காலச்சுமை [Kaala Sumai] Quotes
காலச்சுமை [Kaala Sumai]
by
ராஜ் கௌதமன்2 ratings, 4.00 average rating, 0 reviews
காலச்சுமை [Kaala Sumai] Quotes
Showing 1-30 of 34
“சிலுவைக்கு எஞ்சிய நாட்களில் எப்பிடி வாழணும்னு ஒரு தெளிவு வந்து பத்து வருசமாச்சு. ஒடம்பு ஒத்துழைக்கிற வரைக்கும் படிக்கிறது, எழுதுறது... பெறகு? செத்துப்போறது, அவ்வளவுதான். இந்த ஒலகத்த விட்டுப் போகுறபோது விட்டகுறை தொட்டகுறைன்னு ஒண்ணும் இருக்கக்கூடாது. போகப் போறோமேன்னு வருத்தமும் கெடையாது. ஒரு விசயத்துக்காக வருத்தம் வரத்தான் செய்யும். சம்சாரத்துக்கு முன்னாடியே போயிரணும். அது ரொம்ப முக்கியம். மனுசங்களத் தவிர்த்து இந்த இயற்கையை விட்டுப்போறதுல ரொம்ப வருத்தம்தான். காலமும் இடமும் இப்படி ஈவு இரக்கமில்லாமல் ஒவ்வொரு ஜீவராசியையும் வளத்து ஆளாக்கி அனுபவிக்க வச்சு ஒரேயடியா அழிச்சுப் போடுவதப் பத்திச் சிலுவைக்குச் சங்கடம்தான். சங்கடப்பட்டு என்ன ஆகப்போகுது?”
― காலச்சுமை [Kaala Sumai]
― காலச்சுமை [Kaala Sumai]
“வெள்ளை, சிவப்பு, பிங்க் வண்ணங்களில் வருசம் பூராவும் செம்பருத்திப் பூக்கள் மலர்ந்து குழந்தைகளைப் போலச் சிரிக்கும். சாயந்தரம் சாயந்தரம் தண்ணி பாய்ச்சும் போது திருட்டுத்தனமாக அந்தச் செடிகள் சிலுவையைத் தொட்டுப் பார்க்கும். சிலுவைக்கி அது தெரியும். ஆனா தெரியாதென்று செடிகளுக்கு நினைப்பு. சில அபூர்வமான கணங்களில் சிலுவையோடு ஏதோ சில விசயங்களைப் பேசத் துடிப்பது போலத் தெரியும். இருந்தாலும் அவை எதைப் பற்றியோ பேசிக் கொண்டுதான் இருந்தன. கேட்கிற நுட்பத்தை மனிதர்கள் இழந்துவிட்டதாகத்தான் தெரிகிறது. என்றைக்காவது ஒருநாள் அவை பேசுவதைச் சிலுவை கேட்கத்தான் போகிறான்.”
― காலச்சுமை [Kaala Sumai]
― காலச்சுமை [Kaala Sumai]
“படிப்பும் எழுத்தும்தான் அவன் இந்த உலகத்தில் இருப்பதற்கான நியாயத்தைத் தந்துகொண்டிருந்தன.”
― காலச்சுமை [Kaala Sumai]
― காலச்சுமை [Kaala Sumai]
“பொறியில் மாட்டிக்கிட்ட எலிமாதிரிதான் மனுசப்பொழப்பு. மொதல்ல படபடன்னு கெடந்து தவிக்கும். தப்பிக்கப் பாடுபடும், பரபரக்கும். அப்றம் போகப் போகப் பொறிக்குள்ளேயே வாழப் பழகிடும்.”
― காலச்சுமை [Kaala Sumai]
― காலச்சுமை [Kaala Sumai]
“சிலுவைக்கு இப்ப எந்த நம்பிக்கையும் இல்ல; கடவுள் நம்பிக்கை போயி பல வருசங்களாச்சு. அறிவில்லாமக் கூட வாழ்ந்திடலாம் போல, நம்பிக்கையில்லன்னா முடியாது. இடிமேல இடி வரும்போது ஏதாச்சும் ஒரு மூடநம்பிக்கையிருந்தா சமாளிச்சிடலாம்தான். இல்லன்னா சிலுவ மாதிரிதான். நம்பிக்கை காலியான இடத்தில கொஞ்சங் கொஞ்சமா குடிப்பழக்கமும் போதையும் திருப்பள்ளி கொள்ளத் தொடங்கின. விசயம் காலம் கடந்துதான் அவனுக்குத் தெரிய வந்தது. கடவுளுக்கும் சகுனத்துக்கும் சம்பிரதாயத்துக்கும் சடங்குகளுக்கும்... இன்னும் எதெதுக்கெல்லாமோ சனங்க அடிக்ட் ஆகிற மாதிரிதான் சிலுவை குடிக்கு அடிக்ட் ஆயிட்டான்.”
― காலச்சுமை [Kaala Sumai]
― காலச்சுமை [Kaala Sumai]
“கடை வாசல்ல வந்து சிலுவை நிண்ணபோது பெயலுக்கு ஒரு நிதானமில்ல. பேண்ட் பைகளுக்குள்ள ரெண்டு கைகளையும் நொழச்சுக்கிட்டு ஸ்டாண்ட் அட் ஈஸ் பொசிசன்ல நிண்ணாம். மெட்ராஸை அண்ணாந்து பாத்தான். அப்ப அது அவனது காலடியில் ஒரு நாய்க்குட்டியப் போல படுத்துக் கிடந்தது! என்ன பெரிய மெட்ராஸ்!”
