இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 79
March 6, 2019
“சோர்வது குற்றம்”
என்ன அங்கீகாரம் இருக்கு நமக்கு?எதற்கிந்த வேலைகளை விடாமல் செய்ய வேண்டும்?என்று அவ்வப்போது சோர்வது வாடிக்கைதான். என்றாலும் ஒருபோதும் இந்த நேரத்தை பணம் பார்க்க செலவிட்டிருக்கலாமே என்று நினைத்ததே இல்லை.சோர்வது குற்றம் என்பதையும் தகுதிக்கு மீறியே நாம் அங்கீகரிக்கப்படுகிறோம் என்பதையும் கடந்த இரண்டுமாத நிகழ்வுகள் உணர்த்தின.கருஞ்சட்டைப் பேரணிக்காக திருச்சி வந்திருந்த தம்பி கரு.பழனியப்பன் (Karu Palaniappan) என்னை சந்திக்க விரும்பினார் என்பதையும் என்னுடைய “சாமங்கவிய” மற்றும் “சாமங்கவிந்து” ஆகியவைகுறித்து சன்னமாய் சிலாகித்தார் என்ற தகவலையும் இன்னொரு தம்பி Suresh Kathan கூறியபோது எனது ஆதங்கத்தின்மீது சம்மட்டி ஒன்று செல்லமாகத் தட்டுவதை என்னால் உணர முடிந்தது.சுரேஷோடு உரையாடியபோது,ஒருமுறை இடப்பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சினையில் மார்க்சிஸ்ட் கட்சி திமுக தலைமையிலான கூட்டணியைவிட்டு வெளியேறி ஆறு இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியபோதும் தாம் போட்டியிடாத 34 தொகுதிகளில் (புதுச்சேரி உள்ளிட்டு) திமுகவையும் அதன் கூட்டணி வேட்பாளர்களையும் ஆதரிப்பதாக முடிவு செய்ததையும் சொன்னபோது சன்னமாய் வியந்தான்.அந்த ஆறு தொகுதிகளுக்குள் சிலவற்றில் (எத்தனை என்று சரியாகத் தெரியவில்லை) பாஜக தனது வேட்பாளர்களை நிறுத்தியபோது அந்தத் தொகுதிகளில் இருந்து தனது வேட்பாளர்களை மார்க்சிஸ்ட் கட்சி விலக்கிக் கொண்டதையும், அப்படி விலகிய வேட்பாளர்களில் ஒருவர்தான் சுரேஷ் காத்தான் உள்ளிட்ட தோழர்கள் வம்படியாகவும் மூர்க்கமாகவும் விமர்சித்த டி.கே.ரெங்கராஜன் என்பதை சொன்ன்போது இன்னும் கொஞ்சம் கூடுதலாக வியந்தான்.ஜெயலலிதா அம்மையார் ஒன்னேமுக்கால் லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்தபோது அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து நியாயம் காத்தவர் ரெங்கராஜன் என்று சொன்னபோது,“இவை எல்லாம் உன்ன மாதிரி ஆளுங்க ஏன் எங்களுக்கு சொல்லல. சொல்லாதது உங்க குற்றமல்லவா?”என்றபோது சம்மட்டி ஒரு சின்னத் துளி பிசிறை என் ஆதங்கத்தில் இருந்து தகர்த்தது.ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் எல்லாக் கிளைகளிலும் AIIEA ஊழியர்கள் போராடிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்காக ஒருநாள் வ்வாயிற்கூட்ட ஆர்ப்பாட்டம் நடத்தியதையும் ஆனால் LIC யை தனியாருக்கு தாரை வார்க்க அரசுகள் முயன்றபோதெல்லாம் போராடிய AIIEA உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக நாம் போராடாமல் இருந்தது குற்றமல்லவா? என்று நான் கேட்டதை சுரேஷ் தனது பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததை தோழர் Marx Pandian கூறியபோது நியாயத்தை, உண்மையை சொன்னால் இளைஞர்கள் பற்றிக்கொள்ளவே செய்கிறார்கள் என்பது புரிந்தது.இரண்டாவதாக ஒரு பெருந்துகள் ஒன்றினை என் ஆதங்கத்தில் இருந்து தெறிக்க வைத்திருந்தது சம்மட்டி.புதுகை புத்தகத் திருவிழாவில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க உரைகளுள் எனது உரையும் ஒன்று என்று பெருந்தன்மையோடு கூறியிருந்தார் தோழர் Kasthuri Renganஎனது ஆதங்கத்தில் ஒரு பெரும் பிளவை ஏற்ப்படுத்தியிருந்தது சம்மட்டிசென்றமாதம் 65/66 பக்கங்களை காக்கைக்குத் தர முடியவில்லை. அப்படியொரு கைவலி. ஒரு கையை மேலே தூக்குவதற்கு இன்னொரு கையின் உதவி தேவைப்பட்டது.அப்போது தோழர் ஆ.சிவசுப்பிரமணியம் அவர்கள் அனுப்பியிருந்த குறுஞ்செய்தியை தோழர் முத்தையா எனக்கு அனுப்பி இருந்தார். அதில்,“ எட்வினது பக்கங்கள் விடுபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்”என்றிருந்தது.எனது ஆதங்கம் சுக்கு நூறாய் உடைந்திருந்தது.சோர்ந்தது குற்றம்.மன்னித்துவிடுங்கள் தோழர்களே.என்னைப்போலவே ஆதங்கத்தில் உழலும் தோழர்களே உங்கள் ஆதங்கத்தில் நியாயம் இருக்கவே செய்யும். ஆனாலும் சொல்கிறேன்,“சோர்வது குற்றம்”#சாமங்கவிய சரியாக இரண்டுமணி நேரம்
24.02.2019
24.02.2019
Published on March 06, 2019 09:21
அய்யா பயந்துட்டார் தெரியுமா?”
மேல்நிலை முதலாமாண்டு குழந்தைகளுக்கு இறுதித் தேர்வு நடந்துகொண்டிருக்கிறது. நான்கு அறைகள்.ஒருபக்கம் மேல்நிலைப் பொதுத் தேர்விற்கான பறக்கும் படைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூன்று நண்பர்கள் அதற்கான வழிகாட்டுதல் கூட்டத்திற்காக சென்றுவிட்டனர்.தமது தந்தை இறந்துவிட்டதால் ஒரு நண்பர் விடுப்பில் இருக்கிறார்.இந்தநிலையில் இன்னும் ஆறு ஆசிரியர்களை தேர்வறைக் கண்காணிப்பிற்கான வழிகாட்டுதல் கூட்டத்திற்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவு வந்துவிட்டது.எப்படி பள்ளியை, திருப்புதல் தேர்வை, நடத்துவதென்று புரியவில்லை.இதுமாதிரி சூழ்நிலையில் திரு நரசிம்மராவ் அவர்களேகூட வெடித்துவிடக்கூடும்.இறுகிய முகத்தோடு ஏற்பாடுகளை செய்வதற்காக அறையைவிட்டு வெளியே வருகிறேன். ஒரு அறையை செல்வம் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். அவனிடம் செய்தியை சொல்லலாம் என்று அறக்குப் போகிறேன். உள்ளே நுழைகிறபோது சிரித்துக் கொண்டே, “இது என்ன எழுதி இருக்குன்னு பாருங்க சார்”.அவள்தான் வகுப்பில் முதல் குழந்தை.“என்ன அபி எழுதி இருக்க?”பேப்பரைப் பிரித்துக் காட்டுகிறாள்.“என் சாவுக்கு எங்க அய்யாதான் காரணம்” என்று கொட்டை எழுத்தில் எழுதி இருக்கிறாள். அதிர்ந்துபோய் நிற்கிறேன். அவளோ கெக்கபிக்க என்று சிரிக்கிறாள்.ஒன்றும் இல்லை,“தண்ணீர் தொட்டி சென்று நீர் அருந்திவர அனுமதி கேட்டிருக்கிறாள். “பேசாம எழுது பாப்பா” என்று மறுத்திருக்கிறான். அவனது செல்லம் அவள். சிரித்துக் கொண்டே ”உடலைனா தாகத்திலேயே செத்துவிடுவேன்” என்று மிரட்டி இருக்கிறாள். “செய்” என்று சிரித்துக் கொண்டே சொல்லி இருக்கிறான்.இப்படி எழுதிவிட்டு,“நான் எழுதி வச்சுட்டேன். தாகத்துல செத்துட்டேன்னா HM சார் உங்களப் புடிச்சு போலீஸ்ல கொடுத்துடுவார்”அந்த நேரம் பார்த்து குறுக்க போயிருக்கேன்.“அய்யாவ புடிச்சு போலீஸ்ல கொடுப்பீங்கதானே?””நீயாச்சு உங்க அய்யாவாச்சு. ஆள விடுங்க புள்ளைங்களா” என்றாவாறு போன வேலையை மறந்தவானாக திரும்பிவிட்டேன்.மதியம் ரவுண்ட்ஸ் போகும்போது அவளைப் பார்க்கிறேன்.“என்னமோ சவடால் எல்லாம் விட்ட. கொஞ்சம்கூட வெக்கம் மானமே இல்லாம உக்காந்துருக்க”“நீங்கதானே அன்னிக்கு ப்ரேயர்ல ‘மானம் கருதக் கெடும்’னு சொன்னீங்க. போக அய்யா பயந்துட்டார் தெரியுமா?””எனக்கா?”“உங்களுக்கு வர்ஷினியே பயப்பட மாட்டா. எங்க அய்யா பயப்படுவாராக்கும். அவர் போலீசுக்கு பயந்துட்டு என்ன தண்ணி குடிக்க அனுப்பிட்டாரு தெரியுமா?”சிரித்தபடியே நகர்கிறேன்.இடைவேளையில் அறைக்கு வந்த செல்வத்திடம் “பயந்துட்டியாம்ல, சொன்னா”“நானா?, ரவி தண்ணி கேட்டான். அனுப்பிட்டேன். பாவமா பார்த்தா. தொலையறானு அனுப்பிட்டேன். பயந்துட்டேன்னு சொன்னாளா? நாளைக்கு வச்சுக்கிறேன்”சிரித்தேன்.எங்க பள்ளி இப்படித்தான்.ஊருல எங்க….?#சாமங்கவிய 18 நிமிடங்கள்
28.02.2019
28.02.2019
Published on March 06, 2019 09:19
January 4, 2019
அவர்கள் அங்கிருந்து நகரவே மாட்டார்கள்.
பிரியத்திற்குரிய திரு ராகுல்அவர்களுக்கு,வணக்கம்.
நடந்து முடிந்த தேர்தலில்பாஜகவின் கோட்டைக்குள்ளேயே புகுந்துஅந்தக் கட்சியின் கண்களில்விரலைவிட்டு விளையாண்டுவிட்டு வந்திருக்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு இந்தஎளிய மனிதனின் வணக்கமும்வாழ்த்துக்களும்.
உங்களது கட்சியின் செய்தித்தொடர்பாளர் திருமதி குஷ்புஅவர்கள் சொன்னதுபோல் இந்தஅளவிற்கு மக்கள் பாஜகவைநிராகரித்திருப்பதற்கு நீங்கள் மட்டும்காரணம் இல்லை என்பதுஉண்மைதான். அதை நீங்களும் உணர்ந்தேஇருக்கிறீர்கள். ஆனால் பாஜகமீதான மக்களின் கோபத்தைமிகச் சரியாக ஒருங்கிணைத்துஒரு புள்ளியில் குவித்ததில்உங்கள் பங்கு மகத்தானது. அதை ஒருசாதனையாகக் கொண்டால் அதற்குரியதொண்ணூறு விழுக்காடு உங்களைத்தான்சேரும்.
அதே நேரம் செல்விமாயாவதி மற்றும் திருஅகிலேஷ் ஆகியோரோடு நீங்கள்ஒரு இணக்கத்தைக் கைக்கொண்டிருந்தால் பாஜக இத்தனை இடங்களையும்இவ்வளவு வாக்குகளையும் வாங்கியிருக்கமுடியாது. ஒருக்கால் அப்படி நடந்திருந்தால்அது வர இருக்கிற நாடாளுமன்றத்தேர்தலுக்கான உங்களுக்கான கூடுதலான பலமாகஇருந்திருக்கும்.
எந்தவிதமான கூச்ச நாச்சமும்இல்லாமல், மக்களை கேவலப்படுத்துகிற, பிரித்தாளுகிறமற்றும் நாசப்படுத்துகிற காரணகாரியங்களை பாஜக அரசுமிகுதியான ஆணவத்தோடு செயல்படுத்தத்தொடங்கி இருக்கிறது. இதன்மூலம்மக்களுக்கு எதிர்சக்திகள் தாங்கள்என்பதை அவர்கள் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தக்காலகட்டத்தில் நீங்கள் பலப்படுவதுஎன்பது எளிய மக்களுக்குஒருவித நம்பிக்கையைத் தருகிறது. அதனால்தான் நீங்கள் இன்னும்பேரதிகமாய் பலப்பட வேண்டும்என்று விரும்புகிறோம்.
ஒன்றைச் சொல்ல வேண்டும்திரு ராகுல்,
பொதுவாக ஒவ்வொரு தேர்தல்நடந்து முடிந்த பின்பும்ஏதோ ஒரு கட்சி அல்லதுகூட்டணி வெற்றி பெற்றதாகசிலர் கொண்டாடுகிறார்கள். ஏதோஒரு கட்சி அல்லதுகூட்டணி தோற்றுப் போனதாய்சிலர் துவண்டு போகிறார்கள். பல அப்பாவிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
ஆனால், எந்தக் கட்சியும் வெற்றிபெறுவதும் இல்லை. எந்தக் கட்சியும்தோல்வியுறுவதும் இல்லை.
மக்கள் நம்பி ஒருகட்சியை அல்லது ஒருகூட்டணியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். சிலரைநிராகரிக்கிறார்கள். மக்கள் தேர்ந்தெடுத்தகட்சி அல்லது கூட்டணிஏதோ தாம் வெற்றிபெற்றுவிட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள்.
இதில் வெற்றியும் தோல்வியும்மக்களுக்கானவை.
மக்களுக்கான வெற்றியையும் தோல்வியையும்கூட தமதென்று அரசியல் கட்சிகள்களவாடிக் கொள்வதாகத்தான் இதைக்கொள்ள வேண்டும்.
தேர்தல் வெற்றி தோல்விஎப்படி மக்களுடையதாகும்?
அவர்கள் தேர்ந்தெடுத்த கட்சிஅவர்களுக்கான ஒரு நல்ல ஆட்சியைத்தருமானால் அது அவர்களுக்கான வெற்றியாகும். அல்லாது போனால் அந்தத்தேர்தலில் மக்கள் தோற்றுப்போனார்கள் என்றுதான் கொள்ள வேண்டும்.
பொதுவாக தேர்தலில் அதைச்செய்கிறோம் இதைச் செய்கிறோம்என்று கட்சிகள் மக்களிடம்வாக்குறுதிகளைக் கொடுப்பது எல்லோரும்அறிந்தது.
வாக்காளர்கள் செலுத்தும் ஒவ்வொருவாக்கும் ஒரு கோரிக்கை சீட்டாகும். வரும் ஐந்து ஆண்டுகளுக்குஎங்கள் குழந்தைகளுக்கான நல்லகல்வியை, ஆரோக்கியமான வாழ்வை, வேலைக்கானஉத்தரவாதத்தை, சமத்துவத்தை, எங்கள்மொழிக்கான உரிமையை உறுதிசெய்வதோடு எங்களின் பன்முகத்தன்மையை பாதுகாக்கிற ஒரு நல்லஆட்சியைக் கொடுங்கள் என்கிற எம்மக்களின் கோரிக்கை சீட்டேஅவர்களது வாக்குச்சீட்டு.
இதை நீங்கள் மிகச்சரியாகப் புரிந்து வைத்திருப்பதாகவே இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகான உங்களது முதல்பத்திரிக்கையாளர் சந்திப்பு கூறுகிறது. அந்தச் சந்திப்பில் நீங்கள்கூறிய கீழ்க்காணும் இரண்டுவிஷயங்கள் மிக முக்கியமானவையாக எனக்குப்படுகின்றன.
1) இந்தத் தேர்தலில் மிகப்பெரிய வினையாற்றியது விவசாயிகளின்பிரச்சினைகள்தான்2) எப்படி நடந்துகொள்ளக் கூடாதுஎன்பதை நான் திருமோடியிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன்.
