Mathavaraj's Blog, page 10

January 18, 2022

தொடர்பு எல்லைக்கு வெளியே - 5 (தொடர்கதை)


டவுணும் இல்லாத கிராமமும் இல்லாத அந்த ஊரின் பஜாரில்  ’பத்மாவதி ஜவுளி ஸ்டோர்’ வைத்திருந்தார் பூசைப்பழம். கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் கடையிலிருந்து வந்து சாப்பிட்டு விட்டு போனார்.  அப்போது சொல்ல மறந்திருக்க வேண்டும். அடுத்துத் தான்  சாப்பிடப் போகும் வழியில் முருகேசன் “பந்தலுக்குச் சொல்லியாச்சு. மேளத்துக்கும் சொல்லியாச்சு. மொத நா ராத்திரி, அடுத்த நா காலைல, மத்தியானம் எல்லாம் பந்திக்கு என்னென்ன வைக்கணும்னு யோசிச்சு வைங்க. சமையலுக்குச் சொல்லணும். அப்பா உங்கக் கிட்ட கேக்கச் சொன்னாங்க” சொல்லிவிட்டுப் போனார். அடுத்த தெருவில் ஒரு வீட்டில் குடித்தனம் இருக்கிறார்.

 

சரி, சரி என்ற பத்மாவதி அம்மாள் வேறு எதையும் பேசவில்லை. மாப்பிள்ளை வீட்டில் ரொக்கம் வேண்டாம், நகையும் நீங்கள் போடுவதுதான் எனச் சொல்லியதிலிருந்து தன் மகன் கல்யாண ஏற்பாடுகளில் கடும் வேகமாக இருப்பதை பார்த்துக் கொண்டுதான் இருந்தார்.  நிச்சயதார்த்தத்தில் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை விழுந்து விழுந்து உபசரித்தபோதே புரிந்து போனது.  போதாக்குறைக்கு கல்யாணச் செலவுக்கு தங்கள் தரப்பில் மூன்று லட்சம் தருவதாக ரவிச்சந்திரனின் அண்ணன் அதாவது பூங்குழலியின் பெரியப்பா நிச்சயதார்த்தத்துக்கு வந்திருந்த போது  சொல்லி இருந்தார்..

 

பூங்குழலியின் அண்ணன் கலைச்செல்வன் தன் இஷ்டத்திற்கு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து போய் விட்டதிலிருந்து தன் அக்கா சித்ராவின் குடும்பத்தோடு பட்டும் படாமல் இருந்தார் முருகேசன். நான்கு வருஷமாய்  இருந்த முறைப்பு விறைப்பு எல்லாவற்றையும் இப்போது உதறிவிட்டிருந்தார்.  மாரியம்மன் அருளால் இந்த வரன் அமைந்ததாக பூசைப்பழத்திடம் நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் வாய்விட்டுச் சொன்னார். வரிசையாக மூன்று பெண் குழந்தைகளை வைத்திருக்கும் தன் மகன் முருகேசன் அந்த குடும்பத்தின் ஒவ்வொரு காசுக்கும் எப்படி கணக்கு பார்ப்பார் என்று பத்மாவதிக்குத் தெரியும். பேத்தி பூங்குழலியால் இப்போது ஆரம்பித்திருக்கும் பிரச்சினைகளைச் சொன்னால் அவ்வளவுதான். முருகேசனின் முகம் போகும் போக்கை பார்க்க முடியாது. எப்படி சரி செய்வது என  பத்மாவதியும், சித்ராவும் யோசித்துக் கொண்டு இருந்தார்கள்.

 

திருமண அழைப்பிதழ் அச்சடிப்பது சம்பந்தமாய் கொஞ்ச நேரத்துக்கு முன்பு சந்திராவிடம் சித்ரா பேசியபோது தெரிந்தது. ஒரு சாதாரண விஷயமாகத்தான்  சந்திராவும் சொன்னார். உள்ளுக்குள் வருத்தம் தெரிந்தது. பூங்குழலியை சின்ன வயதில் இருந்து பார்த்து வந்திருப்பதால் சித்ராவுக்கு லேசாய் பதற்றம் தொற்றியிருந்தது. அவள் ஆறாம் வகுப்பு படிக்கும்போது, எல்லோரும் பார்க்கப் போயிருந்த அந்த மேஜிக் ஷோ இப்போதும் ஒரு பயங்கர கனவு போல இவரை  பயமுறுத்தும்.

 

அரங்கம் முழுவதும் விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க, வெளிச்சம் வட்டமாய் குவிந்திருந்த மேடையின் அந்தரத்திலிருந்து மேஜிஷியன் இறங்கி வந்து ஷோவை நடத்த ஆரம்பித்தார். வெறும் கைக்குட்டையை காட்டி சுருக்கி விரித்த போது பூக்கள் கொட்டின. வீசிய தொப்பியிலிருந்து புறாக்கள் பறந்தன.  கைகளும், காலும் கட்டப்பட்ட பெண்ணை சின்னப் பெட்டிக்குள் மடக்கி உட்காரவைத்து பூட்டிவிட்டு திறந்தால் கட்டுகள் இல்லாமல் எழுந்தாள். ஒவ்வொன்றும் ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியமாய் இருந்தன. எல்லோரும் கை தட்டி ஆரவாரித்துக் கொண்டிருந்தனர். “எப்பிடிப்பா..”, “எப்பிடிப்பா..” என்று ரவிச்சந்திரனைத் தொட்டு தொட்டு கேட்டுக்கொண்டிருந்தாள் பூங்குழலி.  அருகே கலைச்செல்வனும், சித்ராவும் ரசித்துக் கொண்டிருந்தனர்.

 

கில்லட்டின் போன்ற ஒன்றை மேடையில் வைத்து, அதன் வளையத்தில் பூசணிக்காயை வைத்து மேலிருந்த லிவரை இழுக்கவும், கத்தியாய் பளபளத்த பெரிய பிளேடு போல இருந்த ஒன்று சட்டென்று இறங்கி வெட்ட இரண்டு துண்டுகளாய் தரையில் உருண்டன.  

 

“உங்களிடமிருந்து ஒருவரை இப்போது அழைக்கிறேன். ஒரு சின்னப் பையனோ, பெண்ணோ மேடைக்கு வாருங்கள். அவர்கள் தலையை இதற்குள் கொடுக்க வேண்டும். யார் வருகிறீர்கள்” கூட்டத்தைப் பார்த்து மேஜிஷியன் அழைத்தார். அனைவரும் உறைந்து போயினர்.

 

ரவிச்சந்திரன் பூங்குழலியைப் போகச் சொன்னார். அவள் கொஞ்சம் யோசித்து எழுந்தாள்.

 

“ஒங்களுக்கு என்ன பைத்தியமா?  சும்மா இருங்க.” சித்ரா பயந்தார்.

 

“அவ கெடக்கா. ஒன்னும் ஆகாது. நீ போம்மா”

 

“ஐயோ, எம்புள்ள, நா போக விட மாட்டேன்.” கத்தவும் பக்கத்திலிருந்தவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். ரவிச்சந்திரன் அமைதியானார்.

 

யாரும் முன் வராமல் போகவே, ஷோவிலிருந்த ஒரு சின்னப் பெண்ணையே அழைத்து அந்த வளையத்திற்குள் தலையை விடச் செய்தார் மேஜிஷியன். கலைச்செல்வன் தன் அப்பாவின் கைகளைப் பற்றிக்கொள்ள பூங்குழலி சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். மேஜிஷியன்  மேலே லிவரை பிடித்து இழுக்கவும் அந்தப் பெண்ணின் கழுத்தில் பூமாலை விழுந்தது. அதிர்ச்சியிலிருந்து மீண்டு எல்லோரும் கை தட்டினார்கள்.

 

வீட்டுக்கு வந்த பிறகும் “கழுத்தை வெட்டாதுன்னு தெரியுதுதான். ஆனாலும் பயமா இருக்குல்ல. இப்ப நினைச்சாலும் உடம்பு நடுங்குது..” என்றார்  சித்ரா. ரவிச்சந்திரன் சிரித்தார். “ஆமா, சிரிங்க… என்ன மனுஷன் நீங்க…. நம்ம புள்ளயப் போயி அனுப்பப் பாத்தீங்களே” என்று கோபப்பட்டார். ரவிச்சந்திரன் மேலும் பலமாக சிரித்தார்.

 

இரண்டு நாள் கழித்து பள்ளிக்கூடத்திலிருந்து மேஜிக் ஷோவுக்கு மாணவர்களை அழைத்துச் சென்றார்கள். பூங்குழலி அன்றைக்கு பூமாலையோடு வந்தாள். சித்ராவால் முதலில் நம்பவே இல்லை. உண்மைதான் என கலைச்செல்வன் சொன்னதும் வெலவெலத்துப் போனார். எப்படி தன் பெண்  அத்தனை பேருக்கும் முன்னால், அந்த இருட்டில் நான் வருகிறேன் என எழுந்து மேடைக்குச் சென்று அந்த வளையத்திற்குள் தலையை கொடுத்தாள் என நினைத்து கதிகலங்கிப் போனார். எதுவும் நடக்காதது போல அன்று பூங்குழலி அமைதியாக உட்கார்ந்து பாடம் எழுதியது, சாப்பிட்டது, படுத்து உறங்கியது எல்லாமும் பயம் தந்தது. தூங்கும்போது தன் குழந்தையா இவள் என்பது போல் தொட்டுப் பார்த்தார். அவ்வளவு நெஞ்சழுத்தக்காரியா அவள் என அன்றைக்கு அதிர்ச்சியடைந்தார் சித்ரா.

 

இன்றைக்கு சந்திராவிடம் போனில் பேசியதும் ஏனோ தவிப்பாய் இருந்தது. பூங்குழலிக்கு உடனே போன் செய்தார். எடுக்கவில்லை. இரண்டு மூன்று தடவை தொடர்ந்து  முயற்சி பார்த்தார்.

 

“ஊர்ல உலகத்துல இப்பலாம் கல்யாணம் நிச்சயம் ஆய்ட்டுன்னா பொண்ணும் மாப்பிளையும்  நேரம் காலம் தெரியாம ஆசை ஆசையா போன்லயே பேசிக்கிடறாவ கண்டிருக்கு. ஒம்பொண்ணும் அந்தப் பையனும் அப்படி எதுவும் பேசுறது இல்லையா?” கேட்டுக்கொண்டே சித்ராவைத் தாண்டிச் சென்று வாசல் கதவைச் சாத்தி வந்தார் சந்திரா. “அப்படி எதாவது பேசினா இப்படியெல்லாம் ஒன்னு கெடக்க ஒன்னு பேச்செல்லாம் வராதேன்னு கேட்டேன்” என்று அவரே பதில் சொல்லியபடி  சமையலறை சென்றார்.

 

வரப் போகும் மருமகள் மீது மாப்பிள்ளை வீட்டில் வைத்திருக்கும் ஆசை பத்மாவதிக்குப் புரிந்தது, பூங்குழலி நல்ல பெண்தான், ஆனால் பாசத்திற்கு உருகுகிறவள் இல்லை என்று புரிந்து வைத்திருந்தார். அவளுக்கு சடங்கு கழித்த இரண்டு மாதத்தில் ரவிச்சந்திரன் தனது நாற்பத்து நான்காவது வயதில் இறந்து போனார். பைக்கில் சென்றபோது விபத்தில் முகமும் உடலும் சிதைந்து போனவரை ஒரு உருவமாக வெள்ளைத்துணியால் போர்த்திக் கட்டி ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டு வந்தார்கள். அப்பாவின் மீது விழுந்து பூங்குழலி கதறிக் கதறி அழுதாள். அதற்குப் பிறகு பூங்குழலியும், கலைச்செல்வனும் இந்த வீட்டில்தான் வளர்ந்தார்கள். ஒருநாளும் அவள் அழுது பார்த்ததில்லை. நெஞ்சழுத்தக்காரியாய் இருந்தாள். தன் போக்கில்தான் போவாள். லேசில் பிடி கொடுக்க மாட்டாள்.

 

வாசலிலும் ஜன்னலிலும் நின்று பெண்கள் எட்டிப் பார்த்த காலம் எல்லாம் போய்விட்டது. ஆணும் பெண்ணுமாய் ஒரே இடத்தில் படிக்கவும், வேலை பார்க்கவுமான பிறகு என்ன வேண்டுமானாலும் நடக்கும்  என்று பயமாக இருந்தது. கண் காணாத தூரத்தில் இருக்கும் தங்கள் குழந்தைகளை நினைத்து, “நல்ல புத்தியையும், நல்ல சுகத்தையும் கொடு கடவுளே!” என நாளும் பத்மாவதி வேண்டிக்கொண்டிருந்தார். கலைச்செல்வனால் மொத்தக் குடும்பமும் உடைந்து போனது. வெளியே தலைகாட்ட முடியாமல் செய்துவிட்டானே என புலம்பித் தள்ளினார்.

 

அந்த பயத்தில்தான் பூங்குழலிக்கு வேலை கிடைத்தவுடன் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என துடித்தார். சித்ராவுக்கு அது சரியாகவேப் பட்டது. பத்மாவதியின் இரண்டாவது பெண் அமுதாவுக்கு  இரண்டு பெண் குழந்தைகள், கடைசிப் பெண் விமலாவுக்கு ஒரு ஆணும், பெண்ணும், மகன்காரன் முருகேசனுக்கு மூன்று பெண்குழந்தைகள் என வரிசையில் நிற்கிறார்கள்.  அந்த வீட்டில் ஒரு சுப காரியத்தை நடத்தி  இழந்த கலகலப்பையும், சந்தோஷத்தையும் கொண்டு வந்து விடலாம் என  தாயும் மகளும் நினைத்தார்கள். அந்த நினைப்பு இருந்தால் பூங்குழலி இப்படியெல்லாம் நடந்து கொள்வாளா என்றிருந்தது.

 

அமுதாவுக்கு பைல்ஸ் ஆபரேஷன் என்று நான்கைந்து மாதங்களுக்கு முன்பு சென்னை சென்று மேடவாக்கத்தில் ஒரு வாரம் போல இருந்த பத்மாவதி, திரும்பி வந்து சித்ராவிடம் நிறையவே குறைபட்டுக் கொண்டார். கல்லூரியில் படிக்கும் விமலாவின் மூத்த பெண் சுபாஷினி சதா நேரமும் போனும் கையுமாகத்தான் இருந்தாளாம். தூங்காமல் கொள்ளாமல் கம்ப்யூட்டர் முன்னாலேயே உட்கார்ந்திருந்தாளாம். எப்படி ஒழுங்கா படித்து முடிக்கப் போகிறாளோ, என வருத்தப்பட்டார். அவளது தாயும் தகப்பனும் அதை பெரிதாக கண்டு கொள்ளாமல் இருந்தது சரியாகப் படவில்லை. கல்லூரி படித்து முடிக்கும் வரை பூங்குழலிக்கு தாங்கள்  போன் வாங்கிக் கொடுக்கவில்லை என்று அவர்களிடம் பெருமையாகச் சொல்லிக் காட்டியிருந்தார். இப்போது போன் வழியாகத்தான் பிரச்சினை என்றால் அவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதும் உள்ளுக்குள் ஒடிக்கொண்டு இருந்தது.

 

சித்ராவின் மொபைல் குரல் எழுப்பியது. பூங்குழலிதான் பேசினாள். “என்னம்மா, இந்த நேரம்? பிஸியா இருக்கேன். சொல்லும்மா..”

 

“யம்மா பூவு, உன் விளையாட்டல்லாம் நிறுத்திக்கம்மா. மாப்பிள்ளையோட அப்பாவும் அம்மாவும் வருத்தப்படுறாங்க. மாப்பிள்ளைக்கிட்ட போன் பண்ணி ஒரு ஸாரி சொல்லிட்டா என்ன.”

 

“உன் கிட்ட பஞ்சாயத்துக்கு வந்துட்டாங்களா?  அவங்களுக்கு வேற வேலையே இல்லையா? ஐயய்யே.... என்ன இது?”

 

“பஞ்சாயத்துல்லாம் இல்ல. சும்மா பேசிக்கிட்டிருந்தோம். வருத்தப்பட்ட மாரி தெரிஞ்சுது…”

 

“ஆரம்பிச்சிட்டிங்களா… நிறுத்தும்மா. ஒரு சின்ன விஷயத்த எல்லோருமா சேர்ந்து பெரிசாக்குறீங்க.”

 

“மாப்பிள்ளைக்கிட்ட ஒரு ஸாரி கேட்டாதான் என்னம்மா?”

 

“நா ஒரு தப்பும் பண்ணல. கேக்க முடியாது. நரேன் கிட்ட பேசிக்கிறேன்..”

 

“இதப் பாரு... உன் நல்லதுக்குச் சொல்றேன்.....” சித்ரா சொல்லிக்கொண்டு இருக்கும் போதே பத்மாவதி அவளிடமிருந்து போனை வேகமாய் வாங்கி “ஏளா சின்ன நாயே! அப்புறம் என்ன மயித்துக்கு அப்படி எழுதினியாம்” ஆங்காரமாய் கத்தினார்.

 

பதில் இல்லை. காதில் கொஞ்ச நேரம் போனை வைத்திருந்து விட்டு, சித்ராவிடம் கொடுத்தார். “நாந்தான் பேசிக்கிட்டு இருக்கேன்ல. அதுக்குள்ள இப்படியாக் கத்துறது. வச்சிட்டா”  என்று  திரும்பவும் சித்ரா போன் செய்தாள். பூங்குழலி எடுக்கவில்லை. “கோபப்பட்டா காரியம் நடக்காது. அவ இன்னும் வீம்புதான் பண்ணுவா. அவளப் பத்தி எனக்குத் தெரியும்.”

 

“பிறகென்ன? அந்த சின்னக் கழுதக் கிட்ட கெஞ்சுறது. அவ பெரிய இவளோ. ஆனாலும் பொட்ட புள்ளைக்கு இவ்வளவு திமிரும் கொழுப்பும் ஆகாதுடி.” மேலும் கத்தினார் பத்மாவதி.

 

சித்ரா ஒன்றும் சொல்லாமல் சமையலறைக் கதவைத் திறந்து பின்பக்கம் வளவில் இருந்த நார்க்கட்டிலில் உட்கார்ந்து கொண்டார். செல்போனை இரண்டு கைகளுக்குள்ளும் பொத்தியபடி எங்கோ வெறித்துக்கொண்டிருந்தார். ஜன்னல் வழியே மகளைப் பார்த்த பத்மாவதிக்கு அந்த கோலம் சங்கடத்தைத் தந்தது. சித்ராவுக்குத் துணையாக நாம்தானே   இருந்து வருகிறோம், தன்னுடைய காலத்துக்குப் பிறகு  யார் கவனித்துக் கொள்வார்கள், தனக்கும் எழுபது கிட்டே ஆகிறது என்றெல்லாம் நினைத்து வேதனையடைந்தார். கலைச்செல்வனின் குடும்பத்தோடு உறவு  இல்லாமல் இருக்கிறது. பூங்குழலியின் நிச்சயதார்த்தம் நடந்த போது பேத்தி யாழினியை சித்ரா தூக்கி வைத்துக் கொள்ளக் கூட இல்லை.

 

யோசிக்கும் போதெல்லாம் ரவிச்சந்திரன் மீதும் அவரது குடும்பத்து மனிதர்கள் மீதும் வெறுப்பும் ஆத்திரமும் பத்மாவதிக்கு வரும். அந்த பைத்தியக்காரி கல்யாணிக்குப் பயந்து தனது மகள் தலையில் கட்டி வைத்து வாழ்க்கையை நாசமாக்கி விட்டார்கள் என சபித்துக் கொள்வார். அவர்கள் ஊரில் ஒரே தெருவில் இருந்த கல்யாணிக்கும் ரவிச்சந்திரனுக்கும் சின்ன வயசில் இருந்தே பழக்கம் என்றும்,  வசதியில்லாத குடும்பத்தை சேர்ந்தவள் என்பதால் ரவிச்சந்திரனின் அப்பா சபாபதி மறுத்துவிட்டார் என்றும் அந்த ஊரைச் சேர்ந்த பழக்கடைக்காரர் ஒருவர் பூசைப்பழத்திடம் கதை கதையாய்ச் சொல்லியிருந்தார். ரவிச்சந்திரனின் பிறந்தநாளுக்கு கல்யாணி தன் வீட்டு வாசலில் கோலம் போடுவாராம். தெருவில் நின்று, “என் மன்னன் எங்கே, என் மன்னன் எங்கே”  என பாட்டுப் பாடுவாராம். ஒருதடவை அவன் வேலை பார்த்த ஊருக்கே போய் தங்கியிருந்த லாட்ஜின் அறையைத் தட்டி ரகளை ஆகிவிட்டதாம். இவையெல்லாம்  காதில் விழுந்தும் ஆரம்பத்தில் பத்மாவதி அமைதியாய்த்தான் இருந்தார். 

 

கல்யாணமாகி நான்கைந்து வருஷங்களுக்குப் பிறகும் சித்ராவும், ரவிச்சந்திரனும் தங்கியிருந்த திருச்செந்தூருக்கேப் போய் அந்தக் கல்யாணி “அக்கா, ஒங்க வீட்டுல ஒரு வேலைக்காரியாவாது இருக்கிறேனே” என கெஞ்சி அழுதிருக்கிறார். அடுத்த ஞாயிற்றுக்கிழமை லீவில் ஊருக்கு வந்தபோது மகள் சொன்னதைக் கேட்டதும் பத்மாவதி கொதித்துப் போனார்.

 

“மொதல்லயே தெரிஞ்சிருஞ்சா நாங்க கல்யாணத்துக்கே சம்மதிச்சிருக்க மாட்டோம்” என ரவிச்சந்திரனை வைத்துக்கொண்டே  சொல்லிவிட்டார். அந்த வீட்டில் இனி காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்று அன்றைக்கு சித்ராவை அழைத்துக்கொண்டு ரவிச்சந்திரன் வெளியேறினார். பூசைப்பழம் வீடு தேடி வந்து மன்னிப்புக் கேட்டபிறகும் சமாதானமாகவில்லை. சித்ராவை மட்டும் அனுப்பி வைப்பார்.

 

“அவர் மீது தப்பு இல்லையாம், அந்தப் பொண்ணுதான் உயிரா இருந்துச்சாம். அவங்கம்மா சொன்னாங்க” என தன் அம்மாவிடம் இன்னொருநாள் சொன்னார் சித்ரா.

 

“ஒம்புருஷன் எதுவுமே செய்யாம அவ அப்படி மயங்கிட்டாளாக்கும். போடி, நீ ஒரு பைத்தியக்காரி!”  ஏளனமாகச் சொன்னார் பத்மாவதி. அத்தோடு நிறுத்தியிருக்கலாம். அந்த ஊரில் இருந்த ரவிச்சந்திரனின் சொந்தக்காரர்களிடம்  எல்லாம் வாய்க்கு வந்தபடி பேசி இருக்கிறார்.

 

அந்த பொங்கலுக்கு ரவிச்சந்திரனின் ஊருக்குச் சென்றிருந்த போது ரவிச்சந்திரனின் அம்மா, பேச்சோடு பேச்சாக சித்ராவிடம் “ஒங்கம்மா  இப்படியெல்லாம்  பேசினாளாமே. அவ யோக்கியம் எனக்குத் தெரியாதுன்னு நெனைச்சிக்கிட்டு இருக்காளா, ஒங்கப்பாவோட தோட்டத்துல வேலை செஞ்சிட்டு இருந்த குடும்பந்தான ஒங்கம்மா குடும்பம். வயலு, வரப்பு, கடை, சொத்துன்னு கணக்குப் போட்டு  பம்புசெட்டு ரூமுக்குள்ள ஒங்கப்பங்கூட போயிருக்கா. ஒங்கம்மாவுடைய அண்ணங்காரன் கதவ வெளிய மூடி பஞ்சாயத்தக் கூட்டிட்டான். இப்படித்தான ஒங்கப்பாவுக்கும், ஒங்கம்மாவுக்கும் கல்யாணமே நடந்துச்சு. எதோ கெரகம் ஒங்க வீட்டுல சம்பந்தம் வச்சிக்கிட்டோம்” என்று பொரிந்துவிட்டார். முகத்தைப் பொத்திக்கொண்டு “ஏ.. என் அம்மா, அம்மா” என  சித்ரா சத்தம் போட்டு அழுதார்.

 

கேள்விப்பட்ட ரவிச்சந்திரன் தனது அம்மா என்றும் பாராமல் கடுமையாக பேசிவிட்டார். “அறிவிருக்கா, என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதான் பேசுனீங்களா. ஒங்க சங்காத்தமே வேண்டாம். வா.... சித்ரா” அழைத்துக்கொண்டு போய்விட்டார். அதற்குப் பிறகு அந்த வீட்டோடும் உறவு அற்றுப் போனது.

 

பூங்குழலி பிறந்த பிறகு ரவிச்சந்திரனின் அம்மா பார்க்க வந்தார். சித்ராவிடம் மன்னிப்பு கேட்டு, “ஊருக்கு வாம்மா. நம்ம கோவில்ல வச்சு பேத்திக்கு காது குத்தணும்.”  அழைத்தார். உறவுகள் அறுந்து போகாமல் பேருக்கு ஒட்டிக்கொண்டு நின்றன. கடைசி வரை ரவிச்சந்திரன் சித்ராவின் வீட்டுக்குச் செல்லவே இல்லை. அதுபோல ரவிச்சந்திரனின் அம்மா இறந்ததுக்கு பத்மாவதியும் போகவுமில்லை. துஷ்டி கேட்கவுமில்லை.

 

போன்  சத்தம் கேட்டது.  எடுத்து சித்ரா  பேசினார். பத்மாவதி அருகில் போய் நின்று கேட்டார்.

 

‘ம்’, ‘ம்’   சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தவர், “அவ ஏங்கிட்டயே எப்பமாவதுதான் பேசுவாப் பாத்துக்குங்க. நீங்க ஒன்னும் வருத்தப்படாதீங்க. நாங்க பேசுறோம்.”  என்றார்.

 

என்ன என்று  சத்தம் வராமல் பத்மாவதி, வாயசைத்துக் கேட்டார். பொறுங்கள் என்று சைகை காட்டிவிட்டு, “சரிங்க” , “சரிங்க” என்றார். “ஆமாமா,  கொஞ்சம் அலட்சியமா இருப்பா. இனும அவ ஒங்க பொண்ணு. நீங்கதான் பாத்துக்கணும்” போனை அணைத்தார்.

 

“யாரு, மாப்பிள்ள வீட்லயா?” மகளின் அருகே உட்கார்ந்து கொண்டார்.

 

“ஆமா, மாப்பிளையோட அம்மாதான் பேசினாங்க. அவங்க, அவங்க வீட்டுக்காரரு. மாப்பிள்ளை மூனு பேருக்கும் ஒன்னு போல ஸாரின்னு ஒத்த வார்த்தைல பூவு மெஸேஜ் அனுப்பியிருக்காளாம். கோபத்துல வேண்டா வெறுப்பா பண்ண மாதிரி இருக்காம். வருத்தப்படுறாங்க…”

 

பெருமூச்சு விட்டார் பத்மாவதி.

 

(தொடரும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 18, 2022 23:31

January 17, 2022

பொய் மனிதனின் கதை - 8


“ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது நம்பப்பட்டு விடும்”

- அடால்ப் ஹிட்லர்

 

“விக்கிலீக்ஸ் மிகச் சரியாகத்தான் சொல்லும். நான் ஊழலற்றவன் என அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது சந்தோஷமளிக்கிறது” என்று குஜராத் முதல் மந்திரியாய் இருந்த நரேந்திர மோடி 2011 மார்ச் 22ம் தேதி ஊடகங்களிடம் சொல்லி புளகாங்கிதம் அடைந்தார். “மக்களிடம் கேட்டறிந்தே அந்த செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது” என்றும் தெரிவித்தார். அதனை அவரது வலைத்தளத்திலும் பதிவு செய்தார். அதே நாளில் குஜராத்தில் பண்டிட் தீனதயாள் பல்கலை கழகத்தில் பேசும்போதும், “நான் ஊழலற்றவன் என அமெரிக்கா சொல்லி விட்டது.” என்று தம்பட்டமும் அடித்துக் கொண்டார்.

 

விஷயம் என்னவென்றால் விக்கிலீக்ஸிலிருந்து மைக்கேல் ஓவன் என்பவர் 2006ம் ஆண்டில் மோடியை சந்தித்து உரையாடியிருந்தார். குஜராத் கலவரங்களால் ஏற்பட்ட களங்கத்தால் மோடியின் விசாவை அமெரிக்கா ரத்து செய்திருந்தது. அதையொட்டி மனித உரிமை மீறல் குறித்தும், மேலும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் நடந்த உரையாடல்களின் அடிப்படையில் மோடி குறித்த ரிப்போர்ட் ஒன்றை விக்கிலீக்ஸுக்கு ஓவன் அனுப்பி இருந்தார்.

 

2011 மார்ச் 22ம் தேதி வெளியான ஹிந்து நாளிதழில் அந்த ரிப்போர்ட் பற்றிய தகவல்கள் வெளியாகி இருந்தன. ”குஜராத்தின் பொது வாழ்க்கையில் ஊழலைக் குறைத்தவர் போன்ற பிம்பத்தை மோடி வெற்றிகரமாக கட்டமைத்திருந்தார்.” என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

 

அதைத்தான் அப்போது குஜராத் முதலமைச்சராய் இருந்த நரேந்திர மோடி தன் இஷ்டத்திற்கு  திரித்துக் கொண்டார். அப்போது யாரும் அது பற்றி பேசியதாய்த்  தெரியவில்லை.  2013ம் ஆண்டில் பிஜேபியின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், மோடியின் விசுவாசிகளும், பிஜேபி தொண்டர்களும், இந்துத்துவ வெறியர்களும் மோடி குறித்து நாடெங்கிலும் பற்ற வைத்த கதைகளில் அதற்கு கை, கால், வாய் எல்லாம் முளைத்திருந்தது.

 

“அமெரிக்கா மோடியைக் கண்டு பயப்படுகிறது. ஏனென்றால் அவர்களுக்கு மோடி ஊழல் செய்யாதவர் என்று தெரியும்.” என விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே சொன்னதாக டுவீட்டரில் செய்திகளைப் பரப்பி விட்டனர். மோடிக்கு அது குறித்தெல்லாம் கொஞ்சம் கூட கூச்சமோ, வெட்கமோ இருக்கவில்லை.

 

2002ம் ஆண்டிலிருந்து குஜராத் முதலமைச்சராக  இருந்த காலமெல்லாம் அவர் ஊழலற்றவர் என்ற பிம்பத்தை எப்படி கட்டமைத்திருந்தார் என்பதை முதலில் தெரிந்து கொண்டு மீதிக் கதையை தொடர்வோம்.

