(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
ராஜ் கௌதமன்

“சிலுவைக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. கோவில் குளம் பண்டிகை கொண்டாட்டம் எதுவும் கிடையாது. அதெல்லாம் சின்ன வயசோட சரி. அவன் சம்சாரமும் அவன மாதிரிதாம். அவளோட தகப்பனார் ஒரு தி.க.காரராக இளமையில் இருந்ததால் பிள்ளைகளுக்குச் சாமி, கோயில் பற்றிய நம்பிக்கைகளை ஊட்டாமல் வளர்த்திருந்தார். அதே மாதிரிதான் சிலுவை தம்பதிகள் தங்கள் குழந்தைகளை வளர்த்தார்கள். சாதி, மதம் சம்பந்தமாக எதுவும் அதுகளுக்குத் தெரியாது. அப்பிடி அடையாளங்களோடு அதுகளுக்குப் பழகத் தெரியவில்லை. அதுக்காக கிறிஸ்துமஸ், தீபாவளி, பொங்கல், பாயாசம், பலகாரம், மத்தாப்பு, புஸ்வானம், வெடி, கேக், ஆப்பிள்... வகையறாக்களுக்குப் பஞ்சமில்லை. பக்கத்து வீடுகளில் அதுகளை ஒத்த பசங்க சந்தோசமாயிருக்கும் போது இதுஹ மட்டும் பார்த்துக் கொண்டா இருக்கும்? குழந்தைகளைச் சந்தோசமாகப் பார்த்துக் கொள்ளுவதில் கொள்கைகளின் குறுக்கீடுகளைச் சிலுவையும் அவன் சம்சாரமும் அனுமதித்ததே இல்லை. வளர்ந்து பெரியவர்களாகிய பிறகு அவர்களாகவே சிந்தித்து ஒரு மார்க்கத்தை, ஒரு கடவுளை, ஒரு தத்துவத்தை ஏற்றுக்கொள்ளட்டும். அது அவங்களோட விருப்பம். இந்த மாதிரி எதையும் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் திணிப்பது சிலுவைக்கு உடன்பாடல்ல.”

ராஜ் கௌதமன், காலச்சுமை [Kaala Sumai]
Read more quotes from ராஜ் கௌதமன்


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From


Browse By Tag