இவை இரண்டும் மிகவும்வலிமையானவை ஆகும். நீங்கள்ஒத்துக் கொள்கிறீர்களோ இல்லையோ, நான் ஒத்துக் கொள்கிறேனோஇல்லையோ மோடிக்கான எதிர்நீங்கள்தான் என்பதை இந்தத்தேர்தல் முடிவுகள் புரிகிறபாஷையில் நமக்கு சொல்லியிருக்கின்றன.
இந்தத் தேர்தலை ஒட்டிதில்லியிலும் அயோத்தியிலும் மிகப்பெரியபேரணிகள் நடந்தன ராகுல். இருநூறுக்கும்அதிகமான விவசாய சங்கங்கள்ஒன்றிணைந்து தில்லியிலும் சங்பரிவார அமைப்புகள் ஒன்றிணைந்துஅயோத்தியிலும் அந்தப் பேரணிகளைநடத்தின. அவற்றின் தாக்கத்தையும் எதிர்த்தாக்கத்தையும் நாம் அவசியம் இந்தத்தேர்தல் குறித்த பரிசீலனைக்குள்கொண்டுவர வேண்டும்.
தில்லியில் கலந்துகொண்ட லட்சக்கணக்கானவிவசாய மக்களின் கண்களில்தங்கள் வாழ்க்கையைக் களவுகொடுத்தவலியும் அதை மீட்டெடுக்க வேண்டும்என்ற உறுதியும் இருந்தன. அயோத்தியில் கூடிய திரளின்கண்களில் மதவெறி மட்டுமேதிரண்டு வழிந்தது.
1) அயோத்தியில் திரண்டவர்கள் பாபர்மசூதி இருந்த இடத்தில்ராமருக்கு ஆலயம் கட்டியேதீர வேண்டும் என்றுகத்தினார்கள்2) தில்லியில் திரண்ட விவசாயிகள்தங்களுக்கு ‘ராமர் கோயிலெல்லாம் வேண்டாம். விவசாயக் கடன் தள்ளுபடிதான்வேண்டும்’ என்று முழக்கமிட்டார்கள்.
மக்கள் விவசாயிகளின் குரலைவாக்குச் சீட்டுகளின்மூலம் எதிரொலித்திருக்கிறார்கள். இந்தமுறை பாஜகவிற்கு எதிராகவாக்களித்தவர்களில் ஒரு பகுதியினர்ராம பக்தர்கள்தான். இன்னும்சொல்லப்போனால், அவர்களில் பலர்ராமர் கோவிலுக்கு ஆதரவானவர்களே. ஆக, அவர்களுக்கு ராமனைக் கும்பிடக்கோவிலுக்கு போக வேண்டும் என்றால்அதற்கு தாம் உயிரோடுஇருக்க வேண்டும் என்பதும்அதற்கு விவசாயிகள் பிழைத்திருக்கவேண்டும் என்பதும் புரிந்திருக்கிறது.
நமது நாட்டின் மொத்தமனித உழைப்பில் மூன்றில்ஒரு பங்கு விவசாயத்தொழிலாளிகளின் உழைப்பு என்றுஒரு அறிக்கை கூறுகிறது. அதுவே நமது கிரமங்களைப்பொறுத்தவரை 55 சதவிகித மனிதஉழைப்பு விவசாயத் தொழிலாளார்களுடையது என்றும் அதே அறிக்கைகூறுகிறது. இதில் ஐம்பது சதவிகிதஉழைப்பை தலித் விவசாயத்தொழிலாளர்களே வழங்குகிறார்கள்.
2014 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில்36,332 விவசாயத் தற்கொலைகள் நடந்திருக்கின்றன. அவற்றில் 16,324 பேர் விவசாயத்தொழிலாளர்கள். நடக்கும் விவசாயத்தற்கொலைகளில் விவசாயக் கூலித்தொழிலாளிகளின் தற்கொலை விகிதாச்சாரம்அதிகரித்தபடியே வருகிறது போன்றதகவல்களை ‘தேசியக் குற்றப் பதிவுஆணையத்தின் புள்ளி விவரங்கள்’ கூறுவதாக முனைவர் தி.ராஜ்பிரவீன் தனது கட்டுரைஒன்றில் கூறுகிறார்.
பீகார், மேற்கு வங்கம், உத்திர்கண்ட்ஆகிய மாநிலங்களில் விவசாயத்தற்கொலைகள் என்பது விவசாயத்தொழிலாளிகளின் தற்கொலையாகவே உள்ளது. இதற்கான காரணம் விவசாயிகளால்விவசாயத்தை விட்டுவிட்டு வேறுதொழிலுக்கு ஏதோஒரு புள்ளியில் நகர்ந்துவிடமுடியும். ஆண்டைகளால் முதலாளியாக முடியும். ஆனால் விவசாயத் தொழிலாளிகளால்வேறு தொழிலுக்கு அவ்வளவுஎளிதாக மாறிவிட முடியாது. அதனால்தான் வேறுவழியே இல்லாதபோதுஅவன் தற்கொலை செய்துகொள்கிறான்.
விவசாயிகளின் கீழ்க்காணும் பிரதானகோரிக்கைகளான,
1) விளைவிக்க ஆகும் செலவின்ஒன்றரை மடங்கில் ஆதரவுவிலை வேண்டும்2) ஏதுமற்று கையறு நிலையில்இருக்கக்கூடிய விவசாயிகளின் கடனைதள்ளுபடி செய்ய வேண்டும்.
ஆகிய இரண்டுமே நியாயமானவையும்நிறைவேற்றக் கூடியவையுமே ஆகும். நாடாளுமன்றத்தைக் கூட்டி மூன்றுவாரங்கள் தங்களது இந்தஇரண்டு கோரிக்கைகளைப் பற்றிமட்டுமே விவாதிக்க வேண்டும்என்பது அவர்களது வேண்டுகோள். அதைக்கூட ஏற்க மறுத்ததுபாஜக அரசு.
கேரளாவில், தமிழகத்தில், கர்நாடகாவில் பேரிடர்கள்ஏற்பட்ட பொழுது பாஜகவினர்மிகத் திமிரோடு நடந்துகொண்டார்கள். தமிழர்கள் என்னபாஜகவிற்கா ஓட்டுப் போட்டார்கள். எங்களுக்கு ஓட்டுப்போடாத உங்களுக்குநாங்கள் ஏன் நிவாரணம் வழங்கவேண்டும் என்றெல்லாம்கூட அந்தக்கட்சியின் தேசியச் செயலாளர்தமிழ் மண்ணில் நின்றுகொண்டுதமிழிலேயே பேசினார்.
தன் கையறு நிலைகண்டுதமிழக விவசாயிகளும் விவசாயத்தொழிலாளர்களும் அனுபவித்த வலியைஅந்த மாநிலத்து விவசாயியும்விவசாயத் தொழிலாளியும் உணரமுடிந்திருக்கிறது என்பதையே இந்ததேர்தல் முடிவு காட்டுகிறது.
உழைப்பவைன் வலியை உணர்வதற்குமொழியெல்லாம் தடை இல்லை ராகுல்.
அதனால்தான் மக்கள் அதற்குஇப்போது சரியாக பதில்கொடுத்திருக்கிறார்கள்.
தோழர் திருமாவளாவன் அவர்கள்கூறிய ஒன்றை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என் பிரியத்திற்குரிய ராகுல்
ஐந்து மாநிலங்களில் நடந்ததேர்தலை அம்பேத்கருக்கும் மனுவிற்கும்இடையே நடந்த ஒருபோராகவே அவர் கருதினார். ஆம், அம்பேத்கர்இயற்றிய இந்திய அரசமைப்புசட்டத்திற்கும் மனு எழுதிய மனுதர்மசாஸ்திரத்திற்கும் இடையே நடந்தபோர் என்று அவர்கூறியது முற்றிலும் சரி.
இந்திய அரசமைப்பு சட்டம்அனைவரும் சட்டத்தின் முன்சமம் என்கிறது. மனுசாஸ்திரம் அந்த சமத்துவத்தைமறுக்கிறது. குழந்தைத் திருமணத்தை அம்பேத்கர்இயற்றிய இந்திய அரசமைப்புசட்டம் குற்றம் என்கிறது. மனுவின் கொள்ளுப்பேரன் ஆதித்யநாத்தமது கட்சி ஆட்சிக்குவந்தால் ராஜஸ்தானில் அதற்குசட்டப் பாதுகாப்பு தரும்என்கிறார்.
இப்போதுகூட பாருங்கள் ராகுல்,
தீண்டாமை ஒழிப்பு சட்டத்தைஉச்சநீதி மன்றம் நீக்கியபிறகு மத்தியஅரசு அதில் சிலசீர்திருத்தங்களை செய்து அமலுக்குகொண்டுவந்ததே தங்கள் தோல்விக்கானகாரணம் என்று அவர்கள்பரிசீலிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
அவர்கள் அங்கிருந்து நகரவேமாட்டார்கள்.
இப்போதுகூட அந்த எளியமக்கள் உங்களை தேர்ந்தெடுத்திருப்பதற்கு காரணம் மனுவாதிகளுக்குஎதிரான, பன்முகத் தன்மையை சிதைப்பவர்களுக்கு எதிரான போரில் நீங்கள்அவர்களுக்கான கருவி என்று கருதுவதால்தான். மற்றபடி, நீங்கள் மனுவிற்குஎதிரானவர் என்பதை, விவசாயிகளுக்கு ஆதரவானவர்என்பதை, பன்முகத்தன்மையை தாங்கிப்பிடிப்பவர் என்பதை எல்லாம்இனிதான் நிறுவ வேண்டும்.
எம் அப்பாவி மக்கள்மோடியை வீழ்த்த வேண்டும்என்றால் நீங்கள் வேண்டும்என்பதை உணர்ந்திருக்கிறார்கள். அப்படிமட்டும் அல்ல நான்உங்களவன் என்று நீங்கள்நிறுவிவிட்டால் போதும், என்பிரியத்திற்குரிய ராகுல் அவர்களேஇன்னும் முப்பது ஆண்டுகளுக்கானஅவர்களுக்கான ஒரு தலைவன் கிடைத்துவிட்டமகிழ்ச்சியில் அவர்கள் உங்களைக்கொண்டாடித் தீர்ப்பார்கள்.
”இதுதங்களுக்கான வெற்றிகரமான தோல்வி” என்று பாஜகவின் தமிழகத்துதலைவர் திருமதி தமிழிசைகூறினார். அதை கிண்டல் செய்துநிரவிவிட்டோம்தான். ஆனாலும் அவர்கூறியதில் உண்மை இல்லாமல்இல்லை ராகுல்.
திரிபுராவில் நாங்கள் தோற்றாலும்எங்களுக்கு கிடைத்த வாக்குகளின்அளவும் விகிதாச்சாரமும் மீண்டும்அங்கு வருவோம் என்றநம்பிக்கையை எங்களுக்குத் தந்திருக்கிறது. கிட்டத்தட்ட இதே மாதிரியான வாக்குகளைஇப்போது பாஜகவும் ராஜஸ்தானிலும் மத்தியப் பிரதேசத்திலும்பெற்றிருக்கிறது. இரண்டையும் ஒப்பிட்டுபார்க்கும்போது திருமதி தமிழிசைஅவர்களின் கூற்றை அவ்வளவுஎளிதாக நிராகரித்துவிட முடியாதுராகுல்.
கொஞ்சம் கசக்கும்தான், காங்கிரசுக்கும் பாஜகவிற்கும்அவ்வளவு பெரிதாக எந்தவித்தியாசமும் இல்லை என்பதைநீங்கள் உணரவேண்டும் என்பிரியத்திற்குரிய ராகுல்.
ரஃபேல் ஊழலுக்கு எதிராகநீங்கள் முழங்குவது ஒருநம்பிக்கையைத் தருகிறது. ஆனால்அவர்களுக்கு ரஃபேல் என்றால்காங்கிரசுக்கு போபர்ஸ் என்பதைநிராகரித்துக் கடந்துவிட முயற்சிக்காதீர்கள்.
மசூதியை இடித்தது அவர்கள்என்றால் அவர்கள் இடிக்கவேடிக்கை பார்த்தது அன்றைக்குபதவியில் இருந்த காங்கிரஸ்என்பதையும் போகிற போக்கில்நீங்கள் நிராகரித்துவிடக் கூடாது.
பெருமுதலாளிகளுக்கு அவர்கள் மட்டும்அல்ல காங்கிரசும் விசுவாசமாகத்தான் கடந்த காலத்தில் இருந்ததுஎன்பதையும் நீங்கள் நிராகரித்துவிடக் கூடாது.
அப்படிச் செய்வீர்கள் எனில்மீண்டும் ஒருமுறை நாங்கள்தோற்றுப் போவோம்.
பலம் வாய்ந்த பாஜகவைஎதிர்கொள்ள உங்களால் மட்டும்இயலாது என்பதை நீங்கள்உணர்ந்திருப்பதுகூட எமக்கான பலம்பிரியத்திற்குரிய ராகுல். அதேநேரம் அதை நடைமுறைப் படுத்துவதில், குறிப்பாக மாயாவதி மற்றும்அகிலேஷ் ஆகியோருடனான உங்கள்கட்சியின் நடைமுறை நிறையமாற வேண்டும்.
தேசம் முழுக்க பாஜகவிற்குஎதிரான ஒவ்வொரு மனிதனையும்ஓரணிப்படுத்த வேண்டும். அதற்குநீங்கள் இன்னும் உழைக்கவேண்டும்.
உங்களது வயதில் உங்களதுபக்குவமும் கீழிறங்கும் தன்மையும்நான் அறிந்ததுதான். ஆனால்மக்கள் தோற்றுப் போகக்கூடாதுஎன்றால் நீங்கள் இன்னும்கீழிறங்கி இன்னும் அதிகமாய் வேலை பார்க்கவேண்டும்.
எனக்குத் தெரியும் ராகுல்,
அதை நீங்கள் செய்வீர்கள்.
நன்றி.
அன்புடன்,இரா.எட்வின்
.
Published on January 04, 2019 04:20
January 1, 2019
நாங்கள் ஒன்றிணைவதில் உங்களுக்கும் ....
திருச்சி உழவர்சந்தை மைதானம் சமீபத்தில் சந்தித்த மாநாடுகளில் மூன்று மிக முக்கியமானவை.
மூன்று வண்ணங்களின் மாநாடுகளென அவற்றைக் கொள்ளலாம்.
ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு சித்தாந்தத்தின் குறியீடு.
உண்மையை சொல்வதெனில் இரண்டு மாநாடுகள்தான் மனிதர்கள் கலந்துகொண்ட மாநாடுகள். மற்றொன்று ஆயிரக்கணக்கான நாற்காலிகளும் ஒரு பத்துப் பதினைந்து மனிதர்களும் கலந்துகொண்ட மாநாடு.
முதலில் நடந்தது செம்படை மாநாடு
அதற்கடுத்தது காவி மாநாடு
இறுதியாய் நடந்தது கருஞ்சட்டை மாநாடு
இதற்கு ஊடாக சென்னையை பல மணிநேரம் ஸ்தம்பிக்கவைத்த ஒரு நீலசட்டை பேரணி
சென்னையில் நடந்த நீலசட்டை பேரணியை கண்கூடாகப் பார்த்த சமூக ஆர்வலர் என்று தன்னைத் தானே அர்த்தம் புரியாமல் பிரகடனப்படுத்திக் கொள்ளும் கஸ்தூரி அவர்கள் தனது பயணத்தை சில மணிநேரம் அந்தப் பேரணி முடக்கிப் போட்டதால் கொதித்துப்போய் கொந்தளித்திருந்தார்.
இப்போது மரியாதைக்குரிய தமிழிசையின் முறை. சிவப்பு, நீலம், கருப்பு என்பதெல்லாம் தங்களை ஒருபோதும் தொந்தரவு செய்யமுடியாத வண்ணங்கள் என்று கூறியவர் அத்தோடு நிறுத்தி இருக்கலாம். அப்படி நிறுத்தி இருந்தால் அவர் எப்படி அவராக இருக்க முடியும்?