 

‘சுஜலாம் சுபலாம் யோஜனா’ என குடிநீர், விவசாயத்திற்கான நீர் வளத்தை விரிவுபடுத்தும் திட்டம் செப்டம்பர் 2004ம் ஆண்டு குஜராத்தில் கொண்டு வரப்பட்டது. திட்டங்களுக்கு பேர் வைப்பதில் எல்லாம் ஒரு குறையும் இருக்காது. டிசம்பர் 2005ற்குள் 4904 கிராமங்கள், 34 நகரங்களுக்கு அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என வரையறுக்கப்பட்டு இருந்தது. அதற்கான மொத்தச் செலவு 458.50 கோடி என நிதி ஒதுக்கப்பட்டது.  ஒரு காண்டிராக்டருக்கு ஒரு காண்ட்ராக்டுதான் கொடுக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

 

ஆனால் அந்த திட்டம் 2008ம் ஆண்டு வரையிலும் நிறைவேற்றப்படவே இல்லை. 911 கோடி ருபாய் செலவு செய்தும் 2524 கிராமங்கள், 19 நகரங்களில் மட்டுமே திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.  விதிமுறைகளுக்கு எதிராக 106 காண்ட்ராக்டுகளை 16 காண்டிராக்டர்களுக்கு மொத்த மொத்தமாய் வழங்கி இருந்தது மோடியின் அரசு. வரையறுக்கப்பட்டதை விட அதிக நிதி அவர்களுக்கு கொடுக்கப்பட்டும் இருந்தது. இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளரின் (The Comptroller and Audit General of India – CAG) அறிக்கையில் அதில் நடந்த ஊழல்களும், முறைகேடுகளும் குறிப்பிடப்பட்டு இருந்தன.

 

குஜராத்தில் 2002ம் ஆண்டிற்கு பிறகான மோடி அரசின் நிர்வாகத்தின் லட்சணத்திற்கு ஒரு பதம் அது. ஆனாலும் “நான் ஊழல் செய்ய மாட்டேன், யாரையும் ஊழல் செய்ய விட மாட்டேன்” என 2007 டிசம்பர் மாதத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் மோடி தைரியமாக சவடால் விட்டார். மூலை முடுக்கெல்லாம் அந்த வாசகங்கள் நிரம்பிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.

 

அரசு அலுவலகங்களில், கீழ்மட்ட அளவில் லஞ்சத்துக்கு எதிரான தீவீரமான கண்காணிப்புகள் இருப்பதாய் காட்டிக்கொண்டு, அங்கங்கு சில அதிகாரிகளை கைது செய்து ஊழலுக்கு எதிரான தனது வேகத்தைக் காட்டிக் கொண்டார். ஊழலுக்கு எதிரான பெரும் யுத்தத்தை அவர் தொடங்கி விட்டதாகவும், அதனை ஒழித்துக் கட்டாமல் விட மாட்டேன் என்றும் வாளை சுழற்றிக் கொண்டிருந்தார்.

 

மக்களின் பார்வைக்கு வராமல் உயர் மட்ட அளவிலான பெரும் ஊழல்கள் நடந்து கொண்டு இருந்தன. கார்ப்பரேட்களுக்கு முறைகேடாக சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன.

 

தொழில் வளர்ச்சி என்ற பேரில்  டாட்டா, அதானி உட்பட பெருமுதலாளிகளுக்கு அடிமாட்டு விலையில் நிலங்களை வழங்கியதில் அரசுக்கு பல ஆயிரம் கோடி ருபாய்க்கு இழப்புகள் ஏற்பட்டு இருந்தன. பெரும் முறை கேடுகள் நடந்திருந்தன. ‘Corrupt Modi’  என்னும் ஒரு இணையதளமே உருவாக்கப்பட்டு ஒவ்வொரு ஊழலும் கதை கதையாய் சொல்லப்பட்டது.

 

 2007ம் ஆண்டு பெரும் ஆரவாரத்துடன் துவங்கப்பட்ட Gift City (Gujarat International Finance Tech City)  திட்டம் இன்று வரையிலும் நிறைவேற்றப்படவில்லை. 12.26 லட்சம் சதுர அடி நிலம் அந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது. மொத்தம் 2700 கோடி மதிப்புள்ள நிலத்தை, சதுர அடிக்கு ரூ.1/- என கணக்கிடப்பட்டு ‘Gift’ போல கொடுக்கப்பட்டது.

 

முதலமைச்சராயிருந்த காலத்தில் அரசு விமானங்களையோ, வணிக ரீதியான விமானங்களையோ ‘ஏழைத்தாயின் மகனான’ மோடி பயன்படுத்தவில்லை. உயர் தர வசதிகளுடன் கூடிய தனி விமானங்களையே பயன்படுத்தி வந்தார். அவைகள் எல்லாம் அவரால் சலுகைகள் வழங்கப்பட்ட பெருமுதலாளிகளுக்குச் சொந்தமானவை. அதெல்லாம் ஊழல் கணக்கிலேயே இல்லை.

 

குஜராத் அரசின் இளம் வருமானத்துறை அதிகாரிகளுக்கான பணி நியமனத்தில் பல கோடி ஊழல் நடைபெற்றது. சர்ச்சைகள் எழுந்தன. சட்டசபையில் விவாதிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. காந்திநகரில் கோச்சிங் செண்டர் நடத்தி வந்த கல்யாண்சிங் சம்பவத் என்பவர், அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்களிடம், வேலை பெற்றுத் தருவதாக லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக புகார்கள் எழுந்தன. விசாரணையில் அவர் பணம் பெற்றது தெரிய வந்தது.

 

அந்த கல்யாண்சிங் பிஜேபி கட்சியைச் சேர்ந்த பிரமுகர் என்பதும், பிஜேபியின் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்ட போட்டோக்களும் வெளியாயின.  “பிஜேபி கூட்டங்களில் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் பிஜேபி எப்படி பொறுப்பாக முடியும். கல்யாணசிங் பிஜேபியில் எந்தப் பொறுப்பும் வகிக்கவில்லை” என விஜய் ருபானி கை கழுவிக் கொண்டார். அந்த ருபானி பின்னாளில் குஜராத் முதலமைச்சரானார். அதுபோல இடைத்தரகர்கள் மூலம் நடந்த பல ஊழல்கள் வெளிச்சத்துக்கு வரவே இல்லை.

 

சஹாரா குரூப் கம்பெனியிலிருந்து மோடியே 55 லட்சம் ருபாய் லஞ்சமாகப் பெற்றதாகவும் கூட ஒரு செய்தி கசிந்து கொண்டிருந்தது.

 

எந்த துறையையும் மோடி அரசு விடவில்லை. மீன்வளத்துறை அமைச்சராயிருந்த புருஷோத்தம் சோலங்கி டெண்டர் அறிவிக்காமல் முறைகேடாக லஞ்சம் பெற்று தனக்கு வேண்டியவர்களுக்கு  காண்ட்ராக்ட் விட்டதாக  இஷாக் மராடியா என்பவர் 2013, ஜனவரி 5ம் தேதி ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் அளித்தார். 400 கோடிக்கு மேலாக ஊழல் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. உள்ளூர் போலீஸ் இதனை விசாரிக்கக் கூடாது எனவும், சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனவும் அவரது வக்கீல் மூலமாக கேட்டுக் கொண்டார்.

 

ஆனாலும் காந்திநகர் காவல்துறையே அந்த குற்றச்சாட்டை விசாரித்து 2015ம் ஆண்டில் புருஷோத்தம் சோலங்கி மீது எந்த தவறும் இல்லையென அறிக்கை கொடுத்தது. உயர்நீதிமன்றம் அந்த அறிக்கையை நிராகரித்தது.  ஷோலங்கி மீது கிரிமினல் நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தது.

 

2018ம் ஆண்டில் தன் மீது நடக்கு விசாரணையை தள்ளுபடி செய்ய வேண்டும் என புருஷோத்தம் சோலங்கி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். உயர்நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது.

 

2019 மே மாதம் வழக்கு தொடுத்த இஷாக் மராடியா மீது ஒரு கொலை வழக்கு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். தன்னை அச்சுறுத்தவும், பழிவாங்கவுமே அரசு நடவடிக்கை எடுப்பதாக இஷாக் தெரிவித்தார்.

 

அதே சோலங்கி மீது தேர்தல் நேரத்தில் லஞ்சம் கொடுத்ததாய் ஆதாரங்களோடு தொடுக்கப்பட்ட இரண்டு வழக்குகள் 2019ம் ஆண்டில் நிரூபிக்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டன. காவலாளி ஒருவரைக் கொல்ல முயன்றது மற்றும் பார்லர் ஊழியர் ஒருவரை அடித்தது போன்ற ரவுடித்தனங்களால் அவரது மகன் குஜராத் மாநிலமே அறிந்த பிரபலம். இந்த தகவல்களோடும் சேர்த்துப் பார்த்தால் மோடியின் குஜராத் அரசு எத்தகையது என்பது விளங்கும்.

 

திசை திருப்புவது, குற்றம் சுமத்துபவர்களை அச்சுறுத்துவது, குற்றம் நிரூபிக்கப்படாமல் போக வைப்பது என ஆட்சியில் இருந்த பிஜேபி தன் அதிகாரத்தை பிரயோகித்து உண்மைகளை விழுங்கியது.

 

மொத்தம் 17 முறைகேடுகளை எதிர்க்கட்சிகள் அம்பலப்படுத்திய போது, “காங்கிரஸ் என்ன யோக்கியமா” எனவும், “குஜராத் வளர்ச்சிக்கு எதிராக காங்கிரஸ் செயல்படுகிறது” எனவும் முத்திரை குத்தப்பட்டு புறந்தள்ளப்பட்டன.

 

லோக் ஆயுக்தா சட்டத்தின் பிரகாரம் குஜராத் மாநிலத்தில் ஊழல்களை விசாரிக்கும் அமைப்பை செயல்பட விடாமல் வைத்திருந்த பெருமை மோடியைச் சேரும்.  முடிந்தவரை அதனை நீர்த்துப் போகச் செய்திருந்தார். அவர்தான் அகில இந்திய அளவில் ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை கடுமையாக்கப் போராடிய அன்னா ஹசாரேவை ஆதரிக்கவும் செய்தார். “நாட்டின் விடுதலைப் போராட்டத்தை நேரில் பார்க்காத நமக்கு, ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் போராட்டம் அகிம்சை வழியின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்கிறது” என ட்வீட்டினார். தனது இணைய தளத்தில் எழுதவும் செய்தார்.

 

மத்தியில் மன்மோகன் சிங் ஆட்சியில் வெளிவந்த ஊழல்களை எதிர்த்து நாடெங்கும்  எழும்பிய சத்தங்களில்  குஜராத்தில் நடந்த ஊழல்களுக்கு எதிரான குரல்கள் எல்லாம் அடிபட்டுப் போயின. நாடே அன்னா ஹசாரேவின் பஜனையில் மூழ்கிப் போனது.

 

ஊழலின் ஊற்றுக் கண்ணாய் இருக்கும் முதலாளித்துவ அமைப்புக்குள், ஊழலை ஒழிப்பதற்கான வழி எப்படி இருக்க முடியும். அன்னா ஹசாரே முடியும் என்றார். இந்தியாவில் ஊழலை ஒழிக்க கார்ப்பரேட்களே அவரை தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்திருந்தார்கள். பெரும் நாடகமொன்று நாட்டு மக்கள் முன்பு நிகழ்த்தப்பட்டது. காங்கிரஸ், மன்மோகன்சிங் மீது மக்களின் கோபம் திரும்பியது. ஊழல் பேர்வழி மோடி கார்ப்பரேட்களின் அரவணைப்பில் பாதுகாப்பாக வலம் வந்தார்.

 

சரி, இப்போது தொடங்கிய கதைக்கு வருவோம்.

 

“மோடி ஊழலற்றவர் என்பதை அறிந்து அமெரிக்காவே பயப்படுகிறது” என்றாலும் யார் கேட்க போகிறார்கள்? அமெரிக்கா வந்து மறுக்கப் போகிறதா என்னும் மூர்க்கத்தனமான தெனாவெட்டில் வெளியிடப்பட்ட சங்கிகளின் ட்வீட்களுக்கு விக்கிலீக்ஸே பதில் அளித்தது.

 

“மோடி ஊழலற்றவர் என விக்கிலீக்ஸின் எந்த ஆவணத்திலும் குறிப்பிடப்படவில்லை” என்றும் “மோடியின் ஆதரவாளர்கள் தவறான செய்திகளை உக்கிரமாக பரப்புகிறார்கள்” என்றும், “நரேந்திர மோடியின் பிஜேபி தவறான செய்திகளை பரப்புகிறது. அசாஞ்சே ஒருபோதும் மோடி ஊழலற்றவர் எனச் சொல்லவில்லை” என்றும் அடுத்தடுத்து டுவீட்டரில் விக்கிலீக்ஸில் மறுப்புகளை தெரிவித்தது.

 

ஒன்றிரண்டு ஊடகங்களும், அரசியல் கட்சிகளும், “இந்தியாவுக்கு அசிங்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.”, “மோடி நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறார்” “பிரதம வேட்பளரான  அவருக்கு இது பின்னடைவு” என்றெல்லாம் பேசினார்கள். எழுதினார்கள்.

 

சகலத்தையும் உதிர்த்த பிஜேபிக்கும், மோடிக்கும் கொஞ்சம் கூட உறைக்கவில்லை. “அமெரிக்காவின் சர்டிபிகேட் ஒன்றும் மோடிக்குத் தேவையில்லை.” என்று முகத்தைத் துடைத்துக் கொண்டார்கள். அவர்களே களத்தில் இறங்கினார்கள்.

 

“மோடி ஊழல் கறை படியாதவர்” என்று தொடர்ந்து விடாமல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.

 

“இந்த தேசம் தான் என் குடும்பம். தனிப்பட்ட முறையில் எனக்கென்று குடும்பம் இல்லை. நான் யாருக்காக ஊழல் செய்ய வேண்டும்?”  என மோடி நாட்டு மக்களிடம்  தன்னைப் புனிதராகக் காட்டிக் கொண்டார்.

 

அவருக்கு குடும்பம் இருக்கிறது. இந்திய கார்ப்பரேட்கள்தான் அவரது குடும்பம். அந்த குடும்பத்திற்கு விசுவாசமான பிரதம சேவகன் அவர். நாடு, மக்கள் எல்லாம் பிறகுதான். 

 

56 இஞ்ச் மார்பைத் திறந்து பார்த்தால் அங்கே அம்பானியும், அதானியும், டாடாவும் காட்சியளிக்கக் கூடும்.

 

 

ஆதாரங்கள்:

 

* I am glad that America admits Modi is incorruptible: Hon’ble CM -  Narendara Modi websidte

* Modi supporters aggressively pushed fake Assange Endorsement - Published in Outlook on 17th Mar 2014

* Narendra Modi’s incorruptibility: What WikiLeaks cable actually said - Ashish Mehta in GovernanceNow on Mar 20, 2014

* Sujalam gets CAG rap - Written by Kapildev, DNA dated Feb 20, 2009

* Kalyan sinh Champawat on remand for allegedly duping Talati job applicants - Desh Gujarat, Feb 18, 2014

* Big Corporates got govt land cheap: CAG - Indian Express, Gandhi Nagar dated Apr 03, 2013

* Rs 400 crore Fisheries scam: Gujarat HC rejects  plea filed by BJP Minister - Ahmedanbad Mirror, Nov 05, 2021

* 17 Scams that Narendra Modi does not want Lok Ayukta to probe - DNA, Aug 27, 2011

* Anna-led movement reinforces confidence in non-violence – Narendra Modi - The Economic Times, Aug 28,  2011

* Wikileaks never said Modi was incorruptible - Counter view dated Mar 18, 2014

(function(d,e,s){if(d.getElementById("likebtn_wjs"))return;a=d.createElement(e);m=d.getElementsByTagName(e)[0];a.async=1;a.id="likebtn_wjs";a.src=s;m.parentNode.insertBefore(a, m)})(document,"script","//w.likebtn.com/js/w/widget.js");
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 17, 2022 04:54

மோடிக்கென்று குடும்பம் இருக்கிறது! (பொய் மனிதனின் கதை - 8)


“ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது நம்பப்பட்டு விடும்”

- அடால்ப் ஹிட்லர்

 

“விக்கிலீக்ஸ் மிகச் சரியாகத்தான் சொல்லும். நான் ஊழலற்றவன் என அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது சந்தோஷமளிக்கிறது” என்று குஜராத் முதல் மந்திரியாய் இருந்த நரேந்திர மோடி 2011 மார்ச் 22ம் தேதி ஊடகங்களிடம் சொல்லி புளகாங்கிதம் அடைந்தார். “மக்களிடம் கேட்டறிந்தே அந்த செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது” என்றும் தெரிவித்தார். அதனை அவரது வலைத்தளத்திலும் பதிவு செய்தார். அதே நாளில் குஜராத்தில் பண்டிட் தீனதயாள் பல்கலை கழகத்தில் பேசும்போதும், “நான் ஊழலற்றவன் என அமெரிக்கா சொல்லி விட்டது.” என்று தம்பட்டமும் அடித்துக் கொண்டார்.

 

விஷயம் என்னவென்றால் விக்கிலீக்ஸிலிருந்து மைக்கேல் ஓவன் என்பவர் 2006ம் ஆண்டில் மோடியை சந்தித்து உரையாடியிருந்தார். குஜராத் கலவரங்களால் ஏற்பட்ட களங்கத்தால் மோடியின் விசாவை அமெரிக்கா ரத்து செய்திருந்தது. அதையொட்டி மனித உரிமை மீறல் குறித்தும், மேலும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் நடந்த உரையாடல்களின் அடிப்படையில் மோடி குறித்த ரிப்போர்ட் ஒன்றை விக்கிலீக்ஸுக்கு ஓவன் அனுப்பி இருந்தார்.

 

2011 மார்ச் 22ம் தேதி வெளியான ஹிந்து நாளிதழில் அந்த ரிப்போர்ட் பற்றிய தகவல்கள் வெளியாகி இருந்தன. ”குஜராத்தின் பொது வாழ்க்கையில் ஊழலைக் குறைத்தவர் போன்ற பிம்பத்தை மோடி வெற்றிகரமாக கட்டமைத்திருந்தார்.” என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

 

அதைத்தான் அப்போது குஜராத் முதலமைச்சராய் இருந்த நரேந்திர மோடி தன் இஷ்டத்திற்கு  திரித்துக் கொண்டார். அப்போது யாரும் அது பற்றி பேசியதாய்த்  தெரியவில்லை.  2013ம் ஆண்டில் பிஜேபியின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், மோடியின் விசுவாசிகளும், பிஜேபி தொண்டர்களும், இந்துத்துவ வெறியர்களும் மோடி குறித்து நாடெங்கிலும் பற்ற வைத்த கதைகளில் அதற்கு கை, கால், வாய் எல்லாம் முளைத்திருந்தது.

 

“அமெரிக்கா மோடியைக் கண்டு பயப்படுகிறது. ஏனென்றால் அவர்களுக்கு மோடி ஊழல் செய்யாதவர் என்று தெரியும்.” என விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே சொன்னதாக டுவீட்டரில் செய்திகளைப் பரப்பி விட்டனர். மோடிக்கு அது குறித்தெல்லாம் கொஞ்சம் கூட கூச்சமோ, வெட்கமோ இருக்கவில்லை.

 

2002ம் ஆண்டிலிருந்து குஜராத் முதலமைச்சராக  இருந்த காலமெல்லாம் அவர் ஊழலற்றவர் என்ற பிம்பத்தை எப்படி கட்டமைத்திருந்தார் என்பதை முதலில் தெரிந்து கொண்டு மீதிக் கதையை தொடர்வோம்.

 

‘சுஜலாம் சுபலாம் யோஜனா’ என குடிநீர், விவசாயத்திற்கான நீர் வளத்தை விரிவுபடுத்தும் திட்டம் செப்டம்பர் 2004ம் ஆண்டு குஜராத்தில் கொண்டு வரப்பட்டது. திட்டங்களுக்கு பேர் வைப்பதில் எல்லாம் ஒரு குறையும் இருக்காது. டிசம்பர் 2005ற்குள் 4904 கிராமங்கள், 34 நகரங்களுக்கு அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என வரையறுக்கப்பட்டு இருந்தது. அதற்கான மொத்தச் செலவு 458.50 கோடி என நிதி ஒதுக்கப்பட்டது.  ஒரு காண்டிராக்டருக்கு ஒரு காண்ட்ராக்டுதான் கொடுக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

 

ஆனால் அந்த திட்டம் 2008ம் ஆண்டு வரையிலும் நிறைவேற்றப்படவே இல்லை. 911 கோடி ருபாய் செலவு செய்தும் 2524 கிராமங்கள், 19 நகரங்களில் மட்டுமே திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.  விதிமுறைகளுக்கு எதிராக 106 காண்ட்ராக்டுகளை 16 காண்டிராக்டர்களுக்கு மொத்த மொத்தமாய் வழங்கி இருந்தது மோடியின் அரசு. வரையறுக்கப்பட்டதை விட அதிக நிதி அவர்களுக்கு கொடுக்கப்பட்டும் இருந்தது. இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளரின் (The Comptroller and Audit General of India – CAG) அறிக்கையில் அதில் நடந்த ஊழல்களும், முறைகேடுகளும் குறிப்பிடப்பட்டு இருந்தன.

 

குஜராத்தில் 2002ம் ஆண்டிற்கு பிறகான மோடி அரசின் நிர்வாகத்தின் லட்சணத்திற்கு ஒரு பதம் அது. ஆனாலும் “நான் ஊழல் செய்ய மாட்டேன், யாரையும் ஊழல் செய்ய விட மாட்டேன்” என 2007 டிசம்பர் மாதத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் மோடி தைரியமாக சவடால் விட்டார். மூலை முடுக்கெல்லாம் அந்த வாசகங்கள் நிரம்பிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.

 

அரசு அலுவலகங்களில், கீழ்மட்ட அளவில் லஞ்சத்துக்கு எதிரான தீவீரமான கண்காணிப்புகள் இருப்பதாய் காட்டிக்கொண்டு, அங்கங்கு சில அதிகாரிகளை கைது செய்து ஊழலுக்கு எதிரான தனது வேகத்தைக் காட்டிக் கொண்டார். ஊழலுக்கு எதிரான பெரும் யுத்தத்தை அவர் தொடங்கி விட்டதாகவும், அதனை ஒழித்துக் கட்டாமல் விட மாட்டேன் என்றும் வாளை சுழற்றிக் கொண்டிருந்தார்.

 

மக்களின் பார்வைக்கு வராமல் உயர் மட்ட அளவிலான பெரும் ஊழல்கள் நடந்து கொண்டு இருந்தன. கார்ப்பரேட்களுக்கு முறைகேடாக சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன.

 

தொழில் வளர்ச்சி என்ற பேரில்  டாட்டா, அதானி உட்பட பெருமுதலாளிகளுக்கு அடிமாட்டு விலையில் நிலங்களை வழங்கியதில் அரசுக்கு பல ஆயிரம் கோடி ருபாய்க்கு இழப்புகள் ஏற்பட்டு இருந்தன. பெரும் முறை கேடுகள் நடந்திருந்தன. ‘Corrupt Modi’  என்னும் ஒரு இணையதளமே உருவாக்கப்பட்டு ஒவ்வொரு ஊழலும் கதை கதையாய் சொல்லப்பட்டது.

 

 2007ம் ஆண்டு பெரும் ஆரவாரத்துடன் துவங்கப்பட்ட Gift City (Gujarat International Finance Tech City)  திட்டம் இன்று வரையிலும் நிறைவேற்றப்படவில்லை. 12.26 லட்சம் சதுர அடி நிலம் அந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது. மொத்தம் 2700 கோடி மதிப்புள்ள நிலத்தை, சதுர அடிக்கு ரூ.1/- என கணக்கிடப்பட்டு ‘Gift’ போல கொடுக்கப்பட்டது.

 

முதலமைச்சராயிருந்த காலத்தில் அரசு விமானங்களையோ, வணிக ரீதியான விமானங்களையோ ‘ஏழைத்தாயின் மகனான’ மோடி பயன்படுத்தவில்லை. உயர் தர வசதிகளுடன் கூடிய தனி விமானங்களையே பயன்படுத்தி வந்தார். அவைகள் எல்லாம் அவரால் சலுகைகள் வழங்கப்பட்ட பெருமுதலாளிகளுக்குச் சொந்தமானவை. அதெல்லாம் ஊழல் கணக்கிலேயே இல்லை.

 

குஜராத் அரசின் இளம் வருமானத்துறை அதிகாரிகளுக்கான பணி நியமனத்தில் பல கோடி ஊழல் நடைபெற்றது. சர்ச்சைகள் எழுந்தன. சட்டசபையில் விவாதிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. காந்திநகரில் கோச்சிங் செண்டர் நடத்தி வந்த கல்யாண்சிங் சம்பவத் என்பவர், அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்களிடம், வேலை பெற்றுத் தருவதாக லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக புகார்கள் எழுந்தன. விசாரணையில் அவர் பணம் பெற்றது தெரிய வந்தது.

 

அந்த கல்யாண்சிங் பிஜேபி கட்சியைச் சேர்ந்த பிரமுகர் என்பதும், பிஜேபியின் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்ட போட்டோக்களும் வெளியாயின.  “பிஜேபி கூட்டங்களில் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் பிஜேபி எப்படி பொறுப்பாக முடியும். கல்யாணசிங் பிஜேபியில் எந்தப் பொறுப்பும் வகிக்கவில்லை” என விஜய் ருபானி கை கழுவிக் கொண்டார். அந்த ருபானி பின்னாளில் குஜராத் முதலமைச்சரானார். அதுபோல இடைத்தரகர்கள் மூலம் நடந்த பல ஊழல்கள் வெளிச்சத்துக்கு வரவே இல்லை.

 

சஹாரா குரூப் கம்பெனியிலிருந்து மோடியே 55 லட்சம் ருபாய் லஞ்சமாகப் பெற்றதாகவும் கூட ஒரு செய்தி கசிந்து கொண்டிருந்தது.

 

எந்த துறையையும் மோடி அரசு விடவில்லை. மீன்வளத்துறை அமைச்சராயிருந்த புருஷோத்தம் சோலங்கி டெண்டர் அறிவிக்காமல் முறைகேடாக லஞ்சம் பெற்று தனக்கு வேண்டியவர்களுக்கு  காண்ட்ராக்ட் விட்டதாக  இஷாக் மராடியா என்பவர் 2013, ஜனவரி 5ம் தேதி ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் அளித்தார். 400 கோடிக்கு மேலாக ஊழல் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. உள்ளூர் போலீஸ் இதனை விசாரிக்கக் கூடாது எனவும், சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனவும் அவரது வக்கீல் மூலமாக கேட்டுக் கொண்டார்.

 

ஆனாலும் காந்திநகர் காவல்துறையே அந்த குற்றச்சாட்டை விசாரித்து 2015ம் ஆண்டில் புருஷோத்தம் சோலங்கி மீது எந்த தவறும் இல்லையென அறிக்கை கொடுத்தது. உயர்நீதிமன்றம் அந்த அறிக்கையை நிராகரித்தது.  ஷோலங்கி மீது கிரிமினல் நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தது.

 

2018ம் ஆண்டில் தன் மீது நடக்கு விசாரணையை தள்ளுபடி செய்ய வேண்டும் என புருஷோத்தம் சோலங்கி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். உயர்நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது.

 

2019 மே மாதம் வழக்கு தொடுத்த இஷாக் மராடியா மீது ஒரு கொலை வழக்கு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். தன்னை அச்சுறுத்தவும், பழிவாங்கவுமே அரசு நடவடிக்கை எடுப்பதாக இஷாக் தெரிவித்தார்.

 

அதே சோலங்கி மீது தேர்தல் நேரத்தில் லஞ்சம் கொடுத்ததாய் ஆதாரங்களோடு தொடுக்கப்பட்ட இரண்டு வழக்குகள் 2019ம் ஆண்டில் நிரூபிக்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டன. காவலாளி ஒருவரைக் கொல்ல முயன்றது மற்றும் பார்லர் ஊழியர் ஒருவரை அடித்தது போன்ற ரவுடித்தனங்களால் அவரது மகன் குஜராத் மாநிலமே அறிந்த பிரபலம். இந்த தகவல்களோடும் சேர்த்துப் பார்த்தால் மோடியின் குஜராத் அரசு எத்தகையது என்பது விளங்கும்.

 

திசை திருப்புவது, குற்றம் சுமத்துபவர்களை அச்சுறுத்துவது, குற்றம் நிரூபிக்கப்படாமல் போக வைப்பது என ஆட்சியில் இருந்த பிஜேபி தன் அதிகாரத்தை பிரயோகித்து உண்மைகளை விழுங்கியது.

 

மொத்தம் 17 முறைகேடுகளை எதிர்க்கட்சிகள் அம்பலப்படுத்திய போது, “காங்கிரஸ் என்ன யோக்கியமா” எனவும், “குஜராத் வளர்ச்சிக்கு எதிராக காங்கிரஸ் செயல்படுகிறது” எனவும் முத்திரை குத்தப்பட்டு புறந்தள்ளப்பட்டன.

 

லோக் ஆயுக்தா சட்டத்தின் பிரகாரம் குஜராத் மாநிலத்தில் ஊழல்களை விசாரிக்கும் அமைப்பை செயல்பட விடாமல் வைத்திருந்த பெருமை மோடியைச் சேரும்.  முடிந்தவரை அதனை நீர்த்துப் போகச் செய்திருந்தார். அவர்தான் அகில இந்திய அளவில் ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை கடுமையாக்கப் போராடிய அன்னா ஹசாரேவை ஆதரிக்கவும் செய்தார். “நாட்டின் விடுதலைப் போராட்டத்தை நேரில் பார்க்காத நமக்கு, ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் போராட்டம் அகிம்சை வழியின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்கிறது” என ட்வீட்டினார். தனது இணைய தளத்தில் எழுதவும் செய்தார்.

 

மத்தியில் மன்மோகன் சிங் ஆட்சியில் வெளிவந்த ஊழல்களை எதிர்த்து நாடெங்கும்  எழும்பிய சத்தங்களில்  குஜராத்தில் நடந்த ஊழல்களுக்கு எதிரான குரல்கள் எல்லாம் அடிபட்டுப் போயின. நாடே அன்னா ஹசாரேவின் பஜனையில் மூழ்கிப் போனது.

 

ஊழலின் ஊற்றுக் கண்ணாய் இருக்கும் முதலாளித்துவ அமைப்புக்குள், ஊழலை ஒழிப்பதற்கான வழி எப்படி இருக்க முடியும். அன்னா ஹசாரே முடியும் என்றார். இந்தியாவில் ஊழலை ஒழிக்க கார்ப்பரேட்களே அவரை தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்திருந்தார்கள். பெரும் நாடகமொன்று நாட்டு மக்கள் முன்பு நிகழ்த்தப்பட்டது. காங்கிரஸ், மன்மோகன்சிங் மீது மக்களின் கோபம் திரும்பியது. ஊழல் பேர்வழி மோடி கார்ப்பரேட்களின் அரவணைப்பில் பாதுகாப்பாக வலம் வந்தார்.

 

சரி, இப்போது தொடங்கிய கதைக்கு வருவோம்.

 

“மோடி ஊழலற்றவர் என்பதை அறிந்து அமெரிக்காவே பயப்படுகிறது” என்றாலும் யார் கேட்க போகிறார்கள்? அமெரிக்கா வந்து மறுக்கப் போகிறதா என்னும் மூர்க்கத்தனமான தெனாவெட்டில் வெளியிடப்பட்ட சங்கிகளின் ட்வீட்களுக்கு விக்கிலீக்ஸே பதில் அளித்தது.

 

“மோடி ஊழலற்றவர் என விக்கிலீக்ஸின் எந்த ஆவணத்திலும் குறிப்பிடப்படவில்லை” என்றும் “மோடியின் ஆதரவாளர்கள் தவறான செய்திகளை உக்கிரமாக பரப்புகிறார்கள்” என்றும், “நரேந்திர மோடியின் பிஜேபி தவறான செய்திகளை பரப்புகிறது. அசாஞ்சே ஒருபோதும் மோடி ஊழலற்றவர் எனச் சொல்லவில்லை” என்றும் அடுத்தடுத்து டுவீட்டரில் விக்கிலீக்ஸில் மறுப்புகளை தெரிவித்தது.

