் பயிற்சியானது தொடர்ந்த தலைமுறைகளில் இல்லாமல் ஆனது.
இந்தியாவில் இருந்து நிரந்தரக் குடியுரிமை பெற்று இங்கு வந்து தமிழகத்தில் கல்வி கற்றவர்கள். எங்கும் தமிழ் புழங்கும் சூழலில் பிறந்து வளர்ந்தவர்கள். இவர்கள் சரளமான மொழியை எளிதில் அசையமுடிகிறது.உதாரணமாக சிங்கப்பூர்த் தமிழிலக்கியத்தின் தொடக்கப்புள்ளி என்று நான் நினைக்கும் நா.கோவிந்தசாமியைவிட தமிழகத்தில் இருந்து இங்கு குடியேறி முதிராத எழுத்துக்களை எழுதுபவர்கள் இன்னும் மேலான மொழித்திறன் கொண்டிருக்கிறார்கள். அதை சிங்கப்பூர் மொழிவளர்ச்சியாகக் கொள்ள ஒரு விமர்சகனாக நான் மறுக்கிறேன். ஆகவே மொழிநடையின் சரளத்தை புறமொதுக்கியே இந்த மதிப்பீடுகளைச் செய்கிறேன்.
*
மாதங்கி தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்குக் குடியேறியவர். திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து திருச்சியில் கல்வி முடித்து பெங்களூரில் வங்கியில் பணி புரிந்தபின் இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார். மாதங்கியின் சிறுகதைத் தொகுதிகளைப் படிக்கும்போது தமிழகத்தில் இருந்து எழுதும் ஓர் எழுத்தாளரைப் படிக்கும் உணர்வுதான் பெரிதும் ஏற்படுகிறது.மேலோட்டமான ஒரு சிங்கப்பூர் சூழல்சித்தரிப்பு மட்டுமே இவற்றை சிங்கப்பூர்க்கதைகளாக எண்ணவைக்கிறது
இக்கதைகள் தமிழகத்தில் தொடர்ந்து புனைகதைகளை படித்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு உரிய வகையில் அடிப்படையான வடிவத்தேர்ச்சியும் இயல்பான மொழிநடையும் கொண்டுள்ளன. ஆகவே சரளமான வாசிப்புத்தன்மையை அளிக்கக்கூடியவையாக அனைத்து கதைகளுமே உள்ளன. இயல்பாக தமிழகத்திலோ இலங்கையிலோ இந்தியாவிலோ சிங்கப்பூரிலோ உள்ள எந்த ஒரு இதழிலும் பிரசுரமாகக்கூடியவை இந்தக்கதைகள்.
மாதங்கியின் இந்த தொகுப்புகளைப் படிக்கும்போது அவரிடம் இருவகையான பாதிப்பு இருப்பதை பார்க்க முடிகிறது. ஒன்று தமிழகத்தின் புகழ் பெற்ற வணிக எழுத்தாளர்களாகிய சுஜாதா மற்றும் வாசந்தி சிவசங்கரி முதலியவர்களின் நேரடிச்செல்வாக்கு. இரண்டு தொடர்ச்சியாக அவர் வாசிப்பில் வந்தடைந்த அசோகமித்திரனை முன்மாதிரியாகக் கொண்ட எழுத்துமுறையின் பாதிப்பு. இந்தப்பயணத்தில் இருப்பவராக நான் மாதங்கியை மதிப்பிடுகிறேன்
மாதங்கி சிறுகதையின் பொது வடிவத்தை பெரும்பாலான கதைகளில் இயல்பாகவே வந்தடைந்திருக்கிறார். நேரடியான தொடக்கமும், புறவயமான சித்தரிப்பும், இயல்பான மொழி நடையும் முதிர்வும் கொண்ட கதைகளாகவே பெரும்பாலான படைப்புகள் உள்ளன. மெல்பகுலாசோ என்னும் தலைப்புக்கதை தமிழில் பெண் எழுத்து தொடங்கிய நாள் முதலே பலகோணங்களில் எழுதப்படும் ஒரு கதைதான். இருபெண்களில் ஒருத்தி இன்னொருத்தியை தேடிச் செல்வது. அனேகமாக அவர்கள் கல்லூரித்தோழிகள். தேடிச்செல்லப்படுபவள் வாழ்க்கையில் சரிந்துவிட்டிருப்பாள். அத்துயரை தொட்டுக் காட்டி கதை முடியும்.
இது இந்தியாவின் பெண்களின் இயல்பான வாழ்க்கைத் துளிகளில் ஒன்று. ஏனெனில் கல்லூரி வாழ்க்கை என்பது இந்தியப்பெண்ணின் பொற்காலங்களில் ஒன்று. குடும்பப் பொறுப்போ பிற அழுத்தங்களோ இல்லாமல் வாழ்க்கையை அவர்கள் கொண்டாடும் சில வருடங்கள் அவை. அதன் பிறகு குடும்பப் பொறுப்பு, திருமண உறவு, குழந்தைகள் என்று வாழ்க்கை வளர்ந்து நீளும் போக்கில் வென்றவர்களும் தோற்றவர்களும் என்ற ஒரு பிரிவு உருவாகிறது. அனைத்துத் தகுதிகளும் இருந்தும் தோற்றவர்கள் எப்போதும் இருக்கிறார்கள். ஒளிமிக்க ஒர் இறந்தகாலத்தை மட்டும் நெஞ்சில் ஏந்திக் கொண்டு நிகழ் காலத்தை நீந்திக் கடப்பவர்கள்.
அந்தக்கால அநுத்தமா முதல் அனைவருமே இந்தக்கதையை எழுதியிருக்கிறார்கள்.இந்தக் கதைகள் நேரடியாகவே வாசகிகளின் சொந்த அனுபவத்தை தொடுபவை என்பதனால் ஆம் எனக்கும் இப்படி ஒரு தோழி இருந்தாள் என்று அவர்களை சொல்ல வைப்பதனால் எப்போதும் இது கவனத்தை ஈர்க்கின்றன. விரும்பப்படுகின்றன. ஆனால் இவை மிகப்பொதுவான அனுபவம் என்பதனாலேயே அவற்றில் சிறுகதைக்கு இருக்க வேண்டிய அபூர்வத்தன்மை அற்றுப்போகிறது. இலக்கியத்தின் அழகுகளை அமைக்கும் முதல் விதி பிறிதொன்றிலாமை என்பதே.
மெல்பஹுலாசாவைச் சென்று காணும் கதைசொல்லிப் பெண்மணி தன் தோழியின் வாழ்க்கையின் சரிவை கண்டு துயருறுவதுடன் நிற்கும் இந்தக் கதை மேலதிகமாக எதையாவது ஒன்றை கண்டடைந்திருந்தால், சொல்வதற்கு இன்னும் ஒரு படி அதிகமான ஏதோ ஒன்று இருந்திருந்தால் மட்டுமே இலக்கியப்படைப்பு என்று ஆகியிருக்க முடியும். இப்போது இது ஒரு வகையான வாழ்க்கைச் சித்திரமாகவே நின்றுவிடுகிறது.
ஆரம்பகட்டக் கதைகளுக்குரிய மெல்லிய ஜோடனைத்தன்மை கொண்ட கதைகளாகவே மெல்பகுலாசா தொகுதியின் பல கதைகள் உள்ளன. உதாரணமாக, முப்பத்தெட்டு நாட்களில் வரையப்பட்ட ஒரு சிவப்பு புள்ளி மிக எளிமையான ஒரு தேசபக்திக்கதை. தென் துருவத்திற்குப் போகும் ஒரு பெண்மணி தன் குடும்பத்தையே நினைத்துக் கொண்டிருக்கிறாள். திரும்பி வரும்போது தன் கணவனிடமும் குழந்தைகளிடமும் சொல்லவேண்டியவற்றை எண்ணி மனப்பாடம் செய்கிறாள். ஆனால் அங்கு சென்றதனாலேயே ஒரு சிங்கப்பூர் குடிமகளாக மாறி ‘’வெள்ளைப்பனியில் சிவப்புப் புள்ளியாக சிங்கப்பூர் கொடியை நாட்டினேன் என்ற ஒரு வாக்கியத்தை மட்டும் சொல்கிறாள். அதாவது குடும்ப்பப்பெண் என்னும் ‘கீழ்நிலை’யில் இருந்து சிங்க்ப்பூர் ‘குடிமகள்’ என்னும் மேல்நிலையை அடைகிறாள்.
இத்தகைய கதைகள் எப்போதும் ஒரு பொது உண்மை அல்லது பொது புரிதல் சார்ந்து எழக்கூடியவை. உண்மையிலேயே ஒரு பெண் இப்படி சொல்லியிருக்கக்கூடும் என்றாலும் இலக்கியம் அதற்கு மேல் என்ன என்ற கேள்வியைத்தான் எப்போதும் கேட்கும். அன்றாட மனநிலைகள், ஏற்கனவே கூறப்பட்ட மனநிலைகள் இலக்கியத்திற்கு முக்கியம் அல்ல. அதைவிட இன்னொரு தளத்தில் முன்வைக்கப்பட்ட விடைகளை இலக்கியம் திரும்பச்சொல்லும்போது அது வெளிறிவிடுகிறது. அரசியல், தத்துவம், மதம் எதற்கும் இலக்கியம் பிரச்சாரவாகனம் ஆகமுடியாது.
ஒருவேளை இக்கதை இந்த தேச பக்தியை நோக்கிச் செல்லாமல் குடும்பத்திலிருந்து கிளம்பும் ஒரு பெண் பூமியை தன் குடும்பமாக கண்டடைவதாக சென்று முடிந்திருந்தால் அதன் தளமே வேறு. ஒரு இல்லத்தரசி பென்குயினைப்போல ஒரு எளிய உயிர்மட்டுமாக தன்னை உணர்ந்து கொண்டிருந்தால் அது ஒரு மேலும் பெரிய தரிசனத்தை முன் வைக்கிறது. அப்போது கூட அந்த தரிசனம் படைப்பில் வாசகன் கண்டடைவதாக இருக்க வேண்டுமே ஒழிய ஆசிரியரால் சொல்லப்படுவதாக இருக்கக்கூடாது.
இரு கதைகள் ஆர்வமூட்டும் கதைக்கருக்கள் கொண்டவை. தாதி சிங்கப்பூருக்கு இருக்கும் பணிப்பெண் பிரச்னையில் இருந்து உருவானது. [பணிப்பெண் பிரச்சினைபற்றி எழுதாத சிங்கப்பூர் பெண்கள் எவரேனும் இருக்கிறார்களா என வியக்கிறேன்] பணிப்பெண்களாக எந்திரங்களை அமர்த்திக் கொள்ளும் ஒரு காலகட்டத்தைக் காட்டும் இக்கதை எந்திரங்களிலும் மனிதத்தை தேடும் குழந்தையை சித்தரித்து முடிகிறது. சிறுகதை என்ற அளவில் சரியான வடிவமும் மொழியொழுக்கும் கொண்டது. ஆனால் இந்தக்கரு வெவ்வேறு வகையில் வணிக எழுத்திலேயே கையாளப்பட்ட ஒன்று. அந்த சாதாரணத்தன்மையே இக்கதையின் குறை
மேலதிகமாக ஒன்று நிகழ்ந்திருக்கலாம். அந்த இயந்திரம் என்பது அளிக்கும் குறியீட்டுச்சாத்தியங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கலாம். தாதியின் பணி இயந்திரத்தால் செய்யப்படும்போது மேம்படுவதும் சில இருக்கலாம் அல்லவா? இப்படி யோசிக்கிறேன். குழந்தை அன்னையைத்தேடுகிறது. ஆனால் அன்னையில் ஓர் இயந்திரத்தை அது தேடுகிறது என்றால் என்ன ஆகும்? மானுடத்தின் ஒரு பரிணாமத்தில் இயந்திர அம்சம் இல்லாத அன்னையைக்கூட ஏற்க முடியவில்லை என்றால்? எத்தனையோ கோணங்கள் விரிகின்றன. எளிமையாக ‘என்ன இருந்தாலும் அம்மா போல வருமா?’ என்பதல்ல நவீனச்சிறுகதை. அதில் பொதுப்புத்திப்புரிதல்களைச் சீண்டும், கடக்கும் ஓர் அம்சம் எப்போதும் இருந்தாகவேண்டும்.