சிவப்பு என்பது இடதுசாரிகளின் நிறமல்லவாம். அது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் நிறமாம். கருப்பும் நீலமும் அய்யப்பனின் வண்ணமாம்.சகோதரி தமிழிசை அவர்களே,
மேல்மருவத்தூர் எவ்வளவு காலம் தாயே? திரு பங்காரு அடிகளார் ஆசிரியப் பணியில் இருந்து எப்போது தன்னை விடுவித்துக் கொண்டார்? 1989-90 வாக்கில் அவர் தான் ஆசிரியராய்ப் பணியாற்றிய காலத்தில் தமக்கு வரவேண்டிய நிலுவை பணப்பலனைக் கோரி விண்ணப்பித்தார் என்று நினைக்கிறேன். அதைக்கூட பிறகு பார்க்கலாம். எப்போது இருந்து அந்தக் கோவிலுக்கு செஞ்சட்டை பக்தர்கள் வரத் தொடங்கினார்கள் என்பதையும் எல்லாம் பிறகு பார்க்கலாம்.
சிவப்பு ஆதிபராசக்தியின் நிறம் என்கிறீர்கள். ஆமாம் என்றே கொள்வோம். இது தெரிந்த உங்களுக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் கருவறை வரைக்கும் தங்களது மாதவிடாய் காலத்திலும் பெண்கள் நுழையலாம், வழிபாடு நடத்தலாம் என்ற உண்மை தெரியாமலிருக்கும் என்று நான் நம்பவில்லை. ஒருக்கால், உங்களுக்கு அந்த உண்மை தெரியாது என்றால் அதுகுறித்து விசாரித்துவிட்டு வந்து பேசுவதென்றாலும் அதுவரைக்கும் காத்திருக்கிறேன்.
இது ஆன்மீக பூமி என்கிறீர்கள், சரி அப்படியேகூட இருக்கட்டும். சிவப்பு என்பது கம்யூனிஸ்டுகளின் நிறமல்ல அது எங்கள் ஆதிபராசக்தியின் நிறம் என்கிறீர்கள், சரி, அதுவும் அப்படியே இருக்கட்டும்.
இது ஆன்மீக பூமி எனில், குறைந்தபட்சம் சிவப்பு, நீலம், கருப்பு சட்டைக்காரர்களைத் தவிர மற்ற அனைவரும் இறைவனின் குழந்தைகள் என்பதுதானே எதார்த்தமாக இருக்க வேண்டும்.
பிறகு ஏன் தாயே சபரிமலைக்கு பெண்கள் வருதற்கு இத்தனை கோவப்படுகிறீர்கள்?
கருப்பு சிவப்பு நீலம் ஆகியவை வேறு வேறு வண்ணங்களாக இருக்கலாம். எங்களுக்குள் சின்னச் சின்னதாய், விடுங்கள், கொஞ்சம் பெரிதாகக்கூட பிரச்சினைகள் இருக்கலாம். அதன்பொருட்டு எங்களுக்குள் பலநேரம் சண்டைகூட உண்டுதான். அதை எல்லாம் மறுக்கவில்லை.
ஆனால் ஒடுக்கப்பட்ட உழைக்கிற மக்களின் உரிமைக்கான போராளிகளின் வண்ணங்கள் அவை. நீங்கள் சொன்னதுபோல் வெறும் சட்டைகளின் நிறங்கள் அல்ல.
ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களின் வாழ்வுரிமை என்பது எங்களது பொதுத்திட்டம்.
ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களின் பிரச்சினைகுறித்த புரிதலில், அவற்றிற்கான காரணங்களைக் கண்டடைவதில், அவற்றிற்கெதிரான போராட்ட செயல்திட்டத்தில், நடைமுறைகளில் எங்களுக்குள் பிரச்சினைகள் இருக்கலாம்.
இருக்கலாம் என்ன இருக்கிறதுதான்.
அ
உட்கார்ந்துபேசி ஒரு குறைந்தபட்ச செயல் திட்டத்தோடு எங்களால் எப்போது வேண்டுமானாலும் களத்திற்கு தயாராகிவிட முடியும்.
சிவப்பு தனியாக, நீலம் தனியாக, கருப்பு தனியாக என்று நாங்கள் தனித்தனியாக களமேறும்போதே இவ்வளவு பதட்டப்படுகிறீர்களே தமிழிசை, ஒன்றாய் சேர்ந்து களத்திற்கு வந்தோம் எனில்….
வண்ணத்தில் சட்டை அணிவதற்கும் ஏற்றுக்கொண்ட வண்ணமாகவே, அதன் சித்தாந்தத்தோடு கரைவதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது சகோதரி.
நாங்கள் இரண்டாவது ரகம்
உண்மையை சொன்னால் நீங்களே காவி அல்ல . காவி உங்களை ஒருபோதும் முழுமையாய் ஏற்காது சகோதரி.
நீங்கள் எங்கள் சகோதரி என்றும் உங்களுக்காகவும்தான் போராடுகிறோம் என்றும் உங்களுக்கு நன்கு புரியும் என்பதை தெரிந்தேதான் உங்களிடம் அந்த உண்மையை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
என்ன செய்வது,
தூங்குகிற மாதிரி நடிப்பவர்களையும் பேட்டி குடுப்பவர்களையும் ஒன்றும் செய்ய முடியாது.
உங்கள் பொறுப்பு பறிக்கப்படும் நாளில் தெரியும் எல்லாக் காவியும் காவி அல்ல மேல்தட்டுக் காவியே காவி என்ற உண்மை.
நாங்கள் ஒன்றிணைவதில் உங்களுக்கும் பங்கு உண்டு தமிழிசை.
அந்த வகையில் உங்களுக்கு எங்களின் நன்றி
#சாமங்கவிந்து ஒரு மணி இருபத்திஒன்பது நிமிடம்
01.01.2019
மூன்று வண்ணங்களின் மாநாடுகளென அவற்றைக் கொள்ளலாம்.
ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு சித்தாந்தத்தின் குறியீடு.
உண்மையை சொல்வதெனில் இரண்டு மாநாடுகள்தான் மனிதர்கள் கலந்துகொண்ட மாநாடுகள். மற்றொன்று ஆயிரக்கணக்கான நாற்காலிகளும் ஒரு பத்துப் பதினைந்து மனிதர்களும் கலந்துகொண்ட மாநாடு.
முதலில் நடந்தது செம்படை மாநாடு
அதற்கடுத்தது காவி மாநாடு
இறுதியாய் நடந்தது கருஞ்சட்டை மாநாடு
இதற்கு ஊடாக சென்னையை பல மணிநேரம் ஸ்தம்பிக்கவைத்த ஒரு நீலசட்டை பேரணி
சென்னையில் நடந்த நீலசட்டை பேரணியை கண்கூடாகப் பார்த்த சமூக ஆர்வலர் என்று தன்னைத் தானே அர்த்தம் புரியாமல் பிரகடனப்படுத்திக் கொள்ளும் கஸ்தூரி அவர்கள் தனது பயணத்தை சில மணிநேரம் அந்தப் பேரணி முடக்கிப் போட்டதால் கொதித்துப்போய் கொந்தளித்திருந்தார்.
இப்போது மரியாதைக்குரிய தமிழிசையின் முறை. சிவப்பு, நீலம், கருப்பு என்பதெல்லாம் தங்களை ஒருபோதும் தொந்தரவு செய்யமுடியாத வண்ணங்கள் என்று கூறியவர் அத்தோடு நிறுத்தி இருக்கலாம். அப்படி நிறுத்தி இருந்தால் அவர் எப்படி அவராக இருக்க முடியும்?
சிவப்பு என்பது இடதுசாரிகளின் நிறமல்லவாம். அது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் நிறமாம். கருப்பும் நீலமும் அய்யப்பனின் வண்ணமாம்.சகோதரி தமிழிசை அவர்களே,
மேல்மருவத்தூர் எவ்வளவு காலம் தாயே? திரு பங்காரு அடிகளார் ஆசிரியப் பணியில் இருந்து எப்போது தன்னை விடுவித்துக் கொண்டார்? 1989-90 வாக்கில் அவர் தான் ஆசிரியராய்ப் பணியாற்றிய காலத்தில் தமக்கு வரவேண்டிய நிலுவை பணப்பலனைக் கோரி விண்ணப்பித்தார் என்று நினைக்கிறேன். அதைக்கூட பிறகு பார்க்கலாம். எப்போது இருந்து அந்தக் கோவிலுக்கு செஞ்சட்டை பக்தர்கள் வரத் தொடங்கினார்கள் என்பதையும் எல்லாம் பிறகு பார்க்கலாம்.
சிவப்பு ஆதிபராசக்தியின் நிறம் என்கிறீர்கள். ஆமாம் என்றே கொள்வோம். இது தெரிந்த உங்களுக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் கருவறை வரைக்கும் தங்களது மாதவிடாய் காலத்திலும் பெண்கள் நுழையலாம், வழிபாடு நடத்தலாம் என்ற உண்மை தெரியாமலிருக்கும் என்று நான் நம்பவில்லை. ஒருக்கால், உங்களுக்கு அந்த உண்மை தெரியாது என்றால் அதுகுறித்து விசாரித்துவிட்டு வந்து பேசுவதென்றாலும் அதுவரைக்கும் காத்திருக்கிறேன்.
இது ஆன்மீக பூமி என்கிறீர்கள், சரி அப்படியேகூட இருக்கட்டும். சிவப்பு என்பது கம்யூனிஸ்டுகளின் நிறமல்ல அது எங்கள் ஆதிபராசக்தியின் நிறம் என்கிறீர்கள், சரி, அதுவும் அப்படியே இருக்கட்டும்.
இது ஆன்மீக பூமி எனில், குறைந்தபட்சம் சிவப்பு, நீலம், கருப்பு சட்டைக்காரர்களைத் தவிர மற்ற அனைவரும் இறைவனின் குழந்தைகள் என்பதுதானே எதார்த்தமாக இருக்க வேண்டும்.
பிறகு ஏன் தாயே சபரிமலைக்கு பெண்கள் வருதற்கு இத்தனை கோவப்படுகிறீர்கள்?
கருப்பு சிவப்பு நீலம் ஆகியவை வேறு வேறு வண்ணங்களாக இருக்கலாம். எங்களுக்குள் சின்னச் சின்னதாய், விடுங்கள், கொஞ்சம் பெரிதாகக்கூட பிரச்சினைகள் இருக்கலாம். அதன்பொருட்டு எங்களுக்குள் பலநேரம் சண்டைகூட உண்டுதான். அதை எல்லாம் மறுக்கவில்லை.
ஆனால் ஒடுக்கப்பட்ட உழைக்கிற மக்களின் உரிமைக்கான போராளிகளின் வண்ணங்கள் அவை. நீங்கள் சொன்னதுபோல் வெறும் சட்டைகளின் நிறங்கள் அல்ல.
ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களின் வாழ்வுரிமை என்பது எங்களது பொதுத்திட்டம்.
ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களின் பிரச்சினைகுறித்த புரிதலில், அவற்றிற்கான காரணங்களைக் கண்டடைவதில், அவற்றிற்கெதிரான போராட்ட செயல்திட்டத்தில், நடைமுறைகளில் எங்களுக்குள் பிரச்சினைகள் இருக்கலாம்.
இருக்கலாம் என்ன இருக்கிறதுதான்.
அ
உட்கார்ந்துபேசி ஒரு குறைந்தபட்ச செயல் திட்டத்தோடு எங்களால் எப்போது வேண்டுமானாலும் களத்திற்கு தயாராகிவிட முடியும்.
சிவப்பு தனியாக, நீலம் தனியாக, கருப்பு தனியாக என்று நாங்கள் தனித்தனியாக களமேறும்போதே இவ்வளவு பதட்டப்படுகிறீர்களே தமிழிசை, ஒன்றாய் சேர்ந்து களத்திற்கு வந்தோம் எனில்….
வண்ணத்தில் சட்டை அணிவதற்கும் ஏற்றுக்கொண்ட வண்ணமாகவே, அதன் சித்தாந்தத்தோடு கரைவதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது சகோதரி.
நாங்கள் இரண்டாவது ரகம்
உண்மையை சொன்னால் நீங்களே காவி அல்ல . காவி உங்களை ஒருபோதும் முழுமையாய் ஏற்காது சகோதரி.
நீங்கள் எங்கள் சகோதரி என்றும் உங்களுக்காகவும்தான் போராடுகிறோம் என்றும் உங்களுக்கு நன்கு புரியும் என்பதை தெரிந்தேதான் உங்களிடம் அந்த உண்மையை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
என்ன செய்வது,
தூங்குகிற மாதிரி நடிப்பவர்களையும் பேட்டி குடுப்பவர்களையும் ஒன்றும் செய்ய முடியாது.
உங்கள் பொறுப்பு பறிக்கப்படும் நாளில் தெரியும் எல்லாக் காவியும் காவி அல்ல மேல்தட்டுக் காவியே காவி என்ற உண்மை.
நாங்கள் ஒன்றிணைவதில் உங்களுக்கும் பங்கு உண்டு தமிழிசை.