 

ஒன்றிரண்டு ஊடகங்களும், அரசியல் கட்சிகளும், “இந்தியாவுக்கு அசிங்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.”, “மோடி நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறார்” “பிரதம வேட்பளரான  அவருக்கு இது பின்னடைவு” என்றெல்லாம் பேசினார்கள். எழுதினார்கள்.

 

சகலத்தையும் உதிர்த்த பிஜேபிக்கும், மோடிக்கும் கொஞ்சம் கூட உறைக்கவில்லை. “அமெரிக்காவின் சர்டிபிகேட் ஒன்றும் மோடிக்குத் தேவையில்லை.” என்று முகத்தைத் துடைத்துக் கொண்டார்கள். அவர்களே களத்தில் இறங்கினார்கள்.

 

“மோடி ஊழல் கறை படியாதவர்” என்று தொடர்ந்து விடாமல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.

 

“இந்த தேசம் தான் என் குடும்பம். தனிப்பட்ட முறையில் எனக்கென்று குடும்பம் இல்லை. நான் யாருக்காக ஊழல் செய்ய வேண்டும்?”  என மோடி நாட்டு மக்களிடம்  தன்னைப் புனிதராகக் காட்டிக் கொண்டார்.

 

அவருக்கு குடும்பம் இருக்கிறது. இந்திய கார்ப்பரேட்கள்தான் அவரது குடும்பம். அந்த குடும்பத்திற்கு விசுவாசமான பிரதம சேவகன் அவர். நாடு, மக்கள் எல்லாம் பிறகுதான். 

 

56 இஞ்ச் மார்பைத் திறந்து பார்த்தால் அங்கே அம்பானியும், அதானியும், டாடாவும் காட்சியளிக்கக் கூடும்.

 

 

ஆதாரங்கள்:

 

* I am glad that America admits Modi is incorruptible: Hon’ble CM -  Narendara Modi websidte

* Modi supporters aggressively pushed fake Assange Endorsement - Published in Outlook on 17th Mar 2014

* Narendra Modi’s incorruptibility: What WikiLeaks cable actually said - Ashish Mehta in GovernanceNow on Mar 20, 2014

* Sujalam gets CAG rap - Written by Kapildev, DNA dated Feb 20, 2009

* Kalyan sinh Champawat on remand for allegedly duping Talati job applicants - Desh Gujarat, Feb 18, 2014

* Big Corporates got govt land cheap: CAG - Indian Express, Gandhi Nagar dated Apr 03, 2013

* Rs 400 crore Fisheries scam: Gujarat HC rejects  plea filed by BJP Minister - Ahmedanbad Mirror, Nov 05, 2021

* 17 Scams that Narendra Modi does not want Lok Ayukta to probe - DNA, Aug 27, 2011

* Anna-led movement reinforces confidence in non-violence – Narendra Modi - The Economic Times, Aug 28,  2011

* Wikileaks never said Modi was incorruptible - Counter view dated Mar 18, 2014

(function(d,e,s){if(d.getElementById("likebtn_wjs"))return;a=d.createElement(e);m=d.getElementsByTagName(e)[0];a.async=1;a.id="likebtn_wjs";a.src=s;m.parentNode.insertBefore(a, m)})(document,"script","//w.likebtn.com/js/w/widget.js");
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 17, 2022 04:54

January 14, 2022

க்ளிக் - 4 (தொடர்கதை)




வெயில் அடித்து  நடமாட்டங்களற்றுக் கிடந்த பகல் நேரத்துத்  தெருவை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார் சந்திரா. நரேனுக்கு சமாதானம் சொல்லிவிட்டாலும் உள்ளுக்குள் சங்கடமாயிருந்தது. சின்ன விஷயத்துக்கும் நரேன் பதற்றப்படுவான் என்பது தெரியும். எதிலும் அவனுக்கு நிதானம் வேண்டும் என்று கவலைப்பட்டிருக்கிறார். சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவனிடம் சொல்லவும் செய்திருக்கிறார். நரேனிடம் இல்லாத நிதானம் பூங்குழலியிடம் இருப்பது நல்லது, அதுதான் பிரச்சினைகளைப் பெரிதாக்காமல் பார்த்துக் கொள்ளும் என்றெல்லாம் நினைத்திருந்தார். 

“மாயநதி இன்று மார்பில் வழியுதே… தூய நரையிலும்..” என்று முணுமுணுத்தவர், பாட்டு அந்த நேரத்துக்கு சம்பந்தமில்லாமல் இருப்பதாக உணர்ந்து நிறுத்திக் கொண்டார். காலையிலிருந்து அந்தப் பாட்டு அவருக்குள் இறங்கி இருந்தது. மொபட்டில் பெரிய கேரியர் வைத்து கேஸ் சிலிண்டர்களை அடுக்கிக்கொண்டு அடர் பச்சை நிற உடையில் சென்றவன் வலப்பக்கம்  தெரு திரும்பி மறைந்தான். வீடுகளில் தெரிந்த கொஞ்ச நஞ்ச மரங்களும், செடிகளும் சலனமற்று நின்றிருந்தன. பூங்குழலியின் மௌனமும் அப்படித்தான் தெரிந்தது. இது நிதானம் இல்லை. என்ன நடந்தாலும் கண்டு கொள்ளாத அலட்சியமாகப் பட்டது. எரிச்சலையும் , புழுக்கத்தையுமே ஏற்படுத்தும். நல்லதுக்கு இல்லை என்று கவலைப்பட்டார். 

பூட்டிக்கிடந்த எதிர் வீட்டு காம்பவுண்டுக்குள் நின்றிருந்த காரின் அடியிலிருந்து அந்த கருப்பு வெள்ளைப் பூனை வெளியே வந்து சோம்பல் முறித்தது. அதற்கு கொஞ்சம் தள்ளி கொய்யா மர நிழலில் கும்மாளமடித்துக் கொண்டிருந்த நான்கைந்து தவுட்டுக் குருவிகள் சடசடவென பறந்தன. அடுத்த கணம் அந்த வீடே களையிழந்து போனது. பவித்ரா அந்த வீடெல்லாம் எப்படி மலர்ந்து சிரித்து பறந்து திரிந்து கொண்டிருந்தாள்! மகள் தனியாக இருக்கிறாள் என அவளது அம்மா பார்வதி சென்னைக்கு சென்று மூன்று மாதங்களுக்கும் மேலாகி விட்டது. சுந்தரேசன் மட்டும் இங்கு இருக்கிறார். மின்சார வாரியத்தில் வேலை. இருட்டிய பிறகு வந்து கதவு திறந்து ஆளில்லாத வீட்டிற்குள் அவர் நுழையும் காட்சி பெரும் சோகமாய்த் தெரியும்.  

பெருமூச்சோடு ஹாலுக்குள் திரும்பினார். நடராஜன் முன்பு டீ குடித்த டம்ளர் காலியாய் இருந்தது. எடுத்து வாஷ் பேசினில் போட்டு விட்டு, படுக்கையறைக்குச் சென்றார். நிச்சயதார்த்த ஆல்பத்தில் நரேனும், பூங்குழலியும் மட்டும் சேர்ந்து நின்றிருந்த இன்னொரு போட்டோவை மொபைலில் பிடித்தார். ‘குயின் இஸ் ரைட், கிங் இஸ் ஆல்ஸோ ரைட்’  என குறிப்பிட்டு நரேனுக்கும், பூங்குழலிக்கும் வாட்ஸப்பில் அனுப்பினார். மீண்டும் ஹாலுக்கு வந்து சோபாவில் உட்கார்ந்து கொண்டார். சீரியலில் கவனம் ஒட்டவில்லை. 

“என்னம்மா ஒரு மாதிரி இருக்கே, யார் போன் பண்ணது?” நடராஜன் கேட்டார். 

“நரேன்தான் மாமா” 

“எதும் பிரச்சினையா?” உற்றுப் பார்த்தார். 

“ஒன்னும் இல்ல மாமா...” சீரியலைப் பார்ப்பது போல் இருந்தார். 

மருமகளைக் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு, “இல்ல இந்த நேரத்துல்லாம் போன் பண்ண மாட்டானேன்னு பாத்தேன்.” முணுமுணுத்தபடி நடராஜனும் சீரியல் பக்கம் திரும்பிக் கொண்டார்.  

நிச்சயதார்த்தம் அன்றைக்கு காலையில் நடந்தது திரும்பவும் சந்திராவுக்குள் ஓட ஆரம்பித்தது.  ரொம்ப நாட்கள் கழித்து வீட்டிற்கு வரும் பெண்ணிடம், அவளது அம்மாவை விட்டு, தன்னிடம் போனில் பேச அழைத்தது தனது  தவறுதான் என்பது உடனே உறைத்து விட்டது. அது குறித்து வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. கொஞ்ச நேரத்தில் சித்ரா போன் செய்து அதற்காக வருத்தம் தெரிவித்ததும், “ஐயோ இதெல்லாம் ஒரு மேட்டரா. மொதல்ல எம்மருமகள போய் நல்லா கவனிங்க” என சிரித்துக் கொண்டே சொல்லி  முடித்துக் கொண்டார். 

இப்போது அதுவும் உறுத்தியது. அம்மாவோடுதானே அடுத்த இரண்டு மூன்று நாட்களும் இருக்கப் போகிறாள்? தான் பேச அழைத்தது பூங்குழலிக்கு கொஞ்சங்கூட சந்தோஷமாக இல்லையா? ஒரு பெண்ணுக்கு அம்மா விசேஷம்தான் என்றாலும், அந்த நேரத்தில் ஒரே ஒரு வார்த்தை, “ஆண்ட்டி நல்லாயிருக்கீங்களா?” என கேட்பதில் என்ன குறைந்து விடப் போகிறது? அது ஒப்புக்காகவே இருந்துவிட்டுப் போகட்டும். அதுதானே நாகரீகம்? அதுதானே நிதானம்? என்றெல்லாம் யோசித்தார். 

நரேனுக்கு பூங்குழலியைப் பேச ஆரம்பித்ததும் முதலில் அவளை ஃபேஸ்புக்கில்தான் பார்த்தார். சட்டென்று கட்டித்தங்கம் டீச்சரின் நினைவுதான் வந்தது. அவரது சின்ன ஊரில் தேவதை போலிருந்தவர் கட்டித்தங்கம். அழகில் கம்பீரமும், தெளிவும் சேர்ந்திருக்கும். அவரைப் போல டீச்சராக வேண்டும் என்ற  கனவெல்லாம் இருந்தது. 

 ஃபேஸ்புக்கில் பூங்குழலி எழுதியிருந்தை படித்துப் பார்த்ததில் அவள் புத்தகங்கள் படிக்கிறவளாகவும், அவைகளைப் பற்றி எழுதுகிறவளாகவும் இருந்தாள். சின்ன வயதிலிருந்தே புத்தகம் படிக்கும் வழக்கம் கொண்டிருந்த சந்திராவுக்கு பூங்குழலி மேலும் நெருக்கமாய்த் தெரிந்தாள். ‘சிகரெட் பிடிப்பதில்லை. சிகரெட் வாசனை பிடிக்கிறது. அப்பாவின் வாசனை.” என்று ரவிச்சந்திரனின் நினைவுநாளில் எழுதி இருந்தாள். உருகுவதும் புலம்புவதாகவும் இல்லாமல் பிரியத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. அவள் இந்த வீட்டிற்கு மருமகளாக வேண்டும் என்று ஆசைப்பட ஆரம்பித்தார். 

‘டொக்...டொக்’. மொபைல்  தட்டியது. வாட்ஸ்-அப்பில் நரேன் “தாங்ஸ் மம்” என்றிருந்தான். சிறு சந்தோஷத்தைத் தந்தாலும் பூங்குழலி ஒன்றும் சொல்லவில்லையே என்றிருந்தது. எழுந்து படுக்கையறைக்கு சென்றார். இவர் செல்வதை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, மீண்டும் சீரியலுக்குள் புகுந்து கொண்டார்  நடராஜன். 

வாட்ஸ் அப்பை திறந்து வைத்து யோசித்துக் கொண்டு இருந்த போது, பவித்ராவின் ஸ்டேட்டஸ் கவனிக்க வைத்தது. ”ஆம். பைத்தியமாக இருந்தேன். இப்போது தெளிந்து விட்டேன்!”  என்று சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோவை பகிர்ந்திருந்தாள். பார்க்கவும் படிக்கவும் நன்றாக இருந்தாலும், அவளது அப்பா சுந்தரேசன் இருட்டிய பிறகு வீட்டிற்குள் நுழையும் காட்சி வந்து மறித்தது. 

இங்கு தூத்துக்குடியில் அவர்கள் வருவதற்கு முன்பே பவித்ரா வீட்டில் குடிவந்து இருந்தார்கள். இந்த வீடு பால் காய்ச்சும்போது பார்வதி இடுப்பில் பவித்ராவோடு வந்திருந்தார். நரேனுக்கு மூன்று நான்கு வயது மூத்தவளாய் பவித்ரா இருக்க வேண்டும்.. சந்திராவிடம் பிரியமும், நெருக்கமும் கொண்டிருந்தாள். தனக்கு நரேன் மட்டும்தான் என்றான பிறகு,  சந்திரா அந்த பெண் குழந்தையிடம் பாசத்தை அதிகமாகக் காட்டி இருந்தார். “ஆண்ட்டி....”, “ஆண்ட்டி....” என பேரன்பு செலுத்தினாள் அவள்.  

அண்ணா யூனிவர்சிட்டியில் முதல் மாணவியாய் தேர்வாகி, பெங்களூரில் முக்க்கியமான சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, ஜாதகம் பார்த்து, விசாரித்துத்தான் பொருத்தம் கண்டார்கள். மாப்பிள்ளையும் பெங்களூரிலேயே வேலை பார்த்தான். பிடித்துப் போனது. திருநெல்வேலியில் வைத்து பிரமாதமாக கல்யாணம் நடந்தது. 

இரண்டு மூன்று மாதங்கள் கூட ஆகியிருக்காது. பார்வதியையும் அவரது கணவரையும் பெங்களூருக்கு வரவழைத்து, “ஒங்க மகளுக்கு ஹிஸ்டிரியா, அவளை குணப்படுத்தி அனுப்பி வையுங்கள்” என  சொல்லி இருக்கிறார்கள். பவித்ரா அழுதிருக்கிறாள். கடுமையான வாக்குவாதம் நடந்திருக்கிறது. “டாக்டர் உங்க பொண்ணுக்கு குடுத்த சர்டிபிகேட் இதோ...” மாப்பிள்ளையின் அப்பா எடுத்துக் காட்டவும் பார்வதி அதிர்ச்சியில் வாயடைத்துப் போயிருக்கிறார். 

பவித்ரா கொஞ்சம் குள்ளம். வடிவமும், முகமும், நீண்ட முடியுமாய் அழகுச் சிலை போல் இருப்பாள். சிரித்த முகத்துடன், எல்லோரிடமும் மரியாதையுடன்  பழகுவாள். அப்படிப்பட்டவளை ஹிஸ்டிரியா எனச் சொல்லி விட்டார்களே என்று ஆத்திரம்தான் எல்லோருக்கும் வந்தது.  ஆபிஸுக்கு லீவு போட்டு விட்டு கொஞ்ச நாட்கள்  வீட்டில் இருந்தாள் பவித்ரா. சந்திராவும், மூர்த்தியும் அவ்வப்போது பார்த்து பேசி வந்தார்கள். அவளும் இங்கு வருவாள்.  அவள் சொன்ன விஷயங்கள் எல்லாம் தாங்க முடியாதவையாயிருந்தன. 

“ஆண்ட்டி! நம்ம வீட்டுலல்லாம் எப்படி ஜாலியா, அரட்டையடிச்சிட்டு இருப்போம்! அவங்க வீட்டில நான், அவன், மாமனார், மாமியார் நாலு பேரும் ஹாலில் உட்கார்ந்திருப்போம். அவங்களுக்குள்ள குசுகுசுன்னு பேசிக்குவாங்க. மாமனார் தரப்பில் அவங்க அண்ணன் தம்பி அவரை ஏமாத்திட்டாங்களாம். மாமியார் தரப்பிலும் அவங்க அம்மா அப்பா எதுவும் செய்யலையாம். சின்ன  வயசிலிருந்தே ரொம்ப கஷ்டப்பட்டு  முன்னேறி இந்த நிலைமைக்கு மாமனார் வந்தாராம். இது மட்டுந்தான் மொத்தத்தில விளங்கியது எனக்கு. மத்தபடி அவங்க சொன்ன பேர்களும், விஷயங்களும் சத்தியமா புரியல. முகம் பாத்து எதுவும் சொல்ல மாட்டாங்க. முன்ன பின்ன விளங்காம தேமேன்னு உக்கார்ந்திருக்கணும். தெனமும் இதுதான் சாயங்காலம்னா எப்படி இருக்கும்?” 

“அவங்களுக்குன்னு நெருங்கின சொந்தக்காரங்க, நண்பர்கள்னு யாருமே இல்ல. இவங்களும் யாரையும் நம்புறதில்ல. எப்பவும் யாரையாவது குறை சொல்லி பேசிட்டே இருப்பாங்க..” 

“அவனும் மூடியாவே இருப்பான். எதையும் ரசிக்க மாட்டான். ஷாப்பிங், டின்னர்னு போவோம்னு சொன்னா, எதுக்குன்னு கேப்பான்.” 

“இது தோதுப்படாதுன்னு நான் ஃபேஸ்புக், வாட்ஸ்-அப்ல ஃபிரண்ட்ஸ்கிட்ட நேரம் கழிக்க ஆரம்பிச்சேன். அதுலயும் வந்து மூக்க நுழைச்சான். என் ப்ரொஃபைல் படத்தைப் பாத்துட்டு, இப்படி போஸ் கொடுத்துட்டு நிக்கிறதாலத்தான் எனக்கு அதிகமா ஃபிரண்ட்ஸ் லிஸ்டாம். அதிகமா லைக் விழுதாம். எல்லாம் ஆண்களாம். கேவலமாப் பேசினான்.” 

“அவனுக்கு காம்ப்ளக்ஸ். என்னை ஒரு புத்திசாலிப் பொண்ணா அங்கீகரிக்கவே மாட்டான். என்னோட அழகால் காரியத்தை சாதிச்சு வந்திருப்பதாகவும், அந்த வித்தை தன்னிடம் பலிக்காதுன்னும் காட்டுவான். மொக்கையா அவஞ் சொல்றதுக்கெல்லாம் தலையாட்டணும். சரி அதையும் செஞ்சு பாப்போம்னு ட்ரை பண்ணேன். முடியல. உலகத்துல கொடுமையானது முட்டாள் போல பாவனை செய்றது.” 

“சின்னச் சின்ன விஷயங்களா நிறைய இருக்கு...” என்றவள் நிறுத்தி, “அம்மா அப்பாக் கிட்டத்தான் சொல்ல முடியாது ஒங்கக் கிட்ட சொல்லலாம்” என மெல்லிய குரலில் ஆரம்பித்தாள். “பெட்ல எப்பவும் டென்ஷனாயிருப்பான் ஆரம்பத்துல ப்ளைண்டா இருந்தான். நாந்தான் ஹெல்ப் பண்ணேன். சீக்கிரமே விழுந்துருவான். எனக்குப் புரிஞ்சுது.. ரிலாக்ஸாய் இரு, நிதானமா இரு, நாம ஒண்ணும் தப்பான காரியம் செய்யலேன்னு எங்கரேஜ் பண்ணேன். ஒனக்கு ரொம்ப எக்ஸ்பீரியன்ஸோன்னு கேட்டான்.” 

“பெட்ல சிரிச்சாலோ, சின்னதா சத்தம் வந்தாலோ சட்டுனு விலகிருவான். வெளியே அவனோட அப்பாவுக்கும், அம்மாவுக்கும் கேட்டுருமாம். அரையும்குறையா, தப்புந் தவறுமா அவன் வைத்துக்கொண்ட செக்ஸில் நல்ல வேளை நான் உண்டாகலை. தாங்ஸ் காட்.” 

அதற்கு மேல் பேச முடியாமல், சந்திராவின் முகத்தையும் பார்க்க முடியாமல் பவித்ரா கவிழ்ந்து கொண்டாள். அவள் கண்களில் நீர் கட்டிக் கொண்டிருந்தது. ஆறுதல் சொல்ல வேண்டும் போல இருந்தாலும், இப்படியெல்லாமா ஒரு பெண் படுக்கையில் பேசுவாள், நடந்து கொள்வாள் என்று ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. 

மூர்த்தியோடு திருமணமாகி இருபத்தெட்டு வருடங்கள் ஆகிவிட்டன. எல்லாம் இருட்டில் மௌனமாகவே நடந்து முடியும். மூர்த்தி எதாவது காதருகே கேட்டால், அதிகபட்சம் “ம்” தான். வேண்டும் என்பதும் வேண்டாம் என்பதும் இவரின் விருப்பமாக ஒருநாளும் இருந்ததில்லை. சின்னச் சின்ன தொடுதல்கள் மூலம் மூர்த்தி புரிய வைப்பார். புரிந்துகொள்ள வேண்டும்.  

சந்திராவுக்கு தொண்டை அடைத்துக்கொண்டு வர, சட்டென்று பவித்ராவை, “ஏங் கண்ணே” என இழுத்து அணைத்துக் கொண்டார். அவளின் முடியை கைகளால் அளைந்து கோதிவிட்டார். பவித்ராவின் உடல் அதிர்ந்து கொண்டிருந்தது. முதுகைத் தட்டிக் கொடுத்தார். 

“அழவேக் கூடாதுன்னு நினைச்சேன் ஆண்ட்டி! ஏனோ உங்கக் கிட்ட சொல்லும்போது அழுதுட்டேன்.” தேற்றியவாறு கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். “ஒரு மாசம் போல பாத்தேன். தனி வீடு போனா சரியாகும்னு தோணிச்சு. பேசினேன். அவன் , அவங்கம்மா, அப்பா மூணு பேரும் சேர்ந்து கத்துனாங்க. நானும் கத்தினேன். சாப்பாட்டுத் தட்டை தூக்கி எறிஞ்சேன். அவ்வளவுதான். தெரிஞ்ச எவனோ டாக்டர்ட்ட ஒரு சர்டிபிகேட் வாங்கி எனக்கு பைத்தியம்னு பட்டம் கொடுத்துட்டாங்க” 

கர்ச்சீப்பால் முகம் துடைத்துக் கொண்டாள். “வீடா சித்தி அது? ஒருத்தர் கூட ஃபிரண்ட்லியா இல்ல.” லேசாய் சிரித்துக்கொண்டு, “நல்லது. இத்தோடு போச்சு.  பெங்களுரிலிருந்து சென்னைக்கு டிரான்ஸ்பர் கேட்டிருக்கேன். கிடைச்சிரும். டைவர்ஸுக்கு அப்ளை செய்ய வேண்டியதுதான்” 

பவித்ராவைப் பற்றி மூர்த்தியிடம் சந்திரா சொன்னார். “நமக்கு வர்ற மருமகள நல்லா வச்சுக்கணுங்க. கொஞ்ச நாள் அவங்க ரெண்டு பேரும் தனியா  இருக்கட்டும். குழந்தை பிறந்த பிறகு நாமப் போயி அவங்களுக்கு ஒத்தாசையா இருக்கலாம்.” என்றார். “கடைசியில பவித்ராவைப் போயி பைத்தியம்னுட்டாங்களே!” என்று வருத்தப்பட்டார். மூர்த்தி எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்தார்.  அவர் என்ன நினைத்தார் என்பது தெரியவில்லை. சொல்லவுமில்லை. பெண்கள் எல்லாவற்றையும் பேசினாலும் புதிரானவள் என்கிறார்கள். ஆண்கள் எதையும் பேசவில்லை என்றாலும்  வெளிப்படையானவர்கள் என்கிறார்கள். 

இதோ, பவித்ரா அவள் என்ன நினைக்கிறாள், எப்படி இருக்கிறாள் என எல்லாவற்றையும் தெரிவித்துக்கொண்டே இருக்கிறாள். தன்னைத் திருமணம் செய்து கொண்டவனிடம் காட்டிய அன்பை பைத்தியமாக இருந்தேன் என்று சொல்கிறாள். எவ்வளவு கொடுமை. 

நிச்சயதார்த்தம் அன்றைக்கு மேடைக்கு தலைவிரி கோலமாய் வந்த பெண் நினைவுக்கு வந்தாள்.  அவள் ஏன் இன்னும் பைத்தியத்தில் இருந்து மீளாமல் இருக்கிறாள் எனத் தோன்றியது. திருமணத்தில் தெளியும் பைத்தியம் காதலில் தெளியாதோ என்றெல்லாம் யோசித்தார். பூங்குழலியின் அப்பா ரவிச்சந்திரன் அந்தப் பெண்ணைக் காதலித்தாரா, இல்லையா? அவர் அன்பு செலுத்தாமலா அந்தப் பெண் பைத்தியமானாள்? ஏன் தன்மீது அவ்வளவு அன்பு செலுத்தியவளை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை? பூங்குழலியின் அம்மா சித்ராவுக்கு இதெல்லாம் தெரிந்துமா ரவிச்சந்திரனை திருமணம் செய்து கொண்டார்? 

பூங்குழலியும் அவளது அப்பாவைப் போல அன்பை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள் புதைத்துக் கொள்பவளாய் இருப்பாளோ? இதுவரைக்கும் யார் மீதும் ஆசைப்படாமலா, அன்பு செலுத்தாமலா இருந்திருப்பாள்? அப்படி இருந்தால் அதை அவள் அம்மாவிடம் சொல்லாமலா இருந்திருப்பாள்? ஒருவேளை தன் அண்ணனால் குடும்பத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி தன்னாலும் ஏற்பட வேண்டாம் என நினைத்து இருப்பாளோ? யோசிக்க யோசிக்க எழுந்த கேள்விகள் எல்லாம் தெளிவுக்குப் பதிலாக குழப்பங்களையேத் தந்தன. 

வாட்ஸ்அப்பில், தான் அனுப்பிய படத்தைப் பூங்குழலி பார்த்து விட்டாளா என்று ஆராய்ந்தார். நீலக்கலரில் இரண்டு டிக் இருந்தது. ஆன்லைனில்தான் இருந்தாள். சரியாக அதே நேரத்தில் பூங்குழலியிடம் இருந்து மெஸேஜும் வந்தது.“குயின் இஸ் ரைட், கிங் இஸ் லெஃப்ட்” என்று ஸ்மைலி போட்டிருந்தாள். போட்டோவில் வலது பக்கம் அவள் இருப்பதையும், இடது பக்கம் நரேன் இருப்பதையும் சொல்கிறாள். தான் அனுப்பியது குறித்து எதுவும் சொல்லவில்லை. கிண்டல் செய்கிறாளா அல்லது அவள் தொனியே இதுதானா என்று புரியவில்லை.  நரேனுக்கு போன் செய்து சொன்னார். 

“லெப்ட்டுன்னா போய்ட்டேன்னு அர்த்தம். உங்களுக்குப் புரியலையா. போங்கம்மா” என எரிச்சலில் வைத்து விட்டான். 

சரியில்லை எனத் தோன்றியது. மேலும் வளரவிடக் கூடாது என்று பூங்குழலிக்கு போன் செய்தார். முழு ரிங் டோன் போனது. எடுக்கவில்லை. திரும்பவும் அடித்தார். எடுக்கவில்லை. என்ன பெண் இவள் என்று எரிச்சல் வந்தது. போனை படுக்கையில் வீசிவிட்டு எழுந்து ஹாலுக்கு வந்தார். போன் அடித்தது. வேகமாய்ப் போய் எடுத்தார். பூங்குழலிதான். 

“சொல்லுங்க ஆண்ட்டி, ஒரு டிஸ்கஷனில் இருந்தேன்.” எதுவும் நடக்காத மாதிரி மிக இயல்பாக மெல்லிய குரலில் கேட்டாள். ஃபேஸ்புக், குயின், ரைட், ராங், ரைட், லெஃப்ட் என ஒவ்வொன்றாய்  சொல்லி, “நரேன் வருத்தப்படுறான்.” என்றார். 

ஒன்றுமே நடக்காதது போல சிரித்தாள். “ஆன்ட்டி, நீங்க அந்தப் படம் பாத்துட்டீங்களா?” 

“இல்லம்மா..” 

“ம்ம்...இதை நரேன் ஏங்கிட்டயே கேட்டிருக்கலாமே” 

“எதுன்னாலும் அம்மாட்ட ஃப்ரியா பேசிருவான். பெண்கள்ட்ட பேசணும்னா கொஞ்சம் கூச்சப்படுவான். அதுதான்...” சிரித்தார். 

“ஏங்கிட்ட பேசுறதுக்கு என்ன கூச்சம் ஆண்ட்டி. மோதிரம் மாத்தியாச்சு. கல்யாணம் ஆகப்போது.” 

“அது ஒரு கதைம்மா. அவன் ரெண்டாம் கிளாஸ் படிக்கும்போது ஸ்கூல்ல ஒரு நாள்  அவசரத்துல கேர்ள்ஸ் டாய்லெட்டுக்குள்ள போய்ட்டான். அவன ஸ்கூல் முழுசும் கிண்டல் பண்ணி பாடாய் படுத்திட்டாங்க... அதுலயிருந்து கேர்ள்ஸ்ன்னாலே ஒரு மாதிரியாயிடுவான். நீதான் சரி பண்ணனும்.” சிரித்தார். 

“ம்..ம்” என சிரித்தாள். “ஓ.கே ஆண்ட்டி, நரேன்ட்ட நைட்ல பேசுறேன். சொல்லிருங்க.” 

“பேசிட்டு ஒரு வார்த்த ஸாரி சொல்லிரும்மா.” 

“நா எதுக்கு ஸாரி சொல்லணும் ?” 

“அவன் வருத்தப்படுறான்ல. ஸாரி கேட்டா சரியாயிருவான்” 

“தப்பா அர்த்தம் பண்ணியது நான் இல்லைய. நியாயமா ஸாரி கேக்க வேண்டியது நரேன் தான். விடுங்க ஆன்ட்டி. நா பேசிக்கிறேன். ஒரு பிரச்சினையுமில்ல. ஓ.கேவா?  பை!” வைத்துவிட்டாள். 

சந்திரா அப்படியே உட்கார்ந்திருந்தார். தான் என்ன பேசினோம், அவள் என்ன பேசினாள் என நினைத்துப் பார்த்து மேலும் குழப்பமானார். கடைசி வரை அவள் எழுதியதற்கு அர்த்தம் சொல்லவில்லை. 

பூங்குழலிக்கு வேறுவிதமான நினைப்பு எதுவும் இல்லை என்பதையும், மொத்தத்தையும் ஒரு சாதாரண விஷயமாக  அவள் கருதியதையும் புரிந்து கொண்டார். அந்த வகையில் நிம்மதிதான். ஆனால் தனக்கும் நரேனுக்கும் இடையில் நீங்கள் யார் என கேட்காமல் கேட்டு விட்டாளே என்றிருந்தது. அவள் மீது அன்பாகவும் அவளை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசையாகவும் இருக்கும்  தன்னை ஏன் புரிந்து கொள்ள மாட்டேன்கிறாள் என்று வருத்தம் மேலோங்கியது. ஒரு வார்த்தை ஸாரி கேட்டால்தான் என்னவாம்? என்று ஆதங்கப்பட்டார். 