வங்காள தேசத்தில் இருந்து கண்டெய்னர் லாரியில் சிங்கப்பூருக்கு ஒளிந்து உள்ளே வரும் உடலுழைப்புத் தொழிலாளர் சித்திரத்தை அளிக்கிறது நீர். சிட்டகாங் துறைமுகத்தில் கண்டெய்னரில் ஏற்றப்பட்ட உயிர் ஒன்று அங்கிருந்து சிங்கப்பூர் வருவதற்கு பதிலாக சிங்கப்பூர் வழியாக வியட்நாம் செல்கிறது. நேரக்கணிப்பில் ஏற்பட்ட பிழை காரணமாக உள்ளே உருகி மூச்சடைத்து அது இறப்பது ஒரு கதை. அந்த ஆத்மாவின் பரிதவிப்பு, வெளியே நின்று தவிக்கும் அதன் நுண்வடிவம் வழியாகச் சொல்லப்படும் இக்கதை புதியகோணத்தில் நன்றாகவே உள்ளது.
இவ்விரு கதைகளுமே சிங்கப்பூர்ச் சூழலில் புதிய கதைகளுக்கான சாத்தியக்கூறுகளை காட்டுபவை. எழுதப்பட்டுள்ள விதத்தால் சற்று மிகையுணர்ச்சி வெளிப்படுகிறது. கதை அமைப்பில் ஆசிரியையின் கைகள் வெளித்தெரிகின்றன. இருப்பினும் இவற்றை குறிப்பிடத்தகுந்த முயற்சியே என்றே சொல்வேன்.
மாதங்கியின் ஒரு கோடி டாலர்கள் தொகுதியில் அவரது அடுத்தகட்ட வளர்ச்சியைக்காட்டும் படைப்புகள் உள்ளன. சாதாரணாமான அன்றாடக் கருத்தை சற்று மாறுபட்ட ஒரு வடிவம் வழியாகச் சொல்லும் தோழன் குறும்படமும் ஒரு பின்குறிப்பும் முந்தைய பயிற்சிக்காலகட்ட கதை போன்றிருக்கிறது. சொல்ல வரும் கருத்தை உறுத்தும்படியாக மேலோட்டமாகவே இறுதியில் சொல்லும் கதை அது. மார்ஃபி விதி என்னும் கதையும் அந்தப் பயிற்சி காலகட்டத்திலிருந்து ஒரு முதிர்ந்த கதைவடிவிற்கு வருவதற்கான ஒரு எத்தனமாகவே நின்றுவிட்டிருக்கிறது.
அறிவார்ந்த ஒரு பெண்ணை உதறிவிட்டு ஊருக்குச் சென்று படிக்காத பெண்ணை திருமணம் செய்துகொண்டு வரும் ஒருவனின் வழக்கமான கதை அது.மார்ஃபி விதி என்ற அம்சத்தை உள்ளே கொண்டு வந்தால் மட்டுமே எளிமையான ஒரு வம்புக்கதை என்ற தளத்திலிருந்து அது மேலெழுகிறது. அந்த எளிமையான கிராமத்துப்பெண் மார்ஃபி விதி ஒன்றை தன்னை அறியாமலே சொல்லிவிடும்போது அதுவரை சொல்லப்பட்ட தளத்திலிருந்து கதை சற்று மேலெழுகிறது. அவளுக்குள்ளும் வெளிப்படாத அறிவுஜீவி ஒருத்தி இருக்கக்கூடும் என்பது அக்கதையின் நுண்தளம் என்பதனால் தவிர்க்க முடியாத கதையாகவும் அது ஆகிறது.
புரை அதே போல குடும்பப் புலத்திற்குள் வைத்து எழுதப்பட்ட எளிய உளநிலை ஒன்றைக் கொண்ட கதை. சாரம்சமாக ஒற்றை வரியில் சொல்லப்போனால் அலுவலகத்தில் மிகச்சிறந்த நிர்வாகி என்று கருதப்படும் ஒருவர் வீட்டில் பதற்றம் மிக்க,எதையும் உணரமுடியாத தந்தையாக எப்படி இருக்கிறார் என்ற மனைவியின் வியப்பு மட்டும் தான் அந்தக் கதை. அவ்தர்ற்கு மகளின் சுதந்திரத்தன்மை இன்னொரு மையம். அடதை நோக்கி கதை குவியவில்லை. எழுதப்பட்ட கதைச் சந்தர்ப்பம் மிகவும் பிந்தித் தொடங்கி தேவையற்ற தகவல்களை உருவாக்கி அந்த மையத்தை சென்றடைவதாக அமைந்துள்ளது.
முதல் கதையான அவன் மிக எளிமையான ஒரு பெண்பார்வையின் வெளிப்பாடு. ஆண்பெங்குயின்களுக்கு தங்கள் குழந்தைகளுடன் உள்ள உறவு ஒரு குறியீடாக கதையில் கையாளப்பட்டுள்ளது. கதைக்கு இப்படி ஒரு எளிமையான பிரச்சனையை எடுத்துக்கொண்டு சலிப்பை அல்லது கோபத்தை அதற்கு விடையாக்கும்போது கதை ஒரு கருத்திலிருந்து முளைத்து வாசகனை அக்கருத்தை நோக்கி இழுத்துச் செல்வதாக அமைந்துவிடுகிறது. ஆயினும் எளிமையான கதையாக அல்லாமல் இதை ஆக்குவது இதிலுள்ள பெங்குயின் உலகம்
தேர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகளில் கூட இத்தகைய கதைகள் உள்ளன எனும்போது தொடக்க நிலை எழுத்தாளர்களால் அதை எளிதில் கடந்து செல்ல முடியாது. ஆனால் முதிர்ந்த வாசகர்களுக்காக எழுதப்படும் ஒரு படைப்பு அவ்வாசகனுக்கு ஏற்கனவே தெரிந்த ஓர் தளத்திற்கு அவனை கொண்டு சென்று நிறுத்துவது ஒரு பெரிய சரிவாகவே கருதப்பட வேண்டும்.
இத்தொகுதியின் நான்கு கதைகள் வெவ்வேறு வகையில் முக்கியமானவை. இவ்ன்றுை இன்றைய நிலையிலேயே நல்ல கதைகள்தான். தமிழின் சிறந்த சிறுகதைகளாக ஆக இவற்றுக்கு மேலதிகமான என்ன தேவை என்ற அளவிலேயே அணுகியிருக்கிறேன்
முதல்கதை தீர்வை. இதனுடைய வடிவம் சற்று சம்பிரதாயமானது. உளவியல் ஆலோசனை நிலையத்திற்கு வரும் ஒருவர் தன் அன்னையின் இருப்பினால் பாதிக்கப்பட்ட தன் மனைவியைப்பற்றி சொல்லும் ஒரு சித்திரம் அது. ஆனால் வழக்கமாக அமைவதுபோல ஒர் உளவியல் விசித்திரத்தையோ அல்லது சிடுக்கையோ சொல்லி அதற்குரிய ஒரு எளிய தீர்வை சொல்லி முடியாமல், இந்தக் கதை இயல்பாகவே வாழ்க்கையின் விளக்க முடியாத புதிர் ஒன்றை தொட்டு நிற்கிறது.
இறந்து போன முதியவளிலிருந்து வாழும் பெண்மணிக்கு வந்து சேர்ந்தது என்ன? எது அவளுடைய உளவியலைத் திரிய வைத்தது? அந்தக் கொடுக்கல் வாங்கல் உறவுக்குள் எப்படி நிகழ்ந்தது? அவ்வினாக்களை பல்வேறு குறிப்புகள் மூலமாக வாசகனுக்கே விட்டுவிடுவதனால் வலுவான சிறுகதையாக மாறி நிற்கிறது தீர்வை.
எஃப்.கே. லிம்மின் மூன்றாவது கண் அவர் ஆவிகளை பார்க்கும் வல்லமை அடைவதைப்பற்றிய கதை. அந்த வல்லமையை அவர் அடைவதும் அதன் மூலம் அவர் அடையும் இழப்பும் தனிமையும் ஒரு நல்ல கதைக்குரிய வாய்ப்புகள் கொண்டிருக்கின்றன. ஆனால் மிக எளிமையான ஒரு முடிச்சில் அக்கதை சென்று முடிவதனால் அதுவரைக்கும் சொல்லப்பட்டவற்றுக்கு இருந்த கற்பனை சாத்தியங்களைச் சற்றே இழந்துவிடுகிறது.
தன் காலடிகளையே பார்த்துக் கொண்டு நடக்கும் ஒருவர் பிறர் பார்ப்பதை விட இருமடங்கு உலகத்தைப் பார்க்கிறார் என்பதும் இரண்டு உலகங்களிலாக செல்ல முடிவதனால் இரண்டு உலகத்தையும் இழந்து தனிமைப்பட்டிருக்கிறார் என்பதும் பல கற்பனை வாய்ப்புகளையும் பல உருவக சாத்தியங்களையும் கொண்ட கதை. அவர் அப்படி ஆனதற்கான ஒரு காரணத்தை சொல்லும் போது கதை கீழே வந்துவிடுகிறது. ஆயினும் இதை ஒரு கவனிக்கத்தக்க கதையாகச் சொல்ல எனக்குத்தயக்கமில்லை.
இத்தொகுதியின் இன்னொரு முக்கியமான முயற்சி ஒரு கோடி டாலர்கள். மாதங்கி தனது எழுத்துப் பயணத்தின் ஊடாக தனது சிறந்த சாத்தியம் ஒன்றை சென்றடைந்திருப்பதை இக்கதை காட்டுகிறது. ஒரு புதிய சிறுகதைக்கான சிக்கலான உட்கட்டமைப்பும், வாசகனின் கற்பனையை சிதறவிடாத ஒருமையும், கதை முடிந்த பின் அவனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் எழுச்சியும் கொண்ட ஆக்கம்.
இரு சரடுகளாகச் செல்லும் இக்கதையில் ஒன்று விளையாட்டாகவும் ஒன்று யதார்த்தமாகவும் உள்ளது. யதார்த்திற்குள்ளிருந்து விளையாட்டிற்குள் வந்து சிக்கிக் கொள்ளும் இந்த வடிவத்தின் சாத்தியங்கள், இலக்கியவாசகன் பல கோணங்களில் விரிவாக்கிக் கொள்ளத் தக்கவை. ஆனால் ஆசிரியர் சொல்லிச்செல்லும் தகவல்களில் சிக்கித்திணறும் எண்ணமும் ஏற்படுகிறது
இனிய அழகிய சிறுகதை விழிப்பு. சிறந்த சிறுகதைக்குரிய இயல்பான கோட்டுருவம் சாத்தியமாகியிருக்கிறது. விழிப்பை ஒரு வதையாகக் கொண்ட ஒருவனின் உள்ளுறையும் தவிப்பை உறங்க வைக்கும் கனிவு ஒன்று நிகழ்கிறது. எளிய மொழிநடைமூலம் அழகிய கவித்துவம் வெளிப்படும் கதை இது புனைவெழுத்தாளராக அவரது வெற்றி என்றே சொல்வேன்.
மாதங்கியின் பலவீனங்கள் இரண்டு. ஒன்று, வழக்கமாக பெண்கள் எழுதும் கதைக்கருக்களில் சிக்கி கொள்வது. பிள்ளைகளை படிக்க வைப்பது, அதன் பொருட்டு வீட்டில் எவராவது ஒருவர் வேலையை விட்டுவிடுவது, பணிப்பெண் பிரச்னை, ஊரிலிருந்து யாராவது வருவது, திரும்பிச் செல்வது போன்று திரும்பத் திரும்ப அத்தனை சிங்கப்பூர்ப் பெண்களுக்கும் உரிய சிக்கல்களை அவர் தவிர்த்துவிடலாம்.
அதைப்போல அறிவியல்சாத்தியங்களை விரிவான ஆய்வோ கற்பனையோ இல்லாமல் சொல்வதையும் மறுபரிசீலனை செய்யலாம். இரு உதாரணங்கள் புரு ஓர் உன்னத தினம். அவை மீண்டும் சமூக களங்களில் பேசப்படும் கருத்துக்களை ஒருவகையான அறிவியல் பார்வையிலிருந்து விளக்க முயல்கின்றன. அவற்றின் சாத்தியங்கள் மிக எல்லைக்குட்பட்டவை. ஆரம்பத்திலேயே வாசகன் ஒருவகையான உருவக நீதிக்கதை என்று அவற்றை எண்ணத் தலைப்பட்டுவிடுகிறான்.