அந்த வகையில் உங்களுக்கு எங்களின் நன்றி
#சாமங்கவிந்து ஒரு மணி இருபத்திஒன்பது நிமிடம்
01.01.2019
Published on January 01, 2019 22:56
December 31, 2018
வாய்க்கிற இடமெங்கும் என்னைப் பற்றியும்
பிரியத்திற்குரிய தோழர் பிரபஞ்சன்,வணக்கம்.அநேகமாக இன்னும் கொஞ்ச நேரத்தில் புத்தாண்டு வந்துவிடும். யார் கண்டது, நான் இதை முடிப்பதற்குள் அது வந்தும் இருக்கலாம்.உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்ல வேண்டும். ‘அதெல்லாம் வேண்டாம் போடா’ என்று சொல்லிவிட்டு போய் சேர்ந்திருக்கிறீர்கள்.வருடா வருடம் நான் வணங்கி வாழ்த்தும் தோழர்களுள் நீங்களும் ஒருவர்.மரணத்தால் இவ்வளவு சீக்கிரம் உங்களது விலாசத்தைக் கண்டடைய முடியாது என்று உங்களைவிட அதிகமாய் நம்பியவன் நான். இன்றைய எனக்கு எதேனும் இருக்கும் என்றால் அதற்கு முக்கியமான காரணங்களுள் நீங்கள் மிக முக்கியமானவர். என் நூல்களுக்கு ஒரு பெரிய விழா எடுத்து உங்களை அழைத்து உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன்.”மலம்பார்த்து மலம்பார்த்து” என்றொரு கட்டுரையை ‘சுகன்’ னில் எழுதியிருந்தேன். அதை வாசித்திவிட்டு நீங்கள் சுகனோடு பேசியிருக்கிறீர்கள். பிரிதொரு சமயம் அந்தக் கட்டுரை குறித்து கொஞ்சம் நீளமாகவே மக்கள் தொலைக்காட்சியில் உரையாடியிருக்கிறீர்கள்.அதை ஒட்டி சுகனது விழாவில் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. அந்தச் சமயத்தில் என்னுடைய சில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு போயிருக்கிறது. ”ப்ரோஸ் நல்லா வருது. நகர்ந்துடாதீங்க” என்று தட்டிக்கொடுத்தீர்கள்“லோமியா” என்ற நாவலின் விமர்சனக்கூட்டத்திற்கு வைகறை அய்யா அழைத்திருந்தார். அப்போது சைதாப்பேட்டையில் அவரது பதிப்பகம் இருந்தது. நீங்கள்தான் சிறப்பு விருந்தினர். மேடைப் ப்ரொட்டோகால்படி நீங்கள்தான் கடைசியாகப் பேச வேண்டும். தஞ்சாவூர்க் கவிராயர் பேசியபிறகு நான் பேசி இறுதியாய் நீங்கள் பேச வேண்டும்.“இன்று எட்வின் நிறைய பேசட்டும். நான் சுருக்கிக்கறேன். எட்வினது பேச்சைக் கேளுங்கள்” என்று இறுதியாய் பேச வைத்த பெருந்தன்மையாளர் நீங்கள்.வைகறை அய்யா அழைப்பிதழில் என்பெயருக்குப் முன்னால் ‘எழுத்தாளர்’ என்று போட்டிருந்தார். அதுகுறித்து நான் கூச்சத்தோடு குறிப்பிட்டபோது எழுந்துநின்று “எழுத்தாளர் எட்வின்” என்று மூன்றுமுறை கூறி அனைவரையும் வாழ்த்த வைத்தவர் நீங்கள்.அந்த வகையில் என்னை எழுத்தாளர் என்று மேடையில் முதன் முதலில் விளித்த மனிதர் நீங்கள்.அந்த நிகழ்ச்சி முடிந்து இரண்டாம்நாள் தச்சன் நடராஜன் அழைத்து அலைபேசியை வைகறை அய்யாவிடம் கொடுக்கிறான்.“இருக்கிற கட்டுரைகளையெல்லாம் தொகுத்து நாளைக்குள் அனுப்புங்க எட்வின்” என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார்.எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகுதான்
தச்சன் நாகராஜனும் தஞ்சாவூர் கவிராயரும் என்ன நடந்தது என்று கூறினார்கள். அந்தக் கூட்டம் முடிந்ததும் புறப்பட்டு விட்டேன். என்னுடைய அந்த உரையை ஒரு சிறுநூலாக வெளியிட வேண்டும் என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். எனது கட்டுரைகள் குறித்து பேச்சு நகர்ந்திருக்கிறது. வைகறை அய்யாவின் கையைப் பிடித்துக் கொண்டு என் எழுத்தை நூலாக்கக் கோரியிருக்கிறீர்கள்.அப்படித்தான் எனது முதல் நூலான “அந்தக் கேள்விக்கு வயது 98” வந்தது.அச்சுக்கு போயிருக்கிற நூல்களையும் சேர்த்தால் மொத்தம் 13 நூல்கள் தோழர். எப்படி என் நன்றியை சொல்வது?இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பள்ளிக்கல்வித்துறையின் கருத்துக் கேட்புக் கூட்டம் ஒன்றில் நீங்கள், நான், கல்யாணி அய்யா, இமையம், ரவிகுமார் ஆகியோர் பங்கேற்கிறோம். PISA அறிக்கை குறித்து நான் பேசியதையும் தோழர் ரவிக்கும் எனக்குமான கருத்து மோதல்கள் எப்படி ரசித்தீர்கள் நீங்கள்.வெளியே வந்ததும் PISA அறிக்கை குறித்து விவரம் கேட்கிறீர்கள். உடைகிறீர்கள். கல்வி காப்பாற்றப்பட வேண்டும் என்கிறீர்கள். “கனவு ஆசிரியன்” நூலை வாசித்தீர்களா என்கிறீர்கள். வாசித்து விட்டேன் என்கிறேன்.அதுமாதிரி நிறைய நூல்கள் வர வேண்டும் என்கிறீர்கள்.குழந்தைமையும் முரடும் ஒருசேர வாய்த்த மனுஷன் என்று அப்போது அங்கு வந்த கல்யாணி அய்யாவிடம் என்னைக் குறித்து கூறுகிறீர்கள்.இப்படி வாய்க்கிற இடமெங்கும் என்னைப் பற்றியும் பேசியிருக்கிறீர்கள் தோழர்.உங்கள் கைபிடித்து கண்கள் சுரக்க நன்றி சொல்ல வேண்டும்.கொஞ்சம் பொறுங்கள். நேரே வந்து கரம் பற்றி நெகிழ்ந்து கொள்வேன்.#சாமங்கவிய சரியாய் ஒரு மணி நேரம்
31.12.2018
தச்சன் நாகராஜனும் தஞ்சாவூர் கவிராயரும் என்ன நடந்தது என்று கூறினார்கள். அந்தக் கூட்டம் முடிந்ததும் புறப்பட்டு விட்டேன். என்னுடைய அந்த உரையை ஒரு சிறுநூலாக வெளியிட வேண்டும் என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். எனது கட்டுரைகள் குறித்து பேச்சு நகர்ந்திருக்கிறது. வைகறை அய்யாவின் கையைப் பிடித்துக் கொண்டு என் எழுத்தை நூலாக்கக் கோரியிருக்கிறீர்கள்.அப்படித்தான் எனது முதல் நூலான “அந்தக் கேள்விக்கு வயது 98” வந்தது.அச்சுக்கு போயிருக்கிற நூல்களையும் சேர்த்தால் மொத்தம் 13 நூல்கள் தோழர். எப்படி என் நன்றியை சொல்வது?இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பள்ளிக்கல்வித்துறையின் கருத்துக் கேட்புக் கூட்டம் ஒன்றில் நீங்கள், நான், கல்யாணி அய்யா, இமையம், ரவிகுமார் ஆகியோர் பங்கேற்கிறோம். PISA அறிக்கை குறித்து நான் பேசியதையும் தோழர் ரவிக்கும் எனக்குமான கருத்து மோதல்கள் எப்படி ரசித்தீர்கள் நீங்கள்.வெளியே வந்ததும் PISA அறிக்கை குறித்து விவரம் கேட்கிறீர்கள். உடைகிறீர்கள். கல்வி காப்பாற்றப்பட வேண்டும் என்கிறீர்கள். “கனவு ஆசிரியன்” நூலை வாசித்தீர்களா என்கிறீர்கள். வாசித்து விட்டேன் என்கிறேன்.அதுமாதிரி நிறைய நூல்கள் வர வேண்டும் என்கிறீர்கள்.குழந்தைமையும் முரடும் ஒருசேர வாய்த்த மனுஷன் என்று அப்போது அங்கு வந்த கல்யாணி அய்யாவிடம் என்னைக் குறித்து கூறுகிறீர்கள்.இப்படி வாய்க்கிற இடமெங்கும் என்னைப் பற்றியும் பேசியிருக்கிறீர்கள் தோழர்.உங்கள் கைபிடித்து கண்கள் சுரக்க நன்றி சொல்ல வேண்டும்.கொஞ்சம் பொறுங்கள். நேரே வந்து கரம் பற்றி நெகிழ்ந்து கொள்வேன்.#சாமங்கவிய சரியாய் ஒரு மணி நேரம்
31.12.2018
Published on December 31, 2018 20:26
December 14, 2018
மக்கள் ஏன் உங்களை விரட்டி அடிக்கிறார்கள்…
“பேரிடர் ஏற்பட்டபின் மாநில அரசு அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பிவைத்து, அதனடிப்படையில் மத்திய அரசு குழு வரும் முன்பே பேரிடர் சுவடுகள் மறைந்து விடுகின்றன. காரணம் மாநில அரசு நிவாரண வேலைகளை செய்துவிடுகிறது.பேரிடர் சுவடு மறைவதற்கு முன்பே மத்திய அரசுக் குழுவினர் பார்வையிட வேண்டும்”என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் திரு ப.சிதம்பரம் அவர்கள் கூறியிருக்கிறார்..பேரிடர் ஏற்பட்டு இரண்டு மூன்று நாட்கள் கழித்து மத்திய ஆய்வுக்குழு வந்து பார்வையிடுவதால் எந்தப் பயனும் இருக்காது காரணம் பேரிடர் ஏற்பட்ட அடுத்த கணத்தில் இருந்து மாநில அரசு நிவாரணப் பணிகளில் இறங்கி விடும். எனவே மத்திய ஆய்வுக்குழு அந்தப் பகுதிக்கு வரும் முன்னரே அந்தப் பகுதி இயல்பு நிலைக்குத் திரும்பி விடும் என்பதே திரு சிதம்பரம் அவர்களின் நேர்காணலின் சாரம்.“கஜா” புயல் டெல்டா மாவட்டங்களை சின்னாபின்னமாக்கி ஏறத்தாழ பத்து நாட்களாகிப்போன நிலையில் மத்திய ஆய்வுக்குழு இன்று அப்பகுதியினை பார்வையிடுகிறது.இரண்டு மூன்று நாட்களிலேயே மாநில அரசு பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிடும் என்றால், பத்து நாட்களுக்குப் பிறகு இந்த ஆய்வுக்குழு அந்தப் பகுதிக்கு செல்வதால் என்ன பயன்? அந்தப் பகுதி இயல்பு நிலைக்குத் திரும்பி நாட்களாகி இருக்குமே என்றெல்லாம் யோசிக்க நாம் என்ன தொலைக்காட்சி விவாத சமூக ஆதரவாளர்களா என்ன?நாளாக நாளாக பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலை மோசமடைந்துதான் இருக்குமே தவிர அது ஒருபோதும் மேம்பாடு அடைந்துவிடாது. காரணம் திரு சிதம்பரம் அவர்கள் குறிப்பிட்டது போன்றதொரு மாநில அரசு தமிழகத்தில் இல்லை.இன்னும் ஒருபடி மேலே போய் உண்மையை சொல்வதெனில் இந்தப் பத்து நாட்களுக்குள் டெல்டா பகுதி முற்றிலும் அழிந்து போகாமல் இருப்பதற்கு காரணம் குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள், ஊழியர்கள், பொதுமக்கள் ஏன் கிழவர்கள் கிழவிகள் உள்ளிட்ட நம் ஈரப் பெருந்திரளின் உதவியும் உழைப்புமே ஆகும்.ஆகவே கஜா தாக்கிய அடுத்த நாளில் இருந்த நிலையைக் காட்டிலும் மிக மிக மோசமானதொரு நிலையைத்தான் மத்திய ஆய்வுக்குழு காண இருக்கிறது. அது எத்தகைய நிலையைக் கண்டாலும் அது ஒன்றும் பெரிதாகக் பரிந்துரைக்கப் போவதில்லை என்பதும் அப்படியே ஆய்வுக்குழு பெரிதாகப் பரிந்துரைத்தாலும் மத்திய அரசு அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளப் போவதில்லை என்பதும் திரு சிதம்பரத்திற்கு நன்கு தெரியும். வெகுகாலம் மத்திய நிதி அமைச்சராக வேலை பார்த்தவர் அவர்.நமக்கு இருக்கிற வியப்பெல்லாம் திரு எடப்பாடி அவர்கள் முதல்வராகவும் திரு பன்னீர்செல்வம் அவர்கள் துணை முதல்வராகவும் இருக்கிற இந்த மண்ணில் மத்திய ஆய்வுக்குழு வருவதற்குள் பேரிடரின் கோர சுவடுகள் மறைந்துவிடும் என்று எப்படி அவரால் கூற முடிந்தது என்பதில்தான்.ஆனால் ஒரு விஷயத்தை இங்கு இதய சுத்தியோடு ஒத்துக்கொள்ள வேண்டும். எப்போதும் இல்லாத அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தமுறை மிகச் சிறப்பாக செய்யப்பட்டன. அல்லது அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன.அதுவும் அமைச்சர் திரு உதயகுமார் அவர்களது பணி பாராட்டுவதற்குரியது. அந்த நாளின் பேரிடர் கட்டுப்பாட்டுக் குழுவின் பணிகள் மட்டும் அந்த அளவில் இல்லாது போயிருந்தால் ”கஜா” கரையைக் கடந்தபோதே ஆயிரக்கணக்கில் மரித்துப் போயிருப்பார்கள். அந்த அளவில் அன்றைய உயிர்ச்சேதத்தை தடுத்து நிறுத்தியதற்காக அவரையும் அவரது குழுவினரையும் நன்றியோடு வணங்குகிறேன்.ஆனால் புயல் கரை கடந்தபிறகான பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை என்பதைவிட பெருங்குரலெடுத்து வைகிற நிலையில்தான் இருக்கின்றன.“மக்கள் ஏன் எங்களை விரட்டி அடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்று திருமதி தமிழிசை கூறியிருக்கிறார். அவரையோ அவரது கட்சியின் சகாக்களையோ பொதுமக்கள் உள்ளே நுழையவிடாமல் தடுத்து விரட்டியிருக்கிறார்கள் என்று அவரது கூற்றில் இருந்து தெரிகிறது. தேசத்தை ஆள்கிற ஒரு பெருங்கட்சியின் இந்த மாநிலத் தலைவரை மக்கள் இப்படி விரட்டியிருக்கிறார்கள் என்றால் அவர்கள் எந்த அளவிற்கு மக்களிடம் இருந்தும் இந்தப் பேரிடரில் இருந்தும் அந்நியப்பட்டுப் போயிருக்கிறார்கள் என்பதை நம்மால் உணர முடிகிறது.மத்திய அரசுதான் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து அந்நியப்பட்டிருக்கிறது, மாநில அரசும் ஆளுங்கட்சியும் பாதிக்கப்பட்டுள்ள மக்களோடும் மீட்புப் பணிகளோடும் இரண்டறக் கலந்திருக்கிறார்கள் என்றும் இதற்கு பொருளல்ல.ஹெலிகாப்டரில் பறந்து சேதங்களைப் பார்வையிட்ட முதல்வரும் துணை முதல்வரும் முழுமையாகப் பார்வையிடாமல் பாதியிலேயே திரும்பி இருக்கிறார்கள். மழை பெய்வதால் முழுமையாகப் பார்வையிட முடியவில்லை என்று கூறுகிறார்கள்.அடுத்தநாளே இருவரும் மாண்புமிகு பிரதமர் அவர்களைப் சந்திப்பதற்காக தில்லி சென்றனர். அவர்கள் சென்றபிற்கு சென்னையில் விடாது மழை கொட்டித் தீர்த்தது.’மழை பெய்வதால் முழுமையாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல முடியவில்லை என்ற முதல்வர் இப்போது சென்னையில் மழை பெய்வதால் சென்னைக்கு வராமல் தில்லியிலேயே தங்கிவிடப் போகிறாரா?’ என்று யாரோ ஒரு நடிகர் தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாகத் தெரிகிறது.மேலோட்டமாகப் பார்ப்பதற்கு கிண்டல் மாதிரித் தோன்றினாலும் வலி கலந்த வேதனைக் குரல் இது.திருமதி தமிழிசை தாம் பாதிக்கப்பட்ட மக்களால் விரட்டியடிக்கப்பட்டதாகக் கூறுகிறார். மழை காரணமாகத் தாம் திரும்பிவிட்டதாக முதல்வர் கூறுகிறார். உள்ளது உள்ளபடி கூறுவதென்றால் இருவரும் மக்களிடம் போகமுடியாமல் போனதற்கு மக்களின் எதிர்நிலையும் கோவமும்தான் காரணம்.வாய்க்காலில் தேங்கியிருந்த அழுக்கான நீரை எடுத்துதான் பல முகாம்களில் உணவு சமைத்திருக்கிறார்கள். இது சுகாதாரக் கேடானது, நோயைக் கொண்டுவரக் கூடியது, குறிப்பாகக் குழந்தைகளைக் காவுகேட்கக் கூடியது. எனவே இந்த அசுத்தமான தண்ணீரில் சமைப்பதை நிறுத்துங்கள் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் முத்தரசன் கூறியிருக்கிறார். வேறு தண்ணீரே இல்லை. பசியினால் அழுதழுது அந்தக் குழந்தைகள் செத்துவிடாமல் தடுப்பதற்காகவே அந்த அசுத்தமான தண்ணீரை எடுத்து சமைப்பதாக அவர்கள் தோழர் முத்தரசனிடம் கூறியிருக்கிறார்கள்.தங்களுக்கு ஆளொன்றுக்கு நான்கு என்ற எண்ணிக்கைக்கு குறையாத அளவில் முகாம்கள் ஒதுக்கப் பட்டிருப்பதாகவும், ஆனால் நிதி என்பது சுத்தமாகத் தம்மிடமில்லை என்றும் தம்மிடம் கிராம நிர்வாக அலுவலர்கள் புலம்பியதாகவும் தோழர் கூறுகிறார்.புயல் கோரத் தாண்டவம் ஆடப்போகிறது என்பது அரசிற்கு வெகுமுன்னமே தெரியும். அதன் விளைவுகள் எவ்வளவு கடுமையாக இருக்கும், மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப் படுவார்கள் என்பதை எல்லாம் இந்த அரசு முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்தது.மக்கள் அரசாகக்கூட இருக்க வேண்டாம். குறைந்தபட்சம் மக்களைப் பற்றிக் குறைந்த அளவிற்கு அக்கறை கொண்ட அரசாக இருந்தாலேகூட கீழ்க்காணும் விஷயங்கள்மீது இந்த அரசு கவனம் குவித்திருக்கும். ஒரு தீவிரமான புயல் கரையைக் கடக்குமானால் கீழ்க்காணும் பாதிப்புகள் அரிச்சுவடியானவை1) மின்சாரம் துண்டிக்கப்படும்
2) குடிதண்ணீர்ப் பிரச்சினை ஏற்படும்
3) குழந்தைகளுக்கான பால் தேவை ஏற்படும்
4) உணவு பற்றாக்குறை ஏற்படும்
5) கொசுப் பிரச்சினை தாங்க முடியாத அளவில் இருக்கும்
6) நோய்களும் தொற்று நோய்களும் சேற்றுப் புண்ணும் ஏற்படும்
7) இயற்கை உபாதைகளுக்காக மக்கள் அவஸ்தைபட நேரிடும்
8) பாம்புகளும் பூச்சிகளும் ஊருக்குள் படை எடுக்கும்
9) இந்தக் காலத்தில் மாதவிடாய் சுழற்சிக்குள் சிக்கும் பெண்களுக்கு நாப்கின் தேவை ஏற்படும்இவற்றை மிகச் சாதரனமான ஒரு மனிதனால்கூட முன்உணர முடியும். எனில், மாபெரும் அனுபவம் மிக்க ஆளுமைகளை உள்ளடக்கிய ஒரு அரசு எந்திரம் இதை உணர முடியாமல் போவதற்கு வாய்ப்பே இல்லை.புயல் கரையைக் கடந்தப் புள்ளியில் இருந்து மேற்சொன்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதை உணர முடியுமானால் அவற்றை சரிசெய்வது என்பதும் ஒரு அரசிற்கு மிகமிக எளிதான விஷயம்தான்.மின்சாரம்தான் மிக முக்கியமான விஷயம் என்பதும் அதுதான் முதலில் தடை செய்யப்படும் என்பதும் தெரிந்த அரசிற்கு அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய ‘ஜெனரேட்டர்களை பாதிப்புக்கு உள்ளாக இருக்கும் பகுதிகளுக்கு முன்கூட்டியே கொண்டுவந்துவிட முடியும்.ஒரு முதல்வரின் கூட்டத்திற்கு மின்தடை எல்லாம் ஏற்படப் போவதில்லை. ஆனாலும் ஒருக்கால் எல்லாம் தாண்டி ஒருக்கால் மின்தடை ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என்பதற்காக ஜெனரேட்டர்களை முன்னெச்சரிக்கையாகக் கொண்டு சேர்ப்பவர்களால் பேரிடர் பரிசளிக்கும் கோர இருட்டில் இருந்து மக்களை காப்பதற்கு ஜெனரேட்டர்களைக் கொண்டு வந்து இருக்க முடியும்.இருக்கிற குடிநீர்த் தொட்டிகளை எல்லாம் நல்ல தண்ணீர் கொண்டு முன்னதாகவே நிரப்பி வைத்திருக்க முடியும். முகாம்களில் தண்ணீர் பாக்கெட்டுகளை முன்னதாகவே சேகரித்து வைத்திருக்க முடியும். ஒரு அறிக்கை வெளியிட்டு கேட்டிருந்தால் போதும் பேரிடருக்குப் பிறகு மிகவும் சிரமப்பட்டு நிவாரணப் பொருட்களைக் கொண்டுவரும் தன்னார்வலர்கள் பேரிடர் ஏற்படுவதற்கு முன்னரே எந்தவித சிரமும் இன்றி கொண்டு வந்து குவித்திருப்பார்கள். அதை முறையாக மேலாண்மை செய்திருந்தாலே போதும்.உணவிற்குத் தேவையான பொருட்களை, சமைப்பதற்கான பாத்திரங்களை, தட்டுகளை தம்ளர்களை, போர்வைகளை, சோப்புகளை, நாப்கின்களை, மருந்துகளை புயலுக்கு முன்னரே கொண்டு வந்து சேர்த்திருக்க முடியும்.இவற்றை எல்லாம் செய்யாதது குற்றம் என்றால் ஈர நெஞ்சம் கொண்ட பொதுமக்கள் அனுப்பி வைக்கும் நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உரிய முறையில் பகிர்ந்தளிக்கும் வேலையை செய்யாதது பெருங்குற்றம்.பாதிக்கப்பட்ட கிராமம் ஒன்றிற்கு பொருட்களை கொண்டு சென்றிருக்கிறார்கள். கொடுத்து முடித்துவிட்டு திரும்ப இருந்தவர்களை கொஞ்சம் இருக்கச் சொல்லி சாய்ந்து கிடந்த தென்னை மரங்களில் இருந்து இளநீர்த் தேங்காய்களையும் வாழைக் காய்களையும் அந்த வேனிலே ஏற்றி அனுப்பினார்கள் அந்த மக்கள் என்ற செய்தியைப் படித்ததும் என்னை அறியாமலே கண்கள் உடைத்துக் கொண்டன.நிவாரணப் பொருட்களை முறையாக பகிர்ந்தளிக்கும் நிர்வாகத்தை சரியாக செய்யாமல் தங்களுக்கு குடிப்பதற்கு ஒரு பாட்டில் தண்ணீர் கிடைக்காதா என்று நிவாரணப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை நிறுத்துகிற அளவிற்கு அவர்களை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது அரசு. இதன் மூலம் நிவாரணம் கொண்டு வந்தவர்களை வெறுங்கையோடு அனுப்ப மனமில்லாமல் தேங்காய்களோடும் வாழைக் குழைகளோடும் அனுப்பி வைத்த மக்களை வழிப்பறிக் கொள்ளையர்களைப்போல பார்க்க வைத்திருக்கிறது இந்த அரசு.விழாக்கள், அரசுக் கொண்டாட்டங்கள், மாநாடுகள் போன்றவற்றிற்காகவெல்லாம் தற்காலிக கழிவறைகளை ஏற்படுத்தித் தரத் தெரிந்த இந்த அரசு நிர்வாகம் இயற்கை உபாதைகளால் துடித்த எம் மக்களுக்கு தற்காலிகக் கழிவறைகளை ஏற்படுத்தித் தந்திருக்க முடியும்.இத்தனை ’இல்லைகள்’ இருந்த போதிலும் மின்ஊழியர்களின் தியாகம் செறிந்த பணியை நன்றியோடு நினைத்துக் கொள்கிறோம்.இன்னொரு விஷயத்தையும் இங்கு சொல்லிவிட வேண்டும்.இதை எல்லாம் செய்யத் தெரியாத அரசு இது என்றெல்லாம் நாம் கருதிவிடக் கூடாது. இதை எல்லாம் சரியாக செய்யத் தெரிந்த அரசாங்கம்தான் இது. செய்யக் கூடிய ஆற்றல் இருந்தும் ஏன் செய்யவில்லை என்பதுதான் அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலை நம்மை ஒருவித சந்தேகத்தோடு பார்க்கக் கோருகிறது.ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு காவிரியில் நீர் வந்து டெல்டா விவசாயி சாகுபடி செய்திருக்கிறான். ஏக்கருக்கு 36 மூட்டை விளையும் என்று ஆசையோடு எதிர்பார்த்திருக்கிறான். அப்படி ஒருக்கால் அவனது கனவு நிறைவேறி இருக்குமானால் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ரெசார்ட், 10 வழிப்பாதை என்றெல்லாம் அவனிடம் படம் காட்ட முடியாது.இயற்கை விவசாயிக்கு எதிராக விளையாடியிருக்கிறது. நாம் அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற ஆளும் வர்க்கத்தின் அரசியலாக இது இருக்குமானால் ஒன்றை சொல்லி வைப்போம்,“ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளொக்கும்”
நன்றி: “காக்கை டிசம்பர் 2018”
2) குடிதண்ணீர்ப் பிரச்சினை ஏற்படும்
3) குழந்தைகளுக்கான பால் தேவை ஏற்படும்
4) உணவு பற்றாக்குறை ஏற்படும்
5) கொசுப் பிரச்சினை தாங்க முடியாத அளவில் இருக்கும்
6) நோய்களும் தொற்று நோய்களும் சேற்றுப் புண்ணும் ஏற்படும்
7) இயற்கை உபாதைகளுக்காக மக்கள் அவஸ்தைபட நேரிடும்
8) பாம்புகளும் பூச்சிகளும் ஊருக்குள் படை எடுக்கும்
9) இந்தக் காலத்தில் மாதவிடாய் சுழற்சிக்குள் சிக்கும் பெண்களுக்கு நாப்கின் தேவை ஏற்படும்இவற்றை மிகச் சாதரனமான ஒரு மனிதனால்கூட முன்உணர முடியும். எனில், மாபெரும் அனுபவம் மிக்க ஆளுமைகளை உள்ளடக்கிய ஒரு அரசு எந்திரம் இதை உணர முடியாமல் போவதற்கு வாய்ப்பே இல்லை.புயல் கரையைக் கடந்தப் புள்ளியில் இருந்து மேற்சொன்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதை உணர முடியுமானால் அவற்றை சரிசெய்வது என்பதும் ஒரு அரசிற்கு மிகமிக எளிதான விஷயம்தான்.மின்சாரம்தான் மிக முக்கியமான விஷயம் என்பதும் அதுதான் முதலில் தடை செய்யப்படும் என்பதும் தெரிந்த அரசிற்கு அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய ‘ஜெனரேட்டர்களை பாதிப்புக்கு உள்ளாக இருக்கும் பகுதிகளுக்கு முன்கூட்டியே கொண்டுவந்துவிட முடியும்.ஒரு முதல்வரின் கூட்டத்திற்கு மின்தடை எல்லாம் ஏற்படப் போவதில்லை. ஆனாலும் ஒருக்கால் எல்லாம் தாண்டி ஒருக்கால் மின்தடை ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என்பதற்காக ஜெனரேட்டர்களை முன்னெச்சரிக்கையாகக் கொண்டு சேர்ப்பவர்களால் பேரிடர் பரிசளிக்கும் கோர இருட்டில் இருந்து மக்களை காப்பதற்கு ஜெனரேட்டர்களைக் கொண்டு வந்து இருக்க முடியும்.இருக்கிற குடிநீர்த் தொட்டிகளை எல்லாம் நல்ல தண்ணீர் கொண்டு முன்னதாகவே நிரப்பி வைத்திருக்க முடியும். முகாம்களில் தண்ணீர் பாக்கெட்டுகளை முன்னதாகவே சேகரித்து வைத்திருக்க முடியும். ஒரு அறிக்கை வெளியிட்டு கேட்டிருந்தால் போதும் பேரிடருக்குப் பிறகு மிகவும் சிரமப்பட்டு நிவாரணப் பொருட்களைக் கொண்டுவரும் தன்னார்வலர்கள் பேரிடர் ஏற்படுவதற்கு முன்னரே எந்தவித சிரமும் இன்றி கொண்டு வந்து குவித்திருப்பார்கள். அதை முறையாக மேலாண்மை செய்திருந்தாலே போதும்.உணவிற்குத் தேவையான பொருட்களை, சமைப்பதற்கான பாத்திரங்களை, தட்டுகளை தம்ளர்களை, போர்வைகளை, சோப்புகளை, நாப்கின்களை, மருந்துகளை புயலுக்கு முன்னரே கொண்டு வந்து சேர்த்திருக்க முடியும்.இவற்றை எல்லாம் செய்யாதது குற்றம் என்றால் ஈர நெஞ்சம் கொண்ட பொதுமக்கள் அனுப்பி வைக்கும் நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உரிய முறையில் பகிர்ந்தளிக்கும் வேலையை செய்யாதது பெருங்குற்றம்.பாதிக்கப்பட்ட கிராமம் ஒன்றிற்கு பொருட்களை கொண்டு சென்றிருக்கிறார்கள். கொடுத்து முடித்துவிட்டு திரும்ப இருந்தவர்களை கொஞ்சம் இருக்கச் சொல்லி சாய்ந்து கிடந்த தென்னை மரங்களில் இருந்து இளநீர்த் தேங்காய்களையும் வாழைக் காய்களையும் அந்த வேனிலே ஏற்றி அனுப்பினார்கள் அந்த மக்கள் என்ற செய்தியைப் படித்ததும் என்னை அறியாமலே கண்கள் உடைத்துக் கொண்டன.நிவாரணப் பொருட்களை முறையாக பகிர்ந்தளிக்கும் நிர்வாகத்தை சரியாக செய்யாமல் தங்களுக்கு குடிப்பதற்கு ஒரு பாட்டில் தண்ணீர் கிடைக்காதா என்று நிவாரணப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை நிறுத்துகிற அளவிற்கு அவர்களை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது அரசு. இதன் மூலம் நிவாரணம் கொண்டு வந்தவர்களை வெறுங்கையோடு அனுப்ப மனமில்லாமல் தேங்காய்களோடும் வாழைக் குழைகளோடும் அனுப்பி வைத்த மக்களை வழிப்பறிக் கொள்ளையர்களைப்போல பார்க்க வைத்திருக்கிறது இந்த அரசு.விழாக்கள், அரசுக் கொண்டாட்டங்கள், மாநாடுகள் போன்றவற்றிற்காகவெல்லாம் தற்காலிக கழிவறைகளை ஏற்படுத்தித் தரத் தெரிந்த இந்த அரசு நிர்வாகம் இயற்கை உபாதைகளால் துடித்த எம் மக்களுக்கு தற்காலிகக் கழிவறைகளை ஏற்படுத்தித் தந்திருக்க முடியும்.இத்தனை ’இல்லைகள்’ இருந்த போதிலும் மின்ஊழியர்களின் தியாகம் செறிந்த பணியை நன்றியோடு நினைத்துக் கொள்கிறோம்.இன்னொரு விஷயத்தையும் இங்கு சொல்லிவிட வேண்டும்.இதை எல்லாம் செய்யத் தெரியாத அரசு இது என்றெல்லாம் நாம் கருதிவிடக் கூடாது. இதை எல்லாம் சரியாக செய்யத் தெரிந்த அரசாங்கம்தான் இது. செய்யக் கூடிய ஆற்றல் இருந்தும் ஏன் செய்யவில்லை என்பதுதான் அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலை நம்மை ஒருவித சந்தேகத்தோடு பார்க்கக் கோருகிறது.ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு காவிரியில் நீர் வந்து டெல்டா விவசாயி சாகுபடி செய்திருக்கிறான். ஏக்கருக்கு 36 மூட்டை விளையும் என்று ஆசையோடு எதிர்பார்த்திருக்கிறான். அப்படி ஒருக்கால் அவனது கனவு நிறைவேறி இருக்குமானால் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ரெசார்ட், 10 வழிப்பாதை என்றெல்லாம் அவனிடம் படம் காட்ட முடியாது.இயற்கை விவசாயிக்கு எதிராக விளையாடியிருக்கிறது. நாம் அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற ஆளும் வர்க்கத்தின் அரசியலாக இது இருக்குமானால் ஒன்றை சொல்லி வைப்போம்,“ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளொக்கும்”