― காலச்சுமை [Kaala Sumai]
― காலச்சுமை [Kaala Sumai]
“உடல்ல வலு கொறையக் கொறைய, வாழ்க்கை பற்றியும் மனுசங்க பற்றியும் கொண்டிருந்த எண்ணங்களும் மாறும் என்று சொல்வார்கள். அது சர்தாம்னு சிலுவைக்குப் பட்டது.”
― காலச்சுமை [Kaala Sumai]
― காலச்சுமை [Kaala Sumai]
“தனக்குத் தெரிந்ததொரு வாழ்க்கை முறைக்கு மற்றவன் வராமல் ஒதுங்கிப் போவது ஒருவனுக்கு வருத்தத்தையும் கோபத்தையும் தருமோ? நாலுபேர் எப்பிடியிருக்காங்களோ அப்பிடி ஒருவன் இருக்குமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறானோ என்ற சந்தேகம் சிலுவைக்கு வரும். அந்த நிர்ப்பந்தத்துக்குக் கட்டுப்படாமல் ஒருவன் தன் இஷ்டத்துக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுவதை மற்றவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஏன்?”
― காலச்சுமை [Kaala Sumai]
― காலச்சுமை [Kaala Sumai]
“ஒரு படைப்பாளியை எழுதவிடாமல் செய்ய வேண்டும் என்றால் அவருக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கிடணும்.”
― காலச்சுமை [Kaala Sumai]
― காலச்சுமை [Kaala Sumai]
“போதாக்குறைக்கு இந்த சாகித்ய அகாடெமி விருது வேற இவர்களைப் போட்டுப் பாடாய்ப்படுத்துகிறது. முன்பெல்லாம் வரிசையாக பிராமண வெள்ளாள படைப்பாளிகளுக்கே இந்த விருது கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இப்போ சில வருசங்களாக மத்த சாதிக்கார ஆள்களுக்கும் கிடைக்கிறது. முற்போக்குகள் அகாடமி விருது மெம்பர்களாக ஆக்கிரமிக்கிறபோது முற்போக்கு எழுத்தாளர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. பி.ஸி. சாதிக்காரங்க ஆக்கிரமிக்கிறபோது அவுங்க சாதி ஆட்களுக்கு வழங்கப்படுகிறது. போகிற போக்கைப் பார்த்தா தலித்துக்களுக்கும் பெண்களுக்கும்கூட இது வழங்கப்படலாம்.
இந்த மகத்தான சாகித்திய அகாடமி விருது கிடைத்த பிறகு அந்த எழுத்தாளர்களுக்கு என்னமோ ஆகிவிடுகிறது. இலக்கிய நிர்வாகிகளாகவும் அதிகாரிகளாகவும் அரசியல்வாதிகளாகவும் அவர்கள் மாறிவிடுவதால் படைப்புப் பணியைக் கோட்டைவிட்டு விடுகிறார்கள். அதுக்குப் பெறகு எழுதுவதே இல்லை. எழுதமுடியவில்லை. பரிசு கிடைத்தவுடனே சரக்கு தீர்ந்துவிடுமோ என்னவோ? ஒரு படைப்பாளியை எழுதவிடாமல் செய்ய வேண்டும் என்றால் அவருக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கிடணும்.”
― காலச்சுமை [Kaala Sumai]
இந்த மகத்தான சாகித்திய அகாடமி விருது கிடைத்த பிறகு அந்த எழுத்தாளர்களுக்கு என்னமோ ஆகிவிடுகிறது. இலக்கிய நிர்வாகிகளாகவும் அதிகாரிகளாகவும் அரசியல்வாதிகளாகவும் அவர்கள் மாறிவிடுவதால் படைப்புப் பணியைக் கோட்டைவிட்டு விடுகிறார்கள். அதுக்குப் பெறகு எழுதுவதே இல்லை. எழுதமுடியவில்லை. பரிசு கிடைத்தவுடனே சரக்கு தீர்ந்துவிடுமோ என்னவோ? ஒரு படைப்பாளியை எழுதவிடாமல் செய்ய வேண்டும் என்றால் அவருக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கிடணும்.”