சிங்கப்பூரைக் களமாகக் கொண்டு எழுதும், சிங்கப்பூரில் பிறக்காத எழுத்தாளர் என்ற வகையில் மாதங்கியையே முதன்மையான எழுத்தாளராகச் சொல்வேன். தமிழ்ச்சூழலிலேயே அவர் ஒரு நம்பிக்கைக்குரிய படைப்பாளி என்பதும் மேலும் வலுவான படைப்புகளை அவரால் உருவாக்க முடியும் என்பதும் இக்கதைகளில் தெரிகிறது. புதிய கதைக்களங்களில் மட்டும் கவனம் செலுத்தி, அவற்றினூடாக வெளிப்படும் வாழ்க்கைத் தரிசனங்களை நோக்கி தன் பார்வையை அவர் திருப்பிக் கொள்ளும் தருணங்களில் தான் அவருடைய சாத்தியங்கள் வெளிப்படுகின்றன. அயல்மண்ணில் நிகழும் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவச் சிக்கல்களை, வரலாற்று முரண்பாடுகளை நோக்கி மாதங்கி நகரும்போது மேலும் வலுவான படைப்புகளை எழுதக்கூடும்.
[மாதங்கி சிறுகதைகள் ‘ஒருகோடி டாலர்கள்’ [சந்த்யா பதிப்பகம்] மெல்பகுலாஸோ [சந்த்யா பதிப்பகம்]
சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் செல்நெறிகள்
சூர்யரத்னா கதைகள் நூர்ஜகான் கதைகள்
பெண் எழுத்தாளருகளின் ஆக்கங்கள் பற்றி
சிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 1
சிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 2
சிங்கை இளங்கண்ணன் பற்றிய கட்டுரை
பொன் சுந்தரராசு பற்றிய கட்டுரை
சிங்கப்பூர் விமர்சனம் அறிவுரைகள்
சிங்கப்பூர் கடிதங்கள்: 4
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
à®à®´à¯à®¨à¯à®¤à¯à®µà®°à¯à®®à¯ பà®à¯à®ªà¯à®ªà¯à®à¯à®à¯à®°à®²à¯
à®à®¿à®à¯à®à®ªà¯à®ªà¯à®°à®¿à®²à¯ பிறநà¯à®¤à¯ வளரà¯à®¨à¯à®¤ à®à®´à¯à®¤à¯à®¤à®¾à®³à®°à¯à®à®³à¯, à®à®¿à®à¯à®à®ªà¯à®ªà¯à®°à¯à®à¯à®à¯ à®à¯à®à®¿à®¯à¯à®±à®¿à®¯à®µà®°à¯à®à®³à¯ à®à®©à¯à®©à¯à®®à¯ à®à®°à¯à®à®¾à®°à®¾à®°à¯à®¯à¯à®®à¯ à®à®ªà¯à®ªà®¿à®à¯à®®à¯à®ªà¯à®¤à¯ à®®à¯à®´à®¿ à®à®¾à®°à¯à®¨à¯à®¤ à®à®¿à®² ஠வதானிபà¯à®ªà¯à®à®³à¯ à®à®±à¯à®ªà®à¯à®à®¿à®©à¯à®±à®©. à®à®¿à®à¯à®à®ªà¯à®ªà¯à®°à®¿à®²à¯ பிறநà¯à®¤à¯ வளரà¯à®¨à¯à®¤ à®à®´à¯à®¤à¯à®¤à®¾à®³à®°à¯à®à®³à¯à®à¯à®à¯ à®®à¯à®´à®¿à®à®¾à®°à¯à®¨à¯à®¤ à®à®°à¯ à®®à¯à®à¯à®à®¿à®¯à®®à®¾à®© à®à®¿à®à¯à®à®²à¯ à®à®°à¯à®à¯à®à®¿à®±à®¤à¯. ஠வரà¯à®à®³à¯ தமிழ௠மà¯à®´à®¿à®¯à¯ பளà¯à®³à®¿à®¯à®¿à®²à¯ à®à®°à®³à®µà¯ à®à®±à¯à®±à¯à®à¯ à®à¯à®³à¯à®à®¿à®±à®¾à®°à¯à®à®³à¯. வà¯à®à¯à®à®¿à®²à¯ à®®à®à¯à®à¯à®®à¯ தமிழ௠பà¯à®à¯à®à®¿à®±à®¾à®°à¯à®à®³à¯. ஠வரà¯à®à®³à¯ பà¯à®´à®à¯à®à¯à®®à¯ à®à¯à®´à®²à®¿à®²à¯ தமிழ௠à®à®²à¯à®²à¯. ஠தà¯à®¤à¯à®à®©à¯ ஠வரà¯à®à®³à®¿à®à®®à¯ à®à®°à¯à®à¯à®à¯à®®à¯ à®à®à¯à®à®¿à®²à®®à¯à®®à¯ à®à®¿à®à¯à®à®ªà¯à®ªà¯à®°à¯à®à¯à®à¯ à®à®°à®¿à®¯ à®à®°à¯à®µà®à¯à®¯à®¾à®© à®à®®à®°à® à®à®à¯à®à®¿à®²à®®à¯. ஠தாவத௠à®à¯à®©à®°à¯, மலாயர௠஠னà¯à®µà®°à¯à®à¯à®à¯à®®à¯ à®à®³à®¿à®¯ à®®à¯à®±à¯à®¯à®¿à®²à¯ பà¯à®°à®¿à®¯à¯à®®à¯ à®à®°à¯ நà®à¯à®®à¯à®±à¯ à®à®à¯à®à®¿à®²à®®à¯ ஠தà¯.
பà¯à®¤à¯à®µà®¾à® à®à®à¯à®à®¿à®²à®¤à¯à®¤à®¿à®²à¯ ஠வரà¯à®à®³à¯ à®à®¿à®¨à¯à®¤à®©à¯à®à®³à¯à®¯à¯ à®à¯à®à¯à®ªà®¾à®à¯à®à®³à¯à®¯à¯ பà¯à®à¯à®µà®¤à®¿à®²à¯à®²à¯. à®à®à®µà¯ à®à®à¯à®¨à¯à®¤ à®à¯à®±à¯à®±à¯à®à®°à¯à®à®³à¯à®®à¯ பà¯à®¤à¯à®¤à®¾à®®à¯à®ªà¯à®¤à¯à®µà®¾à®© à®à¯à®±à¯à®à®³à¯à®®à¯ à®à¯à®£à¯à® à®à®°à¯ à®®à¯à®´à®¿à®¯à®¾à®à®µà¯ à®à®à¯à®à®¿à®²à®®à¯ ஠வரà¯à®à®³à®¿à®à®®à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à®¤à¯. à®à®à®µà¯ தமிழிலà¯à®®à¯ à®à®à¯à®à®¿à®²à®¤à¯à®¤à®¿à®²à¯à®®à¯ à®à®¿à®¨à¯à®¤à®©à¯à®à®³à¯à®à¯ à®à¯à®²à¯à®² ஠வரà¯à®à®³à®¾à®²à¯ à®®à¯à®à®¿à®µà®¤à®¿à®²à¯à®²à¯. à®à®£à¯à®®à¯à®¯à®¿à®²à¯ à®à®°à¯à®µà®°à¯ à®à®à¯à®à®¿à®²à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®°à®³à®®à®¾à®à®à¯ à®à®¿à®¨à¯à®¤à®¿à®¤à¯à®¤à¯ à®à¯à®à¯à®à®®à¯ à®à®·à¯à®à®ªà¯à®ªà®à¯à®à¯ தமிழில௠à®à®´à¯à®¤à®¿à®©à®¾à®²à¯à®à¯à® ஠த௠நலà¯à®² à®®à¯à®´à®¿à®¯à®¾à®à®µà¯ à® à®®à¯à®¯à¯à®®à¯. à®à®©à¯à®©à¯à®±à®¾à®²à¯ à®®à¯à®´à®¿ à®à®©à¯à®ªà®¤à¯ à®à®¿à®¨à¯à®¤à®©à¯à®¤à®¾à®©à¯ à®à®´à®¿à®¯ à®à¯à®±à¯à®à®³à¯ ஠லà¯à®². à®à®¤à®¾à®°à®£à®®à¯ à®à®¿à®¤à¯à®¤à¯à®°à®¾à®à¯ பà¯à®©à¯à®°à®¾à®à¯. தமிழ௠஠திà®à®®à¯ ஠றியாதவரà¯. à®à®©à®¾à®²à¯ à®à®à¯à®à®¿à®²à®¤à¯à®¤à®¿à®²à¯ நிறà¯à®¯à®ªà®à®¿à®ªà¯à®ªà®µà®°à¯ à®à®©à¯à®ªà®¤à®©à®¾à®²à¯à®¯à¯ ஠வரத௠தமிழà¯à®¨à®à¯ நவà¯à®©à®®à®¾à®©à®¤à®¾à® à®à®³à¯à®³à®¤à¯.
பிறர௠à®à®¨à¯à®¤ à®®à¯à®´à®¿à®¯à®¿à®²à¯à®®à¯ à®à®¿à®¨à¯à®¤à®¿à®à¯à®à®¤à¯ திறனறà¯à®±à®µà®°à¯à®à®³à¯. à®à®à®µà¯à®¤à®¾à®©à¯ நà®à¯à®¯à®¿à®²à¯ ஠தà¯à®¤à®©à¯ à®à®¿à®à¯à®à®²à¯ ஠லà¯à®²à®¤à¯ à®®à¯à®¤à®¿à®°à¯à®à¯à®à®¿à®¯à®¿à®©à¯à®®à¯. à®à®¨à¯à®¤ à® à®®à¯à®à®¤à¯à®¤à¯à®à¯ à®à®¿à®à¯à®à®ªà¯à®ªà¯à®°à¯ மாணவரà¯à®à®³à®¿à®à®®à¯ à®à®£à¯à®à¯à®©à¯. à®à®¿à®à¯à®à®ªà¯à®ªà¯à®°à¯ நà¯à®à¯à®à¯à®à®¾à®²à®®à®¾à® à®à®²à¯ à®à®²à®à¯à®à®¿à®¯à®¤à¯à®¤à®¿à®±à¯à®à¯ பà¯à®°à®¿à®¯ à®®à¯à®à¯à®à®¿à®¯à®¤à¯à®¤à¯à®µà®®à¯ à®à¯à®à¯à®à¯à®à®¾à®¤ நாà®à®¾à® à®à®°à¯à®¨à¯à®¤à®¤à¯. 90à®à®³à¯à®à¯à®à¯à®ªà¯ பிறà®à¯ à®à®²à¯ à®à®²à®à¯à®à®¿à®¯à®à¯à®à®³à¯ நà¯à®à¯à®à®¿ ஠வரà¯à®à®³à¯à®à¯à®¯ à®à®µà®©à®®à¯ à®à¯à®µà®¿à®¨à¯à®¤à®¤à¯. à®à®à®µà¯ à®®à¯à®¤à®¿à®°à®¾ à®®à¯à®´à®¿à®¨à®à¯ à®à®©à¯à®ªà®¤à¯ à® à®à¯à®à¯ à®à®²à®à¯à®à®¿à®¯à®¤à¯à®¤à®¿à®²à¯ à®®à®à¯à®à¯à®®à¯ ஠லà¯à®² à®à®¾à®¤à®¾à®°à®£à®à¯ à®à®°à¯à®¤à¯à®¤à¯à®µà¯à®³à®¿à®ªà¯à®ªà®¾à®à¯à®à®¿à®²à¯à®¯à¯ à®à®¾à®£à®à¯à®à®¿à®à¯à®à¯à®à®¿à®±à®¤à¯.