நன்றி: “காக்கை டிசம்பர் 2018”
Published on December 14, 2018 21:20
December 10, 2018
மாற்றி அமைக்கப்படவேண்டிய இட ஒதுக்கீடு விகிதாச்சாரம்
இன்றைய செய்தித்தாள்களில் கிடைக்கும் மூன்று செய்திகள் மிகவும் முக்கியமானவையாகப் படுகிறது.1) ராஜஸ்தான் மாநிலத்தில் சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த வாக்குப்பெட்டி
2) சத்தீஸ்கர் மாநிலத்தில் வாக்குப் பெட்டிகள் பாதுகாக்கப்படும் அறைக்குள் நுழைந்த ரிலையன்ஸ் ஜியோ ஊழியர்கள்
3) இடஒதுக்கீட்டின் விகிதாச்சாரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற தோழர்
K பாலகிருஷ்ணனது நியாயமான கோரிக்கைகடந்த ஏழாம் தேதியன்று தெலுங்கானா, ராஜஸ்தான், சதீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வரும் கோடையில் நடைபெற உள்ள பராளுமன்றத் தேர்தல் முடிவினை எதிரொலிக்கும் என்று கருதுவதால் மொத்த தேசமும் ஆர்வத்தோடு அதற்காக காத்திருக்கிறது. இது கொஞ்சம் மிகையாகத் தோன்றினாலும் காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதாக் கட்சியும் இந்த முடிவுகளை அறிய ஆவலாக உள்ளன. இந்த முடிவுகளை ஒட்டியே அவை பாராளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்கான உத்திகளைக் கையெடுக்கும்.பொதுவாக தேர்தல் என்பது வாக்காளர்களுக்கும் வேட்பாளார்களுக்கும் இடையிலானதொரு செயல்பாடு. என்னைத் தேர்ந்தெடுத்தால் இதை இதை செய்வேன் என்று வாக்காளர்களிடம் வேட்பாளார்கள் வாக்குறுதி தருவதும் அதற்கேற்ப தமக்கு தேவையான அல்லது தமக்கு நம்பிக்கையான வேட்பாளரை வாக்காளர் தெரிவு செய்வது என்பதும் தேர்தலில் செயல்பாடாக இருக்க வேண்டும்.கட்சிகள் எங்களைத் தேர்ந்தெடுத்தால் இதை இதை செய்வோம் என்று வாக்குறுதிகளைத் தருவதும் வாக்காளர்கள் தாம் நம்பும் கட்சியைத் தேர்ந்தெடுப்பதும் இந்தச் செயல்பாட்டின் மேம்பட்ட வடிவமாகும்.சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். வீடு வந்து வாக்கு கேட்டவருக்கு வீடு தேடி வந்தார் என்பதற்காகவே வாக்களிப்பவர்கள் உண்டு. முதலில் வந்த வேட்பாளருக்கு முதலில் வந்ததற்காகவே வாக்களிப்பவர்கள் உண்டு. தன் வீட்டில் தண்ணீர் வாங்கிக் குடித்தார் என்பதற்காக அவருக்கு வாக்களித்தவர்கள் உண்டு.போயும் போயும் அந்த ஆளுக்கு ஏன் ஓட்டுப் போட்ட என்றால் ”கைய காலப் புடிச்சு கெஞ்சினான் என்ன செய்ய சொல்ற” என்று கூறிபவர்களும் உண்டு.பிரபலங்களின் தலையீடும் கவர்ச்சியும்கூட தேர்தலில் இடையீடு செய்தன.இந்த செயல்பாட்டை ஜாதி இடையீடு செய்தது, மதம் இடையீடு செய்தது. இப்போது இவற்றோடு சேர்த்து பணமும் சரக்கும் இடையீடு செய்கின்றன.கட்சி விசுவாசம் கணிசமான வாக்கு வங்கிகளை கட்சிகளுக்கு உருவாக்கின. அந்த வங்கிகளைக் கூட மேற்சொன்ன காரணிகள் உடைக்கவே செய்கின்றன.இவை அனைத்தும் அத்தனை கட்சிகளுக்கும் பொதுவானவைதான். மேற்சொன்ன அனைத்து காரணிகளையும் அனைத்து காரணிகளையும் அனைத்துக் கட்சிகளும் கை எடுத்து மற்ற கட்சிகளுக்கு சேதாரத்தை தருவதற்கு முயற்சி செய்கின்றன.இதில் பாஜக வாக்காளார்களோடு மட்டும் தன் செயல்பாட்டை முடித்துக்கொள்ள மறுக்கிறது. தேர்தல் கமிஷன், வாக்குபெட்டி ஆகியவற்றிடம்கூட அது வாக்கு கேட்கிறது. ஆச்சரியம் என்னவெனில் அதற்கு பலனும் கிடைக்கிறது.இன்னும் சொல்லப்போனால் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னாலும் இன்னும் வெளிப்படையாக சொல்வதெனில் முற்றுமாக நிராகரிக்கப்பட்டபிறகும்கூட அது ஆட்சி அமைக்க முயல்வதும் அதில் அது வெற்றி பெறுவதும் வாடிக்கையாகவே இருக்கிறது.இந்தமுறை தோற்றுவிட்டாய். தளர்ந்துவிடாமல் முயற்சி செய். அடுத்தமுறை வெற்றியடையலாம் என்போம். பாஜகவோ இந்த முறை தோற்று இந்தமுறையே ஆட்சி அமைக்கும்.இந்த வெளிச்சத்தில்தான் முதல் இரண்டு செயல்களுக்கும் பாஜகவிற்கும் தொடர்பிருக்க வாய்ப்பிருப்பதை நம்மால் மறுக்க முடியவில்லை.ராஜஸ்தான் மாநிலத்தில் “கிசாஞ்ச்” தொகுதிக்கு உட்பட்ட “சகாபாத்” என்ற இடத்தில் சாலயில் வாக்குப்பெட்டி கிடந்த செய்தியை இன்றைய தீக்கதிர் சொல்கிறது. அநேகமாக அந்த இடம் வாக்குச்சாவடிக்கும் வாக்கு எண்ணும் இடத்திற்கும் இடையேயான பகுதியாக இருக்க வேண்டும்.வாக்குச் சாவடியிலும் வாக்கு எண்ணும் இடத்திலும் பணியாற்றிய அனுபவத்தில் இப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று உறுதியாகக் கூறமுடியும். அவ்வளவு பாதுகாப்பானது வாக்குச் சாவடிக்கும் வாக்கு எண்ணும் இடத்திற்குமான வாக்குப் பெட்டிகளின் பயணம்.சதீஸ்கர் மாநிலத்தில் ஜபல்பூர் பகுதியில் வாக்குப் பெட்டிகள் பாதுகாக்கப்பட்டு வரும் இடத்திற்குள் அத்தனைப் பாதுகாப்பையும் மீறி இரண்டு ரிலையன்ஸ் ஜியோ ஊழியர்கள் மடிக்கணினியோடு நுழைந்திருக்கிறார்கள் என்கிறது இன்றைய விடுதலை. சாத்தியமே இல்லாத இது எப்படி சாத்தியமானது?.அம்பானிக்கும் மோடி அவர்களுக்கும் இடையேயான உறவின் வெளிச்சத்தில் இதைப் பார்த்தால் பிண்ணனி விரிகிறது. வாக்குப் பெட்டிகளை அவர்களுக்கு ஏற்றவாறு மாற்ற நடந்த முயற்சியா இது என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும்.எதிர்க்கட்சிகள் வாக்குச் சாவடிகளை, வாக்குச் சாவடிகளுக்கும் வாக்கு எண்ணுமிடத்திற்கும் இடையேயான பாதைகளையும், பெட்டிகள் பாதுகாக்கும் இடத்தையும் சட்ட விதிகளுக்கு உட்பட்ட வகையில் கண்காணிக்க வேண்டும்.மக்கள்தொகையில் 18 விழுக்காடு தலித்களும் ஒரு விழுக்காடு பழங்குடியினரும் இருந்தனர். அப்போது 18+1 என்கிற அளவில் அவர்களுக்கான இட ஒதுக்கீடு இருந்தது. இப்போது தலித்கள் 19 சதவிகிதமும் பழங்குடியினர் ஒரு சதவிகிதமும் என்று இருப்பதால் இட ஒதுக்கீட்டை 19+1 என்று மாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் K பாலகிருஷ்ணன் அவர்கள் கோரியுள்ளார்.இதை மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கையாகவே கொள்ள வேண்டும். சமூக அக்கறையுள்ள இயக்கங்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். இது குறித்து விவாதிப்பதும் ஒன்றிணைந்து இயக்கங்களைக் கட்டுவதும் அவசியம்.#சாமங்கவிந்து 30 நிமிடங்கள்
09.12.2018
2) சத்தீஸ்கர் மாநிலத்தில் வாக்குப் பெட்டிகள் பாதுகாக்கப்படும் அறைக்குள் நுழைந்த ரிலையன்ஸ் ஜியோ ஊழியர்கள்
3) இடஒதுக்கீட்டின் விகிதாச்சாரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற தோழர்
K பாலகிருஷ்ணனது நியாயமான கோரிக்கைகடந்த ஏழாம் தேதியன்று தெலுங்கானா, ராஜஸ்தான், சதீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வரும் கோடையில் நடைபெற உள்ள பராளுமன்றத் தேர்தல் முடிவினை எதிரொலிக்கும் என்று கருதுவதால் மொத்த தேசமும் ஆர்வத்தோடு அதற்காக காத்திருக்கிறது. இது கொஞ்சம் மிகையாகத் தோன்றினாலும் காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதாக் கட்சியும் இந்த முடிவுகளை அறிய ஆவலாக உள்ளன. இந்த முடிவுகளை ஒட்டியே அவை பாராளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்கான உத்திகளைக் கையெடுக்கும்.பொதுவாக தேர்தல் என்பது வாக்காளர்களுக்கும் வேட்பாளார்களுக்கும் இடையிலானதொரு செயல்பாடு. என்னைத் தேர்ந்தெடுத்தால் இதை இதை செய்வேன் என்று வாக்காளர்களிடம் வேட்பாளார்கள் வாக்குறுதி தருவதும் அதற்கேற்ப தமக்கு தேவையான அல்லது தமக்கு நம்பிக்கையான வேட்பாளரை வாக்காளர் தெரிவு செய்வது என்பதும் தேர்தலில் செயல்பாடாக இருக்க வேண்டும்.கட்சிகள் எங்களைத் தேர்ந்தெடுத்தால் இதை இதை செய்வோம் என்று வாக்குறுதிகளைத் தருவதும் வாக்காளர்கள் தாம் நம்பும் கட்சியைத் தேர்ந்தெடுப்பதும் இந்தச் செயல்பாட்டின் மேம்பட்ட வடிவமாகும்.சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். வீடு வந்து வாக்கு கேட்டவருக்கு வீடு தேடி வந்தார் என்பதற்காகவே வாக்களிப்பவர்கள் உண்டு. முதலில் வந்த வேட்பாளருக்கு முதலில் வந்ததற்காகவே வாக்களிப்பவர்கள் உண்டு. தன் வீட்டில் தண்ணீர் வாங்கிக் குடித்தார் என்பதற்காக அவருக்கு வாக்களித்தவர்கள் உண்டு.போயும் போயும் அந்த ஆளுக்கு ஏன் ஓட்டுப் போட்ட என்றால் ”கைய காலப் புடிச்சு கெஞ்சினான் என்ன செய்ய சொல்ற” என்று கூறிபவர்களும் உண்டு.பிரபலங்களின் தலையீடும் கவர்ச்சியும்கூட தேர்தலில் இடையீடு செய்தன.இந்த செயல்பாட்டை ஜாதி இடையீடு செய்தது, மதம் இடையீடு செய்தது. இப்போது இவற்றோடு சேர்த்து பணமும் சரக்கும் இடையீடு செய்கின்றன.கட்சி விசுவாசம் கணிசமான வாக்கு வங்கிகளை கட்சிகளுக்கு உருவாக்கின. அந்த வங்கிகளைக் கூட மேற்சொன்ன காரணிகள் உடைக்கவே செய்கின்றன.இவை அனைத்தும் அத்தனை கட்சிகளுக்கும் பொதுவானவைதான். மேற்சொன்ன அனைத்து காரணிகளையும் அனைத்து காரணிகளையும் அனைத்துக் கட்சிகளும் கை எடுத்து மற்ற கட்சிகளுக்கு சேதாரத்தை தருவதற்கு முயற்சி செய்கின்றன.இதில் பாஜக வாக்காளார்களோடு மட்டும் தன் செயல்பாட்டை முடித்துக்கொள்ள மறுக்கிறது. தேர்தல் கமிஷன், வாக்குபெட்டி ஆகியவற்றிடம்கூட அது வாக்கு கேட்கிறது. ஆச்சரியம் என்னவெனில் அதற்கு பலனும் கிடைக்கிறது.இன்னும் சொல்லப்போனால் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னாலும் இன்னும் வெளிப்படையாக சொல்வதெனில் முற்றுமாக நிராகரிக்கப்பட்டபிறகும்கூட அது ஆட்சி அமைக்க முயல்வதும் அதில் அது வெற்றி பெறுவதும் வாடிக்கையாகவே இருக்கிறது.இந்தமுறை தோற்றுவிட்டாய். தளர்ந்துவிடாமல் முயற்சி செய். அடுத்தமுறை வெற்றியடையலாம் என்போம். பாஜகவோ இந்த முறை தோற்று இந்தமுறையே ஆட்சி அமைக்கும்.இந்த வெளிச்சத்தில்தான் முதல் இரண்டு செயல்களுக்கும் பாஜகவிற்கும் தொடர்பிருக்க வாய்ப்பிருப்பதை நம்மால் மறுக்க முடியவில்லை.ராஜஸ்தான் மாநிலத்தில் “கிசாஞ்ச்” தொகுதிக்கு உட்பட்ட “சகாபாத்” என்ற இடத்தில் சாலயில் வாக்குப்பெட்டி கிடந்த செய்தியை இன்றைய தீக்கதிர் சொல்கிறது. அநேகமாக அந்த இடம் வாக்குச்சாவடிக்கும் வாக்கு எண்ணும் இடத்திற்கும் இடையேயான பகுதியாக இருக்க வேண்டும்.வாக்குச் சாவடியிலும் வாக்கு எண்ணும் இடத்திலும் பணியாற்றிய அனுபவத்தில் இப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று உறுதியாகக் கூறமுடியும். அவ்வளவு பாதுகாப்பானது வாக்குச் சாவடிக்கும் வாக்கு எண்ணும் இடத்திற்குமான வாக்குப் பெட்டிகளின் பயணம்.சதீஸ்கர் மாநிலத்தில் ஜபல்பூர் பகுதியில் வாக்குப் பெட்டிகள் பாதுகாக்கப்பட்டு வரும் இடத்திற்குள் அத்தனைப் பாதுகாப்பையும் மீறி இரண்டு ரிலையன்ஸ் ஜியோ ஊழியர்கள் மடிக்கணினியோடு நுழைந்திருக்கிறார்கள் என்கிறது இன்றைய விடுதலை. சாத்தியமே இல்லாத இது எப்படி சாத்தியமானது?.அம்பானிக்கும் மோடி அவர்களுக்கும் இடையேயான உறவின் வெளிச்சத்தில் இதைப் பார்த்தால் பிண்ணனி விரிகிறது. வாக்குப் பெட்டிகளை அவர்களுக்கு ஏற்றவாறு மாற்ற நடந்த முயற்சியா இது என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும்.எதிர்க்கட்சிகள் வாக்குச் சாவடிகளை, வாக்குச் சாவடிகளுக்கும் வாக்கு எண்ணுமிடத்திற்கும் இடையேயான பாதைகளையும், பெட்டிகள் பாதுகாக்கும் இடத்தையும் சட்ட விதிகளுக்கு உட்பட்ட வகையில் கண்காணிக்க வேண்டும்.மக்கள்தொகையில் 18 விழுக்காடு தலித்களும் ஒரு விழுக்காடு பழங்குடியினரும் இருந்தனர். அப்போது 18+1 என்கிற அளவில் அவர்களுக்கான இட ஒதுக்கீடு இருந்தது. இப்போது தலித்கள் 19 சதவிகிதமும் பழங்குடியினர் ஒரு சதவிகிதமும் என்று இருப்பதால் இட ஒதுக்கீட்டை 19+1 என்று மாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் K பாலகிருஷ்ணன் அவர்கள் கோரியுள்ளார்.இதை மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கையாகவே கொள்ள வேண்டும். சமூக அக்கறையுள்ள இயக்கங்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். இது குறித்து விவாதிப்பதும் ஒன்றிணைந்து இயக்கங்களைக் கட்டுவதும் அவசியம்.#சாமங்கவிந்து 30 நிமிடங்கள்
