(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
ராஜ் கௌதமன்

“சக எஸ்.ஸி ஆசிரியர்களோடு முழுசாக சிலுவை ஒட்டாமல் ஒரு வித்தியாசத்தைத் தன்னையறியாமலே பேணி பராமரித்ததற்கு அவன் என்ன விளக்கம் வைத்திருந்தானோ தெரியவில்லை. ஆனால் சக எஸ்.ஸி ஆசிரியர்கள் வைத்திருந்தார்கள். 'சிலுவை பிறப்பால் கிறிஸ்டியன்; அதனால சாமியார்கள் நடத்துன பெரிய பெரிய ஸ்கூல்லயும் காலேஜிலும் படிக்க சான்ஸ் கெடச்சது. கூலி வேலைக்குப் போனதில்ல. அவுஹ அப்பா மிலிட்டரி செர்வீஸ்; சொளையா மாசாமாசம் பணம் வந்துச்சு. படிச்சு முடிக்கிறவரைக்கும் கிறிஸ்டியனா இருந்தான். வேல கெடைக்கலன்னு இப்ப டக்ன்னு இந்துவா மாறி கோட்டாவுல வந்துட்டான். படிக்கிறதுக்கு கிறிஸ்தவ மதம். வேலைக்கு இந்து மதம்; எங்கள மாதிரியா கஸ்டப்பட்டான்' என்று சில எஸ்.ஸி.கள் அவனப் பற்றி விமர்சிப்பது சிலுவைக்குத் தெரியும். அவர்களது சங்கடத்தை புரிந்துகொள்ள முடியும். ஆனா எஸ்.ஸி. அல்லாத மத்த நாயுடு, பிள்ளை, முதலிய சாதியச் சேந்தவங்களும் அவனை இந்தக் கோணத்தில் விமர்சிப்பதை சிலுவையால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. இது அவங்க பிரச்சினையே கெடையாது. அவங்க சோத்துல மண்ணள்ளிப் போடுகிற விவகாரம் இல்லை. இப்பிடி ரெண்டு தரப்பாலும் முகத்துக்கு முன்போ, முதுகுக்குப் பின்னோ விமர்சிக்கப்பட்ட சிலுவைக்கு ஒதுங்கி, ஓங்கி வாழணும்ங்கிற வீம்பு ஏற்பட்டது. நல்லதுக்கோ கெட்டதுக்கோ, ஒருவனை உற்சாகமாகவும் தன்னம்பிக்கையோடவும் தள்ளிச் செல்ல ஏதோ ஒரு வீம்பு அவசியம்தான்.”

ராஜ் கௌதமன், காலச்சுமை [Kaala Sumai]
Read more quotes from ராஜ் கௌதமன்


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From


Browse By Tag