à®à®¿à®à¯à®à®ªà¯à®ªà¯à®°à®¿à®©à¯ à®à®°à®®à¯à®ª à®à®à¯à® à®à®´à¯à®¤à¯à®¤à®¾à®³à®°à¯à®à®³à®¾à®© ந.பà¯à®´à®©à®¿à®µà¯à®²à¯, à®à®³à®à¯à®à®£à¯à®£à®©à¯, à®à®£à¯à®£à®ªà®¿à®°à®¾à®©à¯, பà¯à®¤à¯à®®à¯à®¤à®¾à®à®©à¯ பà¯à®©à¯à®±à®µà®°à¯à®à®³à¯ ஠வரà¯à®à®³à¯à®à¯à®¯ à®à®³à®®à¯à®ªà¯à®ªà®°à¯à®µà®¤à¯à®¤à¯ à®à®°à¯à®à¯à®à®¿à®£à¯à®¨à¯à®¤ மலà¯à®à®¿à®¯à®¾à®µà®¿à®²à¯ à®à®´à®¿à®¤à¯à®¤à®µà®°à¯à®à®³à¯. ஠னà¯à®±à¯ தமிழà¯à®à¯ à®à®²à¯à®µà®¿ à®à®¿à®±à®ªà¯à®ªà®¾à®à®µà¯ à®à®°à¯à®¨à¯à®¤à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à®¤à¯ à®à®©à¯à®±à¯ ஠வரà¯à®à®³à¯à®à¯à®¯ தமிழà¯à®ªà¯ பயிறà¯à®à®¿à®¯à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ தà¯à®°à®¿à®à®¿à®±à®¤à¯. à®®à¯à®²à¯à®®à¯ தமிழ௠à®à®£à®°à¯à®µà¯ வலியà¯à®±à¯à®¤à¯à®¤à®¿à®¯ à® à®à¯à®à®¾à®² à® à®°à®à®¿à®¯à®²à¯ à®à®¯à®à¯à®à®à¯à®à®³à¯à®®à¯ தமிழà®à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®°à¯à®¨à¯à®¤à¯ தமிழ௠மà¯à®¤à®¾à®© பறà¯à®±à¯à®¯à¯à®®à¯ பயிறà¯à®à®¿à®¯à¯à®¯à¯à®®à¯ à®à®à¯à®à¯ à®à®±à®à¯à®à¯à®®à®¤à®¿ à®à¯à®¯à¯à®¤à®©. à®à®°à®®à¯à®ªà®à®¾à®² à®à®¿à®à¯à®à®ªà¯à®ªà¯à®°à¯à®ªà¯ பà®à¯à®ªà¯à®ªà®¾à®³à®¿à®à®³à¯ பலபà¯à®°à¯ தனிதà¯à®¤à®®à®¿à®´à¯ à®à®¯à®à¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®°à¯à®µà®®à¯ à®à¯à®£à¯à®à®µà®°à¯à®à®³à®¾à®à®µà¯à®®à¯ தà¯à®¯ தமிழà¯à®à¯ à®à¯à®¯à®¾à®³à®¤à¯ தà¯à®°à®¿à®¨à¯à®¤à®µà®°à¯à®à®³à®¾à®à®µà¯à®®à¯ à®à®°à¯à®ªà¯à®ªà®¤à¯ பாரà¯à®à¯à®à®¿à®±à¯à®®à¯. தà¯à®´à®¿à®²à¯à®¨à¯à®à¯à®ªà®à¯à®à®²à¯à®µà®¿à®¯à®¿à®©à¯ வளரà¯à®à¯à®à®¿à®¯à®¿à®©à®¾à®²à¯ ஠நà¯à®¤à®¤à¯ தமிழà¯à®ªà¯ பயிறà¯à®à®¿à®¯à®¾à®©à®¤à¯ தà¯à®à®°à¯à®¨à¯à®¤ தலà¯à®®à¯à®±à¯à®à®³à®¿à®²à¯ à®à®²à¯à®²à®¾à®®à®²à¯ à®à®©à®¤à¯.
à®à®¨à¯à®¤à®¿à®¯à®¾à®µà®¿à®²à¯ à®à®°à¯à®¨à¯à®¤à¯ நிரநà¯à®¤à®°à®à¯ à®à¯à®à®¿à®¯à¯à®°à®¿à®®à¯ பà¯à®±à¯à®±à¯ à®à®à¯à®à¯ வநà¯à®¤à¯ தமிழà®à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®²à¯à®µà®¿ à®à®±à¯à®±à®µà®°à¯à®à®³à¯. à®à®à¯à®à¯à®®à¯ தமிழ௠பà¯à®´à®à¯à®à¯à®®à¯ à®à¯à®´à®²à®¿à®²à¯ பிறநà¯à®¤à¯ வளரà¯à®¨à¯à®¤à®µà®°à¯à®à®³à¯. à®à®µà®°à¯à®à®³à¯ à®à®°à®³à®®à®¾à®© à®®à¯à®´à®¿à®¯à¯ à®à®³à®¿à®¤à®¿à®²à¯ à® à®à¯à®¯à®®à¯à®à®¿à®à®¿à®±à®¤à¯.à®à®¤à®¾à®°à®£à®®à®¾à® à®à®¿à®à¯à®à®ªà¯à®ªà¯à®°à¯à®¤à¯ தமிழிலà®à¯à®à®¿à®¯à®¤à¯à®¤à®¿à®©à¯ தà¯à®à®à¯à®à®ªà¯à®ªà¯à®³à¯à®³à®¿ à®à®©à¯à®±à¯ நான௠நினà¯à®à¯à®à¯à®®à¯ நா.à®à¯à®µà®¿à®¨à¯à®¤à®à®¾à®®à®¿à®¯à¯à®µà®¿à® தமிழà®à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®à¯à®à¯ à®à¯à®à®¿à®¯à¯à®±à®¿ à®®à¯à®¤à®¿à®°à®¾à®¤ à®à®´à¯à®¤à¯à®¤à¯à®à¯à®à®³à¯ à®à®´à¯à®¤à¯à®ªà®µà®°à¯à®à®³à¯ à®à®©à¯à®©à¯à®®à¯ à®®à¯à®²à®¾à®© à®®à¯à®´à®¿à®¤à¯à®¤à®¿à®±à®©à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à®¾à®°à¯à®à®³à¯. ஠த௠à®à®¿à®à¯à®à®ªà¯à®ªà¯à®°à¯ à®®à¯à®´à®¿à®µà®³à®°à¯à®à¯à®à®¿à®¯à®¾à®à®à¯ à®à¯à®³à¯à®³ à®à®°à¯ விமரà¯à®à®à®©à®¾à® நான௠மறà¯à®à¯à®à®¿à®±à¯à®©à¯. à®à®à®µà¯ à®®à¯à®´à®¿à®¨à®à¯à®¯à®¿à®©à¯ à®à®°à®³à®¤à¯à®¤à¯ பà¯à®±à®®à¯à®¤à¯à®à¯à®à®¿à®¯à¯ à®à®¨à¯à®¤ மதிபà¯à®ªà¯à®à¯à®à®³à¯à®à¯ à®à¯à®¯à¯à®à®¿à®±à¯à®©à¯.
*
மாதà®à¯à®à®¿ தமிழà®à®¤à¯à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®¿à®à¯à®à®ªà¯à®ªà¯à®°à¯à®à¯à®à¯à®à¯ à®à¯à®à®¿à®¯à¯à®±à®¿à®¯à®µà®°à¯. திரà¯à®¨à¯à®²à¯à®µà¯à®²à®¿ மாவà®à¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯ பிறநà¯à®¤à¯ திரà¯à®à¯à®à®¿à®¯à®¿à®²à¯ à®à®²à¯à®µà®¿ à®®à¯à®à®¿à®¤à¯à®¤à¯ பà¯à®à¯à®à®³à¯à®°à®¿à®²à¯ வà®à¯à®à®¿à®¯à®¿à®²à¯ பணி பà¯à®°à®¿à®¨à¯à®¤à®ªà®¿à®©à¯ à®à®°à¯à®ªà®¤à¯ à®à®£à¯à®à¯à®à®³à¯à®à¯à®à¯ à®®à¯à®²à®¾à® à®à®¿à®à¯à®à®ªà¯à®ªà¯à®°à®¿à®²à¯ வà®à®¿à®¤à¯à®¤à¯ வரà¯à®à®¿à®±à®¾à®°à¯. மாதà®à¯à®à®¿à®¯à®¿à®©à¯ à®à®¿à®±à¯à®à®¤à¯à®¤à¯ தà¯à®à¯à®¤à®¿à®à®³à¯à®ªà¯ பà®à®¿à®à¯à®à¯à®®à¯à®ªà¯à®¤à¯ தமிழà®à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®´à¯à®¤à¯à®®à¯ à®à®°à¯ à®à®´à¯à®¤à¯à®¤à®¾à®³à®°à¯à®ªà¯ பà®à®¿à®à¯à®à¯à®®à¯ à®à®£à®°à¯à®µà¯à®¤à®¾à®©à¯ பà¯à®°à®¿à®¤à¯à®®à¯ à®à®±à¯à®ªà®à¯à®à®¿à®±à®¤à¯.à®®à¯à®²à¯à®à¯à®à®®à®¾à®© à®à®°à¯ à®à®¿à®à¯à®à®ªà¯à®ªà¯à®°à¯ à®à¯à®´à®²à¯à®à®¿à®¤à¯à®¤à®°à®¿à®ªà¯à®ªà¯ à®®à®à¯à®à¯à®®à¯ à®à®µà®±à¯à®±à¯ à®à®¿à®à¯à®à®ªà¯à®ªà¯à®°à¯à®à¯à®à®¤à¯à®à®³à®¾à® à®à®£à¯à®£à®µà¯à®à¯à®à®¿à®±à®¤à¯
à®à®à¯à®à®¤à¯à®à®³à¯ தமிழà®à®¤à¯à®¤à®¿à®²à¯ தà¯à®à®°à¯à®¨à¯à®¤à¯ பà¯à®©à¯à®à®¤à¯à®à®³à¯ பà®à®¿à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à¯à®®à¯ à®à®°à¯à®µà®°à¯à®à¯à®à¯ à®à®°à®¿à®¯ வà®à¯à®¯à®¿à®²à¯ à® à®à®¿à®ªà¯à®ªà®à¯à®¯à®¾à®© வà®à®¿à®µà®¤à¯à®¤à¯à®°à¯à®à¯à®à®¿à®¯à¯à®®à¯ à®à®¯à®²à¯à®ªà®¾à®© à®®à¯à®´à®¿à®¨à®à¯à®¯à¯à®®à¯ à®à¯à®£à¯à®à¯à®³à¯à®³à®©. à®à®à®µà¯ à®à®°à®³à®®à®¾à®© வாà®à®¿à®ªà¯à®ªà¯à®¤à¯à®¤à®©à¯à®®à¯à®¯à¯ ஠ளிà®à¯à®à®à¯à®à¯à®à®¿à®¯à®µà¯à®¯à®¾à® ஠னà¯à®¤à¯à®¤à¯ à®à®¤à¯à®à®³à¯à®®à¯ à®à®³à¯à®³à®©. à®à®¯à®²à¯à®ªà®¾à® தமிழà®à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®²à®à¯à®à¯à®¯à®¿à®²à¯ à®à®¨à¯à®¤à®¿à®¯à®¾à®µà®¿à®²à¯ à®à®¿à®à¯à®à®ªà¯à®ªà¯à®°à®¿à®²à¯ à®à®³à¯à®³ à®à®¨à¯à®¤ à®à®°à¯ à®à®¤à®´à®¿à®²à¯à®®à¯ பிரà®à¯à®°à®®à®¾à®à®à¯à®à¯à®à®¿à®¯à®µà¯ à®à®¨à¯à®¤à®à¯à®à®¤à¯à®à®³à¯.