மதியம் சாப்பாட்டுக்கு அரிசியை குக்கரில் வைக்க வேண்டியிருந்தது. எழுந்தார். மொபைல் அழைத்தது. எடுத்துப்  பார்த்தார். பூங்குழலியின் அம்மா சித்ரா.  

(தொடரும்)


(function(d,e,s){if(d.getElementById("likebtn_wjs"))return;a=d.createElement(e);m=d.getElementsByTagName(e)[0];a.async=1;a.id="likebtn_wjs";a.src=s;m.parentNode.insertBefore(a, m)})(document,"script","//w.likebtn.com/js/w/widget.js");
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 14, 2022 21:03

தொடர்பு எல்லைக்கு வெளியே - 4 (தொடர்கதை)




வெயில் அடித்து  நடமாட்டங்களற்றுக் கிடந்த பகல் நேரத்துத்  தெருவை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார் சந்திரா. நரேனுக்கு சமாதானம் சொல்லிவிட்டாலும் உள்ளுக்குள் சங்கடமாயிருந்தது. சின்ன விஷயத்துக்கும் நரேன் பதற்றப்படுவான் என்பது தெரியும். எதிலும் அவனுக்கு நிதானம் வேண்டும் என்று கவலைப்பட்டிருக்கிறார். சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவனிடம் சொல்லவும் செய்திருக்கிறார். நரேனிடம் இல்லாத நிதானம் பூங்குழலியிடம் இருப்பது நல்லது, அதுதான் பிரச்சினைகளைப் பெரிதாக்காமல் பார்த்துக் கொள்ளும் என்றெல்லாம் நினைத்திருந்தார். 

“மாயநதி இன்று மார்பில் வழியுதே… தூய நரையிலும்..” என்று முணுமுணுத்தவர், பாட்டு அந்த நேரத்துக்கு சம்பந்தமில்லாமல் இருப்பதாக உணர்ந்து நிறுத்திக் கொண்டார். காலையிலிருந்து அந்தப் பாட்டு அவருக்குள் இறங்கி இருந்தது. மொபட்டில் பெரிய கேரியர் வைத்து கேஸ் சிலிண்டர்களை அடுக்கிக்கொண்டு அடர் பச்சை நிற உடையில் சென்றவன் வலப்பக்கம்  தெரு திரும்பி மறைந்தான். வீடுகளில் தெரிந்த கொஞ்ச நஞ்ச மரங்களும், செடிகளும் சலனமற்று நின்றிருந்தன. பூங்குழலியின் மௌனமும் அப்படித்தான் தெரிந்தது. இது நிதானம் இல்லை. என்ன நடந்தாலும் கண்டு கொள்ளாத அலட்சியமாகப் பட்டது. எரிச்சலையும் , புழுக்கத்தையுமே ஏற்படுத்தும். நல்லதுக்கு இல்லை என்று கவலைப்பட்டார். 

பூட்டிக்கிடந்த எதிர் வீட்டு காம்பவுண்டுக்குள் நின்றிருந்த காரின் அடியிலிருந்து அந்த கருப்பு வெள்ளைப் பூனை வெளியே வந்து சோம்பல் முறித்தது. அதற்கு கொஞ்சம் தள்ளி கொய்யா மர நிழலில் கும்மாளமடித்துக் கொண்டிருந்த நான்கைந்து தவுட்டுக் குருவிகள் சடசடவென பறந்தன. அடுத்த கணம் அந்த வீடே களையிழந்து போனது. பவித்ரா அந்த வீடெல்லாம் எப்படி மலர்ந்து சிரித்து பறந்து திரிந்து கொண்டிருந்தாள்! மகள் தனியாக இருக்கிறாள் என அவளது அம்மா பார்வதி சென்னைக்கு சென்று மூன்று மாதங்களுக்கும் மேலாகி விட்டது. சுந்தரேசன் மட்டும் இங்கு இருக்கிறார். மின்சார வாரியத்தில் வேலை. இருட்டிய பிறகு வந்து கதவு திறந்து ஆளில்லாத வீட்டிற்குள் அவர் நுழையும் காட்சி பெரும் சோகமாய்த் தெரியும்.  

பெருமூச்சோடு ஹாலுக்குள் திரும்பினார். நடராஜன் முன்பு டீ குடித்த டம்ளர் காலியாய் இருந்தது. எடுத்து வாஷ் பேசினில் போட்டு விட்டு, படுக்கையறைக்குச் சென்றார். நிச்சயதார்த்த ஆல்பத்தில் நரேனும், பூங்குழலியும் மட்டும் சேர்ந்து நின்றிருந்த இன்னொரு போட்டோவை மொபைலில் பிடித்தார். ‘குயின் இஸ் ரைட், கிங் இஸ் ஆல்ஸோ ரைட்’  என குறிப்பிட்டு நரேனுக்கும், பூங்குழலிக்கும் வாட்ஸப்பில் அனுப்பினார். மீண்டும் ஹாலுக்கு வந்து சோபாவில் உட்கார்ந்து கொண்டார். சீரியலில் கவனம் ஒட்டவில்லை. 

“என்னம்மா ஒரு மாதிரி இருக்கே, யார் போன் பண்ணது?” நடராஜன் கேட்டார். 

“நரேன்தான் மாமா” 

“எதும் பிரச்சினையா?” உற்றுப் பார்த்தார். 

“ஒன்னும் இல்ல மாமா...” சீரியலைப் பார்ப்பது போல் இருந்தார். 

மருமகளைக் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு, “இல்ல இந்த நேரத்துல்லாம் போன் பண்ண மாட்டானேன்னு பாத்தேன்.” முணுமுணுத்தபடி நடராஜனும் சீரியல் பக்கம் திரும்பிக் கொண்டார்.  

நிச்சயதார்த்தம் அன்றைக்கு காலையில் நடந்தது திரும்பவும் சந்திராவுக்குள் ஓட ஆரம்பித்தது.  ரொம்ப நாட்கள் கழித்து வீட்டிற்கு வரும் பெண்ணிடம், அவளது அம்மாவை விட்டு, தன்னிடம் போனில் பேச அழைத்தது தனது  தவறுதான் என்பது உடனே உறைத்து விட்டது. அது குறித்து வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. கொஞ்ச நேரத்தில் சித்ரா போன் செய்து அதற்காக வருத்தம் தெரிவித்ததும், “ஐயோ இதெல்லாம் ஒரு மேட்டரா. மொதல்ல எம்மருமகள போய் நல்லா கவனிங்க” என சிரித்துக் கொண்டே சொல்லி  முடித்துக் கொண்டார். 

இப்போது அதுவும் உறுத்தியது. அம்மாவோடுதானே அடுத்த இரண்டு மூன்று நாட்களும் இருக்கப் போகிறாள்? தான் பேச அழைத்தது பூங்குழலிக்கு கொஞ்சங்கூட சந்தோஷமாக இல்லையா? ஒரு பெண்ணுக்கு அம்மா விசேஷம்தான் என்றாலும், அந்த நேரத்தில் ஒரே ஒரு வார்த்தை, “ஆண்ட்டி நல்லாயிருக்கீங்களா?” என கேட்பதில் என்ன குறைந்து விடப் போகிறது? அது ஒப்புக்காகவே இருந்துவிட்டுப் போகட்டும். அதுதானே நாகரீகம்? அதுதானே நிதானம்? என்றெல்லாம் யோசித்தார். 

நரேனுக்கு பூங்குழலியைப் பேச ஆரம்பித்ததும் முதலில் அவளை ஃபேஸ்புக்கில்தான் பார்த்தார். சட்டென்று கட்டித்தங்கம் டீச்சரின் நினைவுதான் வந்தது. அவரது சின்ன ஊரில் தேவதை போலிருந்தவர் கட்டித்தங்கம். அழகில் கம்பீரமும், தெளிவும் சேர்ந்திருக்கும். அவரைப் போல டீச்சராக வேண்டும் என்ற  கனவெல்லாம் இருந்தது. 

 ஃபேஸ்புக்கில் பூங்குழலி எழுதியிருந்தை படித்துப் பார்த்ததில் அவள் புத்தகங்கள் படிக்கிறவளாகவும், அவைகளைப் பற்றி எழுதுகிறவளாகவும் இருந்தாள். சின்ன வயதிலிருந்தே புத்தகம் படிக்கும் வழக்கம் கொண்டிருந்த சந்திராவுக்கு பூங்குழலி மேலும் நெருக்கமாய்த் தெரிந்தாள். ‘சிகரெட் பிடிப்பதில்லை. சிகரெட் வாசனை பிடிக்கிறது. அப்பாவின் வாசனை.” என்று ரவிச்சந்திரனின் நினைவுநாளில் எழுதி இருந்தாள். உருகுவதும் புலம்புவதாகவும் இல்லாமல் பிரியத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. அவள் இந்த வீட்டிற்கு மருமகளாக வேண்டும் என்று ஆசைப்பட ஆரம்பித்தார். 

‘டொக்...டொக்’. மொபைல்  தட்டியது. வாட்ஸ்-அப்பில் நரேன் “தாங்ஸ் மம்” என்றிருந்தான். சிறு சந்தோஷத்தைத் தந்தாலும் பூங்குழலி ஒன்றும் சொல்லவில்லையே என்றிருந்தது. எழுந்து படுக்கையறைக்கு சென்றார். இவர் செல்வதை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, மீண்டும் சீரியலுக்குள் புகுந்து கொண்டார்  நடராஜன். 

வாட்ஸ் அப்பை திறந்து வைத்து யோசித்துக் கொண்டு இருந்த போது, பவித்ராவின் ஸ்டேட்டஸ் கவனிக்க வைத்தது. ”ஆம். பைத்தியமாக இருந்தேன். இப்போது தெளிந்து விட்டேன்!”  என்று சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோவை பகிர்ந்திருந்தாள். பார்க்கவும் படிக்கவும் நன்றாக இருந்தாலும், அவளது அப்பா சுந்தரேசன் இருட்டிய பிறகு வீட்டிற்குள் நுழையும் காட்சி வந்து மறித்தது. 

இங்கு தூத்துக்குடியில் அவர்கள் வருவதற்கு முன்பே பவித்ரா வீட்டில் குடிவந்து இருந்தார்கள். இந்த வீடு பால் காய்ச்சும்போது பார்வதி இடுப்பில் பவித்ராவோடு வந்திருந்தார். நரேனுக்கு மூன்று நான்கு வயது மூத்தவளாய் பவித்ரா இருக்க வேண்டும்.. சந்திராவிடம் பிரியமும், நெருக்கமும் கொண்டிருந்தாள். தனக்கு நரேன் மட்டும்தான் என்றான பிறகு,  சந்திரா அந்த பெண் குழந்தையிடம் பாசத்தை அதிகமாகக் காட்டி இருந்தார். “ஆண்ட்டி....”, “ஆண்ட்டி....” என பேரன்பு செலுத்தினாள் அவள்.  

அண்ணா யூனிவர்சிட்டியில் முதல் மாணவியாய் தேர்வாகி, பெங்களூரில் முக்க்கியமான சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, ஜாதகம் பார்த்து, விசாரித்துத்தான் பொருத்தம் கண்டார்கள். மாப்பிள்ளையும் பெங்களூரிலேயே வேலை பார்த்தான். பிடித்துப் போனது. திருநெல்வேலியில் வைத்து பிரமாதமாக கல்யாணம் நடந்தது. 

இரண்டு மூன்று மாதங்கள் கூட ஆகியிருக்காது. பார்வதியையும் அவரது கணவரையும் பெங்களூருக்கு வரவழைத்து, “ஒங்க மகளுக்கு ஹிஸ்டிரியா, அவளை குணப்படுத்தி அனுப்பி வையுங்கள்” என  சொல்லி இருக்கிறார்கள். பவித்ரா அழுதிருக்கிறாள். கடுமையான வாக்குவாதம் நடந்திருக்கிறது. “டாக்டர் உங்க பொண்ணுக்கு குடுத்த சர்டிபிகேட் இதோ...” மாப்பிள்ளையின் அப்பா எடுத்துக் காட்டவும் பார்வதி அதிர்ச்சியில் வாயடைத்துப் போயிருக்கிறார். 

பவித்ரா கொஞ்சம் குள்ளம். வடிவமும், முகமும், நீண்ட முடியுமாய் அழகுச் சிலை போல் இருப்பாள். சிரித்த முகத்துடன், எல்லோரிடமும் மரியாதையுடன்  பழகுவாள். அப்படிப்பட்டவளை ஹிஸ்டிரியா எனச் சொல்லி விட்டார்களே என்று ஆத்திரம்தான் எல்லோருக்கும் வந்தது.  ஆபிஸுக்கு லீவு போட்டு விட்டு கொஞ்ச நாட்கள்  வீட்டில் இருந்தாள் பவித்ரா. சந்திராவும், மூர்த்தியும் அவ்வப்போது பார்த்து பேசி வந்தார்கள். அவளும் இங்கு வருவாள்.  அவள் சொன்ன விஷயங்கள் எல்லாம் தாங்க முடியாதவையாயிருந்தன. 

“ஆண்ட்டி! நம்ம வீட்டுலல்லாம் எப்படி ஜாலியா, அரட்டையடிச்சிட்டு இருப்போம்! அவங்க வீட்டில நான், அவன், மாமனார், மாமியார் நாலு பேரும் ஹாலில் உட்கார்ந்திருப்போம். அவங்களுக்குள்ள குசுகுசுன்னு பேசிக்குவாங்க. மாமனார் தரப்பில் அவங்க அண்ணன் தம்பி அவரை ஏமாத்திட்டாங்களாம். மாமியார் தரப்பிலும் அவங்க அம்மா அப்பா எதுவும் செய்யலையாம். சின்ன  வயசிலிருந்தே ரொம்ப கஷ்டப்பட்டு  முன்னேறி இந்த நிலைமைக்கு மாமனார் வந்தாராம். இது மட்டுந்தான் மொத்தத்தில விளங்கியது எனக்கு. மத்தபடி அவங்க சொன்ன பேர்களும், விஷயங்களும் சத்தியமா புரியல. முகம் பாத்து எதுவும் சொல்ல மாட்டாங்க. முன்ன பின்ன விளங்காம தேமேன்னு உக்கார்ந்திருக்கணும். தெனமும் இதுதான் சாயங்காலம்னா எப்படி இருக்கும்?” 

“அவங்களுக்குன்னு நெருங்கின சொந்தக்காரங்க, நண்பர்கள்னு யாருமே இல்ல. இவங்களும் யாரையும் நம்புறதில்ல. எப்பவும் யாரையாவது குறை சொல்லி பேசிட்டே இருப்பாங்க..” 

“அவனும் மூடியாவே இருப்பான். எதையும் ரசிக்க மாட்டான். ஷாப்பிங், டின்னர்னு போவோம்னு சொன்னா, எதுக்குன்னு கேப்பான்.” 

“இது தோதுப்படாதுன்னு நான் ஃபேஸ்புக், வாட்ஸ்-அப்ல ஃபிரண்ட்ஸ்கிட்ட நேரம் கழிக்க ஆரம்பிச்சேன். அதுலயும் வந்து மூக்க நுழைச்சான். என் ப்ரொஃபைல் படத்தைப் பாத்துட்டு, இப்படி போஸ் கொடுத்துட்டு நிக்கிறதாலத்தான் எனக்கு அதிகமா ஃபிரண்ட்ஸ் லிஸ்டாம். அதிகமா லைக் விழுதாம். எல்லாம் ஆண்களாம். கேவலமாப் பேசினான்.” 

“அவனுக்கு காம்ப்ளக்ஸ். என்னை ஒரு புத்திசாலிப் பொண்ணா அங்கீகரிக்கவே மாட்டான். என்னோட அழகால் காரியத்தை சாதிச்சு வந்திருப்பதாகவும், அந்த வித்தை தன்னிடம் பலிக்காதுன்னும் காட்டுவான். மொக்கையா அவஞ் சொல்றதுக்கெல்லாம் தலையாட்டணும். சரி அதையும் செஞ்சு பாப்போம்னு ட்ரை பண்ணேன். முடியல. உலகத்துல கொடுமையானது முட்டாள் போல பாவனை செய்றது.” 

“சின்னச் சின்ன விஷயங்களா நிறைய இருக்கு...” என்றவள் நிறுத்தி, “அம்மா அப்பாக் கிட்டத்தான் சொல்ல முடியாது ஒங்கக் கிட்ட சொல்லலாம்” என மெல்லிய குரலில் ஆரம்பித்தாள். “பெட்ல எப்பவும் டென்ஷனாயிருப்பான் ஆரம்பத்துல பிளைண்டா இருந்தான். நாந்தான் ஹெல்ப் பண்ணேன். சீக்கிரமே விழுந்துருவான். எனக்குப் புரிஞ்சுது.. ரிலாக்ஸாய் இரு, நிதானமா இரு, நாம ஒண்ணும் தப்பான காரியம் செய்யலேன்னு எங்கரேஜ் பண்ணேன். ஒனக்கு ரொம்ப எக்ஸ்பீரியன்ஸோன்னு கேட்டான்.” 

“பெட்ல சிரிச்சாலோ, சின்னதா சத்தம் வந்தாலோ சட்டுனு விலகிருவான். வெளியே அவனோட அப்பாவுக்கும், அம்மாவுக்கும் கேட்டுருமாம். அரையும்குறையா, தப்புந் தவறுமா அவன் வைத்துக்கொண்ட செக்ஸில் நல்ல வேளை நான் உண்டாகலை. தாங்ஸ் காட்.” 

அதற்கு மேல் பேச முடியாமல், சந்திராவின் முகத்தையும் பார்க்க முடியாமல் பவித்ரா கவிழ்ந்து கொண்டாள். அவள் கண்களில் நீர் கட்டிக் கொண்டிருந்தது. ஆறுதல் சொல்ல வேண்டும் போல இருந்தாலும், இப்படியெல்லாமா ஒரு பெண் படுக்கையில் பேசுவாள், நடந்து கொள்வாள் என்று ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. 

மூர்த்தியோடு திருமணமாகி இருபத்தெட்டு வருடங்கள் ஆகிவிட்டன. எல்லாம் இருட்டில் மௌனமாகவே நடந்து முடியும். மூர்த்தி எதாவது காதருகே கேட்டால், அதிகபட்சம் “ம்” தான். வேண்டும் என்பதும் வேண்டாம் என்பதும் இவரின் விருப்பமாக ஒருநாளும் இருந்ததில்லை. சின்னச் சின்ன தொடுதல்கள் மூலம் மூர்த்தி புரிய வைப்பார். புரிந்துகொள்ள வேண்டும்.  

சந்திராவுக்கு தொண்டை அடைத்துக்கொண்டு வர, சட்டென்று பவித்ராவை, “ஏங் கண்ணே” என இழுத்து அணைத்துக் கொண்டார். அவளின் முடியை கைகளால் அளைந்து கோதிவிட்டார். பவித்ராவின் உடல் அதிர்ந்து கொண்டிருந்தது. முதுகைத் தட்டிக் கொடுத்தார். 

“அழவேக் கூடாதுன்னு நினைச்சேன் ஆண்ட்டி! ஏனோ உங்கக் கிட்ட சொல்லும்போது அழுதுட்டேன்.” தேற்றியவாறு கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். “ஒரு மாசம் போல பாத்தேன். தனி வீடு போனா சரியாகும்னு தோணிச்சு. பேசினேன். அவன் , அவங்கம்மா, அப்பா மூணு பேரும் சேர்ந்து கத்துனாங்க. நானும் கத்தினேன். சாப்பாட்டுத் தட்டை தூக்கி எறிஞ்சேன். அவ்வளவுதான். தெரிஞ்ச எவனோ டாக்டர்ட்ட ஒரு சர்டிபிகேட் வாங்கி எனக்கு பைத்தியம்னு பட்டம் கொடுத்துட்டாங்க” 

கர்ச்சீப்பால் முகம் துடைத்துக் கொண்டாள். “வீடா சித்தி அது? ஒருத்தர் கூட ஃபிரண்ட்லியா இல்ல.” லேசாய் சிரித்துக்கொண்டு, “நல்லது. இத்தோடு போச்சு.  பெங்களுரிலிருந்து சென்னைக்கு டிரான்ஸ்பர் கேட்டிருக்கேன். கிடைச்சிரும். டைவர்ஸுக்கு அப்ளை செய்ய வேண்டியதுதான்” 

பவித்ராவைப் பற்றி மூர்த்தியிடம் சந்திரா சொன்னார். “நமக்கு வர்ற மருமகள நல்லா வச்சுக்கணுங்க. கொஞ்ச நாள் அவங்க ரெண்டு பேரும் தனியா  இருக்கட்டும். குழந்தை பிறந்த பிறகு நாமப் போயி அவங்களுக்கு ஒத்தாசையா இருக்கலாம்.” என்றார். “கடைசியில பவித்ராவைப் போயி பைத்தியம்னுட்டாங்களே!” என்று வருத்தப்பட்டார். மூர்த்தி எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்தார்.  அவர் என்ன நினைத்தார் என்பது தெரியவில்லை. சொல்லவுமில்லை. பெண்கள் எல்லாவற்றையும் பேசினாலும் புதிரானவள் என்கிறார்கள். ஆண்கள் எதையும் பேசவில்லை என்றாலும்  வெளிப்படையானவர்கள் என்கிறார்கள். 

இதோ, பவித்ரா அவள் என்ன நினைக்கிறாள், எப்படி இருக்கிறாள் என எல்லாவற்றையும் தெரிவித்துக்கொண்டே இருக்கிறாள். தன்னைத் திருமணம் செய்து கொண்டவனிடம் காட்டிய அன்பை பைத்தியமாக இருந்தேன் என்று சொல்கிறாள். எவ்வளவு கொடுமை. 

நிச்சயதார்த்தம் அன்றைக்கு மேடைக்கு தலைவிரி கோலமாய் வந்த பெண் நினைவுக்கு வந்தாள்.  அவள் ஏன் இன்னும் பைத்தியத்தில் இருந்து மீளாமல் இருக்கிறாள் எனத் தோன்றியது. திருமணத்தில் தெளியும் பைத்தியம் காதலில் தெளியாதோ என்றெல்லாம் யோசித்தார். பூங்குழலியின் அப்பா ரவிச்சந்திரன் அந்தப் பெண்ணைக் காதலித்தாரா, இல்லையா? அவர் அன்பு செலுத்தாமலா அந்தப் பெண் பைத்தியமானாள்? ஏன் தன்மீது அவ்வளவு அன்பு செலுத்தியவளை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை? பூங்குழலியின் அம்மா சித்ராவுக்கு இதெல்லாம் தெரிந்துமா ரவிச்சந்திரனை திருமணம் செய்து கொண்டார்? 

பூங்குழலியும் அவளது அப்பாவைப் போல அன்பை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள் புதைத்துக் கொள்பவளாய் இருப்பாளோ? இதுவரைக்கும் யார் மீதும் ஆசைப்படாமலா, அன்பு செலுத்தாமலா இருந்திருப்பாள்? அப்படி இருந்தால் அதை அவள் அம்மாவிடம் சொல்லாமலா இருந்திருப்பாள்? ஒருவேளை தன் அண்ணனால் குடும்பத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி தன்னாலும் ஏற்பட வேண்டாம் என நினைத்து இருப்பாளோ? யோசிக்க யோசிக்க எழுந்த கேள்விகள் எல்லாம் தெளிவுக்குப் பதிலாக குழப்பங்களையேத் தந்தன. 

வாட்ஸ்அப்பில், தான் அனுப்பிய படத்தைப் பூங்குழலி பார்த்து விட்டாளா என்று ஆராய்ந்தார். நீலக்கலரில் இரண்டு டிக் இருந்தது. ஆன்லைனில்தான் இருந்தாள். சரியாக அதே நேரத்தில் பூங்குழலியிடம் இருந்து மெஸேஜும் வந்தது.“குயின் இஸ் ரைட், கிங் இஸ் லெஃப்ட்” என்று ஸ்மைலி போட்டிருந்தாள். போட்டோவில் வலது பக்கம் அவள் இருப்பதையும், இடது பக்கம் நரேன் இருப்பதையும் சொல்கிறாள். தான் அனுப்பியது குறித்து எதுவும் சொல்லவில்லை. கிண்டல் செய்கிறாளா அல்லது அவள் தொனியே இதுதானா என்று புரியவில்லை.  நரேனுக்கு போன் செய்து சொன்னார். 

“லெப்ட்டுன்னா போய்ட்டேன்னு அர்த்தம். உங்களுக்குப் புரியலையா. போங்கம்மா” என எரிச்சலில் வைத்து விட்டான். 

சரியில்லை எனத் தோன்றியது. மேலும் வளரவிடக் கூடாது என்று பூங்குழலிக்கு போன் செய்தார். முழு ரிங் டோன் போனது. எடுக்கவில்லை. திரும்பவும் அடித்தார். எடுக்கவில்லை. என்ன பெண் இவள் என்று எரிச்சல் வந்தது. போனை படுக்கையில் வீசிவிட்டு எழுந்து ஹாலுக்கு வந்தார். போன் அடித்தது. வேகமாய்ப் போய் எடுத்தார். பூங்குழலிதான். 

“சொல்லுங்க ஆண்ட்டி, ஒரு டிஸ்கஷனில் இருந்தேன்.” எதுவும் நடக்காத மாதிரி மிக இயல்பாக மெல்லிய குரலில் கேட்டாள். ஃபேஸ்புக், குயின், ரைட், ராங், ரைட், லெஃப்ட் என ஒவ்வொன்றாய்  சொல்லி, “நரேன் வருத்தப்படுறான்.” என்றார். 

ஒன்றுமே நடக்காதது போல சிரித்தாள். “ஆன்ட்டி, நீங்க அந்தப் படம் பாத்துட்டீங்களா?” 

“இல்லம்மா..” 

“ம்ம்...இதை நரேன் ஏங்கிட்டயே கேட்டிருக்கலாமே” 

“எதுன்னாலும் அம்மாட்ட ஃப்ரியா பேசிருவான். பெண்கள்ட்ட பேசணும்னா கொஞ்சம் கூச்சப்படுவான். அதுதான்...” சிரித்தார். 

“ஏங்கிட்ட பேசுறதுக்கு என்ன கூச்சம் ஆண்ட்டி. மோதிரம் மாத்தியாச்சு. கல்யாணம் ஆகப்போது.” 

“அது ஒரு கதைம்மா. அவன் ரெண்டாம் கிளாஸ் படிக்கும்போது ஸ்கூல்ல ஒரு நாள்  அவசரத்துல கேர்ள்ஸ் டாய்லெட்டுக்குள்ள போய்ட்டான். அவன ஸ்கூல் முழுசும் கிண்டல் பண்ணி பாடாய் படுத்திட்டாங்க... அதுலயிருந்து கேர்ள்ஸ்ன்னாலே ஒரு மாதிரியாயிடுவான். நீதான் சரி பண்ணனும்.” சிரித்தார். 

“ம்..ம்” என சிரித்தாள். “ஓ.கே ஆண்ட்டி, நரேன்ட்ட நைட்ல பேசுறேன். சொல்லிருங்க.” 

“பேசிட்டு ஒரு வார்த்த ஸாரி சொல்லிரும்மா.” 

“நா எதுக்கு ஸாரி சொல்லணும் ?” 

“அவன் வருத்தப்படுறான்ல. ஸாரி கேட்டா சரியாயிருவான்” 

“தப்பா அர்த்தம் பண்ணியது நான் இல்லைய. நியாயமா ஸாரி கேக்க வேண்டியது நரேன் தான். விடுங்க ஆன்ட்டி. நா பேசிக்கிறேன். ஒரு பிரச்சினையுமில்ல. ஓ.கேவா?  பை!” வைத்துவிட்டாள். 

சந்திரா அப்படியே உட்கார்ந்திருந்தார். தான் என்ன பேசினோம், அவள் என்ன பேசினாள் என நினைத்துப் பார்த்து மேலும் குழப்பமானார். கடைசி வரை அவள் எழுதியதற்கு அர்த்தம் சொல்லவில்லை. 

பூங்குழலிக்கு வேறுவிதமான நினைப்பு எதுவும் இல்லை என்பதையும், மொத்தத்தையும் ஒரு சாதாரண விஷயமாக  அவள் கருதியதையும் புரிந்து கொண்டார். அந்த வகையில் நிம்மதிதான். ஆனால் தனக்கும் நரேனுக்கும் இடையில் நீங்கள் யார் என கேட்காமல் கேட்டு விட்டாளே என்றிருந்தது. அவள் மீது அன்பாகவும் அவளை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசையாகவும் இருக்கும்  தன்னை ஏன் புரிந்து கொள்ள மாட்டேன்கிறாள் என்று வருத்தம் மேலோங்கியது. ஒரு வார்த்தை ஸாரி கேட்டால்தான் என்னவாம்? என்று ஆதங்கப்பட்டார். 

மதியம் சாப்பாட்டுக்கு அரிசியை குக்கரில் வைக்க வேண்டியிருந்தது. எழுந்தார். மொபைல் அழைத்தது. எடுத்துப்  பார்த்தார். பூங்குழலியின் அம்மா சித்ரா.  

(தொடரும்)


(function(d,e,s){if(d.getElementById("likebtn_wjs"))return;a=d.createElement(e);m=d.getElementsByTagName(e)[0];a.async=1;a.id="likebtn_wjs";a.src=s;m.parentNode.insertBefore(a, m)})(document,"script","//w.likebtn.com/js/w/widget.js");
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 14, 2022 21:03

January 11, 2022

க்ளிக்- 3 (தொடர் கதை)




மூர்த்தி பள்ளிக்குச் சென்று விட்டார். வீடு அமைதியாய் இருந்தது. நேற்றிரவு அவர் கொண்டு வந்த நிச்சயதார்த்த ஆல்பத்தைத் திரும்பவும் பார்த்துக்கொண்டு இருந்தார் சந்திரா. ”மாயநதி இன்று மார்பில் வழியுதே… தூய நரையிலும் காதல் மலருதே….” தன்னையுமறியாமல் லேசாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தார். மாநிறம் என்றாலும் நரேன் முகத்தில் தனிக் களை தெரிந்தது. அவனும் பூங்குழலியும் வெட வெடவென இருந்தார்கள்.  கொஞ்சம் பூசினாற்போல் இருந்தால் எடுப்பாக இருக்கும் எனத் தோன்றியது. கல்யாணத்துக்குப் பிறகு ஒரு சுற்று எப்படியும் பருத்து விடுவார்கள். தானும் கல்யாணத்தின்போது இதைவிட ஒல்லியாக இருந்தவள்தானே என நினைத்துக்கொண்டார். 

ஆரம்பத்தில் மூர்த்தி “ஒல்லிப் பாச்சான்”, “ஒல்லிப் பாச்சான்” என்றுதான்  இவரை அழைத்துக் கொண்டிருந்தார்.  முதல் இரண்டு நாட்கள் அதைச்  செல்லமென நினைத்து ரசித்தாலும், தொடர்ந்து எல்லோர் முன்னாலும் அப்படி சொல்ல ஆரம்பித்தது பிடிக்காமல் போனது. இது என்ன “ஒல்லிப் பாச்சான்” என வெறுப்பு வந்தது. ஒருபோதும் மூர்த்தியிடம் சொன்னது இல்லை. முகத்தைக்கூட காட்டியதில்லை. அம்மாவிடம் வருத்தப்பட்ட போது, “அப்படித்தான் இருப்பாங்க. பொறுமையா இரு. மெல்ல மெல்லதான் வழிக்குக் கொண்டு வரணும்” என தேற்றினார். 