― காலச்சுமை [Kaala Sumai]
“கிருஷ்ணனோடு மாதவையா பற்றி தான் செய்துவந்த ஆராய்ச்சி பற்றிச் சிலுவை அவ்வப்போது விவாதிப்பதுண்டு. அப்பிடி ஒரு தடவை விவாதித்தபோது ரெண்டு பேருக்கும் சண்டை வந்தது. விசயம் இதுதான். மாதவையா நாவல்களிலும் வாழ்க்கை நோக்கிலும் ஆங்கிலேய விக்டோரிய நாவலாசான் தாக்கரேயின் பாதிப்பு வெளிப்படையாகவே தெரிந்தது. இதன் முதன்முதலா கண்டுபிடிச்சவர், வி.கோ. சூரியநாராயண சாஸ்திரிதான். மாதவையாவின் முதல் நாவல் 'பத்மாவதி சரித்திரம்' வெளிவந்தவுடனேயே (1898) 'தி மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் மேகஸின்'ல இங்கிலீஷ்ல இதுவிசயமா ரெண்டொரு வரி எழுதினார். இவரை மாதிரியே ஹாரிஸன்னு ஒரு ஆங்கிலேய விமர்சகரும் தாக்கரே தாக்கம் பற்றிப் போகிறபோக்கில் குறிப்பிட்டார். பின்னால க.கைலாசபதிதான் 'வேனிடிஃபேர்'ங்கிற தாக்கரேயின் புகழ்பெற்ற நாவல வச்சு இதை நிரூபிச்சார். சிலுவைராஜ், 'தி ஹிஸ்டரி ஆஃப் பென்டென்னிஸ்', 'தி ஹிஸ்டரி ஆஃப் ஹென்றி எஸ்மாண்ட்', 'தி நியூ கோம்ஸ்'ங்கிற தாக்கரேயோட மத்த நாவல்கள வச்சு ரொம்ப விரிவாக ஆராய்ச்சி பண்ணி நிரூபிச்சிருந்தான். இந்த நாவல்கள்ள தமக்குப் பிடித்தமான வாசகங்கள், பாத்திர விமர்சனங்கள், கருத்துக்கள், பாத்திரங்கள், நாவல் உத்திகள் எல்லாத்தையும் மாதவையா மூல ஆசிரியர் பேரக் குறிப்பிடாம 'பத்மாவதி சரித்திரத்'தில் எடுத்தாண்டிருந்தார். சில பக்கங்களைக் கொஞ்சங் கொஞ்சம் மாத்தி அப்பிடியே மொழிபெயர்த்தும் இருந்தார். என்ன இருந்தாலும் மூல ஆசானின் பேரக் குறிப்பிடாமச் சொந்தச் சரக்கு மாதிரி எழுதியது சரியில்லைங்கிறது சிலுவையின் வாதம். கிருஷ்ணனுக்கு கோபம். மொகமெல்லாம் சிவந்து போச்சு. ரெண்டு மகான்களோட சிந்தனை ஏன் ஒன்றாயிருக்கக்கூடாது. கிரேட்மென் திங்க் அலைக்... தாக்கரே மாதிரியே மாதவையாவும் சுய சிந்தனையாளர்தான்...
"அது சரிதான்... அத மறுக்கல... மாதவையா முதல் நாவல் எழுதின போது அவருக்கு வயது இருபத்தாறுதான். அவர் காலத்தில சமூகப் பிரச்சினைகள வச்சு வெளிவந்த நாவல்கள் தமிழில் இல்ல. இங்கிலீஸ்லதாம் இருந்தது. மாதவையாவுக்கு நெருக்கமா இருந்தது தாக்கரேதான். ரெண்டு பேர் சிந்தனைகளும் ஒத்துப்போச்சு. தமிழ்ல நாவல் எழுதுவது அப்ப ரொம்ப புதுசு. தம்மோட முதல் நாவல்ல தாக்கரே பாணிய எடுத்துக்கிட்டாரு... ஆனா அவரோட பேரை விட்டதுதான் சரியில்லை...'" என்று சிலுவை ஆதாரப்பூர்வமாகச் சொல்லியும் கிருஷ்ணன் ஒத்துக்கிடல. இந்த விசயத்துல ரெண்டு பேரும் கொஞ்ச நாள் டூ விட்டிருந்தாங்க. பெறகு சரியாப்போச்சு. அடுத்தடுத்து நடந்த விவாதங்கள்ள இந்த விசயத்த மட்டும் விட்டிருவாங்க.”
― காலச்சுமை [Kaala Sumai]
"அது சரிதான்... அத மறுக்கல... மாதவையா முதல் நாவல் எழுதின போது அவருக்கு வயது இருபத்தாறுதான். அவர் காலத்தில சமூகப் பிரச்சினைகள வச்சு வெளிவந்த நாவல்கள் தமிழில் இல்ல. இங்கிலீஸ்லதாம் இருந்தது. மாதவையாவுக்கு நெருக்கமா இருந்தது தாக்கரேதான். ரெண்டு பேர் சிந்தனைகளும் ஒத்துப்போச்சு. தமிழ்ல நாவல் எழுதுவது அப்ப ரொம்ப புதுசு. தம்மோட முதல் நாவல்ல தாக்கரே பாணிய எடுத்துக்கிட்டாரு... ஆனா அவரோட பேரை விட்டதுதான் சரியில்லை...'" என்று சிலுவை ஆதாரப்பூர்வமாகச் சொல்லியும் கிருஷ்ணன் ஒத்துக்கிடல. இந்த விசயத்துல ரெண்டு பேரும் கொஞ்ச நாள் டூ விட்டிருந்தாங்க. பெறகு சரியாப்போச்சு. அடுத்தடுத்து நடந்த விவாதங்கள்ள இந்த விசயத்த மட்டும் விட்டிருவாங்க.”
― காலச்சுமை [Kaala Sumai]
“மாதவையா மாதிரியே சுவாரஸ்யமான இன்னொரு மனிதர் மா.கிருஷ்ணன். இவர் மாதவையாவோட எட்டாவது குழந்தை. கடைசியும்தான். கிருஷ்ணனை, ஆய்வுத் தொடர்பாகச் சிலுவை சந்தித்தபோது அவருக்கு எழுப்பத்தைந்தைத் தாண்டியிருந்தது. ஆள் நல்ல உயரம், வேட்டி மட்டும்தான். பூணூலைக் காணும்; போடுவதில்லையாம்...தம்மை ஒரு நாஸ்திகன் என்றே சிலுவையிடம் பிரகடனம் செய்தார்.”