மாதà®à¯à®à®¿à®¯à®¿à®©à¯ à®à®¨à¯à®¤ தà¯à®à¯à®ªà¯à®ªà¯à®à®³à¯à®ªà¯ பà®à®¿à®à¯à®à¯à®®à¯à®ªà¯à®¤à¯ ஠வரிà®à®®à¯ à®à®°à¯à®µà®à¯à®¯à®¾à®© பாதிபà¯à®ªà¯ à®à®°à¯à®ªà¯à®ªà®¤à¯ பாரà¯à®à¯à® à®®à¯à®à®¿à®à®¿à®±à®¤à¯. à®à®©à¯à®±à¯ தமிழà®à®¤à¯à®¤à®¿à®©à¯ பà¯à®à®´à¯ பà¯à®±à¯à®± வணி஠à®à®´à¯à®¤à¯à®¤à®¾à®³à®°à¯à®à®³à®¾à®à®¿à®¯ à®à¯à®à®¾à®¤à®¾ மறà¯à®±à¯à®®à¯ வாà®à®¨à¯à®¤à®¿ à®à®¿à®µà®à®à¯à®à®°à®¿ à®®à¯à®¤à®²à®¿à®¯à®µà®°à¯à®à®³à®¿à®©à¯ நà¯à®°à®à®¿à®à¯à®à¯à®²à¯à®µà®¾à®à¯à®à¯. à®à®°à®£à¯à®à¯ தà¯à®à®°à¯à®à¯à®à®¿à®¯à®¾à® ஠வர௠வாà®à®¿à®ªà¯à®ªà®¿à®²à¯ வநà¯à®¤à®à¯à®¨à¯à®¤ à® à®à¯à®à®®à®¿à®¤à¯à®¤à®¿à®°à®©à¯ à®®à¯à®©à¯à®®à®¾à®¤à®¿à®°à®¿à®¯à®¾à®à®à¯ à®à¯à®£à¯à® à®à®´à¯à®¤à¯à®¤à¯à®®à¯à®±à¯à®¯à®¿à®©à¯ பாதிபà¯à®ªà¯. à®à®¨à¯à®¤à®ªà¯à®ªà®¯à®£à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®°à¯à®ªà¯à®ªà®µà®°à®¾à® நான௠மாதà®à¯à®à®¿à®¯à¯ மதிபà¯à®ªà®¿à®à¯à®à®¿à®±à¯à®©à¯
மாதà®à¯à®à®¿ à®à®¿à®±à¯à®à®¤à¯à®¯à®¿à®©à¯ பà¯à®¤à¯ வà®à®¿à®µà®¤à¯à®¤à¯ பà¯à®°à¯à®®à¯à®ªà®¾à®²à®¾à®© à®à®¤à¯à®à®³à®¿à®²à¯ à®à®¯à®²à¯à®ªà®¾à®à®µà¯ வநà¯à®¤à®à¯à®¨à¯à®¤à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à®¾à®°à¯. நà¯à®°à®à®¿à®¯à®¾à®© தà¯à®à®à¯à®à®®à¯à®®à¯, பà¯à®±à®µà®¯à®®à®¾à®© à®à®¿à®¤à¯à®¤à®°à®¿à®ªà¯à®ªà¯à®®à¯, à®à®¯à®²à¯à®ªà®¾à®© à®®à¯à®´à®¿ நà®à¯à®¯à¯à®®à¯ à®®à¯à®¤à®¿à®°à¯à®µà¯à®®à¯ à®à¯à®£à¯à® à®à®¤à¯à®à®³à®¾à®à®µà¯ பà¯à®°à¯à®®à¯à®ªà®¾à®²à®¾à®© பà®à¯à®ªà¯à®ªà¯à®à®³à¯ à®à®³à¯à®³à®©. à®®à¯à®²à¯à®ªà®à¯à®²à®¾à®à¯ à®à®©à¯à®©à¯à®®à¯ தலà¯à®ªà¯à®ªà¯à®à¯à®à®¤à¯ தமிழில௠பà¯à®£à¯ à®à®´à¯à®¤à¯à®¤à¯ தà¯à®à®à¯à®à®¿à®¯ நாள௠மà¯à®¤à®²à¯ பலà®à¯à®£à®à¯à®à®³à®¿à®²à¯ à®à®´à¯à®¤à®ªà¯à®ªà®à¯à®®à¯ à®à®°à¯ à®à®¤à¯à®¤à®¾à®©à¯. à®à®°à¯à®ªà¯à®£à¯à®à®³à®¿à®²à¯ à®à®°à¯à®¤à¯à®¤à®¿ à®à®©à¯à®©à¯à®°à¯à®¤à¯à®¤à®¿à®¯à¯ தà¯à®à®¿à®à¯ à®à¯à®²à¯à®µà®¤à¯. ஠னà¯à®à®®à®¾à® ஠வரà¯à®à®³à¯ à®à®²à¯à®²à¯à®°à®¿à®¤à¯à®¤à¯à®´à®¿à®à®³à¯. தà¯à®à®¿à®à¯à®à¯à®²à¯à®²à®ªà¯à®ªà®à¯à®ªà®µà®³à¯ வாழà¯à®à¯à®à¯à®¯à®¿à®²à¯ à®à®°à®¿à®¨à¯à®¤à¯à®µà®¿à®à¯à®à®¿à®°à¯à®ªà¯à®ªà®¾à®³à¯. ஠தà¯à®¤à¯à®¯à®°à¯ தà¯à®à¯à®à¯à®à¯ à®à®¾à®à¯à®à®¿ à®à®¤à¯ à®®à¯à®à®¿à®¯à¯à®®à¯.
à®à®¤à¯ à®à®¨à¯à®¤à®¿à®¯à®¾à®µà®¿à®©à¯ பà¯à®£à¯à®à®³à®¿à®©à¯ à®à®¯à®²à¯à®ªà®¾à®© வாழà¯à®à¯à®à¯à®¤à¯ தà¯à®³à®¿à®à®³à®¿à®²à¯ à®à®©à¯à®±à¯. à®à®©à¯à®©à®¿à®²à¯ à®à®²à¯à®²à¯à®°à®¿ வாழà¯à®à¯à®à¯ à®à®©à¯à®ªà®¤à¯ à®à®¨à¯à®¤à®¿à®¯à®ªà¯à®ªà¯à®£à¯à®£à®¿à®©à¯ பà¯à®±à¯à®à®¾à®²à®à¯à®à®³à®¿à®²à¯ à®à®©à¯à®±à¯. à®à¯à®à¯à®®à¯à®ªà®ªà¯ பà¯à®±à¯à®ªà¯à®ªà¯ பிற à® à®´à¯à®¤à¯à®¤à®à¯à®à®³à¯ à®à®²à¯à®²à®¾à®®à®²à¯ வாழà¯à®à¯à®à¯à®¯à¯ ஠வரà¯à®à®³à¯ à®à¯à®£à¯à®à®¾à®à¯à®®à¯ à®à®¿à®² வரà¯à®à®à¯à®à®³à¯ ஠வà¯. ஠தன௠பிறà®à¯ à®à¯à®à¯à®®à¯à®ªà®ªà¯ பà¯à®±à¯à®ªà¯à®ªà¯, திரà¯à®®à®£ à®à®±à®µà¯, à®à¯à®´à®¨à¯à®¤à¯à®à®³à¯ à®à®©à¯à®±à¯ வாழà¯à®à¯à®à¯ வளரà¯à®¨à¯à®¤à¯ நà¯à®³à¯à®®à¯ பà¯à®à¯à®à®¿à®²à¯ வà¯à®©à¯à®±à®µà®°à¯à®à®³à¯à®®à¯ தà¯à®±à¯à®±à®µà®°à¯à®à®³à¯à®®à¯ à®à®©à¯à®± à®à®°à¯ பிரிவ௠à®à®°à¯à®µà®¾à®à®¿à®±à®¤à¯. ஠னà¯à®¤à¯à®¤à¯à®¤à¯ தà®à¯à®¤à®¿à®à®³à¯à®®à¯ à®à®°à¯à®¨à¯à®¤à¯à®®à¯ தà¯à®±à¯à®±à®µà®°à¯à®à®³à¯ à®à®ªà¯à®ªà¯à®¤à¯à®®à¯ à®à®°à¯à®à¯à®à®¿à®±à®¾à®°à¯à®à®³à¯. à®à®³à®¿à®®à®¿à®à¯à® à®à®°à¯ à®à®±à®¨à¯à®¤à®à®¾à®²à®¤à¯à®¤à¯ à®®à®à¯à®à¯à®®à¯ நà¯à®à¯à®à®¿à®²à¯ à®à®¨à¯à®¤à®¿à®à¯ à®à¯à®£à¯à®à¯ நிà®à®´à¯ à®à®¾à®²à®¤à¯à®¤à¯ நà¯à®¨à¯à®¤à®¿à®à¯ à®à®à®ªà¯à®ªà®µà®°à¯à®à®³à¯.
஠நà¯à®¤à®à¯à®à®¾à®² ஠நà¯à®¤à¯à®¤à®®à®¾ à®®à¯à®¤à®²à¯ ஠னà¯à®µà®°à¯à®®à¯ à®à®¨à¯à®¤à®à¯à®à®¤à¯à®¯à¯ à®à®´à¯à®¤à®¿à®¯à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à®¾à®°à¯à®à®³à¯.à®à®¨à¯à®¤à®à¯ à®à®¤à¯à®à®³à¯ நà¯à®°à®à®¿à®¯à®¾à®à®µà¯ வாà®à®à®¿à®à®³à®¿à®©à¯ à®à¯à®¨à¯à®¤ ஠னà¯à®ªà®µà®¤à¯à®¤à¯ தà¯à®à¯à®ªà®µà¯ à®à®©à¯à®ªà®¤à®©à®¾à®²à¯ à®à®®à¯ à®à®©à®à¯à®à¯à®®à¯ à®à®ªà¯à®ªà®à®¿ à®à®°à¯ தà¯à®´à®¿ à®à®°à¯à®¨à¯à®¤à®¾à®³à¯ à®à®©à¯à®±à¯ ஠வரà¯à®à®³à¯ à®à¯à®²à¯à®² வà¯à®ªà¯à®ªà®¤à®©à®¾à®²à¯ à®à®ªà¯à®ªà¯à®¤à¯à®®à¯ à®à®¤à¯ à®à®µà®©à®¤à¯à®¤à¯ à®à®°à¯à®à¯à®à®¿à®©à¯à®±à®©. விரà¯à®®à¯à®ªà®ªà¯à®ªà®à¯à®à®¿à®©à¯à®±à®©. à®à®©à®¾à®²à¯ à®à®µà¯ மிà®à®ªà¯à®ªà¯à®¤à¯à®µà®¾à®© ஠னà¯à®ªà®µà®®à¯ à®à®©à¯à®ªà®¤à®©à®¾à®²à¯à®¯à¯ ஠வறà¯à®±à®¿à®²à¯ à®à®¿à®±à¯à®à®¤à¯à®à¯à®à¯ à®à®°à¯à®à¯à® வà¯à®£à¯à®à®¿à®¯ ஠பà¯à®°à¯à®µà®¤à¯à®¤à®©à¯à®®à¯ à® à®±à¯à®±à¯à®ªà¯à®ªà¯à®à®¿à®±à®¤à¯. à®à®²à®à¯à®à®¿à®¯à®¤à¯à®¤à®¿à®©à¯ à® à®´à®à¯à®à®³à¯ à® à®®à¯à®à¯à®à¯à®®à¯ à®®à¯à®¤à®²à¯ விதி பிறிதà¯à®©à¯à®±à®¿à®²à®¾à®®à¯ à®à®©à¯à®ªà®¤à¯.
à®®à¯à®²à¯à®ªà®¹à¯à®²à®¾à®à®¾à®µà¯à®à¯ à®à¯à®©à¯à®±à¯ à®à®¾à®£à¯à®®à¯ à®à®¤à¯à®à¯à®²à¯à®²à®¿à®ªà¯ பà¯à®£à¯à®®à®£à®¿ தன௠தà¯à®´à®¿à®¯à®¿à®©à¯ வாழà¯à®à¯à®à¯à®¯à®¿à®©à¯ à®à®°à®¿à®µà¯ à®à®£à¯à®à¯ தà¯à®¯à®°à¯à®±à¯à®µà®¤à¯à®à®©à¯ நிறà¯à®à¯à®®à¯ à®à®¨à¯à®¤à®à¯ à®à®¤à¯ à®®à¯à®²à®¤à®¿à®à®®à®¾à® à®à®¤à¯à®¯à®¾à®µà®¤à¯ à®à®©à¯à®±à¯ à®à®£à¯à®à®à¯à®¨à¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤à®¾à®²à¯, à®à¯à®²à¯à®µà®¤à®±à¯à®à¯ à®à®©à¯à®©à¯à®®à¯ à®à®°à¯ பà®à®¿ ஠திà®à®®à®¾à®© à®à®¤à¯ à®à®©à¯à®±à¯ à®à®°à¯à®¨à¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤à®¾à®²à¯ à®®à®à¯à®à¯à®®à¯ à®à®²à®à¯à®à®¿à®¯à®ªà¯à®ªà®à¯à®ªà¯à®ªà¯ à®à®©à¯à®±à¯ à®à®à®¿à®¯à®¿à®°à¯à®à¯à® à®®à¯à®à®¿à®¯à¯à®®à¯. à®à®ªà¯à®ªà¯à®¤à¯ à®à®¤à¯ à®à®°à¯ வà®à¯à®¯à®¾à®© வாழà¯à®à¯à®à¯à®à¯ à®à®¿à®¤à¯à®¤à®¿à®°à®®à®¾à®à®µà¯ நினà¯à®±à¯à®µà®¿à®à¯à®à®¿à®±à®¤à¯.