பூங்குழலியோ நிச்சயதார்த்தம் அன்றைக்கு இவர்கள் வாங்கிக்கொண்டு போன மோதிரத்தை பார்த்துவிட்டு, “ஒ.கேதான் ஆன்ட்டி.  இன்னும் கொஞ்சம் வேற பேட்டர்ன்ல பாத்திருக்கலாம்” என சட்டென சொன்னது முகத்தில் அடித்தது போலிருந்தது. மூர்த்திக்கும் ஒருமாதிரியாகி விட்டது. பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. கலகலவென எல்லோரிடமும் சந்தோஷம் நிரம்பி இருந்தது அப்போது. இந்த ஒரு வாரம் முழுக்க அதுவே நினைப்பாகி இருந்தது. 

எதிர்பார்த்ததை விட நிச்சயதார்த்தம் தடபுடலாக இருந்தது. மண்டபம் பிடித்து ஒரு கல்யாணம் போல பூங்குழலியின் தாத்தா பூசைப்பழம் ஏற்பாடு செய்திருந்தார். நரேனோடு இங்கிருந்து சந்திரா, மூர்த்தியின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும், பக்கத்து வீட்டுக்காரர்கள் என இரண்டு வேனில் மொத்தம் நாற்பது பேர் போல சென்றிருந்தார்கள். அங்கேயோ மொத்த ஊரையும் கூட்டி வைத்திருந்தார்கள். இவர்களை அப்படி ஒரு மரியாதையோடு  முருகேசன் கவனித்தார். 

பூங்குழலியின் அண்ணன் கலைச்செல்வன், அவன் மனைவி  சரண்யா, மகள் யாழினியோடு நேரே மண்டபத்துக்கு வந்திருந்தான். நரேனோடு ஆசையாகப் பேசிக்கொண்டு இருந்தான். பூங்குழலியின் அப்பா ரவிச்சந்திரனின் கூடப்பிறந்த அண்ணன்கள் உதயச்சந்திரன், பாலச்சந்திரன், சித்ராவின் தங்கைகள் அமுதா,  விமலா எல்லோரும் குடும்பத்தோடு வந்து கலந்து கொண்டனர். அவர்கள் யாருமே கலைச்செல்வனிடம் முகம் கொடுத்து பேசவில்லை என்பது தெரிந்தது. 

ரவிச்சந்திரனின் தந்தை சபாபதி தாம்பூலம் மாற்றும் போது மேடையேறி குடும்பத்தின் தலைவராக வீற்றிருந்தார். எல்லோரையும் சந்திராவுக்கும், மூர்த்திக்கும்  பூசைப்பழம் அறிமுகம் செய்து வைத்தார். “எங்க பொண்ணு. நல்லா வச்சுக்குங்க” என்று மட்டும் சபாபதி சொன்னார். அவரது சாயல் அப்படியே பூங்குழலியிடம் இருந்தது. 

மயில் கழுத்து நிறத்தில் நிச்சயதார்த்தப் புடவை பிரமாதமாக இருந்தது. நரேன் கோட் சூட் போட்டிருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும். ஏன் அது தோன்றாமல் போய்விட்டது என சந்திரா வருத்தப்பட்டாள். பூங்குழலியின் கைகளில் மோதிரம் அணியும் காட்சி ஜம்மென்று வந்திருந்தது. இருவரும் அழகாக சிரித்துக் கொண்டிருந்தார்கள்.  மொபைலில் அதைப் படம் பிடித்து வாட்ஸ்-அப்பில் நரேனுக்கும், பூங்குழலிக்கும் ‘சூப்பர்’  என அனுப்பினாள்.  

தலைவிரி கோலமாய் பைத்தியம் போல இருந்த அந்தப் பெண் உள்ளே நுழைந்ததைத் தவிர எல்லாம் நன்றாக நடந்தது. வந்தவர்கள் மேடையேறி மணமக்களோடு நின்று போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். அப்படியொரு நிலையில் வந்தவரை கவனித்து,  யாரிது என யோசிப்பதற்குள் மேடையருகே நெருங்கிவிட்டிருந்தார். ஒரே சலசலப்பாகி விட்டது. முருகேசன்  விறுவிறுவென சென்று கடுங்கோபத்துடனும் அருவருப்புடனும் “ச்சீ.... போ வெளியே” என சத்தம் போட்டார். அந்தப் பெண் எதோ முனகிக்கொண்டு திரும்பவும் மேடை நோக்கியே வந்தார்.  கோபத்துடன் அவரைப் பிடித்து முருகேசன் இழுக்கவும் தடுமாறிக் கிழே விழுந்தார். “ஏ...யென் ராசா...!” என தரையில் அடித்து கதறி அழ ஆரம்பித்தார். கலைச்செல்வன்தான் ஓடிப்போய், தூக்கி கைத்தாங்கலாக வெளியே அழைத்துச் சென்றான்.  

பூசைப்பழம் முதற்கொண்டு அனைவரும் வெலவெலத்துப் போயிருந்தனர். அந்தப் பெண் போன திசையில் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார் சபாபதி. நின்று கொண்டிருந்த பூங்குழலி மேடையிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். சித்ரா  அந்த இடத்தை விட்டு அகன்று மணமகள் அறைக்குள் நுழைந்து கொண்டார். சந்திராவும் மூர்த்தியும் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்கள். முருகேசன் திரும்ப வந்து எல்லோரையும் பந்திக்கு சாப்பிட அழைத்து அந்த இடத்தை வேறு மனநிலைக்குக் கொண்டு வந்தார். 

கொஞ்ச நேரம் கழித்து சித்ராவிடம் மெல்ல கேட்டபோது, “அது கெடக்கு பைத்தியம்.”  என்று மட்டும் சொல்லி நிறுத்திக் கொண்டார். பூங்குழலியோ, “எங்க அப்பாவைக் காதலிச்சிருக்காங்க. பேரு கல்யாணி. இன்னும் அவங்க நெனைப்பாகவே இருக்காங்க. கல்யாணாமே பண்ணிக்கல.” என்று நரேனிடம் சொல்லியிருக்கிறாள். 

‘டொக்...டொக்’ என வாட்ஸ்-அப்பில் மெசெஜ் வரும் சத்தம் கேட்டது. எடுத்துப் பார்த்தாள். “வித் ஆல் யுவர் பிளஸ்ஸிங்ஸ் அன்ட் விஷ்ஷஸ்” நரேன் அனுப்பியிருந்தான். சந்தோஷமாய் இருந்தது. அவன் எது செய்தாலும் அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் தெரியும். இவர்களது சொந்த பந்தங்களில், நரேனுக்கு அவன் அம்மா மீது இருக்கும் அன்பு விசேஷமாகப் பேசப்படக்கூடிய ஒன்று. 

அவனுக்கு ஒன்றரை வயது நடக்கும்போது ஒருநாள் சந்திரா தனது அக்காவின் மகனை ஆசையோடு தூக்கி வைத்திருந்தார். விளையாடிக்கொண்டிருந்த நரேன் அருகில் வந்து தேம்பித் தேம்பி அழுதான். முதலில் எதற்கு என்று தெரியவில்லை. அந்தப் பையனை இடுப்பில் இருந்து இறக்கிவிட்டு நரேனைத் தூக்கியதும் அழுகையை நிறுத்தினான். தன்னைத் தூக்குவதற்குத்தான் அழுதிருக்கிறான் என நினைத்துக் கொண்டார்கள்.  திரும்பவும் ஒருமுறை அது போல அக்காவின் மகனைத் தூக்கியதும், ஓடி அருகில் வந்து நரேன் அதேபோல் துடித்து அழுதான். தன்னைத் தவிர வேறு யாரையும் அம்மா தூக்கினால் பிடிக்காமல் அழுகிறான் என்பது அப்போதுதான் தெரிந்தது. சந்திராவின் அக்கா அதை இப்போதும் சொல்வார். 

சரியாக அந்த சமயத்தில்  சந்திரா திரும்பவும் உண்டாகியிருந்தார். அப்போது குழந்தை  வேண்டாம்  எனத் தோன்றியது. வீட்டில் இவரே ஒரு முடிவெடுத்ததும் அப்போதுதான். மூர்த்தி எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். “இல்லைங்க, நரேன் வளரட்டும். பார்த்துக் கொள்வோம்” என  அதை மறுத்ததும் அப்போதுதான். பிடிவாதமாய் கருவைக் கலைத்துக் கொண்டார். மொத்தக் குடும்பத்திற்கும் அதில்  வருத்தம் இருந்தது. சந்திராவின் அம்மா ஆஸ்பத்திரி வந்து வாய்விட்டு அழுதார். 

பிறகு சந்திரா உண்டாகவேயில்லை. மூர்த்தி சில சமயங்களில் சொல்லிக் காட்டியிருக்கிறார். வேதனையில் உள்ளுக்குள் துடித்தாலும், “பரவாயில்லை. எல்லாம் நரேனுக்காகத்தானே. அவன் போதும் எனக்கு.” என சமாளித்துக் கொள்வார். நரேனைப் பார்த்து எல்லாம் மறந்து முகம் மலர்வார். அவன் ஒருபோதும் ஏங்கிப் போய்விடக் கூடாது என பார்த்துப் பார்த்து கவனிப்பார். வெளியே சென்று விட்டால் வீடு திரும்பும் வரை அவன் நினைப்போடுதான் காத்திருப்பார். 

“ரொம்ப செல்லம் கொடுக்குற. கவலப்படுற. இது சரியில்ல.”  மூர்த்தி  எத்தனையோ தடவை எச்சரித்திருக்கிறார். 

அது பற்றிக் கவலைப் பட்ட மாதிரியேத் தெரியாது. அவன் பத்தாவது வகுப்பில் நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணிய போது மூர்த்தியிடம், “இவனுக்கு என்று ஒருத்தி பிறந்திருப்பாள்தானே. அவள் இப்போது எந்த வகுப்பு பாஸ் பண்ணியிருப்பாள்” கேட்டார் சந்திரா. 

“உனக்கென்ன பைத்தியமா.  உன் கற்பனையையெல்லாம் உன்னோட வச்சுக்க” மூர்த்தி கடுமையாக எரிந்து விழுவார். சந்திரா சிரித்துக் கொள்வார். 

அன்றைக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து, கல்யாணத் தேதி முடிவு செய்து சாப்பிட்டு விட்டுக் கிளம்பும்போது பூங்குழலி அருகில் சென்று, “எம் பையனுக்கு ஒரு தேவதையை கற்பனை செஞ்சு வச்சிருந்தேன். அந்த தேவதைக்கு இன்னிக்கு நீ முகம் கொடுத்துட்ட..” கையைப் பிடித்து நெகிழ்ந்தார். 

“அப்படியா” என ஆச்சரியத்துடன் கண்களை விரித்து, “ஸோ நைஸ் ஆன்ட்டி...” என சிரித்தாள் பூங்குழலி. 

“எம்மருமகா எவ்வளவு அழகாச் சிரிக்கிறா..” சந்தோஷமடைந்து, பூங்குழலியைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். அவளது மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டார். 

தான் அனுப்பிய படத்துக்கு வாட்ஸ்-அப்பில் எந்தப் பதிலும் அவளிடமிருந்து இன்னும் வரவில்லை என்று எண்ணிக்கொண்டார். ஆபிஸில் வேலை அதிகமோ என்னவோ என மொபைலை எடுத்துப் பார்த்தார். அந்தப் படம் பார்க்கப்பட்டு விட்டது என்பதை நீலக்கலரில் இரண்டு ‘டிக்’ காட்டியது. மரியாதைக்காவது ஒரு மெஸேஜ் அனுப்பியிருக்கலாமே எனத் தோன்றியது. 

போன் நம்பரை வாங்கி வந்த பிறகு, அடுத்தநாள் இவர்தான் பூங்குழலியை அழைத்து நிச்சயதார்த்தம் குறித்து சந்தோஷமாக பகிர்ந்து கொண்டார். ஞாயிற்றுக்கிழமை போன் செய்து, “எப்போது சென்னை செல்கிறாய், எப்படிச் செல்கிறாய்” கேட்டுக் கொண்டார். மூர்த்தியிடமும், நரேனிடமும் மொபைலைக் கொடுத்து பேசச் சொன்னார். சென்னை சென்ற பிறகு போன் செய்து “பயணம் எப்படியிருந்தது” விசாரித்துக் கொண்டார். அன்றிரவு வாட்ஸ்-அப்பில் ‘குட்நைட்’ சொன்னார். பூங்குழலியும்  பதிலுக்கு, ‘குட்நைட் ஆன்ட்டி’ சொல்லியிருந்தாள். ஒருதடவை கூட அவளாக அழைத்துப் பேசியதில்லை. 

அன்றைக்கும் அப்படித்தான்.  பூங்குழலி இப்போதான் சென்னையில இருந்து வந்திருக்கிறாள் என்று பேசிக்கொண்டிருந்த சித்ரா சொன்னதும், “அவக்கிட்ட கொடுங்க” என்று இவர் சொன்னபோது, போனை வாங்கி பூங்குழலி தொடர்பை துண்டித்து விட்டாள். 

கல்யாணம், தனக்கு வரப்போகிறவன், அவர்களது குடும்பம் பற்றியெல்லாம் எதாவது யோசிப்பாளா இந்தப் பெண் பூங்குழலி என்றிருந்தது. மூர்த்தியின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை பார்த்துக்கொண்டு எவ்வளவோ கனவுகள் கண்டிருந்தார் சந்திரா. நடிகர் மோகன் போல மூர்த்தி இருப்பதாக நினைத்து உருகியிருக்கிறார். ‘சாலையோரம் சோலையொன்று ஆடும், சங்கீதம் பாடும்’ பாடல் எங்காவது கேட்டுவிட்டால் போதும் சிலிர்த்துப் போவார். தூங்கும்போது, குளிக்கும்போது, வீட்டுக்குப் பின்னால் மாமர நிழலில் நிற்கும்  போது, அடுப்பு முன்னால் உட்கார்ந்திருக்கும் போது, அவித்த நெல்லின் வாசம் பிடித்தபடி அதை பனம்பாயில் போட்டு வெயிலில் காய வைக்கும் போது மூர்த்தி்யின் ஞாபகங்களே அசைந்தாடிக்கொண்டு இருக்கும். சொந்த பந்தங்களும், தெரிந்தவர்களும், தோழிகளும் ஊரில் சும்மாவா இருந்தார்கள். எங்கே போனாலும், நின்றாலும், “புதுப்பொண்ணு” என்று வாஞ்சையோடு அழைக்க , வெட்கம் அப்பிக்கொள்ள மயங்கித் திரிந்த  காலங்கள் அவை. 

“ஏ... சந்திரா! மாப்பிள்ளையோட அப்பா அவங்க வீட்ல அடித்த பத்திரிகையை கொண்டு வந்திருக்காங்க..” அம்மா அழைத்ததும் தோட்டத்து கிணற்றடியில் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தவள் அவசரமாய் எழுந்து  ஓடி உரலில் இடித்துக் கொண்டார்.  முட்டியில் கடுமையாய் வலி எடுத்தாலும் மெதுவாய் நொண்டிக்கொண்டு வாசலருகே வந்து, “வாங்க மாமா!” என கும்பிட்டார். மூர்த்தியோடு சம்பந்தப்பட்டவர்களை பார்ப்பதிலும், பழகுவதிலுமே பொங்கிய ஆர்வம் அது. அந்த கல்யாணப் பத்திரிகையை எடுத்து வைத்துக்கொண்டு தன் பெயரையும், மூர்த்தியின் பேரையும் சேர்த்துப் பார்த்ததில், படித்ததில்  எவ்வளவு சந்தோஷம் இருந்தது. அப்படியெல்லாம் கொஞ்சம் கூட  உணர்வுகள் இல்லாமல் பூங்குழலி இருக்கிறாளே என்று தவித்தார். 

சித்ராவும், பத்மாவதி அம்மாளும் இந்த மூன்று நாட்களில் அவர்களாகவே இரண்டு தடவை பேசிவிட்டார்கள். ஜவுளி எடுக்க சென்னைக்குப் போகலாம் என்றும், ஒரு சனிக்கிழமை புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை நரேனையும், பூங்குழலியையும் அழைத்துக் கொள்ளலாம் என்றும் சொன்னார்கள். நல்ல யோசனையாய் இருந்தது. இருவரும் சேர்ந்து வாழ சென்னையில் வீடு பார்க்க வேண்டியிருந்தது. இந்த மாதத்தில் பனிரெண்டு, அடுத்த மாதத்தில் இருபத்து நான்குமாக இன்னும் முப்பத்தாறு நாட்கள்தான் கல்யாணத்துக்கு இருக்கின்றன. பத்திரிகை அடிக்கச் சொல்லியாகிவிட்டது. வந்தவுடன் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். கல்யாணத்துக்கு பத்து நாட்களுக்கு முன்பிருந்துதான் லீவு கிடைக்கும் என மூர்த்தி சொல்லிவிட்டார். அதற்கு முன்பு கொடுக்க வேண்டிய இடங்களுக்கு இவர்தான் போக வேண்டும். 

ஹாலில் டிவி அலற ஆரம்பித்தது. மணி பதினொன்றரை என அர்த்தம். மூர்த்தியின் அப்பா நடராஜன் ஹாலில் வந்து உட்கார்ந்து வரிசையாக சீரியல்களை ஒன்றரை மணி வரைக்கும் பார்ப்பார். ஐந்து வருடங்களுக்கு முன்பு ஊரில் அம்மா இறந்த பிறகு தனியாய் இருந்த அப்பாவை மூர்த்தி தன்னோடு இந்த வீட்டிற்கு அழைத்துக் கொண்டார். சர்க்கரை நோயாளி நடராஜனுக்கு எல்லாம் காலம் தவறாமல் நடக்க வேண்டும். அவரோடு சேர்ந்து சந்திராவும் இடையிடையே சீரியல்களை பார்ப்பது வழக்கமாகிவிட்டது. தெருவுக்கே கேட்கும்படி சத்தம் வைத்து கேட்பதுதான் பிடிக்காது. மூர்த்தியிடம் எத்தனையோ தடவை சொல்லிப் பார்த்து விட்டார். 

“விடும்மா... வயசானவரு. என்ன செய்ய?” என மூர்த்தி சமாளித்தார். ஹியரிங் எய்டு மாட்டி  விடலாம் என ஒரு நல்ல செய்தியை சொல்லவும் செய்தார். இன்று வரை நிறைவேற்றவில்லை. 

“தாத்தாவை ஒருதடவை சென்னைக்கு கூட்டிட்டு வாம்மா. அவங்களுக்கு செக்-அப் செய்து ஹியரி்ங் எய்டு மாட்டிரலாம்” நிச்சயதார்த்தத்தின் போது வந்த நரேன் சொல்லியிருந்தான். பேரனுக்கு தன் மீது எவ்வளவு பாசம் என்று நடராஜன்  பெருமை கொள்ள, சந்திராவோ தனக்காகத்தான் இதை மகன் யோசித்திருக்கிறான் என அதை ரசித்துக்கொண்டார். 

இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. டீச்சராயிருக்கும் மூர்த்தி ரிடையர் ஆவதற்கு மூன்று வருடங்கள் போல இருக்கின்றன. பிறகு நரேனோடு சென்னையில் தங்குவதற்கு சந்திராவும், மூர்த்தியும் திட்டமிட்டு இருந்தனர். நடராஜனையும் அழைத்துச் செல்வது சரியாய் வராது. இப்போது இரண்டு மணி நேரத்தில் தனது சொந்த ஊருக்குச் சென்று வர முடிகிற அவரும் சென்னையில் வந்து தங்குவதற்கு சம்மதிக்க மாட்டார்தான். அவரை எங்கு தங்க வைப்பது என யோசிக்க வேண்டும். 

மூர்த்திக்கு இரண்டு தங்கைகளும், ஒரு அண்ணனும் இருக்கிறார்கள். தங்கைகள் கல்யாணம் கட்டி வேறு வேறு ஊர்களில் வசிக்கிறார்கள். எதாவது விசேஷம் அல்லது பண்டிகைக்கு போய் வரலாம். அவர்கள் வீட்டிலேயே நடராஜனை இருக்க வைக்க முடியாது. அது சரியும் அல்ல. அவனது அண்ணன் விவேகானந்தன் பக்கத்து ஊரில்தான் டெபுடி தாசில்தாராய் இருந்து ரிடையர் ஆகியிருக்கிறார். அவரது மனைவி அன்னபூரணி  வாத நோயால் நடப்பதற்கே அவஸ்தைப்படுகிறார்.  

“யம்மா, சந்திரா, சூடா ஒரு டீ போட்டுத் தர்றியாம்மா?” கேட்டார் நடராஜன். 

“இதோ வர்றேன் மாமா” படுக்கையறையிலிருந்து எழுந்து சென்றார். ஹாலைக் கடக்கும்போது, “என்ன மாமா, அந்த மாப்பிள்ளைப் பையன் காணாமப் போனானே, கண்டு பிடிச்சிட்டாங்களா?” கேட்டார். 

“இல்லம்மா, ஒரு வாரமா இழுத்துட்டு இருக்கான். இன்னைக்காவது கண்டுபிடிச்சிருவான்னு நினைக்கேன்”  அலுத்துக்கொண்டார். 

“அப்புறம் ஏன் தாத்தா இந்த சீரியலை விழுந்து விழுந்து பாக்குறீங்க?” நரேன் இருந்தால் தாத்தாவை கிண்டலடித்து இருப்பான். 

“ஊர்லயிருந்தாலாவது தெரிஞ்சவங்களைப் பாத்துப் பேசிட்டு இருப்பேன். இங்க யாரைத் தெரியும். இந்த சீரியல்தாண்டா தாத்தாவுக்கு பொழுது போக்கு” சொல்லும்போது மாமாவைப் பார்த்தால் பாவம் போல இருக்கும் சந்திராவுக்கு.  

நடராஜனுக்கு டீ கொடுத்துவிட்டு சோபாவில் உட்கார்ந்து  தானும் சீரியல் பார்க்க ஆரம்பித்தார். மொபைல் அழைத்தது. எடுத்துப் பார்த்தார். நரேன். 

“என்னக் கண்ணா, இந்த நேரம்?” என எழுந்து, கதவைத் திறந்து வெளியே சென்றார். காம்பவுண்டுக்குள்ளிருந்த வேப்ப மர நிழலில் நின்று கொண்டார். 

“என்ன நினைச்சுக்கிட்டு இருக்கிறா பூங்குழலி?” கோபமாக கேட்டான். ஆபிஸில் இருக்கும்போது அவன் குரல் காதுக்குள் ரகசியம் சொல்வது போலத்தான் இருக்கும். இப்படி அதிர்ந்து பேசியதில்லை. 

“என்னப்பா, என்னாச்சு?” 

“இதுவரை பார்க்காமல் மிஸ் பண்ணி இருந்த குயின் படத்த நேத்து பாத்தாளாம். அதைச் சொல்லிட்டு  ‘குயின் இஸ் ரைட், கிங் இஸ் ராங்’ என்று ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போட்டுருக்கா” 

“அதுக்கு ஏண்டா நீ டென்ஷன் ஆகுற?” 

“அம்மா, அது ஒரு இந்திப்படம். ரெண்டு பேருக்கு எங்கேஜ்மெண்ட் ஆகும். ஆனா பிரிஞ்சிருவாங்க. கதையை முழுசா அப்புறம் சொல்றேன். எங்க ரெண்டு பேருக்கும் நிச்சயம் ஆகி ஒரு வாரம்தான் ஆகியிருக்கு. அதுக்குள்ள இப்படி ஒரு ஸ்டேட்டஸ் போட்டா என்ன அர்த்தம். என்னோட ஃபிரண்ட்ஸ் என்னாச்சுன்னு கேக்குறாங்க.” 

“சரிடா. அந்தப் படத்தைப் பத்தி சொல்லியிருக்கா. இதுல என்ன தப்பு. அவ கிட்டேயே அப்புறம் கேட்டுருவோம். விடு. இதெல்லாம் சின்ன விஷயம்.” 

“உங்களுக்கு புரியல. படம் வந்து மூனு வருசம் கழிச்சு, இவளுக்கு எங்கேஜ்மெண்ட் ஆன சமயம்  பாத்து ஏன் எழுதணும். எதோ ஹிண்ட் பண்ற மாதிரி இருக்கு” போனை வைத்துவிட்டான். 

(தொடரும்)


(function(d,e,s){if(d.getElementById("likebtn_wjs"))return;a=d.createElement(e);m=d.getElementsByTagName(e)[0];a.async=1;a.id="likebtn_wjs";a.src=s;m.parentNode.insertBefore(a, m)})(document,"script","//w.likebtn.com/js/w/widget.js");
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 11, 2022 20:36

தொடர்பு எல்லைக்கு வெளியே - 3 (தொடர் கதை)




மூர்த்தி பள்ளிக்குச் சென்று விட்டார். வீடு அமைதியாய் இருந்தது. நேற்றிரவு அவர் கொண்டு வந்த நிச்சயதார்த்த ஆல்பத்தைத் திரும்பவும் பார்த்துக்கொண்டு இருந்தார் சந்திரா. ”மாயநதி இன்று மார்பில் வழியுதே… தூய நரையிலும் காதல் மலருதே….” தன்னையுமறியாமல் லேசாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தார். மாநிறம் என்றாலும் நரேன் முகத்தில் தனிக் களை தெரிந்தது. அவனும் பூங்குழலியும் வெட வெடவென இருந்தார்கள்.  கொஞ்சம் பூசினாற்போல் இருந்தால் எடுப்பாக இருக்கும் எனத் தோன்றியது. கல்யாணத்துக்குப் பிறகு ஒரு சுற்று எப்படியும் பருத்து விடுவார்கள். தானும் கல்யாணத்தின்போது இதைவிட ஒல்லியாக இருந்தவள்தானே என நினைத்துக்கொண்டார். 

ஆரம்பத்தில் மூர்த்தி “ஒல்லிப் பாச்சான்”, “ஒல்லிப் பாச்சான்” என்றுதான்  இவரை அழைத்துக் கொண்டிருந்தார்.  முதல் இரண்டு நாட்கள் அதைச்  செல்லமென நினைத்து ரசித்தாலும், தொடர்ந்து எல்லோர் முன்னாலும் அப்படி சொல்ல ஆரம்பித்தது பிடிக்காமல் போனது. இது என்ன “ஒல்லிப் பாச்சான்” என வெறுப்பு வந்தது. ஒருபோதும் மூர்த்தியிடம் சொன்னது இல்லை. முகத்தைக்கூட காட்டியதில்லை. அம்மாவிடம் வருத்தப்பட்ட போது, “அப்படித்தான் இருப்பாங்க. பொறுமையா இரு. மெல்ல மெல்லதான் வழிக்குக் கொண்டு வரணும்” என தேற்றினார். 

பூங்குழலியோ நிச்சயதார்த்தம் அன்றைக்கு இவர்கள் வாங்கிக்கொண்டு போன மோதிரத்தை பார்த்துவிட்டு, “ஒ.கேதான் ஆன்ட்டி.  இன்னும் கொஞ்சம் வேற பேட்டர்ன்ல பாத்திருக்கலாம்” என சட்டென சொன்னது முகத்தில் அடித்தது போலிருந்தது. மூர்த்திக்கும் ஒருமாதிரியாகி விட்டது. பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. கலகலவென எல்லோரிடமும் சந்தோஷம் நிரம்பி இருந்தது அப்போது. இந்த ஒரு வாரம் முழுக்க அதுவே நினைப்பாகி இருந்தது. 

எதிர்பார்த்ததை விட நிச்சயதார்த்தம் தடபுடலாக இருந்தது. மண்டபம் பிடித்து ஒரு கல்யாணம் போல பூங்குழலியின் தாத்தா பூசைப்பழம் ஏற்பாடு செய்திருந்தார். நரேனோடு இங்கிருந்து சந்திரா, மூர்த்தியின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும், பக்கத்து வீட்டுக்காரர்கள் என இரண்டு வேனில் மொத்தம் நாற்பது பேர் போல சென்றிருந்தார்கள். அங்கேயோ மொத்த ஊரையும் கூட்டி வைத்திருந்தார்கள். இவர்களை அப்படி ஒரு மரியாதையோடு  முருகேசன் கவனித்தார். 

பூங்குழலியின் அண்ணன் கலைச்செல்வன், அவன் மனைவி  சரண்யா, மகள் யாழினியோடு நேரே மண்டபத்துக்கு வந்திருந்தான். நரேனோடு ஆசையாகப் பேசிக்கொண்டு இருந்தான். பூங்குழலியின் அப்பா ரவிச்சந்திரனின் கூடப்பிறந்த அண்ணன்கள் உதயச்சந்திரன், பாலச்சந்திரன், சித்ராவின் தங்கைகள் அமுதா,  விமலா எல்லோரும் குடும்பத்தோடு வந்து கலந்து கொண்டனர். அவர்கள் யாருமே கலைச்செல்வனிடம் முகம் கொடுத்து பேசவில்லை என்பது தெரிந்தது. 

ரவிச்சந்திரனின் தந்தை சபாபதி தாம்பூலம் மாற்றும் போது மேடையேறி குடும்பத்தின் தலைவராக வீற்றிருந்தார். எல்லோரையும் சந்திராவுக்கும், மூர்த்திக்கும்  பூசைப்பழம் அறிமுகம் செய்து வைத்தார். “எங்க பொண்ணு. நல்லா வச்சுக்குங்க” என்று மட்டும் சபாபதி சொன்னார். அவரது சாயல் அப்படியே பூங்குழலியிடம் இருந்தது. 

மயில் கழுத்து நிறத்தில் நிச்சயதார்த்தப் புடவை பிரமாதமாக இருந்தது. நரேன் கோட் சூட் போட்டிருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும். ஏன் அது தோன்றாமல் போய்விட்டது என சந்திரா வருத்தப்பட்டாள். பூங்குழலியின் கைகளில் மோதிரம் அணியும் காட்சி ஜம்மென்று வந்திருந்தது. இருவரும் அழகாக சிரித்துக் கொண்டிருந்தார்கள்.  மொபைலில் அதைப் படம் பிடித்து வாட்ஸ்-அப்பில் நரேனுக்கும், பூங்குழலிக்கும் ‘சூப்பர்’  என அனுப்பினாள்.  

தலைவிரி கோலமாய் பைத்தியம் போல இருந்த அந்தப் பெண் உள்ளே நுழைந்ததைத் தவிர எல்லாம் நன்றாக நடந்தது. வந்தவர்கள் மேடையேறி மணமக்களோடு நின்று போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். அப்படியொரு நிலையில் வந்தவரை கவனித்து,  யாரிது என யோசிப்பதற்குள் மேடையருகே நெருங்கிவிட்டிருந்தார். ஒரே சலசலப்பாகி விட்டது. முருகேசன்  விறுவிறுவென சென்று கடுங்கோபத்துடனும் அருவருப்புடனும் “ச்சீ.... போ வெளியே” என சத்தம் போட்டார். அந்தப் பெண் எதோ முனகிக்கொண்டு திரும்பவும் மேடை நோக்கியே வந்தார்.  கோபத்துடன் அவரைப் பிடித்து முருகேசன் இழுக்கவும் தடுமாறிக் கிழே விழுந்தார். “ஏ...யென் ராசா...!” என தரையில் அடித்து கதறி அழ ஆரம்பித்தார். கலைச்செல்வன்தான் ஓடிப்போய், தூக்கி கைத்தாங்கலாக வெளியே அழைத்துச் சென்றான்.  

