சாரு நிவேதிதா's Blog, page 222
March 1, 2021
திறமையும் திறமையின்மையும்…
ஸ்டாலினுக்கு ஒண்ணு ரெண்டு தெரியுமா, கூட்டல் கழித்தல் தெரியுமா, அவர் தந்தையைப் போல் இலக்கியம் தெரியுமா, யாகாவாராயினும் நா காக்க என்பதைத் தப்பு இல்லாமல் திருப்பி சொல்லத் தெரியுமா என்பதெல்லாம் முக்கியம் அல்ல. முதல் மந்திரி ஆவதற்கு இம்மாதிரி கணக்குப் பரிட்சை, மொழிப் பரிட்சையில் எல்லாம் தேற வேண்டிய அவசியம் இல்லை. அவர் மேயராக இருந்த போது சென்னை நிர்வாகத்தை நல்ல முறையில் செய்தார். அவர் தந்தை அளவுக்கு சூதனம் தெரியாதவர். அதுவே அவர் பலமும் கூட. ... Read more
Published on March 01, 2021 00:47
February 28, 2021
புத்தகங்களில் என் கையெழுத்து வாங்குவதற்கு…
நான் புத்தக விழாவுக்கு வர முடியாத நிலையில் இருக்கிறேன். எனவே உங்கள் புத்தகங்களில் என் கையெழுத்து வாங்குவதற்கு உங்களால் முடிந்தால் என் வீட்டுக்கு வரலாம். என் வீட்டைக் கண்டு பிடிப்பது மவுண்ட் ரோட்டில் எல்.ஐ.சி. கட்டிடத்தைக் கண்டு பிடிப்பதைப் போல. சாந்தோம் ஹை ரோடில் ஒரு பிரபலமான ஷோரூமின் மாடியில் இருக்கிறது என் அபார்ட்மெண்ட். எனக்கு ஒரு மெயில் போட்டால் முகவரியும் போன் நம்பரும் அனுப்புகிறேன். மாலை நான்கு மணியிலிருந்து எட்டரைக்குள் வந்தால் நலம். போன் நம்பரில் ... Read more
Published on February 28, 2021 21:49
மரபின் நதியில் ஒரு ஞாபகக் கிடங்கு
காந்தியின் அஹிம்சைத் தத்துவத்தை குறைந்த பட்சம் அவரது சீடர்களாவது பின்பற்றினார்கள். ஆனால் அவர்களுக்கும் அவ்வப்போது அதில் சந்தேகம் வந்து விடும். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அஹிம்சையை எப்படிப் பிரயோகப்படுத்துவது என்பது குறித்த சந்தேகம். ஆள் ஆளுக்கு ஒரு யோசனை சொல்வார்கள். பிறகு எதிலுமே திருப்தி காணாமல் காந்தியையே நாடுவார்கள். அப்போது அவருக்கு வருத்தம் ஏற்படும். நான் போதிக்கும் தத்துவம் உங்கள் குருதி நாளங்களுக்குள் சென்றிருந்தால் இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் எப்படி ஹிம்சையைத் தவிர்த்து நடந்து கொள்வது என்று ... Read more
Published on February 28, 2021 07:15
முகமூடிகளின் பள்ளத்தாக்கு & Inception
அன்பிற்குரிய சாரு, முகமூடிகளின் பள்ளத்தாக்கு வாங்கிவிட்டேன். புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்த நண்பர் ஒருவர் புத்தகத்தை வாங்கி ஹைதராபாத்திற்குக் கொண்டுவந்து சேர்த்துள்ளார். கையோடு முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கியுள்ளேன். நீங்கள் நூல் அறிமுகத்தில் கூறியது போலவே, நாவலின் நடை அபாரமான கவித்துவத்துடன் நவீன கவிதையை வாசிப்பது போலவே உள்ளது. அத்துடன், நுண்ணிய விஷயங்கள், அற்புதமான உவமைகளுடன் கூடிய சித்தரிப்புகளாக மாறியுள்ளதும், வாசிப்பில் புதிய அனுபவத்தை அதாவது fresh dimension-ஐத் தந்துள்ளது. கிரிஸ்டோபர் நோலனின் Inception படத்தைப் போல ஒரு ... Read more
Published on February 28, 2021 04:26
February 27, 2021
இச்சா : ஷோபா சக்தி
ஷோபா சக்தியின் இச்சா படித்தேன். தமிழின் பத்து முக்கியமான நாவல்களில் இச்சாவும் ஒன்று என நிச்சயமாகச் சொல்வேன். இது பற்றி விரைவில் விரிவாக எழுதுவேன். இதுவரையில் அவர் எழுதிய நாவல்கள் அனைத்தும் இதை எழுதுவதற்கான பயிற்சியோ என்று தோன்றும் அளவுக்கு ஒரு அற்புதமான நாவல் இச்சா. ரசித்து ரசித்துப் படித்தேன். நாவலில் ஒரு இடம் வருகிறது: மெல்ல மெல்ல அழிந்து கொண்டிருக்கும் என் உடல் எழுத்துகளாகவும் ஆன்மா அசப்பியக் குறிகளாகவும் வடிவம் கொள்கின்றன. அன்பும் வெறுப்பும் காதலும் ... Read more