09.12.2018
Published on December 10, 2018 08:12
December 9, 2018
காமிக்ஸ் எழுதுவோம்
சமீப காலமாக, நாம் வெகு காலமாக கரடியாய் கத்திக் கொண்டிருக்கும் இரண்டு கருத்துக்களை தம்பி Karu Palaniappanதான் பேசுகிற கூட்டமெங்கும் பேசி வருகிறார். நான் கொஞ்சம் மாற்றிக் கொண்டிருக்கிறேன். கொஞ்சமோ கொஞ்சமாய் இருக்கிற வாசக கூட்டமும் பையப்பைய கேட்கிற கூட்டமாக மாறிக் கொண்டிருக்கிறது என்றும் ஆகவே எழுதுவதைவிடவும் உரையாற்றக் கிளம்ப வேண்டும் என்றும் முன்பு கத்திக் கொண்டிருப்பேன். இப்போதெல்லாம் ’தம்பி பழநியப்பன் இப்படி கூறுகிறார்’ என்று சரியாக நான்கு வார்த்தைகளை சேர்த்து கூறுகிறேன். உண்மையிலுமே நாமாக சொல்வதை விடவும் ஒரு பிரபலத்தை மேற்காட்டினால் போய் சேரத்தான் செய்கிறது. இதை அவரிடமே ஒருமுறை சொன்னேன்.அவரோடு ஒவ்வொருமுறை அலைபேசும்போதும் அவசியம் YOUTUBE ஐ பயன்படுத்துங்கள் என்பார். அந்தத் தொழில்நுட்பம் பிடிபவில்லை. யாரேனும் தோழர்கள் உதவினால் செய்யலாம் என்றிருக்கிறேன். ஆனால் அவரது வேண்டுகோளை ஏற்று ஏறத்தாழ சென்ற மாதம் நான்கைந்து ஆண்டுகளுக்குப் பிறகு கேட்கிற யாருக்கும் மறுக்காமல் தேதி கொடுத்தேன். அந்த வகையில் ஏழு கூட்டங்களுக்கு தேதி கொடுத்திருந்தேன்.முதல் கூட்டத்திற்கு ‘டெங்கு’ போல இருந்ததால் போக முடியவில்லை. இரண்டாவது கூட்டத்திற்கு போய் வந்தேன். அடுத்த ஐந்து கூட்டங்களையும் “கஜா” காலி செய்தார்.இந்த மாதம்கூட கேட்கிறவர்களுக்கெல்லாம் மறுக்காமல் தந்து கொண்டுதான் இருக்கிறேன்.அது ஒரு புறம்.சமீபத்தில் பழநியப்பனும் தோழர் சுப.வீ அவர்களும் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தின் காணொலியைக் கேட்டேன். போகிற போக்கைப் பார்த்தால் பையைப் பைய நானும்கூட காணொலி வாசகனாகவே மாறிப்போவேன் போல.அதில் பேசும்போது பழநியப்பன் எழுத்தாளர்களுக்கு ஒரு கோரிக்கையை வைத்தார். இருக்கிற கொஞ்ச நஞ்சம் வாசகனும் தனக்கு வாசிப்பதற்கு நேரம் இல்லை என்று கருதுகிறான். வாசிப்பதற்கு அவன் ஒதுக்கும் கொஞ்ச நேரத்தில் மிகவும் அழுத்தமான ஆழமான எழுத்தை அவனுக்கு கொடுத்தால் அயர்ந்து விடுகிறான். இதனால் வாசிப்பதையே நிறுத்திவிடும் நிலைமைக்கு அவன் தள்ளப்படுகிறான்.எனவே ஆழமான விஷயங்களை போகிற போக்கில் வாசித்துவிட்டுப் போகிறமாதிரி எளிய நடையில் தர வேண்டும் என்றார். தன்னைக் கேட்டால் எழுத்தாளர்கள் இனி ”காமிக்ஸ்” வழியாக தம் எழுத்துக்களைக் கொடுப்பதே சரி என்றார்.நாம் காமிக்ஸ் எழுத்தாளார்களாக மாறுகிறோமோ இல்லையோ பழநியப்பன் காமிக்ஸ் பேச்சாளாராகவே மாறி வருகிறார். அயர்வே இல்லாமல் எவ்வளவுநேரம் வேண்டுமென்றாலும் அவரைக் கேட்க முடிகிறது.கூட்டத்தில் இருந்த நிறையபேர் சிரித்தார்கள். அனால் அது கொள்வதற்கு உரிய கருத்து. வாசகன் ஆழத்திற்கு எதிரியாக இல்லை. நல்லதை கொள்வதற்கு அவன் ஒருபோதும் தயங்குதே இல்லை. அனால் அதற்காக அவன் சிரமப்படத் தயாரில்லை.வாசிப்பதில் மட்டும் அல்ல, பயணிப்பதில், உறங்குவதில், உண்பதில், குளிப்பதில், என்று எதிலும் அவன் சிரமப்படத் தயாராயில்லை. உண்மையை சொன்னால் கொஞ்சம் சொகுசுப் பேர்வளியாய் ஆகிப்போனான். அவனை சிரமப் படுத்தாமல் அவனுக்கு நல்லதைத் தர முடியுமா என்பதை பரிசீலிக்கவும் தட்டுப்பட்டால் அதை நடைமுறைப் படுத்த முயற்சிக்கவும் வேண்டும்.வேண்டுமானால் இதை இப்படி சொல்லலாம், “அவன் சிரமப்படாமல் சொகுசாய் வாசிப்பதற்காக நாம் கொஞ்சம் சிரமப்பட்டு எழுதுவதற்கு பயிற்சிபெற வேண்டும்.நாமும் காமிக்சை பரிட்சித்துப் பார்த்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே அடுத்ததாய் தோழர் சுபவீ பேச வந்தார்.பெரியார் குறித்த சில நூல்களை தாம் காமிக்சாக எழுதிக் கொண்டிருப்பதாகவும், அவற்றில் சில அச்சுக்கே போயிருப்பதாகவும் கூறினார். ஆங்கிலத்தில் இப்படி சொல்வார்கள்,“GREAT PEOPLE THINK ALIKE”அருணாச்சலம்கூட ஆண்டவன் சொல்லியபிறகுதான் செய்வாராம். ஆனால் பழநியப்பன் நினைத்த மாத்திரத்திலேயே அதை நிறைவேற்றத் தொடங்கியிருக்கிறார் அவரது தந்தை வயதொத்த தோழர் சுப.வீரபாண்டியன்.காமிக்ஸ் வாசிப்பது சுலபம். அதை எழுதுவது அவ்வளவு கஷ்டம். காரண காமிக்ஸ் குழந்தைகளுக்கானது. குழந்தைகளுக்கானதை தயாரிப்பது எப்போதுமே கஷ்டம்.குழந்தைகளுக்கான காமிக்சைத் தயாரிப்பதே சிரமம். நாம் எழுதப்போவதோ குழந்தைகளாய் மாறிப்போன மூத்த வாசகனுக்கு. அவனுக்கு எழுதுவது மிக மிக சிரமம். ஆனால் அதை செய்ய வேண்டும். செய்தே ஆக வேண்டும்.மக்களின் எதிரிகள் அவனை ஏமாற்றுவதற்காக எந்த சிரமத்தையும் தாங்கிக்கொள்ள தயாராகி விட்டான். விதவிதமான வலைகளை வைத்திருக்கிறான். மக்களைக் காப்பாற்ற வேண்டும் எனில் மக்கள் ஊழியர்கள் இன்னும் பேரதிகமாய் துயரங்களைத் தாங்க வேண்டும். அவன் விரும்புகிற சூடில், அவன் குடிக்கிற சூடில் தரவேண்டும்.இந்த நேரத்தில் ராணி காமிக்சின் ஐநூறு புத்தகங்களில் நூறு PDF வடிவில் வந்திருப்பதாக எங்கோ படித்தேன். அறிந்தவர்கள் இணைப்பைத் தந்தால் மகிழ்ந்து நன்றி சொல்வேன்.ஆக,YOUTUBE ஐப் பயன்படுத்த முயற்சிப்பது, மக்களுக்கான மேடைகளில் உடல்சிரமத்தைத் தாண்டியும் பங்கேற்பது, காமிக்சைக்கூட முயற்சிப்பது என்று முடிவெடுத்திருக்கிறேன்.நீங்கள்?#சாமங்கவிந்து பதினோறு நிமிடங்கள்
Published on December 09, 2018 05:21
December 7, 2018
நாப்கினுக்கு உரிய பங்கு பற்றியும்
”பெண் பிள்ளை
பிறந்ததற்காய்
இனிப்பு வழங்குவோன்
மனசெல்லாம் கசப்பு”என்று முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதினேன். இன்னமும் அந்த வரிகளுக்கு உயிர் என்பது இருக்கவே செய்கிறது என்றாலும் ஆக விரைவில் அந்த வரிகள் பழசாய் பழங்கதையாய் போய்விடும் என்றே நம்புகிறேன். குறிப்பாக கல்வித் துறையில் பெண்குழந்தைகளின் பாய்ச்சலும் முன்னெடுப்பும் இந்த நம்பிக்கையை முப்பது ஆண்டுகால பள்ளி ஊழியனான எனக்குத் தருகின்றன. காரணம் கல்வியில் கடந்த பத்து ஆண்டுகளாக ஆண்குழந்தைகளை பெண்குழந்தைகள் எல்லா நிலைகளிலும் விஞ்சியே நிற்கிறார்கள்.பெண்குழந்தைகள் பள்ளிக்குள்ளேயே நுழைய முடியாத காலம் இருந்தது.நுழைந்தார்கள்.ஆனாலும் வயதுக்கு வந்த புள்ளியில் அவர்கள் படிப்பு நின்றது.அதிலிருந்தும் பையப் பைய மீண்டார்கள்.ஆனாலும் ஆண்குழந்தைகளின் ஆதிக்கமே தொடர்ந்தது.ஒரு புள்ளியில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. பெண் குழந்தைகள் எழுந்தார்கள், கொஞ்சம் சிரமப்பட்டு சாதிக்கத் தொடங்கினார்கள், கொஞ்சம் கொஞ்சமாக சாதிப்பது அவர்களது இயல்பாக மாறியது.இதற்கான பல காரணங்களை அலசினார்கள். அவற்றில் எதையுமே மறுக்கவில்லை நான். ஆனால் பெண்குழந்தைகளின் இந்த பாய்ச்சலுக்கும் சாதித்தலுக்குமான காரணங்களுள் நாப்கினுக்கு உரிய பங்கு பற்றியும் பரிசீலிக்க வேண்டும் என்று கோரினேன்.நிறையபேர் முகம் சுளித்தார்கள். சிலர் நான் அசிங்க அசிங்கமாய் பேசுவதாய் நினைத்தார்கள். சிலர் இது ஆபாசம் என்றெல்லாம் என் காதுபடவே கூறினார்கள்.எனக்கான வெளியும் வாசிக்கும் திரளும் விரிவடைந்தபோது “பள்ளிக்கொரு இன்சினரேட்டர்” என்ற கட்டுரையை அப்போது ”தினமணி டாட் காமில்“ நான் எழுதிக் கொண்டிருந்த தொடருக்கு அனுப்பினேன். மாற்றச் சொல்லி கேட்பார்கள் என்று நினைத்திருந்தேன். உமா சக்தி அழைத்து “செமப்பா. சான்சே இல்ல. இத மொதல்ல வாசிச்சது நான்தான் என்பதே சந்தோசமா இருக்கு” என்று எப்போதும்போல் பொய்யாய் முதுகெங்கும் தட்டினார்.வாசித்தபிறகு வழக்கம்போல ஏச்சுகளும் வரத்தான் செய்தன. ஆனால் நிறைய தோழர்கள் உச்சி முகர்ந்தார்கள். பல பள்ளிகளில் அதன்பிறகு இன்சினரேட்டர்களை நன்கொடையாளர்கள் வாங்கிக் கொடுத்தார்கள் என்கிற செய்திகள் வரத் தொடங்கின. என் பள்ளிக்கேகூட இந்தக் கட்டுரைதான் ஒரு இன்சினரேட்டரைக் கொண்டுவந்து சேர்த்தது.பருவம்எய்திய பின்னரும் குழந்தைகள் வந்தாலும் அவர்களுக்கான மாதச்சுழற்சி காலத்தில் பிள்ளைகள் மிகவும் சிரமப்பட்டனர். துணியை மாற்றுவது அதை யாருக்கும் தெரியாமல் செய்வது, தீட்டுத் துணியை அலசிக் காயவைப்பது போன்றவற்றிற்காக பிள்ளைகள் பட்ட சிரமமும் அவமானமும் சொல்லி மாளாதது. பள்ளிகளில் போதுமான அளவு கழிவறை வசதிகளும் இல்லாது இருந்தது. எனவே பள்ளிகளுக்கு வந்தாலும் அந்தக் காலத்தில் அவர்கள் விடுப்பெடுத்து வீட்டில் பதுங்கவேண்டி இருந்தது.யோசித்துப் பாருங்களேன், மாதம் மூன்றுமுதல் ஐந்து நாட்கள் விடுப்பெடுக்க வேண்டிய அவசியம் இருந்தால் குழந்தைகள் எப்படி படிப்பிலே சாதிக்க முடியும்.இந்தப் புள்ளியில் “நாப்கின்” புழக்கத்திற்கு வருகிறது. மாத சுழற்சிக் காலத்தில்ன் விடுப்பெடுக்க வேண்டிய அவசியம் பணக்காரக் குழந்தைகளுக்கு இல்லாமல் போகிறது. தமிழக அரசு பள்ளிக்குழந்தைகளுக்கு இலவசமாக நாப்கினை வழங்குகிறது.. ஏறத்தாழ எல்லாக் குழந்தைகளும் மாதம் முழுக்க பள்ளிக்கு வந்து படிப்பில் கவனம் செலுத்த வாய்ப்பு கிடைக்கிறது. பயன்படுத்துகிறார்கள், சாதிக்க ஆரம்பிக்கிறார்கள்.இப்போதும் ஒரு பிரச்சினை இருந்தது. நாப்கின்களை டிஸ்போஸ் செய்வதில் சிரமம் இருந்தது. இன்சினரேட்டர்களின் வரவு இதையும் வருங்காலத்தில் சரி செய்யும் என்று நம்பலாம்.ஆக, நாப்கின்களின் வரவு பெண்பிள்ளைகளின் கல்விக்கான உடைசலைத் தந்த கருவி என்பதும் இன்சினரேட்டர் பெரு உடைசலைத் தந்த கருவி என்பதும் அவசியம் கொள்ளத் தக்கவை ஆகும்.ஆக, இன்சினரேட்டர் பெண்கல்விக்கான ஒரு முக்கிய கருவி எனில் இன்சினரேட்டரில் கை வைத்தால் பெண்கல்வி கொஞ்சம் ஊனப்படும் என்பதையும் நாப்கினில் கை வைத்தால் பெண்கல்வி பெருமளவு காயப்படும் என்பதையும் சேர்த்தேதான் கொள்ள வேண்டும்.கொஞ்சம் விரித்துப் பார்த்தால் பெண்கல்வியை சேதப்படுத்த வேண்டும் என்று அதன் எதிரிகள் நினைப்பார்கள் எனில் அவர்கள் இதிலும் கை வைப்பார்கள் என்ற கவனமும் நமக்கு இருக்க வேண்டியது அவசியம்.பஞ்சாப்பில் இதைத் தொடங்கி இருக்கிறார்களோ என்ற அச்சத்தை 05.11.2018 தீக்கதிர் செய்தி தருகிறது.பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குந்தால் என்ற கிராமத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் கழிவறையில் பயன்படுத்தப்பட்ட இரண்டு நாப்கின்கள் கிடந்திருக்கின்றன. இதை அறிந்த ஆசிரியைகள் யார் அந்த காரியத்தை செய்தது என்று கேட்டிருக்கிறார்கள். தண்டனைக்குப் பயந்து அந்தக் குழந்தைகள் மௌனமாக இருந்திருக்கிறார்கள்.கோவமடைந்த அந்த இரண்டு ஆசிரியைகளும் அனைத்து குழந்தைகளையும் உடைகளை களையச் சொல்லி சோதிருக்கிறார்கள். அவமானத்தால் கூனிக் குறுகிய குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் நடந்ததைக்கூறி அழுதிருக்கிறார்கள்.ச்விஷயம் முதல்வர் திரு அமரீந்தர்சிங்கிடம் போகவே அவர் விசாரனைக்கு உத்தரவிட்டிருக்கிறார். உண்மைதான் என்று தெரிய வரவே அந்த இரண்டு ஆசிரியைகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். துறைவாரி நடவடிக்கை உண்டு என்று உறுதி தந்திருக்கிறார்கள்.இதை பெண்கல்விக்கு எதிரான விஷயமாகவே பார்க்க வேண்டும்.பள்ளிக் கழிவறையில் நாப்கின் கிடந்ததென்றால் இன்சினரேட்டர் வைக்காத பள்ளி நிர்வாகம்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.ஆகவே நாம் மீண்டும் வலியுறுத்துவது இதைத்தான்,இதை ஏதோ குழந்தைகளை அம்மணப்படுத்திப் பார்த்த குற்றமாக மட்டும் பார்க்காமல் பெண்கல்வியை சீர்குலைக்கும் முயற்சியாகவே இதைப் பார்த்து அதற்குரிய தண்டனையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கோருகிறேன்#சாமங்கவிய 55 நிமிடங்கள்