à®à®°à®®à¯à®ªà®à®à¯à®à®à¯ à®à®¤à¯à®à®³à¯à®à¯à®à¯à®°à®¿à®¯ à®®à¯à®²à¯à®²à®¿à®¯ à®à¯à®à®©à¯à®¤à¯à®¤à®©à¯à®®à¯ à®à¯à®£à¯à® à®à®¤à¯à®à®³à®¾à®à®µà¯ à®®à¯à®²à¯à®ªà®à¯à®²à®¾à®à®¾ தà¯à®à¯à®¤à®¿à®¯à®¿à®©à¯ பல à®à®¤à¯à®à®³à¯ à®à®³à¯à®³à®©. à®à®¤à®¾à®°à®£à®®à®¾à®, à®®à¯à®ªà¯à®ªà®¤à¯à®¤à¯à®à¯à®à¯ நாà®à¯à®à®³à®¿à®²à¯ வரà¯à®¯à®ªà¯à®ªà®à¯à® à®à®°à¯ à®à®¿à®µà®ªà¯à®ªà¯ பà¯à®³à¯à®³à®¿ மி஠à®à®³à®¿à®®à¯à®¯à®¾à®© à®à®°à¯ தà¯à®à®ªà®à¯à®¤à®¿à®à¯à®à®¤à¯. தà¯à®©à¯ தà¯à®°à¯à®µà®¤à¯à®¤à®¿à®±à¯à®à¯à®ªà¯ பà¯à®à¯à®®à¯ à®à®°à¯ பà¯à®£à¯à®®à®£à®¿ தன௠à®à¯à®à¯à®®à¯à®ªà®¤à¯à®¤à¯à®¯à¯ நினà¯à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à®¾à®³à¯. திரà¯à®®à¯à®ªà®¿ வரà¯à®®à¯à®ªà¯à®¤à¯ தன௠à®à®£à®µà®©à®¿à®à®®à¯à®®à¯ à®à¯à®´à®¨à¯à®¤à¯à®à®³à®¿à®à®®à¯à®®à¯ à®à¯à®²à¯à®²à®µà¯à®£à¯à®à®¿à®¯à®µà®±à¯à®±à¯ à®à®£à¯à®£à®¿ மனபà¯à®ªà®¾à®à®®à¯ à®à¯à®¯à¯à®à®¿à®±à®¾à®³à¯. à®à®©à®¾à®²à¯ à® à®à¯à®à¯ à®à¯à®©à¯à®±à®¤à®©à®¾à®²à¯à®¯à¯ à®à®°à¯ à®à®¿à®à¯à®à®ªà¯à®ªà¯à®°à¯ à®à¯à®à®¿à®®à®à®³à®¾à® மாறி ââவà¯à®³à¯à®³à¯à®ªà¯à®ªà®©à®¿à®¯à®¿à®²à¯ à®à®¿à®µà®ªà¯à®ªà¯à®ªà¯ பà¯à®³à¯à®³à®¿à®¯à®¾à® à®à®¿à®à¯à®à®ªà¯à®ªà¯à®°à¯ à®à¯à®à®¿à®¯à¯ நாà®à¯à®à®¿à®©à¯à®©à¯ à®à®©à¯à®± à®à®°à¯ வாà®à¯à®à®¿à®¯à®¤à¯à®¤à¯ à®®à®à¯à®à¯à®®à¯ à®à¯à®²à¯à®à®¿à®±à®¾à®³à¯. ஠தாவத௠à®à¯à®à¯à®®à¯à®ªà¯à®ªà®ªà¯à®ªà¯à®£à¯ à®à®©à¯à®©à¯à®®à¯ âà®à¯à®´à¯à®¨à®¿à®²à¯âயில௠à®à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®¿à®à¯à®à¯à®ªà¯à®ªà¯à®°à¯ âà®à¯à®à®¿à®®à®à®³à¯â à®à®©à¯à®©à¯à®®à¯ à®®à¯à®²à¯à®¨à®¿à®²à¯à®¯à¯ à® à®à¯à®à®¿à®±à®¾à®³à¯.
à®à®¤à¯à®¤à®à¯à®¯ à®à®¤à¯à®à®³à¯ à®à®ªà¯à®ªà¯à®¤à¯à®®à¯ à®à®°à¯ பà¯à®¤à¯ à®à®£à¯à®®à¯ ஠லà¯à®²à®¤à¯ பà¯à®¤à¯ பà¯à®°à®¿à®¤à®²à¯ à®à®¾à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®´à®à¯à®à¯à®à®¿à®¯à®µà¯. à®à®£à¯à®®à¯à®¯à®¿à®²à¯à®¯à¯ à®à®°à¯ பà¯à®£à¯ à®à®ªà¯à®ªà®à®¿ à®à¯à®²à¯à®²à®¿à®¯à®¿à®°à¯à®à¯à®à®à¯à®à¯à®à¯à®®à¯ à®à®©à¯à®±à®¾à®²à¯à®®à¯ à®à®²à®à¯à®à®¿à®¯à®®à¯ ஠தறà¯à®à¯ à®®à¯à®²à¯ à®à®©à¯à®© à®à®©à¯à®± à®à¯à®³à¯à®µà®¿à®¯à¯à®¤à¯à®¤à®¾à®©à¯ à®à®ªà¯à®ªà¯à®¤à¯à®®à¯ à®à¯à®à¯à®à¯à®®à¯. ஠னà¯à®±à®¾à® மனநிலà¯à®à®³à¯, à®à®±à¯à®à®©à®µà¯ à®à¯à®±à®ªà¯à®ªà®à¯à® மனநிலà¯à®à®³à¯ à®à®²à®à¯à®à®¿à®¯à®¤à¯à®¤à®¿à®±à¯à®à¯ à®®à¯à®à¯à®à®¿à®¯à®®à¯ ஠லà¯à®². ஠தà¯à®µà®¿à® à®à®©à¯à®©à¯à®°à¯ தளதà¯à®¤à®¿à®²à¯ à®®à¯à®©à¯à®µà¯à®à¯à®à®ªà¯à®ªà®à¯à® விà®à¯à®à®³à¯ à®à®²à®à¯à®à®¿à®¯à®®à¯ திரà¯à®®à¯à®ªà®à¯à®à¯à®²à¯à®²à¯à®®à¯à®ªà¯à®¤à¯ ஠த௠வà¯à®³à®¿à®±à®¿à®µà®¿à®à¯à®à®¿à®±à®¤à¯. à® à®°à®à®¿à®¯à®²à¯, ததà¯à®¤à¯à®µà®®à¯, மதம௠à®à®¤à®±à¯à®à¯à®®à¯ à®à®²à®à¯à®à®¿à®¯à®®à¯ பிரà®à¯à®à®¾à®°à®µà®¾à®à®©à®®à¯ à®à®à®®à¯à®à®¿à®¯à®¾à®¤à¯.
à®à®°à¯à®µà¯à®³à¯ à®à®à¯à®à®¤à¯ à®à®¨à¯à®¤ தà¯à® பà®à¯à®¤à®¿à®¯à¯ நà¯à®à¯à®à®¿à®à¯ à®à¯à®²à¯à®²à®¾à®®à®²à¯ à®à¯à®à¯à®®à¯à®ªà®¤à¯à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®¿à®³à®®à¯à®ªà¯à®®à¯ à®à®°à¯ பà¯à®£à¯ பà¯à®®à®¿à®¯à¯ தன௠à®à¯à®à¯à®®à¯à®ªà®®à®¾à® à®à®£à¯à®à®à¯à®µà®¤à®¾à® à®à¯à®©à¯à®±à¯ à®®à¯à®à®¿à®¨à¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤à®¾à®²à¯ ஠தன௠தளம௠வà¯à®±à¯. à®à®°à¯ à®à®²à¯à®²à®¤à¯à®¤à®°à®à®¿ பà¯à®©à¯à®à¯à®¯à®¿à®©à¯à®ªà¯à®ªà¯à®² à®à®°à¯ à®à®³à®¿à®¯ à®à®¯à®¿à®°à¯à®®à®à¯à®à¯à®®à®¾à® தனà¯à®©à¯ à®à®£à®°à¯à®¨à¯à®¤à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®¨à¯à®¤à®¾à®²à¯ ஠த௠à®à®°à¯ à®®à¯à®²à¯à®®à¯ பà¯à®°à®¿à®¯ தரிà®à®©à®¤à¯à®¤à¯ à®®à¯à®©à¯ வà¯à®à¯à®à®¿à®±à®¤à¯. ஠பà¯à®ªà¯à®¤à¯ à®à¯à® ஠நà¯à®¤ தரிà®à®©à®®à¯ பà®à¯à®ªà¯à®ªà®¿à®²à¯ வாà®à®à®©à¯ à®à®£à¯à®à®à¯à®µà®¤à®¾à® à®à®°à¯à®à¯à® வà¯à®£à¯à®à¯à®®à¯ à®à®´à®¿à®¯ à®à®à®¿à®°à®¿à®¯à®°à®¾à®²à¯ à®à¯à®²à¯à®²à®ªà¯à®ªà®à¯à®µà®¤à®¾à® à®à®°à¯à®à¯à®à®à¯à®à¯à®à®¾à®¤à¯.
à®à®°à¯ à®à®¤à¯à®à®³à¯ à®à®°à¯à®µà®®à¯à®à¯à®à¯à®®à¯ à®à®¤à¯à®à¯à®à®°à¯à®à¯à®à®³à¯ à®à¯à®£à¯à®à®µà¯. தாதி à®à®¿à®à¯à®à®ªà¯à®ªà¯à®°à¯à®à¯à®à¯ à®à®°à¯à®à¯à®à¯à®®à¯ பணிபà¯à®ªà¯à®£à¯ பிரà®à¯à®©à¯à®¯à®¿à®²à¯ à®à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®°à¯à®µà®¾à®©à®¤à¯. [பணிபà¯à®ªà¯à®£à¯ பிரà®à¯à®à®¿à®©à¯à®ªà®±à¯à®±à®¿ à®à®´à¯à®¤à®¾à®¤ à®à®¿à®à¯à®à®ªà¯à®ªà¯à®°à¯ பà¯à®£à¯à®à®³à¯ à®à®µà®°à¯à®©à¯à®®à¯ à®à®°à¯à®à¯à®à®¿à®±à®¾à®°à¯à®à®³à®¾ à®à®© வியà®à¯à®à®¿à®±à¯à®©à¯] பணிபà¯à®ªà¯à®£à¯à®à®³à®¾à® à®à®¨à¯à®¤à®¿à®°à®à¯à®à®³à¯ ஠மரà¯à®¤à¯à®¤à®¿à®à¯ à®à¯à®³à¯à®³à¯à®®à¯ à®à®°à¯ à®à®¾à®²à®à®à¯à®à®¤à¯à®¤à¯à®à¯ à®à®¾à®à¯à®à¯à®®à¯ à®à®à¯à®à®¤à¯ à®à®¨à¯à®¤à®¿à®°à®à¯à®à®³à®¿à®²à¯à®®à¯ மனிததà¯à®¤à¯ தà¯à®à¯à®®à¯ à®à¯à®´à®¨à¯à®¤à¯à®¯à¯ à®à®¿à®¤à¯à®¤à®°à®¿à®¤à¯à®¤à¯ à®®à¯à®à®¿à®à®¿à®±à®¤à¯. à®à®¿à®±à¯à®à®¤à¯ à®à®©à¯à®± ஠ளவில௠à®à®°à®¿à®¯à®¾à®© வà®à®¿à®µà®®à¯à®®à¯ à®®à¯à®´à®¿à®¯à¯à®´à¯à®à¯à®à¯à®®à¯ à®à¯à®£à¯à®à®¤à¯. à®à®©à®¾à®²à¯ à®à®¨à¯à®¤à®à¯à®à®°à¯ வà¯à®µà¯à®µà¯à®±à¯ வà®à¯à®¯à®¿à®²à¯ வணி஠à®à®´à¯à®¤à¯à®¤à®¿à®²à¯à®¯à¯ à®à¯à®¯à®¾à®³à®ªà¯à®ªà®à¯à® à®à®©à¯à®±à¯. ஠நà¯à®¤ à®à®¾à®¤à®¾à®°à®£à®¤à¯à®¤à®©à¯à®®à¯à®¯à¯ à®à®à¯à®à®¤à¯à®¯à®¿à®©à¯ à®à¯à®±à¯
à®®à¯à®²à®¤à®¿à®à®®à®¾à® à®à®©à¯à®±à¯ நிà®à®´à¯à®¨à¯à®¤à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯. ஠நà¯à®¤ à®à®¯à®¨à¯à®¤à®¿à®°à®®à¯ à®à®©à¯à®ªà®¤à¯ ஠ளிà®à¯à®à¯à®®à¯ à®à¯à®±à®¿à®¯à¯à®à¯à®à¯à®à¯à®à®¾à®¤à¯à®¤à®¿à®¯à®à¯à®à®³à¯ விரிவாà®à¯à®à®®à¯ à®à¯à®¯à¯à®¯à®ªà¯à®ªà®à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯. தாதியின௠பணி à®à®¯à®¨à¯à®¤à®¿à®°à®¤à¯à®¤à®¾à®²à¯ à®à¯à®¯à¯à®¯à®ªà¯à®ªà®à¯à®®à¯à®ªà¯à®¤à¯ à®®à¯à®®à¯à®ªà®à¯à®µà®¤à¯à®®à¯ à®à®¿à®² à®à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯ ஠லà¯à®²à®µà®¾? à®à®ªà¯à®ªà®à®¿ யà¯à®à®¿à®à¯à®à®¿à®±à¯à®©à¯. à®à¯à®´à®¨à¯à®¤à¯ ஠னà¯à®©à¯à®¯à¯à®¤à¯à®¤à¯à®à¯à®à®¿à®±à®¤à¯. à®à®©à®¾à®²à¯ ஠னà¯à®©à¯à®¯à®¿à®²à¯ à®à®°à¯ à®à®¯à®¨à¯à®¤à®¿à®°à®¤à¯à®¤à¯ ஠த௠தà¯à®à¯à®à®¿à®±à®¤à¯ à®à®©à¯à®±à®¾à®²à¯ à®à®©à¯à®© à®à®à¯à®®à¯? மானà¯à®à®¤à¯à®¤à®¿à®©à¯ à®à®°à¯ பரிணாமதà¯à®¤à®¿à®²à¯ à®à®¯à®¨à¯à®¤à®¿à®° à® à®®à¯à®à®®à¯ à®à®²à¯à®²à®¾à®¤ ஠னà¯à®©à¯à®¯à¯à®à¯à®à¯à® à®à®±à¯à® à®®à¯à®à®¿à®¯à®µà®¿à®²à¯à®²à¯ à®à®©à¯à®±à®¾à®²à¯? à®à®¤à¯à®¤à®©à¯à®¯à¯ à®à¯à®£à®à¯à®à®³à¯ விரிà®à®¿à®©à¯à®±à®©. à®à®³à®¿à®®à¯à®¯à®¾à® âà®à®©à¯à®© à®à®°à¯à®¨à¯à®¤à®¾à®²à¯à®®à¯ à® à®®à¯à®®à®¾ பà¯à®² வரà¯à®®à®¾?â à®à®©à¯à®ªà®¤à®²à¯à®² நவà¯à®©à®à¯à®à®¿à®±à¯à®à®¤à¯. ஠தில௠பà¯à®¤à¯à®ªà¯à®ªà¯à®¤à¯à®¤à®¿à®ªà¯à®ªà¯à®°à®¿à®¤à®²à¯à®à®³à¯à®à¯ à®à¯à®£à¯à®à¯à®®à¯, à®à®à®à¯à®à¯à®®à¯ à®à®°à¯ à® à®®à¯à®à®®à¯ à®à®ªà¯à®ªà¯à®¤à¯à®®à¯ à®à®°à¯à®¨à¯à®¤à®¾à®à®µà¯à®£à¯à®à¯à®®à¯.