― காலச்சுமை [Kaala Sumai]
― காலச்சுமை [Kaala Sumai]
“மாதவையா பற்றி ஆய்வு செஞ்சபோது, போயும்போயும் ஒரு பாப்பானத்தானா ஆய்வுக்கு எடுத்துக்கிடணும்னு சில பெரியார் அன்பர்கள் சொன்னதுண்டு. பெரியாரை விடவும் தாம் பிறந்த பார்ப்பனச் சமூகத்தை ஆழமாக விமர்சனம் பண்ணியவர் மாதவையா என்பது அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. மாதவையா ஒரு ஐரோப்பிய கனவானின் நவீன நோக்கில் மனிதர்களைச் சாதி மதம் கடந்து பார்த்தவர். மேற்கத்திய நவீனச் சிந்தனைகளின் ஆரோக்கியமான தாக்கத்துக்கு உள்ளானவர். இந்து சமூகத்தை அரித்துக் கொண்டிருந்த கபடவேடதாரித்தனங்களைப் புதுமைப்பித்தனுக்கு முன்பே நக்கல் செய்து விமர்சித்தவர். மனிதர்களைச் சாதி மதங்களோடு சார்புபடுத்தாமல், தனிமனிதர்களாக, பலமும் பலவீனமும் உடையவர்களாக, சூழல்களின் தாக்கத்துக்கு உள்ளாகிச் செயல்படுகிறவர்களாகப் பார்த்த முதல் படைப்பாளியே இவராகத்தான் இருக்க வேண்டும். பலவீனமே இல்லாத மனுசன் யாரும் இல்லைங்கிறது மாதவையாவின் ஸ்பெஷாலிட்டின்னே சொல்லிவிடலாம்.”
― காலச்சுமை [Kaala Sumai]
― காலச்சுமை [Kaala Sumai]
“காலம் சுருங்கி இடம் விரிந்துபோன பெரு நகரத்தில் பகுதி பகுதியான வாழ்க்கைதான் வாழமுடியும். அந்தந்தத் தேவைக்கு மட்டும் மனிதர்களைப் பயன்படுத்திக் கொள்ளுவதுதான் நகர வாழ்க்கையின் தர்மம்! யாரையும் முழசாப் பாக்க அவசியமில்ல, அதுக்கான நேரமும் இல்லை; சிலுவைக்கு அவன் எப்பவும் தேங்கா வாங்குகிற கடைக்காரரை ஒக்காந்த மேனிக்குத்தான் தெரியும், அவர் நிற்பதையோ நடப்பதையோ அவன் பாத்ததில்லை, அவருடைய முகம் கூட தேங்காயை வைத்துத்தான் அடையாளம் தெரியும். ஒருவரைச் சிலுவைக்குக் கழுத்துவரைக்கும்தான் தெரியும், ஸ்கூட்டர், பைக், மொபட்ல இருந்த மேனிக்குத்தான் பலரை பாத்துப் பழக்கம். இந்த வாகனங்களிலுள்ள உறுப்புகளில் ஒண்ணாத்தான் இவர்களைப் பார்த்திருக்கிறான். தோப்புக்குள்ளே சுற்றித் திரிகிற அனுபவத்தை சூப்பர் மார்க்கெட்டில் எதிர்பார்க்க முடியாதுதான். சிலுவைக்குப் பிரச்சினையே இதுதான். பாண்டிச்சேரிக்கு ஏன் வந்தோம்னு ஆச்சு!”
― காலச்சுமை [Kaala Sumai]
― காலச்சுமை [Kaala Sumai]
“நண்பர்களும் உறவினர்களும் இல்லாத வாழ்க்கைதான் தனக்கு விதிக்கப்பட்டதென்ற முடிவுக்குச் சிலுவை வந்துவிட்டான். அவன் செத்தபிறகு அவனைத் தூக்க நாலு பேராச்சும் வருவார்களா என்பது சந்தேகம்தான். அதுக்காக அவன் கவலைப்படவில்லை. 'செத்தபிறகு எத்தின பேர் வர்றாங்கன்னு நமக்கு தெரியவாப் போகுது?'ன்னு சொல்லிச் சிரிப்பான். 'யார் வந்தாலும் வராவிட்டாலும் சிலுவையின் கையில் கம்பன் கவியுண்டு. கலசம் நிறைய அமுதுண்டு.' இவை போதாதா?”
― காலச்சுமை [Kaala Sumai]
― காலச்சுமை [Kaala Sumai]
“பாண்டிச்சேரியிலிருந்த காலகட்டத்தில் ஒருநாள் பாண்டி புக் சென்டர் கடைக்கு முன்னால நின்னு சிலுவையும் ஞானமும் தண்ணியடிச்ச ஜோர்ல பேசிக்கிட்டிருந்தாங்க. என்னமோ பேசத் தொடங்கி எங்கேயோ போச்சு. சிலுவை ஏதோ குண்டக்க மண்டக்க பேசினதும் ஞானம் அவன் செவிட்டில் ஓங்கி அறை குடுத்தார். சிலுவைக்கு கிர்ன்னு தல சுத்திற்று. அறைஞ்சவர் 'பழசெல்லாம் மறந்துபோச்சா? அத நெனச்சுப் பாரு'ன்னு ஒரு விரல நீட்டிப் பத்தரங்காட்டினார். அப்பதான் சிலுவைக்கு அதுவரை அவர்கிட்ட சலம்பி வந்தது எதுன்னு புரிஞ்சது. அவரு அறைஞ்சதுகூட அவனுக்கு வலிக்கல. அவர் என்ன சொல்ல வர்றார்? பழச மறக்கக்கூடாதாக்கும்? ஏன்? ஏன். ஏம்யா மறக்கக்கூடாது? கூழ் குடிச்சத, மாடு தின்னத, பட்டினியாக் கெடந்து காடு கரைகள்ள வேகாரிக்கு அலஞ்சத, களவாண்டத, ஒரு சல்லிக்காசில்லாம ரெண்டு வருசமாக் கெடந்தத, வீட்ட விட்டு விரட்டப்பட்டத, தற்கொலைக்கு முயற்சி பண்ணியத... இதுகள எல்லாத்தையும் மறக்காம இருக்கணுமாக்கும்? அதாவது 'நீ பறையன்கிறத மறக்காத'ன்னுதான சொல்ல வாரீக... பழச நான் மறக்கணும். பழச எல்லாம் அழிக்கணும். என்னமாதிரி ஆளுகள இந்த கெதிக்கு ஆளாக்கின பழசையெல்லாம் நிர்மூலமா ஆக்கணும்... சிலுவைக்கு ஆங்காரமாக வரும்.”