Published on February 27, 2021 07:28
February 26, 2021
27 feb 2021 zoom meeting 7 pm
நாளை இந்திய நேரம் மாலை ஏழு மணிக்கு சேனன் எழுதிய சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள் என்ற நாவல் பற்றிப் பேசுகிறேன். லண்டனில் உள்ள திரள் சமூக கலை இலக்கியக் குழுமம் நடத்துகிறது. நேரில் நடந்திருந்தால் பெரிய அடிதடி ரகளை எல்லாம் அரங்கேற்றம் ஆகியிருக்கும். நான் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்குத் தகுந்த பாதுகாப்போடுதான் போவது வழக்கம். ஒருமுறை புத்தக விழாவில் உயிர்மை நடத்திய கூட்டத்தில்தான் மிகப் பெரிய ரகளை நடந்து எனக்குக் கொலை மிரட்டலும் விடப்பட்டது. இது ஸூம் ... Read more
Published on February 26, 2021 04:48
February 25, 2021
சிங்கப்பூர்
என் மகன் கார்த்திக் மரீன் எஞ்ஜினியர் என்பதால் அவன் போகாத நாடு இல்லை. ஆனால் அவன் வசிக்கும் ஊர் மும்பை. என்னை அடிக்கடி மும்பை வரச் சொல்லுவான். நான் மும்பைக்கே சென்று விட வேண்டும் என்பது அவன் ஆசை. அவன் வீட்டில் அல்ல. தனி விட்டில்தான். நான் அதற்கு அவனிடம் பதில் சொல்ல மாட்டேன். அவந்திகாவிடம் சொல்வேன். ”எங்காவது ஐரோப்பிய நகரிலிருந்து கொண்டோ அமெரிக்காவில் இருந்து கொண்டோ கூப்பிட்டால் இன்றைய தினமே என் ஜாகையை மாற்றிக் கொண்டு ... Read more
Published on February 25, 2021 23:35
February 24, 2021
வந்து விட்டது முகமூடிகளின் பள்ளத்தாக்கு
இன்று மாலை (25-2-2021) நான்கு மணியிலிருந்து சென்னை புத்தக விழா ஸீரோ டிகிரி பதிப்பக அரங்கு 10 – 11 இல் முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவல் கிடைக்கும். இப்போதே தேவையானால் அண்ணா நகரில் உள்ள ஸீரோ டிகிரி பதிப்பக அலுவலகத்தில் கிடைக்கும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். புத்தக விழா முடிவதற்குள் 3000 பிரதிகள் விற்க வேண்டியது உங்கள் கையில். நன்றி.
Published on February 24, 2021 23:15
அன்புள்ள சேனனுக்கு…
அன்புள்ள சேனனுக்கு, நான் மொழிபெயர்த்த ஊரின் மிக அழகான பெண் என்ற சிறுகதைத் தொகுப்பை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா என்று எனக்குத் தெரியாது. நீங்கள் லண்டனில் இருப்பதால் அநேகமாக வாசித்திருக்க வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் கிண்டிலில் கிடைக்கிறது. வாசித்துப் பாருங்கள். அந்தத் தொகுதியில் லெபனிய எழுத்தாளர் காதா ஸம்மான் (Ghada Samman) எழுதிய பெய்ரூட் கொடுங்கனவுகள் என்ற நாவலிலிருந்து சில பகுதிகளை மொழிபெயர்த்திருக்கிறேன். சனிக்கிழமை நடக்க இருக்கும் உங்கள் நாவல் சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள் பற்றி ... Read more
Published on February 24, 2021 22:12
படித்ததில் பிடித்தது…
நாளை காங்கிரஸ் ஆட்சிக்கு வருமா, மோடியே வருவாரா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அரசியலில் எனக்கு ஆர்வம் போய் விட்டது. மக்களின் தகுதிக்கு ஏற்பவே தலைவர்கள் வருவார்கள் என்ற விரக்தி உணர்வே காரணம். ஆனாலும் ராகுலின் இந்தத் தன்மை எனக்குப் பிடித்திருக்கிறது. நாளை பிரதம மந்திரி நாற்காலில் இவர் அமர நேர்ந்தால் இவரை இப்படி இருக்க விட மாட்டார்கள். ஆனாலும் மனோபாவத்தை எத்தனை பதவி வந்தாலும் மாற்ற முடியாது. இவரைப் போன்ற ஒருவரே தலைவராக வர வேண்டும். தகுதி ... Read more
Published on February 24, 2021 21:05
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