வà®à¯à®à®¾à®³ தà¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®£à¯à®à¯à®¯à¯à®©à®°à¯ லாரியில௠à®à®¿à®à¯à®à®ªà¯à®ªà¯à®°à¯à®à¯à®à¯ à®à®³à®¿à®¨à¯à®¤à¯ à®à®³à¯à®³à¯ வரà¯à®®à¯ à®à®à®²à¯à®´à¯à®ªà¯à®ªà¯à®¤à¯ தà¯à®´à®¿à®²à®¾à®³à®°à¯ à®à®¿à®¤à¯à®¤à®¿à®°à®¤à¯à®¤à¯ ஠ளிà®à¯à®à®¿à®±à®¤à¯ நà¯à®°à¯. à®à®¿à®à¯à®à®à®¾à®à¯ தà¯à®±à¯à®®à¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®£à¯à®à¯à®¯à¯à®©à®°à®¿à®²à¯ à®à®±à¯à®±à®ªà¯à®ªà®à¯à® à®à®¯à®¿à®°à¯ à®à®©à¯à®±à¯ à® à®à¯à®à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®¿à®à¯à®à®ªà¯à®ªà¯à®°à¯ வரà¯à®µà®¤à®±à¯à®à¯ பதிலா஠à®à®¿à®à¯à®à®ªà¯à®ªà¯à®°à¯ வழியா஠வியà®à¯à®¨à®¾à®®à¯ à®à¯à®²à¯à®à®¿à®±à®¤à¯. நà¯à®°à®à¯à®à®£à®¿à®ªà¯à®ªà®¿à®²à¯ à®à®±à¯à®ªà®à¯à® பிழ௠à®à®¾à®°à®£à®®à®¾à® à®à®³à¯à®³à¯ à®à®°à¯à®à®¿ à®®à¯à®à¯à®à®à¯à®¤à¯à®¤à¯ ஠த௠à®à®±à®ªà¯à®ªà®¤à¯ à®à®°à¯ à®à®¤à¯. ஠நà¯à®¤ à®à®¤à¯à®®à®¾à®µà®¿à®©à¯ பரிதவிபà¯à®ªà¯, வà¯à®³à®¿à®¯à¯ நினà¯à®±à¯ தவிà®à¯à®à¯à®®à¯ ஠தன௠நà¯à®£à¯à®µà®à®¿à®µà®®à¯ வழியாà®à®à¯ à®à¯à®²à¯à®²à®ªà¯à®ªà®à¯à®®à¯ à®à®à¯à®à®¤à¯ பà¯à®¤à®¿à®¯à®à¯à®£à®¤à¯à®¤à®¿à®²à¯ நனà¯à®±à®¾à®à®µà¯ à®à®³à¯à®³à®¤à¯.
à®à®µà¯à®µà®¿à®°à¯ à®à®¤à¯à®à®³à¯à®®à¯ à®à®¿à®à¯à®à®ªà¯à®ªà¯à®°à¯à®à¯ à®à¯à®´à®²à®¿à®²à¯ பà¯à®¤à®¿à®¯ à®à®¤à¯à®à®³à¯à®à¯à®à®¾à®© à®à®¾à®¤à¯à®¤à®¿à®¯à®à¯à®à¯à®±à¯à®à®³à¯ à®à®¾à®à¯à®à¯à®ªà®µà¯. à®à®´à¯à®¤à®ªà¯à®ªà®à¯à®à¯à®³à¯à®³ விததà¯à®¤à®¾à®²à¯ à®à®±à¯à®±à¯ மிà®à¯à®¯à¯à®£à®°à¯à®à¯à®à®¿ வà¯à®³à®¿à®ªà¯à®ªà®à¯à®à®¿à®±à®¤à¯. à®à®¤à¯ à® à®®à¯à®ªà¯à®ªà®¿à®²à¯ à®à®à®¿à®°à®¿à®¯à¯à®¯à®¿à®©à¯ à®à¯à®à®³à¯ வà¯à®³à®¿à®¤à¯à®¤à¯à®°à®¿à®à®¿à®©à¯à®±à®©. à®à®°à¯à®ªà¯à®ªà®¿à®©à¯à®®à¯ à®à®µà®±à¯à®±à¯ à®à¯à®±à®¿à®ªà¯à®ªà®¿à®à®¤à¯à®¤à®à¯à®¨à¯à®¤ à®®à¯à®¯à®±à¯à®à®¿à®¯à¯ à®à®©à¯à®±à¯ à®à¯à®²à¯à®µà¯à®©à¯.
மாதà®à¯à®à®¿à®¯à®¿à®©à¯ à®à®°à¯ à®à¯à®à®¿ à®à®¾à®²à®°à¯à®à®³à¯ தà¯à®à¯à®¤à®¿à®¯à®¿à®²à¯ ஠வரத௠஠à®à¯à®¤à¯à®¤à®à®à¯à® வளரà¯à®à¯à®à®¿à®¯à¯à®à¯à®à®¾à®à¯à®à¯à®®à¯ பà®à¯à®ªà¯à®ªà¯à®à®³à¯ à®à®³à¯à®³à®©. à®à®¾à®¤à®¾à®°à®£à®¾à®®à®¾à®© ஠னà¯à®±à®¾à®à®à¯ à®à®°à¯à®¤à¯à®¤à¯ à®à®±à¯à®±à¯ மாறà¯à®ªà®à¯à® à®à®°à¯ வà®à®¿à®µà®®à¯ வழியாà®à®à¯ à®à¯à®²à¯à®²à¯à®®à¯ தà¯à®´à®©à¯ à®à¯à®±à¯à®®à¯à®ªà®à®®à¯à®®à¯ à®à®°à¯ பினà¯à®à¯à®±à®¿à®ªà¯à®ªà¯à®®à¯ à®®à¯à®¨à¯à®¤à¯à®¯ பயிறà¯à®à®¿à®à¯à®à®¾à®²à®à®à¯à® à®à®¤à¯ பà¯à®©à¯à®±à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à®¤à¯. à®à¯à®²à¯à®² வரà¯à®®à¯ à®à®°à¯à®¤à¯à®¤à¯ à®à®±à¯à®¤à¯à®¤à¯à®®à¯à®ªà®à®¿à®¯à®¾à® à®®à¯à®²à¯à®à¯à®à®®à®¾à®à®µà¯ à®à®±à¯à®¤à®¿à®¯à®¿à®²à¯ à®à¯à®²à¯à®²à¯à®®à¯ à®à®¤à¯ ஠தà¯. மாரà¯à®à®ªà®¿ விதி à®à®©à¯à®©à¯à®®à¯ à®à®¤à¯à®¯à¯à®®à¯ ஠நà¯à®¤à®ªà¯ பயிறà¯à®à®¿ à®à®¾à®²à®à®à¯à®à®¤à¯à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®°à¯ à®®à¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤ à®à®¤à¯à®µà®à®¿à®µà®¿à®±à¯à®à¯ வரà¯à®µà®¤à®±à¯à®à®¾à®© à®à®°à¯ à®à®¤à¯à®¤à®©à®®à®¾à®à®µà¯ நினà¯à®±à¯à®µà®¿à®à¯à®à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à®¤à¯.
஠றிவாரà¯à®¨à¯à®¤ à®à®°à¯ பà¯à®£à¯à®£à¯ à®à®¤à®±à®¿à®µà®¿à®à¯à®à¯ à®à®°à¯à®à¯à®à¯à®à¯ à®à¯à®©à¯à®±à¯ பà®à®¿à®à¯à®à®¾à®¤ பà¯à®£à¯à®£à¯ திரà¯à®®à®£à®®à¯ à®à¯à®¯à¯à®¤à¯à®à¯à®£à¯à®à¯ வரà¯à®®à¯ à®à®°à¯à®µà®©à®¿à®©à¯ வழà®à¯à®à®®à®¾à®© à®à®¤à¯ ஠தà¯.மாரà¯à®à®ªà®¿ விதி à®à®©à¯à®± à® à®®à¯à®à®¤à¯à®¤à¯ à®à®³à¯à®³à¯ à®à¯à®£à¯à®à¯ வநà¯à®¤à®¾à®²à¯ à®®à®à¯à®à¯à®®à¯ à®à®³à®¿à®®à¯à®¯à®¾à®© à®à®°à¯ வமà¯à®ªà¯à®à¯à®à®¤à¯ à®à®©à¯à®± தளதà¯à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ ஠த௠மà¯à®²à¯à®´à¯à®à®¿à®±à®¤à¯. ஠நà¯à®¤ à®à®³à®¿à®®à¯à®¯à®¾à®© à®à®¿à®°à®¾à®®à®¤à¯à®¤à¯à®ªà¯à®ªà¯à®£à¯ மாரà¯à®à®ªà®¿ விதி à®à®©à¯à®±à¯ தனà¯à®©à¯ ஠றியாமல௠à®à¯à®²à¯à®²à®¿à®µà®¿à®à¯à®®à¯à®ªà¯à®¤à¯ ஠தà¯à®µà®°à¯ à®à¯à®²à¯à®²à®ªà¯à®ªà®à¯à® தளதà¯à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®¤à¯ à®à®±à¯à®±à¯ à®®à¯à®²à¯à®´à¯à®à®¿à®±à®¤à¯. ஠வளà¯à®à¯à®à¯à®³à¯à®³à¯à®®à¯ வà¯à®³à®¿à®ªà¯à®ªà®à®¾à®¤ ஠றிவà¯à®à¯à®µà®¿ à®à®°à¯à®¤à¯à®¤à®¿ à®à®°à¯à®à¯à®à®à¯à®à¯à®à¯à®®à¯ à®à®©à¯à®ªà®¤à¯ à® à®à¯à®à®¤à¯à®¯à®¿à®©à¯ நà¯à®£à¯à®¤à®³à®®à¯ à®à®©à¯à®ªà®¤à®©à®¾à®²à¯ தவிரà¯à®à¯à® à®®à¯à®à®¿à®¯à®¾à®¤ à®à®¤à¯à®¯à®¾à®à®µà¯à®®à¯ ஠த௠à®à®à®¿à®±à®¤à¯.