― காலச்சுமை [Kaala Sumai]
― காலச்சுமை [Kaala Sumai]
“பொது நியாயம் என்பது இட்டுக்கட்டிய ஒரு வன்முறை. இதை வைத்துக்கொண்டு யாரையும் தாக்கலாம். கெடுக்கலாம். கொச்சைப்படுத்தலாம்.”
― காலச்சுமை [Kaala Sumai]
― காலச்சுமை [Kaala Sumai]
“சிலுவைக்குத் தொடர்ந்து கிடைத்த அனுபவங்களுக்குப் பிறகு சக மனுசங்களோடு வைத்துக்கொள்ளக்கூடிய உறவுகளைப் பற்றி எச்சரிக்கையடைந்தான். நெருங்கிப் போனால் முட்டும். விலகிப் போனால் முகம் சுழிக்கும். நட்பும் உறவும் ஒருவகையில் நம்மை மற்றவர்களுக்கு உகந்தவர்களாக ஆக்க பலவந்தப்படுத்துகின்றன. பெரும்பான்மை நியாயங்களைக் காட்டி மிரட்டுகின்றன. சிலுவைக்கு இது போகப் போக புரிந்தது. மற்றவர்களுடைய எதிர்பார்ப்புக்கும் அவர்கள் சொல்லுகிற நியாயங்களுக்கும் அனுசரித்துப் போக முடியாது. அது வாழ்க்கையே இல்லை.”
― காலச்சுமை [Kaala Sumai]
― காலச்சுமை [Kaala Sumai]
“தாஸ்தாவஸ்கிதான் அவனுடைய எழுத்தாளர். அவருடைய நாவல், சிறுகதைகளைப் படிச்சுப் படிச்சு அதுகளில் வருகிற பாத்திரங்களாகவே வாழ முயன்றுகொண்டிருந்தான்.”
― காலச்சுமை [Kaala Sumai]
― காலச்சுமை [Kaala Sumai]
“சக எஸ்.ஸி ஆசிரியர்களோடு முழுசாக சிலுவை ஒட்டாமல் ஒரு வித்தியாசத்தைத் தன்னையறியாமலே பேணி பராமரித்ததற்கு அவன் என்ன விளக்கம் வைத்திருந்தானோ தெரியவில்லை. ஆனால் சக எஸ்.ஸி ஆசிரியர்கள் வைத்திருந்தார்கள். 'சிலுவை பிறப்பால் கிறிஸ்டியன்; அதனால சாமியார்கள் நடத்துன பெரிய பெரிய ஸ்கூல்லயும் காலேஜிலும் படிக்க சான்ஸ் கெடச்சது. கூலி வேலைக்குப் போனதில்ல. அவுஹ அப்பா மிலிட்டரி செர்வீஸ்; சொளையா மாசாமாசம் பணம் வந்துச்சு. படிச்சு முடிக்கிறவரைக்கும் கிறிஸ்டியனா இருந்தான். வேல கெடைக்கலன்னு இப்ப டக்ன்னு இந்துவா மாறி கோட்டாவுல வந்துட்டான். படிக்கிறதுக்கு கிறிஸ்தவ மதம். வேலைக்கு இந்து மதம்; எங்கள மாதிரியா கஸ்டப்பட்டான்' என்று சில எஸ்.ஸி.கள் அவனப் பற்றி விமர்சிப்பது சிலுவைக்குத் தெரியும். அவர்களது சங்கடத்தை புரிந்துகொள்ள முடியும். ஆனா எஸ்.ஸி. அல்லாத மத்த நாயுடு, பிள்ளை, முதலிய சாதியச் சேந்தவங்களும் அவனை இந்தக் கோணத்தில் விமர்சிப்பதை சிலுவையால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. இது அவங்க பிரச்சினையே கெடையாது. அவங்க சோத்துல மண்ணள்ளிப் போடுகிற விவகாரம் இல்லை. இப்பிடி ரெண்டு தரப்பாலும் முகத்துக்கு முன்போ, முதுகுக்குப் பின்னோ விமர்சிக்கப்பட்ட சிலுவைக்கு ஒதுங்கி, ஓங்கி வாழணும்ங்கிற வீம்பு ஏற்பட்டது. நல்லதுக்கோ கெட்டதுக்கோ, ஒருவனை உற்சாகமாகவும் தன்னம்பிக்கையோடவும் தள்ளிச் செல்ல ஏதோ ஒரு வீம்பு அவசியம்தான்.”