02.12.2018
பிறந்ததற்காய்
இனிப்பு வழங்குவோன்
மனசெல்லாம் கசப்பு”என்று முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதினேன். இன்னமும் அந்த வரிகளுக்கு உயிர் என்பது இருக்கவே செய்கிறது என்றாலும் ஆக விரைவில் அந்த வரிகள் பழசாய் பழங்கதையாய் போய்விடும் என்றே நம்புகிறேன். குறிப்பாக கல்வித் துறையில் பெண்குழந்தைகளின் பாய்ச்சலும் முன்னெடுப்பும் இந்த நம்பிக்கையை முப்பது ஆண்டுகால பள்ளி ஊழியனான எனக்குத் தருகின்றன. காரணம் கல்வியில் கடந்த பத்து ஆண்டுகளாக ஆண்குழந்தைகளை பெண்குழந்தைகள் எல்லா நிலைகளிலும் விஞ்சியே நிற்கிறார்கள்.பெண்குழந்தைகள் பள்ளிக்குள்ளேயே நுழைய முடியாத காலம் இருந்தது.நுழைந்தார்கள்.ஆனாலும் வயதுக்கு வந்த புள்ளியில் அவர்கள் படிப்பு நின்றது.அதிலிருந்தும் பையப் பைய மீண்டார்கள்.ஆனாலும் ஆண்குழந்தைகளின் ஆதிக்கமே தொடர்ந்தது.ஒரு புள்ளியில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. பெண் குழந்தைகள் எழுந்தார்கள், கொஞ்சம் சிரமப்பட்டு சாதிக்கத் தொடங்கினார்கள், கொஞ்சம் கொஞ்சமாக சாதிப்பது அவர்களது இயல்பாக மாறியது.இதற்கான பல காரணங்களை அலசினார்கள். அவற்றில் எதையுமே மறுக்கவில்லை நான். ஆனால் பெண்குழந்தைகளின் இந்த பாய்ச்சலுக்கும் சாதித்தலுக்குமான காரணங்களுள் நாப்கினுக்கு உரிய பங்கு பற்றியும் பரிசீலிக்க வேண்டும் என்று கோரினேன்.நிறையபேர் முகம் சுளித்தார்கள். சிலர் நான் அசிங்க அசிங்கமாய் பேசுவதாய் நினைத்தார்கள். சிலர் இது ஆபாசம் என்றெல்லாம் என் காதுபடவே கூறினார்கள்.எனக்கான வெளியும் வாசிக்கும் திரளும் விரிவடைந்தபோது “பள்ளிக்கொரு இன்சினரேட்டர்” என்ற கட்டுரையை அப்போது ”தினமணி டாட் காமில்“ நான் எழுதிக் கொண்டிருந்த தொடருக்கு அனுப்பினேன். மாற்றச் சொல்லி கேட்பார்கள் என்று நினைத்திருந்தேன். உமா சக்தி அழைத்து “செமப்பா. சான்சே இல்ல. இத மொதல்ல வாசிச்சது நான்தான் என்பதே சந்தோசமா இருக்கு” என்று எப்போதும்போல் பொய்யாய் முதுகெங்கும் தட்டினார்.வாசித்தபிறகு வழக்கம்போல ஏச்சுகளும் வரத்தான் செய்தன. ஆனால் நிறைய தோழர்கள் உச்சி முகர்ந்தார்கள். பல பள்ளிகளில் அதன்பிறகு இன்சினரேட்டர்களை நன்கொடையாளர்கள் வாங்கிக் கொடுத்தார்கள் என்கிற செய்திகள் வரத் தொடங்கின. என் பள்ளிக்கேகூட இந்தக் கட்டுரைதான் ஒரு இன்சினரேட்டரைக் கொண்டுவந்து சேர்த்தது.பருவம்எய்திய பின்னரும் குழந்தைகள் வந்தாலும் அவர்களுக்கான மாதச்சுழற்சி காலத்தில் பிள்ளைகள் மிகவும் சிரமப்பட்டனர். துணியை மாற்றுவது அதை யாருக்கும் தெரியாமல் செய்வது, தீட்டுத் துணியை அலசிக் காயவைப்பது போன்றவற்றிற்காக பிள்ளைகள் பட்ட சிரமமும் அவமானமும் சொல்லி மாளாதது. பள்ளிகளில் போதுமான அளவு கழிவறை வசதிகளும் இல்லாது இருந்தது. எனவே பள்ளிகளுக்கு வந்தாலும் அந்தக் காலத்தில் அவர்கள் விடுப்பெடுத்து வீட்டில் பதுங்கவேண்டி இருந்தது.யோசித்துப் பாருங்களேன், மாதம் மூன்றுமுதல் ஐந்து நாட்கள் விடுப்பெடுக்க வேண்டிய அவசியம் இருந்தால் குழந்தைகள் எப்படி படிப்பிலே சாதிக்க முடியும்.இந்தப் புள்ளியில் “நாப்கின்” புழக்கத்திற்கு வருகிறது. மாத சுழற்சிக் காலத்தில்ன் விடுப்பெடுக்க வேண்டிய அவசியம் பணக்காரக் குழந்தைகளுக்கு இல்லாமல் போகிறது. தமிழக அரசு பள்ளிக்குழந்தைகளுக்கு இலவசமாக நாப்கினை வழங்குகிறது.. ஏறத்தாழ எல்லாக் குழந்தைகளும் மாதம் முழுக்க பள்ளிக்கு வந்து படிப்பில் கவனம் செலுத்த வாய்ப்பு கிடைக்கிறது. பயன்படுத்துகிறார்கள், சாதிக்க ஆரம்பிக்கிறார்கள்.இப்போதும் ஒரு பிரச்சினை இருந்தது. நாப்கின்களை டிஸ்போஸ் செய்வதில் சிரமம் இருந்தது. இன்சினரேட்டர்களின் வரவு இதையும் வருங்காலத்தில் சரி செய்யும் என்று நம்பலாம்.ஆக, நாப்கின்களின் வரவு பெண்பிள்ளைகளின் கல்விக்கான உடைசலைத் தந்த கருவி என்பதும் இன்சினரேட்டர் பெரு உடைசலைத் தந்த கருவி என்பதும் அவசியம் கொள்ளத் தக்கவை ஆகும்.ஆக, இன்சினரேட்டர் பெண்கல்விக்கான ஒரு முக்கிய கருவி எனில் இன்சினரேட்டரில் கை வைத்தால் பெண்கல்வி கொஞ்சம் ஊனப்படும் என்பதையும் நாப்கினில் கை வைத்தால் பெண்கல்வி பெருமளவு காயப்படும் என்பதையும் சேர்த்தேதான் கொள்ள வேண்டும்.கொஞ்சம் விரித்துப் பார்த்தால் பெண்கல்வியை சேதப்படுத்த வேண்டும் என்று அதன் எதிரிகள் நினைப்பார்கள் எனில் அவர்கள் இதிலும் கை வைப்பார்கள் என்ற கவனமும் நமக்கு இருக்க வேண்டியது அவசியம்.பஞ்சாப்பில் இதைத் தொடங்கி இருக்கிறார்களோ என்ற அச்சத்தை 05.11.2018 தீக்கதிர் செய்தி தருகிறது.பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குந்தால் என்ற கிராமத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் கழிவறையில் பயன்படுத்தப்பட்ட இரண்டு நாப்கின்கள் கிடந்திருக்கின்றன. இதை அறிந்த ஆசிரியைகள் யார் அந்த காரியத்தை செய்தது என்று கேட்டிருக்கிறார்கள். தண்டனைக்குப் பயந்து அந்தக் குழந்தைகள் மௌனமாக இருந்திருக்கிறார்கள்.கோவமடைந்த அந்த இரண்டு ஆசிரியைகளும் அனைத்து குழந்தைகளையும் உடைகளை களையச் சொல்லி சோதிருக்கிறார்கள். அவமானத்தால் கூனிக் குறுகிய குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் நடந்ததைக்கூறி அழுதிருக்கிறார்கள்.ச்விஷயம் முதல்வர் திரு அமரீந்தர்சிங்கிடம் போகவே அவர் விசாரனைக்கு உத்தரவிட்டிருக்கிறார். உண்மைதான் என்று தெரிய வரவே அந்த இரண்டு ஆசிரியைகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். துறைவாரி நடவடிக்கை உண்டு என்று உறுதி தந்திருக்கிறார்கள்.இதை பெண்கல்விக்கு எதிரான விஷயமாகவே பார்க்க வேண்டும்.பள்ளிக் கழிவறையில் நாப்கின் கிடந்ததென்றால் இன்சினரேட்டர் வைக்காத பள்ளி நிர்வாகம்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.ஆகவே நாம் மீண்டும் வலியுறுத்துவது இதைத்தான்,இதை ஏதோ குழந்தைகளை அம்மணப்படுத்திப் பார்த்த குற்றமாக மட்டும் பார்க்காமல் பெண்கல்வியை சீர்குலைக்கும் முயற்சியாகவே இதைப் பார்த்து அதற்குரிய தண்டனையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கோருகிறேன்#சாமங்கவிய 55 நிமிடங்கள்
02.12.2018
Published on December 07, 2018 20:49
December 5, 2018
தாகமே விஷமாகி ...
ஒரு காணொலி, அது வழிப் பொருந்திப் பெருகி வழியும் செய்திகள், அதனூடே மெல்லிசாய் நீண்டு பரவும் அரசியல் ஆகியவை குறித்து முடிந்த மட்டும் இன்று உரையாடலாம் என்று படுகிறது.சமீபத்தில் புதுச்சேரியில் நடைபெற்ற தமுஎகச மாநில மாநாட்டில் ‘புதுகை பூபாலம்’ ( Pragadeeshwaran Poobalam ) கலைக் குழு நிகழ்த்திய நிகழ்ச்சியைத் தேடிப் பிடித்துப் பார்த்தேன்.அதில் ஒரு இடத்தில் செந்திலும் பிரகதீஸ்வரனும் ஜப்பான் பிரதமரும் இந்தியப் பிரதமருமாய் மாறுவார்கள்.ஜப்பான் பிரதமர் நமது பிரதமரைப் பார்த்து கூறுவார்,“வாங்க, வாங்க, உங்களைப் பார்க்கத்தான் இந்தியா வந்தேன்”உடனே இந்தியப் பிரதமர் பதில் கூறுவார்,“வாங்க சார், வாங்க, நானும் உங்களைப் பார்க்கத்தான் இந்தியா வந்தேன்”ஊர் ஊராய் சுற்றிக் கொண்டிருக்கிறார் நமது பிரதமர். அதைப் பகடி செய்ய வேண்டும். எதையாவது செய்யுங்கள் என்று திரு நாகேஷ் அவர்களிடம் ஒரு இயக்குநர் கூறியிருந்தால் அவர் ஒரு சக நடிகரைத் துணைக்கு வைத்துக் கொண்டு எப்படி செய்திருப்பாரோ அதைப் போலவே பிரகதீஸ்வரனும் செந்திலும் இணைந்து கலக்கியிருந்தார்கள்.நாகேஷ் இன்று இருந்து இவர்களது நிகழ்ச்சியைப் பார்த்திருந்தால் இவ்வளவு எளிய முறையில் இதைக் கொடுக்க தன்னால் முடிந்திருக்காது என்றுகூட சொல்லி இருக்கலாம். அப்படி ஒரு கலக்கல்.இங்கு டெல்டா பகுதியே சின்னாப்பின்னமாகிக் கிடக்கிறது. உலகத்தில் உலை கொதிக்க நெல்லைத் தந்தவன் ஒரு கவளம் சோத்துக்காக ஈர நெஞ்சத்தினர் யாரேனும் வேனில் கொண்டு வருகிறார்களா என்று வீதியில் தவம் இருக்கிறான்.அவனைச் சுற்றி எங்கு பார்த்தாலும் தண்ணீர். ஆனால் ஒரு குவளை நல்ல தண்ணீருக்காக கையேந்தி நிற்கிறான்.இப்படியே போனால் தாகமே விஷமாகி பலரை சாகடிக்கலாம்.மாற்றுத் துணி இல்லைஏதுமற்று கட்டியிருந்த துணியோடு நிர்க்கதியாய் நிற்கிறான்.அன்றுதான் பூப்படைந்தாள் ஒரு செல்ல மகள். தென்னந்தோபிற்குள் இருக்கிறது அவர்களது வீடு. வீட்டிற்கு அருகே குடில் கட்டி தங்க வைக்கிறார்கள். அந்தக் குடிலின்மேல் தென்னை மரம் ஒன்று விழுகிறது . நசுங்கிக் கொண்டே கதறுகிறாள்.‘கஜா’ நமது பிரதமர் போல் பெருங்குரல் எடுத்து அலறுகிறது. பிரதமரின் பெருங்குரல் முன்னால் காணாமல் போகும் விவசாயியின் குரல்போல கஜாவின் பெருங்குரலின்முன் காணாமல் போகிறது அந்தக் குழந்தையின் வலிகுரல்.தலைசுற்றி வீட்டுக்குள் அழைக்கவேண்டிய மகளுக்கு கோடித் துணிக்காக ஒரு தகப்பனும் தாயும்கூட ஒரு வேனிற்காகத்தான் கையேந்தி தவம் இருந்தார்கள்.சாய்ந்த தென்னைகளைப் பார்த்து செத்தே போனான் ஒருவன்.யாரேனும் வர மாட்டார்களா?ஆறுதலாய் ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்களா?தோள்பற்றி ஆசுவாசப்படுத்த மாட்டார்களா?பார்த்துக்கலாம் விடு. நாங்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கையாய் ஒரு நாலு வார்த்தை பேச மாட்டார்களா?தற்கொலை செய்து கொண்டவன் பிணம் பார்த்து,“ஏண்டா, ஏண்டா, இப்படி. என்ன ஆச்சு. நான் இல்லையா. பார்த்துக் கொள்ள மாட்டேனா? நான் இருக்கேன் என்பதை எப்படிடா மறந்தாய்?” என்று ஒப்புக்கேனும் யாரும் பேச மாட்டார்களா?என்றுதான் எம் மக்கள் ஏங்குகிறார்கள்.செத்துப் போனவர்களைப் பார்த்து உயிரோடிருப்பவர்கள் பொறாமைப் படுகிறார்கள் என்ற உண்மை தெரியுமா பெரியோர்களே.ஒரே ஒரு முறை வந்திருந்து எம் மக்களைப் பார்த்து வழக்கம்போல கொஞ்சம் பொய்களைப் பேசிவிட்டுப் போயிருந்தால்கூட போதும்.தங்கள் அத்தனை சோகத்தையும் மறந்து சாய்ந்து கிடக்கும் தென்னையிலிருந்து நீர் அதிகமுள்ள இளநீராய்ப் பார்த்து உங்களுக்குக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, “பாரதப் பிரதமர் வாழ்க” என்று தங்களைப் பார்க்க வந்ததற்காய் எம் வெள்ளந்தி மக்கள் உங்களை நூறாண்டு வாழவேண்டும் நீங்கள் என்று வாழ்த்திவிட்டுப் போயிருப்பார்கள்.ஏன் பிரதமரே நீங்கள் வரவில்லை?வாக்குகளையும் அம்பானி அதானியையும் தவிர யார் குறித்தும் எது குறித்தும் கவலைப்படவே மாட்டீர்களா பிரதமர் அவர்களே?எங்கள் அழுகையின் வலி உமக்குப் புரியாதா? அல்லது எங்களது சோகத்தை உதாசீனம் செய்கிறீர்களா?காவேரிக்கரையில் பிறந்து படித்து ஆளான உங்கள் ராணுவத்துறை அமைச்சர் பேரிடர் நிவாரணத்திற்கு மாநில அரசு கேட்டுக் கொள்ளாததால்தான் ராணுவத்தை அனுப்பவில்லை என்கிறார்.கொஞ்சம்கூட ஈரமே இல்லையா தாயே?சொல்லி அனுப்பினால்தான் சாவு வீட்டிற்கு வருவீர்களா மேடம்?நீங்கள் வெளிநாட்டில் இருக்கும்போது இங்கே வந்த ஏதேனும் ஒரு நாட்டு அதிபர் விஷயத்தைக் கேள்விபட்டு எம் மக்களைப் பார்க்க இங்கு வந்து அந்த நேரம் நீங்கள் இந்தியா வந்தால் அவரைப் பார்க்க இங்கே வந்திருப்பீர்களா?இல்லை வரட்டும் அவர் தில்லிக்கு என்று அப்போதும் இறுக்கமாகவே இருந்திருப்பீர்களா.ஒன்று சொல்கிறேன் பிரதமர் அவர்களே,இப்போது எம் மக்களிடம் ஏதும் இல்லை. எல்லாவற்றையும் இழந்து நிற்கிறான். வரமாட்டீர்களா என்று தவிக்கிறான்.வர மறுக்கிறீர்கள்.ஆறேழு மாதங்களுக்குள் எழுந்து விடுவான். தேர்தல் வரும். நீங்களும் வருவீர்கள்.இப்போது ஏதுமற்று இருக்கும் அவனிடம் ஒரு வாக்கு இருக்கும் அப்போது.அதற்குள் அவனுக்கு அந்த வாக்கின் பொருள் புரிந்திருக்கும்.#சாமங்கவிய 17 நிமிடங்கள்
01.12.2018
01.12.2018
Published on December 05, 2018 23:54
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)