பà¯à®°à¯ ஠த௠பà¯à®² à®à¯à®à¯à®®à¯à®ªà®ªà¯ பà¯à®²à®¤à¯à®¤à®¿à®±à¯à®à¯à®³à¯ வà¯à®¤à¯à®¤à¯ à®à®´à¯à®¤à®ªà¯à®ªà®à¯à® à®à®³à®¿à®¯ à®à®³à®¨à®¿à®²à¯ à®à®©à¯à®±à¯à®à¯ à®à¯à®£à¯à® à®à®¤à¯. à®à®¾à®°à®®à¯à®à®®à®¾à® à®à®±à¯à®±à¯ வரியில௠à®à¯à®²à¯à®²à®ªà¯à®ªà¯à®©à®¾à®²à¯ ஠லà¯à®µà®²à®à®¤à¯à®¤à®¿à®²à¯ மிà®à®à¯à®à®¿à®±à®¨à¯à®¤ நிரà¯à®µà®¾à®à®¿ à®à®©à¯à®±à¯ à®à®°à¯à®¤à®ªà¯à®ªà®à¯à®®à¯ à®à®°à¯à®µà®°à¯ வà¯à®à¯à®à®¿à®²à¯ பதறà¯à®±à®®à¯ மிà®à¯à®,à®à®¤à¯à®¯à¯à®®à¯ à®à®£à®°à®®à¯à®à®¿à®¯à®¾à®¤ தநà¯à®¤à¯à®¯à®¾à® à®à®ªà¯à®ªà®à®¿ à®à®°à¯à®à¯à®à®¿à®±à®¾à®°à¯ à®à®©à¯à®± மனà¯à®µà®¿à®¯à®¿à®©à¯ வியபà¯à®ªà¯ à®®à®à¯à®à¯à®®à¯ தான௠஠நà¯à®¤à®à¯ à®à®¤à¯. ஠வà¯à®¤à®°à¯à®±à¯à®à¯ à®®à®à®³à®¿à®©à¯ à®à¯à®¤à®¨à¯à®¤à®¿à®°à®¤à¯à®¤à®©à¯à®®à¯ à®à®©à¯à®©à¯à®°à¯ à®®à¯à®¯à®®à¯. à® à®à®¤à¯ நà¯à®à¯à®à®¿ à®à®¤à¯ à®à¯à®µà®¿à®¯à®µà®¿à®²à¯à®²à¯. à®à®´à¯à®¤à®ªà¯à®ªà®à¯à® à®à®¤à¯à®à¯ à®à®¨à¯à®¤à®°à¯à®ªà¯à®ªà®®à¯ மிà®à®µà¯à®®à¯ பிநà¯à®¤à®¿à®¤à¯ தà¯à®à®à¯à®à®¿ தà¯à®µà¯à®¯à®±à¯à®± தà®à®µà®²à¯à®à®³à¯ à®à®°à¯à®µà®¾à®à¯à®à®¿ ஠நà¯à®¤ à®®à¯à®¯à®¤à¯à®¤à¯ à®à¯à®©à¯à®±à®à¯à®µà®¤à®¾à® à® à®®à¯à®¨à¯à®¤à¯à®³à¯à®³à®¤à¯.
à®®à¯à®¤à®²à¯ à®à®¤à¯à®¯à®¾à®© ஠வன௠மி஠à®à®³à®¿à®®à¯à®¯à®¾à®© à®à®°à¯ பà¯à®£à¯à®ªà®¾à®°à¯à®µà¯à®¯à®¿à®©à¯ வà¯à®³à®¿à®ªà¯à®ªà®¾à®à¯. à®à®£à¯à®ªà¯à®à¯à®à¯à®¯à®¿à®©à¯à®à®³à¯à®à¯à®à¯ தà®à¯à®à®³à¯ à®à¯à®´à®¨à¯à®¤à¯à®à®³à¯à®à®©à¯ à®à®³à¯à®³ à®à®±à®µà¯ à®à®°à¯ à®à¯à®±à®¿à®¯à¯à®à®¾à® à®à®¤à¯à®¯à®¿à®²à¯ à®à¯à®¯à®¾à®³à®ªà¯à®ªà®à¯à®à¯à®³à¯à®³à®¤à¯. à®à®¤à¯à®à¯à®à¯ à®à®ªà¯à®ªà®à®¿ à®à®°à¯ à®à®³à®¿à®®à¯à®¯à®¾à®© பிரà®à¯à®à®©à¯à®¯à¯ à®à®à¯à®¤à¯à®¤à¯à®à¯à®à¯à®£à¯à®à¯ à®à®²à®¿à®ªà¯à®ªà¯ ஠லà¯à®²à®¤à¯ à®à¯à®ªà®¤à¯à®¤à¯ ஠தறà¯à®à¯ விà®à¯à®¯à®¾à®à¯à®à¯à®®à¯à®ªà¯à®¤à¯ à®à®¤à¯ à®à®°à¯ à®à®°à¯à®¤à¯à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ à®®à¯à®³à¯à®¤à¯à®¤à¯ வாà®à®à®©à¯ à® à®à¯à®à®°à¯à®¤à¯à®¤à¯ நà¯à®à¯à®à®¿ à®à®´à¯à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®²à¯à®µà®¤à®¾à® à® à®®à¯à®¨à¯à®¤à¯à®µà®¿à®à¯à®à®¿à®±à®¤à¯. à®à®¯à®¿à®©à¯à®®à¯ à®à®³à®¿à®®à¯à®¯à®¾à®© à®à®¤à¯à®¯à®¾à® ஠லà¯à®²à®¾à®®à®²à¯ à®à®¤à¯ à®à®à¯à®à¯à®µà®¤à¯ à®à®¤à®¿à®²à¯à®³à¯à®³ பà¯à®à¯à®à¯à®¯à®¿à®©à¯ à®à®²à®à®®à¯
தà¯à®°à¯à®¨à¯à®¤ à®à®´à¯à®¤à¯à®¤à®¾à®³à®°à¯à®à®³à®¿à®©à¯ பà®à¯à®ªà¯à®ªà¯à®à®³à®¿à®²à¯ à®à¯à® à®à®¤à¯à®¤à®à¯à®¯ à®à®¤à¯à®à®³à¯ à®à®³à¯à®³à®© à®à®©à¯à®®à¯à®ªà¯à®¤à¯ தà¯à®à®à¯à® நில௠à®à®´à¯à®¤à¯à®¤à®¾à®³à®°à¯à®à®³à®¾à®²à¯ ஠த௠à®à®³à®¿à®¤à®¿à®²à¯ à®à®à®¨à¯à®¤à¯ à®à¯à®²à¯à®² à®®à¯à®à®¿à®¯à®¾à®¤à¯. à®à®©à®¾à®²à¯ à®®à¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤ வாà®à®à®°à¯à®à®³à¯à®à¯à®à®¾à® à®à®´à¯à®¤à®ªà¯à®ªà®à¯à®®à¯ à®à®°à¯ பà®à¯à®ªà¯à®ªà¯ ஠வà¯à®µà®¾à®à®à®©à¯à®à¯à®à¯ à®à®±à¯à®à®©à®µà¯ தà¯à®°à®¿à®¨à¯à®¤ à®à®°à¯ தளதà¯à®¤à®¿à®±à¯à®à¯ ஠வன௠à®à¯à®£à¯à®à¯ à®à¯à®©à¯à®±à¯ நிறà¯à®¤à¯à®¤à¯à®µà®¤à¯ à®à®°à¯ பà¯à®°à®¿à®¯ à®à®°à®¿à®µà®¾à®à®µà¯ à®à®°à¯à®¤à®ªà¯à®ªà® வà¯à®£à¯à®à¯à®®à¯.
à®à®¤à¯à®¤à¯à®à¯à®¤à®¿à®¯à®¿à®©à¯ நானà¯à®à¯ à®à®¤à¯à®à®³à¯ வà¯à®µà¯à®µà¯à®±à¯ வà®à¯à®¯à®¿à®²à¯ à®®à¯à®à¯à®à®¿à®¯à®®à®¾à®©à®µà¯. à®à®µà¯à®©à¯à®±à¯à¯ à®à®©à¯à®±à¯à®¯ நிலà¯à®¯à®¿à®²à¯à®¯à¯ நலà¯à®² à®à®¤à¯à®à®³à¯à®¤à®¾à®©à¯. தமிழின௠à®à®¿à®±à®¨à¯à®¤ à®à®¿à®±à¯à®à®¤à¯à®à®³à®¾à® à®à® à®à®µà®±à¯à®±à¯à®à¯à®à¯ à®®à¯à®²à®¤à®¿à®à®®à®¾à®© à®à®©à¯à®© தà¯à®µà¯ à®à®©à¯à®± ஠ளவிலà¯à®¯à¯ ஠ணà¯à®à®¿à®¯à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à¯à®©à¯
à®®à¯à®¤à®²à¯à®à®¤à¯ தà¯à®°à¯à®µà¯. à®à®¤à®©à¯à®à¯à®¯ வà®à®¿à®µà®®à¯ à®à®±à¯à®±à¯ à®à®®à¯à®ªà®¿à®°à®¤à®¾à®¯à®®à®¾à®©à®¤à¯. à®à®³à®µà®¿à®¯à®²à¯ à®à®²à¯à®à®©à¯ நிலà¯à®¯à®¤à¯à®¤à®¿à®±à¯à®à¯ வரà¯à®®à¯ à®à®°à¯à®µà®°à¯ தன௠஠னà¯à®©à¯à®¯à®¿à®©à¯ à®à®°à¯à®ªà¯à®ªà®¿à®©à®¾à®²à¯ பாதிà®à¯à®à®ªà¯à®ªà®à¯à® தன௠மனà¯à®µà®¿à®¯à¯à®ªà¯à®ªà®±à¯à®±à®¿ à®à¯à®²à¯à®²à¯à®®à¯ à®à®°à¯ à®à®¿à®¤à¯à®¤à®¿à®°à®®à¯ ஠தà¯. à®à®©à®¾à®²à¯ வழà®à¯à®à®®à®¾à® à® à®®à¯à®µà®¤à¯à®ªà¯à®² à®à®°à¯ à®à®³à®µà®¿à®¯à®²à¯ விà®à®¿à®¤à¯à®¤à®¿à®°à®¤à¯à®¤à¯à®¯à¯ ஠லà¯à®²à®¤à¯ à®à®¿à®à¯à®à¯à®à¯à®¯à¯ à®à¯à®²à¯à®²à®¿ ஠தறà¯à®à¯à®°à®¿à®¯ à®à®°à¯ à®à®³à®¿à®¯ தà¯à®°à¯à®µà¯ à®à¯à®²à¯à®²à®¿ à®®à¯à®à®¿à®¯à®¾à®®à®²à¯, à®à®¨à¯à®¤à®à¯ à®à®¤à¯ à®à®¯à®²à¯à®ªà®¾à®à®µà¯ வாழà¯à®à¯à®à¯à®¯à®¿à®©à¯ விளà®à¯à® à®®à¯à®à®¿à®¯à®¾à®¤ பà¯à®¤à®¿à®°à¯ à®à®©à¯à®±à¯ தà¯à®à¯à®à¯ நிறà¯à®à®¿à®±à®¤à¯.
à®à®±à®¨à¯à®¤à¯ பà¯à®© à®®à¯à®¤à®¿à®¯à®µà®³à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ வாழà¯à®®à¯ பà¯à®£à¯à®®à®£à®¿à®à¯à®à¯ வநà¯à®¤à¯ à®à¯à®°à¯à®¨à¯à®¤à®¤à¯ à®à®©à¯à®©? à®à®¤à¯ ஠வளà¯à®à¯à®¯ à®à®³à
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