― காலச்சுமை [Kaala Sumai]
― காலச்சுமை [Kaala Sumai]
“படித்து முன்னுக்கு வந்த ஒவ்வொரு எஸ்.ஸிக்கும் ஒவ்வொரு விதமான நெருக்கடியும், தற்காப்பு உணர்வும், இலட்சியமும் இருந்தன. அவரவர் பிறந்து வளர்ந்த குடும்பச்சூழல், படிப்பு, வசதி, நோக்கு, வாழ்க்கை பற்றிய அபிப்ராயம், அனுபவித்த சாதி வகைப்பட்ட அழுத்தங்கள், அவமானங்கள், உறவுகள், கிடைத்த வாய்ப்புகள்... இப்படி பலதரப்பட்ட காரணங்களால் ஒவ்வொரு எஸ்.ஸியும் உருவாக்கப்பட்டு வருகிறான். புதிதாக அமைந்து வரும் வாழ்க்கை முறையில் ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் தன்னைத் தகவமைத்துக்கொள்ளுகிறான் என்பதில் மேற்படி தீர்மானிப்புகள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி ஒவ்வொருவரிடமும் பலமாதிரி சிக்கல்களை உண்டுபண்ணுகின்றன. தான் ஒரு எஸ்.ஸி என்ற நிதர்சனம் அவனைப் பல்வேறு சமாளிப்புகளுக்கு இயல்பாகவே இட்டுச் செல்லுகிறது. அந்த ஒரு எதார்த்தத்தை விட்டு ஓடவோ, எதிர்கொள்ளவோ, சமரசம் செய்துகொள்ளவோ, அதனை மறைக்கவோ, மாற்றவோ, போராடவோ, அன்னியப்படவோ, அந்த இடத்தில் ஒரு பொய்யை இட்டு நிரப்பவோ, வேறு முகமூடியை அணியவோ, மற்றவர்க்குரிய எதார்த்தத்தை தனது லட்சியமாக வளைக்கவோ, தனக்குச் சாதகமான பிம்பங்களை வடிவமைத்துக் கொள்ளவோ ஒவ்வொரு எஸ்.ஸியும் படாத பாடுபாடுகிறான். பொதுவாக எஸ்.ஸி அல்லாத வேறு ஒரு நபராக தன்னை உருமாற்றுவதிலேயே அவனது முழு வாழ்க்கையும் செலவாகிக் கொண்டிருக்கிறது.”
― காலச்சுமை [Kaala Sumai]
― காலச்சுமை [Kaala Sumai]
“சிலுவை சந்தித்த அவன் வட்டாரத்து எஸ்.ஸி ஆட்கள் குறிப்பாக அதிக சம்பளம் வாங்கும் காலேஜ் ஆசிரியர்கள் ஏதோ ஒருவிதத்தில் தங்கள் சாதியை ஒழித்தோ, மறைத்தோ, பிராமணர் மாதிரி வேசம் போட்டோ, வேற உயர் சாதி, வேற இனம் சார்ந்த பெண்களைக் கலியாணம் செய்தோ தப்பிக்கப் பார்த்தார்கள். வேலை பார்க்கிற இடத்தில் அவர்களை இன்னார் என்று பிறர்க்கு நன்றாகத் தெரிந்தாலும் குடியிருக்கிற தெருவில் அந்தச் சாதி அடையாளம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதில் விழிப்போடு இருப்பார்கள். இன்னசாதி என்பது அக்கம்பக்கம் தெரிந்துவிட்டால் அப்புறம் யாரும் பழக மாட்டாங்க. இந்தக் கவலை அவர்களைப் பெரும்பாடு படுத்தியது.”
― காலச்சுமை [Kaala Sumai]
― காலச்சுமை [Kaala Sumai]
“ம்... கேக்கிறது கடன், அதில டொன்டி ருபீஸ்னு இங்கிலீஸ் வேற வாழுதோ" என்று மனைவி இழுந்தாள். ஆமா, படிச்சவங்க கடன் கேக்கும் போது தொகையை இங்கிலீஸ்லதான் உச்சரிக்கிறாங்க. அதுதானே கௌரவம்.”
― காலச்சுமை [Kaala Sumai]
― காலச்சுமை [Kaala Sumai]
“சிலுவைக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. கோவில் குளம் பண்டிகை கொண்டாட்டம் எதுவும் கிடையாது. அதெல்லாம் சின்ன வயசோட சரி. அவன் சம்சாரமும் அவன மாதிரிதாம். அவளோட தகப்பனார் ஒரு தி.க.காரராக இளமையில் இருந்ததால் பிள்ளைகளுக்குச் சாமி, கோயில் பற்றிய நம்பிக்கைகளை ஊட்டாமல் வளர்த்திருந்தார். அதே மாதிரிதான் சிலுவை தம்பதிகள் தங்கள் குழந்தைகளை வளர்த்தார்கள். சாதி, மதம் சம்பந்தமாக எதுவும் அதுகளுக்குத் தெரியாது. அப்பிடி அடையாளங்களோடு அதுகளுக்குப் பழகத் தெரியவில்லை. அதுக்காக கிறிஸ்துமஸ், தீபாவளி, பொங்கல், பாயாசம், பலகாரம், மத்தாப்பு, புஸ்வானம், வெடி, கேக், ஆப்பிள்... வகையறாக்களுக்குப் பஞ்சமில்லை. பக்கத்து வீடுகளில் அதுகளை ஒத்த பசங்க சந்தோசமாயிருக்கும் போது இதுஹ மட்டும் பார்த்துக் கொண்டா இருக்கும்? குழந்தைகளைச் சந்தோசமாகப் பார்த்துக் கொள்ளுவதில் கொள்கைகளின் குறுக்கீடுகளைச் சிலுவையும் அவன் சம்சாரமும் அனுமதித்ததே இல்லை. வளர்ந்து பெரியவர்களாகிய பிறகு அவர்களாகவே சிந்தித்து ஒரு மார்க்கத்தை, ஒரு கடவுளை, ஒரு தத்துவத்தை ஏற்றுக்கொள்ளட்டும். அது அவங்களோட விருப்பம். இந்த மாதிரி எதையும் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் திணிப்பது சிலுவைக்கு உடன்பாடல்ல.”