பூசைப்பழம் முதற்கொண்டு அனைவரும் வெலவெலத்துப் போயிருந்தனர். அந்தப் பெண் போன திசையில் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார் சபாபதி. நின்று கொண்டிருந்த பூங்குழலி மேடையிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். சித்ரா  அந்த இடத்தை விட்டு அகன்று மணமகள் அறைக்குள் நுழைந்து கொண்டார். சந்திராவும் மூர்த்தியும் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்கள். முருகேசன் திரும்ப வந்து எல்லோரையும் பந்திக்கு சாப்பிட அழைத்து அந்த இடத்தை வேறு மனநிலைக்குக் கொண்டு வந்தார். 

கொஞ்ச நேரம் கழித்து சித்ராவிடம் மெல்ல கேட்டபோது, “அது கெடக்கு பைத்தியம்.”  என்று மட்டும் சொல்லி நிறுத்திக் கொண்டார். பூங்குழலியோ, “எங்க அப்பாவைக் காதலிச்சிருக்காங்க. பேரு கல்யாணி. இன்னும் அவங்க நெனைப்பாகவே இருக்காங்க. கல்யாணாமே பண்ணிக்கல.” என்று நரேனிடம் சொல்லியிருக்கிறாள். 

‘டொக்...டொக்’ என வாட்ஸ்-அப்பில் மெசெஜ் வரும் சத்தம் கேட்டது. எடுத்துப் பார்த்தாள். “வித் ஆல் யுவர் பிளஸ்ஸிங்ஸ் அன்ட் விஷ்ஷஸ்” நரேன் அனுப்பியிருந்தான். சந்தோஷமாய் இருந்தது. அவன் எது செய்தாலும் அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் தெரியும். இவர்களது சொந்த பந்தங்களில், நரேனுக்கு அவன் அம்மா மீது இருக்கும் அன்பு விசேஷமாகப் பேசப்படக்கூடிய ஒன்று. 

அவனுக்கு ஒன்றரை வயது நடக்கும்போது ஒருநாள் சந்திரா தனது அக்காவின் மகனை ஆசையோடு தூக்கி வைத்திருந்தார். விளையாடிக்கொண்டிருந்த நரேன் அருகில் வந்து தேம்பித் தேம்பி அழுதான். முதலில் எதற்கு என்று தெரியவில்லை. அந்தப் பையனை இடுப்பில் இருந்து இறக்கிவிட்டு நரேனைத் தூக்கியதும் அழுகையை நிறுத்தினான். தன்னைத் தூக்குவதற்குத்தான் அழுதிருக்கிறான் என நினைத்துக் கொண்டார்கள்.  திரும்பவும் ஒருமுறை அது போல அக்காவின் மகனைத் தூக்கியதும், ஓடி அருகில் வந்து நரேன் அதேபோல் துடித்து அழுதான். தன்னைத் தவிர வேறு யாரையும் அம்மா தூக்கினால் பிடிக்காமல் அழுகிறான் என்பது அப்போதுதான் தெரிந்தது. சந்திராவின் அக்கா அதை இப்போதும் சொல்வார். 

சரியாக அந்த சமயத்தில்  சந்திரா திரும்பவும் உண்டாகியிருந்தார். அப்போது குழந்தை  வேண்டாம்  எனத் தோன்றியது. வீட்டில் இவரே ஒரு முடிவெடுத்ததும் அப்போதுதான். மூர்த்தி எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். “இல்லைங்க, நரேன் வளரட்டும். பார்த்துக் கொள்வோம்” என  அதை மறுத்ததும் அப்போதுதான். பிடிவாதமாய் கருவைக் கலைத்துக் கொண்டார். மொத்தக் குடும்பத்திற்கும் அதில்  வருத்தம் இருந்தது. சந்திராவின் அம்மா ஆஸ்பத்திரி வந்து வாய்விட்டு அழுதார். 

பிறகு சந்திரா உண்டாகவேயில்லை. மூர்த்தி சில சமயங்களில் சொல்லிக் காட்டியிருக்கிறார். வேதனையில் உள்ளுக்குள் துடித்தாலும், “பரவாயில்லை. எல்லாம் நரேனுக்காகத்தானே. அவன் போதும் எனக்கு.” என சமாளித்துக் கொள்வார். நரேனைப் பார்த்து எல்லாம் மறந்து முகம் மலர்வார். அவன் ஒருபோதும் ஏங்கிப் போய்விடக் கூடாது என பார்த்துப் பார்த்து கவனிப்பார். வெளியே சென்று விட்டால் வீடு திரும்பும் வரை அவன் நினைப்போடுதான் காத்திருப்பார். 

“ரொம்ப செல்லம் கொடுக்குற. கவலப்படுற. இது சரியில்ல.”  மூர்த்தி  எத்தனையோ தடவை எச்சரித்திருக்கிறார். 

அது பற்றிக் கவலைப் பட்ட மாதிரியேத் தெரியாது. அவன் பத்தாவது வகுப்பில் நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணிய போது மூர்த்தியிடம், “இவனுக்கு என்று ஒருத்தி பிறந்திருப்பாள்தானே. அவள் இப்போது எந்த வகுப்பு பாஸ் பண்ணியிருப்பாள்” கேட்டார் சந்திரா. 

“உனக்கென்ன பைத்தியமா.  உன் கற்பனையையெல்லாம் உன்னோட வச்சுக்க” மூர்த்தி கடுமையாக எரிந்து விழுவார். சந்திரா சிரித்துக் கொள்வார். 

அன்றைக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து, கல்யாணத் தேதி முடிவு செய்து சாப்பிட்டு விட்டுக் கிளம்பும்போது பூங்குழலி அருகில் சென்று, “எம் பையனுக்கு ஒரு தேவதையை கற்பனை செஞ்சு வச்சிருந்தேன். அந்த தேவதைக்கு இன்னிக்கு நீ முகம் கொடுத்துட்ட..” கையைப் பிடித்து நெகிழ்ந்தார். 

“அப்படியா” என ஆச்சரியத்துடன் கண்களை விரித்து, “ஸோ நைஸ் ஆன்ட்டி...” என சிரித்தாள் பூங்குழலி. 

“எம்மருமகா எவ்வளவு அழகாச் சிரிக்கிறா..” சந்தோஷமடைந்து, பூங்குழலியைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். அவளது மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டார். 

தான் அனுப்பிய படத்துக்கு வாட்ஸ்-அப்பில் எந்தப் பதிலும் அவளிடமிருந்து இன்னும் வரவில்லை என்று எண்ணிக்கொண்டார். ஆபிஸில் வேலை அதிகமோ என்னவோ என மொபைலை எடுத்துப் பார்த்தார். அந்தப் படம் பார்க்கப்பட்டு விட்டது என்பதை நீலக்கலரில் இரண்டு ‘டிக்’ காட்டியது. மரியாதைக்காவது ஒரு மெஸேஜ் அனுப்பியிருக்கலாமே எனத் தோன்றியது. 

போன் நம்பரை வாங்கி வந்த பிறகு, அடுத்தநாள் இவர்தான் பூங்குழலியை அழைத்து நிச்சயதார்த்தம் குறித்து சந்தோஷமாக பகிர்ந்து கொண்டார். ஞாயிற்றுக்கிழமை போன் செய்து, “எப்போது சென்னை செல்கிறாய், எப்படிச் செல்கிறாய்” கேட்டுக் கொண்டார். மூர்த்தியிடமும், நரேனிடமும் மொபைலைக் கொடுத்து பேசச் சொன்னார். சென்னை சென்ற பிறகு போன் செய்து “பயணம் எப்படியிருந்தது” விசாரித்துக் கொண்டார். அன்றிரவு வாட்ஸ்-அப்பில் ‘குட்நைட்’ சொன்னார். பூங்குழலியும்  பதிலுக்கு, ‘குட்நைட் ஆன்ட்டி’ சொல்லியிருந்தாள். ஒருதடவை கூட அவளாக அழைத்துப் பேசியதில்லை. 

அன்றைக்கும் அப்படித்தான்.  பூங்குழலி இப்போதான் சென்னையில இருந்து வந்திருக்கிறாள் என்று பேசிக்கொண்டிருந்த சித்ரா சொன்னதும், “அவக்கிட்ட கொடுங்க” என்று இவர் சொன்னபோது, போனை வாங்கி பூங்குழலி தொடர்பை துண்டித்து விட்டாள். 

கல்யாணம், தனக்கு வரப்போகிறவன், அவர்களது குடும்பம் பற்றியெல்லாம் எதாவது யோசிப்பாளா இந்தப் பெண் பூங்குழலி என்றிருந்தது. மூர்த்தியின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை பார்த்துக்கொண்டு எவ்வளவோ கனவுகள் கண்டிருந்தார் சந்திரா. நடிகர் மோகன் போல மூர்த்தி இருப்பதாக நினைத்து உருகியிருக்கிறார். ‘சாலையோரம் சோலையொன்று ஆடும், சங்கீதம் பாடும்’ பாடல் எங்காவது கேட்டுவிட்டால் போதும் சிலிர்த்துப் போவார். தூங்கும்போது, குளிக்கும்போது, வீட்டுக்குப் பின்னால் மாமர நிழலில் நிற்கும்  போது, அடுப்பு முன்னால் உட்கார்ந்திருக்கும் போது, அவித்த நெல்லின் வாசம் பிடித்தபடி அதை பனம்பாயில் போட்டு வெயிலில் காய வைக்கும் போது மூர்த்தி்யின் ஞாபகங்களே அசைந்தாடிக்கொண்டு இருக்கும். சொந்த பந்தங்களும், தெரிந்தவர்களும், தோழிகளும் ஊரில் சும்மாவா இருந்தார்கள். எங்கே போனாலும், நின்றாலும், “புதுப்பொண்ணு” என்று வாஞ்சையோடு அழைக்க , வெட்கம் அப்பிக்கொள்ள மயங்கித் திரிந்த  காலங்கள் அவை. 

“ஏ... சந்திரா! மாப்பிள்ளையோட அப்பா அவங்க வீட்ல அடித்த பத்திரிகையை கொண்டு வந்திருக்காங்க..” அம்மா அழைத்ததும் தோட்டத்து கிணற்றடியில் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தவள் அவசரமாய் எழுந்து  ஓடி உரலில் இடித்துக் கொண்டார்.  முட்டியில் கடுமையாய் வலி எடுத்தாலும் மெதுவாய் நொண்டிக்கொண்டு வாசலருகே வந்து, “வாங்க மாமா!” என கும்பிட்டார். மூர்த்தியோடு சம்பந்தப்பட்டவர்களை பார்ப்பதிலும், பழகுவதிலுமே பொங்கிய ஆர்வம் அது. அந்த கல்யாணப் பத்திரிகையை எடுத்து வைத்துக்கொண்டு தன் பெயரையும், மூர்த்தியின் பேரையும் சேர்த்துப் பார்த்ததில், படித்ததில்  எவ்வளவு சந்தோஷம் இருந்தது. அப்படியெல்லாம் கொஞ்சம் கூட  உணர்வுகள் இல்லாமல் பூங்குழலி இருக்கிறாளே என்று தவித்தார். 

சித்ராவும், பத்மாவதி அம்மாளும் இந்த மூன்று நாட்களில் அவர்களாகவே இரண்டு தடவை பேசிவிட்டார்கள். ஜவுளி எடுக்க சென்னைக்குப் போகலாம் என்றும், ஒரு சனிக்கிழமை புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை நரேனையும், பூங்குழலியையும் அழைத்துக் கொள்ளலாம் என்றும் சொன்னார்கள். நல்ல யோசனையாய் இருந்தது. இருவரும் சேர்ந்து வாழ சென்னையில் வீடு பார்க்க வேண்டியிருந்தது. இந்த மாதத்தில் பனிரெண்டு, அடுத்த மாதத்தில் இருபத்து நான்குமாக இன்னும் முப்பத்தாறு நாட்கள்தான் கல்யாணத்துக்கு இருக்கின்றன. பத்திரிகை அடிக்கச் சொல்லியாகிவிட்டது. வந்தவுடன் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். கல்யாணத்துக்கு பத்து நாட்களுக்கு முன்பிருந்துதான் லீவு கிடைக்கும் என மூர்த்தி சொல்லிவிட்டார். அதற்கு முன்பு கொடுக்க வேண்டிய இடங்களுக்கு இவர்தான் போக வேண்டும். 

ஹாலில் டிவி அலற ஆரம்பித்தது. மணி பதினொன்றரை என அர்த்தம். மூர்த்தியின் அப்பா நடராஜன் ஹாலில் வந்து உட்கார்ந்து வரிசையாக சீரியல்களை ஒன்றரை மணி வரைக்கும் பார்ப்பார். ஐந்து வருடங்களுக்கு முன்பு ஊரில் அம்மா இறந்த பிறகு தனியாய் இருந்த அப்பாவை மூர்த்தி தன்னோடு இந்த வீட்டிற்கு அழைத்துக் கொண்டார். சர்க்கரை நோயாளி நடராஜனுக்கு எல்லாம் காலம் தவறாமல் நடக்க வேண்டும். அவரோடு சேர்ந்து சந்திராவும் இடையிடையே சீரியல்களை பார்ப்பது வழக்கமாகிவிட்டது. தெருவுக்கே கேட்கும்படி சத்தம் வைத்து கேட்பதுதான் பிடிக்காது. மூர்த்தியிடம் எத்தனையோ தடவை சொல்லிப் பார்த்து விட்டார். 

“விடும்மா... வயசானவரு. என்ன செய்ய?” என மூர்த்தி சமாளித்தார். ஹியரிங் எய்டு மாட்டி  விடலாம் என ஒரு நல்ல செய்தியை சொல்லவும் செய்தார். இன்று வரை நிறைவேற்றவில்லை. 

“தாத்தாவை ஒருதடவை சென்னைக்கு கூட்டிட்டு வாம்மா. அவங்களுக்கு செக்-அப் செய்து ஹியரி்ங் எய்டு மாட்டிரலாம்” நிச்சயதார்த்தத்தின் போது வந்த நரேன் சொல்லியிருந்தான். பேரனுக்கு தன் மீது எவ்வளவு பாசம் என்று நடராஜன்  பெருமை கொள்ள, சந்திராவோ தனக்காகத்தான் இதை மகன் யோசித்திருக்கிறான் என அதை ரசித்துக்கொண்டார். 

இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. டீச்சராயிருக்கும் மூர்த்தி ரிடையர் ஆவதற்கு மூன்று வருடங்கள் போல இருக்கின்றன. பிறகு நரேனோடு சென்னையில் தங்குவதற்கு சந்திராவும், மூர்த்தியும் திட்டமிட்டு இருந்தனர். நடராஜனையும் அழைத்துச் செல்வது சரியாய் வராது. இப்போது இரண்டு மணி நேரத்தில் தனது சொந்த ஊருக்குச் சென்று வர முடிகிற அவரும் சென்னையில் வந்து தங்குவதற்கு சம்மதிக்க மாட்டார்தான். அவரை எங்கு தங்க வைப்பது என யோசிக்க வேண்டும். 

மூர்த்திக்கு இரண்டு தங்கைகளும், ஒரு அண்ணனும் இருக்கிறார்கள். தங்கைகள் கல்யாணம் கட்டி வேறு வேறு ஊர்களில் வசிக்கிறார்கள். எதாவது விசேஷம் அல்லது பண்டிகைக்கு போய் வரலாம். அவர்கள் வீட்டிலேயே நடராஜனை இருக்க வைக்க முடியாது. அது சரியும் அல்ல. அவனது அண்ணன் விவேகானந்தன் பக்கத்து ஊரில்தான் டெபுடி தாசில்தாராய் இருந்து ரிடையர் ஆகியிருக்கிறார். அவரது மனைவி அன்னபூரணி  வாத நோயால் நடப்பதற்கே அவஸ்தைப்படுகிறார்.  

“யம்மா, சந்திரா, சூடா ஒரு டீ போட்டுத் தர்றியாம்மா?” கேட்டார் நடராஜன். 

“இதோ வர்றேன் மாமா” படுக்கையறையிலிருந்து எழுந்து சென்றார். ஹாலைக் கடக்கும்போது, “என்ன மாமா, அந்த மாப்பிள்ளைப் பையன் காணாமப் போனானே, கண்டு பிடிச்சிட்டாங்களா?” கேட்டார். 

“இல்லம்மா, ஒரு வாரமா இழுத்துட்டு இருக்கான். இன்னைக்காவது கண்டுபிடிச்சிருவான்னு நினைக்கேன்”  அலுத்துக்கொண்டார். 

“அப்புறம் ஏன் தாத்தா இந்த சீரியலை விழுந்து விழுந்து பாக்குறீங்க?” நரேன் இருந்தால் தாத்தாவை கிண்டலடித்து இருப்பான். 

“ஊர்லயிருந்தாலாவது தெரிஞ்சவங்களைப் பாத்துப் பேசிட்டு இருப்பேன். இங்க யாரைத் தெரியும். இந்த சீரியல்தாண்டா தாத்தாவுக்கு பொழுது போக்கு” சொல்லும்போது மாமாவைப் பார்த்தால் பாவம் போல இருக்கும் சந்திராவுக்கு.  

நடராஜனுக்கு டீ கொடுத்துவிட்டு சோபாவில் உட்கார்ந்து  தானும் சீரியல் பார்க்க ஆரம்பித்தார். மொபைல் அழைத்தது. எடுத்துப் பார்த்தார். நரேன். 

“என்னக் கண்ணா, இந்த நேரம்?” என எழுந்து, கதவைத் திறந்து வெளியே சென்றார். காம்பவுண்டுக்குள்ளிருந்த வேப்ப மர நிழலில் நின்று கொண்டார். 

“என்ன நினைச்சுக்கிட்டு இருக்கிறா பூங்குழலி?” கோபமாக கேட்டான். ஆபிஸில் இருக்கும்போது அவன் குரல் காதுக்குள் ரகசியம் சொல்வது போலத்தான் இருக்கும். இப்படி அதிர்ந்து பேசியதில்லை. 

“என்னப்பா, என்னாச்சு?” 

“இதுவரை பார்க்காமல் மிஸ் பண்ணி இருந்த குயின் படத்த நேத்து பாத்தாளாம். அதைச் சொல்லிட்டு  ‘குயின் இஸ் ரைட், கிங் இஸ் ராங்’ என்று ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போட்டுருக்கா” 

“அதுக்கு ஏண்டா நீ டென்ஷன் ஆகுற?” 

“அம்மா, அது ஒரு இந்திப்படம். ரெண்டு பேருக்கு எங்கேஜ்மெண்ட் ஆகும். ஆனா பிரிஞ்சிருவாங்க. கதையை முழுசா அப்புறம் சொல்றேன். எங்க ரெண்டு பேருக்கும் நிச்சயம் ஆகி ஒரு வாரம்தான் ஆகியிருக்கு. அதுக்குள்ள இப்படி ஒரு ஸ்டேட்டஸ் போட்டா என்ன அர்த்தம். என்னோட ஃபிரண்ட்ஸ் என்னாச்சுன்னு கேக்குறாங்க.” 

“சரிடா. அந்தப் படத்தைப் பத்தி சொல்லியிருக்கா. இதுல என்ன தப்பு. அவ கிட்டேயே அப்புறம் கேட்டுருவோம். விடு. இதெல்லாம் சின்ன விஷயம்.” 

“உங்களுக்கு புரியல. படம் வந்து மூனு வருசம் கழிச்சு, இவளுக்கு எங்கேஜ்மெண்ட் ஆன சமயம்  பாத்து ஏன் எழுதணும். எதோ ஹிண்ட் பண்ற மாதிரி இருக்கு” போனை வைத்துவிட்டான். 

(தொடரும்)


(function(d,e,s){if(d.getElementById("likebtn_wjs"))return;a=d.createElement(e);m=d.getElementsByTagName(e)[0];a.async=1;a.id="likebtn_wjs";a.src=s;m.parentNode.insertBefore(a, m)})(document,"script","//w.likebtn.com/js/w/widget.js");
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 11, 2022 20:36

January 7, 2022

க்ளிக் - 2 (தொடர்கதை)




நேற்றிலிருந்து நரேனும் பேஸ்புக்கில் இவளது நண்பனாகி இருந்தான்.. படிப்பு, வேலை தவிர அவனைப் பற்றி தெரிந்து கொள்ள விபரங்கள் எதுவுமில்லை.  சென்ற மாதம் அவனுக்கு நான்கைந்து நண்பர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லியிருந்தார்கள். எட்டு மாதங்களுக்கு முன்பு புது பைக் வாங்கியவுடன் அதில் உட்கார்ந்து ஒரு ஸ்டேட்டஸ் போட்டு இருந்தான்.  அவ்வளவுதான். 

நேரில் பார்க்கும்போது இருந்ததைவிட புரோபைல் படத்தில் சுமாராகத்தான் இருந்தான். இரண்டு வாரத்துக்கு முன்பு திருவேற்காடு கோவிலில் வைத்து நரேனை பார்த்திருந்தாள். ஊரிலிருந்து தாத்தா, பாட்டி அம்மா எல்லோரும் சென்னை வந்து இவளை  அழைத்துச் சென்றார்கள். நரேனின் அம்மா சந்திராவும் அப்பா மூர்த்தியும் வந்திருந்தார்கள். நரேன் அவர்களுக்கு ஒரே பையன். தன்னை விட கொஞ்சம் உயரமிருப்பான் எனத் தோன்றியது. தனியாக பேச வேண்டும் என  அழைத்து கோவிலில் அமைதியாக இருந்த ஒரு இடத்தில் போய் நின்றான் அவன். தமிழ்ச்சினிமா காட்சி போல இருந்தது இவளுக்கு. சிரிப்பு வந்தது. அடக்கிப் பார்த்தாள். கவனித்து விட்டான். 

"என்ன..?"  என்றான். அவன் கண்களை உற்றுப் பார்த்து நெற்றியில் சிறு சுருக்கங்கள் விழ புன்னகைத்துக் கொண்டே ஒன்றுமில்லை என்பதாய் தலையசைத்தாள். அவனால் அவள் கண்களை தொடர்ந்து பார்க்க முடியவில்லை. இலக்கு இல்லாமல் தூரத்தில் பார்த்துவிட்டு, மீண்டும் அவளை நோக்கினான். அதுவும் கூட சினிமா போலவே இருந்தது. என்ன கேட்கப் போகிறான் என்பது தெரிந்தது. அதைக் கேட்டு விடாமல் வேறெதாவது பேச மாட்டானா என்றிருந்தது. 

அதையேத்தான் கேட்டான். "என்னைப் பிடிச்சிருக்கா?". 

'ஐயோ!' என உள்ளுக்குள் அரற்றிக்கொண்டு பொதுவாய் புன்னகைத்தாள். 

விடவில்லை. "என்னைப் பிடிச்சிருக்கான்னு கேட்டேன்" 

"இன்னைக்குத்தான் உங்களைப் பாக்குறேன். உடனேப் பிடிச்சிருக்குன்னு சொல்ல முடியுமா?. போக போகத்தான் பிடிக்குது, பிடிக்கலைன்னு சொல்ல முடியும்?"  மனதில் பட்டதை சொல்லிவிட்டாள். 

அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. "ஆமாம், இல்ல...?" எனக் குளறினான். அசட்டுத்தனமாய் புன்னகைத்துக் கொண்டான். அமைதியானான். மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு  இவளும் நின்று பார்த்தாள். அவன் வேறெதுவும் பேசுவதாய்த் தெரியவில்லை. 

அவனை இயல்புக்கு கொண்டு வரத் தோன்றியது. "நரேன் நமக்குள் ஃபார்மாலிட்டிஸ் தேவையில்லைன்னு நினைக்கிறேன். அட்டேச்மெண்ட் வரணும். அதுக்கு ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிறது முக்கியம். ஒருத்தர ஒருத்தர் மதிக்கிறது ரொம்ப முக்கியம். நம்ம ரெண்டு பேராலும் அது முடியும்னு நம்புறேன்." 

"நிச்சயமா..." என்றான். திரும்பவும் சிறிது நேரம் இருவரும் யோசித்துக்கொண்டு இருந்தார்கள். லேசாய் கனைத்துக்கொண்டு இவள் பக்கம் திரும்பி "எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு" என்று சிரித்தான். இவளும் சிரித்தாள். அப்போது அவனது பார்வை சில கணங்கள் இவளது மார்பில் நிலைத்து நகன்றதை  பார்த்தாள். 

கவனித்து விட்டாள் என்பதை அவனும் உணர்ந்தான். ஒரு மாதிரியிருந்தது. “உன்னுடைய விரல்கள் அழகாய் இருக்கு”  சம்பந்தமில்லாமல் சொன்னான். 

“அப்படியா! தாங்க்ஸ்..” சிரித்து வைத்தாள். 

இருவரும் பேசிக்கொண்டது அவ்வளவுதான். மற்றதையெல்லாம் அம்மா, பாட்டி, தாத்தா, நரேனின் அம்மா, அப்பா பேசினார்கள். நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறித்தார்கள். "என்னம்மா", "வாம்மா" என நரேனின் அப்பா மூர்த்தி இவளைக் கனிவோடு அழைத்துக்கொண்டு இருந்தார். நரேனின் அம்மா சந்திராவோ இவளது கைகளை அடிக்கடி பற்றிக்கொண்டார். பாட்டி பத்மாவதிக்கும், தாத்தா பூசப்பழத்துக்கும் அதில் சந்தோஷம். சித்ராவை மனநிறைவோடு பார்த்தார்கள். ஓட்டலில் சாப்பிட்டு விட்டு இரு குடும்பத்தாரும் அவரவர் கார்களில் புறப்பட்டார்கள். 

வழியில், “மாப்பிள்ளையோட அப்பாவும் அம்மாவும் பெருந்தன்மையானவங்க” என்றார் பூசைப்பழம்.  கலைச்செல்வனைப் பற்றி தெரிந்திருந்தாலும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றார். பணம் எதுவும் வேண்டாம், ஒங்க பொண்ணுக்கு எவ்வளவு நகை போட முடியுமோ அதை மட்டும் போடுங்கள், நாங்கள் ஒண்ணும் கேட்க மாட்டோம் என மூர்த்தி சொன்னதாகவும்,  நாங்களும் ஒரு குறையில்லாமச் செய்வோம் என்று பதிலுக்குச் சொன்னதாகவும் பேசிக்கொண்டு வந்தார். இவள் அமைதியாக இருந்தாள்.  

"ஏண்டி பூவு, உனக்கு மாப்பிள்ளைய பிடிச்சிருக்கா?" பத்மாவதி கேட்டார். இவள் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள்.  

"வாயத் தெறந்து பேசவே மாட்டா. மனசுக்குள்ள என்ன இருக்குன்னே தெரியாது"எரிந்து விழுந்தார்.  

பேத்தி அப்படி இருப்பது பிடிக்கவில்லையென்றாலும், " ஏம்மா, அவளச் சத்தம் போடுற. சின்னப் புள்ளை. வாயைத் தெறந்து இதையெல்லாம் சொல்லுவாளாக்கும்" பூசைப்பழம் சிரித்துக் கொண்டார்.  

ஹாஸ்டலில் இறங்கிக்கொண்டதும், "யம்மா பூவு! ஒங்கப்பா இறந்த பிறகு நம்ம குடும்பத்துல நடக்குற மொத நல்ல காரியம் இது. சித்ராவுக்கு உன்னாலாவது சந்தோஷம் கிடைக்கணும். இப்படியொரு மாப்பிள்ளையும், சம்பந்தியும் கிடைக்க நாம கொடுத்து வச்சிருக்கணும்." என்றார் பூசப்பழம்.  

"தாத்தா! ஒங்க எல்லாருக்கும் பிடிச்சிருந்தா எனக்கும் பிடிக்கும். போதுமா?" சொல்லிக்கொண்டே அம்மாவின் கன்னத்தில் ஜன்னல் வழியே எட்டி முத்தம் கொடுத்தாள். "பாத்துப் போங்க.” என்றாள்.  

“மேடவாக்கத்திலிருந்து அமுதா சித்தி, சித்தப்பா எல்லோரும் வியாழக்கிழமையே வர்றாங்களாம். ரெயிலில் புக் பண்ணிரலாம்னு சொன்னாங்க. நீயும் அவங்கக் கூட வாயேன்” பத்மாவதி சொன்னார்.  

“இல்ல பாட்டி. முன்கூட்டி வர்றதுக்கு லீவு கெடைக்குமான்னு தெரியல. எப்படியும் நிச்சயதார்த்தம் அன்னைக்கு வெள்ளிக்கிழமை காலைல வந்துருவேன். சனி ஞாயிறும் அங்க இருப்பேன். ஒகேவா? பை!" என கையசைத்தாள். அம்மாவின் கண்கள் தளும்புவதைப் பார்க்க முடியாமல் திரும்பி நடந்தாள்.  

அன்று இரவு அம்மாவுக்கு போன் செய்து, “அண்ணனும், அண்ணியும் கண்டிப்பா நிச்சயதார்த்ததுக்கு வருவாங்க. அதை மட்டும் வேண்டாம்னு சொல்லிராதீங்க”  என்று கேட்டுகொண்டாள்.  

“நாங்க யாரும் கூப்பிட மாட்டோம், நீ வேண்ணா உன் அண்ணனிடம் சொல்லிக்க.” சித்ரா சொன்னார். கலைச்செல்வனையும் அவன் குழந்தையையும் பார்க்க வேண்டும் என்று அம்மாவுக்கும் ஆசை இருப்பது தெரியும். தாத்தாவிடமும், பாட்டியிடமும்தான் பிடிவாதம் இன்னும் இருந்தது.  

கல்லூரியில் இரண்டாவது வருஷம் படித்துக்கொண்டிருந்த கலைச்செல்வனுக்கு கருணை அடிப்படையில் அப்பாவின் வங்கி வேலை கிடைத்தது. துக்கம் சுமந்த அந்தக் குடும்பத்திற்கு ஒரு ஆறுதலாய் இருந்தது. மதுரையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த கலைச்செல்வன் வாரா வாரம் வந்து போய்க்கொண்டு இருந்தான். ஒவ்வொருமுறை வரும்போதும் இவளுக்கு எதாவது வாங்கி வருவான். படிப்புச் செலவுக்கு தன்னால் ஆனதைக் கொடுத்துக்கொண்டு இருந்தான். இரண்டாவது வருட கல்லூரி லீவில் இவள் வீட்டிற்கு வந்திருந்த சமயம், கலைச்செல்வனும் வழக்கம்போல் சனிக்கிழமை வந்திருந்தான்.  ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் கிளம்புகிற நேரத்தில்,  தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அவளைக் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் சொன்னான். யார் என்ன என்றெல்லாம் விசாரித்துவிட்டு பத்மாவதியும், பூசைப்பழமும் கத்தினார்கள். சித்ரா சுவற்றில் முட்டிக்கொண்டு அழுதார். இவள் மாடிக்குப் போய் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டாள். மாறி மாறி சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. எல்லாம் அடங்கிய பிறகு, முழுக்க இருட்டிய பிறகு கீழே வந்தாள். வெளிக்கதவு உள்ளே பூட்டியிருந்தது. கலைசெல்வன் இல்லை. பூசைப்பழம் கட்டிலில் படுத்து மேலே பார்த்துக்கொண்டு இருந்தார்.  

பத்மாவதி  இவளருகில் வந்து, “உனக்கு இனும அண்ணனே கிடையாது.” முகத்துக்கு நேரே விரலை ஆட்டி எச்சரித்தார். சித்ரா சத்தம் போட்டு அழுதார். திரும்பிப் பார்த்து “உன்னை எந்த நேரத்துல பெத்தேனோ.” பாட்டி தன் வயிற்றில் ஓங்கி அடித்துக்கொண்டார். இவள் என்ன செய்வது என்று தெரியாமல் அம்மாவின் அருகில் உட்கார்ந்து அப்படியே மடியில் படுத்துக்கொண்டாள்.  

சில மாதங்களில் கலைச்செல்வன் திருப்பரங்குன்றம் கோவிலில் வைத்து சரண்யாவை மணந்து கொண்டான். பெரியப்பா உதயச்சந்திரனுக்கு அதன்பிறகுதான் விஷயம் தெரிந்தது. தங்கள் ஊரிலிருந்து சித்ராவைப் போய்ப் பார்த்து,“இவ்வளவு நடந்திருக்கு, ஏன் எங்ககிட்ட மொதல்லயே சொல்லல. நாங்க தடுத்து நிறுத்தியிருப்போம்ல” என சத்தம் போட்டிருக்கிறார். அவர்களும் அவனை முழுவதுமாய் ஒதுக்கி விட்டார்கள். கல்லூரிக்கு இரண்டு மூன்று தடவை வந்து கலைச்செல்வன் இவளை பார்த்தான். அவனுக்கு யாழினி பிறந்தபோது இவள் வேலைக்குச் சேர்ந்திருந்தாள். தன் அண்ணன் வீட்டிற்கு சென்று இரண்டு நாள் இருந்துவிட்டு வந்தாள். மொபைலில் அவ்வப்போது பேசிக்கொள்வார்கள்.  

பஸ்ஸின் வேகம் சட்டென்று குறைந்தது.  மூச்சு விட்டு  நின்றது. எட்டிப் பார்த்தாள். ரெயில்வே கேட் அடைத்திருந்தது. முன்னால் மினரல் வாட்டர் வண்டி நின்றிருந்தது. கூடவே சில பைக்குகளில், சைக்கிள்களில் மனிதர்கள். கேட்டைத் தாண்டினால் ஊர் ஆரம்பித்துவிடும். பள்ளிக்கு செல்லும்போதும் வரும்போதும் எத்தனையோ முறை சைக்கிளில் இங்கு நின்றிருக்கிறாள். இடதுபக்கம் தூரத்தில் ஸ்டேஷன் தெரிந்தது. பரவத்தொடங்கிய வெளிச்சம் பட்டு தண்டவாளம் மின்னியபடி நீண்டிருந்தன. அதனை ஒட்டிச் சென்ற மண் பாதையில் மாடுகள் சில மெல்ல அசைந்து சென்று கொண்டிருந்தன. பின்னால் ஒருவர் போய்க்கொண்டு இருந்தார். காக்ரஸ் மரத்தில் மைனாக்களின் சத்தம். ஊர் அப்படியே இருந்தது அங்கு. ஓரத்தில் வரிசையாய் இருந்த கடைகளில் டீக்கடையும் சைக்கிள் கடையும் வாசல் தெளிக்கப்பட்டு திறந்திருந்தன. தங்கமணி அண்ணன் எம்பி எம்பி காற்று அடைத்துக்கொண்டு இருந்தார். பார்த்ததும் சிரிப்பு வந்தது.  

ஹாஸ்டலில் தன் படுக்கையில் கவிழ்ந்து படுத்து லேப்டாப் பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீஜா, “பூங்ஸ், தூங்கிட்டியா. இங்க வாயேன்... இந்த நீக்ரோ எவ்வளவு நேரமா காத்தடிச்சுக்கிட்டு இருக்கான் பாரு. எனக்கே மூச்சு முட்டுது” என்றாள்.  

“ச்சீ! போடி. பேசாமப் படு” சிரித்தபடி போர்வையை மூடிக்கொண்டு திரும்பிப் படுத்தாள் இவள்.  

லேப்டாப்பை மூடி தள்ளி வைத்து இவளது படுக்கையில் வந்து உட்கார்ந்து “உனக்கு ஒண்ணு தெரியுமா. அன்னைக்கு தியேட்டர்ல  ஐஸ் கிரீம் சாப்பிடும்போது மகேஷ்ட்ட இதப் பத்தி சொன்னேன். டென்ஷனாயிட்டான். இதெல்லாம் சும்மாவாம். ஒரே ஷாட்டை மாத்தி  மாத்தி ரொம்ப நேரம் காம்பிக்கிறாங்களாம். கேமிரா டெக்னிக்காம். என்னென்னமோ சொன்னான்.” வாய்விட்டு சிரித்தாள்.  

இவளாலும் அடக்க முடியவில்லை. போர்வையை உதறி எழுந்து உட்கார்ந்து சிரித்தாள். தலையணையை ஸ்ரீஜா மீது எறிந்தாள்.  

“மொத்தத்துல அவன சாவடிச்சிட்டே..” என்றாள் பூங்கி. இருவரும் கிடந்து சத்தம் போட்டு சிரித்தார்கள்.  

“இதுக்கு அப்புறமும் உன்னை அவன் கல்யாணம் பண்ணுவான்னு நினைக்குற?”  

தலையணையை தூக்கிக்கொண்டு வந்தவள்“போகட்டும்.” என நெருங்கி இவளது காதருகே முகர்ந்து மூச்சு விட்டாள்.  

சட்டென பற்றிக்கொண்டு உடலின் சகலமும் விழித்தது.  “ஏய்..” செல்லமாய் அவளைத் தள்ளினாள்.  

“என்ன..”  ரகசியம் போல் கேட்டாள்.  

“உனக்கென்ன. யு.கே பிராஜக்ட். பதினோரு மணிக்கு மேல ஆபிஸ் போனாப் போதும். எனக்கு ஆஸ்திரேலியா பிராஜக்ட். காலைல ஆறு மணிக்கு சிஸ்டம் முன்னால் உட்கார்ந்தாகணும்.” திரும்பிக் கொண்டாள்.  

ஸ்ரீஜா இதமாய் இவளின் தோளைத் தட்டிக் கொடுத்து “குட்நைட்” சொல்லி எழுந்தாள்.  ஃபேன் சத்தம் மட்டும் கேட்க அமைதியானது. சிகரெட் வாசம் வந்தது. திரும்பிப் பார்த்தாள். ஜன்னல் திரையை விலக்கி வைத்து வெளியே பார்த்தபடி நின்றிருந்தாள் ஸ்ரீஜா.  

தட தடவென யாவும் அதிர குட்ஸ் வண்டி  பெட்டி பெட்டியாய் எதிரே மறித்து ஓடியது. இரண்டு பக்கமும் இருந்த மரங்கள் தலைவிரி கோலமாய் வெட்டிக் குலுங்கின. கடைசிப் பெட்டியில் இருந்து தலை எட்டிப் பார்த்து அழுக்கான வெள்ளை உடையில் கார்டு ஒருவர் பச்சைக்கொடி காட்டிக்கொண்டு இருந்தார். சடக் சடக்கென்று மெல்ல மெல்ல அதிர்வு குறைய கார்டு சிறு புள்ளியாகிக்கொண்டு இருந்தார்.  

மரங்கள் தத்தம் இயல்பு நிலைக்கு வர, பஸ் புறப்பட்டது. ஸ்ரீஜா மீண்டும் நினைவுக்கு வந்தாள். ஊரில் அவள் வீடு ரெயில்வே லைனுக்கு பக்கத்தில் இருக்கிறதாம். இரவில் இதுபோன்று குட்ஸ் வண்டி போகும்போது பார்த்திருக்கிறாளாம். கடைசி பெட்டியில் மங்கலான வெளிச்சத்தில் கார்டு தனியே உட்கார்ந்திருப்பாராம். மனித சஞ்சாரமற்ற வெளிகளில், தனிமையில் அந்த கார்டின் பயணம் எப்படி இருக்கும் என கேட்பாள். தனியாகவோ அல்லது அதுபோன்ற மனிதரோடோ ஒரு இரவில் பயணம் செய்து பார்க்க வேண்டும் என்பாள்.  

அபூர்வமான பெண். பி.பி.ஓ ஆபிஸொன்றில் பணிபுரிகிறாள். நிறைய புத்தகங்கள் படிப்பாள். கவிதை எழுதுவாள். புரிவதற்கே கஷ்டமாயிருக்கும். இவளையும், மகேஷையும் தவிர வேறு எவரிடமும் அதிகம் பேசிக்கொள்ள மாட்டாள். எளிதில் நெருங்க முடியாத கண்ணியமும் ஒரு கம்பீரமும் காட்டுவாள்.  ஒரு வேலையில் ஈடுபட்டுவிட்டால், எந்தக் கவனமும் சிதறாமல் பைத்தியம் போல மூழ்கிப் போவாள்.  

ஆண்களின் சொல்லிலும் செயலிலும் வெளிப்படாத அர்த்தங்கள் அவளுக்கு பிடிபட்டுவிடும். `கொழந்த`, `கொழந்த` என பழகி வந்த பக்கத்து வீட்டு மாமா, பாசத்தோடு அரவணைப்பது போல பத்து வயதில் இவளை விஷமமாய் தொட்டதிலிருந்து, சென்ற வாரம் பஸ்ஸில் பின்சீட்டில் தூங்குவது போல பாவனை செய்துகொண்டே முன்பின் அறிந்தேயிராத பதினெட்டு வயசு போல இருந்த பையன் அவளைத் தடவியது வரை எத்தனையோ ஆண்களைப் பற்றி எரிச்சலோடும் கோபத்தோடும் பகிர்ந்திருக்கிறாள். “தொட்டவுடன் தொடைய விரிச்சு காட்டிருவா பொம்பளன்னு நினைக்கிறானுங்க, ராஸ்கல்ஸ்!”  கொதித்திருக்கிறாள். அந்தப் பையனை “வர்றியாடா, மடியில உக்கார வச்சு பால் கொடுக்குறேன்” எனக் கேட்டு பஸ்ஸையே அதிர வைத்திருக்கிறாள்.  

அப்படிப்பட்டவள் எப்படி மகேஷை விரும்புகிறாள் என்பதுதான் புரியாத விஷயம். குழந்தைத்தனமும், எப்போதும் முகத்தில் புன்னகையும் கொண்டவன் மகேஷ். புத்தகம் வாசிப்பதாய் தெரியவில்லை. கவிதை குறித்து எதுவும் தெரியாது. அவர்களோடு சில சமயங்களில் இவளும் வெளியே சென்றிருக்கிறாள். இவர்கள் இருவரும்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். அவன் அவ்வப்போது லேசாய் சிரித்துக் கொள்வான். பெரும்பாலும் அமைதியாகவே இருப்பான். இருவரும் தனியாக பேசிக்கொள்ள என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. அவன் மேல் பைத்தியமாய் மட்டும் இருக்கிறாள் ஸ்ரீஜா.  

ஹாரன் சத்தம் தொடர்ந்து கேட்கவும் கலைந்து, பஸ் பஜாருக்குள் சென்று கொண்டிருப்பதை உணர்ந்தாள். தியேட்டர் இருக்கும் இடம் தெரியாமல் பழையதாகி இருந்தது. துணிக்கடை, பேக்கரி, பழக்கடை என வரிசையாக வரவும்  பையைத் தூக்கிக் கொண்டு முன்னால் வந்தாள். முருகேசன் நின்றிருப்பதை பார்த்தாள். பஸ்  அவரைத் தாண்டி நிற்க, கூடவே நடந்து வந்து, இவள் இறங்கவும் “வாம்மா புதுப்பொண்ணு!” என சிரித்துக்கொண்டே பையை வாங்கினார்.  

“எப்படியிருக்கீங்க மாமா?” என  செல்லம் கொஞ்சியவாறு கேட்டாள்.  

“எனக்கென்ன... நல்லாயிருக்கேன்.” சொல்லி வண்டியின் ஸ்டாண்டை எடுத்து, உட்கார்ந்து கொண்டு பையை முன்னால் வைத்து, “ ஏறிக்க” என்றார்.  

ஒவ்வொருமுறை வரும்போதும் பஜாரில் ஒன்றிரண்டு கடைகள் புதுசாய் மாறி இருக்கின்றன. ஜெயராம் மெடிக்கல் ஷாப்பில், வயதான மனிதர் ஒருவர் தந்த மருந்துச் சீட்டை பக்கத்து வீட்டு விஜயா கடைக்குள்ளிருந்து வாங்கிக் கொண்டிருந்தாள். இவளைப் பார்க்கவில்லை. இந்த வருஷம் ப்ளஸ் டூ எழுதி இருந்தாள். அதையடுத்து எஸ்.டி.டி பூத் இருந்த இடத்தில் ஒரு ஸ்டேஷனரி கடை முளைத்திருந்தது.  அதிலும் இரண்டு பெண்கள் இருந்தார்கள். மிஞ்சிப் போனால் அவர்களுக்கு சம்பளமாக அறுநூறோ எழுநூறோ இருக்கலாம்.   

தெருக்கள் குறுகலாகவும், வீடுகள் சிறியதாகவும் தென்பட்டன. ஆடுகள் அவை பாட்டுக்கு தெரு நடுவே உட்கார்ந்திருந்தன. குடம் தூக்கி நடந்து கொண்டிருந்தனர் பெண்கள். வேதக்கோயில் திரும்பும்போது மைதானத்தில் இரண்டு மூன்று சிறுவர்கள் அந்த நேரத்திலும் பட்டம் விட்டுக்கொண்டு இருந்தனர்.  

ஆவுடையம்மாள் பெட்டிக்கடை முன்னே கலைந்த வெள்ளை முடியோடு, நாள் பட்ட புடவையணிந்து பைத்தியக்காரி போல ஒருத்தி கீழே உட்கார்ந்திருந்தாள். அருகில் செல்லும்போது  கல்யாணி போல தெரிந்தது. அவரும் இவளை உற்றுப் பார்த்தார். கல்யாணிதான். ஊளையிட்ட மாதிரி முனகி எழுந்தார். அந்தத் தெரு திரும்பும் வரை அங்கேயே நின்று பார்த்துக்கொண்டு இருந்தார். பாவமாய் இருந்தது. இந்த ஊருக்கு எப்படி வந்தார் என ஆச்சரியமாய் இருந்தது.  

வீடு வந்துவிட்டது. வாசலில் சின்னதாய் பந்தல் போட்டிருந்து. ஹாரன் அடித்து பைக் நிற்கவும், மாமாவின் மூத்த மகள் அபூர்வா, அத்தை, அமுதா சித்தி, பாட்டி, எல்லோரும் வாசலில் குவிந்து விட்டனர். “என் ராசாத்தி” என பத்மாவதி உச்சி முகர்ந்தார்.  

மொபைலில் பேசிக் கொண்டிருந்த சித்ரா இவளைப் பார்த்து முகமெல்லாம் மலர்ந்தவாறே, “சரியா இப்பத்தான் உங்க மருமக வீட்டுக்குள்ள வர்றா..” என சிரித்தார். ”சரிங்க… சரிங்க….” என்று பேசியவாறே, “பூங்கி! நரேனோட அம்மா…. பேசணுமாம்..” என போனை இவளை நோக்கி நீட்டினார்.  

“அம்மா இப்பத்தான் வந்திருக்கேன். அப்புறமா பேசிக்கலாம். மொதல்ல உன்னோட மகளை நீ கொஞ்சு…” என்று போனை வாங்கி தொடர்பை துண்டித்து, அம்மாவைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாள் பூங்குழலி. 

 

(தொடரும்)

(function(d,e,s){if(d.getElementById("likebtn_wjs"))return;a=d.createElement(e);m=d.getElementsByTagName(e)[0];a.async=1;a.id="likebtn_wjs";a.src=s;m.parentNode.insertBefore(a, m)})(document,"script","//w.likebtn.com/js/w/widget.js");
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 07, 2022 19:15

தொடர்பு எல்லைக்கு வெளியே - 2 (தொடர்கதை)




நேற்றிலிருந்து நரேனும் பேஸ்புக்கில் இவளது நண்பனாகி இருந்தான்.. படிப்பு, வேலை தவிர அவனைப் பற்றி தெரிந்து கொள்ள விபரங்கள் எதுவுமில்லை.  சென்ற மாதம் அவனுக்கு நான்கைந்து நண்பர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லியிருந்தார்கள். எட்டு மாதங்களுக்கு முன்பு புது பைக் வாங்கியவுடன் அதில் உட்கார்ந்து ஒரு ஸ்டேட்டஸ் போட்டு இருந்தான்.  அவ்வளவுதான். 

நேரில் பார்க்கும்போது இருந்ததைவிட புரோபைல் படத்தில் சுமாராகத்தான் இருந்தான். இரண்டு வாரத்துக்கு முன்பு திருவேற்காடு கோவிலில் வைத்து நரேனை பார்த்திருந்தாள். ஊரிலிருந்து தாத்தா, பாட்டி அம்மா எல்லோரும் சென்னை வந்து இவளை  அழைத்துச் சென்றார்கள். நரேனின் அம்மா சந்திராவும் அப்பா மூர்த்தியும் வந்திருந்தார்கள். நரேன் அவர்களுக்கு ஒரே பையன். தன்னை விட கொஞ்சம் உயரமிருப்பான் எனத் தோன்றியது. தனியாக பேச வேண்டும் என  அழைத்து கோவிலில் அமைதியாக இருந்த ஒரு இடத்தில் போய் நின்றான் அவன். தமிழ்ச்சினிமா காட்சி போல இருந்தது இவளுக்கு. சிரிப்பு வந்தது. அடக்கிப் பார்த்தாள். கவனித்து விட்டான். 

"என்ன..?"  என்றான். அவன் கண்களை உற்றுப் பார்த்து நெற்றியில் சிறு சுருக்கங்கள் விழ புன்னகைத்துக் கொண்டே ஒன்றுமில்லை என்பதாய் தலையசைத்தாள். அவனால் அவள் கண்களை தொடர்ந்து பார்க்க முடியவில்லை. இலக்கு இல்லாமல் தூரத்தில் பார்த்துவிட்டு, மீண்டும் அவளை நோக்கினான். அதுவும் கூட சினிமா போலவே இருந்தது. என்ன கேட்கப் போகிறான் என்பது தெரிந்தது. அதைக் கேட்டு விடாமல் வேறெதாவது பேச மாட்டானா என்றிருந்தது. 

அதையேத்தான் கேட்டான். "என்னைப் பிடிச்சிருக்கா?". 

'ஐயோ!' என உள்ளுக்குள் அரற்றிக்கொண்டு பொதுவாய் புன்னகைத்தாள். 

விடவில்லை. "என்னைப் பிடிச்சிருக்கான்னு கேட்டேன்" 

"இன்னைக்குத்தான் உங்களைப் பாக்குறேன். உடனேப் பிடிச்சிருக்குன்னு சொல்ல முடியுமா?. போக போகத்தான் பிடிக்குது, பிடிக்கலைன்னு சொல்ல முடியும்?"  மனதில் பட்டதை சொல்லிவிட்டாள். 

அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. "ஆமாம், இல்ல...?" எனக் குளறினான். அசட்டுத்தனமாய் புன்னகைத்துக் கொண்டான். அமைதியானான். மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு  இவளும் நின்று பார்த்தாள். அவன் வேறெதுவும் பேசுவதாய்த் தெரியவில்லை. 

அவனை இயல்புக்கு கொண்டு வரத் தோன்றியது. "நரேன் நமக்குள் ஃபார்மாலிட்டிஸ் தேவையில்லைன்னு நினைக்கிறேன். அட்டேச்மெண்ட் வரணும். அதுக்கு ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிறது முக்கியம். ஒருத்தர ஒருத்தர் மதிக்கிறது ரொம்ப முக்கியம். நம்ம ரெண்டு பேராலும் அது முடியும்னு நம்புறேன்." 

"நிச்சயமா..." என்றான். திரும்பவும் சிறிது நேரம் இருவரும் யோசித்துக்கொண்டு இருந்தார்கள். லேசாய் கனைத்துக்கொண்டு இவள் பக்கம் திரும்பி "எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு" என்று சிரித்தான். இவளும் சிரித்தாள். அப்போது அவனது பார்வை சில கணங்கள் இவளது மார்பில் நிலைத்து நகன்றதை  பார்த்தாள். 

கவனித்து விட்டாள் என்பதை அவனும் உணர்ந்தான். ஒரு மாதிரியிருந்தது. “உன்னுடைய விரல்கள் அழகாய் இருக்கு”  சம்பந்தமில்லாமல் சொன்னான். 

“அப்படியா! தாங்க்ஸ்..” சிரித்து வைத்தாள். 

இருவரும் பேசிக்கொண்டது அவ்வளவுதான். மற்றதையெல்லாம் அம்மா, பாட்டி, தாத்தா, நரேனின் அம்மா, அப்பா பேசினார்கள். நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறித்தார்கள். "என்னம்மா", "வாம்மா" என நரேனின் அப்பா மூர்த்தி இவளைக் கனிவோடு அழைத்துக்கொண்டு இருந்தார். நரேனின் அம்மா சந்திராவோ இவளது கைகளை அடிக்கடி பற்றிக்கொண்டார். பாட்டி பத்மாவதிக்கும், தாத்தா பூசப்பழத்துக்கும் அதில் சந்தோஷம். சித்ராவை மனநிறைவோடு பார்த்தார்கள். ஓட்டலில் சாப்பிட்டு விட்டு இரு குடும்பத்தாரும் அவரவர் கார்களில் புறப்பட்டார்கள். 

வழியில், “மாப்பிள்ளையோட அப்பாவும் அம்மாவும் பெருந்தன்மையானவங்க” என்றார் பூசைப்பழம்.  கலைச்செல்வனைப் பற்றி தெரிந்திருந்தாலும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றார். பணம் எதுவும் வேண்டாம், ஒங்க பொண்ணுக்கு எவ்வளவு நகை போட முடியுமோ அதை மட்டும் போடுங்கள், நாங்கள் ஒண்ணும் கேட்க மாட்டோம் என மூர்த்தி சொன்னதாகவும்,  நாங்களும் ஒரு குறையில்லாமச் செய்வோம் என்று பதிலுக்குச் சொன்னதாகவும் பேசிக்கொண்டு வந்தார். இவள் அமைதியாக இருந்தாள்.  

"ஏண்டி பூவு, உனக்கு மாப்பிள்ளைய பிடிச்சிருக்கா?" பத்மாவதி கேட்டார். இவள் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள்.  

"வாயத் தெறந்து பேசவே மாட்டா. மனசுக்குள்ள என்ன இருக்குன்னே தெரியாது"எரிந்து விழுந்தார்.  

பேத்தி அப்படி இருப்பது பிடிக்கவில்லையென்றாலும், " ஏம்மா, அவளச் சத்தம் போடுற. சின்னப் புள்ளை. வாயைத் தெறந்து இதையெல்லாம் சொல்லுவாளாக்கும்" பூசைப்பழம் சிரித்துக் கொண்டார்.  

ஹாஸ்டலில் இறங்கிக்கொண்டதும், "யம்மா பூவு! ஒங்கப்பா இறந்த பிறகு நம்ம குடும்பத்துல நடக்குற மொத நல்ல காரியம் இது. சித்ராவுக்கு உன்னாலாவது சந்தோஷம் கிடைக்கணும். இப்படியொரு மாப்பிள்ளையும், சம்பந்தியும் கிடைக்க நாம கொடுத்து வச்சிருக்கணும்." என்றார் பூசப்பழம்.  

"தாத்தா! ஒங்க எல்லாருக்கும் பிடிச்சிருந்தா எனக்கும் பிடிக்கும். போதுமா?" சொல்லிக்கொண்டே அம்மாவின் கன்னத்தில் ஜன்னல் வழியே எட்டி முத்தம் கொடுத்தாள். "பாத்துப் போங்க.” என்றாள்.  

“மேடவாக்கத்திலிருந்து அமுதா சித்தி, சித்தப்பா எல்லோரும் வியாழக்கிழமையே வர்றாங்களாம். ரெயிலில் புக் பண்ணிரலாம்னு சொன்னாங்க. நீயும் அவங்கக் கூட வாயேன்” பத்மாவதி சொன்னார்.  

“இல்ல பாட்டி. முன்கூட்டி வர்றதுக்கு லீவு கெடைக்குமான்னு தெரியல. எப்படியும் நிச்சயதார்த்தம் அன்னைக்கு வெள்ளிக்கிழமை காலைல வந்துருவேன். சனி ஞாயிறும் அங்க இருப்பேன். ஒகேவா? பை!" என கையசைத்தாள். அம்மாவின் கண்கள் தளும்புவதைப் பார்க்க முடியாமல் திரும்பி நடந்தாள்.  

அன்று இரவு அம்மாவுக்கு போன் செய்து, “அண்ணனும், அண்ணியும் கண்டிப்பா நிச்சயதார்த்ததுக்கு வருவாங்க. அதை மட்டும் வேண்டாம்னு சொல்லிராதீங்க”  என்று கேட்டுகொண்டாள்.  

“நாங்க யாரும் கூப்பிட மாட்டோம், நீ வேண்ணா உன் அண்ணனிடம் சொல்லிக்க.” சித்ரா சொன்னார். கலைச்செல்வனையும் அவன் குழந்தையையும் பார்க்க வேண்டும் என்று அம்மாவுக்கும் ஆசை இருப்பது தெரியும். தாத்தாவிடமும், பாட்டியிடமும்தான் பிடிவாதம் இன்னும் இருந்தது.  

கல்லூரியில் இரண்டாவது வருஷம் படித்துக்கொண்டிருந்த கலைச்செல்வனுக்கு கருணை அடிப்படையில் அப்பாவின் வங்கி வேலை கிடைத்தது. துக்கம் சுமந்த அந்தக் குடும்பத்திற்கு ஒரு ஆறுதலாய் இருந்தது. மதுரையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த கலைச்செல்வன் வாரா வாரம் வந்து போய்க்கொண்டு இருந்தான். ஒவ்வொருமுறை வரும்போதும் இவளுக்கு எதாவது வாங்கி வருவான். படிப்புச் செலவுக்கு தன்னால் ஆனதைக் கொடுத்துக்கொண்டு இருந்தான். இரண்டாவது வருட கல்லூரி லீவில் இவள் வீட்டிற்கு வந்திருந்த சமயம், கலைச்செல்வனும் வழக்கம்போல் சனிக்கிழமை வந்திருந்தான்.  ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் கிளம்புகிற நேரத்தில்,  தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அவளைக் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் சொன்னான். யார் என்ன என்றெல்லாம் விசாரித்துவிட்டு பத்மாவதியும், பூசைப்பழமும் கத்தினார்கள். சித்ரா சுவற்றில் முட்டிக்கொண்டு அழுதார். இவள் மாடிக்குப் போய் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டாள். மாறி மாறி சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. எல்லாம் அடங்கிய பிறகு, முழுக்க இருட்டிய பிறகு கீழே வந்தாள். வெளிக்கதவு உள்ளே பூட்டியிருந்தது. கலைசெல்வன் இல்லை. பூசைப்பழம் கட்டிலில் படுத்து மேலே பார்த்துக்கொண்டு இருந்தார்.  

பத்மாவதி  இவளருகில் வந்து, “உனக்கு இனும அண்ணனே கிடையாது.” முகத்துக்கு நேரே விரலை ஆட்டி எச்சரித்தார். சித்ரா சத்தம் போட்டு அழுதார். திரும்பிப் பார்த்து “உன்னை எந்த நேரத்துல பெத்தேனோ.” பாட்டி தன் வயிற்றில் ஓங்கி அடித்துக்கொண்டார். இவள் என்ன செய்வது என்று தெரியாமல் அம்மாவின் அருகில் உட்கார்ந்து அப்படியே மடியில் படுத்துக்கொண்டாள்.  

சில மாதங்களில் கலைச்செல்வன் திருப்பரங்குன்றம் கோவிலில் வைத்து சரண்யாவை மணந்து கொண்டான். பெரியப்பா உதயச்சந்திரனுக்கு அதன்பிறகுதான் விஷயம் தெரிந்தது. தங்கள் ஊரிலிருந்து சித்ராவைப் போய்ப் பார்த்து,“இவ்வளவு நடந்திருக்கு, ஏன் எங்ககிட்ட மொதல்லயே சொல்லல. நாங்க தடுத்து நிறுத்தியிருப்போம்ல” என சத்தம் போட்டிருக்கிறார். அவர்களும் அவனை முழுவதுமாய் ஒதுக்கி விட்டார்கள். கல்லூரிக்கு இரண்டு மூன்று தடவை வந்து கலைச்செல்வன் இவளை பார்த்தான். அவனுக்கு யாழினி பிறந்தபோது இவள் வேலைக்குச் சேர்ந்திருந்தாள். தன் அண்ணன் வீட்டிற்கு சென்று இரண்டு நாள் இருந்துவிட்டு வந்தாள். மொபைலில் அவ்வப்போது பேசிக்கொள்வார்கள்.  

பஸ்ஸின் வேகம் சட்டென்று குறைந்தது.  மூச்சு விட்டு  நின்றது. எட்டிப் பார்த்தாள். ரெயில்வே கேட் அடைத்திருந்தது. முன்னால் மினரல் வாட்டர் வண்டி நின்றிருந்தது. கூடவே சில பைக்குகளில், சைக்கிள்களில் மனிதர்கள். கேட்டைத் தாண்டினால் ஊர் ஆரம்பித்துவிடும். பள்ளிக்கு செல்லும்போதும் வரும்போதும் எத்தனையோ முறை சைக்கிளில் இங்கு நின்றிருக்கிறாள். இடதுபக்கம் தூரத்தில் ஸ்டேஷன் தெரிந்தது. பரவத்தொடங்கிய வெளிச்சம் பட்டு தண்டவாளம் மின்னியபடி நீண்டிருந்தன. அதனை ஒட்டிச் சென்ற மண் பாதையில் மாடுகள் சில மெல்ல அசைந்து சென்று கொண்டிருந்தன. பின்னால் ஒருவர் போய்க்கொண்டு இருந்தார். காக்ரஸ் மரத்தில் மைனாக்களின் சத்தம். ஊர் அப்படியே இருந்தது அங்கு. ஓரத்தில் வரிசையாய் இருந்த கடைகளில் டீக்கடையும் சைக்கிள் கடையும் வாசல் தெளிக்கப்பட்டு திறந்திருந்தன. தங்கமணி அண்ணன் எம்பி எம்பி காற்று அடைத்துக்கொண்டு இருந்தார். பார்த்ததும் சிரிப்பு வந்தது.  

ஹாஸ்டலில் தன் படுக்கையில் கவிழ்ந்து படுத்து லேப்டாப் பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீஜா, “பூங்ஸ், தூங்கிட்டியா. இங்க வாயேன்... இந்த நீக்ரோ எவ்வளவு நேரமா காத்தடிச்சுக்கிட்டு இருக்கான் பாரு. எனக்கே மூச்சு முட்டுது” என்றாள்.  

“ச்சீ! போடி. பேசாமப் படு” சிரித்தபடி போர்வையை மூடிக்கொண்டு திரும்பிப் படுத்தாள் இவள்.  

லேப்டாப்பை மூடி தள்ளி வைத்து இவளது படுக்கையில் வந்து உட்கார்ந்து “உனக்கு ஒண்ணு தெரியுமா. அன்னைக்கு தியேட்டர்ல  ஐஸ் கிரீம் சாப்பிடும்போது மகேஷ்ட்ட இதப் பத்தி சொன்னேன். டென்ஷனாயிட்டான். இதெல்லாம் சும்மாவாம். ஒரே ஷாட்டை மாத்தி  மாத்தி ரொம்ப நேரம் காம்பிக்கிறாங்களாம். கேமிரா டெக்னிக்காம். என்னென்னமோ சொன்னான்.” வாய்விட்டு சிரித்தாள்.  