― காலச்சுமை [Kaala Sumai]
― காலச்சுமை [Kaala Sumai]
“சேகரிச்சு வச்ச பணத்தில் கீழக்காசாக்குடி மெயின் ரோட்டடியிலும், எடத்தெரு புதுநகரிலும் சீப்பாக வந்ததால் ரெண்டு வீட்டு மனை வாங்கிப் போட்டான். எதுக்கும் இருக்கட்டும் என்ற புத்தி இப்ப சிலுவைக்கு வந்தாச்சு. ஆறுக்கு மூணு அடி நிலமே போதும் என்ற தத்துவமெல்லாம் போயாச்சு. பிளாட்டுகள் வாங்கிப் போட்டதாலும், வீட்டில் டி.வி., பிரட்ஜ் வாங்கியதாலும், 'கோல்டன் ஹார்வெஸ்ட்' ஏஜன்சியில் ஹீரோ மெஜஸ்டிக் மொபெட் வாங்கி ஓட்டியதாலும், காம்ரேட் கம்யூனிசம் பற்றி ஒண்ணுமே தெரியாத சிலர் சிலுவைக்கு பழக்கமானார்கள். சிலர் அவனை பூர்ஷ்வா காம்ரேட் என்று கிண்டலாகக் கூப்பிட்டார்கள். அதுக்கெல்லாம் கவலைப்படுகிற ஆளாக சிலுவை இல்லை. இப்பிடிக் கூப்பிட்டா என்ன கொறஞ்சா போயிடும். இவனுகளுக்கு கம்யூனிஸ்ட்ன்னா கோவணங்கட்டி வம்பாடுபடும் விவசாயிகள், இல்ல யூனிபார்ம் போட்ட ஆலைத் தொழிலாளிகள். உலகத்திலுள்ள கடேசி விவசாயி-பாட்டாளி-உதிரிப்பாட்டாளி வர்க்கத் தொண்டன் வசதிக்கு வருகிறவரை தோழர் சிலுவை ராஜால் காத்திருக்க முடியாதே. தலைவர்களாலேயே காத்திருக்கமுடியாத விசயம் இது. வயல் வரப்பில் நொங்கு பிதுங்க வேலை செய்து ராத்திரி குடிசையில கெடந்து தூங்குவதுதான் சோசலிசம்ன்னா அது நமக்கு வேண்டாம்பா. இதிலயிருந்து விடுபட்டு வசதியாகணும் என்பதுதான் சோசலிசம்.”
― காலச்சுமை [Kaala Sumai]
― காலச்சுமை [Kaala Sumai]
“தங்கள் தங்கள் ஆதிக்க எல்லைகளை இடுவதற்கு விலங்குகளுக்கு மூத்திரம் இருப்பதுபோல மனிதர்களுக்கு 'உண்மைகள்' இருக்கின்றன.”
― காலச்சுமை [Kaala Sumai]
― காலச்சுமை [Kaala Sumai]
“அவன் அங்கே படித்த நாவல்களில் ஸோல்சனிட்சின் எழுதிய 'கேன்ஸர் வார்டு', சோவியத் யூனியனில் ஜோசப் ஸ்டாலின் காலத்திய அக்ரமங்களையும் மனித மீறல்களையும் துல்லியமாக நெஞ்சு கனக்கும்படி உணர்த்தியது. அந்த நாவலைப் படிச்சபோது சிலுவை சோவியத் யூனியன் என்ற மாபெரும் கேன்ஸர் வார்டுக்குள் சிக்கிக்கொண்டான். வெளியே வரமுடியவில்லை. மனித விடுதலை, மனித மாண்பு... இப்படியான இலட்சியங்களுக்காகத் தொடங்கப்பட்ட புரட்சிகர எத்தனிப்புகள் அதிகாரத்துக்கு வந்த பிறகு மனிதர்களையே அழித்தொழிக்கத் தொடங்கிவிட்டன. சிலுவையிடம் புரட்சி, பொதுவுடைமை, சோசலிசம்... பற்றிய கேள்விகள் அவன் வேலையில்லாதிருந்த காலகட்டத்திலேயே அரும்பியிருந்தாலும், இப்போது அவை பெரும் விருட்சங்களாகக் கிளைகள் விட்டு ஆடிக்கொண்டிருந்தன. தங்கள் தங்கள் ஆதிக்க எல்லைகளை இடுவதற்கு விலங்குகளுக்கு மூத்திரம் இருப்பதுபோல மனிதர்களுக்கு 'உண்மைகள்' இருக்கின்றன.”