இவளாலும் அடக்க முடியவில்லை. போர்வையை உதறி எழுந்து உட்கார்ந்து சிரித்தாள். தலையணையை ஸ்ரீஜா மீது எறிந்தாள்.  

“மொத்தத்துல அவன சாவடிச்சிட்டே..” என்றாள் பூங்கி. இருவரும் கிடந்து சத்தம் போட்டு சிரித்தார்கள்.  

“இதுக்கு அப்புறமும் உன்னை அவன் கல்யாணம் பண்ணுவான்னு நினைக்குற?”  

தலையணையை தூக்கிக்கொண்டு வந்தவள்“போகட்டும்.” என நெருங்கி இவளது காதருகே முகர்ந்து மூச்சு விட்டாள்.  

சட்டென பற்றிக்கொண்டு உடலின் சகலமும் விழித்தது.  “ஏய்..” செல்லமாய் அவளைத் தள்ளினாள்.  

“என்ன..”  ரகசியம் போல் கேட்டாள்.  

“உனக்கென்ன. யு.கே பிராஜக்ட். பதினோரு மணிக்கு மேல ஆபிஸ் போனாப் போதும். எனக்கு ஆஸ்திரேலியா பிராஜக்ட். காலைல ஆறு மணிக்கு சிஸ்டம் முன்னால் உட்கார்ந்தாகணும்.” திரும்பிக் கொண்டாள்.  

ஸ்ரீஜா இதமாய் இவளின் தோளைத் தட்டிக் கொடுத்து “குட்நைட்” சொல்லி எழுந்தாள்.  ஃபேன் சத்தம் மட்டும் கேட்க அமைதியானது. சிகரெட் வாசம் வந்தது. திரும்பிப் பார்த்தாள். ஜன்னல் திரையை விலக்கி வைத்து வெளியே பார்த்தபடி நின்றிருந்தாள் ஸ்ரீஜா.  

தட தடவென யாவும் அதிர குட்ஸ் வண்டி  பெட்டி பெட்டியாய் எதிரே மறித்து ஓடியது. இரண்டு பக்கமும் இருந்த மரங்கள் தலைவிரி கோலமாய் வெட்டிக் குலுங்கின. கடைசிப் பெட்டியில் இருந்து தலை எட்டிப் பார்த்து அழுக்கான வெள்ளை உடையில் கார்டு ஒருவர் பச்சைக்கொடி காட்டிக்கொண்டு இருந்தார். சடக் சடக்கென்று மெல்ல மெல்ல அதிர்வு குறைய கார்டு சிறு புள்ளியாகிக்கொண்டு இருந்தார்.  

மரங்கள் தத்தம் இயல்பு நிலைக்கு வர, பஸ் புறப்பட்டது. ஸ்ரீஜா மீண்டும் நினைவுக்கு வந்தாள். ஊரில் அவள் வீடு ரெயில்வே லைனுக்கு பக்கத்தில் இருக்கிறதாம். இரவில் இதுபோன்று குட்ஸ் வண்டி போகும்போது பார்த்திருக்கிறாளாம். கடைசி பெட்டியில் மங்கலான வெளிச்சத்தில் கார்டு தனியே உட்கார்ந்திருப்பாராம். மனித சஞ்சாரமற்ற வெளிகளில், தனிமையில் அந்த கார்டின் பயணம் எப்படி இருக்கும் என கேட்பாள். தனியாகவோ அல்லது அதுபோன்ற மனிதரோடோ ஒரு இரவில் பயணம் செய்து பார்க்க வேண்டும் என்பாள்.  

அபூர்வமான பெண். பி.பி.ஓ ஆபிஸொன்றில் பணிபுரிகிறாள். நிறைய புத்தகங்கள் படிப்பாள். கவிதை எழுதுவாள். புரிவதற்கே கஷ்டமாயிருக்கும். இவளையும், மகேஷையும் தவிர வேறு எவரிடமும் அதிகம் பேசிக்கொள்ள மாட்டாள். எளிதில் நெருங்க முடியாத கண்ணியமும் ஒரு கம்பீரமும் காட்டுவாள்.  ஒரு வேலையில் ஈடுபட்டுவிட்டால், எந்தக் கவனமும் சிதறாமல் பைத்தியம் போல மூழ்கிப் போவாள்.  

ஆண்களின் சொல்லிலும் செயலிலும் வெளிப்படாத அர்த்தங்கள் அவளுக்கு பிடிபட்டுவிடும். `கொழந்த`, `கொழந்த` என பழகி வந்த பக்கத்து வீட்டு மாமா, பாசத்தோடு அரவணைப்பது போல பத்து வயதில் இவளது சின்ன மார்பை தொட்டுத் தடவிப் பார்த்ததிலிருந்து, சென்ற வாரம் பஸ்ஸில் பின்சீட்டில் தூங்குவது போல பாவனை செய்துகொண்டே முன்பின் அறிந்தேயிராத பதினெட்டு வயசு போல இருந்த பையன் அவளது பருத்த மார்பை தடவியது வரை எத்தனையோ ஆண்களைப் பற்றி எரிச்சலோடும் கோபத்தோடும் பகிர்ந்திருக்கிறாள். “தொட்டவுடன் தொடைய விரிச்சு காட்டிருவா பொம்பளன்னு நினைக்கிறானுங்க, ராஸ்கல்ஸ்!”  கொதித்திருக்கிறாள். அந்தப் பையனை “வர்றியாடா, மடியில உக்கார வச்சு பால் கொடுக்குறேன்” எனக் கேட்டு பஸ்ஸையே அதிர வைத்திருக்கிறாள்.  

அப்படிப்பட்டவள் எப்படி மகேஷை விரும்புகிறாள் என்பதுதான் புரியாத விஷயம். குழந்தைத்தனமும், எப்போதும் முகத்தில் புன்னகையும் கொண்டவன் மகேஷ். புத்தகம் வாசிப்பதாய் தெரியவில்லை. கவிதை குறித்து எதுவும் தெரியாது. அவர்களோடு சில சமயங்களில் இவளும் வெளியே சென்றிருக்கிறாள். இவர்கள் இருவரும்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். அவன் அவ்வப்போது லேசாய் சிரித்துக் கொள்வான். பெரும்பாலும் அமைதியாகவே இருப்பான். இருவரும் தனியாக பேசிக்கொள்ள என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. அவன் மேல் பைத்தியமாய் மட்டும் இருக்கிறாள் ஸ்ரீஜா.  

ஹாரன் சத்தம் தொடர்ந்து கேட்கவும் கலைந்து, பஸ் பஜாருக்குள் சென்று கொண்டிருப்பதை உணர்ந்தாள். தியேட்டர் இருக்கும் இடம் தெரியாமல் பழையதாகி இருந்தது. துணிக்கடை, பேக்கரி, பழக்கடை என வரிசையாக வரவும்  பையைத் தூக்கிக் கொண்டு முன்னால் வந்தாள். முருகேசன் நின்றிருப்பதை பார்த்தாள். பஸ்  அவரைத் தாண்டி நிற்க, கூடவே நடந்து வந்து, இவள் இறங்கவும் “வாம்மா புதுப்பொண்ணு!” என சிரித்துக்கொண்டே பையை வாங்கினார்.  

“எப்படியிருக்கீங்க மாமா?” என  செல்லம் கொஞ்சியவாறு கேட்டாள்.  

“எனக்கென்ன... நல்லாயிருக்கேன்.” சொல்லி வண்டியின் ஸ்டாண்டை எடுத்து, உட்கார்ந்து கொண்டு பையை முன்னால் வைத்து, “ ஏறிக்க” என்றார்.  

ஒவ்வொருமுறை வரும்போதும் பஜாரில் ஒன்றிரண்டு கடைகள் புதுசாய் மாறி இருக்கின்றன. ஜெயராம் மெடிக்கல் ஷாப்பில், வயதான மனிதர் ஒருவர் தந்த மருந்துச் சீட்டை பக்கத்து வீட்டு விஜயா கடைக்குள்ளிருந்து வாங்கிக் கொண்டிருந்தாள். இவளைப் பார்க்கவில்லை. இந்த வருஷம் ப்ளஸ் டூ எழுதி இருந்தாள். அதையடுத்து எஸ்.டி.டி பூத் இருந்த இடத்தில் ஒரு ஸ்டேஷனரி கடை முளைத்திருந்தது.  அதிலும் இரண்டு பெண்கள் இருந்தார்கள். மிஞ்சிப் போனால் அவர்களுக்கு சம்பளமாக அறுநூறோ எழுநூறோ இருக்கலாம்.   

தெருக்கள் குறுகலாகவும், வீடுகள் சிறியதாகவும் தென்பட்டன. ஆடுகள் அவை பாட்டுக்கு தெரு நடுவே உட்கார்ந்திருந்தன. குடம் தூக்கி நடந்து கொண்டிருந்தனர் பெண்கள். வேதக்கோயில் திரும்பும்போது மைதானத்தில் இரண்டு மூன்று சிறுவர்கள் அந்த நேரத்திலும் பட்டம் விட்டுக்கொண்டு இருந்தனர்.  

ஆவுடையம்மாள் பெட்டிக்கடை முன்னே கலைந்த வெள்ளை முடியோடு, நாள் பட்ட புடவையணிந்து பைத்தியக்காரி போல ஒருத்தி கீழே உட்கார்ந்திருந்தாள். அருகில் செல்லும்போது  கல்யாணி போல தெரிந்தது. அவரும் இவளை உற்றுப் பார்த்தார். கல்யாணிதான். ஊளையிட்ட மாதிரி முனகி எழுந்தார். அந்தத் தெரு திரும்பும் வரை அங்கேயே நின்று பார்த்துக்கொண்டு இருந்தார். பாவமாய் இருந்தது. இந்த ஊருக்கு எப்படி வந்தார் என ஆச்சரியமாய் இருந்தது.  

வீடு வந்துவிட்டது. வாசலில் சின்னதாய் பந்தல் போட்டிருந்து. ஹாரன் அடித்து பைக் நிற்கவும், மாமாவின் மூத்த மகள் அபூர்வா, அத்தை, அமுதா சித்தி, பாட்டி, எல்லோரும் வாசலில் குவிந்து விட்டனர். “என் ராசாத்தி” என பத்மாவதி உச்சி முகர்ந்தார்.  

மொபைலில் பேசிக் கொண்டிருந்த சித்ரா இவளைப் பார்த்து முகமெல்லாம் மலர்ந்தவாறே, “சரியா இப்பத்தான் உங்க மருமக வீட்டுக்குள்ள வர்றா..” என சிரித்தார். ”சரிங்க… சரிங்க….” என்று பேசியவாறே, “பூங்கி! நரேனோட அம்மா…. பேசணுமாம்..” என போனை இவளை நோக்கி நீட்டினார்.  

“அம்மா இப்பத்தான் வந்திருக்கேன். அப்புறமா பேசிக்கலாம். மொதல்ல உன்னோட மகளை நீ கொஞ்சு…” என்று போனை வாங்கி தொடர்பை துண்டித்து, அம்மாவைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாள் பூங்குழலி. 

 

(தொடரும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 07, 2022 19:15

பொய் மனிதனின் கதை -7



“உண்மையான நேர்மையான மனிதனை விட

ஒரு பொய்யன்  நம்பகத்தன்மை மிக்கவனாக தோன்றுவது

இன்றைய காலத்தின் பெரும் துரதிர்ஷ்டம்”

- முனியா கான்

 

    “என் வாழ்க்கைல …. ஒவ்வொரு நாளும்….. ஒவ்வொரு நிமிடமும்….. ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா..” என்று நடிகர் அஜித் ஒரு படத்தில் பஞ்ச் வசனம் பேசுவார். திருமணமானதும் வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் போய், அங்கங்கு சில வருடங்கள் அலைந்து திரிந்தது வரை வேண்டுமானால் மோடியும் இது போன்று “நானா செதுக்குனதுடா” என மார்தட்டிக் கொள்ளலாம். ஆர்.எஸ்.எஸ்ஸில் இணைந்த பிறகு இந்துத்துவா வெறி அவரை செதுக்கியது. அதன் தொடர்ச்சியாக பிஜேபியில் இணைந்ததும் அரசியல் அதிகாரம் அவரை செதுக்கியது. குஜராத் கலவரங்களுக்குப் பிறகு இறுதியாக இந்திய ஆளும் வர்க்கமான கார்ப்பரேட் உலகம் அவரை செதுக்க ஆரம்பித்தது.

பத்து வருடங்களில் மோடியை ஒரு ’பிராண்ட்’ (வியாபார அடையாளம்) ஆக முன்னிறுத்தி சந்தையில் இறக்குவதற்கு தயாராக்கி இருந்தார்கள். தேர்தல், ஜனநாயகம், வாக்குரிமை, மக்களின் பிரச்சினைகள் என்று நாளும் பொழுதும் அக்கறையோடு அலசி ஆராயப்படும் அரசியலின் அடிப்படை அம்சங்கள் அனைத்தையும் தூக்கி எறிந்தார்கள். இந்தியக் குடிமக்கள் அனைவரையும் தங்களின் ‘சந்தை’யாக கார்ப்பரேட் உலகம் உள்ளங்கையில் எடுத்து வைத்துக்கொண்டு உற்றுப்பார்த்தது. 

தங்களின் புதிய பிராண்டை சந்தையில் அறிமுகப்படுத்தி, அதனை நோக்கி வாடிக்கையாளர்களை இழுக்கும் அனைத்து விளம்பர உத்திகளும், வியாபார உத்திகளும் திட்டமிட்டு வகுக்கப்பட்டன. அதற்கெனவே மும்பையைச் சேர்ந்த ஜெயினின் தலைமையில் ஒரு குழுவும், பிரசாந்த் கிஷோர் தலைமையில் ஒரு குழுவும், ஹிரேன் ஜோஷி தலைமையில் ஒரு குழுவும், அரவிந்த் குப்தா தலைமையில் ஒரு குழுவுமாக மொத்தம் நான்கு குழுக்கள் இணைந்து மோடியின் ஒவ்வொரு அசைவையும், வார்த்தையையும் அளந்து அளந்து செதுக்கி செதுக்கி வடிவமைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யாரும் கண்ணுக்குத் தெரிய மாட்டார்கள். மோடி என்னும் பிராண்டின் முகம் மட்டுமே தெரியும். தெரிந்தது. 

“விரும்பப்படுகிறாரோ, வெறுக்கப்படுகிறாரோ அது முக்கியமில்லை. ஒருவர் எவ்வாறு உணரப்படுகிறார் என்பதே முக்கியம். அதுதான் ஒருவரின் பிராண்ட்!” என்று அமெரிக்க மார்க்கெட்டிங் குருவும், பிராண்ட் குறித்து பல புத்தகங்கள் எழுதியவருமான டேவிட் ஆக்கர் சொல்கிறார். தொடர்ச்சியான, உறுதியான, செயல்பாடுகளின் மூலம் இந்த வகை பிராண்டு தன்னை நீட்டித்துக் கொள்ளும், இல்லையென்றால் ஒன்றுமில்லாமல் தன்னை அப்படியே கலைத்துக் கொள்ளும் என ‘பிராண்ட்’ குறித்த தன்மையை விவரிக்கிறார். 2003லிருந்து ‘துடிப்பு மிக்க’ குஜராத் (Vibrant Gujarat ) மூலம் மோடி அத்தகைய ‘பிராண்ட்’ ஆக உருவாக்கப்பட்டிருந்தார்! 

பிஜேபியின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, தங்களின் பிராண்ட் நரேந்திர மோடிக்கு மூன்று முக்கிய சவால்கள் இருப்பதாக கார்ப்பரேட் உலகம்  ஆராய்ந்து வைத்திருந்தது. முதலாவதாக மூன்று முறை குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி ஒரு பிரதேசத்தின் பிராண்ட் (Regional Brand)ஆக மட்டுமே தென்பட்டார். அவர்  அகில இந்திய அளவில் ‘பிராண்ட்’ (National Brand) ஆக இல்லை. இரண்டாவது, 2002 குஜராத் கலவரங்களினால் ஏற்பட்ட கறைகள் மோடி மீது தேசீய அளவில் படிந்திருந்தது. மூன்றாவது, பெரும்பாலும் இந்தியிலேயே பேசும் அவர் நகர்ப்புறத்தைச் சேர்ந்த, மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களோடு நெருக்கமாக வேண்டும். 63 வயதான மோடி, அடுத்து வரும் தேர்தலில் 15 கோடி புதிய வாக்காளர்களான இளைஞர்களோடு தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும்.  

தேசிய அளவில் மேலும் இருந்தது ஒரு பிராண்ட்தான். காங்கிரஸ் மட்டுமே. அதுவும் தனது பிராண்ட் தன்மையை இழந்து விட்டிருந்தது. மோடியை பிராண்ட் ஆக்குவதற்கு காங்கிரஸே இடம் கொடுத்திருந்தது. 

‘ஒரு பொதுவான தேவையை உணர்த்தி அதற்குரிய விளைவுகளையும் ஒரு பிராண்டினால் உருவாக்க முடிந்தால், அதன் எல்லைகளை விரிவாக்க முடியும். என்கிற ’இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸின்’ பேராசிரியர் ஸ்ரீதர் சாமு, ஒரு பிரதேசத்தில் மட்டுமே  இருந்த சரவணபவனும் ஹால்டராமும் எப்படி தேசீய பிராண்டாக தங்களை உயர்த்திக் கொண்டன என்பதை சுட்டிக் காட்டினார். 

குறுகிய காலத்தில் தேசத்தின் குறுக்கும் நெடுக்குமாக 5000க்கும் மேற்பட்ட நிகழ்வுகளில், 470க்கும் மேற்பட்ட  அரசியல் கூட்டங்களில் பறந்து பறந்து மோடி கலந்து கொண்டார். பறவையின் பார்வையில் மேலிருந்து பார்த்தால் இந்தியாவை அப்படியே இறுக்கப் பிணைத்த ஒரு சிலந்தி வலையைப் போல அவரது பயணத்தின் பாதைகள் தெரிந்தன. 

அடுத்ததாக மோடி மீது படிந்திருந்த குஜராத் கலவரக் கறைகளை என்ன செய்வது? ஒரு பிராண்டைப் பொறுத்த வரையில் அதை மறுக்கவும் கூடாது.  அதே நேரம் அதுகுறித்து  பேச்சை வளர்க்கவும் கூடாது. பேச ஆரம்பித்தால், அது குறித்த விவாதங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கும். மக்களின் நினைவுகளில் ஆழமாகப் பதிந்துவிடும். சர்ச்சைகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பது ஒரு ‘பிராண்டின்’ சூத்திரம். 

காட்பரிஸ் சாக்லெட்டில் புழு இருந்தது. கோக், பெப்சியில் நச்சுத்தன்மை இருந்தது. அந்த நேரத்தில் பதற்றத்தோடும் கடும் வேகத்தோடும் பேசப்பட்டன. கோக்கும் பெப்சியும் விற்றுக்கொண்டே இருந்தன. மெல்ல மெல்ல எதிர்ப்புகள் அடங்கி, முணுமுணுப்பாகி பின்னர் எந்தப் பேச்சும் இல்லாமலேயே போய்விட்டது. விளையாட்டு மற்றும் சினிமாவில் பிரபலமானவர்களின் கைகளில் பெப்சியும், கோக்கும் இருந்தன. 

2003க்குப் பிறகு குஜராத் கலவரங்கள் குறித்து மோடி பேசுவதை குறைத்துக் கொண்டே வந்தார். அவரது ஒரே மந்திரமாக ‘வளர்ச்சி’ மட்டுமே இருந்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களின் அபிமானத்துக்குரியவர்கள் மோடியை சந்தித்த அல்லது மோடி அவர்களைப் போய் சந்தித்த  நிகழ்வுகள் அரங்கேறின. அவர்கள் நெருங்கி நின்று சிரித்த வண்ணம் காட்சியளித்தனர். இரக்கமற்ற, கொடூரமான, வெறுப்பைக் கக்கிய உருவத்திலிருந்து உறுதியான, வேகமான, எதிர்காலம் குறித்து சிந்திக்கக் கூடிய கனவானின் உருவத்திற்கு மோடியின் பிம்பம் மாறியது. ’புதிய மனிதா, பூமிக்கு வா’ என கார்ப்பரேட்கள் கொண்டாடினார்கள். 

பிறகென்ன? கண்கள் மற்றும் காதுகள் வழியாக 2013 இறுதியில் இந்திய மக்கள் அனைவருக்குள்ளும் “ஆப் கி பார் மோடி சர்க்கார்” என்ற வார்த்தைகள் சொருகப்பட்டன. அதாவது “இந்த தடவை மோடி அரசு!” 

மூன்றாவது நகர்ப்புறத்து மக்களோடும் இளைஞர்களோடும் தொடர்பு கொள்வதற்கு மோடி என்னும் பிராண்டுக்கு கிடைத்த வரப்பிரசாதம் சோஷியல் மீடியாக்கள். பிஜேபி தலைவர்கள் ஃபியூஸ் கோயல் மற்றும் அஜய் சிங் தலைமையில் ஒரு பெரும் படையே 24 மணி நேரமும் இயங்கியது. பிஜேபியின் தகவல் & தொடர்பு துறையினருக்கு இந்தியாவில் இருக்கும் ஃபேஸ்புக் ஊழியர்கள் பயிற்சி கொடுத்தார்கள். 

செய்திகளும், தகவல்களுமே அறிவாகவும், ஞானமாகவும் சுருக்கப்பட்டு இருந்தது. தகவல்களை வடிகட்டி, கடந்த காலத்தின் பின்னணியோடு பகுத்துப் பார்ப்பதுதான் அறிவு என்பதை அறியாமல் இருந்தார்கள்.  இரண்டு ஃபார்வேர்டு மெஸேஜ்களை படித்து விட்டு எல்லாம் தெரிந்தவர்களாய் தங்களை கருதிக் கொண்டார்கள். நுனிப்புல் மேய்ந்துவிட்டு தொடை தட்டி பேசுவதில் கெட்டிக்காரர்களாகி விட்டார்கள். பெரும்பாலான இந்திய மத்தியதர வர்க்கத்தையும் படித்த இளஞர்களையும் பீடித்த சாபம் மட்டும் அல்ல, ஒரு பிராண்டை அறிமுகப்படுத்துவதற்கும், வார்ப்பதற்கும் உற்ற சூழல் அது.  

குஜராத்தில் எல்லா வாய்ப்புகளும், வசதிகளும் உருவாக்கப்பட்டிருப்பதாக, குஜராத்திற்கு வெளியே தொடர்ந்து வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் செய்திகள் ஃபார்வேர்டு ஆகிக் கொண்டே இருந்தன. டாட்டா, அம்பானி போன்ற கார்ப்பரேட்கள் வெளிப்படையாக மோடியை பாராட்டி வந்தார்கள். குஜராத்தில் தொழில்துறை, விவசாயத் துறை, தகவல் தொழில்நுட்ப துறை, உள் கட்டமைப்பு எல்லாம் அசுர வளர்ச்சி கண்டிருப்பதாக கானல் அலைகளை எங்கும் மிதக்க விட்டார்கள். 

ஆனாலும் மிக முக்கியமாக புதிய வாக்காளர்களான 15 கோடி இளைஞர்களை மோடி என்னும் பிராண்ட் தன் பக்கம் கவர வேண்டி இருந்தது.  

எல்லாம் தெரிந்த, வலிமையான ஒரு தந்தையின் பிம்பத்தை மோடிக்கு கட்டமைப்பதில் அவர்கள் ஈடுபட்டார்கள். மோடியின் சிறு வயதுக் கதைகளை காமிக்ஸ் மூலமாகவும், புத்தகங்கள் மூலமாகவும், வாய்மொழி வழியாகவும் பரப்ப ஆரம்பித்தார்கள். முதலைகள் நிறைந்த குளத்தில் நீந்திய சிறுவனாக ஒரு கதை. இளைஞனானதும் பொது வாழ்க்கைக்காக குடும்பத்தை விட்டு வெளியேறியதாக ஒரு கதை. இரண்டையும் இணைத்துப் பார்த்தால் துணிவும், அர்ப்பணிப்பும் மிக்க ஒரு பிம்பம் அரூபமாய் மூளையில் படரும். 

‘நரேந்திர மோடி’யை ‘நமோ’ என சமஸ்கிருதச் சொல்லாடலோடு அழைக்க ஆரம்பித்தார்கள். மிக எளிதாக பெரும்பாலான மனிதர்களுக்குள் ஊடுருவும் வார்த்தையானது.’ப்ரோ’ என அழைத்துப் பழகும் இன்றைய நவயுக  மனிதர்களுக்கும் ‘நமோ’ நெருக்கமானது. 

கடும் கிண்டல்களும், கேலிகளும் ஒரு புறம் எழுந்தாலும், ஊதிப் பெருக்கப்பட்ட அந்தக் கதைகளின் முன்னே அவையெல்லாம் அலட்சியப்படுத்தக் கூடிய அளவில் சொற்பமாகவே இருந்தன. 

இளைஞனான மோடி துடைப்பத்தால் பெருக்குவதைப் போன்று வெளியிடப்பட்ட போட்டோவை குறிப்பிட்டாக வேண்டும். வைரலாக எங்கும் பரப்பப்பட்டது. எளிமையான, பணிவான, உண்மையான, உழைக்கிற தோற்றம் யாரையும் சட்டென்று கவரும். அந்த போட்டோ பொய்யானது என்றும், போட்டோஷாப்பில் உருவமாற்றம் செய்யப்பட்டது எனவும் பின்னாளில் தெரிய வந்தது. அதற்குள் மக்களின் மனதில் அந்த பிம்பம் அழிக்க முடியாதபடிக்கு பதிய வைக்கப்பட்டிருந்தது.

 ஃபேஸ்புக், ட்வீட்டரில் நரேந்திர மோடி 2009லிருந்தே இருந்தார். அதில் தொடர்ந்து அவர் பதிவு செய்தும் வந்திருந்தார். அவை யாவுமே அவரது நீண்ட கால, தீர்க்கமான இலக்குகளை நோக்கியதாக இருந்தன. 

மிக முக்கியமாக, மோடியின் பேச்சாற்றலை குறிப்பிட வேண்டும். சிந்திக்கத் தூண்டாமல், உணர்ச்சி வசப்பட வைக்கும் தன்மை நிறைந்தது அது. வரலாற்றில் ஹிட்லரும் இது போன்று மக்களை ஆர்ப்பரிக்க வைக்கிற, வெறியேற்றுகிற பேச்சாளனாக இருந்தான். ’ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது நம்பப்பட்டுவிடும்’ என்பதை உலகுக்கு காட்டியவன். அப்படி மக்களை நம்ப வைக்க க் கூடியவராய் இருந்தார் மோடி. 

2013 பிப்ரவரி 6ம் தேதி டெல்லி ’ஸ்ரீராம் காலேஜ் ஆஃப் காமர்ஸில்’ மோடி பேசினார். அன்றைக்கு இந்திய அரசியலில் ஒரு சாதாரண நிகழ்வாக பார்த்திருக்கக் கூடும். 15கோடி முதன்முறை வாக்காளர்களை குறிவைத்து அந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தங்கள் எதிர்காலம் குறித்து கனவுகளும், கவலைகளும் நிறைந்த அந்த கல்லூரி மாணவர்கள் திரண்டிருந்தார்கள். மோடி என்னும் ’பிராண்ட்’ அன்றுதான் அறிமுகப்படுத்தப்பட்டது. 

“இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய மகாத்மா காந்தியின், வல்லபாய் பட்டேலின் பூமியிலிருந்து  நான் வந்திருக்கிறேன்” என்று ஆரம்பித்து அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் நன்கு திட்டமிடப்பட்டு முன்வைக்கப்பட்டவை. 

”உலக வரைபடத்தில் தனக்கான இடத்தை இந்தியா கண்டு கொள்ள வேண்டுமானால், நல்ல நிர்வாகம் வேண்டும்” என்றார்.  “இது விவேகானந்தரின் 150வது ஆண்டு. இதனை நாம் ‘யுவ வருஷமாக’ நினைவு கூர்வோம்” என்றார். 

“ஒரு முறை வெளிநாட்டு தூதுவர் என்னை பார்க்க வந்தார். இந்தியாவின் சவால்கள் என்னவென்று நினைக்கிறீர்கள் என்று என்னிடம் கேட்டார். இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதுதான் சவால் என்றேன். அவர் ஆச்சரியமடைந்தார். உலகில் அதிகம் இளைஞர்களைக் கொண்ட நாடு இப்போது இந்தியாதான் என்று சொன்னேன்” என்றார். 

“இந்திய இளைஞர்கள் இங்கே புதிய வாக்காளர்களாக பார்க்கப்படுகிறார்கள். நம் இளைஞர்களை நான்  புதிய சக்தியாக பார்க்கிறேன்.” என்றார். 

திரும்பத் திரும்ப இளைஞர்களை தூக்கி வைத்து கொண்டாடினார் மோடி. அந்த புதிய வாக்காளர்கள் அப்படியே வசியம் செய்யப்பட்டிருந்தார்கள். ஆரவாரித்துக் கிடந்தார்கள். தங்களை இரட்சிக்க வந்த  தேவதூதன் மோடிதான் என்று நம்பினார்கள். 

“இந்தியாவை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் மோடியிடம் அதற்கான ஆற்றலும்  வேகமும் இருக்கிறது” என்றார் அந்தக் கல்லூரியில் பி.ஏ ஹானர்ஸ் படித்துக்கொண்டு இருந்த 19 வயதான அபிஷேக். 

“குஜராத்திற்கு மோடி நிறைய செய்திருக்கிறார். தேசீய அளவில் அவருக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்” என்றார் மிடல் குப்தா என்னும் மாணவர். 

“நாம் வல்லரசாக வேண்டுமென்றால், நமது பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டும். அதற்கு சரியான மனிதர் மோடியே!” என்றார்  செஜ்வால். 

அன்றைய மோடியின் பேச்சையும், மாணவர்களின் கருத்துக்களையும் இந்தியாவின் ஊடகங்கள் அனைத்தும் மாற்றி மாற்றி ஒளிபரப்பின. ஃபேஸ்புக், ட்வீட்டர் எல்லாவற்றிலும் வைரலாயின. 

அதே நாளில் மோடியின் வருகையை எதிர்த்து அதே கல்லூரி மாணவர்களில் சிலர் வெளியே நின்று கோஷங்கள் எழுப்பிக்கொண்டு இருந்தனர். ஊடகங்கள் அதனை கண்டு கொள்ளவில்லை. உலகமும் அறிந்திருக்கவில்லை. 

எதிர்த்த அந்த மாணவர்களுக்குத் தெரிந்திருந்தது…. ’திரும்ப திரும்பச் சொன்னாலும் பொய் உண்மையாகி விடாது’ என்பது. 

அதற்குப் பிறகான மீதிக் கதையும், இன்று வரையிலான தொடர்கதையும் அதுதான். 

ஆதாரங்கள்;  

* Case study: The strategy and tactics behind the creation of Brand Modi

* Meet the advisors who helped make the BJP a social media powerhouse of data and propaganda

* Narendra Modi Is Everything Apart From What He Seems – Wire, April 8, 2021

* Narendra Modi used to swim past crocodiles, comic book on him reveals – One India, Mar 24, 2014

* Development alone is the solutions to all problems: Shri Modi delivers inspiring address at SRCC! – Narendramodi.in

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 07, 2022 01:27