― காலச்சுமை [Kaala Sumai]
― காலச்சுமை [Kaala Sumai]
“இது ஐந்தாவது வீடு. இதுவும் மாடிதான். கீழே ஓனர்கள். வீடு அவ்வளவு வசதின்னு சொல்லமுடியாது. பழைய வீட்டிலிருந்து உடனே காலிபண்ண வேண்டும் என்ற ரோச உணர்ச்சியால் கிடைத்த வீடே போதும் என்று வந்த வீடு இது. அந்த ஏரியா பூராவும் வாணிகச் செட்டிகளும் பத்தர்களும்தான். காலை முதல் இரவு வரை பத்தர்கள் அடிக்கும் ஓசை விடாமல் வந்து செவிப்பறைகளைத் தாக்கிக்கொண்டேயிருக்கும். தலைவலி போயி திருகுவலி வந்த கதைதான்.
அத்தனை தொந்தரவுகளுக்கு இடையிலும் சிலுவை எப்படியோ புஸ்தகங்களைத் தீவிரமாக அந்த வீட்டில் வாசித்தான். அது எப்பிடி நேர்ந்ததென்று தெரியவில்லை. ஒரு கட்டத்தில் பத்தர்களின் டொக்கு டொக்கு ஓசை நின்றுபோனால் வாசிக்கமுடியாத ஒரு சிக்கல் ஏற்பட்டது.”
― காலச்சுமை [Kaala Sumai]
அத்தனை தொந்தரவுகளுக்கு இடையிலும் சிலுவை எப்படியோ புஸ்தகங்களைத் தீவிரமாக அந்த வீட்டில் வாசித்தான். அது எப்பிடி நேர்ந்ததென்று தெரியவில்லை. ஒரு கட்டத்தில் பத்தர்களின் டொக்கு டொக்கு ஓசை நின்றுபோனால் வாசிக்கமுடியாத ஒரு சிக்கல் ஏற்பட்டது.”
― காலச்சுமை [Kaala Sumai]
“இசைக்கு அடுத்தபடி நாவல்கள்தான் சிலுவைக்கு ரொம்பப் பிடிக்கும். நாவல் என்றால் ருஷ்ய நாவல்தான். அதுவும் ஜார் காலத்தில் தோன்றிய நாவல்கள்தாம். அந்த தாஸ்தயேவ்ஸ்கி ரொம்ப டேஞ்சரான ஆள். அவருடைய படைப்புகள் நமது மனநிலையையே பாதித்துவிடும். மனுசங்களுக்கே தெரியாத உள்மனசுகளைத் தோண்டித் துருவிப் பார்த்து விடுவார். அவரோட 'பிரதர்ஸ் கரமசோவ்' நாவலில் அவர் நடமாடவிட்ட அந்தத் தகப்பன் கேரக்டரைப் பார்த்தபிறகு சிலுவைக்கு தன்னுடைய தகப்பன் எவ்வளவோ பரவாயில்லைன்னு தோணும். அவரது 'கிரைம் அன்ட் பனிஷ்மென்ட்' நாவல் கதாநாயகன் ராஸ்கோல் நிகோவ் மாதிரி கொலை செய்யணும்போல ஓர் உந்துதல் வரும். ஜார் கால சமுதாயம் தாஸ்தயேவ்ஸ்கி, மாக்சிம் கார்க்கி, கோகோல், துர்கனேவ் மாதிரி இலக்கிய ஜாம்பவான்களின் மகோன்னத படைப்புகள் உருவாகத் தோதாக இருந்தது. மிகக் கொந்தளிப்பான அநியாயமான சமூக நிலைமைகளை உணர்ந்த பிரக்ஞைகளின் துடிப்பான வெளிப்பாடுகள் அவை. டால்ஸ்டாயும், செகாவும் அபூர்வமான நிகழ்வுகள் என்பதில் சந்தேகமில்லை. தமிழில் இந்த மாதிரி வீரியமுள்ள படைப்புகள் ஏன் தோன்றவில்லை என்பது பற்றி சிலுவை அப்போது ஆராய்ச்சி செய்யவில்லை.
இவர்களுக்கு அடுத்தபடிதான் ஐரோப்பிய அமெரிக்க படைப்பாளிகள். மாப்பசான், எமிலி ஜோலா, சார்த்தர், புரூஸ்ட், ஆல்பர் காம்யு, பிரெக்ட், ஹென்றி மில்லர், காஃப்கா, தாமஸ் மன், நட்ஹாம்ஸன், ஹெமிங்வே... இப்படி ஒரு சிறு பட்டியலை சிலுவைராஜ் போற்றிப் பாராட்டினான்.”
― காலச்சுமை [Kaala Sumai]
இவர்களுக்கு அடுத்தபடிதான் ஐரோப்பிய அமெரிக்க படைப்பாளிகள். மாப்பசான், எமிலி ஜோலா, சார்த்தர், புரூஸ்ட், ஆல்பர் காம்யு, பிரெக்ட், ஹென்றி மில்லர், காஃப்கா, தாமஸ் மன், நட்ஹாம்ஸன், ஹெமிங்வே... இப்படி ஒரு சிறு பட்டியலை சிலுவைராஜ் போற்றிப் பாராட்டினான்.”
― காலச்சுமை [Kaala Sumai]
“கவித்துவம் கவிதை வரிகளில் இல்லை; படிப்பவன், கேட்பவன் மனசில்தான் உண்டு என்ற முடிவுக்குச் சிலுவை வந்தான்.”
― காலச்சுமை [Kaala Sumai]
― காலச்சுமை [Kaala Sumai]
